Aggregator
தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பிரசார பாடல்: தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் எதிர்ப்பு
தமிழ்நாட்டு பெருந்தலைவருக்கு திரள்நிதி திரளும் இரகசியத்தை ராமலிங்கம் சந்திரசேகர் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்
36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!
👉 https://www.facebook.com/reel/587160463776540 👈 இந்திய / பாகிஸ்தான் எல்லையில், "குறளி வித்தை" காட்டும் படையினர்.
விடுதலை புலிகளின் மகளீர் படையணி தளபதி குமுதினி உயிரிழப்பு!
கண்ணீர் அஞ்சலிகள், பல முன்னாள் போராளிகள் குறைந்த வயதில் சுகயீனம் காரணமாக உயிர் இழப்பது வேதனை அளிக்கின்றது.
சிரிக்க மட்டும் வாங்க
சிரிக்கலாம் வாங்க
பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
பகிடிவதை தொடர்பில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது! ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவன் ஹோமாகம பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 7 பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஹோமாகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் அங்கு தங்கியிருந்த அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றுமொரு மாணவரை பலமாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காயமடைந்த பல்கலைக்கழக மாணவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1430799
36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!
இந்தியாவில் நாளை மெகா பாதுகாப்பு ஒத்திகை! இந்தியாவில் நாளை (07) ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு தயார்நிலை பயிற்சியில், நாட்டில் மொத்தம் 259 இடங்கள் பங்கேற்கவுள்ளன. விமானத் தாக்குதல் சைரன்கள் மற்றும் மின்தடை போன்ற சூழ்நிலைகளுக்கு முதல் பதிலளிப்பதற்கான பயிற்சியில் இந்த நடவடிக்கை முதன்மையாக கவனம் செலுத்தும். ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகமாக இருப்பதால் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. 1971 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடத்தப்படும் இதுபோன்ற முதல் பயிற்சி இதுவாகும். மே 7 ஆம் திகதி திட்டமிடப்பட்ட நாடு தழுவிய மாதிரிப் பயிற்சிக்கு முன்னதாக, நாடு முழுவதும் சிவில் பாதுகாப்பு தயார்நிலையை மதிப்பிடுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் செவ்வாயன்று (06) உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் ஒரு முக்கியமான கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். 2010 இல் அறிவிக்கப்பட்ட 244 நியமிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு மாவட்டங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. https://athavannews.com/2025/1430804
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கம்மின்சை குறை சொன்னிங்கள் நேற்று நன்றாக விளையாடினார். ரசலை குற்றம் சொன்னீர்கள். KkR இன் கடைசி போட்டியின் சிறந்த வீரருக்கான விருதினை பெற்றார். சாம் கரணை திட்டினீங்கள். 47 பந்தில் 88 அடித்தார். மொயின் அலியை புகழ்ந்தீர்கள். ஆள் ஒரு ஓவருக்கு 5 ஆறு ஓட்டங்களை வழங்கினார். சுவியையும் புகழ்ந்தீர்களோ தெரியாது. முதல் இடத்தில் இருந்து பின்னுக்கு போய் கொண்டு இருக்கிறார். என்னையும் ஒருக்கா திட்டி விட்டிங்கள் என்றால் புண்ணியமாக போகும். போட்டியில் முன்னுக்கு வருவேன்.😄
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Alice Capsey · Kavya Maran appear after long time Hello everyone....... ! அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ...... ! 😂
சிந்தனைக்கு சில படங்கள்...
தோட்டத்தில் கடினமான வேலை செய்யும் விவசாயி . .......... ! 💪
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கும்தான். எப்பவாவது SRH வென்றால் புள்ளிகள் கிடைக்கும். 2 புள்ளிகள் போயிற்றிதே.
கொஞ்சம் ரசிக்க
பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடி வதைகள் மூலம்.. சித்திரவதைகளை செய்த மாணவர்கள் கைது. யாழ்ப்பாணம்.com
சிரிக்கவும் சிந்திக்கவும் .
கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பிரசார பாடல்: தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் எதிர்ப்பு
சர்ச்சைக்குரிய பிரசாரப் பாடல்-அரசாங்கத்தின் நிலைப்பாடு! தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெளியான பிரசார பாடல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், குறித்த பாடல்களுக்கும் தமக்குமான தொடர்பை அக்கட்சி மறுத்துள்ளது. சுயாதீன கலைஞர்கள் குழுக்கள் சிலவற்றால் உருவாக்கப்பட்ட குறித்த பாடல்கள் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் முகநூல் பக்கம் இணைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பாடல் உருவாக்கம் மற்றும் பரப்புரைகளுக்கும் தேசிய மக்கள் சக்தி மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் எந்த தொடர்பும் இல்லையென தேசிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் நிஹால் அபேசிங்க மறுப்பு வெளியிட்டுள்ளார். குறித்த பாடலில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் போராட்டம் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நிலைப்பாடுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்த நிலையில், வடக்கு கிழக்கில் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது. எவ்வாறாயினும் குறித்த பாடலுடன் தமது கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லையென அமைச்சர் சந்திரசேகர் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1430747
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் -காலை 11.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்! இலங்கையில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (06) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. வாக்காளர்கள் இன்று மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.. அதன்படி காலை 11.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்! அதன்படி, வவுனியா – 37% திருகோணமலை – 28% இரத்தினபுரி – 20% கேகாலை – 25% மன்னார் – 26% அம்பாந்தோட்டை – 20% அனுராதபுரம் – 22% திகாமடுல்லா – 26% Vavuṉiyā – 37% https://athavannews.com/2025/1430778
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பகிடி வதையால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!
பகிடிவதை தொடர்பான விசாரணை; இதுவரை 10 மாணவர்கள் கைது! சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை தொடர்பான முறைப்பாடு குறித்த விசாரணைகளில் மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஏப்ரல் 29 அன்று சமனலவேவா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. விசாரணைகளைத் தொடர்ந்து, தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இருவர் இன்று (06) காலை கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் இன்று பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். இந்த முறைப்பாடு தொடர்பாக இதுவரை 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சிஐடியினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர், பகிடிவதை சம்பவத்தைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மரணம் பகிடிவதையுடன் தொடர்புடையது என்று கூறி, சக மாணவர் ஒருவர் சமனலவேவா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1430787