2 months 3 weeks ago
"40 முறை போதைப் பொருள் வாங்கிய ஸ்ரீகாந்த்" - வழக்கில் சிக்கியது எப்படி? பட மூலாதாரம்,ACTORSRIKANTH/INSTAGRAM படக்குறிப்பு, நடிகர் ஸ்ரீகாந்திற்கு ஜூலை 7ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் போதைப் பொருளைப் பயன்படுத்தியதான குற்றச்சாட்டில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக இதற்கு முன் நடந்த கைதுகளின் தொடர்ச்சியாக ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை நகரக் காவல்துறையால் திங்கட்கிழமையன்று கைதுசெய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போதைப் பொருள் விற்பனை செய்தது தொடர்பாக, ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி டி. பிரசாத் அளித்த தகவலின் பேரில் ஸ்ரீகாந்த் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கொக்கெய்ன் என்ற போதைப் பொருளை வாங்கியது தொடர்பாக ஜூன் 23ஆம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தை விசாரணைக்காக அழைத்தது நுங்கம்பாக்கம் காவல்துறை. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் நாள் முழுக்க விசாரணை நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து எழும்பூர் 14வது பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜூலை 7ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. பிரபல நடிகர் ஒருவர், போதைப் பொருள் பயன்பாடு தொடர்பாக கைதுசெய்யப்பட்டது அரசியல், திரையுலகு என பல இடங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இவ்வளவு பெரிய அளவில் இந்த விவகாரம் வெடிப்பதற்குக் காரணமாக அமைந்தது நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபான பாரில் கடந்த மே மாதம் நடந்த ஒரு மோதல்தான். மே மாதம் 22ஆம் தேதி திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளரான ராஜா என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் மதுபானம் அருந்த வந்திருக்கிறார். அப்போது அங்கே, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் ஒருவருக்கும் ராஜாவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். இதையடுத்து பார் நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில், ராஜாவுக்கு ஆதரவாக சிலர் காவல் நிலையத்திற்கு வந்து, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கூறினர். இதையடுத்து இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டிய காவல்துறை, மே 29ஆம் தேதி மைலாப்பூரைச் சேர்ந்த டி. பிரசாத் (33), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர். கணேஷ்குமார் (42), வடபழனியில் உள்ள சின்ன போரூரைச் சேர்ந்த ஜி. தனசேகர் (29), பனையூரைச் சேர்ந்த டி. அஜய் ரோகன் (36), சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான நாகேந்திரசேதுபதி என்ற சுனாமி சேதுபதி (33) ஆகியோர் தேனியில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். இதற்குப் பிறகு ராஜா, சந்தோஷ் என்ற இருவரும் புனேவில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் பிரசாத் ஏற்கனவே சில மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இந்த மோசடிகளில் அவருக்குத் துணையாக இருந்த காவல்துறை துணை ஆய்வாளர் மணிகுமார் என்பவரும் காவலரான செந்தில்குமார் என்பவரும் கைதுசெய்யப்பட்டனர். பட மூலாதாரம்,ACTORSRIKANTH/INSTAGRAM படக்குறிப்பு,நடிகர் ஸ்ரீகாந்த் இதற்கிடையில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ANIU) அளித்த தகவல்களின் அடிப்படையில் சேலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற ப்ராடோ என்பவரை நுங்கம்பாக்கம் காவல்துறை சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஜூன் 17ஆம் தேதி கைதுசெய்தது. அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவர் ஜூன் 18ஆம் தேதி ஓசூரில் கைதுசெய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 11 கிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது. பிரதீப்பிடம் நடத்திய விசாரணையில், தான் பிரசாதிற்கு போதைப் பொருள்களை சப்ளை செய்ததாகவும் அவர் அதனை நடிகர் ஸ்ரீகாந்திற்கு கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். சுமார் 40 முறை இதுபோல வாங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் பின்னணியில்தான் ஸ்ரீகாந்த்தை அழைத்து விசாரித்த நுங்கம்பாக்கம் காவல்துறை, விசாரணைக்குப் பிறகு அரசு மருத்துவமனையில் போதைப் பொருள் சோதனைக்கு உட்படுத்தியது. அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில், கைதுசெய்யப்பட்டு அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையாகப் பேச காவல்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர். பிரதீப்பிடம் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இன்னொரு நடிகருக்கும் காவல்துறை விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. கேரள திரையுலகில் போதைப்பொருள் தொடர்பான சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES திரை நட்சத்திரங்கள் போதைப் பொருளைப் பயன்படுத்துவது என்பது இந்தியாவின் பல மாநிலங்களில் பெரும் சிக்கலான விவகாரமாகவே இருந்துவருகிறது. கடந்த ஏப்ரல் மாத மத்தியில் கொச்சியின் காலூர் பகுதியில் ஒரு ஹோட்டலில் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நடவடிக்கைக் குழு ஒரு அதிரடி சோதனையை நடத்தியது. அப்போது அந்த ஹோட்டலில் இருந்து ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவரை எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்திய கொச்சி நகரக் காவல்துறை, அவரைக் கைதுசெய்தது. பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, மலையாள திரைத்துறையின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகிஸ்தர்களை அழைத்து போதைப் பொருள் பரவல் குறித்து கூட்டம் நடத்தவிருப்பதாக அம்மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி மனோஜ் ஆபிரகாம் ஊடகங்களிடம் தெரிவித்தார். அதற்குச் சில நாட்களுக்கு முன்பாக ஆழப்புழாவில் ஒரு காரை கலால் துறையினர் சோதனையிட்டபோது, அந்தக் காரில் இருந்து ஹைபிரிட் கஞ்சா பிடிபட்டது. இது தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டனர். இந்த கஞ்சா பிடிபட்ட பிறகு, இது தொடர்பாக திரைத்துறையினர், தொலைக்காட்சி நடிகர்கள், மாடல்கள் ஆகியோரிடம் கலால் வரித் துறையினர் விசாரணை நடத்தினர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9xnmm21xpo
2 months 3 weeks ago
தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய வெப் தொடரை இயக்கியுள்ளார். புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் புத்தத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. Published:20 Jun 2025 9 PMUpdated:20 Jun 2025 9 PM ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள The Hunt - The Rajiv Gandhi Assassination Case (வேட்டை - ராஜீவ்காந்தி கொலை வழக்கு) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்தத் தொடரை குக்குனூர் மூவீஸுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பலகோணங்களில் கதைகள் இருக்கும் சூழலில், புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins (தொண்ணூறு நாள்கள்: ராஜிவ் காந்தியின் கொலையாளிகளைத் தேடிய உண்மைக் கதை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடரை உருவாக்கியுள்ளனர். இந்தத் தொடரில், அமித் சியால், சாஹில் வைத், பகவதி பெருமாள், டேனிஷ் இக்பால், கிரிஷ் சர்மா, வித்யுத் கார்கி, ஷபீக் முஸ்தபா, அஞ்சனா பாலாஜி, பி. சாய் தினேஷ், ஸ்ருதி ஜயன், கௌரி மேனன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ள அமித் சியால், "இது வெறும் க்ரைம் விசாரணை ட்ராமா இல்லை, எப்படிக் கண்ணுக்குப் புலப்படாத கைகள் வரலாற்றை வடிவமைக்கின்றன என்பதைப் பற்றியது. இந்தக் கதாபாத்திரம் அதிகாரத்தையும் துக்கத்தையும் நீதியின் இருண்ட மூலைமுடுக்குகளையும் ஆராய்வது எனக்குச் சவாலானதாக இருந்தது. உண்மை மற்றும் எதிர்த்து நிற்கும் தன்மையில் வேரூன்றியிருக்கும் ஒரு பாத்திரத்தில் நடித்ததற்குப் பெருமைகொள்கிறேன்" எனப் பேசியுள்ளார். தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர் இந்த வெப் தொடரை இயக்கியுள்ளார். இவருடன் ரோஹித் பனவாலிகர் மற்றும் ஸ்ரீராம் ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வருகின்ற ஜூலை 4ம் தேதி இந்தத் தொடர் வெளியாகவிருக்கிறது. Also Read ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு? - Vikatan
2 months 3 weeks ago
தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய வெப் தொடரை இயக்கியுள்ளார். புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் புத்தத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
Published:20 Jun 2025 9 PMUpdated:20 Jun 2025 9 PM

ராஜீவ் காந்தி கொலை வழக்கு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள The Hunt - The Rajiv Gandhi Assassination Case (வேட்டை - ராஜீவ்காந்தி கொலை வழக்கு) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.
இந்தத் தொடரை குக்குனூர் மூவீஸுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பலகோணங்களில் கதைகள் இருக்கும் சூழலில், புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins (தொண்ணூறு நாள்கள்: ராஜிவ் காந்தியின் கொலையாளிகளைத் தேடிய உண்மைக் கதை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடரை உருவாக்கியுள்ளனர்.
இந்தத் தொடரில், அமித் சியால், சாஹில் வைத், பகவதி பெருமாள், டேனிஷ் இக்பால், கிரிஷ் சர்மா, வித்யுத் கார்கி, ஷபீக் முஸ்தபா, அஞ்சனா பாலாஜி, பி. சாய் தினேஷ், ஸ்ருதி ஜயன், கௌரி மேனன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ள அமித் சியால், "இது வெறும் க்ரைம் விசாரணை ட்ராமா இல்லை, எப்படிக் கண்ணுக்குப் புலப்படாத கைகள் வரலாற்றை வடிவமைக்கின்றன என்பதைப் பற்றியது.
