Aggregator

மதகுருமார் வர வேண்டாம் – கெஞ்சிய அதிகாரிகள்

2 weeks 1 day ago

மதகுருமார் வர வேண்டாம் – கெஞ்சிய அதிகாரிகள்

written by admin September 1, 2025

questions.jpg?fit=760%2C440&ssl=1

 

மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பில் தெரியவருவதாவது,

மயிலிட்டி இறங்குதுறை அதிகாரிகளால், நிகழ்வுக்கு வருமாறு அப்பகுதி இந்து மதகுரு மற்றும் கிறிஸ்தவ பாதிரியாருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தன.இந்நிலையில் நேற்றைய தினம் மதகுருமார்களை சந்தித்த அதிகாரிகள், நிகழ்வுக்கு வர வேண்டாம் என கோரியுள்ளனர்.

மயிலிட்டி நிகழ்வுக்கு பௌத்த மதகுரு சார்பில் தையிட்டி விகாரதிபதியை அழைக்க நேரிட்டால், அது விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதால், நிகழ்வில் எந்த மதகுருமாரையும் அழைக்காது விடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியே, நிகழ்வுக்கு மத குருமார்களை வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.


https://globaltamilnews.net/2025/219944/

அதிவேகமாக கப்பல் கட்டும் சீனா பெருங்கடல்களை ஆள தயாராகிறதா?

2 weeks 1 day ago
இப்பவும் சொல்லுறன்....😂 மேற்குலகம் உக்ரேனுக்காக ரஷ்யாவோட புடுங்குப்படுறத விட்டுட்டு நேசமாக இருந்து...... ரஷ்யாவோட வழமை போல வர்த்தகம் செய்து கொண்டு தாங்களும் வளர்ந்து ரஷ்யாவையும் வளர விட்டால் நல்லது. பனிப்போருக்கு பின்னர் ரஷ்யா மேற்குலகு சார்ந்தே இருந்து வந்துள்ளது.நேட்டோ ஆசை எல்லாத்துக்கும் ஆப்பு வைத்துள்ளது.மேற்குலகு ரஷ்யாவுடன் நட்பாக இருந்தால் இருந்திருந்தால் சீனாவிடம் இருந்து கொஞ்ச பாதுகாப்பாகவாவது இருக்கும். சீனாவின் அபரீத வளர்ச்சி மேற்குலகை மூழ்கடிக்கும் என நான் நம்புகின்றேன். சிரிச்சு சிரிச்சே உலகில் எல்லா இடத்திலும் காலூன்றி விட்டார்கள். கொஞ்சம் கவனித்து பார்த்தால் ரஷ்யாவிடம் பட்டுச்சாலை போன்ற மறைமுக உலகை கைப்பற்றும் திட்டம் இல்லை.

உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! -புடின்

2 weeks 1 day ago
முற்றிலும் உண்மையான செய்தி. ஜேர்மனியில் குத்துச்சண்டை வீரர்களாக இருந்த இந்த இரு உக்ரேனிய சகோதரர்களுமே அங்கே சண்டை சச்சரவுகளுக்கு ஆர்ப்பாட்டம் எனும் போர்வையில் தூபமிட்டவர்கள்.ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பகாலங்களில் இவர்களை வைத்து தான் உக்ரேனை தங்கள் அரசியலுக்கு பேசு பொருளாக்கினர். https://www.instagram.com/p/CauLxN4qvin/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?

2 weeks 1 day ago
சீனா சிறிலங்காவின் நண்பன்..அதேவேளை இந்தியாவும் ரஷ்யாவும் சிறிலங்காவின் நண்பர்களே. இந்தக் கூட்டில் சிறிலங்காவும் விரவில்இணைய வேண்டும்.மறு பக்கம் இந்தக் கூட்டிணைவு க்கு பயந்து ட்ரம் ப் வரிகளைக் குறைக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். இந்தச் செய்தி இந்தியாவுக்கு மிக அண்மையில் ஒரு இஸ்ரேலைக் கட்டி எழுப்ப வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு வந்திருக்கிறது.அந்த இஸ்ரேலுக்குரிய அனைத்து தகமைகளும்.கேந்திர முக்கியத்துவம் வாயந்த இடங்களும் இருக்கின்ற பிரதேசம் தமிழர்தாயகமே.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!

2 weeks 1 day ago
நமது தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள் முரண்பட்ட வண்ணம் ஆவேச அரசியலை கையில் எடுத்து தமது பிழைப்பை பார்த்தார்களே ஒழிய வேறேதும் இன்றுவரை இல்லை. மாறுபட்ட அரசியல் ஒன்று வருகின்றது போல் இருக்கின்றது.பார்க்கலாம்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!

2 weeks 1 day ago
இன்னும் நாலு சுமந்திரர்களும் மூன்று ஸ்ரீதரர்களும் இரண்டு சாணக்கியர்களும் உருவாகினால் விரைவில் நடக்கும்

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

2 weeks 1 day ago
நான் நினைக்கிறேன் கச்சத்தீவுக்கு சென்ற முதல் சனாதிபதி அனுர தான் என்று. இதற்கு முதல் எந்த சனாதிபதியாவது கச்சதீவுக்கு சென்றிருக்கின்றனா?

