Aggregator

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததா? மொழியியலாளர்கள் சொல்வது என்ன?

3 months 1 week ago
கமல்ஹாசன் சொல்வது போல் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததா? மொழியியலாளர்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 4 ஜூன் 2025, 01:58 GMT புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர் தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. ஆனால், எந்த மொழியில் இருந்து எந்த மொழி பிறந்தது எனக் கூறுவது சிக்கலானது என்கிறார்கள் மொழியியலாளர்கள். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து விரைவில் வெளியாகவுள்ள 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தபோது, அந்த விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் பங்கேற்றிருந்தார். கமல்ஹாசன் அவரைப் பற்றிப் பேசும்போது, "ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என் பேச்சைத் தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்" என்று பேசியிருந்தார். சிவராஜ்குமார் இதைக் கேட்டுப் புன்னகைத்தார். ஆனால், கமல்ஹாசனின் கன்னட மொழித் தோற்றம் குறித்த இந்தக் கருத்து கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடக முதலமைச்சரில் துவங்கி, கன்னட அமைப்புகள் வரை இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இருந்தபோதும், தனது பேச்சுக்காகப் பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன். இப்போது இந்தப் பிரச்னையின் காரணமாக 'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் வெளியாகாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்றிருக்கிறது. திராவிட மொழிகளில் பல மொழிகள் அல்லது அனைத்து மொழிகளும் தமிழில் இருந்து தோன்றியவை என்ற கருத்து புதிதானதல்ல. நீண்ட காலமாகவே தமிழ்த் தேசிய கருத்தாளர்கள் இந்தக் கருத்தை முன்வைத்து வருகின்றனர். ஆனால், திராவிட மொழிக் குடும்பத்தின் பிற மொழிகளைச் சேர்ந்தவர்கள் இதை ஏற்பதில்லை. திராவிட மொழிகளுக்கு தமிழ் தாய் மொழியா, சகோதர மொழியா? திராவிட மொழிகள் குறித்த ஒரு விரிவான ஒப்பீட்டு ஆய்வை முதன்முதலில் செய்தவராக 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமயப் பரப்பாளரும் மொழியியலாளருமான ராபர்ட் கால்ட்வெல்லை குறிப்பிடலாம். இவருடைய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages) நூல் திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகளை முறையாக ஒப்பிட்டு, சில கருத்துகளை முன்வைத்தது. "தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள், இந்தோ - ஆரிய மொழிகளில் இருந்து தோன்றியவை அல்ல. அவை தனித்த, திராவிடம் எனும் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை" என்ற கருத்தை கால்ட்வெல் முன்வைத்தார். மேலும், தொல் திராவிட மொழி என்ற மொழியில் இருந்தே திராவிட மொழிகள் தோன்றின என்றும் இந்த தொல் திராவிட மொழியோடு, தமிழே கூடுதல் நெருக்கம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார் ராபர்ட் கால்ட்வெல். ஆனால், 20ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில் தமிழ் திராவிட மொழிகளுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்ற கருத்தை தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் முன்வைத்தனர். இதற்குப் பிறகு தொடர்ந்து இந்தக் கருத்து ஒரு சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், மொழியியல் ஆய்வாளர்கள் இதுகுறித்து மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனேயே பேசுகின்றனர். 'அவகாசம் தராமல் அடித்து விரட்டினர்' - அனகாபுத்தூர் மறுகுடியமர்வால் கொந்தளிப்பில் மக்கள் - பிபிசி கள ஆய்வு3 ஜூன் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி என்பதையும் தனித்துவமான இலக்கியங்களைக் கொண்டது என்பதையும் ஏற்கும் இவர்கள், ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியது என்பதை ஏற்பதில்லை. செக் நாட்டைச் சேர்ந்த இந்திய மொழியியல் அறிஞரான கமில் ஸ்வலபில், திராவிட மொழிகளின் தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, "கி.மு. 8ஆம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டுக்குள் தொல் தென் திராவிட மொழிகள் சிதற ஆரம்பித்தன. கி.மு. நான்காம் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் நூற்றாண்டுக்குள் தமிழ் ஓர் இலக்கிய மொழியாக நிலை பெற ஆரம்பித்தது என்ற கருத்தை திராவிட மொழிகளின் வரலாற்றாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். தமிழும் கன்னடமும் பிரியும் இறுதிக் கட்டத்தில், பழங்கால தமிழ் இலக்கியத்தின் ஆரம்பக் கட்டத்தில், செய்யுள் என்ற வடிவத்தை உருவாக்குவதில் இலக்கணவாதிகள் கவனம் செலுத்தினார்கள்," எனத் தன்னுடைய The Smile of Murugan நூலில் குறிப்பிடுகிறார். இவரது இந்தப் புத்தகத்தில், "தமிழும் கன்னடமும் பிரியும் இறுதிக் கட்டத்தில்" என்ற சொற்தொடர் மட்டுமே, தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்ற பொருளைத் தருகிறது. ஆனால் தமிழைத் தவிர, பிற முக்கியமான திராவிட மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றின் துவக்க கால இலக்கியங்கள் வேறு ஏதோ மொழியில் இருக்கும் இலக்கியங்களைப் பிரதி செய்தவை அல்லது முன்மாதிரியாக எடுத்துக் கொண்டவை என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர். நரசிம்மாச்சார்யா எழுதிய கன்னட மொழியின் வரலாறு (History of Kannada Language) என்ற நூல், அந்த மொழியின் தோற்றம் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், கன்னட மொழி தமிழுடன் கூடுதல் நெருக்கம் கொண்டது என்று குறிப்பிடுகிறது. "கன்னடம் தமிழோடு நெருங்கிய தொடர்புடையது. இலக்கண ரீதியாக இந்த இரு மொழிகளுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. தமிழில் இருந்து கன்னடம் வேறுபடுவதைவிட, தெலுங்கு மொழியிடம் இருந்து கூடுதலாக வேறுபடுகிறது" என்கிறார் ஆர். நரசிம்மாச்சார்யா. தொல் திராவிட மொழியில் இருந்தே, பிற திராவிட மொழிகள் தோன்றியதாக ஒரு கருதுகோள் வைக்கப்படும் நிலையில், அந்தத் தொல் திராவிட மொழிக்கு நெருக்கமான மொழி தமிழ்தான் என்கிறார் நேஷனல் ஃபோக்லோர் சப்போர்ட் சென்டரின் இயக்குநரான எம்.