Aggregator

NPP புரியாத புதிரா புரிந்தும் புரியாத பதிலா? — கருணாகரன் —

3 months 1 week ago
NPP புரியாத புதிரா புரிந்தும் புரியாத பதிலா? June 4, 2025 — கருணாகரன் — NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா? அதாவது இதுவரையான வரலாற்றில் அதிகாரத்தில் இருந்த சக்திகளை விட NPP தீங்கானதா? மோசமானதா? அப்படியென்றால், NPP யை மக்கள் எப்படி – எதற்காக – ஆதரித்தனர்? ஏன் இன்னும் ஆதரிக்கின்றனர்? இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா? அல்லது “இனவாதத்தைக் கடந்து விட்டோம், மாற்றுச் சக்தி நாங்கள், இடதுசாரிகள்..” என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இனவாதத்தையே NPP யும் கைக் கொள்கிறது என்ற கோபமா? சிங்கள இனவாதச் சக்திகளைச் சமாளித்துக் கொள்வதற்காக NPP யும் இனவாதத்தைப் பேச முற்படுகிறதா? அது சரியானதா? NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவானவை அதிகமா? எதிரானவை அதிகமா? ஊழலுடன் NPP யும் தொடர்பு பட்டுள்ளதா? அல்லது ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் அது உறுதியாகவே நிற்கிறதா? NPP செய்த (மேற்கொண்ட) விடயங்களில் பாரதூரமான எதிர்விளைவுகள் எவை? ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன? எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு NPP யின் நடவடிக்கைகள் வேகமாக இல்லையா? அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்? இதைக்குறித்து NPP யினர் தெளிவாக்காது இருப்பது ஏன்? “NPP தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அளவுக்கு அதிகமாக தமிழ் மக்களின் பக்கமாகச் சாய்கிறது” என்ற சிங்களக் கட்சிகளின் எதிர்ப்பிரச்சாரத்தை எப்படி நோக்கலாம்? “தமிழ்க் கட்சிகளுக்குப் பயந்து பல விட்டுக் கொடுப்புகளை ஜனாதிபதியும் (அநுரகுமார திசநாயக்கவும்) NPP யும் செய்வதை அனுமதிக்க முடியாது” என்று சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச, சரத் வீரசேகரா போன்றோர் சொல்கிறார்கள். “சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPPயும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்” என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர். அப்படியென்றால் இதில் எது உண்மை? இரண்டு தரப்பினாலும் குற்றம் சாட்டப்படும் ஒரு தரப்பு எப்படியாக இருக்கும்? சுருக்கமாகக் கேட்டால், சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையில் ஆட்சி செய்த ஏனைய அரசியற் தரப்பினரை விட NPP மோசமான தரப்பா? என்றால் அது எந்த வகையானது என்று அரசியற்கட்சிகளும் NPP யை எதிர்ப்போரும் தெளிவாகச் சொல்ல (விளக்க) வேண்டும்அல்லவா? NPP யை எதிர்த்து அதனை அதிகாரத்திலிருந்து அகற்றினால் அந்த இடத்தில் வேறு எந்தச் சக்தியை அமர்த்தலாம்? அல்லது எந்தச் சக்தி அதிகாரத்துக்கு – ஆட்சிக்கு – வரும்? 1. ஐ.தே.க 2. ஐக்கிய மக்கள் சக்தி 3. பொதுஜன பெரமுன 4. சிறிலங்கா சுதந்திரக் கட்சி 5. இந்தக் கட்சிகளின் கூட்டு அல்லது கலவைதானே! இவை NPP யை விட சிறப்பான நல்லாட்சியை தமிழ் பேசும் மக்களுக்கோ இலங்கையின் அனைத்துச் சமூகங்களுக்கோ வழங்கி விடுமா? அதற்கான உத்தரவாதம் என்ன? தற்போதைய சூழலில் NPP யை நீக்கினால் அந்த இடத்தில் ராஜபக்ஸக்களின் பொதுஜன பெரமுன அல்லது சஜித் பிரேமதாச தரப்பின் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றில் ஒன்றுதான் அதிகாரத்துக்கு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இவை இரண்டும் NPP ஐ விட முற்போக்கானவையா? அதாவது தீங்கற்றவையா? இவற்றுக்கு அப்பால் வேறு புதிய சக்தி ஏதாவது வரக்கூடிய சாத்தியமுண்டா? என்றால் அது, எது? இதற்கெல்லாம் யாரும் பதில் சொல்லத் தயாரில்லை. அப்படியென்றால் எந்த அடிப்படையில் NPP மீதான எதிர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது? தமிழ் பேசும் மக்கள் NPP ஐ எதிர்க்கும்போது அது தவிர்க்க முடியாமல் மேற்சொன்ன ஐந்து தரப்புகளில் ஒன்றுக்கோ அல்லது ஐந்துக்கோதானே ஆதரவாக இருக்கும்? அந்தத் தரப்புகள் கடந்த காலத்தில் இன ஒடுக்குமுறையையும் – பாரபட்சத்தையும் தாராளமாகவே மேற்கொண்டவையல்லவா?மட்டுமல்ல, இப்போதும் அதே நிலைப்பாட்டில் உள்ளவையே! இதைப் புரிந்து கொண்டும் NPP ஐ எதிர்த்தால் அது மறைமுகமாகவும் நேரடியாகவும் மேற்சொன்ன சக்திகளுக்கே வாய்ப்பாகும் அல்லவா? இதனை யாராவது மறுக்க முடியுமா? அப்படியென்றால் அதைத்தான் தமிழ் பேசும் தரப்புகள் செய்ய விளைகின்றனவா? அவற்றின் அரசியல் தெரிவும் நிலைப்பாடும் இதுதானா? அல்லது தெரிந்த பேயை விட தெரியாத பிசாசு நல்லது என எண்ணுகின்றனவா? அல்லது ஏனைய சக்திகளை விட NPP ஆபத்தானது என விளைகின்றனவா? ஏனைய தென்னிலங்கை அரசியற் கட்சிகள் வடக்குக் கிழக்கில் வலுவாகக் காலூன்றவில்லை. ஆகையால் பிராந்திய அரசியலுக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை. மட்டுமல்ல, பிராந்திய அரசியலுக்கு அந்தச் சக்திகள் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் தாரளமாக வாய்ப்பளித்தன. NPP இதை மறுத்து பிராந்திய சக்திகளின் இருப்பிலும் – பிராந்திய அரசியலிலும் கை வைத்துள்ளது என்ற அச்சத்தின் வெளிப்பாடா? இதெல்லாம் NPP யை எதிர்க்கும் தரப்பினர் மீதான கேள்விகளாகும். இதுபோல இன்னும் பல கேள்விகளுண்டு. இதில் தமிழ் பேசும் மக்களுக்குரிய தனியான