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

2 weeks 1 day ago
பாகம் - 8 'முகாமுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினர் வருவார்கள், மிகக்கடுமையான நோயாளிகளை திருக்கோணமலை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வேண்டியிருக்கும், “நாங்கள் எங்களுடைய வாகனத்தில் உங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகிறோம். ஆனால் இடையில் இராணு வமோ, முஸ்லிம் ஊர்காவல் படையோ உங்களை எமது வாகனத்திலிருந்து இறக்கிக் கொண்டு போனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இதற்குச் சம்மதமானால் வாகனத்தில் ஏறுங்கள்” என்று கூறுவார்கள். யாராவது போகச் சம்மதிப்பார்களா? நடப்பது நடக்கட்டும் என்று இங்கே கிடந்து சாக வேண்டியதுதான்!” என்றார்? வாகனங்களில் இருந்து இவ்வாறு யாராவது இறக்கி எடுக்கப்பட்டிருக்கிறார்களா? என்று கேட்டேன். ஆலங்கேணியில் மூன்றுபேரும் ஜெயபுரவில் ஒன்பது பேரும் இவ்வாறு இறக்கி எடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அது சண்டை தொடங்கியவுடன் இ.போ.ச. பஸ்களில் இருந்து என்றார். சரி செஞ்சிலுவைச் சங்கத்தை விடுங்கள். வேறு யார்யாரிடம் இந்த விடயங்கள் தொடர்பாகமுறையிட்டிருக்கிறீர்கள்: என்றேன். பச்சநூர் முகாமுக்கு பாராளுமன்றத் தூதுக்குழுவொன்று அகதிகளைப் பார்வையிட வந்தது. அதில் மாவை சேனாதிராசாவும் வந்திருந்தார். அகதி முகாம் கொடுமைகளை அவரிடம் சொல்லி எமது பாதுகாப்புக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று அவரிடம் அகதிகள் கேட்டார்கள். "எங்களுக்கே பாதுகாப்பு இல்லை உங்களுடைய பாதுகாப்புக்கு நாங்கள் என்ன செய்வது என்றார் மாவை சேனாதிராசா. இதற்குப் பின் அவர்களோடு பேச என்ன இருக்கிறது? என்று வினாவினார். உயர் இராணுவ அதிகாரிகள் யாரிடமாவது இது சம்பந்தமாகக் கதைக்க வில்லையா? என்று கேட்டேன். இந்தப் பகுதியில் சுரேஸ் காசிம் என்ற முஸ்லிம் இராணுவ அதிகாரிதான் எல்லா நடவடிக்கைகளுக்கும் காரணமாக இருக்கிறான். அவனிடமும் மக்கள் கேட்டார்கள். ‘பிடித்துக் கொண்டு போகப்பட்டவர்களின் நிலைமை என்ன மாதிரி?’ என்று அதற்கு அவன் சொன்ன பதில் ‘அகதி முகாம்களில் இருந்து பிடிபடுபவர்களைப் பற்றி மட்டும் எதுவும் கேட்க வேண்டாம். சாப்பாடு இல்லை தண்ணீர் இல்லை இதைப் போன்ற குறைபாடுகளைச் சொல்லுங்கள் நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம்’ என்று சொல்கின்றான் என்றார் அவர். நானும் சுரேஸ் காசிமைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்தான் என்றேன் நான். 'போன கலவரத்தில் ஆலங்கேணியில் இருந்த ஒரு பெண் பிள்ளையைத் தேடிப் போயிருக்கிறான் சுரேஸ் காசிம். அந்தப் பிள்ளை இயக்கத்துக்கு நல்ல உதவி. வீட்டுக்குப் போய் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டவுடன் அந்தப் பிள்ளையின் தங்கச்சிதான் முன்னுக்குப்போனது. அக்காவுக்கு ஆபத்து என்பதைத் தெரிந்து கொண்டு நான்தான் அவள் என்று சொன்னது. தலையிலிருந்து கால்வரை மூன்று மகஸீன் பொழிந்து தள்ளினான். ஆள் இரண்டாகப் போய்விட்டது என்றார். ‘என்ன இயக்கப் பாஷையெல்லாம் பேசுகிறீர்கள்?’ என்று கேட்டேன். நாளாந்தம் இயக்கத்தோடுதான் பழகுகிறோம். திருக்கோணமலையைப் பொறுத்தவரை இயக்கமும் பொதுமக்களும் வேறு வேறல்ல. எல்லாப் பிரச்சினையும் எல்லோருக்கும் தான் என்றார் அவர். சரி மீண்டும் சந்திப்போம் என்று அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டோம். போகும் வழியில் பதுமனுக்கு ஒரு செய்தி கிடைத்தது. 22-09-90 அன்று புதுக்காவே என்ற இடத்தில் சிங்கள ஊர் காவல் படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் மூன்று ஊர் காவல் படையினர் கொல்லப்பட்டதாயும் இரண்டு சொட் கண்கள், எட்டுத்தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாயும் அச்செய்தியில் விபரமாக எல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது. நாம் போய்ச் சேர்ந்த முகாமில் இருதினங்கள் தங்கினோம். பின்னர் 24-09-90 அன்று பிற்பகல் எமது பணயம் ஆரம்பமானது. இப்பயணத்தில் 1979 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இயக்கத்துடன் ஈடுபாடு கொண்ட ஒருவரைச் சந்தித்தோம். அன்றிலிருந்து இவரும் எமது பயணத்தில் இணைந்து கொண்டார். இவரது பெயர் துரைநாயகம். நான்கு பிள்ளைகளின் தந்தை. சிறிலங்கா, இந்திய இராணுவங்களிடம் பிடிபட்டு சிறையில் இருந்தவர். திருமலை பற்றிய புள்ளி விபரங்கள் நிறையவே வைத்திருந்தார். எந்தச் சம்பவத்தைக் கேட்டாலும் திகதி வாரியாகக் கூறுவார். அவ்வளவு ஞாபகசக்தி படைத்தவர். பொதுமக்களை நாங்கள் சந்தித்த பின்னர்தான் திருமலையில் எவ்வளவு குடும்பஸ்தர்கள் முழுநேர உறுப்பினர்களாக பணியாற்றுகின்றார்கள் என்பதை உணர முடிந்த். இவர்களை வெறும் ஆதரவாளர்களாக கருதமுடியாது. ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு தமது கடமைகளில் முழுமூச்சாக ஈடுபடுவார்கள். “கலியாணம் மட்டும் முடிக்காமலிந்தால் உங்களைவிட நான் தீவிரமாயிருப்பேன்” என்று வீரம் பேசும் யாழ்ப்பாணத்துக் கடும்பஸ்தர்கள் பலரை நினைத்துக் கொண்டேன். இந்தப்பாதை அட்டைகள் முதலைகள் உள்ள பாதையென்றார் பதுமன். கறுப்பு நிறமான அட்டைகள் உடலில் பிடித்துக்கொள்ளும் அப்படியே எமது உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சியெடுக்கும் இலேசில் பிடுங்கியெறிய முடியாது. பிடுங்கியதும் உடம்பிலிருந்து இரத்தம் ஓடிக்கொண்டேயிருக்கும். நிறுத்துவரு கஷ்டம் என்றார். முதலைகள் பற்றிக்கேட்டபோது கும்புறு பிட்டியைச் சேர்ந்த ராஜன் என்ற போராளி முதலைக்குப் பலியாகியுள்ளான். 85 ஆம் ஆண்டு அந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று கூறினார் அவர். பெரும்பாலும் விலங்குகளைத் தான் முதலை பிடிக்கும் என்றாலும் பெரிய முதலைகள் மனிதர்களை இழுத்துக் கொண்டு போகும் என்றார். "முதலைபிடித்து யாராவது தப்பியுள்ளார்களா?” என்று கேட்டேன், அப்போது துரை நாயகம் குறுக்கிட்டு "வள்ளி என்ற பெண்ணை முதலை பிடித்தது. பெரிய போராட்டமே நடத்தித்தான் அப் பெண்ணைக் காப்பாற்றமுடிந்தது இப்போதும் அந்தப்பெண் உயிருடன் இருக்கிறார். இப்போது அவரை “முதலை வள்ளி’ என அழைப்பார்கள்" என்றார்- பொருத்தமான பெயர்- வேறு என்ன மிருகங்களால் தொல்லை எனக் கேட்டேன். பாம்பு, யானை, கரடி இவைதான் மிகக் கூடிய தொல்லை கொடுக்கக் கூடியன. மட்டக்களப்புத் தளபதி கருணாவைக்கூட கரடி ஒரு தடவை பிடித்தது” என்றார் பதுமன். மட்டக்களப்பில் உள்ள கரடியனாற்றைச் சேர்ந்த துமிலன் (விஜய குமார்) என்ற போராளி பாம்பு கடித்து இறந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வரவே திருமலையில் யாருக்காவது பாம்பு கடித்ததா என்று கேட்டேன், ‘‘சமீபத்தில் கூட காயமடைந்த ஒரு போராளியைக் கொண்டு வரும் போது இராணுவத்தினர் தாக்கினார்கள். இராணுவத்தினருடன் மோதிக் கொண்டு ஒரு பற்றைக்குள் போகும் போது ஒருவனுக்கு பாம்பு கடித்தது. இருக்கும் இடத்தில் பாம்பு. எதிரில் இராணுவம். போராளிகளின் நிலை எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்' என்றார். தொடர்ந்து “இப்படி காயமடைந்தவர்களைக் கொண்டு வரும்போது மட்டும் பன்னிரண்டு போரா ளிகளை இழந்துள்ளோம்' என்றார். சிங்கள இராணுவம், சிங்கள ஊர்காவல்படை, முஸ்லிம் ஊர்காவல்படை, அட்டை, பாம்பு, கரடி, யானை, காட்டிக் கொடுப்போர் இப்படி எத்தனை விலங்குகளுடன் தான் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது என் நினைத்துக் கொண்டேன். (தொடரும்)

