Aggregator

பாடசாலை மாணவர்களின் உணவுக்கான தொகை அதிகரிப்பு

2 months ago
பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் 85 ரூபாயை 115 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றித்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன், நிதியமைச்சின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் அடுத்த வாரமளவில் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, 100,000 பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு தற்போது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/289571

பாடசாலை மாணவர்களின் உணவுக்கான தொகை அதிகரிப்பு

2 months ago
food-2-300x200.jpg

பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் 85 ரூபாயை 115 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றித்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன், நிதியமைச்சின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் அடுத்த வாரமளவில் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, 100,000 பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு தற்போது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/289571

120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கு திட்டம்

2 months ago
உமாஓயா திட்டத்தின் கீழ் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியிலிருந்து 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் 31 நீர்த் தேக்கங்கள் மூலம் நீரில் மிதக்கும் சோலார் பேனல்களைப் பயன்படுத்தி 3,077 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்பில் இணைக்க முடியும் எனவும் இதற்குப் பொருத்தமான நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக தேசிய உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிப்பதையே, 2024 ஆம் ஆண்டில் நீர்ப்பாசன அமைச்சு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சின் ஊடாக பல பாரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான திட்டங்கள் வெளிநாட்டுக் கடன்களின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. அந்தவகையில் ஆரம்பிக்கப்பட்ட உமாஓயா திட்டத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எனவே, பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்குள் 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/289543

120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கு திட்டம்

2 months ago
Shasheendra-Rajapaksa.jpg

உமாஓயா திட்டத்தின் கீழ் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியிலிருந்து 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் 31 நீர்த் தேக்கங்கள் மூலம் நீரில் மிதக்கும் சோலார் பேனல்களைப் பயன்படுத்தி 3,077 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்பில் இணைக்க முடியும் எனவும் இதற்குப் பொருத்தமான நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக தேசிய உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிப்பதையே, 2024 ஆம் ஆண்டில் நீர்ப்பாசன அமைச்சு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

நீர்ப்பாசன அமைச்சின் ஊடாக பல பாரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதில் பெரும்பாலான திட்டங்கள் வெளிநாட்டுக் கடன்களின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில் ஆரம்பிக்கப்பட்ட உமாஓயா திட்டத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

எனவே, பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்குள் 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/289543

இலங்கையின் வர்த்தக மற்றும் கலாசார கண்காட்சி சீனாவில் நடைபெறவுள்ளது

2 months ago
இலங்கையின் வர்த்தகம், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கலாசார கண்காட்சி 2024 மார்ச் மாதம் சீனாவின் சியான் மாகாணத்தில் உள்ள பாவோஜி நகரில் நடைபெறவுள்ளது. 100க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் மற்றும் வர்த்தகர்களின் பங்கேற்புடன் இலங்கை தயாரிப்புகளை காட்சிப்படுத்த 40க்கும் மேற்பட்ட இலங்கையின் காட்சிக்கூடங்கள் அமைக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இக்கண்காட்சியின் சீன மற்றும் இலங்கை ஏற்பாட்டாளர்கள் குழுவொன்று, இந்த வாரம் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரிமாளிகையில் சந்தித்து, சின்ஜியாங்கில் இலங்கையின் உத்தேச கண்காட்சி குறித்து விளக்கமளித்தது. இக்கண்காட்சியானது இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளையும் ஊக்குவிக்கும் என அவர்கள் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/289483

இலங்கையின் வர்த்தக மற்றும் கலாசார கண்காட்சி சீனாவில் நடைபெறவுள்ளது

2 months ago
PM-China-300x198.jpg

இலங்கையின் வர்த்தகம், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கலாசார கண்காட்சி 2024 மார்ச் மாதம் சீனாவின் சியான் மாகாணத்தில் உள்ள பாவோஜி நகரில் நடைபெறவுள்ளது.

100க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் மற்றும் வர்த்தகர்களின் பங்கேற்புடன் இலங்கை தயாரிப்புகளை காட்சிப்படுத்த 40க்கும் மேற்பட்ட இலங்கையின் காட்சிக்கூடங்கள் அமைக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இக்கண்காட்சியின் சீன மற்றும் இலங்கை ஏற்பாட்டாளர்கள் குழுவொன்று, இந்த வாரம் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரிமாளிகையில் சந்தித்து, சின்ஜியாங்கில் இலங்கையின் உத்தேச கண்காட்சி குறித்து விளக்கமளித்தது.

இக்கண்காட்சியானது இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளையும் ஊக்குவிக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

https://thinakkural.lk/article/289483

ஜனாதிபதி தேர்தல் : தேர்தல்கள் ஆணையாளரின் அறிவிப்பு!

2 months ago
ஜனாதிபதி தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேநேரம், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு சாத்திய கூறுகளும் இல்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா நிதி கோரப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தல் எந்தவொரு சந்தரப்பத்திலும் பிற்போடப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/289460

ஜனாதிபதி தேர்தல் : தேர்தல்கள் ஆணையாளரின் அறிவிப்பு!

2 months ago
ele-300x200.jpg

ஜனாதிபதி தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு சாத்திய கூறுகளும் இல்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா நிதி கோரப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தல் எந்தவொரு சந்தரப்பத்திலும் பிற்போடப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/289460

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று

2 months ago
27 JAN, 2024 | 11:29 AM இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக புதிய நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தலைவர் தெரிவில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இன்று சனிக்கிழமை (27) திருகோணமலையில் இடம்பெறுகின்றன. அவ்வாறு ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறுவதற்கு முன்னதாக தற்போது திருகோணமலை முருகாபுரி ஜேக்கப் கடற்கரை தனியார் விடுதியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுவினர் ஒன்றுகூடி கலந்துரையாடி வருகின்றனர். அதன் பின்னர், பொதுச்சபை உறுப்பினர்களையும் உள்வாங்கி கட்சியின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறவுள்ளன. அதேவேளை இன்று பதவிகளுக்கான தெரிவுகள் நிறைவடைவதை தொடர்ந்து, நாளை (28) இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு இடம்பெறவுள்ளது. https://www.virakesari.lk/article/174902

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று

2 months ago
27 JAN, 2024 | 11:29 AM
image

இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக புதிய நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தலைவர் தெரிவில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இன்று சனிக்கிழமை (27) திருகோணமலையில் இடம்பெறுகின்றன.

