Aggregator

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

2 months 1 week ago
ஒருவன் இன்னொருவன் பணத்தை எடுத்ததும் அவனை “பிக்பாக்கட் திருடன்” என கூறி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் அரசியல்வாதி ஒருவன் மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடியுள்ளான். அவனை “மிஸ்டர் கிளீன்”( திருவாளர் பரிசுத்தம்) என்று கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்கின்றனர். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்கின்றனர். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கின்றனர். ஆனால் மக்கள் பணத்தை சுருட்டிய ரணில் சட்டத்திற்கும் மேலானவர் என்கின்றனர். அவரை திருடன் என்று கூறக்கூடாதாம். அவருக்கு கை விலங்கு போடக்கூடாதாம். அவரை சிறை மருத்துவனையில் தங்க வைக்க வேண்டும். அதுவும் வசதி இல்லை என்றால் அதைவிட வசதியாக பொது மருத்துவமனையில் வைக்க வேண்டுமாம். எல்லாவற்றையும்விட அவருக்கு சிறை உணவு வழங்கக்கூடாதாம். அவருக்கு வீட்டு உணவு வழங்க அனுமதிக்க வேண்டுமாம். என்னடா நியாயம் இது? அரசியல்வாதிகள் சிறிய தவறுக்காக தண்டிக்கப்படக்கூடாது என்கிறார் மகிந்த ராஜபக்சா. அதாவது மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடுவது சிறிய குற்றமாம். அதற்காக தண்டிக்கப்படக்கூடாதாம். மகிந்தா பரவாயில்லை. எங்களுடைய “தமிழ் கிளீன்” சுமந்திரன் அவர்கள் ரணிலை வெள்ளிக்கிழமை நீதிமன்றில் நிறுத்தியது தவறாம். மக்கள் பணம் 160 லட்சம் ரூபாயை திருடிய ரணிலை சிறையில் அடைத்தது தவறு. அவருக்கு உடன் பிணை வழங்கியிருக்க வேண்டும் என்று வேற கூறியிருக்கிறார். அரசியல்வாதிகளை வெள்ளிக்கிழமை கைது செய்யக்கூடாது என்றோ அல்லது கைது செய்தாலும் அவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்க்கக்கூடாது என்றோ அவர் எந்த சட்டப் புத்தகத்தில் படித்தார்? தனது நோயாளி மனைவிக்கு உணவு வழங்கவேண்டியிருப்பதால் ரணிலுக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றில் கெஞ்சினார். ஆனால் இதே ரணில் லண்டனில் தனது மனைவிக்கு சமைக்க ஒரு நாளைக்கு ஆயிரம் பவுண்ட் ( 4 லட்சம் ரூபா) சம்பளத்தில் ஒரு சமையல்காரரை நியமித்தாராம். அப்படிப்பட்ட யோக்கியரைக் காப்பாற்றத்தான் மகிந்த ராஜபக்சா முதல் சுமந்திரன் வரை பலரும் ஓடி வருகின்றனர். ரணில் கைது பல திருடர்களையும் அவர்களது கூட்டாளிகளையும் மக்களுக்கு நன்கு இனங்காட்டியுள்ளது. தோழர் பாலன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

2 months 1 week ago
லண்டனில் இரண்டு நாள் தங்கிய மனைவிக்கு சமையல் செய்ய ஒழுங்கு செய்த சமையல்காரரின் ஒரு நாள் சம்பளம் நாலு லட்சம் ரூபா. அப்படி என்ன சாப்பாட்டை அந்த சமையல்காரர் சமைத்துக் கொடுத்தார் என்று கேட்டால், றோயல் கல்லூரிக்கு ஒரு பழைய வீடும் நிறைய நூல்களும் ரணில் வழங்கியுள்ளார் என்கிறார்கள். சுமந்திரன் பதில் தருவாரா? தோழர் பாலன்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