இந்தக் கதாபாத்திரம் அதிகாரத்தையும் துக்கத்தையும் நீதியின் இருண்ட மூலைமுடுக்குகளையும் ஆராய்வது எனக்குச் சவாலானதாக இருந்தது.
உண்மை மற்றும் எதிர்த்து நிற்கும் தன்மையில் வேரூன்றியிருக்கும் ஒரு பாத்திரத்தில் நடித்ததற்குப் பெருமைகொள்கிறேன்" எனப் பேசியுள்ளார்.
தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர் இந்த வெப் தொடரை இயக்கியுள்ளார். இவருடன் ரோஹித் பனவாலிகர் மற்றும் ஸ்ரீராம் ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வருகின்ற ஜூலை 4ம் தேதி இந்தத் தொடர் வெளியாகவிருக்கிறது.
Also Read
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு? - Vikatan
2 months 3 weeks ago
அண்ணா ஹிஸ்புள்ளாவிடம் அதி நவின தொழிநுட்ப ஆயுதம் அவர்களிடம் இல்லை , 1000கிலே மீட்டர தாண்டி போய் வெடிக்கும் ஆயுதங்கள் ஹிஸ்புள்ள்ளா குழுக்களிடம் இருக்க வில்லை , எம்மவர்கள் போர்க்களத்தில் பாவித்த ஆயுதத்தை விட இன்னும் சில புதிய ஆயுதங்கள் ஹிஸ்புள்ளாவிடம் இருந்தது....................ஈரானால் இஸ்ரேலுக்கு ஏற்படுத்தின அழிவை ஏன் ஹிஸ்புள்ளா குழுக்களால் ஏற்படுத்த முடிய வில்லை................அதற்கான பதிலை இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்....................ஹமாஸ் கூட பாவிச்சது கையில் வைத்த படி தாக்கும் சிறியவகை ஆயுதங்கள்.............................. நான் கூட நேரம் ஒதுக்குவது விளையாட்டுக்களில் , ஜரோப்பா அமெரிக்கா விளையாட்டுக்களில் , நான் 2009ம் ஆண்டோட அரசியலை பெரிசா எட்டியும் பார்த்தது கிடையாது , பிறக்கு சீமான் கட்சி ஆரம்பிக்க அவர்களின் அரசியலை பின் தொடர்ந்தேன் என்னால் ஆனதை அவர்களின் கட்சியின் வளர்ச்சிக்கு செய்தேன்............................எனக்கு அமெரிக்கன்ட குழந்தை பிள்ளை அரசியலை கண்ணிலும் காட்டக் கூடாது................இஸ்ரேல் அமெரிக்கா சேர்ந்து ஈரானுக்கு செய்தது பக்கா அநீதி , அது தான் என் மனதில் இருப்பதை இந்த திரியில் கொட்டி தீர்த்தேன்..........................
2 months 3 weeks ago
இந்த திரியில் ரஞ்சித், ஜஸ்டீன், ரசோ அண்ணைகள் எழுதிய கருத்துக்களுக்கு நிகர எடையில் தங்கம் கொடுக்கலாம். அதிலும் அந்த கடைசி இருவரும் எனது இன்றைய சிரிப்புகுறிகளை அனைத்தையும் இந்த திரியிலே செலவழிக்க வைத்து விடுவார்கள் போலுள்ளது. தலையால் சிந்திப்பது - இதற்கு நல்ல நேர்மறையான விளக்கம் உள்ளது. இன்னும் எத்தனை பேர் தம் உள்மன அழுக்கை பொது வெளியில் கழுவுகிறார்கள் என பார்க்க ஆசைபடுவதால்🤣 கொஞ்சம் தாமதித்து விளக்கத்தை வெளியிடுகிறேன்.
2 months 3 weeks ago
அழிப்பது வேறு. அடக்குவது வேறு. நீங்கள் சொல்லுவது எல்லா அமெரிக்கார்களும் சொல்வது. அழித்தாலும், அணு துறையை அழிக்க முடியாது. அதாவது உறுதி இல்லை. அப்படி ஆயின் அணு ஆயுதத்தை பாவிக்க வேண்டும். அதுவும் 2-3 தடையை பிரயோகிக்க வேண்டும். ஜப்பானில் பாவித்த பொது வேறு எவரிடமும் அணு ஆயுதம் இல்லை. இப்பொது மற்றவர்களும் அணு ஆயுதத்தி வைத்து இருக்கிறார்கள். ஒருவர் அணுஆயுதத்தை பாவிப்பது, மற்றவரின் இருப்புக்கு அச்சுறுத்தல். அரசு சாரா ஹௌதி களுக்கு கூட ஏன் அமெரிக்கா இரங்கி வந்தது? எல்லாமே சீனா. இறங்கினால் அமெரிக்காவுக்கு புதைகுழி. இரானும் அதை அறிந்தே விளையாடுகிறது. இது ஒன்றும் உடனடியாக வெட்டு ஒன்று, துண்டு 2 என்ற கதி, காலம் அல்ல. இரானுக்கு தெரியாத அமெரிக்காவை எதிர்க்க முடியாது என்று, வரம்புக்குள் நின்று எதிர்பத்தே ஆட்டம். அதில் அதன் கேந்திர இலக்குகளை அடைவது. ஏறத்தாழ பாதிக்கு மேல் பெற்றுவிட்டது அதே போலவே அலெக்சாண்டர் எல்லாத்தையும் அழித்து இருக்கலாம், ஆனால் அது அரசு / இராச்சியம் அல்ல. மிக கொடுமையான சிங்கிஸ்கான் கூட முதலில் இராச்சியத்தை கொடு, இல்லாவிட்டால் கூண்டோடு தரைமட்டம் என்றே பிடித்தது. டிரம்ப் அப்படியான போக்கில் சரணடை (அதாவது US சொல்வதில் கையெழுத்து வை) சொல்லி, இப்போது நிபந்தனை இல்லாத சண்டை நிறுத்தத்தில். இவற்றின் காலங்கள் வேறு வேறு, அனால் நோக்கம் ஒரே தன்மை.
