Aggregator

மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!

3 months 1 week ago
வெளிநாட்டிலை இருந்து தங்கடை ஊர் திருவிழாவுக்கு போறவையள் அர்ச்சனைக்கு வைச்ச ஒரு மாம்பழத்தை லச்சக்கணக்கிலை காசு குடுத்து ஏலத்திலை எடுக்கினம்.கழுத்திலை தங்கச்சங்கிலி வேற மினுங்குது.....உதுகளை பார்க்கிற அங்கை இருக்கிற சனம் ஐயோ நாங்களும் கனடாவுக்கு லண்டனுக்கு சுவீஸ்க்கு போகப்போறம் எண்டு துடிப்பினம் தானே? 😄 இதுக்குள்ள..... இஞ்சை புலம்பெயர் நாடுகளிலை இருக்கிறவையள் கடவுளே இஞ்சை ஒருத்தரும் வராதேங்கோ.....இஞ்சை சரியான கஷ்டம்...நிம்மதியில்லாத வாழ்க்கை எண்ட புலம்பல் வேற....😂

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months 1 week ago
படம் பார்த்து நொந்து நூலாகிப் போன சசி வர்ணம், அடுத்து படம் பார்த்து வந்து விம்மி விம்மி அழப் போகும் கிருபன் போன்றோருக்கும் ஒரு ஆறுதலாக இருக்க ஏதோ என்னால் முடிந்தது,

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

3 months 1 week ago

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ்

3 months 1 week ago
மேலே முதல் உள்ள வீரகேசரி செய்தியில் இப்படி வருகின்றது " அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து.. நான் ஏற்கெனவே தமிழ் அரசியல் தலைவர்கள் பெயர்களில் வீக் 🙄

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
கொலை செய்தவருக்கு பாராட்டும் இணையதள தொகுப்பு ஒன்றை பார்க்க நேர்ந்தது கொலைகாரனுக்கு சமுதாயம் தெரிவிக்கும் ஆதரவு மிக மோசமாக உள்ளது அதில் சில உது தமிழ் ஈழத்தின் தண்டனை தமிழன் கெத்து 🎉🎉🎉🎉🎉 இனி இப்படித்தான் 💪🏽🎉பயப்பட வேண்டும் தமிழ்ப்பெண்கள் 👌🏼👌🏼👌🏼 ----- தன்மான தமிழ் ஈழத்தமிழன் நம் தலைவரின் சட்டப்படி அவர் செய்திருக்கின்ரார் 🎉🎉🎉

யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்

3 months 1 week ago
கடந்த காலங்களில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் முகப் புத்தக பக்கத்தில் பகிரப்படும் படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது..நோயாளிகளுக்கிடையேயான மறைப்பு (கேர்ட்டின்)முக்கியமல்லவா..நோயாளிகள் ஒருவரை, ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை படம் பிடித்து முகப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் போது இவர்களுக்கு பிறைவேசி முக்கியமில்லையா என்று கேட்டேன்... இன்ன மாதிரி செய்தால், போட்டால் நன்றாக இருக்கும் என்று எழுதிய பின் தான் ஒரு சிறிய பகுதிக்கு கேர்டின் போட்டு இருக்கிறார்கள்..பிறகும் எதற்கும் முரண்பட்டு எழுதுவேனோ என்ற எண்ணம் போலும் பணிப்பாளர் பேசவும் மாட்டார், பதில் எழுதவும் மாட்டார்..அப்படி ஒரு தலைக்கணம்.வெளிநாடுகளிலிருந்து போய் கதைப்பவர்களுக்கு நன்றாக தேன் ஒழுக கதைத்து அனுப்புகிறார்.

