Aggregator

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 1 day ago
நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். விதி முறைகள் முதலே வகுப்பட்டவை. அதன்படி எல்லோரும் ஒத்துக்கொண்டு விளையாடுவார்கள். நினைத்தது போல் மாற்ற முடியாது. கிரிக்கட்டில் அடிப்படை விதிகள் மாற்றவே முடியாதவை. மற்றயவை, போட்டியை நடத்தும் நாட்டிடம் விட்டுவிடுவார்கள். அதுவும் மழை சம்பந்தமான விதிகள் மாறுபடுவது உண்டு. ஆனால், அதிலும், சில விதிகள் மாற்ற முடியாதவை. ஒருநாள் போட்டிகளில் 20 பரிமாற்றங்கள் கொடுக்கப் பட்ட நேரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். இல்லாவிடில் போட்டி முடிவில்லாமல் முடிவடையும். T20 போட்டிகளில், அது 5 பரிமாற்றங்கள். இப்போ புதிதாக வந்துள்ள 100 பந்துகள் போட்டியில், 25 பந்துகள் விளையாடினாற்தான், ஒரு முடிவு கிடைக்கும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 1 day ago
என்ன‌ செய்வ‌து அண்ணா ப‌ல‌ கிரிக்கேட் பார்ப‌தால் ப‌ல‌ ச‌ந்தேக‌ங்க‌ள் என‌க்குள் 2019உல‌க‌ கோப்பை சிமி பின‌லில் இந்தியா எதிர் நியுசிலாந் விளையாடின‌ போது ம‌ழை வ‌ர‌ விளையாட்டை அடுத்த‌ நாள் மீண்டும் வைச்ச‌வை............... ஒவ்வொரு ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பையும் 7மாத‌ம் அல்ல‌து அதுக்கு முத‌ல் வைப்பின‌ம் , இந்த‌ உல‌க‌ கோப்பை 10மாத‌ம் வைக்கின‌ம்...................இல‌ங்கை ம‌ற்றும் இந்தியாவில் இப்ப‌டியான‌ மாத‌ங்க‌ள் ம‌ழை அல்ல‌து பனிப்பொழிவு அதிக‌ம் இருக்கும் இர‌வு நேர‌ங்க‌ளில்...........................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 1 day ago
அப்ப‌ 20ஓவ‌ர் கிரிக்கேட்டில் ம‌ழை வ‌ந்தால் என்ன‌ விதிமுறை இருக்கு😋................. ஆண்க‌ளின் 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் ம‌ழை வ‌ர‌ மீதி விளையாட்டை அடுத்த‌ நாள் வைச்ச‌வை 2019ம் ஆண்டு😁 2007ம் ஆண்டு 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை பின‌லில் ம‌ழை வ‌ர‌ இல‌ங்கை க‌ப்ட‌ன் மீத‌ம் உள்ள‌ போட்டிய‌ அடுத்த‌ நாள் வைக்க‌னும் என்று சொல்ல‌ , அவுஸ்ரேலியா வெற்றி என‌ அறிவித்து அவ‌ர்க‌ள் கையில் கோப்பை கொடுக்க‌ப் ப‌ட்ட‌து😉......................

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு!

2 weeks 1 day ago
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு! இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதுடன் இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 8.30 வரை அமுலில் காணப்படும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் சீரற்ற வானிலைக் காரணமாக மூன்று ;மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் பலத்த மழைக் காரணமாக 144 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக தொடருந்து மார்க்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த 04 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோட்டை தொடருந்து மார்க்கத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி கண்டி, மாத்தளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மாத்தறை வரையிலான 04 தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1450782

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு!

2 weeks 1 day ago

images-7.jpg?resize=340%2C148&ssl=1

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு!

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதுடன் இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு 8.30 வரை அமுலில் காணப்படும் வகையில் குறித்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலையில் சீரற்ற வானிலைக் காரணமாக மூன்று ;மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் பலத்த மழைக் காரணமாக 144 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக தொடருந்து மார்க்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த 04 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கோட்டை தொடருந்து மார்க்கத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி கண்டி, மாத்தளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் மாத்தறை வரையிலான 04 தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

