Aggregator

தவிக்கும் தன்னறிவு

2 weeks 1 day ago
உங்கள் நாடகத்தை எனது மகள் பார்த்து மிகமிக மகிழ்ச்சியாக உங்களையும் நீர்வேலியானையும் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டே இருந்தா. அத்துடன் உங்கள் மகள்களும் உங்களைப் போலவே நன்றாகப் பழகினார்கள் என்றா. பாராட்டுக்கள்.

தவிக்கும் தன்னறிவு

2 weeks 1 day ago
இங்கு தென் கலிஃபோர்னியாவில் கடந்த வாரம் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகம் இது. இதை நான் சில நண்பர்களின் உதவியுடன் எழுதி, தயாரித்து இருந்தேன். எங்கள் நண்பர்கள் வட்டத்தால் வருடா வருடம் நடத்தப்படும் தமிழமுதத்தின் 2025ம் ஆண்டு நிகழ்வில் இது மேடையேற்றப்பட்டது. தவிக்கும் தன்னறிவு நாடகம் தென் கலிஃபோர்னியா தமிழ் நண்பர்கள் வட்டம் 2025 சுருக்கம்: செயற்கை நுண்ணறிவின், அல்லது ஏஐ என்று எல்லோராலும் பொதுவாக சொல்லப்படும் தொழில்நுட்பத்தின், அதிவேகப் பாய்ச்சலால், அதன் எல்லை மீறிய பயன்பாடுகளால் சாதாரண மனிதர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சிக்கல்களை, சிரமங்களை ஒரு சிறிய நாடக ஆக்கமாக உருவாக்கியிருக்கின்றோம். இது செயற்கை நுண்ணறிவிற்கு எதிரான ஒரு கருத்தை முன்வைக்கும் முயற்சி அல்ல. மாறாக, மனிதர்களின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகளையும், அதனால் உண்டாகும் ஏமாற்றங்களையுமே இந்த ஆக்கம் சொல்ல முயல்கின்றது. காட்சி 1: (ஒரு நிறுவனத்தின் தலைவர் அதன் புதிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளை வெளியிடுகின்றார். அவர் கையில் ஒரு அலைபேசி இருக்கின்றது.) தலைவர்: இன்று எங்கள் நிறுவனம் வெளியிடும் இந்த சாப்ட்ஃவேர் இதுவரை இந்த உலகமே கண்டிராதது. புத்தம் புதியது. பார்வையாளர் 1: இன்றைக்குத்தான் வெளியிடுகின்றீர்கள் என்றால், அதை இதுவரை எவரும் கண்டிருக்கமாட்டார்கள் தானே. இதை தனியாக சொல்லவும் வேண்டுமா…………… உங்களின் சாப்ட்ஃவேரிடம் கேட்டிருந்தால் அதுவே நல்ல ஒரு அறிமுக உரையை எழுதிக் கொடுத்திருக்குமே……………… தலைவர்: (நெற்றியைச் சுருக்குகின்றார்…………..பின்னர் யோசிக்கின்றார்…..) இந்த சாப்ட்ஃவேரின் பெயர் ‘அறிவுப் பிரம்மம்’. இதை மிஞ்சிய அறிவு இனி ஒன்று வரப் போவதில்லை என்பதால் இப்படியான ஒரு பெயரை தெரிவு செய்துள்ளோம். (தலைவரின் உதவியாளர் தலைவரின் காதில் ஏதோ சொல்கின்றார்.) தலைவர்: ‘பிரம்ம அறிவு’ என்று இன்னும் ஒரு பெயரையும் நாங்கள் பதிந்து வைத்திருக்கின்றோம். இன்று உலகில் எவர் எதை திருடுகின்றார்கள் என்றே தெரியவில்லை. இந்தப் பெயரும் இருக்கட்டும், இல்லாவிட்டால் வேறு யாரும் இந்தப் பெயரைப் பதிந்து குழப்பத்தை உண்டு பண்ணிவிடுவார்கள். பார்வையாளர் 2: நீங்களே அனுமதிகள் இல்லாமல் தானே எல்லாவற்றையும் திருடி உங்களின் சாப்ட்ஃவேரில் காட்டுகின்றீர்கள்……….. இதில் நீங்களே உசாராக இருக்கின்றீர்கள் ஆக்கும். பாம்பின் கால் பாம்பறியும் என்று சுய அறிவை மட்டும் வைத்தே அன்றே சொன்னார்களே………….. தலைவர்: அறிவுப் பிரம்மம் அறியாதது எதுவுமே இல்லை. உதாரணமாக உங்களின் வீட்டுக் கதவுகளை அதுவாகவே தேவைக்கேற்ப மூடித் திறக்கும். அரிசி அவிந்தவுடன் சொல்லும். பல் வலித்தால் மருந்து கொடுக்கும். கால் வலித்தால் நீவி விடும். பார்வையாளர் 1: இந்த மொபைல் ஃபோன் காலை நீவி விடுமா……….. என்ன விலை இது……….. உதவியாளர்: உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஒரு அளவில்லையா…... எப்படி ஐயா ஒரு மோபைல் ஃபோன் காைகால்களை நீவி விடும்………. கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கோ………….. பார்வையாளர் 1: என்னாலேயே யோசிக்க முடியும் என்றால் நான் ஏன் இங்கே வருகின்றேன்…………………. எனக்காக நீங்கள் தான் யோசிக்க வேண்டும். பரப் பிரம்மம் என்று சொல்லி விட்டு, பாதியில் என்னை யோசி என்றால் நான் என்னவென்று யோசிப்பது. உதவியாளர்: அது பரப் பிரம்மம் இல்லை………….. அறிவுப் பிரம்மம் அல்லது பிரம்ம