3 months ago
28 Nov, 2025 | 02:24 PM

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவானார்.
தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக தெரிவானார்.
16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
எம்.கே.சிவாஜிலிங்கத்தை முதன்மை வேட்பாளராக நிறுத்தி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிட்டிருந்த போதும், எம்.கே.சிவஜாலிங்கம் நியமன பட்டியல் ஊடாக களமிறங்கியிருந்ததால் உடனடியாக உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை.
ஏற்கனவே, தெரிவான சபை உறுப்பினரொருவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் குறித்த வெற்றிடத்திற்கு எம்.கே.சிவாஜிலிங்கம் கட்சியால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டார்.
எம்.கே.சிவாஜிலிங்கம் உறுப்பினராக தெரிவானதும் தற்காலிக காலத்திற்கு செயற்பட்ட தவிசாளர் தவமலர் சுரேந்திரநாதன் தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சா.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு 7 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் ஆதரவு வழங்கினர். தேசிய மக்கள் சக்தியின் மூன்று பேரும் வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர்.
https://www.virakesari.lk/article/231810
3 months ago
2016ஆம் ஆண்டுக்கு பின் மிக மோசமான வானிலை : வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு! 28 Nov, 2025 | 01:24 PM வளிமண்டலவியல் திணைக்களத்தின் வெளியீட்டின்படி, தற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை 2016ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவாகிய மிக மோசமான வானிலையென குறிப்பிடப்பட்டுள்ளது. திணைக்களம் தெரிவித்துள்ள தகவலின் படி, கடுமையான கனமழை, இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் பல பகுதிகளில் தொடர்ந்து பதிவாகி வருகிறது. இதனால் வீடுகள் சேதமடைதல், மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் வீதிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளன என் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அதிகாரிகள் வழங்கும் எச்சரிக்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம், அடுத்தடுத்து வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து வழங்கி, பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. https://www.virakesari.lk/article/231796
3 months ago
அண்ணை, இன்று தொடக்கம் எமது பகுதியிலும் தொடர்மழை, காற்று வேகமாக வீசி மரங்களை வீழ்த்துகிறது. நாளை வரை இந்த நிலை தொடரலாம். தற்போது கையடக்க தொலைபேசி சேவை இயங்கவில்லை! மின்தடை இல்லை.
3 months ago
28 Nov, 2025 | 01:45 PM தற்போது நிலவும் கடுமையான மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக சேவைகளை மட்டுப்படுத்தி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவ கிளினிக் மற்றும் பிற கிளினிக்குகளுக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வானிலை சீரான பின் வழக்கமான சிகிச்சைகளைப் பெற முடியும் என்பதை அறியத் தருகிறோம். குறிப்பாக நாளை யாழ் மாவட்டம் கடுமையாக பாதிக்கபடலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. கிளினிக் மருந்துகள் கைவசம் இல்லாதவர்கள் கட்டாயம் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, இயலாமை இருப்பின், கிளினிக் கொப்பிகளை அனுப்பி மருந்துகளைப் பெறவும் முடியும். மேலதிக தகவல்கள் தேவையெனில், வைத்தியசாலை அனர்த்த முகாம் பிரிவை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி மற்றும் What's up இலக்கம்: 070 1222261 https://www.virakesari.lk/article/231805
3 months ago
28 Nov, 2025 | 01:45 PM

தற்போது நிலவும் கடுமையான மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக சேவைகளை மட்டுப்படுத்தி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மருத்துவ கிளினிக் மற்றும் பிற கிளினிக்குகளுக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வானிலை சீரான பின் வழக்கமான சிகிச்சைகளைப் பெற முடியும் என்பதை அறியத் தருகிறோம். குறிப்பாக நாளை யாழ் மாவட்டம் கடுமையாக பாதிக்கபடலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
கிளினிக் மருந்துகள் கைவசம் இல்லாதவர்கள் கட்டாயம் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, இயலாமை இருப்பின், கிளினிக் கொப்பிகளை அனுப்பி மருந்துகளைப் பெறவும் முடியும்.
மேலதிக தகவல்கள் தேவையெனில், வைத்தியசாலை அனர்த்த முகாம் பிரிவை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி மற்றும் What's up இலக்கம்: 070 1222261


https://www.virakesari.lk/article/231805
3 months ago
நினைத்துப் பார்க்க முடியாத அளவு கவலையாய் இருக்கிறது . .......! நீங்களும் சிரமம் பாராமல் தகவல்களைத் தந்து கொண்டு இருக்கிறீர்கள் .........நன்றி . ......!
