Aggregator
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
மலேசியாவிலிருந்து வந்த சிறிய விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம்
மலேசியாவிலிருந்து வந்த சிறிய விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம்
Published By: Vishnu
15 Dec, 2025 | 09:32 PM
![]()
மலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று 15ஆம் திகதி திங்கட்கிழமை தரையிறங்கியுள்ளது.
மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த அந்த விமானத்திற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. குறித்த விமானம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படவுள்ளது.
குறித்த விமானம் இந்த ஆண்டு தரையிறங்கிய சிறிய ரக மூன்றாவது சர்வதேச விமானம் எனவும், பிராந்திய விமான இணைப்புகளை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும், இலங்கையின் வடபகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.





நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
15 Dec, 2025 | 05:34 PM
![]()
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
இதன்போது, போர் குறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுவோம் எனக்கூறியுள்ளார்.
இதேவேளை, உக்ரைன் நாட்டின் எந்த ஒரு நிலப் பகுதியையும் ரஷ்யாவிற்கு தர முடியாது என்றும், தங்களது பாதுகாப்புக்கு மேற்கித்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுனார்.
யாழ். விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல்!
யாழ். விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல்!
Published By: Vishnu
15 Dec, 2025 | 09:13 PM
![]()
யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று திங்கட்கிழமை (15) மதியம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் விமான நிலையத் தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி, இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர், பொறியியலாளர் ஆகியோரால் சர்வமத வழிபாடுகளோடு அடிக்கல் நாட்டப்பட்டது.
குறித்த கட்டடம் அமைப்பதன் மூலம் பயணிகளின் எதிர்நோக்கும் சிரமங்களை தீர்க்க முடியும் என எதிராபார்க்கப்படுதாறது.







அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உலக வங்கியிலிருந்து 120 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உலக வங்கியிலிருந்து 120 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி!
15 Dec, 2025 | 05:47 PM
![]()
இலங்கையில் 'திட்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்காக அனர்த்த நிவாரண உதவியாக உலக வங்கியிலிருந்து 120 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக வங்கி குழுமம் ஆழ்ந்த துயரம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
அனர்த்தத்தின் போது, இலங்கையர்கள் காட்டிய குறிப்பிடத்தக்க மீள்தன்மைக்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் மீட்பு முயற்சிகளைத் தொடங்குவதற்கும் அரசாங்கம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகளுக்கும் உலக வங்கி பாராட்டுத் தெரிவிக்கிறது.
உலக வங்கியின் 120 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி சூறாவளியால்கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பாதுகாப்பு, நீர், கல்வி, விவசாயம் மற்றும் இணைப்பு உட்பட அத்தியாவசிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை மீட்டெடுக்கவும், சீரமைக்கவும் உதவும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
பேரிடர் இடர் குறைப்புக்கான உலகளாவிய வசதியுடன் (GFDRR) இணைந்து ஒரு உலகளாவிய விரைவு பிந்தைய-பேரழிவு சேத மதிப்பீடு (GRADE) ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்த விரைவு மதிப்பீடு, ஆரம்ப முடிவுகளுக்குத் தகவல்களை வழங்குவதற்கும், பதில் மற்றும் மீட்பு முயற்சிகளை இலக்காகக் கொள்வதற்கும் பேரழிவுத் தாக்கங்களின் நம்பகமான மதிப்பீடுகளை வழங்கும்.
புதிய "இலங்கையைக் கட்டியெழுப்புதல்" (Rebuilding Sri Lanka) நிதியை உருவாக்குதல் மற்றும் பேரழிவுக்குப் பிந்தைய தேவைகள் குறித்த அடுத்தகட்ட மதிப்பீடுகள் உட்பட, அரசாங்கம் திட்டமிட்டுள்ள பரந்த மீட்சிக்காக உலக வங்கி நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது.
