Aggregator

இலங்கைக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை ! - அவசர அறிவிப்பு – காலை 5.00 மணிக்கு வெளியீடு

3 months ago

இலங்கைக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை! - அவசர அறிவிப்பு – காலை 5.00 மணிக்கு வெளியீடு

Published By: Priyatharshan

28 Nov, 2025 | 07:23 AM

image

இலங்கையைச் சுற்றி உருவாகியுள்ள டித்வா ‘Ditwah’ சூறாவளிப் புயல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மோசமான வானிலையியல் சூழ்நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் அதிகபட்ச மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாட்டின் சில மாகாணங்களில் 200 மில்லிமீற்றரை மீறும் மிக கன மழை பெய்யும் என்றும் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட வேகத்தில் பலத்த காற்றும் சில மாகாணங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்றடிக்கும் அபாயம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல இடங்களில் உயர் அபாய நிலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

* திடீர் வெள்ளப்பெருக்கு

* நிலச்சரிவு

* மரங்கள் சாய்வது/வீழ்வது

* கடல் பகுதிகளில் மிகவும் கடுமையான அலை 

ஏற்கனவே பதிவான மிக கன மழை அளவுகள்

* வவுனியா - செடிக்குளம் – 315 மிமீ

* முல்லைத்தீவு, அலம்பில் – 305 மிமீ

* கண்டி – 223.9 மிமீ

* மன்னார், மடு – 218.5 மிமீ

* இரத்தினபுரி – 208 மிமீ

பொது மக்களுக்கு அறிவுறுத்தல்

* அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்

* அதிகாரிகள் வழங்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும்

* வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்

586402990_1479804990170428_2994850456343

590152307_1479804880170439_4012643140811

590377688_1479805673503693_7954821149556

590559701_1479811363503124_5524145560739

https://www.virakesari.lk/article/231741

ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு - தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தகவல்

3 months ago
இளம்பருவத்தினரின் எச்.ஐ.வி தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு; 2024 ஆண்டு 724 ஆண்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் Published By: Vishnu 28 Nov, 2025 | 03:06 AM ( செ.சுபதர்ஷனி) இலங்கையின் எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொடர்பான தரவுகளுக்கமைய இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 639 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 824 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களில் 724 பேர் ஆண்களாவர். அந்தவகையில் 15 தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் இளம்பருவத்தினரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துச் செல்வதாக தேசிய பாலியல் பால்வினை நோய்கள் /எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் மாதவி குணதிலக்க தெரிவித்தார். எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (26) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் கூட்டுத் திட்டம் வெளியிட்டுள்ள எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி உலகளாவிய தரவுகளுக்கமைய 2024 ஆண்டு இலங்கையில் 5,700 அண்ணளவானோர் எச்.ஐ.வியுடன் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நாளாந்தம் பதிவாகும் எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன், கடந்த ஆண்டு மாத்திரம் 824 எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் 1987 ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.வி தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதுடன், இதுவரை 7,168 எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 639 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த வருடம் எச்.ஐ.வி தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் சுமார் 724 பேர் ஆண்களாவர். 2010 தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரையான தரவுகளை நோக்கும்போது 15 தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட எச்.ஐ.வி க்கு ஆளாகியுள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்களுடன் ஒப்பிடும் போது ஆண்களிடையே எச்.ஐ.வி தொற்று வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆண்பாலின ஈர்பாளர்களிடையே (ஓரின சேர்க்கையாளர்கள்) உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதால் பலர் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் 50 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளதாக பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத் தரவுகள் தெரிவிக்கின்றன. சிரிஞ்சியின் ஊடாக போதைப்பொருள் பாவனையும் சமூகத்தின் அதிகரித்துள்ளது. ஒருவர் பயன்படுத்திய சிரிஞ்சியை ஏனையோர் உபயோகிப்பதால் எச்.ஐ.வி ஏற்பட வாய்ப்புள்ளது. 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் உலகளாவிய ரீதியில் கண்டறியப்பட்ட புதிய எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளது. எனினும் 2024 ஆம் ஆண்டு இலங்கையில் அடையாளம் காணப்பட்ட எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை 48 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோய் பற்றிய புரிந்துணர்வு இல்லாமை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக உள்ளது. 2010 ஆம் ஆண்டு 20 -24 வயதுக்கிடைப்பட்ட 9 எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும் 2024 ஆம் ஆண்டு அவ்வயதுக்குட்பட்ட 91 எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இளம் பருவத்தினரிடையே எச்.ஐ.வி நோயாளர்கள் அதிகளவில் கண்டறியப்படுவது பாரதூரமான விடயமாகும். ஆகையால் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இளைஞர்களை இலக்குவைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய பால்வினைநோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/231738

வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025

3 months ago
வட மாகாணத்தில் கனமழை: 21 பெரிய குளங்கள் வான்பாயும் நிலையில் – நீர்ப்பாசனத் திணைக்களம் Published By: Vishnu 28 Nov, 2025 | 02:36 AM வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 54 மிகப் பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களில், வியாழக்கிழமை (27.11.2025) மாலை 6.00 மணி நிலவரப்படி 21 குளங்கள் வான்பாயும் நிலையில் உள்ளதாக வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு தெரிவித்தார். வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குளங்களின் நீர்மட்ட விவரங்கள் பின்வருமாறு: வான் பாயும் நிலையிலுள்ள குளங்கள்: 21 75%- 100% கொள்ளளவில் உள்ளவை: 07 50% - 74% கொள்ளளவில் உள்ளவை: 07 25% - 49% கொள்ளளவில் உள்ளவை: 12 25% இலும் குறைந்த கொள்ளளவில் உள்ளவை: 05 இதேவேளை, மாகாணத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களான இரணைமடு குளம் 37.13% கொள்ளளவையும், வவுனிக்குளம் 42% கொள்ளளவையும், முத்துஐயன்கட்டுக்குளம் 48% கொள்ளளவையும் கொண்டுள்ளன. வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும், வவுனியா பகுதியில் இன்று காலை 7.00 மணி முதல் அதிகபடியான மழைவீழ்ச்சியாக 163 மி.மீ பதிவாகியுள்ளது. வவுனியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 172 மி.மீ மழைவீழ்ச்சியும், சேமமடுவில் 58 மி.மீ மழைவீழ்ச்சியும், முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் 101 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. இந்த அதிகளவான மழைவீழ்ச்சி காரணமாக, வவுனியா மாவட்டத்திலுள்ள பம்பைமடு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்தது. இதன் உயர் வெள்ள மட்டமானது (அதிகூடிய வான் பாயும் அளவு) 16 அங்குலமாக காணப்பட்ட போதும், தற்போதைய அதிக மழையால் 25 அங்குலமாக வான் பாய்ந்தது. இதனால் குளம் உடைப்பெடுக்கும் அபாயத்தைக் குறைப்பதற்காகவும், குளத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வான் வழிவாய்க்காலுக்கான தடுப்பணையின் ஒரு பகுதி வெட்டப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வவுனியா மாவட்டத்தின் அலியாமருதமடு குளம் 10 அங்குல அளவிலும், கல்மடு குளம் 1 அடியும் வான் பாய்வதுடன், முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசனத் திட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திணைக்களத்தின் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என நீர்ப்பாசனப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/231732

மோசமான வானில‍ை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு

3 months ago
மோசமான வானில‍ை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு. தித்வா சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.…(Full News in Athavan News) இன்று (28) காலை வரையான தகவலின்படி, மோசமான வானிலை தொடர்பான அனர்த்த சம்பவங்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நான்கு வீடுகள் முழுமையாகவும், 666 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1454076

மோசமான வானில‍ை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு

3 months ago

New-Project-210.jpg?resize=750%2C375&ssl

மோசமான வானில‍ை; 43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு.

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.…(Full News in Athavan News)

இன்று (28) காலை வரையான தகவலின்படி, மோசமான வானிலை தொடர்பான அனர்த்த சம்பவங்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

14 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நான்கு வீடுகள் முழுமையாகவும், 666 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1454076

மாவீரர் நாள் தமிழர் நாற்காட்டியில் மிகமுக்கிய தினமாகும்; அவுஸ்திரேலிய செனெட் உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ் உரை

3 months ago
Published By: Vishnu 28 Nov, 2025 | 03:14 AM (நா.தனுஜா) மாவீரர் நாள் என்பது தமிழர்களின் நாற்காட்டியில் மிகமுக்கியமானதொரு தினமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவுஸ்திரேலிய செனெட் உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ், தமிழர்களின் தியாகங்களைத் தாம் அங்கீகரிப்பதாகவும், கடந்தகாலம் குறித்து நேர்மையாகப் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை (25) அவுஸ்திரேலிய செனெட் சபையில் உரையாற்றியபோதே டேவிட் ஷுபிரிட்ஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'மாவீரர் நாள்' என்பது தமிழர்களின் நாற்காட்டியில் மிகமுக்கியமானதொரு தினமாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், உலகவாழ் தமிழர்கள் யுத்தத்தில் உயிரிழந்தோரை 27 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு நினைவுகூர்வதானது ஒருமைப்பாட்டின் மிகவலுவானதொரு அடையாளமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று அவுஸ்திரேலியாவிலும், ஏனைய உலக நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் தான் உடன்நிற்பதாகவும் டேவிட் ஷுபிரிட்ஜ் தெரிவித்துள்ளார். 'நான் இப்போது இந்த வார்த்தைகளை அவுஸ்திரேலிய செனெட் சபையில் கூறுகின்றேன். இந்தத் தினத்தை நினைவுகூருவதற்காக ஒன்றுபட்டிருக்கும் நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட அவுஸ்திரேலியவாழ் தமிழர்களே, உங்களது தியாகங்களை நாம் அங்கீகரிக்கின்றோம். கடந்த காலம் தொடர்பில் நேர்மையாகப் பேசுவதுடன் அமைதியையும், ஒருமைப்பாட்டையும் அடைந்துகொள்வதற்கு ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருக்கின்றோம்' எனவும் அவர் உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/231740

மாவீரர் நாள் தமிழர் நாற்காட்டியில் மிகமுக்கிய தினமாகும்; அவுஸ்திரேலிய செனெட் உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ் உரை

3 months ago

Published By: Vishnu

28 Nov, 2025 | 03:14 AM

image

(நா.தனுஜா)

மாவீரர் நாள் என்பது தமிழர்களின் நாற்காட்டியில் மிகமுக்கியமானதொரு தினமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவுஸ்திரேலிய செனெட் உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ், தமிழர்களின் தியாகங்களைத் தாம் அங்கீகரிப்பதாகவும், கடந்தகாலம் குறித்து நேர்மையாகப் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை (25) அவுஸ்திரேலிய செனெட் சபையில் உரையாற்றியபோதே டேவிட் ஷுபிரிட்ஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'மாவீரர் நாள்' என்பது தமிழர்களின் நாற்காட்டியில் மிகமுக்கியமானதொரு தினமாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், உலகவாழ் தமிழர்கள் யுத்தத்தில் உயிரிழந்தோரை 27 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு நினைவுகூர்வதானது ஒருமைப்பாட்டின் மிகவலுவானதொரு அடையாளமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று அவுஸ்திரேலியாவிலும், ஏனைய உலக நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் தான் உடன்நிற்பதாகவும் டேவிட் ஷுபிரிட்ஜ் தெரிவித்துள்ளார்.

