Aggregator

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

3 months 1 week ago
யார் போதைப்பொருள் விற்கிறார்கள் என்பது அநேகமானவர்களுக்குத் தெரியும். எங்கே எப்படி விற்கிறார்கள் என்பதும் தெரியும். சிங்களத்தின் திட்டமிடலாக இருக்கலாம், போதைப்பொருள் இறக்குமதியை மறைமுகமாக ஆதரிப்பது சிங்களமாக இருக்கலாம். ஆனால் உள்ளூரில் வினையோகம் செய்வது தமிழர்கள். தமிழ் அரசியல் வாதிகள் பலர் இந்த முக்கிய பிரச்சனையாகிய போதைப்பொருளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months 1 week ago
கமலகாசன் கன்னட மொழி பற்ற பேசி பிரச்சனை கொண்டுவந்தது அவரது பட வெளியீட்டிற்காக என்று பெருமாள் இங்கே சொல்லியிருந்தார்.அது உண்மை என்றும் இந்த படத்தைவிளம்பரம் செய்வதற்காக அவர் செய்ததாக இப்போது சொல்கின்றார்கள்.

தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி!

3 months 1 week ago
🤣 இலங்கை இந்திய மக்களுக்கு எல்லாம் கோவில் சேர்ச் விகாரைக்கு அவர்களை கூட்டி கொண்டு வருவதற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை எல்லாம் ஒருபோதும் தேவையில்லை தாங்களாகவே அள்ளுபட்டு எவ்வளவு தூரம் என்றாலும் பணம் செலவழித்து பரவச நிலையில் செல்வார்கள்