2 months 3 weeks ago
நேற்றிலிருந்து 4 நாட்களுக்கு முழு அமெரிக்காவும் மிகவும் வெப்பநிலையாக உள்ளது. கனடாவும் இதே காலநிலையாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். எமது ஏரியாவில் நேற்று 160000 குடும்பங்களுக்கு மின்சாரம் இல்லை. இரவு 12-1 மணி போல நின்ற மின்சாரம் 12 மணிநேரம் கழித்து தான் மீண்டும் வந்தது. இப்போதும் எமது பகுதியில் பல வீதி சமிக்கைகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை. நேற்றைய நாளைவிட இன்று அதிக வெப்பமாக உள்ளது. 100 காட்டுகிறது37-38.ஆனாலும் இதைவிட கூடுதலாக இருக்கும் என்றே சொல்கிறார்கள். இன்னும் 2நாட்கள் இதே காலநிலை.
2 months 3 weeks ago
என் அவதானிப்பில், சில ஆதரவு நிலைப்பாடுகள் முழுமையான முட்டாள் தனத்திலிருந்து தான் உருவாகின்றன. பெரும்பாலானோரால் புரிந்து கொள்ள முடியாத இந்த முட்டாள் தனம் தான் இந்த ஈரான் முல்லாக்களுக்கான ஆதரவும், மக்களைப் பட்டினி போட்டு தான் தின்று கொழுக்கும் கிம்மை "தலைவா!" என்று பணியும் நிலைப்பாடும். அடிப்படை வாத இஸ்லாமியப் பயங்கரவாதிகள் ஆபத்தானவர்களாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் இந்த பூமியில் இழப்பதற்கு எதுவும் இல்லையென்று வாழ்வோர். வானத்தை நோக்கி ஒற்றை விரலைக் காட்டி விட்டு, செத்தால் "சாஹிட்" ஆவோம், விண்ணுலகில் தமக்கு எல்லாம் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கையில் இருப்போர் இவர்கள். இவர்களிடம் போய் அணு குண்டு கிடைத்தால் அல்லது கொஞ்சம் யுரேனியம் கிடைத்தால் கோசான் சொல்வது போல "நம் ஒவ்வொருவர் பிருஷ்டத்திற்கு அடியிலும்" அது வெடிக்கும்😂! இந்த ஆபத்தைப் புரிந்து கொள்ள, ஒரு மனிதனுக்கு எத்தனை நியூரோன்கள் தேவை?
