Aggregator

இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்ச‍ை!

3 months ago
இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்ச‍ை! தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் உறுதிப்படுத்தப்படாத தகவலை வெளியிட்டுள்ளன. இது குறித்து ஆப்கான் டைம்ஸ் தனது எக்ஸ் பதிவில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் “கொலை செய்யப்பட்டார்” என்ற ஆதாரங்களில் இருந்து தகவல் கிடைத்ததாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த வதந்திகள் தொடங்கின. எனினும், இந்தக் கூற்றுகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் சரிபார்க்கப்படாதவை – எந்த நம்பகமான நிறுவனத்தாலும் அல்லது துறையாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இம்ரான் கானின் குடும்பத்தினர் சிறையில் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியான சிறிது நேரத்திலேயே இந்த வதந்திகள் வந்துள்ளன. அடியாலா சிறைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட அவரது சகோதரிகள், அவரைச் சந்திக்கக் கோரி தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இம்ரான் கானின் மூன்று சகோதரிகள் – நோரீன், அலீமா மற்றும் உஸ்மா – அரசியல் தலைவர் அடியாலா சிறைக்குள் “கொடூரமாக தாக்கப்பட்டதாக” குற்றம் சாட்டினர், அங்கு அவர் அடிக்கடி சிறை அதிகாரிகளால் தவறாக நடத்தப்பட்டதாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் முறைப்பாடு அளித்துள்ளனர். 72 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரர், ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு 2023 முதல் சிறையில் உள்ளார். Athavan Newsஇம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்ச‍ை!தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் உறுதிப்படுத்தப்

ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்!

3 months ago
ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்! ஹொங்கொங்கில் பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தானது புதன்கிழமை (26) இரவு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இந்த அனர்த்தத்தினால் குறைந்தது 44 பேர் உயிரிழந்ததுடன், 279 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் இன்னும் தீப்பரவிய உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து குடியிருப்பாளர்களை மீட்டு வருகின்றனர். நியூ டெரிட்டரிஸின் புறநகர்ப் பகுதியான தாய் போ மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு கட்டிடங்களில் புதன்கிழமை பிற்பகல் இந்த தீ விபத்து தொடங்கியது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (27) காலை வரை, தீ இன்னும் அணைக்கப்படவில்லை, மீட்புப் பணிகள் தொடர்ந்தன. அதேநேரம், தீ விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர். பலியான 44 பேரில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனர்த்தத்தின் பின்னர் குறைந்தது 62 பேர் காயமடைந்தனர், பலர் தீக்காயம் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டனர். இதனிடையே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் புதன்கிழமை, தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்தார். https://athavannews.com/2025/1453973

ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்!

3 months ago

fire.webp?resize=750%2C375&ssl=1

ஹொங்கொங்கில் குடியிருப்பு கட்டிடங்கள் தீக்கரை; 44 பேர் உயிரிழப்பு, 279 பேர் மாயம்!

ஹொங்கொங்கில் பல தசாப்தங்களின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தானது புதன்கிழமை (26) இரவு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.

இந்த அனர்த்தத்தினால் குறைந்தது 44 பேர் உயிரிழந்ததுடன், 279 பேர் காணாமல் போயுள்ளனர். 

மீட்புப் பணியாளர்கள் இன்னும் தீப்பரவிய உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து குடியிருப்பாளர்களை மீட்டு வருகின்றனர்.

நியூ டெரிட்டரிஸின் புறநகர்ப் பகுதியான தாய் போ மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு கட்டிடங்களில் புதன்கிழமை பிற்பகல் இந்த தீ விபத்து தொடங்கியது.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (27) காலை வரை, தீ இன்னும் அணைக்கப்படவில்லை, மீட்புப் பணிகள் தொடர்ந்தன.

அதேநேரம், தீ விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர். 

பலியான 44 பேரில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

அனர்த்தத்தின் பின்னர் குறைந்தது 62 பேர் காயமடைந்தனர், பலர் தீக்காயம் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் புதன்கிழமை, தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன்,  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1453973

ஆயிரங்களில் ஒன்று

3 months ago
மிகவும் நன்று ...இலகு நடை...ஈழத் தமிழர் என்றால் ...இதுதான் விதி.. இந்த அடையாள அட்டை விதி... இந்திராணி (ஊறணி ) ஆஸ்பத்திரியில் பிறந்த எம்மை பிறந்த இடம் பொலிகண்டி .. என்று காட்டியது ... அடையாள அட்டை.... இது நம்ம இருவருக்கும் பிடித்த இடமெல்லாம் பிரித்து மேய்ந்தார்கள் .. அடி அவ்வளவும் பிடிக்காத நாட்டில் இருப்பதை விட பிடித்த நாடு கனடாவில் ...இப்ப.

