Aggregator

யூரோ 2028 கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி அட்டவணை அறிவிப்பு!

3 months 3 weeks ago

download-1-6.jpg?resize=300%2C168&ssl=1

யூரோ 2028 கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி அட்டவணை அறிவிப்பு!

யூரோ 2028 கால்பந்து சுற்று போட்டி இங்கிலாந்து (England), (Wales) வேல்ஸ், (Scotland,) ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு(reland) வெம்ப்ளி மற்றும் ஹாம்ப்டன் பார்க் (Wembley and Hampden Park.) ஆகிய வெவ்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் யூரோ 2028 கால்பந்தாட்டத்திற்கான டைனமிக் விலை நிர்ணயத்தைப் பயன்படுத்தி நுழைவு சீட்டுகள் விற்கப்படாது என போட்டி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

2026 உலகக் கோப்பைக்காக FIFA போட்டியில் தேவையின் அடிப்படையில் மாறுபடும் விலை நிர்ணய முறை, ஏற்றுக்கொள்ளப்பட்டமையினால் அது ரசிகர்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ள நிலையில் யூரோ 2028 கால்பந்து சுற்று போட்டியில் இந்த விலை முறை தவிர்க்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1452679

இலங்கை - இந்திய கடற்படைகள், கடலோர காவற்படைகள்: 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு சந்திப்பு (IMBL) நிறைவடைந்தது

3 months 3 weeks ago

Published By: Digital Desk 1

13 Nov, 2025 | 08:43 AM

image

இலங்கை, இந்திய கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படைகளுக்கு இடையிலான 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு சந்திப்பு கடந்த 11ஆம் திகதி, காங்கேசன்துறைக்கு வடக்கே உள்ள இந்தோ - இலங்கை கடல்சார் எல்லைக் கோட்டில் INS சுகன்யா கப்பலில் நடைபெற்றது.

இரு நாடுகளின் கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படையினர் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பகிரப்பட்ட கடல்சார் சவால்களை எதிர்கொள்ள செயற்படுத்தக்கூடிய கூட்டு உத்திகளை ஆராய்வதும், உறவுகளை வலுப்படுத்துவதும் வருடாந்திர IMBL கூட்டத்தின் நோக்கமாக காணப்படுகிறது.

வடக்கு கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் இலங்கை குழுவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாய் தலைமையில் இந்திய குழுவும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, கடல்சார் எல்லைகளின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், முந்தைய சந்திப்புகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்துள்ளனர். 

மேலும் IMBL முழுவதும் வெளிப்படும் கடல்சார் சவால்களை ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடுவதற்கான தங்கள் உறுதியை கட்சிகள் வலுப்படுத்தின.

இந்நிகழ்வில் வட மத்திய கடற்படைப் பகுதியின் பிரதித் தளபதி கொமடோர் அருண வீரசிங்க, இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவற்படையின் சிரேஸ்ட அதிகாரிகள் குழு மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ஆனந்த் முகுந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-11-13_at_05.28.07.jp

WhatsApp_Image_2025-11-13_at_05.28.07__1

WhatsApp_Image_2025-11-13_at_05.28.06.jp

WhatsApp_Image_2025-11-13_at_05.28.07__2

WhatsApp_Image_2025-11-13_at_05.28.08.jp

https://www.virakesari.lk/article/230204

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 3 weeks ago
சுருக்கமாக சொல்லி இருந்தேன் பானையில் இருந்தால் தான் - பானையில் இருப்பதை காட்டி அது சரிபார்க்கப்பட்ட, அரசும், வியாபாரமும் இணங்கிய (எவ்வளவு) பின்பே அரசுக்கு சொந்தம். இதை எதுவும் மாற்றாது. அந்த வட் போன்றவை (கம்பனிகள், அரசு சார்பாக, தாம் அல்லாத வேறு கம்பனிகளில் அல்லது வேலையாளர்கள் இடம் இருந்த்து சேகரிப்பது), இப்போது UK 'பாதுகாக்க' முயற்சி எடுக்கிறது. (அனால் இப்போது , 3 மாத தவணையில் இப்போது vat return செய்யவேண்டும். மற்றவையும் அப்படி தவணைக்கு வந்து இருக்கலாம்) வட் போன்றவை கம்பனிக்கான வரி இல்லை, கம்பனிகள் செய்வது இடைத்தரகர் (வங்கிகள் போல) வேலை. வட் போன்றவற்றில் கம்பனிகள் வங்கிகள் போல செய்லடுவஹால் தான் (இதன் விளக்கம் பிறிம்பு, ஆனால் சம்பளம் வங்கிக்கு போவதை ஒப்பிடலாம்) , முன்பு சொன்ன கணக்கின் பின்பே அரசுக்கு சொந்தம், முறியலாம் என்று தெரிந்தே. அதில் கூட பானையில் இருந்தால் தான் என்பதே விளைவாக இருக்கிறது. ஏனெனில் நிலையான (சொத்துக்கு) கடன் கொடுத்தவர்களை தாண்டியே. வியாபாரம் நன்றாக நடக்கும் போது, நட்டத்தில் எப்படி வரி அணுகப்படுகிறதோ , அப்படியே முறிவிலும். அதனால் , முறிவில், அரசு சரிபார்த்து, வியாபாரமும் இணங்கிய வரியே, கடன், (ஆகவே எந்த முறிவு என்றாலும் ) பிற்போடப்பட்ட (வரியே), அதாவது எவ்வளவு என்று தெரியும் வரியே, கடன். (இதை இழக்கலாம் என்று தெரிந்தே செய்கிறது - பிற்போடுதல், முதலீடு ) ஏனைய வரி (வட் போன்றவை இருந்தால், முறியும் போது) அரசுக்கு தெரியாது எவ்வளவு என்று. அனால், முறிவில், நடப்பாண்டில் (முறியும்) கம்பனிக்கான வரி இருக்க முடியாது, ஏனெனில் போட்ட முதலையும் கொண்டு போகும், நட்டத்தின் மிக உச்சக் கட்டம். வரி கணக்கியலை பொறுத்து, கடந்த வருடத்தின் இலாபத்தை கூட இல்லாமல் ஆக்கலாம் முறிவு. இவை போன்ற காரணங்களினால் தான், (பானையில் இருந்தால்), சரி பார்த்து, இணங்கிய பின்பே அரசுக்கு சொந்தம் அல்லது சொந்தம் இல்லை. மறுவளமாக முறிவில் வரி நாமம் (பிற்போடுதல், முதலீடு உட்பட) என்றால், நடத்திலும் (ஓடும் கம்பனிகள்) வரிக்கு அரசுக்கு (பகுதியாக) நாமம் போடுகின்றன என்று வரும். ஏனெனில், முறிவு நடத்த்தின் உச்சக் கட்டம். அப்படி வரியின் அடிப்படை இருக்கும் என்றால், விளைவுகள் நான் சொல்ல தேவை இல்லை. எனவே, ஏய்க்கப்படாத வரி நாமம் அல்ல, வரியின் அடிப்படை.