2 months 3 weeks ago
இதில் ஒரு வரலாற்று காலச்சக்கர ஒப்புமையும் இருக்கிறது கி,மு 331 இல், அலெக்ஸாண்டர் சிறிய அரசாக (இராசியமாக) ஒப்பீட்டளவில் மிகச் சிறிய படையுடன், Achaemenid வம்ச டாரியஸ் ஆட்சி செய்த பாரசீக பேரரசை கொண்ட டாரியசின் மிகப் பெரும் படையுடன் மோதி , டாரியஸ் ஐ தோற்கடித்து, பாரசீக பேரரசை வென்று, பேரரசுகளின் புதைகுழி என்று அழைக்கப்படும் இப்போதைய ஆப்கானிஸ்தானையும் கைப்பற்ற முநைந்து, அழிவினை சந்தித்து, பஞ்சாப்பில் , விபச நதி அடியில் (இதுவே சரஸ்வதி ஆறு என்று அழைக்கப்ட்டதாக நம்பப்படுகிறது, இது வற்றியதே சிந்துவவெளி நாகரிகம் அழிந்ததுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதும் நம்பப்படுகிறது) அலெக்சாந்தரின் படைகள் அலெக்ஸாண்டருக்கு எதிராக கிளர்ந்த படியால் கி.மு 325 இல் திரும்பினார் பபிலோனியாவுக்கு (இன்றைய இராக், குறிப்பாக பாக்தாத்தில் இருந்து கிட்டத்தட்ட 50 மில்கள் தெற்காக). அலெக்சாண்டர், பபியலோனியாவில் கி.மு 323 இறக்க, அலெக்ஸாண்டரின் மசடோனியன் பேரரசு உடைந்தது. (அலெக்சாண்டர், டரியஸ் இன் பாரசீக பேரரசை (இப்போதைய இரான் முழுமையாக) வென்றதே மேற்கு நாகரிகத்தின் எழுச்சியாக கருதப்படுவது) இப்போதைய நிகழ்வுகள் எல்லாம் இதன் காலச்சக்கர பிம்பமகா இருக்கிறது. வல்லரசு அமெரிக்கா ஆஃப்கானில் புதைந்து (இந்த காலத்திலேயே சீனா மட்டும் அமெரிக்காவுக்கு பொடியாக எழும்பியது, அமெரிக்கா அரசியல், ராஜதந்திர மற்றும் வரலாற்று வட்டங்கள் பொதுவாக ஆப்கானை புதைகுழி என்கின்றன), திரும்பி, சிறிய இரானுடன் மோதி, ஈரான் கட்டார், இராக்கில் (இதை அமெரிக்கா படைகள் கண்காணிப்பில்படவில்லை என்கிறது) ஆக குறைந்தது குறியீடு அளவிலாவது அமெரிக்காவை தாக்கி பெரும்பாலும் முடிவுக்கு வந்து இருக்கிறது. மீறல்கள் தொடர்கிறது. அல்லது டிரம்ப் இந்த வழமையான பணியாகவும் இருக்கலாம் (சண்டை நிறுத்தம் என்று விட்டு, கபடமாக அடிப்பதுக்கு, அல்லது சண்டை நிறுத்தம் என்று கொண்டே அடிப்பதுக்கு ) ஆனல், முன்பே சொன்னது போல அமெரிக்கா (இஸ்ரேல் உம்) இதில் மாட்டுப்பட்டு இருக்கிறது (சிறிய இரானிடம் , பெரிய அமெரிக்கா - முன்பு சிறிய மசடோனியாவிடம், பெரிய பாரசீக பேரரசு).
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
வடகொரியாவின் கிறுக்கனுக்கும் ஆயொதொல்லா கமேனிக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்ன? கிம்மை விட கமேனி எந்த விதத்தில் சிறந்தவர் என்று கருதுகிறீர்கள்? ஒரு கிறுக்கனிடம் அணுவாயுதம் இருப்பதே மொத்த உலகிற்கும் ஆபத்தாகிப் போயிருக்கின்ற இந்த நிலையில், இன்னொரு மத அடிப்படைவாதியிடமும் அணுவாயுதம் இருப்பது நல்லது என்று கூறுகிறீர்கள். அடிப்படைவாதிகளின் நாட்டிற்குச் சென்றால் அங்கிருக்கும் சட்டத்தைத்தான் நாம் பின்பற்ற வேண்டும் என்கிறீர்கள். அதையே ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்கிறீர்கள். சரி, உங்களின் விருப்பம்.
2 months 3 weeks ago
