Aggregator

ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது - சிறைச்சாலைகள் ஆணையாளர்

2 months 1 week ago
ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது - சிறைச்சாலைகள் ஆணையாளர் 26 August 2025 தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகம், திறன்கள், தொழில்துறைகள்) ஜகத் வீரசிங்கவிடம், எமது செய்தி சேவை வினவிய போது, ”மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பெரும்பாலும் சாத்தியமில்லை” என்று தெரிவித்தார். அவருக்கு மேலும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதால், அந்தச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார். இருப்பினும், சூம் (Zoom) தொழில்நுட்பம் மூலம் ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தால், அது தொடர்பாகத் தேவையான வசதிகளை வழங்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜகத் வீரசிங்க மேலும் தெரிவித்தார். https://hirunews.lk/tm/416623/ranil-wickremesinghe-cannot-be-produced-before-the-fort-magistrates-court-commissioner-of-prisons

ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது - சிறைச்சாலைகள் ஆணையாளர்

2 months 1 week ago

ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது - சிறைச்சாலைகள் ஆணையாளர்

26 August 2025

1756180864_5770291_hirunews.jpg

தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (ஊடகம், திறன்கள், தொழில்துறைகள்) ஜகத் வீரசிங்கவிடம், எமது செய்தி சேவை வினவிய போது, ”மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பெரும்பாலும் சாத்தியமில்லை” என்று தெரிவித்தார். 

அவருக்கு மேலும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதால், அந்தச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார். 

இருப்பினும், சூம் (Zoom) தொழில்நுட்பம் மூலம் ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வந்தால், அது தொடர்பாகத் தேவையான வசதிகளை வழங்கச் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜகத் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

https://hirunews.lk/tm/416623/ranil-wickremesinghe-cannot-be-produced-before-the-fort-magistrates-court-commissioner-of-prisons

கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு

2 months 1 week ago
கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு கொழும்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் நகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. ஏதேனும் வன்முறை ஏற்பட்டாலோ அல்லது சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராகவோ சட்ட நடவடிக்கை எடுக்க தெளிவான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன, கூடுதலாக, எந்தவொரு அமைதியின்மைக்கும் விரைவாக பதிலளிக்க கலகத் தடுப்புப் படைகள் மற்றும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. https://www.tamilmirror.lk/செய்திகள்/கலகம்-தடுக்கும்-படைகள்-குவிப்பு/175-363499

கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு

2 months 1 week ago

கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு

 கொழும்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் நகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

ஏதேனும் வன்முறை ஏற்பட்டாலோ அல்லது சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராகவோ சட்ட நடவடிக்கை எடுக்க தெளிவான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன,  

கூடுதலாக, எந்தவொரு அமைதியின்மைக்கும் விரைவாக பதிலளிக்க கலகத் தடுப்புப் படைகள் மற்றும் கூடுதல் பொலிஸ் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/கலகம்-தடுக்கும்-படைகள்-குவிப்பு/175-363499

நான்கு காணொலிகளில் ரணில் கைதுக்கு விளக்கம்

2 months 1 week ago
நான்கு காணொலிகளில் ரணில் கைதுக்கு விளக்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கமறியல் தொடர்பாக நான்கு விளக்கக் காணொலிகளை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த விளக்கங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் வெவ்வேறு கோணங்களில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. சமூகவியல் விளக்கத்தை களனி பல்கலைக்கழக மக்கள் தொடர்புத் துறைத்தலைவர் மனோஜ் ஜிந்தாச வழங்கியுள்ளார். மத மற்றும் நல்லிணக்கக் கண்ணோட்டத்தை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஓமரே புண்யசிறிதேரர் வழங்கியுள்ளார். சட்ட விளக்கத்தை மூத்த சட்டக்கல்வியலாளர் பேராசிரியர் பிரதிபா மகாநாமஹேவா வழங்கியுள்ளார். அதேநேரம் ஊடக மற்றும் சமூகவியல் கண்ணோட்டத்தை ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன வழங்கியுள்ளார். https://newuthayan.com/article/நான்கு_காணொலிகளில்_ரணில்_கைதுக்கு_விளக்கம்