'நான் இப்போது இந்த வார்த்தைகளை அவுஸ்திரேலிய செனெட் சபையில் கூறுகின்றேன். இந்தத் தினத்தை நினைவுகூருவதற்காக ஒன்றுபட்டிருக்கும் நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட அவுஸ்திரேலியவாழ் தமிழர்களே, உங்களது தியாகங்களை நாம் அங்கீகரிக்கின்றோம். கடந்த காலம் தொடர்பில் நேர்மையாகப் பேசுவதுடன் அமைதியையும், ஒருமைப்பாட்டையும் அடைந்துகொள்வதற்கு ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருக்கின்றோம்' எனவும் அவர் உறுதியளித்தார்.

https://www.virakesari.lk/article/231740

வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025

3 months ago
யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு Published By: Vishnu 28 Nov, 2025 | 02:30 AM யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் நிலவர அறிக்கை ; வேலணை, ஊர்காவற்றுறை ,காரைநகர் ,யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் ,சங்கானை ,கோப்பாய், சாவகச்சேரி ,பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 231 குடும்பங்களை சேர்ந்த 746 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களில் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் யா/போக்கட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 அங்கத்தவர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை கோப்பாய் பிரதேச செயலகத்திலே 1 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதெனவும் அதேவேளை அரியாலை உவர் நீர் தடுப்பணையில் 30 கதவுகளும் தொண்டைமானாறு உவர்நீர் தடுப்பணையின் 10 கதவுகளும் அராலி உவர் நீர் தடுப்பணையில் முழுமையாக 10 கதவுகளும் திறக்கபட்டுள்ளதுடன் தேவைக்கேற்ற வகையில் கதவுகள் திறப்பதற்குரிய தயார்நிலையில் நீர்பாசன திணைக்களம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை நெடுந்தீவு பிரதேசத்தில் மாவலித்துறை வீதி பொதுப்போக்குவரத்து மேற்க்கொள்ள முடியாதவாறு முழுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும் நேற்றைய தினம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் விடுவிக்கப்பட்ட 0.75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டிலிருந்து அவசர வெள்ள தணிப்பு நடவடிக்கைகளுக்காக பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கு இணங்க அந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்க்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231730

நவம்பர் 2025 - இன்றைய வானிலை

3 months ago
இலங்கை வானிலை தொடர்பில் நாசா வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்கள் Published By: Vishnu 28 Nov, 2025 | 12:24 AM இலங்கை வானிலை தொடபாக நாசாவின் சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் வெளியிட்டுள்ளது. நாசாவின் சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள், இலங்கையின் தெற்கே 'டிட்வா' சூறாவளி மண்டலம் தீவிரமடைந்து வருவதையும், தீவு முழுவதும் அடர்த்தியான மேகப் பட்டைகள் பரவுவதையும் காட்டுகிறது. இந்த அமைப்பு பல மாவட்டங்களில் கனமழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயங்களை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பல மாவட்டங்களில் கனமழை, வலுவான காற்று மற்றும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயங்களை அதிகரிக்கின்றன. உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு குழுக்கள், ஆபத்தான பகுதிகளில் இருப்பவர்களுக்கு அவசரமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். விவசாயிகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் உள்ளோர் சாத்தியமான பாதிப்புகளைத் தடுக்கும் விதமாக எச்சரிக்கைகள் கடைபிடிக்க வேண்டும். வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்து இதற்கான கண்காணிப்பை மேற்கொண்டு, நிலவும் பருவமழை நிலைமைகள் மற்றும் காற்றின் வேகத்தைப் பற்றி மக்களுக்கு புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231728

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

3 months ago
யாழ். கோப்பாயில் கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கானோர் கூடி நினைவேந்தல் ! Published By: Vishnu 28 Nov, 2025 | 12:36 AM யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி நினைவேந்தலில் ஈடுட்டனர். https://www.virakesari.lk/article/231729

இலங்கை அருகே உருவானது "டித்வா" சூறாவளி!