“அகற்றும் பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக” மாற்றி விநியோகிக்கும் திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka இணைந்து ஆரம்பம்

3 months 1 week ago
நல்ல செயல் திட்டங்கள் ........... பணிகள் தொடரட்டும் . ......... ! 😁

கிளிநொச்சி மகப்பேற்று வைத்தியசாலையினை செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை

3 months 1 week ago
Published By: VISHNU 05 JUN, 2025 | 08:59 PM கிளிநொச்சி மாவட்ட பொதுச் மருத்துவமனையில் புதிய மகப்பேறு வைத்தியசாலை வளாகத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் வியாழக் கிழமை (5) அளுநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டியமைக்கப்பட்ட புதிய மகப்பேறு வைத்தியசாலை வளாகம், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில், கடந்த ஒரு வருடமாக முழுமையாக கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும், மனிதவள பற்றாக்குறை, குறிப்பாக செவிலியர்கள் (Nurses) பற்றாக்குறை காரணமாக இப்போதுவரை இயக்கப்படாமல் இருக்கிறது. மிகவும் அவசியமான ஒரு மருத்துவமனையாக கட்டி முடிக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது. இருந்தும் இதுவரை குறித்த மகப்பேற்று மருத்துவமனை இன்று வரை செயற்பாடுகளை ஆரம்பிக்கவில்லை. ஆளனி இன்மையே இதற்கான பிரதான காரணமாகும் எனத் தெரிவித்துள்ள நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர். பணியாளர் எண்ணிக்கை அட்டவணை (cadre) உடனடியாக திருத்தி, தேவையான ஊழியர்களை நியமித்தால், கிளிநொச்சி மாவட்ட பொதுச் மருத்துவமனையின் புதிய மகப்பேறு வளாகத்தை சிறப்பாக இயங்கச்செய்து, வடமாகாணத்தில் நிலவும் நீண்டகால சேவைப் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வரலாம். இது தாய்மார்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு தரமான சிகிச்சையை வழங்க ஒரு அவசியமான நடவடிக்கையாகும். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பணியாளர் அனுமதியும் நியமனமும் மேற்கொண்டு, கிளிநொச்சி புதிய மகப்பேறு மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/216727

கிளிநொச்சி மகப்பேற்று வைத்தியசாலையினை செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை

3 months 1 week ago

Published By: VISHNU

05 JUN, 2025 | 08:59 PM

image

கிளிநொச்சி மாவட்ட பொதுச் மருத்துவமனையில் புதிய மகப்பேறு வைத்தியசாலை வளாகத்தை உடனடியாக செயல்படுத்த  நடவடிக்கை எடுக்குமாறு  வடக்கு மாகாண ஆளுநரிடம் கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் வியாழக் கிழமை (5) அளுநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டியமைக்கப்பட்ட புதிய மகப்பேறு வைத்தியசாலை வளாகம், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில், கடந்த ஒரு வருடமாக முழுமையாக கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும், மனிதவள பற்றாக்குறை, குறிப்பாக செவிலியர்கள் (Nurses)  பற்றாக்குறை காரணமாக இப்போதுவரை இயக்கப்படாமல் இருக்கிறது.

மிகவும் அவசியமான ஒரு மருத்துவமனையாக கட்டி முடிக்கப்பட்டு  ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது  திறந்து வைக்கப்பட்டது.

இருந்தும் இதுவரை குறித்த  மகப்பேற்று மருத்துவமனை இன்று வரை செயற்பாடுகளை ஆரம்பிக்கவில்லை.  ஆளனி இன்மையே  இதற்கான பிரதான காரணமாகும் எனத் தெரிவித்துள்ள  நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர்.

பணியாளர் எண்ணிக்கை அட்டவணை (cadre)  உடனடியாக திருத்தி, தேவையான ஊழியர்களை நியமித்தால், கிளிநொச்சி மாவட்ட பொதுச் மருத்துவமனையின் புதிய மகப்பேறு வளாகத்தை  சிறப்பாக இயங்கச்செய்து, வடமாகாணத்தில் நிலவும் நீண்டகால சேவைப் பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டு வரலாம். இது தாய்மார்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு தரமான சிகிச்சையை வழங்க ஒரு அவசியமான நடவடிக்கையாகும்.

எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பணியாளர் அனுமதியும் நியமனமும் மேற்கொண்டு, கிளிநொச்சி புதிய மகப்பேறு மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/216727

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 1 week ago
செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளை சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கவேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை Published By: RAJEEBAN 05 JUN, 2025 | 08:08 PM செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேசநடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்படும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய அலுவலகம் வெளிப்படைதன்மையை வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது. செம்மணியின் இரண்டாவது மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களிற்கு நீதியை உண்மையை வழங்குவதை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக இது அமையலாம்.எனினும் இதற்கு சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி அகழ்வு இடம்பெறுவது அவசியம். மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்கு இலங்கை அதிகாரிகள் உரிய நிதியை ஒதுக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் ஊடகங்களிற்கும் அந்த பகுதிக்கு செல்வதற்கான போதிய அனுமதியை வழங்கினால் ,இநத விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் விசாரணைகளின் போது இடைக்காலத்தில் தெரியவந்துள்ள விடயங்கள் குறித்து தொடர்ச்சியாக தெரிவித்து வந்தால் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் வெளிப்படையான விதத்தில் இடம்பெறும். பாதிக்கப்பட்டவர்களுக்கும் செயற்பாட்டிற்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் அவசரத்தை கருத்தில் கொள்ளும்போது இது இடம்பெறவேண்டும். அந்த பகுதியின் நேர்மைதன்மையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். https://www.virakesari.lk/article/216724

“அகற்றும் பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக” மாற்றி விநியோகிக்கும் திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka இணைந்து ஆரம்பம்

3 months 1 week ago
Published By: VISHNU 05 JUN, 2025 | 07:53 PM உலக சுற்றாடல் தினமான வியாழக்கிழமை (05) சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka செயலகம் ஆகியவை இணைந்து செயல்படுத்தியுள்ளன. இந்த குப்பைத் தொட்டிகள் உக்கும் பொருட்கள் மற்றும் பொலிதீனை தனித்தனியாக இடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிபெட்கோ முதல் கட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 150 பீப்பாய்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் தேவைக்கேற்ப குப்பை மற்றும் பொலிதீனை இடக்கூடிய பீப்பாய்களை வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர் இசுரு அநுராத மற்றும் Clean Sri Lanka செயலகம் மற்றும் சிபெட்கோ அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து, முத்துராஜவெல பகுதியில் இன்று (05) மரம் நடுகை நிகழ்வொன்றையும் நடைமுறைப்படுத்தியது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே.ஏ.எஸ். ராஜகருணா, முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயுர நெத்திகுமாரகே, பதில் பிரதிப் பொது முகாமையாளர் சமந்த குணவர்தன, உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் Clean Sri Lanka செயலகத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/216723

“அகற்றும் பீப்பாய்களை குப்பைத் தொட்டிகளாக” மாற்றி விநியோகிக்கும் திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka இணைந்து ஆரம்பம்

3 months 1 week ago

Published By: VISHNU

05 JUN, 2025 | 07:53 PM

image

உலக சுற்றாடல் தினமான வியாழக்கிழமை (05)   சிபெட்கோ நிறுவனம்  அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி  நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka செயலகம் ஆகியவை இணைந்து செயல்படுத்தியுள்ளன.

இந்த குப்பைத் தொட்டிகள் உக்கும் பொருட்கள் மற்றும் பொலிதீனை தனித்தனியாக இடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன்,  சிபெட்கோ முதல் கட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட

150 பீப்பாய்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் தேவைக்கேற்ப குப்பை மற்றும் பொலிதீனை இடக்கூடிய பீப்பாய்களை வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

Clean Sri Lanka செயலகத்தின் பணிப்பாளர்  இசுரு அநுராத மற்றும் Clean Sri Lanka  செயலகம் மற்றும் சிபெட்கோ அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்,  Clean Sri Lanka  வேலைத்திட்டத்துடன் இணைந்து, முத்துராஜவெல பகுதியில் இன்று (05) மரம் நடுகை நிகழ்வொன்றையும் நடைமுறைப்படுத்தியது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே.ஏ.எஸ். ராஜகருணா, முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயுர நெத்திகுமாரகே, பதில் பிரதிப் பொது முகாமையாளர் சமந்த குணவர்தன, உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் Clean Sri Lanka  செயலகத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-06-05_at_18.19.08_13

