Aggregator

ரயில் சாரதியின் சாதுரியத்தால் தடுக்கப்பட்ட பாரிய விபத்து !

3 months 1 week ago

05 Jun, 2025 | 03:31 PM

image

பாணந்துறையிலிருந்து மருதானைக்கு இன்று வியாழக்கிழமை (5) காலை, புறப்பட்ட ரயில் எண் 328, தானியங்கி ஒளி சமிக்ஞை 171 ஐ நெருங்கியபோது, ரயில் செல்வதற்கான பச்சை சமிக்ஞை காட்டப்பட்ட போதும்  எதிரில் அதே தண்டவாளத்தில் ரயில் (S-11 சிவப்பு ரயில்)  ஒன்று  நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ரயில் சாரதியில் சாதுரியத்தால் பாரிய விபத்தொன்று தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பான சமிக்ஞைகளை பொருத்துமாறு கோரி ரயில் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே தொழிற்சங்க செயலாளர் தெரிவித்தார்.

பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான சமிக்ஞை கோளாறு குறித்த தகவல் கிடைத்துள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிக்கலை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் மார்க்கங்களில் கரையோர மார்க்கமும் ஒன்றாக இருப்பதால் குறிப்பாக இந்த சம்பவத்தையடுத்து பயணிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். 

ரயில் சாரதியின் சாதுரியத்தால் தடுக்கப்பட்ட பாரிய விபத்து ! | Virakesari.lk

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

3 months 1 week ago
05 Jun, 2025 | 04:40 PM (எம்.நியூட்டன்) சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன் தெரிவித்தார். உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்துகள்களை முன்வைக்கையில் அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது. உயிர்கொல்லி போதை மாத்திரையை வடக்குக்கு கொண்டு வரும் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்திடமிருந்து அந்த மாத்திரைகள் விநியோகிக்கும் சங்கிலியை கண்காணித்து சோதனை செய்தாலே இதனை இலகுவாக கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றார். சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி | Virakesari.lk

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

3 months 1 week ago

05 Jun, 2025 | 04:40 PM

image

(எம்.நியூட்டன்)

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன் தெரிவித்தார்.

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை  நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்துகள்களை முன்வைக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

 மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது.

 உயிர்கொல்லி போதை மாத்திரையை வடக்குக்கு கொண்டு வரும் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்திடமிருந்து அந்த மாத்திரைகள் விநியோகிக்கும் சங்கிலியை கண்காணித்து சோதனை செய்தாலே இதனை இலகுவாக கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றார்.

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி | Virakesari.lk

மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் சமர்பிப்பு

3 months 1 week ago
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் தனிநபர் பிரேரணையாக மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் வியாழக்கிழமை (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் வழிமொழிந்தார். பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி கடந்த மே 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் 2017ஆம் ஆண்டில் செப்டம்பர் 21ஆம் திகதி வலுவிலிருந்த 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தோ்தல்கள் சட்டத்தின் ஏற்பாடுகள் 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கச் சட்டத்தினால் அதற்குச் செய்யப்பட்ட திருத்தங்கள் எவ்வாறிருப்பினும், 2017 செப்டம்பர் 22 ஆந் திகதியிலிருந்து தொடங்குகின்றதும் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகின்ற திகதி வரைக்குமான காலப்பகுதியின்போது செய்யப்பட்ட ஏதேனும் செயலுக்குப் பங்கமின்றிஇ அத்தகைய செயல் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு ஒவ்வாதனவாகவிராத அளவுக்குஇ இச்சட்டம் வலுவுக்குவருகின்ற திகதியிலிருந்து பயனுறுவதாக நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் நேற்றையதினம் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் சமர்பிப்பு | Virakesari.lk

மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் சமர்பிப்பு

3 months 1 week ago

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் தனிநபர் பிரேரணையாக   மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் வியாழக்கிழமை (05)  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் வழிமொழிந்தார். பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி கடந்த மே 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அந்த வர்த்தமானி அறிவித்தலில் 2017ஆம் ஆண்டில் செப்டம்பர் 21ஆம் திகதி வலுவிலிருந்த 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தோ்தல்கள் சட்டத்தின் ஏற்பாடுகள் 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கச் சட்டத்தினால் அதற்குச் செய்யப்பட்ட திருத்தங்கள் எவ்வாறிருப்பினும்,

