3 months 1 week ago
ஆர்.ஸி.பி: வெற்றிக்குத் தகுதியான அணி இந்த ஆண்டு ஐ.பி.எல்லின் கட்டுறுதியான அணிகளாக எனக்குத் தோன்றியவை மும்பையும் ஆர்.ஸி.பியும்தாம். குறிப்பாக ஆர்.ஸி.பி அணியின் தேர்வு சிறப்பாக இருந்தது - நல்ல வலுவான பந்து வீச்சு வரிசை, கீழ்வரிசை மட்டையாட்டம், சுழல் பந்து, ஆல்ரவுண்டர் என எல்லா அலகுகளிலும் சரியான ஆளை வைத்திருந்தார்கள். பழைய தென்னாப்பிரிக்க அணியைப் போல கடுமையாகப் போராடினார்கள். அனேகமாக எல்லா ஆடுதளங்களுக்கும் ஏற்ற அணி. இன்றைய போட்டியில் அவர்கள் முதலில் ஆடி 20 ரன்களாவது குறைவாக எடுத்ததாகவே நினைத்தேன். ஆனால் அடுத்தாடிய பஞ்சாப் அணி முதல் 4 ஓவர்களில் ரிஸ்க் எடுத்து அடிக்கத் தயங்கினார்கள். அவர்கள் அடிக்க ஆரம்பித்த போது ஐந்தாவது ஓவராகியது, ஒரு விக்கெட்டும் கொடுத்தார்கள். கடைசி 6 ஓவர்களில் பந்துகளுக்கும் ரன்களுக்கும் இடையில் இருந்த 20-30 ரன்கள் இடைவெளி முதல் ஆறு ஓவர்களில் ஏற்பட்ட சுணக்கத்தினால் விளைந்ததே. ஆர்.ஸி.பி கூட ஒன்றும் சிறப்பாக ஆரம்பிக்கவில்லை. பத்தாவது ஓவரை எட்டும்போது இரண்டு அணிகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட 5 ரன்கள் இடைவெளியே. ஆனால் பட்டிதாருக்குப் பிறகு வந்த லிவிங்ஸ்டோன் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவர் அடுத்தடுத்து அடித்த சிக்ஸர்கள், கோலி சரியான நேரத்தில் அவுட் ஆகி ஜித்தேஷ் ஷர்மாவும் லிவிங்ஸ்டோனுமாக ஜேமிஸன் ஓவரில் அடித்த பெரிய சிக்ஸர்கள் முக்கியமான திருப்புமுனை. அதனாலே 15வது ஓவரில் ஆர்.ஸி.பி 132 எடுத்திருக்க, பஞ்சாப் நான்கு விக்கெட்டுகளுக்கு 119க்கு மட்டுமே எடுத்தது. 17வது ஓவரில் பஞ்சாப் 144க்கு 6 விக்கெட்டுகள். ஆனால் ஆர்.ஸி.பியோ 17வது ஓவரில் 5 விக்கெட்டுகளுக்கு 168 ரன்கள். அதாவது 15வது ஓவரில் 13 ரன்கள் வித்தியாசம் எனில், 17வது ஓவரில் 24 ரன்கள் வித்தியாசம். ஆர்.ஸி.பி இன்னும் சற்று சுதாரித்து ஆடியிருந்தால் 200 எடுத்திருக்க முடியும். ஆனால் பஞ்சாப் எவ்வளவு நன்றாக ஆடினாலும் 190ஐத் தாண்டியிருக்காது. ஏனென்றால் 10வது ஓவருக்குப் பிறகு அவர்களால் ஆர்.ஸி.பி பந்துவீச்சை சிக்ஸர் அடிக்க முடியவில்லை. குறிப்பாக குரனால் பாண்டியாவின் பந்து வீச்சை அடிக்க சிரமப்பட்டார்கள். (இந்தப் போட்டியில் மட்டுமல்ல இத்தொடர் முழுக்கவே குரனால் பாண்டியா தான் ஆர்.ஸி.பியின் துருப்புச்சீட்டு.) லிவிங்ஸ்டோனும், ஜித்தேஷும் செய்ததை வதேராவால் முடியவில்லை. அவர் 18 பந்துகளில் அடித்த 15 ரன்கள் ஆட்டத்தை மாற்றின. அவருக்கு ஆர்.ஸி.பி வீச்சாளர்கள் குறைநீளத்தில் வைடாக வீசியது நல்ல உத்தி. ஷஷாங் சிங் தோனி ஸ்டைலில் கடைசி வரை ஆட்டத்தைக் கொண்டு போக முயன்றதும் தவறாகியது. அவரது ஒற்றை ரன்னெடுக்கும் தடுப்பாட்ட பாணி பஞ்சாபை ஆட்டத்தில் இருந்து விரைவில் வெளியேற்றியது. ஆட்டம் முடிந்த நிலையில் அவர் அடித்த சிக்ஸர்கள் ஏதோ பாடையைச் சுற்றி நின்று டான்ஸ் ஆடுவதைப் போல இருந்தது. இவர்களுடைய கூட்டணியில் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடித்திருந்தால் அல்லது வதேரா தான் ஆடிய முதல் ஐந்து பந்துகளுக்குள் வெளியேறி ஸ்டாயினிஸ் அப்போது வந்து வேகமாக அடித்திருந்தாலோ 17வது ஓவரில் ஆட்டம் இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும். ரிக்கி பாண்டிங் துணிச்சலாக வதேராவை ரிட்டையர்ட் அவுட் ஆக்கியிருக்கலாமோ? ஒருவேளை ஆட்டத்தின் முக்கியான திருப்புமுனையாக அது அமைந்திருக்கலாம். ஆனால் அவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கினார்கள். இன்னொரு பக்கம், இதைச் சாத்தியமாக்கியது ஆர்.ஸி.பியும் அற்புதமான பந்துவீச்சும்தான். ஒருவேளை அவர்கள் ஸ்குவாடை அமைக்கும்போது பந்துவீச்சை அலட்சியமாக கருதியிருந்தால் இந்த கட்டத்தில் போட்டியில் பின்வாங்கியிருப்பார்கள். கையை விட்டுப் போயிருக்கும். பஞ்சாபுக்கு வதேராவின் திணறல், ஆர்.ஸி.பிக்கு அவரைவிட சற்று மேலாக ஆடினாலும் பவுண்டரி கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த கோலி சரியான சமயத்தில் வெளியேறியது, குரனாலின் காயத்துக்கு தையல் போடுவதைப் போன்ற பந்துவீச்சு, இம்மாதிரி சின்னச்சின்ன விசயங்களே இறுதிப் போட்டியின் வெற்றியைத் தீர்மானித்தன. சொல்லப்போனால் ஆர்.ஸி.பிக்கு சாதகமாக இல்லாத ஆடுதளம் இது - ஆனால் இதற்கும் ஏற்ப தகவமைத்துக்கொண்டு அவர்கள் போராடியது, உத்தியை மாற்றிக் கொண்டது பாராட்டத்தக்கது. இம்முறை கோப்பையை வெல்ல முழுமையான தகுதி கொண்ட அணிதான் ஆர்.ஸி.