அறிவு…………… என்னடாப்பா, அறிமுகமே இப்படி இழுபடுதே……………… தலைவர்: கொஞ்சம் பொறுங்கள்…………. இந்த பரப் பிரம்மம் கூட நன்றாகவே இருக்கின்றது. அதையும் நாங்கள் எங்கள் நிறுவனத்திற்காக பதிந்து கொள்ளலாம் தானே…………… பார்வயாளர் 2: பரப் பிரம்மத்தையும் நீங்கள் விட மாட்டீர்களா……… அது கடவுளின் இன்னொரு பெயர்…….. அதைத்தானே இதுவரை பூமியில் வந்து, போன. இருக்கின்ற இரண்டாயிரம் மதங்களும் தங்களின் பெயர்களில் பதிந்து வைத்திருக்கின்றார்கள். அந்தப் பெயரை நீங்கள் பதிந்தால், உங்களின் வீட்டுக் கதவுகளை உங்களின் பிரம்மம் திறக்க, யாராவது உங்களின் வீடுகளுக்குள் குண்டெறியப் போகின்றார்கள்………… தலைவர்: வன்முறைகள் அற்ற வளமான ஒரு வாழ்வே எங்களின் குறிக்கோள். அறிவுப் பிரம்மமும் அதை நோக்கியே உங்களை இட்டுச் செல்லும். நீங்கள் என்ன கேட்டாலும், ஒரு அம்மாவின் அரவணைப்புடன் அது உங்களுக்கு வழிகாட்டும். இந்த தாய்மை உணர்வு கலந்த செயற்கை நுண்ணறிவு இதுவரை நீங்கள் காணாத ஒன்று. பார்வையாளர் 1: இப்படித்தான் நாலு பிஎச்டி அறிவு, ஐந்து பிஎச்டி அறிவு ஏஐ என்று முன்னர் சொன்னார்கள். கடைசியில் ஒரு வரைபடத்தில் எந்த ஊர் எங்கே இருக்கின்றது என்றே அதற்கு சொல்லத் தெரியவில்லை. நாட்டின் ஜனாதிபதியின் படத்தை காட்டு என்றால், அது என்னுடைய படத்தை காட்டிக் கொண்டு நின்றது…………… அதனால் உடனடியாக காசு கொடுத்து எல்லாம் உங்களின் பிரம்மத்தை நம்பி வாங்க முடியாது…………. உதவியாளர்: எவ்வளவு மில்லியன்கள் செலவழித்து இருக்கின்றோம். எப்படி நாங்கள் ப்ரீயாகக் கொடுக்கிறது …………. கோடிங், மாடல் ட்ரெயினிங் என்று இரவு பகலாக வேலை செய்திருக்கின்றோம்…… பார்த்து மாதம் மாதமாவது கொடுங்கள்……….. (தலைவர் நடுவில் வந்து உதவியாளரை தடுக்கின்றார். தனியே ஒரு பக்கமாக கூட்டிச் செல்கின்றார்.) தலைவர்: இலவசமாகவே கொடுப்போம்………… இப்போதைக்கு வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம். உதவியாளர்: எப்படி சார் முடியும்……………எப்படி ப்ரீயாக கொடுக்கிறது…….கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்………..நீங்கள் அப்ப என்ன சொன்னனீர்கள்………..ஸ்டாக் ஆப்சன் என்று கதை விட்டியளே……… அதை நம்பித்தானே என்ட கல்யாணமே இருக்கு. உங்களுக்கு என்ன……….. நல்ல புளியம் கொம்பாக பிடித்து லைப்ல செட்டில் ஆகிவிட்டீர்கள்……….. தலைவர்: புளியம் கொம்பா அல்லது புலியின் பல்லா என்று கட்டிய பின்னர் தெரிந்து கொள்வாய். இப்ப அது முக்கியம் இல்லை ஏனென்றால் அதை எவரும் மாற்றமுடியாது. இலவசம் என்று சொல்லி விற்போம். பின்னர் ஒரு மாதத்தில் காசு கொடுங்கள் என்று கேட்போம். உதவியாளர்: அவ காசு தர மாட்டம் என்று சொன்னால் என்ன செய்யிறது……… தலைவர்: அவர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்போம். அதற்கு எப்போதும் நல்ல சந்தை இருக்கின்றது. உதவியாளர்: நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால்…….. ஏதோ சப்ஸ்கிரிப்ஷன் தந்தால் ஏதோ அவையளிண்ட பர்சனல் இன்ஃபார்மேஷனை விற்க மாட்டோமா…… தலைவர்: அப்பவும் விற்போம்……….. எப்பவும் விற்போம். உதவியாளர்: அப்ப இந்த விசயங்களை நான் அவையளிடம் சொல்லட்டா…………. தலைவர்: உனக்கு கல்யாணம் நடக்க வேண்டாம் என்றால் தாராளமாக போய் சொல்……………… உதவியாளர்: இல்ல, இல்ல………அப்ப வேண்டாம்……… நீங்களே நைசாகச் சொல்லி விடுங்கோ. (தலைவர் முன்னாலும், உதவியாளர் பின்னாலும் வருகின்றார்கள்.) தலைவர்: நீங்கள் பலரும் சொல்வது சரியே. சந்தையில் எத்தனையோ சாப்ட்ஃவேர் உள்ளன. எங்களுடையதை நாங்கள் இலவசமாகவே கொடுக்கின்றோம். பின்னர் உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்களாகப் பார்த்து ஏதாவது கொடுங்கள். ஒரு தடவையிலும் கொடுக்கலாம், மாதம் மாதம் என்றும் கொடுக்கலாம். கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அம்மாவின் அரவணைப்பு இங்கேயிருந்து ஆரம்பிக்கின்றது. (உதவியாளர் திகைத்துப் போய் நிற்கின்றார்.)

கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

2 weeks 1 day ago
அவன் பிரபல கொலைகாரன் அல்ல, பிரபலமாக இருப்பதால் கொலைகாரன்; அவனுக்குக் கூட்டம் பிடிக்காது; அதுவும் தன்னைப் பார்க்க எதற்கு இத்தனைக் கூட்டம் என ஆச்சரியம் அவனுக்கு; தன்னை அவர்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என பார்க்க டெஸ்ட் மேல் டெஸ்ட் வைப்பான்; கடும்வெயிலில் காக்க விட்டான், கள்ளிச்செடிபோல் மணிக்கணக்கில் அப்படியே நின்றார்கள்; தூக்கித் தூர எறிந்தான், பந்துபோல் அவனிடமே திரும்பி வந்தார்கள்; நீரின்றி நா வரளவிட்டான், அவனைப் பார்த்தவுடன் நாவாலேயே வாலாட்டினார்கள்! அவனுக்கு ஒரே மகிழ்ச்சி; தன் ஊர்வலங்களில் அவ்வப்போது ஓரிருவரைக் கொன்று பழகினான்; யாரும் கணக்கு பார்க்கவில்லை, கண்டும்கொள்ளவில்லை! கொலைகாரன் குதூகலமானான், விளையாட்டு அடுத்த கட்டம் நகர்ந்தது! மதியம் 12க்கு வருகிறேன் என சொன்னவனைப் பார்க்க, இரவு 12ல் இருந்தே ரோட்டில் தூங்கினார்கள்! அவனோ பகலிலும் தூங்கிவிட்டு இரவு 7.30க்கு 'சாவ'காசமாக வந்தான்! சாவு வண்டியில் சனியன் போல் கூட்டம் புகுந்தான்! முகத்தை மூடியும் காட்டியும் குழந்தைகளிடம் நாம் விளையாடுவதைபோல, தன் அடிமைகளிடம் விளையாடினான்; அவர்களைக் கதறவைத்துச் சிரித்தான்; தன்னைப் பார்ப்பதற்காக அவர்கள் தவிப்பதைக்கண்டு ரசித்தான்! உலகில் முதல்முறையாக, கொலையாகப் போகிறவர்கள் கொலைகாரனைப் பார்க்க ஆசை ஆசையாய் வந்திருந்தார்கள்! காத்திருந்தார்கள்! அவனைப் பார்த்தாலே பாக்கியம் என வந்தவர்களில், அவன் கையால் சாகும் பாக்கியம் 40 பேருக்கு மட்டுமே வாய்த்தது; முகத்தில் வாயில் வயிற்றில் மிதிபட்டார்கள்; உடல் பிய்ந்து, மணிக் கணக்காக அடக்கி வைத்திருந்த மலமும் சிறுநீரும் தெருவில் பாய்ந்தது! குழந்தைகள் சீக்கிரம் போய்ச் சேர்ந்தார்கள்! பெரியவர்களுக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது! வீடு போய்ச்சேர்ந்த அடிமைகளில் சிலர், அடுத்த கூட்டத்திலாவது போய்ச்சேர நமக்கு லக் அடிக்கிறதா பார்ப்போம் என முனகினார்கள்! வேன் மோதி திருப்பதி சென்ற பக்தர்கள் 4 பேர் பலி என செய்திகளில் வருமே, அந்த பக்தர்களை ஏழுமலையான் அம்போ என விட்டுவிடுவார்; ஆனால் கொலைகாரன் அப்படி அல்ல; நான்காவது நாள் வீடியோவில் காட்சி தந்தான்; நாற்பதாவது நாள் அக்கவுண்டில் காசு தந்தான்; குழந்தைகளை இழந்தவர்கள் சிரித்தபடியே பேசினார்கள்! மகன்களை இழந்தவர்கள் மனதார வாழ்த்தினார்கள்! மனமுடைந்த ஒரு தாய் அய்யோ தூக்கிக் கொடுக்க இன்னொரு புள்ள இல்லாம போச்சே என மேஜர் முகுந்த் வரதராஜனின் தாய் போல வருந்தினார்! ஒரு அண்ணன், தம்பி செத்தா என்னங்க எங்க அண்ணன் கூட்டத்துல சாகுறது வைகுண்ட ஏகாதசி சாவு மாதிரி நேரா சொர்கம்தான் என்றார். யாரையும் பலிகொடுக்காத ஒருவர் தன் துரதிருஷ்டத்தை நொந்து கொண்டார்! எப்படிடா தப்பிச்சு வந்த என தன் பையனை அடித்தார்! தவளைகள் பாம்பின்மேல் முழுமையாய் காதல் கொண்டிருந்தன! பட்டாம்பூச்சிகள் பல்லியைப் பார்த்துப் பல்லிளித்தன! ஏதோ ஒரு ஊரின் ஏதோ ஒரு கோடியில், கொலைகாரனின் அடுத்த பேட்ச் தயாராகிக் கொண்டிருந்தது! கொலைசெய்யும் நேரம்போக மீதி நேரம் வீட்டிலும் ஆஃபீசிலும் மட்டுமே இருக்கும் கொலைகாரன், தன் ரத்தம் தோய்ந்த பற்கள் தெரிய சொன்னான் "ஐயாம் வெயிட்டிங்...." -டான் அசோக் 19 அக்டோபர் 2025