2017 செப்டம்பர் 22 ஆந் திகதியிலிருந்து தொடங்குகின்றதும் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகின்ற திகதி வரைக்குமான காலப்பகுதியின்போது செய்யப்பட்ட ஏதேனும் செயலுக்குப் பங்கமின்றிஇ அத்தகைய செயல் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்கச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு ஒவ்வாதனவாகவிராத அளவுக்குஇ இச்சட்டம் வலுவுக்குவருகின்ற திகதியிலிருந்து பயனுறுவதாக நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய  இலங்கைத்   தமிழரசுக் கட்சியின்   பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் நேற்றையதினம் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் சமர்பிப்பு | Virakesari.lk

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ்

3 months 1 week ago
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டக்ளஸ் இதனைத் குறிப்பிட்டார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்துக்கு வருகை தந்த சிவஞானம், வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ் | Virakesari.lk

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ்

3 months 1 week ago

image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து  பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டக்ளஸ் இதனைத் குறிப்பிட்டார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்துக்கு வருகை தந்த சிவஞானம்,  வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ்  | Virakesari.lk

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
இப்படியான சம்பவங்கள் ஒரு சமூகத்தையே விளிம்பு நிலைக்கு கொண்டு வருகின்றது. இங்கு சிலர் அவதானித்தது போல் சமூக ஊடகங்களில் கொலை செய்தவருக்கு வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள் தெரிவிக்கும் பல கருத்துக்கள் பரவலாக உள்ளன. சில தினங்கள் முன் அல்சகீராவில் ஒரு செய்தி பார்த்தேன். அதில் 17 வயதான சமூக ஊடகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சிறுமி பாகிஸ்தானில் அவரது வீட்டில் வைத்து நெஞ்சில் இரு தடவைகள் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். 22 வயது மதிக்கத்தக்க கொலையாளி பாகிஸ்தானின் இன்னோர் இடத்தில் வசிப்பவர் மிக நீண்ட பிரயாணம் செய்து சிறுமியை சந்திக்க வந்து கொலையை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். காவல்துறையினர் அவரை பிடித்துள்ளதாக கூறியுள்ளார்கள். எவ்வளவு சாதாரணமாக கொலையை செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சி ஏற்படுகின்றது. கொலை குற்றங்களுக்கு மரண தண்டனை இலங்கையில் நிறைவேற்றப்படுவது கொலை குற்றங்கள் செய்யப்படுவதை குறைக்கலாம்.

அரசியல் தலையீடுகளால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தோல்வி! அனுர வெளியிட்டுள்ள அறிவிப்பு!

3 months 1 week ago
பொருளாதார வெற்றிகள் மட்டும் ஒரு நாட்டின் முழுமையான அபிவிருத்திக்கு போதுமானதல்ல என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல் 66,000க்கும் மேற்பட்டோர் இதுவரையில் தங்களது தேர்தல் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் சங்கு, சைக்கிள் கூட்டணி மற்றும் தமிழ் அரசுக் கட்சி ஆகியவை, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை கோரியதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு அரியாலை - செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் நேற்றும் தொடர்ந்த அகழ்வுப் பணியில் மேலும் 6 எலும்புக்கூடு எச்சங்கள் அடையாளம்

ஒப்பந்தங்கள் மூலம் மில்லியன் கணக்கான டொலர் ரணில், மஹிந்த மோசடி! அரசினால் அம்பலம்!