ஈரானுக்குச் செய்த துரோகங்கள். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைக் கூறுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். இதைவிடவும் வேறு "துரோகங்கள்" இருந்தால், நீங்கள் தான் கூறவேண்டும். சரி, ஏன் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது? 1979 ஆம் ஆண்டு அடிப்படைவாதிகள் மேற்கொண்ட புரட்சியின்போது அமெரிக்க தூதரகப் பணியாளர்களில் 52 பேரை ஒருவருடம் பணயக் கைதிகளாக வைத்திருந்தமை தொடங்கி, அணுவாயுத உற்பத்தியைக் கைவிட மறுத்தமை, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தியை நிறுத்த மறுத்தமை, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குத் தொடர்ச்சியாக உதவி வருகின்றமை உட்பட பல நாசகாரச் செயல்களில் ஈடுபட்டு வந்தமையினாலேயே இப்பொருளாதாரத் தடைகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டன. ஏன் ஈரான் அணுவாயுதத்தை தயாரிக்கக் கூடாது என்று கூறுகிறேன்? இஸ்ரேலினை முற்றாக அழித்துவிடவேண்டும் எனும் தாரக மந்திரம் ஈரானின் அனைத்து மட்டங்களிலும் ஆளமாக வேரூன்றி அரச, இராணுவ, பொதுத் தளங்களில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஈரானின் கைகளுக்குக் கிடைக்கும் அணுவாயுதம் எந்தநாட்டின் மீது ஏவப்படலாம் என்பதை அனுமானிப்பது உங்களுக்கு கடிணமாக இருக்கப்போவதில்லை என்று நான் நம்புகிறேன். ஈரான் அப்படிச் செய்யாது என்று நீங்கள் சத்தியம் செய்யுமளவிற்கு ஈரான் ஒன்றும் புத்திஜீவிகளால் ஆளப்படும் நாடல்ல. மாறாக மத வன்மம் தலைக்கேறி இன்னொரு மதத்தை, ஒரு இனத்தை அழிக்கக் கங்கணம் கட்டிநிற்கும் அடிப்படைவாதிகளால் ஆளப்படும் நாடு. ஆகவேதான் இவர்களுக்கு அணுவாயுதம் கிடைக்கக் கூடாது என்று கூறுகிறேன். இஸ்ரேலோ, அமெரிக்காவோ ஈரானை உலக வரைபடத்திலிருந்து அழித்தே தீருவோம் என்று சூளுரைக்கவில்லை. ஆகவே அவர்கள் வைத்திருக்கும் அணுகுண்டுகள் ஈரானை அழிக்கப் பயனபடுத்தப்படப்போவதில்லை. ஆனால் ஈரான் அப்படியல்ல. அது தயாரிக்க விரும்பும் அணுவாயுதம் தனது பாதுகாப்பிற்காக அல்ல, மாறாக இஸ்ரேலை அழிப்பதற்கு.ஆகவேதான் அது எப்பாடு பட்டாவாது தடுக்கப்பட வேண்டியதாகிறது. ஈரான் அணுவாயுதத்தினை வேறு எவருக்கும் கொடுக்காது, அப்படிக் கொடுத்தால் அதனைத் தனிமைப்படுத்திவிடலாம் ஆகா, என்னே ஒரு அருமையான வாதம். ஈரான் அணுவாயுதத்தை இன்னொரு நாட்டிற்கோ அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கோ கொடுத்து, அதனை யாரோ ஒருவர் பாவித்தபின்னர் ஈரானைத் தனிமைப்படுத்தினால் என்ன, இல்லாவிட்டால் என்ன? ஈரான் எந்தெந்த ஆயுதங்களை, ஏவுகணைகளை ஹிஸ்புள்ளாவிற்கும், ஹமாஸிற்கும் கொடுத்தது என்பதை அருகில் இருந்து பார்த்த நீங்கள் கூறுவதை நம்புவதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை.
2 months 3 weeks ago
ட்ரம்ப் தன்பாட்டுக்கு போர் நிறுத்தத்தை அறிவிக்கிறார்.ஈரான் கண்டும் காணாததுபோல் இஸ்ரேல் மீது சரமாரித் தாக்குதலை நிகழ்த்தி விட்டுதான் ஓய்ந்திருக்கிறது.25 வருட பொருளாதார தடைக்கு மத்தியிலும் ஈரான் நின்று பிடித்தது ஆச்சரியம்தான்.இந்திய பாகிஸ்தான் போரிலும் இஸ்ரேல் ஈரான் போரிலும் ஒரு மறைகரம் இருக்கின்றது.பின்பலம் தெரிந்தே ட்ரம்ப் போர்நிறுத்ததுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
2 months 3 weeks ago
மத்திய கிழக்கின் விடயங்கள் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அறிவைப் பரிசோதிப்பதற்காக ஒரு கேள்வியினைக் கேட்டுக்கொண்டே உங்களுக்கான பதிலை வழங்கலாம். இஸ்ரேலுக்கும் ஈரானிற்கும் இடையிலான அண்மைக்காலப் பிணக்கு எப்போது ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகிறீர்கள்? ஈரானின் இஸ்லாமியப் புரட்சி பற்றித் தேடிப்பார்த்தால் இதுபற்றிய புரிதல் உங்களுக்கு ஓரளவிற்கேனும் கிடைக்கலாம். சரி, விடயத்திற்கு வருகிறேன். 1979 ஆம் ஆண்டுவரை ஈரானும் இஸ்ரேலும் மிகவும் சுமூகமான நட்புறவினைக் கொண்டிருந்தன என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை. 