Aggregator

Tourist Family Review: இலங்கை அகதிகள் கதையில் சிரிப்புடன் இழையோடும் அரசியல்; இந்த டூர் நல்லாருக்கே!

2 months ago
ஹீரோயிசம் காட்டாத சசிகுமார்.. அயோத்தியில் இருந்து டிராக்கை மாற்றிய ஃபேமிலி மேன் சசிகுமார் இயக்குனராக அறிமுகமாகி இப்பொழுது முழு நேர நடிகராக மாறிவிட்டார். இயக்குனர், நடிகர், புரொடியூசர் என பல அவதாரங்கள் வைத்திருக்கிறார். சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியன், போராளி,கிடாரி போன்ற ஏழு படங்களை இதுவரை இவர் தயாரித்தும் உள்ளார். இவரது ஃபேமிலி மேன் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. சசிகுமாரின் ஃபேமிலி மேன் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் இவர் மூன்று படங்கள் நடித்துள்ளார், மூன்றுமே வழக்கத்திற்கு மாறாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக அமைந்துள்ளது. அயோத்தி, கருடன், நந்தன் என வெவ்வேறு கதை அம்சம் கொண்ட படமாக தேர்ந்தெடுத்துள்ளார். அயோத்தி படம் கொடுத்த வெற்றிக்கு பின்னர் இப்படி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சசிகுமார். நாளை ரிலீஸ் ஆக உள்ள பேமிலி மேன் படம் இன்று பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்தியேக காட்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. படம் நன்றாக இருக்கிறது என்று படத்தை பார்த்தவர்கள் தங்களுடைய கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். இலங்கையில் ஏற்படும் பொருளாதார பிரச்சனை காரணமாக விலைவாசி உயர்கிறது. இதனை சமாளிக்க முடியாமலும், பாதுகாப்பு கருதியும் இலங்கையை விட்டு குடும்பத்தோடு ராமேஸ்வரம் வந்து இறங்குகிறார் சசிகுமார். அவர் இங்கு சந்திக்கும் பிரச்சனை தான் கதை. இவர்களுடன் ரமேஷ் திலக் பக்ஸ் போன்றவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஈழத்தமிழர்களாக தமிழ்நாட்டுக்கு வந்து, இங்கே அவர்கள் பண்ணும் அட்ராசிட்டி தான் படம். முழுக்க முழுக்க காமெடியாக கொடுத்துள்ளார் புதுமுக இயக்குனர் அபிஷன் ஜிவினித். நாளை ரிலீசாக உள்ள இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பிரீடம் , நானா, எவிடன்ஸ், பகைவனுக்கும் அருள்வாக்கு என நான்கு படங்கள் கையில் வைத்திருக்கிறார். Safi Congress

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 months ago
திட்டீட்டால் போச்சு! சுவியரை நான் புகழவில்லை! அவருக்கு செய்வினை சூனியம் வைத்தது செம்பா!!😜 அந்த நேரத்தில் ரஸ்ஸல்ஸிடம் கொடுக்கவேண்டிய ஓவரை மோயீனிடம் கொடுத்தது ரஹானேயின் தவறு! என்னை பொறுத்தமட்டில் ரஹானேயைவிட சுனில் நாராயண் நல்ல கேப்டன்!

Tourist Family Review: இலங்கை அகதிகள் கதையில் சிரிப்புடன் இழையோடும் அரசியல்; இந்த டூர் நல்லாருக்கே!

2 months ago
டூரிஸ்ட் பேமிலி- விமர்சனம். சக மனிதர்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் படைப்பு. வல்வெட்டித்துறையில் இருந்து டூரிஸ்ட் ஆக இல்லாமல் கிட்டத்தட்ட அகதி போல வந்திறங்கிறது சசிகுமார் குடும்பம். இந்தச் சூழலில் ராமேஸ்வரத்தில் நடக்கும் குண்டுவெடிப்பில் இந்தக் குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை சந்தேகப்படுகிறது. வறுமை காரணமாக தாய்மண் விட்டு தமிழ்நாடு திரும்பிய இந்தக் குடும்பம் இந்தச் சூழலை எப்படிக் கடந்தது என்பதே படத்தின் கதை. கதாநாயகன் சசிகுமார் அக்கதையின் ஆழத்தை உணர்ந்து நன்றாக நடிக்க முயற்சித்துள்ளார். சிம்ரன் படத்தின் கனம் உணர்ந்து அசத்தியுள்ளார். இவர்களை எல்லாம் ஓரங்கட்டி அநாசயமாக ஸ்கோர் செய்கிறார் கமலேஷ் ஜெகன். இவர் ராட்சசி படத்தில் ஜோதிகாவிடம் ப்ரபோஸ் செய்யும் சிறுவனாக நடித்தவர். யோகிபாபுவை விட சூழலுக்கேற்ப எதாவது பேசிவிடும் கமலேஷ் ஜெகன் தான் படத்தின் கலகலப்பிற்கு கியாரண்டி தருகிறார். ரமேஷ்திலக் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இசை படத்தின் ஒரு கேரக்டராக ரோல்ப்ளே செய்துள்ளது. ஒளிப்பதிவில் நல்ல நேர்த்தியைக் கடைப்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர். எடிட்டிங்,கலை இயக்கம் உள்பட அனைத்து அம்சங்களும் படத்தில் சிறப்பாக கைகூடியுள்ளது. ஒரு நல்ல கதையை எடுத்து, சிறப்பான திரைக்கதை மூலம் பார்வையாளர்களை படத்தின் இறுதிவரை கட்டிப்போட்டுள்ளார் இயக்குநர். சிறுசிறு விசயங்கள் படத்தில் செயற்கையாக தெரிந்தாலும், படத்தின் முடிவு நமக்குள் ஒரு பாசிட்டிவிட்டியை ஏற்படுத்துவதால் இந்த விடுமுறையை நாம் டூரிஸ்ட் பேமிலியோடு கழிக்கலாம். -வெண்பா தமிழ்.- Thangam TV

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!