டி. முத்துக்குமாரசாமி. 'தமிழில் பிறந்ததே கன்னடம்': கமல் பேச்சு பற்றி கன்னட நடிகர் சிவராஜ்குமார் கூறியது என்ன? திமுகவை கடுமையாக விமர்சித்துவிட்டு கூட்டணியில் சேர்ந்தது ஏன்? கமல்ஹாசன் கூறியது என்ன? 5 ஆண்டுகளில் 100 படங்கள் - தமிழ்த் திரையுலகில் இளையராஜாவின் வருகை எப்படி இருந்தது? எம்ஜிஆர் படத்தில் இருட்டடிக்கப்பட்ட கருணாநிதி பெயர் - கோவையிலிருந்து கோபத்துடன் புறப்பட்ட கதை "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் பிற மொழிகள் தமிழில் இருந்து தோன்றியவை எனக் குறிப்பிடவில்லை. ஆனால், அதற்குப் பதிலாக தொல் திராவிட மொழி என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். அந்தத் தொல் திராவிட மொழிக்கு நெருக்கமான மொழி, தமிழ்தான் என்றார். அவரைப் பொறுத்தவரை, எல்லா திராவிட மொழிகளும் சகோதர மொழிகள் எனக் குறிப்பிட்டார். இவருக்குப் பிறகு வந்த மொழியியலாளர்கள் இந்த தொல் திராவிட மொழிகளை வடக்கு தொல் திராவிடம், தெற்கு தொல் திராவிடம் என்பன உள்படப் பல வகைகளாகப் பிரித்து ஆராய்ந்தனர்," என்று விளக்கினார் எம்.டி.முத்துக்குமாரசாமி. மேலும், "திராவிட வேர்ச்சொல் அகராதி ஒன்று தொகுக்கப்பட்டது. இந்த வேர்ச்சொல் அகராதியில் இடம்பெற்ற பெரும்பாலான சொற்களின் மூலம் தமிழாகவே இருந்தது. அது தவிர, கன்னட மொழியில் உரைநடையே 10ஆம் நூற்றாண்டில்தான் துவங்குகிறது. ஆகவே இப்போதைய கேள்வி, தமிழுக்கு கன்னடம் அக்காவா, அம்மாவா என்பதுதான். அக்கா என்றால் எல்லோரும் ஏற்கிறார்கள். ஆனால், இந்த அக்கா மொழி, அம்மா அளவுக்கு மூத்த மொழி என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது," என்றும் அவர் விவரித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகன் தமிழிலில் இருந்து பிற திராவிட மொழிகள் தோன்றின என்று கூறுவது சரியான கருத்தல்ல என்கிறார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில், "மூல திராவிட மொழி என்ற ஒன்றிலிருந்து பிற மொழிகள் அனைத்தும் பிரிந்திருக்க வேண்டும் என்னும் மொழியியலாளர் கருத்தையே நானும் ஏற்கிறேன். அப்படியானால் அந்த மூலதிராவிட மொழி எங்கே என்று கேட்கின்றனர். ஒரு கல்லை உடைத்தால் அது பல துண்டுகளாகச் சிதறிவிடும். மூலக்கல் எங்கே என்று கேட்க முடியாது. மொழியிலும் அப்படித்தான். தமிழில் இல்லாத மூல திராவிட மொழியின் சிற்சில கூறுகளைப் பிற திராவிட மொழிகள் தக்க வைத்திருக்கின்றன. ஆகவே இவற்றைச் சகோதர மொழிகள் என்று சொல்வது சரியானது. மேலும் இன்றைய அரசியல் சூழலில் இந்தத் 'தாய்-சேய் உறவு' என்பதை வலியுறுத்துவது நன்மை பயக்காது. எங்கள் மொழியில் இருந்தே உங்கள் மொழி பிறந்தது என்று பிறரை நோக்கிச் சொல்வது ஒரு வகையில் ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது" என்கிறார் அவர். தமிழ்நாட்டில் உள்ள பல மொழியியலாளர்கள் இந்தச் சர்ச்சையில் இருந்து விலகியிருக்கவே விரும்புகிறார்கள். எதிர்பார்த்தபடியே கன்னட மொழியியலாளர்கள் இந்தக் கருத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள். "தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்பது முழுக்க முழுக்கத் தவறான கருத்து. தமிழும் கன்னடமும் சகோதர மொழிகள். ஒரு மூத்த மொழியில் இருந்து பிறந்த மொழிகள். தொல் திராவிட மொழியில் இருந்துதான் கன்னடம் தோன்றியதே தவிர, தமிழில் இருந்து தோன்றவில்லை," என்கிறார். இந்த இரு மொழிகளிலும் தொல் திராவிட மொழியின் வார்த்தைகள் ஒரே மாதிரி இருப்பதே இதற்குக் காரணம். "உதாரணமாக, காதைக் குறிப்பிட கன்னடத்தில் கிவி என்கிறோம். தமிழில் செவி என்கிறார்கள். இந்த இரண்டு சொற்களும் ஒரே தொல் திராவிட மொழியில் இருந்து உருவான இருவேறு ஒலிப்புகள். ஆகவே, தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்பது முழுக்க முழுக்கத் தவறானது" என்கிறார் கன்னட மொழி வளர்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவரான பேராசிரியர் எஸ்.ஜி. சித்தராமைய்யா. திராவிட மொழிகள் தென் திராவிட மொழிகள், தென் மத்திய திராவிட மொழிகள், மத்திய திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. தென் திராவிட மொழிகளில் தமிழ், கன்னடம், மலையாளம், இருளா, கொடவா, தோடா, கோட்டா, படகா, கொரகா, துளு உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்றுள்ளன. தென் மத்திய திராவிட மொழிப் பிரிவில் தெலுங்கு, கோண்டி, குயி, கோயா உள்ளிட்ட மொழிகளும் மத்திய திராவிட மொழிப் பிரிவில் கோலமி, துருவா, ஒல்லரி, நாய்க்கி ஆகிய மொழிகளும் வட திராவிட மொழிப் பிரிவில் குருக், மால்டோ, ப்ராஹுவி ஆகிய மொழிகளும் இடம்பெற்றுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgq3knznj01o