கேள்விகளும் உண்டு. இவற்றை எளிதாக புறந்தள்ளி விட முடியாது. NPP ஐ மட்டுமல்ல எந்தவொரு தரப்பை எதிர்க்கும்போது அதற்குரிய போதிய காரணங்களை விளக்குவது அவசியமாகும். அப்பொழுதுதான் அதைக் குறித்து மக்களும் சிந்திக்க முடியும்? உரிய தரப்பும் (NPP) தன்னைப் பரிசீலித்துக் கொள்வதற்கு அதிக வாய்ப்பிருக்கும். இதேவேளை NPP யின் மீதும்கடுமையான விமர்சனங்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டே இந்தக் கட்டுரை விடயங்களை விவாதிக்க முற்படுகிறது. NPP தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளவும் கவனத்திற் கொள்ளவும் வேண்டிய விடயங்கள் பல உள்ளன. தனக்குக் கிடைத்திருக்கும் வரலாற்று வாய்ப்பை NPP சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. நண்பர்கள் யார்? எதிரிகள் யார் என்று அதனால் கண்டறிய முடியாதிருக்கிறது. முதிர்ச்சியும் பக்குவமும் நிதானமும் இல்லாத பலருடைய கைகளில் பொறுப்புகள் பகிரப்படுகின்றன. ஆற்றலுள்ளவர்களையும் NPP யின் மெய்யான ஆதரவாளர்களையும் அது கண்டறிய முடியாமல் தடுமாறுகிறது. அல்லது அவ்வாறானவர்களை அதனால் உள்வாங்க முடியவில்லை. அதற்குள் நிலவுகின்ற உளக் குழப்பங்களே இதற்குப் பெரிய காரணங்களாகும். இதெல்லாம் NPP ஐப் பலவீனப்படுத்துகின்றன. ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட சிலரைத் தவிர, ஏனையவர்கள் நிலைமையைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர். அதாவது இனவாதத்தை முன்னெடுத்த ஐ.தே.க, சு.க, பொதுஜன பெரமுன போன்றன நாட்டை அகரீதியாகப் பிளவு படுத்தியது மட்டுமல்ல, அனைத்துச் சமூகங்களுக்கும் நாட்டுக்கும் பேரிழப்புகளையும் உண்டாக்கியவை. அவற்றின் அரசியல் (இனவாதம்) அந்தக் கட்சிகளையே காப்பற்ற முடியாமல் போய் விட்டது. சரியாகச் சொன்னால், அவை வளர்த்த இனவாதத்துக்கு அவையே பலியாகி விட்டன. அதனால்தான் ஒரு மாற்று சக்தி வேண்டும். மாற்று அரசியல் வேண்டும் என்ற அடிப்படையில் NPP க்கான ஆதரவை மக்கள் வழங்கினர். தமிழ் பேசும் மக்களுடைய ஆதரவும் அப்படியானதே. இதை மறந்து விட்டு அல்லது இதைப் புரிய மறுத்து ஏனைய தீய சக்திகளைப்போலவே NPP யும் செயற்படுமாக இருந்தால், அவற்றின் வழியையே தொடருமாக இருந்தால் நிச்சயமாக விரைவில் NPP தோல்வியைச் சந்தித்தே தீரும். தோல்வியை மட்டுமல்ல, அழிவையும்தான். இந்தச் சமரசமெல்லாம் தெற்கில் மேலெழும் அல்லது NPP ஐ பலவீனப்படுத்த முற்படும் சிங்களத் தீவிரவாத சக்திகளையும் திருப்பதிப்படுத்த வேண்டிய சூழலால் செய்யப்படுவது என்று இதற்கு யாரும் சமாதானம் சொல்ல முற்பட்டால் அவர்கள் சமகால வாய்ப்பைச் சீரழிப்பவர்கள் மட்டுமல்ல, நாட்டுக்கும் NPP க்கும் கூட தீமைகளையே சிந்திப்பவர்களாக இருப்பர். வடக்கில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இளங்குமரன் போன்றோர் மிகப் பலவீனமானவர்களாகவும் பாதகமானவர்களாகவுமே இருக்கின்றனர். மக்களுக்கும் NPP க்கும் மாறானவர்களாகவே செயற்படுகின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. அல்லது இவர்களை பொறுப்புகளில் இருந்து நீக்கவில்லை என்றால் அதனுடைய பாரதூரமான விளைவுகள் NPP ஐயே பாதிக்கும். மக்களுக்கும் அதனால் பாதிப்பே. சிதறுண்டிருந்த தமிழ்க்கட்சிகளை ஆறுமாதங்களுக்குள் ஒன்றிணைய வைத்த, பிராந்திய அரசியலை வலுவாக்கம் செய்தது NPP யின் நடவடிக்கைகள்தான். அதிலும் சந்திரசேகர் – இளங்குமரன் கூட்டணியே என்பதை NPP யும் அதனுடைய ஆதரவாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். NPP யின் ஆதரவாளர்களும் NPP யும் இதைக்குறித்தெல்லாம் இன்னும் தெளிவாகப் பேசாதிருப்பது ஏன்? இதேவேளை NPP இலகுவில் ஆட்சியைக் கைப்பற்றவில்லை. அதைப்போல அதனால் இலகுவாக ஆட்சியை நடத்தவும் முடியாது. குறிப்பாக அதிகாரத்துக்கு வந்தபோது நாடு பொருளாதார நெருக்கடிக்குள் (கடன் பொறிக்குள்ளும் சர்வதேச நெருக்கடிகளுக்குள்ளும்) தள்ளப்பட்டிருந்தது. அல்லது சிறைப்பட்டிருந்தது. இது போதாதென்று இனவாதம் மிகத் தீவிரமாக கட்டமைக்கப்பட்டிருந்தது. அதற்கு இராணுவப் பலமும் சேர்க்கப்பட்டிருந்தது. அதாவது இனமுரணும் அதற்கான இராணுவமும் அதற்கான உளநிலையும் உச்ச நிலைக்கு வளர்க்கப்பட்டிருக்கிறது. இவற்றுக்கு மத்தியில்தான், இவற்றைச்சீர்ப்படுத்தும் ஆட்சியை NPP நடத்த வேண்டியுள்ளது. இது எளிய விடயமல்ல. ஆகவே இதையெல்லாம் நாம் எளிதில் மறந்து விடவோ கடந்து விடவோ முடியாது. இருந்தும் தமது தவறுகளுக்கும் பழிகளுக்கும் பரிகாரம் காணாமல், நிவாரணம் தேடாமல் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவே அனைத்துத் தரப்பும் முயற்சிக்கின்றன. இது எவ்வளவு பெரிய தவறு? எவ்வளவு பெரிய குற்றம்? ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள NPP இதையெல்லாம் புரிந்து கொண்டு வேண்டும். இதற்கு NPP தன்னைத் தெளிவாக முன்னிறுத்துவது அவசியமாகும். தெளிவென்பது, குழப்பங்கள்,உள் முரண்பாடுகள் அற்ற நிலையில் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதாகும். ஆனால், அதிகாரத்துக்கு NPP வந்த பின்னரான எட்டுமாத கால நடவடிக்கைகளை அவதானிக்கும்போது அப்படித் தெரியவில்லை. அது தடுமாற்றங்களுக்குள்ளாகியிருப்பதாகவே தெரிகிறது. என்பதால்தான் அதற்கு (NPP க்கு) எதிரான சக்திகள் வலுப்பெறக் கூடியதாக உள்ளது. அதன் மீதான விமர்சனங்களும் உள்ளன. https://arangamnews.com/?p=12060