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months 1 week ago
சல்லிசல்லியா நொறுக்கீட்டீங்களே.. Thug Life Movie Review in Tamil 6 Jun 2025, 10:30 AM ஒரு திரைப்படம் என்பது பலருக்கு வெறும் கேளிக்கை அல்ல; அப்படம் குறித்த முதல் அறிவிப்பு வெளியாவது தொடங்கி, திரையரங்கில் பார்த்தபின்னும் எண்ணமாக, பேச்சாக, தினசரி வாழ்வின் பிரதிபலிப்பாக அதன் தாக்கம் நீண்டுகொண்டே இருக்கும். அதனை மிகச்சரியாகச் செய்த திரைப்படங்களை ‘கிளாசிக்’ என்று சொல்கிறோம்; அதனைத் தந்தவர்களை ஜாம்பவான்களாக கொண்டாடுகிறோம். அப்படிப்பட்ட ஜாம்பவான்கள் சிலர் ஒன்றிணைகிறபோது உருவாகிற எதிர்பார்ப்பு சாதாரணமானதல்ல. கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் என்று ஜாம்பவான்கள் பட்டாளமே ஒன்றிணைந்த ‘தக் லைஃப்’ அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கியது. ‘அது போதாது’ என்று படக்குழுவினர் வேறு அதனை மேலும் உயரங்களுக்குக் கொண்டு சென்றனர். ‘கன்னடம்’ குறித்து கமல் பேசியது, ‘தக் லைஃப் படத்தைக் கொண்டாடியே தீர வேண்டும்’ என்கிற எண்ணத்தை அவரது ரசிகர்களிடத்தில் உருவாக்கியது. இப்போது ‘தக் லைஃப்’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. மலையென உயர்ந்திருக்கிற எதிர்பார்ப்பினை அது பூர்த்தி செய்திருக்கிறதா? இதுவும் ‘கேங்க்ஸ்டர்’ படம்தான்..! ‘கேங்க்ஸ்டர்’ கதை என்றால் மும்பை, கொல்கத்தா, சென்னை, கொச்சி, கோயம்புத்தூர் என்று சில நகரங்களைக் காட்டுவது திரையுலகினரின் வழக்கம். அந்த வரிசையில், ’தில்லியில் நடக்கிற கதை இது’ என்று மணிரத்னம் கதை சொல்லத் தொடங்குகிறார். நாமும் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்கிறோம். 1994இல் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் காட்டுவதில் இருந்து கதை தொடங்குகிறது. சீட்டுக்கட்டை நிமிர்த்து வைத்தாற் போன்று பழைய கட்டடங்கள். வீடுகள், கடைகள் என்றிருக்கும் அவற்றில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலொரு இடத்தில் இரண்டு கேங்க்ஸ்டர் கும்பல் சமாதானம் பேசுகின்றன. ஒருபக்கம் மாணிக்கம் (நாசர்), ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்) குரூப் இருக்கிறது. இன்னொரு பக்கம் சதானந்த் (மகேஷ் மஞ்ச்ரேகர்) ஆட்கள் இருக்கின்றனர். என்ன பேசுகின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், உடன்பாடு ஏற்பட்டதாகச் சொல்லி மாணிக்கமும் சதானந்தும் கைகுலுக்குகின்றனர். அதில் சிறிதும் உடன்பாடு இல்லை என்பது போல முழிக்கிறார் சக்திவேல். சதானந்த் சென்றபிறகும் யோசித்துக் கொண்டே இருக்கிறார். ஜன்னல் வழியாகப் பார்த்தால், அவர் எதிரே வந்து கொண்டே இருக்கிறது போலீஸ் படை. இன்ஸ்பெக்டர் சாமுவேல் ராயப்பா (பாபுராஜ்) அதிலொருவராக இருக்கிறார். சதானந்தை பார்த்து சமிக்ஞை செய்தவாறே வருகிறார். அடுத்த நொடியே சக்திவேல் உஷாராகிறார். ‘எல்லோரும் தப்பிச்சு போயிடுங்கடா’ எனும் ரேஞ்ச்சில் அவர் அலற, பூட்டப்பட்டிருக்கும் கதவு வழியே ஒரு செய்தித்தாள் வந்து விழுகிறது. உடனே மாணிக்கம் துப்பாக்கியால் சுடுகிறார். ‘வேண்டாம்’ என்று சக்திவேல் சொல்வதற்குள் அது நிகழ்ந்துவிடுகிறது. செய்தித்தாள் விற்பனை செய்யும் நபர் குண்டடி பட்டு கீழே விழுகிறார். வேறு வீடுகள், கடைகளில் செய்தித்தாளை கொடுக்கச் சென்ற அவரது மகளும் மகனும் ‘அப்பா’ என்று ஓடி வருகின்றனர். அதற்குள், அந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர் போலீசார். ‘எப்பா.. இவ்ளோ கூட்டம் இருக்கிற இடத்துல ஷூட் அவுட் பண்ணலாமாப்பா’ என்று ரசிகர்கள் சொன்னாலும், திரையில் இருப்பவர்கள் கேட்பதாக இல்லை. அப்புறமென்ன? செய்தித்தாள் விற்பனை செய்பவரின் சடலத்தைப் பார்த்து அவரது மகன் அழுது கொண்டிருக்கிறார். குண்டு மழைக்கு நடுவே, அவரை தூக்கிக்கொண்டு போகிறார் சக்திவேல். அந்த சிறுவனின் பெயர் அமரன். அவரது தங்கை சந்திரா என்ன ஆனார் என்று தெரியவில்லை. வீடு சென்றதும், அமரனின் பின்னணியைக் கேட்கிறார் சக்திவேல். ‘யாருமில்லாதவர்’ என்று அறிந்ததும், அவரைத் தானே வளர்க்க முடிவு செய்கிறார். குழந்தை சந்திராவைத் தேடிக் கண்டுபிடித்து தருவதாக உறுதியளிக்கிறார். இதன் பிறகு, 2016இல் நிகழ்வதாக கதை தடம் மாறுகிறது. மேற்சொன்ன காட்சியை உள்வாங்கிக் கொண்டதும், அந்த சக்திவேல் எப்படிப்பட்ட ‘கேங்க்ஸ்டராக’ இருந்தார் என்பது தெளிவாகிவிடும். அவர் இப்போது எப்படியிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழும். அவர் வளர்த்து ஆளாக்கிய அமரனுக்குக் குடும்பத்தில் தரப்படுகிற இடம் என்ன என்ற கேள்வி எழும். சக்திவேல் குடும்பம் மட்டுமல்லாமல், அந்த ‘கேங்க்ஸ்டர்’ கும்பல் அமரை எப்படி நோக்குகிறது என்ற எண்ணம் தலை நிமிர்த்தும். ‘ரெட்டை தலை பாம்பு மாதிரி இதுக்கெல்லாம் பதில் சொல்லி, ஒரு கேங்க்ஸ்டர் ட்ராமாவை கிளாசிக்கா மணி சார் மாத்தியிருப்பார்’ என்று எதிர்பார்ப்புடன் இருக்கையில் இருந்து முன்னகர்ந்து அமர்ந்தால், ‘பொளேர்’ என்று நெற்றிப்பொட்டில் அடித்து பின்னுக்குத் தள்ளுகிறது திரைக்கதை. சந்திரா என்ற பெண் சிவப்பு விளக்கு பகுதியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கு செல்கிறார் சக்திவேல். அங்கு இந்திராணியை (த்ரிஷா) பார்க்கிறார். ‘நீங்க தேடி வந்த சந்திராவைத்தான் கூட்டிட்டு போவீங்களா. என்ன கூட்டிட்டு போக மாட்டீங்களா’ என்கிறார் இந்திராணி. ‘அவ்ளோதானே’ என்று அவரை அழைத்துச் சென்று தனியே ஒரு வீட்டில் தங்க வைக்கிறார். அவருக்குக் காவலாக ஒரு பெண்ணையும் (வடிவுக்கரசி) பணியமர்த்துகிறார். அமரனோ சக்திவேலைத் தனது தந்தையாகக் கருதுகிறார். ஆனால், ‘அண்ணே’ என்று விளிக்கிறார். அவரது குடும்பத்தின் நல்லது கெட்டதுகளில் அவரை விட ஒருபடி அதிகமாக அக்கறை காட்டுகிறார். சக்திவேல் மனைவி ஜீவாவோ (அபிராமி), ‘அந்த வீட்டுக்கு போனேல்ல. இங்க ஏன் வந்த’ என்று சக்திவேலிடம் வீராப்பு காட்டுகிறார். ‘உங்கப்பனை அடிக்கறதுக்காக நான் வந்தப்போ, குறுக்கே நின்று என்னை ஒரு அடி விட்டப்போ விழுந்தவன் தான்’ என்று ’பழங்கதை’ பேசி ஜீவாவின் மண்டையைக் கழுவுகிறார் சக்திவேல். இவ்வளவும் சொன்னபிறகு, அந்த சதானந்தும் சாமுவேல் ராயப்பாவும் என்ன ஆனார்கள் என்று சொல்ல வேண்டுமே? ’கேங்க்ஸ்டர் வாழ்க்கை போதும்’ என்று சொல்லி, சதானந்த் அரசியலுக்குத் தாவுகிறார். அதனால், சக்திவேலுடன் சமாதானம் பேச மீண்டும் முயற்சிக்கிறார். ஒரு என்கவுண்டரில் குண்டடி பட்டு, படுத்த படுக்கையாகக் கிடக்கிறார் சாமுவேல் ராயப்பா. அவரது ஒரே மகன் ஜெய்யும் (அசோக் செல்வன்) போலீஸ் அதிகாரியாகத்தான் இருக்கிறார். காவல் துறையில் இருக்கிற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு, சக்திவேல் பின்னணியைத்தான் அவர் குடைவார் என்பதை தமிழ் சினிமா பார்க்கிற குழந்தையும் சொல்லிவிடும். ‘சரி, இப்படியொரு கதையில் முரண் எங்கே இருக்கிறது’ என்று கேட்டால், ‘வரும்.. பொறுங்க..’ என்று சொல்லி நிதானமாகக் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மணி ரத்னம். திரைக்கதை முடிச்சுகள், அது அவிழ்க்கப்படுதல் என்று இரண்டாம் பாதியை நீட்டியிருக்கிறார். மேற்சொன்ன கதையில் புதிதாக எந்த விஷயங்களும் இல்லை. சுவாரஸ்யம் இருக்கிறதா என்பது அவரவர் முடிவு சார்ந்தது. முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் கமல், மணி ரத்னம் இணைந்து தந்த ‘நாயகன்’ கூட ‘கேங்க்ஸ்டர்’ கதை தான். நேர்கோடாகக் கதை சொல்லாமல், அதில் ஒரு ரௌடியின் ஐம்பதாண்டு கால வாழ்வு இருந்தது. அந்த கதை சொல்லல் ஒரு கண்ணாடி மாளிகையைக் கவனமாகக் கட்டி எழுப்பியிருக்கும். ஏற்கனவே கட்டி வைத்த அந்த மாளிகையின் மீது கல்லெறிந்திருக்கிறது ‘தக் லைஃப்’. ‘இப்படி சல்லிசல்லியா நொறுக்கிட்டீங்களே’ என்று ரசிகர்களான நாம் வருந்துகிற வகையில் இப்படம் அமைந்திருக்கிறது. அரசு எந்திரம் என்ற ஒன்றைப் பற்றிக் கவலைப்படாமல், ‘தளபதி’யில் சூர்யாவும் தேவாவும் அரங்கேற்றுகிற ரவுடித்தனம் பற்றிய கேள்விகள் எல்லாம் இந்த படத்தைப் பார்க்கையில் விஸ்வரூபமெடுக்கின்றன. அந்த படங்களில் நம்மை வாயடைக்கச் செய்த மணி ரத்னம், ‘தக் லைஃப்’பில் எங்கு சறுக்கியிருக்கிறார். அவரே அசை போட வேண்டிய கேள்வி இது. உயர் தர பொம்மை! கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா, நாசர், அசோக்செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, ஜோஜு ஜார்ஜ், மகேஷ் மஞ்ச்ரேகர், அலி ஃபசல் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர். இன்னும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தணிகலபரணி, பாபுராஜ், பகவதி பெருமாள், வையாபுரி, சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, அர்ஜுன் சிதம்பரம் என்று பலர் இதில் முகம் காட்டியிருக்கின்றனர். பெரும்பாலான காட்சிகளில் கமல் தலைகாட்டியிருக்கிறார். மீதமிருக்கிற காட்சிகளில் வந்து போயிருக்கிற அனைவருமே சிறப்பாகத் தோன்றியிருக்கின்றனர். ஆனால், ‘உள்ளடக்கம் எப்படி’ என்று கேட்டால் ‘ப்ச்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது. கமர்ஷிலாகவும் கலைரீதியிலும் கவனம் ஈர்த்த படங்களின் நாயகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மீண்டும் கைகோர்க்கிறபோது ரசிகர்கள் எதிர்பார்ப்பு பெருமளவு உயரும். ஆனால், அந்த படம் கமர்ஷியலாகவும் இருக்காது; கலைரீதியிலும் திருப்தி தராது. ஹாலிவுட், பாலிவுட் என்று நாம் பார்க்கிற எந்த மொழிப் படமானாலும் இது போன்றதொரு அனுபவத்தை எதிர்கொண்டிருப்போம். அதைத்தான் ‘தக் லைஃப்’பில் மணி ரத்னம் – கமல் கூட்டணி தந்திருக்கிறது. ஒரு உயர் தர பொம்மையைப் போன்று இத்திரைப்படத்தை அமைத்திருக்கிறது. மேலே சொன்னவாறு இதில் நடிகர் நடிகைகளின் சிறப்பான ‘பெர்பார்மன்ஸ்’ இருக்கிறது. ஒவ்வொரு பிரேமும் உலகத்தரம் என்று சொல்கிற வகையில் ஒளிப்பதிவை அமைத்திருக்கிறார் ரவி கே.சந்திரன். ஒளிப்பதிவாளர் சுற்றிச் சுழன்றாடுகிற வகையில் தயாரிப்பு வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் ஷர்மிஸ்தா ராய். ஒவ்வொரு காட்சியையும் அதன் தன்மைக்கு ஏற்றவாறு தொகுத்திருக்கிறார் ஸ்ரீகர் பிரசாத். இன்னும் சண்டைப்பயிற்சி, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, ஒலி வடிவமைப்பு, டிஐ, விஎஃப்எக்ஸ் என்று எல்லாமே வியக்கத்தக்க அளவில் திரையில் இடம்பெற்றிருக்கிறது. சரி, அதனால் கதைக்கும் காட்சி வடிவாக்கத்திற்கும் என்ன லாபம் என்று கேட்டால் எந்தப் பதிலும் கிடைக்காது. இப்படியொரு உள்ளடக்கதிற்குத் தன் இசையால் உயிர் கொடுக்க முயன்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். வழக்கத்திற்கு மாறான பின்னணி இசை அனுபவத்தை ரசிகர்கள் பெறட்டும் என்று உழைத்திருக்கிறார். ஆனாலும், ’உயர்தர பொம்மையாகவே’ காட்சி தருகிறது ‘தக் லைஃப்’. சரி, ஏ.ஆர்.ஆர். தந்த 9 பாடல்களையாவது திரையில் பார்த்து மகிழலாம் என்றால் மணி ரத்னம் அதற்கும் இடம் தரவில்லை. ஜிங்குச்சா, சுகர் பேபி, ஓ மாறா பாடல்களின் தொடக்கம் தான் காதில் விழுகின்றன. அதன்பிறகு அவற்றை ரசிக்கிற மனநிலை மறைந்து போகிறது. அத்தனை பாடல்களிலும் இரண்டுக்கும் மேற்பட்ட காட்சிகள் தலைநீட்டுகின்றன. அதனால், அவை பின்னணியில் ஒலிக்கின்றன; பாதியிலேயே மங்கிவிடுகின்றன. ‘விண்வெளி நாயகா’ பாடல் கிளைமேக்ஸில் வரும் டைட்டிலில் ஒலிக்கிறது. ‘முத்த மழை பாடலை தீ பாடியிருக்க வேண்டுமா? சின்மயி பாடியிருக்க வேண்டுமா’ என்ற விவாதத்திற்கான பதிலை அறியலாம் என்று பார்த்தால், அந்த பாடல் படத்திலேயே இல்லை. ‘நியூ’வில் வரும் ‘காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா’ மாதிரியான ரசிகர்கள் நினைவில் இடம்பெறத் தக்க ஒரு பாடலாக ‘அஞ்சு வண்ண பூவே’ அமைந்திருக்க வேண்டும். ‘எனக்கு செண்டிமெண்ட்ல நம்பிக்கை இல்லைங்க’ என்று அதனைப் புறந்தள்ளியிருக்கிறார் மணி ரத்னம். சில நிறைகள் ‘தக் லைஃப்’பில் உண்டு. க்ளோஸ் அப்’ ஷாட்களில் தலைகாட்டியிருக்கும் அனைத்து நடிகர், நடிகையரும் தமது திறமையை ‘பளிச்’சென்று காட்டியிருக்கின்றனர். தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. அதற்காக மட்டுமே படம் பார்க்க வருபவர்களுக்கு ‘தக் லைஃப்’ நல்லதொரு அனுபவத்தைத் தரும். போலவே, ‘மணி சாரும் கமல் சாரும் சேர்ந்து சீனிகம் மாதிரி ஒரு ரொமான்ஸ் படம் பண்ணலாமே’ என்று சொல்ல வைக்கின்றன சில காட்சிகள். அதே நேரத்தில், இந்த ஜாம்பவான்கள் பட்டாளம் இப்படிப்பட்ட லாஜிக் மீறல்களுக்கு இடம் தந்திருக்கிறதே என்றும் எண்ண வைக்கின்றன சில காட்சிகள். அவை ‘க்ளிஷேக்களின் உச்சம்’ எனலாம். தன்னைத் தொடர்ந்து வந்த ரவுடிகள் வீட்டு வாசலில் காத்துக் கிடக்க, அதற்கடுத்த காட்சியில் ரயில் நிலையத்திற்குச் சென்று அவர்களை கமல் பாத்திரம் பந்தாடுகிற காட்சி அதற்கொரு உதாரணம். இது போன்ற லாஜிக் மீறல்கள், ‘என்ன மணி சார் இது’ என்று கேட்க வைக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் ‘நாயகனைத் தாண்டி நிற்கிற ஒரு கிளாசிக்கான கேங்க்ஸ்டர் படத்தைப் பார்க்க வேண்டும்’ என்று தியேட்டருக்கு வருபவர்களைத் தலையில் தட்டி உட்கார வைக்கிறது ’தக் லைஃப்’. அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பவர்களுக்கும், கமல் – மணி காம்பினேஷனை எப்படி மிஸ் செய்வது’ என்பவர்களுக்கும் இப்படம் பிடிக்கக்கூடும்..! https://minnambalam.com/kamal-haasan-thug-life-movie-review-in-tamil/

