2 months 3 weeks ago
இந்த வினாவினுள் இரு கேள்விகளை அடக்கியிருக்கிறீர்கள். ஆகவே ஒவ்வொன்றாகப் பதிலளிக்கிறேன். முதலாவது இஸ்ரேலின் சண்டித்தனம் பற்றிய கேள்வி. ஆம், நிச்சயமாக. ஹிட்லரின் காலத்தின் ஆறு மில்லியன் சொந்தங்களை இழந்து, 1967 முதல் இன்றுவரை தன்னைச் சுற்றியிருக்கும் இஸ்லாமிய நாடுகளின் தொடர்ச்சியான அழுத்தத்திற்கும் மத்தியில் தனது இருப்பினைத் தக்கவைத்துக்கொண்டு இன்னொரு இனவழிப்பினை எப்படியாவது தடுத்தே தீருவதென்று தீர்க்கமாக அல்லது உங்களின் புரிதலில் சண்டித்தனமாக நிற்கும் இஸ்ரேலினை என்னால் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியும். இரண்டாவது கேள்வி, பலஸ்த்தீன மக்கள் முஸ்லீம்கள் என்பதால் அவர்கள் அழிக்கப்படவேண்டுமா என்பது. நிச்சயமாக இல்லை. அவர்கள் முஸ்லீம்களாக இருந்தால் என்ன, கிறீஸ்த்தவர்களாக இருந்தாலென்ன அல்லது யூதர்களாக இருந்தாலென்ன, அவர்கள் அழிக்கப்படக் கூடாது. பலஸ்த்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திவருவது இனக்கொலைதான் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவர்களுடன் இரு தேசங்களுக்கான இணக்கப்பாட்டினை இஸ்ரேல் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கென்று இன்றிருக்கும் பிரதேசங்களில் இருந்து இஸ்ரேல் தனது குடியேற்றங்களை அகற்றிக்கொள்ள வேண்டும், தொடர்ச்சியாக நடத்திவரும் ஆக்கிரமிப்பினை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதனைச் செய்வதற்கு அமெரிக்கா விரும்புகிறதோ இல்லையோ, ஏனைய நாடுகள் இது தொடர்பான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பது அவசியமானது. யுத்தக் குற்றங்களிலும், இனக்கொலையிலும் ஈடுபட்ட அரசியல்வாதிகள், தளபதிகள் என்போரது பெயர்கள் வெளிக்கொணரப்பட்டு, பயணத்தடைகள் விதிக்கப்படுதல் அவசியமானது. இதுவே அவர்களின் ஆக்கிரமிப்பு மனோபாவத்தை ஓரளவிற்காவது தடுத்து நிறுத்தும். பலஸ்த்தீன முஸ்லீமும் காத்தான்குடி முஸ்லீமும் ஒன்றென்று நான் கருதுவதாக எதை வைத்துக் கேட்கிறீர்கள் என்று புரியவில்லையே? இக்கேள்வியின் அர்த்தம் என்ன? விளக்கமாக கேட்டீர்கள் என்றால் எனது நிலைப்பாட்டை விளக்குவது இலகுவாக இருக்கும்.
2 months 3 weeks ago
👉 https://www.facebook.com/watch?v=642941725424207&locale=de_DE 👈 👉 https://www.facebook.com/watch/?v=30034306726214809&locale=de_DE 👈 👆 இன்று காலை... இஸ்ரேலை பதம் பார்த்த, ஈரானின் குண்டுகள்.