3 months ago
இலங்கையை புரட்டிப்போட்ட திட்வா புயல்: 56 பேர் பலி; இன்றும் கனமழை எச்சரிக்கை 28 நவம்பர் 2025, 02:45 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் திட்வா புயல் தாக்கத்தால் 56 பேர் பலியாகியுள்ளனர், 14 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 21 பேர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவம்பர் 27) புயலாக மாறியது. இதற்கு திட்வா (Ditwah) என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி இலங்கையில் கண்டி மற்றும் மதாலே மாவட்டங்களில் சில பகுதிகளில் 40 செ.மீக்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது. கம்மதுவா பகுதியில் 57.8 செ.மீ மழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஹாவெலி, தெதுரு ஒயா, மஹா ஒயா, காலா ஒயா, மெனிக் கங்கா, மல்வாது ஒயா ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக இலங்கையின் நீர்பாசனத்துறை எச்சரித்துள்ளது. எனவே, இந்த ஆறுகளுக்கு அருகில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும், வெள்ளத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு செல்வது சிறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பயிர்கள் நாசமாகியுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 51 ஆயிரம் ஏக்கரிலான நெல் வயல்கள் சேதமடைந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம்,Tharindu Niroshan / Facebook இன்று விடுமுறை கனமழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இலங்கை முழுவதும் இன்று அரசு நிறுவனங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களுக்கு தேவையான அவசர சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது டொயோட்டா கார்களை அதிகம் விரும்பும் ஆப்கன் தாலிபன்கள் - விநியோகிக்க மறுக்கும் நிறுவனம் வயிறு நிரம்ப சாப்பிட்டாலும் பசிக்கிறதா? இதைக் கட்டுப்படுத்துவதற்கான 5 எளிய டிப்ஸ் பிகாரில் பெண்களின் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு - குழந்தைகளுக்கு ஆபத்தா? வெள்ளக் காடாக மாறிய இலங்கை - பாதிப்புகளை காட்டும் புகைப்படத் தொகுப்பு End of அதிகம் படிக்கப்பட்டது இலங்கையின் பொது நிர்வாகத்துறை இதனை பிபிசியிடம் தெரிவித்தது. மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், எனினும், மருத்துவம் போன்ற அவசர சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு, பேரிடர் மேலாண்மை மையத்தை 117 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மீட்புப் பணியில் 20,500 ராணுவ துருப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வழங்குவதற்காக சுமார் 20,500 துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார். நேற்று (நவம்பர் 27) மத்திய மலைப்பகுதி உட்பட இலங்கையின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள 3,740 பேரை பாதுகாப்பாக வெளியேற்ற ராணுவ துருப்புகள் நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார். இன்றும் கனமழை பெய்யும் இலங்கையில் இன்றும் பல பகுதிகளில் 20 செ.மீக்கு அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாட்டின் வடக்கு, வட-மத்திய, மத்திய, வடமேற்கு, மற்றும் மேற்கு பிராந்தியங்களில் 20 செ.மீக்கு அதிகமான மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, திரிகோணமலை, பதுல்லா, படியகலோஆ, மதரா மாவட்டங்களில் 15 செ.மீக்கு அதிகமான மழை பெய்யக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c93wl5gv9x5o

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months ago
இந்த இரஸ்சியாவின் உக்கிரேன் ஆக்கிரமிப்பு போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் இரஸ்சியா தனது பாதுகாப்பு உத்தரவாதத்தினை மேற்கிடம் கோரியிருந்தது, போர் ஆரம்பித்த பின்னர், இரஸ்சியாவின் இராணுவ வல்லமையினை பற்றி அன்டனி பிளிங்கன் குறிப்பிடும் போது "இரஸ்சியா உலகில் இரண்டாவது பெரிய இராணுவம் அல்ல, உக்கிரேனில் இரண்டாவது பெரிய இராணுவம் என" (உக்கிரேன் முதலாவது பெரிய இராணுவம்) கூறியிருந்தார், அதனை கள உறவுகள் கூட கருத்தாக கூறியிருந்ததாக நினைவுள்ளது. ஆனால் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இரஸ்சியா எழுத்து மூலமான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க தயாராக உள்ளதாக கூறுகிற நிலை ஒன்று கொன்று முரணான சமூக ஊடக பிரச்சாரமாக உள்ளதா? அல்லது உண்மையில் இரஸ்சியா அவ்வாறான பலமான நாடா? குடிகாரன் பேச்சு என்பது போல இந்த அரசியல் செல்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

3 months ago
இவருக்கெதிரான நீதிமன்ற விசாரணைகளேதும் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறதோ? இருக்கலாம்! புத்தர் ரேஞ்சுக்கு மக்களுக்கு ஆசீர் அளித்துக்கொண்டிருந்தாரே, அதற்கிடையில் என்ன வந்தது? பாவம் மக்கள் ஆசீர் வாங்க வைத்தியசாலைக்கு கிளம்பப்போகிறார்கள்!