இலங்கைக்கு 12 மில்லியன் ரூபா பெறுமதியான உயர் தர கண்காணிப்பு ட்ரோன்கள், கடல் கண்காணிப்பு உபகரணங்களை வழங்கவுள்ள அவுஸ்திரேலியா

3 months 1 week ago
04 JUN, 2025 | 09:59 AM இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க, அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர் செயல்திறனுடைய ஒரு Stabicraft ரக ரோந்துப் படகை வழங்கியுள்ளதுடன் 12 மில்லியன் ரூபா பெறுமதியான உயர் தர கண்காணிப்பு ட்ரோன்கள், கடல் கண்காணிப்பு உபகரணங்களையும் வழங்க திட்டமிட்டுள்ளது. கடல்சார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பானது, பல்வேறு வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பிராந்திய கடல்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ‘Disi Rela’ கூட்டு கடல்சார் பாதுகாப்புத் திட்டத்தின் அடுத்த கட்ட அறிமுகத்தின் மூலம் ஒரு வலுவான புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளது. கடந்த வருடத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, விரிவாக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது, எமது திறன்களில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க, அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர் செயல்திறனுடைய ஒரு Stabicraft ரக ரோந்துப் படகை வழங்கியுள்ளது. ‘Disi Rela’ திட்டத்தின் கீழ் எதிர்கால முயற்சிகளின் ஒரு அங்கமாக, 12 மில்லியன் ரூபா பெறுமதி கொண்ட உயர் தர கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் கடல் கண்காணிப்பு உபகரணங்களை வழங்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இது இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட கடல் பிரதேசங்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும். ‘Disi Rela’ என்பது ‘Keeping a watchful eye over the maritime environment’ (கடல் சூழலைக் கண்காணித்தல்) எனப் பொருள்படும். இது சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையின் கூட்டு அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இரு நாடுகளும் உளவுத்தகவல்களை பகிர்ந்தறிதல், மேம்பட்ட உபகரணங்களின் விநியோகம், சமூக விழிப்புணர்வு முயற்சிகள் மற்றும் திறன் அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் மனிதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீன்பிடி போன்ற கடல்சார் குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடல்சார் பாதுகாப்பை இணைந்து மேற்கொள்கின்றன. இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகக் காணப்படும் சமூக ஈடுபாட்டை வலியுறுத்தி கருத்துத் தெரிவித்த இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் ராஜபிரிய சேரசிங்க, “ ‘Disi Rela’ என்பது வெறுமனே தொழில்நுட்பம் அல்லது ரோந்து நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாகும். இது இரு நாடுகளுக்கிடையேயும், சமூகங்களுடனும் ஏற்படும் ஒத்துழைப்பின் வலிமையை பிரதிபலிக்கிறது. எமது கடல்களை பாதுகாப்பதில் ஒவ்வொரு இலங்கையருக்கும் பங்கு உள்ளது.” என்றார். இந்த தொடர்ச்சியான ஒத்துழைப்பை பாராட்டி கருத்து வெளியிட்ட, Joint Agency Task Force Operation Sovereign Borders (சுயாதிபத்திய எல்லைகள் நடவடிக்கைக்கான கூட்டு முகவர் நிறுவன) கொமாண்டர் ரியர் அட்மிரல் Brett Sonter, (Royal Australian Navy), “ ‘Disi Rela’ திட்டத்தின் இந்த புதிய கட்டமானது, கடல்சார் பாதுகாப்பு எனும் பொதுவான பொறுப்பை எவ்வளவு தீவிரமாக இருநாடுகளும் எடுத்துக் கொள்கின்றன என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இந்த புதிய வசதிகள் எமது அடைவுகளை விரிவுபடுத்துவதோடு, இதன் மூலம் எமது பிராந்தியத்தை பாதுகாப்பதிலான அர்ப்பணிப்பைநாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.” என்றார். பொதுமக்கள் கடல்சார்ந்த சந்தேகமான நடவடிக்கைகள் பற்றி தெரிந்தால், 24/7 மணி நேரமும் செயற்படும் 106 எனும் பிரத்தியேக அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக முறையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். இந்த கூட்டு முயற்சியானது அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதோடு, சர்வதேச ரீதியிலான கடல்சார் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பாதுகாப்பான மற்றும் நிலையான கடல்சார் பிராந்தியத்தை உருவாக்க உதவுகின்றது. https://www.virakesari.lk/article/216525

இலங்கைக்கு 12 மில்லியன் ரூபா பெறுமதியான உயர் தர கண்காணிப்பு ட்ரோன்கள், கடல் கண்காணிப்பு உபகரணங்களை வழங்கவுள்ள அவுஸ்திரேலியா

3 months 1 week ago

04 JUN, 2025 | 09:59 AM

image

இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க, அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர் செயல்திறனுடைய ஒரு Stabicraft ரக ரோந்துப் படகை வழங்கியுள்ளதுடன் 12 மில்லியன் ரூபா பெறுமதியான உயர் தர கண்காணிப்பு ட்ரோன்கள், கடல் கண்காணிப்பு உபகரணங்களையும் வழங்க திட்டமிட்டுள்ளது.

கடல்சார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பானது, பல்வேறு வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பிராந்திய கடல்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ‘Disi Rela’ கூட்டு கடல்சார் பாதுகாப்புத் திட்டத்தின் அடுத்த கட்ட அறிமுகத்தின் மூலம் ஒரு வலுவான புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளது.

கடந்த வருடத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, விரிவாக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது, எமது திறன்களில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க, அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர் செயல்திறனுடைய ஒரு Stabicraft ரக ரோந்துப் படகை வழங்கியுள்ளது. ‘Disi Rela’ திட்டத்தின் கீழ் எதிர்கால முயற்சிகளின் ஒரு அங்கமாக, 12 மில்லியன் ரூபா பெறுமதி கொண்ட உயர் தர கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் கடல் கண்காணிப்பு உபகரணங்களை வழங்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இது இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட கடல் பிரதேசங்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும்.

‘Disi Rela’ என்பது ‘Keeping a watchful eye over the maritime environment’ (கடல் சூழலைக் கண்காணித்தல்) எனப் பொருள்படும். இது சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையின் கூட்டு அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இரு நாடுகளும் உளவுத்தகவல்களை பகிர்ந்தறிதல், மேம்பட்ட உபகரணங்களின் விநியோகம், சமூக விழிப்புணர்வு முயற்சிகள் மற்றும் திறன் அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் மனிதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீன்பிடி போன்ற கடல்சார் குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடல்சார் பாதுகாப்பை இணைந்து மேற்கொள்கின்றன.  

இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகக் காணப்படும் சமூக ஈடுபாட்டை வலியுறுத்தி கருத்துத் தெரிவித்த இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் ராஜபிரிய சேரசிங்க, 

“ ‘Disi Rela’ என்பது வெறுமனே தொழில்நுட்பம் அல்லது ரோந்து நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாகும். இது இரு நாடுகளுக்கிடையேயும், சமூகங்களுடனும் ஏற்படும் ஒத்துழைப்பின் வலிமையை பிரதிபலிக்கிறது. எமது கடல்களை பாதுகாப்பதில் ஒவ்வொரு இலங்கையருக்கும் பங்கு உள்ளது.” என்றார்.

இந்த தொடர்ச்சியான ஒத்துழைப்பை பாராட்டி கருத்து வெளியிட்ட, Joint Agency Task Force Operation Sovereign Borders (சுயாதிபத்திய எல்லைகள் நடவடிக்கைக்கான கூட்டு முகவர் நிறுவன) கொமாண்டர் ரியர் அட்மிரல் Brett Sonter, (Royal Australian Navy), “ ‘Disi Rela’ திட்டத்தின் இந்த புதிய கட்டமானது, கடல்சார் பாதுகாப்பு எனும் பொதுவான பொறுப்பை எவ்வளவு தீவிரமாக இருநாடுகளும் எடுத்துக் கொள்கின்றன என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இந்த புதிய வசதிகள் எமது அடைவுகளை விரிவுபடுத்துவதோடு, இதன் மூலம் எமது பிராந்தியத்தை பாதுகாப்பதிலான அர்ப்பணிப்பைநாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.” என்றார்.