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

2 weeks 2 days ago
பாகம் - 7 தம்பலகாமத்தில் ஜோண் சில்வா என்றொருவன் இருக்கிறான். தமிழர் மத்தியிலேயே இவனும் இருந்து வந்திருக்கிறான். பட்டிமேட்டில் உள்ள பிள்ளையார் கோயில் காணியில்தான் இவனது வீடு இருந்தது இவனுக்கு இரண்டு பெண்களும் ஆண்பிள்ளையும் உண்டு. இவனது மகனை றாலாமி' என அனைவரும் அழைப்பர். இவனது பெயர் விஜேதாஸ. என்ன காரணத்தினாலோ ஜே. வி. பி. யினர் றாலாமியைச் சுட்டு விட்டனர். தம்பலகாமத்தில் நிறைய மாடுகள், எருமைகள் உண்டு. இங்கு பாலை வாங்கி அதைக் கொழும்புக்கு அனுப்பி வியாபாரம் செய்வதுதான் ஜோண் சில்வாவின் தொழில். அதனால் இவன் பெரிய பணக்காரனாகி விட்டான். அத்துடன் தம்பலகாமம் கோணேசர் கோயிலுக்குச் சொந்தமான காணியில் விவசாயம் செய்துவந்தான். ஆரம்பத்தில் இவனுக்கு குத்தகைக்கு வயலைக் கொடுத்து வந்த கோணேசர் கோயில் நிர்வாகம் பின்னர் குத்தகையை ஏலத்தில் விட ஆரம்பித்தது. ஏலத்தில் இவனுக்கு நிலம் நிலம் கிடைக்காமல் போயிற்று. பின்னர் தமிழர்களுக்குச் சொந்தமான காணியில் போய் அத்துமீறியிருந்தான் அத்துமீறி இருக்கும் இவனை வெளியேற்ற தமிழரான உதவி அரசாங்க அதிபர் முயற்சித்தார். இவனுக்கும் உதவி அரசாங்க அதிபருக்கும் பலப்பரீட்சை நிகழ்ந்தது. அன்றிலிருந்து தம்பலகாமத்துக்கு சிங்களவரே உதவி அரசாங்க அதிபராக இருக்கிறார். சட்ட விரோதமாகக் குடியேறிய சிங்களவனைக் காப்பாற்ற உதவி அரசாங்க அதிபர் பதவிக்கு தொடர்ந்து சிங்களவரை அரசு நியமிக்கிறது என்றார். தம்பலகாமம் கோயிலுக்கு எத்தனை ஏக்கர் வயல் உள்ளது?' என்று கேட்டேன். 'ஆயிரம் ஏக்கர் வரையில் இருக்கும்' என்றார். தொடர்ந்து தம்பலகாமம் கோயில் வீதியில் அரசமரம் ஒன்று நின்றது. தற்போது அது வெட்டப்பட்டுவிட்டது. அரசமரம் அங்கே இருந்தபடியால் தம்பலகாமம் கோயிலுக்குச் சொந்தமான காணியின் அரைப்பங்கு சிங்களவர் வர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறி சிங்களவரை குடியேற்றும் முயற்சிகளில் ஜோண்சில்வா ஈடுபடுகிறான் என்றார். அது சாத்தியப்படக் கூடிய விஷயமா? என்று கேட் டேன். "ஏன் இன்று 13ஆம் கட்டை, ஜெயந்திபுர எல்லாம் சிங்களவர் குடியேறவில்லையா? குடியேறிய பின் சிங்களப் பெயரை வைத்தால் அதன் பின் அது சிங்களக் கிராமம்தானே! அதுதானே இங்குள்ள நடை முறை என்றார். அரசமரம் நின்ற இட மெல்லாம் சிங்கள இடமாம்; புதிய விளக்கம் (பின்னர்நான் சந்தித்த துரைநாயகம் என் பவரும் அரசமரத்தை வெட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர். பாராளுமன்றத்தில் கூட சிறில் மத்யூ இந்தப் பிரச்சினையை எழுப்பியிருந்தார். திரு. துரைநாயகம் ஒரு கட்டத்தில் "முளைக்கும் ஒவ்வொரு அரச மரத்தையும் வெட்டுவதன்மூலம் எதிர் காலத்தில் வெட்டுப்படவிருக்கும் தமிழரின் எண்ணிக்கையை வெட்டுகிறோம்' என்று விளக்கம் கொடுத்தார்.) “அதெப்படி”? என்று நான் கேட்டபோது 'அரசமரம் இருக்கும் இடமெல்லாம் புத்த விகாரை இருக்கவேண்டும். புத்தவிகாரை ன் மணி ஓசை கேட்கும் இடமெல்லாம் சிங்களவருக்குச் சொந்தமான நிலம் என்று சிறில் மத்யூ ஒரு கட்டத்தில் கூறியிருந்தார். சிறில் மத்யூ ஊட்டிய இன வாத விதைதான் இன்று தானே முளைக்கும் அரசமரத்தைச் சுற்றியுள்ள இடமெல்லாம் சிங்களவருக்குச் சொந்தமான இடமென்று வாதிட வைக்கிறது' என்று விளக்கம் கொடுத்தார். சிங்கள ஊர்காவல்படையி னரைத் தூண்டி விடுவது ஜோண்சில்வாதான் என்றார். சிங்கள ஊர்காவல் படையால் இந்தமுறையும் தொந்தரவு உண்டா? என்று கேட்டோம் - தற்சமயம் மிகப்பிரச்சினையானவர்கள் முஸ்லிம் ஊர்காவல்படையினர் - முன் னர் சிங்கள இராணுவம், சிங்கள ஊர்காவல்படை என்றிருந்து பின்னர் இந்திய இராணுவம் என்றிருந்து தற்பொழுது முஸ்லிம் ஊர்காவல்படை தமிழர் அழிப்பை பொறுப்பேற்றிருக்கிறது. எப்போதும் தமிழர்களுக்கு அழிவைத்தான் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். தமிழின அழிப்பில் நடிகர்கள்தான் மாறியிருக்கிறார்களேயொழிய பாத்திரங்கள் மாற வில்லை என்றார் விரக்தியுடன். இந்திய இராணுவம் அப்படியென்ன வித்தியாசமாகச் எல்லா இடமும் செய்தது? தமிழரைச் சுட்டது போல இங்கேயும் சுட்டிருக்கும்!' என்றேன். தம்பலகாமம் கள்ளிமேட்டைச் சேர்ந்த நவரட் ணம் என்பவரை உடம்பில் துணியால் சுற்றி ரின்னர் ஊற்றித் தீமூட்டியது. இப்படி வேறெங்காவது செய்துள்ளதா? என்று சினத்துடன் கேட்டார். கோவிக்க வேண் டாம். இதையொத்த சம்பவங்கள் பலதைச் செய்துள்ளது தான். ரின்னர் ஊற்றிக் கொளுத்தியது நான்இப்போது தான் அறிகிறேன். சரி நீங்கள் ஜோண்சில்வாவைப் பற்றிக் கூறுங்கள் என்றேன். 'ஜோண்சில்வாவினால் ஊக்குவிக்கப்படும் சிங்கள ஊர்காவல்படை போன கலவரத்தில் புதுக்குடியிருப்பில் மட்டும் முப்பத்து மூன்று பேரைக் கொன்றது' என்றார். கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள் என்றேன். போன கலவரத்தில் கோயிலடியில் அகதிகளாக இருந்தவர்களிடம் இராணுவம் வந்து நீங்கள் பழைய தொழில்களைச் செய் யலாம். இனிப் பிரச்சினையில்லை என்றனர். அதை நம்பி, புதுக்குடியிருப்பில் உள்ள அரிசிமில் ஒன்றுக்கு வேலைக்குப் போன தமிழர்கள் 33 பேரை ஊர்காவல் படை கடத்திக்கொண்டு போய்ச் சுட்டது. அதுமட்டுமல்ல பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த மில் உரிமையாளர் சபாரட்ணத்தின் கைவிரலில் மோதிரம் இருப்பதைக் கண்டு விரலையும் வெட்டிக் கொண்டு போனது என்றார். இம்முறையும் இப்படி ஏதும் திட்டமிருக்குமா? என்று கேட்டேன். பட்டிமேட்டில் உள்ள ஸ்ரீ சாரதா வித்தியாலயத்துக்கு வந்து அகதிப்பிள்ளை களைப் படிக்கச் சொல்கிறார்கள். அது இராணுவமுகாமுக்குக் கொஞ்சம் தொலைவிலுள்ளது. படிக்கப்போகும் பிள்ளைகளை அப்படியே அள் ளிக்கொண்டு போகும் திட்ட மிருக்கும் என்பதால் பிள்ளைகள் படிக்கப் போகவில்லை என்றார். ஏன் இராணுவ முகாமிலேயே பிடிக்கிறார்கள் தானே என்று கேட்டேன். இராணுவ முகாம் பக்கத்தில் உள்ள இடத்தில் என்றால் தாங்கள் மறுமொழி சொல்ல வேண்டியிருக்கும்; கொஞ்சம் தள்ளியென்றால் தங்களுக்கு இதைப்பற்றித் தெரியாது. ஊர்காவல்படை தான் கொண்டு போயிருக்கலாம் என்று இராணுவத்தினர் தப்பிக்கப் பார்ப்பார்கள். இப்படித்தானே போன கலவரதில் மில்லில் இருந்து கொண்டு போய் முப்பத்து மூன்று பேரைக் கொன்றவர்கள் என்றார். தமிழின அழிப்பில் தான் எத்தனை வகை என்று எண்ணிக் கொண்டேன். அகதிமுகாம்களில் நடக்கும் விடயங்கள் பற்றி இதற்கு முடிவு காண சுயமாக ஏதாவது செய்தார்களா? என்று கேட்டேன். இதற்கு என்ன செய்ய முடியும். பொறுப்பான செஞ்சிலுவைச் சங்கம் போன்றவையே கையைவிரிக்கும் போது என்றார். (தொடரும்)

செம்மணி மனிதப்புதைகுழி - முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் - ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 

2 weeks 2 days ago
நிலத்தை தோண்டும் போது எம்மவர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெறும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் சர்ச்சைக்குரியதாக உள்ளது - ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Published By: Digital Desk 3 01 Sep, 2025 | 04:34 PM (இராஜதுரை ஹஷான்) நிலத்தை தோண்டும் போது எம்மவர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெறும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். மறைப்பதற்கு ஏதும் எம்மிடமில்லை. இனிவரும் காலங்களில் இலங்கையில் இவ்வாறான நிலை ஏற்படக்கூடாது. கொடூரமான அனுபவங்கள் மீண்டும் தோற்றம் பெறாத வகையில் அவை நினைவுகூரப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அங்கு உரையாற்றுகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது, எமது மீனவர்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். இலங்கையின் பிரதான கேந்திரமையமாக கச்சத்தீவு காணப்படுகிறது. கச்சத்தீவு இன்று பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. நாட்டின் ஆட்புல எல்லைகளை பாதுகாத்து அவற்றை எதிர்கால தலைமுறையினருக்கு வழங்குவது எமது பொறுப்பாகும். அந்த பொறுப்பை நிறைவேற்றும் கடப்பாடு எமக்கு உண்டு. எமது தீவு, நிலம்,ஆகாயம் அனைத்தும் எமது மக்களுக்குரியது. கச்சத்தீவு விவகாரத்தில் எவ்வித அழுத்தங்களுக்கும் நாங்கள் அடிபணிய போவதில்லை. https://www.virakesari.lk/article/223947

செம்மணி மனிதப்புதைகுழி - முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் - ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 

2 weeks 2 days ago

நிலத்தை தோண்டும் போது எம்மவர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெறும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் சர்ச்சைக்குரியதாக உள்ளது - ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 

Published By: Digital Desk 3

01 Sep, 2025 | 04:34 PM

image

(இராஜதுரை ஹஷான்)

நிலத்தை தோண்டும் போது எம்மவர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெறும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். மறைப்பதற்கு ஏதும் எம்மிடமில்லை. இனிவரும் காலங்களில் இலங்கையில் இவ்வாறான நிலை ஏற்படக்கூடாது. கொடூரமான அனுபவங்கள் மீண்டும் தோற்றம் பெறாத வகையில் அவை நினைவுகூரப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அங்கு உரையாற்றுகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,

எமது மீனவர்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். இலங்கையின் பிரதான கேந்திரமையமாக கச்சத்தீவு காணப்படுகிறது. கச்சத்தீவு இன்று பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. நாட்டின் ஆட்புல எல்லைகளை பாதுகாத்து அவற்றை எதிர்கால தலைமுறையினருக்கு வழங்குவது எமது பொறுப்பாகும். அந்த பொறுப்பை நிறைவேற்றும் கடப்பாடு எமக்கு உண்டு.