சிரிக்கலாம் வாங்க

2 weeks 1 day ago
Paranji Sankar · டைம் பாஸ் #கடி_ஜோக்ஸ் : 1. உலகத்திலேயே சிறந்த ஜோடி செருப்புதான்... ஒன்றை பிரிந்தால் மற்றொன்று வாழவே வாழாது.. 2. எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்.. 3. மாமா பொண்ணும், உப்புமாவும் ஒண்ணு.. வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும். 4. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்... 5. இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே.. "நீங்க வெட்டுங்க பாஸ்.."... 6. ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்: "ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை." மனைவி சொன்ன பதில்: "அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?" 7. தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்.. "டேய் மச்சான்... எங்கடா இருக்க?" "வீட்லதான்டா ....." "அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு..." "ஏன்டா? என்ன விஷயம்??" "அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. ...." 😜" 8. அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு... மகள் : தெரியலைம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை.. 9. நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்… நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம். வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்… 10. “ஏன் ஸ்கூட்டரை திருடினே…?” “டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..” 11. பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?” “தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?” “இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்..” 12. முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க… முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே. 13. டீச்சர் : பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ? மாணவன்: சிவன் துணிகள் உடுப்பதில்லை அதனால் துவைக்கும் வேலை குறைவு. எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது.. ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்... சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்... சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை... மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவே யில்லை. 14. ஜட்ஜ் : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க? நீங்க இல்லேன்னு சொல்லுறீங்க.. இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா.? சாமானியன்: ஐயா நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன்யா.. நீங்களே சொல்லுங்கய்யா பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டுவர எவனாவது வேகமா போவானா... ? ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்...! முதல்ல அவரை விடுதலை செய்ங்க...! Voir la traduction

தீபாவளி... சிரிப்புகள்.