பி. இத்தொடர் முழுக்க விராத் கோலி மத்திய ஓவர்களில் சுழல் பந்தை ஸ்லாக் ஸ்வீப்பிலும் இறங்கி வந்தும் தொடர்ந்து சிக்ஸர்கள் விளாசி 144 ஸ்டிரைக் ரேட்டில் ஆடியது, 657 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தகுந்தது - 2024இல் அவர் கூடுதலான ரன்களை இன்னும் மேலான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்திருந்தாலும் மத்திய ஓவர்களில் அவரால் சுழலர்களை விளாச முடியவில்லை, இம்முறை இந்த வயதில் அவர் தன் ஆட்டத்தை மாற்றிக் காட்டியது அபாரமானது. அவரது ஆட்டம் கொடுத்த உத்தரவாதம் முதல் பத்து ஓவர்களுக்குள் பட்டிதாரும், அதற்குப்பின் டேவிட், லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ், ஷெப்பர்ட் ஆகியோரும் ரெண்டு கைகளிலும் மத்தாப்பு கொளுத்தி வாயில் சரவெடி வெடிப்பதைப் போல ஆட உதவியது. ஆர்.ஸி.பி யாரையும் சார்ந்திருக்கவில்லை. 11 பேர்களும் நல்ல ஆட்டநிலையில் தொடர்ச்சியாக அதிரடியாக ஆடினார்கள். எல்லா சவால்களுக்கும் யாராவது ஒருவர் எழுந்து நின்று தீர்வைக் கண்டடைந்தார்கள். பட்டிதார் அணித்தலைவராக நல்ல தேர்வல்ல என்று நான் துவக்கத்தில் நினைத்தேன். ஆனால் அது தவறான கணிப்பு என்பதை அவரது புத்திசாலித்தனத்தையும் நிதானத்தையும் பார்த்தபோது உணர்ந்தேன். தலைமையால் அவரது ஆட்டமும் மேம்பட்டது. காயமிருந்தும் கூட தயங்காமல் அதிரடியாக ஆடினார். சுயநலமற்ற ஆட்டம். பாதி தொடரில் பட்டிதார் காயமுற்றபோதும் கூட அவர்களால் பின்வாங்காமல் தளராமல் ஆட முடிந்ததைப் பார்க்கையில் அணியின் வலுவான கட்டமைப்புப் புலப்பட்டது. மயங்க் அகர்வால் பாதி தொடரில் அணிக்குள் வந்து நன்றாக ஆடினார். இதையெல்லாம் பார்க்கையில் அடிப்படையில் அவர்கள் மகிழ்ச்சியான நிம்மதியான அணியாக இருந்தார்கள் என்பது தெரிகிறது - உள்ளார்ந்த மகிழ்ச்சியும் தன்னிறைவும் தரும் தன்னம்பிக்கை அவர்களைச் செலுத்தியது. இவ்வெற்றியில் அவர்களுடைய நிர்வாகமும் பயிற்சியாளர்களின் அணியும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். இன்னொரு முறை இப்படி எல்லாம் அமைந்து வருமா எனத் தெரியவில்லை. ஆர்.ஸி.பிக்கு வாழ்த்துகள்! https://thiruttusavi.blogspot.com/2025/06/blog-post_3.html
3 months 1 week ago
யாழ் மருத்துவமனை குருதிப்பெருக்கின் மத்தியில் ஒரு கலங்கரை விளக்கம் - யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம் Published By: RAJEEBAN 04 JUN, 2025 | 04:33 PM A beacon amidst the bleeding: What Jaffna’s doctors taught me about life — Abbi Kanthasamy malay mail எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் பொருட்களை தேடுவதில் செலவிட்டுள்ளேன். வணிகம் பிராண்ட்கள் வீடுகள் வாக்குவாதங்கள் - எப்போதும் எதனையாவது துரத்துவது, துரத்திக்கொண்டேயிருப்பது. அடுத்த இலக்கு அடுத்த ஒப்பந்தம் மைல்கற்கள் இலாபங்களை வைத்து மதிப்பிடும் இந்த உலகில். ஆனால் கடந்தவாரம் இலங்கையின் வடபகுதியில் உள்ள சிறிய மருத்துவனையொன்றில் எனது தாயார் உயிருக்காக போராடுவதை பார்த்தபின்னர் எனக்கு ஒரு விடயம் நினைவிற்கு வந்தது - எல்லா வீரர்களும் கதாநாயர்களும் எப்போதும் எதனையும் துரத்திக்கொண்டிருப்பவர்கள் இல்லை எதன் பின்னாலும் ஓடிக்கொண்டிருப்பவர்கள் இல்லை. அது குமுழமுனையில் ஆரம்பமானது. மாரடைப்பு, உண்மையானது அமைதியானது ஆனால் கடும் ஆபத்தானது. நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எனது தாயார் முழுமையான அடைப்பினால் பாதிக்கப்பட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். வலது தமனியில் கிட்டத்தட்ட 99 வீத அடைப்பு காணப்பட்டது. அவர் பல நாட்களாக ஆபத்தான நிலையைநோக்கி அமைதியாக சென்றுகொண்டிருந்தார். மருத்துவ நூல்களில் - புத்தகங்களில் தெரிவிக்கப்படும் அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. ஒரு ஆபத்தான பாறையின் நுனியை நோக்கி அமைதியான பயணம். முல்லைத்தீவு மருத்துவமனையின் வைத்தியர்கள் குழுவினர் வேகமாகவும் உறுதியாகவும் செயற்பட்டனர். அவர்கள் ஒரு த்ரோம்பொலிடிக்கை அம்மாவிற்கு செலுத்தினர். நாங்கள் இதனை இரத்த ஓட்டத்தை தடுக்கும் இரத்த கட்டிகளை கரைக்க உடைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் என இதனை அழைப்போம். அம்மாவிற்கு தேவையாகயிருந்த மிகவும் விலைமதிப்பற்ற் நேரத்தை முல்லைத்தீவு மருத்துவர்கள் வழங்கினார்கள். பின்னர் அம்மாவை யாழ்ப்பாண மருத்துவமனைக்கு மாற்றினார்கள்.