அவ்வாறு ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறுவதற்கு முன்னதாக தற்போது திருகோணமலை முருகாபுரி ஜேக்கப் கடற்கரை தனியார் விடுதியில் இலங்கை  தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுவினர் ஒன்றுகூடி கலந்துரையாடி வருகின்றனர்.

அதன் பின்னர், பொதுச்சபை உறுப்பினர்களையும் உள்வாங்கி கட்சியின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறவுள்ளன.

அதேவேளை இன்று பதவிகளுக்கான தெரிவுகள் நிறைவடைவதை தொடர்ந்து, நாளை (28) இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு இடம்பெறவுள்ளது. 

20230225223836_IMG_2439.JPG

20230225223714_IMG_2438.JPG

https://www.virakesari.lk/article/174902

ஏடன் வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

2 months ago
Published By: RAJEEBAN 27 JAN, 2024 | 08:31 AM ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக ஏடன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலொன்று தீப்பிடித்து எரிவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலால் மார்லின் லுவான்டா என்ற கப்பல் தீப்பிடித்துள்ளது என கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலின் எண்ணெய் தாங்கியொன்று தாக்கப்பட்டுள்ளதால் கப்பல் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணை எண்ணெய் கப்பலை தாக்கியுள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் கடற்படை கப்பலொன்று உதவிக்கு விரைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். காயங்கள் குறித்த தகவல்கள் எதுவுமில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்க்கப்பல்கள் அந்த கப்பலை நோக்கி சென்றன மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர் என பிரிட்டனின் கடல்சார்வர்த்தக நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. ஏனைய கப்பல்கள் எச்சரிக்கையுடன் பயணிக்கவேண்டும் சந்தேகத்திற்கு இடமான விடயங்களை அவதானித்தால் அறிவிக்கவேண்டும் என பிரிட்டன் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை மார்லின் லுவான்டா கப்பலை இலக்குவைத்ததை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். பல பொருத்தமான ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதாக ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/174888

ஏடன் வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

2 months ago

Published By: RAJEEBAN   27 JAN, 2024 | 08:31 AM

image
 

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக ஏடன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலொன்று தீப்பிடித்து எரிவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலால் மார்லின் லுவான்டா என்ற கப்பல் தீப்பிடித்துள்ளது என  கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கப்பலின் எண்ணெய் தாங்கியொன்று தாக்கப்பட்டுள்ளதால் கப்பல் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கப்பல் எதிர்ப்பு ஏவுகணை எண்ணெய் கப்பலை தாக்கியுள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் கடற்படை கப்பலொன்று உதவிக்கு விரைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

ship_houthi1.jpg

காயங்கள் குறித்த தகவல்கள் எதுவுமில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர்க்கப்பல்கள் அந்த கப்பலை நோக்கி சென்றன மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர் என பிரிட்டனின் கடல்சார்வர்த்தக நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏனைய கப்பல்கள் எச்சரிக்கையுடன் பயணிக்கவேண்டும் சந்தேகத்திற்கு இடமான விடயங்களை அவதானித்தால் அறிவிக்கவேண்டும் என பிரிட்டன் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை மார்லின் லுவான்டா கப்பலை இலக்குவைத்ததை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

பல பொருத்தமான ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதாக ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/174888

ஊடக அடக்குமுறைகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில் போராட்டம்

2 months ago
அவர் ஜனாதிபதியின் ஆள்த் தானே?ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தியாகத்தின் இமயங்கள் | தொடர்