மாவீரர்நாள் ....2025 .... அஞ்சலிப்போம்.. கண்ணீரில்  நனையும்  மாவீரர்  கல்லறை

3 months ago
கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை கண்ணீரும் செந்நீரும் கலந்திடும் கார்த்திகை இருபத்தியேழு சொல்லில் அடங்காச் சோகங்கள் சூழக் கண்சிமிடித் தமிழரை கைநீட்டி அழைக்கும் கண்ணீரில் நனையும் மாவீரர் கல்லறை கார்த்திகை மைந்தர்கள் காவிய நாயகர் போர்க்களம் கண்டு புனிதர்கள் ஆகியே தூய்தமிழ் அன்னையின் தாய்மடித் தழுவித் தமிழர்தம் மனங்களில் தண்ணொளி வீசினர் கருத்தினில் தலைவன் கொள்கையை ஏற்றவர் கந்தக குப்பியைக் கழுத்தினில் சுமந்தவர் தரைப்படை கடற்படை தரணியில் கண்டவர் வையம் வியந்திட வான்படை அமைத்தவர் வரிப்புலி வடிவாகி வீரத்தில் திளைத்தவர் உணவு உறக்கம் உறைவிடம் மறந்தவர் காடுகள் களனிகள் கூடிடும் காப்பனர் வெடிகள் சுமந்தே வெந்தணல் ஆகினர் அன்னையும் அப்பனும் அன்புச் சகோதரரும் ஆசை மனைவியும் அருமைக் குழந்தையும் ஏக்கம் கொண்டவர் எண்ணத்தில் தவிக்க களப்பலி கண்டுமே கல்லறையில் தூங்குகின்றார்…

மாவீரர்நாள் ....2025 .... அஞ்சலிப்போம்.. கண்ணீரில்  நனையும்  மாவீரர்  கல்லறை

3 months ago

கண்ணீரில்  நனையும்  மாவீரர்  கல்லறை

 

கண்ணீரும் செந்நீரும் கலந்திடும்  கார்த்திகை  இருபத்தியேழு

சொல்லில்  அடங்காச்  சோகங்கள் சூழக்

கண்சிமிடித்  தமிழரை கைநீட்டி  அழைக்கும்

கண்ணீரில்  நனையும்  மாவீரர்  கல்லறை

 

கார்த்திகை  மைந்தர்கள்   காவிய நாயகர்

போர்க்களம்  கண்டு   புனிதர்கள்   ஆகியே

தூய்தமிழ்  அன்னையின்  தாய்மடித் தழுவித்

தமிழர்தம்  மனங்களில்  தண்ணொளி  வீசினர்

 

கருத்தினில் தலைவன் கொள்கையை  ஏற்றவர்

கந்தக  குப்பியைக்  கழுத்தினில் சுமந்தவர்

தரைப்படை  கடற்படை தரணியில்  கண்டவர்

வையம்  வியந்திட  வான்படை  அமைத்தவர்

 

வரிப்புலி  வடிவாகி  வீரத்தில்  திளைத்தவர்

உணவு  உறக்கம்  உறைவிடம்  மறந்தவர்

காடுகள்   களனிகள்   கூடிடும்  காப்பனர்

வெடிகள்   சுமந்தே  வெந்தணல்  ஆகினர்

 

அன்னையும்  அப்பனும்  அன்புச்  சகோதரரும்

ஆசை மனைவியும்  அருமைக்  குழந்தையும்

ஏக்கம்  கொண்டவர்  எண்ணத்தில்  தவிக்க

களப்பலி  கண்டுமே  கல்லறையில்  தூங்குகின்றார்…

சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து!

3 months ago
2008 ஆண்டு வரை தலைவர் தலைமையில் உத்தியோகபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தினங்களில் இவர்கள் நினைவுகூறப்படவில்லையா? இந்த புறக்கணிப்பு/தொய்வு நிலை பின்னர் ஏற்பட்டதா?

எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71

3 months ago
எந்தச்சந்தர்ப்பத்திலும் தம் தலைவனை மக்கள் மறந்ததில்லை. எந்தக்கட்டுப்பாடுகள், அச்சுறுத்தல்கள், சலுகைகள் வந்த போதிலும் அவரையும் அவர்தம் சேனையையும் அவர்கள் தந்த பாதுகாப்பையும் அவர்கள் மறுக்கவுமில்லை, விட்டுக்கொடுக்கவுமில்லை. ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று கூவியவர், இன்று மாவீரர் அடியில் மண்டியிட வைத்துள்ளனர் மக்கள். சந்தற்பவாதிகளும் மாவீரரின் தியாகத்தின் முன்னால் அடிபணிந்தேயாகவேண்டும். ஆயிரம் காரணங்கள் கூறி தம்மை நிஞாயப்படுத்தலாம், மாவீரரை புறக்கணிப்போருக்கு தம்மதியில் இடமில்லை என்பதை நிரூபித்து விட்டனர் மக்கள். வாழ்க நம் சேனைத்தலைவரும் அவரது வீரர்களும். நிம்மதியாகத்தூங்குங்கள்!

ஆயிரங்களில் ஒன்று

3 months 1 week ago
ஆயிரங்களில் ஒன்று ------------------------------ எப்படி மறைந்தார்கள் என்று தெரியாத ஆயிரம் ஆயிரம் மனிதர்களில் ஒரு குடும்பத்தின் கதை இது ஊரில் அழகான பெண்களில் அவர் ஒருவர் தெரிந்தவர் தான் பலர் கவனம் கொண்டிருந்தார்கள் அந்த நாட்களில் அடிக்கடி ஊரையே துலாவித் தேடும் இலங்கை இராணுவமும் காவல்துறையும் அடிக்கடி ஊரில் கொன்றும் குவித்தது ஒரு முறை அகப்பட்டவர்களை ஒரு கான்கிரீட் கட்டடத்துக்குள் அடைத்து அதற்கு குண்டு வைத்து அப்படியே கொன்றது இன்னொரு முறை எங்கள் கடற்கரையில் முழங்காலில் வரிசையில் இருக்கச் சொல்லி சுட்டுக் கொன்றது நாட்டில் எங்கு தாக்குதல் நடந்தாலும் எங்கள் ஊரையே திருப்பி அடித்தார்கள் எங்கு கண்டாலும் எங்களை இறக்கி அடையாள அட்டை பார்த்து அடித்தார்கள் ஊரே உயிர் காக்க சிதறி ஓடியது கடலே தாயென்று வாழ்ந்தவர்கள் அதைத் தாண்டி ஓடினர் கடல் மேல் ஓடும் போது தாண்டு மாண்டு போனவர்களும் ஏராளம் ஒரு நாள் இந்தப் பெண் அக்கரை போய்ச் சேர்ந்தார் அங்கே உறவினர் ஒருவரை மணம் முடித்தார் அந்த நாட்டில் நடந்த அனர்த்தம் ஒன்றுக்கும் இந்த ஊரவர்களையே தேடித் தேடிப் பிடித்தார்கள் அவர்கள் கொண்டு போன கணவரை அவர்களே பிணமாக கொண்டு வந்து அவரின் நடு வீட்டில் தூக்கினார்கள் அந்தப் பெண்ணையும் அவரின் மாமியையும் விசாரணை என்று பின்னர் அவர்களில் யாரோ கொண்டு போனார்கள் 35 வருடங்களுக்கு மேல் ஆகியும் விசாரணை இன்னும் முடியவில்லை யார் எங்கே என்ன விசாரிக்கின்றார்கள் என்றும் எவருக்கும் தெரியாது.