அங்கு போதுமான கையுறைகள் கூட இல்லாத மருத்துவர்கள் மற்றும் தாதிமார் குழுவினர் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட அம்மாவிற்கு அஞ்சியோபிளாஸ்டி சத்திரசிகிச்சையை செய்தனர். ஒரு ஸ்டெண்டை வைத்து உயிரை காப்பாற்றினார்கள். அவர்களின் வாயிலிருந்து 'மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம்" என்ற வார்த்தையை ஒரு தடவை கூடநான் கேட்கவில்லை. அந்த மருத்துவர்களின் திறமை குறித்து ஒருமுறை கூட எனக்கு சந்தேகம் எழவில்லை. எனக்கு கடும் ஆச்சரியத்தை அளித்த விடயம் இதுதான் - கடந்த மூன்றுவருட காலப்பகுதியில் இரண்டாயிரம் மருத்துவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் பிரிட்டன், அவுஸ்திரேலியா மத்திய கிழக்கிற்கு சென்றுவிட்டனர். சிறந்த ஊதியத்தை வழங்கும் சிறந்த நேரத்தை வழங்கும் சிறந்த விடயங்கள் அனைத்தையும் வழங்கும் எல்லா இடங்களிற்கும் அவர்கள் சென்றுவிட்டனர். இலங்கையிலிருந்து வெளியேறாமலிருந்த மருத்துவர்கள் - பிடிவாதக்காரர்கள் சுயநலமற்றவர்கள் - ஊதியம் சலுகைகளை விட குறிக்கோளிற்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள். நான் அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிட்டேன். அவர்கள் தங்கள் பணிகளை இடைநிறுத்தாமல் ஆரவாரம் இல்லாமல் புகார் சொல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தனர். ஒரு இருதயநோய் நிபுணர் ஒருவர் ஒரு நோயாளிக்கு (முதியவர்) அருள்பாலிக்கும் நினைப்பு எதுவுமின்றி சரளமாக தமிழிலில் விளங்கப்படுத்திக்கொண்டிருந்ததை பார்த்தேன். ஒரு மருத்துவதாதியொருவர் தனது சொந்த குழந்தையை போல தலையணையை கவனமாக சரிசெய்வதை பார்த்தேன். குணப்படுத்துதலில் அவர்கள் மகிழ்ச்சியடைவதை பார்த்தேன். உண்மையான மகிழ்ச்சி. நான் ஒன்றை உணர்ந்தேன் - இந்த மக்கள் எங்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். நோக்கத்திலேயே அமைதி உள்ளது நோக்கமே அமைதியை ஏற்படுத்துகின்றது. எண்ணிக்கையில் காணமுடியாத செல்வம் ஆனால் கௌரவத்தில் காணக்கூடிய செல்வம். அது இங்கு தாரளமாக கிடைக்கின்றது. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் எனது தாயார் கனடாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உயர் இரத்த அழுத்தம் கவலையளிக்கும் அறிகுறிகள். ஆனால் நெறிமுறைகள் மற்றும் அதிகளவான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் சுகாதார கட்டமைப்பு எனது தாயார் மாரடைப்பினால் பாதிக்கப்படலாம் என்பதை தவறவிட்டுவிட்டது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள அரசமருத்துவமனை ஆபத்தை உடனடியாக இனம் கண்டு ஒரு சத்திரசிகிச்சையின்; துல்லியத்துடன் சிகிச்சையளித்தது. https://www.virakesari.lk/article/216581
3 months 1 week ago
யாழ் மருத்துவமனை குருதிப்பெருக்கின் மத்தியில் ஒரு கலங்கரை விளக்கம் - யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
Published By: RAJEEBAN
04 JUN, 2025 | 04:33 PM

A beacon amidst the bleeding: What Jaffna’s doctors taught me about life — Abbi Kanthasamy
malay mail
எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் பொருட்களை தேடுவதில் செலவிட்டுள்ளேன். வணிகம் பிராண்ட்கள் வீடுகள் வாக்குவாதங்கள் - எப்போதும் எதனையாவது துரத்துவது, துரத்திக்கொண்டேயிருப்பது. அடுத்த இலக்கு அடுத்த ஒப்பந்தம் மைல்கற்கள் இலாபங்களை வைத்து மதிப்பிடும் இந்த உலகில்.
ஆனால் கடந்தவாரம் இலங்கையின் வடபகுதியில் உள்ள சிறிய மருத்துவனையொன்றில் எனது தாயார் உயிருக்காக போராடுவதை பார்த்தபின்னர் எனக்கு ஒரு விடயம் நினைவிற்கு வந்தது - எல்லா வீரர்களும் கதாநாயர்களும் எப்போதும் எதனையும் துரத்திக்கொண்டிருப்பவர்கள் இல்லை எதன் பின்னாலும் ஓடிக்கொண்டிருப்பவர்கள் இல்லை.
அது குமுழமுனையில் ஆரம்பமானது. மாரடைப்பு, உண்மையானது அமைதியானது ஆனால் கடும் ஆபத்தானது.
நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எனது தாயார் முழுமையான அடைப்பினால் பாதிக்கப்பட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வலது தமனியில் கிட்டத்தட்ட 99 வீத அடைப்பு காணப்பட்டது.

அவர் பல நாட்களாக ஆபத்தான நிலையைநோக்கி அமைதியாக சென்றுகொண்டிருந்தார். மருத்துவ நூல்களில் - புத்தகங்களில் தெரிவிக்கப்படும் அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. ஒரு ஆபத்தான பாறையின் நுனியை நோக்கி அமைதியான பயணம்.
முல்லைத்தீவு மருத்துவமனையின் வைத்தியர்கள் குழுவினர் வேகமாகவும் உறுதியாகவும் செயற்பட்டனர்.
அவர்கள் ஒரு த்ரோம்பொலிடிக்கை அம்மாவிற்கு செலுத்தினர். நாங்கள் இதனை இரத்த ஓட்டத்தை தடுக்கும் இரத்த கட்டிகளை கரைக்க உடைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் என இதனை அழைப்போம். அம்மாவிற்கு தேவையாகயிருந்த மிகவும் விலைமதிப்பற்ற் நேரத்தை முல்லைத்தீவு மருத்துவர்கள் வழங்கினார்கள்.
பின்னர் அம்மாவை யாழ்ப்பாண மருத்துவமனைக்கு மாற்றினார்கள்.அங்கு போதுமான கையுறைகள் கூட இல்லாத மருத்துவர்கள் மற்றும் தாதிமார் குழுவினர் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட அம்மாவிற்கு அஞ்சியோபிளாஸ்டி சத்திரசிகிச்சையை செய்தனர். ஒரு ஸ்டெண்டை வைத்து உயிரை காப்பாற்றினார்கள். அவர்களின் வாயிலிருந்து 'மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம்" என்ற வார்த்தையை ஒரு தடவை கூடநான் கேட்கவில்லை. அந்த மருத்துவர்களின் திறமை குறித்து ஒருமுறை கூட எனக்கு சந்தேகம் எழவில்லை.