3 months ago
சீரற்ற காலநிலையால் யாழில் ஏற்பட்ட பெரும் பாதிப்பு - வெளியான நிலவரம் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 231 குடும்பங்களைச் சேர்ந்த 746 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்போது ஒரு வீடு முழுமையாகவும் 17வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு 9 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் பொன்னாலை - காரைநகர் வீதியில் கடல் நீர் வீதிக்கு வந்துள்ளதுடன், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதனால் கீரிமலை கடல் பகுதி கொந்தளிப்புடனும் காணப்படுகின்றது. இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வல்வெட்டித்துறை பகுதியில் காற்றுடன் தொடர்ச்சியான மழை பெய்த வண்ணம் காணப்படுகின்றது தவிசாளரின் வாகனம் சேதம் மேலும், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தனின் வாகனம் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் வாகனம் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. இன்றையதினம் சேந்தாங்குளம் பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தை பார்வையிடுவதற்காக தவிசாளர் அங்கு சென்ற வாகனத்திற்கு மேல் முறிந்து விழுந்துள்ளது. வெள்ள வாய்க்கால் அடைப்பு பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட. திக்கம் நாச்சிமார் கோவிலடி வீதியின் வெள்ள வாய்க்கால் மழைகாரணமாக அடித்துச் செல்லப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் வாழைத்தண்டுகள் உட்பட்ட கழிவுகளால் வெள்ளம் வழிந்தோடும் மதகுகள் அடைபட்டிருந்தது. இந்நிலையில் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது குறித்த மதகு மற்றும் வடிகால் என்பன பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் ரமேஸ்கரன் தலைமையில் களப்பணி உத்தியோகத்தர்கள் அடக்கலான குழுவினர் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பகுதியில் வெள்ளம் வழிந்தோடும் பிரதான வடிகாலாக குறித்த நாச்சிமார் கோவிலடி வெள்ளவாய்க்கால் காணப்படுகிறது. செய்தி - தீபன், கஜிந்தன் https://tamilwin.com/article/746-people-affected-in-jaffna-inclement-weather-1764320991
3 months ago
சீரற்ற வானிலை; பொலிஸின் உதவியை பெற தொலைபேசி இலக்கம்! 28 Nov, 2025 | 01:40 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனர்த்த நிவாரண உதவிகளை பெறுவதற்கு பொலிஸ் பிரிவின் 071-8591868 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
3 months ago
சீரற்ற வானிலை ; கிளிநொச்சியில் வெள்ள அபாயம் 28 Nov, 2025 | 01:37 PM நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகமான காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடு குளம் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இன்று வெள்ளிக்கிழமை (28) காலை முதல், இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலர்பிரிவு அமைந்த பகுதிகளில், வெள்ள பாதிப்புகளை தணிக்க இராணுவத்தின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை, கனகாம்பிகை குளம் மற்றும் கல்மடு குளம் நீர் வெள்ளம் ஏற்படும் நிலையில் உள்ளன. அனர்த்த நிலமையை கருத்தில் கொண்டு, குளத்தின் நீர்மட்டம் அதிகமான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மிகுந்த அவதானத்துடன் செயல்படவும் மற்றும் தமது பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/231803
3 months ago
மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது. வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை (CEB) மேலும் கூறுகையில், மோசமான வானிலை காரணமாக நாடு முழுவதும் நாற்பத்தைந்தாயிரம் மின் தடைகள் பதிவாகியுள்ளன. 1987 SMS சேவைகள் நேற்று 27 ஆம் திகதி மாலைக்குள், இந்த மின் தடைகளில் சுமார் இருபதாயிரம் மின் தடைகள் மீட்டெடுக்கப்பட்டதாக சபை சுட்டிக்காட்டுகின்றது. இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மின் தடைகளை மீட்டெடுக்க விரைவாக செயல்பட்டு வருவதாகவும்,நிலவும் மோசமான வானிலை காரணமாக மின் தடைகள் குறித்து அழைப்பு மையத்திற்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, CEB CARE APP மொபைல் பயன்பாடு, Cebcare வலைத்தளம் https://cebcare.ceb.lk/incognito/newcomplain மற்றும் 1987 SMS சேவைகளைப் பயன்படுத்துமாறு மின்சார சபை பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது. https://tamilwin.com/article/urgent-notice-of-electricity-board-1764305998#google_vignette
3 months ago
மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.
வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை (CEB) மேலும் கூறுகையில், மோசமான வானிலை காரணமாக நாடு முழுவதும் நாற்பத்தைந்தாயிரம் மின் தடைகள் பதிவாகியுள்ளன.

1987 SMS சேவைகள்
நேற்று 27 ஆம் திகதி மாலைக்குள், இந்த மின் தடைகளில் சுமார் இருபதாயிரம் மின் தடைகள் மீட்டெடுக்கப்பட்டதாக சபை சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மின் தடைகளை மீட்டெடுக்க விரைவாக செயல்பட்டு வருவதாகவும்,நிலவும் மோசமான வானிலை காரணமாக மின் தடைகள் குறித்து அழைப்பு மையத்திற்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே, CEB CARE APP மொபைல் பயன்பாடு, Cebcare வலைத்தளம் https://cebcare.ceb.lk/incognito/newcomplain மற்றும் 1987 SMS சேவைகளைப் பயன்படுத்துமாறு மின்சார சபை பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.
