2 months 1 week ago
2 months 1 week ago
இந்தாள் ஏன் குறுக்கால ஓடுது என்று பார்த்தால்… செய்தி: நோர்வேயைச் சேர்ந்த எரிக் சொல்ஹைம் UNEP-க்கான நிர்வாக இயக்குநராக இருந்தபோது அரசுப் பணத்தை பயணச் செலவாக மிக அதிகமாக, அதுவும் அனுகூலமற்ற வகையில் செலவிட்டார் என்று உட்புற ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் காரணமாக அவர் 2018-ஆம் ஆண்டில் தனது பதவியை விலக்கிவிட்டார். Inuvaijur Mayuran
2 months 1 week ago
ரணிலுக்கு நன்றாகத் தெரியும் எதிர்க்கட்சிகள் எல்லாம் கூடிக்கதைப்பதும் கொந்தளிப்பதும் குதிப்பதும் ரணில்மீது கொண்ட அன்பால் அல்ல "ரணிலுக்கே இந்த நிலை என்றால் நமக்கெல்லாம் என்னவாகும் என்ற பயத்தால்" என்று... யாழ்ப்பாணம்.com
2 months 1 week ago
விஜய் தனது தொகுதிகளில் வெல்வாரோ இல்லையோ அடுத்த தேர்தலில் விஜய் சொன்ன சொல் தவறாமல் தேர்தலில் நிற்பாராக இருந்தால் வழமையான வாக்கு வீதங்கள் சிதறடிக்கப்பட வாய்ப்புளது. சென்னை மாநாட்டில் விஜய் தனது ஆதரவாளார்கள் ம்லுன்னிலையில் தனது கட்சியின் ஒரே கொள்கை எதிரி பாஜக தான், ஒரே அரசியல் எதிரி திமுக தான் என்று முழங்கியது ஆறுதலான செய்தி. இனிமேல் விஜய் பாஜக வுடன் கூட்டுச் சேர மாட்டார் என்பது உறுதியாகிறது. திமுக தமிழகத்தில் ஆலமரம் போல் வேரூன்றியுள்ளது. அதனைத் தாங்கி நிற்பவர்கள் அரசியல், கல்வி, நிதி, நீதித்துறை, நிர்வாகக் கட்டமைப்பு போன்ற பல துறைகளிலும் அனுபவமுடைய பல தலைவர்கள். விஜய் அதிமுக விலிருந்து தலைவர்களைத் தனது கட்சிக்கு வரவைப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
2 months 1 week ago
2 months 1 week ago
2 months 1 week ago
இது ஏன் செய்தி? ஈரானுக்கு பின், ஒப்பந்தம் (treaty ஆக இருந்தாலும்) போட்டாலும், சகுனி ஆட்டம் மேற்கு ஆடாது எனபதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இரானுங் ஒப்பந்தம் செய்து பாதுகாப்பு சபை, நிரந்தர அங்கத்தவரால் தனித்தனியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட JCPOA ஐ முறித்த அமெரிக்கா, அதை தொடர்ந்து பிரித்தானிய பிரான்ஸ். (ஈரான் 1 வருடத்துக்கு மேலாக காத்து இருந்தது, இந்த அடாவடிக் கூட்டங்கள் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவர்ட்கள் என்று) இப்போது , ஓர் பக்கத்தால் தாக்குதல், இன்னொரு பக்கத்தால் JCPOA இல் உள்ள snapback தடையை பிரித்தானிய, பிரான்ஸ் கொண்டுவர முனைகின்றன, அதை ருசியா, சீன மறுத்து விட்டன. ஆயினும், சர்வதேச சட்டத்தையும் மீறி தடையை கொண்டுவர பிரித்தானிய, பிரான்ஸ் வாலுகள் முயற்சிக்கின்றன. எனவே, நாடுகள் பலத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை. இதில் குறிப்பாக, ஈரானை இங்குள்ள சிலர் பேயர் ஆக்குவது - ஈரானுக்கு என் அணுத்துறை என்று - அப்போது எண்ணையில் குளிக்கும் அமெரிகாவுக்கு, ருசியா போன்றவைக்கு ஏன் அணுத்துறை? ஈரான் வெளியில் இருந்து அணுத்துறையை பெறலாம் - ஈரான் என்ன பேயனா?, 1ம் முறை நம்பி இருக்கலாம், அணுத்துறை முழுவதும் அகற்றி விட்டு பின் ஒன்றுமே கொடுக்கப்படாது, மற்றும் இரான் மரபுவழி ஆயுதங்களை வாங்க, உற்பத்தி செய்ய முனையும் போது தாக்குவது. இதில் முக்கியமா, இரான் அதன் அணுத்துறையை அதுவாக கட்டி எழுப்பியது (வெளியில் இருந்து அறிவு, உதவிகள் பெற்று இருக்கலாம்). திருடி இருந்தால் , இரான் மீள கட்டி எழுப்ப முடியாது இப்போதைய தாக்குதலில் முழுமைக்காயாக அழிக்கப்பட்டு இருந்தால். அனால், மேற்கே சொல்கிறது இரானிடம் கட்டி எழுப்புவதற்கு அறிவுமும், கட்டுமானமும் இருக்கிறது என்று, இதானால் தான் இரான் விஞ்ஞானிகளை, மேற்கு, இஸ்ரேல் உடன் சேர்ந்து போட்டு தள்ளுவது. அதன் பல்துறை தொழிற்சாலைகளை குறிவைப்பது. அதெ போலவே, இரானின் ஏவுகணை தொழில்நுட்பமும். (இதையும் விட வேண்டும் என்கிறது மேற்கு) (இதுவே, ஈரானுக்கும், அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் வேறுபாடு. மற்ற நாடுகள் தொழில்நுட்பம் / விஞ்ஞானத்தை முழுமையாக வெளியில் இருந்து பெறுவது. ) இங்கு சிலர் அரைகுறையாக, மேற்கின் பிரச்சாரத்தை ஒப்புவிப்பது, எந்த வித தேடுதல், சரி பார்த்தால் இல்லாமல். அல்லது மேற்கு சொல்வதை வேதவாக்காக எடுப்பது. அப்படி மேற்கை விட வேறு எவரும் பொதுவாக தொழில்நுட்ப / பவிஞ்ஞான துறையில் முன்னேற கூடாது, அப்படி முன்னேறினாலும் மேற்றகில் தங்கி இருக்க வேண்டும், அப்படி தங்கி இருக்க வைக்க வேண்டும் என்பதற்கே மேற்கு பகீரத பிரயத்தனம் செய்கிறது. இந்த பாதி எரிந்த பிரேதே சிந்தனையால், மேற்கு அதன் அந்திசாயும் காலத்தை, எல்லோருக்கும் அந்திம கிரியை தகனக் காலமாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறது. (இஸ்ரேல் க்கு கூட இதை US செய்தது, இஸ்ரேல் 1980 களின் முற்பகுதியில், அகதிர் என்ற பெயரில்அன்றைய தொழிநுட்ப போர் விமானத்தை வடிவமைத்து, உடற்பதி செய்ய முயல, அமெரிக்கா தடுத்து விட்டது. சில வருங்குகள் பின் சீன அதை வாங்கி, அதையும் கொன்டு வடிவமைது, உற்பத்தி செய்து, இப்போதைய தொழில் நுட்பத்துக்கு தரமுயர்த்தியதே, அண்மையில் பாவிக்கப்பட்ட ஜே -10 ம் அதன் அடிப்படை வடிவமைப்பு, உற்பத்தியும். அனால், இஸ்ரேலுக்கு அமெரிக்கா கேட்டதை பொதுவாக கொடுக்கும். அப்படி இஸ்ரேல் கேட்ட ரேடார் தொழில்நுட்பத்தை (அந்த நேர (Synthetic) Aperture Radar தொழில்நுட்பம்) அமெரிக்கா கொடுக்காமல், இஸ்ரேல் திருட முயன்று, இஸ்ரேல் இன் உளவாளி பிடிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிறை கண்ட வரலாறும் இருக்கிறது)
2 months 1 week ago
2 months 1 week ago
செம்மணி புதைகுழி விடயத்தில் தாயகத்திலுள்ள மனித உரிமை, சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் பாராட்டுதலுக்குரியவை. வெளிநாடுகளில் பயனற்ற விடயங்களுக்குப் போராட்டங்கள் நடத்துபவர்கள் இந்த முக்கியமான போராட்டத்தில் தாயகத்துக்கு உறுதுணையாக எதுவும் செய்யவில்லையா அல்லது இது தொடர்பான செய்திகளை நான் பார்க்கவில்லையா ? செம்மணி விவகாரத்தை சரியாகப் பயன்படுத்தினால் இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதைப் பதிவு செய்ய முயற்சிக்கலாம்.