எமது தீவு, நிலம்,ஆகாயம் அனைத்தும் எமது மக்களுக்குரியது. கச்சத்தீவு விவகாரத்தில் எவ்வித அழுத்தங்களுக்கும் நாங்கள் அடிபணிய போவதில்லை.

https://www.virakesari.lk/article/223947

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

2 weeks 2 days ago
ஜனாதிபதி கச்சதீவிற்கு விஜயம் Published By: Vishnu 01 Sep, 2025 | 09:56 PM யாழ்ப்பாணத்திற்கு 1ஆம் திகதி திங்கட்கிழமை காலை வந்தடைந்த ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க, மாலை வேளையில் கச்சதீவுக்குப் பயணம் மேற்கொண்டார். வடக்கு பிராந்தியத்தில் இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த ஜனாதிபதி, திங்கட்கிழமை (1) மாலை 5 மணியளவில் ஊர்காவற்றுறையிலிருந்து 4 படகுகளில் கச்சதீவுக்கு பயணமானார். குறித்த இடத்திற்கு சென்ற பின் அங்கு பல பகுதிகளைப் பார்வையிட்டார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அங்கு உள்ள பொது மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அதேவேளை, மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி விசாரித்து கேட்டறிந்துகொண்டார். ஜனாதிபதி விஜயத்தின் போது, கச்சதீவின் இயற்கை அழகையும், மீனவர் சமூக வாழ்வையும் அவர் நேரடியாகக் கண்டறிந்தார். மேலும், கச்சதீவு தொடர்பான எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் அவர் ஆராய்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223973

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

2 weeks 2 days ago
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் பணப்பரிசு நான்கு மடங்காக அதிகரிப்பு; சம்பியன் அணிக்கு 134 கோடி ரூபா Published By: Digital Desk 3 01 Sep, 2025 | 05:12 PM (நெவில் அன்தனி) இந்தியாவிலும் இலங்கையிலும் இந்த மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள 8 அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்த பணப் பரிசாக 418 கோடியே 5 இலட்சத்து 74,000 ரூபா (13.88 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படவுள்ளது. இதன் படி இந்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பணப் பரிச நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. நியூஸிலாந்தில் 2022இல் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் மொத்த பணப்பரிசாக 105 கோடியே 42 இலட்சத்து 83,000 ரூபா (3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்பட்டது. இந்த வருடம் சம்பியன் அணிக்கு 134 கோடியே 93 இலட்சத்து 49,000 ரூபாவும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 67 கோடியே 46 இலட்சத்து 74,000 ரூபாவும் அரை இறுதிகளில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 33 கோடியே 73 இலட்சத்து 37,000 ரூபாவும் பணப்பரிசாக கிடைக்கும். குழு நிலை லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் சுமார் ஒரு கோடியே 3 இலட்சம் ரூபா பணப்பரிசாக வழங்கப்படும். 5ஆம், 6ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா 21 கோடியே 8 இலட்சம் ரூபாவும் 7ஆம், 8ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா 8 கோடியே 43 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படும். அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய 8 நாடுகள் பங்குபற்றும் 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி செம்டெம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எட்டு அணிகளும் ஒன்றையொன்று ஒரு தடவை எதிர்த்தாடும் இந்த சுற்றுப் போட்டியின் ஆரம்பப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் குவஹாட்டியில் விளையாடவுள்ளன. லீக் சுற்றில் 28 போட்டிகள் நடைபெறுவதுடன் அரை இறுதிப் போட்டிகள் அக்டோபர் 29, 30ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி நவம்பர் 2ஆம் திகதியும் நடைபெறும். https://www.virakesari.lk/article/223953

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

2 weeks 2 days ago

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் பணப்பரிசு நான்கு மடங்காக அதிகரிப்பு; சம்பியன் அணிக்கு 134 கோடி ரூபா

Published By: Digital Desk 3

01 Sep, 2025 | 05:12 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவிலும் இலங்கையிலும் இந்த மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள 8 அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்த பணப் பரிசாக 418 கோடியே 5 இலட்சத்து 74,000 ரூபா (13.88 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படவுள்ளது.

இதன் படி இந்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பணப் பரிச நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

நியூஸிலாந்தில் 2022இல் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்  (50 ஓவர்) போட்டியில் மொத்த பணப்பரிசாக 105 கோடியே 42 இலட்சத்து 83,000 ரூபா (3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்பட்டது.

இந்த வருடம் சம்பியன் அணிக்கு 134 கோடியே 93 இலட்சத்து 49,000 ரூபாவும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 67 கோடியே 46 இலட்சத்து 74,000 ரூபாவும் அரை இறுதிகளில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 33 கோடியே 73 இலட்சத்து 37,000 ரூபாவும் பணப்பரிசாக கிடைக்கும்.

குழு நிலை லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் சுமார் ஒரு கோடியே 3 இலட்சம் ரூபா பணப்பரிசாக வழங்கப்படும்.

5ஆம், 6ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா 21 கோடியே 8 இலட்சம் ரூபாவும் 7ஆம், 8ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா 8 கோடியே 43 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படும்.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய 8 நாடுகள் பங்குபற்றும் 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி செம்டெம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எட்டு அணிகளும் ஒன்றையொன்று ஒரு தடவை எதிர்த்தாடும் இந்த சுற்றுப் போட்டியின் ஆரம்பப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் குவஹாட்டியில் விளையாடவுள்ளன.

லீக் சுற்றில் 28 போட்டிகள் நடைபெறுவதுடன் அரை இறுதிப் போட்டிகள் அக்டோபர் 29, 30ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி நவம்பர் 2ஆம் திகதியும் நடைபெறும்.

icc_women_s_world_cup_prize_money.png

https://www.virakesari.lk/article/223953

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 weeks 2 days ago
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு Published By: Vishnu 01 Sep, 2025 | 07:29 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் திங்கட்கிழமை (1) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 218 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 198 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 40வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223972

ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?