எனக்கு கடும் ஆச்சரியத்தை அளித்த விடயம் இதுதான் -
கடந்த மூன்றுவருட காலப்பகுதியில் இரண்டாயிரம் மருத்துவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் பிரிட்டன், அவுஸ்திரேலியா மத்திய கிழக்கிற்கு சென்றுவிட்டனர். சிறந்த ஊதியத்தை வழங்கும் சிறந்த நேரத்தை வழங்கும் சிறந்த விடயங்கள் அனைத்தையும் வழங்கும் எல்லா இடங்களிற்கும் அவர்கள் சென்றுவிட்டனர்.
இலங்கையிலிருந்து வெளியேறாமலிருந்த மருத்துவர்கள் - பிடிவாதக்காரர்கள் சுயநலமற்றவர்கள் - ஊதியம் சலுகைகளை விட குறிக்கோளிற்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள்.
நான் அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிட்டேன். அவர்கள் தங்கள் பணிகளை இடைநிறுத்தாமல் ஆரவாரம் இல்லாமல் புகார் சொல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தனர்.
ஒரு இருதயநோய் நிபுணர் ஒருவர் ஒரு நோயாளிக்கு (முதியவர்) அருள்பாலிக்கும் நினைப்பு எதுவுமின்றி சரளமாக தமிழிலில் விளங்கப்படுத்திக்கொண்டிருந்ததை பார்த்தேன்.
ஒரு மருத்துவதாதியொருவர் தனது சொந்த குழந்தையை போல தலையணையை கவனமாக சரிசெய்வதை பார்த்தேன்.
குணப்படுத்துதலில் அவர்கள் மகிழ்ச்சியடைவதை பார்த்தேன். உண்மையான மகிழ்ச்சி.
நான் ஒன்றை உணர்ந்தேன் - இந்த மக்கள் எங்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்.
நோக்கத்திலேயே அமைதி உள்ளது நோக்கமே அமைதியை ஏற்படுத்துகின்றது. எண்ணிக்கையில் காணமுடியாத செல்வம் ஆனால் கௌரவத்தில் காணக்கூடிய செல்வம்.
அது இங்கு தாரளமாக கிடைக்கின்றது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் எனது தாயார் கனடாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உயர் இரத்த அழுத்தம் கவலையளிக்கும் அறிகுறிகள். ஆனால் நெறிமுறைகள் மற்றும் அதிகளவான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் சுகாதார கட்டமைப்பு எனது தாயார் மாரடைப்பினால் பாதிக்கப்படலாம் என்பதை தவறவிட்டுவிட்டது.
ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள அரசமருத்துவமனை ஆபத்தை உடனடியாக இனம் கண்டு ஒரு சத்திரசிகிச்சையின்; துல்லியத்துடன் சிகிச்சையளித்தது.
https://www.virakesari.lk/article/216581
3 months 1 week ago
புதிய இணைப்பு மட்டக்களப்பு நகரில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மூன்று பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதுவரை 86 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பிலுள்ள புனிதமைக்கல் கனிஷ்ட பாடசாலையை சேர்ந்த மாணவர்களும், கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த , கல்லடி வினாயகர் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலாம் இணைப்பு மட்டக்களப்பு நகரில் மூன்று பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையினால் 44 மாணவர்கள்வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மூன்று வெவ்வேறு பாடசாலைகளில் இடைவேளையின்போது குறித்த பாடசாலைகளில் அமைந்துள்ள சிற்றுண்டி சாலைகளில் உணவு வாங்கி மாணவர்கள் உட்கொண்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதி அவ்வாறு மாணவர்கள் வாக்கி உட்கொண்ட உணவு ஒவ்வாமையினால் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவ்வுணவை உட்கொண்ட மாணவர்களுக்கு, வாந்தி, தலைசுற்று, ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தினர் துரிதமான நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக நோய்காவு வண்டிகளில் துரிதமாக மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவை தொற்றா நோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ்.உதயகுமார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். பொலிஸார் விசாரணை இதுதொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த பாடசாலைகளில் இயங்கிவரும் சிற்றுண்டிச் சாலைகளுக்கு ஒரு இடத்திலிருந்தே உணவுகள் விநியோகித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மாணவர்கள் குறித்த பாடசாலைகளில் பிட்டு வாங்கி அருந்தியுள்ளதாகவும் அந்த உணவு ஒவ்வாமை நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் https://tamilwin.com/article/food-allergy-44-hospitalized-in-batticaloa-schools-1749023774
3 months 1 week ago
புதிய இணைப்பு
மட்டக்களப்பு நகரில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மூன்று பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போதுவரை 86 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பிலுள்ள புனிதமைக்கல் கனிஷ்ட பாடசாலையை சேர்ந்த மாணவர்களும், கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த , கல்லடி வினாயகர் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு நகரில் மூன்று பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையினால் 44 மாணவர்கள்வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மூன்று வெவ்வேறு பாடசாலைகளில் இடைவேளையின்போது குறித்த பாடசாலைகளில் அமைந்துள்ள சிற்றுண்டி சாலைகளில் உணவு வாங்கி மாணவர்கள் உட்கொண்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
அவ்வாறு மாணவர்கள் வாக்கி உட்கொண்ட உணவு ஒவ்வாமையினால் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வுணவை உட்கொண்ட மாணவர்களுக்கு, வாந்தி, தலைசுற்று, ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தினர் துரிதமான நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக நோய்காவு வண்டிகளில் துரிதமாக மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவை தொற்றா நோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ்.உதயகுமார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதுதொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பாடசாலைகளில் இயங்கிவரும் சிற்றுண்டிச் சாலைகளுக்கு ஒரு இடத்திலிருந்தே உணவுகள் விநியோகித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணவர்கள் குறித்த பாடசாலைகளில் பிட்டு வாங்கி அருந்தியுள்ளதாகவும் அந்த உணவு ஒவ்வாமை நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம்





https://tamilwin.com/article/food-allergy-44-hospitalized-in-batticaloa-schools-1749023774
3 months 1 week ago
2025 ஐபிஎல் தொடரில் இலங்கை வீரருக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்! ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கிண்ணத்தை வென்றுள்ளது. அதனைதொடர்ந்து, நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், மிகசிறந்த பிடியெடுப்புக்கான விருதை சன்ரைஸஸ் ஐதராபாத் அணியில் விளையாடிய இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார். விருது ஐபிஎலில் இலங்கை வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டிவால்ட் பிரேவிஸ் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து கமிந்து மெண்டிஸ் பிடித்தமை பாராட்டுக்களுடன் பாரிய பேசுபொருளாக மாறியிருந்தது. அதன்படி, ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிக சிறந்த பிடியெடுப்பு என பேசப்பட்டு வருகின்றதுடன், அதற்கு இறுதி விருது வழங்கும் விழாவின் போது அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. விருது வென்றவர்களின் முழு பட்டியல்: சீசனின் மிகவும் மதிப்புமிக்க வீரர்: சூர்யகுமார் யாதவ் செம்மஞ்சள் தொப்பி வென்றவர்(Orange Cap): சாய் சுதர்சன் (759 ஓட்டங்கள்) தொடரின் சிறந்த பிடிப்பு (கேட்ச்) : கமிந்து மெண்டிஸ் ஊதா தொப்பி வென்றவர்(Purple Cap): பிரசித் கிருஷ்ணா (25 விக்கெட்டுகள்) ஃபேர்பிளே விருது(Fairplay Award): சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தொடரின் வளர்ந்து வரும் வீரர்: சாய் சுதர்சன் https://ibctamil.com/article/catch-of-the-season-ipl-2025-kamindu-mendis-1749020194#google_vignette @கிருபன்அண்ணை இன்னும் இரு கேள்விகளை அடுத்த ஆண்டு சேர்க்கலாமா?