2 months 1 week ago
2 months 1 week ago
2 months 1 week ago
லண்டனில் இரண்டு நாள் தங்கிய மனைவிக்கு சமையல் செய்ய ஒழுங்கு செய்த சமையல்காரரின் ஒரு நாள் சம்பளம் நாலு லட்சம் ரூபா. அப்படி என்ன சாப்பாட்டை அந்த சமையல்காரர் சமைத்துக் கொடுத்தார் என்று கேட்டால், றோயல் கல்லூரிக்கு ஒரு பழைய வீடும் நிறைய நூல்களும் ரணில் வழங்கியுள்ளார் என்கிறார்கள். சிரிச்சிகிட்டே அடுத்த கேள்விய கேற்க பெட்ரோல் இல்லாத நேரம் அவர் கார்ல இருந்த பெட்ரோல உருவி முழு நாட்டுக்கும் குடுத்த வள்ளல் என்று சொல்கின்றனர் 😄. உண்மை உரைகல்
2 months 1 week ago
காஸாவில் பசி, பட்டினி அதிகரிக்க இஸ்ரேலின் நடவடிக்கை காரணமானது எப்படி? பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, காஸாவில் பஞ்சம் மோசமாக பரவி வருகிறது கட்டுரை தகவல் எமிர் நாடர் பிபிசி செய்திகள் 24 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் உணவுப் பஞ்சம் மோசமாக பரவி வருகிறது. எல்லைக்கு வெளியே நூற்றுக்கணக்கான உதவி லாரிகள் நின்றுகொண்டிருக்கின்றன, ஆனால் அவை உள்ளே செல்ல முடியாமல் சிக்கியுள்ளன. இந்த நிலை உருவானது எப்படி? உலகளவில் பசியை கண்காணிக்கும் முக்கிய அமைப்பான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC), ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் செயல்படுகிறது. அந்த அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவலின்படி, காஸாவில் உள்ள பாலத்தீனர்களில் நான்கில் ஒருவர், அதாவது சுமார் 5 லட்சம் பேர், கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறியப்படுகிறது. இந்த தகவல் பல காரணங்களால் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதிலும் முக்கியமாக, இந்த சூழல் "முழுவதும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது" என்று அந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது. காஸாவுக்குள் உணவுப் பொருட்கள் செல்லும் வழியை இஸ்ரேல் "திட்டமிட்டு தடுக்கிறது" என்று தற்போது பல்வேறு உதவி அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன. காஸா நகரப் பகுதியில் வாழும் மக்கள் தற்போது "பட்டினி, வறுமை, மரணம்" போன்ற கடுமையான பஞ்சநிலையை எதிர்கொள்கிறார்கள் என்று ஐபிசி அறிக்கை கூறுகிறது. பசியும், பட்டினியும் வேகமாகப் பரவி வருகிறது, தற்போதைய நிலை தொடர்ந்தால் செப்டம்பரில் காஸாவின் பல பகுதிகளிலும் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவும் அது எச்சரிக்கிறது. இந்த அறிக்கை மூன்று முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது: பட்டினி: குறைந்தது 5 வீடுகளில் 1 வீடு உணவுக்கே கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு: சுமார் 3 குழந்தைகளில் 1 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு விகிதம்: ஒவ்வொரு 10,000 பேரில் குறைந்தது 2 பேர் தினமும் நேரடி பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோயால் உயிரிழக்கின்றனர். பொதுவாக இந்த மூன்று "வரம்புகளில்" இரண்டு எட்டப்பட்டால் பஞ்சம் நிலவுகிறது என ஐபிசி அறிவிக்கிறது. ஆனால் காஸாவில் மூன்றும் எட்டப்பட்டுவிட்டதாக அது மதிப்பீடு செய்துள்ளது. "இறப்புக்கான" காரணி தற்போதைய தரவுகளில் தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் கண்காணிப்பு அமைப்புகள் செயலிழந்துள்ளன. பல மரணங்கள் பதிவு செய்யப்படாமல் போயிருக்கலாம் என்றும் ஐபிசி நம்புகிறது. இருந்தாலும் கிடைத்துள்ள சான்றுகள் மற்றும் நிபுணர்களின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு "இறப்பு" காரணியும் பஞ்ச நிலையை உறுதிப்படுத்துவதாக ஐபிசி முடிவுக்கு வந்துள்ளது. இந்த அறிக்கை வெளியான சமயத்தில், ஹமாஸ் நிர்வகிக்கும் காஸா சுகாதார அமைச்சகம், ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் இரண்டு மரணங்களைப் பதிவு செய்தது. இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 112 குழந்தைகள் உட்பட 273 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவில் பஞ்சம் நிலவுகிறது என்ற குற்றச்சாட்டை பலமுறை மறுத்துள்ளார். பசி ஏற்பட்டதற்கு உதவி அமைப்புகளும் ஹமாஸும் தான் காரணம் என அவர் கூறியுள்ளார். காஸா எல்லையில் நூற்றுக்கணக்கான உதவி லாரிகள் நின்றுகொண்டிருக்க, அவற்றை எடுத்துச் செல்ல ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் முன்வரவில்லை என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. 'முற்றிலும் மனிதனால் உருவாக்கப்பட்டது' பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, ஆகஸ்ட் 7 ஆம் தேதி காசா நகரில் உள்ள அல்-ரான்டிசி மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா என பரிசோதிக்கப்படுகிறது. பல வாரங்களாக, வயிறு வீங்கியும் எலும்புகள் தெரியும் அளவுக்கும் பட்டினியால் வாடும் குழந்தைகளின் படங்களை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இதனால் பஞ்சம் வரும் எச்சரிக்கை அறிகுறிகள் நீண்ட நாட்களாகவே இருந்தன என பலர் கூறுகின்றனர். கடந்த இரண்டரை ஆண்டுகளாக காஸாவில் நடந்துவரும் போர், பாலத்தீனர்களுக்கு உணவு கிடைப்பதை மிகவும் சிக்கலாக்கியுள்ளது. இஸ்ரேல் காஸாவிற்குள் செல்லும் பொருட்களுக்கு நீண்ட காலமாகவே கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய கொடிய தாக்குதலுக்குப் பிறகு, அந்தக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையானது. ஆனால் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில், இஸ்ரேல் காஸாவிற்குள் பொருட்கள் செல்லும் வழியை மூன்று மாதங்களுக்கு முற்றிலும் தடை செய்தபின் நிலைமை வேகமாக மோசமடைந்தது. சர்வதேச அழுத்தம் அதிகரித்த பின், மே மாத இறுதியில் சில பொருட்களை மீண்டும் அனுமதிக்கத் தொடங்கியது. அதே சமயம், ஐ.