ஆயிரங்களில் ஒன்று

3 months 1 week ago

ஆயிரங்களில் ஒன்று

------------------------------

எப்படி மறைந்தார்கள் என்று தெரியாத

ஆயிரம் ஆயிரம் மனிதர்களில் 

ஒரு குடும்பத்தின் கதை இது

ஊரில் அழகான பெண்களில் அவர் ஒருவர்

தெரிந்தவர் தான்

பலர் கவனம் கொண்டிருந்தார்கள்

அந்த நாட்களில்

அடிக்கடி ஊரையே துலாவித் தேடும் 

இலங்கை இராணுவமும் காவல்துறையும்

அடிக்கடி ஊரில் கொன்றும் குவித்தது

ஒரு முறை 

அகப்பட்டவர்களை

ஒரு கான்கிரீட் கட்டடத்துக்குள் அடைத்து

அதற்கு குண்டு வைத்து அப்படியே கொன்றது

இன்னொரு முறை

எங்கள் கடற்கரையில் 

முழங்காலில் வரிசையில் இருக்கச் சொல்லி சுட்டுக் கொன்றது

நாட்டில் எங்கு தாக்குதல் நடந்தாலும்

எங்கள் ஊரையே திருப்பி அடித்தார்கள்

எங்கு கண்டாலும்

எங்களை இறக்கி

அடையாள அட்டை பார்த்து அடித்தார்கள்

ஊரே உயிர் காக்க சிதறி ஓடியது

கடலே தாயென்று வாழ்ந்தவர்கள்

அதைத் தாண்டி ஓடினர்

கடல் மேல் ஓடும் போது 

தாண்டு மாண்டு போனவர்களும் ஏராளம்

ஒரு நாள் இந்தப் பெண் அக்கரை போய்ச் சேர்ந்தார்

அங்கே உறவினர் ஒருவரை மணம் முடித்தார்

அந்த நாட்டில் நடந்த அனர்த்தம் ஒன்றுக்கும்

இந்த ஊரவர்களையே தேடித் தேடிப் பிடித்தார்கள்

அவர்கள் கொண்டு போன கணவரை

அவர்களே பிணமாக கொண்டு வந்து

அவரின் நடு வீட்டில் தூக்கினார்கள்

அந்தப் பெண்ணையும்

அவரின் மாமியையும்

விசாரணை என்று 

பின்னர் அவர்களில் யாரோ கொண்டு போனார்கள்

35 வருடங்களுக்கு மேல் ஆகியும்

விசாரணை இன்னும் முடியவில்லை

யார் எங்கே என்ன விசாரிக்கின்றார்கள் என்றும் 

எவருக்கும் தெரியாது.

களைத்த மனசு களிப்புற ......!

3 months 1 week ago
Ans-cyclopedia · ஆசிய XI அணியில், இந்தியாவின் அக்னி நட்சத்திரம் எம்.எஸ்.தோனியும் இலங்கையின் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்த்தனேவும் இணைந்து ஆப்பிரிக்க XI அணிக்கு எதிராக நிகழ்த்திய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி இன்றும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது. அது 2007 ஆம் ஆண்டு, ஆப்ரோ-ஆசிய கோப்பையின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில், ஆசிய XI அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. அணியின் ஸ்கோர் 72 ஆக இருக்கும்போதே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். யுவராஜ் சிங், சனத் ஜெயசூர்யா, வீரேந்திர சேவாக் என அனைவரும் பெவிலியன் திரும்ப, ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவானது. அப்போதுதான், ஆசிய XI அணியின் கேப்டன் ஜெயவர்த்தனேவுடன், இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தோனி கை கோர்த்தார். தோனியும் ஜெயவர்த்தனேவும் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, அணியை மீட்டெடுத்ததோடு மட்டுமல்லாமல், ஆப்பிரிக்காவின் வெற்றிக் கனவை சிதைத்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்த இருவரும் ஒரு அபாரமான இரட்டை சதம் கூட்டாண்மையை அமைத்தனர். இந்த ஜோடி 178 பந்துகளில் 218 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது! இது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆறாவது விக்கெட்டுக்கான அதிகபட்ச ஓடிஐ பார்ட்னர்ஷிப்பாகும் (பின்னர் முறியடிக்கப்பட்டது). ஜெயவர்த்தனே தனது கேப்டன்சி இன்னிங்ஸில் 106 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 107 ரன்கள் எடுத்து மிரட்டினார். அவர் ஆட்டமிழந்த பிறகும், தோனி தன் அதிரடியைத் தொடர்ந்தார். தோனி வெறும் 97 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 5 இமாலய சிக்ஸர்களுடன் 139 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஆட்டம், ஒருநாள் போட்டிகளில் அவரது ஆரம்பகால ஆதிக்கத்தின் வெளிப்பாடாக இருந்தது. இருவரும் சதம் அடித்ததன் விளைவாக, 72/5 என்ற மோசமான நிலையிலிருந்து மீண்ட ஆசிய XI அணி, 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் என்ற பிரம்மாண்டமான இலக்கை எட்டியது. ஆப்பிரிக்க அணி கடுமையாகப் போராடிய போதிலும், 318 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆசிய XI அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வென்றது. இந்த பார்ட்னர்ஷிப், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஒரு பொதுவான இலக்குக்காக இணைந்து, எப்படி வரலாற்றை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தது. இந்த கிரிக்கெட் திருவிழா பற்றிய உங்கள் எண்ணங்களை கீழே கமென்ட் செய்யுங்கள்! இந்த இடுகையை உங்களுக்கு பிடித்திருந்தால், மற்ற கிரிக்கெட் ரசிகர்களுடன் பகிருங்கள்♥️" #cricket #tamilcricket #msdhoni #Jayawardene #Sports #SportsRivalry Voir la traduction

