3 months 1 week ago
ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
Published By: RAJEEBAN
06 JUN, 2025 | 01:41 PM

ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் கொள்கை ரீதியிலான ஒரு நிலைப்பாட்டிற்கு வந்திருக்கின்றன ,
நாங்கள் இணங்கியமைக்கான பிரதான காரணம் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்தேசியத்திற்கான ஒரு பெரும் ஆணையை வழங்கியிருந்தார்கள்.
தனித்தனியாக எந்தவொரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மையை எந்தவொரு சபையிலும் வழங்கியிருக்காவிட்டாலும், தமிழ்தேசிய தரப்பிற்கு தங்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள்
தமிழ்தேசியம் பேசி வாக்குகளைகோரிய ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்தேசிய பேரவை தமிழரசுக்கட்சிக்கு மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகளை மக்கள் வழங்கியிருந்தார்கள்.
ஆகவே உண்மையிலே நடக்கவேண்டியது என்னவென்றால் ,எவ்வாறு தமிழரசுக்கட்சியும்ஜனநாயக தேசிய கூட்டணியும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டிற்கு வந்தனவோ அதேபோன்று,தமிழரசுக்கட்சியும் அந்த இணக்கப்பாட்டிற்கு வந்து அதன் ஊடாக ஒவ்வொரு சபையிலும் ஒரு ஸ்திரதன்மையை உருவாக்குவதுதான் பொருத்தமாகயிருக்குமே தவிர,அதனை விட்டுவிட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு நேர்மாறாக, செயற்படுகின்ற தரப்புகளுடன் கூட்டு சேர்வதும், அதுவும் தமிழ் தேசியத்துடன் இருக்ககூடியஈ ஏற்கனவே இருக்ககூடிய ஒரு பலமான கூட்டை தோற்கடிப்பது அதற்காக செயற்படுவது உண்மையிலே பொருத்தமற்றது.
இது தமிழ்தேசியத்திற்கு ஒரு பாரிய ஏமாற்றத்தை அளிக்கும், மக்களிற்கும் ஒரு பாரிய ஏமாற்றத்தை அளிக்கும்.
எம்மை பொறுத்தவரையில் நாங்கள் இந்த கூட்டில் கைச்சாத்திட்டவேளை இலங்கை தமிழரசுக்கட்சிக்கு பகிரங்கமாக ஒரு கோரிக்கை விடுத்திருந்தோம்,எங்கள் கதவுகள் திறந்துதான் இருக்கின்றது, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் தமிழ்தேசிய பேரவையும் ஒன்றிணைந்து இருப்பது,இது தமிழரசுக்கட்சியை ஓரங்கட்டுவதற்காக செய்யப்பட்ட ஒரு கூட்டல்ல, மாறாக, இந்த கூட்டின் ஒப்பந்தத்தை படித்து, எவரும் பிழைகண்டுபிடிக்க முடியாத வகையிலேயே அந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது, ஆகவே தமிழரசுகட்சி அதனை ஏற்றுக்கொள்வதற்கு எந்த விதமான தயக்கம் இருக்க முடியாது.
உண்மையிலே தமிழ்தேசியத்தை நேசித்து அதற்கு நேர்மையாக நடப்பதாகயிருந்தால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு விடயத்தையும் எதிர்க்க முடியாத நிராகரிக்க முடியாத நிலைதான் இருக்கின்றது.
இண்டைக்கும் நாங்கள் கேட்கின்றோம், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்.
கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார்.