இலங்கையின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கவும், பொருளாதார மீட்சியைத் துரிதப்படுத்தவும், வலிமையான, பாதுகாப்பான மற்றும் மீள்தன்மை கொண்ட சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் உலக வங்கி குழுமம் உறுதியுடன் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
நிகழ்நிலை முறைமையிலான நிதி மோசடி அதிகரிப்பு; சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும் - இலங்கை கணினி அவசர தயார்நிலை
நிகழ்நிலை முறைமையிலான நிதி மோசடி அதிகரிப்பு; சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும் - இலங்கை கணினி அவசர தயார்நிலை
நிகழ்நிலை முறைமையிலான நிதி மோசடி அதிகரிப்பு ; சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும் - இலங்கை கணினி அவசர தயார்நிலை
15 Dec, 2025 | 05:35 PM
![]()
(இராஜதுரை ஹஷான்)
பண்டிகைக் காலம் மற்றும் அனர்த்த நிலைமைக்கு மத்தியில் நிகழ்நிலை முறைமை ஊடாக நிதி மோசடிகள் அதிகரித்துள்ளன. சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும், தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போது பாதுகாப்பாக இருக்கவும், தெரியாத நபர்கள் அல்லது சரிபார்க்கப்படாத வலைத்தளங்களை அணுகும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை (OTP) ஒருபோதும் வெளியிட வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
கடந்த சில வாரங்களாக சமூக ஊடக தளங்கள் வழியாக நிகழ்நிலை மோசடி மற்றும் பணமோசடி முயற்சிகள் அதிகரித்து வருவதால், இலங்கை கணினி அவசரகால தயார்நிலை குழு பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தையும் தற்போதைய பேரழிவு சூழ்நிலையையும் பயன்படுத்திக் கொண்டு சைபர் குற்றவாளிகள் பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது.
அரசாங்க நிறுவனங்கள், அரசாங்கத் துறைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என்று பொய்யாகக் காட்டிக் கொள்ளும் மோசடி செய்பவர்கள் குறித்து கணிசமான எண்ணிக்கையிலான புகார்கள் கிடைத்துள்ளன. சந்தேகமில்லாத வகையில் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக, மோசடி நபர்கள் போலியான விளம்பரங்களை நிதி வெகுமதிகள் மற்றும் பரிசுகளை வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் தகவல்களைப் பதிவிடுகிறார்கள்.
நாட்டின் பல பகுதிகளை சேதப்படுத்திய சூறாவளி மற்றும் கனமழையைத் தொடர்ந்து, நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பெயர்களை சைபர் குற்றவாளிகள் மோசடியாக ஆள்மாறாட்டம் செய்து வருகின்றனர். அவர்கள் மோசடியான இணைப்புகளை இடுகையிடுவதையும், இந்த இணைப்புகள் மூலம் பொதுமக்களை பணத்தை நன்கொடையாக வழங்க ஊக்குவிப்பதையும் கவனித்துள்ளனர். இதன் விளைவாக, மோசடி செய்பவர்கள் சில தனிநபர்களின் வங்கிக் கணக்குகளுக்குள் அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று அந்தக் கணக்குகளைக் கட்டுப்பாட்டில் எடுத்த வழக்குகள் உள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்த அனைத்து பணத்தையும் இழந்த வழக்குகளும் உள்ளன. சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும், தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போது பாதுகாப்பாக இருக்கவும், தெரியாத நபர்கள் அல்லது சரிபார்க்கப்படாத வலைத்தளங்களை அணுகும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை (OTP) ஒருபோதும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அரசு நிறுவனங்களும் நிறுவப்பட்ட அமைப்புகளும் எந்தவொரு கோரிக்கையும் இல்லாமல் சமூக ஊடகப் பதிவுகள் அல்லது ஆன்லைன் இணைப்புகள் மூலம் பொதுமக்களிடமிருந்து முக்கியமான தகவல்களைப் பெறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் நிதி திரட்டும் கோரிக்கை அல்லது நிதி உறுதிமொழி அடங்கிய எந்தவொரு சமூக ஊடகச் செய்திகளையும் கூர்ந்து கவனித்து, அவற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. விழிப்புடன் இருங்கள். உங்கள் டிஜிட்டல் அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.