Aggregator

இனித்திடும் இனிய தமிழே....!

3 months 1 week ago
Magudeswaran Govindarajan · Suivre sdSntrooepm07i4fgtu5l85hc0i542919ull402la2clm1l0m0u2u2 16682 · இரு சொற்களுக்கிடையே எல்லா இடங்களிலும் வலிமிகுதல் இல்லை. வலிமிகவேண்டிய இடங்களில் தவறுமாயின் பொருள் வேறுபாடு தோன்றிவிடும். சந்திப் பிழைக்கான தலையாய அறியாமை இந்நுணுக்கம் அறியாமல் இருப்பதுதான். ஒரே சொற்றொடர்தான். அவ்விரு சொற்களுக்கிடையே ஓரிடத்தில் வலிமிகும். ஓரிடத்தில் வலிமிகாது. என்ன காரணம் ? அவ்விரு சொற்களுக்குமிடையே தோன்றும் பொருள் வேறுபாடுதான். அவ்விரு சொற்களும் சொற்றொடராகி அடுத்தடுத்து வருகையில் தாம் உணர்த்த விரும்பும் பொருளுக்கேற்ப வலிமிகுத்தோ மிகாமலோ வரும். சொற்றொடர் அமைப்புகளின் பொருளுணர்ச்சிக்கேற்றவாறு/பொருள் நோக்கத்திற்கேற்றவாறு வலிமிகுவிக்கவேண்டும், அல்லது வலிமிகுவிக்காமல் விடவேண்டும். ஒரே சொற்றொடர் அமைப்புக்குள் பொருள் வேறுபாடுகள் தோன்றும் அமைப்புகளை எடுத்துக்காட்டுகளாக எழுதியுள்ளேன், காண்க :- இரவு முழுவதும் பெய்த மழையினால் சாலைகளில் நீர் தேக்கம். மேட்டூரில் இருப்பது நீர்த்தேக்கம். 00 கற்ற கலை பொருள் செய்யப் பயன்படவில்லை. கலைப்பொருள் செய்து பெரிதாக ஈட்டியவர்கள் பலர். 00 அவர்களுக்கிடையே இருந்த உறவு சிக்கலாகிவிட்டது. உறவுச்சிக்கல் ஏற்படாதபடி வாழப் பார். 00 இந்தப் பேருந்து பயணத்திற்கு உதவாது. பேருந்துப் பயணம் அலுத்துவிட்டது. 00 உழவர்க்கு உழவு தொழிலாகும். உயிர்காப்பது உழவுத்தொழில். 00 நீ எடுத்த காட்சி பிழையானது. என்னுடைய பார்வையில் காட்சிப்பிழை உண்டோ ? 00 அன்பு தளையாகக்கூடாது. அன்புத் தளைக்குள் அகப்பட்டதனால் விடுபட முடியவில்லை. 00 கிளி பேசும். கிளிப்பேச்சு கேட்பதற்கு இனிமை. 00 மழை காலந்தவறிப் பெய்கிறது. மழைக்காலம் வந்துவிட்டது. 00 வளர்ச்சி தடைபடக்கூடாது. வளர்ச்சித்தடை ஏற்படாமல் பார்த்துக்கொள். 00 இரு சொற்களுக்கிடையே தோன்றும் இருவகையான பொருட்பயன்பாடுகள் இவை. இவற்றை நினைவிற்கொண்டால் வலிமிகல், மிகாமை குறித்துத் தெளிவடையலாம். - கவிஞர் மகுடேசுவரன் Voir la traduction

நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.