1979 ஆம் ஆண்டு ஆயொதொல்லா கொமேனியின் தலைமையிலான இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் புரட்சியின் பின்னரே இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பகையுணர்வு ஆரம்பிக்கப்பட்டது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் அதுவரையில் ஈரானிய இராணுவத்திற்கு இஸ்ரேல், அமெரிக்கா உட்பட பல மேற்குநாடுகளே ஆயுதங்கள் கொடுத்து உதவின. ஆனால் கொமேனியின் ஆட்சியில் இஸ்ரேல் முற்றாக அழிக்கப்படவேண்டும் எனும் கொள்கை அரச மட்டத்திலும், ராணுவ மட்டத்திலும், சாதாரண மக்கள் மட்டத்திலும் திணித்துப் பரவப்பட்டது. இதில் கடும்போக்குவாதிகள், மென்போக்குவாதிகள் என்கிற வித்தியாசம் இல்லாமல் அனைவருமே இஸ்ரேலின் இருப்பை இல்லாதொழிக்கவேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டு வருகிறார்கள். அடுத்ததாக 1979 ஆம் ஆண்டு ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் அமைந்திருந்த அமெரிக்காவின் தூதரகத்தில் பணியாற்றிய 52 ஊழியர்களை பணயக் கைதிகளாக சுமார் ஒருவருட காலத்திற்கு அடிப்படைவாதிகள் வைத்திருந்தமை. ஈரானின் அன்றைய மன்னரும், மக்கள் விருப்பிற்கு எதிராக நடந்துகொண்டவர் என்றும் அறியப்பட்டவரை அமெரிக்கா ஆதரித்தமைக்காகவே ஊழியர்களை பணயக் கைதிகளாக்கினோம் என்று கொமேனியின் புரட்சிக் குழு நியாயப்படுத்தியிருந்தது. இங்கிருந்தே அமெரிக்க ஈரானிய பகை ஆரம்பமாகியது. இஸ்ரேலை சின்னச் சாத்தான் என்றும் அமெரிக்காவை பெரிய சாத்தான் என்று அழைத்த கொமேனி, இஸ்ரேலினை உலக வரைபடத்தில் இருந்து நீக்குவேன் என்று சாகும்வரை கூறிவந்ததோடு, அவருக்குப் பின்னால் வந்தவர்கள் அதனையே தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகிறார்கள். இதில் ஆன்மீகத்தலைவர்கள், ஜனாதிபதிகள், அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் என்று வேறுபாடின்றி உறுதியாக நிற்கிறார்கள்.
2 months 3 weeks ago
இப்ப நிலமை வேறமாதிரி இருக்கே!!! ஈரான் Unconditional surrender செய்ய வேண்டும் என்ற ட்ரம்ப் அமெரிக்கத் தளங்களைத் தாக்கினால் ஈரானைத் தாக்குவோம் என்ற ட்ரம்ப் இரான் அமெரிக்கத் தளங்களைத் தாக்கிய மறுநாளே போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கிறார் ஆட்சி மாற்றம் கோரியவர் யுரேனியம் செறிவாக்குவதை நிறுத்த வேண்டும் என்றவர் அடக்கி வாசிக்கிறார்.வென்றது ஈரான்.
2 months 3 weeks ago
மத அடிப்படைவாதம் உலகில் எங்கு இருந்தாலும் அது ஒழிக்கப்படல் வேண்டும். இஸ்லாமிய நாடுகளான ஈரான், சவுதி போன்ற நாடுகளில் நேரடியாகவும் மேலும் பல இஸ்லாமிய நாடுகளில் மறைமுகமாகவும் உள்ள அடிப்படைவாதத்தை எதிர்தது மாற்றங்களை கொண்டுவரும் முயற்சிகள் வரவேற்கப்படவேண்டதே. ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் பொஸ்னியா மற்றும் துருக்கிக்குள் நுளைந்தவுடனேயே மத அடிப்படைவாதத்தின் வாசனை மெல்ல மெல்ல ஆரம்பித்துவிடும். நாடுகளின் வளங்களை ஒரு குறிப்பிட்ட வர்ககம் தம்வசப்படுத்தி அனுபவிப்பதற்கே இப்படியான அடிப்படை வாதங்கள் மக்களிடையே தூண்டப்படுகின்றன. இலங்கையில் பௌத்த மேலாண்மை புத்த மதத்துக்கான முன்னுரிமை எந்தளவுக்கு தவறானதோ அதேயளவுக்கு ஈழம் சிவபூமி என்ற கூக்குரலும் தவறானதே. அண்மைக்காலத்தில் தமிழ் தேசியவாதிகள் என்று தம்மை அழைப்பவர்களிடமும் இவ்வாறான மத அடிப்படைவாதங்களை ஆதரிக்கும் போக்கை காணலாம்.