பொதுமக்கள் கடல்சார்ந்த சந்தேகமான நடவடிக்கைகள் பற்றி தெரிந்தால், 24/7 மணி நேரமும் செயற்படும் 106 எனும் பிரத்தியேக அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக முறையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

இந்த கூட்டு முயற்சியானது அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதோடு, சர்வதேச ரீதியிலான கடல்சார் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பாதுகாப்பான மற்றும் நிலையான கடல்சார் பிராந்தியத்தை உருவாக்க உதவுகின்றது.

Image_02__7_.JPG

https://www.virakesari.lk/article/216525

மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!

3 months 1 week ago
முருகனும் பிள்ளையாரும் மாம்பழத்ததுக்கு தம்முள் சண்டையிட்ட போது சிவன் பேசாமல் ஏலத்துக்கு விட்டு யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவருக்கு பாம்பழம் என்று விட்டிருக்கலாம்.😂

குருந்தூர்மலை பௌத்த பிக்கு அடாவடி ; விவசாயிகள் மூவர் பொலிஸாரால் கைது

3 months 1 week ago
கைது செய்யப்பட்ட விவசாயியை விடுவிக்கக் கோரியும், குருந்தூர் மலையில் நில அபகரிப்புகளை நிறுத்தக் கோரியும் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினர் போராட்டம் Published By: VISHNU 04 JUN, 2025 | 02:23 AM முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவும் வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரால் 04ஆம் திகதி புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பாக புதன்கிழமை (4) மதியம் 12 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/216517

பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!

3 months 1 week ago
தந்தை-மகனை பகையாக்கிய பாஜக அரசியல்! சாவித்திரி கண்ணன் எத்தனையோ கட்சிகளை பிளந்த பாஜக, பாமகவில் தந்தையும், மகனையும் பிரித்து, பிளவுவாத அரசியலில் ஒரு பிரளயத்தையே உருவாக்கி உள்ளது. சாணக்கியன் காட்டிய துரோக அரசியல் சரித்திரத்தில் துகில் உரியப்பட்டது தந்தையின் தியாகம்..! சோரம் போனது மகனின் வீரம்! என்னவாகும் பாமக..? இப்படியும் கூட நடக்குமா, நாட்டில்? மகனிடமிருந்து அப்பாவின் உயிரை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாம் தைலாபுரத்தில்! அப்பாவின் உயிரை பாதுகாக்கவே போலீஸ் வேண்டும் என்றால், அந்த மகன் எவ்வளவு ஆபத்தானவராக இருப்பார்…? இவரிடம் இருந்து வன்னிய சமூகத்தை பாதுகாக்கப் போவது யார்? இதைவிட பேரவலம் வேறு என்ன இருக்க முடியும்? கொள்கைக்காக உயிரை கொடுக்கும் இயக்கமாக உருவெடுத்து, இன்று கொள்ளையை பங்கு போடுவதில் குடும்பத்திற்குள் சண்டையிடும் நிலை வந்தான பிறகு இதுவும், நடக்கும், இன்னமும் நடக்கும். ஒடுக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு என்று ஒரு உத்தமனை கண்டெடுப்போம் என வன்னிய சமூகத்தின் நாற்பது பெருந்தலைவர்கள் ஒன்று சேர்ந்து ராமதாஸை உருவாக்கினர். ஏ.கே. நடராஜன், எம்.பி.சுப்பிரமணியம், எம்.என்.மணிவர்மா..உள்ளிட்ட பலரது தியாகத்தில், பெருந்தன்மையில் உருவானவர் தான் ராமதாஸ். தன்னை பெருந்தலைவராக்கி அழகு பார்த்தவர்களையே பின்பு அழ வைத்த வரலாற்றுக்கு சொந்தக்காரர் தான் ராமதாஸ். அடுத்த நிலையில் கட்சியை கட்டமைக்க பட்டிதொட்டியெங்கும் பயணப்பட்டு வேர்வை சிந்திய முன்னணி மூத்த நிர்வாகிகளால் எங்கே தன் பதவிக்கு பங்கம் வருமோ என்ற கோழைத்தனத்தில் அதிரடியாய் இராம. நாகரத்தினம், டி.என்.ராமமூர்த்தி, முருகேசன் உள்ளிட்ட 13 மூத்த நிர்வாகிகளை அதிரடியாக கட்சியில் இருந்து விலக்கியவர் தான் ராமதாஸ். இப்படியாக பற்பலரை காவு கொடுத்து தான் தன்னை தனிபெரும் சக்தியாக்கிக் கொண்டார் ராமதாஸ். இதில் ராமதாஸ் வளர்ச்சிக்கு வாரி, வாரி வழங்கி, டெல்லியிலும் தொடர்புகளை உருவாக்கிக் கொடுத்தும் கொடூரமாக வஞ்சிக்கப்பட்ட தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியார். தற்போது 35 வயதில் மகனை கேபினெட் அமைச்சராக்கியது நான் செய்த மிகப் பெரிய தவறு என்கிறார் ராமதாஸ். ஆனால், தன் மகன் எப்படிப்பட்டவர் எனத் தெரிந்தே அவரை கேபினெட் அமைச்சராக்கியவர் தான் ராமதாஸ் என்பதற்கு வாழப்பாடி ராமமூர்த்தி அவர்கள் வெளியிட்ட அயோக்கிய சிகாமணி ராமதாஸ் என்ற நூலில் இவ்வாறு கூறியுள்ளார்; ”வாஜ்பாய் அமைச்சரவையில் பாமக சார்பில் பொன்னுசாமியும், சண்முகமும் அமைச்சர்களாக இருந்தனர். இவர்கள் இலாகா சம்பந்தப்பட்ட கோப்புகள் மாதக் கணக்கில் முடங்குகிறது. காரணம் உங்கள் மகன் அன்புமணியின் உத்தரவு உடனே கிடைகாதது தான்! அன்புமணி பைல் பார்த்து, பைல் தொடர்பான நபரை பார்த்து, அந்த நபரிடம் பேரம் நடத்தி, கைக்கு விஷயம் வந்து சேர்ந்தால் தான் கோப்பு நகர்கிறது. இதனால், அந்த இலாகா தொடர்பான செயலாளர்கள் மனம் உடைந்து, பிரதமருக்கு புகார் கூறினார்களே.., பிரதமர் வாஜ்பாய் இது தொடர்பாக உங்களை நேரில் அழைத்துக் கடிந்து கொண்டாரே நினைவு இருக்கிறதா..?’’ ஆக, தன் வினைத் தன்னை சுடும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. என்பதெல்லாம் தான் ராமதாஸ் வாழ்க்கையில் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இதை அன்புமணியும் நாளை பார்ப்பார். அதே சமயம் தன்னை இழிவுபடுத்தினார், பொய் சொன்னார், அநாகரீகமாக நடந்து கொண்டார், தன் தாயின் மீதே தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்தார். பா.மக என்ற கட்சியை கண்ணாடியை போல ஒரே நாளில் நொறுக்கினார், வளர்த்தகிடா மார்பில் பாய்ந்தது,..எக்ஸட்ரா…எக்ஸட்ரா என எவ்வளவோ சொன்னாலும், தன் மகனே தலைவன் என்பதில் ராமதாஸுக்கு மாற்று சிந்தனை வரவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். எனவே, அன்புமணி வன்னிய சமூகத்திற்கு தலைமை தாங்கும் தகுதியற்றது என ஏன் அவரால் சொல்ல முடியவில்லை…? இவ்வளவு சுயநலமும், அராஜகமும் உள்ள மகன் அன்புமணியை ஏன் மீண்டும், மீண்டும் நம்புகிறார்? ராமதாஸை பொறுத்த வரை இந்த சமூகத்தின் நலனைவிட தன் மகனின் நலனே மேலானது என்பதில் உறுதியானவர். இன்னொரு தகுதியான தலைமை தன் குடும்பத்திற்கு வெளியே கிடையவே கிடையாது. தலை எடுக்கவும் கூடாது.,,என்பதில் அப்பாவிற்கும்,பிள்ளைக்கும் எந்த கருத்து மாறுபாடும் வருவதில்லை. பாஜகவுடன் கூட்டணி கண்ட கட்சிகள் யாவும் பிளவு கண்டுள்ளன. அதில் இது வரை எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை. நிதீஸ்குமார் கட்சியை பிளந்தனர். சிவசேனாவை பிளந்தனர். தேசியவாத காங்கிரசை பிளந்தனர். அதிமுகவை பிளந்தனர், தற்போது பாமகவை பிளக்க அப்பாவையும், மகனையும் ஒருவருக்கொருவர் எதிரியாக்கி உள்ளனர். அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு அப்பா பேசி முடிவெடுக்க இரவோடு இரவாக பாஜக தலைவர்கள் கூடிப் பேசி , அதிகாலை வருவோம். கூட்டணி அறிவிப்பு முடிவு பெற வேண்டும். உன் அப்பாவை தயார்படுத்தி வை எனக் கூறுவதும், மகனும் மருமகளும் ராமதாஸ் காலில் விழுந்து பாஜக கூட்டணி இல்லையென்றால், அப்பா நீ தான் எனக்கு கொள்ளி வைப்பாய் என மகன் கதறி அப்பாவின் மனதை மாற்றியதும் நடந்திருக்கிறது என்பதை ராமதாஸே வாய் திறந்து சொல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தன் மருமகளின் அதிகாரம் கட்சியில் எப்படி கொடிகட்டிப் பறக்கிறது. தலைமை பொறுப்பை ராமதாஸிடம் இருந்து பறிப்பதில் செளமியா காட்டிய அவசரம் என எல்லாவற்றையும் கொட்ட வேண்டிய நிலைமை ஏன் வந்தது, ராமதாசுக்கு..? ஒருவேளை தன்னை கட்சியில் இருந்து மகன் நீக்குவதற்கு முன்பே அனைத்தையும் முன்கூட்டியே சொல்லி விடுவதன் மூலம் அதனை தடுக்கலாம் என சொல்லி இருப்பாரோ என்ற கோணத்திலும் பார்க்க வேண்டியுள்ளது. எது எப்படியாயினும் இவ்வளவு சுயநலமிக்க ஒரு குடும்பத்திடம் உழைக்கும் வர்க்கமான வன்னியர் சமூகம் சிக்கி இருக்கிறதே..அது எப்போது விடுபட்டு இயல்பு நிலைக்கு மீண்டு வரும் என்ற கவலை தான் ஏற்படுகிறது. சாவித்திரி கண்ணன் https://aramonline.in/21686/ramadoss-anbumani-pmk-bjp/

