3 months 3 weeks ago
இரஸ்சியா, வெனிஸுலா, ஈரான் என ஆட்சி மாற்றத்திற்கான வரலாற்று சதி புரட்சிகளின் பின்னால், பெரு நிறுவனங்களின் பொருளாதார நலன் இருந்துள்ளது, இருக்கின்றட்கு, பொருளாதார தடைகள் அரசுகளுக்கு போடப்படுவதல்ல அந்த நாட்டிலுள்ள மக்களின் மீது போடப்படும் அழுத்தத்தின் மூலம் ஒரு ஆட்சி மாற்றம் ( பெரு நிறுவனங்களின் பொருளாதார நலனிற்கு எதிராக தேசிய மயப்படுத்தப்பட்ட வளக்கொள்கை கொண்ட ஆட்சியாளருக்கெதிரான) ஏற்படுத்த முனைவது. அத்துடன் இரஸ்சிய விவகாரத்தில் அமெரிக்கா தனது விலை அதிகரித்த எரி சக்தியினை விற்பதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறது, எதிர்காலத்தில் இரஸிய, வெனிசுலா எரிபொருளை இந்தியா தற்போது செய்வது போல அமெரிக்க எரிபொருளாக அதிகரித்த விலையில் அமெரிக்காவே வழங்கும் நிலை கூட வரலாம்.
3 months 3 weeks ago
இளஞ்செழியன் யார் என்று விரைவில் தெரியும் என்று அவர் பேசும் மேடை பேச்சு காணொளி ஒன்று எனக்கு அனுப்பபட்டு பார்த்தேன். விளங்கியது நீங்கள் Island எல்லாம் அவரை பற்றி சொன்னது முழுக்க சரியே தான். ஆனால் தமிழர்களின் தீவிர ஆதரவு அவருக்கு உண்டு உதாரணத்திற்கு சில 👇 இளஞ்செழியன்... இதன் பொருள்: இளம் --இளமையான: அதாவது மனதாலும் தளர்வடையாத இளமை செழியன் : உன்னதமான மதிப்பு மிக்க நல்லொழுக்கம் உள்ள "மனதால் இளமை உடைய மாண்பு மிக்கவர்". இத்தகைய மாண்புகள் கொண்ட உங்கள் தலைமை வந்தால்தான் வீழ்ந்து தாழ்ந்து கிடக்கும் தமிழினம் தலைநிமிரும் ஐயா --- நீதியே பயப்படும் உங்களை பார்த்து ஐயா. நேர்மையின் வடிவமே! உங்களால் தான் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இறைவன் அருளால் நீங்கள் வாழ்க வளமுடன். --- தம்பி நீதிபதி இளஞ்செழியன் நீடூழி வாழ்க தமிழ் வாழ்க தமிழ் ஈழம் வாழ்க நன்றி வணக்கம்
3 months 3 weeks ago
நானும் இப்போது கணித்து பார்த்தேன். வவுனியா புகையிரத நிலையம் தொடக்கம் புளியங்குளம் புகையிரத நிலையம் வரை கிட்டத்தட்ட 25 கிலோமீற்றர் தூரம் வருகின்றது. இது கிட்டத்தட்ட காங்கேசன் துறை தொடக்கம் சாவகச்சேரி வரையான தூரம். புளியங்குளம் பக்கம் பெருமளவு வயல்/தோட்டங்கள் என்றாலும் இரண்டு அங்கீகாரம் பெற்ற புகையிரத கடவைகள் போதாது.
3 months 3 weeks ago
ஒன்றுமே இல்லை. உங்களுக்கு எதிராகக் கதைப்பது போன்று தோன்றுகிறதோ. நீங்கள் ஆரம்பித்த திரி என்பதால் அப்படித் தோன்றுகிறது போல் உள்ளது. நடந்த விடயங்களை வைத்து இதைப் புரிந்து கொள்ளப் பார்க்கிறேன். அவ்வளவே. நீங்கள் என்ன என்றால், ஏதோ உங்களுடனே தொடர்பு படுத்தி நான் கதைக்கிறேன் என்று சொல்கிறீர்கள். நான் சொல்லாத ஒன்றை, கற்பனையில் நினைக்கிறீர்கள்.