நான்கு காணொலிகளில் ரணில் கைதுக்கு விளக்கம்

2 months 1 week ago

நான்கு காணொலிகளில் ரணில் கைதுக்கு விளக்கம்

1857670224.jpeg

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விளக்கமறியல் தொடர்பாக நான்கு விளக்கக் காணொலிகளை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த விளக்கங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் வெவ்வேறு கோணங்களில் இருந்து வழங்கப்பட்டுள்ளன.

சமூகவியல் விளக்கத்தை களனி பல்கலைக்கழக மக்கள் தொடர்புத் துறைத்தலைவர் மனோஜ் ஜிந்தாச வழங்கியுள்ளார். மத மற்றும் நல்லிணக்கக் கண்ணோட்டத்தை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஓமரே புண்யசிறிதேரர் வழங்கியுள்ளார். சட்ட விளக்கத்தை மூத்த சட்டக்கல்வியலாளர் பேராசிரியர் பிரதிபா மகாநாமஹேவா வழங்கியுள்ளார். அதேநேரம் ஊடக மற்றும் சமூகவியல் கண்ணோட்டத்தை ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன வழங்கியுள்ளார்.

https://newuthayan.com/article/நான்கு_காணொலிகளில்_ரணில்_கைதுக்கு_விளக்கம்

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

2 months 1 week ago
பாகம் - 2 15.9.90 அன்று தற்காலிகமாக நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அடுத்த இடத்தை நோக்கிச் சென்றோம். இந்தப்பிரயாணம் சுமார் நான்கு மணித்தியாலங்கள் நீடித்தது. இதில் ஒரு மணித்தியாலம் நடைப்பயணம். காட்டின் நடுவே அமைந்திருந்த ஒரு பெரிய முகாமுக்குச் சென்றோம். அடர்ந்த கானகத்தினூடே ஒரு குட்டி நகரம் போல் அந்த முகாம் காட்சியளித்தது. புலிகளின் வைத்தியசாலை அரசியற் பிரிவின் தலைமைச் செயலகம் போன்றவை அங்கே அமைந் திருந்தன. அரசியற் பொறுப்பாளர் ரூபன் பெரும்பாலும் இங்குள்ள அலுவலகத்தில் தான் தங்கியிருப்பார். இவரது அலுவலகம் காட்டிலேயே அமைந்திருந்தாலும் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் எவ்வாறு அரசியற் பிரிவின் செயலகம் அமைந்திருக்குமோ அதே போன்ற அமைப்புடன் விளங்கியது. முகாமைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட மாத்தயா அவர்கள் வழியில் சந்திக்கும் ஒவ்வொரு போராளிகளுடனும் உரையாடினார். க. பொ. த (சாதாரணம்) வகுப்பு வரை படித்துள்ள 21 வயதான போராளியொருவரை முதலில் சந்தித்தார். தம்பி உங்கள் ஊர் எது? ஆலங்கேணி. ஆலங்கேணியில் இப்ப எவரும் இல்லையே. அப்பா அம்மா எல்லோரும் எங்கே? அகதியாகப் போய்விட்டனர். எங்கே போனார்கள்? எங்கையென்று தெரியாது. பெரும்பாலும் முல்லைத்தீவுப் பக்கமாகத்தான் போயிருப்பினம். போகும்போது அவர்களைச் சந்திக்க முடிந்ததா? ஓம். இந்த வழியால்தான் போனவை. அப்ப நான் சென்றில் நிண்டனான். என்ன சொன்னவை? “நீ தப்பி விட்டாய் என்று சொல்லி