https://athavannews.com/2025/1450782

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 1 day ago
இவ்வளவு போட்டிகள் பார்க்கிற பையனுக்கே இவ்வளவு குழப்பம் என்றால், மற்றவர்கள், என்ன வந்தாலும் சரி என்றுதான் இருப்பார்கள். சில விதிகள் கட்டாயம் தேவைதான், சமநிலையை மேம்படுத்த.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 1 day ago
அப்பிடி இல்லை. குறைந்தது 20 பரிமாற்றங்கள் விளையாடினாப் பிறகுதான், மிச்ச கணக்கு வழக்கெல்லாம். ஆண்கள் என்றாலென்ன, பெண்கள் என்றாலென்ன, இதுதான் முதலாவது நிபந்தனை. 20 பரிமாற்றங்கள் விளையாட முடியாமல் போகும்போதுதான் போட்டி கைவிடப்படும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 1 day ago
முடிவடைந்த போட்டி என்னும் அடிப்படையில், இலங்கைதான் குறைந்த ஓட்டங்களைப் பெற்றது. எத்தினை பந்துப் பரிமாற்றம் என்பது பொருட்டல்ல. 50 பரிமாற்றப் போட்டியே குறைந்த பரிமாற்றங்களில் முடியலாம்தானே. 20 பரிமாற்றத்தில் துரத்தி அடிக்கலாம்தானே.

சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

2 weeks 1 day ago
புத்தளத்திலிருந்து அந்த போதை மாத்திரை ஏற்றிய லொறி…. தமிழ்ப் பகுதியை நோக்கி வந்தது என்றால், முஸ்லீம்களை தவிர, வேறை யாராக இருக்க முடியும். தமிழன், சிங்களவன் என்றால்…. பெயர், ஊர், விலாசம் எல்லாம் போட்டு செய்தி வந்திருக்கும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 1 day ago
37)இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? இந்த கேள்வியை கேட்டு விட்டு எது சரியான பதில் என்று யோசிக்கிறேன். இன்னும் சில போட்டிகள் இலங்கையில் நடக்க இருக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளில் 1) அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 114 ஓட்டங்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது. 2) மழை காரணமாக போட்டி 20 ஒவர்களாக குறைக்கப்பட்டதால் இலங்கை அணி 105 ஒட்டங்கள் 7 விக்கெட்டுக்கள் இழப்புடன் பெற்றது இவற்றில் எது 37 கேள்விக்கு இதுவரை நடந்த போட்டிகளின் படி சரியான பதில் என நினைக்கிறீர்கள்?

Bond Master(பொண்ட் மாஸ்ரர்.

2 weeks 1 day ago
சிறிபதி மாஸ்ரர் இறக்கும்வரை எமக்கு அருகிலேயே இருந்தார். இறக்கும் தறுவாயிலும் சிகரட்டும் கையும் தான். மனிசன் ஒரு வழக்கறிஞன் செய்ய வேண்டியதை தானே செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்.

சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

2 weeks 1 day ago
சந்தேகநபர் பெயர் வெளியிடவில்லை ...அப்ப அவர் .... பாடசாலை மாணவர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருவதாகவும் ஒவ்வொரு போதை மாத்திரையும் 300 ரூபாய்க்கு விற்க தயாராக இருந்ததாகவும் தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த பிள்ளைகளுக்கு எங்கிருந்து காசு கிடைக்குது...

தவிக்கும் தன்னறிவு

2 weeks 1 day ago
நீங்கள் ஓன்றுக்கை....ஒன்றப்பா....எதுவோ..பிசினசு செய்யிறியள் என்றுமட்டும் புரியுது ...அதுவும் நல்லாயிருக்கு..அரங்கில் நல்லாயிருக்கும் என நினைக்கின்றேன் ...ரசோ நீர்வேலியான் பாத்திரம் என்ன...எழுத்தருக்கு எனது வாழ்த்துக்கள்

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 1 day ago
சென்ற சாம்பியன் கிண்ணப்போட்டியில் இந்தியா அணி பாக்கிஸ்தான் மண்ணில் விளையாட மறுத்ததினால், ஐசிசி, இந்தியா விளையாடும் போட்டிகள் நடைபெறும் இடத்தினை பாகிஸ்தானை கேட்டது. பாகிஸ்தான் துபாய் இடத்தை தெரிவு செய்தது. பெண்கள் உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியா மண்ணில் விளையாட மறுத்ததினால், பாகிஸ்தான் விளையாடும் போட்டியினை கொழும்பில் தெரிவு செய்து இருக்கிறார்கள். சென்னை போன்ற இடங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் போட்டிகளை தவிர்க்கும் இந்தியாதான் கொழும்பினை தெரிவு செய்ததா? இல்லை ஐசிசி தெரிவு செய்ததா?