2 months ago
கெட்டிக்காரி தமிழரின் பண்பாட்டு தலைநகரத்தை வேரோடு பிடுங்கியெறிந்துவிட்டு அறுந்துபோன வேர்களுக்கு நீரூற்றிக் கொண்டிருந்தது ‘சமாதான இராட்சசியின்” அரசு. ஐந்து இலட்சம் மக்கள் இரவோடிரவாக சுமக்க முடியாத மனப்பாரத்தோடு வெளிக்கிளம்பிய அவலம் நடந்தேறிய நாட்கள் அது. மீளவும் மக்கள் தமது ஊர்களில் குடியேறியிருக்க அவர்களின் அவலத்தை விற்றுப்போருக்குப்பணம் தேடும் வியாபாரத்தைத் தொடங்கியிருந்தது ~இராட்சசியின் அதிகாரமையம். எரிந்துபோன நகரத்திற்கு வெள்ளையடித்து… அவசர அவசரமாக அரிதாரம் பூசி… போலி அலங்காரத்துள் நகரத்தைச் சிரிப்பூட்டிக் கொண்டிருந்தான் எதிரி. நகர மக்களின் இடப்பெயர்வோடு குழம்பிப் போனது சனங்களின் வாழ்க்கை மட்டுமல்ல, உள்ளே ஏற்கெனவே ஊடுருவியிருந்த பல புலனாய்வுப் போராளிகளின் தொடர்புகளும் தான். இப்படித் தொடர்பறுந்த நிலையிலும் உள்ளே உறுதியோடு நின்று ‘புலனாய்வு” வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள் அந்த ~மறைமுகக் கரும்புலி வீராங்கனை. இங்கே இயக்கம் அறுந்துபோன தொடர்புகளைச் சீராக்கி ஆங்காங்கே பிரிந்து போயிருக்கும் தொடர்பாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. ஆயினும், எதிரியின் இறுக்கமான முற்றுகையாலும் அவன் ஏற்படுத்தியிருந்த புலனாய்வு வலைப்பின்னலாலும் எடுத்த முயற்சிகள் பல சறுக்கித் தடைப்பட்டு நின்றது. ஆனாலும், எதிரியின் முற்றத்துள் அந்தத் தோழி உள்ளே எரியும் கோபத்தை வெளிக்காட்டாதபடி.. இல்லாத தொடர்புகளை எண்ணிக் குழம்பிப் போகாது… அவள் எதிர்பார்க்கும் வாய்ப்பைத் தேடி இயங்கிக் கொண்டிருந்தாள். அப்படியான ஒருநாள். அவள் தேடித் திரிந்த அந்த இலக்கு அவளைத் தேடி வந்தது. ஆக்கிரமிப்பு மூலம் மக்களை அடிமைப்படுத்திவிட்டு; புனர்வாழ்வு புனரமைப்பென்ற பெயரில் அதிகார பீடத்தின் அபத்த நாடகத்தை நெறிப்படுத்தும் உயர் அதிகாரக்கரங்கள் நகரத்தின் மத்தியில் கைகுலுக்கும் தகவல் எட்டியது. கண்கள் சிவக்க – அவள் சுறுசுறுப்பானாள். அரிய வாய்ப்பு குறித வறாது கதை முடிக்க வேண்டிய அதிகாரத்தின் கைப்பிடிகள். வெற்றிக் களிப்பில் திமிரும் எதிரிகளுக்கு பாடம் புகட்டத்தக்க தருணம். அவள் இயங்கத்தொடங்கினாள்…. கிடைத்த வேவுத் தகவலைத் தளத்திற்கு அனுப்பி – இங்கிருந்து அனுமதி பெற்று – தேவைப்படும் உதவிகளை வேண்டி – தாக்குதலை மேற்கொள்வதற்கு எந்த அவகாசமும் கிடையாது. தொடர்புகள் மட்டும் சீராயிருந்தாள் கதையே வேறு. எல்லா ஒழுங்குகளும் இங்கிருந்து மேற்கொள்ள அந்த தாக்குதலை மட்டும் அவள் அங்கு செய்து முடிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால், என்ன செய்வது, இப்போது எல்லாமே அவள் தலையில் பாரமாய்க்கனத்தது. வேவுத் தகவல் திரட்டி – தாக்குதல் வடிவம் தீட்டி – தேவையான ‘வெடிகுண்டு அங்கி” ஒழுங்குபடுத்தி – எல்லா செயற்பாடுகளையும் அவளே செய்ய வேண்டியதாயிருக்கிறது. பொறுப்புணர்வோடு எல்லாவற்றையும் அவள் ஓடி ஓடிச் செய்தாள். எப்போதோ ஒருநாள் – இன்ன இடத்தில் ஒரு வெடிகுண்டு அங்கி இருப்பதாக சொன்ன தகவலின் அடிப்படையில் அவள் தேடிப்போனாள். அங்கு அந்த வெடிகுண்டு அங்கியி ருந்தது ஆனால் தாக்குதலுக்கு ஏற்றதாக இருக்கவில்லை. சரி இது சரிவராது… வேறொன்றை தேடுவோம் என நினைத்தால் கூட… அதற்கு அங்கே வாய்ப்பில்லை. அது எதிரியின் முழு ஆளுகை மையம்… அவள் சலிக்கவில்லை தாக்குதலை தவிர்த்துவிட நினைக்கவில்லை. பொருந்தாத அந்த வெடிகுண்டு அங்கியை தன்னறிவுக்கமைய வெட்டித் தைத்து – பொருந்திவிட்டதா…. இல்லையா…. எனச் சொல்வதற்கு கூட அங்கு எவரும் இல்லாத நிலையிலும் அவளே திருப்திப்பட்டு… சரிவரும் என்ற நம்பிக்கையோடு தனக்கு நம்பிக்கையூட்டி இறுதிநாள் அவள் புறப்பட்டுப் போனாள். நகர மையத்தில் – திறப்பு விழாவொன்றில் கலந்துகொண்டிருந்தது அந்த அரச உயர்குழு. தாக்குதலுக்குத் தேவையான வகையில் அந்த வெடிகுண்டு அங்கி வெளித் தெரியாமலிருக்க அவள் தரித்த அந்த வேடம் அவசர கதியிலும் கச்சிதமாய் பொருந்தியிருந்ததில் உயர் ‘பாதுகாப்பு வியூகம்” ஏமாந்து போனது. அந்தக் கணத்திற்காகத் தானே அவள் இத்தனை நாளும் இங்கே தன்னை வருத்திக் காத்து நின்றாள். எங்கள் மக்களை அவலத்திற்கு உள்ளாக்கிய வர்களுக்கு ஆடம்பரவிழா வேண்டிக்கிடக்கிறதாக்கும்… அவள் பொங்கிவந்த ஆத்திரத்தையெல்லாம் ஒன்று திரட்டி… பகையோடு மோதி வெடிக்க நகரில் சிதறிக்கிடந்தனர் எதிரிகள் பலர். அதுவொரு கரும்புலிகள் நாள். கரும்புலிகள் நாளன்று இன்னுமொரு கரும்புலித் தாக்குதல். தளத்தில் எல்லோரிடையேயும் அந்தக் கேள்வி வியாபித்து நின்றது. அந்தத் தாக்குதலைச் செய்தது…. யார்? ஒழுங்கு படுத்தியது யார்….? அந்தச் சாதனைக்குக் காரணமானவன்… அல்லது காரணமானவள் யார்… யார்… யார்…? பல நாட்களின் பின்னர்; தொடர்புகள் சீர்பெற்று உள்ளேயிருந்து தகவல்கள் வெளிவரத் தொடங்கிய ஒருநாளில் வெளிச்சமாகியது. அந்தத் தாக்குதலை எங்கள் இனிய தோழி ‘……………………….”. செய்திருந்தாள் என்பது. சென்றுவா தோழியென… அவளை கட்டியணைத்து வழியனுப்பி வைக்க எவருமே இல்லாத நிலையிலும்… தன்னைத் தானே வழிநடாத்தி… அந்தத் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தாள் அந்தக் கெட்டிக்காரி.