3 months 1 week ago
வரலாறு நூல் வழியாக, வரலாற்று பார்வையில், treaty இன் சில அம்சங்களை தெரிந்து விட்டு, எந்த ஒரு treaty இன் அடிப்படை தன்மையை பற்றி (என்னவென்று சொல்வது) மு... கதை சொல்லுபவரை என்னவென்று சொல்லுவது. நீங்கள் சொல்லி இருப்பதில் இருந்து தெரிவது ஒரு treaty என்றால் என்ன என்பது அடிப்படையாக தெரியாத கதை. எந்த அறிவை எங்கு பாவிக்க கூடாது என்று தெரிய வேண்டும். எந்த அறிவை எங்கு பெறவேண்டும் என்பதும் தெரிய வேண்டும். ( அதுக்கு முதலில் சிந்தனை (எதை அறிந்தாலும்) இருக்க வேண்டும். (நான்) குறிப்பிட்ட உகாரணத்தில், குறிப்பிட்ட இடங்களுக்கு என்று சொல்லப்பட்டு இருந்தால் அல்லது குறிப்பிட்ட செய்ம்மதி முறைகள் என்று சொல்லி இருந்தால், வெளிப்படையாவே கண்காணிப்பு புலத்தை குறுகச் செய்கிறது. சாதாரண விளைவு. அனால் நான் சொல்லியது, (இணைக்கப்பட்ட) அமெரிக்கா ராஜாங்க அமைச்சின் மிக உயரத்த ஒப்பந்த அமைப்பின் விளக்கம் மற்றும் வரைவிலக்கணத்தை கொண்டு. இந்த treaty இன் annexes, appendices, schedules இல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கலாம். ) அறிந்தவற்றை எங்கு பாவிக்க கூடாது என்று தெரிவதும், குறிப்பிட்ட அறிவை எங்கு பெற வேண்டும் தெரிவதும், எந்த வழியாகவும் (வாசிப்பும் உள்ளடக்கம்) அறிவை பெறுவதிலும் முக்கியம். சுருக்கமாக, சிந்தனை முக்கியம்.
3 months 1 week ago
யாழில் பல இலட்சத்திற்கு ஏலம் போயுள்ள மாம்பழம் யாழில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்திலே இந்த ஏலம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் நாளான நேற்று மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. வெளிநாடுகளிலும் இருந்தும் இந்த மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது. இதன் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள் குறித்த மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர். இதனால் மாம்பழத்தின் விலையும் உயர்ந்து கொண்டு சென்றது. இவ்வாறு பல இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது. 15 நாள் திருவிழா இதன்போது வெளிநாட்டில் அதாவது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அடியவர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் (4 60 000) ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார். இதன் போது ஆலய நிர்வாக சபையினரால் ஏனைய சில பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டிருந்த நிலையில் அதனையும் அடியவர்கள் ஏலத்தில் வாங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த ஆலயத்தின் 15 நாள் திருவிழாவின் தொடராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும் திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை பூங்காவனத் திருவிழாவும் புதன்கிழபை வைரவர் உற்சவமும் இடம்பெற்று திருவிழா நிறைவடைய உள்ளது. https://tamilwin.com/article/mango-auctioned-for-millions-in-jaffna-1749027058
3 months 1 week ago
மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல் வவுனியாவில் ஆசிரியையான 32 இளம் குடும்ப பெண் கணவனால் கழுத்து வெட்டி கொல்லப்பட்டமைக்கான காணம் வெளியாகியுள்ளது. தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கொடூர சம்பவம் நேற்றையதினம் (03) இடம்பெற்றிருந்தது. பெண்ணின் கணவர் வழங்கிய வாக்கு மூலம் இதனையடுத்து கைது செய்யப்பட்ட 35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் என்ற இளம் குடும்பஸ்தரான மரணமடைந்த பெண்ணின் கணவர் வழங்கிய வாக்கு மூலத்தில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவர்ணலதா என்ற 32 வயதான ஆரம்பப் பிரிவு ஆசிரியரான இவர் கணவனால் கொலை செய்யப்பட்டமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த போதிலும் கணவனினால் புளியங்குளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் தனது மனைவி ஏற்பட்ட சந்தேகமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தான் கொழும்பில் தங்கி இருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளம் குடும்பஸ்தர், நீண்ட காலமாக தனக்கும் மனைவிக்கும் இடையில் பல சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது தொலைபேசிக்கு ஒரு 21 வயது இளைஞனினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களால் தனது கோபம் உச்சம் அடைந்த நிலையில் தான் கொழும்பிலிருந்து நொச்சிக்குளம் கிராமத்திற்கு வருகை தந்து என் மனைவியுடன் பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் இதில் தீர்வு கிடைக்காத நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம், மானிப்பாய் சென்று பின்னர் திங்கட்கிழமை மீண்டும் வருகை