நா. தலைமையிலான பழைய உணவு விநியோக முறைக்குப் பதிலாக காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) என்ற அமெரிக்க அமைப்பு தலைமையிலான புதிய விநியோக முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் கீழ், ராணுவம் கண்காணிக்கும் பகுதிகளில் நான்கு விநியோக மையங்கள் மட்டுமே உள்ளன. அங்கு செல்ல பாலத்தீனர்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. அந்தப் பயணம் உயிருக்கு ஆபத்தானதாகவும் இருக்கிறது. இதனால், முன்பு ஐ.நா. இயக்கிய 400 சமூக மையங்கள் இப்போது நீக்கப்பட்டுள்ளன. உணவைப் பெறுவது பாலத்தீனர்களுக்கு உயிருக்கு ஆபத்தான ஒன்றாகிவிட்டது. பட்டினி அல்லது மரணம் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது என அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஏனெனில், காஸா மனிதாபிமான அறக்கட்டளை மையங்களில் உதவி பெற முயற்சிக்கும் போது, மக்கள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. மே மாத இறுதியில் இருந்து காஸா மனிதாபிமான அறக்கட்டளை மையங்களுக்கு அருகில் குறைந்தது 994 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. பதிவு செய்துள்ளது. இஸ்ரேலிய படைகள் பெரும்பாலானோரைக் சுட்டுக் கொன்றதாக ஐ.நா. கூறுகிறது. இது நேரில் கண்ட சாட்சிகளாலும், காஸா மருத்துவர்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இஸ்ரேல் கண்காணிக்கும் இந்த புதிய முறையின் கீழ், காஸாவில் பஞ்சம் மேலும் மோசமாக பரவியுள்ளது. பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, இந்தோனேசிய ஹெர்குலஸ் விமானம் காஸா பகுதியின் மீது மனிதாபிமான உதவிப் பொருட்களை வீசுகிறது. அதிக உணவுப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என்று அழுத்தம் அதிகரித்ததால், ஜூலை மாத இறுதியில் தினமும் உதவிப் பொருட்கள் கொண்டு வந்த அதிகமான லாரிகளை இஸ்ரேல் காஸாவிற்குள் அனுமதிக்கத் தொடங்கியது. சண்டையை தற்காலிகமாக நிறுத்தும் "தந்திரோபாய இடைவெளிகளை" அறிவித்து, உதவி லாரிகள் அந்தப் பகுதியை எளிதாக கடக்க அனுமதித்தது. சமீப வாரங்களில் அதிக உதவி பொருட்கள் வந்ததால், சந்தைகளில் சில பொருட்களின் விலை ஓரளவு குறைந்தது. இருந்தாலும் பல பாலத்தீனர்களுக்கு அவை இன்னும் மிக உயர்ந்த உயர்ந்தவையாகவே உள்ளன. சில சமயங்களில் ஒரு கிலோ மாவு 85 டாலரைத் தாண்டியது, ஆனால் அந்த விலை இப்போது குறையத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல், காஸாவுக்குள் உணவுப் பொருட்கள் செல்ல சில கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்தாலும், அவற்றை சேகரித்து விநியோகிப்பதில் இன்னும் பல தடைகள் உள்ளன என்று ஐ.நா.வும் மனிதாபிமான அமைப்புகளும் கூறுகின்றன. மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய தினமும் 600 லாரிகள் காஸாவிற்குள் நுழைய வேண்டும், ஆனால் தற்போது அதில் பாதிக்கும் குறைவானவை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இஸ்ரேல் விமானம் மூலம் உதவிகளை வீச அனுமதிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் பெரிதும் பலனளிக்காத, ஆபத்தான அந்த முறை, உண்மையான தீர்விலிருந்து கவனத்தை சிதறடிக்கிறது என மனிதாபிமான அமைப்புகள் விமர்சிக்கின்றன. அதேபோல, பசி நெருக்கடிக்கு ஹமாஸ் தான் காரணம் என இஸ்ரேல் கூறிய குற்றச்சாட்டும் விமர்சிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் உள்துறை அறிக்கை உட்பட பல்வேறு ஆய்வுகள், ஹமாஸ் உதவிகளை திட்டமிட்டு திருப்பி அனுப்பியதாக எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளன. காஸாவிற்குள் வரும் உதவி லாரிகள் சில நேரங்களில் கொள்ளையடிக்கப்படுவது உண்மைதான். ஆனால், இந்தக் கொள்ளைகள் பெரும்பாலும் உணவுக்காக தவிக்கும் பொதுமக்களாலும், பின்னர் லாபம் நோக்கி மறுவிற்பனை செய்ய முயலும் சில குழுக்களாலும் தான் நடைபெறுகின்றன என மனிதாபிமான அமைப்புகள் கூறுகின்றன. காஸாவில் பசி மற்றும் பஞ்சம் அதிகரிக்காமல் இருக்க, சாலை வழியாக அதிக அளவிலான உதவிப் பொருட்கள் தொடர்ந்து நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கையைத் தான் பல மாதங்களாக, உதவி அமைப்புகள் முன்வைத்து வருகின்றன. ஆனால் இஸ்ரேல் இன்னும் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இஸ்ரேலின் பதில் தற்போது பல இஸ்ரேல் அரச அதிகாரிகள் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (IPC) வெளியிட்ட அறிக்கையை நிராகரித்துள்ளனர். "ஹமாஸின் போலி பிரசாரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட கற்பனையான அறிக்கையை" ஐபிசி வெளியிட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. காஸா எல்லையை நிர்வகிக்கும் இஸ்ரேலிய ராணுவ அமைப்பான 'கோகாட்', இந்த அறிக்கையை "ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிலிருந்து வந்த பாதி தரவுகளின் அடிப்படையில் உருவான, தவறான மற்றும் ஒரு பக்க சார்புடைய அறிக்கை" எனக் கூறியுள்ளது. "ஐபிசி தன் சொந்த உலகளாவிய தரநிலையை மாற்றியுள்ளது எனவும், பஞ்சத்தை எதிர்கொள்பவர்களின் அளவை 30% இலிருந்து 15% ஆக குறைத்துள்ளது எனவும், இறப்பு விகிதம் என்ற இரண்டாவது அளவுகோலை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது" என்றும் இஸ்ரேல் கூறுகிறது. ஐபிசி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, முன்னர் பயன்படுத்தப்பட்ட, நிலையான தரநிலைகளையே இப்போது பயன்படுத்துகிறோம் என விளக்கியது. ஐபிசி "ஹமாஸின் தரவை" பயன்படுத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுவது, காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய சில செய்திகள் ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்திலிருந்து வருவதைக் குறிக்கிறது. ஆனால், போர் முழுவதும் அந்த அமைச்சகத்தின் இறப்பு மற்றும் காயம் தொடர்பான தரவுகள் நம்பகமானதாக இருப்பதாக பல தரப்புகளும் கருதுகின்றன. இந்த அறிக்கைக்கு ஐ.