Aggregator

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் – சபையில் வெடித்த கருத்து!

2 months 2 weeks ago
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் – சபையில் வெடித்த கருத்து! உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் கூறியதாகத் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் குறித்து நேற்று (09) சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நேற்று முந்தினம் நடைபெற்ற உயர்ப் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு வருகைதந்திருந்த ரவி செனவிரட்ன, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னால் இந்தியா இருப்பதாகவும் கூறியுள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த செய்திகளை மறுத்து பொலிஸ் ஊடகப் பிரிவினால் நேற்று அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நேற்று நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து கருத்து வெளியிட்டபோதே சபையில் இவ்வாறு சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது தயாசிறி ஜயசேகர கூறுகையில், நான் உயர்ப் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் உறுப்பினராக உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன அந்தக் குழுவுக்கு வருகை தந்திருந்தபோது, நிஸாம் காரியப்பர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்து, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அது தொடர்பில் சகல ஊடகங்களும் எங்களிடம் கேட்கின்றன. இந்நிலையில், தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், அதன் பின்னால் இந்தியா இருப்பதாக அவர் கூறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் அவ்வாறான கருத்தைக் கூறவில்லை. எனினும் இது தொடர்பில் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். உயர்ப் பதவிகள் தொடர்பான குழுவில் இதுபற்றி கூறாமல் நீதிமன்றத்தில் யார் பிரதான சூத்திரதாரி என்பதைக் கூறுங்கள். இது தொடர்பில் அமைச்சரோ, பிரதி அமைச்சரோ அல்லது பொறுப்புவாய்ந்த ஒருவரோ கூற வேண்டும்’’ என தெரிவித்தார். இதேவேளை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இது தொடர்பில் கூறுகையில், இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது. அந்த செயற்குழுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் அவற்றை ஊடகங்களுக்கு கூறவில்லை. அது விசாரணையின் ஒரு பகுதி என்பதனால் அந்தக் கருத்தை நீக்குமாறு உத்தரவிட முடியாது. வேறு வழியில் இந்த விசாரணைகளை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு இடமளிக்க வேண்டாம் என்று கோருகின்றேன்’’ என கூறினார். இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் மீண்டும் கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர, குறித்த விடயத்தை நிஸாம் காரியப்பரே டுவிட் செய்துள்ளார். உயர்ப்பதவிகள் தொடர்பான குழுவில் நடக்கும் விடயங்களை எவரும் டுவிட் செய்வதில்லை. அவர் இன்று (வியாழகிழமை ) காலையிலேயே டுவிட் செய்திருந்தார். ஆனால் இந்த விடயங்கள் நேற்று (புதன்கிழமை) மாலையே வெளியாகியிருந்தன’’ என்றார். இதேவேளை இது தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகையில், உயர்ப் பதவிகள் தொடர்பான குழுவுக்கு அதிகாரிகள் பொறுப்புக் கூறலுடனேயே அழைக்கப்படுகின்றனர். பாராளுமன்றத்தில் உள்ள பிரதான செயற்குழுவாகும். இங்கு வரும் அதிகாரிகள் அந்தக் குழுவின் மீது நம்பிக்கை வைத்தே கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர். அவ்வாறு பதிலளிக்கும் விடயங்கள் அந்த குழுவின் உறுப்பினர்களால் தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்குகளில் வெளியிடப்படுகின்றது என்றால் அது பாரதூரமான குற்றமாகும். அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு வெளியில் சமூக வலைத்தளங்களில் எழுதும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட எம்.பியை அழைத்து அவரை எச்சரிக்க வேண்டும். அவரை அந்த குழுவிலிருந்தும் வெளியேற்ற வேண்டும் என கூறினார். https://athavannews.com/2025/1449996

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் – சபையில் வெடித்த கருத்து!