சத்திய சாய் பாபா – 100வது பிறந்தநாள் சிறப்பு ஆய்வு / SATHYA SAI BABA AT 100 — FAITH, POWER, CONTROVERSY AND REASON

3 months 1 week ago
சத்திய சாய் பாபா – 100வது பிறந்தநாள் சிறப்பு ஆய்வு / SATHYA SAI BABA AT 100 — FAITH, POWER, CONTROVERSY AND REASON சத்திய சாய் பாபா – 100வது பிறந்தநாள் சிறப்பு ஆய்வு [பக்தி, அதிகாரம், சர்ச்சை மற்றும் அறிவியல்] சத்திய சாய் பாபா யார்? சத்திய சாய் பாபா (1926–2011) இந்தியாவின் புட்டபர்த்தி என்ற கிராமத்தில் சத்தியநாராயண ராஜு என்ற பெயரில் பிறந்தவர். தன்னை சீரடி சாய் பாபாவின் மறுபிறவி என்று அறிவித்தார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களை உருவாக்கினார். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், குடிநீர் திட்டங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவை அவர் பெயரில் உருவாக்கப்பட்டன. அவர் போதனை: "அனைவரையும் நேசி. அனைவருக்கும் சேவை செய். எப்போதும் உதவு. ஒரு போதும் காயப்படுத்தாதே" பக்தர்கள் அவர் இது போன்ற அற்புதங்களைச் செய்ததாகக் கூறினர்: புனித சாம்பல் (விபூதி), மோதிரங்கள் மற்றும் பதக்கங்களை உருவகப்படுத்துதல் நோய் குணப்படுத்தல் எதிர்காலம் கூறுதல் ஒரேநேரத்தில், இரு இடங்களில் தோன்றுதல் பக்தர்களுக்கு – கடவுள் அறிவியலாளர்களுக்கு – வெறும் மனிதர் / மாயாஜால கலைஞர் டாக்டர் ஆபிரகாம் கோவூர் மற்றும் சாய் பாபா டாக்டர் ஆபிரகாம் கோவூர் (1898–1978) ஒரு விஞ்ஞானி, முற்போக்குச் சிந்தனையாளர் மற்றும் நான் கல்விகற்ற யாழ் மத்திய கல்லூரி விஞ்ஞான ஆசிரியர். போலி சாமியார்களையும் மூடநம்பிக்கையையும் எதிர்த்தவர். கோவூர் சாய்பாபாவிடம் வெளிப்படையாக சவால் விடுத்தார்: "அறிவியல் கண்காணிப்பின் கீழ் ஒரு பொருளை உருவாக்கினால் மட்டுமே உங்களைக் கடவுள் என ஏற்கிறேன்" சாய் பாபா இதற்கு ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை, ஓடி ஒழித்துவிட்டார் கோவூர் கூறியது: இதுவெல்லாம் மாயாஜாலக் கலை – தெய்வ சக்தி அல்ல அவரின் கருத்துகள் இன்றும் பல முற்போக்குச் சிந்தனைகளுக்கு அடிப்படையாக உள்ளன. நானும் இன்னும் நம்புகிறேன். பாபாவின் தோல்வியடைந்த கணிப்புகள் 1. தனது இறப்பு காலம் சாய் பாபா கூறினார்: "நான் 96 வயது வரை வாழ்வேன்" ஆனால் அவர் இறந்தது: தேதி: 24 ஏப்ரல் 2011 வயது: 84 அவர் தனது இறப்பைத் தவறாகக் கணித்தார். அவர் தன்னை கூட குணப்படுத்த இயலவில்லை. கோவூர் கூறியது உண்மை ஆனது: "தன்னை காப்பாற்ற முடியாதவர் கடவுள் அல்ல, நோயாளி மட்டுமே" 2. மறுபிறவி – பிரேமா சாய் அவர் கூறியது: சீரடி சாய் → சத்திய சாய் → பிரேமா சாய் ஆனால்: 14 வருடங்களாக எந்த உறுதியான பிறவியும் இல்லை பல போலிகள் நிராகரிக்கப்பட்டனர் பாபாவின் அமைப்புகளும் இப்போது இதைப் பற்றி மௌனம் இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும் எவராவது இந்த உலகில், நான் இவரின் மறுபிறவி என்று சொன்னதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? சிலவேளை யாரையாவது ஒருவர், அவர் இவரின் மறுபிறவி என்று ஒருவேளை சொல்லி இருக்கலாம் ? அவ்வளவுதான்! உங்களுக்கு தெரியும் உலகம் பெரியது, மொழிகள், பண்பாடு பல,பல. அப்படி இருக்கையில் சாய்பாபா மிக குறுகிய மனப்பான்மையுடன், தனது மறுபிறவி, தான் பிறந்த தென் இந்தியாவிலேயே நடக்கும் என்று கூறியிருப்பதைக் காண்க. பாலியல் குற்றச்சாட்டுகள் & மறைமுகம் சில முன்னாள் பக்தர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டினர். அவரது ஆசிரமத்தில் நடந்தது: 1993 துப்பாக்கிச்சூடு மறைமுக நிதி மேலாண்மை அரசியல் பாதுகாப்பு சுயாதீன விசாரணை இல்லை இவை எல்லாம் பெரிய சந்தேகங்களை உருவாக்கின. பணக்காரர்களும் வெளிநாட்டவர்களும் ஏன் இன்றும் கொண்டாடுகிறார்கள்? நினைவினால் அடையாள உணர்வால் சமூக மதிப்பால் நம்பிக்கையை ஏற்க மறுக்கும் மனநிலை குடும்ப, பாரம்பரிய அழுத்தம் இது