NPP புரியாத புதிரா புரிந்தும் புரியாத பதிலா? — கருணாகரன் —

3 months 1 week ago

NPP புரியாத புதிரா புரிந்தும் புரியாத பதிலா?

June 4, 2025

NPP புரியாத புதிரா புரிந்தும் புரியாத பதிலா?

— கருணாகரன் —

NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா? அதாவது இதுவரையான வரலாற்றில் அதிகாரத்தில் இருந்த சக்திகளை விட NPP தீங்கானதா? மோசமானதா?

அப்படியென்றால், NPP யை மக்கள் எப்படி – எதற்காக – ஆதரித்தனர்? ஏன் இன்னும் ஆதரிக்கின்றனர்?

இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா? 

அல்லது “இனவாதத்தைக் கடந்து விட்டோம், மாற்றுச் சக்தி நாங்கள், இடதுசாரிகள்..” என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இனவாதத்தையே NPP யும் கைக் கொள்கிறது என்ற  கோபமா? 

சிங்கள இனவாதச் சக்திகளைச் சமாளித்துக் கொள்வதற்காக NPP யும் இனவாதத்தைப் பேச முற்படுகிறதா? அது சரியானதா? 

NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவானவை அதிகமா? எதிரானவை அதிகமா?

ஊழலுடன் NPP யும் தொடர்பு பட்டுள்ளதா? அல்லது ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் அது உறுதியாகவே நிற்கிறதா?

NPP செய்த (மேற்கொண்ட) விடயங்களில் பாரதூரமான எதிர்விளைவுகள் எவை?

ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன?

எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு NPP யின் நடவடிக்கைகள் வேகமாக இல்லையா? அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?

இதைக்குறித்து NPP யினர் தெளிவாக்காது இருப்பது ஏன்? 

“NPP தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அளவுக்கு அதிகமாக தமிழ் மக்களின் பக்கமாகச் சாய்கிறது” என்ற சிங்களக் கட்சிகளின் எதிர்ப்பிரச்சாரத்தை எப்படி நோக்கலாம்?

“தமிழ்க் கட்சிகளுக்குப் பயந்து பல விட்டுக் கொடுப்புகளை ஜனாதிபதியும் (அநுரகுமார திசநாயக்கவும்) NPP யும் செய்வதை அனுமதிக்க முடியாது”  என்று சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச, சரத் வீரசேகரா போன்றோர் சொல்கிறார்கள்.

“சிங்களக் கட்சிகளைப்போல, ஏனைய இனவாதிகளைப்போலவே NPPயும் உள்ளது. NPP யினரும் செயற்படுகிறார்கள்” என்று தமிழ்த்தேசியத் தரப்பினர் சொல்கின்றனர்.

அப்படியென்றால் இதில் எது உண்மை?

இரண்டு தரப்பினாலும் குற்றம் சாட்டப்படும் ஒரு தரப்பு எப்படியாக இருக்கும்?