2 months 2 weeks ago

New-Project-124.jpg?resize=600%2C300&ssl

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் – சபையில் வெடித்த கருத்து!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் கூறியதாகத் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் குறித்து நேற்று (09) சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நேற்று முந்தினம் நடைபெற்ற உயர்ப் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு வருகைதந்திருந்த ரவி செனவிரட்ன, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னால் இந்தியா இருப்பதாகவும் கூறியுள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த செய்திகளை மறுத்து பொலிஸ் ஊடகப் பிரிவினால் நேற்று அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நேற்று நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து கருத்து வெளியிட்டபோதே சபையில் இவ்வாறு சர்ச்சை ஏற்பட்டது.

இதன்போது தயாசிறி ஜயசேகர கூறுகையில்,

நான் உயர்ப் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் உறுப்பினராக உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன அந்தக் குழுவுக்கு வருகை தந்திருந்தபோது, நிஸாம் காரியப்பர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்து, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் சகல ஊடகங்களும் எங்களிடம் கேட்கின்றன.

இந்நிலையில், தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், அதன் பின்னால் இந்தியா இருப்பதாக அவர் கூறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் அவ்வாறான கருத்தைக் கூறவில்லை.

எனினும் இது தொடர்பில் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். உயர்ப் பதவிகள் தொடர்பான குழுவில் இதுபற்றி கூறாமல் நீதிமன்றத்தில் யார் பிரதான சூத்திரதாரி என்பதைக் கூறுங்கள். இது தொடர்பில் அமைச்சரோ, பிரதி அமைச்சரோ அல்லது பொறுப்புவாய்ந்த ஒருவரோ கூற வேண்டும்’’ என தெரிவித்தார்.

இதேவேளை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இது தொடர்பில் கூறுகையில்,

இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது.

அந்த செயற்குழுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் அவற்றை ஊடகங்களுக்கு கூறவில்லை.

அது விசாரணையின் ஒரு பகுதி என்பதனால் அந்தக் கருத்தை நீக்குமாறு உத்தரவிட முடியாது. வேறு வழியில் இந்த விசாரணைகளை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு இடமளிக்க வேண்டாம் என்று கோருகின்றேன்’’ என கூறினார்.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் மீண்டும் கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர,

குறித்த விடயத்தை நிஸாம் காரியப்பரே டுவிட் செய்துள்ளார். உயர்ப்பதவிகள் தொடர்பான குழுவில் நடக்கும் விடயங்களை எவரும் டுவிட் செய்வதில்லை.

அவர் இன்று (வியாழகிழமை ) காலையிலேயே டுவிட் செய்திருந்தார். ஆனால் இந்த விடயங்கள் நேற்று (புதன்கிழமை) மாலையே வெளியாகியிருந்தன’’ என்றார்.

இதேவேளை இது தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகையில்,

உயர்ப் பதவிகள் தொடர்பான குழுவுக்கு அதிகாரிகள் பொறுப்புக் கூறலுடனேயே அழைக்கப்படுகின்றனர். பாராளுமன்றத்தில் உள்ள பிரதான செயற்குழுவாகும். இங்கு வரும் அதிகாரிகள் அந்தக் குழுவின் மீது நம்பிக்கை வைத்தே கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.

அவ்வாறு பதிலளிக்கும் விடயங்கள் அந்த குழுவின் உறுப்பினர்களால் தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்குகளில் வெளியிடப்படுகின்றது என்றால் அது பாரதூரமான குற்றமாகும்.

அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு வெளியில் சமூக வலைத்தளங்களில் எழுதும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட எம்.பியை அழைத்து அவரை எச்சரிக்க வேண்டும். அவரை அந்த குழுவிலிருந்தும் வெளியேற்ற வேண்டும் என கூறினார்.

https://athavannews.com/2025/1449996

அமைச்சரவை மாற்றம்: மூன்று அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள்!