https://tamilwin.com/article/urgent-notice-of-electricity-board-1764305998#google_vignette
3 months ago
28 Nov, 2025 | 01:03 PM சீரற்ற வானிலை காரணமாக உருவாகக்கூடிய அனர்த்த நிலைமைகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும், அனர்த்தங்கள் ஏற்படும் போது உடனடியாக தகவலறிந்து செயல்படவும் அவசர அனர்த்த நிவாரண உதவிகளுக்கான தேசிய அவசர தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அவசர அனர்த்த நிவாரண உதவிகளுக்கான தேசிய அவசர தொலைபேசி எண்கள் பின்வருமாறு ; 1. அவசர அனர்த்த தகவல் வழங்கல் மற்றும் நிவாரண சேவைகளின் ஒருங்கிணைப்பு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் (DMC): 117 2. உயிர் பாதுகாப்பு மற்றும் அவசர பாதுகாப்பு தேவைகள், பொலிஸ் அவசர அழைப்பு: 119 3.நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக, சுவ வசரிய ஆம்புலன்ஸ் சேவை: 1990 4.தீ விபத்துகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக, தீயணைப்பு படை: 110 5. நிலச்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கைக்காக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO): 011 258 8946 6.வானிலை முன்னறிவிப்புகளை அறிய, வானிலை ஆய்வு துறை: 011 268 6686 7.வெள்ள அனர்த்த நேரங்களில் படகு சேவைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், கடற்படை தலைமையகம்: 011 244 5368 8.அவசர அனர்த்த நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், இராணுவ தலைமையகம்: 113 9. ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படை தலைமையகம்: 116 https://www.virakesari.lk/article/231792
3 months ago
28 Nov, 2025 | 01:03 PM

சீரற்ற வானிலை காரணமாக உருவாகக்கூடிய அனர்த்த நிலைமைகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும், அனர்த்தங்கள் ஏற்படும் போது உடனடியாக தகவலறிந்து செயல்படவும் அவசர அனர்த்த நிவாரண உதவிகளுக்கான தேசிய அவசர தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவசர அனர்த்த நிவாரண உதவிகளுக்கான தேசிய அவசர தொலைபேசி எண்கள் பின்வருமாறு ;
1. அவசர அனர்த்த தகவல் வழங்கல் மற்றும் நிவாரண சேவைகளின் ஒருங்கிணைப்பு,
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் (DMC): 117
2. உயிர் பாதுகாப்பு மற்றும் அவசர பாதுகாப்பு தேவைகள்,
பொலிஸ் அவசர அழைப்பு: 119
3.நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக,
சுவ வசரிய ஆம்புலன்ஸ் சேவை: 1990
4.தீ விபத்துகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக,
தீயணைப்பு படை: 110
5. நிலச்சரிவு அனர்த்த அபாய எச்சரிக்கைக்காக,
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO): 011 258 8946
6.வானிலை முன்னறிவிப்புகளை அறிய,
வானிலை ஆய்வு துறை: 011 268 6686
7.வெள்ள அனர்த்த நேரங்களில் படகு சேவைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்,
கடற்படை தலைமையகம்: 011 244 5368
8.அவசர அனர்த்த நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்,
இராணுவ தலைமையகம்: 113
9. ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகளுக்காக
விமானப்படை தலைமையகம்: 116
https://www.virakesari.lk/article/231792
3 months ago
நாட்டில் புயலின் கோரதாண்டவம்.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு புதிய இணைப்பு பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படாமல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட மேம்பாட்டுக் குழுக்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களுடன் இன்று (28) காலை ஜூம் (Zoom) மூலம் சிறப்பு மெய்நிகர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, பேரிடர் நிவாரணத்திற்காக ஏற்கனவே ரூபா 1.2 பில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகால நடவடிக்கைகளுக்காக 2025 வரவு - செலவுத் திட்டத்தின் கீழ் மேலும் ரூபா 30 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு, தேவையான இடங்களில் கூடுதல் நிதியைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போதுள்ள சுற்றறிக்கை கட்டுப்பாடுகளால் ஏற்படும் நிர்வாக தாமதங்களைத் தவிர்க்க, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறு ஜனாதிபதி பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார். அவசர நிவாரண முயற்சிகளுக்கு கிடைக்கக்கூடிய நிதியைப் பயன்படுத்தவும், படகுகள், ஹெலிகாப்டர்கள், வாகனங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான சிறப்பு உபகரணங்கள் உள்ளிட்ட கூடுதல் தேவைகளை உடனடியாகப் புகாரளிக்கவும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவசரகால தகவல்தொடர்புகளை வலுப்படுத்த பத்து சிறப்பு ஹாட்லைன் எண்களை அறிமுகப்படுத்துவதோடு, பாதுகாப்புத் தலைமையகத்தில் ஒரு பிரத்யேக ஒருங்கிணைப்பு அலகு நிறுவப்படுவதையும் ஜனாதிபதி அறிவித்தார். இரண்டாம் இணைப்பு அரசாங்கத்தின் தற்போதைய அவசர வெள்ள நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மீட்பு முயற்சிகள் குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட தூதரகத் தலைவர்களுக்கு விளக்கமளிக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் இராஜதந்திர விளக்கமளிப்பு நடைபெற்றது. வெளிநாட்டில் உள்ள இலங்கையின் இராஜதந்திர தூதரகங்களின் அனைத்து தூதரகத் தலைவர்களும், பதவிகளும் இந்தக் கூட்டத்தில் மெய்நிகர் முறையில் கலந்துகொள்வதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த விளக்கக் கூட்டம் கவனம் செலுத்தியதுடன், உடனடி மற்றும் அதன் பின்விளைவு மீட்பு நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டியது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் இராஜதந்திர பணிகள் மற்றும் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திர பணிகள் ஆகியவற்றுடன் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பிற்காக வெளியுறவு அமைச்சகம் ஒரு அவசரகால பதிலளிப்பு பிரிவை நிறுவியுள்ளது. முதலாம் இணைப்பு கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய போர்க்கப்பலிடமிருந்து மீட்பு பணிகளுக்கு அவசர உதவி