Aggregator

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி

3 months 3 weeks ago
“உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” - சிரியா ஜனாதிபதியிடம் கேட்ட ட்ரம்ப் 13 Nov, 2025 | 04:09 PM “உங்களுக்கு எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள்” என சிரியா ஜனாதிபதி அகமது அல்ஷராவிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டது, தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. சிரியா ஜனாதிபதி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, சிரியா ஜனாதிபதிக்கு வாசனைத் திரவியமொன்றை ட்ரம்ப் பரிசாக வழங்கியுள்ளார். அவ்வேளை, “இது ஆண்களுக்கான வாசனைத் திரவியம்” என்று ட்ரம்ப கூறிவிட்டு, அந்த வாசனைத் திரவியத்தை சிரியா ஜனாதிபதி மீது தெளித்திருக்கிறார். “இது மிகச் சிறந்த வாசனைத் திரவியம்” என்றும் “மற்ற வாசனைத் திரவியங்கள் உங்கள் மனைவிக்கானது. உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” என்று ட்ரம்ப், கேட்க, அதற்கு சிரியா ஜனாதிபதி, “ஒன்றே ஒன்றுதான்” என்று பதிலளித்துள்ளார். அப்போது சுற்றியிருந்த தலைவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்துள்ளது. அத்துடன், இந்த சந்திப்பின்போது அகமது அல்ஷராவும் ட்ரம்புக்கு பல அடையாளப் பரிசுகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பண்டைய சிரிய நாட்டுக் கலைப்பொருட்களின் பிரதிகள், குறிப்பாக, அந்நாட்டின் முதல் எழுத்துக்கள், முதல் முத்திரை, முதல் இசைக் குறிப்பு, முதல் சுங்க வரி போன்றவற்றின் குறிப்புப் பிரதிகளை வழங்கியதாக கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/230259

டெல்லி செங்கோட்டை அருகே வெடிப்பு - பலர் உயிரிழப்பு

3 months 3 weeks ago
டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத தாக்குதல் - அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் 13 Nov, 2025 | 01:41 PM டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத தாக்குதல் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்துள்ளார். “டெல்லியில் நடந்தது தெளிவான ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றே தெரிகிறது. இதை விசாரிப்பதற்கான உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்தது. ஆனால், இந்தியா மிக கவனமாகவும் திறமையாகவும் விசாரித்து வருகிறது. இந்தியர்களை வெகுவாக பாராட்டவேண்டும்” என மார்கோ ரூபியோ மேலும் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் டெல்லி, செங்கோட்டைக்கு முன்பாக கடந்த 10ஆம் திகதி இரவு வெடிபொருட்களை கொண்டுசென்ற கார் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் 3 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் உட்பட பல ஆயுதங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே டெல்லியில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. இவ்வெடிப்பு அசம்பாவிதம் தொடர்பில் டெல்லி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பயங்கரவாதத்தோடு தொடர்புடைய வெடிப்பு சம்பவம் என்பதால் பின்னர், உள்விவகார அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230239

பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!

3 months 3 weeks ago
13 Nov, 2025 | 03:21 PM தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார். 34 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2025 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதியுடன் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தனது கடமையின் போது உதவிய முன்னாள் அமைச்சர்கள், அரசாங்க ஊழியர்கள், அமைச்சர்கள், பிரதம அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நன்றியை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/230252

பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!

3 months 3 weeks ago

13 Nov, 2025 | 03:21 PM

image

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். 

சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார். 

34 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2025 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதியுடன் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

தனது கடமையின் போது உதவிய முன்னாள் அமைச்சர்கள், அரசாங்க ஊழியர்கள், அமைச்சர்கள், பிரதம அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நன்றியை தெரிவித்துள்ளார். 

WhatsApp_Image_2025-11-13_at_14.41.24.jp

https://www.virakesari.lk/article/230252