ஐபிஎல் டி20 செய்திகள் - 2025

3 months 1 week ago
ஆர்சிபி-யின் 18 ஆண்டுகள் கனவு நனவாக வித்திட்ட பில் சால்டின் அற்புத கேட்ச் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் "ஈசாலா கப் நம்தே" இந்த கோஷம், 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி ரசிகர்களுக்கு இறுதியாக நனவாகிவிட்டது. ஒருமுறை அல்ல, 3 முறை இறுதிப்போட்டி, 18 ஆண்டுகள் போராட்டம், வலி, காயம், வேதனை அனைத்தும் இந்த சீசனில் ஆர்சிபிக்கு ஆற்றப்பட்டுவிட்டது. இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றுள்ளது. ஐபிஎல் கோப்பையில் 8வது அணியாக இனிமேல் தன்னுடைய பெயரையும் ஆர்சிபி அணி பொறித்து வரலாற்றில் இடம் பிடித்தது. ராகுல் திராவிட், அணில் கும்ப்ளே, விராட் கோலி, டூப்ளெஸ்ஸி என ஜாம்பவான்களால் நிகழ்த்த முடியாத சாதனையை அன்கேப்டு, சர்வதேச அனுபவமே இல்லாத வீரர் ரஜத் பட்டிதார் ஆர்சிபிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக ஒரே அணிக்காக ஆடி 10 ஆண்டுகள் கேப்டன் பொறுப்பேற்று பலமுறை இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையைத் தவறவிட்ட விராட் கோலிக்கு இந்த வெற்றியின் ஆழம், மதிப்பு என்னவென்று தெரியும். அதனால்தான் கடைசிப் பந்து வீசப்பட்டவுடன் மைதானத்தின் தரையில் தலை கவிழ்ந்து கோலி தன் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கண்ணீர் சிந்தி அழுதார். இதுபோல் விராட் கோலியை அதீத உணர்ச்சியுடன் ரசிகர்கள் பார்த்தது இல்லை. 18 ஆண்டுகள் கனவு நனவாகும்போது ஏற்படும் மகிழ்ச்சி, உழைப்பின் மதிப்பு, அர்ப்பணிப்பின் பலன் அனைத்தும் கண்ணீராக கோலியின் முகத்தில் வெளிப்பட்டது. கோலி மகிழ்ச்சியில் "என் இளமைக் காலம், உச்சபட்ச காலம், அனுபவம் அனைத்தையும் ஆர்சிபி அணிக்காக அர்ப்பணித்துள்ளேன்" என்று தெரிவிக்கும் போது இந்த வெற்றியின் மகத்துவம் புரிந்திருக்கும். பஞ்சாப் பேட்டர்களுக்கு கடிவாளமிட்ட ஆர்சிபி காணொளிக் குறிப்பு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் உள்ள 6வது ஆடுகளத்தில் சர்வசாதாரணமாக முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களை கடந்துவிடும். அந்த வகையில் ஆர்சிபி அணியை 190 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு சிறப்பானது. அந்த 190 ரன்களையும் டிபெண்ட் செய்து பஞ்சாப் அணியை 184 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி, 6 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் உழைப்பு அதைவிட பாராட்டுதலுக்குரியது. குறிப்பாக ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் குர்னல் பாண்டியா, யஷ் தயால், புவனேஷ்வர் குமார் ஆகியோரின் பந்துவீச்சு இறுதிப்போட்டியில் ஆகச் சிறந்ததாக இருந்தது. இந்த 3 வீரர்களும் ஏற்கெனவே சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் இடம் பெற்று இருந்ததால், அதில் கிடைத்த அனுபவங்களை ஆர்சிபிக்காக அள்ளிக் கொடுத்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இதில் குர்னல் பாண்டியா ஐபிஎல் இறுதிப்போட்டியில் 2வது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்றார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தபோது, பைனலில் சிறப்பாகப் பந்து வீசியதற்காக குர்னல் பாண்டியா முதன்முதலில் ஆட்டநாயகன் விருது வென்ற நிலையில் இந்த விருது அவருக்கு இரண்டாவதாகும். கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. பஞ்சாப் அணியும் வெற்றியை விடாது துரத்தி வந்தது. ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க நேர்ந்தது, அதன் ஓட்டத்திற்குக் கடிவாளமிட்டது. ஹேசல்வுட் வீசிய முதல் இரு பந்துகள் டாட் பந்துகளாக மாறிய உடனே ஆர்சிபியின் வெற்றி கணிதரீதியாக உறுதியானது. கடைசி ஓவரில் ஸ்டிரைக்கை தக்கவைத்த சஷாங் சிங் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து அணியை கடைசிக் கட்டம் வரை அழைத்து வந்தும் பயனில்லாமல் பஞ்சாப் 6 ரன்களில் தோற்றது. சஷாங் சிங் 30 பந்துகளில் 61 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலியும் 18ஆம் எண்ணும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்சிபி கோப்பை வென்ற மகிழ்ச்சியில் விராட் கோலி மைதானத்தில் அனைவரின் பார்வையும் 18ஆம் எண் அச்சடிக்கப்பட்ட ஜெர்ஸியை அணிந்திருந்த நபர் மீதுதான் குவிந்திருந்தது. 18வது சீசனில்தான் ஆர்சிபி அணிக்கு கோப்பை கிடைத்திருக்கிறது, கோலியின் ஜெர்ஸியிலும் 18. ஆகவே 18வது சீசன்தான் ஆர்சிபிக்கு அதிர்ஷ்டமாக மாறியிருக்கிறது. இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பைனலில் கோலி சேர்த்த 77 ரன்கள் எந்த அளவுக்கு முக்கியமானதாக இருந்ததோ அதே அளவுக்கு இந்தப் போட்டியில் அவர் சேர்த்த 43 ரன்களும் முக்கியமானது. விராட் கோலியின் ரன்வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தோடு பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் ஸ்லோவர் பந்துகளை அதிகமாக வீசினர். ஷார்ட் பிட்ச் பந்துகளையும், ஷார்ட் பவுன்ஸர்களையும் அதிகமாக வீசி கோலியின் ரன்சேர்ப்புக்கு கடினமான தடைகளை அமைத்தனர். ஆனால், அவர் அதையும் மீறி அவ்வப்போது ஃபுல்ஷாட்களை அடித்து ரன்களை சேர்த்தார். பில் சால்ட், அகர்வால், பட்டிதாருடன் சேர்ந்து 131 ரன்கள் வரை கோலி சேர்த்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானத்தது. ரன் சேர்க்க வேண்டும் என்ற கோலியின் தீர்க்கமான எண்ணம்தான் ஆர்சிபி ரன்ரேட்டை குறையவிடாமல் வைத்திருந்தது. கோலி ஆட்டமிழந்த பிறகுதான் பஞ்சாப் அணி விக்கெட் வீழ்த்தும் வேகத்தை அதிகப்படுத்தியது. இந்த சீசனில் மட்டும் கோலி, 15 போட்டிகளில் ஆடி 657 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 8 அரைசதங்களும் அடங்கும். குர்னல் பாண்டியாவின் அனுபவம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணி 3 சாம்பியன் பட்டங்களை வென்ற போட்டிகளில் கிடைத்த அனுபவத்தை குர்னல் பாண்டியாவுக்கு இந்த இறுதி ஆட்டத்தில் காண்பித்தார் மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டம் வென்றபோது, அந்த அணியில் குர்னல் பாண்டியா இடம் பெற்றிருந்தார். அதில் கிடைத்த அனுபவம், பந்துவீச்சு ஆகியவற்றைத்தான் இந்த இறுதி ஆட்டத்தில் காண்பித்துள்ளார். குர்னல் பாண்டியா சுழற்பந்துவீச்சாளர் என்றபோதிலும், களத்தில் இவர் வீசும் பந்து பெரிதாக டர்ன் ஆகாது. ஏனென்றால், குர்னல் பாண்டியா சராசரியாக 90 முதல் 100 கி.