2 months 1 week ago
வேலிக்கு ஓணான் சாட்சி... 2016ம் ஆண்டு 4 வருடங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பிரிவின் தலைவராக "எரிக் சொல்ஹம் "நியமிக்கப்பட்ட நிலையில் 2018 அந்த பதவியில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்படுகிறார்... காரணம் 22 மாதங்களில் 529 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கோண்டு 488,500 டாலர்கள் செலவு செய்த நிலையில் அதில் 76 நாட்கள் தனிப்பட்ட பயணங்களாக மேற்கொண்டமை கணக்காய்வில் பிடிபட்டது 😄 உண்மை உரைகல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

2 months 1 week ago
சிறிலங்கா ஆட்சியாளர்கள் மிகத்திறமையானதும் காலத்துக்கேற்றவாறான சிங்களத்தேசியத்தை நிலைநிறுத்தும் நகர்வுகளில் தலைசிறந்த முன்னோடிகள் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். ரணிலின் கைதின் ஊடாகத் தீவின் பல முதன்மைப் பிரச்சினைகளைப் பின்தள்ளி ஊடகங்கள் ரணிலோடு கட்டிப்புரளுகின்றன. யே.வி.பியா கொக்கா. கொழும்பு உயர்குழாம் மட்டுமா வித்தை காட்டும். நாங்களும் காட்டுவம் இல்லை என்று அனுர சிரித்துக்கொண்டு திரிகிறாராம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

2 months 1 week ago
ரணிலுக்கு வைத்தியம் பார்க்கும்... வைத்தியர், ரணிலின் கூட்டாளி. இப்போதைக்கு அவர் ரணிலை... வைத்தியசாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு அனுப்ப விட மாட்டார் போலுள்ளது. தேசிய மருத்துவமனையில் "நீரிழப்பு" கண்டறியப்பட்டு அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரணில் விக்கிரமசிங்க, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூட முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது மிகவும் சந்தேகத்திற்குரியது. இந்த மருத்துவ நோயறிதலைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன, குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் முன்னர் பல ஊழல்களுடன் தொடர்புடையவருமான "டாக்டர் ருக்ஷன் பெல்லனாவின் "கீழ் பணிபுரியும் மருத்துவர்களால் இது வெளியிடப்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டு. விக்கிரமசிங்கவின் உண்மையான நிலை குறித்து ஒரு பாரபட்சமற்ற மருத்துவ விசாரணை நடத்தப்படுவது அவசியம். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சுயாதீன மருத்துவர்கள் குழு, கூறப்பட்ட நோயறிதல் உண்மையானதா அல்லது பெல்லனாவும் அவரது கூட்டாளிகளும் நீதித்துறையை தவறாக வழிநடத்தவும் உரிய சட்ட செயல்முறையைத் தடுக்கவும் முயற்சிக்கிறார்களா என்பதை ஆராய வேண்டும். உண்மை உரைகல்

ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க

2 months 1 week ago
ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க. ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும், அவர்களுக்குப் பிரத்தியேகமான சட்டம் இல்லை, அதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும், அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் வழங்கியுள்ள ஆணையில், இது முக்கியமான விடயமாகும் எனவே அதனை விரைவில் நிறைவேற்றுவோம்” என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1444628

ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க

2 months 1 week ago

download-2-696x464-1.jpg?resize=633%2C37

ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க.

ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும், அவர்களுக்குப் பிரத்தியேகமான சட்டம் இல்லை, அதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும், அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். 

மக்கள் வழங்கியுள்ள ஆணையில், இது முக்கியமான விடயமாகும் எனவே அதனை விரைவில் நிறைவேற்றுவோம்” என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1444628

சாவகச்சேரி நகர சபை, பிரதேச சபைகளில் சைக்கிள் கட்சியினரை வெளியேற்ற வழக்கு!