ஜே.வி.பி./ தே.ம.ச.யின் பிரதேச சபை பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

3 months 1 week ago
ஜே.வி.பி./ தே.ம.ச.யின் பிரதேச சபை பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? Photo, SUNDAY TIMES இலங்கையில் பிரதிநிதித்துவ (நாடாளுமன்ற) அரசியல் முறைமை அறிமுகப்படுத்திய நாள் முதல் இனத்துவ பிரதிநிதித்துவ அரசியல் வலுப்பெறலாயிற்று. கொழும்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசியக் கட்சிகள் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைக்கு சம முக்கியத்துவம் அளிக்காமையினால் சிறுபான்மை அரசியல் தலைலைமைகள் சிறுபான்மை மக்களின் தனித்துவத்தை முன்னிறுத்தி தமிழ் தேசியத்தை வலியுறுத்தி தனித்துவமாக செயற்பட ஆரம்பித்தன. தமக்கென தனித்துவமான கட்சிகளை உருவாக்கிக் கொண்டன. எனினும், கொழும்பை மையமாகக் கொண்ட இடதுசாரிக் கட்சிகள் அவ்வாறல்லாது சிறுபான்மை மக்களது பிரச்சினைகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து குறிப்பாக சமசமாஜ மற்றும் கம்யூனிஸ்கட்சிகள் தம் அரசியல் செயற்பாட்டினை வடகிழக்கிலும் முன்னெடுத்து வந்தன. ஆயினும், இடசாரி கட்சிகளாலும் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் தமது செல்வாக்கினை விரிவடையச் செய்ய முடியாமற் போய்விட்டது. அறுபதுகளின் பின் இறுதியில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட என். சண்முகதாசன் தலைமையளித்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வடக்கிலும் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்த முடியாமற் போய்விட்டது. இப்பின்புலத்தில் எழுபதுகளில் வீரீயம் பெற்ற தமிழ் தேசியம் இடதுசாரி கட்சிகளையும் , வலது சாரி கட்சிகளையும் வட கிழக்கில் பூச்சிய நிலைக்குத் தள்ளியது. ஆயினும், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு வந்தப்பின்னரும் வலதுசாரி கட்சிளும் இடதுசாரி கட்சிகளும் வடகிழக்கில் ஆதிக்கம் செலுத்த முனைந்த போதிலும் தோல்வியைத் தழுவின. ஆயினும், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தென்னிலங்கையின் இடதுசாரி கட்சியென அடையாளப்படுத்தப்படும் ஜே.வி.பி. – தே.ம.ச. (என்பிபி). தமிழ் தேசியத்தின் ஊற்றுவாய் எனக் கருதப்படும் யாழ்பாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் அரசியல் அறிமுகமில்லா வேட்பாளர்களை முன்னிறுத்தி மூவரை வெற்றி பெறச் செய்துள்ளது. இதேபோல் மலையகத்தில், பெரிதும் அறிமுகமில்லா வேட்பாளர்களை முன்னிறுத்தி நான்கு வேட்பாளர்களை வெற்றிப் பெறச் செய்துள்ளது. தமிழ் மக்களது அரசியல் வரலாற்றில் இது ஒரு பாரிய திருப்புமுனையாகும். வடக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் தம் இனத்துவ பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்தும் கொடுத்து தமிழ் கட்சிகளின் வேட்பாளர்களையே வெற்றி பெறச் செய்து வந்துள்ளனர். ஆனால், நடந்த பொதுத்தேர்தலின் போதும் அதனைத் தொடாந்து தற்போது நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தம் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கடைப்பிடித்துள்ளனர். இம்மாற்றம் வடக்கின் தமிழ் தேசியம் எனும் தரிசனம் வலுவிழந்து சரிவினை நோக்கி நகர்கின்றதா என்ற கேள்வியை எழுப்புவதுடன் மலையக மக்கள் நமது தமிழ் தலைமைகள் எனும் நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்கின்றனரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. பொதுத் தேர்தலின் பின்னர் வடக்கின் தமிழ் தேசிய கட்சிகள் விழிப்புற்றதுடன் தமிழ் தேசிய தரிசனம் சரிவை நோக்கிச் செல்லவில்லை எனக் கூற ஆரம்பித்ததுடன் அண்மைய பிரதேச சபைத் தேர்தலின் போது தமிழ் தேசியத்தை தமிழ் மக்கள் கைவிடவில்லையென்பதை நிரூபிக்கும் வகையில் வாக்களிக்கும்படி கோரின. அதனை வலியுறுத்தும் வகையில் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்து பிரிந்துச் சென்று உருவாக்கப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் வடகிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களம் இறங்கின. தென்னிலங்கை அரசாங்கத்திற்கு குறிப்பாக ஜே.வி.பிக்கு பாடம் புகட்டும் வகையில் வடகிழக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கோரினர். மலையகத் தலைமைகள் தாங்கள் தனித் தனியே உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியினை பிடிக்க முடியாவிட்டாலும் தேர்தலின் பின் கூட்டுச் சேர்ந்து சபைகளில் ஆட்சி அமைப்போம், ஆகையால் எங்களை வெற்றிப் பெறச் செய்யுங்கள் என மலைய மக்களைக் கோரினர். ஆனால், நடந்துள்ளது என்னவெனில் தமிழ் தேசியத்தின் தலையெனக் கருதப்படும் யாழ். மாவட்டத்தின் பதினேழு சபைகளில் அதிகளவு ஆசனங்களைப் பெற்ற போதிலும் பலமான ஆட்சியை உருவாக்கக் கூடியவாறு மக்கள் ஆணையை வழங்கவில்லை. அதனையடுத்து தீவிரமாக தமிழ் தேசியத்தை வலியுறத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வடக்கின் பல சபைகனை தன் வசப்படுத்திக் கொள்ளும் எனக் கருதப்பட்டபோதிலும் இரண்டு சபைகளிலேயே முதன்மைப் வகித்துள்ளது. அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்து விலகி தமிழ் தேசிய ஜனநாயக கூட்டணியும் பல சபைகளை வென்றுக்கொள்ளும் என எதிர்பார்த்த போதிலும் அதுவும் பாரிய வெற்றியைப் பெறவில்லை. தமிழரசுக் கட்சியைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் பிரதிநிதித்துவத்தைப் பெறவில்லை. ஆனால், வடக்கின் அனைத்து பிரதேச சபைகளிலும், நகர மற்றும் மாநகர சபைகளிலும் தமிழரசுக் கட்சிக்கு அடுத்ததாக ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி கட்சி பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது . கட்சி யாழ் மாநகர சபை வல்வெட்டி துறை நகர சபை பருத்தித்துறை நகரசபை சாவகச்சேரி நகர சபை நெடுந்தீவு பிரதேச சபை இ.த.க. 13 5 4 6 6 அ.இ.த.கா. 12 7 5 6 தே.ம.ச. 10 3 2 3 3 ஜ.த.தே.கூ. 2 2 ஈ.ம.ஜ.க. 4 அதிலும் தேசிய மக்கள் சக்தி சில சபைகளில் இரண்டாம் (பருத்திதுறை, வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் தென் மேற்கு, வேலனை, காரை நகர் பிரதேச சபைகள்) இடத்தையும், சில சபைகளில் முறையே யாழ்ப்பாணம் மாநகர சபை, சாவகச்சேரி நகர சபை, வல்வெட்டித்துறை நகரசபை, பருத்திச் துறை நகரசபை மற்றும் வலிகாமம் மேற்கு, வடமராட்சி தென் மேற்கு, சாவகச்சேரி, நெடுந்தீவு, ஊர்காவற்துறை எனும் பிரேதேச சபைகளில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. இதேவேளை, ஆசனங்கள் பெற்றதில் தமிழரசு கட்சி முதலாம் இடத்தையும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. தமிழரசு கட்சிக்கு சவாலாக இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ மூன்றாம் இடத்தையே பெற்றுள்ளது. முறையே தமிழரசு 137 ஆசனங்களையும் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மக்கள் சக்தி 81 ஆசனங்களையும், மூன்றாம் இடத்தைப் பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 79 ஆசனங்களையும் பெற்றுள்ளது (கிழக்கின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜே.வி.பி./ தே.ம.ச. அதிகளவு பிரதிநிதித்துத்தைக் கொண்டுள்ளது). கட்சி வலிகாமம் மேற்கு பிரதேச சபை வலிகாமம் தெற்கு பிரதேச சபை வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை சாவகச்சேரி பிரதேச சபை நல்லூர் பிரதேச சபை இ.த.க. 10 13 13 8 7 அ.இ.த.கா. 6 6 7 7 தே.ம.ச. 4 5 6 6 3 ஜ.த.தே.கூ. 3 ஈ.ம.ஜ.க. 6 ஐ.தே.க. 3 கட்சி ஊர்காவற்துறை பிரதேச சபை வேலணை பிரதேச சபை வலிகாமம் வடக்கு பிரதேச சபை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை பருத்தித்துறை பிரதேச சபை இ.த.க. 2 8 11 8 11 9 தே.ம.ச. 3 4 9 6 9 4 அ.இ.த.கா. 3 6 5 ஐ.தே.க. சு.கு 2 ஜ.த.தே.கூ. 5 5 4 த.ம.கூ. 4 ஈ.ம.ஜ.க. 3 கட்சி காரைநகர் பிரதேச சபை தே.ம.ச 2 இ.த.க 2 அ.இ.த.கா 2 சு.கு 2 ஜ.த.தே.கூ 2 சுருக்கம் இ.த.க. – இலங்கை தமிழரசு கட்சி அ.இ.த.கா. – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தே.ம.ச. – தேசிய மக்கள் சக்தி ஐ.தே.க. – ஐக்கிய தேசிய கட்சி சு.கு. – சுயாதீன குழு ஜ.த.தே.கூ. – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி த.ம.கூ. – தமிழ் மக்கள் கூட்டணி ஈ.ம.ஜ.க. – ஈழ மக்கள் ஜன நாயக கட்சி இலங்கையின் தேர்தல் அரசியல் வரலாற்றில் தென்னிலங்கை இடதுசாரி கட்சியொன்று வடகிழக்கின் உள்ளூராட்சி சபைகளில் இந்தளவு வெற்றியைப் பெற்றமை இதுவே முதற் தடவையாகும். ஜே.வி.பி./ தே.ம.ச. கட்சியானது ஏனைய கட்சிகள் போலன்றி முழு நேர களப்பணியாளர்களைக் (Cadre) கொண்ட கட்சியாகும். அக்கட்சி சார்பாக வடக்கில் போட்டியிட்டவர்களில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் குறிப்பிடத்தக்களவு காணப்டுகின்றனர். அதன்படி பார்க்கும்போது ஜே.வி.பி./ தே.ம.ச. யினரின் வெற்றியாளர்களில் பெரும்பாலோர் அவ்வவ் கிராமத்தைச் சார்ந்தோர் அல்லது அவ்வட்டாரத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களாவர். ஏனைய கட்சிகளைப் போலல்லாது ஜே.வி.பி. தமது கட்சியின் கொள்கைக் கோட்பாடுகள் பற்றி தமது அங்கத்தவர்களுக்கு அறிவூட்டல் செய்யும் கட்சியாகும். கட்சியின் தலைமை எடுக்கும் கொள்கை நிலைப்பாட்டினை கட்சியின் கீழ் மட்டம் வரை திட்டமிட்டு கொண்டுச் செல்லும். அவ்வகையில் வடகிழக்கில் தெரிவுசெய்யப்பட்ட அனைத்து தமிழ் பிரதிநிதிகளுக்கும் சுயர்நிர்ணய உரிமை தொடர்பில் தம் கட்சியின் நிலைப்பாடு பற்றி அறிவூட்டல் செய்யும். அனைத்து மக்களும் பாராபட்சமின்றி உரிமைகளை அனுபவிக்கும் ஆட்சி முறைமையை உருவாக்குவதே தம் நிலைப்பாடு என்பதனை வெற்றிப் பெற்றோர் மத்தியில் வலியுறுத்தும். மறுபுறம் உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் பக்கச்சார்பற்ற வகையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும். தெரிவு செய்யப் பட்டவர்கள் அக்கருத்தினையே தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்வர். வட கிழக்கின் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இச்செயற்பாடு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்? தமிழ் தேசியக் கட்சிகள் இத்தாக்கத்தை எவ்வாறு எதிர்கொள்ளும்? தொடர்ச்சியாக தமிழ் தேசியத்தை வலியுறுத்துவதன் மூலம் ஜே.வி.பியின் வியாபித்தலைத் தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது காணமால் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வு அல்லது வடகிழக்கு இணைப்பு மற்றும் மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கு எனும் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் தமிழ் மக்களது உணர்வினைத் தட்டி எழுப்பி தமிழ் மக்களை தமிழ் தேசியத்துடன் கட்டிவைத்து தமிழ் கட்சிகளுக்கு முடியுமா? என்ற கேள்விகள் எழுகின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் சிறந்த வாழ்வாதார நிலையையும் உட்கட்டமைப்பு வசதிகளையே எதிர்பார்த்திருக்கின்றனர். பிரதேச சபைகள் மூலம் அபிவிருத்தித் திட்டங்களையும் ஊழலற்ற ஆட்சியை மேற்கொண்டால் ஜே.வி.பி./ தே.ம.ச. மீதான ஈர்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறனதாக இருக்கும்? எவ்வாறு வடகிழக்கில் ஜே.வி.பி./ தே.ம.ச. தன் பிரதிநிதித்துவத்தை இத்தேர்தலின் போது நிலை நிறுத்தியுள்ளதே அதேபோல் மலையக உள்ளூராட்சி மன்றங்களிலும் கணிசமான ஆசனங்களை ஜே.வி.பி./ தே.ம.ச. வெற்றிப் பெற்றுள்ளது. வடக்கின் தமிழரசு கட்சி போல் மலையகத்தில் இலங்கை தொழிலளார் காங்கிசும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் மலையக மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வரும் கட்சிகளாகும். ஆனால், இவ்விரு கட்சிகளும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சரிவை சந்தித்துள்ளது. மலையகத்தின் நுவரெலிய மாநகர சபை, அட்டன் டிக்கோய நகர சபை, தலவாகெல்லை – லிந்துள்ள நகர சபை மற்றும் அம்பகமுவ, நுவரெலிய, கொத்மலை, அங்குரன்கெத்த, வலப்பனை, மஸ்கெலிய. நோர்வூட், அக்கரபத்தனை, கொட்டகல முதலிய பிரதேச சபைகளில் அதிக ஆசனங்களை ஜே.வி.பி./ தே.ம.ச. பெற்றுள்ளது. இவ்வாறு வெற்றி பெற்றவர்களில் அதிகமானோர் இளம் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களாவர். இவர்கள் மலையகக் குடியிறுப்பு பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி பிரதேச சபைகளை சிறப்புற நடத்தினால் மலையக தமிழ் கட்சிகள் எதனைக் கோருவதன் மூலம் மலையக மக்களை தம்பால் வென்றெடுக்க முடியும் . மேலும், இந்தியா வழங்கும் வீடமைப்புத் திட்டத்தை ஜே.வி.பி./ தே.ம.ச. பக்கச் சார்பற்ற முறையில் முன்னெடுத்து உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கினால் மலையக மக்களது மனோநிலை எவ்வாறானதாக அமையும். வெறுமனே நாம் மலையகத் தமிழர் என்ற அடையாளத்தையும், சம்பள அதிகரிப்பு என்பனவற்றினை மட்டும் முன்னிறுத்தி மலையக மக்களை தம் கட்சிகளின் பால் இனிமேலும் தக்க வைக்க முடியுமா? மேலும் மலையகக் கட்சிகளின் பால் மலையக இளைஞர்கள் கொண்டுள்ள கருத்துநிலை மலையக கட்சிகளின் பால் எவ்வாறான தாக்கத்தை உருவாக்கும்? கட்சி நுவரெலியா மாநகர சபை ஹட்டன் – டிக்கோயா நகர சபை தலவாக்கலை – லிந்துலை நகர சபை மஸ்கெலியா பிரதேச சபை ஐ.தே.க 3 2 தே.ம.ச 12 6 4 7 இ.தொ.கா 2 2 ஐ.ம.ச 4 5 2 6 சு.கு 3 2 ம.ம.மு 3 கட்சி நோர்வூட் பிரதேச சபை அம்பகமுவ பிரதேச சபை அகரப்பத்தனை பிரதேச சபை கொட்டகலை பிரதேச சபை தே.ம.ச 6 8 4 5 இ.தொ.கா 6 2 4 5 ஐ.ம.ச 5 6 4 4 கட்சி நுவரெலியா பிரதேச சபை கொத்மலை பிரதேச சபை ஹங்குரன்கெத்த பிரதேச சபை வலப்பனை பிரதேச சபை தே.ம.ச 7 22 20 30 இ.தொ.கா 6 8 இ.பொ.மு 4 7 ஐ.ம.ச 17 9 15 சு.கு 5 குறிப்பு – இடம் கருதி சுயாதீனக் கட்சிகள் பெற்ற ஆசனங்களை உட்சேர்க்க வில்லை;. ஐ.தே.க. – ஐக்கிய தேசிய கட்சி ம.போ.மு. – மக்கள் போராட்ட முன்னணி தே.ம.ச. – தேசிய மக்கள் சக்தி இ.தொ.கா. – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இ.பொ.மு. – இலங்கை பொதுசன முன்னணி ஐ.ம.ச. – ஐக்கிய மக்கள் சக்தி சு.கு – சுயாதீன குழு ம.ம.மு. – மலையக மக்கள் முன்னணி வடகிழக்கு மக்கள் உள்ளூராட்சி மன்றங்களில் அதிக வாக்கினை வழங்கியுள்ளனர் எனக் கருதி அதனால் தமிழ் தேசியத்திற்கு அச்சுறுத்தலில்லை என வடக்கின் தலைமைகள் கருதுமாயின் எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலின்போது பாரிய சவாலை சந்திக்க நேரிடுவதுடன் தமிழ் தேசியத்தை தக்கவைததுக் கொள்வதும் சவாலாக அமையும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் விளைவாக உருவாக்கிக் கொண்ட பிரதிநிதிகளை ஜே.வி.பி. களப்பணியார்களாக மாற்றிவிடும். எனவே, எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது வடக்கு மற்றும் மலையக கட்சிகள் பாரிய சவாலை எதிர்க்கொள்ள நேரிடும். மாகாண சபையில் இதையொத்த வெற்றியை ஜே.வி.பி. பெறுமாயின் சுயர்நிர்ணய உரிமை தொடர்பான ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டினை தமிழ் மக்கள் ஏற்றுள்ளதாக தேசமும் சர்வதேசமும் கருதும். எனவே, தமிழ் கட்சிகள் புதிய மூலோபாயங்களை உருவாக்கிக் கொள்வது அவசியம். பெ.முத்துலிங்கம் https://maatram.org/articles/12120