தியாகத்தின் இமயங்கள் | தொடர்

2 months ago
பயணம் ஏற்கெனவே ஒரு பிள்ளையை இந்த மண்ணின் விடுதலைக்காக உவந்தளித்த ஒரு மாவீரர் குடும்பத்திலிருந்து போராடுவதற்கு இரண்டாவது வீரனாக வந்திருந்தான் அவன். போராட்ட அறிவும் திடமும் அவனுள் பெருகியிருந்தது. அவன் தன்னைக் கரும்புலியாக இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேயிருந்தான். இடைவிடாது அவன் விடுத்துக்கொண்டிருந்த வேண்டுகை அவனின் முயற்சியின் பயனாக ஒருநாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போது அவனொரு ‘கரும்புலிவீரன்”. அதுவும் ஒரு மறைமுகக் ‘கரும்புலிவீரன்”. எதிரியின் தலைநகரத்தில் மிக முக்கியமான இலக்கின் மீதான தாக்குதலுக்கு அவன் தெரிவாகினான். அவனிடமிருந்த சாரதியத்திறமையில் நம்பிக்கை வைத்து அந்தத் தாக்குதலுக்கான வெடிகுண்டு வாகனத்தைச் செலுத்தும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டது. தளத்திலிருந்து தாக்குதல் களத்திற்கு அவன் புறப்பட வேண்டும். எல்லாம் சரிவந்து இங்கிருந்து ஒருநாள் புறப்பட்டுப் போனவன்;; பயணம் தடைப்பட்டு மீளவும் முகாம் வர வேண்டியதாயிற்று. ஆனால், அங்கே களத்தில் அந்தத்தாக்குதலுக்கான ஒழுங்குபடுத்தல்களை அங்கிருந்தவர்கள் தொடர்ந்து மேற்கொண்டபடியிருந்தனர். அடுத்த பயணம் சரி வரும் வரையில்… அவன் இங்கிருக்க வேண்டும். அந்த நாட்களில் அவனுக்கு இங்கு மேலதிகப் பயிற்சி வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. எதிரியின் தலைநகரத்து நவீனத்தெருவில் – சனநெரிசல் மிக்க பகுதியூடாகக் குண்டூர்தியைச் செலுத்தி; தாக்குதல் இலக்கின் மீது… மோதி வெடிக்க வேண்டும். அவனுக்கான மேலதிகப் பயிற்சி இங்கு ஆரம்பமாகிவிட்டது. மல்லாவியின் தெருக்களில்; அவன் அசுர வேகத்தில்; வாகனம்; செலுத்தும் பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்த ஒருநாள். வெயில் சுட்டெரிக்கும் அன்றைய நாள் காலையில் தொடங்கிய பயிற்சி மதியத்தைத் தாண்டியும் தொடர் வயிறு பசியில் விறாண்டத் தொடங்கியது. அவன் அதை வெளிக்காட்டாது தொடர்ந்தும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு அப்போது பயிற்சியளித்துக் கொண்டிருந்த அந்தத் தளபதிக்கும் கூட கடுமையான பசி. கடையில் வேண்டிச் சாப்பிடு வதாக இருந்தால், இருவரிடமும் ஒரு சதம் காசும் கிடையாது. ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டிருக்க – வெட்கத்தை விட்டு அந்தத் தளபதி தான் கேட்டார். ‘மச்சான் சரியா பசிக்குதடா….” உனக்கு தெரிந்தாக்கள் யாரும் இஞ்சயிருந்தால் சொல்லு… போய்ச் சாப்பிடுவம்…. முகத்தைத் திருப்பித் தளபதி யைப் பார்த்தவன்…. புளுதியைக்கிளப்பி விரைந்து கொண்டிருந்த வாகன இயந்திர ஒலியினூடே சத்தமாக அவசர அவசரமாக மறுத்தான் இல்ல மாஸ்டர்.. எனக்கு இஞ்ச யாரையும் தெரியாது… என்ன நினைத்தானோ தெரியாது சற்றுத்தூரம் சென்ற பின்… ஒரு வீட்டு வாசலில் கொண்டு போய் வாகனத்தை நிறுத்திவிட்டு…. அந்த வீட்டை உற்றுப் பார்த்தான்…. அது வீடல்ல ஓலைக் குடிசை. வறுமையின் அத்தனை சாயலையும் அப்படியே விழுங்கியபடி மயான அமைதி கொண்டு குந்தியிருந்தது. உள்ளே போவதா… விடுவதா? அவனுக்குள் தயக்கம் எழுந்திருக்கும் போல…. தாமதித்தவன் பின்னர் தனக்குத்தானே ஏதோ நியாயம் கற்பித்தவனைப் போல உள்ளே கூட்டிப் போனான்…. ஆட்கள் வரும் சத்தத்தைக் கேட்டு எட்டிப் பார்த்த அவனின் தங்கையைப் போன்ற ஒரு தங்கை… ஏதோ சொல்ல… அவனின் தாயைப் போன்ற ஒரு தாய்… முற்றத்திற்கு வந்தாள்…. முகத்தில் மலர்ச்சியும் – சோகமும் – தவிப்பும் நிறைந்த