விட்டுப் போனவை” எனக்கு யாழ்ப்பாண நிலைமைதான் உடனே நினைவுக்கு வந்தது. எத்தகைய போர் நிலைமை இருந்தாலும் தங்களுடைய பிள்ளைகள் இயக்கத்துக்குச் சென்றால் எப்படியாவது அவர்களை மீட்டெடுக்கப் பெற்றோர் என்ன பாடுபடுவார்கள்? அனைத்துப் பெற்றோரும் தமக்குப் பெண் பிள்ளைகள் உண்டு. இவர் ஒருவர்தான் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று சொல்வார்கள். போராட்டத்தினால் விளைந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி எந்த நாட்டுக்காவது ‘அகதி’யாக அனுப்பப் பார்ப்பார்கள். ஆனால் கிழக்கிலோ தாம் அடைந்த அகதிநிலை பிள்ளைகளுக்கு வரக்கூடாது. இயக்கத்துக்குள் செல்வதனால் ஒருவன் தப்பிவிடுகிறான் என்ற மனோபாவம். வடக்கும் கிழக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அங்கே சூழ்நிலையின் கொடூரம் மக்களை உறுதியாக்குகிறது. தொண்ணூறுக்கு மேற்பட்ட முகாம்கள் உள்ள திருமலையில் இயக்கத்துக்குள் சென்றவன் தப்பிவிட்டான் என்று எண்ணுகிறார்கள். யாழ்ப்பாணத்திலோ மண்போனாலும் பரவாயில்லை. மகன் வந்தால் போதும் என்றநிலை. மேலும் சிலரை மாத்தயா விசாரித்தார். பொதுவாக எல்லோரிட மிருந்தும் ஒரே பதில். வீட்டுக்காரர் எங்கே? தெரியாது. இப்ப எங்கே போயிருப்பினம் என்றுநினைக்கிறீங்கள்? தெரியாது. உயிரோட இருக்கினம் எண்டாவது தெரியுமோ? தெரியாது. குழுத் தலைவராக/இருக்கும் ஒருவரை அவர் விசாரித்தார். குடும்பத்தில் மூன்று ஆண் பிள்ளைகள். ஒரேயொரு சகோதரி. மூன்று ஆண்பிள்ளைகளுமே இயக்கத்தில்தான் உள்ளனர். தற்போதைய போரில் காயமடைந்து யாழ்ப் பாணம் வந்த அந்தப்போராளி திருமலைக்குச் செல்லும் வழியில் முல்லைத்தீவில் அகதிகளாக இருக்கும் தாய், தந்தை யரைச் சந்தித்தார். உணவு பரிமாறும் போது அந்தத் தாய் சகோதரியின் நிலைமையை மட்டும் அறிந்துவிடு என்று கேட்டுக் கொண்டார். தொழில் வாய்ப்பின் நிமித்தம் மட்டக்களப்புக்குச் சென்ற அவர் அங்கே என்னபாடோ தெரியாது என்று கவலைப்பட்டார். சகோதரியின் நிலை என்ன என்பதை இனித்தான் அறிய என்று முயற்சிக்க வேண்டும் என்று அப்போராளி அவரிடம் தெரி வித்தார். "குடும்பமே சிதறிய நிலையிலும் இவர்கள் போராட்டத்திலிருந்து விலகும்படி பிள்ளைகளைக் கேட்கவில்லை. தங்களுக்கு உழைத்துத் தர யாருமே இல்லாத நிலையிலும் இந்தச் சுமைகளை தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை அவர்கள் அடைந்துவிட்டார்கள். யாழ்ப்பாணத்திலோ சகோத ரிகளை கரைசேர்க்க வேண்டும். அண்ணன் திருமணம் செய்துவிட்டார். இனி குடும்பப் பொறுப்பு எனது தலையில் தான் என்று கூறி போராட்டத்திலிருந்து தளர்ந்து போகிறார்கள். பொதுவாக எந்தக்குடும்பத் தைப் பார்த்தாலும் மனைவி ஓரிடம், கணவன் ஓரிடம் தாய் தந்தையர் ஓரிடம் பிள்ளைகள் வேறிடம் என்ற