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

3 months ago
கட்டுரை பேச்சு படிக்கவும் மூலத்தைக் காண்க வரலாற்றைப் பார்க்கவும் கருவிகள் தோற்றம் மறை உரை சிறியது தரநிலை பெரியது அகலம் தரநிலை அகலம் நிறம் (பீட்டா) தானியங்கி ஒளி இருள் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. டிசம்பர் 17, 2021 அன்று, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னதாக , வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) மற்றும் அமெரிக்காவுடனான இரண்டு வரைவு ஒப்பந்தங்களின் வடிவத்தில் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான மேற்கு நாடுகளுக்கான கோரிக்கைகளின் பட்டியலை ரஷ்யா வெளியிட்டது . இந்த முன்மொழிவுகளில் உக்ரைன் மற்றும் பிற முன்னாள் சோவியத் நாடுகள் நேட்டோவில் சேருவதைத் தடை செய்தல் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ துருப்புக்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் திரும்பப் பெறுதல் ஆகியவை அடங்கும். முன்னாள் சோவியத் குடியரசுகளில் அதன் சுயமரியாதை செல்வாக்கு மண்டலம் குறைந்து வருவது குறித்து ரஷ்யா நீண்ட காலமாக கவலைப்பட்டு வந்தது, அவை மேற்கு நாடுகளுடன் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தங்களை இணைத்துக் கொண்டன, மேலும் தற்போதுள்ள பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் நேட்டோ விரிவாக்கத்தில் அதிருப்தி அடைந்தன. உக்ரைனின் எல்லைகளில் சுமார் 100,000 ரஷ்ய துருப்புக்கள் குவிக்கப்பட்டிருந்த உயர் பதட்டங்களின் காலகட்டத்தில் வெளியிடப்பட்ட கோரிக்கைகள், மேற்கத்திய நாடுகளின் மீது அழுத்தம் மற்றும் செல்வாக்கை செலுத்த ரஷ்யாவின் இறுதி எச்சரிக்கை மற்றும் முயற்சியாக பரவலாகக் கருதப்பட்டன . முக்கிய கோரிக்கைகள் ஜனவரி 26, 2022 அன்று நேட்டோ மற்றும் அமெரிக்காவால் நிராகரிக்கப்பட்டன; ஒரு மாதத்திற்குள் பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்ந்தது . [ 1 ] பின்னணி இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு , சோவியத் யூனியன் வார்சா ஒப்பந்தத்தை நிறுவியது : இந்த ஒப்பந்தம் பெயரளவில் ஒரு தற்காப்பு கூட்டணியாக இருந்தபோதிலும், நடைமுறையில் அது அதன் கிழக்கு ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் மீது சோவியத் யூனியனின் மேலாதிக்கத்தைப் பாதுகாக்க செயல்பட்டது . [ 2 ] சோவியத் பேரரசு என்று அழைக்கப்படும் சூழலில், சோவியத் யூனியனின் சர்வாதிகாரம் மற்றும் கிழக்குத் தொகுதியின் மீது மறுக்க முடியாத ஆதிக்கத்தின் நேரடி பிரதிபலிப்பாக இந்த ஒப்பந்தம் இருந்தது . பிரெஷ்நேவ் கோட்பாட்டுக் கொள்கையின்படி, துணைக்கோள் நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை மட்டுமே அனுமதித்தது மற்றும் கிழக்குத் தொகுதியின் ஒற்றுமையை யாரும் எந்த வகையிலும் சமரசம் செய்ய அனுமதிக்கப்படாது என்ற அதன் சொந்த உறுப்பு நாடுகள் பிரிந்து செல்வதைத் தடுக்க இந்த ஒப்பந்தத்தின் ஒரே நேரடி இராணுவ நடவடிக்கைகள் இருந்தன . ஒப்பந்தத்தில் உள்ள முடிவுகள் இறுதியில் சோவியத் யூனியனால் மட்டுமே எடுக்கப்பட்டன ; வார்சா ஒப்பந்தத்தின் நாடுகளால் ஒப்பந்தத்தில் நுழைவதையோ அல்லது எடுக்கப்பட்ட முடிவுகளையோ சமமாகப் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. [ 3 ] இதற்கு நேர்மாறாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதன் நட்பு நாடுகளை உள்ளடக்கிய ஒரு இராணுவக் கூட்டணியான வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ), நேட்டோ மீது அமெரிக்காவின் செல்வாக்கு (முக்கியமாக இராணுவ மற்றும் பொருளாதாரம்) இருந்தபோதிலும், அனைத்து முடிவுகளுக்கும் வடக்கு அட்லாண்டிக் கவுன்சிலில் ஒருமித்த ஒருமித்த கருத்து தேவைப்பட்டது . நேட்டோ கூட்டணியில் நாடுகள் நுழைவது ஆதிக்கத்திற்கு உட்பட்டது அல்ல, மாறாக ஒரு இயற்கையான ஜனநாயக செயல்முறையாகும். [ 3 ] 1991 ஆம் ஆண்டு பனிப்போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து , வார்சா ஒப்பந்தக் கலைப்பு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு உட்பட , நேட்டோ அதன் உறுப்பினர் அமைப்பை கிழக்கு நோக்கி விரிவுபடுத்தியது , இறுதியில் அனைத்து முன்னாள் ஒப்பந்த நாடுகளையும், சோவியத் ஒன்றியத்தின் பல முன்னாள் குடியரசுகளையும் உள்ளடக்கியது . [ 4 ] முதல் செச்சென் போர் உட்பட ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை, குறிப்பாக இதேபோன்ற சோவியத் தாக்குதல்களின் நினைவுகளைக் கொண்ட நாடுகளை, நேட்டோ பயன்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்து அவர்களின் நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்ய தூண்டிய காரணிகளில் ஒன்றாகும் . [ 5 ] [ 6 ] 1994 ஆம் ஆண்டில், ரஷ்யா நேட்டோவுடன் ஒத்துழைப்பு மற்றும் சிறந்த உறவுகளை