3 months 3 weeks ago
செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக திட்டமிட்டு செய்த சதி; குற்றம் சுமத்தும் சுரேன் குருசாமி November 10, 2025 0 செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கட்சிக்கு எதிராக திட்டமிட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப்பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (09.11.2025) இடம்பெற்ற கடாபி தலைமைக் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு கூட்டம் வுனியாவில் நடைபெற்றது. இதில் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள், 2026 பேராளர் மாநாடு, மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாக திட்டமிட்ட வகையிலே சில முகநூல்களிலும், இணைய தளங்களிலும் நமது கட்சிக்கு எதிரான அல்லது கட்சியை களங்கப்படுத்தும் வகையிலே சில ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விமர்சனங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அது சம்பந்தமாக தலைமை குழுவிலே நாங்கள் கூடி ஆராய்ந்திருந்தோம். அதற்கான சரியான வழிமுறைகள் அதை கையாளுவதும், தொடர்ந்து கட்சியை முன்னெடுத்து செல்வது சம்பந்தமான விடயங்களை பரிசீலிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவாக மிக விரைவிலே அதாவது ஜனவரி 2026க்குள் எங்களுடைய கட்சியினுடைய பேராளர் மாநாட்டை அனைத்து மாவட்டத்தின் உறுப்பினர்களையும் ஒருங்கமைத்து இது சம்பந்தமான முடிவுகளை எட்டி எங்களுடைய கட்சியை மேலும் பலப்படுத்திக்கொண்டு பயணிப்பதற்கான தீர்மானத்தை எடுத்திருக்கிறோம்” என கூறியுள்ளார்
3 months 3 weeks ago
நல்ல மங்குனி அமைச்சர் 😂. வவுனியா-புளியங்குளம் இடையான துரம் 26 கிமி. இதற்கு 2 கடவை மட்டும்தான் எண்டால் மக்கள் சராசரியாக தொடரூந்து பாதைக்கு அந்தப்பக்கம் போக, வர 13+13=26 கிமி யாவது பயணிக்க வேண்டும். கடவைகளின் எண்ணிக்கையை வெள்ளைகாரன் போட்ட அளவில் (அப்போ இதெல்லாம் வெறும் காடு)வைத்திருக்காமல் சனத்தொகை வளர்சி நகரமயமாதலுக்கு ஏற்ப மாற்ற வேண்டும். இந்தாள் பேக்கதை கதைக்குது. அக்மார்க் ஜேவிபி மூளை😂
3 months 3 weeks ago
இவ்வாறு எம்மை இழிவுபடுத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வண், நாய்கள் மற்றும் பரதேசிகள் கூட்டமைப்பு
3 months 3 weeks ago
கடற்புலி மாவீரகளுக்கு கடலில், கரையில் அஞ்சலி முன்பும் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது மாவீரர் தினம் அன்றே நடைபெறும். ஆனால் இந்த “கரையோர” மாவீரர் என்ற பதமும், தனியாக நவம்பர் 10 இல் நினைவுகூருவதும் விரும்பதாகதும், தவிர்க்கவேண்டியதும். மாவீரர் என்ற ஒற்றைபதமே போதுமானது. கரையோர மாவீரர், வயக்காட்டு மாவீரர், பெருந்தோட்ட மாவீரர், என்ற எதுவும் அவர்களுக்குள் இல்லை. இந்த அடையாள சனியன்களை எல்லாம் அடித்து துரத்திவிட்டு இருந்தால் தமிழன், இறந்தால் மாவீரன் என வாழ்ந்த அவர்களை இப்படி வகைப்படுத்துவது சிறுமை செய்வதாகும்.