2 weeks 1 day ago
Tamil Culture · எங்கள் காலத்து தீபாவளி! 💥" ஒரு தொண்ணூறுகளில் பிறந்தவனின் ஏக்கமான நினைவலைகள்... 😌" இளைய தலைமுறைப் பிள்ளைகளே... கொஞ்சம் இங்கே வாருங்கள்! 🙋‍♂️" நீங்கள் இப்போது இணையத்தில் பட்டாசுகளை முன்பதிவு செய்து, பெரிய பெரிய வாண வேடிக்கைகளை வெடிப்பதைப் பார்க்கும்போது... எங்கள் காலத்து தீபாவளி நினைவுதான் மனதுக்குள் ஒரு சூறாவளி போல வந்து போகிறது. 🥺" அப்போதெல்லாம் தீபாவளிக்கு மாதங்களுக்கு முன்னரே கொண்டாட்டம் தொடங்கிவிடும்! 🤩 காசு சேர்த்த காலம்: கைச்செலவுக்குக் கிடைக்கும் பணத்தில் இருந்து, சில்லறையாகச் சேர்த்து வைத்து, ஒரு உண்டியலை நிரப்பி, அதை வைத்துப் பட்டாசு வாங்கப் போகும்போது ஒரு தனி மிடுக்கு இருக்கும் பாருங்கள்... அது இப்போது கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் வராது! 💪" கூட்டமாக ஒரு கடைக்குப் பயணம்: தெருவில் உள்ளோர் ஒன்று சேர்ந்து, நகரத்திற்குப் போய், மொத்தமாகப் பட்டாசு வாங்கி, அதைப் பங்கு பிரிக்கும்போதே பாதி தீபாவளி முடிந்துவிடும். அந்தப் பட்டாசுப் பெட்டியில் வரும் மருந்து வாசம்... அடடடா! இன்னைக்கும் நாசியில் நிற்கிறது! 😍"சிறிய சிறிய சந்தோஷங்கள்: ஊசி பட்டாசு, குருவி வெடி, சங்கு சக்கரம், புஸ்வானம், லட்சுமி வெடி என்று ஒவ்வொரு பட்டாசுக்கும் எங்களிடம் ஒரு கதை இருக்கும். 📜" இரவில் சங்கு சக்கரத்தைச் சுழற்றிவிட்டு, அதில் வரும் பொறியில் பேய் போல முகத்தைக் காட்டுவது... 😂தெரு முனையில் தார்ச்சாலையில் குருவி வெடியைத் தேய்த்துப் பற்ற வைப்பது என்று... ஒவ்வொரு கணமும் கொண்டாட்டம்தான்! 🥳" பகிர்ந்து கொண்ட உறவுகள்: "ஏடா... நீ இந்தக் கம்பி மத்தாப்பைக் கொளுத்து, நான் இந்தச் சரத்தைப் பற்ற வைக்கிறேன்" என்று நண்பர்களுக்குள் ஒரு உடன்பாடு இருக்கும். 🥰அடுத்த வீட்டு அண்ணன், பக்கத்து வீட்டு அக்கா என்று எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வெடிக்கும்போது, அந்தத் தெருவே திருவிழாக்கோலம் பூண்டுவிடும்! 🎉" ☀️"அதிகாலை ஆனந்தம்: காலையில் 4 மணிக்கே எழுந்து, கங்கா ஸ்நானம் முடித்து, புத்தாடை அணிந்து வாசலில் நிற்கும்போது... அப்பா வந்து முதல் சரத்தைக் கொளுத்திப் போடுவார் பாருங்கள்... அந்தச் சத்தத்தில்தான் எங்கள் தீபாவளியே தொடங்கும்! ✨" இன்றைக்குப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் என்று நிறைய விடயங்கள் மாறிவிட்டன. அது தேவையும்கூட. 👍" ஆனால், அந்தச் சின்னச்சின்ன விடயங்களில் நாங்கள் அனுபவித்த அந்தப் பெரிய சந்தோஷமும், உறவுகளுடன் இருந்த அந்தப் பிணைப்பும் இன்றைக்கும் மனதுக்குள் பசுமையாக இருக்கிறது. 💖 பட்டாசு வெடிப்பதை விட, அந்தப் பண்டிகையைச் சூழ்ந்திருந்த உறவுகளும், அன்பும், மறக்க முடியாத நினைவுகளும்தான் உண்மையான தீபாவளி! 😊 இந்தத் தீபாவளியை நீங்களும் உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்! 🎊" உங்களுக்கும் சொல்லிக்கொள்ள நிறைய அழகான நினைவுகள் உருவாகட்டும்! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🙏" #90sDiwali #Nostalgia #DiwaliMemories #ThenAndNow #Deepavali #GoodOldDays Voir la traduction

சீனாவின் ஐந்தாண்டுத் திட்டம் உலகப் பொருளாதாரத்தையே மாற்றியது எப்படி? 3 தருணங்கள்

2 weeks 1 day ago
அந்த கோடிக்கணக்கான உயிரிழப்புகளால் தான் சீனா இன்று கட்டுக்கோப்புடன் இயங்குகின்றது. அதே போல் மேற்குலக நாடுகளிலும் கோடிக்கணக்கான உயிரிழப்புகளால் தான் சட்டங்களும் நியாய, நேர்மைகளும் அமுலுக்கு வந்தன. தண்டனைகள் உண்டு. அதற்கு மக்கள் பயப்பிடுகின்றார்கள். அதனால் சட்டங்களை பின்பற்றுகின்றார்கள். எல்லா உயிரின கூட்டங்களிற்கும் ஒரு தலைமை இருக்கும். அதற்கு கட்டுப்பட்டு நடப்பது இயற்கையின் நியதி.

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

2 weeks 1 day ago
பராளுமன்ற எம்பி அர்ச்சுனாவும் ஐரோப்பா சுற்றுலா பயண யுரியுப் காணொளிகள் பல வெளியிட்டு கொண்டிருக்கின்றாராம் 🤣

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 1 day ago
எனக்கும் இது கவலையாக தான் இருந்தது தமிழ் பிரதேசத்தில் சிங்களம் தெரியாது என்று ஒரு தமிழன் ஜப்னா சுரேஸ் ஏமாற்றி இருக்கிறானே தக்‌ஷியை தாங்கள் திட்டம் போட்டு ஏமாற்றினோம் என்று தான் செவ்வந்தி சொல்லியுள்ளாள்.தக்‌ஷி சொல்லியிருக்கிறா தனக்கு நேபாளத்தில் இருந்து ஐரோப்பா செல்ல ஜேகே பாய் ஏற்பாடுகள் செய்வார் என்று சொல்லபட்டதாம். ஐரோப்பா செல்ல என்றால் முதலாவது யுகே அல்லது சுவிஸ் பிரானஸ் தானே 😂

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

2 weeks 1 day ago
ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் யூரியூப்பர்களாக மாறிக் கொண்டு வருகிறார்கள்.

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

2 weeks 1 day ago
41 உயிர்கள் கொல்லப்பட்ட நிகழ்வில் பிள்ளையை பறி கொடுத்த ஒரு தாய் சொல்கின்றார் யாருமே விஜயை இவ்வளவு கிட்ட நெருங்கி பார்க்க முடியாது இந்த பெருமையை பிள்ளை எங்கள் குடும்பத்திற்கு வாங்கி கொடுத்திருக்கிறான் . என்ன அதற்கு நஷ்டஈடாக எங்கள் பிள்ளையை நாங்கள் பறிகொடுத்துள்ளோம் திரையில் தோன்றும் கடவுள் விஜயை நேரில் நெருங்கி பார்பதற்காக தனது உயிரை தியாகம் செய்தான் தனது மகன் என்று பெருமைபடுகின்ற விஜய் இரசிகைகள் 😞 😟 ஆனால் இந்தம்மாவுக்கு 3.4 மில்லியன் இந்திய ரூபா கிடைத்திருக்கின்றது

Bond Master(பொண்ட் மாஸ்ரர்.