2 months 1 week ago
சாவகச்சேரி நகர சபை, பிரதேச சபைகளில் சைக்கிள் கட்சியினரை வெளியேற்ற வழக்கு! சாவகச்சேரி நகர சபைக்கும், சாவகச்சேரி பிரதேச சபைக்கும் தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களின் தேர்வுகளை இரத்துச் செய்து, அவர்கள் போட்டியிட்ட வட்டாரங்களில் அடுத்த நிலையில் இருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைச் சபையின் உறுப்பினர்களாக அறிவிக்கக் கோரி தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சூசைதாசன் முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுமார் ஒன்றரை மணி நேரம் வாதாடி முன்வைத்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்டு எதிர்த் தரப்புக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்க நீதிபதி கட்டளையிட்டார். மேற்படி இரு உள்ளூராட்சி சபைகளிலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பெண் உறுப்பினர்கள் அந்தந்த சபைகளில் போட்டியிடுவதற்கான தகமையற்றவர்கள், தகுதியீனம் உடையவர்கள் என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. அந்தத் தீர்ப்பின்படி மேற்படி இரு பெண் உறுப்பினர்களும் அந்தந்தச் சபைகளின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறத் தகுதியற்றவர்கள் எனக் காணப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட இரு வேட்புமனுக்களிலும் இருக்க வேண்டிய பெண் உறுப்பினர்களின் விகிதாசாரம் குறைந்து அந்தப் பட்டியல்களே தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்து விட்டன எனத் தற்போது மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அது தொடர்பான விளக்கங்களை செவிமடுத்த நீதிபதி அதன் அடிப்படையில் எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். சாவகச்சேரி பிரதேச சபைக்குப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் 23 வேட்பாளர்களும் சாவகச்சேரி நகர சபைக்குப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் 16 வேட்பாளர்களும் இந்த மனுக்களில் மனுதாரர்கள் ஆவர். இரண்டு சபைகளிலும் போட்டியிட்ட மற்றைய கட்சிகள் அனைத்தினதும் வேட்பாளர்கள் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதன்படி சாவகச்சேரி பிரதேச சபை தொடர்பான வழக்கில் 225 பேரும், சாவகச்சேரி நகர சபை தொடர்பான வழக்கில் 151 பேரும் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டங்களின்படி இத்தகைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கு முதல் தடவை நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தினத்தில் இருந்து ஆறு மாதங்களுக்குள் வழக்கு விசாரித்து முடிவுறுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த இரு வழக்குகளும் காலம் இழுபடாமல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம். மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், பெனிஸலஸ் துஷான் ஆகியோரும் மன்றில் ஆஜராகினர். https://akkinikkunchu.com/?p=338425

சாவகச்சேரி நகர சபை, பிரதேச சபைகளில் சைக்கிள் கட்சியினரை வெளியேற்ற வழக்கு!

2 months 1 week ago

சாவகச்சேரி நகர சபை, பிரதேச சபைகளில் சைக்கிள் கட்சியினரை வெளியேற்ற வழக்கு!

1756132819-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E

சாவகச்சேரி நகர சபைக்கும், சாவகச்சேரி பிரதேச சபைக்கும் தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களின் தேர்வுகளை இரத்துச் செய்து, அவர்கள் போட்டியிட்ட வட்டாரங்களில் அடுத்த நிலையில் இருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைச் சபையின் உறுப்பினர்களாக அறிவிக்கக் கோரி தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சூசைதாசன் முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுமார் ஒன்றரை மணி நேரம் வாதாடி முன்வைத்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்டு எதிர்த் தரப்புக்கு அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்க நீதிபதி கட்டளையிட்டார்.

மேற்படி இரு உள்ளூராட்சி சபைகளிலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு பெண் உறுப்பினர்கள் அந்தந்த சபைகளில் போட்டியிடுவதற்கான தகமையற்றவர்கள், தகுதியீனம் உடையவர்கள் என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது.

அந்தத் தீர்ப்பின்படி மேற்படி இரு பெண் உறுப்பினர்களும் அந்தந்தச் சபைகளின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறத் தகுதியற்றவர்கள் எனக் காணப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட இரு வேட்புமனுக்களிலும் இருக்க வேண்டிய பெண் உறுப்பினர்களின் விகிதாசாரம் குறைந்து அந்தப் பட்டியல்களே தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்து விட்டன எனத் தற்போது மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அது தொடர்பான விளக்கங்களை செவிமடுத்த நீதிபதி அதன் அடிப்படையில் எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

சாவகச்சேரி பிரதேச சபைக்குப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் 23 வேட்பாளர்களும் சாவகச்சேரி நகர சபைக்குப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் 16 வேட்பாளர்களும் இந்த மனுக்களில் மனுதாரர்கள் ஆவர்.