உணர்வோடு அவர்களை அவள் மௌனமாக வரவேற்றாள். எந்த வார்த்தைகளுமின்றி அங்கே மௌனம் மட்டும் தான் நிரம்பிக் கிடந்தது. குடிசையின் திண்ணையில் தளபதி பசி மயக்கத்தில் அமர… தயங்கித் தயங்கி அந்தக் கரும்புலி வீரனும் அமர்ந்தான். அவனின் அம்மாவைப் போன்ற அம்மா எதுவுமே பேசவில்லை… தங்கையைப் போன்ற தங்கை அவளும் எதுவும் பேசவில்லை…. உள்ளேயிருந்து அப்போது தான் வெளியே வந்த அவனின் தம்பியைப் போன்ற தம்பி அவனும் கூட ஒன்றுமே பேசவில்லை…. சரி… இவனாவது ஏதாவது பேசுவானென்றால் அதுவுமில்லை… முற்றத்தில் நின்ற முட்கள் நிறைந்த அந்தத் தேசி மரத்தின் இலைகள்… அந்த அம்மாவின் கைகளுக்குள் சிக்குண்டு நசிந்து கொண்டிருந்தது. அவளினுள்ளே அவளை அழுத்திக் கொண்டிருக்கும் துயர மனதைப் போல… அந்த மௌனப் பொழுதை அந்த அம்மாதான் கலைத்தாள். வந்தவர்களுடன் எதுவுமே பேசாது சின்னவனை அழைத்து…. அவனின் காதுக்குள் ஏதோ சொன்னாள்…. குடிசைக்குள் போன சின்னவன் கையிலெடுத்த பேணியோடு படலையைத் தாண்டிப் போனான். ஆனால், அவன் போக விருப்பமின்றிப் போய்க்கொண்டிருக்கின்றான் என்பதை அவனின் நடை உணர்த்தியது. பலமுறை இப்படிப் போயிருப்பான் போல. இம்முறையும் எப்படி இப்படிப் போவதென்ற தயக்கம் அவனுள்ளே இருந்திருக்க வேண்டும்… போனவன்… போகும்போது கொண்டுபோன தயக்கத்தையும் வெட்கத்தையும் தூக்கியெறிந்துவிட்டுத் துள்ளியோடி வர… அம்மாவின் முகத்திலும் மலர்ச்சி… அந்த மௌனப் பொழுதுக்குள் அவர்களுக்கிடையே ஆயிரமாயிரம் போராட்டங்கள் உள்ளே நடந்து முடிந்ததை அவனும் – அவர்களும் நன்கு அறிவர்… அம்மா தேசிமரத்து இலைகளைக் கைவிட்டு அவர்களுக்காகவே காய்த்திருப்பது போல கிளைகளில் தொங்கும் தேசிக்காயைப் பிடுங்கிக் கொண்டு உள்ளே போனாள்…… அவர்களால் அவ்வளவுதான் அப்போது முடியும்… பேணி நிரம்பிய தேசிக்காய் தண்ணீரோடு அந்த அம்மா வெளியே வந்தாள்… அவளின் விழிகள் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று… கெஞ்சுவது போலிருந்தது. அந்தக் கரும்புலிவீரனுக்கு அம்மாவின் ஏழ்மையைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாமலிருந்திருக்கும் போல… முழங்கால்களில் கைகளை ஊன்றித் தலையைக்கவிழ்த்துவிட்டு… நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அம்மா அருகில் வந்தது கூடத் தெரியாது…. கூடப்போன தளபதிக்கு எல்லாம் விளங்கிவிட்டது. தேசிக்காய் தண்ணீரை வாங்கிக் குடித்த அந்தத் தளபதி கண்களாலேயே நன்றி சொல்லிவிட்டு கரும்புலி வீரனிடம் சொன்னார்…. ‘நான் வெளியில் நிக்கிறன் நீ அவையோடு கதைத்துவிட்டு வா…” இப்போதும் அவசர அவசரமாக அதை மறுத்தான். இல்ல மாஸ்டர் கதைக்க ஒண்டுமில்லை… நானும் வாறன்… என்று சொல்லியபடி வெளியில் வந்தவன்; வாகனத்தை வேகமாக ஓட்டத்தொடங் கினான்… பயிற்சி முடிந்து அவனின் பயண நாளும் வந்தது. இனி அவன் இங்கிருந்து புறப்பட வேண்டும். எல்லோரிடமும் கையசைத்து விடை பெற்றுக்கொண்டிருந்தான். இந்தப் பயணம் உறுதியானது. இனி அவன் திரும்பி வரப்போவதில்லை. புறப்படும் வேளையில் எல்லோரிடமும் விடைபெற்ற அவன்…. தான் ஆழமாக நேசித்த அவனின் அந்த அம்மாவைப் போன்ற அம்மாவிடம் போகவில்லை…. அவனின் தங்கையைப் போன்ற தங்கையிடம் போகவில்லை…. அவனின் தம்பியைப் போன்ற தம்பியிடம் அவனிடமும் போகவில்லை… ஏன்…? அந்த அம்மா அவனின் அம்மாவைப் போன்ற அம்மா இல்லை… அவள் அவனின் தங்கையைப் போன்ற தங்கையில்லை… அவன் அவனின் தம்பியைப் போன்ற தம்பியுமில்லை… அவர்கள் அவனின்… அம்மாவும்… தங்கையும்… தம்பியும் தான்…