3 months 1 week ago
எனது கருத்துக்களை நீங்கள் வாசிப்பதில்லை என்று பலமுறை இங்கு குறிப்பிட்டிருந்தீர்கள். இன்று எனது கருத்துக்களை தொடர்ந்து வாசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிற்க, கைது விசாரணை, மறியல், விடுதலை என்பது நீதிமன்றம் சார்ந்த விடையம். சில அரசியல் தெரியாத கோமாளிகள் நீதிமன்ற விடயங்களில் தலையிடுவதும், நீதிமன்ற உத்தரவுகளை கேலிக்கூத்தாக்குவதும், குற்றவாளி என நீதிமன்றம் தண்டனை அறிவித்தவர்களையும், விடுதலை செய்வதும், விசாரணையின்றி தடுத்துவைப்பதும், நீதிபதிகளை வீட்டுக்கு அனுப்புவதும், விசாரணைகளை குழப்புவதும், குறிப்புகளை அழிப்பதும் நடந்துள்ளது. அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனுர, ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லிவிட்டார், நீதிமன்ற விசாரணைகளில் தான் தலையிடப்போவதில்லை என. இதில் தலையிட்டு நீதிமன்றத்தை நாடி, அவர்களுக்காக வாதாடி, விடுதலை பெற்றுக்கொடுப்பது சட்டத்தரணிகளின் பணி. அனுராவிடம் போவதைவிட இவர் போயிருக்க வேண்டிய இடம் நீதிமன்றம். ரணிலுக்காக நீதிமன்றம் போக முடியுமென்றால் ஏன் தனக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனைகளை காணாமல் விட்டார்? ஏன் தேவையில்லாத இடத்தில் முறையிடுகிறார்? தனது அரசியல் பேரம் பேசலுக்காக பாக்கி வைக்கிறாரா? நுகேகொடை பேரணியில் தொடங்கி, எங்கெங்கோ போய், அதனுடன் சம்பந்தப்படாத, தேவையற்ற பிரச்சனைகளை நுழைத்து என்னில் தவறு காண முயற்சிக்கிறீர்கள். இதில் எனது நேரத்தை செலவிட்டு வாசகர்களுக்கும் எரிச்சலை கிளப்ப நான் விரும்பவில்லை. உரையாடலுக்கு நன்றி! ஒவ்வொரு அரசு மாறும்போதும் இந்த துருப்புச்சீட்டை தூக்கிக்கொண்டு ஓடுவதும் கோரிக்கை வைப்பதும் அழைப்பு கேட்ப்பதும் தனது கதிரைக்காகவே. நீதிமன்றம் சென்று பிரச்சனைகளுக்கு தீர்வு காண இலகுவான வழி இருக்கு என்பது சில சட்ட மேதைகளுக்கு தெரிவதில்லை.

வணக்கம்உறவுகளே

3 months 1 week ago
வணக்கம் வாங்கோ. சுவிசில் இருந்து நிறைய பெண்கள் இணைந்திருந்தார்கள். சுதந்திர பறவைகள் என்று ஏதோ குழுவாக இயங்கிய ஞாபகம். அவுசிலிருந்து தூயா என்ற பிள்ளை சாப்பாட்டு கடையை கலக்கி கொண்டிருந்தா. கடைசியாக லண்டனில் இருந்து ரதி இணைந்திருந்தா. எல்லோரும் திருமண வாழ்வில் இறங்கிவிட்டால் நேரமே இருக்காது. @Niththila

பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?

3 months 1 week ago
🤣................... அக்னிக்குஞ்சு நிறுவனத்தை ஆதவன் நிறுவனம் வாங்கி விட்டதா, சொல்லவேயில்லை...................😛. எத்தனை பாபாக்கள் வந்தாலும் அத்தனையையும் பூமியும் தயக்கம் இல்லாமல் தாங்குதே..................🤣. பாபாக்கள் சொல்லும் விடயங்களை விட, அவர்கள் தங்கள் வாய்க்குள் இருந்து எடுக்கும் சிவலிங்கங்களை விட, அவர்கள் காற்றிலிருந்து வரவழைக்கும் பொருட்களை விட, இப்படியான அவர்களினால் நிகழ்த்தப்படும் எல்லா அதிசயங்களையும் விடவும் அதிசயமான விசயம் என்னவென்றால்.............. பாபாக்களின் அருள் வார்த்தைகளை கேட்டு 'நிபுணர்கள்' எனப்படுவோர் குழம்பி நிற்கின்றார்கள் என்ற செய்தியே...............😜. இது என்ன நிபுணத்துவம் என்று தெரிந்தால் நாங்களும் கற்றுத் தேரலாம் என்ற ஒரு ஆவல் தான்....................🤣.

பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?

