Aggregator

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

2 months 2 weeks ago
தேர்தல் நேரம் சொல்லியது போல்…. ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்தில் ரஸ்ய - உக்ரேன் போரை டிரம்ப் நிறுத்தியமைக்கு நோபல் பரிசு கொடுக்க முடியாது🤣…. ஆனால் காசாவில் யுத்த தவிர்ப்பு, ஹமாஸ் ஆயுத களைவு, இடைக்கால நிர்வாகசபை, காசாவின் பாதுகாப்பு அரேபிய அமைதிபடைகளிடம், பணய கைதிகள் விடுவிப்பு - இத்தனையையும் அண்மைய டிரம்பின் அமைதி முயற்சிகள் சாதித்தால் அவருக்கு நூறு நோபல் பரிசு கொடுத்தாலும் தகும். அடுத்த வருடம் வாய்ப்புள்ளது. எல்லாம் ஹமாஸ், நெந்தன்யாகு கையில்தான் உண்டு. ஆனால் ஒரு நிரந்தர ஒப்பந்தம் கைச்சாத்தாகும் வரை பரிசை கொடுத்தல் ஆகாது. டிரம்ப் இதில பழியா கிடந்து மெனகெடுவதே பரிசை குறி வைத்துத்தான். ஒண்டும் செய்யாமல் ஒபாமாவுக்கு கொடுத்தவங்கள்… நான் என்ன தக்காளி தொக்கா என தலை கேட்பதிலும் ஒரு நியாயம் இல்லாமல் இல்லை🤣

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

2 months 2 weeks ago
இதை இன்றுதான் கேள்விப்படுகிறேன். சாவச்சேரி பக்கம் குடுக்கிறவையோ🤣. அமைதிக்கான நோபல் பரிசு சுவீடனில் இருந்து அல்ல, நோர்வேயில் இருந்து என நினைக்கிறேன்.

மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இந்தியா….

2 months 2 weeks ago
நேராக உரையாட முடிந்தால்😎 இந்தக் கேள்விக்கு "ஓம்/இல்லை" என்று மட்டும் பதில் தாருங்கள்: "விடுதலைக்கு ஆயுதவழி மட்டுமே சரி என்ற இந்தியாவின் மூளைச்சலவையினால் தான் புலிகள் அமைப்பு போராட்டத்தைக் கையில் எடுத்ததா?"

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 2 weeks ago
வினா 11) 3 விக்கேற்றுக்களினால் தென்னாப்பிரிக்கா அணி, இந்தியா அணியை தோற்கடித்தது. ஒரு போட்டியாளர்களும் சரியாக பதில் அளிக்கவில்லை . 1) அகஸ்தியன் - 21 புள்ளிகள் 2) ஏராளன் - 19 புள்ளிகள் 3) கிருபன் - 19 புள்ளிகள் 4) ரசோதரன் - 19 புள்ளிகள் 5) வீரப்பையன் - 19 புள்ளிகள் 6) ஆல்வாயன் - 17 புள்ளிகள் 7) வாதவூரான் - 17 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 17 புள்ளிகள் 9) சுவி - 16 புள்ளிகள் 10)புலவர் - 15 புள்ளிகள் 11)செம்பாட்டன் - 15 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 15 புள்ளிகள் 13)வாத்தியார் - 13 புள்ளிகள் 14)வசி - 13 புள்ளிகள் 15)கறுப்பி - 13 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 11, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல் - விஜித்த ஹேரத்