WhatsApp_Image_2025-06-05_at_18.19.06_bf

WhatsApp_Image_2025-06-05_at_18.19.07_ba

WhatsApp_Image_2025-06-05_at_18.19.06_a1

WhatsApp_Image_2025-06-05_at_18.19.04_ac

WhatsApp_Image_2025-06-05_at_18.19.04_30

https://www.virakesari.lk/article/216723

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு

3 months 1 week ago
இவர்கள் கூறும் கருத்துக்களும் விளக்கங்களும் ஏற்புடையவையாக இருக்கின்றன ......... பறக்கட்டும் பார்க்கலாம் . ........ ! 😁

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் - டக்ளஸ்

3 months 1 week ago
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பு : டக்ளஸை சந்தித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் பேச்சு Published By: DIGITAL DESK 3 05 JUN, 2025 | 05:24 PM ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். குறித்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை (5) யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பிலேயே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தாவுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216705

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வரும் பாரிய விமானம் - கொழும்பு மக்களுக்கு கிடைக்கும் விசேட வாய்ப்பு

3 months 1 week ago
புதிய விமானம் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டது - அமைச்சர் பிமல் சபையில் விளக்கம் 05 JUN, 2025 | 05:10 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை விமான சேவைக்கு புதிதாக கொண்டுவரப்பட்டிருக்கும் எயார் பஸ் விமானம் குத்தகை அடிப்படையிலானது. 8 வருடங்களில் அதனை மீண்டும் திருப்பிக்கொடுக்க வேண்டுமென போக்குவரத்து, விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் கில்ஸ் நெல்சன் உரையாற்றுகையில், விமான சேவைக்கு அரசாங்கம் புதிதாக கொண்டுவந்திருக்கும் விமானத்தின் தரம், அதன் வசதி வாய்ப்புக்கள், அது பழைய விமானம் என்றாலும் அதன் மறுசீரமைப்பின் தரம் தொடர்பில் தெரிவிக்க வேண்டும் என கேண்டுக்கொண்டார். அதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் பிரமல் ரத்நாயக்க தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை விமான சேவைக்கு புதிதாக கொண்டுவந்திருக்கும் எயார் பஸ் விமானம், மாதத்துக்கு 1000 டொலர் என்ற அடிப்படையில் குத்தகைக்கே கொண்டுவந்திருக்கிறோம். 8 வருடங்களில் அதனை மீண்டும் குறித் கம்பனிக்கு திருப்பிக்கொடுக்க வேண்டும். இந்த விமானம் இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்டது என்பது உண்மை. புதிய விமானம் கொள்வனவு செய்வதற்கு இப்போதைக்கு எங்களுக்கு முடியாது. புதிய விமானம் கொள்வனவு செய்ய 1.3 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும். தற்போது நாங்கள் கொண்டுவந்திருக்கும் விமானம் மிகவும் நல்ல முறையில் மறுசீரமைத்தே கொண்டுவந்திருக்கிறோம். விமானத்தின் பாகங்கள்,இன்ஜின் மிகவும் முறையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. விமானத்தின் தரம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இந்த விமானத்துக்கான குத்தகையை நல்லமுறையில் செலுத்தி, 8 வருடங்களில் மீள ஒப்படைக்க இருகிறோம். எதிர்காலத்தில் மேலும் விமானங்களை கொண்டுவந்து இந்த சேவையை அபிவிருத்தி செய்யவே திட்டமிட்டிருக்கிறோம். அதனால் இந்த விமானம் தொடர்பில் தரம் குறைவாக கதைப்பது நல்லதில்லை என்றார். https://www.virakesari.lk/article/216691