3 months 1 week ago
அது மோடி தான் என்று வேறு பல நிபுணர்கள் நம்புகின்றனர். மகிந்தாவுக்கு சாத்திரம் சொன்ன சாத்திரி போன்றவர் தான் இந்த பல்கேரிய நாட்டு பாபா வங்கா 🤣 இந்த சாத்திரி உலகையே ஆளும் சக்தி கொண்டவராக உலகின் இறைவன் வருகிறார் என்று சொன்னது விளாடிமிர் புடினை இல்லை. ரம்பின் உக்ரைன் சமாதான முயற்சிகளைத் தடுக்கும் யூரோப் முட்டாள்கள் என்று சொன்ன ரஷ்ய மெட்வேடியெவ் வை தான் என்று வேறு பல நிபுணர்கள் சொல்கிறார்கள். வேற்றுகிரகவாசிகள் ஏற்கனவே நீண்ட காலமாக நம்மிடையே கண்டறியப்படாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்று பல்கேரிய நாட்டு பாபா வங்கா தெரித்து இருக்கின்றார். புதின், மெட்வேடியெவ், டொனால்ட் ரம் வேற்றுகிரகவாசிகளாக இருக்கலதமோ என்று பல நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து!

3 months 1 week ago
1) லெப். ஜோன்சன் (ஜெயா ஜுனைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 22.08.1963 — 30.11.1985 படையினரைத் தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச் செல்கையில் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. தமிழீழ விடுதலைப்போரில் களச்சாவான முதலாவது இசுலாமிய தமிழ் மாவீரர் இவராவார். 2) வீரவேங்கை லத்தீப் (முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம்) காத்தான்குடி, மட்டக்களப்பு. 16.11.1962 — 24.12.1986 மட்டக்களப்பு தாழங்குடாவில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 3) வீரவேங்கை நசீர் (முகமது நசீர்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 15.03.1963 — 30.12.1987 மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 4) வீரவேங்கை சாபீர் (சரிபுதீன் முகமது சாபீர்) தியாவெட்டுவான், மட்டக்களப்பு. 13.05.1988 நாசிவன்தீவில் ரெலோ தேசவஞ்சகக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு. 5) வீரவேங்கை ஜெமில் (ஜெயாத் முகமது உசைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 28.03.1968 — 05.08.1989 மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இந்தியப் படையினருடனான சமரில் வீரச்சாவு. 6) வீரவேங்கை ஆதம் (எஸ்.எம். ஆதம்பாவா) சாய்ந்தமருது, அம்பாறை. 21.12.1967 — 03.01.1990 மட்டக்களப்பு கல்முனைக்குடியில் முஸ்லிம் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு. 7) வீரவேங்கை அலெக்ஸ் (அகமது றியாஸ்) மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு. 23.01.1970 — 04.05.1990 அம்பாறை கல்முனை இறக்காமத்தில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 8 ) வீரவேங்கை கபூர் (முகமது அலியார் முகமது சலீம்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 11.06.1990 மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு. 
9) வீரவேங்கை தாகீர் (முகைதீன்பாவா அன்சார்) திருகோணமடு, பொலன்னறுவை. 29.04.1972 — 11.06.1990 மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 
10) வீரவேங்கை அன்வர் 15.06.1990 அம்பாறை பாணமையில் விடுதலைப் புலிகளின் தாவளத்தை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 11) வீரவேங்கை தௌவீக் (இஸ்மாயில்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 12. வீரவேங்கை ஜிவ்றி (முகம்மது இலியாஸ்) 4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு. 05.03.1974 — 13.06.1990 திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 13) வீரவேங்கை அர்ச்சுன் (சொந்தப்பெயர் தெரியவில்லை)ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 14.06.1990 திருகோணமலை திருமலை 3ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 14) வீரவேங்கை ஜலீம் (முகமது இஸ்மாயில் மன்சூர்) ஏறாவூர், மட்டக்களப்பு. 01.09.1990 முல்லைத்தீவில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவு. 15) வீரவேங்கை மஜீத் (முகமது இஸ்காக் கூப்சேக்அலி) மீராவோடை, மட்டக்களப்பு. 18.06.1990 வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 16) வீரவேங்கை ஜின்னா (லெப்பைதம்பி செய்னூர்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 20.10.1970 — 19.06.1990 அம்பாறை பொத்துவில் கொட்டுக்கலவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 