2 weeks 1 day ago
பொண்ட் இன்ஸ்ரியூட் என்று யாழ் பெரியஆஸ்பத்திரிக்கு முன்னால் இருந்தது. கொட்டடியிலும் இருந்ததாகக் கேள்வி.நான் அவரிடம் படிக்கவில்லை. ஆனால் அவருடைய ரியூட்டரியில் படித்தேன் யாழில் உள்ள பிரபலமான ஆசிரியர்களை அழைத்து வந்து பாடம் நடத்துவார். அவர்O/L இற்குத்தான் பாடம் எடுத்திருக்கிறார்.என்று நினைக்கிறேன்.A/L இற்கு அவருடைய ரியூட்டரியில் இரசாயனவியலுக்கு சிறிபதி>கனக்ஸ் கருணாகரன் போன்றவர்கள்படிப்பித்தார்கள். இந்தச்சிறிபதி ஒரு சிகரெட்பத்தி முடியும் நேரத்தில்அடுத்த சிகரெட்டை அந்த நெருப்பிலேயே பற்ற வைத்து இருமிக்கொண்டும் புகைத்துக் கொண்டும் பாடம் நடத்துவார். நல்ல ஆசிரியர்.கருணாகரன் இளைஞராக இருந்தபடியால் பாடம் முழுவதும் ஒரே பகிடியாகவும் சிரிப்பாகவும் போகும்அடிக்கடி புது புதுச்சட்டைகளை மாற்றிப் போட்டுக் கொண்டு ஸ்டைலாக ஸ்கூட்டரில் போவதைப்பார்த்து உள்pளுக்குள் பொருமியிருக்கிறோம். நல்ல மனிதர். நல்ல நிர்வாகத்திறமை உடையவர். அந்தக்காலத்தில் 4 பாடங்களுக்கு காசு கட்டினால் அனைத்து வகுப்புகளுக்கும் அனுமதி இருக்கும்.பணமும் எற்க் கொள்ளக்கூடிய அளவு தொகைதான். அதிகம் வாங்குவதில்லை.இரசாயனவியலில் பொண்ட்களைப்பற்றி நன்றாக பாடமெடுப்பதால் அந்தப் பெயர்வந்ததாக பேசிக்கொள்வார்கள்.

குட்டிக் கதைகள்.

2 weeks 1 day ago
தினமும் ஒரு வரி தத்துவம் · தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை: "ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது. மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக.... இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார். எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்..... "ஏம்பா நீ சைலண்டா இருக்க......" 'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பாங்க டீச்சர்' "எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?" 'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...' பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார். தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார். ' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'. கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்: 'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல உங்களால் புரிஞ்சிக்க இயலாம போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.' *'நம்ம ரெஸ்டாரண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு அர்த்தம். *'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட உறவ மதிக்கிறாங்க' னு அர்த்தம். 'நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்களோட மனசில இருக்கம்னு அர்த்தம்'. பின்னொரு காலத்தில நம்ம பிள்ளைங்க நம்மகிட்ட கேட்கும்,,,,, '"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"' ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்கள நாங்க கழிச்சிருக்கோம்' படித்து பகிர்ந்து Voir la traduction