மீ வேகத்தில் பந்துவீசுவதால், பந்தில் டர்ன் இருக்காது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக, இறுதிப் போட்டியில் குர்னல் பாண்டியா தனது பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்து 80 முதல் 85 கி.மீ வேகத்தில் பந்து வீசியதால், அவரால் ரன்கள் கொடுப்பதும் கட்டுப்படுத்தப்பட்து. பேட்டர்கள் பெரிய ஷாட்களை குர்னல் பந்தவீச்சில் அடிப்பதும் கடினமாக இருந்தது. அவ்வாறு ஷாட் சரியாக கிடைக்கவில்லையெனில், அது கேட்சாகவும் மாறிவிடும் நிலை இருந்தது. 4 ஓவர்களை வீசிய குர்னல் பாண்டியா, 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட்டுக்கு 55 ரன்கள் இருந்தற்கு இணையாக பஞ்சாப் அணியும் ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் என நெருக்கடியின்றி இருந்தது. ஆனால் குர்னல் பாண்டியாவுக்கு பந்துவீச வாய்ப்பு கொடுப்பட்டதும், வழக்கமான பந்துவீச்சை வீசாமல் பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களையும், வேகத்தை மாற்றி அமைத்தும் பந்துவீசி குர்னல் பாண்டியா, பஞ்சாப் பேட்டர்களை திணறவிட்டார். குர்னல் பாண்டியாவின் பந்துவீச்சை சரியாகக் கணிக்க முடியததால்தான், பிரப்சிம்ரன் தேவையற்ற ஷாட்டை ஆடி விக்கெட்டை இழந்தார். ஜோஷ் இங்லிஸ் செட்டில் ஆகி அடிக்கத் தொடங்கும் நிலையில் அவரது விக்கெட்டையும் குர்னல் பாண்டியா வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். குர்னல் பாண்டியா எடுத்த 2 விக்கெட்டுகளும் வீசிய 4 ஓவர்களும் ஆட்டத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி 12 டாட் பந்துகளையும் குர்னல் பாண்டியா வீசித் தனது பந்துவீச்சைத் துல்லியமாக்கினார். ஆட்டத்தைப் புரட்டிப்போட்ட புவியின் அனுபவம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புவனேஷ்வர் குமார் வீழ்த்திய இரண்டு பெரிய விக்கெட்டுகள் ஆர்சிபி வெற்றி பெறப் பெரிதும் உதவியது ஆர்சிபி அணிக்கு எளிதான வெற்றி கிடைப்பதற்கு புவனேஷ்வர் குமாரின் கடைசிக் கட்ட பந்துவீச்சு முக்கியமானதாக அமைந்தது. புவனேஷ்வர் வீசிய 17வது ஓவரில் வைடு பந்தை அடித்து, வதேரா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டோய்னிஷ் புவியின் ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தவுடன், அடுத்த பந்தில் தேர்டுமேன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். புவி ஒரே ஓவரில் முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். ஜிதேஷின் கேமியோ ஜிதேஷ் ஷர்மா 10 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜித்தேஷின் இந்த கேமியோ, ஆர்சிபி ரன்ரேட்டை சட்டென உயர்த்தியது. ஜிதேஷ் ஷர்மா வரும்வரை பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் ஜேமிஸன், ஓமர்சாய், வைசாக் ஆகியோர் ஆர்சிபி பேட்டர்களுக்கு ஸ்லோவர் பந்துகளையும், ஆஃப் கட்டர்களையும், ஸ்லோ பவுன்சரையும் வீசித் திணற வைத்தனர். ஆனால், ஜிதேஷ் வந்தவுடன் கார்டு லென்த்தில் பந்து வீசியவர்களின் பந்துவீச்சை "ரூம் கொடுத்தும்", ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸர் எனத் தேர்ந்தெடுத்தும் அடித்ததால் ரன்ரேட் உயர்ந்தது. ஜிதேஷ் அடித்த 24 ரன்கள், ஆர்சிபி அணி 190 ரன்களை எட்டுவதற்கு முக்கிய உதவியாக இருந்தது. ஆர்சிபி அணியில் ஒரு பேட்டர்கூட அரைசதம் அடிக்காவிட்டாலும்கூட ஜிதேஷ் கடைசி நேரத்தில் கேமியோ ஆடியதுதான் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஹேசல்வுட் வருகை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பில் சால்ட் பிடித்த இந்த கேட்ச்தான் ஆர்சிபி பந்துவீச்சாளர்ளுக்கு நம்பிக்கையளித்தது ஆர்சிபி அணிக்குள் ப்ளே ஆஃப் சுற்றில் ஹேசல்வுட் விளையாடுகிறார் என்ற செய்தியே ஆர்சிபி அணிக்குப் பெரிய உற்சாகத்தையும், கூடுதல் பலத்தையும் உண்டாக்கியது. இதனால்தான் முதல் தகுசிச் சுற்றில் ஸ்ரேயாஸ் பேட் செய்ய வந்தவுடன் ஹேசல்வுட்டுக்கு பந்துவீச வாய்ப்பளித்து விரைவாக வீழ்த்த முடிந்தது. இந்த ஆட்டத்தில் ஹேசல்வுட் ஒரு விக்கெட் வீழ்த்தி 54 ரன்களை வாரி வழங்கினாலும் ஹேசல்வுட் அணிக்குள் இருந்ததே சக பந்துவீச்சாளர்களுக்கு ஊக்கமாக அமைந்தது. பில்சால்ட் பிடித்த கேட்ச் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் இருவருமே அதிரடியான தொடக்கத்தை அளித்து வெற்றியை நோக்கி அணியை விரைவுபடுத்தினர். இதனால் இருவரையும் பிரிக்க முடியாமல் ஆர்சிபி அணி திணறியது. ஹேசல்வுட் ஓவரில் பிரயன்ஸ் ஆர்யா தூக்கி அடித்த பந்து டீப் ஸ்குயர் லெக்திசையில் சிக்ஸருக்குப் பறக்கவே அங்கிருந்த சால்ட் அருமையாக கேட்ச் பிடித்தார். அந்த கேட்சை பிடித்த பிறகு நிலைதடுமாறி பவுண்டரி எல்லைக்குள் அவர் செல்லவே பந்தை மேலே தூக்கி வீசி பின்னர் மைதானத்துக்குள் வந்து சால்ட் அற்புதமாக கேட்ச் பிடித்து ஆர்சிபிக்கு நம்பிக்கையளித்தார். சால்ட் பிடித்த இந்த கேட்ச்தான் ஆர்சிபி பந்துவீச்சாளர்ளுக்கு நம்பிக்கையளித்தது, மற்ற வீரர்களுக்கும் அது கடத்தப்பட்டது. இறுதியாக 18 ஆண்டுகள் காத்திருப்பும் ஏக்கமும் முடிவுக்கு வந்து ஆர்சிபி ரசிகர்களின் கனவு நனவானது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gkddpk7r4o