2 months 3 weeks ago
யாழ். மாவட்ட அரச அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார் மருதலிங்கம் பிரதீபன் 24 JUN, 2025 | 12:59 PM யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் (24) சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்றுக்கொண்டார். இப்பதவியேற்பு நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட அரச அதிபர் ஸ்ரீமோகன் தலைமையில் மதத் தலைவர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள், பிரதேச சபையின் செயலர்கள் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்துறைசார் பொறுப்பு நிலை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. முதலில் மாவட்ட செயலகத்துக்கு தனது பாரியாருடன் வருகைதந்த மாவட்ட செயலாளரை, மேலதிக மாவட்ட அரச அதிபர் ஸ்ரீமோகன் கைலாகு கொடுத்து மாலை அணிவித்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து சக ஊழியர்களால் வரவேற்கப்பட்ட அரச அதிபர் பிரதீபன் மாவட்ட செயலரின் அதிகாரபூர்வ அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல மாதங்களாக மாவட்ட அரச அதிபர் வெற்றிடம் இருந்துவந்த நிலையில் பதில் அரச அதிபராக கடமையாற்றிவந்த ம.பிரதீபன் சில தினங்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தின் அரச அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்ட பிரதீபனுக்கான நியமனக் கடிதம் கடந்த 20.06.2025 அன்று அமைச்சரவை செயலாளர் W.M.D.J. பெர்னாண்டோவினூடாக பெற்றார். இந்நிலையில் பிரதீபன் இன்றைய தினம் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், பிரதீபன் 2024 மார்ச் 9ஆம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218309
2 months 3 weeks ago
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது - ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் தெரிவிப்பு 24 JUN, 2025 | 02:14 PM ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் (OHCHR) பயனுள்ள விதத்திலும் ஒத்துழைப்புடனும் செயற்படுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (23) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் (OHCHR) பயனுள்ள விதத்திலும் ஒத்துழைப்புடனும் செயற்படுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இலங்கை அரசியல் ஏற்பட்ட மாற்றம் குறித்து குறிப்பிட்ட அவர், அனைத்து சமூகங்களிடமிருந்தும் கிடைக்கப்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க மக்கள் ஆணையானது இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார். கிராமப்புற வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுத்தல் மற்றும் தேவையான சமூக மாற்றத்தைப் போன்றே நிறுவன ரீதியிலான மாற்றங்களுடன் சட்ட மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை பின்பற்றுதல்.ஆகிய மூன்று முக்கிய காரணிகளில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். சமூக, கல்வி, சுகாதார மற்றும் பொருளாதார உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகளின் முழுமையான கட்டமைப்பை பாதுகாத்து மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது என்றும் பிரதமர் தெரிவித்தார். காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம்(OR) மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) போன்ற உள்நாட்டு இயங்குதளங்களை வலுப்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறைக்கு ஆதரவளிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதன் போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான இலங்கையின் தொடர்ச்சியான தலையீட்டை பாராட்டிய உயர்ஸ்தானிகர், மனித உரிமைகள், ஜனநாயக ஆட்சி மற்றும் தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து விசேடமாகக் குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche, ஐக்கிய நாடுகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள். இலங்கை தூதுக்குழுவின் சார்பாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பிரதமர் அலுவலகத்தினதும் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவினதும் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/218295
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
உடையார் அண்ண ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி இருக்கு போர் நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேலும் ஈரான் தலைநகரத்தை தாக்குவோம் என சொல்லி இருக்கினம்.................முழு மனதோட இந்த போர் நிறுத்தம் நடந்த மாதிரி தெரிய வில்லை அண்ணா...............................
2 months 3 weeks ago
நான் தவறு செய்துவிட்டேன்! -மனம் வருந்திய நடிகர் ஸ்ரீகாந்த். போதைப்பொருள் வழக்கில் நேற்று நண்பகல் கைதான ஸ்ரீகாந்த் இரவு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை ” தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், தனது குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருப்பதாகவும், தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும், தான் வெளிநாடு செல்லப் போவதில்லை எனவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் எனவே தனக்கு பிணை வழங்குமாரும் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் இங்கு பிணை கோர முடியாது எனவும் என்டிபிஎஸ் சிறப்பு நீதிமன்றில் தான் பிணையைப் பெற முடியும் எனத் தெரிவித்த நீதிபதி, நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து,ஸ்ரீகாந்துடன் சேர்ந்து போதை பொருள் பயன்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ………. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ‘கொகைன்’ போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் (வயது 38) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு ‘கொகைன்’ சப்ளை செய்ததாக ஆப்பிரிக்க நாடான கயானாவை சேர்ந்த ஜான் (38) என்பவர் ஓசூரில் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஜான் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர் யாருக்கெல்லாம் போதைப்பொருளை விநியோகம் செய்தார்? என்ற பட்டியலை பொலிஸாரிடம் கொடுத்தார். அந்த பட்டியலில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார். இதையடுத்து பொலிஸார் நேற்று ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வரவழைத்து அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர். பொலிஸாரின் விசாரணையின்போது, தான் போதைப்பொருளை பயன்படுத்தியதே இல்லை என்று ஸ்ரீகாந்த் வாதம் செய்தார். ஆனால் அவருக்கு அடிக்கடி போதைப்பொருள் விநியோகம் செய்ததாக ஜான் குறிப்பிட்டிருந்தது பொலிஸாருக்கு சந்தேகத்தை வரவழைத்தது. இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள ஸ்ரீகாந்தின் வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தினர். இதில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில், ஸ்ரீகாந்த் ‘கொகைன்’ போதைப்பொருளை பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருள் பயன்படுத்தி 45 நாட்கள் வரை மருத்துவ பரிசோதனையில் கண்டறியலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் ஸ்ரீகாந்த் வேறு யாருக்காவது போதைப்பொருளை வழங்கியுள்ளாரா? என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஸ்ரீகாந்த் ஆன்-லைன் மூலமாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் போதைப்பொருளை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். https://athavannews.com/2025/1436862
2 months 3 weeks ago
ஈரான் இன்று காலை இஸ்ரேலுக்கு நல்ல தாக்குதல் கொடுத்து , போர் நிறுத்தத்துக்கு ஓம் என சொல்லி இருக்கினம் இஸ்ரேல் வாழ் நாளில் மறக்க முடியாத அடிய ஈரானிடம் இருந்து வேண்டி கட்டி இருக்கினம் , வான்பாதுகாப்பு கருவி இல்லாம இருந்து இருக்கனும் பாதி இஸ்ரேல ஈரான் அழித்து இருக்கும்..................ஈரான் இந்த தாக்குதல ஆரம்பிக்க வில்லை , கொடிய மிருகம் நெத்தனியாகு ஆரம்பிச்சார் ஈரான் முடிச்சு வைத்து விட்டது🙏👍................................
2 months 3 weeks ago
உலகத்தை அழித்துக் கொண்டிருந்தவர்களும், கலகத்தை விளைவித்துக் கொண்டு இருந்தவர்களும், காலம் மாறிவிட்டது என்பதை... காலதாமதமாகவே உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். தயாளன் கனியன்
2 months 3 weeks ago
ட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல்! ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (24) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “பாதுகாப்பில் அளித்த ஆதரவிற்கும், ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தலை ஒழிப்பதில் பங்கேற்றதற்கும் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கு இஸ்ரேல் நன்றி தெரிவிக்கிறது” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், எந்தவொரு போர்நிறுத்த மீறலுக்கும் இஸ்ரேல் கடுமையாக பதிலடி கொடுக்கும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னதாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் இருப்பதாகவும், ஈரான் ஏவுகணைகளை ஏவிய சில மணி நேரங்களுக்குப் பின்னர், இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை மீற வேண்டாம் என்றும் ட்ரம்ப் கூறினார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் உலகிற்கு அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இஸ்ரேலிய பிரதமரின் அறிக்கை வந்தது. ஈரான் அதை முதலில் நிராகரித்தது, பின்னர் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி அமெரிக்காவின் போர் நிறுத்தக் கூற்றினை ஆரம்பத்தில் நிராகரித்தார். அத்தகைய ஒப்பந்தம் எதுவும் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்று கூறினார். இருப்பினும், அந்த அறிவிப்புக்கு பின்னர், ஈரானிய அரசு தொலைக்காட்சி போர் நிறுத்தம் தொடங்கியதை உறுதிப்படுத்தியது. Athavan Newsட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல்!ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (24) ஒரு அறிக்கையில் தெரிவித்துள...
2 months 3 weeks ago
https://www.politico.eu/article/iran-foreign-minister-abbas-araghchi-russia-vladimir-putin-us-strikes-nuclear-sites/ அமெரிக்க தாக்குதலை அடுத்து ஈரான் வெளியுறவு அமைச்சர் இரஸ்சியாவிற்கு பயணம் செய்திருந்தார்.
2 months 3 weeks ago
உண்மையாவா... 😂 இதையும், அமெரிக்காதான் சொல்லியிருக்கும். 🤣 அப்ப ... நோபல் பரிசு, நிச்சயம் கிடைக்கும். 😂 🤣
2 months 3 weeks ago
டிரம்ப் நிர்வாகம் தந்திரோபாய அணுஆயுத தாக்குதலையும் கவனத்தில் எடுத்து இருந்தது. பலர் கவனிக்காகாது, ருசியா அதுக்கு எச்சரிக்கை விடுத்தும் இருந்தது. இதில் தெரிவது அமெரிக்காவின் கேந்திர பலத்தின் ஒப்பிட்டளவிலான வீழ்ச்சி. இரான் கேட்டது சண்டை நின்றால் பேசலாம். அமெரிக்கா சொன்னது சண்டை தொடந்தாலும் பேச வேண்டும், இல்லாவிட்டால் .... . இதில் முக்கியமாக, எந்த நிபந்தனையும் இல்லாத சண்டை நிறுத்தம். பின்னுக்கு வேறு சக்திகளும் இருந்து இருக்கலாம். குறிப்பாக சீனா (வாயால் வலியுறுத்துவதால் அல்ல. )
2 months 3 weeks ago
இஸ்ரேல் ஒரே நேரத்தில் பல முஸ்லிம் நாடுகளுடன் போர் செய்து வென்றார்கள் என்ர கதை , இன்றுடன் முடிந்து விட்டது ஈரானை பார்த்தாவது அமெரிக்கன் போடும் விஸ்கேட்டை திண்டு அவனுக்கு அடிமையாக இருப்பதும் பார்க்க , ஈரான் போல் தன்மானத்தோடு வாழ ஈரானிடம் இருந்து பாடம் கற்றுக்கனும் மற்ற அரபி நாடுகள்............................. 🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🙏🙏🙏💪💪💪...................