நா. நிறுவனங்களும் சர்வதேச தலைவர்களும் வலுவான பதில்களை அளித்துள்ளனர். "ஆக்கிரமிப்பு சக்தியாக இருக்கும் இஸ்ரேல், சர்வதேச சட்டத்தின் கீழ் தெளிவான பொறுப்புகளை வகிக்கிறது. அதில் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்கும் கடமையும் அடங்கும். இந்த நிலைமை தண்டனையின்றி தொடர்வதை நாம் அனுமதிக்க முடியாது"என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டெரெஸ் கூறினார். காஸாவிற்குள் உதவிகள் நுழைவதை இஸ்ரேல் "திட்டமிட்டு தடுத்ததே, பஞ்சத்தின் நேரடி காரணம் என்று ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் குறிப்பிட்டார். "காஸாவிற்கு தேவையான அளவு உதவியை அனுமதிக்க இஸ்ரேல் அரசு மறுத்ததே, இந்த மனிதனால் உண்டாக்கப்பட்ட பேரழிவுக்குக் காரணம். இது ஒரு தார்மீக விதிமீறல்" என பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி தெரிவித்தார். "பசியை போரில் ஓர் ஆயுதமாகக் பயன்படுத்துவது ஒரு போர்க்குற்றம். அதன் விளைவாக நிகழும் மரணங்கள் கூட, திட்டமிட்ட கொலை என்ற போர்க்குற்றத்தின் கீழ் வரக்கூடும்"என வெள்ளிக்கிழமை, ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் குறிப்பிட்டார். காஸா நகர் மீது இஸ்ரேல் படையெடுப்பு ஐபிசி பஞ்சம் நிலவுகிறது என அறிவித்துள்ள காஸா நகரத்தின் மீது சர்ச்சைக்குரிய படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் நடத்துவதற்காக, இந்த வாரம் பத்தாயிரக்கணக்கான ரிசர்வ் படையினரை வரவழைப்பதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது. ஹமாஸை தோற்கடிக்கவும், போரை முடிவுக்கு கொண்டு வரவும், காஸாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்கவும், காஸா நகரத்தை கைப்பற்றுவது தான் சிறந்த வழி என்று நெதன்யாகு கூறுகிறார். இந்த படையெடுப்பால், காஸா நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் பாலத்தீனர்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும். அந்தப் பகுதியை காலி செய்யத் தேவையான திட்டங்களை தயாரிக்குமாறு, மருத்துவர்கள் மற்றும் உதவி அமைப்புகளுக்கு, இஸ்ரேல் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. யுனிசெஃப், உலக உணவுத் திட்டம், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகள் ஒன்றாக வெளியிட்ட அறிக்கையில், "இந்த தாக்குதல், ஏற்கனவே பஞ்சம் பாதித்துள்ள பொதுமக்களுக்கு மேலும் பேரழிவை ஏற்படுத்தும்" எனக் கூறப்பட்டுள்ளது. "நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் போன்ற பலரும் வெளியேற முடியாமல் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது" என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1kz2ywdrp7o
2 months 1 week ago
ரணில் விக்கிரமசிங்க கைது: நோர்வே முன்னாள் தூதுவர் அதிருப்தி. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு முன்னாள் இலங்கைக்கான நோர்வேயின் அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ரணில் விக்கிரமசிங்க உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், ரணிலை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும், வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் 2022ஆம் ஆண்டில் இலங்கை நாட்டை பொருளாதார மற்றும் அரசியல் குழப்பத்திலிருந்து காப்பாற்ற முன்வந்த ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை என்றும், ஐரோப்பாவில் அவை குற்றமாக கருதப்படமாட்டாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளைத் தாம் ஆதரிப்பதாகவும், ஆனால் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1444455
2 months 1 week ago
Published By: DIGITAL DESK 3 25 AUG, 2025 | 01:59 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான முன்னாள் நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்புக்காவலில் உள்ள அவரது உடல்நிலை குறித்து ஆழ்ந்த கவலையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2022-இல் நாடு மிக மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது இலங்கையைக் காப்பாற்ற முன்வந்த தலைவர் விக்கிரமசிங்க என்று சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகள் 'ஆதாரமற்றவை' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவை நிரூபிக்கப்பட்டாலும், ஐரோப்பிய தரங்களின்படி அவை குற்றவியல் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'இலங்கை அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன், ஆனால் அது உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்,' என்று குறிப்பிட்டுள்ள சொல்ஹெய்ம், ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது சர்வதேச காலநிலை ஆலோசகராகவும் இருந்த சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதியின் கைது குறித்து கவலை தெரிவித்த பல இலங்கை மற்றும் தெற்காசிய அரசியல்வாதிகளுடன் இணைந்துள்ளார். https://www.virakesari.lk/article/223313
2 months 1 week ago
Published By: DIGITAL DESK 3
25 AUG, 2025 | 01:59 PM

(எம்.மனோசித்ரா)
இலங்கைக்கான முன்னாள் நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்புக்காவலில் உள்ள அவரது உடல்நிலை குறித்து ஆழ்ந்த கவலையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2022-இல் நாடு மிக மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது இலங்கையைக் காப்பாற்ற முன்வந்த தலைவர் விக்கிரமசிங்க என்று சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகள் 'ஆதாரமற்றவை' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவை நிரூபிக்கப்பட்டாலும், ஐரோப்பிய தரங்களின்படி அவை குற்றவியல் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'இலங்கை அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன், ஆனால் அது உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்,' என்று குறிப்பிட்டுள்ள சொல்ஹெய்ம், ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது சர்வதேச காலநிலை ஆலோசகராகவும் இருந்த சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதியின் கைது குறித்து கவலை தெரிவித்த பல இலங்கை மற்றும் தெற்காசிய அரசியல்வாதிகளுடன் இணைந்துள்ளார்.