இரண்டு சபைகளிலும் போட்டியிட்ட மற்றைய கட்சிகள் அனைத்தினதும் வேட்பாளர்கள் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதன்படி சாவகச்சேரி பிரதேச சபை தொடர்பான வழக்கில் 225 பேரும், சாவகச்சேரி நகர சபை தொடர்பான வழக்கில் 151 பேரும் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டங்களின்படி இத்தகைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கு முதல் தடவை நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தினத்தில் இருந்து ஆறு மாதங்களுக்குள் வழக்கு விசாரித்து முடிவுறுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த இரு வழக்குகளும் காலம் இழுபடாமல் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், பெனிஸலஸ் துஷான் ஆகியோரும் மன்றில் ஆஜராகினர்.

https://akkinikkunchu.com/?p=338425

காசா மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி

2 months 1 week ago
காசா மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி 26 Aug, 2025 | 10:57 AM காசாவில் உள்ள சுமார் 40 மாணவர்கள் நிதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு எதிர்வரும் வாரங்களில் பிரித்தானியாவுக்கு வரவழைக்கும் திட்டங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. செவனிங் திட்டத்தின் கீழ் (Chevening scheme) புலமைப் பரிசில்கள் ஊடாக ஒன்பது மாணவர்களுக்கு காசாவை விட்டு வெளியேற உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவனிங் திட்டம் என்பது, சர்வதேச மாணவர்கள் ஓராண்டு முதுகலைப் பட்டப்படிப்பைப் படிப்பதற்காக, பெருமளவில் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் கல்வி திட்டம் ஆகும். ஏனைய தனியார் திட்டங்கள் மூலம் முழுமையாக நிதியளிக்கப்பட்ட புலமைப் பரிசில்கள் கிடைத்த சுமார் 30 மாணவர்களுக்கு உதவுவதற்கான திட்டங்களுக்கும் உள்நாட்டு செயலாளர் அனுமதி அளித்துள்ளதாக பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது. 2023-ல் ஹமாஸ்-இஸ்ரேல் போர் ஆரம்பித்த பின்னர், பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கு காசாவை விட்டு வெளியேறும் முதல் மாணவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள். இருப்பினும், ஒவ்வொரு மாணவரும் அப்பகுதியை விட்டு வெளியேற இஸ்ரேல் அனுமதி அளிக்க வேண்டும். காசாவில் இஸ்ரேல் அதன் போர் தொடர்பான சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால், செப்டம்பர் மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரித்தானியா கூறியதிலிருந்து இஸ்ரேலுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன. மேலும், ஒரு போர் மண்டலத்திலிருந்து மாணவர்களை வெளியேற்றுவதில் கணிசமான சவால்களும் இருக்கும். விசா பயோமெட்ரிக் சோதனைகளுக்காக அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு மூன்றாவது நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். உள்நாட்டு அலுவலக வட்டாரம் ஒன்று இந்தத் திட்டத்தை "சிக்கலானதும் சவாலானது" என்று விவரித்தாலும், மாணவர்கள் பிரித்தானியாவில் தங்கள் இடங்களைப் பெற வேண்டும் என உள்நாட்டு செயலாளர் "தெள்ளத்தெளிவாக" தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் இருந்து அனுமதி பெற்ற 80-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மாணவர்கள் சார்பாக அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் மற்றும் பிறர் பல மாதங்களாக மேற்கொண்ட பரப்புரையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சமீபத்திய முடிவின் கீழ் சுமார் 40 மாணவர்கள் சேர்க்கப்பட்டாலும், நிதி உதவி இல்லாத மற்ற மாணவர்களும் உள்ளனர். https://www.virakesari.lk/article/223370

காசா மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி

2 months 1 week ago

காசா மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி

26 Aug, 2025 | 10:57 AM

image

காசாவில் உள்ள சுமார் 40 மாணவர்கள் நிதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு எதிர்வரும் வாரங்களில் பிரித்தானியாவுக்கு வரவழைக்கும் திட்டங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

செவனிங் திட்டத்தின் கீழ் (Chevening scheme) புலமைப் பரிசில்கள் ஊடாக ஒன்பது மாணவர்களுக்கு காசாவை விட்டு வெளியேற உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செவனிங் திட்டம் என்பது, சர்வதேச மாணவர்கள் ஓராண்டு முதுகலைப் பட்டப்படிப்பைப் படிப்பதற்காக, பெருமளவில் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் கல்வி திட்டம் ஆகும்.