17) வீரவேங்கை தர்சன் (அப்துல்காதர் சம்சி) ஊரின் பெயர் தெரியவில்லை,13.06.1990 18) வீரவேங்கை நகுலன் (ஜுனைதீன்) அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை. 26.06.1988 அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 19) வீரவேங்கை அகஸ்ரின் (சம்சுதீன் அபுல்கசன்) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.08.1971 — 27.10.1988 அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆயுதகுழு மோதல் வீரச்சாவு. 20) வீரவேங்கை நசீர் (சம்சுதீன் நசீர்) ஒலுவில், அம்பாறை. 19.02.1960 — 17.02.1989 மட்டக்களப்பு நிந்தவூரில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் ஆயுதகுழுவால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு. 21) வீரவேங்கை பாறூக் (நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை) அக்கரைப்பற்று, அம்பாறை. 08.01.1973 — 22.06.1989 அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை ஈ.என்.டி.எல்.எவ்வினரின் முற்றுகையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 22) வீரவேங்கை அஸ்வர் (ஜபார் ஜாபீர்) அட்டாளைச்சேனை, அம்பாறை. 06.12.1989 பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எவ் ஆயுதகுழு தாக்குதலின்போது வீரச்சாவு. 23) வீரவேங்கை சியாத் (மீராசாகிபு காலிதீன்) சாய்ந்தமருது, அம்பாறை. 18.08.1972 — 06.12.1989. பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எஃவ் அயுதகுழு பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 24) வீரவேங்கை சந்தர் எ சுந்தர் (அகமது லெப்பை செப்லாதீன்) வேப்பானைச்சேனை, அம்பாறை. 25.02.1973 — 25.05.1990 அம்பாறை காரைதீவு பகுதியில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 25) வீரவேங்கை ராவ் (முகமது ரவீக்) பொத்துவில், அம்பாறை. 15.06.1990 அம்பாறை இலகுகல்லில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 
26) வீரவேங்கை இராமன் (மாப்பிள்ளை லெப்பை அல்வின்) இறக்காமம், அம்பாறை. 16.06.1990 மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 27) வீரவேங்கை கனியா (அபுசாலி புகாரி) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.07.1990 
28) வீரவேங்கை கமால் மட்டக்களப்பு 07.06.1990 29) வீரவேங்கை கசன் (ஆதம்பாவா கசன்) மூதூர், திருகோணமலை. 05.11.1989 முல்லைத்தீவு மாங்குளத்தில் தவறுதலாக ஏற்பட்ட வெடிநேர்ச்சியின்போது வீரச்சாவு. 
30) வீரவேங்கை சலீம் 03.07.1987 அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 31) வீரவேங்கை ஜெகன் (ஆப்தீன் முகமது யூசுப்) குச்சவெளி, திருகோணமலை. 08.04.1972 — 15.06.1990 திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 32) வீரவேங்கை நியாஸ் மூதூர், திருகோணமலை. 17.06.1990 --> மட்டக்களப்பில் சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்ட உலங்குவானூர்தி தாக்குதலில் வீரச்சாவு. 33) வீரவேங்கை கலையன் (கச்சுமுகமது அபுல்கசன்) முதலாம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. 14.06.1990 (அறியில்லா இடத்தில்) சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 34) வீரவேங்கை டானியல் (கனீபா முகமது ராசீக்) திருகோணமலை. 23.06.1970 — 22.06.1990 திருகோணமலை திருமலை 2ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 35) வீரவேங்கை நிர்மல் (அப்துல் நசார்) புடவைக்கட்டு, திருகோணமலை. 19.01.1972 — 27.07.1990 திருகோணமலை திருமலை திரியாயில் ஏற்பட்ட வெடிநேர்ச்சியில் வீரச்சாவு. 36) வீரவேங்கை உஸ்மான் கிழங்கு (அப்துல்காதர் சாதிக்) யாழ்ப்பாணம். 10.05.1966 — 25.08.1986 யாழ். கோட்டையில் சிறிலங்கா படையினருடனான முற்றுகைச் சமரில் வீரச்சாவு. 37)வீரவேங்கை குபீர் அக்கரைப்பற்று, அம்பாறை. 15.06.1990 அம்பாறை பாணாமையில் விடுதலைப் புலிகளின் முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 38) வீரவேங்கை பர்ஸாத் செட்டிக்குளம், வவுனியா 10.06.1990 (பிறந்த திகதி சம்பவம் தெரியவில்லை) 
39)வீரவேங்கை ரகுமான் 08.05.1986 வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 40) வீரவேங்கை ரகீம் 08.05.1986 ( பிறந்த திகதி சம்பவம் தெரியவில்லை) 41) வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி) முள்ளியான், கட்டைக்காடு, யாழ்ப்பாணம் 06.05.1978 - 26.06.1999 மன்னார் பள்ளமடு பகுதியில் ரணகோச நடவடிக்கைப் படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவு. 42) வீரவேங்கை பர்சாண் (அப்துல்காதர் சம்சுதீன்) காக்கையன்குளம், வவுனியா 04.05.1969 - 15.06.1990 வவுனியா காமினி வித்தியாலயத்தில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 43) வீரவேங்கை நசீம் (கஜன்) (அப்துல்மானாப் முகமது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 மூதூர் ஆலிம்சேனைப்பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச்சூட்டில் வீரச்சாவு. 