ஜே.வி.பி./ தே.ம.ச.யின் பிரதேச சபை பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

3 months 1 week ago

ஜே.வி.பி./ தே.ம.ச.யின் பிரதேச சபை பிரதிநிதித்துவம் தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

image_df9ac4d177.jpeg?resize=1200%2C550&

Photo, SUNDAY TIMES

இலங்கையில் பிரதிநிதித்துவ (நாடாளுமன்ற) அரசியல் முறைமை அறிமுகப்படுத்திய நாள் முதல் இனத்துவ பிரதிநிதித்துவ அரசியல் வலுப்பெறலாயிற்று. கொழும்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசியக் கட்சிகள் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைக்கு சம முக்கியத்துவம் அளிக்காமையினால் சிறுபான்மை அரசியல் தலைலைமைகள் சிறுபான்மை மக்களின் தனித்துவத்தை முன்னிறுத்தி தமிழ் தேசியத்தை வலியுறுத்தி தனித்துவமாக செயற்பட ஆரம்பித்தன. தமக்கென தனித்துவமான கட்சிகளை உருவாக்கிக் கொண்டன. எனினும், கொழும்பை மையமாகக் கொண்ட இடதுசாரிக் கட்சிகள் அவ்வாறல்லாது சிறுபான்மை மக்களது பிரச்சினைகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து குறிப்பாக சமசமாஜ மற்றும் கம்யூனிஸ்கட்சிகள் தம் அரசியல் செயற்பாட்டினை வடகிழக்கிலும் முன்னெடுத்து வந்தன. ஆயினும், இடசாரி கட்சிகளாலும் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் தமது செல்வாக்கினை விரிவடையச் செய்ய முடியாமற் போய்விட்டது. அறுபதுகளின் பின் இறுதியில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட என். சண்முகதாசன் தலைமையளித்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வடக்கிலும் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்த முடியாமற் போய்விட்டது. இப்பின்புலத்தில் எழுபதுகளில் வீரீயம் பெற்ற தமிழ் தேசியம் இடதுசாரி கட்சிகளையும் , வலது சாரி கட்சிகளையும் வட கிழக்கில் பூச்சிய நிலைக்குத் தள்ளியது.

ஆயினும், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு வந்தப்பின்னரும் வலதுசாரி கட்சிளும் இடதுசாரி கட்சிகளும் வடகிழக்கில் ஆதிக்கம் செலுத்த முனைந்த போதிலும் தோல்வியைத் தழுவின. ஆயினும், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தென்னிலங்கையின் இடதுசாரி கட்சியென அடையாளப்படுத்தப்படும் ஜே.வி.பி. – தே.ம.ச. (என்பிபி). தமிழ் தேசியத்தின் ஊற்றுவாய் எனக் கருதப்படும் யாழ்பாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் அரசியல் அறிமுகமில்லா வேட்பாளர்களை முன்னிறுத்தி மூவரை வெற்றி பெறச் செய்துள்ளது. இதேபோல் மலையகத்தில், பெரிதும் அறிமுகமில்லா வேட்பாளர்களை முன்னிறுத்தி நான்கு வேட்பாளர்களை வெற்றிப் பெறச் செய்துள்ளது. தமிழ் மக்களது அரசியல் வரலாற்றில் இது ஒரு பாரிய திருப்புமுனையாகும். வடக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் தம் இனத்துவ பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்தும் கொடுத்து தமிழ் கட்சிகளின் வேட்பாளர்களையே வெற்றி பெறச் செய்து வந்துள்ளனர். ஆனால், நடந்த பொதுத்தேர்தலின் போதும் அதனைத் தொடாந்து தற்போது நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தம் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கடைப்பிடித்துள்ளனர். இம்மாற்றம் வடக்கின் தமிழ் தேசியம் எனும் தரிசனம் வலுவிழந்து சரிவினை நோக்கி நகர்கின்றதா என்ற கேள்வியை எழுப்புவதுடன் மலையக மக்கள் நமது தமிழ் தலைமைகள் எனும்  நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்கின்றனரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

பொதுத் தேர்தலின் பின்னர் வடக்கின் தமிழ் தேசிய கட்சிகள் விழிப்புற்றதுடன் தமிழ் தேசிய தரிசனம் சரிவை நோக்கிச் செல்லவில்லை எனக் கூற ஆரம்பித்ததுடன் அண்மைய பிரதேச சபைத் தேர்தலின் போது தமிழ் தேசியத்தை தமிழ் மக்கள் கைவிடவில்லையென்பதை  நிரூபிக்கும் வகையில் வாக்களிக்கும்படி கோரின. அதனை வலியுறுத்தும் வகையில் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்து பிரிந்துச் சென்று உருவாக்கப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் வடகிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளூராட்சி மன்றத்  தேர்தலில் களம் இறங்கின. தென்னிலங்கை அரசாங்கத்திற்கு குறிப்பாக ஜே.வி.பிக்கு பாடம் புகட்டும் வகையில் வடகிழக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கோரினர். மலையகத் தலைமைகள் தாங்கள் தனித் தனியே உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியினை பிடிக்க முடியாவிட்டாலும் தேர்தலின் பின் கூட்டுச் சேர்ந்து சபைகளில் ஆட்சி அமைப்போம், ஆகையால் எங்களை வெற்றிப் பெறச் செய்யுங்கள் என மலைய மக்களைக் கோரினர்.

ஆனால், நடந்துள்ளது என்னவெனில் தமிழ் தேசியத்தின் தலையெனக் கருதப்படும் யாழ். மாவட்டத்தின் பதினேழு சபைகளில் அதிகளவு ஆசனங்களைப் பெற்ற போதிலும் பலமான ஆட்சியை உருவாக்கக் கூடியவாறு மக்கள் ஆணையை வழங்கவில்லை. அதனையடுத்து தீவிரமாக தமிழ் தேசியத்தை வலியுறத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வடக்கின் பல சபைகனை தன் வசப்படுத்திக் கொள்ளும் எனக் கருதப்பட்டபோதிலும் இரண்டு சபைகளிலேயே முதன்மைப்  வகித்துள்ளது. அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டணியிலிருந்து விலகி தமிழ் தேசிய ஜனநாயக கூட்டணியும் பல சபைகளை வென்றுக்கொள்ளும் என எதிர்பார்த்த போதிலும் அதுவும் பாரிய வெற்றியைப் பெறவில்லை. தமிழரசுக் கட்சியைத் தவிர ஏனைய தமிழ் கட்சிகள் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் பிரதிநிதித்துவத்தைப் பெறவில்லை. ஆனால், வடக்கின் அனைத்து பிரதேச சபைகளிலும், நகர மற்றும் மாநகர சபைகளிலும் தமிழரசுக் கட்சிக்கு அடுத்ததாக ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி கட்சி பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது .

 

கட்சி

 

யாழ் மாநகர சபை

 

வல்வெட்டி துறை நகர சபை

 

பருத்தித்துறை நகரசபை

 

சாவகச்சேரி நகர சபை

நெடுந்தீவு பிரதேச சபை

இ.த.க.

13

5

4

6

6

அ.இ.த.கா.

12

7

5

6

 

தே.ம.ச.

10

3

2

3

3

ஜ.த.தே.கூ.

 

2

2

 

ஈ.ம.ஜ.க.

 

 

 

 

4

அதிலும் தேசிய மக்கள் சக்தி சில சபைகளில் இரண்டாம் (பருத்திதுறை, வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் தென் மேற்கு, வேலனை, காரை நகர் பிரதேச சபைகள்) இடத்தையும், சில சபைகளில் முறையே யாழ்ப்பாணம் மாநகர சபை, சாவகச்சேரி நகர சபை, வல்வெட்டித்துறை நகரசபை, பருத்திச் துறை நகரசபை மற்றும் வலிகாமம் மேற்கு, வடமராட்சி தென் மேற்கு, சாவகச்சேரி, நெடுந்தீவு, ஊர்காவற்துறை எனும் பிரேதேச சபைகளில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. இதேவேளை, ஆசனங்கள் பெற்றதில் தமிழரசு கட்சி முதலாம் இடத்தையும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. தமிழரசு கட்சிக்கு சவாலாக இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ மூன்றாம் இடத்தையே பெற்றுள்ளது. முறையே தமிழரசு 137 ஆசனங்களையும் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மக்கள் சக்தி 81 ஆசனங்களையும், மூன்றாம் இடத்தைப் பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 79 ஆசனங்களையும் பெற்றுள்ளது (கிழக்கின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜே.வி.பி./ தே.ம.ச. அதிகளவு பிரதிநிதித்துத்தைக் கொண்டுள்ளது).

கட்சி

வலிகாமம் மேற்கு பிரதேச சபை

வலிகாமம் தெற்கு பிரதேச சபை

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை

சாவகச்சேரி பிரதேச சபை

நல்லூர் பிரதேச சபை

இ.த.க.