2 months 2 weeks ago
Published By: Vishnu 09 Oct, 2025 | 07:00 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல. எமது மக்களின் மனித உரிமைகளை அரசியலாக்கி குறுகிய அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வது எமது நோக்கமல்ல, மனித உரிமைகள்பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல். கடந்த அரசாங்கங்கள், தெரிந்தே செய்த அந்த தவறை மீண்டும் செய்வது எமது அரசாங்கத்தின் கொள்கையும் அல்ல சர்வதேச பொறிமுறையை நிராகரிக்கும் அதே வேளையில், அரசியல் மயமாக்கல் காரணமாக சர்வதேச மயமாக்கப்பட்ட இந்தப் பிரச்சினைகளை நமது சொந்த நாட்டில் சுயாதீனமான செயல்முறைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் தீர்க்க அனைவரின் ஆதரவையும் பெறுவதே எங்கள் முயற்சி என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசாங்கங்கள் இந்தத் தீர்மானங்களுக்கு வெவ்வேறு கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளன. சில நேரங்களில் இந்த அரசாங்கங்கள் இந்தத் தீர்மானங்களை ஆதரித்து அவற்றில் பங்காளிகளாகவும் மாறிவிட்டன (2015,2017, 2019). மற்ற சந்தர்ப்பங்களில், அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்கள் தீர்மானங்களில் வாக்களித்துள்ளன. (2012, 2013, 2014, 2021, 2022).ஏனைய சந்தர்ப்பங்களில், இலங்கை அரசாங்கம் இலங்கை மீது ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது. மற்ற சந்தர்ப்பங்களில், அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்கள் தீர்மானங்களில் வாக்களிக்கவில்லை,மேலும் தீர்மானங்களின் சில பிரிவுகளை மட்டுமே எதிர்த்தன. இந்த அனைத்து தீர்மானங்களிலும் இரண்டு பொதுவான புள்ளிகள் தெளிவாகத் தெரிகின்றன. முதலாவது, ஜெனீவாவில் இந்த செயல்முறையின் அடிப்படையிலான தேசிய பிரச்சினைகள் எந்த முந்தைய அரசாங்கத்தாலும் முறையாக நிர்வகிக்கப்படவில்லை. இந்தத் தீர்மானங்கள் 16 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகள் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான முக்கிய காரணம் இதுதான். எந்தவொரு போரிலும் மனித உரிமைகள் பிரச்சினைகள் எழுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும் நாடுகள் பலவற்றில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தப் பிரச்சினைகள் அவற்றின் சொந்த தேசிய கட்டமைப்பு நிறுவனங்கள் மூலம் தீர்க்கப்படுகின்றன. தேசிய ஒற்றுமையை மேலும் ஊக்குவிக்கின்றன. ஆனால் நம் நாட்டில் முந்தைய அரசாங்கங்கள் என்ன செய்தன? தேசிய மட்டத்தில் உரிமைகள், பிரச்சினைகளைத் தீர்த்து ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, அவர்கள் இனவெறி, பாலின வேறுபாடு மற்றும் ஏனைய பிரச்சினைகளை ஏற்படுத்தினார்கள்.நாட்டைப் பிரித்தனர், அனைத்து இனங்கள் மற்றும் மத மக்களின் உரிமைகளை மேலும் கட்டுப்படுத்தினர், மீறினர், மேலும் இலங்கையை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத நாடாக மாற்றினர். ஜெனீவா தீர்மானத்தின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால் இது தெளிவாகின்றது. 2009 இல் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய கோரிக்கை, அப்போதைய ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகருக்கு உறுதியளித்தபடி, அனைத்து சமூகங்களின் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு நிலையான தேசிய தீர்வை செயல்படுத்துவதாகும். ஆனால் அது நடந்ததா? இல்லை. இந்த செயல்முறை நடைபெறாமல் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் ,பல நாடுகள் ஒன்றிணைந்து 2012 இல் இலங்கை மீது மற்றொரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டன. இந்த 2012 தீர்மானத்தின் முக்கிய கோரிக்கை,அப்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதாகும். ஆனால் அந்தப் பரிந்துரைகள் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டதா? இல்லை. அது நடக்காத இடத்தில், 2013 ஆம் ஆண்டு பேரவையில் மீண்டும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தக் கோரியும், தேசிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையகம் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரியும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது நடந்ததா? இல்லை. அவர்கள் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தி தேசிய ஒற்றுமையை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அப்போதைய அரசாங்கங்கள், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, இந்த தேசியப் பிரச்சினைகளையும் ஜெனீவா செயல்முறையையும் பயன்படுத்தின.2013 ஆம் ஆண்டு ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் ஆணையாளரை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை வெளியிட்டார். இந்த அரசாங்கங்கள் தொடர்ந்து மக்களின் பிரச்சினைகளை அரசியல் கால்பந்தாட்டமாக மாற்றுவதன் மூலம் சர்வதேச நம்பகத்தன்மையை இழப்பதன் விளைவு என்ன? இலங்கை அதன் சொந்த தேசிய நிறுவனங்கள் மூலம் அதன் மனித உரிமைகள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்ற கருத்து உருவாகி மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் 2021 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்க ஒரு சிறப்புப் பிரிவை நிறுவ இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அதுதான் பிரச்சினை. போருக்குப் பின்னர் உடனடியாக ஒரு தேசிய பொறிமுறை மூலம் எளிதாக தீர்க்கப்படக்கூடிய இந்த ஜெனீவா பிரச்சினை, குறுகிய அரசியல் நோக்கங்கள் மற்றும் குறுகிய பார்வை கொண்ட தலைமை காரணமாக 2021 ஆம் ஆண்டுக்குள் சர்வதேசமயமாக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு, இந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும், அனைத்து இன, மதங்களைச் சேர்ந்த மக்களும் வறுமையை ஒழிக்கவும், ஊழலை ஒழிக்கவும், ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்பவும் எங்களுக்கு வலுவான ஆணையை வழங்கினர். இந்த ஆணையை செயல்படுத்துவதும், அனைத்துப் பிரிவு மக்களின் உரிமைகளை உறுதி செய்வதும், இதுவரை சர்வதேசமயமாக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் செயல்முறையை எப்படியாவது தேசிய மட்டத்திற்குக் கொண்டு வருவதும், வலுவான மற்றும் சுயாதீனமான உள்ளூர் நிறுவனங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதுமே எங்கள் நோக்கம். அதற்காக நாங்கள் ஏற்கனவே பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். 2009 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நமது சொந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அதுதான். இலங்கை தொடர்பான அனைத்து திட்டங்களும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அரசாங்கத்தின் கருத்து தோற்கடிக்கப்பட்டது. மேலும், இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த சிறிய எண்ணிக்கையிலான வாக்குகள் படிப்படியாகக் குறைந்து. ஒரு நிலைப்பாட்டை எடுக்காத நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. 2012 ஆம் ஆண்டில், 47 வாக்குகளில் 15 வாக்குகளைப் பெற்றோம். 2013 இல், 13 வாக்குகள்,2014 இல், 12 வாக்குகள் 2021 இல், 11 வாக்குகள், 2022 இல், 7 வாக்குகள் என்ற அடிப்படையில் வாக்குகள் பெறப்பட்டன. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்தக் கால அரசாங்கங்கள் தாங்கள் தோற்போம் என்பதை அறிந்திருந்தும் இந்தத் தேர்தல் பிரசாரங்களுக்காக மில்லியன் கணக்கான பொதுப் பணத்தைச் செலவிட்டன. பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகளுக்குச் சென்றனர். அந்த வாக்குகளைப் பெற அவர்கள் பல்வேறு வழிகளில் தொடர்புடைய நாடுகளுக்கு உதவினார்கள். தேர்தல் தோல்வியடையும் என்ற யதார்த்தத்தை அறிந்தும், ஊடகக் காட்சிகள் மூலம் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்துவதற்காகவே அவர்கள் இதையெல்லாம் செய்தார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவை அமர்வில் நான் உரையாற்றினேன். வகுப்புவாத மற்றும் மத அரசியலை நிராகரித்து, அனைத்து இலங்கையர்களின் பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப நமது சொந்த தேசிய வழிமுறைகள் மூலம் நாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேரவை நாடுகளுக்குத் தெரிவித்துள்ளேன். கடந்த ஜூன் மாதம், மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் சமர்ப்பித்த தீர்மானம் பேரவையில் தோற்கடிக்கப்படுவது மிகவும் அரிது. இலங்கையின் பார்வையில், எங்கள் நாடு தொடர்பான ஒரு தீர்மானம் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுதான் 2009 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நமது சொந்த அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட தீர்மானம். அதன் பிறகு, இலங்கை தொடர்பான அனைத்து தீர்மானங்களும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அரசாங்கத்தின் கருத்து தோற்கடிக்கப்பட்டது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்தது இதுவே முதல் முறை. நாங்கள் பதவியேற்று ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திலேயே அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மற்றும் அரசாங்கம், மதத் தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூகம், அரசியல் கட்சிகள் மற்றும் பல சமூகத் துறையினருடன் அவர் திறந்த கலந்துரையாடல்களை நடத்தினார். இலங்கையின் உண்மையான நிலைமையை அவர் நேரடியாகக் கண்டார். இந்த விஜயத்தைத் தொடர்ந்து, உயர் ஸ்தானிகர் இலங்கை குறித்து மிகவும் நேர்மறையான கருத்துக்களைத் தெரிவித்தார். இலங்கை சமூகம் முழுவதும் முற்போக்கான மாற்றத்தின் போக்கு, பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான திறந்த தன்மை மற்றும் உள்நாட்டு வழிமுறைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க இலங்கை எடுத்த முயற்சி ஆகியவற்றை அவர் பாராட்டினார். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற பேரவையின் 60ஆவது அமர்வில் உயர் ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கையிலும் இந்த நேர்மறையான கருத்துக்களை அவர் வெளிப்படுத்தியிருந்தார். வலுவான உள்நாட்டு வழிமுறைகள் மூலம் மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்க்க இந்த வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்துமாறு இலங்கையை அவர் வலியுறுத்தினார். இந்த அறிக்கையையும் அதற்கு இலங்கை அரசு வழங்கிய பதிலையும் நான் சமர்ப்பிக்கிறேன். அவர்களுடன் கலந்தாலோசிக்க உங்களை அழைக்கிறேன். ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நியூயோர்க்கில் நடந்த ஐ.நா. பொதுச் சபை அமர்வின் போது மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியையும் என்னையும் சந்தித்தார். நான் முன்னர் கூறியது போன்று ல், தேசிய பிரச்சினைகள் மற்றும் மக்களின் மனித உரிமைகள் அரசியல் சந்தர்ப்பவாத நோக்கங்களுக்கு பல ஆண்டுகளாக அடிபணிந்ததன் காரணமாக, இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் 2021 ஆம் ஆண்டுக்குள் சர்வதேசமயமாக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 46/ 1, இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மீறல்கள் குறித்த ஆதாரங்களைச் சேகரிக்க உயர் ஸ்தானிகராலயத்தில் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் என்ற ஒரு பிரிவை நிறுவியது. மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில், வெளியுறவு அமைச்சராக, நானும் ஜெனீவாவில் உள்ள எங்கள் நிரந்தர பிரதிநிதியும், இதுபோன்ற உள்நாட்டு அல்லாத வழிமுறைகளை இலங்கை ஏற்றுக்கொள்வதில்லை என்று பேரவையில் தெளிவாகக் கூறினோம்.சர்வதேச வழிமுறைகளை நிராகரிக்கும் அதே வேளையில், அரசியல்மயமாக்கல் காரணமாக சர்வதேசமயமாக்கப்பட்ட இந்தப் பிரச்சினைகளை நமது சொந்த நாட்டில் சுயாதீனமான செயல்முறைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் தீர்க்க அனைவரின் ஆதரவையும் பெறுவதே எங்கள் முயற்சி. இது ஒரு வருடம் போன்ற குறுகிய காலத்தில் முடிக்கக்கூடிய பணி அல்ல. ஆனால் அதற்கான அடித்தளத்தை நாங்கள் அமைத்து வருகிறோம். இதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மனித உரிமைகள் பேரவை அங்கீகரித்துள்ளது. மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த எங்கள் நீதித்துறை அமைப்பு மற்றும் சட்ட அமுலாக்க நிறுவனங்களை நாங்கள் வலுப்படுத்தி சுயாதீனமாக்குகிறோம். காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு சுயாதீனமாக்கப்படுகின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மரபுகளுக்கு இணங்க மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு மசோதாவை விரைவில் கொண்டு வருவோம். இந்த சட்டம் நாட்டில் அவசரநிலைகளுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட்டது. ஆனால் போர் முடிந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகும் நடைமுறையில் உள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர நாங்கள் எதிர்பார்க்கிறோம். 2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்தவுஉடனேயே, மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையில், அது தொடர்பான மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை நிறுவுவதற்கு நாங்கள் முன்மொழிந்தோம். இந்த தேசிய ஆணையம் நிறுவப்பட்டு அதன் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டிருந்தால், இன்று ஜெனீவா தீர்மானம் இருக்காது. நீங்களும் நானும் அதைப் பற்றி விவாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. 16 ஆண்டுகளுக்குப் பின்னர் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது அது நடந்திருக்காது. எனவே, உண்மை மற்றும் நல்லிணக்கச் சட்டம் விரைவில் இந்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும், ஆணைக்குழுவின் பணிகள் தொடங்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். ஒரு சுயாதீனமான வழக்குத் தொடுநர் அலுவலகம் நிறுவப்படும்.ஜெனீவாவுக்கு காண்பிக்க இந்த முற்போக்கான நடவடிக்கையை நாங்கள் எடுக்கவில்லை. பல ஆண்டுகளாக, அரச அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளான மக்கள் ஒரு அரசியல் இயக்கமாக, மனித உரிமைகள் மீதான எங்கள் உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் அனைத்துப் பிரிவு மக்களின் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எங்கள் உண்மையான அனுதாபம் காரணமாக நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கிறோம்.போரை முடிவுக்குக் கொண்டு வந்த இராணுவ அதிகாரிகளையோ அல்லது வேறு எந்த மக்கள் பிரிவையோ குறிவைத்து இந்த நடவடிக்கையை நாங்கள் எடுக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நமது நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது, ஒற்றுமையைக் கட்டியெழுப்புவது மற்றும் பயங்கரமான மோதல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பு . இது நாம் தனியாக அடையக்கூடிய ஒரு குறிக்கோள் அல்ல. இலங்கை மீதான தீர்மானம் கடந்த 6 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததைக் கண்டேன். எனது உரையின் ஆரம்பத்தில் நான் விளக்கியது போல், மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல். முந்தைய அரசாங்கங்கள், தெரிந்தே பொதுப் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து, வாக்கெடுப்பு தோல்வியடையும் என்ற நம்பிக்கையில் செய்த அந்த பயனற்ற, அந்த தவறான செயலை மீண்டும் செய்வது எங்கள் அரசாங்கத்தின் கொள்கை அல்ல. இந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டபோது,இந்த விஷயத்தில் எங்கள் நிரந்தர பிரதிநிதி இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்தார். செப்டம்பர் 8 ஆம் திகதி இலங்கை தொடர்பான உரையாடலின் போது நான் கூறியதையும், அக்டோபர் 6ஆம் திகதி ஜெனீவாவில் நிரந்தரப் பிரதிநிதி தீர்மானம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையையும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.அக்டோபர் 6 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம், இலங்கை தொடர்பான முந்தைய தீர்மானங்களுடன் ஒப்பிடும்போது பல நேர்மறையான அம்சங்களைக் கொண்டிருந்தது. இது இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றம்,பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டியது. முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய நல்லிணக்க செயல்முறை பாராட்டப்பட்டுள்ளது. இது தேசிய நிறுவனங்களுக்கு பிரச்சினைகளைத் தீர்க்க இடமளித்துள்ளது.இந்தத் தீர்மானம் 2021 தீர்மானத்தின் நீட்டிப்பு என்பதால், அதன் இறுதி அத்தியாயம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் பணிகளைத் தொடர்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நான் முன்னர் குறிப்பிட்டது போல,இது ஒரு உள்ளக பொறிமுறை அல்ல என்பதால் எங்கள் அரசாங்கம் இந்த பொறுப்புக்கூறல் திட்டத்தை நிராகரிக்கிறது. இந்தத் தீர்மானத்தைப் பற்றி விவாதிக்கும் போது 6 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் இதை நாங்கள் கடுமையாக வலியுறுத்தினோம். இது பிளவுகளை தீவிரப்படுத்தும் மற்றும் அரசாங்கம் தொடங்கிய திட்டங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று நாங்கள் சுட்டிக்காட்டினோம். அரசாங்கம் தொடங்கிய உள்ளக பொறிமுறை மற்றும் மனித உரிமைகள் பேரவை நாடுகளில் அதற்காக கட்டமைக்கப்பட்டு வரும் நம்பகத்தன்மையின் அடிப்படையில், 2021 இல் நிறுவப்பட்ட இந்த பொறுப்புக்கூறல் திட்டத்தை விரைவில் முடித்து, நமது சொந்த பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய சூழ்நிலையை விரைவில் உருவாக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றம், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், அத்துடன் அரசாங்கம் தொடங்கிய உள்நாட்டு வேலைத்திட்டம் மற்றும் இதற்காக மனித உரிமைகள் பேரவை நாடுகளில் கட்டமைக்கப்பட்டு வரும் நம்பகத்தன்மையின் அடிப்படையில், 2021 இல் நிறுவப்பட்ட இந்த பொறுப்புக்கூறல் திட்டத்தை முடித்து, எங்கள் பிரச்சினைகளை நாமே தீர்க்கக்கூடிய சூழ்நிலையை விரைவில் உருவாக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். அரசாங்கம் அடைந்துள்ள மகத்தான முன்னேற்றத்தைப் பாராட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் முன்மொழிவை சமர்ப்பித்த நாடுகளின் குழுவின் சார்பாகப் பேசிய ஐக்கிய இராச்சியம் வெளியிட்ட அறிக்கையிலிருந்தும் இது தெளிவாகிறது. அந்தக் குழுவைத் தவிர, சீனா, பங்களாதேஷ், மாலைத்தீவு, கியூபா, ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பிய ஒன்றியம், எத்தியோப்பியா, கோஸ்டாரிகா மற்றும் உலகின் பல்வேறு பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிற நாடுகள் உட்பட பேரவை உறுப்பினர்களாக உள்ள பல நாடுகள் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாராட்டி அறிக்கைகளை வெளியிட்டன. மேலும், கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதி இலங்கை தொடர்பாக நடைபெற்ற உரையாடலில், சுமார் 43 நாடுகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தின, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் உள்நாட்டு செயல்முறைகள் மூலம் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டின. மனித உரிமைகளை அரசியல்மயமாக்குவது நமது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. நமது சொந்த மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது என்பது இந்த மதிப்புமிக்க சபையில் நாம் விவாதிக்க வேண்டிய ஒன்றல்ல. அந்த உரிமைகளைப் பாதுகாப்பது மக்களின் பிரதிநிதிகளாகிய நமது முழுமையான கடமை. பொறுப்பு.. நீங்கள் அனைவரும் அதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ஜனாதிபதி கூறியது போல், அனைத்து இலங்கையர்களும் சுதந்திரமாக ஒன்றாக வாழும் அமைதியான மற்றும் வளமான நாடு என்ற கனவு நமக்கு உள்ளது. அனைத்து பங்குதாரர்களுடனும் சர்வதேச சமூகத்துடனும் நேர்மறையாக ஈடுபடுவதன் மூலம் நமது எதிர்கால சந்ததியினருக்கான இந்தக் கனவை நனவாக்கும் பயணத்தில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த தேசிய முயற்சியை ஆதரிப்பது அனைவரினதும் பொறுப்பு என்றார். https://www.virakesari.lk/article/227355

ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல் - விஜித்த ஹேரத்

2 months 2 weeks ago

Published By: Vishnu

09 Oct, 2025 | 07:00 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல. எமது மக்களின் மனித உரிமைகளை அரசியலாக்கி குறுகிய அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வது எமது நோக்கமல்ல, மனித உரிமைகள்பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல். கடந்த அரசாங்கங்கள், தெரிந்தே செய்த அந்த தவறை மீண்டும் செய்வது எமது அரசாங்கத்தின் கொள்கையும் அல்ல சர்வதேச பொறிமுறையை நிராகரிக்கும் அதே வேளையில், அரசியல் மயமாக்கல் காரணமாக சர்வதேச மயமாக்கப்பட்ட இந்தப் பிரச்சினைகளை நமது சொந்த நாட்டில் சுயாதீனமான செயல்முறைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் தீர்க்க அனைவரின் ஆதரவையும் பெறுவதே எங்கள் முயற்சி என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசாங்கங்கள் இந்தத் தீர்மானங்களுக்கு வெவ்வேறு கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளன. சில நேரங்களில் இந்த அரசாங்கங்கள் இந்தத் தீர்மானங்களை ஆதரித்து அவற்றில் பங்காளிகளாகவும் மாறிவிட்டன (2015,2017, 2019). மற்ற சந்தர்ப்பங்களில், அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்கள் தீர்மானங்களில் வாக்களித்துள்ளன. (2012, 2013, 2014, 2021, 2022).ஏனைய சந்தர்ப்பங்களில், இலங்கை அரசாங்கம் இலங்கை மீது ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது. மற்ற சந்தர்ப்பங்களில், அதிகாரத்தில் உள்ள அரசாங்கங்கள் தீர்மானங்களில் வாக்களிக்கவில்லை,மேலும் தீர்மானங்களின் சில பிரிவுகளை மட்டுமே எதிர்த்தன.

இந்த அனைத்து தீர்மானங்களிலும் இரண்டு பொதுவான புள்ளிகள் தெளிவாகத் தெரிகின்றன. முதலாவது, ஜெனீவாவில் இந்த செயல்முறையின் அடிப்படையிலான தேசிய பிரச்சினைகள் எந்த முந்தைய அரசாங்கத்தாலும் முறையாக நிர்வகிக்கப்படவில்லை. இந்தத் தீர்மானங்கள் 16 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகள் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான முக்கிய காரணம் இதுதான். எந்தவொரு போரிலும் மனித உரிமைகள் பிரச்சினைகள் எழுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும்

நாடுகள் பலவற்றில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தப் பிரச்சினைகள் அவற்றின் சொந்த தேசிய கட்டமைப்பு நிறுவனங்கள் மூலம் தீர்க்கப்படுகின்றன. தேசிய ஒற்றுமையை மேலும் ஊக்குவிக்கின்றன. ஆனால் நம் நாட்டில் முந்தைய அரசாங்கங்கள் என்ன செய்தன? தேசிய மட்டத்தில் உரிமைகள், பிரச்சினைகளைத் தீர்த்து ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, அவர்கள் இனவெறி, பாலின வேறுபாடு மற்றும் ஏனைய பிரச்சினைகளை ஏற்படுத்தினார்கள்.நாட்டைப் பிரித்தனர், அனைத்து இனங்கள் மற்றும் மத மக்களின் உரிமைகளை மேலும் கட்டுப்படுத்தினர், மீறினர், மேலும் இலங்கையை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத நாடாக மாற்றினர். ஜெனீவா தீர்மானத்தின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால் இது தெளிவாகின்றது.