2 months 2 weeks ago
அமைச்சரவை மாற்றம்: மூன்று அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள்! 2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சரவை மறுசீரமைப்பில், அரசாங்கம் இன்று (10) மூன்று புதிய அமைச்சரவை அமைச்சர்களையும் 10 பிரதி அமைச்சர்களையும் நியமித்தது. அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க: துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சுசில் ரணசிங்க : வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் பிரதி அமைச்சர்கள் அனில் ஜெயந்த பெர்னாண்டோ: நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டி.பி. சரத்: வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் எம். எம். மொஹமட் முனீர்: சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர : நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி : சுகாதார பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண : காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் தினிந்து சமன் குமார: இளைஞர் விவகார பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர: பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன: வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் எம். ஐ. எம். அர்காம்: எரிசக்தி பிரதி அமைச்சர். Athavan Newsஅமைச்சரவை மாற்றம்: மூன்று அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள்!2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சரவை மறுசீரமைப்பில், அரசாங்கம் இன்று (10) மூன்று புதிய அமைச்சரவை அமைச்சர்களையும் 10 பிரதி அமைச்சர்களையும்

அமைச்சரவை மாற்றம்: மூன்று அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள்!

2 months 2 weeks ago

New-Project-122.jpg?resize=750%2C375&ssl

அமைச்சரவை மாற்றம்: மூன்று அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள்!

2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சரவை மறுசீரமைப்பில், அரசாங்கம் இன்று (10) மூன்று புதிய அமைச்சரவை அமைச்சர்களையும் 10 பிரதி அமைச்சர்களையும் நியமித்தது.

அமைச்சர்கள்

  1. பிமல் ரத்நாயக்க: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்

  1. அனுர கருணாதிலக்க: துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

  1. சுசில் ரணசிங்க : வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

  1. அனில் ஜெயந்த பெர்னாண்டோ: நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

  1. டி.பி. சரத்: வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்

  1. எம். எம். மொஹமட் முனீர்: சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்

  1. எரங்க குணசேகர : நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்

  1. ஹன்சக விஜேமுனி : சுகாதார பிரதி அமைச்சர்

  1. அரவிந்த செனரத் விதாரண : காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

  1. தினிந்து சமன் குமார: இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

  1. நிஷாந்த ஜெயவீர: பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

  1. கௌசல்யா அரியரத்ன: வெகுஜன ஊடக பிரதி  அமைச்சர்

  1. எம். ஐ. எம். அர்காம்: எரிசக்தி பிரதி அமைச்சர்.

    Athavan News
    No image previewஅமைச்சரவை மாற்றம்: மூன்று அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள்!
    2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சரவை மறுசீரமைப்பில், அரசாங்கம் இன்று (10) மூன்று புதிய அமைச்சரவை அமைச்சர்களையும் 10 பிரதி அமைச்சர்களையும்

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

2 months 2 weeks ago
போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை! போதைப் பொருளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 21 வயது மேசன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரசாந்த கொடவெல நேற்று (09) இந்த தண்டனையை விதித்துள்ளார். மன்னாரை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர், ஐஸ் என்ற போதைப் பொருளைக் கொண்டு சென்றபோது, கடந்த 2022 நவம்பர் 03 ஆம் திகதி எழுத்தூர் சந்திக்கு அருகில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சட்டமா அதிபர் 2008 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார். இந்நிலையில் விசாரணைக்குப் பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதி, தீர்ப்பை அறிவிக்கும் போது, வழக்குத் தொடுப்பவரால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தண்டனை விதித்துள்ளார். https://athavannews.com/2025/1449999

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

2 months 2 weeks ago

court-order.jpg?resize=750%2C375&ssl=1

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

போதைப் பொருளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 21 வயது மேசன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரசாந்த கொடவெல நேற்று (09) இந்த தண்டனையை விதித்துள்ளார்.

மன்னாரை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர், ஐஸ் என்ற போதைப் பொருளைக் கொண்டு சென்றபோது, கடந்த 2022 நவம்பர் 03 ஆம் திகதி எழுத்தூர் சந்திக்கு அருகில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் சட்டமா அதிபர் 2008 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் விசாரணைக்குப் பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதி, தீர்ப்பை அறிவிக்கும் போது, வழக்குத் தொடுப்பவரால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தண்டனை விதித்துள்ளார்.