எளிதாக்குவதற்காக நேட்டோவின் அமைதிக்கான கூட்டாண்மை திட்டத்தில் இணைந்தது, மேலும் உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதாக உறுதியளிக்கும் புடாபெஸ்ட் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த குறிப்பாணையில் கையெழுத்திட்டது, இது உக்ரைன் அதன் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு ஈடாகும். [ 7 ] 1996 இல், ரஷ்யாவும் ஐரோப்பிய கவுன்சிலில் இணைந்தது . அடுத்த ஆண்டு, 1997 இல், நேட்டோவும் ரஷ்யாவும் நேட்டோவிற்கும் ரஷ்ய கூட்டமைப்புக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள், ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஸ்தாபகச் சட்டத்தில் கையெழுத்திட்டன , இது மற்றவற்றுடன், ரஷ்யாவும் நேட்டோவும் "ஒருவருக்கொருவர் எதிரிகளாகக் கருதவில்லை" என்று கூறியது. [ 8 ] [ 9 ] [ 10 ] இதுபோன்ற போதிலும், நேட்டோ விரிவாக்கம் ரஷ்யாவிற்கு, குறிப்பாக விளாடிமிர் புடினின் கீழ் , ஒரு சர்ச்சைக்குரிய புள்ளியாக மாறியது, இது 1990 களின் முற்பகுதியில் மேற்கத்திய தலைவர்கள் அளித்த உத்தரவாதங்களை மீறுவதாகவும், [ மேற்கோள் தேவை ] மற்றும் அதன் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் ஒரு மூலோபாய சுற்றிவளைப்பு என்றும் அவர் வலியுறுத்தினார். [ 11 ] நேட்டோ விரிவாக்கத்தை ரஷ்யா பிடிவாதமாக அச்சுறுத்தலாக விவரித்திருந்தாலும், பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மேற்கு நாடுகளுடன் தங்களை இணைத்துக் கொண்ட முன்னாள் சோவியத் குடியரசுகளில் ரஷ்யாவின் செல்வாக்கு மண்டலத்தை இழப்பது குறித்து புடின் உண்மையில் அதிக அக்கறை கொண்டிருந்தார். ரஷ்யாவை ஒரு பெரிய சக்தியாக மீண்டும் நிறுவுவதன் ஒரு பகுதியாக இந்த குடியரசுகளின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற புடின் நோக்கமாகக் கொண்டிருந்தார். [ 12 ] நேட்டோ உறுப்பினர்களான ஹங்கேரி மற்றும் துருக்கியுடன் உறவுகளை ஏற்படுத்துவதன் மூலம், நேட்டோ கூட்டணிக்குள் சீர்குலைவை உருவாக்க புடின் நோக்கமாகக் கொண்டுள்ளார் . பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆற்றலுக்காக ரஷ்யாவைச் சார்ந்து இருந்ததால், குறிப்பாக நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாய்த்திட்டத்தின் முக்கிய பயனாளியாக இருந்த ஜெர்மனி, நேட்டோ மிகவும் பிளவுபட்டுள்ளதாகவும், அது தனது வழியில் நிற்காது என்றும் புடின் நம்பினார். [ 12 ] மேற்கத்திய ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர் விக்டர் யுஷ்செங்கோ மீது விஷம் வைத்தது உட்பட, கியேவில் ரஷ்ய ஆதரவு அரசாங்கத்தை நிறுவ புடின் ஆரம்பத்தில் முயன்றார், ஆனால் ஆரஞ்சு புரட்சி காரணமாக இது பின்வாங்கியது . 2010 இல் புடினின் முயற்சி வெற்றி பெற்றாலும், 2013 இல் நடந்த பாரிய யூரோமைடன் போராட்டங்கள் ரஷ்ய ஆதரவு உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை நாடுகடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2014 இல் கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்ததும் அதைத் தொடர்ந்து டான்பாஸில் நடந்த போரும் ரஷ்ய-உக்ரேனியப் போரின் தொடக்கத்தைக் குறித்தது , இது இராஜதந்திர வீழ்ச்சிக்கும் மேற்கத்திய நாடுகளால் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கும் வழிவகுத்தது . [ 4 ] [ 12 ] ஜூலை 12, 2021 அன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் " ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்களின் வரலாற்று ஒற்றுமை குறித்து " என்ற தனது கட்டுரையை வெளியிட்டார் , இது உக்ரேனிய பிராந்திய ஒருமைப்பாட்டை வெளிப்படையாகக் கேள்விக்குள்ளாக்கியது மற்றும் அது "வரலாற்று ரஷ்யாவின் நிலங்களில்" உருவாக்கப்பட்ட "சோவியத் சகாப்தத்தின் தயாரிப்பு" என்று கூறியது. கிரெம்ளினுடன் இணைந்த ஒரு செய்தித்தாள் இந்தக் கட்டுரையை "உக்ரைனுக்கு அவர் விடுத்த இறுதி எச்சரிக்கை" என்று விவரித்தது. [ 12 ] 2021 ஆம் ஆண்டு தொடங்கி, நேட்டோ படையெடுப்பிலிருந்து பாதுகாக்க முதலில் நோக்கம் கொண்ட ரஷ்யப் பிரிவுகள், உக்ரைன் மீதான எதிர்பார்க்கப்படும் படையெடுப்பை ஆதரிப்பதற்காக, நேட்டோவுடனான உண்மையான நில எல்லைகளிலிருந்து திரும்பப் பெறப்பட்டன. [ 12 ] ரஷ்யா உக்ரைனுடனான அதன் எல்லையில் அதன் இராணுவ இருப்பை கணிசமாக அதிகரித்து , டிசம்பர் மாதத்திற்குள் சுமார் 100,000 துருப்புக்களை குவித்தது. [ 13 ] இந்தக் குவிப்பு வலிமையைக் காட்டுவதாகவும், மேற்கத்திய சலுகைகளை கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அழுத்த தந்திரமாகவும் பார்க்கப்பட்டது. [ 14 ] ஜனவரி மற்றும் பிப்ரவரி 2022 தொடக்கத்தில் படையெடுப்பிற்கு ஒரு நியாயத்தை உருவாக்கும் நோக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட டான்பாஸில் ரஷ்ய தவறான கொடி