நிலைமைதான். இப்படி இருந்தும் இவர் களைப் பொறுத்தவரை போராட்டம் பற்றிய தெளிவும் உறுதியும் உள்ளது" என்று கூறினார் மாத்தயா. எமது இருப்பிடத்திற்குத் திரும்பிவந்து எமக்காக வைக்கப்பட்டிருந்த உணவைப் பார்த்தோம். பாண், பணிஸ் போன்றவை இருந்தன. இவற்றை எங்கிருந்து பெற்றுக் கொள்கிறீர்கள் என்று விசாரித்தோம். நாம் சொந்தமாக பேக்கரி அமைத்து எமது தேவைக்கென பாண், பணிஸ் என்பவற்றைத் தயாரித்துக் கொள்கிறோம் என்றார் பதுமன். அப்போது ரூபன் “ஒவ்வொரு முகாமுக்கும் தேவை மரக்கறி வகைகளை நாமே உற்பத்தி செய்து கொள்கிறோம்” என்றார். யாழ்ப்பாணத்தில் அரிதாகக் கிடைக்கும் மரக்கறிகளை அங்கே சாதாரணமாக காணமுடிந்தது. அடுத்து திருமலை மாவட்ட அரசியற் பொறுப்பாளரின் அலுவலகத்துக்குச் சென்றோம். மாவட்டத்தின் நிலைமைபற்றி விசாரித் தோம். மூதூர்ப் பகுதியில் மட்டும் ஆயிரத்து ஐம்பத்தேழு வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்றார். எவ்வளவு மக்கள் வெளியேறி யுள்ளார்கள் என்று கேட்டோம். கங்குவேலி 180 குடும்பம் 834 பேர், புளியடிச் சோலை 125 குடும்பம் 502 பேர், பாரதிபுரம் 25 குடும்பம் 90 பேர்... என்று ஒரு நீண்ட பட்டியலைக் காட்டி னார். அகதிகளாக வெளிமாவட்டங்களுக்குச் சென்ற வர்களின் பெயர் விபரம் போன்ற பட்டியலைக் கூடக் கண்டோம். காட்டின் மத்தியில் இருந்து கொண்டு இவ்வளவு தெளிவாக புள்ளி விபரங்களைப் பெற்றுக்கொள்கிறீர்களே! என்று வியந்தோம். நாளைக்கு எனக்கு ஏதாவது ஒண்டெண்டாலும் எனக்குப் பிறகு இந்தப் பொறுப்பை எடுப்பவர் எல்லா விபரத்தையும் உடனே தெரியவேணும் தானே. அதுதான் எப்படி எண் டாலும் எஞ்சியிருப்பவர்கள் மூலம் இவ்விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறன்” என்றார். திருக் கோணமலை மாவட்டத்தில் யுத்தம் இவர் மீதான தாக்குதலுடன் தான் ஆரம்பமானது என்பது நினைவுக்கு வந்தது. அந்தத் தாக்குதலில் இவருடன் கூடச் சென்ற இருவர் உயிரிழந்தனர். இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் இவரையும் துளைத்தன தற்போதும் முதுகில் குண்டு இருப் பதனால் இயல்பாக கடமைகளை ஆற்றமுடியாத நிலை. எனவே நாளைக்கு எனக்கு ஒண்டெண்டாலும் என்று தொடங்கி இவர்கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் என் கண்கள் பனித்தன. இதுதான் புலிகளின் பலம், இம்மாதிரி இயக்கத்தை கட்டி வளர்த்ததே புலிகளின் தனித் துவத்துக்குக் காரணம் என நினைத்துக் கொண்டேன். அகதிகள் முகாம்களின் நிலை எப்படியுள்ளது? என்று கேட்டேன். “திருமலையில் இருப்பவை அகதிமுகாம்கள் என்ற கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள் அவை தடுப்பு முகாம்கள்”என்று ஆரம்பித்து அவை பற்றி கூறத் தொடங்கினார் ரூபன். (தொடரும்)