தந்து மனைவியை தாய் சேய் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்த அவர், இந்த குழந்தைக்கு காரணம் யார் என்பது தொடர்பில் தனக்கு நீண்ட கால சந்தேகம் ஏற்பட்டு இருந்ததாகவும் இது தொடர்பாக தன் மனைவியிடம் கேட்டதன் பிரகாரம் எவ்விதமான பதிலும் கூறவில்லை. மேலதிக விசாரணை நேற்று (03.06) காலை அவர் அதை ஒத்துக் கொண்டதையடுத்து தனது மனைவியை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியே அவர் சின்ன பூவரசங்குளம் காட்டுப்பாதையினால் அழைத்து வந்திருக்கின்றார் என்றும் தெரிவித்திருந்தார். அந்த காட்டுப் பாதையின் வழியே 200 மீட்டர் அளவில் சென்றதன் பின்னர் மனைவி ஏன் இந்த வீதியால் செல்கிறீர்கள் என கேட்டபோது, தான் அந்த குறித்த 21 வயது இளைஞன் இந்த பகுதிக்கு வருவதாகவும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண்பதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறதாகவும் கூறியதாகவும் பொலிசாரிடம் கூறி இருக்கின்றார். இதன் பின்னர் தான் அவரை கொலை செய்ததாகவும் வந்ததாகவும் புளியங்குளம் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிளையும், தலையையும் கைப்பற்றியதோடு அவரையும் கைது செய்திருந்தனர். இதனை அடுத்து உயிரிழந்து இறந்த பெண்ணின் கணவன் சுகிர்தரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்ன பூவரசங்குளம் காட்டுப் பகுதிக்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி இருந்தனர். குறித்த பகுதிக்கு தடயவியல் பொலிசாரும் வருகை தந்து அங்கிருந்த சான்று பொருட்களை சேகரித்ததோடு, குறித்த விடயம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://tamilwin.com/article/vavuniya-teacher-murder-shocking-news-1749018816
3 months 1 week ago
என்னை பொறுத்தமட்டில் நான் ஒரே ஒரு விடயத்தை மட்டும்தான் பொய் என ஐயம் திரிபற நம்புகிறேன். அது மதம். கடவுள் எனும் ஒரு சூப்பர் பவர் இருக்கிறதா இல்லையா என்றால் என்பதில் தெரியவில்லை என்பதே - ஆனால் நிச்சயமாக அப்படி ஒரு கடவுள் இருப்பின் அவரின் மார்க்கமாக, ஏஜென்சிகளாக இப்போ நாம் அறியும் எந்த மதமும் இல்லை. சகல மதங்களும் மனிதரால், மனிதரை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட செயன்முறைகளே என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. நானாக தேடிப்போவதில்லை ஆனால் கோவில்கள், சர்சுகள், மசூதிகள், விகாரைகள் போக வாய்ப்பு வரும் போது போகாமல் தவிர்ப்பதும் இல்லை. கண்மூடுவதும் உண்டு, கை கூப்புவதும் உண்டு. ஆனால் எல்லாமுமே எந்த இலயிப்பும் இல்லாமல்தான். மனதில் பிரார்தனைகள் வைப்பதும் மிக குறைவு. இப்போதெல்லாம் இல்லை என்றே சொல்லலாம். எந்த மத குருவையும் பார்த்து 1% கூட பக்தியோ, பயமோ, மரியதையோ வருவதில்லை. அதே போல் ஒரு அணுகுமுறைதான் சாத்திரம், பிதிர்கடன், குறித்த நாட்களில் மரக்கறியாய் இருப்பது, போன்றவற்றிலும். சிலதை பெற்றோர் சொல்லியபடி செய்ய வேண்டியது கடமையாகிறது. சிலது பழக்கதோசமாக தொடர்கிறது. சிலது கொஞ்சம் open minded ஆகத்தான் இருந்து பார்ப்போமே என்ற எண்ணத்தால் ஆர்வம் காட்டுவது. இதே போல் சில மூடபழக்கம் என தெரிந்தும் கைவிடாதவை உண்டு, எவர் கையாலும் நல்லெண்ணை வாங்க தயங்குவது, மாலை மங்கிய பின் பணத்தை கொடுக்காமல் விடுவது இப்படி சில. ஆனால் இவை எதையும் உண்மைதான் என முட்டு கொடுத்து என்னால் வாதாட முடியாமல் இருக்கிறது. இவை உண்மையா, புரட்டுக்களா என சொல்லியே ஆக வேண்டும் என நிர்பந்தித்தால் - புரட்டு என்பதே என் பதிலாக வரும். அநேகமாக சிறுவயதில் இருந்து என்னை condition படுத்தியதால் இவற்றை கைவிட முடியாது ஒரு ஆழ்மன பயத்தால் தொடருகிறேன் என்றே நினைக்கிறேன். ஆனால் இப்படி வாழ்வது இலகுவாக இருக்கிறது. நாம் அனைவரும் ஏற்கும் உண்மை நம் காலம் மட்டுப்பட்டது என்பதே - அதை கொஞ்சம் இலகுவாக கழித்து விட்டு போனால்தான் என்ன?
3 months 1 week ago
சாய் சுதர்சன் . ......... ! 😂
3 months 1 week ago
3 months 1 week ago
3 months 1 week ago
InsideSport The pillars of RCB legacy—Virat Kohli, Chris Gayle and AB de Villiers🔴 ...... ! 😂
3 months 1 week ago
போட்டியை திறம்பட நடாத்திய கிருபனுக்கும் , போட்டியில் வெற்றி பெற்ற நந்தனுக்கும், போட்டியில் முன்னிலை பெற்ற ரசோதரன் , புலவர், செம்பாட்டன் ஆகியோருக்கு பாராட்டுகள். சென்ற வருடம் கிருபன் நடாத்திய ஐபிஎல், T20 உலகக்கோப்பை போட்டி இரண்டிலும் 3 ம் இடம் பெற்றேன். இந்த வருடம் சாம்பியன் கிண்ணம், ஐபிஎல் இரண்டிலும் 5 ம் இடம் பெற்றேன். அடுத்த வருடம் நடைபெற்றவுள்ள T20 உலக கிண்ணப் போட்டி, ஐபிஎல் இரண்டிலும் 7 ம் இடம் கிடைக்கும் போல. 🤔 நேற்றைய போட்டியில் பஞ்சாப் வென்று இருந்தால் நான் 3 இடத்தை பெற்று இருப்பேன்.