சுருக்கமாகக் கேட்டால், சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கையில் ஆட்சி செய்த ஏனைய அரசியற் தரப்பினரை விட NPP மோசமான தரப்பா?

என்றால் அது எந்த வகையானது என்று அரசியற்கட்சிகளும் NPP யை எதிர்ப்போரும் தெளிவாகச் சொல்ல (விளக்க) வேண்டும்அல்லவா?

NPP யை எதிர்த்து அதனை அதிகாரத்திலிருந்து அகற்றினால் அந்த இடத்தில் வேறு எந்தச் சக்தியை அமர்த்தலாம்? அல்லது எந்தச் சக்தி அதிகாரத்துக்கு – ஆட்சிக்கு – வரும்?

1.      ஐ.தே.க

2.      ஐக்கிய மக்கள் சக்தி

3.      பொதுஜன பெரமுன

4.      சிறிலங்கா சுதந்திரக் கட்சி

5.      இந்தக் கட்சிகளின் கூட்டு அல்லது கலவைதானே!

இவை NPP யை விட சிறப்பான நல்லாட்சியை தமிழ் பேசும் மக்களுக்கோ இலங்கையின் அனைத்துச் சமூகங்களுக்கோ வழங்கி விடுமா?

அதற்கான உத்தரவாதம் என்ன?

தற்போதைய சூழலில் NPP யை நீக்கினால் அந்த இடத்தில் ராஜபக்ஸக்களின் பொதுஜன பெரமுன அல்லது சஜித் பிரேமதாச தரப்பின் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றில் ஒன்றுதான் அதிகாரத்துக்கு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. 

இவை இரண்டும் NPP ஐ விட முற்போக்கானவையா? அதாவது தீங்கற்றவையா? 

இவற்றுக்கு அப்பால் வேறு புதிய சக்தி ஏதாவது வரக்கூடிய சாத்தியமுண்டா?

என்றால் அது, எது?

இதற்கெல்லாம் யாரும் பதில்  சொல்லத் தயாரில்லை.

அப்படியென்றால் எந்த அடிப்படையில் NPP மீதான எதிர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது?

தமிழ் பேசும் மக்கள் NPP ஐ எதிர்க்கும்போது அது தவிர்க்க முடியாமல் மேற்சொன்ன ஐந்து தரப்புகளில் ஒன்றுக்கோ அல்லது ஐந்துக்கோதானே ஆதரவாக இருக்கும்?

அந்தத் தரப்புகள் கடந்த காலத்தில் இன ஒடுக்குமுறையையும் – பாரபட்சத்தையும்  தாராளமாகவே மேற்கொண்டவையல்லவா?மட்டுமல்ல, இப்போதும் அதே நிலைப்பாட்டில் உள்ளவையே!

இதைப் புரிந்து கொண்டும் NPP ஐ எதிர்த்தால் அது மறைமுகமாகவும் நேரடியாகவும் மேற்சொன்ன சக்திகளுக்கே வாய்ப்பாகும் அல்லவா?

இதனை யாராவது மறுக்க முடியுமா?

 அப்படியென்றால் அதைத்தான் தமிழ் பேசும் தரப்புகள்  செய்ய விளைகின்றனவா? அவற்றின் அரசியல் தெரிவும் நிலைப்பாடும் இதுதானா?

அல்லது தெரிந்த பேயை விட தெரியாத பிசாசு நல்லது என எண்ணுகின்றனவா? அல்லது ஏனைய சக்திகளை விட NPP ஆபத்தானது என விளைகின்றனவா? 

ஏனைய தென்னிலங்கை அரசியற் கட்சிகள் வடக்குக் கிழக்கில் வலுவாகக் காலூன்றவில்லை. ஆகையால் பிராந்திய அரசியலுக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை. மட்டுமல்ல, பிராந்திய அரசியலுக்கு அந்தச் சக்திகள் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் தாரளமாக வாய்ப்பளித்தன. NPP இதை மறுத்து பிராந்திய சக்திகளின் இருப்பிலும் – பிராந்திய அரசியலிலும் கை வைத்துள்ளது என்ற அச்சத்தின் வெளிப்பாடா? 

இதெல்லாம் NPP யை எதிர்க்கும் தரப்பினர் மீதான கேள்விகளாகும். இதுபோல இன்னும் பல கேள்விகளுண்டு. இதில் தமிழ் பேசும் மக்களுக்குரிய தனியான கேள்விகளும் உண்டு. இவற்றை எளிதாக புறந்தள்ளி விட முடியாது. 

NPP ஐ மட்டுமல்ல எந்தவொரு தரப்பை எதிர்க்கும்போது அதற்குரிய போதிய காரணங்களை விளக்குவது அவசியமாகும். அப்பொழுதுதான் அதைக் குறித்து மக்களும் சிந்திக்க முடியும்? உரிய தரப்பும் (NPP) தன்னைப் பரிசீலித்துக் கொள்வதற்கு அதிக  வாய்ப்பிருக்கும்.

இதேவேளை NPP யின் மீதும்கடுமையான விமர்சனங்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டே இந்தக் கட்டுரை விடயங்களை விவாதிக்க முற்படுகிறது.

NPP தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளவும் கவனத்திற் கொள்ளவும் வேண்டிய விடயங்கள் பல உள்ளன.  

தனக்குக் கிடைத்திருக்கும் வரலாற்று வாய்ப்பை NPP சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. நண்பர்கள் யார்? எதிரிகள் யார் என்று அதனால் கண்டறிய முடியாதிருக்கிறது. முதிர்ச்சியும் பக்குவமும் நிதானமும் இல்லாத பலருடைய கைகளில் பொறுப்புகள் பகிரப்படுகின்றன. ஆற்றலுள்ளவர்களையும் NPP யின் மெய்யான ஆதரவாளர்களையும் அது கண்டறிய முடியாமல் தடுமாறுகிறது. அல்லது அவ்வாறானவர்களை அதனால் உள்வாங்க முடியவில்லை. அதற்குள் நிலவுகின்ற உளக் குழப்பங்களே இதற்குப் பெரிய காரணங்களாகும். இதெல்லாம் NPP ஐப் பலவீனப்படுத்துகின்றன.

ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட சிலரைத் தவிர, ஏனையவர்கள் நிலைமையைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர். 

அதாவது இனவாதத்தை முன்னெடுத்த ஐ.தே.க, சு.க, பொதுஜன பெரமுன போன்றன நாட்டை அகரீதியாகப் பிளவு படுத்தியது மட்டுமல்ல, அனைத்துச் சமூகங்களுக்கும் நாட்டுக்கும் பேரிழப்புகளையும் உண்டாக்கியவை. அவற்றின் அரசியல் (இனவாதம்) அந்தக் கட்சிகளையே காப்பற்ற முடியாமல் போய் விட்டது. சரியாகச் சொன்னால், அவை வளர்த்த இனவாதத்துக்கு அவையே பலியாகி விட்டன. 

அதனால்தான் ஒரு மாற்று சக்தி வேண்டும். மாற்று அரசியல் வேண்டும் என்ற அடிப்படையில் NPP க்கான ஆதரவை மக்கள் வழங்கினர். தமிழ் பேசும் மக்களுடைய ஆதரவும் அப்படியானதே. 

இதை மறந்து விட்டு அல்லது இதைப் புரிய மறுத்து ஏனைய தீய சக்திகளைப்போலவே NPP யும் செயற்படுமாக இருந்தால், அவற்றின் வழியையே தொடருமாக இருந்தால் நிச்சயமாக விரைவில் NPP தோல்வியைச் சந்தித்தே தீரும். தோல்வியை மட்டுமல்ல, அழிவையும்தான். 

இந்தச் சமரசமெல்லாம் தெற்கில் மேலெழும் அல்லது NPP ஐ பலவீனப்படுத்த முற்படும் சிங்களத் தீவிரவாத சக்திகளையும் திருப்பதிப்படுத்த வேண்டிய சூழலால் செய்யப்படுவது என்று இதற்கு யாரும் சமாதானம் சொல்ல முற்பட்டால் அவர்கள் சமகால வாய்ப்பைச் சீரழிப்பவர்கள் மட்டுமல்ல, நாட்டுக்கும் NPP க்கும் கூட தீமைகளையே சிந்திப்பவர்களாக இருப்பர். 

வடக்கில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இளங்குமரன் போன்றோர் மிகப் பலவீனமானவர்களாகவும் பாதகமானவர்களாகவுமே இருக்கின்றனர். மக்களுக்கும் NPP க்கும் மாறானவர்களாகவே செயற்படுகின்றனர். 

இவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. அல்லது இவர்களை பொறுப்புகளில் இருந்து நீக்கவில்லை என்றால் அதனுடைய பாரதூரமான விளைவுகள் NPP ஐயே பாதிக்கும். மக்களுக்கும் அதனால் பாதிப்பே. 

சிதறுண்டிருந்த தமிழ்க்கட்சிகளை ஆறுமாதங்களுக்குள் ஒன்றிணைய வைத்த, பிராந்திய அரசியலை வலுவாக்கம் செய்தது  NPP யின் நடவடிக்கைகள்தான். அதிலும் சந்திரசேகர் – இளங்குமரன் கூட்டணியே என்பதை NPP யும் அதனுடைய ஆதரவாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். 

NPP யின் ஆதரவாளர்களும் NPP யும் இதைக்குறித்தெல்லாம் இன்னும் தெளிவாகப் பேசாதிருப்பது ஏன்?

 இதேவேளை NPP இலகுவில் ஆட்சியைக் கைப்பற்றவில்லை. அதைப்போல அதனால் இலகுவாக ஆட்சியை நடத்தவும் முடியாது. குறிப்பாக அதிகாரத்துக்கு வந்தபோது நாடு பொருளாதார நெருக்கடிக்குள்  (கடன் பொறிக்குள்ளும் சர்வதேச நெருக்கடிகளுக்குள்ளும்) தள்ளப்பட்டிருந்தது. அல்லது சிறைப்பட்டிருந்தது.

இது போதாதென்று இனவாதம் மிகத் தீவிரமாக கட்டமைக்கப்பட்டிருந்தது. அதற்கு இராணுவப் பலமும் சேர்க்கப்பட்டிருந்தது. அதாவது இனமுரணும் அதற்கான இராணுவமும் அதற்கான உளநிலையும் உச்ச நிலைக்கு வளர்க்கப்பட்டிருக்கிறது.

இவற்றுக்கு மத்தியில்தான், இவற்றைச்சீர்ப்படுத்தும் ஆட்சியை NPP  நடத்த வேண்டியுள்ளது. இது எளிய விடயமல்ல.

ஆகவே இதையெல்லாம் நாம் எளிதில் மறந்து விடவோ கடந்து விடவோ முடியாது.

இருந்தும் தமது தவறுகளுக்கும் பழிகளுக்கும் பரிகாரம் காணாமல், நிவாரணம் தேடாமல் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவே அனைத்துத் தரப்பும் முயற்சிக்கின்றன. 

இது எவ்வளவு பெரிய தவறு? எவ்வளவு பெரிய குற்றம்?

ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள NPP இதையெல்லாம் புரிந்து கொண்டு  வேண்டும். இதற்கு NPP தன்னைத் தெளிவாக முன்னிறுத்துவது அவசியமாகும். தெளிவென்பது, குழப்பங்கள்,உள் முரண்பாடுகள் அற்ற நிலையில் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதாகும்.