சமஸ்டி சர்வதேச விசாரணையை கைவிட்ட தமிழரசுக்கட்சி.

2 months 1 week ago
80 ஆண்டு காலமாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் நடந்த ஒப்பந்தங்கள் பற்றி விலாவாரியாக பாராளுமன்றில் பேசிய சிறிதரன் அதற்கு தீர்வாக எந்தத் திட்டத்தையும் வைக்கவில்லையே என்று கஜேந்திரகுமார் ஆதங்கம்.

சமஸ்டி சர்வதேச விசாரணையை கைவிட்ட தமிழரசுக்கட்சி.

2 months 1 week ago

80 ஆண்டு காலமாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் நடந்த ஒப்பந்தங்கள் பற்றி விலாவாரியாக பாராளுமன்றில் பேசிய சிறிதரன்

அதற்கு தீர்வாக எந்தத் திட்டத்தையும் வைக்கவில்லையே என்று கஜேந்திரகுமார் ஆதங்கம்.

வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு : புதிய கலாசாரத்தை இளைஞர்கள் விரும்புவது ஏன்?

2 months 1 week ago
ஒரு சின்ன கோட்டுக்கு கீழ பெரிய கோட்ட கீறிப்போட்டு கதை விடுறியள் என்ன? 😀 இதற்காகத்தானே சீனா மற்றும் இந்தியாவை நோக்கி மேற்குலக வியாபாரிகள் தலை தெறிக்க ஓடுகின்றார்கள்.மலிஞ்ச கூலி நிகர லாபம். 😎

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

2 months 1 week ago
உக்ரேனுக்கு சாத்துப்படி டெய்லி தானே நடக்குது. 😎 ஆனால் ஒன்று மேற்குலகம் காசாவில் செய்யும் அழிவுகளை போல் ரஷ்யா உக்ரேனுக்கு செய்யவில்லை. செய்யவும் நினைக்கவில்லை.மக்களை எலும்பும் தோலுமாக அலைய விடவுமில்லை. ஒரே நேரத்தில் இரண்டு அழிவுப்போர்கள் நடக்கின்றன. அதில் எது மோசமானது எனவும் எது எதற்காக போராடுகின்றார்கள் எனவும் யார் பின்னணியில் இருக்கின்றார்கள் எனவும் கவனித்து பாருங்கள்.ஒன்று பலஸ்தீனம் மற்றது உக்ரேன். ஒரு உக்ரேனியனுக்கும் பட்டினி என்றால் என்னவென்றே தெரியாது. எல்லோரும் சொர்க்கக்தில் இருப்பது போல் இருக்கின்றார்கள்.இப்படியொரு காட்சியை உக்ரேன் யுத்தங்களில் கண்டிருக்கின்றீர்களா? 👇 ☹ படத்திற்கு நன்றி யுனிசெப்.

கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் நடித்த பிரமாண்ட காட்சிகளை நீக்கியது ஏன்? இயக்குநர் செல்வமணி பேட்டி

2 months 1 week ago
நான் விரும்பி பார்த்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய துணையாக இருந்தது. https://www.youtube.com/watch?v=VBx3YwJKuR0 https://youtu.be/VBx3YwJKuR0?si=WoXWUt8u0YPPi09o

வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு : புதிய கலாசாரத்தை இளைஞர்கள் விரும்புவது ஏன்?

2 months 1 week ago
உங்களுக்கு எங்கள் திறமையில் பொறாமை. வேலை செய்யாமலே சம்பளம் எடுக்க நினைப்பவர்கள் மத்தியில் குறைய நேரம் வேலை செய்து அதிக சம்பளம் எடுக்க நினைப்பவர்கள் பரவாயில்லை தானே. வாங்கக்கூடிய அளவுக்கு அதிகநேரம் வேலை வாங்கி கொடுக்கக்கூடிய அளவுக்கு மட்டமான அளவு சம்பளத்தை கொடுப்பதில்தான் பெரும்பாலான நிறுவனங்கள் நாட்டம் காட்டுகின்றன.