2009 இல் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய கோரிக்கை, அப்போதைய ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகருக்கு உறுதியளித்தபடி, அனைத்து சமூகங்களின் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு நிலையான தேசிய தீர்வை செயல்படுத்துவதாகும். ஆனால் அது நடந்ததா? இல்லை. இந்த செயல்முறை நடைபெறாமல் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் ,பல நாடுகள் ஒன்றிணைந்து 2012 இல் இலங்கை மீது மற்றொரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டன. இந்த 2012 தீர்மானத்தின் முக்கிய கோரிக்கை,அப்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதாகும். ஆனால் அந்தப் பரிந்துரைகள் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டதா? இல்லை.

அது நடக்காத இடத்தில், 2013 ஆம் ஆண்டு பேரவையில் மீண்டும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தக் கோரியும், தேசிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையகம் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரியும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது நடந்ததா? இல்லை. அவர்கள் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தி தேசிய ஒற்றுமையை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அப்போதைய அரசாங்கங்கள், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, இந்த தேசியப் பிரச்சினைகளையும் ஜெனீவா செயல்முறையையும் பயன்படுத்தின.2013 ஆம் ஆண்டு ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் ஆணையாளரை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை வெளியிட்டார்.

இந்த அரசாங்கங்கள் தொடர்ந்து மக்களின் பிரச்சினைகளை அரசியல் கால்பந்தாட்டமாக மாற்றுவதன் மூலம் சர்வதேச நம்பகத்தன்மையை இழப்பதன் விளைவு என்ன? இலங்கை அதன் சொந்த தேசிய நிறுவனங்கள் மூலம் அதன் மனித உரிமைகள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்ற கருத்து உருவாகி மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் 2021 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்க ஒரு சிறப்புப் பிரிவை நிறுவ இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அதுதான் பிரச்சினை. போருக்குப் பின்னர் உடனடியாக ஒரு தேசிய பொறிமுறை மூலம் எளிதாக தீர்க்கப்படக்கூடிய இந்த ஜெனீவா பிரச்சினை, குறுகிய அரசியல் நோக்கங்கள் மற்றும் குறுகிய பார்வை கொண்ட தலைமை காரணமாக 2021 ஆம் ஆண்டுக்குள் சர்வதேசமயமாக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டு, இந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும், அனைத்து இன, மதங்களைச் சேர்ந்த மக்களும் வறுமையை ஒழிக்கவும், ஊழலை ஒழிக்கவும், ஒன்றுபட்ட நாட்டைக் கட்டியெழுப்பவும் எங்களுக்கு வலுவான ஆணையை வழங்கினர். இந்த ஆணையை செயல்படுத்துவதும், அனைத்துப் பிரிவு மக்களின் உரிமைகளை உறுதி செய்வதும், இதுவரை சர்வதேசமயமாக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் செயல்முறையை எப்படியாவது தேசிய மட்டத்திற்குக் கொண்டு வருவதும், வலுவான மற்றும் சுயாதீனமான உள்ளூர் நிறுவனங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதுமே எங்கள் நோக்கம். அதற்காக நாங்கள் ஏற்கனவே பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

2009 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நமது சொந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அதுதான். இலங்கை தொடர்பான அனைத்து திட்டங்களும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அரசாங்கத்தின் கருத்து தோற்கடிக்கப்பட்டது. மேலும், இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த சிறிய எண்ணிக்கையிலான வாக்குகள் படிப்படியாகக் குறைந்து. ஒரு நிலைப்பாட்டை எடுக்காத நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. 2012 ஆம் ஆண்டில், 47 வாக்குகளில் 15 வாக்குகளைப் பெற்றோம். 2013 இல், 13 வாக்குகள்,2014 இல், 12 வாக்குகள் 2021 இல், 11 வாக்குகள், 2022 இல், 7 வாக்குகள் என்ற அடிப்படையில் வாக்குகள் பெறப்பட்டன. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்தக் கால அரசாங்கங்கள் தாங்கள் தோற்போம் என்பதை அறிந்திருந்தும் இந்தத் தேர்தல் பிரசாரங்களுக்காக மில்லியன் கணக்கான பொதுப் பணத்தைச் செலவிட்டன.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகளுக்குச் சென்றனர். அந்த வாக்குகளைப் பெற அவர்கள் பல்வேறு வழிகளில் தொடர்புடைய நாடுகளுக்கு உதவினார்கள். தேர்தல் தோல்வியடையும் என்ற யதார்த்தத்தை அறிந்தும், ஊடகக் காட்சிகள் மூலம் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்துவதற்காகவே அவர்கள் இதையெல்லாம் செய்தார்கள்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவை அமர்வில் நான் உரையாற்றினேன். வகுப்புவாத மற்றும் மத அரசியலை நிராகரித்து, அனைத்து இலங்கையர்களின் பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப நமது சொந்த தேசிய வழிமுறைகள் மூலம் நாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேரவை நாடுகளுக்குத் தெரிவித்துள்ளேன்.

கடந்த ஜூன் மாதம், மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் சமர்ப்பித்த தீர்மானம் பேரவையில் தோற்கடிக்கப்படுவது மிகவும் அரிது. இலங்கையின் பார்வையில், எங்கள் நாடு தொடர்பான ஒரு தீர்மானம் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுதான் 2009 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நமது சொந்த அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட தீர்மானம். அதன் பிறகு, இலங்கை தொடர்பான அனைத்து தீர்மானங்களும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அரசாங்கத்தின் கருத்து தோற்கடிக்கப்பட்டது.

9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்தது இதுவே முதல் முறை. நாங்கள் பதவியேற்று ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திலேயே அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மற்றும் அரசாங்கம், மதத் தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூகம், அரசியல் கட்சிகள் மற்றும் பல சமூகத் துறையினருடன் அவர் திறந்த கலந்துரையாடல்களை நடத்தினார். இலங்கையின் உண்மையான நிலைமையை அவர் நேரடியாகக் கண்டார்.

இந்த விஜயத்தைத் தொடர்ந்து, உயர் ஸ்தானிகர் இலங்கை குறித்து மிகவும் நேர்மறையான கருத்துக்களைத் தெரிவித்தார். இலங்கை சமூகம் முழுவதும் முற்போக்கான மாற்றத்தின் போக்கு, பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான திறந்த தன்மை மற்றும் உள்நாட்டு வழிமுறைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க இலங்கை எடுத்த முயற்சி ஆகியவற்றை அவர் பாராட்டினார். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற பேரவையின் 60ஆவது அமர்வில் உயர் ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கையிலும் இந்த நேர்மறையான கருத்துக்களை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

வலுவான உள்நாட்டு வழிமுறைகள் மூலம் மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்க்க இந்த வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்துமாறு இலங்கையை அவர் வலியுறுத்தினார். இந்த அறிக்கையையும் அதற்கு இலங்கை அரசு வழங்கிய பதிலையும் நான் சமர்ப்பிக்கிறேன். அவர்களுடன் கலந்தாலோசிக்க உங்களை அழைக்கிறேன். ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நியூயோர்க்கில் நடந்த ஐ.நா. பொதுச் சபை அமர்வின் போது மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியையும் என்னையும் சந்தித்தார்.

நான் முன்னர் கூறியது போன்று ல், தேசிய பிரச்சினைகள் மற்றும் மக்களின் மனித உரிமைகள் அரசியல் சந்தர்ப்பவாத நோக்கங்களுக்கு பல ஆண்டுகளாக அடிபணிந்ததன் காரணமாக, இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் 2021 ஆம் ஆண்டுக்குள் சர்வதேசமயமாக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 46/ 1, இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மீறல்கள் குறித்த ஆதாரங்களைச் சேகரிக்க உயர் ஸ்தானிகராலயத்தில் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் என்ற ஒரு பிரிவை நிறுவியது.

மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில், வெளியுறவு அமைச்சராக, நானும் ஜெனீவாவில் உள்ள எங்கள் நிரந்தர பிரதிநிதியும், இதுபோன்ற உள்நாட்டு அல்லாத வழிமுறைகளை இலங்கை ஏற்றுக்கொள்வதில்லை என்று பேரவையில் தெளிவாகக் கூறினோம்.சர்வதேச வழிமுறைகளை நிராகரிக்கும் அதே வேளையில், அரசியல்மயமாக்கல் காரணமாக சர்வதேசமயமாக்கப்பட்ட இந்தப் பிரச்சினைகளை நமது சொந்த நாட்டில் சுயாதீனமான செயல்முறைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் தீர்க்க அனைவரின் ஆதரவையும் பெறுவதே எங்கள் முயற்சி. இது ஒரு வருடம் போன்ற குறுகிய காலத்தில் முடிக்கக்கூடிய பணி அல்ல. ஆனால் அதற்கான அடித்தளத்தை நாங்கள் அமைத்து வருகிறோம். இதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மனித உரிமைகள் பேரவை அங்கீகரித்துள்ளது. மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த எங்கள் நீதித்துறை அமைப்பு மற்றும் சட்ட அமுலாக்க நிறுவனங்களை நாங்கள் வலுப்படுத்தி சுயாதீனமாக்குகிறோம்.

காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு சுயாதீனமாக்கப்படுகின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மரபுகளுக்கு இணங்க மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு மசோதாவை விரைவில் கொண்டு வருவோம். இந்த சட்டம் நாட்டில் அவசரநிலைகளுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட்டது. ஆனால் போர் முடிந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகும் நடைமுறையில் உள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்தவுஉடனேயே, மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையில், அது தொடர்பான மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை நிறுவுவதற்கு நாங்கள் முன்மொழிந்தோம். இந்த தேசிய ஆணையம் நிறுவப்பட்டு அதன் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டிருந்தால், இன்று ஜெனீவா தீர்மானம் இருக்காது. நீங்களும் நானும் அதைப் பற்றி விவாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. 16 ஆண்டுகளுக்குப் பின்னர் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது அது நடந்திருக்காது. எனவே, உண்மை மற்றும் நல்லிணக்கச் சட்டம் விரைவில் இந்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும், ஆணைக்குழுவின் பணிகள் தொடங்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். ஒரு சுயாதீனமான வழக்குத் தொடுநர் அலுவலகம் நிறுவப்படும்.ஜெனீவாவுக்கு காண்பிக்க இந்த முற்போக்கான நடவடிக்கையை நாங்கள் எடுக்கவில்லை.

பல ஆண்டுகளாக, அரச அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளான மக்கள் ஒரு அரசியல் இயக்கமாக, மனித உரிமைகள் மீதான எங்கள் உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் அனைத்துப் பிரிவு மக்களின் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எங்கள் உண்மையான அனுதாபம் காரணமாக நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கிறோம்.போரை முடிவுக்குக் கொண்டு வந்த இராணுவ அதிகாரிகளையோ அல்லது வேறு எந்த மக்கள் பிரிவையோ குறிவைத்து இந்த நடவடிக்கையை நாங்கள் எடுக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நமது நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது, ஒற்றுமையைக் கட்டியெழுப்புவது மற்றும் பயங்கரமான மோதல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பு . இது நாம் தனியாக அடையக்கூடிய ஒரு குறிக்கோள் அல்ல.

இலங்கை மீதான தீர்மானம் கடந்த 6 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததைக் கண்டேன். எனது உரையின் ஆரம்பத்தில் நான் விளக்கியது போல், மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல். முந்தைய அரசாங்கங்கள், தெரிந்தே பொதுப் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து, வாக்கெடுப்பு தோல்வியடையும் என்ற நம்பிக்கையில் செய்த அந்த பயனற்ற, அந்த தவறான செயலை மீண்டும் செய்வது எங்கள் அரசாங்கத்தின் கொள்கை அல்ல. இந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டபோது,இந்த விஷயத்தில் எங்கள் நிரந்தர பிரதிநிதி இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்தார்.

செப்டம்பர் 8 ஆம் திகதி இலங்கை தொடர்பான உரையாடலின் போது நான் கூறியதையும், அக்டோபர் 6ஆம் திகதி ஜெனீவாவில் நிரந்தரப் பிரதிநிதி தீர்மானம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையையும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.அக்டோபர் 6 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம், இலங்கை தொடர்பான முந்தைய தீர்மானங்களுடன் ஒப்பிடும்போது பல நேர்மறையான அம்சங்களைக் கொண்டிருந்தது. இது இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றம்,பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டியது.

முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய நல்லிணக்க செயல்முறை பாராட்டப்பட்டுள்ளது. இது தேசிய நிறுவனங்களுக்கு பிரச்சினைகளைத் தீர்க்க இடமளித்துள்ளது.இந்தத் தீர்மானம் 2021 தீர்மானத்தின் நீட்டிப்பு என்பதால், அதன் இறுதி அத்தியாயம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் பணிகளைத் தொடர்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நான் முன்னர் குறிப்பிட்டது போல,இது ஒரு உள்ளக பொறிமுறை அல்ல என்பதால் எங்கள் அரசாங்கம் இந்த பொறுப்புக்கூறல் திட்டத்தை நிராகரிக்கிறது. இந்தத் தீர்மானத்தைப் பற்றி விவாதிக்கும் போது 6 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் இதை நாங்கள் கடுமையாக வலியுறுத்தினோம். இது பிளவுகளை தீவிரப்படுத்தும் மற்றும் அரசாங்கம் தொடங்கிய திட்டங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று நாங்கள் சுட்டிக்காட்டினோம்.

அரசாங்கம் தொடங்கிய உள்ளக பொறிமுறை மற்றும் மனித உரிமைகள் பேரவை நாடுகளில் அதற்காக கட்டமைக்கப்பட்டு வரும் நம்பகத்தன்மையின் அடிப்படையில், 2021 இல் நிறுவப்பட்ட இந்த பொறுப்புக்கூறல் திட்டத்தை விரைவில் முடித்து, நமது சொந்த பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய சூழ்நிலையை விரைவில் உருவாக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றம், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், அத்துடன் அரசாங்கம் தொடங்கிய உள்நாட்டு வேலைத்திட்டம் மற்றும் இதற்காக மனித உரிமைகள் பேரவை நாடுகளில் கட்டமைக்கப்பட்டு வரும் நம்பகத்தன்மையின் அடிப்படையில், 2021 இல் நிறுவப்பட்ட இந்த பொறுப்புக்கூறல் திட்டத்தை முடித்து, எங்கள் பிரச்சினைகளை நாமே தீர்க்கக்கூடிய சூழ்நிலையை விரைவில் உருவாக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

அரசாங்கம் அடைந்துள்ள மகத்தான முன்னேற்றத்தைப் பாராட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் முன்மொழிவை சமர்ப்பித்த நாடுகளின் குழுவின் சார்பாகப் பேசிய ஐக்கிய இராச்சியம் வெளியிட்ட அறிக்கையிலிருந்தும் இது தெளிவாகிறது. அந்தக் குழுவைத் தவிர, சீனா, பங்களாதேஷ், மாலைத்தீவு, கியூபா, ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பிய ஒன்றியம், எத்தியோப்பியா, கோஸ்டாரிகா மற்றும் உலகின் பல்வேறு பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிற நாடுகள் உட்பட பேரவை உறுப்பினர்களாக உள்ள பல நாடுகள் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாராட்டி அறிக்கைகளை வெளியிட்டன. மேலும், கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதி இலங்கை தொடர்பாக நடைபெற்ற உரையாடலில், சுமார் 43 நாடுகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தின, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் உள்நாட்டு செயல்முறைகள் மூலம் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டின. மனித உரிமைகளை அரசியல்மயமாக்குவது நமது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.

நமது சொந்த மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது என்பது இந்த மதிப்புமிக்க சபையில் நாம் விவாதிக்க வேண்டிய ஒன்றல்ல. அந்த உரிமைகளைப் பாதுகாப்பது மக்களின் பிரதிநிதிகளாகிய நமது முழுமையான கடமை. பொறுப்பு.. நீங்கள் அனைவரும் அதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ஜனாதிபதி கூறியது போல், அனைத்து இலங்கையர்களும் சுதந்திரமாக ஒன்றாக வாழும் அமைதியான மற்றும் வளமான நாடு என்ற கனவு நமக்கு உள்ளது. அனைத்து பங்குதாரர்களுடனும் சர்வதேச சமூகத்துடனும் நேர்மறையாக ஈடுபடுவதன் மூலம் நமது எதிர்கால சந்ததியினருக்கான இந்தக் கனவை நனவாக்கும் பயணத்தில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த தேசிய முயற்சியை ஆதரிப்பது அனைவரினதும் பொறுப்பு என்றார்.

https://www.virakesari.lk/article/227355

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !

2 months 2 weeks ago
போன மாதம், இந்தியத் தூதுவருடன் நடந்த சந்திப்பின் போது பேசப் பட்ட விடயங்களுக்கு என்ன நடந்தது. அவை தீர்க்கப் பட்டு விட்டதா? இப்படி மாதா மாதம் வெட்டியாக போய் சந்தித்து பத்திரிகைகளில் படங்களைப் போட்டு… நானும் அரசியலில் இருக்கின்றேன் என்று, சுத்துமாத்து சுமந்திரன்… இத்துப் போன “பிலிம்” காட்டுகின்றாரா? இந்தப் பேய்க்காட்டல் அரசியல் எல்லாம் பழைய ரெக்னிக். சம்பந்தன் காலத்திலிருந்து பார்த்தும், கேட்டும் அலுத்துப் போச்சுது. புதுசா ஏதாவது செய்யப் பாருங்கள் சுமன். நட்டுக் கழண்ட லூசன் மாதிரி நெடுக செய்த ஒன்றையே திரும்பத் திரும்ப செய்யாதீர்கள் ஆபிரஹாம் சுமந்திரன். மக்கள் உங்களை பைத்தியக்காரன் என்று முடிவு கட்டி விடுவார்கள்.

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

2 months 2 weeks ago
இரசாயனத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு Published By: Digital Desk 3 09 Oct, 2025 | 11:14 AM இரசாயனத்துக்கான நோபல் பரிசு புதன்கிழமை (08) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025ம் ஆண்டு இரசாயனத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜப்பானைச் சேர்ந்த சுசுமா கிடகவா, பிரித்தானியாவைச் சேர்ந்த ரிச்சர்டு ராப்சன், ஜோர்தானைச் சேர்ந்த உமர் யாகி ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலோக - கரிம கட்டமைப்பை உருவாக்கியதற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற 3 பேருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/227292

மகளிர் விளையாட்டின் உலகளாவிய கொண்டாட்டமாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் வராத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறுமுகப்படுத்துகிறது

2 months 2 weeks ago
09 Oct, 2025 | 12:28 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் முதல் தடவையாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் வாரத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது. மகளிர் கிரிக்கெட்டின் உலகளாவிய கொண்டாட்டமாக அமையும் இந்த நிகழ்வு அக்டோபர் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும். இந்த கொண்டாட்டம் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2025 உடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. இந்த புதுமையான முயற்சியானது, ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டுடன் இணைத்தவாறு உலகளாவிய கிரிக்கெட் சமூகத்தை ஒன்றிணைக்கவும், பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்தவும் ஆதரிக்கவும்; கிரிக்கெட் சபைகள் அர்த்தமுள்ள மற்றும் உள்ளூர் ரீதியாக பொருத்தமான வழிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வாரம், இந்தியாவில் இந்த வருடம் நடைபெறும் உலகக் கிண்ணத்தின்போது தொடங்கி, உலகளாவிய ரீதியில் கிரிக்கெட்டில் பெண்களின் தெரிவு நிலை, சுயவிபரம் மற்றும் பங்கேற்பை கணிசமாக மேம்படுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் ஆண்டுதோறும் நடைபெறும். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா, 'இந்த வருடம் மகளிர் கிரிக்கெட் ஏற்கனவே ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது. சாதனை படைக்கும் வகையில் விளையாட்டு அரங்குகளில் நிரம்பி வழிகின்றனர். முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறுவதுடன் கிரிக்கெட் விளையாட்டின் மீதான உத்வேகம் அதிகரித்துள்ளது. 'ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வாரம் அறிமுகமாவதன் மூலம் மற்றொரு பெருமைமிகு மைல்கல் பதிவாகிறது. கிரிக்கெட் அரங்கில் உள்ள வீராங்கனைகள் மட்டுமல்ல, துடுப்பை அல்லது பந்தை கையில் எடுக்கும் ஒவ்வொரு பெண்ணையும் சாத்தியமானதைப் பற்றி கனவு காண்பதைக் கொண்டாட வைக்கிறது. இது பூரண மற்றும் இணை உறுப்பு நாடுகளுக்கு உலகளாவிய நிகழ்வில் பங்கேற்கவும், தங்களது சொந்த சமூகங்களில் பெண்கள் விளையாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பை வழங்குகிறது' என்றார். இது இவ்வாறிருக்க, உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் வரவேற்பு நாடு அல்லாத பல பூரண அங்கத்துவ நாடுகள் ஏற்கனவே புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடியுள்ளன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை, நியூஸிலாந்து கிரிக்கெட் சபை ஆகியன ஏற்கனவே சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தன.. கிரிக்கெட் சவுத் அப்ரிக்கா (தென் ஆபிரிக்கா கிரிக்கெட் நிறுவனம்) தமது தேசத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் ஒரு முழு நாள் நிகழ்வை நடத்தவுள்ளது. இதில் குழு விவாதம், மினி-கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முன்னாள் தென் ஆபிரிக்க வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டி ஆகியவை அடங்கும். அது மட்டுமல்லாமல் பெர்முடா முதல் ஹொங்கொங் வரை ஒவ்வொரு கண்டத்திலும், 45க்கும் மேற்பட்ட ஐ.சி.சி இணை உறுப்பு நாடுகள் மகளிர் கிரிக்கெட் வாரத்தில் ஈடுபட தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. https://www.virakesari.lk/article/227305

மகளிர் விளையாட்டின் உலகளாவிய கொண்டாட்டமாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் வராத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறுமுகப்படுத்துகிறது

2 months 2 weeks ago

09 Oct, 2025 | 12:28 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் முதல் தடவையாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் வாரத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது.

மகளிர் கிரிக்கெட்டின் உலகளாவிய கொண்டாட்டமாக அமையும் இந்த நிகழ்வு அக்டோபர் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும். இந்த கொண்டாட்டம் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2025 உடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.

இந்த புதுமையான முயற்சியானது, ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டுடன் இணைத்தவாறு உலகளாவிய கிரிக்கெட் சமூகத்தை ஒன்றிணைக்கவும், பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்தவும் ஆதரிக்கவும்; கிரிக்கெட் சபைகள் அர்த்தமுள்ள மற்றும் உள்ளூர் ரீதியாக பொருத்தமான வழிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வாரம், இந்தியாவில் இந்த வருடம் நடைபெறும் உலகக் கிண்ணத்தின்போது தொடங்கி, உலகளாவிய ரீதியில் கிரிக்கெட்டில் பெண்களின் தெரிவு நிலை, சுயவிபரம் மற்றும் பங்கேற்பை கணிசமாக மேம்படுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் ஆண்டுதோறும் நடைபெறும்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா,

'இந்த வருடம் மகளிர் கிரிக்கெட் ஏற்கனவே ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது. சாதனை படைக்கும் வகையில் விளையாட்டு அரங்குகளில் நிரம்பி வழிகின்றனர். முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறுவதுடன் கிரிக்கெட் விளையாட்டின் மீதான உத்வேகம் அதிகரித்துள்ளது.

'ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வாரம் அறிமுகமாவதன் மூலம் மற்றொரு பெருமைமிகு மைல்கல் பதிவாகிறது. கிரிக்கெட் அரங்கில் உள்ள வீராங்கனைகள் மட்டுமல்ல, துடுப்பை அல்லது பந்தை கையில் எடுக்கும் ஒவ்வொரு பெண்ணையும் சாத்தியமானதைப் பற்றி கனவு காண்பதைக் கொண்டாட வைக்கிறது. இது பூரண மற்றும் இணை உறுப்பு நாடுகளுக்கு உலகளாவிய நிகழ்வில் பங்கேற்கவும், தங்களது சொந்த சமூகங்களில் பெண்கள் விளையாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பை வழங்குகிறது' என்றார்.

இது இவ்வாறிருக்க, உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் வரவேற்பு நாடு அல்லாத பல பூரண அங்கத்துவ நாடுகள் ஏற்கனவே புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடியுள்ளன.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை, நியூஸிலாந்து கிரிக்கெட் சபை ஆகியன ஏற்கனவே சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தன..

கிரிக்கெட் சவுத் அப்ரிக்கா (தென் ஆபிரிக்கா கிரிக்கெட் நிறுவனம்) தமது தேசத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் ஒரு முழு நாள் நிகழ்வை நடத்தவுள்ளது. இதில் குழு விவாதம், மினி-கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முன்னாள் தென் ஆபிரிக்க வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டி ஆகியவை அடங்கும்.

அது மட்டுமல்லாமல் பெர்முடா முதல் ஹொங்கொங் வரை ஒவ்வொரு கண்டத்திலும், 45க்கும் மேற்பட்ட ஐ.சி.சி இணை உறுப்பு நாடுகள் மகளிர் கிரிக்கெட் வாரத்தில் ஈடுபட தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

https://www.virakesari.lk/article/227305

லாஸ் ஏஞ்சலிஸ் தீ: சந்தேக நபரை சாட்ஜிபிடி படம் சிக்க வைத்தது எப்படி?