கோரப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா, கொழும்பில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள இந்திய போர்க்கப்பலிடமிருந்து உதவி கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டிட்வா சூறாவளி புயல் காரணமாக ஏற்படும் கடுமையான வானிலை நிலைமைகளுக்கு மத்தியில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு குறித்த கப்பலின் விமானங்களைப் பயன்படுத்துவதற்கும் உதவி கோரப்பட்டுள்ளது. உதவ முடியாத நிலை இது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முறையான கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் ஒரு சிறப்பு ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார். இருப்பினும், பாதகமான வானிலை இந்திய விமானங்களையும் பாதிக்கிறது என்றும் தற்போதைய நிலைமைகள் காரணமாக விமான நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். “நிலவும் பாதகமான வானிலை காரணமாக, இந்திய விமானிகள் கூட தற்போது இயக்க முடியவில்லை,” என்று அவர் கூறினார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதர்களுடன் ஒரு சிறப்பு சந்திப்பு இன்று மாலை திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இதன் போது தற்போதைய நிலைமை மற்றும் தொடர்ச்சியான பேரிடர் மீட்பு முயற்சிகளுக்குத் தேவையான ஆதரவு குறித்து அவர்களுக்கு விளக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். https://tamilwin.com/article/sri-lanka-weather-cyclone-ditwah-heavy-rain-update-1764314767
3 months ago
சீரற்ற வானிலை : பாதிக்கப்பட்டோருக்கு அவசர உதவிகளை வழங்க ஐ.நா. ஒருங்கிணைப்பு Published By: Digital Desk 1 28 Nov, 2025 | 12:59 PM சீரற்ற வானிலையின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான இயற்கை அனர்த்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்க இலங்கையின் உரிய கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியுள்ளோம் என இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி மார்க்-ஆன்ட்ரூ பிரெஞ்ச் தெரிவித்துள்ளார். வான் வழி மற்றும் நிலவழி மீட்பு, நிவாரணம் மற்றும் தற்காலிக முகாம்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் முழுமையான ஒத்துழைப்பு நடைபெற்று வருவதாக, அவருடைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. நிறுவனம் மற்றும் தேசிய, பிராந்திய அதிகாரிகள் இணைந்து, பாதிக்கப்பட்டோருக்கு உணவு, நீர் மருந்து மற்றும் தற்காலிக தங்குமிடங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/231791
3 months ago
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் புங்குடுதீவுக்கு கொண்டு செல்ல கடற்படையினரின் உதவி 28 Nov, 2025 | 12:44 PM யாழ்ப்பாணப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக புங்குடுதீவில் சிக்கிக்கொண்ட ஒரு பெண், அடைபட்ட அணுகல் சாலைகள் காரணமாக சிகிச்சை பெற முடியாமல், மாரடைப்பால் பாதிக்கப்பட்டார், இன்று வெள்ளிக்கிழமை (28) காலை கடற்படையினரால் புங்குடுதீவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டார். அதன்படி, சம்பவம் தொடர்பாக வேலனி பிரதேச செயலகத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, கடற்படையினர் உடனடியாக பதிலளித்து, நோய்வாய்ப்பட்ட பெண்ணை அழைத்து வர மருத்துவக் குழுவுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஒன்றை அனுப்பினர். அங்கு, வெள்ளம் காரணமாக சிகிச்சைக்கு செல்ல முடியாமல், மாரடைப்பு காரணமாக மிகவும் உடல்நிலை பாதிப்பின்மையால் இருந்த குறித்த பெண், அடிப்படை முதலுதவி அளித்த பிறகு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் புங்குடுதீவு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். https://www.virakesari.lk/article/231784
3 months ago
28 Nov, 2025 | 04:30 PM இலங்கையில் நிலவும் கடுமையான வானிலை மற்றும் சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாரிய அளவிலான சேதத்தினை முன்னிட்டு, இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஒற்றுமையுடன் கூடிய ஆதரவையும் பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம்–உல்–அசீஸ், பாகிஸ்தான் அரசின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உறவினர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்வதுடன், இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான குடிமக்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றோம். கடுமையான காலநிலை அசாதாரண சூழ்நிலைக்கு இலங்கை அதிகாரிகள் துரிதமாகவும் ஒருங்கிணைந்தவாறும் மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு பாராட்டுகின்றது. பரஸ்பர மரியாதை மற்றும் வரலாற்று நட்புறவை அடிப்படையாகக் கொண்ட இலங்கையுடனான உறவை பாகிஸ்தான் மேலும் வலுப்படுத்துவதற்கும், இக்கடினமான நேரத்தில் இலங்கைக்கு முழு ஆதரவை வழங்குவதற்கும் உறுதியளித்துள்ளது. இலங்கை ஒரு மீளுருவாக்க திறன் கொண்ட நாடு என்பதில் பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன், இக்கட்டான சூழ்நிலையை இலங்கை மக்களின் துணிச்சலாலும் ஒற்றுமையாலும் வெற்றிகரமாக கடந்து செல்ல முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231837
3 months ago
28 Nov, 2025 | 04:30 PM

இலங்கையில் நிலவும் கடுமையான வானிலை மற்றும் சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாரிய அளவிலான சேதத்தினை முன்னிட்டு, இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஒற்றுமையுடன் கூடிய ஆதரவையும் பாகிஸ்தான் அரசாங்கமும் மக்களும் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம்–உல்–அசீஸ், பாகிஸ்தான் அரசின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உறவினர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்வதுடன், இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான குடிமக்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கடுமையான காலநிலை அசாதாரண சூழ்நிலைக்கு இலங்கை அதிகாரிகள் துரிதமாகவும் ஒருங்கிணைந்தவாறும் மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு பாராட்டுகின்றது.