44) ஈரோஸ் மாவீரர் நியாஸ் மன்னார் 11.07.1986 தமிழீழக் கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான்குண்டு வீச்சில் வீரச்சாவு 45) ஈரோஸ் மாவீரர் கஜன் எ நசீம் (அப்துல் மானாஃப் முகம்மது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 மூதூர் ஆலிம்சேனைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 46) ஈரோஸ் மாவீரர் கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு நடாத்தப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 47) ஈரோஸ் மாவீரர் ரசிட் இயற்பெயர் அறியில்லை திருகோணமலை 26.08.1989 திருகோணமலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலுடனான மோதலில் வீரச்சாவு 48) ஈரோஸ் மாவீரர் மிஸ்வின் இயற்பெயர் அறியில்லை அக்கரைப்பற்று, அம்பாறை 09.11.1989 49) வீரவேங்கை அருள் (மேலதிக விபரம் கிடைக்கப்பெறவில்லை) மன்னார்
 50) வீரவேங்கை மருதீன் எ முகமது (சந்திரயோகு மருத்தீன்) உயிர்த்தராசன்குளம், மன்னார் 25.10.1965 - 15.10.1987 யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 51) வீரவேங்கை பதூர்தீன் எ குஞ்சான் (காலித்தம்பி காதம்பவா) அக்கரைப்பற்று, அம்பாறை. 16.10.1963 - 07.06.1987 52) வீரவேங்கை கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வீரச்சாவு. 53) வீரவேங்கை குமார் (சேதுதாவீது காசிம்) இரத்தினபுரம், கிளிநொச்சி. 26.11.1988 யாழ்ப்பாணம் காரைநகரில் இந்தியப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 54) வீரவேங்கை கலீல் (கலீல் ரகுமான்) தோப்பூர், திருகோணமலை. 27.04.1988 யாழ்ப்பாணம் கப்பூது வெளியில் இந்தியப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு. 55) வீரவேங்கை அசீம் அஷாத் ( திகதி. இடம் தெரியவில்லை) 56) 2ம் லெப். சாந்தன் (நைனா முகைதீன் நியாஸ்) நிலாவெளி, திருகோணமலை. 17.05.1972 — 06.02.1990 திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ.என்.டி.எல்எஃவ் கும்பலின் முகாமை தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு நேர்ச்சியில் வீரச்சாவு. 57) லெப். ஜெமில் (கரீம் முஸ்தபா) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 58) லெப். ராஜிவ் எ ரகீம் எ நஜீம் (காசிம் துலானி) பட்டாணிச்சூர், புளியங்குளம், வவுனியா 15.09.1990 வவுனியாவில் நெஞ்சுவலி காரணமாக சாவு. 59) லெப் அருள் (யூசப் ஜாசிர்) உப்புக்குளம், வவுனியா 14.05.1975 - 05.11.1995 யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் எதிர்ச்சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு. 60) லெப். ஈழநாதன் எ ஈழமாறன் (காதர்முகைதீன் சருதீன்) ஒட்டருத்தகுளம், வவுனிக்குளம், முல்லைத்தீவு 01.10.1978 - 07.04.1998 கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் அவர்களது உடன்பிறப்பு ஜெயசிக்குறுய் காலத்தில் முல்லைத்தீவு ஒலுமடுவில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது காயச்சாவு. 
61) கப்டன் பாறூக் (அகமதுலெப்பை முகமது கனீபா) அக்கரைப்பற்று, அம்பாறை. 12.06.1959 — 07.01.1987 யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. 
62) கப்டன் குட்டி எ தினேஸ் (முகமது அலிபா முகமது கசன்) பேராறு, கந்தளாய், திருகோணமலை. 28.04.1987 திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 
63) கப்டன் நசீர் சாளம்பைக்குளம், வவுனியா 00.11.1990 64 வீரவேங்கை தமிழ்மாறன் (அப்துல் ரகுமான் நிமால்) ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு 01.01.1983 - 19.10.2000 யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு. 65) வீரவேங்கை ரவீஸ் ராமநாதபுரம், கிளிநொச்சி. 08.08.2006 66) வீரவேங்கை கணேசன் (அப்துல்ஜபார் கணேசன்) யாழ்ப்பாணம் 19.03.2007 யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 67) கடற்புலி லெப் கேணல் முல்லைமகள் (முகைதீன் ஜெரீனா-பெண்புலி) 50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு, முல்லைத்தீவு. 19.06.2007 யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 68) கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் (காதர்முகைதீன் நஜீம்கான்) முல்லைத்தீவு 29.09.2008 அக்கராயன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமரின்போது வீரச்சாவு. இவருடைய உடன்பிறப்பு ஒருவரும் மாவீரர். அவருடைய பெயர் லெப். ஈழமாறன் என்பதாகும். 69) லெப். கேணல் அப்துல்லா (முகைதீன்) காத்தான்குடி, மட்டக்களப்பு 02.04.2009 ஆனந்தபுரம் முற்றுகைச் சமரின்போது வீரச்சாவு. இவர் லெப்.ஜுனைதீன் அவர்களின் ( ஒரு முஷ்லிம் பெண் மாவீரர், 68, ஆண்மாவீரர்கள் உட்பட 69 முஷ்லிம் மாவீரர்கள் வீரச்சாவை தழுவியதாக அறியமுடிகிறது) -அரியம் -25/11/2025-

பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா?

3 months 1 week ago
மேற்கு… என்றுதான் உண்மையை சொல்லியிருக்கு. இப்போது, எந்த ஊடகமும் நடுநிலையான செய்திகளை வெளியிடுவது இல்லை.

எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71

3 months 1 week ago
எம் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71 வணிகமும் வீரமும் வான்நோக்கும் கடலலையும் மணி ஓசையும் மனைகளும் உயர்ந்து அணிகலனாய்க் கொண்ட அழகிய வல்வெட்டித்துறையில் தணியாத தாகமும் தமிழீழ மண்மீட்பும் பணியாகக் கொண்டே பகலவன் உதித்தனன்! கார்த்திகை இருபத்தாறு கார்மேகம் சூழ ஆர்ப்பரிக்கும் அலைநடுவே ஆதவன் வடிவான பார்வதியின் மைந்தன் பிரபாகரன் என்னும் கீர்த்திகொள் நாமத்தைக் கிரீடமாய்க் கொண்டு தீர்க்கதரசி திருவுளம்கொண்டு தாய்மடியில் தவழ்ந்ததன்று! மேதகு என்றே மேதினியார் போற்றும் மாதவ மைந்தன் மண்ணில் மலர்ந்து பாதகம் செய்தோரின் படையணி அழித்து வேதனை தீர்க்கும் வீர காவியத்தில் சாதனைகள் கண்ட சரித்திர நாயகன்! பாசத்தில் தந்தை பழக்கத்தில் அண்ணன் நேசக் கரம்நீட்டும் நேர்மையின் வடிவம் ரோசப் பரம்பரையில் ராசியாய் வந்துதித்து வாசம் வீசிய வண்ணமலர் மூன்றை மோசத் துரோகத்தில் முழுமையாய் தொலைத்தவர்! அன்னைத் தமிழின் அழகு தெரிந்தவர் முன்னைத் தமிழன் முரசொலி அறிந்தவர் வன்னி மண்ணின் வரலாறாய் வாழ்கின்றார் தன்னுள் நிறைந்த தம்பி தங்கையரை வின்மீன் வடிவில் விண்ணெங்கும் காண்கின்றார்! தேசவிடுதலைக்காய் தியாகங்கள் செய்தீர் வாழி! தேசமக்களின் தெய்வம் ஆனீர் வாழி! தேசக்காற்றின் சிந்தையில் நிறைந்தீர் வாழி! தேசியத்தை உயிராக நினைத்தீர் வாழி! தேசியத்தலைவராகத் திக்கெட்டும் திகழ்கின்றீர் வாழி! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71

3 months 1 week ago
தலைவன் மேதகு பிரபாகரனுக்கு தேசவிடுதலைக்காய் தியாகங்கள் செய்தீர் வாழி! தேசமக்களின் தெய்வம் ஆனீர் வாழி! தேசக்காற்றின் சிந்தையில் நிறைந்தீர் வாழி! தேசியத்தை உயிராக நினைத்தீர் வாழி! தேசியத்தலைவராகத் திக்கெட்டும் திகழ்கின்றீர் வாழி! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!🎂"

தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!