ஆனால், அதிகாரத்துக்கு NPP  வந்த பின்னரான எட்டுமாத கால நடவடிக்கைகளை அவதானிக்கும்போது அப்படித் தெரியவில்லை. அது தடுமாற்றங்களுக்குள்ளாகியிருப்பதாகவே தெரிகிறது. என்பதால்தான் அதற்கு (NPP க்கு) எதிரான சக்திகள் வலுப்பெறக் கூடியதாக உள்ளது. அதன் மீதான விமர்சனங்களும் உள்ளன.

https://arangamnews.com/?p=12060

ஈரான், ஆப்கான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை – டிரம்ப்

3 months 1 week ago
ஈரான், ஆப்கான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை – டிரம்ப் 05 JUN, 2025 | 07:47 AM ஈரான், ஆப்கானிஸ்தான், மியன்மார் உட்பட 12 நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. கியுபா உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் பல கட்டுப்பாடுகளையும் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவினதும் அதன் மக்களினதும் தேசிய பாதுகாப்பு நலன்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்யும் எனது கடமையை நான் நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/216626

ஈரான், ஆப்கான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை – டிரம்ப்

3 months 1 week ago

ஈரான், ஆப்கான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை – டிரம்ப்

05 JUN, 2025 | 07:47 AM

image

ஈரான், ஆப்கானிஸ்தான், மியன்மார் உட்பட 12 நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.

கியுபா உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் பல கட்டுப்பாடுகளையும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவினதும் அதன் மக்களினதும் தேசிய பாதுகாப்பு நலன்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்யும்  எனது கடமையை நான் நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/216626

குச்சவெளி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை தெரிவிப்பு

3 months 1 week ago
குச்சவெளி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை தெரிவிப்பு குச்சவெளி பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மீன்பிடிக் கப்பலை சோதனையிடச் சென்ற கடற்படைக் கப்பலைத் தாக்க பல படகுகளைக் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு முயன்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரும், தாக்குதலுக்கு இலக்கான இரண்டு கடற்படை வீரர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவான மற்றும் முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் படகுகளைக் கைப்பற்ற கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருகோணமலை குச்சவெளி கடல் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் கடற்படைக் கப்பலால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில், ஐந்து மீனவர்கள் சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி ஒரு டிங்கி படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர், கடற்படையினர் அவர்களைக் கைது செய்து கரைப் பகுதிக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும், குறித்த சந்தர்ப்பத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களை ஏற்றிச் சென்ற பல கப்பல்கள் கடற்படைக் கப்பலைத் துரத்திச் சென்று மோதியதாகவும், இதனால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தப்பிச் சென்றதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படைக் கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள், எந்தவித இடையூறும் இல்லாமல் சட்டப்பூர்வமாக தங்கள் கடமைகளைச் செய்ய அனுமதிக்குமாறு அவர்களிடம் தெரிவித்திருந்தனர். இருப்பினும், வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழு தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு படகை கடத்திச் செல்ல முயன்ற போது, நிலைமையைக் கட்டுப்படுத்த கடற்படை அதிகாரிகள் வானத்தை நோக்கிச் சுட்டனர். கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்த ஒழுங்கமைக்கப்பட்ட குழு, கடற்படை வீரர்களுடன் சண்டடையிட்டு தாக்குவதற்கு முயற்சித்துள்ளனர். அங்கு, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் ஒருவர் கடற்படை வீரரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, அது வெடித்து, சம்பந்தப்பட்ட நபரைக் காயப்படுத்தியது. சம்பவத்திற்குப் பிறகு ஒழுங்கமைக்கப்பட்ட குழு தப்பிச் சென்றது, கடற்படைக் குழு அவர்கள் கைது செய்த சந்தேகநபர்களுடன் கரைக்கு வந்தது. காயமடைந்த 24 வயது மீனவர் சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உட்பட 5 மீனவர்களும் குச்சவெளி – ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கப்பல் மீதான தாக்குதலில் காயமடைந்த இரண்டு கடற்படை வீரர்கள் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார். எனினும், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை குச்சவெளி பகுதியில் போராட்டமொன்று இடம்பெற்றது. இந்த சம்பவம் குறித்து கடற்படை முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பாதுகாப்பு செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் விரிவான மற்றும் முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கடற்படை ஊடகப் பணிப்பாளர் தெரிவித்தார். சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் விளைவாக, இந்த ஆண்டு இதுவரை 117 மீன்பிடி படகுகளும் 315 நபர்களும் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நேற்று (03) இரவு முன்னெடுத்த இவ்வாறான நடவடிக்கைகளில் 11 சட்டவிரோத படகுகளுடன் 48 நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://www.samakalam.com/குச்சவெளி-சம்பவம்-தொடர்ப/

குச்சவெளி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை தெரிவிப்பு

3 months 1 week ago

குச்சவெளி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை தெரிவிப்பு

குச்சவெளி பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மீன்பிடிக் கப்பலை சோதனையிடச் சென்ற கடற்படைக் கப்பலைத் தாக்க பல படகுகளைக் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு முயன்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரும், தாக்குதலுக்கு இலக்கான இரண்டு கடற்படை வீரர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவான மற்றும் முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் படகுகளைக் கைப்பற்ற கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

திருகோணமலை குச்சவெளி கடல் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் கடற்படைக் கப்பலால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த நேரத்தில், ஐந்து மீனவர்கள் சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி ஒரு டிங்கி படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர், கடற்படையினர் அவர்களைக் கைது செய்து கரைப் பகுதிக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.