இன்று ஒரு மனநிலை & சமூக சடங்கு ஆக மாறிவிட்டது. சாய்பாபாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆதாரம் மருத்துவமனைகள் & பல்கலைக்கழகங்கள் தொண்டு திட்டங்கள் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் பக்தி அனுபவங்கள் மனிதாபிமான பணிகள் சாய்பாபாவுக்கு எதிராக தோல்வியுற்ற மரண கணிப்பு வெளிப்படுத்தப்பட்ட மந்திர தந்திரங்கள் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் அறிவியல் ஆதாரம் இல்லை நிதி ரகசியம் மருத்துவமனைகள் பல்கலைக்கழகங்கள் இருக்கலாம் – அதனால் ஒருவர் கடவுள் ஆகிவிட மாட்டார். இறுதி தீர்மானம் சாய் பாபா: ✅ மக்களுக்கு ஆறுதல் அளித்தார் ✅ நிறுவனங்கள் உருவாக்கினார் ❌ தன் கணிப்பில் தோல்வியடைந்தார் ❌ தன்னை காப்பாற்ற முடியவில்லை ❌ அறிவியலால் நிரூபிக்கப்படவில்லை அவர் கடவுள் அல்ல. அவர் ஒரு மனோவியல் ஆளுமை. அவ்வளவுதான்! உண்மையான ஆன்மீகம் – சத்தியம், வெளிப்படை தன்மை, பொறுப்பு. இதில் எது சாய்பாபாவிடம் இருந்தது? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] SATHYA SAI BABA AT 100 — FAITH, POWER, CONTROVERSY AND REASON [A rational, historical and ethical re-examination] Who was Sathya Sai Baba? Sathya Sai Baba (1926–2011), born as Sathyanarayana Raju in Puttaparthi, India, was one of the most influential spiritual leaders of the 20th century. He claimed to be the reincarnation of Shirdi Sai Baba and later announced that a third incarnation, “Prema Sai Baba”, would be born after his death. He gathered millions of followers around the world, including politicians, judges, scientists, industrialists, artists and diaspora communities. His organisation built hospitals, universities, water supply projects and schools — all of which still function today. His central teachings were simple: “Love all. Serve all. Help ever. Hurt never.” Devotees claimed he performed miracles such as: Materialising sacred ash (vibhuti), rings and pendants Healing incurable diseases Predicting the future Appearing in two places at once To his followers, he was God. To critics, he was a charismatic magician. Dr Abraham T. Kovoor vs Sai Baba Dr Abraham T. Kovoor (1898–1978) was a Sri Lankan-born Indian scientist and one of South Asia’s most famous rationalists. A former Professor of Zoology, he dedicated his life to exposing fake godmen, miracle-workers and superstition using science. Kovoor openly challenged Sai Baba: “If Sai Baba can materialise an object under controlled scientific conditions, I will accept him as divine.” Sai Baba never accepted this challenge. Kovoor repeatedly stated that Sai Baba’s miracles were simple sleight-of-hand tricks, no different from stage magic. After Kovoor’s death, many of his ideas became the foundation for modern rationalist movements in India. The Failed Prophecies 1. Sai Baba’s own death prediction Sai Baba repeatedly told his followers: “I will live until the age of 96.” Born in 1926, this meant he should have lived until 2022. But he died on 24 April 2011, at the age of 84 — around 8 to 12 years earlier than his own prediction. He also failed to cure himself, despite suffering from kidney failure and respiratory illnesses. He was put on life support and treated by specialist doctors in his own hospital. A being who claimed to cure others could not cure himself. This is a powerful contradiction. As Kovoor once said: “A god who cannot save himself is not a god, but a patient.” 