https://www.virakesari.lk/article/223313
2 months 1 week ago
Published By: DIGITAL DESK 3 25 AUG, 2025 | 01:55 PM இந்தியாவில் இருந்து கடந்த 18 வருடங்களின் பின்னர் கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு படகில் வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் கடுமையாக தாக்கிய நிலையில் குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியைச் சேர்ந்த தங்கையா டேவிட் பாலேந்திரன் என்ற இளம் குடும்பஸ்தர் 2007 ஆம் ஆண்டில் தனது 18 வது வயதில் கடல் மார்க்கமாக இந்தியா சென்றுள்ளார்.பின்னர் கடந்த 18 வருடங்களாக இந்தியாவில் வசித்து வந்த நிலையில் மீண்டும் தாயகம் திரும்ப முயற்சித்துள்ளார். இந்நிலையில் கடந்த 22 ஆம் திகதி இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக படகு ஒன்றில் தலைமன்னார் பகுதியை நோக்கி வந்துள்ளார். இதன்போது தலைமன்னார் கடற்படையினரால் குறித்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டார். 40 வயதுடைய குறித்த குடும்பஸ்தருக்கு இதய நோய் காணப்படுகின்ற நிலையில் அதற்கான மருத்துவ அறிக்கைகளையும் தன் வசம் எடுத்து வந்துள்ளார். எனினும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்ற கடற்படையினர் நோயாளியான குறித்த குடும்பஸ்தரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளர். பின்னர் குறித்த நபரை கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் பொலிஸார் குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் குறித்த நபரை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட பதில் நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதய நோயாளியான குறித்த குடும்பஸ்தர் தனக்கான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் காண்பித்த போதும் கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக குறித்த குடும்பஸ்தர் உறவினர்கள் மற்றும் வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223311
2 months 1 week ago
Published By: DIGITAL DESK 3
25 AUG, 2025 | 01:55 PM

இந்தியாவில் இருந்து கடந்த 18 வருடங்களின் பின்னர் கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு படகில் வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் கடுமையாக தாக்கிய நிலையில் குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியைச் சேர்ந்த தங்கையா டேவிட் பாலேந்திரன் என்ற இளம் குடும்பஸ்தர் 2007 ஆம் ஆண்டில் தனது 18 வது வயதில் கடல் மார்க்கமாக இந்தியா சென்றுள்ளார்.பின்னர் கடந்த 18 வருடங்களாக இந்தியாவில் வசித்து வந்த நிலையில் மீண்டும் தாயகம் திரும்ப முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22 ஆம் திகதி இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக படகு ஒன்றில் தலைமன்னார் பகுதியை நோக்கி வந்துள்ளார்.
இதன்போது தலைமன்னார் கடற்படையினரால் குறித்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டார்.
40 வயதுடைய குறித்த குடும்பஸ்தருக்கு இதய நோய் காணப்படுகின்ற நிலையில் அதற்கான மருத்துவ அறிக்கைகளையும் தன் வசம் எடுத்து வந்துள்ளார். எனினும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்ற கடற்படையினர் நோயாளியான குறித்த குடும்பஸ்தரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளர்.
பின்னர் குறித்த நபரை கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் பொலிஸார் குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பின்னர் குறித்த நபரை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட பதில் நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதய நோயாளியான குறித்த குடும்பஸ்தர் தனக்கான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் காண்பித்த போதும் கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக குறித்த குடும்பஸ்தர் உறவினர்கள் மற்றும் வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/223311
2 months 1 week ago
மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றி அழித்த... அந்தக் கோட்டையின் எஞ்சிய பகுதிகள் மேலும் சேதம் அடையாமல் இருக்க நிழற்குடை அமைத்தது பாராட்டுக்குரிய விடயம். நல்லூரில் உள்ள சங்கிலியன் தோப்பு நுழைவாயில்.... மழையிலும், வெய்யிலிலும் பாதிக்கப் பட்டுக் கொண்டு உள்ளதை கவனிக்க யாழ்ப்பாண மேட்டுக்குடி சமூகத்திற்கு அக்கறை இல்லை. கோவில்களுக்கும், தென்னிந்திய இசை கலைஞர்களுக்கும் தேவையில்லாத செலவு செய்வார்கள். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சங்கிலியன் தோப்பை பாதுக்காக்க வேண்டும் என்ற அக்கறை ஒருவருக்கும் இல்லை.
2 months 1 week ago
பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, இந்தத் திரைப்படமே, விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற அடைமொழி நிரந்தரமாக அமையக் காரணம். கட்டுரை தகவல் கார்த்திக் கிருஷ்ணா பிபிசி தமிழுக்காக 25 ஆகஸ்ட் 2025, 06:12 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாளை(ஆகஸ்ட் 25) முன்னிட்டு அவரது 100வது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்', 4கே தரத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படமே, விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற அடைமொழி நிரந்தரமாக அமையக் காரணம். 1990ஆம் ஆண்டு, விஜயகாந்தை நாயகனாக வைத்து, 'புலன் விசாரணை' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.கே.