இருப்பினும், குறித்த சந்தர்ப்பத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களை ஏற்றிச் சென்ற பல கப்பல்கள் கடற்படைக் கப்பலைத் துரத்திச் சென்று மோதியதாகவும், இதனால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தப்பிச் சென்றதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படைக் கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள், எந்தவித இடையூறும் இல்லாமல் சட்டப்பூர்வமாக தங்கள் கடமைகளைச் செய்ய அனுமதிக்குமாறு அவர்களிடம் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழு தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு படகை கடத்திச் செல்ல முயன்ற போது, நிலைமையைக் கட்டுப்படுத்த கடற்படை அதிகாரிகள் வானத்தை நோக்கிச் சுட்டனர்.

கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுத்த ஒழுங்கமைக்கப்பட்ட குழு, கடற்படை வீரர்களுடன் சண்டடையிட்டு தாக்குவதற்கு முயற்சித்துள்ளனர்.

அங்கு, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் ஒருவர் கடற்படை வீரரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, அது வெடித்து, சம்பந்தப்பட்ட நபரைக் காயப்படுத்தியது.

சம்பவத்திற்குப் பிறகு ஒழுங்கமைக்கப்பட்ட குழு தப்பிச் சென்றது, கடற்படைக் குழு அவர்கள் கைது செய்த சந்தேகநபர்களுடன் கரைக்கு வந்தது.

காயமடைந்த 24 வயது மீனவர் சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் உட்பட 5 மீனவர்களும் குச்சவெளி – ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கப்பல் மீதான தாக்குதலில் காயமடைந்த இரண்டு கடற்படை வீரர்கள் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

எனினும், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை குச்சவெளி பகுதியில் போராட்டமொன்று இடம்பெற்றது.

இந்த சம்பவம் குறித்து கடற்படை முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பாதுகாப்பு செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் விரிவான மற்றும் முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கடற்படை ஊடகப் பணிப்பாளர் தெரிவித்தார்.

சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் விளைவாக, இந்த ஆண்டு இதுவரை 117 மீன்பிடி படகுகளும் 315 நபர்களும் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (03) இரவு முன்னெடுத்த இவ்வாறான நடவடிக்கைகளில் 11 சட்டவிரோத படகுகளுடன் 48 நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

https://www.samakalam.com/குச்சவெளி-சம்பவம்-தொடர்ப/

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 1 week ago
செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன! adminJune 5, 2025 யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி இந்துமயான மனிதப்புதைகுழியில் இருந்து ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தப் புதைகுழி மிகப்பெரியதாக இருக்கலாம் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்தில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. பணிகளின் ஐந்தாம் நாளான நேற்றையதினம் புதன்கிழமை (04.06.25) சிறிய என்புத்தொகுதியொன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முகத்தோற்ற அளவில் அது ஒரு வயதுக்கு உட்பட்ட சிசுவுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அத்துடன் இதுவரை 13 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து தொகுதிகள் முற்றாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையவற்றை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவரும் மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை ஆடைகள் எவையும் மீட்கப்படவில்லை. அத்துடன், வேறு சில என்புச் சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. https://globaltamilnews.net/2025/216350/

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
அப்படித்தானே பொதுவாக இருக்கிறது 9 எண்ணுக்கும் வேறு வேறு குணங்கள் எழுதப்பட்டு இருக்கிறது அதுபோலவேதானே அவர்கள் குணாமாசங்களும் இருக்கிறது? ஒரே மாதிரி வாழக்கை இருக்கவேண்டும் என்பதன் பொருள் சரியாக புரியவில்லை அவர் அவர் வாழ்வு அமையும் இடத்திற்கு ஏற்பத்தானே வாழக்கை இருக்கும் அந்த குறிப்பிடட பகுதியில் வாழும் மக்கள் கூடடத்தில் அவர்கள் தமக்கான குணாம்சங்களை கொண்டிருப்பார்கள். பணக்காரர் ஆவார்கள் என்று சொன்னால் எல்லோரும் எலன் மாஸ்க் ஆகுவார்கள் என்று அர்த்தம் ஆகுமா? பெயருக்கான பலன்கள் இராசிபலன் கைச்சாத்திரம் போன்றவை பலவீனமான மனங்களை ஏமாற்றுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் அதில் எண்பது வீதம் என்றாலும் ஏமாற்று வேலை இருப்பதை ஓரளவுக்கு உணர முடியும். ஆனால் இந்த திகதியில் பிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை நான் மிக நீண்ட நாட்களாக கவனித்து வருகிறேன் ஓரளவு உண்மை இருக்கிறது அல்லது அதை பொய் என்று நிறுவ கூடிய எதையும் நான் இன்னமும் காணவில்லை. மேல பலர் காலண்டர் முறைமையை கூறி இருக்கிறார்கள் எந்த காலண்டர் இருந்தாலும் பூமி ஒருமுறை சுற்றுவது ஒரு நாள் அதை காலண்டரை வைத்து மறுக்க முடியாது. ஆகவே அந்த குறிப்பிடட தேதி அல்லது நாள் என்பது அது அதுவாகத்தான் இருக்க போகிறது நாம் அடையாள படுத்தும் முறைமை வேண்டுமானால் வேறாக இருக்கலாம். இவற்றில் எனக்கும் பெரிதான நம்பிக்கை இல்லை அனால் குறித்த இராசியில் உள்ள பொது குணாம்சங்கள் குறித்த திகதியில் பிறந்தவர்களின் குணாம்சங்கள் ஒன்றாக இருப்பதை நான் கவனித்து வருகிறேன். அது எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கு இங்கும் யாரும் சரியான பதில் எழுதி அதை பொய் என நிரூபிக்கவில்லை வேறு இடங்களிலும் நான் வாசிக்கவில்லை