https://www.virakesari.lk/article/216765
3 months 1 week ago
கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் போக்சோ வழக்கில் கைதாகி, 20 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்ட இளைஞரை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்துள்ளது. மே 23 அன்று உச்ச நீதிமன்றத்தின், நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு போக்சோ குற்றவாளி ஒருவரை விடுதலை செய்து அறிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் பாலியல் கல்வியை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. போக்சோ வழக்கின் தன்மை, அதன் நிலை, குழந்தை திருமணங்கள் தொடர்பான தரவுகளை சேகரித்து, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நிகழ் நேர (real time dash board) கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. அரசியல் சாசன பிரிவு 142-ஐ பயன்படுத்தி, குற்றவாளியை விடுதலை செய்த நீதிமன்றம், "இந்த வழக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கக் கூடாது. இருக்காது. இது, நம்முடைய சமூகம் மற்றும் நீதித்துறையின் தோல்வியின் பிரதிபலிப்பு," என்று மேற்கோள்காட்டியது. (2018-ஆம் ஆண்டில்) 14 வயது சிறுமியைத் திருமணம் செய்த 25 வயது மதிக்கத்தக்க நபர் வழக்கில் இருந்து வெளிவந்தது எப்படி? பாலியல் கல்வியை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டிய கட்டாயம் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்தது என்ன? இந்த வழக்கில் நடந்தது என்ன? இது ஏன் மாறுபட்ட வழக்காக கருதப்படுகிறது? 2018-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில், 25 வயது மதிக்கத்தக்க ஆணுடன், 14 வயது சிறுமி வாழ்ந்து வந்துள்ளார். அவரின் தாயார் அந்த நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, அந்த மகளை தன்னுடன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த பெண் குற்றம் சுமத்தப்பட்ட நபருடன் சேர்ந்து வாழ்ந்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டனர். விரைவில் அவர் பெண் குழந்தைக்கு தாயானார். ஆனால் 2021-ஆம் ஆண்டு அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் செய்த குற்றங்களுக்காக போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகளின் கீழ் மொத்தமாக 29 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனைக்கு எதிராக அந்த சிறுமி, சட்டப் போராட்டம் நடத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட அந்த இளைஞரை மீட்பதற்காக ரூ. 1,35,000 வரை செலவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில், "சட்டம் இதை ஒரு குற்றமாக கருதுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண் அவ்வாறு கருதவில்லை. அவருக்கு இழைக்கப்பட்ட குற்றம் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், வழக்கிற்கு பிறகு காவல் மற்றும் நீதித்துறை, அந்த நபரை விடுதலை செய்வதற்காக அப்பெண் நடத்திய போராட்டம், மகளுக்கு சிறப்பானதை செய்ய வேண்டும் என்ற எண்ணம், பொருளாதார சிக்கல்கள் போன்றவை தான் அவரை பாதித்துள்ளது. தன்னை "பாதிக்கப்பட்ட பெண்ணாக" கருத விரும்பாத பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்ய வேண்டும். இது அவரின் குடும்பத்தை பாதுகாக்கும் என்றால், அந்த பெண்ணுக்குப் பிறந்த குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு அந்த உதவிகள் வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாயால் தனித்துவிடப்பட்ட அவர் பிறகு, குற்றஞ்சுமத்தப்பட்ட நபருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். வழக்கில் நடந்தது என்ன? மேற்கு வங்க மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டு தன்னுடைய 14 வயது மகளைக் காணவில்லை என்று பெண் ஒருவர் புகார் மனு அளிக்கிறார். விசாரணையின் போது, குற்றம் சுமத்தப்பட்ட 25 வயதான நபரின் தூண்டுதலின் பேரிலே அந்த சிறுமி வீட்டைவிட்டு வெளியேறியதாக தெரிய வந்தது. புகார் அளித்து விசாரணை துவங்கிய பிறகு, அந்த சிறுமி குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து அழைத்துவரப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அரசு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் எந்த வித பாதுகாப்பும் அந்த சிறுமிக்கு வழங்கப்படாத சூழலில், அவருடைய தாயார் அவரை அரசு இல்லத்தில் இருந்து அழைத்து வந்து வீட்டில் வைத்திருக்கிறார். ஆனால் 2019-ஆம் ஆண்டு அந்த சிறுமி, குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் வீட்டிற்கு