செல்வமணி. அந்தத் திரைப்படத்தில் 'ஆட்டோ' சங்கர் என்கிற உண்மை கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார் செல்வமணி. அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தில், 'சந்தனக் கடத்தல்' வீரப்பன் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார். விஜயகாந்தின் நீண்ட் நாள் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பில் உருவான 'கேப்டன் பிரபாகரன்' 1991ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மன்சூர் அலிகான் பிரதான வில்லனாக நடித்த முதல் திரைப்படம் இது. அவருக்கும் இப்படம் மிகப்பெரியத் திருப்புமுனையாக அமைந்தது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள், நூற்றுக்கணக்கான குதிரைகள் என மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பு, ஓடும் ரயிலில் நடக்கும் சண்டைக் காட்சி, கவுரவ வேடத்தில் சரத்குமார், முக்கியக் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன், இளையராஜாவின் பின்னணி இசை, ஆட்டமா தேரோட்டமா பாடல் என இத்திரைப்படத்தின் ஒவ்வொரு அம்சமும் பாராட்டைப் பெற்றது. தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான ஆக்ஷன் திரைப்படமாக இன்றளவிலும் பேசப்படும் 'கேப்டன் பிரபாகரன்' குறித்து சில பிரத்யேகத் தகவல்களைத் தெரிந்து கொள்ள, படத்தின் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியிடம், பிபிசி தமிழ் சார்பாகப் பேசினோம். மறுவெளியீடுக்கு கிடைத்திருக்கும் சிறப்பான வரவேற்பு தந்த மகிழ்ச்சியில் 'கேப்டன் பிரபாகரன்' குறித்த பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. தயாரிப்பாளர் ராவுத்தருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா? பட மூலாதாரம், FACEBOOK/VIJAYAKANT இவ்வளவு வருடங்கள் கழித்தும் இந்தத் திரைப்படம் மக்களால் கொண்டாடப்படுகிறது என்பது ஒரு படைப்பாளியாக எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த வெற்றிக்கு, தயாரிப்பாளர் ராவுத்தரும், நாயகன் விஜயகாந்தும், எனக்குக் கொடுத்த ஒத்துழைப்புதான் காரணம். ஆனால் ஆரம்பத்தில் எனக்கும் தயாரிப்பாளருக்கும் சிறிய கருத்து வேறுபாடு இருந்தது படத்தின் வேலைகள் ஆரம்பமானவுடன், எனக்கு மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை, படப்பிடிப்புக்கான இடங்களை இறுதி செய்ய அவகாசம் வேண்டும் எனக் கேட்டேன். அதற்கே இவ்வளவு நாட்களா என்று கேட்டார் தயாரிப்பாளர். வீரப்பன் தொடர்பான தகவல்களை சேகரிக்கவும், படப்பிடிப்புக்குச் சரியான இடங்களைப் பார்க்கவும் இந்தக் கால நேரம் தேவை என்றேன். ஒப்புக் கொண்டார். ஒரு புதிய ஜீப் வாங்கிக் கொடுத்தார். அதன் ஓட்டுநர், என் உதவியாளர், ஒரு புகைப்படக் கலைஞர் என நான்கு பேரும் புறப்பட்டுச் சென்றோம். மனம் போன போக்கில், தென்னிந்தியாவில் இருக்கும் அத்தனை வனப் பகுதிகளிலும் சுற்றித் திரிந்தோம். நாங்கள் செல்லாத பாதையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருந்தது அந்தப் பயணம். சில இடங்களுக்கு நடந்தும் சென்றோம். 'எமரால்ட் ஃபாரஸ்ட்' என்ற ஆங்கில திரைப்படத்தை, அமேசான் காடுகளில் படம் பிடித்திருப்பார்கள். அடர்த்தியான வனப் பகுதி, ஒரு மரத்தின் அடிப்பகுதியே 2 மீட்டர் அளவு இருக்கும் இடங்களிலெல்லாம் காட்சிகள் அமைந்திருந்தன. அந்தத் திரைப்படம் தந்த தாக்கத்தில் தான், அதைப் போலவே ஒரு இடத்தை நான் தேடிக் கொண்டே இருந்தேன். அப்போதுதான் கேரளாவில் சாலக்குடிக்கு மேல் ஒரு இடம், அதிரப்பள்ளி, இடுக்கி பகுதிக்குக் கீழே ஒரு ஊர் எனப் பல இடங்களைக் கண்டறிந்தேன். அந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த முதலில் தயாரிப்பாளர் சரி என்று சொன்னார். பட மூலாதாரம், FACEBOOK/VIJAYAKANT ஆனால் அங்கு முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, தொடர்ந்து சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. படக்குழுவைச் சேர்ந்த பணியாளர்கள் சிலர் இறந்து போனார்கள், வண்டி விபத்தில் ஒருவர் இறந்து போனார், குதிரை ஒன்று இறந்து போனது. இதெல்லாம் நல்ல சகுனங்கள் அல்ல என்று ராவுத்தர் நம்பினார். அவருடன் இருப்பவர்களும் அதை ஆமோதிக்க உடனே படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னார். விஜயகாந்த், நாம் சென்னைக்கு சென்ற பிறகு அவரைப் பார்த்து சம்மதிக்க வைப்போம் என்று சொன்னதால், அனைவரும் புறப்பட்டோம். சென்னையில் சில காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தினோம். ஆனால் விஜயகாந்த் எவ்வளவு சொல்லியும் ராவுத்தர், மீண்டும் கேரளாவுக்கு செல்ல முடியாது என்று மறுத்துவிட்டார். அது திரைப்படத்துக்கு மிக முக்கியமான இடம் என்று சொல்லியும் அவர் சம்மதிக்கவில்லை. அதனால் முண்டந்துறை பகுதியில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து, அங்கு சென்றோம். என் அதிர்ஷ்டம், அங்கு ஓயாமல் அடைமழை பெய்து கொண்டிருந்தது. மழை நின்றாலும் படப்பிடிப்பு நடத்த முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கியிருந்தது. படப்பிடிப்பு நிற்கவே கூடாது என்று நினைப்பார் விஜயகாந்த். எனவே அவரிடம் மெதுவாகச் சென்று, மீண்டும் கேரளா செல்லலாம் என்றேன். அவரும், இப்போது தயாரிப்பாளரிடம் சொல்லிக் கொள்ள வேண்டாம், நாம் சென்றுவிடுவோம் என்று கூறவே, எல்லோரும் மீண்டும் கேரளா சென்றோம். தன் பேச்சை மீறி விஜயகாந்திடம் பேசிவிட்டு இப்படி நடந்ததால் ராவுத்தருக்கு என் மேல் சிறிய வருத்தம். சில நாட்கள் என்னோட பேசாமல் கூட இருந்தார். ஆனால் அந்த மன வருத்தம் எல்லாம் பிரசவ வலி போல தான். எங்கள் படைப்பு சிறப்பாக வர வேண்டும் என்பதற்காகவே. எனவே இந்தப் பிரச்னையை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 100வது திரைப்படம் ஓடாது என்ற சினிமா சென்டிமென்ட் பற்றி... பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, ஆனால் விஜயகாந்த் எவ்வளவு சொல்லியும் ராவுத்தர், மீண்டும் கேரளாவுக்கு செல்ல முடியாது என்று மறுத்துவிட்டார். அன்றைய காலகட்டத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஸ்ரீ ராகவேந்திரா', கமல்ஹாசனின் 'ராஜ பார்வை' என அப்போது முன்னணியில் இருந்த இரண்டு நடிகர்களின் 100வது திரைப்படங்களே ஓடவில்லை. இதனால் கேப்டனின் 100வது