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

2 weeks 1 day ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 35 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 35 / பின் இணைப்பு - தீபவம்சம் / ' தீபவம்சம் என்பது இலங்கை மக்கள் அனைவரையும் பற்றிய வரலாற்றுப் பதிவா?' தீபவம்சம் கி.பி நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் முதல் மூன்றாம் பகுதிக்கு இடையில் தொகுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஏற்கனவே இருந்த ஜாதகக் கதைகள் [என்பது இந்தியாவைச் சார்ந்த புத்தரின் முற்பிறவிகளை கூறும் கதைகளின் தொகுதியாகும்.], விளக்கவுரைகள் மற்றும் பிற நியமனப் படைப்புகள் [ஒரு குறிப்பிட்ட பாரம்பரியம் அல்லது மொழிக்குள் தரம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தின் தரமாகச் செயல்படும், அத்தியாவசியமான மற்றும் செல்வாக்குமிக்கதாகக் கருதப்படும் படைப்புகளின் தொகுப்பு அல்லது உண்மையானதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட புனித புத்தகங்களின் தொகுப்பு] தீபவம்சத்தின் தொகுப்பிற்கு அடிப்படையாக அமைந்தன என்று மொழிபெயர்ப்பின் அறிமுகப் பக்கங்களில் கூறப்பட்டுள்ளது. தீபவம்சம் தொகுக்கப்பட்ட பின், சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஊகம், அதாவது ஒரு சாத்தியமாக, மொழிபெயர்ப்பாளரால் முன்மொழியப்பட்டது என்பதால், இந்த அனுமானத்தின் உண்மைத்தன்மையை அல்லது நம்பகத்தன்மையை நாம் இங்கு அலசவில்லை. தீபவம்சத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்படும். 1879 இல் ஹெர்மன் ஓல்டென்பர்க் (Hermann Oldenberg) (1854 - 1920) மொழிபெயர்த்த தீபவம்சத்தின் பிரதியை அடிப்படையாகக் கொண்டு இந்த பகுப்பாய்வு செய்யப்படும். "தீபவம்சம் - ஒரு பண்டைய புத்த வரலாற்றுப் பதிவு" [“The Dipavamsa - An Ancient Buddhist Historical Record”] என்ற தலைப்பில் இந்த புத்தகம் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் ஹெர்மன் ஓல்டென்பர்க்கின் கருத்துப்படி, இது ஒரு பண்டைய பௌத்த வரலாற்றுப் பதிவு ஆகும். அப்படி என்றால், இது முழு இலங்கை மக்களின் வரலாற்றுப் பதிவாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. மொழிபெயர்ப்பாளர் ஹெர்மன் ஓல்டென்பர்க் பயன்படுத்திய நம்பகமான பிரதிகள் முக்கியமாக பர்மாவைச் சேர்ந்தவை. என்றாலும் அவர் இலங்கை மற்றும் பிற இடங்களில் இருந்து பெற்ற தரம் குறைந்த நகல்களையும் பயன்படுத்தினார். இது தொடர்பாக தீபவம்ச மொழிபெயர்ப்பின் 10 முதல் 11 வரையிலான அறிமுகப் பக்கங்களைப் பார்க்கவும். மொழிபெயர்ப்பாளர், ஹெர்மன் ஓல்டென்பர்க், ஒரு ஜெர்மன், பாளி மற்றும் பௌத்த அறிஞர் ஆவார். எனவே, மற்ற ஆங்கிலேய அரசு ஊழியர்களைப் போல அவருக்கு காலனித்துவ ஆர்வம் இருக்காது. உதாரணமாக, தீபவம்சம் 1-1 ; "புத்தர் தீவுக்கு வந்த வரலாறு, நினைவுச்சின்னம் மற்றும் போதி மரத்தின் வருகை, மறுபரிசீலனை செய்த ஆசிரியர்களின் கோட்பாடு, தீவில் நம்பிக்கையைப் பரப்புதல், மனிதர்களின் தலைவரின் வருகை ஆகியவற்றின் வரலாற்றை நான் முன்வைப்பேன்." என்று கூறுகிறது. இவை அனைத்தும் முதல் ஒன்பது அத்தியாயங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் சில அறிஞர்கள் மீதமுள்ள அத்தியாயங்களை பின்னர் சேர்த்ததாக கருதுகின்றனர். தீபவம்சம் மேற்கூறிய தலைப்புகளில் மட்டுமே முதன்மையாக கவனம் செலுத்துவதால், பண்டைய இலங்கையின் அனைத்து மக்களின் விரிவான வரலாறு அல்ல என்று நான் நம்புகிறேன். மாறாக, பெரும்பாலும் அனுராதபுரத்தில் உள்ள மகாவிகாரத்தில் இருந்து, இது புத்த துறவிகளால் எழுதப்பட்ட ஒரு மத நாளேடாகும். இது பெரும்பாலும் பின்வருவனவற்றைத் தவிர்த்துள்ளது என்பதையும் நினைவில் கொள்க: 'தீவின் புத்த மதத்திற்கு முந்தைய வரலாறு, பூர்வீக பழங்குடியினர் (இயக்கர்கள் மற்றும் நாகர்கள் போன்றவை) உட்பட பௌத்தம் அல்லாத சமூகங்களின் வரலாறு, மற்றும் இலங்கையில் இருந்த தமிழ் பேசும் குழுக்கள் அல்லது பிற இனங்கள், துறவறம் அல்லது அரச பௌத்த சூழலுடன் தொடர்பில்லாத சமூக-பொருளாதார, மொழியியல் அல்லது கலாச்சார விவரங்கள் போன்றவை.' ஆகும். எனவே, தீபவம்சம் இலங்கையின் முழு மக்களின் வரலாற்றுப் பதிவு அல்ல. இது ஒரு பிரிவுவாத பௌத்த நாளேடாகும், இது மத மற்றும் கோட்பாட்டு நலன்களுக்கு சேவை செய்ய வரலாற்றைத் தேர்ந்தெடுத்து வழங்குகிறது - முக்கியமாக தேரவாத பௌத்த மரபு மற்றும் அதை ஆதரித்த சிங்கள பௌத்த முடியாட்சிகளில் கூடுதலான கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, தீபவம்ச மொழிபெயர்ப்பின் அறிமுகப் பக்கம் 11 இல்: தீபவம்சம் நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கும் ஐந்தாம் நூற்றாண்டின் முதல் மூன்றாம் பகுதிக்கும் இடையில் எழுதப்பட்டது. மகாவம்சம் இயற்றப்பட்ட சரியான தேதி இன்னும் நமக்குத் தெரியாது. ஆனால் இரண்டு படைப்புகளும் எழுதப்பட்ட மொழி மற்றும் பாணியை ஒப்பிட்டுப் பார்த்தால், தீபவம்சம் முதலில் எழுதப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. மகாநாம தேரர் தனது முன்னோடிகளின் படைப்புகளை விவரிக்கும் வார்த்தைகள் இதை உறுதிப்படுத்துகின்றன என்றும் தீபவம்சத்தின் உரையைத் தொகுப்பாக்கம் செய்யும்பொழுது, பர்மிய எழுத்துக்களில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளை பாவித்தேன் என்றும் ஹெர்மன் ஓல்டென்பர்க் கூறியிருப்பதைக் தெளிவாகக் கவனிக்கலாம். Part: 35 / Appendix – Dipavamsa / 'Is the Dipavamsa a historical record of the entire people of Ceylon?' Dipavamsa is believed to be compiled between the beginning of the fourth century A.D. and the first third of the fifth century A. D. It is claimed in the introductory pages of the translation that the already existed Jathakas, commentaries and the other canonical works formed the basis for the compilation of the Dipavamsa. We would not go into the veracity of this conjecture as this guess was made by the translator about one thousand five hundred years after the compilation of the Dipavamsa. The focus will only be on the content of the Dipavamsa. The analysis is based on the copy of the Dipavamsa translated by Hermann Oldenberg in 1879 with the title “The Dipavamsa - An Ancient Buddhist Historical Record”. As per the translator, Hermann Oldenburg, this is an ancient Buddhist historical record. It cannot, therefore, be the historical record of the entire people of Ceylon. The trustworthy copies used by the translator, Hermann Oldenberg, were mainly from Burma though he used copies of lesser quality from Ceylon and other places. See the introductory pages 10 to 11 of the Dipavamsa translation in this regard. The translator, Hermann Oldenburg, was a German, and Pali and Buddhist scholar. He might not, therefore, have any colonial interest unlike the other English Civil Servants. Reference to a particular verse in a particular chapter is given by two numbers separated by a hyphen, such as 2-7. The number combination 2-7 references the verse seven of the chapter two. When a reference is made thus 4-36 to 39, it refers to the verses thirty six to thirty nine of the chapter four. Thus Dipavamsa 1-1 refers the verse one of the chapter one of the Dipavamsa;” I will set forth the history of Buddha’s coming to the Island, of the arrival of the relic and the Bo, of the doctrine of the teachers who made the recensions, of the propagation of the faith in the Island, of the arrival of the chief of men”. All these are covered in the first nine chapters, and, some scholars consider the rest of the chapters are later additions. [ As It focuses primarily on the above titles only, I belief that the Dipavamsa (circa 3rd–4th century CE) is not a comprehensive history of all the peoples of ancient Ceylon (Sri Lanka). Rather, it is a religious chronicle written by Buddhist monks, most likely at the Mahavihara in Anuradhapura. Please note that It largely omits: The pre-Buddhist history of the island, The history of non-Buddhist communities, including indigenous tribes (like the Yakkhas and Nagas), and Tamil-speaking groups or other ethnicities who existed in srilanka, Socio-economic, linguistic, or cultural details unrelated to the monastic or royal Buddhist context etc. Therefore, the Dipavamsa is not a historical record of the entire people of Ceylon. It is a sectarian Buddhist chronicle that selectively presents history to serve religious and doctrinal interests — mainly those of the Theravāda Buddhist tradition and the Sinhalese Buddhist monarchy that supported it. - By Kandiah Thillaivinayagalingam] நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 36 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 35 https://www.facebook.com/groups/978753388866632/posts/31930767686571797/?