10

13

13

8

7

அ.இ.த.கா.

6

6

7

7

 

தே.ம.ச.

4

5

6

6

3

ஜ.த.தே.கூ.

 

 

 

 

3

ஈ.ம.ஜ.க.

 

6

 

 

 

ஐ.தே.க.

 

 

 

 

3

கட்சி

ஊர்காவற்துறை பிரதேச சபை

வேலணை பிரதேச சபை

வலிகாமம் வடக்கு பிரதேச சபை

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை

பருத்தித்துறை பிரதேச சபை

இ.த.க.

2

8

11

8

11

9

தே.ம.ச.

3

4

9

6

9

4

அ.இ.த.கா.

3

 

6

 

5

ஐ.தே.க.

 

 

 

 

 

 

சு.கு

 

 

 

 

2

ஜ.த.தே.கூ.

 

 

 

5

5

4

த.ம.கூ.

4

 

 

 

 

 

ஈ.ம.ஜ.க.

 

3

 

 

 

 

கட்சி

காரைநகர் பிரதேச சபை

தே.ம.ச

2

இ.த.க

2

அ.இ.த.கா

2

சு.கு

2

ஜ.த.தே.கூ

2

சுருக்கம்

இ.த.க. – இலங்கை தமிழரசு கட்சி

அ.இ.த.கா. – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

தே.ம.ச. – தேசிய மக்கள் சக்தி

ஐ.தே.க. – ஐக்கிய தேசிய கட்சி

சு.கு. – சுயாதீன குழு

ஜ.த.தே.கூ. – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி

த.ம.கூ. – தமிழ் மக்கள் கூட்டணி

ஈ.ம.ஜ.க. – ஈழ மக்கள் ஜன நாயக கட்சி

இலங்கையின் தேர்தல் அரசியல் வரலாற்றில் தென்னிலங்கை இடதுசாரி கட்சியொன்று வடகிழக்கின் உள்ளூராட்சி சபைகளில் இந்தளவு வெற்றியைப் பெற்றமை இதுவே முதற் தடவையாகும். ஜே.வி.பி./ தே.ம.ச. கட்சியானது ஏனைய கட்சிகள் போலன்றி முழு நேர களப்பணியாளர்களைக் (Cadre) கொண்ட கட்சியாகும். அக்கட்சி சார்பாக வடக்கில் போட்டியிட்டவர்களில் வட்டார மட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் குறிப்பிடத்தக்களவு காணப்டுகின்றனர். அதன்படி பார்க்கும்போது ஜே.வி.பி./ தே.ம.ச. யினரின் வெற்றியாளர்களில் பெரும்பாலோர் அவ்வவ் கிராமத்தைச் சார்ந்தோர் அல்லது அவ்வட்டாரத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களாவர். ஏனைய கட்சிகளைப் போலல்லாது ஜே.வி.பி. தமது கட்சியின் கொள்கைக் கோட்பாடுகள் பற்றி தமது அங்கத்தவர்களுக்கு அறிவூட்டல் செய்யும் கட்சியாகும். கட்சியின் தலைமை எடுக்கும் கொள்கை நிலைப்பாட்டினை கட்சியின் கீழ் மட்டம் வரை திட்டமிட்டு கொண்டுச் செல்லும். அவ்வகையில் வடகிழக்கில் தெரிவுசெய்யப்பட்ட அனைத்து தமிழ் பிரதிநிதிகளுக்கும் சுயர்நிர்ணய உரிமை தொடர்பில் தம் கட்சியின் நிலைப்பாடு பற்றி அறிவூட்டல் செய்யும். அனைத்து மக்களும் பாராபட்சமின்றி உரிமைகளை அனுபவிக்கும் ஆட்சி முறைமையை உருவாக்குவதே தம் நிலைப்பாடு என்பதனை வெற்றிப் பெற்றோர் மத்தியில் வலியுறுத்தும். மறுபுறம் உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் பக்கச்சார்பற்ற வகையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும். தெரிவு செய்யப் பட்டவர்கள் அக்கருத்தினையே தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்வர். வட கிழக்கின் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இச்செயற்பாடு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்? தமிழ் தேசியக் கட்சிகள் இத்தாக்கத்தை எவ்வாறு எதிர்கொள்ளும்? தொடர்ச்சியாக தமிழ் தேசியத்தை வலியுறுத்துவதன் மூலம் ஜே.வி.பியின் வியாபித்தலைத் தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது காணமால் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வு அல்லது வடகிழக்கு இணைப்பு மற்றும் மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கு எனும் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் தமிழ் மக்களது உணர்வினைத் தட்டி எழுப்பி தமிழ் மக்களை தமிழ் தேசியத்துடன் கட்டிவைத்து தமிழ் கட்சிகளுக்கு முடியுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் சிறந்த வாழ்வாதார நிலையையும் உட்கட்டமைப்பு வசதிகளையே எதிர்பார்த்திருக்கின்றனர். பிரதேச சபைகள் மூலம் அபிவிருத்தித் திட்டங்களையும் ஊழலற்ற ஆட்சியை மேற்கொண்டால் ஜே.வி.பி./ தே.ம.ச. மீதான ஈர்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறனதாக இருக்கும்?

எவ்வாறு வடகிழக்கில் ஜே.வி.பி./ தே.ம.ச. தன் பிரதிநிதித்துவத்தை இத்தேர்தலின் போது நிலை நிறுத்தியுள்ளதே அதேபோல் மலையக  உள்ளூராட்சி மன்றங்களிலும் கணிசமான ஆசனங்களை ஜே.வி.பி./ தே.ம.ச. வெற்றிப் பெற்றுள்ளது. வடக்கின் தமிழரசு கட்சி போல் மலையகத்தில் இலங்கை தொழிலளார் காங்கிசும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் மலையக மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வரும் கட்சிகளாகும். ஆனால், இவ்விரு கட்சிகளும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சரிவை சந்தித்துள்ளது. மலையகத்தின் நுவரெலிய மாநகர சபை, அட்டன் டிக்கோய நகர சபை, தலவாகெல்லை – லிந்துள்ள நகர சபை மற்றும் அம்பகமுவ, நுவரெலிய, கொத்மலை, அங்குரன்கெத்த, வலப்பனை, மஸ்கெலிய. நோர்வூட், அக்கரபத்தனை, கொட்டகல முதலிய பிரதேச சபைகளில் அதிக ஆசனங்களை ஜே.வி.பி./ தே.ம.ச. பெற்றுள்ளது. இவ்வாறு வெற்றி பெற்றவர்களில் அதிகமானோர் இளம் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களாவர். இவர்கள் மலையகக் குடியிறுப்பு பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி பிரதேச சபைகளை சிறப்புற நடத்தினால் மலையக தமிழ் கட்சிகள் எதனைக் கோருவதன் மூலம் மலையக மக்களை  தம்பால் வென்றெடுக்க முடியும் . மேலும், இந்தியா வழங்கும் வீடமைப்புத் திட்டத்தை ஜே.வி.பி./ தே.ம.ச. பக்கச் சார்பற்ற முறையில் முன்னெடுத்து உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கினால் மலையக மக்களது மனோநிலை எவ்வாறானதாக அமையும். வெறுமனே நாம் மலையகத் தமிழர் என்ற அடையாளத்தையும், சம்பள அதிகரிப்பு என்பனவற்றினை மட்டும் முன்னிறுத்தி மலையக மக்களை  தம் கட்சிகளின் பால் இனிமேலும் தக்க வைக்க முடியுமா? மேலும் மலையகக் கட்சிகளின் பால் மலையக  இளைஞர்கள் கொண்டுள்ள கருத்துநிலை மலையக கட்சிகளின் பால் எவ்வாறான தாக்கத்தை உருவாக்கும்?

கட்சி

நுவரெலியா மாநகர சபை

ஹட்டன் – டிக்கோயா நகர சபை

தலவாக்கலை – லிந்துலை நகர சபை

மஸ்கெலியா பிரதேச சபை

ஐ.தே.க

3

 

 

2

தே.ம.ச

12

6

4

7

இ.தொ.கா

 

2

2

 

ஐ.ம.ச

4

5

2

6

சு.கு

3

 

 

2

ம.ம.மு

 

3

 

கட்சி

நோர்வூட் பிரதேச சபை

அம்பகமுவ பிரதேச சபை

அகரப்பத்தனை பிரதேச சபை

கொட்டகலை பிரதேச சபை

தே.ம.ச

6

8

4

5

இ.தொ.கா

6

2

4

5

ஐ.ம.ச

5

6

4

4

கட்சி

நுவரெலியா பிரதேச சபை

கொத்மலை பிரதேச சபை

ஹங்குரன்கெத்த பிரதேச சபை

வலப்பனை பிரதேச சபை

தே.ம.ச

7

22

20

30

இ.தொ.கா

6

8

 

 

இ.பொ.மு

 

4

7

ஐ.ம.ச

17

9

15

சு.கு

5

 

 

 

குறிப்பு – இடம் கருதி சுயாதீனக் கட்சிகள் பெற்ற ஆசனங்களை உட்சேர்க்க வில்லை;.