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
இருவரின் வாழ்வும் தொலைந்தது. எமது சமூகத்தில் பெண் ஒழுக்கமீறலில் ஈடுபடக்கூடாது. ஆண் ஈடுபட்டால் பெரிதுபடுத்தமாட்டார்கள்!

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
முதலிடம் பெற்ற @நந்தன்அண்ணைக்கும் இரண்டாமிடம் பெற்ற @ரசோதரன்அண்ணைக்கும் மூன்றாமிடம் பெற்ற @புலவர்அண்ணைக்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடத்திய @கிருபன்அண்ணைக்கு வாழ்த்துகள். போட்டியில் பங்குபற்றிய 23 உறவுகளுக்கும் வாழ்த்துகள்.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகை தரக்கூடாது – காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தல்

3 months 1 week ago
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகை தரக்கூடாது – காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தல் June 4, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இம்மாத இறுதியில் நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்பதாக அவர் இலங்கைக்கு வருகைதர அனுமதிக்கவேண்டாம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் தற்போது நடைமுறையில் இருக்கும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முடிவுக்கு வரவிருக்கும் பின்னணியில், தற்போது நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகளை முறியடிப்பதற்கான கருவியாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வருகையை அரசாங்கம் பயன்படுத்தும் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்தோடு தாம் அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் உள்ளக நீதிப்பொறிமுறையில் முழுமையாக நம்பிக்கை இழந்திருப்பதாகவும், சர்வதேச பொறிமுறையின் ஊடாக மாத்திரமே தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், அதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பூரண ஒத்துழைப்பு அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் இலங்கை குறித்த ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையைக் காலநீடிப்புச் செய்வதற்கும், இலங்கையை சர்வதேச நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தியுள்ளனர். www.ilakku.orgஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகை தரக்கூட...ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இம்மாத இறுதியில் நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், எதிர்வரும்

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகை தரக்கூடாது – காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தல்

3 months 1 week ago

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகை தரக்கூடாது – காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தல்