நடவடிக்கைகள் மற்றும் தவறான தகவல் பிரச்சாரங்களையும் அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்தது. உக்ரைனை ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாக புடின் வடிவமைத்து, 2022 இல் ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேசங்கள் மற்றும் ரஷ்யா மீது சாத்தியமான தாக்குதலைக் கோரினார், இருப்பினும் கிரெம்ளின் உக்ரைனின் இராணுவத் திறன்களையும், சில நாட்களில் நாட்டைக் கைப்பற்றும் அளவுக்கு பலவீனமாக இருக்க போராடும் விருப்பத்தையும் மதிப்பிட்டிருந்தது. [ 12 ] இறுதி எச்சரிக்கை டிசம்பர் 15, 2021 அன்று, மேற்கத்திய நாடுகளிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான ரஷ்யாவின் கோரிக்கைகள் குறித்த "குறிப்பிட்ட முன்மொழிவுகளை" புடின் அமெரிக்க உதவி வெளியுறவுச் செயலாளர் கரேன் டான்ஃபிரைடிடம் சமர்ப்பித்தார் . [ 15 ] இரண்டு நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 17 அன்று, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் நேட்டோ மற்றும் அமெரிக்காவுடனான இரண்டு வரைவு ஒப்பந்தங்களின் வடிவத்தில் கோரிக்கைகளை வெளியிட்டது, ஐரோப்பாவில் அவர்களின் செல்வாக்கு மற்றும் செயல்பாடுகள் மீதான வரம்புகளை முன்மொழிந்தது. [ 16 ] ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், "சமீபத்திய ஆண்டுகளில் பாதுகாப்பு நிலைமையை ஆக்ரோஷமாக அதிகரிக்க அமெரிக்காவும் நேட்டோவும் பின்பற்றும் நிலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மிகவும் ஆபத்தானது" என்று கூறினார். டிசம்பர் 18 ஆம் தேதி விரைவில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும், ஜெனீவாவை ஒரு சாத்தியமான இடமாக பரிந்துரைத்ததாகவும் ரியாப்கோவ் கூறினார். [ 17 ] "ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்த ஒப்பந்தம்" என்ற தலைப்பிலான முதல் வரைவு ஒப்பந்தம், [ 18 ] பின்வரும் விதிகளை உள்ளடக்கியது, அவற்றில் சில: நேட்டோ உறுப்பினர்கள் கூட்டணியை மேலும் விரிவுபடுத்துவதற்கு உறுதியளிக்கவில்லை, குறிப்பாக உக்ரைனுடன் உட்பட. மே 1997 க்குப் பிறகு கூட்டணியில் இணைந்த நாடுகளில் நேட்டோ எந்தப் படைகளையும் அல்லது ஆயுதங்களையும் நிலைநிறுத்தக்கூடாது [ a ] மறுபக்கத்தின் எல்லையை அடையக்கூடிய பகுதிகளில் இடைநிலை தூர ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கு தடை. உக்ரைன், கிழக்கு ஐரோப்பா, காகசஸ் அல்லது மத்திய ஆசியாவில் எந்தவொரு நேட்டோ இராணுவ நடவடிக்கைக்கும் தடை. நேட்டோ-ரஷ்யா கவுன்சில் போன்ற ஆலோசனை வழிமுறைகள் மற்றும் ஹாட்லைனை நிறுவுதல் பற்றிய மொழி [ 16 ] "அமெரிக்காவிற்கும் ரஷ்ய கூட்டமைப்புக்கும் இடையிலான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மீதான ஒப்பந்தம்" என்ற தலைப்பிலான இரண்டாவது ஒப்பந்தம், [ 19 ] பின்வருவனவற்றை உள்ளடக்கியது: இரு நாடுகளும் "பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தக்கூடாது... அது மற்ற தரப்பினரின் முக்கிய பாதுகாப்பு நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும்" என்ற நிபந்தனை. நேட்டோ மேலும் விரிவடைவதைத் தடுக்க அமெரிக்கா மேற்கொள்ள வேண்டிய ஒரு தேவை ஐரோப்பாவில் அமெரிக்க இடைநிலை தூர ஏவுகணைகளை நிலைநிறுத்த தடை. சர்வதேச நீர்நிலைகளிலும் அதற்கு மேலேயும் மறுபக்கத்தின் எல்லைக்குள் செயல்படும் கனரக குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் மேற்பரப்பு போர்க்கப்பல்களின் திறனின் வரம்புகள். இரு தரப்பினரின் அணு ஆயுதங்களும் தேசிய பிரதேசத்தில் மட்டுமே நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனை [ 16 ] வரவேற்பு நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் முதன்மையான கோரிக்கையை நேட்டோவும் அமெரிக்காவும் நிராகரித்தன, அவை ரஷ்யா கூட்டணியின் விரிவாக்கத்தில் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருக்கக்கூடாது என்றும், அதன் சொந்த இராணுவ நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் உரிமையைக் கொண்டுள்ளது என்றும், அதன் திறந்த கதவுக் கொள்கையை அமைப்பின் அடிப்படைக் கொள்கையாகப் பாதுகாத்து வருவதாகவும் வாதிட்டன. [ 17 ] வரைவு ஒப்பந்தங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ரஷ்யாவுடனான எந்தவொரு உரையாடலும் "ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்த நேட்டோவின் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டும், ஐரோப்பிய பாதுகாப்புக்கான முக்கிய கொள்கைகள் மற்றும் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், மேலும் உக்ரைன் போன்ற நேட்டோவின் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் கலந்தாலோசித்து நடக்க வேண்டும்" என்று கூறினார். ஐரோப்பாவில் தனது வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் " உங்களைப் பற்றி