3 months 1 week ago
உண்மையில் அக்கறை கொண்டு தான் உங்கள் கேள்வியும் என்ற அடிப்படையில். ஆனால், இதை ஓரளவு விபரம் இல்லாமல் அறிவது கடினம், ஆயினும், இயன்ற அளவு சுருக்கி விளக்கம். முதலில் உங்களுக்கு treaty என்றால் என்ன என்பதற்கு உங்களுக்கு அடிப்படையான புரிவு இருக்க வேண்டும் மிகவும் சுருக்கமாக, அடிப்படையாக, treaty என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசுகளுக்கு இடையில் செய்யப்படும் ஒப்பந்தம். ஒப்பந்தம் அமுலுக்கு வரும் நேரத்தில் இருந்து, குறித்த காலம் வரையுள்ள எதிர்காலத்தில் (treaty காலாவதி ஆகும் வரையும். காலாவதி இல்லாததும் இருக்கிறது) கட்டாயமாக, துல்லியமாக நடக்க அல்லது செய்யப்பட வேண்டிய விடயத்தையும், அதனுடன் சம்பந்த்ப்பட்ட அனைத்து விபரங்கள், செயற்பாடுகள் போன்றவற்றை ஆவணமாக உள்ளடக்கியது (சர்வதேச சட்ட வலுவுள்ளது). அரசுகளுக்கு இடையில் செய்யப்படுவதால், இதில் அரசுகளுக்கு சிறப்புரிமை, ஏகோபித்த உரிமை (உ.ம். காலவதியாக முதல் விலத்துவது, அப்படி விலத்துவதற்கு இடம் இருந்தால்). இந்த treaty இல் மிக முக்கியமானது, முழு அரசும் ஏற்றுக்கொள்வது என்பது. (அதை, முழு அரசும் ஏற்றுக்கொள்வது என்பதை, ratification என்று ஆங்கிலத்தில் அழைப்பது). ஒவ்வொரு அரசுக்கும், அதன் தமையை பொறுத்து, இந்த முழு அரசும் ஏற்றுக்கொள்ளும் ( ratification) முறை வேறுபாடும். மேற்கில், பாராளுமன்றம் அல்லது அதை ஒத்த அரசாங்க அவையால் பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்டுவது முழு அரசும் ஏற்றுக்கொள்வது என்பதாகும. (UK) போல முடியும் அரசில் ஒரு பகுதியாக இருந்தால், அதுவும் ஏற்றுக்கொள்ளவேண்டும்; இது இப்பொது சம்பிரதாய ஏற்பாடு. அப்படி முழு அரசாலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒப்பந்தங்கள் treaty அல்ல. இது (treaty) எவ்வாறு அரசுகளுக்கு இடையில் வந்தது என்பதற்கே தனி வரலாறு இருக்கிறது. ஒரு காலம் இருந்தது treaty ஐ ஒரு அரசு (அல்லது அரசுகள்) நிறைவேற்றவில்லை என்றால், வலோற்கராமாக நிறைவேற்ற படைபலத்தை மற்ற அரசு அல்லது அரசுக்கள் பிரோயோகிக்கலாம் என்று. (இப்பொது treaty ஐ நிறைவேற்ற படைபலம் பாவிப்பது மிக அரிது ஆயினும், ஏனெனில் சர்தேச சட்டம் மற்றும் UN தடுப்பதால். ஆனால் வெளிப்படையாக நடப்பது உக்கிரைன் இல், அதன் முன் நடந்தது இராக்கில் மேற்கால், நேட்டோ ஆல் 2003 இல். இரண்டு சந்தர்ப்பத்திலும் வேறு முக்கிய நோக்கங்கள் இருந்தாலும்.) இனி சொன்ன விடயத்துக்கு அல்லது நீங்கள் கேட்ட விடயத்துக்கு. வரலாற்று நூலில் சொல்லப்பட்டு இருக்கும் 1991 ஆம் ஆண்டு அளவில், மற்றும் அதுக்கு முதல் இருந்த அணுஆயுத ஒப்பந்தங்களை (treaty). அந்த நூல்களில் அவற்றை பற்றி சொல்லப்பட்டு இருப்பதை கொண்டு, இப்போது இருக்கும் அணுஆயுத ஒப்பந்தங்களுடன் (treaty) ஒப்பிட முடியாது, கூடாது என்பதே சொல்லியது. 1. ஒரு ஒப்பந்தத்தை (treaty) வரலாற்று நூலில் முழுமையாக சொல்ல முடியாது. 2. அப்படி வரலாற்று நூலில் சொல்லப்பட்ட இருக்கும் அணுஆயுதா ஒப்பந்தங்களை பற்றி வரலாற்று பார்வை, நியாயாதிக்கமே தவிர, அந்த ஒப்பந்தங்களின் (சட்ட பூர்வ) இறுக்க தன்மை பற்றி அல்ல. 3. அவை 1991 காலப்பகுதி ஒப்பந்தங்கள் (அநேகமாக 1991 க்கு முதல் அமுலுக்கு வந்து இருக்கும்), அவை காலாவதி ஆகி விட்டன 4. இவற்றின் அடிப்படையில் இப்போதைய அணுஆயுத ஒப்பந்தங்கள் (treaty) பற்றி சொல்ல முடியாது, கூடாது 5. ஏனெனில் தொழில்நுட்பம், பொருளாதாரம், பூகோள அரசியல் போன்றவை பெருமாற்றம் கண்டுவிட்டது. இதனால் தான் ஒவொரு குறிப்பிட்ட காலத்துக்கு (பொதுவாக 10 வருடங்களுக்கு) அணுஆயுத ஒப்பந்தம் (treaty). பின்பு புதிய ஒப்பந்தம் அல்லாதது முந்தைய ஒப்பந்த மீட்கப்பட்டு காலமாற்றத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டு நீடிக்கப்படுவது. சிலவேளைகளில், ஒப்பந்தங்கள் அமுலில் இருக்கும் போதே திருத்தங்கள், மாற்றங்கள், உ.ம். புதிய தொழில்நுட்ப வளர்ச்சி (உ.ம். ஆக அணுஆயுதம் மறைக்கப்படுவதை) மறைப்பதை சாத்தியம் ஆகிவிட்டது என்பதால். இன்னொரு உதாரணம், புதிய தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் மரபு வழி ஏவுகணையும், அணு ஆயுத ஒப்பந்தத்துக்குள் (treaty) வரும் அணு ஆயுத ஏவுகணைகளும் உ.ம் தூரம், வீச்சால் குறுக்கிட்டால், அவற்றை வேறுபடுத்துவதற்கு. வேறு உதாரணமாக, ஒரு அரசு, மற்ற அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதை உளவு மூலம் சந்தேகித்து அல்லது உறுதிப்படுத்தி, நேரடியாக சரிபார்க்கும் முறையை மாற்றுவது அல்லது நேரடி சரிபார்த்தலுக்கு மற்ற அரசுக்கு கொடுக்க வேண்டிய அறிவுறுத்தல் அவகாசத்தை (notice) குறைப்பது. இது தன மாற்றம் என்பதை குறித்து சொல்லமுடியாது. 6. 1991 அம ஆண்டு ஒப்பந்தங்கள் அந்த நேரத்துக்கு சரி. 7. அவற்றை (1991 அம ஆண்டு ஒப்பந்தங்கள்) வரலாறு நூல்கள் வழியாக அறிந்து, இப்போதைய ஒப்பந்தங்களுடம் ஒப்பிடுவது மிகவும் தவறான முறை, உண்மையில் செய்யக் கூடாது. இதையே சொன்னது. ஆனால், இது வெளிப்படை. இதுக்கு பின்னணியாவது - எல்லா அரசுகள் எப்போதுமே கபடத்தனம் கொண்டு இருப்பது. வரலரசுகளுக்கு, அணுஆயுத வல்லரசுகளுக்கு எப்போதுமே பாதுகாப்பு போதாது. அவற்றின் அடிப்படை பார்வை அவற்றின் இருப்பை தக்கவைகப்பது எப்போதுமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்பது . எனவே எந்த வல்லரசும் எவ்வளவு ஏமாற்ற முடியுமோ அந்த அளவுக்கு எத்தனிக்கும். அணு ஆயுதத்தில் இருப்பை அடகுவைத்தே ஒப்பந்தம் (treaty) செய்வது. எனவே காற்றுபுக முடியாத இறுக்கமாக ஒப்பந்தம் இருக்க வேண்டும். முக்கியமாக நிறைவேற்றுவது (அணுஆயுதம், மற்றும் அதன் வழங்கல் அமைப்பை எண்ணிக்கை, வினைத்திறன் போன்றவற்றை சரிபார்ப்பது அல்லத் குறைப்பது. ஏனெனில் ஒரு அரசு குறைத்து, மற்ற அரசு அதே அளவு குறைக்கவில்லை என்றால், குறைத்த அரசின் பயம் இன்னும் கூடும்) காற்றுப்புகமுடியாத தன்மை கொண்டதாக இருத்தல் வேண்டும்.