2 months 2 weeks ago
பட மூலாதாரம், Justice department படக்குறிப்பு, புதன்கிழமை புளோரிடா நீதிமன்றத்தில் ஆஜரான ரிண்டர்க்னெக்ட், எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. கட்டுரை தகவல் அனா ஃபேகுய் மற்றும் நார்டின் சாட் பிபிசி நியூஸ் 9 அக்டோபர் 2025, 12:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்ட பசிபிக் பாலிசேட்ஸ் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அந்த தீயை பற்ற வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஜோனாதன் ரிண்டர்க்னெக்ட் என்பவரின் டிஜிட்டல் சாதனங்களில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களில், அவர் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி உருவாக்கிய எரியும் நகரத்தின் படமும் இருந்தது என நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து, ஜனவரி 7- ஆம் தேதி, கடலோர ஆடம்பர குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள நடைபாதை அருகே உருவானது. இது லாஸ் ஏஞ்சலிஸ் வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய தீ விபத்தாகக் கருதப்படுகிறது. அதே நாளில், ஈட்டன் தீ எனப்படும் மற்றொரு தீ விபத்து ஏற்பட்டது. இதில் மீண்டும் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9,400 கட்டடங்கள் முற்றிலும் எரிந்து விழுந்தன. ஆனால், அந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பாலிசேட்ஸ் தீ 23,000 ஏக்கருக்கும் (9,308 ஹெக்டேருக்கும்) மேற்பட்ட பரப்பளவில் பரவி, சுமார் 150 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியது. இந்த தீ மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்து, முழு குடியிருப்புப் பகுதிகளை அழித்தது. டோபங்கா மற்றும் மாலிபு பகுதிகளும் தீயால் பாதிக்கப்பட்டன. புளோரிடாவில் செவ்வாயன்று ரிண்டர்க்னெக்ட் கைது செய்யப்பட்டார். அவர் மீது, தீ பற்றவைத்து சொத்துக்களை அழித்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என வழக்கறிஞர் பில் எஸ்ஸேலி லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். "இந்தக் கைது நடவடிக்கை, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஓரளவு நீதியை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று எஸ்ஸேலி கூறினார். கொலை குற்றச்சாட்டுகள் உட்பட கூடுதல் வழக்குகள் பின்னர் பதிவு செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். புதன்கிழமை புளோரிடா நீதிமன்றத்தில் ஆஜரான ரிண்டர்க்னெக்ட், எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. கலிபோர்னியாவில் வசித்து வேலை செய்து வந்த ரிண்டர்க்னெக்ட், தீ விபத்துக்குப் பிறகு விரைவில் புளோரிடாவுக்கு குடிபெயர்ந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பட மூலாதாரம், Getty Images காற்றால் மேலும் பரவிய தீ புத்தாண்டு தினத்தில் ரிண்டர்க்னெக்ட் தொடங்கியதாகக் கூறப்படும் முதல் தீ 'லாச்மேன் தீ' என அழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக கட்டுப்படுத்தினாலும், அது அடர்த்தியான தாவரங்களின் வேர் அமைப்பில் நிலத்தடியில் புகைந்து கொண்டிருந்தது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். பின்னர் ஒரு புயலின் போது, அந்த புகை மீண்டும் மேற்பரப்புக்கு எழுந்து தீயாக பரவியது. சந்தேகத்துக்குரிய அந்த நபர் பசிபிக் பாலிசேட்ஸில் முன்பு வசித்து வந்ததால், அந்தப் பகுதியை நன்கு அறிந்திருந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் ஸ்கல் ராக் டிரெயில்ஹெட்டுக்கு அருகில் வசித்து வந்தார், அங்குதான் அவர் தீயை மூட்டியதாகக் கூறப்படுகிறது. குற்றப்பத்திரிகையின்படி, புத்தாண்டு தினத்துக்கு முந்தைய இரவில், உபர் ஓட்டுநராக தனது பணியை முடித்த பின், அவர் தீயைப் பற்ற வைத்துள்ளார். புத்தாண்டு தினத்தன்று இரவில் ரிண்டர்க்னெக்ட் இரு பயணிகளை அழைத்துச் சென்றதாகவும், ஓட்டுநர் ரிண்டர்க்னெக்ட் மிகவும் பதற்றமாகவும் கோபமாகவும் இருந்தார் என அந்தப் பயணிகளில் ஒருவர் புலனாய்வாளர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஜனவரி ஒன்றாம் தேதி தீ விபத்து தொடங்கிய நேரத்தில் அவர் இருந்த இடத்தை அவரது தொலைபேசி தரவுகளை பயன்படுத்தி அதிகாரிகள் கண்டறிந்தனர். ஆனால், விசாரணையின் போது, அவர் தவறான தகவல் அளித்து மலை அடிவாரத்தில் இருந்ததாகக் கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தீ விபத்து நடந்த நேரத்தில், ரிண்டர்க்னெக்ட் உபர் செயலியை பயன்படுத்தவில்லை. ஆனால், ஜிபிஎஸ் தரவு மற்றும் பிற தகவல்களை கொண்டு, அவரது இருப்பிடத்தைத் தீர்மானிக்க, மத்திய மது, புகையிலை, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பணியகத்துடன் (ATF)நெருக்கமாக இணைந்து பணியாற்றினோம் என உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ரிண்டர்க்னெக்ட்கும் தீ விபத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதும், உபர் தளத்தை அணுக அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை உடனடியாக நீக்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், Justice Department 'சாட்ஜிபிடியிடம் ஆலோசனை' தீயை அணைக்க முயற்சிக்கும் தீயணைப்பு வீரர்களின் வீடியோக்கள் உட்பட, தொலைபேசியில் தீ விபத்துடன் தொடர்புடைய பல ஆதாரங்களை ரிண்டர்க்னெக்ட் வைத்திருந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். புத்தாண்டு தின நள்ளிரவுக்குப் பிறகு, அவர் 911 என்ற அவசர எண்ணை பலமுறை அழைத்ததாகவும், ஆனால் அவரது மொபைல் இணைப்பு பலவீனமாக இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், ரிண்டர்க்னெக்ட் "உங்களது சிகரெட்டால் தீப்பிடித்தால் அது உங்கள் பொறுப்பா?" என சாட்ஜிபிடியிடம் கேட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ரிண்டர்க்னெக்ட், "தீயை அணைக்க முயற்சித்ததாகத் தோன்றும் ஆதாரங்களை" உருவாக்க முயன்றார் என புலனாய்வாளர்கள் கூறினர். "தீ விபத்து தொடர்பான வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வகையிலான விளக்கத்தை உருவாக்க விரும்பினார்" எனவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது 2025 ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், ரிண்டர்க்னெக்ட் பதற்றமாக நடந்து கொண்டார். தீயை மூட்டியது யார் என்று கேட்கும் போதெல்லாம், அவரது கழுத்து நரம்பு துடித்தது என புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். பட மூலாதாரம், Getty Images 2024 ஜூலை மாதத்தில், தீ வைத்ததாகக் கூறப்படுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு, ரிண்டர்க்னெக்ட் சாட்ஜிபிடியிடம் எரியும் காடு மற்றும் தீயிலிருந்து ஓடும் மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய ஒரு படத்தை உருவாக்க கேட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். "ஓவியத்தின் நடுவில், வறுமையில் வாடும் லட்சக்கணக்கான மக்கள், பெரிய டாலர் சின்னம் கொண்ட பிரமாண்டமான வாயிலைக் கடந்து செல்ல முயல்கிறார்கள். வாயிலின் மறுபக்கத்தில் பணக்காரர்கள் குழுவாக கூடியிருக்கிறார்கள். அவர்கள் உலகம் எரிவதைப் பார்த்து மகிழ்கிறார்கள்; மக்கள் போராடுவதைப் பார்த்து ரசித்து சிரித்து,மகிழ்ந்து ஆடுகிறார்கள்" என படத்தை உருவக்கும்போது சாட்ஜிபிடியிடம் அவர் பிராம்ப்ட் கொடுத்திருந்தார் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். தீ வைத்ததாகக் கூறப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ரிண்டர்க்னெக்ட் சாட்ஜிபிடியிடம் ஒரு செய்தியை உள்ளிட்டதாகக் கூறப்படுகிறது, அதில் "என்னிடம் இருந்த பைபிளை நான் உண்மையாக எரித்தேன். அது அருமையாக இருந்தது. நான் மிகவும் விடுதலை பெற்றதாக உணர்ந்தேன்"எனக் கூறப்பட்டிருந்தது. கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், இந்தக் கைது நடவடிக்கை "தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கலிபோர்னியர்களுக்கு ஒரு தீர்வை அளிக்கும் முக்கியமான படி" என்று கூறினார். மேலும், தீ விபத்து தொடர்பான அரசின் விசாரணைக்கு முழுமையான ஆதரவு அளிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce80r9y5lnjo

லாஸ் ஏஞ்சலிஸ் தீ: சந்தேக நபரை சாட்ஜிபிடி படம் சிக்க வைத்தது எப்படி?

2 months 2 weeks ago

ரிண்டர்க்னெக்ட்

பட மூலாதாரம், Justice department

படக்குறிப்பு, புதன்கிழமை புளோரிடா நீதிமன்றத்தில் ஆஜரான ரிண்டர்க்னெக்ட், எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை.