ஏனைய தனியார் திட்டங்கள் மூலம் முழுமையாக நிதியளிக்கப்பட்ட புலமைப் பரிசில்கள் கிடைத்த சுமார் 30 மாணவர்களுக்கு உதவுவதற்கான திட்டங்களுக்கும் உள்நாட்டு  செயலாளர் அனுமதி அளித்துள்ளதாக பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது.

2023-ல் ஹமாஸ்-இஸ்ரேல் போர் ஆரம்பித்த பின்னர், பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கு காசாவை விட்டு வெளியேறும் முதல் மாணவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள். இருப்பினும், ஒவ்வொரு மாணவரும் அப்பகுதியை விட்டு வெளியேற இஸ்ரேல் அனுமதி அளிக்க வேண்டும்.

காசாவில் இஸ்ரேல் அதன் போர் தொடர்பான சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால், செப்டம்பர் மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரித்தானியா கூறியதிலிருந்து இஸ்ரேலுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன.

மேலும், ஒரு போர் மண்டலத்திலிருந்து மாணவர்களை வெளியேற்றுவதில் கணிசமான சவால்களும் இருக்கும். விசா பயோமெட்ரிக் சோதனைகளுக்காக அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு மூன்றாவது நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

உள்நாட்டு அலுவலக வட்டாரம் ஒன்று இந்தத் திட்டத்தை "சிக்கலானதும் சவாலானது" என்று விவரித்தாலும், மாணவர்கள் பிரித்தானியாவில் தங்கள் இடங்களைப் பெற வேண்டும் என உள்நாட்டு செயலாளர் "தெள்ளத்தெளிவாக" தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் இருந்து அனுமதி பெற்ற 80-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மாணவர்கள் சார்பாக அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் மற்றும் பிறர் பல மாதங்களாக மேற்கொண்ட பரப்புரையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சமீபத்திய முடிவின் கீழ் சுமார் 40 மாணவர்கள் சேர்க்கப்பட்டாலும், நிதி உதவி இல்லாத மற்ற மாணவர்களும் உள்ளனர்.

https://www.virakesari.lk/article/223370

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க ஆசைப்படுகிறார் ஜனாதிபதி டிரம்ப் !