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 1 day ago
நடந்தது நடந்துவிட்டது, பையன் சார்............... இனிமேல் இந்தக் கிரிக்கெட்டையும், விதிமுறைகளையும் பார்க்காமல், பேசாமல் மகளிரை மட்டும் பார்த்து போட்டிகளை முடிப்பம்................🤣.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 1 day ago
இந்த‌ ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பை விதிமுறை என‌க்கு சுத்த‌மாய் பிடிக்க‌ வில்லை................... பாக்கிஸ்தான் எதிர் இங்லாந் விளையாடின‌ போட்டியில் பாக்கிஸ்தான் வெற்றிக்கு அருகில் வ‌ர‌ , உட‌ன‌ ம‌ழை வ‌ர‌ விளையாட்டு கைவிட‌ப் ப‌ட்டு இர‌ண்டு அணிக‌ளுக்கும் ஒவ்வொரு புள்ளி கொடுத்த‌வை இதே ஆண்க‌ளின் உல‌க‌ கோப்பை என்றால் ர‌ன் ரேட் அடிப்ப‌டையில் கைவ‌ச‌ம் எத்த‌னை விக்கேட் இருக்கு என்று ஏதாவ‌து ஒரு அணி வெற்றி என‌ அறிவிப்பின‌ம்...............க‌ட‌ந்த கால‌ ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பையில் ம‌ழை பெரிசா குறுக்கிட‌ வில்லை , அத‌னால் எல்லா போட்டிக‌ளும் சிற‌ப்பாக‌ ந‌ட‌ந்த‌து இந்த‌ உல‌க‌ கோப்பை போட்டி இந்த‌ வ‌ருட‌ம் 7மாதம் வைச்சு இருக்க‌னும் ஏன் தெரியல வ‌ருட‌க் க‌ட‌சியில் ந‌ட‌த்துகினம்.....................................