3 months 3 weeks ago
பரதேசி நாய்
3 months 3 weeks ago
இவரையெல்லாம் "கள்ள மௌனத்தோடு மொள்ளக் கடந்து" போய் விடுவீனம் எங்கள் பட்டாசு உறுப்பினர்கள்😂! ஆனால் சுமந்திரன் அல்லது சாணக்கியன் ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தாலே மூத்திரம், சீ ஆத்திரம் வந்து வெடித்துத் தள்ளி விடுவார்கள்😎!
3 months 3 weeks ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 அம்மு ·rdSnooestpttm6lt148a161026ah1ti51g0i4mg51934hl8m1141h3a gl1a · JRD டாட்டாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்கச் சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார். பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரைச் சந்தித்தார். பேனா மறதியைப் பற்றி விசாரித்தார். அந்த தங்கப் பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார். இது தான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்துக் கொண்டிருக்கிறது நண்பர்களே. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம். 1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம். 2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், அவனுக்கு மரியாதைக் கொடுப்போம். 3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம். 4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்க மாட்டோம். 5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம். 6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம். மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் நிச்சயமாக வெற்றி பெறுவதில்லை... இது தான் உண்மை √ Voir la traduction ......!
3 months 3 weeks ago
ஒரே நபர் செய்திகளை வழங்குபவராக இருக்கலாம் அண்ணை. கற்கை மையம் என்பதை மையன் என்றும் எழுதி இருக்கிறார்கள்! "சட்டத்திற்கும் கொள்ளைகளுக்குமான" எழுத்துப்பிழை தான், கருத்து பொருத்தமாக இருக்கே!! சட்டத்துணையோடு நிலக்கொள்ளை, வளக்கொள்ளை தானே நடந்தது/நடக்குது!
3 months 3 weeks ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sundhari S ·tpdesnrSoocm8hg80l4cfcg9 i1mcu47ti91f2luu5u31i6t6428hm1hh900 · பைரவர்!!!! எங்கள் தெருவில் நிறைய வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள். இது போக நாலு தெரு நாயும் உண்டு.!!!ஏதாவது ஒரு வீட்டில் உள்ள நாய் தனியாக வெளியே வந்தால்,தெரு நாய்கள் எல்லாம் சேர்ந்து சத்தம் போட்டு,வீட்டு நாயை விரட்டும்!!!! வேற தெருவில் இருந்து ஏதாவது நாய்,தனியாகவோ,குரூப்பாகவோ வந்தால், எங்கள் தெருவில் உள்ள தெரு நாய்கள்,வீட்டு நாய்கள் எல்லாம் சேர்ந்து, வந்த நாயை சத்தம் போட்டு விரட்டி விடும்.!!!எங்க ஏரியா உள்ளே வராதே என்பது போல்.!!! பைரவருக்கே இந்த கதி.இதில் நடந்து போவோரையும்,காரில் போவோரையும் பைரவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.!!!!!!