சென்று வாழ ஆரம்பித்திருக்கிறார். இந்த சூழலில் அவர் கர்ப்பம் அடைந்து ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதே சமயத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிபதி, விசாரணைக்குப் பிறகு குற்றவாளிக்கு போக்சோ சட்டம் பிரிவு 6-ன் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 363-ன் கீழ் (கடத்தல் குற்றங்களுக்காக பதிவு செய்யப்படும் பிரிவு) 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 366-ன் கீழ் (18 வயது பூர்த்தி அடையாத பெண்ணை கடத்துதல் மற்றும் திருமணம் செய்ய நிர்பந்திக்கும் குற்றங்களுக்காக பதியப்படும் பிரிவு) ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் வழங்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போக்சோ சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது தண்டனையை நிறுத்தி வைத்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்புக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் குற்றவாளி. 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைத்து, குற்றவாளியை வழக்கில் இருந்து விடுதலை செய்து அறிவித்தது. இது தொடர்பான தீர்ப்பை வழங்கும் போது, கொல்கத்தா உயர் நீதிமன்றம், சில அவதானிப்புகளை கவனத்தில் கொண்டது. முதலில் இந்திய தண்டனைச் சட்டம் 363 மற்றும் 366 பிரிவில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் இருந்து குற்றவாளியை விடுதலை செய்தது. " போக்சோ சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நீதிபதி, குற்றவாளிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதை தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எனவே குழந்தை திருமண சட்டம் 2006, பிரிவு 9-ன் கீழ் அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஐ.பி.சி. 363 மற்றும் 366 - ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து குற்றவாளி விடுவிக்கப்படுகிறார்," என்று குறிப்பிட்டிருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் நலனை கருத்தில் கொண்டு போக்சோ வழக்கில் இருந்து குற்றவாளி விடுதலை செய்யப்படுவதாகவும் அறிவித்தது உயர் நீதிமன்றம். அதில், "பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அவரின் மகளையும் பேத்தியையும் கைவிட்டுவிட்டார். வேறு வழியேதுமின்றி, அந்த சிறுமி குற்றவாளியின் குடும்பத்தினருடனே வாழ்ந்து வந்தார்," என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தது. வழக்கறிஞர்கள் மாதவி திவான் மற்றும் லிஸ் மேத்யூ ஆகியோரை "அமிக்கஸ் கியூரியாக" நியமனம் செய்து வழக்கின் தன்மை குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாமாக முன்வந்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தது. அமிக்கஸ் கியூரியின் பரிந்துரைகள் "பெற்றோர் மற்றும் அரசிடம் இருந்து சிறுமிக்கு தேவையான எந்த உதவியும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியை பாதுகாக்கும் பொறுப்பை சரியாக செய்ய அரசாங்கம் தவறிவிட்டது. தன்னுடைய எதிர்காலம் குறித்து எந்தவிதமான முடிவையும் எடுக்க வாய்ப்புகள் ஏதுமற்ற சூழலில் அவர் குற்றவாளியின் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது," என்று குறிப்பிட்டிருந்தனர். "முறையான விழிப்புணர்வு இருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமலே தவிர்த்திருக்க இயலும். சாத்தியா சாலா, ஹெல்லோ ஷஹேலி போன்ற டிஜிட்டல் தளங்கள், பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு இடையே இருக்கும் இடைவெளியை நிரப்ப உருவாக்கப்பட்டது. இத்தகைய முன்னெடுப்புகள் இந்தியாவில் இருந்தும் கூட, யுனெஸ்கோவின் தி ஜேர்னி டுவார்ட்ட்ஸ் காம்ப்ரெஹென்சிவ் செக்சுவாலிட்டி எஜூகேஷன்: க்ளோபல் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் (2021) அறிக்கையின் படி, எச்.ஐ.