ஐ.தே.க. – ஐக்கிய தேசிய கட்சி

ம.போ.மு. – மக்கள் போராட்ட முன்னணி

தே.ம.ச. – தேசிய மக்கள் சக்தி

இ.தொ.கா. – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இ.பொ.மு. – இலங்கை பொதுசன முன்னணி

ஐ.ம.ச. – ஐக்கிய மக்கள் சக்தி

சு.கு – சுயாதீன குழு

ம.ம.மு. – மலையக மக்கள் முன்னணி

வடகிழக்கு மக்கள் உள்ளூராட்சி மன்றங்களில் அதிக வாக்கினை வழங்கியுள்ளனர் எனக் கருதி  அதனால் தமிழ் தேசியத்திற்கு அச்சுறுத்தலில்லை என வடக்கின் தலைமைகள் கருதுமாயின் எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலின்போது பாரிய சவாலை சந்திக்க நேரிடுவதுடன் தமிழ் தேசியத்தை தக்கவைததுக் கொள்வதும் சவாலாக அமையும்.  உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் விளைவாக உருவாக்கிக் கொண்ட பிரதிநிதிகளை ஜே.வி.பி. களப்பணியார்களாக மாற்றிவிடும். எனவே, எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது வடக்கு மற்றும் மலையக கட்சிகள் பாரிய சவாலை எதிர்க்கொள்ள நேரிடும். மாகாண சபையில் இதையொத்த வெற்றியை ஜே.வி.பி. பெறுமாயின்   சுயர்நிர்ணய உரிமை தொடர்பான ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டினை தமிழ் மக்கள் ஏற்றுள்ளதாக தேசமும் சர்வதேசமும் கருதும். எனவே, தமிழ் கட்சிகள் புதிய மூலோபாயங்களை உருவாக்கிக் கொள்வது அவசியம்.

பெ.முத்துலிங்கம்

https://maatram.org/articles/12120

நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!

3 months 1 week ago
டிரம்பு நன்றிகெட்ட மனிதர் – எலான் மஸ்க் குற்றச்சாட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருப்பதாகவும், அவை குழந்தை துஷ்பிரயோக ஊழலின் ஒரு பகுதியாகும் என்றும், அதனால்தான் விசாரணையின் விவரங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலான் மஸ்க் பேஸ்புக் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டு குழந்தை துஷ்பிரயோகத்திற்கான விசாரணையை எதிர்கொள்ளும் போது சிறையில் தற்கொலை செய்து கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் பாலியல் வன்கொடுமைகளை எப்ஸ்டீன் வழக்கு உள்ளடக்கியது. இருவருக்கும் இடையிலான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், குற்றச்சாட்டுகள் இப்போது வெளிப்படையாக ஒருவரையொருவர் குறிவைத்து வருகின்றன. டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை அவருக்குப் பதிலாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிய பதிவை மஸ்க் உடனடியாகப் பகிர்ந்து கொண்டார். ‘எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்ட் டிரம்ப் பெயர் இருக்கின்றது. அவர்கள் பகிரங்கப்படுத்தப்படாததற்கு அதுதான் உண்மையான காரணம். இனிய நாள், டிஜேடி!’ என்று மஸ்க் பதிவில் கூறினார். இந்த பதிவை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கவும். உண்மை வெளிவரும் என்றும் மஸ்க் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். “மஸ்க்கும் எனக்கும் இடையே ஒரு சிறந்த உறவு இருந்தது. மீண்டும் அது எப்போதாவது கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார். எலான் என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் எதுவும் மோசமாகப் பேசவில்லை. ஆனால் அடுத்தது அப்படித்தான் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் டிரம்ப் கணித்தார். நான் இல்லையென்றால், டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார். ஜனநாயகக் கட்சியினர் சபையைக் கட்டுப்படுத்தியிருப்பார்கள் என்று மஸ்க் பதிலளித்தார். எம்.பி.க்கள் மசோதாவை படித்துவிடக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நான் உதவியிருக்காவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் தோற்றிருப்பார். டிரம்ப் நன்றி கெட்டவர். சிறார் பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டிரம்பின் பெயர் இருப்பதாலேயே அவர் அதனை வெளியிடவில்லை. நாசா உடனான டிராகன் விண்கலன் ஒப்பந்தத்தை ரத்து செய்கிறேன் என மஸ்க் தெரிவித்துள்ளார். மஸ்க் தனது “பெரிய அழகான மசோதாவை” எதிர்த்ததற்காக அவர் ஏமாற்றமடைந்ததாக டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மஸ்க்கின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. கருத்து வேறுபாடுகள் காரணமாக, டிரம்ப் நிர்வாகத்தின் எரிசக்தித் துறையின் (DoD) தலைவர் பதவியில் இருந்து மஸ்க் கடந்த வாரம் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது. கோடீஸ்வரர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் கடந்த ஒன்பது மாதங்களாக பிரிக்க முடியாத ஒருவருக்கொருவர் அபிமானிகளாக இருந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=327610

குருந்தூர்மலை விவசாயிகள் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை!

3 months 1 week ago
குருந்தூர்மலை விவசாயிகள் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை! June 6, 2025 தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக இரண்டு தமிழ் விவசாயிகள் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் நிரூபிக்கத் தவறியதால், நீதிமன்றம் அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினரால் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என்ற அடிப்படையில், மூன்று வாரங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை முல்லைத்தீவு நீதிபதி டி.பிரதீபன் (ஜூலை 5) விடுவித்து விடுதலை செய்தார். குருந்தூர்மலையில் உள்ள தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக விவசாயிகள் மீது தேரர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் உள்ள சில காணிகளின் உரிமை தொடர்பாக மாகாணத்தின் தமிழ் மக்களுக்கும் பௌத்த பிக்குகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் சர்ச்சையைத் தீர்ப்பதில் முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பு உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. அந்த காணி தொல்பொருள் துறைக்குச் சொந்தமானதாக சட்டப்பூர்வமாக்கப்படவில்லை என்பதை காவல்துறையினரும் தொல்லியல் திணைக்களமும் ஒப்புக்கொண்டதாக, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர், சட்டத்தரணி வி.எஸ். தனஞ்சயன் ஊடகங்களிடம் தெரிவித்தார். “வழக்குத் தொடுனர் சார்பில் தொல்பொருள் திணைக்களத்தாலும் சமர்ப்பணங்கள் செய்யப்பட்டன. இந்த இரண்டு சந்தேகநபர்களும் இந்த வழக்கில் இருந்து பூரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த நீதிமன்ற கட்டளையிலேயே, விசேடமாக குறித்த பிரதேசமானது இன்னமும் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்பதை வழக்குத் தொடுனரே ஏற்றுக்கொண்டிருந்ததை நீதவான் சுட்டிக்காட்டியிருந்தார்.” குற்றம் சாட்டப்பட்ட இரண்டு விவசாயிகளின் சார்பாக சாட்சியங்களை முன்வைக்க 12 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையானதாக சட்டத்தரணி வி.எஸ். தனஞ்சயன் மேலும் தெரிவித்திருந்தார். தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சங்கநாயக்க தேரர் கல்கமுவே சாந்தபோதி ஆகியோர் செய்த முறைப்பாட்டை அடுத்து, புனித பிரதேசத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மே 10 அன்று மூன்று தமிழ் விவசாயிகளை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்தது. ஆரம்பத்தில் முல்லைத்தீவின் குருந்தூர்மலை பகுதிக்கு 78 ஏக்கர் பரப்பளவு சொந்தமானது என, மே 12, 1933 அன்று ஆங்கிலேயர்களால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை மேற்கோள் காட்டி தொல்பொருள் துறை அதிகாரிகள் அறிவித்ததாக அப்பகுதியின் தமிழ் மக்கள் குறிப்பிடுகின்றனர். அப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர், தொல்பொருள் கலைப்பொருட்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படும் மேலும் 229 ஏக்கர் நிலம், குருந்தூர்மலை தொல்பொருள் காப்பகத்திற்காக தொல்பொருள் திணைக்களத்தால் வரையறுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். முல்லைத்தீவு குருந்தூர்மலையில் உள்ள தன்னிமுறிப்பு குளத்தின் கீழ் விவசாயத்தில் ஈடுபடும் அப்பகுதி மக்கள், 229 ஏக்கர் நிலத்தில் அவர்களின் உறவினர்கள் 100 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் நெல் வயல்களும் அடங்குவதாக கூறுகின்றனர். மே 10 ஆம் திகதி, குருந்தூர்மலை அடிவாரத்தில், மூன்று தொழிலாளர்கள் உழவு இயந்திரத்தின் ஊடாக நிலத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது, தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சங்கநாயக்க தேரரான கல்கமுவே சாந்தபோதி ஆகியோர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொலிஸார் மூன்று பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். மூவரில் பாடசாலை சிறுவனை விடுவிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதி டி. பிரதீபன், சந்தேகநபர்களான சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். https://www.ilakku.org/குருந்தூர்மலை-விவசாயிகள/

குருந்தூர்மலை விவசாயிகள் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை!

3 months 1 week ago

குருந்தூர்மலை விவசாயிகள் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை!

June 6, 2025

தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக இரண்டு தமிழ் விவசாயிகள் மீதான குற்றச்சாட்டுகளை  காவல்துறையினர் நிரூபிக்கத் தவறியதால், நீதிமன்றம் அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினரால் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என்ற அடிப்படையில், மூன்று வாரங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை முல்லைத்தீவு நீதிபதி டி.பிரதீபன்   (ஜூலை 5) விடுவித்து விடுதலை செய்தார்.

குருந்தூர்மலையில் உள்ள தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக விவசாயிகள் மீது தேரர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் உள்ள சில காணிகளின் உரிமை தொடர்பாக மாகாணத்தின் தமிழ் மக்களுக்கும் பௌத்த பிக்குகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் சர்ச்சையைத் தீர்ப்பதில் முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பு உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

அந்த காணி தொல்பொருள் துறைக்குச் சொந்தமானதாக சட்டப்பூர்வமாக்கப்படவில்லை என்பதை காவல்துறையினரும் தொல்லியல் திணைக்களமும் ஒப்புக்கொண்டதாக, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர், சட்டத்தரணி வி.எஸ். தனஞ்சயன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“வழக்குத் தொடுனர் சார்பில் தொல்பொருள் திணைக்களத்தாலும் சமர்ப்பணங்கள் செய்யப்பட்டன. இந்த இரண்டு சந்தேகநபர்களும் இந்த வழக்கில் இருந்து பூரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த நீதிமன்ற கட்டளையிலேயே, விசேடமாக குறித்த பிரதேசமானது இன்னமும் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்பதை வழக்குத் தொடுனரே ஏற்றுக்கொண்டிருந்ததை நீதவான் சுட்டிக்காட்டியிருந்தார்.”