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 1 week ago
சந்திரிக்காவின் ஆட்சியில் மாணவி கிருசாந்தியை மானபங்கப்படுத்தி கொலை செய்து செம்மணியில் புதைத்தார்கள். மாணவியை தேடி சென்ற தாய் உறவினர்களையும் கொலை செய்து புதைத்தார்கள். இதுவரை இந்த சம்பவம் பற்றி அறியாதவர்கள் இருந்தால் அதைப்பற்றி ஓரளவு அறிந்து கொள்ள மேலே உள்ள காணொளியை பார்க்கவும்.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
கொலை செய்தவனிம் கூற்றை அப்படியே நம்புகின்றனர பலர். கொலை செய்யப்பட்ட பரிதாபத்துக்குரிய அந்தப் பெண் தன் பக்க நியாயங்களை கூறுவதற்கு கூட சந்தர்ப்பம் இல்லாத நிலையில் கொலைஞன் கூறுவதை அப்படியே எந்தக் கேள்வியும் இன்றி நம்புகின்றனர். அல்லது அப்படி நம்ப விரும்புகின்றனர். உண்மை முற்றிலும் வேறானதாகக் கூட இருக்கலாம். கொலைகாரன் எப்பவும் தன் செயலை நியாயப்படுத்ததான் செய்வான். தன்னால் கொல்லப்பட்டவர் மீது பிறருக்கு வெறுப்பை வரச் செய்வதன் மூலம் தன் செயலை நியாயப்படுத்தவே முயல்வான். அதை அப்படியே நம்புகின்றவர்களை என்னவென்பது? படுகொலைகளை செய்தவர்களுக்கு கூட தம் பக்க நியாயங்களை சொல்வதற்கு சட்டங்களும் நீதி அமைப்பும் இருக்கும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவற்றை வழங்காது உடனடியாக தண்டனை கொடுப்பதும் அதை நியாயப்படுத்துவதும் காட்டுமிராண்டித்தனம்.

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 1 week ago
கிருசாந்தி கொலையின் முதல் குற்றவாளியான சோமரத்னா ராஜபக்சா ‘இந்த நிலத்தில் (செம்மணியில்) 300 முதல் 400 வரை சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஒவ்வொரு மாலையும் அங்கு சடலங்கள் கொண்டுவரப்பட்டு, சிப்பாய்கள் அவற்றை புதைக்கச் சொல்லப்பட்டனர்’ என்று சொல்லி இருக்கிறார். https://en.wikipedia.org/wiki/Somaratne_Rajapakse

யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்

3 months 1 week ago
நீங்கள் சொல்வது போல் யாராவது எதற்காவது உதவுவோம் என்று பேச முற்பட்டாலும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் (சத்தியமுர்த்தியர்)மற்றவர்களின் முகத்தை முறிப்பது போல் தான் நடந்து கொள்கிறார்.தனக்கு வேண்டப்பட்டவர்கள் யாராவது அங்கிள் அது, இது என்று சொன்னால் அவர்களுக்கு பதில் கொடுக்கிறார்.அதே நேரம் உண்மையாக ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று எழுதினால் அதற்கு பதில் தரப்படுவது இல்லை.முக்கியமாக ஏதும் கேட்டால் , சொன்னால் அந்த வைத்தியருக்கு பிடிப்பதில்லை.ஆனால் ஒரு விடையம் செய்திருக்கிறார்கள்.வார்ட்டுகளுக்கு கேர்ட்டின் போட்டால் நன்று என்பதை சுட்டிக் காட்டியதும் அதை செய்திருக்கிறார்கள்.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
காயப்பட்டவனுக்குத்தான் அதன் வலி தெரியும். திருமண உறவு முறிக்கப்படாத நிலையில் இன்னொரு ஆணிடம் சோரம்போனது சரியா? உன்னுடைய மனைவி என்னுடன் படுத்து எனக்கு பிள்ளை பெறப்பேகிறாள் என்று ஆதாரத்துடன் அந்தக் கயவன் படங்களை அனுப்பினால் ஒரு தன்மானமுள்ள ஆணின் ஆன்மா உடைந்து உலுங்கிகிப்போய்விடாதா? அந்தக் கணமே அவன் செத்துப்போய்விடுகின்றான். தரையில் குனிந்து எழுதிக்கொண்டிருக்க அவனொன்றும் இயேசுநாதரல்ல.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
ஒருபெண்ணை அதுவும் கர்ப்பிணியாய் இருப்பவரின் உயிரை எடுக்க யார் இவருக்கு அதிகாரம் கொடுத்தது? இதைப்பின்பற்றி ஏனைய அறிவு கெடடதுகளும் முயலக் கூடும். சமூகத்துக்கு ஒரு தப்பான எடுத்துக்காட்டு .பிரச்சினையை சற்று ஆறப்போட்டு ஒரு தீர்வுகண்டிருக்கலாம். ஆத்திரத்தாலும் அவசரத்தாலும் புத்தி தடுமாறிவிடடது .

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் விசாரணைக்கு இறங்கி வந்த அரசாங்கம்!

3 months 1 week ago
நாடு அபிவிருத்தியை அடைவதற்கு பொருளாதார வெற்றிகள் மட்டுமல்ல, சமூக முன்னேற்றம் மற்றும் அரசியல் கலாசாரமும் மேம்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு பொய்களை பரப்புவோருக்கு இனி மன்னிப்பில்லை; அவர்களிடம் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அறிவிப்பு இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு – அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தகவல் யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான விசாரணைகள் விரைவுபடுத்தப்படவுள்ளன என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டு

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் விசாரணைக்கு இறங்கி வந்த அரசாங்கம்!

3 months 1 week ago

நாடு அபிவிருத்தியை அடைவதற்கு பொருளாதார வெற்றிகள் மட்டுமல்ல, சமூக முன்னேற்றம் மற்றும் அரசியல் கலாசாரமும் மேம்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு

பொய்களை பரப்புவோருக்கு இனி மன்னிப்பில்லை; அவர்களிடம் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அறிவிப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு – அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தகவல்

யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான விசாரணைகள் விரைவுபடுத்தப்படவுள்ளன என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டு