2 weeks 2 days ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது கூட்டம் நடைபெற்றது. கட்டுரை தகவல் ஜுபைர் அகமது பிபிசி செய்தியாளர் 1 செப்டெம்பர் 2025, 14:31 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்தி மோதி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் இடையே கடந்த ஆண்டு காசான் நகரில் நடந்த சந்திப்பை விட, தியான்ஜினில் ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த இந்த சந்திப்பு இன்னும் உறுதியானதாகவும், வலுவான கைக்குலுக்கலும் கொண்டதாகவும் இருந்தது. SCO உச்சி மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் சந்தித்தது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படாவிட்டாலும், அது அபூர்வமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இரு தலைவர்களும் அமெரிக்க அதிபர் டிரம்பின் சுங்க வரிகளாலும், அவரது நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு ஒரு தலைப்பட்சமாக எடுத்த நடவடிக்கைகளாலும் பாதிப்படைந்தவர்கள். இந்த சந்திப்பு எச்சரிக்கையுடனான மறுசீரமைப்பாக கருதப்பட்டது. 'நாங்கள் முன்னேற்றத்திற்கான கூட்டாளிகள், போட்டியாளர்கள் அல்ல' என இந்தியா மற்றும் சீனா கூட்டு அறிக்கையை வெளியிட்டது. மேலும், இந்த வேறுபாடுகள் மோதலாக மாறிவிடக் கூடாது என்பதையும் வலியுறுத்தியது. 2020ஆம் ஆண்டில் நடந்த கல்வான் மோதல்களுக்குப் பிறகு உருவான நீண்ட பதற்றத்திற்கு பின், உறுதித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்தது. இரு தலைவர்களும் வர்த்தகம், எல்லை மேலாண்மை பற்றி மட்டுமல்லாமல், பலதுருவ ஆசியா மற்றும் பலதுருவ உலகம் பற்றிய விரிவான பார்வையையும் முன்வைத்தனர். அமெரிக்காவை மட்டுமே உலகத் தலைவராகக் கருத முடியாது என்ற இதன் உட்பொருள் தெளிவாக இருந்தது. டிரம்பால் ஏற்பட்ட பாதிப்புகள்: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவுக்கு 50% இறக்குமதி வரி விதித்தார் டிரம்ப். இந்த சந்திப்பின் பின்னணியை தவிர்க்கமுடியாது. டிரம்பின் வரி விதிப்பு, இந்தியாவை சிக்கலான சூழ்நிலைக்கு தள்ளியது. அவசர அதிகாரங்களின் கீழ் விதிக்கப்பட்ட அந்த வரிகள், ரஷ்ய எண்ணெயை தள்ளுபடியில் வாங்கியதற்கான தண்டனையாக நியாயப்படுத்தப்பட்டன. ஆனால் உண்மையில், அவை அமெரிக்காவிற்கு இடமில்லாத யூரேஷிய கூட்டமைப்புகளுக்குள் இந்தியாவை மேலும் ஆழமாக இழுத்துச் செல்கின்றன. "ஆம், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவுடன் பணியாற்ற தயார் எனச் சிக்னல் கொடுக்கிறது. அமெரிக்கா, இந்தியா உறவு டிரம்பின் நடவடிக்கைகளால் சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்த திட்டம் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. ஆனால் இதை குறுகிய காலத் தீர்வாகவே பார்க்க வேண்டும்." என இந்திய வெளிநாட்டு கொள்கையில் முன்னணி அறிஞராக விளங்கும் இன்டியானா பல்கலைக்கழக பேராசிரியர் சுமித் கங்குலி பிபிசியிடம் கூறினார். ஆனால், மோதி மற்றும் ஜின்பிங் பயன்படுத்திய வார்த்தைகள் திட்டமிட்டு சிக்கலாக்கப்பட்டது. எல்லையில் அமைதியும், அமைதியான சூழலும் முன்னேற்றத்திற்குத் தேவையானவை என்ற பிரதமர் மோதியின் நினைவூட்டல், சமரசமானதாக மட்டுமல்ல எச்சரிக்கையாகவும் இருந்தது. எல்லையில் படைகளின் விலகல் (disengagement) மற்றும் தொடரும் பேச்சுவார்த்தைகள் குறித்த குறியீடுகள், சிறிய முன்னேற்றங்களை கூட அர்த்தமுள்ளவையாக காட்டும் வகையில் அமைந்தது. Play video, "டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?", கால அளவு 3,53 03:53 காணொளிக் குறிப்பு, டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா? பொருளாதாரத்தில், சுமையை குறைப்பது மற்றும் வர்த்தகத்தை ஆழப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள், இந்தியா, சீனாவுடன் கூட வர்த்தகத்திற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டு அரசியல் செய்தியாக முன்வைக்கப்பட்டன. "மூன்றாம் நாட்டின் பார்வையில் இருந்து மறுக்கப்பட்டதன் மூலமும், மூலோபாய சுயாட்சி (strategic autonomy) வலியுறுத்தப்பட்டதன் மூலமும், அமெரிக்க அழுத்தம் பெய்ஜிங் உடன் உள்ள ஈடுபாட்டை நிர்ணயிக்க அனுமதிக்கப் போவதில்லை என்பதை டெல்லி வாஷிங்டனுக்கு தெளிவுபடுத்தியது. டெல்லியின் போர் மேலாண்மை பள்ளியில் சீன நிபுணராக உள்ள பேராசிரியர் ஃபைசல் அஹ்மது நேரடியாக தனது கருத்தைப் பதிவிட்டார். "இந்தியா, சீனா உறவுகள் இருதரப்பாகவும் சரி, எஸ்சிஓ-விலும் சரி வலிமைமிக்க நிலைப்பாட்டில் இருந்து முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. தியான்ஜினில் நடந்த மோதி, ஜி ஜின்பிங் சந்திப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு." என்கிறார். இந்த சந்திப்பு நம்பிக்கையை வளர்க்கும் என அவர் நம்புகிறார். "மோதி, ஜி ஜின்பிங் சந்திப்பு இருதரப்பு நம்பிக்கையில்லாதன்மையை குறைக்க ஓர் ஊக்கம் அளிக்கிறது. எஸ்சிஓ அளவிலும், தியான்ஜின் சந்திப்பு பிராந்திய பிரச்னைகளில் ஒத்துழைப்பை அதிகப்படுத்தியது. சர்வதேச குற்றங்களை கையாளுதல், மக்கள் மத்தியிலான இணைப்பை வலுப்படுத்துதல் போன்றையும் இதில் அடங்கும். தோற்றங்களும் விளைவுகளும்: பட மூலாதாரம், @narendramodi படக்குறிப்பு, 7 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் மோதி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. உண்மையில் சில நேரங்களில் காட்சிகளும் முடிவுகளுக்குச் சமமான முக்கியத்துவத்தை பெறுகின்றன. தியான்ஜினில் ஜி ஜின்பிங் மற்றும் புதின் உடன் பிரதமர் தோன்றிய காட்சி, எஸ்.சி.ஓ அரங்கத்தைக் கடந்தும் பரவச் செய்தது. இது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான நேரமாக இருந்தது. சில நாட்களுக்கு முன், டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்தார் அந்தச் வரி சட்டத்திற்கு முரணானவை என்று அமெரிக்க கூட்டாட்சி மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் டிரம்புக்கு கூடுதல் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருப்பதால் அந்த வரிகள் இன்னும் நீக்கப்படவில்லை. ஷீ ஜின்பிங் மற்றும் புதினுடன் பிரதமர் மோதி தோன்றிய நிகழ்ச்சி, அடையாளச் சின்னங்கள் நிறைந்ததாக இருந்தது. பேராசிரியர் ஃபைசல் அஹ்மது, இந்த தருணத்தை வெறும் புகைப்படத்தை விட அதிகமாகக் கருதுகிறார். "டிரம்பின் வரி நடவடிக்கை மிகவும் முறையற்றது. தியான்ஜினில் மோடி, ஜின்பிங், புதின் ஒரே மேடையில் தோன்றியது, அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச பாதுகாப்புக் கொள்கைகளுக்கு பதிலடியாக இருந்தது." என்றார். 7 ஆண்டுகளில் முதல்முறையாக பிரதமர் மோதி சீனா சென்றுள்ளார். இது ஒரே ஒரு பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்வது பற்றியது மட்டுஅல்ல. ஜின்பிங் உடன் நடந்த இந்த சந்திப்பு, உறவுகளை மீட்பதற்கான வாய்ப்பை வழங்கியது. அதே சமயம், விரிவான எஸ்சிஓ சந்திப்பு, வாஷிங்டனை தாண்டி இந்தியாவுக்கு கூட்டாளிகள் உள்ளன என்பதை காட்டும் அரங்காக அமைந்தது. "சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டில் மோதி பங்கேற்றதை, மூலோபாய திசை மாற்றமாக அல்லாமல், விரிவான தூதரக சமநிலைப்படுத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்" என முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபால் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். எஸ்.சி.ஓ-வின் முக்கியத்துவங்கள்: பட மூலாதாரம், @narendramodi படக்குறிப்பு, இந்தியா, தன்னை எதிரியாக அல்ல அல்ல, கூட்டாளியாக பார்க்க வேண்டும் என ஷீ ஜின்பிங் வலியுறுத்தினார். வாஷிங்டனில், எஸ்.சி.ஓ பெரும்பாலும் அதிகாரவாதிகளின் சங்கமாகவே புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியா மற்றும் பிற எஸ்.சி.ஓ உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லை. இந்தியாவுக்கு, அதன் பயன் வேறு இடத்தில் இருக்கிறது. ரஷ்யா, சீனா, மத்திய ஆசியா, இப்போது ஈரானும் கூட ஒரே மேடையில் அமரக் கூடிய அரங்கத்தை அது வழங்கியுள்ளது. இந்த மாநாட்டை பயன்படுத்தி, இந்தியா, தன்னை எதிரியாக அல்ல அல்ல, கூட்டாளியாக பார்க்க வேண்டும் என ஷீ ஜின்பிங் வலியுறுத்தினார். டெல்லியை பொறுத்தவரை, இந்த சந்திப்பு உறுதித்தன்மை பற்றிய பேச்சுகள், எதிர்பார்க்கக்கூடிய உறவாக மாறுமா என்பதைச் சோதிக்கும் முயற்சியாக இருந்தது. டெல்லியில் இருப்பவர்கள் யதார்த்தத்தை புரிந்துகொண்டனர். எல்லைப் பிரச்னை தொடர்ந்து வலியை உண்டாக்குகிறது. மேலும் சீனாவுடனான 99 பில்லியன் டாலர் வர்த்தக பற்றுச்சுமை அரசியல் தலைவலியாக உள்ளது. இது கடினமாக இருந்தாலும், பேச்சுவார்த்தை அவசியமானதாக உள்ளது. "இதற்கு மாற்று என்ன? சீனாவை நிர்வகிப்பதே அடுத்த பல தசாப்தங்களுக்கு, இந்தியாவின் பிரதான பணியாகும்" என்கிறார் பகுப்பாய்வாளர் ஹாப்பிமான் ஜேக்கப். ஆறு உறுப்பினர்களுடன் எளிமையாக தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தற்போது 10 உறுப்பினர்களாக விரிவடைந்துள்ளது. அதோடு 2 பார்வையாளர்கள் மற்றும் 14 உரையாடல் கூட்டாளிகளும் உள்ளனர். இப்போது, அது மற்ற பிராந்திய அமைப்பை விட பரந்த புவியியல் பரப்பை கொண்டதாக, உலக மக்கள்தொகையில் மிகப்பெரிய பங்கை அளிக்கிறது. ஹாங்காங்கை மையமாக கொண்ட மூத்த பகுப்பாய்வாளர் ஹென்றி லீ, எஸ்.சி.ஓ குறித்துப் பேசினார். "எஸ்.சி.ஓ-பன்முகத்தன்மை அதிர்ச்சிகரமாக உள்ளது. வரலாறுகள், கலாசாரம், அரசியல் அமைப்புகள், வளர்ச்சி நிலைகள் இவை அனைத்தையும் உள்ளடக்கியவை. "இத்தகைய வேறுபாடுகள் இருந்தபோதிலும், எஸ்.சி.ஓ தனது உறுப்புநாடுகளின் தேவைகளையும் தற்போதைய சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கும் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது." என்றார். மேலும், "ஒரு விதத்தில், எஸ்.சி.ஓ உலகுக்கு பல்வேறு நாடுகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை காட்டுகிறது. இது இன்னும் முழுமையாக இல்லை என்றாலும், நாடுகள் ஒன்றிணைந்தால் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்பதை இது நிரூபித்துக் காட்டுகிறது" என்றார். ரஷ்யாவின் பங்கு: பட மூலாதாரம், @narendramodi படக்குறிப்பு, இந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த விஷயத்தில் ரஷ்யாவின் பங்கு சாதாரணமானதாக இல்லை. ரஷ்யாவின் விலை குறைந்த கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதனால் இந்தியாவில் பணவீக்கத்தில் இருந்து நாட்டு மக்களை காக்க முடிந்தது. இந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இது இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும். ரஷ்யா இந்தியாவுக்கு வெறும் எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் மட்டும் வழங்கவில்லை. அது சுயாட்சி சின்னமாக இருந்தது. மேலும், நரேந்திர மோதி அரசு அமெரிக்காவுக்கு அடிபணியாமல் உறவுகளை சமநிலைப்படுத்த முடியும் என்பதை இது நிரூபிக்கும். ஆனால் "ரஷ்யா பலவீனமாகும் சக்தி, அதன் பொருளாதார மற்றும் தூதரக திறன்கள் வரையறுக்கப்பட்டவை." என பேராசிரியர் கங்குலி எச்சரிக்கிறார். மேலும், "யுக்ரேனுடனான சண்டையால் ரஷ்யா நீண்டகால பிரச்னைகளை எதிர்கொள்வது அவசியம். மோதலில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா தற்போது உயர் தொழில்நுட்பம், ஆயுதப் பாகங்கள் மற்றும் எண்ணெய் விற்பனையை அதிகம் சார்ந்துள்ளது" எனக் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, இந்தியா ரஷ்யாவிடம் நெருங்கிப் பழகுவது அன்பு அல்ல, அவசியம் என்கிறார். அமெரிக்காவுடன் சுமூகமான உறவு இல்லாத சூழலில், இந்தியாவிற்கு இது தனி இடத்தை அளிக்கும் ஆதரவாகும். "இது சரியான தேர்வு அல்ல, ஆனால் சிறந்த தேர்வு" என நேர்காணல் ஒன்றில் முன்னாள் இந்திய தூதர் ஜதிந்திரநாத் மிஸ்ரா கூறியுள்ளார். அமெரிக்காவை மீறிச் செல்லும் நாடுகள்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோதி அமெரிக்கா சென்றிருந்தார். பிரதமர் மோதியின் எஸ்.சி.ஓ வருகை மற்றும் புதினின் டெல்லி வரவு, அமெரிக்காவின் உத்தரவுக்கு பிறகான தாக்கத்தின் தொடக்கமா? இது அப்படியல்ல. பிரதமர் மோதி, புதின் மற்றும் ஷீ ஜின்பிங் ஒரே மேடையில் காட்சியளித்தது, வேறுமாதிரி தோன்றினாலும், இந்தியா பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டில் இன்னும் அமெரிக்காவையே சார்ந்துள்ளது. சீனாவின் வெறுப்புணர்வை சமாளிக்க இந்தியாவின் மூலோபாய மையமாக குவாட் உள்ளது. எனினும் இந்த மாற்றம் சுவாரஸ்யம் அளிக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பிரதமர் மோதி சமநிலை ஏற்படுத்தி, குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் வர மறுக்கிறார். "கிடைத்த தருணத்தை வீணடிக்கக் கூடாது. என பேராசிரியர் அஹ்மது வலியுறுத்துகிறார். குறிப்பாக, நரேந்திர மோதி, ஷீ ஜின்பிங், இடையிலான முறைசாரா உச்சி மாநாடு தொடர வேண்டும். அப்போதுதான் இருதரப்பு உறவுகளுக்கு புதிய திசை கிடைக்கும் என்கிறார். டிரம்பின் தோல்வியும், இந்தியாவின் பொறுமையும்: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டு அதிபர் டிரம்ப் இந்தியா வந்தோது எடுக்கப்பட்ட புகைப்படம். விசித்திரம் என்னவென்றால், டிரம்ப் மிகவும் பயப்படுவதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளார். இந்தியாவுக்கு அதிக வரிகள் விதிப்பதன் மூலம், அமெரிக்கா அதனை சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அருகே தள்ளுகிறது. நீதிமன்றத்தில் தோல்வி அடைந்ததால், உலக வர்த்தக விதிகளை மாற்றுவதற்கான அவர்களது உரிமையும் குறையும். மிதமான கூட்டாளிகளுடன் அதிகமாக தொடர்பு கொள்ள முயற்சித்து, அவர் அமெரிக்காவின் செல்வாக்கை குறைக்கிறார். ஜப்பான், அமெரிக்காவில் அதிக முதலீடு செய்ய அழுத்தம் தரப்பட்டதால், வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துள்ளது. இது, பாரம்பரியமாக அமெரிக்காவின் கூட்டாளிகளாக இருந்த நாடுகளும் இப்போது எதிர்ப்பு காட்ட தொடங்கியுள்ளன. மாற்று வாய்ப்புகள் இருக்கிறது என்பதற்காக பிரதமர் மோதியை பாராட்ட வேண்டுமா? இந்தியா அமெரிக்காவை விட்டு இன்னமும் விலகவில்லை, குறைந்தது இப்போதைக்கு அது நிகழவில்லை. இரு நாடுகளின் கூட்டாண்மை மிக பரந்தது விரிந்தது மட்டுமன்றி ஆழமுமானதும்கூட. எந்த தரப்பையும் தேர்வு செய்வது என்பதை விட தன் விருப்பப்படி செயல்படுவதே தனக்கு சவாலான ஒன்று என மோதி அரசு நன்கு அறிந்துள்ளது. "இந்தியாவின் தற்போதைய நிலை கடினமாக உள்ளது. ஆனால், இந்தியா எதிர்கொள்ளும் பெரும்பாலான சவால்கள், தானே உருவாக்கப்பட்டவை அல்ல. டிரம்பின் உறுதித்தன்மை இல்லாத நடத்தையையும், அவரின் பரிமாற்ற நோக்கோடு நடத்தப்படும் கொள்கைகளையும் புரிந்துகொள்ளாததற்காகவும் மட்டுமே இந்தியாவை குறை கூற முடியும்." என்கிறார் பேராசிரியர் காங்குலி. உண்மையில், மோதியின் சீன பயணம் சொல்லும் செய்தி இதுதான் என பல பகுப்பாய்வாளர்கள் நம்புகின்றனர். "இது அமெரிக்காவிற்கான நினைவூட்டல். இந்தியாவுக்கு பல விருப்பங்கள் உள்ளன. இந்தியாவை அடிபணிய வைக்க முடியாது. இந்தியா, தூதரக சுயாட்சியை தனது வெளிநாட்டு கொள்கையின் மையமாக முன்வைக்கிறது என்பதும் வெளிப்பாடு" என அவர்கள் கூறுகின்றனர். டிரம்பை, நண்பர்களிடமிருந்து தன்னை பிரித்து அமெரிக்காவின் வீழ்ச்சியை வேகப்படுத்திய அதிபராக வரலாறு நினைவில் வைத்துக்கொள்ளலாம். மோதியை, இந்தியாவின் தனிப்பட்ட செயல்திறலை பாதுகாத்து, எந்த ஒரு சக்தியிடமும் அடிபணியாமல் செயல்படுபவராக நினைவில் வைத்துக் கொள்ளலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77627lg867o

ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?

2 weeks 2 days ago

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது கூட்டம் நடைபெற்றது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது கூட்டம் நடைபெற்றது.

கட்டுரை தகவல்

  • ஜுபைர் அகமது

  • பிபிசி செய்தியாளர்

  • 1 செப்டெம்பர் 2025, 14:31 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய பிரதமர் நரேந்தி மோதி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் இடையே கடந்த ஆண்டு காசான் நகரில் நடந்த சந்திப்பை விட, தியான்ஜினில் ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த இந்த சந்திப்பு இன்னும் உறுதியானதாகவும், வலுவான கைக்குலுக்கலும் கொண்டதாகவும் இருந்தது.

SCO உச்சி மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் சந்தித்தது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படாவிட்டாலும், அது அபூர்வமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இரு தலைவர்களும் அமெரிக்க அதிபர் டிரம்பின் சுங்க வரிகளாலும், அவரது நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு ஒரு தலைப்பட்சமாக எடுத்த நடவடிக்கைகளாலும் பாதிப்படைந்தவர்கள்.

இந்த சந்திப்பு எச்சரிக்கையுடனான மறுசீரமைப்பாக கருதப்பட்டது. 'நாங்கள் முன்னேற்றத்திற்கான கூட்டாளிகள், போட்டியாளர்கள் அல்ல' என இந்தியா மற்றும் சீனா கூட்டு அறிக்கையை வெளியிட்டது.

மேலும், இந்த வேறுபாடுகள் மோதலாக மாறிவிடக் கூடாது என்பதையும் வலியுறுத்தியது.

2020ஆம் ஆண்டில் நடந்த கல்வான் மோதல்களுக்குப் பிறகு உருவான நீண்ட பதற்றத்திற்கு பின், உறுதித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்தது.

இரு தலைவர்களும் வர்த்தகம், எல்லை மேலாண்மை பற்றி மட்டுமல்லாமல், பலதுருவ ஆசியா மற்றும் பலதுருவ உலகம் பற்றிய விரிவான பார்வையையும் முன்வைத்தனர். அமெரிக்காவை மட்டுமே உலகத் தலைவராகக் கருத முடியாது என்ற இதன் உட்பொருள் தெளிவாக இருந்தது.

டிரம்பால் ஏற்பட்ட பாதிப்புகள்:

இந்தியாவுக்கு 50% இறக்குமதி வரி விதித்தார் டிரம்ப்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவுக்கு 50% இறக்குமதி வரி விதித்தார் டிரம்ப்.