வி மற்றும் பாலியல் சார்ந்த கல்விகள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கே வழங்கப்படுகிறது. முறையான கொள்கை சீர்திருத்தங்கள், மேம்படுத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் பாடத்திட்டங்கள் இல்லையெனில் இந்தியா பதின் பருவ ஆரோக்கிய சீர்கேடுகள், தவறான தகவல்கள், பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான கல்வி குறித்து நிலவும் தவறான பார்வையால் இந்தியா அவதிப்பட்டுக் கொண்டிருக்கும். எனவே விரிவான பாலியல் சார் கல்வியை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும்," என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான குழு ஒன்றை உருவாக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை வாயிலாக மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். பாலியல் கல்வியை செயல்படுத்தல், ஆலோசனை சேவைகள், போக்சோ வழக்குகளின் நிலை, குழந்தை திருமணங்கள் போன்றவற்றை கண்காணித்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களின் நிகழ்நேரத் தரவைச் சேகரிப்பதன் மூலம், அரசு இது போன்ற முக்கியப் பிரச்சினைகளைக் கையாள்வதில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த இயலும்," என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுனெஸ்கோ 2021-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் சார்ந்த கல்வி இந்தியாவில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கே வழங்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டியது. மனித உணர்வுகளின் அடிப்படையில் பார்க்கப்பட்ட வழக்கு "பொதுவாக இது போன்ற வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதோடு, குற்றவாளிக்கு கடுமையான தண்டனையே உறுதி செய்யப்படும். ஆனால் இந்த வழக்கை ஒரு குற்றவழக்காக கருதாமல், மாறாக மனித உணர்வுகளின் அடிப்படையில் பார்க்கப்பட்ட வழக்காக அமைந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மன நலனையும் குடும்ப நலனையும் கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது," என வழக்கறிஞர் சுவகதா ரகா தெரிவித்தார். கர்நாடகாவில் போக்சோ வழக்குகளில் வாதிடும் அவர், உச்ச நீதிமன்றம் பாலியல் கல்வியை அறிமுகம் செய்வதற்கான குழு ஒன்றை அமைக்க உத்தரவு பிறப்பித்திருப்பதை வரவேற்றார். "பதின் பருவ குழந்தைகள், தேவையற்ற மன அழுத்தத்தை எதிர்கொள்வதற்கும், 'ரொமாண்டிக் உறவில்' ஈடுபட்ட காரணத்திற்காக சிறை செல்வதை குறைக்கவும் பாலியல் கல்வி கட்டாயம் உதவும். மத்திய அரசு இதற்காக அதிக நிதியை ஒதுக்கீடு செய்து, இது போன்ற விவகாரங்களில் குழந்தைகள் சிக்கிக் கொள்வதை தடுக்க உதவ வேண்டும்," என்று தெரிவித்தார். இது தொடர்பாக மேற்கொண்டு பேசிய, சென்னை மகளிர் நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றும் ஆர்த்தி பாஸ்கரன், "சில நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம் அடையும் போதோ, அல்லது அவருக்கு குழந்தை பிறக்கும் போதோ சிக்கல்கள் நீடிக்கின்றன. இது போன்ற தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்க, இத்தகைய கல்வி கட்டாயம் உதவும்," என்று கூறினார். "போக்சோ சட்டத்தில் மாற்றங்கள் வேண்டும்" போக்சோ வழக்குகளைப் பொருத்தமட்டில், சென்னை நீதிமன்றங்கள் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளன என்றும் சுட்டிக் காட்டுகிறார் ஆர்த்தி. "சிறார்/சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சுரண்டல்கள் மற்றும் வன்முறை போன்ற வழக்குகள் மட்டுமே போக்சோ நீதிமன்றங்களில் நடைபெறுகின்றன. ஆனால் வீட்டில் இருந்து வெளியேறும் பதின்பருவ காதலர்கள் தொடர்பான வழக்கை தீர்த்து வைக்கவே அவர்கள் மகளிர் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். பதின்ம வயதில் தோன்றும் காதல்கள் குறித்து சென்னை நீதித்துறையில் ஒரு நல்ல புரிதல் இருக்கின்ற காரணத்தால், இதில் சம்பந்தப்பட்ட சிறார் மற்றும் சிறுமிகளுக்கு தேவையான மன நல ஆலோசனை வழங்கப்படுகிறது. சிலர் 18 வயதான பிறகு திருமணம் செய்து கொள்வோம் என்று கூறுகின்றனர். சில பெற்றோர்கள், அவசரப்பட்டு வழக்கு பதிவு செய்துவிட்டோம் குழந்தைகளின் எதிர்காலம் கெட்டுவிடும் என்று கோரிக்கை வைத்து வழக்கை ரத்து செய்ய முன்வருவார்கள். சில நேரங்களில் வழக்கில் சம்பந்தப்பட்ட பதின்பருவ பெண், பதின்பருவ ஆணைக் காட்டிலும் வயதில் மூத்தரவாக இருப்பார். இது போன்ற 'க்ரே ஏரியாக்கள்' வரும் போது, இரு தரப்பின் நலனையும் கருத்தில் கொண்டே வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறது," என்று கூறுகிறார் ஆர்த்தி. 