3 months 1 week ago
தலைவன் மேதகு பிரபாகரனுக்கு தேசவிடுதலைக்காய் தியாகங்கள் செய்தீர் வாழி! தேசமக்களின் தெய்வம் ஆனீர் வாழி! தேசக்காற்றின் சிந்தையில் நிறைந்தீர் வாழி! தேசியத்தை உயிராக நினைத்தீர் வாழி! தேசியத்தலைவராகத் திக்கெட்டும் திகழ்கின்றீர் வாழி! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!🎂"

தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!

3 months 1 week ago
அண்ணை 71 ‘அண்ணை’ என்கிற அந்த வார்த்தை. அதை உச்சரிக்கும்போதே தேகமெல்லாம் சிலிர்க்கும். தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த வரலாறும் இந்த ஒரேஒரு வார்த்தைக்குள் அடக்கம்..! “அண்ணைக்காக போறன்” “அண்ணைய பார்த்துக்கொள்ளுங்கோ” “அண்ணைமேல சத்தியமா” “அண்ணை பார்த்துக்கொள்வார்” “அண்ணையே சொல்லிட்டார்” இப்படி எங்கள் வாழ்க்கையே அண்ணைதானே..! இந்த உலகத்தில் அண்ணையைப் போல கொள்கைப் பற்றுக்கொண்ட ஒரு தலைவன் உண்டா? அண்ணையைப் போல நிதானம்மிக்க ஒரு மனிதன் உண்டா? அண்ணையைப் போல உறுதிகொண்ட இன்னொரு வழிகாட்டி உண்டா? யாராலும் மிரட்டி அண்ணையைப் அடக்க முடியவில்லை. பேரம்பேசி பணியவைக்க முடிந்திருக்கவில்லை. பணத்தைக் காட்டி, இன்னபிற சலுகைகளைக் காட்டி அவரை விலைக்குவாங்க முடியவில்லை. அதுதான் அண்ணை..! எல்லாவற்றையும்விட அண்ணை எங்களுக்குத் தந்த பாதுகாப்பு இருக்கிறதே..! இந்த உலகத்தில் எங்குமே கிடைக்காத பாதுகாப்பு. சாமம் 3 மணிக்குகூட பெண்கள் தன்னந்தனியாக வீதியில் போகமுடியும். யாரும் கேட்கமாட்டார்கள். கத்தியைக் காட்டி மிரட்டுவார்களோ, நகைகளை அறுப்பார்களோ, வாகனத்தில் வந்து கடத்துவார்களோ என எந்த அச்சமும் இல்லாத காலம் அது. போதைப்பொருள் கடத்தல் - கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. வீடுபுகுந்து தாக்குவது.. பெற்றோல் குண்டு வீசுவது.. ஆளைவிட்டு மிரட்டுவது.. கட்டப்பஞ்சாயத்து.. இதெல்லாம் “கிலோ என்ன விலை?” என்று கேட்ட காலம் அது. வீதி ஒழுங்கை உங்களால் மீற முடியுமா அன்று? காவல்துறைக்கு லஞ்சம் கொடுக்க முடியுமா? குற்றம் செய்துவிட்டு தப்ப முடியுமா? எதுவுமே முடியாது. ஒற்றைப் பார்வையாலேயே ஒரு தேசத்தைக் கட்டியாண்டவர் அண்ணை. அது அண்ணையின் காலம்..! பொற்காலம்! அந்தக் காலத்தில் அண்ணையின் பாதுகாப்பின்கீழ் வாழக்கிடைத்ததே தமிழர்களுக்குப் பெரும் பாக்கியம். அதைவிட வேறென்ன பெருமை இருந்துவிடப் போகிறது எமக்கு..? அண்ணையின் புகழ் என்றென்றும் நீடித்திருக்கும்! அண்ணைக்கு வாழ்த்துக்கள்..!❤️ ~~ யாரோ எழுதிய வரிகள்...🙏