இந்த சந்திப்பின் பின்னணியை தவிர்க்கமுடியாது. டிரம்பின் வரி விதிப்பு, இந்தியாவை சிக்கலான சூழ்நிலைக்கு தள்ளியது. அவசர அதிகாரங்களின் கீழ் விதிக்கப்பட்ட அந்த வரிகள், ரஷ்ய எண்ணெயை தள்ளுபடியில் வாங்கியதற்கான தண்டனையாக நியாயப்படுத்தப்பட்டன. ஆனால் உண்மையில், அவை அமெரிக்காவிற்கு இடமில்லாத யூரேஷிய கூட்டமைப்புகளுக்குள் இந்தியாவை மேலும் ஆழமாக இழுத்துச் செல்கின்றன.

"ஆம், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவுடன் பணியாற்ற தயார் எனச் சிக்னல் கொடுக்கிறது. அமெரிக்கா, இந்தியா உறவு டிரம்பின் நடவடிக்கைகளால் சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்த திட்டம் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. ஆனால் இதை குறுகிய காலத் தீர்வாகவே பார்க்க வேண்டும்." என இந்திய வெளிநாட்டு கொள்கையில் முன்னணி அறிஞராக விளங்கும் இன்டியானா பல்கலைக்கழக பேராசிரியர் சுமித் கங்குலி பிபிசியிடம் கூறினார்.

ஆனால், மோதி மற்றும் ஜின்பிங் பயன்படுத்திய வார்த்தைகள் திட்டமிட்டு சிக்கலாக்கப்பட்டது. எல்லையில் அமைதியும், அமைதியான சூழலும் முன்னேற்றத்திற்குத் தேவையானவை என்ற பிரதமர் மோதியின் நினைவூட்டல், சமரசமானதாக மட்டுமல்ல எச்சரிக்கையாகவும் இருந்தது. எல்லையில் படைகளின் விலகல் (disengagement) மற்றும் தொடரும் பேச்சுவார்த்தைகள் குறித்த குறியீடுகள், சிறிய முன்னேற்றங்களை கூட அர்த்தமுள்ளவையாக காட்டும் வகையில் அமைந்தது.

Play video, "டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?", கால அளவு 3,53

03:53

p0m07xsb.jpg.webp

காணொளிக் குறிப்பு, டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?

பொருளாதாரத்தில், சுமையை குறைப்பது மற்றும் வர்த்தகத்தை ஆழப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள், இந்தியா, சீனாவுடன் கூட வர்த்தகத்திற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டு அரசியல் செய்தியாக முன்வைக்கப்பட்டன.

"மூன்றாம் நாட்டின் பார்வையில் இருந்து மறுக்கப்பட்டதன் மூலமும், மூலோபாய சுயாட்சி (strategic autonomy) வலியுறுத்தப்பட்டதன் மூலமும், அமெரிக்க அழுத்தம் பெய்ஜிங் உடன் உள்ள ஈடுபாட்டை நிர்ணயிக்க அனுமதிக்கப் போவதில்லை என்பதை டெல்லி வாஷிங்டனுக்கு தெளிவுபடுத்தியது.

டெல்லியின் போர் மேலாண்மை பள்ளியில் சீன நிபுணராக உள்ள பேராசிரியர் ஃபைசல் அஹ்மது நேரடியாக தனது கருத்தைப் பதிவிட்டார். "இந்தியா, சீனா உறவுகள் இருதரப்பாகவும் சரி, எஸ்சிஓ-விலும் சரி வலிமைமிக்க நிலைப்பாட்டில் இருந்து முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. தியான்ஜினில் நடந்த மோதி, ஜி ஜின்பிங் சந்திப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு." என்கிறார்.

இந்த சந்திப்பு நம்பிக்கையை வளர்க்கும் என அவர் நம்புகிறார். "மோதி, ஜி ஜின்பிங் சந்திப்பு இருதரப்பு நம்பிக்கையில்லாதன்மையை குறைக்க ஓர் ஊக்கம் அளிக்கிறது.

எஸ்சிஓ அளவிலும், தியான்ஜின் சந்திப்பு பிராந்திய பிரச்னைகளில் ஒத்துழைப்பை அதிகப்படுத்தியது. சர்வதேச குற்றங்களை கையாளுதல், மக்கள் மத்தியிலான இணைப்பை வலுப்படுத்துதல் போன்றையும் இதில் அடங்கும்.

தோற்றங்களும் விளைவுகளும்:

7 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் மோதி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, 7 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் மோதி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

உண்மையில் சில நேரங்களில் காட்சிகளும் முடிவுகளுக்குச் சமமான முக்கியத்துவத்தை பெறுகின்றன. தியான்ஜினில் ஜி ஜின்பிங் மற்றும் புதின் உடன் பிரதமர் தோன்றிய காட்சி, எஸ்.சி.ஓ அரங்கத்தைக் கடந்தும் பரவச் செய்தது.

இது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான நேரமாக இருந்தது. சில நாட்களுக்கு முன், டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்தார் அந்தச் வரி சட்டத்திற்கு முரணானவை என்று அமெரிக்க கூட்டாட்சி மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் டிரம்புக்கு கூடுதல் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருப்பதால் அந்த வரிகள் இன்னும் நீக்கப்படவில்லை.

ஷீ ஜின்பிங் மற்றும் புதினுடன் பிரதமர் மோதி தோன்றிய நிகழ்ச்சி, அடையாளச் சின்னங்கள் நிறைந்ததாக இருந்தது. பேராசிரியர் ஃபைசல் அஹ்மது, இந்த தருணத்தை வெறும் புகைப்படத்தை விட அதிகமாகக் கருதுகிறார். "டிரம்பின் வரி நடவடிக்கை மிகவும் முறையற்றது. தியான்ஜினில் மோடி, ஜின்பிங், புதின் ஒரே மேடையில் தோன்றியது, அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச பாதுகாப்புக் கொள்கைகளுக்கு பதிலடியாக இருந்தது." என்றார்.

7 ஆண்டுகளில் முதல்முறையாக பிரதமர் மோதி சீனா சென்றுள்ளார். இது ஒரே ஒரு பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்வது பற்றியது மட்டுஅல்ல. ஜின்பிங் உடன் நடந்த இந்த சந்திப்பு, உறவுகளை மீட்பதற்கான வாய்ப்பை வழங்கியது. அதே சமயம், விரிவான எஸ்சிஓ சந்திப்பு, வாஷிங்டனை தாண்டி இந்தியாவுக்கு கூட்டாளிகள் உள்ளன என்பதை காட்டும் அரங்காக அமைந்தது.

"சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டில் மோதி பங்கேற்றதை, மூலோபாய திசை மாற்றமாக அல்லாமல், விரிவான தூதரக சமநிலைப்படுத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்" என முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபால் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.சி.ஓ-வின் முக்கியத்துவங்கள்:

இந்தியா, தன்னை எதிரியாக அல்ல அல்ல, கூட்டாளியாக பார்க்க வேண்டும் என ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, இந்தியா, தன்னை எதிரியாக அல்ல அல்ல, கூட்டாளியாக பார்க்க வேண்டும் என ஷீ ஜின்பிங் வலியுறுத்தினார்.

வாஷிங்டனில், எஸ்.சி.ஓ பெரும்பாலும் அதிகாரவாதிகளின் சங்கமாகவே புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியா மற்றும் பிற எஸ்.சி.ஓ உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லை. இந்தியாவுக்கு, அதன் பயன் வேறு இடத்தில் இருக்கிறது. ரஷ்யா, சீனா, மத்திய ஆசியா, இப்போது ஈரானும் கூட ஒரே மேடையில் அமரக் கூடிய அரங்கத்தை அது வழங்கியுள்ளது.

இந்த மாநாட்டை பயன்படுத்தி, இந்தியா, தன்னை எதிரியாக அல்ல அல்ல, கூட்டாளியாக பார்க்க வேண்டும் என ஷீ ஜின்பிங் வலியுறுத்தினார். டெல்லியை பொறுத்தவரை, இந்த சந்திப்பு உறுதித்தன்மை பற்றிய பேச்சுகள், எதிர்பார்க்கக்கூடிய உறவாக மாறுமா என்பதைச் சோதிக்கும் முயற்சியாக இருந்தது. டெல்லியில் இருப்பவர்கள் யதார்த்தத்தை புரிந்துகொண்டனர்.

எல்லைப் பிரச்னை தொடர்ந்து வலியை உண்டாக்குகிறது. மேலும் சீனாவுடனான 99 பில்லியன் டாலர் வர்த்தக பற்றுச்சுமை அரசியல் தலைவலியாக உள்ளது. இது கடினமாக இருந்தாலும், பேச்சுவார்த்தை அவசியமானதாக உள்ளது.

"இதற்கு மாற்று என்ன? சீனாவை நிர்வகிப்பதே அடுத்த பல தசாப்தங்களுக்கு, இந்தியாவின் பிரதான பணியாகும்" என்கிறார் பகுப்பாய்வாளர் ஹாப்பிமான் ஜேக்கப்.

ஆறு உறுப்பினர்களுடன் எளிமையாக தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தற்போது 10 உறுப்பினர்களாக விரிவடைந்துள்ளது. அதோடு 2 பார்வையாளர்கள் மற்றும் 14 உரையாடல் கூட்டாளிகளும் உள்ளனர். இப்போது, அது மற்ற பிராந்திய அமைப்பை விட பரந்த புவியியல் பரப்பை கொண்டதாக, உலக மக்கள்தொகையில் மிகப்பெரிய பங்கை அளிக்கிறது.