2 months ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 12.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்! இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. வாக்காளர்கள் இன்று மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.. அதன்படி மதியம் 12 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 30% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா – 30 % பதுளை – – 36 % மொனராகலை – 32 % அனுராதபுரம் – 30 % யாழ்ப்பாணம் – 18 % மன்னார் – 40 % வவுனியா – 39.5 % திகாமடுல்ல – 31% கம்பஹா – 20 % மாத்தறை – 42 % களுத்துறை 20 % பொலனறுவை – 34 % கொழும்பு – 28 % புத்தளம் – 36 % காலி – 35 % இரத்தினபுரி – 30 % அம்பாந்தோட்டை – 19 % கிளிநொச்சி – 22 % மாத்தளை – 25 % கேகாலை – 33 % கண்டி – 21 % மட்டக்களப்பு – 23 % குருநாகல் – 30 % திருகோணமலை – 36% ##################################################################################### உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: பி.ப 1 மணிவரையான தேர்தல் நிலவரம்! 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் இன்று (06) இன்று பிற்பகல் 1 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% ஐ தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு பதுளை – 48% இரத்தினபுரி – 37% மட்டக்களப்பு – 38% கேகாலை – 40% திகாமடுல்ல – 41% புத்தளம் – 38% அநுராதபுரம் – 40% மொனராகலை – 43% கம்பஹா – 36 % ############################################################## உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: பி.ப 2 மணிவரையான தேர்தல் நிலவரம்! 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் இன்று (06) இன்று பிற்பகல் 2 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% ஐ தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு கொழும்பு மாவட்டத்தில் 38 சதவீதம் கம்பஹா மாவட்டத்தில் 36 சதவீதம் களுத்துறை மாவட்டத்தில் 45 சதவீதம் அநுராதபுரம் மாவட்டத்தில் 40 சதவீதம் நுவரெலியா மாவட்டத்தில் 53 சதவீதம் திகாமடுல்ல மாவட்டத்தில் 48 சதவீதம் பொலன்னறுவை மாவட்டத்தில் 45 சதவீதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 சதவீதம் பதுளை மாவட்டத்தில் 46 சதவீதம் மன்னார் மாவட்டத்தில் 54 சதவீதம் இரத்தினபுரி மாவட்டத்தில் 50 சதவீதம் கிளிநொச்சி மாவட்டத்தில் 39 சதவீதம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 42 சதவீதம் மொனராகலை மாவட்டத்தில் 46 சதவீதம் https://athavannews.com/2025/1430808

தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பிரசார பாடல்: தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் எதிர்ப்பு

2 months ago
தமிழ்நாட்டு பெருந்தலைவருக்கு திரள்நிதி திரளும் இரகசியத்தை ராமலிங்கம் சந்திரசேகர் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்

விடுதலை புலிகளின் மகளீர் படையணி தளபதி குமுதினி உயிரிழப்பு!

2 months ago
கண்ணீர் அஞ்சலிகள், பல முன்னாள் போராளிகள் குறைந்த வயதில் சுகயீனம் காரணமாக உயிர் இழப்பது வேதனை அளிக்கின்றது.

பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

2 months ago
பகிடிவதை தொடர்பில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது! ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவன் ஹோமாகம பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 7 பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் அங்கு தங்கியிருந்த அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றுமொரு மாணவரை பலமாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காயமடைந்த பல்கலைக்கழக மாணவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1430799

36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!

2 months ago
இந்தியாவில் நாளை மெகா பாதுகாப்பு ஒத்திகை! இந்தியாவில் நாளை (07) ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு தயார்நிலை பயிற்சியில், நாட்டில் மொத்தம் 259 இடங்கள் பங்கேற்கவுள்ளன. விமானத் தாக்குதல் சைரன்கள் மற்றும் மின்தடை போன்ற சூழ்நிலைகளுக்கு முதல் பதிலளிப்பதற்கான பயிற்சியில் இந்த நடவடிக்கை முதன்மையாக கவனம் செலுத்தும். ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகமாக இருப்பதால் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. 1971 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடத்தப்படும் இதுபோன்ற முதல் பயிற்சி இதுவாகும். மே 7 ஆம் திகதி திட்டமிடப்பட்ட நாடு தழுவிய மாதிரிப் பயிற்சிக்கு முன்னதாக, நாடு முழுவதும் சிவில் பாதுகாப்பு தயார்நிலையை மதிப்பிடுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் செவ்வாயன்று (06) உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் ஒரு முக்கியமான கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். 2010 இல் அறிவிக்கப்பட்ட 244 நியமிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு மாவட்டங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. https://athavannews.com/2025/1430804

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 months ago
கம்மின்சை குறை சொன்னிங்கள் நேற்று நன்றாக விளையாடினார். ரசலை குற்றம் சொன்னீர்கள். KkR இன் கடைசி போட்டியின் சிறந்த வீரருக்கான விருதினை பெற்றார். சாம் கரணை திட்டினீங்கள். 47 பந்தில் 88 அடித்தார். மொயின் அலியை புகழ்ந்தீர்கள். ஆள் ஒரு ஓவருக்கு 5 ஆறு ஓட்டங்களை வழங்கினார். சுவியையும் புகழ்ந்தீர்களோ தெரியாது. முதல் இடத்தில் இருந்து பின்னுக்கு போய் கொண்டு இருக்கிறார். என்னையும் ஒருக்கா திட்டி விட்டிங்கள் என்றால் புண்ணியமாக போகும். போட்டியில் முன்னுக்கு வருவேன்.😄