பரஸ்பர மரியாதை மற்றும் வரலாற்று நட்புறவை அடிப்படையாகக் கொண்ட இலங்கையுடனான உறவை பாகிஸ்தான் மேலும் வலுப்படுத்துவதற்கும், இக்கடினமான நேரத்தில் இலங்கைக்கு முழு ஆதரவை வழங்குவதற்கும் உறுதியளித்துள்ளது.
இலங்கை ஒரு மீளுருவாக்க திறன் கொண்ட நாடு என்பதில் பாகிஸ்தான் நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன், இக்கட்டான சூழ்நிலையை இலங்கை மக்களின் துணிச்சலாலும் ஒற்றுமையாலும் வெற்றிகரமாக கடந்து செல்ல முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://www.virakesari.lk/article/231837
3 months ago
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க தயாராக இருக்கிறோம் - இந்திய பிரதமர் நரேந்திர மோடி 28 Nov, 2025 | 04:12 PM டிட்வா சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக தமது அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களின் பாதுகாப்பிற்கும், ஆறுதலுக்கும், விரைவான மீட்சிக்கும் நான் பிரார்த்திக்கிறேன். இந்தியாவின் 'சாகர் பந்து' நடவடிக்கையின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிலைமைக்கு ஏற்ப மேலும் பல உதவிகள் மற்றும் ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த நேரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவும் உறுதியாகவும் நிற்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/231831
3 months ago
செங்கோட்டையன் வருகையால் விஜய் பலம் பெறுவாரா? அதிமுக-வுக்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,@TVKPartyHQ படக்குறிப்பு,முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 27 நவம்பர் 2025 அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவருமான செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்திருக்கிறார். சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விஜய் முன்பாக அக்கட்சியில் தன்னை அவர் இணைத்துக் கொண்டிருக்கிறார். இது தமிழக வெற்றிக் கழகத்திற்கு எந்த அளவுக்கு உதவும்? அ.தி,மு.கவின் துவக்க காலத்தில் இருந்து அக்கட்சியில் இருந்த ஒருவரது வெளியேற்றத்தால், அக்கட்சிக்கு எந்த அளவுக்கு இழப்பு? வியாழக்கிழமையன்று காலையில் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பாகவே அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்திருந்தனர். அதற்குப் பிறகு அங்கு வந்த செங்கோட்டையன் கட்சியின் தலைவர் விஜயை சந்தித்துப் பேசினார். பின்னர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் அ.தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதற்குப் பிறகு விஜய் வெளியிட்ட வீடியோ பதிவில், "20 வயது இளைஞராக இருந்தபோதே எம்.ஜி.ஆரை நம்பி அவருடைய மன்றத்தில் சேர்ந்தவர். அந்தச் சிறிய வயதிலேயே எம்.எல்.ஏ. என்ற ஒரு பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன் பிறகு அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் மிகப்பெரிய இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையனின் அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவரையும், அவருடன் இணைந்த மற்றவர்களையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்" என்று கூறியிருக்கிறார். பட மூலாதாரம்,@TVKPartyHQ அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டது எப்படி? கடந்த 1972இல் அ.தி.மு.க. தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அக்கட்சியில் செயல்பட்டு வந்த செங்கோட்டையன் நீடித்து நிற்பதற்கும், அதிருப்தியை வெளிக்காட்டாமல் தொடர்ந்து பணியாற்றுவதற்கும் பெயர்போனவர். அவர் மிக இளம் வயதிலேயே சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. ஆனார். அதற்குப் பிறகு கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் இருந்து எட்டு முறை எம்.எல்.ஏ-வாக தேர்வானவர். 2012ஆம் ஆண்டில் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி, அவரது கட்சிப் பதவிகளை ஜெ. ஜெயலலிதா பறித்தபோதும் வேறு முடிவுகள் எதையும் எடுக்காமல் தனது தருணத்திற்காகக் காத்திருந்தவர். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது திட்வா புயல் தற்போது எங்கே உள்ளது? தமிழ்நாட்டை எப்போது வந்தடையும்? - சமீபத்திய தகவல்கள் பாம்பு கடித்தபின் சிகிச்சை எடுக்காமல் இறுதி தருணங்களை எழுதி வைத்தவர் டொயோட்டா கார்களை அதிகம் விரும்பும் ஆப்கன் தாலிபன்கள் - விநியோகிக்க மறுக்கும் நிறுவனம் பிகாரில் பெண்களின் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு - குழந்தைகளுக்கு ஆபத்தா? End of அதிகம் படிக்கப்பட்டது ஆனால், 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. அதிலிருந்து, அவர் தனது அதிருப்தியை மெல்ல மெல்ல வெளிக்காட்டத் தொடங்கினார். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோரை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் எனக் கூறத் தொடங்கினார். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளே, அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதில் வந்து முடிந்தது. இதற்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வம் போன்றவர்கள் தொடர்ந்து தனித்துச் செயல்பட்டு வரும் நிலையில், செங்கோட்டையன் வேறொரு கட்சியில் சேர முடிவு செய்திருக்கிறார். இருந்தபோதும், சமீபத்தில்தான் துவங்கப்பட்டு இதுவரை ஒரு தேர்தலையும் சந்தித்திராத தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைய முடிவு செய்ததுதான் பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது. படக்குறிப்பு,கோப்புப் படம் 'சரியான முடிவாகத் தெரியவில்லை' பிற முன்னாள் அமைச்சர்களைச் சேர்த்துக் கொண்டு எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து கட்சியின் ஒருங்கிணைப்பை அவர் வலியுறுத்தியது சரியானதுதான் என்றாலும், தற்போது அவர் எடுத்துள்ள முடிவு துரதிர்ஷ்டவசமானது என்கிறார் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சுப்புரத்தினம். "செங்கோட்டையனின் தற்போதைய முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. விஜயின் கட்சி இன்னும் தேர்தல் களத்தில் பரிசோதிக்கப்படவில்லை. 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், விஜயை தலைவராக ஏற்றுக்கொண்டு போகிறார் என்றால் பொதுமக்கள் மத்தியில் அவருடைய இமேஜ் பாதிக்கப்படும் என்றுதான் கருத வேண்டும். அ.தி.மு.க பொதுக் குழுவின் பொருளாளராக இருந்து, அந்த பொதுக் குழுவை சிறப்பாக நடத்தியதற்காக எம்.ஜி.ஆரின் பாராட்டைப் பெற்றவர் இவர். 1980ஆம் ஆண்டு நடந்த அ.தி.மு.க-வின் அமைப்புத் தேர்தலில் போட்டியிட்டு ஈரோட்டின் மாவட்டச் செயலாளர் ஆனவர். அதற்குப் பிறகு, கொள்கை பரப்புச் செயலாளர், தலைமை நிலைமைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர் என பல பதவிகளை வகித்தவர். போக்குவரத்து துறை, வனத்துறை அமைச்சராக இருந்தவர். இவ்வளவு பெரிய பின்னணியைக் கொண்ட செங்கோட்டையன் உள்ளாட்சித் தேர்தலில்கூட போட்டியிடாத இயக்கத்தில் சேர்ந்திருக்கிறார் என்பது அவ்வளவு சரியான முடிவாகத் தெரியவில்லை" என்கிறார் சுப்புரத்தினம். படக்குறிப்பு,செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது பற்றிய கேள்விகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறவில்லை. அரசியல் தற்கொலை என விமர்சிக்கும் அ.தி.மு.கவினர் செங்கோட்டையனை பொறுத்தவரை, தேர்தல் காலங்களில் சிறந்த திட்டமிடுதலுக்காக அறியப்பட்டவர். ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரங்களின்போது, அவரது வாகனம் எந்த வழியில் செல்ல வேண்டும், எந்த இடத்தில் நின்று ஜெயலலிதா பேச வேண்டும் என்பதையெல்லாம் மிகக் கச்சிதமாக செங்கோட்டையன் வடிவமைப்பார். கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, 1980இல் இருந்து தற்போது வரையிலான காலகட்டத்தில் 1996 முதல் 2006 வரையிலான பத்து ஆண்டுகளைத் தவிர, தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். ஈரோடு மாவட்ட அ.தி.மு.கவின் வலுவான முகமாகவும் இருந்தார். இந்த நிலையில், அவர் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டு, த.வெ.கவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா? கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி கே. பழனிசாமி, இதுபோன்ற கேள்விகளுக்கே பதில் சொல்ல விரும்பவில்லை. மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, செங்கோட்டையன் இப்போது அ.தி.மு.க-வில் இல்லை என்பதால், இதற்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று மட்டும் கூறினார். அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரான செம்மலை, செங்கோட்டையனை பொறுத்தவரை இது ஒரு அரசியல் தற்கொலையாகத்தான் இருக்கும் என்கிறார். பட மூலாதாரம்,TVK "ஒருங்கிணைப்பு முயற்சி என்பது செங்கோட்டையன் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம். அந்த நாடகம் புஸ்வாணமாகிவிட்டது. இன்று அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு, அரசியல் தற்கொலை முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். அ.தி.மு.க.வில் இருந்து யாரும் வேறொரு கட்சியில் இணைவது, அ.தி.மு.கவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பொதுவாக, நதிகள் கடலில் கலப்பதுதான் இயற்கை. இவருடைய நடவடிக்கை, கடல் நீர் நதியில் கலப்பதைப் போன்றது. அவர் த.வெ.க-வில் இணைவதன் மூலம் விஜயிடம் அரசியல் கற்றுக்கொள்ளப் போகிறாரா அல்லது விஜய்க்கு கற்றுக்கொடுக்கப் போகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய செம்மலை, "ஒரு பெரிய இயக்கத்தில் இருந்து, பல்வேறு குழப்பங்களுக்குக் காரணமாக இருந்துவிட்டு, அதே போன்ற குழப்பத்தை இங்கும் ஏற்படுத்துவாரோ என்ற சந்தேகம் அந்தக் கட்சியினரிடம் இருக்கும். ஆகவே அக்கட்சியின் தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் அவரால் இணைந்து பணியாற்ற முடியாது. த.வெ.கவின் தொண்டர்கள், விஜயின் ரசிகர்கள் வாக்குரிமை பெறும் வயதை இப்போதுதான் அடைந்திருக்கிறார்கள். சில விதிவிலக்குகள் இருக்கலாம். இவரால் அவர்களோடு இணைந்து பயணிக்க முடியுமா? மேலும், புதிதாக துவக்கப்பட்டுள்ள கட்சிக்கு ஊர் ஊராகச் சென்று கிளைகளை அமைத்து, ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைத்தாலும் அது எட்டாக்கனியாகத்தான் இருக்கும்," என்று கூறினார். பட மூலாதாரம்,@TVKPartyHQ பத்திரிகையாளர்கள் சொல்வது என்ன? ஆனால், மூத்த பத்திரிகையாளர் மணி போன்றவர்கள் செங்கோட்டையன் வெளியேறியது அ.தி.மு.கவில் குறிப்பிடத்தக்க ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதுகிறார்கள். "தேர்தல் களத்தில் வெல்வதற்கு முன்பாக கருத்து ரீதியான போரில் வெல்ல வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் 6 முதல் 8 தொகுதிகளில் சிறிய அளவில் வாக்குகளை உடைத்தாலே பெரிய இழப்புதான். அதேபோல, த.வெ.க-வுக்கு அவர் எவ்விதமான வழிகாட்டுதலை அளிக்கப் போகிறார் என்பதும் கவனிக்கத்தக்கதாக இருக்கும். எத்தனையோ தலைவர்கள் அ.தி.மு.கவில் இருந்து வெளியேற்றப்பட்டபோது அக்கட்சித் தொண்டர்களிடம் ஏற்படாத ஒரு வருத்தம் இப்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே, இவரது வெளியேற்றம் குறிப்பிடத்தக்க சேதாரத்தை ஏற்படுத்தும்" என்கிறார் ஆர். மணி. மூத்த பத்திரிகையாளர் ப்ரியனும் இதே கருத்தை எதிரொலிக்கிறார். "அ.தி.மு.க-வில் கீழ் நிலை நிர்வாகிகள்தான் இப்போதும் எடப்பாடி கே. பழனிசாமியுடன் இருக்கிறார்கள். இடைநிலை தலைவர்களில் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் த.வெ.கவை நோக்கிச் செல்லும் வாய்ப்பை செங்கோட்டையன் உருவாக்கியுள்ளார். செங்கோட்டையனை பொறுத்தவரை, தன்னை உதாசீனப்படுத்திய அ.தி.மு.க-வை பலவீனப்படுத்தத் துணிந்துவிட்டார். சில மாதங்களுக்கு முன்பாக, தான் கலந்துகொண்ட கூட்டத்தில் சிலர் த.வெ.க. கொடியைக் காட்டியபோது, அதைப் பார்த்து 'கூட்டணி உருவாகிவிட்டது' என்பதைப் போல ஒரு கருத்தைத் தெரிவித்தார் எடப்பாடி கே. பழனிசாமி. ஆனால், செங்கோட்டையன் இப்போது அங்கு சென்று சேர்ந்திருப்பதன் மூலம் அந்தக் கூட்டணிக்கு இனி வாய்ப்பேயில்லை என்பது தெரிந்துவிட்டது" என்று கூறுகிறார் ப்ரியன். மேலும், "பா.ஜ.கவுடனான கூட்டணியால் ஏற்படக்கூடிய எதிர்மறை வாக்குகள் வேறு இருக்கின்றன. அ.