தியாகத்தின் இமயங்கள் | தொடர்

2 months ago
கடமை வீரன் அவனொரு மறைமுகக் கரும்புலி வீரன். நல்ல உணர்வான போராளி…. ஆனால் பெரும் குழப்படிக்காரன் அவனைப் பொறுத்த வரையில் எந்த நேரமும் ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும் – ஓரிடத்தில் ஓய்வாக இருப்பதென்றால் – அது மட்டும் அவனால் முடியவே முடியாது. அவனின்… இந்தப் பெயரைச்சொல்லி யாரும் அழைப்பதேயில்லை… மாறாக எல்லோரும் அவனை மூஸ் என்றுதான் அழைப்பதுண்டு. அவனின் நட்பு வட்டம் பெரிது… தெரிந்தவர்கள் அறிந்தவர்கள்… எண்ணிக்கை மிக அதிகம்….. அதனால் எல்லோருடைய நட்பையும் பேணிக்கொள்வதில் அவனுக்கு அதிக ஆர்வம். அவனுடைய அளவில்லாத மூஸ் காரணமாக பல நாட்கள் தண்டனைக்குள்ளாகியிருப்பான். ஆனாலும், அதற்;காக மூசை குறைத்தது கிடையாது. யாரேனும் தெரிந்தவர்களின் படலையைக்கடந்து உள்ளே அவன் நுளைவான்… நுளைந்தவன் இங்கே தானே நிற்பான் என நினைத்தால்… நினைத்தவர் பாவம்… அவன் அங்கே நிற்கமாட்டான். அதிலிருந்து நாலு தெரு தாண்டியும் அவனுடைய நட்புப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும். அந்தளவுக்கு அவனொரு ஊர்சுற்றும் வாலிபன்… அவன் ~மூசுக்கு முன்னுதாரணம்… என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்…. ஆனால்….. பல இலட்சம் மக்கள் செறிவாக வாழும் நகரமது. பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரு சில மணிநேரத்திற்குள் உள்ளே நுழைவதும் – வெளியேறுவதுமாக எந்நேரமும் சுறுசுறுப்பாக இருக்கும் நகரம். அங்கே தான் எங்களது இந்தக் கரும்புலி வீரன் நின்றான். இங்கே ~மூஸ் அடிப்பதில் ‘பட்டம்” வேண்டியவன்; அங்கே மட்டும் என்ன…சும்மாவா இருந்துவிடப்போகிறான்…. அங்கேயும் அதே பல்லவி தான்… அந்த நகரத்தின் சந்துபொந்து யாவும் அவனுக்கு அத்துப்படியாகியிருந்தது. ஆனால், அவன் அங்கு போயிருப்பதன் நோக்கமோ பெரிது இரகசியமானது. மிக முக்கியமான இலக்கொன்றின் மீதான தாக்குதலுக்காகவே அவன் அங்கு சென்றுள்ளான். அது குண்டு பொருத்திய ஊர்தியை ஒரு நகரும்… இலக்கின் மீது மோதி அழிக்க வேண்டும்… அந்த இலக்கின் மீதான தாக்குதலுக்காக அங்கே நின்ற எல்லோருமே எவ்வளவு சிரத்தையுடன் இயங்க வேண்டியிருக்கிறது என்பது அவனுக்குத் தெரியும். சிறு கவனக்குறைவு கூட பெரும் முயற்சிகளை சீர்குலைத்து விடக்கூடிய சூழல். தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொள்வதற்குத் தேவையான அனுபவமும்… அறிவும் கூர்மையுடனிருக்க வேண்டும். எவ்வளவு தான் கடினமாக பயிற்சி எடுத்தாலும், சில வேளைகளில் நடைமுறைச் சிக்கல்கள் எழுந்து நிற்கும்… அவற்றை வென்றுதான் காரியமாற்ற வேண்டியிருக்கும். புதியகளம்… பழக்கப்படாத சூழல்… எதிரியின் முற்றம் அதற்குள் செயற்படுவதென்றால்… வேகமாக விரைந்து செல்லும் பெருவாரியான வாகன நெரிசல்களுக்குள்ளும்… சன நெரிசல்களுக்குள்ளும்… வாகனம் செலுத்துவதில் அவன் சிரமப்பட வேண்டியிருந்தது. இவனின் அந்த ‘மூசை”த் தவிர மற்றெல்லாம் திருப்தியாக இருந்தது… ஒருநாள்… தாக்குதல் நடவடிக்கைக்கான அனுமதி வழங்கப்பட்டுக் குண்டு பொருத்தப்பட்ட வாகனம் அவனிடம் ஒப்படைக்கப்பட்டது. இனி எந்தவேளையும் அவன் விழிப்போடு இருக்கவேண்டும். அவன் மேற்கொள்ள வேண்டிய கடமை எதிரியின் இதயத்திற்குள்ளேயே ஆணி அறைந்தாற் போல மேற்கொள்ளவேண்டிய ஒரு தாக்குதல்…. நீண்டகால முயற்சியின் – அறுவடையாக அமையப்போகும் ஒரு நடவடிக்கை. இனி எல்லாமே அவன் கையில்…. அங்கே களத்திற்குப் பொறுப்பாக