படமான 'கேப்டன் பிரபாகரன்' மீதும் ஒரு வகையில் அந்த அழுத்தம் இருந்தது. ஒரு இயக்குநரின் முதல் படம் ஹிட் ஆனால் 2வது படம் ஓடாது என்கிற ஒரு நம்பிக்கையும் துறையில் இருந்தது. இரண்டும் சேர்ந்து எனக்கு லேசான அச்சத்தைத் தந்தன. ஆனால் 'புலன் விசாரணை'யின் வெற்றியால், தயாரிப்பு தரப்பு, படக்குழு என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தது. அந்த நம்பிக்கை, என் அச்சத்தைப் போக்கியது. படமும் வெற்றி பெற்றது. ராசியில்லாத நடிகையை நடிக்க வைக்கலாமா? படத்தின் நடிகர்கள் தேர்வு என்று வரும்போது பெரும்பாலும் ஆண் நடிகர்களே இருந்தனர். ஒரு பெண் கதாபாத்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து முக்கியமான பெண் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கினேன். அதில் நடிக்க யார் வந்தாலும் முக்கியமான நிபந்தனை, 90 நாட்கள் படப்பிடிப்பு முடியும் வரை அங்கேயே இருக்க வேண்டும் என்பதே. ஆரம்பத்தில் சரண்யா (பொன்வண்னன்) அவர்களை ஒப்பந்தம் செய்தோம். இரண்டு நாட்கள் அவரை வைத்து படப்பிடிப்பும் நடந்தது. அவருக்கு அந்தச் சூழல் அவ்வளவு சவுகரியமாக இல்லை, மேலும் ஒரு உடை அணிவது தொடர்பாக அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு. ஒரு நாள் வயிறு வலி என்று கிளம்பிச் சென்றவர், மீண்டும் வரவே இல்லை. அவருக்கு மாற்றாக யாரை நடிக்க வைப்பது என்று யோசிக்கும் போது ரம்யா கிருஷ்ணனின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. அப்போது ஒரு தெலுங்கு தயாரிப்பாளர், ரம்யா கிருஷ்ணன் ராசியில்லாத நடிகை. அவர் நடித்தால் படம் ஓடாது. ஏற்னவே 100வது படம் என்கிற சென்டிமென்ட் வேறு உங்களுக்கு இருக்கிறது. எனவே அவர் வேண்டாம் என்று உறுதியாகச் சொன்னார். இதனால் எங்கள் தரப்பிலும் ரம்யா கிருஷ்ணன் வேண்டாம் என்று முதலில் கூறிவிட்டனர். ஆனால் எங்களுக்கோ உடனே படப்பிடிப்பில் நடிக்க ஒரு நடிகை வேண்டும், அதுவும் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு. இதனால் வேறு வழியே இல்லாமல் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தோம். அன்றைய சூழலில் ரம்யா கிருஷ்ணனுக்கு நடிக்க அந்தப் படம் தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை, எங்கள் திரைப்படத்தின் வெற்றிக்கு அவரும் மிக முக்கியமான காரணமாக இருந்தார். பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS நாயகன் 35 நிமிடங்கள் வரை கதைக்குள் வராதது பற்றி... விஜயகாந்தின் அறிமுகமே படம் ஆரம்பித்த 34-35வது நிமிடத்தில் தான் வரும். அது எனக்குச் சவாலாகத் தான் இருந்தது. ஏனென்றால் 100வது படம் என்பதால், ஆரம்பத்திலேயே அவரது ரசிகர்களுக்காகச் சில விஷயங்களைச் செய்யலாம் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் முதலில் நாங்கள் ஒரு பிரதி தயார் செய்திருந்தோம். அதன்படி, 50வது நிமிடத்தில் தான் நாயகன் கதாபாத்திரம் வருவார். சரத்குமார் கதாபாத்திரம் வனத்துறை அதிகாரியாக இருந்தாலும், வனவிலங்கு புகைப்படக் கலையிலும் ஆர்வமாக இருப்பார். அவர் காடுகளைச் சுற்றும்போது ஒரு அழகானப் பழங்குடியினப் பெண்ணைச் சந்திப்பார். அவரைப் பின் தொடர்ந்து பல புகைப்படங்கள் எடுத்து, நட்பாகி, இருவரும் காதலிப்பார்கள். இதனிடையே வில்லன் கதாபாத்திரத்தை அவர் தேடுவதும் இருக்கும். இதன் பின் வில்லனிடம் சரத்குமார் கதாபாத்திரம் சிக்குவது, இறப்பது, அவர் குடும்பம் சென்னை வருவது, விஜயகாந்தை சந்திப்பது எனக் கதை தொடரும். ஆனால் இந்த முதல் பிரதியின் நீளம் 23,500 அடி. அதாவது ஏறக்குறைய 4 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடக் கூடியது. இரண்டரை மணி நேரத்துக்கு மேல் திரைப்படம் இருக்கவே கூடாது என ராவுத்தர் கண்டிப்பாகக் கூறிவிட்டார். எனவே பல காட்சிகளை நீக்கி, தற்போது இருக்கும் நீளத்துக்கு படம் தொகுக்கப்பட்டது. இதில் 35வது நிமிடத்தில் விஜயகாந்த் கதாபாத்திரத்தின் அறிமுகம் நடக்கும். இதற்கு முன்னால் 'பாசமுள்ள பாண்டியரே...' பாடல் வரும்போது, படத்தின் டைட்டில் வரும்போது, சரத்குமாருக்கு ஆபத்து ஏற்படும்போது என 3 இடங்களில் நாயகன் வந்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வர மாட்டார். இதற்குப் பிறகு நாயகனுக்கு சரியான அறிமுகக் காட்சி இல்லையென்றால் கண்டிப்பாக அது எனக்கு வினையாக முடியும். என்னால் திரையரங்குக்குள் நுழையவே முடியாது. ரசிகர்கள் விட மாட்டார்கள். ஆனால் நான் வைத்திருந்த காவல் நிலையும் தொடர்பான காட்சிகளும், நாயகனின் அறிமுகமும் நல்ல வரவேற்பைப் பெற்றன. முதல் பாதியில் 5-6 காட்சிகளே விஜயகாந்த் வந்தாலும், படத்தின் பிரம்மாண்டம் அதையெல்லாம் மறக்கடிக்க வைத்தது. படத்தில் 7,000 அடி நீக்கப்பட்டது பற்றி... 23,500அடி திரைப்படத்தைக் குறைத்தோம் என்று குறிப்பிட்டேன் இல்லையா. இதில் சில முக்கியமான ஆக்ஷன் காட்சிகளும் நீக்கப்பட்டன. விஜயகாந்த் கேப்டனாக இருக்க, அவர் தலைமையில் சில கமாண்டோக்களுடன், வில்லனை பிடிக்க காட்டுப் பகுதிக்கு வருவார்கள். வில்லனுக்கு தெரியாமல் வேறு வழியில் சுற்றி வந்து தாக்குவார்கள் என்பது போலவே கதை அமைத்திருந்தேன். இதில் கார் துரத்தல், 2-3 சண்டைக் காட்சிகள், வன விலங்கை இவர்கள் எதிர்கொள்வது எனக் கிட்டத்தட்ட 7,000 அடிக்கு பலவிதமான ஆக்ஷன் காட்சிகளைப் படம்பிடித்து வைத்திருந்தேன். அந்த பிரமாண்டமான காட்சிகளே தனியாக ஒரு படம் போல இருக்கும். அதையெல்லாம் நீக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, இந்தக் காட்சிகளையெல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த திரைப்படத்தில் உதவும், நான் இயக்கவில்லை என்றால் கூட உங்களின் அடுத்த தயாரிப்பில் பயன்படுத்துங்கள், என் பெயர் கூட போட வேண்டாம் என்றெல்லாம் தயாரிப்பாளரிடம் கூறினேன். ஆனால் அதன் மதிப்பு தெரியாமல், பாதுகாக்காமல் விட்டுவிட்டனர். இன்று இருந்தாலும் அதன் மதிப்பு பல கோடிகளுக்கு சமம் என்பேன். ஏனென்றால் அப்போதே