2 months 3 weeks ago
மிகவும் எழுந்தமானமாக, சாட்சியங்களின் அடிப்படையில் இல்லாது, உணர்வின்பால் உந்தப்பட்டு எழுதிய கருத்து. இஸ்ரேலினால் பணம் கொடுக்கப்பட்டு ஈரான் மீது ஏவி விடப்பட்ட குழுக்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தீர்களென்றால் இதுகுறித்து மற்றவர்களும் அறிந்துகொள்ள பேருதவியாக இருக்கும். அடுத்தது இப்போர் ஏன் இவ்வளவு பெரிதானது எனும் விளக்கம். தன்னை அழுத்திப் பணியவைத்து, முற்றுகைக்குள் கொண்டுவந்து, முடக்க ஈரான் பாவித்த ஏவலாளிகளே ஹமாஸ், ஹிஸ்புள்ளா, ஹூத்தீக்கள் மற்றும் ஈராக்கிலும் சிரியாவிலும் இயங்கும் ஜிஹாதிகள். ஆகவேதான் ஒவ்வொன்றாக ஈரானின் அம்புகளை அழித்த இஸ்ரேல் இறுதியாக ஏவியவனான ஈரானின் மீது தனது கவனத்தைத் திருப்பியது. அடுத்தது பலஸ்த்தினார்களின் தனிநாடு எனும் கோரிக்கை. சரியான கோரிக்கைதான், மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஈரான் பலஸ்த்தீன விடயத்தில் தலையிடுவது உண்மையாகவே அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிடவேண்டும் என்பதற்காகவா? நிச்சயமாக இல்லை. பலஸ்த்தீன ஆயுதக் குழுக்களை வைத்து இஸ்ரேலினை தொடர்ச்சியான முற்றுகைக்குள் வைத்திருக்க வேண்டுமென்பதற்காகத்தான். சியாக்களான ஈரானிய முல்லாக்களுக்கு தாம் பின்பற்றும் இஸ்லாத்தின் பரம வைரியான சுன்னி பலஸ்த்தீனர்களுக்கு நண்மை செய்யவேண்டிய தேவையென்ன என்பதைச் சிந்தித்தால் ஈரான் இவ்விடயத்தில் ஏன் தலையிடுகிறது என்பது புரியும். உங்களின் புரிதலிற்காக ஒன்றைக் கூறுகிறேன், ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா தலையிட்டது எமக்குத் தனிநாடு பெற்றுத்தரத்தான் என்று நீங்கள் நம்பினால், ஈரானும் பலஸ்த்தீனர்களுக்கு தனிநாடு கொடுக்கவே தலையிடுகிறது என்பதை தாராளமாக நீங்கள் நம்பலாம். ஏனென்றால் ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா செய்ததையே பலஸ்த்தீனர்கள் விடயத்தில் இன்று ஈரான் செய்கிறது.
2 months 3 weeks ago
ஆனால் MAGA மோக்குகளை தன் வழிக்கு எடுக்க டிரம்புக்கு கொஞ்சம் அவகாசம் தேவை. அதை இந்த மோதல் தவிர்ப்பு வழங்கும்.
2 months 3 weeks ago
இப்போ இருப்பவர் கமேனி. இதற்கு முன் இருந்தவர் கொமேனி. நீங்கள் நினைப்பது போன்ற வகையில் ஈரானில் தனிமனித ஆட்சி நடப்பதில்லை. அதிஉச்ச தலைவர் என வாழ்நாளுக்கு ஒருவரை தெரிவு செய்தாலும், அவரை நியமிப்பது நிபுணர்கள் குழு எனும் குழாமே. இந்த தலைவர் எப்பொதும் revolutionary guardsஎனும் படையின் தலைவரிலேயே தங்கி இருப்பார்கள். ஈரானின் ஆட்சியை தக்க வைக்கும் பலம் RG யிடம்தான் உள்ளது. அயதுல்லாக்கள் மக்களால் வெறுக்கப்படும் நிலை வந்தால் பங்களாதேசில் நடந்தது போல் படைகள் ஓடி விடும். இஸ்ரேல் அடிப்பதால் மக்கள் கிளர்ச்சிக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஸ்டாலினின், லெனினின் கடைகாலத்தில் என்ன நடந்தது, அவர்கள் விரும்பிய ஆட்களுக்கு அடுத்த தலைமை கிடைத்ததா என்பதை எல்லாம் பார்த்தால் கமேனியின் ஈரானின் மீதான பிடி அத்தனை வலுவானது அல்ல என புரியும். அதே போல் ஈரானின் வான் பரப்பு முழுவதும் இஸ்ரேலின் ஆதிக்கம். ஈரானின் ஒரே ஆயுதம் டிரோன், ஏவுகணைகள் மட்டுமே. இதில் சீனா இறங்கினால் மட்டுமே ஈரானால் நீடித்து நிற்க முடியும். அதே போல் டிரம்பின் போர் நிறுத்தம் ஒரு நாடகம் என்றே நான் நினைக்கிறேன். டிரெம்பிற்கு இடியப்ப சிக்கல். அவரின் MAGA மோட்டு கூட்டம் நவ நாஜிகள், யூத வெறுப்பாளர். ஆனால் எப்ஸ்டீன் பைல்கள் உட்பட டிரம்பின் பல பிடிகள், புட்டினை போலவே, இஸ்ரேலிலும் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த யூத வெறுப்பாளரை பேய்க்காட்டி, வேறு வழியில்ல்லை, அதான் அமேரிக்கா முழு வீச்சில் இறங்கியது என காட்ட டிரம்ப் ஆடும் நாடகமே இந்த மோதல் தவிர்ப்பு. பிகு ஈரான் கத்தாரில் இருந்த அமரிக்க தளத்தை தாக்கியதும், அமேரிக்கா பயந்து, மறுவினை காட்டாமல் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது என நான் நம்பவில்லை.