2 months 3 weeks ago
கனடா புறப்பட்டார் பிரதமர் ஹரிணி! கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) அதிகாலை கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றார். தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக பொதுநலவாய கற்றல் (COL) ஆளுநர்கள் சபையில் பங்கேற்பதற்காக இன்று (24) அதிகாலை கனடாவுக்குப் புறப்பட்டார். பொதுநலவாய கற்றல் (COL) ஆளுநர்கள் சபைக் கூட்டம் ஜூன் 24 முதல் 26 வரை கனடாவின் வான்கூவரில் நடைபெறும். இந்த உச்சிமாநாடு முதன்மையாக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான கல்வி மற்றும் பயிற்சி, உயர்கல்வி, ஆசிரியர் கல்வி, வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் தொழில்முறைக் கற்றலை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு ஆகிய முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும். புதுமை மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு செய்தல், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரித்தல், பயனுள்ள கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்புகளை செயல்படுத்துதல் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் ஆகிய தலைப்புகளிலும் விவாதங்கள் கவனம் செலுத்தும். https://athavannews.com/2025/1436851
2 months 3 weeks ago

கனடா புறப்பட்டார் பிரதமர் ஹரிணி!
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) அதிகாலை கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக பொதுநலவாய கற்றல் (COL) ஆளுநர்கள் சபையில் பங்கேற்பதற்காக இன்று (24) அதிகாலை கனடாவுக்குப் புறப்பட்டார்.
பொதுநலவாய கற்றல் (COL) ஆளுநர்கள் சபைக் கூட்டம் ஜூன் 24 முதல் 26 வரை கனடாவின் வான்கூவரில் நடைபெறும்.
இந்த உச்சிமாநாடு முதன்மையாக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான கல்வி மற்றும் பயிற்சி, உயர்கல்வி, ஆசிரியர் கல்வி, வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் தொழில்முறைக் கற்றலை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு ஆகிய முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும்.
புதுமை மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு செய்தல், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரித்தல், பயனுள்ள கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்புகளை செயல்படுத்துதல் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் ஆகிய தலைப்புகளிலும் விவாதங்கள் கவனம் செலுத்தும்.
https://athavannews.com/2025/1436851
2 months 3 weeks ago
இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச் செல்லவில்லை – அரசாங்கம் பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பெண் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து தப்பிச் செல்லவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது பேசிய அமைச்சர் விஜேபால, இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்கள் அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாகக் சுட்டிக்காட்டப்படவில்லை என்று கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின் போது, கொலை தொடர்பான தகவல்கள் மற்ற சந்தேக நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தக் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) முறையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். இந்த ஆண்டு பெப்ரவரியில் கணேமுல்ல சஞ்சீவா சுட்டுக் கொல்லப்பட்ட கொழும்பு நீதிமன்றத்திற்குள் ஆயுதத்தை கொண்டு சென்று துப்பாக்கிதாரியிடம் ஒப்படைத்ததற்காக இஷாரா செவ்வந்தி தேடப்படும் குற்றவாளி ஆவார். https://athavannews.com/2025/1436843
2 months 3 weeks ago
😁😁😁😁😁😁😁😁
2 months 3 weeks ago
அமெரிக்கா & உலக மக்களிடம் ட்ரம்பின் செல்வாக்கு அதிகரிக்கின்றதாம். இவர் புட்டினின் காலில் விழுந்து அமைதியை நிலை நாட்ட வேண்டும், வரவேற்க வேண்டிய இன்னுமொரு போர் நிறுத்தம்
2 months 3 weeks ago