ஹாங்காங்கை மையமாக கொண்ட மூத்த பகுப்பாய்வாளர் ஹென்றி லீ, எஸ்.சி.ஓ குறித்துப் பேசினார். "எஸ்.சி.ஓ-பன்முகத்தன்மை அதிர்ச்சிகரமாக உள்ளது. வரலாறுகள், கலாசாரம், அரசியல் அமைப்புகள், வளர்ச்சி நிலைகள் இவை அனைத்தையும் உள்ளடக்கியவை. "இத்தகைய வேறுபாடுகள் இருந்தபோதிலும், எஸ்.சி.ஓ தனது உறுப்புநாடுகளின் தேவைகளையும் தற்போதைய சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கும் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது." என்றார்.

மேலும், "ஒரு விதத்தில், எஸ்.சி.ஓ உலகுக்கு பல்வேறு நாடுகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை காட்டுகிறது. இது இன்னும் முழுமையாக இல்லை என்றாலும், நாடுகள் ஒன்றிணைந்தால் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்பதை இது நிரூபித்துக் காட்டுகிறது" என்றார்.

ரஷ்யாவின் பங்கு:

இந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, இந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த விஷயத்தில் ரஷ்யாவின் பங்கு சாதாரணமானதாக இல்லை. ரஷ்யாவின் விலை குறைந்த கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதனால் இந்தியாவில் பணவீக்கத்தில் இருந்து நாட்டு மக்களை காக்க முடிந்தது.

இந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இது இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

ரஷ்யா இந்தியாவுக்கு வெறும் எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் மட்டும் வழங்கவில்லை. அது சுயாட்சி சின்னமாக இருந்தது. மேலும், நரேந்திர மோதி அரசு அமெரிக்காவுக்கு அடிபணியாமல் உறவுகளை சமநிலைப்படுத்த முடியும் என்பதை இது நிரூபிக்கும்.

ஆனால் "ரஷ்யா பலவீனமாகும் சக்தி, அதன் பொருளாதார மற்றும் தூதரக திறன்கள் வரையறுக்கப்பட்டவை." என பேராசிரியர் கங்குலி எச்சரிக்கிறார்.

மேலும், "யுக்ரேனுடனான சண்டையால் ரஷ்யா நீண்டகால பிரச்னைகளை எதிர்கொள்வது அவசியம். மோதலில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா தற்போது உயர் தொழில்நுட்பம், ஆயுதப் பாகங்கள் மற்றும் எண்ணெய் விற்பனையை அதிகம் சார்ந்துள்ளது" எனக் கூறுகிறார்.

அவரைப் பொறுத்தவரை, இந்தியா ரஷ்யாவிடம் நெருங்கிப் பழகுவது அன்பு அல்ல, அவசியம் என்கிறார். அமெரிக்காவுடன் சுமூகமான உறவு இல்லாத சூழலில், இந்தியாவிற்கு இது தனி இடத்தை அளிக்கும் ஆதரவாகும்.

"இது சரியான தேர்வு அல்ல, ஆனால் சிறந்த தேர்வு" என நேர்காணல் ஒன்றில் முன்னாள் இந்திய தூதர் ஜதிந்திரநாத் மிஸ்ரா கூறியுள்ளார்.

அமெரிக்காவை மீறிச் செல்லும் நாடுகள்?

கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோதி அமெரிக்கா சென்றிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோதி அமெரிக்கா சென்றிருந்தார்.

பிரதமர் மோதியின் எஸ்.சி.ஓ வருகை மற்றும் புதினின் டெல்லி வரவு, அமெரிக்காவின் உத்தரவுக்கு பிறகான தாக்கத்தின் தொடக்கமா?

இது அப்படியல்ல. பிரதமர் மோதி, புதின் மற்றும் ஷீ ஜின்பிங் ஒரே மேடையில் காட்சியளித்தது, வேறுமாதிரி தோன்றினாலும், இந்தியா பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டில் இன்னும் அமெரிக்காவையே சார்ந்துள்ளது. சீனாவின் வெறுப்புணர்வை சமாளிக்க இந்தியாவின் மூலோபாய மையமாக குவாட் உள்ளது. எனினும் இந்த மாற்றம் சுவாரஸ்யம் அளிக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பிரதமர் மோதி சமநிலை ஏற்படுத்தி, குறிப்பிட்ட கட்டமைப்பிற்குள் வர மறுக்கிறார். "கிடைத்த தருணத்தை வீணடிக்கக் கூடாது. என பேராசிரியர் அஹ்மது வலியுறுத்துகிறார். குறிப்பாக, நரேந்திர மோதி, ஷீ ஜின்பிங், இடையிலான முறைசாரா உச்சி மாநாடு தொடர வேண்டும். அப்போதுதான் இருதரப்பு உறவுகளுக்கு புதிய திசை கிடைக்கும் என்கிறார்.

டிரம்பின் தோல்வியும், இந்தியாவின் பொறுமையும்:

2021ஆம் ஆண்டு அதிபர் டிரம்ப் இந்தியா வந்தோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2021ஆம் ஆண்டு அதிபர் டிரம்ப் இந்தியா வந்தோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

விசித்திரம் என்னவென்றால், டிரம்ப் மிகவும் பயப்படுவதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தியாவுக்கு அதிக வரிகள் விதிப்பதன் மூலம், அமெரிக்கா அதனை சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அருகே தள்ளுகிறது. நீதிமன்றத்தில் தோல்வி அடைந்ததால், உலக வர்த்தக விதிகளை மாற்றுவதற்கான அவர்களது உரிமையும் குறையும்.

மிதமான கூட்டாளிகளுடன் அதிகமாக தொடர்பு கொள்ள முயற்சித்து, அவர் அமெரிக்காவின் செல்வாக்கை குறைக்கிறார். ஜப்பான், அமெரிக்காவில் அதிக முதலீடு செய்ய அழுத்தம் தரப்பட்டதால், வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துள்ளது.

இது, பாரம்பரியமாக அமெரிக்காவின் கூட்டாளிகளாக இருந்த நாடுகளும் இப்போது எதிர்ப்பு காட்ட தொடங்கியுள்ளன.

மாற்று வாய்ப்புகள் இருக்கிறது என்பதற்காக பிரதமர் மோதியை பாராட்ட வேண்டுமா? இந்தியா அமெரிக்காவை விட்டு இன்னமும் விலகவில்லை, குறைந்தது இப்போதைக்கு அது நிகழவில்லை. இரு நாடுகளின் கூட்டாண்மை மிக பரந்தது விரிந்தது மட்டுமன்றி ஆழமுமானதும்கூட.

எந்த தரப்பையும் தேர்வு செய்வது என்பதை விட தன் விருப்பப்படி செயல்படுவதே தனக்கு சவாலான ஒன்று என மோதி அரசு நன்கு அறிந்துள்ளது.

"இந்தியாவின் தற்போதைய நிலை கடினமாக உள்ளது. ஆனால், இந்தியா எதிர்கொள்ளும் பெரும்பாலான சவால்கள், தானே உருவாக்கப்பட்டவை அல்ல. டிரம்பின் உறுதித்தன்மை இல்லாத நடத்தையையும், அவரின் பரிமாற்ற நோக்கோடு நடத்தப்படும் கொள்கைகளையும் புரிந்துகொள்ளாததற்காகவும் மட்டுமே இந்தியாவை குறை கூற முடியும்." என்கிறார் பேராசிரியர் காங்குலி.

உண்மையில், மோதியின் சீன பயணம் சொல்லும் செய்தி இதுதான் என பல பகுப்பாய்வாளர்கள் நம்புகின்றனர்.

"இது அமெரிக்காவிற்கான நினைவூட்டல். இந்தியாவுக்கு பல விருப்பங்கள் உள்ளன. இந்தியாவை அடிபணிய வைக்க முடியாது. இந்தியா, தூதரக சுயாட்சியை தனது வெளிநாட்டு கொள்கையின் மையமாக முன்வைக்கிறது என்பதும் வெளிப்பாடு" என அவர்கள் கூறுகின்றனர்.

டிரம்பை, நண்பர்களிடமிருந்து தன்னை பிரித்து அமெரிக்காவின் வீழ்ச்சியை வேகப்படுத்திய அதிபராக வரலாறு நினைவில் வைத்துக்கொள்ளலாம். மோதியை, இந்தியாவின் தனிப்பட்ட செயல்திறலை பாதுகாத்து, எந்த ஒரு சக்தியிடமும் அடிபணியாமல் செயல்படுபவராக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c77627lg867o

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் பாத்பைன்டர் பவுன்டேஷன் ஸ்தாபகர் மிலிந்த மொரகொட சந்திப்பு

2 weeks 2 days ago
Published By: Vishnu 01 Sep, 2025 | 06:21 PM (நா.தனுஜா) பாத்பைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட திங்கட்கிழமை (1) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் அண்மைக்காலத்தில் நடாத்திவரும் சந்திப்புக்களின் ஓரங்கமாகவே நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடனான சந்திப்பு திங்கட்கிழமை (1) புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது சமகாலத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்திவரும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் குறித்தும், அவற்றின் விளைவாக எதிர்வருங்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்தும் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டன. அதேவேளை தற்போது நிலவும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து பேணுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வழங்கிவரும் தலைமைத்துவம் குறித்து மிலிந்த மொரகொட தனது பாராட்டை வெளிப்படுத்தியதுடன், அது பிராந்திய உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சிக்கு நேர்மறையாகப் பங்களிப்புச் செய்வதாகவும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/223968