கட்டுரை தகவல்

  • அனா ஃபேகுய் மற்றும் நார்டின் சாட்

  • பிபிசி நியூஸ்

  • 9 அக்டோபர் 2025, 12:06 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்ட பசிபிக் பாலிசேட்ஸ் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அந்த தீயை பற்ற வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஜோனாதன் ரிண்டர்க்னெக்ட் என்பவரின் டிஜிட்டல் சாதனங்களில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களில், அவர் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி உருவாக்கிய எரியும் நகரத்தின் படமும் இருந்தது என நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து, ஜனவரி 7- ஆம் தேதி, கடலோர ஆடம்பர குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள நடைபாதை அருகே உருவானது. இது லாஸ் ஏஞ்சலிஸ் வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய தீ விபத்தாகக் கருதப்படுகிறது.

அதே நாளில், ஈட்டன் தீ எனப்படும் மற்றொரு தீ விபத்து ஏற்பட்டது. இதில் மீண்டும் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9,400 கட்டடங்கள் முற்றிலும் எரிந்து விழுந்தன. ஆனால், அந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

பாலிசேட்ஸ் தீ 23,000 ஏக்கருக்கும் (9,308 ஹெக்டேருக்கும்) மேற்பட்ட பரப்பளவில் பரவி, சுமார் 150 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த தீ மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்து, முழு குடியிருப்புப் பகுதிகளை அழித்தது. டோபங்கா மற்றும் மாலிபு பகுதிகளும் தீயால் பாதிக்கப்பட்டன.

புளோரிடாவில் செவ்வாயன்று ரிண்டர்க்னெக்ட் கைது செய்யப்பட்டார். அவர் மீது, தீ பற்றவைத்து சொத்துக்களை அழித்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என வழக்கறிஞர் பில் எஸ்ஸேலி லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"இந்தக் கைது நடவடிக்கை, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஓரளவு நீதியை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று எஸ்ஸேலி கூறினார்.

கொலை குற்றச்சாட்டுகள் உட்பட கூடுதல் வழக்குகள் பின்னர் பதிவு செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன்கிழமை புளோரிடா நீதிமன்றத்தில் ஆஜரான ரிண்டர்க்னெக்ட், எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை.

கலிபோர்னியாவில் வசித்து வேலை செய்து வந்த ரிண்டர்க்னெக்ட், தீ விபத்துக்குப் பிறகு விரைவில் புளோரிடாவுக்கு குடிபெயர்ந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

லாஸ் ஏஞ்சலிஸ் தீ: சந்தேக நபரை சாட்ஜிபிடி படம் சிக்க வைத்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

காற்றால் மேலும் பரவிய தீ

புத்தாண்டு தினத்தில் ரிண்டர்க்னெக்ட் தொடங்கியதாகக் கூறப்படும் முதல் தீ 'லாச்மேன் தீ' என அழைக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக கட்டுப்படுத்தினாலும், அது அடர்த்தியான தாவரங்களின் வேர் அமைப்பில் நிலத்தடியில் புகைந்து கொண்டிருந்தது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

பின்னர் ஒரு புயலின் போது, அந்த புகை மீண்டும் மேற்பரப்புக்கு எழுந்து தீயாக பரவியது.

சந்தேகத்துக்குரிய அந்த நபர் பசிபிக் பாலிசேட்ஸில் முன்பு வசித்து வந்ததால், அந்தப் பகுதியை நன்கு அறிந்திருந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் ஸ்கல் ராக் டிரெயில்ஹெட்டுக்கு அருகில் வசித்து வந்தார், அங்குதான் அவர் தீயை மூட்டியதாகக் கூறப்படுகிறது.

குற்றப்பத்திரிகையின்படி, புத்தாண்டு தினத்துக்கு முந்தைய இரவில், உபர் ஓட்டுநராக தனது பணியை முடித்த பின், அவர் தீயைப் பற்ற வைத்துள்ளார்.

புத்தாண்டு தினத்தன்று இரவில் ரிண்டர்க்னெக்ட் இரு பயணிகளை அழைத்துச் சென்றதாகவும், ஓட்டுநர் ரிண்டர்க்னெக்ட் மிகவும் பதற்றமாகவும் கோபமாகவும் இருந்தார் என அந்தப் பயணிகளில் ஒருவர் புலனாய்வாளர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ஜனவரி ஒன்றாம் தேதி தீ விபத்து தொடங்கிய நேரத்தில் அவர் இருந்த இடத்தை அவரது தொலைபேசி தரவுகளை பயன்படுத்தி அதிகாரிகள் கண்டறிந்தனர். ஆனால், விசாரணையின் போது, அவர் தவறான தகவல் அளித்து மலை அடிவாரத்தில் இருந்ததாகக் கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தீ விபத்து நடந்த நேரத்தில், ரிண்டர்க்னெக்ட் உபர் செயலியை பயன்படுத்தவில்லை. ஆனால், ஜிபிஎஸ் தரவு மற்றும் பிற தகவல்களை கொண்டு, அவரது இருப்பிடத்தைத் தீர்மானிக்க, மத்திய மது, புகையிலை, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பணியகத்துடன் (ATF)நெருக்கமாக இணைந்து பணியாற்றினோம் என உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ரிண்டர்க்னெக்ட்கும் தீ விபத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதும், உபர் தளத்தை அணுக அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை உடனடியாக நீக்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புயலால் மேலும் பரவிய தீ

பட மூலாதாரம், Justice Department

'சாட்ஜிபிடியிடம் ஆலோசனை'

தீயை அணைக்க முயற்சிக்கும் தீயணைப்பு வீரர்களின் வீடியோக்கள் உட்பட, தொலைபேசியில் தீ விபத்துடன் தொடர்புடைய பல ஆதாரங்களை ரிண்டர்க்னெக்ட் வைத்திருந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புத்தாண்டு தின நள்ளிரவுக்குப் பிறகு, அவர் 911 என்ற அவசர எண்ணை பலமுறை அழைத்ததாகவும், ஆனால் அவரது மொபைல் இணைப்பு பலவீனமாக இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், ரிண்டர்க்னெக்ட் "உங்களது சிகரெட்டால் தீப்பிடித்தால் அது உங்கள் பொறுப்பா?" என சாட்ஜிபிடியிடம் கேட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரிண்டர்க்னெக்ட், "தீயை அணைக்க முயற்சித்ததாகத் தோன்றும் ஆதாரங்களை" உருவாக்க முயன்றார் என புலனாய்வாளர்கள் கூறினர்.

"தீ விபத்து தொடர்பான வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வகையிலான விளக்கத்தை உருவாக்க விரும்பினார்" எனவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது

2025 ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், ரிண்டர்க்னெக்ட் பதற்றமாக நடந்து கொண்டார். தீயை மூட்டியது யார் என்று கேட்கும் போதெல்லாம், அவரது கழுத்து நரம்பு துடித்தது என புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

'சாட்ஜிபிடியிடம் ஆலோசனை'

பட மூலாதாரம், Getty Images

2024 ஜூலை மாதத்தில், தீ வைத்ததாகக் கூறப்படுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு, ரிண்டர்க்னெக்ட் சாட்ஜிபிடியிடம் எரியும் காடு மற்றும் தீயிலிருந்து ஓடும் மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய ஒரு படத்தை உருவாக்க கேட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

"ஓவியத்தின் நடுவில், வறுமையில் வாடும் லட்சக்கணக்கான மக்கள், பெரிய டாலர் சின்னம் கொண்ட பிரமாண்டமான வாயிலைக் கடந்து செல்ல முயல்கிறார்கள்.

வாயிலின் மறுபக்கத்தில் பணக்காரர்கள் குழுவாக கூடியிருக்கிறார்கள்.

அவர்கள் உலகம் எரிவதைப் பார்த்து மகிழ்கிறார்கள்; மக்கள் போராடுவதைப் பார்த்து ரசித்து சிரித்து,மகிழ்ந்து ஆடுகிறார்கள்" என படத்தை உருவக்கும்போது சாட்ஜிபிடியிடம் அவர் பிராம்ப்ட் கொடுத்திருந்தார் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

தீ வைத்ததாகக் கூறப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ரிண்டர்க்னெக்ட் சாட்ஜிபிடியிடம் ஒரு செய்தியை உள்ளிட்டதாகக் கூறப்படுகிறது, அதில் "என்னிடம் இருந்த பைபிளை நான் உண்மையாக எரித்தேன். அது அருமையாக இருந்தது. நான் மிகவும் விடுதலை பெற்றதாக உணர்ந்தேன்"எனக் கூறப்பட்டிருந்தது.

கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், இந்தக் கைது நடவடிக்கை "தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கலிபோர்னியர்களுக்கு ஒரு தீர்வை அளிக்கும் முக்கியமான படி" என்று கூறினார்.

மேலும், தீ விபத்து தொடர்பான அரசின் விசாரணைக்கு முழுமையான ஆதரவு அளிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce80r9y5lnjo