2 months 1 week ago
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க ஆசைப்படுகிறார் ஜனாதிபதி டிரம்ப் ! 26 Aug, 2025 | 10:30 AM வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திக்க விரும்புவதாகவும், இந்த ஆண்டுக்குள் அந்த சந்திப்பு நிகழலாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி லீ ஜே மியுங் உடன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது டிரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி லீ ஜே மியுங் வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தென் கொரியாவில் தேவாலயங்கள் தொடர்பான சோதனைகளைக் குறிப்பிட்டு, அங்கு ஒரு "துடைப்பு அல்லது புரட்சி" நடப்பதாக டிரம்ப் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால், சந்திப்பின் போது, ஜனாதிபதி லீ, டிரம்ப்பை பெரிதும் புகழ்ந்து பேசியதையடுத்து, டிரம்ப் தனது முந்தைய கருத்தை "ஒரு தவறான புரிதல்" என்று கூறி நிராகரித்தார். வட கொரிய விவகாரத்தில் லீயின் அணுகுமுறையும் தனது அணுகுமுறையும் ஒரே மாதிரியானவை என டிரம்ப் நம்புவதாகக் கூறினார். மேலும், கிம் ஜாங் உன்னின் சகோதரியைத் தவிர வேறு எவரையும் விட தனக்கு நன்றாகத் தெரியும்" என்று டிரம்ப் குறிப்பிட்டார். டிரம்ப் "அமைதியைக் காப்பவர் அல்ல, அமைதியை உருவாக்குபவர்" என்று தென்கொரிய ஜனாதிபதி லீ புகழ்ந்தார். மேலும், "நீங்கள் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திப்பதையும், வட கொரியாவில் டிரம்ப் டவர் கட்டப்படுவதையும், அங்கு நீங்கள் கோல்ஃப் விளையாடுவதையும் நான் எதிர்பார்க்கிறேன்" என்று லீ குறிப்பிட்டார். தன்னுடைய சந்திப்புக்குப் பின்னர் ஆற்றிய உரையில், வட கொரியா ஆண்டுக்கு 10 முதல் 20 அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடும் என்றும், அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் கொண்டிருக்கலாம் என்றும் லீ எச்சரித்தார். அமெரிக்கப் படைகளின் இருப்பிற்காக தென் கொரியாவிடம் இருந்து அதிக நிதியுதவியை டிரம்ப் கோரினார். மேலும், அமெரிக்காவின் இராணுவத் தளம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையை அமெரிக்கா எடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். தென் கொரியாவின் இடதுசாரி தலைவர்களுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தும் ஒரு கருத்தாகக் கருதப்படுகிறது. தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியான லீ ஜே மியுங் வட கொரியாவுடனான உறவுகளை மேம்படுத்த முயற்சித்து வருகிறார். அவர், வட கொரியாவுடனான இராணுவ எல்லையில் ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்பப்படும் கிம் எதிர்ப்பு செய்திகளை நிறுத்துவது போன்ற சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். இந்த சந்திப்பு, தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து விவாதிக்க ஒரு முக்கியமான தளமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223377

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க ஆசைப்படுகிறார் ஜனாதிபதி டிரம்ப் !

2 months 1 week ago

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க ஆசைப்படுகிறார் ஜனாதிபதி டிரம்ப் !

26 Aug, 2025 | 10:30 AM

image

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திக்க விரும்புவதாகவும், இந்த ஆண்டுக்குள் அந்த சந்திப்பு நிகழலாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி லீ ஜே மியுங் உடன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது டிரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி லீ ஜே மியுங் வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தென் கொரியாவில் தேவாலயங்கள் தொடர்பான சோதனைகளைக் குறிப்பிட்டு, அங்கு ஒரு "துடைப்பு அல்லது புரட்சி" நடப்பதாக டிரம்ப் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால், சந்திப்பின் போது, ஜனாதிபதி லீ, டிரம்ப்பை பெரிதும் புகழ்ந்து பேசியதையடுத்து, டிரம்ப் தனது முந்தைய கருத்தை "ஒரு தவறான புரிதல்" என்று கூறி நிராகரித்தார்.

வட கொரிய விவகாரத்தில் லீயின் அணுகுமுறையும் தனது அணுகுமுறையும் ஒரே மாதிரியானவை என டிரம்ப் நம்புவதாகக் கூறினார். மேலும், கிம் ஜாங் உன்னின் சகோதரியைத் தவிர வேறு எவரையும் விட தனக்கு நன்றாகத் தெரியும்" என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

டிரம்ப் "அமைதியைக் காப்பவர் அல்ல, அமைதியை உருவாக்குபவர்" என்று தென்கொரிய ஜனாதிபதி லீ புகழ்ந்தார். மேலும், "நீங்கள் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திப்பதையும், வட கொரியாவில் டிரம்ப் டவர் கட்டப்படுவதையும், அங்கு நீங்கள் கோல்ஃப் விளையாடுவதையும் நான் எதிர்பார்க்கிறேன்" என்று லீ குறிப்பிட்டார்.

தன்னுடைய சந்திப்புக்குப் பின்னர் ஆற்றிய உரையில், வட கொரியா ஆண்டுக்கு 10 முதல் 20 அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடும் என்றும், அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் கொண்டிருக்கலாம் என்றும் லீ எச்சரித்தார்.