2021-ஆம் ஆண்டே சென்னை உயர் நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் நோக்கம் காதல் வயப்படும் பதின்ம வயதினரை சிறையில் அடைப்பதில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள், இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்த வண்ணம் இருக்கின்றனர். எனவே இந்த சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியது. "ஆனால் எக்காரணம் கொண்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியாக சுரண்டுபவர்கள், ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட நபர் குற்றவாளியாக கைது செய்யப்படும் போது, சரித்திர பதிவேட்டுக் குற்றவாளியாக இருக்கும் போது, கடுமையான தண்டனைகள் அவர்களுக்கு உறுதி செய்யப்படும்," என்றும் ஆர்த்தி கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போக்சோ வழக்குகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் 2021-ஆம் ஆண்டு தெரிவித்தது "கொள்கை அளவிலான மாற்றங்கள் நன்மை அளிக்கும்" "உச்ச நீதிமன்றம் தரவுகளை சேகரித்து, போக்சோ வழக்குகளின் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது நிச்சயமாக வரவேற்கக் கூடியது," என்று கூறுகிறார் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவில் பணியாற்றும் ஹஃப்சா. "பதின்பருவ காதல் விவகாரங்களில் சிறார் பள்ளிகளுக்கு செல்லும் பதின்ம வயது ஆண்களின் நிலையும் பிரச்னைக்குள்ளானதாகவே உள்ளது. அவர்கள் சிறார் சீர் திருத்தப் பள்ளியில் இருக்கும் போதும் சரி, வெளியே வந்து பிறகும் சரி அவர்களை பார்க்கும் சமூகத்தின் பார்வை அவர்களை குற்றவாளிகளாகவே கருதுகிறது. இயற்கையாக நடக்கும் ஒரு உறவில், அவர் குற்றவாளியாக கருதப்படுதல் காலத்திற்கும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றோம். அது போன்று 'கம்யூனிட்டி அவுட் ரீச்' திட்டங்களையும் செயல்படுத்துகின்றோம். இது பதின்பருவத்தில் காதல் வயப்படும் இரு தரப்பினரையும் இயல்பான மக்களாக நடத்த பெரிய அளவில் உதவும் என்று நம்புகின்றோம். உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகள் செயல்முறைக்கு வரும் போது, பெரிய அளவில் மாற்றங்களை அது உருவாக்கும்," என்றும் ஹஃப்சா கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd90zjj2dgko
3 months 1 week ago
Published By: DIGITAL DESK 3
06 JUN, 2025 | 01:33 PM

கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இலவச பகல் உணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக இந்தியாவின் அக்ஷய பத்ரா அறக்கட்டளையுடன் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை உத்தியோகபூர்வமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவின் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட அக்ஷய பத்ரா அறக்கட்டளையானது பாடசாலைகளில் இலவச உணவு வழங்கும் உலகின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
இந்தியாவின் 16 மாநிலங்கள் மற்றும் 3 முக்கிய நகரங்களில் செயல்படும் இந்த அறக்கட்டளையானது, தற்போது 23,581 பாடசாலைகளில் நாளாந்தம் 2.25 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு போசாக்கான பகல் உணவை வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தினூடாக 78 மத்திய மையப்படுத்தப்பட்ட சமையலறைகளில் இருந்து உணவு வழங்கப்படுகிறது. அங்கு சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் பின்பற்றப்படுகின்றன.
இந்திய அரசாங்கத்தின் முதன்மையான "PM POSHAN" ஊட்டச்சத்து திட்டத்தில் அக்ஷய பத்ரா முக்கியமானதொரு பங்காளியாகவும் உள்ளது. இதற்கு முக்கிய நன்கொடையாளர்கள் மற்றும் வர்த்தக தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.
பெங்களூரில் உள்ள அறக்கட்டளையின் தலைமையகத்தில் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் ஸ்தாபகர் மிலிந்த மொரகொட மற்றும் அக்ஷய பத்ரா அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீ மது பண்டித் தாசா இடையே அண்மையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சந்திப்பின் போது, இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் முன்னோடியாக பகல் உணவு திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இரு இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
புதிதாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பாத்ஃபைண்டர் அறக்கட்டளையினால் செயல்படுத்தப்படும் கொழும்பில் பாடசாலைகளில் பகல் உணவு வழங்கும் திட்டத்துக்கு அக்ஷய பத்ரா உணவு தயாரித்தல் மற்றும் விநியோகத்திற்கான தொழில்நுட்ப செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் MMBL பாத்ஃபைண்டர் குழுமத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கே. பாலசுந்தரம் மற்றும் பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் தலைவர் பெர்னார்ட் குணதிலக்க ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அக்ஷய பத்ராவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்வாக அதிகாரிகள் சஞ்சலபதி தாசா மற்றும் சிவா சுவீர் சனிதாஸ் ஆகியோர் பெங்களூருவிலிருந்து மெய்நிகர் வழியாக கையெழுத்திட்டனர்.