எதுவும் இல்லை" என்ற கொள்கைக்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறினார். [ 20 ] உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம், உக்ரைனுக்கு அதன் வெளியுறவுக் கொள்கையை இயக்குவதற்கு "பிரத்தியேக இறையாண்மை உரிமை" இருப்பதாகவும், அதன் சாத்தியமான உறுப்பினர் பிரச்சினை உட்பட, அவற்றுக்கிடையேயான உறவை அது மற்றும் நேட்டோ மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும் கூறியது. [ 17 ] சில மேற்கத்திய அரசியல் ஆய்வாளர்கள், ரஷ்யா, உக்ரைன் மீது இராணுவ அழுத்தத்தைப் பேணுகையில், இராஜதந்திர கவனச்சிதறலை வழங்குவதற்காக, வேண்டுமென்றே நம்பத்தகாத கோரிக்கைகளை முன்வைப்பதாகக் கூறினர். மைக்கேல் கோஃப்மேன் , வரைவு ஒப்பந்தங்களை "புகைப்படத் திரை" என்றும், சாம் கிரீன் அவற்றை பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக இல்லாமல் "அறிவிப்பு" என்றும் அழைத்தனர். [ 17 ] உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பின்னர் ராஜினாமா செய்த ரஷ்ய இராஜதந்திரி போரிஸ் பொண்டரேவ் , வரைவு ஒப்பந்தங்கள் பல ரஷ்ய இராஜதந்திரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும், கோரிக்கைகளை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாதவை என்று தான் கருதியதாகவும் நினைவு கூர்ந்தார். ஜனவரி 10, 2022 அன்று ஜெனீவாவில் நடந்த இருதரப்பு அமெரிக்க-ரஷ்ய மூலோபாய ஸ்திரத்தன்மை பேச்சுவார்த்தைகளுக்கு இடையே ஒரு இரவு உணவின் போது, துணை வெளியுறவு செயலாளர் வெண்டி ஷெர்மன் உட்பட அமெரிக்க அதிகாரிகளிடம் ரியாப்கோவ் "[ரஷ்யாவிற்கு] உக்ரைன் தேவை! உக்ரைன் இல்லாமல் நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம்! [1997 எல்லைகளுக்கு] உங்கள் உடமைகளுடன் வெளியேறுங்கள்!" என்று ரியாப்கோவ் கத்தினார் என்றும் பொண்டரேவ் கூறினார். [ 12 ] நேட்டோ மற்றும் அமெரிக்க பதில் தி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளின்படி , ரஷ்ய கோரிக்கைகளுக்குப் பிந்தைய வாரங்களில் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் தங்கள் ஐரோப்பிய சகாக்களுடன் 180க்கும் மேற்பட்ட சந்திப்புகளை நடத்தினர். இந்த திட்டங்களுக்கான நேட்டோ மற்றும் அமெரிக்க பதில் ஒன்றாக வரைவு செய்யப்பட்டு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் உக்ரைனால் அங்கீகரிக்கப்பட்டது. [ 21 ] ஜனவரி 26, 2022 அன்று, நேட்டோவும் அமெரிக்காவும் ரஷ்யாவிற்கு முறையான பதிலை வெளியிட்டன, அதில் உக்ரைன் நேட்டோவில் ஒருபோதும் சேரக்கூடாது என்ற கோரிக்கைகளையும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து கூட்டணி தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அவர்கள் நிராகரித்தனர்; ரகசிய ஆவணம் பின்னர் எல் பைஸால் வெளியிடப்பட்டது . [ 22 ] உக்ரைன், ஜார்ஜியா மற்றும் மால்டோவாவிலிருந்து படைகளைத் திரும்பப் பெற ரஷ்யாவை அது அழைத்தது , மேலும் ரஷ்யாவில் உள்ள இரண்டு தரைவழி ஏவுகணைத் தளங்களில் வெளிப்படைத்தன்மைக்கு ஈடாக ருமேனியா மற்றும் போலந்தில் உள்ள இரண்டு ஏஜிஸ் ஆஷோர் தளங்களில் அமெரிக்க டோமாஹாக் கப்பல் ஏவுகணைகள் இல்லாததை உறுதிப்படுத்த ஒரு சாத்தியமான வெளிப்படைத்தன்மை பொறிமுறையைப் பற்றி விவாதித்தது . [ 23 ] பேச்சுவார்த்தைக்கு சுட்டிக்காட்டப்பட்ட பிற பகுதிகள் இடைநிலை-தூர அணுசக்தி ஒப்பந்தத்தின் சாத்தியமான மறுமலர்ச்சி மற்றும் இராணுவப் பயிற்சிகளின் அளவு மற்றும் இடங்களைக் கட்டுப்படுத்தும் புதிய பரஸ்பர விதிகள். [ 21 ] கார்னகி ரஷ்யா யூரேசியா மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கபுவேவ் பின்னர் ரஷ்ய இராஜதந்திரிகள் திட்டங்களால் "மகிழ்ச்சியுடன்" ஆச்சரியப்பட்டதாகவும், ரஷ்ய பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒப்பந்தங்களை அடைய முடியும் என்று நம்புவதாகவும், ஆனால் கிரெம்ளின் அக்கறை காட்டவில்லை என்றும் நினைவு கூர்ந்தார். [ 12 ] பிப்ரவரி 17 அன்று, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஒரு பதிலை வெளியிட்டது, அதில் நேட்டோ மற்றும் அமெரிக்க திட்டங்கள் "ஆக்கபூர்வமானவை" அல்ல என்றும், இரு தரப்பினரும் ரஷ்யாவின் " சிவப்பு கோடுகள் மற்றும் முக்கிய பாதுகாப்பு நலன்களை" தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், குறிப்பிடப்படாத "இராணுவ-தொழில்நுட்ப நடவடிக்கைகளை" செயல்படுத்துவதன் மூலம் ரஷ்யா பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அச்சுறுத்தியது. [ 23 ] ஒரு வாரம் கழித்து, பிப்ரவரி 24 அன்று, ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது . [ 12 ] https://en.wikipedia.org/wiki/Russian_ultimatum_to_NATO#:~:text=On%2017%20December%202021%2C%20during,NATO)%20and%20the%20United%20States.