Aggregator
களைத்த மனசு களிப்புற ......!
மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ்
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
“அகற்றும் பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக” மாற்றி விநியோகிக்கும் திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka இணைந்து ஆரம்பம்
கிளிநொச்சி மகப்பேற்று வைத்தியசாலையினை செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை
கிளிநொச்சி மகப்பேற்று வைத்தியசாலையினை செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை
Published By: VISHNU
05 JUN, 2025 | 08:59 PM
கிளிநொச்சி மாவட்ட பொதுச் மருத்துவமனையில் புதிய மகப்பேறு வைத்தியசாலை வளாகத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் வியாழக் கிழமை (5) அளுநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டியமைக்கப்பட்ட புதிய மகப்பேறு வைத்தியசாலை வளாகம், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில், கடந்த ஒரு வருடமாக முழுமையாக கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும், மனிதவள பற்றாக்குறை, குறிப்பாக செவிலியர்கள் (Nurses) பற்றாக்குறை காரணமாக இப்போதுவரை இயக்கப்படாமல் இருக்கிறது.
மிகவும் அவசியமான ஒரு மருத்துவமனையாக கட்டி முடிக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது.
இருந்தும் இதுவரை குறித்த மகப்பேற்று மருத்துவமனை இன்று வரை செயற்பாடுகளை ஆரம்பிக்கவில்லை. ஆளனி இன்மையே இதற்கான பிரதான காரணமாகும் எனத் தெரிவித்துள்ள நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர்.
பணியாளர் எண்ணிக்கை அட்டவணை (cadre) உடனடியாக திருத்தி, தேவையான ஊழியர்களை நியமித்தால், கிளிநொச்சி மாவட்ட பொதுச் மருத்துவமனையின் புதிய மகப்பேறு வளாகத்தை சிறப்பாக இயங்கச்செய்து, வடமாகாணத்தில் நிலவும் நீண்டகால சேவைப் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வரலாம். இது தாய்மார்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு தரமான சிகிச்சையை வழங்க ஒரு அவசியமான நடவடிக்கையாகும்.
எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பணியாளர் அனுமதியும் நியமனமும் மேற்கொண்டு, கிளிநொச்சி புதிய மகப்பேறு மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
“அகற்றும் பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக” மாற்றி விநியோகிக்கும் திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka இணைந்து ஆரம்பம்
“அகற்றும் பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக” மாற்றி விநியோகிக்கும் திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka இணைந்து ஆரம்பம்
Published By: VISHNU
05 JUN, 2025 | 07:53 PM
உலக சுற்றாடல் தினமான வியாழக்கிழமை (05) சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka செயலகம் ஆகியவை இணைந்து செயல்படுத்தியுள்ளன.
இந்த குப்பைத் தொட்டிகள் உக்கும் பொருட்கள் மற்றும் பொலிதீனை தனித்தனியாக இடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிபெட்கோ முதல் கட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட
150 பீப்பாய்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் தேவைக்கேற்ப குப்பை மற்றும் பொலிதீனை இடக்கூடிய பீப்பாய்களை வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர் இசுரு அநுராத மற்றும் Clean Sri Lanka செயலகம் மற்றும் சிபெட்கோ அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து, முத்துராஜவெல பகுதியில் இன்று (05) மரம் நடுகை நிகழ்வொன்றையும் நடைமுறைப்படுத்தியது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே.ஏ.எஸ். ராஜகருணா, முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயுர நெத்திகுமாரகே, பதில் பிரதிப் பொது முகாமையாளர் சமந்த குணவர்தன, உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் Clean Sri Lanka செயலகத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.