https://www.virakesari.lk/article/216764
3 months 1 week ago
பகுதி 1: ஏன் பயிற்சி விண்ணப்பம் அவசியம்? மாணவர்கள் தொழில்முறை வாழ்க்கையை தொடங்கும் முன்பாக சந்திக்கும் முதன்மை வாய்ப்புகளில் ஒன்று தான் "பயிற்சி" (Internship). இது ஒரு துறை சார்ந்த நிறுவனத்தில் நேரடி அனுபவத்தை பெறும் அரிய சந்தர்ப்பமாகும். ஒரு பயிற்சி வாய்ப்பு கிடைக்க, அதற்கேற்ப ஒரு உரிய விண்ணப்பம் (Internship Application Letter) எழுதப்பட வேண்டும். அந்த விண்ணப்பமே உங்கள் திறமைகள், இலக்குகள் மற்றும் ஆர்வங்களை வெளிப்படுத்தும் சாதனமாகும். ஒரு பயிற்சி விண்ணப்பம் எழுதுவதன் முக்கிய நோக்கங்கள்: தொழில்முறை நெறிமுறைகளை பின்பற்றுதல்: உங்கள் நெருக்கமான எழுத்து மற்றும் தொழில்முறை அணுகுமுறையை நிறுவனம் பார்க்க முடியும். உங்கள் தனித்துவத்தை வெளிக்காட்டுதல்: பலரும் விண்ணப்பிக்கும் சூழ்நிலையில், உங்கள் விருப்பம் ஏன் சிறப்பானது என்பதை நிறுவனம் அறிய வேண்டும். சுயவிளக்கத்திற்கான வாய்ப்பு: உங்களுடைய கல்வி, அனுபவம் மற்றும் எதிர்பார்ப்புகளை நேரடியாக விவரிக்க இது ஒரு வாயிலாக அமையும். நேர்காணலுக்கான வாய்ப்பை உருவாக்குதல்: சிறந்த விண்ணப்பம் நேர்காணலுக்கான முதல் படிக்கட்டாக அமையும். பகுதி 2: பயிற்சி விண்ணப்பத்தின் முக்கிய கூறுகள் முகவரி மற்றும் தேதி: உங்கள் முகவரி மற்றும் விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் முகவரி. அறிமுகம்: உங்கள் பெயர், தற்போது படிக்கும் நிலை மற்றும் துறையை சுருக்கமாகக் குறிப்பிடவும். விருப்பத் துறையை குறிப்பிடுதல்: நீங்கள் எந்த துறையில் பயிற்சி செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும் ஏன் அந்த துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதையும் விளக்கவும். திறமைகள் மற்றும் அனுபவங்கள்: உங்கள் திறமைகள், முன்னணி ப்ராஜெக்ட் அனுபவங்கள், மென்பொருள்/கருவி அறிவு மற்றும் குழு வேலை அனுபவங்களை பதிவு செய்யவும். ஏன் அந்த நிறுவனம் என்பதை எடுத்துக்காட்டு: அந்த நிறுவனம் பற்றிய உங்கள் புரிதல், ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்புகளைச் சொல்லுங்கள். தோற்றமளிக்கும் முடிவு: நேர்காணலுக்கான வாய்ப்பு அளிக்குமாறு பணிவுடன் வேண்டிக் கூறுங்கள். முகமுடிப்பு: நன்றி கூறி, உங்கள் பெயர் மற்றும் தொடர்பு விபரங்களை சேர்க்கவும். பகுதி 3: பயிற்சி விண்ணப்பம் எழுதும் நடைமுறை வழிகாட்டி படி 1: ஆராய்ச்சி செய்யுங்கள் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனம் என்ன வேலை செய்கிறது? அவர்களது மதிப்பீடுகள் என்ன? நீங்கள் ஏன் அந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்? படி 2: தங்களைப் பற்றிய முழுமையான பட்டியலை தயார் செய்யுங்கள் உங்கள் கல்வித் தகுதிகள் சிறப்பித்த நிகழ்வுகள் / வெற்றிகள் மென்பொருள் திறன்கள் / மென்பார்வை பயிற்சிகள் நீங்கள் செய்த திட்டங்கள் படி 3: தனிப்பயனாக்கிய விண்ணப்பம் எழுதுங்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியாகப் பொருத்தமான