பைக்,சைக்கிள் டூ வீலரில் போகிறவர்களை நன்றாகவே தெரு அத்தம் வரை விரட்டுவார்கள். பயங்கர சத்தம் போடுவார்கள்.பாவம் அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள்.!!! எனக்கு ஒரு 7__10 வயது இருக்கும் போது,இப்படி தொல்லை கொடுக்கிற நாய்களின் வாயை கட்டி விடுவார்கள் விசயம் தெரிந்தவர்கள்.!!!அப்புறம் அந்த நாய் சத்தம்போடாது(குறைக்காது) உணவு சாப்பிடாது..!!!! எங்க பெரியப்பாவிடம் சிலர் நாயை கூட்டிட்டு வருவாங்க.!!இந்த நாய் குறைக்க மாட்டேங்குது,சாப்பிடவும் மாட்டேங்குது,தெருவில் போன எவனோ இதன் வாயை கட்டி விட்டான் என சொல்வார்கள்.இரண்டு நாளாக இப்படித்தான் இருக்கிறது என சொல்வார்கள்.!!! உடனே எங்க பெரியப்பா நாயின் தலையை தடவி கொடுப்பார்.கொஞ்சம் தண்ணி வைத்து அதன் கழுத்தை தடவி கொடுப்பார்..அப்புறம் சொல்வார்.என்ன பைரவரே(நாய் என்று எப்போதும் சொல்ல மாட்டார்.)தெருவில் போகும் ஆட்களை ரொம்ப பயமுறுத்தக் கூடாது. வீட்டுக்குள்ள வந்தா மட்டும் சத்தம் போடுங்க என சொல்லிக்கொண்டே அவர் கையை நீட்டுவார்.அதில் பெரியம்மா,அத்தை,பாட்டி யாராவது ஒருத்தர் ஒரு துண்டு கருப்பட்டியை அவர் கையில் வைப்பார்கள்.!!!! அவர் அதை வாங்கி,நாய்க்கிட்ட போடுவார்.அந்த கருப்பட்டியை நாய் நக்கி,நக்கி திங்கும்.அப்புறம் ஊளையிடும்.!!! பெரியப்பா சொல்வார்,உன் பைரவருக்கு வாய் கட்டை அவிழ்த்து விட்டாச்சி.வீட்டுக்கு போயி கொஞ்சம் தண்ணீர் குடு. அப்புறம் அரை மணி நேரம் கழிச்சி சாப்பாடு குடு. என்பார். அப்புறம் அந்த நாய் வழக்கம் போல சத்தம் போடும்,சாப்பிடும்.!!! இன்று வரை எனக்கு இது ஒரு புரியாத புதிர் தான்.!!! இது மனிதர்களை,மெஸ்பரிஸம்,பண்ற மாதிரியா??? அல்லது மனோதத்துவம் முறையா எனக்கு தெரியல.????எப்படி சாத்தியம் .!!!இந்தக்கேள்வி எனக்குள் பல வருஷங்களாக இருக்கிறது.!!! உங்களுக்கு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.!!!தெரிந்து கொள்கிறேன்.!!!! இது எப்படி,என்று பெரியப்பாவிடம் கேட்போம். எங்களுக்கும் நாய்க்கு வாயை கட்டவும்,அவிழ்த்து விடவும் சொல்லித்தாங்க என்று பல முறை கேட்டிருக்கிறோம்.அதற்க்கு அவர் சொல்லும் ஒரே பதில்.!!!! அம்மாவாசை,பௌர்ணமி இந்த இரண்டு நாட்களில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ,ஆறு,கடல்,குளம் இவற்றில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு,இரு கை கூப்பி ஓம்,ஓம் என ஒரு லட்சம் தடவை சொல்லனும்!!!!! மொத்தம் 41 நாட்கள் இவ்வாறு செய்தால், நீ சொன்னதெல்லாம் பலிக்கும்.அப்படின்னு சொல்வார்.!!! ஒரு கண்டிஷன் இதற்க்கு பணம் வாங்க கூடாது.ஒரு சேவையாக செய்யனும் என சொல்வார்.!!! இந்த அபூர்வ கலையை எங்க தாத்தாவிடம் இருந்து அவர் மட்டும் தான் கற்றார்.!!! ஆனால் பெரியப்பா யாருக்குமே சொல்லிக் கொடுக்க வில்லை.அவரோடு மறைந்து விட்டது அவர் கற்ற வித்தை.!!!!! தமிழர்களின் நிறைய வித்தைகள், கலைகள் யாவும் கிராமத்தை விட்டு நகரத்திற்க்கு வந்தவுடன் அழிந்து விட்டது.!!! நன்றி.!!!இது என் கற்பனை கதை அல்ல!!!🙏🏻".......!