June 4, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இம்மாத இறுதியில் நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்பதாக அவர் இலங்கைக்கு வருகைதர அனுமதிக்கவேண்டாம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் தற்போது நடைமுறையில் இருக்கும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முடிவுக்கு வரவிருக்கும் பின்னணியில், தற்போது நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகளை முறியடிப்பதற்கான கருவியாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வருகையை அரசாங்கம் பயன்படுத்தும் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு தாம் அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் உள்ளக நீதிப்பொறிமுறையில் முழுமையாக நம்பிக்கை இழந்திருப்பதாகவும், சர்வதேச பொறிமுறையின் ஊடாக மாத்திரமே தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், அதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பூரண ஒத்துழைப்பு அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் இலங்கை குறித்த ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையைக் காலநீடிப்புச் செய்வதற்கும், இலங்கையை சர்வதேச நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தியுள்ளனர்.

www.ilakku.org
No image previewஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகை தரக்கூட...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இம்மாத இறுதியில் நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், எதிர்வரும்

ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு

3 months 1 week ago
ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான (Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியமாகியுள்ளது. அதன் ஒரு அங்கமாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியம் தொடர்பாக செயலாற்றும் அதிகாரிகளுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதி நிதியின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உயர்தர சேவையை வழங்கவும், நவீனமயமாக்கப்பட்ட ஒன்லைன் அமைப்புகளை அறிமுகப்படுத்தவும், மேலும் சேவைகளை விரைவாக வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அளவிலானவர்களுக்கு மட்டும் நன்மைகளை வழங்கிய ஜனாதிபதி நிதியத்தை, நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு நன்மைகளை வழங்கும் மக்கள் நிதியமாக செயல்படுத்துவதே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பணிக்குழுவின் முதன்மையான நோக்கமாகும். அந்த நோக்கத்தை அடைய, எதிர்காலத்தில் இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள் ஏனைய மாகாணங்களிலும் செயல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmbhhmqbn01dgqpbssj45hw4v

ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு

3 months 1 week ago

ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு

பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. 

அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான (Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியமாகியுள்ளது. 

அதன் ஒரு அங்கமாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியம் தொடர்பாக செயலாற்றும் அதிகாரிகளுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம், வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதி நிதியின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயனாளிகளுக்கு உயர்தர சேவையை வழங்கவும், நவீனமயமாக்கப்பட்ட ஒன்லைன் அமைப்புகளை அறிமுகப்படுத்தவும், மேலும் சேவைகளை விரைவாக வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அளவிலானவர்களுக்கு மட்டும் நன்மைகளை வழங்கிய ஜனாதிபதி நிதியத்தை, நாடு முழுவதும் வாழும் மக்களுக்கு நன்மைகளை வழங்கும் மக்கள் நிதியமாக செயல்படுத்துவதே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான பணிக்குழுவின் முதன்மையான நோக்கமாகும். 

அந்த நோக்கத்தை அடைய, எதிர்காலத்தில் இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள் ஏனைய மாகாணங்களிலும் செயல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmbhhmqbn01dgqpbssj45hw4v

மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!

3 months 1 week ago
மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி! adminJune 4, 2025 யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழம் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கபட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது. இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த நபர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டார். மேலும் குறித்த ஆலயத்தின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது. https://globaltamilnews.net/2025/216313/

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 1 week ago
மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரிய வழக்கு – கட்டளை பிறப்பிக்கப்படவுள்ளது!! adminJune 4, 2025 செம்மணி சித்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான கட்டளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (06.06.25) வழங்கப்படவுள்ளது. செம்மணி – சித்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு பணிகளில் நேற்று (03.06.25 செவ்வாய்க்கிழமை வரையில் ஏழு மனித மண்டையோடுகள் உள்ளிட்ட மனித சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்களுக்கு மேல் அடையாளம் காணப்பட்டால் அப்பகுதியினை மனித புதைகுழி என பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் அப்பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ் . நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் சார்பில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்தனர். குறித்த விண்ணப்பம் மீதான விசாரணைகளின் போது, சட்ட வைத்திய அதிகாரியின் அபிப்பிராயத்தையும் யாழ்ப்பாண பொலிசாரின் நடவடிக்கை தொடர்பிலும் அறிக்கையை தருமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அது தொடர்பில் கட்டளை பிறப்பிக்கப்படும் என திகதி குறித்துள்ளார். https://globaltamilnews.net/2025/216318/

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
முதல்வர் நந்தனுக்கும், இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்த ரசோதரன், புலவருக்கும் வாழ்த்துக்கள்!👏💐 போட்டியை மிக சிறப்பாக நடத்திய கிருபனுக்கும், இந்த திரியை கலகலப்பாக வைத்திருந்த செம்பாட்டான், வசீ, கந்தப்பு, பையன், ரசோதரன், ஈழப்பிரியன், வாத்தியார் ஆகியோருக்கும், மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்!! 🙏 மீண்டும் கோஷானின் போட்டியில் சந்திப்போம்❤️

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
மேற்படி கொலைச் சம்பவம் நேற்று சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது. ஆனால் பெரும் பாலான மக்களின் பின்னூட்டங்களில் இந்த மோசமான வன்முறை கலாச்சாரத்தை கண்டிக்காமல் நியாயப்படுத்தி எழுதி இருந்ததை காணக்கூடியமதாக இருந்தது. சிலர் குற்றசெயல் என்பதன் வீரியத்தை குறைத்து குடும்ப ஆலோசனை கருத்துகளை/ ஒருவனுக்கு ஒருவன் தமிழ் கலாச்சார பெருமைகளை தெரிவித்திருந்தனர். கணவனுக்கு துரோகம் நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று கூட சில கருத்துக்கள் வந்திருந்தன. துரோகத்தின் வலியை விட கொலை பெரிதல்ல என்று கூட கொலை செய்தவருக்கு ஆதரவான கருத்து ஒன்று வந்திருந்தது . அவற்றை வாசித்த போது எமது சமூகம் மூடப்பட்ட தலிபான் மனநிலையில் வாழ்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு திரியில் @goshan_che கூட இதையே தெரிவித்திருந்தார். நடந்தது உணர்சசி வசப்பட்ட படு மோசமான கொலை. எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாத ஒரு விடயம்ஆனால் இதை நியாயப்படுத்தும் பின்னூட்டங்களை என்னெ கூறுவது? இவற்றை வாசிக்கும் சிறுவர்/ சிறுமியர் கூட இப்படியான கொலைகளை ஏற்றுக்கொள்ளும் , இதை முன்மாதிரியாக கொள்ளும் மனநிலையை இது ஏற்படுத்தாதா?

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 1 week ago
நிரந்தர முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள். கிருபனுக்கு எவ்வளவு பாராட்டுக்களை சொன்னாலும் தகாது. வேலைப்பழுக்களின் மத்தியிலும் போட்டியை திறமையாக நடாத்தி முடித்த கிருபனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும் போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.