3 months 1 week ago
3 months 1 week ago
முதல் மூவர் உட்பட பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் . .........! கிருபனின் உழைப்பை நன்றி என்னும் ஒரு சொல்லில் சொல்லிட முடியாது ....... மிக மிக நன்றி கிருபன் . ....... ! இந்தத் திரியை கலகலப்பாக வைத்திருந்த உறவுகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் . ....... ! இந்தக் கொண்டாட்டத்துக்கு களம் அமைத்துத் தந்த நிர்வாகத்துக்கும் மிக நன்றி . .........! அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ........... ! இப்படிக்கு : பிரீத்தி ஜிந்தா & அவரின் குடும்பம் ........! 😂
3 months 1 week ago
அப்படி இருக்கவில்லை. இருப்பின் அவை என்ன என பட்டியல் இடுங்கள் என்றேன். உங்களால் முடியவில்லை. ❤️🙏
3 months 1 week ago
தமிழகத்தில் கன்னட படங்கள் வெளியாகாது” - கமலின் ‘தக் லைஃப்’ விவகாரத்தில் வேல்முருகன் எச்சரிக்கை 04 JUN, 2025 | 10:01 AM சென்னை: “கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 பாகங்கள் உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறது. இதனை கன்னட மொழி திரைப்படங்களாக பார்க்காமல், திரைப்படமாக மட்டுமே தமிழர்கள் பார்த்தனர். ஆனால், கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் மொழி அரசியலாக பார்க்கப்பட்டிருக்கிறது. எனவே, கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக தடை இருக்கும் பட்சத்தில், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்தவொரு கன்னட திரைப்படமும் வெளியாகாது” என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் மாபெரும் கலைஞன் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னட மொழி’ என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கமல்ஹாசன் பேசியது சரியே. ஆனால், கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் தமிழ், தமிழர்களுக்கு எதிரான இன வெறியைத் தூண்டும் நோக்கத்துடன் கமல்ஹாசன் உறவாகப் பேசிய செய்திகளை தவறாக சித்தரித்து கர்நாடகத்தில் ஒட்டப்பட்டிருந் ‘தக் லைஃப்’ திரைப்பட சுவரொட்டிகளையும், பேனர்களையும் கிழித்தெறிந்து போராட்டங்களைக் நடத்திக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன. கன்னட சினிமா வர்த்தக சபையும் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட அனுமதி கிடையாது எனக் கூறியுள்ளது. அதற்கும் ஒருபடி மேலே சென்று, கன்னட இனவெறி அமைப்புகளை ஆதரிக்கும் வகையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியும், முதல்வருமான சித்தராமையா மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோர், கமல்ஹாசனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, கமல்ஹாசன் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதாவது, கமல்ஹாசன் என்ன வரலாற்று ஆய்வாளரா? மொழியியல் வல்லுநரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிந்து இருக்கும். கமல்ஹாசனோ அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்த கூடாது. கன்னடம் தமிழில் இருந்து வந்ததற்கான ஆதாரம் உள்ளதா என பல்வேறு கேள்விகளை நீதிபதி நாகபிரசன்னா எழுப்புகிறார். அதுமட்டுமின்றி, நானே இந்த திரைப்படத்தை பார்க்கலாம் என நினைத்தேன். ஆனால் இந்த விவகாரத்தால் பார்க்க முடியாது. கமல்ஹாசன் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். பேசிய கருத்தை திரும்ப பெற முடியாது. மன்னிப்பு கேட்காவிடில் கர்நாடகாவில் படம் ஓட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்? மன்னிப்பு ஒன்று தான் தீர்வு. இதுதான் நீதிபதி நாகபிரசன்னாவின் கேள்விகள். அவர் நீதிபதியாக இல்லாமல், ஒரு கன்னடராக இருந்து அக்கேள்விகளை எழுப்பியுள்ளார். கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில், தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் தான், கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையாவும், பாஜக மாநிலத் தலைவரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தான் நீதிபதி நாகபிரசன்னாவும் பேசியிருக்கிறார். இது தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை உருவாக்கி தமிழர் எதிர்ப்பை மேலும் மேலும் தூண்டி விடுகின்ற செயலாகும். நீதிபதியாக இருப்பவர்களுக்கு மொழி, இனம், மதம் வேறுபாடு கிடையாது என்பார்கள். ஆனால், நாகபிரசன்னா ஒரு கன்னடராக மட்டுமே இருந்து தீர்ப்பளித்துள்ளார். அவரது இனப்பற்றை போற்றுகிறோம். கர்நாடகாவில் இதுவரை தமிழர்களுக்கு நீர் தான் மறுக்கப்பட்டு வந்தது. இப்போது நீதியும் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், நீதிபதி நாகபிரசன்னா கடந்த கால வரலாற்றை மறந்து விட்டு பேசியுள்ளார். கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 பாகங்கள் உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறது. இதனை கன்னட மொழி திரைப்படங்களாக பார்க்காமல், திரைப்படமாக மட்டுமே தமிழர்கள் பார்த்தனர். ஆனால், கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் மொழி அரசியலாக பார்க்கப்பட்டிருக்கிறது. எனவே, கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியாக தடை இருக்கும் பட்சத்தில், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்தவொரும் கன்னட திரைப்படமும் வெளியாகாது. அதே நேரத்தில், தமிழ் திரைப்படத்துறையில் உள்ள சங்கங்கள் முன்வந்து, கர்நாடகாவில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், தமிழ் திரைப்படங்களில் கன்னட நடிகர்களையோ, தொழில்நுட்ப கலைஞர்களையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாபெரும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தங்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விவகாரத்தை பயன்படுத்தி கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், கர்நாடக தமிழர்களின், தமிழ்நாட்டு தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்வினையாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையோடு கூறிக்கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/216529