வழியில் எழுதுங்கள். பொதுவான விண்ணப்பங்களைத் தவிருங்கள். படி 4: மென்மையான மற்றும் தொழில்முறை மொழி மிக நேர்த்தியான, மரியாதையான மற்றும் தொழில்முறை சொல்லாடலை பின்பற்றுங்கள். சுயபுகழ் அல்லது அசட்டுத்தனமான சொற்களை தவிருங்கள். படி 5: மொழி திருத்தம் மற்றும் சீரமைப்பு பிழை இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். வாக்கிய அமைப்புகள் வாசிக்க எளிதாக இருக்க வேண்டும். பகுதி 4: பயிற்சி விண்ணப்ப மாதிரிகள் (300 வார்த்தைகள் சுற்றியிலானது) 📄 பயிற்சி விண்ணப்பம் மாதிரி 1 வணக்கம், நான் சென்னை பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி. உங்கள் நிறுவனமான [ABC Technologies] இல் டேட்டா அனலிட்டிக்ஸ் துறையில் பயிற்சி பெற ஆவலுடன் இருக்கிறேன். பைத்தான் மற்றும் எஸ்க்யூஎல் போன்ற கருவிகளில் எனக்கான பரந்த அனுபவமும், அணுகுமுறையும் உள்ளது. மாணவராக நான் கற்றுக்கொள்வதற்கும், குழு வேலை செய்வதற்கும் ஆர்வமுடையவளாக இருக்கிறேன். உங்கள் நிறுவனம் வழங்கும் வாய்ப்புகள் எனது தொழில்முறை வளர்ச்சிக்கு மிகுந்த பங்களிப்பு செய்யும் என்பதில் எனக்கு உறுதி உள்ளது. நீங்கள் எனது விண்ணப்பத்தை பரிசீலித்து, ஒரு நேர்காணலுக்கான வாய்ப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, [பெயர்] 📄 மாதிரி 2 மிகவும் மதிப்பிற்குரிய நியமன அதிகாரி அவர்களுக்கு, நான் பி.டெக் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து வருகிறேன். CAD மற்றும் SolidWorks ஆகிய மென்பொருட்களில் எனக்கு நல்ல அறிவும் அனுபவமும் உள்ளது. உங்கள் நிறுவனமான [XYZ Auto Systems] இல் டிசைன் டீம் துறையில் பயிற்சி செய்ய விரும்புகிறேன். பயிற்சி வாய்ப்பு எனக்கு தொழில்முறை அனுபவத்தை வழங்குவதோடு, உங்களது நிறுவன பணியாளர்களிடம் இருந்து நேரடியாகக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாக இருக்கும். உங்கள் நேரத்திற்கும், கவனத்திற்கும் நன்றி. அன்புடன், [பெயர்] 📄 மாதிரி 3 வணக்கம், நான் சமூக வேலை துறையில் முதுநிலைப் பட்டம் படித்து வருகிறேன். சமுதாய சேவை நிறுவனமான [Helping Hands Foundation] இல் பயிற்சி செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளேன். நான் ஏற்கனவே பல சமூக திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ளேன். குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பெண்கள் சுயசாதனை திட்டங்களில் பணியாற்றியுள்ளேன். இந்த பயிற்சி எனது சேவை ஆற்றலையும் திட்ட மேலாண்மை திறனையும் மேம்படுத்தும். நன்றி மற்றும் எதிர்பார்ப்புடன், [பெயர்] 📄 மாதிரி 4 மிகவும் மதிப்பிற்குரியவர்கள், நான் மூன்றாம் ஆண்டு பி.காம் மாணவர். உங்கள் நிறுவனமான [FinServe Solutions] இல் பைனான்ஸ் அனாலிஸ்ட் பயிற்சி செய்ய விரும்புகிறேன். Excel, Tally, QuickBooks போன்ற கருவிகளில் எனக்கு நிபுணத்துவம் உள்ளது. நான் சமீபத்தில் "மைக்ரோ பைனான்ஸ்" என்ற தலைப்பில் திட்ட அறிக்கையை முடித்துள்ளேன். உங்கள் நிறுவனம் எனக்கு சிறந்த தொழில்முறை வெளிச்சத்தை வழங்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள், [பெயர்] 📄 மாதிரி 5 வணக்கம், நான் பி.