2. Rebirth prophecy – the missing “Prema Sai” Sai Baba declared: Shirdi Sai Baba → Sathya Sai Baba → Prema Sai Baba (future incarnation) He said Prema Sai would be born in a village in Karnataka. More than a decade after his death: No verified incarnation has appeared Many false claimants were rejected Even his own institutions avoid mentioning it This is another failed prophecy. Sexual abuse & other serious allegations Several former male devotees accused him of sexual abuse, saying he used spiritual authority to exploit them. Documentaries, testimonies and investigative journalists reported these claims.Although Sai Baba was never legally convicted, the number, consistency and seriousness of the allegations cannot be ignored. There was also: A mysterious shooting incident in his ashram in 1993 Secretive financial management Political protection at the highest level No open independent investigation His inner circle remained closed, powerful and untouchable. Then why do rich people and diaspora still celebrate him (even his 100th birthday)? This is a psychological and sociological phenomenon: Emotional attachment and nostalgia Cultural identity for diaspora Social status by association Donation networks & influence Fear to question old beliefs Community pressure Investment of reputation over decades For many, it is no longer about truth — It is about identity, memory and belonging. Proof FOR and AGAINST For Sai Baba Hospitals & universities Charity projects Millions of followers Devotional experiences Humanitarian works Against Sai Baba Failed death prediction Exposed magic tricks Sexual abuse allegations No scientific proof Financial secrecy Important distinction: A person can do charity — yet not be divine. Hospitals do not prove godhood. Final balanced conclusion Sathya Sai Baba was: A powerful communicator A master of psychology A builder of institutions A symbol of faith A source of both comfort and controversy But he failed: To prove his divinity scientifically To fulfil his own prophecies To answer serious accusations To escape death like an ordinary human History will remember him not as a proven God, but as one of the most mysterious and disputed figures of modern India. True spiritual greatness does not need miracles. It needs truth, transparency and accountability. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] துளி/DROP: 1918 [சத்திய சாய் பாபா – 100வது பிறந்தநாள் சிறப்பு ஆய்வு / SATHYA SAI BABA AT 100 — FAITH, POWER, CONTROVERSY AND REASON https://www.facebook.com/groups/978753388866632/posts/32561918190123407/?

இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கு மா? படித்ததும் பகிர்ந்ததும்

3 months 1 week ago
மணப்பெண் ஓரிடம் மாப்பிள்ளை ஓரிடம் என இப்பொழுது கலியாணமே இப்படி நடக்கும்போது கருமாதி மட்டும் விதிவிலக்கா என்ன, அதுவும் தன் பாட்டுக்கு நடந்துட்டு போகுது . .......போகட்டும் ........!

எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71

3 months 1 week ago
எல்லா சரி பிழைகள், வழி முறைகள் சொல்லப்படும் போதும் இதுவே கண் முன்னே வந்து நிற்கின்றது அந்தப் பாலகனின் கடைசி விம்பம் எவர் நெஞ்சிலும் அப்படியே ஒட்டி நிற்கும்..................🙏.