3 months 3 weeks ago
பனி மலர் · Venkatesan Vellore · தன் நண்பரை காண மாடியில் உள்ள அவர் வீட்டுக்கு படத்தில் உள்ளவர் படியேறி செல்கிறார். அது மழைக்காலம் என்பதால் நண்பரின் மனைவி தன் புடவையை உலர்த்த வாசலில் கொடி கட்டி காயபோட்டிருக்கிறார். இவர் உள்ளே நுழையும்போதே " இதுதான் வாயில் புடவை என்பதோ?" என கேட்க, அதைகேட்ட நண்பரும் அவரது மனைவியும் வாய்விட்டு சிரித்தார்களாம். ------------------------ இவரும், குமரி அனந்தனும் அன்று ஒரே மேடையில் பேசுவதாக நிகழ்ச்சி இருந்தது. முதலில் குமரி அனந்தன் அட்டகாசமாய் பேசி கைத்தட்டல் பெற்று அமர்ந்துவிட்டார். அடுத்து இவரை அழைத்திருக்கின்றனர். இவர் மேடைக்கு முன் நின்று, குமரி அனந்தனை பார்த்து " எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள்? என கேட்க, அவரோ அமர்ந்திருந்தவாறே " வண்ணாரப்பேட்டை" என்றாராம். " அதான், எனக்கு முன்னே வெளுத்து வாங்கிவிட்டீர்" என சொல்ல ....கூட்டம் சிரிப்பாலும் கரவொலியாலும் ஆர்ப்பரித்ததாம். -------------------- இலக்கிய கூட்டம் முடிந்து காரில் சென்று கொண்டிருக்கிறார். கார் திடிரென நின்றுவிட்டது. கூட வந்தவர்கள் இவரை உட்கார சொல்லிவிட்டு, கீழே இறங்கி தள்ளியிருக்கிறார்கள். கார் கிளம்பவில்லை. உடனே இவரும் கீழே இறங்கி காரை தள்ளியிருக்கிறார். " நீங்க ஏன் வந்தீங்க? என அதில் ஒருவர் கேட்க, " என்னை தள்ளாதவன்னு யாரும் சொல்லிட கூடாதுல்ல. அதான் வந்தேன்". என சொல்ல... எல்லோரும் சிரித்து மகிழ்ந்தார்களாம். அப்படியொரு சிலேடை பேச்சில் மன்னராக திகழ்ந்த கி.வா.ஜ.வின் நினைவுநாள்தான் இன்று. கவிஞராக, எழுத்தாளராக, கலைமகள் இதழின் ஆசிரியராக, இலக்கிய சொற்பொழிவாளராக திகழ்ந்த இவர், தமிழ்த் தாத்தா எனப்படும் உ.வே.சா.வின் மாணவர் ஆவார். Voir la traduction
3 months 3 weeks ago
https://www.facebook.com/share/v/1QjqLD6rrc/
3 months 3 weeks ago
இதற்கு ஒரு தீர்வு உள்ளது. புகையிரத பாதையின் இருமருங்கிலும் இரும்பு வேலி அடைக்க வேண்டும். குறிப்பாக மக்கள் செரிந்து வாழும் பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடவைகள் உள்ள இடத்தில் பாதையின் இருமருங்கும் இரும்பு வேலி அமைக்கப்படவேண்டும். வெளிநாடுகளில் இப்படித்தான் செய்கின்றார்கள். இரும்பு வேலி சேதப்படாமல் கண்காணிப்பது காவல்துறையின் கடமை. கண்காணிப்பு கமெராவும் போடலாம்.