கோடிகளில் செலவு செய்து தான் எடுத்திருந்தோம். விஜயகாந்த் கொடுத்த ஊக்கம் பற்றி... பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, விஜயகாந்துடன் இணைந்த இந்த இரண்டாவது படத்திலும் அவருக்கென தனியாக டூயட் பாடல் கிடையாது, காதல் காட்சிகள் கிடையாது அப்போது திருமணமாகி, குழந்தை இருக்கும் நாயகன் கதாபாத்திரம் என்பது அரிது. ஆனால் விஜயகாந்த் அந்த விஷயத்திலும் தயங்கவில்லை. ''புலன் விசாரணை' திரைப்படத்தில், வயது வந்த பெண்ணுக்கு அப்பாவாக நடித்திருப்பார். இது குறித்து சிலர் விமர்சனம் பேச, அப்போதே தயாரிப்பாளர், இந்தக் கதாபாத்திரத்தை தங்கையாக மாற்றலாமா என்று கேட்டார். ஆனால் விஜயகாந்த், அது வழக்கமானதாக இருக்கும், இதுவே கதைக்கு ஏற்றவாரு உணர்ச்சிகரமாக இருக்கும். மற்ற திரைப்படங்களில் இரண்டு நாயகிகள், பாடல்கள் எல்லாம் இருக்கும்போது, இந்தத் திரைப்படத்தில் இப்படியே இருக்கட்டும் என்றார். அவருடன் இணைந்த இந்த இரண்டாவது படத்திலும் அவருக்கென தனியாக டூயட் பாடல் கிடையாது, காதல் காட்சிகள் கிடையாது, வழக்கமான நாயகியாக அல்லாமல், நாயகனின் மனைவி கதாபாத்திரம் தான் என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். அவரும் எதுவும் ஆட்சேபிக்கவில்லை. படப்பிடிப்பில் தொடர்ந்த ஆபத்துகள்... நான் ஏற்கனவே சொன்ன விபத்துகள் அல்லாமல், இந்தப் படப்பிடிப்பு முடியும் வரை பல்வேறு விதமான ஆபத்துகளை எங்களில் பலர் சந்தித்தோம். உயிருக்கே ஆபத்தான சூழல்களையும் எதிர்கொண்டோம். காட்டுக்குள் நடந்த படப்பிடிப்பின் போது கேப்டன் விஜயகாந்த் 2-3 முறை மரணத்தின் வாயிலுக்குச் சென்று வந்தார். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, திடீரென அணை திறக்கப்பட்டது. அது எங்களுக்குத் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக நீரின் நிறம் மாறியது. ஒருவர் தூரத்திலிருந்து நீண்ட நேரம் கத்திக் கொண்டிருந்தார். அவர் படப்பிடிப்பைப் பார்த்துக் கத்துகிறார் என்று நினைத்தோம். ஆனால் அவர் அவசரஅவசரமாக எங்களிடம் ஓடி வந்து, அணை திறக்கப்பட்டுள்ளது. உடனே புறப்படுங்கள் என்று எச்சரித்தார். பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, முதல் நாள் திரையரங்கில் அந்தக் காட்சிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து அனைவரும் மிரண்டுவிட்டோம். கிரேனிலிருந்து கேமராவை இறக்குவதற்கு சில நிமிடங்களுக்குள் இடுப்பளவு தண்ணீர் வேகமாக எங்களைச் சூழந்தது. வேகமாகக் கேமராவை கிரேனிலிருந்து பிரித்து எடுத்துக் கொண்டு ஓடினோம். ஆனால் அந்த நீரின் வேகத்தில் கிரேன் சில கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டது. அது வெறும் நீர்ப்பகுதி அல்ல. பல பாறைகள் நிறைந்த வழி. அடித்துச் செல்லப்பட்ட கிரேன், பாறைகளில் மோதி, வளைந்த நிலையில்தான் எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் யாராவது மாட்டியிருந்தால் உயிருக்கே ஆபத்தாக மாறியிருக்கும். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியே தெரியாத அளவுக்கு மேலும், கீழும் சம நிலை ஆகும் அளவுக்கு தண்ணீர் அளவு இருந்தது. கடைசி நீதிமன்றக் காட்சியை நீக்கத் தயாராக இருந்தோம் படத்தின் இறுதிக் காட்சியைப் படம்பிடிக்கும் போது எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இந்த காலகட்டத்தில், 'பராசக்தி' படத்தில் வருவதைப் போல ஒரு நீளமான நீதிமன்றக் காட்சியை ரசிகர்கள் ஏற்பார்களா என்று யோசித்தேன். வில்லனை நாயகன் கைது செய்ததும் கதை முடிந்தது போல ஆகிவிடுமே, அதன் பிறகு 2000 அடி நீளக் காட்சிகளை ரசிகர்கள் பார்ப்பார்களா என்கிற சந்தேகம் இருந்தது. நாம் இதை தனி ரீலாக எடுத்து வைப்போம். மொத்தமாகப் பார்க்கும்போது, இந்த நீதிமன்றக் காட்சிகள் தேவையில்லை என்று தோன்றினால், அப்படியே நீக்கிவிடலாம். நீங்கள் வில்லனை தோற்கடிக்கும் இடத்திலேயே படம் முடிந்தது போன்ற உணர்வு கிடைக்கும். அங்கே முடித்துவிடலாம் என்று விஜயகாந்திடம் கூறினேன். முதல் பிரதியைப் பார்க்கும் போது கூட சந்தேகம் தொடர்ந்தது. ஆனால் முதல் நாள் திரையரங்கில் அந்தக் காட்சிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து அனைவரும் மிரண்டுவிட்டோம். ஒவ்வொரு வசனமும் அனல் தெறித்தது. வீரப்பனைத் தாண்டி சமூகத்தில் எவ்வளவு குற்றவாளிகள் உள்ளனர் என்பது எனது சிறிய ஆய்வில் தெரிய வந்தது. பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, இன்றைக்கு இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்றாலும் ஒரு விஜயகாந்த், ஒரு ராவுத்தர் இல்லையென்றால் முடியாது. பல அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு இதில் தொடர்பு உண்டு என்பதை என்னிடம் பலர் அப்போது தெரிவித்தனர். அவற்றையெல்லாம் வெளிப்படையாக வெளியே பேச முடியாத நிலை. வசனமாக வைத்திருந்தேன். எதிர்காலத்தில் வீரப்பனைப் பிடித்தாலும் உயிருடன் பிடிக்க மாட்டார்கள் என்று நான் யூகித்தேன். பல ஆண்டுகள் கழித்து அதுதான் நடந்தது. எங்களது ஒட்டுமொத்த படக்குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தந்த கடின உழைப்பு, ஈடுபாடு ஆகியவைதான் படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. அதுதான் இன்றும் 'கேப்டன் பிரபாகரன்' கொண்டாடப்படுவதன் காரணமும் கூட. இன்றைக்கு இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்றாலும் ஒரு விஜயகாந்த், ஒரு ராவுத்தர் இல்லையென்றால் முடியாது. பலர் எங்களைப் பார்த்து சந்தேகப்படும் போது கூட விஜயகாந்த அவர்கள் ஒரு வார்த்தை எங்களைக் கேள்வி கேட்டதில்லை. ராவுத்தரும், 'விஜயகாந்த் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார், கவலை வேண்டாம்' என்று உறுதுணையாக நின்றார். அவர்கள் இருவருக்கும் என்றென்றும் நான் கடமைபட்டவனாக இருப்பேன்". இவ்வாறு உணர்ச்சிபொங்க பேசி முடித்தார் ஆர்.கே.செல்வமணி - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2eny4yy9d3o