தி.மு.கவுடன் வேறு கட்சிகள் எதுவும் கூட்டணியை உறுதிப்படுத்தவும் இல்லை. இது தொண்டர்களிடம் சோர்வை ஏற்படுத்தும்" என்கிறார் அவர். படக்குறிப்பு,நவம்பர் 26ஆம் தேதியன்று செங்கோட்டையன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் ஆனால், மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரனின் கருத்து முற்றிலும் மாறானதாக இருக்கிறது. செங்கோட்டையன் எப்போதுமே தன்னை ஒரு தனித்த ஆளுமையாக முன்னிறுத்திக் கொண்டதில்லை என்பதால், அவர் வெளியேறியது அ.தி.மு.கவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிறார் அவர். "செங்கோட்டையன் அந்தக் கட்சியில் தன் இருப்பை பெரிய தடபுடல் இல்லாமல்தான் வைத்திருந்தார். சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தார் அவ்வளவுதான். அ.தி.மு.கவில் அவருடைய முக்கியமான செயல்பாடாக, ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தை அவர் திட்டமிடுவதைக் கூறுவார்கள். குறிப்பாக கொங்கு பகுதியிலும் தென் மாவட்டங்களிலும் அதை அவர் செய்வார். அந்தந்த மாவட்டச் செயலாளர்களைக் கலந்தாலோசித்து இதைச் செய்து வந்தார். ஆனால், அவர் தன்னை ஒரு பெரிய அரசியல் சாணக்கியராகவோ, தலைவராகவோ முன்னிறுத்திக் கொண்டதில்லை. செயல்பட்டதுமில்லை." அப்படியிருந்திருந்தால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, "வி.கே. சசிகலா ஒரு முக்கியப் பதவியை இவருக்கு வழங்கியபோது, அதை ஏற்க மறுத்திருப்பாரா?" என்று வினவுகிறார் இளங்கோவன் ராஜசேகரன். மேலும், "இதெல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரியும். சாதிரீதியாக பார்த்தாலும்கூட, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவில் இருக்கும்போது இவர் வெளியேறுவதால் பெரிய பாதிப்பு இருக்காது. அப்படிப் பார்த்தால் இதற்கு முன்பாக செந்தில் பாலாஜி, முத்துசாமி போன்றவர்கள் வெளியேறியுள்ளார்கள். அவர்கள் வெளியேறியதால் ஏற்படாத பாதிப்பு, இவரால் எப்படி ஏற்படும்? ஒருவேளை எல்லோரும் சொல்வதைப்போல, பா.ஜ.க. இதன் பின்னணியில் இருந்தால், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.கவினர் அங்கே செல்வார்கள். அவ்வளவுதான்" என்கிறார் இளங்கோவன் ராஜசேகரன். த.வெ.கவை செழுமைப்படுத்துவாரா செங்கோட்டையன்? ஆனால், இவர்கள் எல்லோருமே செங்கோட்டையனின் வருகை த.வெ.கவின் அரசியல் செயல்பாடுகளைக் கூர்மைப்படுத்தும் என்பதில் ஒன்றுபடுகிறார்கள். அதற்கு உதாரணமாக இன்றைய செய்தியாளர் சந்திப்பைச் சுட்டிக்காட்டுகிறார் பத்திரிகையாளர் ஆர். மணி. "இன்றைய செய்தியாளர் சந்திப்பில், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுன் என த.வெ.கவின் தற்போதைய தலைவர்கள் மட்டும் உட்கார்ந்திருந்தால் இவ்வளவு பெரிய கவனம் கிடைத்திருக்காது. செங்கோட்டையனும் அங்கு அமர்ந்து பேசியதால்தான் இவ்வளவு பெரிய அளவில் எல்லோரும் கவனிக்கிறார்கள். செங்கோட்டையன் அங்கு சென்று சேர்ந்திருப்பது த.வெ.கவுக்கு பெரிய அளவில் உதவும். தி.மு.கவும் அ.தி.மு.கவும் கள அரசியலிலும் பிரசாரத்திலும் என்ன செய்வார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால், அ.தி.மு.கவும் தி.மு.கவுக்கும் இணையான வியூகத்தை அவரால் வகுக்க முடியும். கள அரசியலில் மிக நல்ல வழிகாட்டுதலை அளிப்பார்" என்கிறார் ஆர். மணி. சுப்புரத்தினமும் இதையே கூறுகிறார். "த.வெ.க.வை பொறுத்தவரை கரூர் நெரிசல் சம்பவத்தில் இருந்து ஒரு விஷயத்தை உணர்ந்திருக்கிறார்கள். அதாவது, தொண்டர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், நெறிப்படுத்தப்பட என்பதை உணர்ந்துள்ளார்கள். விஜயின் ரசிகர்களை அரசியல்படுத்த, நெறிப்படுத்த செங்கோட்டையனின் அனுபவம் உதவும்" என்கிறார் அவர். வயதைப் பொறுத்தவரை தனது 70களில் இருக்கும் செங்கோட்டையன், தமது நீண்ட அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். அவரால் த.வெ.கவுக்கு பலன் இருக்கலாம். ஆனால், த.வெ.க. அவரது அரசியல் ஏற்றத்திற்கு உதவுமா என்பதற்கான பதில், இந்த சட்டமன்றத் தேர்தலில் ஒருவேளை தெரியலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdrn0plnd3xo