3 months 3 weeks ago
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு: 10 பேர் பலி - பயங்கரவாதிகளின் சதிச்செயலா ? சிக்கிய 2 பேர் மீது தீவிர விசாரணை! 10 Nov, 2025 | 10:09 PM இந்தியாவின் தலைநகர் டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் (Red Fort Metro Station) அருகே இன்று திங்கட்கிழமை (நவம்பர் 10, 2025) மாலை நிகழ்ந்த பயங்கர கார் வெடிப்புச் சம்பவத்தால் தலைநகர் முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிகழ்ந்த இந்த கோரச் சம்பவத்தில் 10 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பயங்கரவாதிகளின் சதிச்செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் வாயில் எண் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, இன்று மாலை 6:30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த வெடி விபத்தில், அருகிலிருந்த வேன், ஆட்டோ மற்றும் கார் உட்பட 8 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன. லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (LNJP) மருத்துவமனை நிர்வாகம், 8 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், 24 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், சிகிச்சை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 7 தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன. டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் (NSG)உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்ய விரைந்துள்ளனர். வெடிப்புச் சம்பவம் நடந்த நேரமும், இடமும் சதிச்செயலுக்கான சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால், வெடிவிபத்துக்கான சரியான காரணம் குறித்த விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இருந்து பயங்கரவாதிகளின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு வரும் பின்னணியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. குறிப்பாக, அண்மையில் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளின் கூட்டுத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல்கள் வெளியாகியிருந்தன. கடந்த வாரத்தில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானாவில் மருத்துவர்கள் உட்பட சிலர், 360 கிலோவுக்கும் அதிகமான வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதேபோல், குஜராத்தின் அகமதாபாத்தில் ஆயுத விநியோகம் செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெடிவிபத்து தொடர்பாகச் சம்பவ இடத்தில் இருந்து சிக்கிய 2 பேரிடம் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார் யாருடையது, வெடிப்புக்கான காரணம் என்ன, இதன் பின்னணியில் பயங்கரவாத அமைப்புகளின் சதி ஏதும் உள்ளதா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விவரங்களைக் கேட்டறிந்துள்ளார். டெல்லியின் முக்கியப் பகுதிகளான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமின்றி, மும்பை, உத்தர பிரதேசம், காஷ்மீர் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் உஷார் நிலை தீவிரப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/230038
3 months 3 weeks ago
😂"சட்டத்திற்கும் கொள்ளைகளுக்குமான" - அததெரணவிற்குத் தான் தமிழ் எழுத்துக் கருத்துப் பிழைகள் கண்டறிய முடியவில்லையென்றால், குளோபல் தமிழ் செய்திகளுக்கும் தமிழ் பிழைகள் தெரியவில்லையா? இரண்டுமே ஒரே ஆட்களால் நடத்தப் படும் தளங்களா?
3 months 3 weeks ago
வணக்கம் வாத்தியார் . ........! தமிழ் பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : { மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே } (2) ஆண் : தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கை தான் கண்ணே பெண் : கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா ஆண் : தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட பெண் : பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட ஆண் : கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட பெண் : கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட ஆண் : பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர பெண் : ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர ஆண் : மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட பெண் : வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்த வண்ண இதழ் உன்னை நீராட்ட ஆண் : அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன் பெண் : கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விட மாட்டேன் ஆண் : உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன் பெண் : உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன் ......! --- மயக்கமென்ன ---
3 months 3 weeks ago
ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு! Nov 9, 2025 - 04:54 PM சட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையத்தின் ஒழுங்கமைப்பில் 'அரசியற் தீர்வும் - பொறுப்புக் கூறலும் - ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு' மற்றும் நாட்டின் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான அவசியமான கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்துள்ளது. இன்று (09) மாலை 4.00 மணிக்கு யாழ். தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. குறித்த நிகழ்வில் மூத்த சட்டத்தரணி திரு. K.S இரத்தினவேல் சிறப்புரையாற்றவுள்ளதோடு இதனை தொடர்ந்து "தற்போதைய சூழலில் அரசியலமைப்புக்கேட்டின் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?" என்ற தலைப்பில், தமிழ் அரசியல் பரப்பில் உள்ள முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் பங்கேற்கவுள்ளனர். குறித்த நிகழ்வில், சுவிசர்லாந்து தூதரக முதன்மைச் செயலாளர் ஐஸ்ரின், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர். பொ.ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmhrmloq601hho29nlp0u8ssc