நின்ற தளபதி அந்தக் குண்டூர்தியை அவனிடம் ஒப்படைக்கும் போது சொன்னார்…. ‘வாகனத்தை விட்டு இறங்கி அங்கயிஞ்சயின்டு போயிடாத….. எந்த காரணத்தையும் கொண்டு வாகனத்தை பிடிபட விட்டுடாத…” தளபதி எதை நினைத்துக் கொண்டு… இதைச் சொல்கிறார் என்பது அவனுக்குத் தெரியும்… அதன் அர்த்த பரிமாணம் அவ்வளவு முக்கியத்துவம் மிக்கதென்பதும் அவனுக்குத் தெரியும். தளபதியின் அறிவுறுத்தல்களுக்கும்… தெளிவுரைகளுக்கும் பதிலாக ஒரு அர்த்தம் பொதிந்த சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு நம்புங்கோ… நான் செய்வன் என்பதுபோல அவன் புறப்பட்டுப் போனான்… அந்த நகரம் யார் வருகைக்காகவும்… தாமதத்துக்காகவும் காத்திராமல் தன்னுடைய இசைவோட்டத்தில் எப்போதும் போல… இப்போதும் ஓடிக் கொண்டிருந்தது…. இவன் மட்டும் தன்னுடைய இலக்கின் வருகையை எதிர்பார்த்து இயங்கிக் கொண்டிருந்தான். அந்தப் பெரும் சனக்கூட்டத்துள் எவருக்கும் எந்தச் சந்தேகத்தையும் ஏற்படுத் தாதவகையில்; இவன் போருலா வந்து கொண்டிருந்தான். அந்தக் கரும்புலி வீரனுடன் அவனை வழிநடத்தும் அவனின் தளபதியும் கூடவேயிருந்தார். நீண்டநாள் அவன் எதிர் பார்த்திருக்கும் சந்தர்ப்பம்… இலக்கு நெருங்கினால் குறிதவறாது அடிக்க வேண்டுமென்ற தவிப்பு. நெஞ்சுள் பாரமாய் அழுத்த அவன் இயங்கிக் கொண்டிருந்தான்… அதுவொரு இளவேனிற்பொழுது. நகரப்போக்குவரத்துக்கு மாறாக செயற்படாது அதுவொரு சாதாரண பயணம் போல போக்குக்காட்டி… சரியான நேரத்தில் – சரியான இடத்தில் தாக்க வேண்டும். ஆனால், அன்றைய அந்தக் காலைப்பொழுது அவனுக்கு வாய்ப்பானதாக அமையவில்லை… அவன் எதிர்பார்த்த அந்த இலக்கு இவனின் தாக்குதல் வலயத்துள் வராமலே நழுவிப்போனது அன்றும் அவனுக்கு ஏமாற்றம்… எத்தனை நாள் இப்படி ஏமாற்றத்தைச் சந்தித்திருப்பான். இப்போதும் அப்படித்தான்… ஆனால், அன்றைய நாள் எப்படியாவது அந்தத்தாக்குதல் மேற்கொண்டேயாக வேண்டும். அப்படியானால் காலையில் நழுவிப்போன அந்த இலக்கு மாலையிலாவது வீழ்த்தப்படவேண்டும்… நெஞ்சுள் அழுத்தும் அந்த இலட்சியச்சுமையோடு… இயங்கிக் கொண்டிருந்தவனுக்காகக் காத்திருக்கப் போகிறதா காலம்…. நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது… அவன் பசியை மறந்து இயங்கிக் கொண்டிருந்தான். கூட வந்த தளபதிக்கோ பசி தாங்க முடியாதிருந்தது… அந்தத் தளபதிதான் மூசைப்பார்த்துக் கேட்டார்….. சாப்பிட்டு வருவமா……? அவன் அந்த கேள்விக்குப் பதிலுரைக்காது போகவே… மீண்டும் அவரே கதைத்தார். ஒவ்வொருவராக மாறி…. மாறி…. வாகனத்திலை நிண்டு கொண்டு போய் சாப்பிட்டு வருவம்… அப்போது அந்தக் கரும்புலி வீரன் தளபதியைப் பார்த்துச் சொன்னான்… ‘வாகனத்திலை குண்டு பொருத்தியாச்சு வெடிக்குவரை நான் வாகனத்தை விட்டு இறங்க மாட்டன்” நீங்கள் வேண்டுமானால் போய் சாப்பிட்டு வாங்கோ… சொன்னது மட்டுமல்ல…. உறுதியாகவும் நின்றுகொண்டான். இனி அவனை எப்படியழைத்தாலும் அவன் வரப்போவதில்லை… இலட்சியப்பசி மேலோங்கி நிற்கும் போது அவன் வயிற்றுப் பசியைப் பற்றி சிந்திக்கப் போவதில்லை… அப்ப நீ… வாகனத்திலேயே இரு… நான் உனக்கும் சேர்த்துச்சாப்பாடு வேண்டிக் கொண்டு வாறன்… எனத் தளபதி அவனிடம் சொல்லிவிட்டு இறங்கிப்போய் சில நிமிடங்களுக்குள் அந்த நெருக்கடிமிக்க தெருவில் நிகழ்ந்துவிட்ட எதிர்பாராத சிக்கலொன்றின் விளைவாக அவனை எதிரிகள் சூழ்ந்துவிட… அவன் இரகசியத்தைப் பேணும் உயர் நோக்கோடு ஊர்தியோடு சேர்த்துத் தன்னை அழித்தான் அந்த வீரன்…