குற்றம் சாட்டப்பட்ட இரண்டு விவசாயிகளின் சார்பாக சாட்சியங்களை முன்வைக்க 12 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையானதாக சட்டத்தரணி வி.எஸ். தனஞ்சயன் மேலும் தெரிவித்திருந்தார்.

தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சங்கநாயக்க தேரர் கல்கமுவே சாந்தபோதி ஆகியோர் செய்த முறைப்பாட்டை அடுத்து, புனித பிரதேசத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மே 10 அன்று மூன்று தமிழ் விவசாயிகளை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்தது.

ஆரம்பத்தில் முல்லைத்தீவின் குருந்தூர்மலை பகுதிக்கு 78 ஏக்கர் பரப்பளவு சொந்தமானது என, மே 12, 1933 அன்று ஆங்கிலேயர்களால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை மேற்கோள் காட்டி தொல்பொருள் துறை அதிகாரிகள்  அறிவித்ததாக அப்பகுதியின் தமிழ் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர், தொல்பொருள் கலைப்பொருட்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படும் மேலும் 229 ஏக்கர் நிலம், குருந்தூர்மலை தொல்பொருள் காப்பகத்திற்காக தொல்பொருள் திணைக்களத்தால் வரையறுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் உள்ள தன்னிமுறிப்பு குளத்தின் கீழ் விவசாயத்தில் ஈடுபடும் அப்பகுதி மக்கள், 229 ஏக்கர் நிலத்தில் அவர்களின் உறவினர்கள் 100 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் நெல் வயல்களும் அடங்குவதாக கூறுகின்றனர்.

மே 10 ஆம் திகதி, குருந்தூர்மலை அடிவாரத்தில், மூன்று தொழிலாளர்கள் உழவு இயந்திரத்தின் ஊடாக நிலத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது, தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சங்கநாயக்க தேரரான கல்கமுவே சாந்தபோதி ஆகியோர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொலிஸார் மூன்று பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

மூவரில் பாடசாலை சிறுவனை விடுவிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதி டி. பிரதீபன், சந்தேகநபர்களான சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

https://www.ilakku.org/குருந்தூர்மலை-விவசாயிகள/

வட்டுவாகல் பாலம் சீரமைப்பு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும்!

3 months 1 week ago
வட்டுவாகல் பாலம் சீரமைப்பு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும்! பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்துக்குரிய நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்றுக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- நந்திக்கடல், வட்டுவாகல் பாலத்தின் மாதிரித்திட்டம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்ற சுபச்செய்தியை வெளியிடுகின்றேன். மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளும் உரிய வகையில் ஆரம்பமாகவுள்ளது - என்றார். முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்பதற்கு 2025 பாதீட்டில் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/வட்டுவாகல்_பாலம்_சீரமைப்பு_ஓகஸ்ட்_மாதம்_ஆரம்பமாகும்!

வட்டுவாகல் பாலம் சீரமைப்பு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும்!

3 months 1 week ago

வட்டுவாகல் பாலம் சீரமைப்பு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும்!

502059299.jpeg

பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு 

முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்துக்குரிய நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்றுக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
நந்திக்கடல், வட்டுவாகல் பாலத்தின் மாதிரித்திட்டம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்ற சுபச்செய்தியை வெளியிடுகின்றேன். மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளும் உரிய வகையில் ஆரம்பமாகவுள்ளது - என்றார். முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்பதற்கு 2025 பாதீட்டில் ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/article/வட்டுவாகல்_பாலம்_சீரமைப்பு_ஓகஸ்ட்_மாதம்_ஆரம்பமாகும்!

சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலையில் முன்னெடுப்பு!

3 months 1 week ago
சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலையில் முன்னெடுப்பு! தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைகழக வளாகத்தில் இன்று மதியம் நடைபெற்ற நிகழ்வில், பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு மாணவர்கள் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்தி போராடினார். அதனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொன்.சிவகுமாரன் கடந்த 1974ஆம் ஆண்டு ஜீன் மாதம் 05ஆம் திகதி யாழ். உரும்பிராய் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பினுள் சிக்கிக்கொண்ட போது சயனைட் அருந்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார். ஈழ போராட்ட வரலாற்றில் முதல் முதலாக சயனைட் அருந்தி உயிர் நீத்தவர் இவர் என்பது குறிப்படத்தக்கது. https://newuthayan.com/article/சிவகுமாரனின்_51ஆவது_ஆண்டு_நினைவேந்தல்_நிகழ்வுகள்_யாழ்._பல்கலையில்_முன்னெடுப்பு!

சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலையில் முன்னெடுப்பு!

3 months 1 week ago

சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலையில் முன்னெடுப்பு!

1791625679.jpeg

தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

யாழ். பல்கலைகழக வளாகத்தில் இன்று மதியம் நடைபெற்ற நிகழ்வில், பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு மாணவர்கள் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்தி போராடினார். அதனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொன்.சிவகுமாரன் கடந்த 1974ஆம் ஆண்டு ஜீன் மாதம் 05ஆம் திகதி யாழ். உரும்பிராய் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பினுள் சிக்கிக்கொண்ட போது சயனைட் அருந்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார். ஈழ போராட்ட வரலாற்றில் முதல் முதலாக சயனைட் அருந்தி உயிர் நீத்தவர் இவர் என்பது குறிப்படத்தக்கது.

https://newuthayan.com/article/சிவகுமாரனின்_51ஆவது_ஆண்டு_நினைவேந்தல்_நிகழ்வுகள்_யாழ்._பல்கலையில்_முன்னெடுப்பு!

தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி!

3 months 1 week ago
தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி! யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு தெற்கில் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது. எதிர்வரும் 10ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று திஸ்ஸ விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அந்த வழிபாடுகளுக்காகவே, ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் தளங்கள் மூலம் தகவல்களை வழங்கி ஆட்களைத் திரட்டும் பணியில் சில சிங்கள கடும்போக்குச் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. திஸ்ஸ விகாரைக் காணிகள் தொடர்பான போலியான தகவல்களை வழங்கியே இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் ஒவ்வொரு பொசன் தினத்தன்றும் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. https://newuthayan.com/article/தையிட்டி_திஸ்ஸ_விகாரையில்_ஆயிரக்கணக்கில்_சிங்கள_மக்களை_களமிறக்குவதற்குத்_தீவிர_முயற்சி!

தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி!

3 months 1 week ago

தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி!

494048520.jpeg

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு தெற்கில் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது. 

எதிர்வரும் 10ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று திஸ்ஸ விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அந்த வழிபாடுகளுக்காகவே, ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் தளங்கள் மூலம் தகவல்களை வழங்கி ஆட்களைத் திரட்டும் பணியில் சில சிங்கள கடும்போக்குச் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. 

திஸ்ஸ விகாரைக் காணிகள் தொடர்பான போலியான தகவல்களை வழங்கியே இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் ஒவ்வொரு பொசன் தினத்தன்றும் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

https://newuthayan.com/article/தையிட்டி_திஸ்ஸ_விகாரையில்_ஆயிரக்கணக்கில்_சிங்கள_மக்களை_களமிறக்குவதற்குத்_தீவிர_முயற்சி!

யுத்த காலத்தில் மீட்கப்பட்ட நகைகளை வடக்கின் அபிவிருத்திக்காக பயன்படுத்த முடிவு!

3 months 1 week ago
யுத்த காலத்தில் மீட்கப்பட்ட நகைகளை வடக்கின் அபிவிருத்திக்காக பயன்படுத்த முடிவு! யுத்தக் காலத்தில் விடுதலைப் புலிகளின் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் மக்களிடம் மீளக் கையளிக்க முடியாத நகைகளை வடக்கின் அபிவிருத்திக்கான நிதியத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட தங்க நகைகளை ஆதாரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார். இவ்வேளையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே இராணுவத்தினர் வசமிருந்த கிலோ கணக்கான தங்கம் தற்போது நீதிமன்றத்தின் ஊடாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை யுத்த காலத்தில் வடக்கில் மீட்கப்பட்டவையாகும். இவை தங்கமாகவே இருக்கின்றன. இவை தொடர்பில் இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்தி எவ்வளவு தங்கம் உள்ளது என்பதனை ஆராய்ந்து அந்த அறிக்கையை பெற்ற பின்னர் அரசாங்கத்தால் மக்களுக்கு அந்த தங்கத்தை தங்களுடையது என்பதனை உறுதிப்படுத்தி அவற்றை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கலாம். அத்துடன் யுத்த நிலைமையால் நிருபிக்க முடியாத பகுதியும் இருக்கலாம். மக்கள் பெற்றுக்கொள்ளாதவற்றை வடக்கு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கி அவற்றில் அந்த தங்கத்தின் பகுதியை போட்டும், அரசாங்கத்தினால் நிதி வழங்கியும் வடக்கிற்கான விசேட அபிவிருத்தி நிதியத்தை அமைக்கவும், அதற்காக தேசிய மற்றும் வெளிநாட்டு ரீதியிலும் வாழும் இலங்கையர்களுக்கும் யுத்தத்தால் நாட்டில் இருந்து சென்ற மக்களுக்கும் இதில் கலந்துகொள்ள வாய்ப்பளிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். https://www.samakalam.com/யுத்த-காலத்தில்-மீட்கப்-2/