அமெரிக்கப் படைகளின் இருப்பிற்காக தென் கொரியாவிடம் இருந்து அதிக நிதியுதவியை டிரம்ப் கோரினார். மேலும், அமெரிக்காவின் இராணுவத் தளம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையை அமெரிக்கா எடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். தென் கொரியாவின் இடதுசாரி தலைவர்களுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தும் ஒரு கருத்தாகக் கருதப்படுகிறது.

தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியான லீ ஜே மியுங் வட கொரியாவுடனான உறவுகளை மேம்படுத்த முயற்சித்து வருகிறார். அவர், வட கொரியாவுடனான இராணுவ எல்லையில் ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்பப்படும் கிம் எதிர்ப்பு செய்திகளை நிறுத்துவது போன்ற சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு, தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து விவாதிக்க ஒரு முக்கியமான தளமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223377

அடுத்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு அதிக நிதி ஒதுக்கம்: வாழ்வதரத்தை உயர்த்தும் திட்டங்களை தயார் செய்யுமாறு ஆளுநர் பணிப்பு

2 months 1 week ago
அடுத்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு அதிக நிதி ஒதுக்கம்: வாழ்வதரத்தை உயர்த்தும் திட்டங்களை தயார் செய்யுமாறு ஆளுநர் பணிப்பு 26 Aug, 2025 | 10:27 AM வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார். மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் திங்கட்கிழமை (25) நடைபெற்றது. அதன்போது, மகளிர் விவகார அமைச்சு, சமூகசேவைகள் திணைக்களம், தொழிற்றுறை திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு என ஒவ்வொரு திணைக்களத்தினதும் திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக ஆராயப்பட்டன. நிதி ஆணைக்குழு, அடுத்த ஆண்டுக்குரிய திட்டங்களை இந்த ஆண்டிறுதிக்குள்ளேயே அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளமை சிறப்பான விடயம் எனக் குறிப்பிட்ட ஆளுநர், விரைவாக திட்டங்களை அடையாளம் காணவேண்டும் என்றும் தெரிவித்தார். அத்துடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் விளைவுகள் என்ன என்பதையும் அதை முன்னிறுத்தியே திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆகியோரும், சமூகசேவைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் லு.தனுஜா, தொழிற்றுறை திணைக்களத்தின் பணிப்பாளர் செ.வனஜா, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் அகல்யா சேகராஜா, கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் பா.அபிராமி கட்டடங்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தினதும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/223376

அடுத்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு அதிக நிதி ஒதுக்கம்: வாழ்வதரத்தை உயர்த்தும் திட்டங்களை தயார் செய்யுமாறு ஆளுநர் பணிப்பு

2 months 1 week ago

அடுத்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு அதிக நிதி ஒதுக்கம்: வாழ்வதரத்தை உயர்த்தும் திட்டங்களை தயார் செய்யுமாறு ஆளுநர் பணிப்பு

26 Aug, 2025 | 10:27 AM

image

வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார்.  

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில்  திங்கட்கிழமை  (25) நடைபெற்றது. 

அதன்போது, மகளிர் விவகார அமைச்சு, சமூகசேவைகள் திணைக்களம், தொழிற்றுறை திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு என ஒவ்வொரு திணைக்களத்தினதும் திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக ஆராயப்பட்டன.   

நிதி ஆணைக்குழு, அடுத்த ஆண்டுக்குரிய திட்டங்களை இந்த ஆண்டிறுதிக்குள்ளேயே அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளமை சிறப்பான விடயம் எனக் குறிப்பிட்ட ஆளுநர், விரைவாக திட்டங்களை அடையாளம் காணவேண்டும் என்றும் தெரிவித்தார். அத்துடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் விளைவுகள் என்ன என்பதையும் அதை முன்னிறுத்தியே திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர்  குறிப்பிட்டார். 

கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆகியோரும், சமூகசேவைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர்  லு.தனுஜா, தொழிற்றுறை திணைக்களத்தின் பணிப்பாளர் செ.வனஜா, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் அகல்யா சேகராஜா, கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் பா.அபிராமி கட்டடங்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தினதும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

e8b0a249-a902-4b05-b416-8f94c4fa1675__1_


https://www.virakesari.lk/article/223376