ஏ தமிழ் இலக்கியத்தில் பயின்றுவரும் மாணவி. ஒரு பதிப்பக நிறுவனமான [Thamizh Koodal Publications] இல் பன்வாய்ப்பு பெற விரும்புகிறேன். மொழிபெயர்ப்பு, பிழைதிருத்தம் மற்றும் உள்ளடக்க எழுத்து ஆகியவையில் எனக்குத் திறமை உள்ளது. புதிய நூல்களை படிக்கவும், சமகால எழுத்தாளர்களை சந்திக்கவும் விரும்புகிறேன். இந்த பயிற்சி வாய்ப்பு எனது எழுத்து வாழ்க்கையில் ஒரு படிக்கட்டாக அமையும். பணிவுடன், [பெயர்] 📄 மாதிரி 6 மிகவும் மதிப்பிற்குரிய அதிகாரிகளுக்கு, நான் மென்பொருள் பொறியியலில் பட்டம் பெறும் இறுதிக்கட்டத்தில் இருக்கிறேன். உங்கள் நிறுவனமான [Innovatech Pvt Ltd] இல் பயிற்சி பெற நான் ஆர்வமாக இருக்கிறேன். நான் சமீபத்தில் ஒரு React + Node.js ப்ராஜெக்ட் செய்துள்ளேன். உங்கள் டெவலப்மென்ட் டீம் ஒன்றாக பணியாற்றி துறை நிபுணர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வாய்ப்பு அளித்தால் அதை முழுமையாகப் பயன்படுத்துவேன். நன்றி, [பெயர்] 📄 மாதிரி 7 வணக்கம், நான் பி.எஸ்சி பியோடெக் மாணவி. மருந்து ஆராய்ச்சி துறையில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. [GenPharma Labs] இல் பயிற்சி வாய்ப்பு கேட்கிறேன். விசைசிக்கல் மற்றும் மூலிகை சார்ந்த ஆராய்ச்சி திட்டங்களில் பங்கேற்றுள்ளேன். உங்கள் ஆராய்ச்சி ப்ராஜெக்ட் எனது ஆர்வத்தையும் திறமையையும் அதிகரிக்கும். பணிவுடன், [பெயர்] 📄 மாதிரி 8 மிகவும் மதிப்பிற்குரியவர்களுக்கு, நான் பி.ஏ ஜர்னலிசம் படித்து வருகிறேன். உங்கள் ஊடக நிறுவனம் [Tamil Voice Media] இல் பயிற்சி பெற விரும்புகிறேன். செய்தி தொகுப்பு, சமூக ஊடக மேலாண்மை மற்றும் வீடியோ எடிட்டிங் எனது நிகர திறன்களாகும். புதிய செய்திகளைத் தேடிக்கண்டறிந்து, மக்களிடம் கொண்டு சேர்ப்பது எனக்கு ஆர்வம். உங்கள் நிறுவனம் எனக்கு அவ்வகை பயிற்சி தரும். நன்றி, [பெயர்] 📄 மாதிரி 9 வணக்கம், நான் பி.காம் மாணவர். மாக்ரோ இக்கானாமிக்ஸ் மற்றும் கணக்கியல் துறையில் நிபுணராக இருக்க விரும்புகிறேன். [EcoThink Tank] இல் இண்டர்ன்ஷிப் செய்ய விரும்புகிறேன். எனது ஆய்வு திறன்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் சின்ன தகவல்களை பகுப்பாய்வு செய்யும் வல்லமை இந்த பயிற்சி மூலம் மேலும் வளர்க்கலாம். எனது விருப்பத்தை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அன்புடன், [பெயர்] 📄 மாதிரி 10 மிகவும் மதிப்பிற்குரிய நபருக்கு, நான் பி.எஸ்.சி மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மெண்ட் படித்து வருகிறேன். Flutter, Kotlin மற்றும் Firebase ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். உங்கள் நிறுவனமான [AppTree Solutions] இல் பயிற்சி பெற விரும்புகிறேன். மொபைல் பயன்பாடுகள் உருவாக்கும் துறையில் நான் ஒரு முழுமையான டெவலப்பராக உருவாக விரும்புகிறேன். உங்கள் நிறுவனத்தில் எனது ஆற்றலை செலுத்த தயாராக உள்ளேன். நன்றி, [பெயர்]