https://athavannews.com/2025/1449999

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

2 months 2 weeks ago
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை! பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் ஆபத்தான சுனாமி அலைகள் உருவாகக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இந்த நிலநடுக்கம், தீவின் தலைநகர் டாவோவிலிருந்து சுமார் 123 கிலோமீட்டர் (79 மைல்) தொலைவில் உள்ள மின்டானாவ் தீவின் கிழக்குப் பகுதியில், 58.1 கிலோமீட்டர் (36 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது. சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (Phivolcs), உயிருக்கு ஆபத்தான அலை உயரத்துடன் பேரழிவு தரும் சுனாமி எதிர்பார்க்கப்படுவதாக கூறியது. அத்துடன் கிழக்கு, தெற்கு பிலிப்பைன்ஸின் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை வெளியேறுமாறு எச்சரித்தது. இதேவேளை, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை நிலையம், பிலிப்பைன்ஸின் சில பகுதிகளுக்கு 1-3 மீட்டர் உயர அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், இந்தோனேசியாவின் சில கடற்கரைகள், பலாவ் தீவு நாடிலும் 30 செ.மீ முதல் 1 மீட்டர் வரை அலைகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தது. பிலிப்பைன்ஸ், பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள 25,000 மைல் (40,000 கிலோமீட்டர்) நில அதிர்வுப் பிளவுக் கோடுகளின் நெருப்பு வளையத்தின் அருகே அமைந்துள்ளது. இது உலகின் பாதிக்கும் மேற்பட்ட எரிமலைகளைக் கொண்டுள்ளதுடன் தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை எதிர்கொள்கின்றது. https://athavannews.com/2025/1449973

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

2 months 2 weeks ago

New-Project-120.jpg?resize=750%2C375&ssl

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் ஆபத்தான சுனாமி அலைகள் உருவாகக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம், தீவின் தலைநகர் டாவோவிலிருந்து சுமார் 123 கிலோமீட்டர் (79 மைல்) தொலைவில் உள்ள மின்டானாவ் தீவின் கிழக்குப் பகுதியில், 58.1 கிலோமீட்டர் (36 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது. 

சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (Phivolcs), உயிருக்கு ஆபத்தான அலை உயரத்துடன் பேரழிவு தரும் சுனாமி எதிர்பார்க்கப்படுவதாக கூறியது.

அத்துடன் கிழக்கு, தெற்கு பிலிப்பைன்ஸின் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை வெளியேறுமாறு எச்சரித்தது. 

இதேவேளை, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை நிலையம், பிலிப்பைன்ஸின் சில பகுதிகளுக்கு 1-3 மீட்டர் உயர அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், இந்தோனேசியாவின் சில கடற்கரைகள், பலாவ் தீவு நாடிலும் 30 செ.மீ முதல் 1 மீட்டர் வரை அலைகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தது.

பிலிப்பைன்ஸ், பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள 25,000 மைல் (40,000 கிலோமீட்டர்) நில அதிர்வுப் பிளவுக் கோடுகளின் நெருப்பு வளையத்தின் அருகே அமைந்துள்ளது. 

இது உலகின் பாதிக்கும் மேற்பட்ட எரிமலைகளைக் கொண்டுள்ளதுடன் தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை எதிர்கொள்கின்றது.

https://athavannews.com/2025/1449973

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !

2 months 2 weeks ago
இவ்வளவு காலத்துக்கு பின் 13 பற்றி கதைக்க பலரையும் இந்தியா களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !

2 months 2 weeks ago
சுமந்திரன்…. ஒரு சதத்திற்கும் உதவாதவர் என்பது மட்டுல்ல, தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப் பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒற்றுமையாக இருந்த கட்சிகளை உடைத்து… ஶ்ரீலங்காவினதும், இந்திய நாட்டினதும் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்த ஆபத்தான மனிதன்தான் சுமந்திரன். இனியும் இவரை தமிழரசுக் கட்சி வைத்திருக்குமானால்… அது தமிழருக்கும், தமிழரசுக் கட்சிக்கும் பேராபத்தாக முடியும். இவர் தமிழ் அரசியலில் இருக்கும் வரை… தமிழ்க் கட்சிகள் மீண்டும் ஒற்றுமையாவதற்கு சந்தர்ப்பமே இல்லை. சுமந்திரனை வைத்து…. தமிழரில் இன்னும் பல பிரிவினைகளை உருவாக்கவே இந்தியத் தூதரகம் மாதா மாதம் இவருடன் பேச்சுவார்த்தையும், ஆலோசனையும், பணமும் வழங்கிக் கொண்டு இருப்பதாக நான் சந்தேகிக்கின்றேன்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 2 weeks ago
கந்தப்பு மேலுள்ள சுட்டியை அழுத்தி உங்கள் பிரச்சனையை எழுதுங்கள். நிச்சயம் சரி செய்வார்கள். அக்கா ஒரு வயது வந்தால் இதே பிரச்சனை தான்.இதையும் கடந்து போக நாங்கள் தான் பழக வேண்டும்.அதையோ யோசித்துக் கொண்டிருக்காமல் நல்லதே நடக்கும் என்று மனதை திடமாக வைத்திருங்கள். எனது மின்னஞ்சல்:-mkirupananthan@gmail.com ஆனபடியால் தொடர்ந்தும் கழிவோயிலை எதிர்பார்க்கலாம்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !

2 months 2 weeks ago
சுமந்திரனை தலையில் வைத்து கொண்டாடுபவர்களின் பின் புலத்தையும், கடந்த காலத்தில் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையும் வைத்துப் பார்த்தால்… பல விடயங்கள் இலை மறை காயாக ஒளிந்து இருப்பதை கண்டு பிடிக்கலாம். 1) சுமந்திரன், தமிழ் தேசியத்துக்கு எதிரானவர் என்பதால்… அந்தப் பாசத்தில் ஆதரவு கொடுப்பவர்கள்…. ஈழப் போராட்டத்தின் போது, புலிகளை காட்டிக் கொடுத்த ஒட்டுக் குழுக்களுக்கும், சிங்கள அரசாங்கத்துக்கும் ஆதரவாக கருத்துக்களை வைத்துக் கொண்டு திரிந்தவர்கள் ஒரு வகை. 2) சுமந்திரன், தமிழர் கட்சிகளை சின்னா பின்னமாக்கி ஒற்றுமையை சிதைத்துக் கொண்டு இருப்பது சிலருக்கு இனிப்பான விடயமாக இருப்பதாலும்… 3) சுமந்திரன், வட மராட்சியை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதால், ஊர்ப் பாசத்தில் ஒரு சிலரும்… (சென்ற ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும்…. ஆபிரஹாம் சுமந்திரனின் தமிழரசுக் கட்சி மரண அடிவாங்கி, படு தோல்வி அடைந்த இடம் வடமராட்சிதான்.) 😂 🤣 4) ஆபிரஹாம் சுமந்திரன், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஒரு சிலரும்…. 5) சுமந்திரன், சிங்களவருக்குக்குள் திருமண தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதால் ஒரு சிலரும்…. 6) யாழ்ப்பாணத்தில் கொழுத்தும் வெய்யில் வெக்கைக்குள்…. கோட்டு, சூட்டுப் போட்ட சுமந்திரனை, பெரிய அறிவாளி என நினைக்கும் சில பனங்கொட்டைத் தமிழர்களும்…. சுமந்திரனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றார்கள் என்பதே உண்மை. இவர்களால்… தமிழருக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. பைத்தியக்காரக் கூட்டம் என்று கடந்து போக வேண்டியதுதான்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 2 weeks ago
🤣................. நான் ஒரு தனித் துண்டில் எழுதி வைப்பதாக நினைத்தேன். அதற்குப் பிறகு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா வெற்றி................. வெறுமனே நினைத்ததற்கே இப்படி என்றால், எழுதி வைத்திருந்தால் என்னவாகி இருக்குமோ...............😜.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !

2 months 2 weeks ago
இவர்கள் செய்யும் பேய்க்காட்டல்களினால்த்தான் இதய பூர்வமான தமிழின விசுவாசிகள் சிங்கள கட்சிகளை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர். இன்றுவரை ஒரு சதத்திற்கும் உதவாத சுமந்திரனை ஏன் தான் தலையில் வைத்து கொண்டாடுகின்றார்களோ தெரியவில்லை.