தியாகத்தின் இமயங்கள் | தொடர்

2 months ago
மண்பற்று இரட்டைக் குழந்தைகளாக அவர்கள் பிறந்தபோது மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனது அந்தக்குடும்பம். ஆசையாசையாய் அள்ளியெடுத்து – அவர்களின் அன்பையெல்லாம் கொட்டிவளர்த்து மகிழ்ந்து நின்றது அந்தக்குடும்பம். ஆனால், இன்று அவர்கள்…..? அன்று அந்தக் கடற்கரையோரக் கிராமத்தின் ~கதாநாயகிகள் அவர்கள் தான். அன்று மட்டுமென்ன இன்றும் அவர்கள்தான் அவ்வூரின் கதாநாயகிகள். ஆனால், பலருக்குத் தெரியாது. எல்லாமிருந்தும் இந்த சுதந்திரம் மட்டும் இல்லாது போனதால்….. எல்லாம் இருப்பதாக நினைப்பதற்கு என்ன இருக்கிறது….. ஆட்களும் வளர்ந்து, அறிவும் வளர இப்படித்தான் அவர்கள் சிந்திக்கத்தொடங்கினார்கள் அந்த இரட்டைச் சகோதரிகள். இங்கொரு விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்க தாங்கள் வீட்டில் குந்தியிருப்பதில் பயனில்லையென எண்ணியிருப்பார்கள் போலும்….. குடும்பத்திலிருந்து பிரிந்து ஒருவர் பின் ஒருவராக புறப்பட்டுப் போனார்கள்; தம்மை விடுதலைப் போராட்டத்தில் இணைப்பதற்காக. காலமோடியது இளையவள் கடற்புலியாகி எதிரியை அழிப்பதற்காக கடலிலே காத்திருந்தாள்….. மூத்தவள் கரும்புலியாகி எதிரியின் தளமொன்றை நோக்கிய பயணத்திற்காக தென்தமிழீழத்தின் நகரமொன்றில் புறப்படத்தயாராகி நின்றாள்….. அம்மாவுக்கு எதுவுமே தெரியாது. பாவம் பிள்ளைகளைப் பிரிந்த மனக்கவலையில் அவள் நொந்துபோனாள். எத்தனை இரவுகள் அவள்….. அவர்களை நினைத்து அழுதிருப்பாள்….. கண்ணீரில் கரைந்த இரவுதான் அவளுக்கு அதிகம்….. ஆனாலும், பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல். அம்மா பிள்ளைகளை வீட்ட வரச்சொல்லிக் கேட்பதேயில்லை… கேட்டால் மட்டுமென்ன அவர்கள் வந்துவிடவா போகிறார்கள். எத்தனை முறை அவள் கேட்டிருப்பாள். ஏச்சு வேண்டியதுதான் மிச்சம்….. தமக்கையும்… தங்கையும் வௌ;வேறு இடங்களில் நின்றாலும்… அவர்களிருவரும் நின்றது சாவோடு மோதும் போர்க்களங்கள் தான். அவர்கள் விரும்புவதும் அதுதான் கடலோடி விளையாடி பகையோடு மோத இளையவள் காத்திருக்கும் தருணங்கள் ஆபத்தானவைதான்… ஆனால், என்ன செய்வது…. போராடினால்த்தான் வாழ்க்கையென்றான நிலையில்; தமிழினமிருக்கும் நிலையில்.. ஒரு நாள்; கடலில் நடந்த சமரொன்றில்; அந்த இரட்டையர்களில் இளையவள் எதிரியோடு மோதி தன்மேனியில் குண்டேந்தி வீழ்ந்துவிட… தங்கையின் ஆசை முகத்தை இறுதியாக ஒருமுறை பார்க்கக்கூட முடியாத தொலைவில் மூத்தவள் நின்றாள்…. ஒரு வானொலிச் செய்திதான் தங்கையின் வீரச்சாவு செய்தியைச்; சொல்லிவிட்டுப்போனது. அவள் அழுதாள்…. தங்கைக்காக மட்டுமல்ல… தங்கையை நினைத்து அழும் தாய்க்காகவும் சேர்த்து….. பிறப்பால் இணைந்து.. பந்தத்தால் ஒன்றிணைந்து… போராட்டத்திலும் ஒன்றாகச்சேர்ந்து… இலட்சியத்திற்காக வாழ்வதிலும் ஒன்றுபட்டவள்… இப்போது சாவில்மட்டும் முந்திவிட்டாளே.. மறக்கமுடியாத எத்தனை இனிய நினைவுகள்… அவளுக்கும் தங்கைக்குமிடையில்… சொல்லி முடித்துவிடவும் முடியாத… எண்ணி முடித்துவிடவும் முடியாதவை அவை….. அவளுக்குத்தெரியும் அம்மா சோகத்தால் துடித்துப் போயிருப்பாள் என்பது….. தங்கையின் முகத்தை தன்முகத்தில் ஒருமுறை பார்க்க அம்மா எவ்வளவு ஏங்கியிருப்பாள் என்பதை எண்ணிப் பார்க்கவே அவளால் தாங்க முடியாதிருந்தது. என்ன செய்வது….? அம்மா அழாதயணை…. அவள் சும்மா சாகேல்ல…. நாட்டுக்காகத்தானே செத்திருக்கிறாள்… எனச்சொல்லி…. அம்மாவின் தோள்களை அணைத்து… உச்சியைத்தடவி…. ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்திருக்கும். ஆனால், அவள் உறுதியானவள். இயக்கம் வீட்ட போகச் சொன்னாலும் அவள் போகமாட்டாள். அவளை நம்பி ஒப்படைக்கப்பட்ட கடமையின் பெறுமதி அத்தகையது…. தங்கையின் உடலைப் பார்க்கும் வாய்ப்பு அம்மாவுக்குக் கிடைத்ததையிட்டு… அவளுக்கான இறுதி விடைகொடுக்கும் பாக்கியத்தைப் பெற்றதையிட்டு…. அம்மா பெருமைபடட்டும். தன்னுடைய சாவுகூட அம்மாவுக்குத் தெரியவரப் போவதில்லை… எங்கே அவள் வீரச்சாவடைந்தாள் என்பதைக்கூட அம்மா அறியப்போவதில்லை….. தங்கையின் வீரச்சாவு குறித்து அம்மாவுக்கு ஆறுதல் செய்தியை மட்டும் அங்கிருந்து அவளால் அனுப்ப முடிந்தது. எதிரியின் தளப்பிரதேசத்தை நோக்கிய அவளது பயணம் ஆரம்பமாகியிருந்தது. அவள் பிறந்த ஊரின் வெகுதொலைவிலிருந்து அவள் அந்த தனது இறுதிப்பயணத்தைத் தொடக்கியிருந்தாள். இனி எப்போதுமே அவள் இங்கே திரும்பிவரப்போவதில்லை. அவள் நேசிக்கும் தாயை… தாய்நாட்டை… இனி காணப்போவதில்லை… இப்படித்தான் அவளை அதிகம் நேசிக்கும்…. தாயும்… தாய்நாடும்…. கூட…. அவளை இனிக்காணப்போவதில்லை. அவள் குறித்த எந்தத் தடங்களும் எவருக்கும் கிட்டப்போவதுமில்லை. அவள் புறப்பட்ட அந்தக் கடைசி நிமிடங்கள்…. அது ஒரு உணர்ச்சிமயமான நிமிடங்கள்… மகிழ்ச்சியோடு புறப்பட்டு வந்தவள் தயங்கினாள்… இத்தனை காலமும் அவள் பத்திரமாகப் பாதுகாத்த… அவள் தன்னுயிரிலும் மேலாக நேசித்த… அந்த உன்னதமான ~ஏதோவொன்று அவள் கைகளுக்குள் மின்னியது…. உள்ளங்கைகளை விரித்து ஒருமுறை அவள் பார்த்துக்கொண்டாள். அதுதான் அவளின் கடைசிப்பார்வை. தான் பயணித்த அத்தனையிடங்களுக்கும் தன்னோடு இத்தனை நாளும் கூடவே கொண்டு சென்ற அந்த ~பொக்கிசத்தை அவளை வழியனுப்பி வைக்கும் தளபதியிடம் மனமின்றி ஒப்படைத்தாள். ‘இதை மறந்திடாமல்…” நான் வீரச்சாவடைஞ்ச பிறகு…. வீட்ட ஒப்படைச்சு விடுங்கோ… அது அவளின் பல கதைகளைச் சொல்லும் போல…. தளபதியின் கைகளுக்குள் யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர்ந்து வந்த போது அவள் அள்ளிவந்த ~மண் பத்திரமாக இருந்தது. அவளின் மண் பற்றைச் சொல்லியபடி….