3 months 1 week ago
உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு முல்லைத்தீவு பொலிஸ் பிரிவின் குருந்தூர் மலை பகுதியில் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த நேரம் கைதுசெய்யப்பட்ட விவசாயிகள் இருவரும் விடுதலை வடக்கு வைத்தியசாலைகளில் மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கான விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை எந்தவொரு கணக்காய்வு நடவடிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டு

ஈரான், ஆப்கான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை – டிரம்ப்

3 months 1 week ago
ஏதிரோலி எல்லா வாக்கு போட்ட மக்களிடமும் கேட்க வேண்டும், அவர்கள் நன்கு படித்த பகுத்தறிவுள்ள அமெரிக்கர்கள் என நினைக்கின்றேன்😁💙

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
சோதிடம் கூறும் ஒரு சாமியாரிடம் சேர்ந்து வேலை செய்த நபர் ஒருவர் வழங்கிய பேட்டி ஒன்று பார்ததேன். பிறக்கப்போகும் பிள்ளை ஆணா, பெண்ணா என்று யாராவது தம்பதிகள் வந்தால் ஒரு துண்டு சீட்டில் பெற்றோர் பெயருடன் பெண்பிள்ளை என்று எழுதி அதை ஒரு உறையில் போட்டு பூஜை செய்துவிட்டு, தம்பதியினரிடம் மாற்றி கூறுவாராம். அதாவது ஆண்பிள்ளை என்று கூறுவாராம். பின்னர் அந்த கவரை கடவுள் சிலைக்கு கீழ் வைத்து விட்டு உங்கள் குழந்தைக்காக தினமும் பூஜை செய்யப்போவதாக கூறுவாராம். ஆண்பிள்ளை பிறந்தால் அவர் சொன்னது பலித்து விட்டது என்று அந்த கவரை திரும்ப உடைக்காமல் அப்படியே அமுக்கிவிடுவாராம். தற்செயலாக பெண்பிள்ளை பிறந்தால் அவர்களிடம் நான் பெண்பிள்ளை என்று தானே உங்களுக்கு கூறினேன் என்று கதையளப்பாராம். பெற்றோர் நம்பவில்லை என்பதால் கவரை அவர்கள் முன்பாகவே பிரித்து அதில் பெண்பிள்ளை என்று எழுதியிருப்பதை காட்டுவாராம். பெற்றோரும் நாம் தான் தவறாக விளங்கி விட்டோம் சாமி சரியாக தான் சொல்லியிருப்பார் என்று திருப்தியடைவார்களாம்.

யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்

3 months 1 week ago
வைத்தியசாலையில் பணிபுரிந்த, பணிசெய்யும் சிலரிடமிருந்து நான் கேள்விப்பட்ட வரையில், சில அரசியல்வாதிகள் பாதாள உலகில் குண்டர்களை வைத்துத் தங்கள் காரியங்களைச் சாதிப்பதுபோன்று வைத்தியர் சத்தியமூர்த்தியும் வைத்தியசாலையில் பணிபுரிவோரில் சிலரைத் தனக்கு ஆதரவாகச் செயல்பட வைத்துத் தன் காரியங்களைச் சாதிப்பதுபோல் தெரிகிறது.😳

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
மன்னிக்கவும் வாலி, நீங்கள் கூறியது போல பெண்கள் சிந்திக்க வெளிக்கிட்டால் இலங்கையில் உள்ள பல ஆயிரம் ஆண்களின் தலை எப்போதோ உருண்டிருக்கும். இலங்கையின் ஆண்களின் ஜனத்தொகையில் பாரிய வீழ்சசியும் ஏற்பட்டிருக்கும். மாதவியிடம் சென்று வந்த கோவலனை கண்டிக்காமல் வரவேற்று பணிவிடை செய்த காரணத்தால் அந்த கண்ணகியை இன்றும் கற்புக்கரசியாக கொண்டாடி கோவில் கட்டி கும்பிடும் சமூகமல்லவா! கண்ணகி அன்று இதை செய்திருந்தால் பாதகி என்றிருப்பார்கள்.

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
1 தொடக்கம் 9 வரையிலான எண் சோதிடத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. காரணம் எனது அனுபவத்தில் அந்தந்த எண்களுக்குரியவர்களுக்கு ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு என்பதை அவதானித்துளேன். உதாரணத்திற்கு திகதி எண் 1ல் பிறந்தவர்கள் எல்லா விடயங்களிலும் உச்சத்தில் இருப்பார்கள். இதே போல் ஏனைய திகதிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்களை நான் பார்த்துள்ளேன். ஐரோப்பியர்கள் 13ம் இலக்கத்தை கொஞ்சம் ஒதுக்கி வைப்பார்கள்.பல விடுதிகளில் 13ம் இலக்க அறை இருக்காது.