Aggregator

தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு!

2 months 1 week ago
வேலிக்கு வைச்ச முள்ளு, ஒருநாள் வைத்தவரின் காலையே பதம் பார்க்கும். அப்போ தெரியும் அதன் வலி.

'புளூடூத்திங்' பழக்கத்தால் பரவும் எச்.ஐ.வி. தொற்று!

2 months 1 week ago
இதுதான் வெள்ளைகாரன் அடிக்கடி சொல்லும் thin line வாதா. மெல்லிய கோட்டுக்கு இந்த பக்கம் நிற்கும் வரை நகைச்சுவை, அந்தபக்கம் போனால் கெட்டவார்த்தை🤣.

'ஏர் பேக் மீது மோதி சிறுவன் பலி': காப்பாற்ற வேண்டிய ஏர் பேக் உயிரையே பறிக்குமா?

2 months 1 week ago
இதுவும் நாட்டுக்கு நாடு வேறுபடும் ஒன்றே. யூகேயில் 135, ஆனால் அயர்லாந்தில் 150 என்கிறது ஜெமினி. அவுசில் 145 போல் உள்ளது. அதே போல் சில வாகனங்களில் 135 உயரமான பிள்ளையின் பாதம் முழுவதுமாக தரையில் பதியாது. நான் மேலே சொன்ன வரைவிலக்கணத்தை கடைப்பிடித்தால்- சீட்பெல்ட் போட்டாலும் வழுக்கி கொண்டு போய் அடிபடுவதில் இருந்து தவிர்க்கலாம். கொசுறு நாம் இப்போ பாவிக்கும் மூன்று புள்ளி இணைப்பு சீட் பெல்டை கண்டுபிடித்தது சுவீடனை சேர்ந்த என் அபிமான நிறுவனம் வொல்வோ. அதற்கு புலமைசார் உரிமை கோரி ஒரு பெரிய தொகையை பார்திருக்கலாம், ஆனால் இந்த தொழில்நுட்பத்தை மானிட பாதுகாப்புக்கென இலவசமாக கொடுத்தனர்.

'ஏர் பேக் மீது மோதி சிறுவன் பலி': காப்பாற்ற வேண்டிய ஏர் பேக் உயிரையே பறிக்குமா?

2 months 1 week ago
இது நாட்டுக்கு நாடு வேறு படுவதாக இருக்கலாம். யூகேயில் குழந்தைகளை முன்னிருக்கையில் அமர்த்தலாம். ஆனால் குழந்தைகள் இருக்கை கட்டாயம். அதிலும் குழந்தை-இருக்கை பின்னோக்கியது எனில் ஏர்பேக் தற்காலிக செயழிழப்பு செய்யதல் வேண்டும். ஆனால் சிறந்த வழி, பின்னிருக்கையில் அமர்த்துவதே.

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 months 1 week ago
நாமல் வைக்கும் கோரிக்கையைப்பாத்தால் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையாம். போதைப்பொருள் காரரை கைது செய்வதை விடுத்து, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்கிறார். இஷாராவை கைது செய்ய ஒரு வருடம் எடுத்திருக்கிறது இந்த அரசாங்கத்திற்கு என்று வேறு விமர்சிக்கிறார். இவ்வளவும் செய்த அரசாங்கத்திற்கு இந்தப்பெண்ணின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது பெரிய விடயமா? அல்லது அது தெரியாமல்த்தான் நேபாளம் வரை சென்று கைது செய்தார்களா என்ன? இவருடைய நூறு கோடி சொத்துக்கள் எங்கிருந்து கிடைத்தன, நூறு கோடி மட்டுந்தானா என்பதையும் வெளிக்கொண்டு வரத்தான் போகிறார்கள். அதை விட, வெளிநாட்டில் பதுங்கியுள்ள சொத்துக்களும் அரச உடமையாகத்தான் போகிறது. இவர்களின் கோரமுகத்தை மக்களிடம் இருந்து மறைக்க பயங்கரவாதிகள் என்கிற கதையை இழுத்து மறைக்கப்பார்கிறார்கள். இவர்களின் சுய ரூபம் வெளிப்படுத்தப்படும்போது என்ன நடக்கபோகிறதென பாப்போம். இனிமேல் வெளிநாட்டுக்கும் தப்பியோட முடியாது. போதைப்பொருள் தாதாக்கள் என்றால், சர்வதேசமே பிடித்து அனுப்பிவிடும். பல நாடுகளின், துரோகியின் உதவியில்லாமல் புலிகளை முறியடித்திருக்க முடியாது என்று சொன்னவர்கள், பயங்கரவாதத்தை எப்படி முறியடிப்பது என்று சர்வதேசத்துக்கு பயிற்சியளித்தார்கள். போதைப்பொருள் மாபியாக்களை எப்படி கைது செய்து வலையமைப்பை அழிப்பது என்று பயிற்சி பெற சர்வதேசமே அனுராவை தேடி வரப்போகிறது. அதுமட்டுமல்ல இங்கையின் எந்த அரசாங்கமும் செய்யாத, செய்ய முயற்சிக்காத அதிரடியை செய்து, நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமானவர்களை உடனடியாக அடையாளம் கண்டு பிடித்தது பெரும் சாதனை. அதுவும் பதவியேற்று ஒருவருடத்திற்கு முன்.

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி

2 months 1 week ago
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் பேஸ்புக் கணக்குகளில் வெளியிடப்படும் பதிவுகளைப் பயன்படுத்தி இந்த மோசடியை மேற்கொண்டு, அதன் மூலம் பெறப்படும் பணத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் உட்கொள்வது தெரியவந்துள்ளது. புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி, இந்தக் குழு போலி பேஸ்புக் கணக்குகளை நிர்வகித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்தக் கணக்குகளில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி தேவை எனக் கூறி பதிவுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதனை பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்கள் நிதி உதவிகளை வழங்கியுள்ளனர். ஆனால், அந்தக் குழந்தைகளின் உறவினர்கள், பேஸ்புக்கில் பரவிய அந்தப் பதிவுகளைப் பார்த்து, விசாரணை செய்து, தங்கள் குழந்தைக்கு உதவி தேவையில்லை என அறிவித்துள்ளனர். நிதி உதவி வழங்கிய ஒருவர் இது தொடர்பாக முறைப்பாடு அளித்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் ஊடாக பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப தரவுகளைப் பெற்று, சமீபத்தில் விசாரணைகளை ஆரம்பித்தது. அதன் விளைவாக, மோசடியாக நிதி சேகரிக்கும் சிலருக்கு சொந்தமான ஆறு பேஸ்புக் கணக்குகள் கண்டறியப்பட்டன. அதில், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு, நீண்ட காலமாக பணம் ஈட்டிய மோசடி ஒன்று செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதற்கு முன்னர், போலி கணக்குகளுக்கு பணம் செலுத்திய பல நன்கொடையாளர்களிடமிருந்து பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த மோசடியை மேற்கொண்ட மூவர் ஓபநாயக்க மற்றும் ரக்வானை பகுதிகளில் நேற்று கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணைகளில், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக பிராரத்தனை செய்யுமாறு பல்வேறு நபர்கள் வெளியிடும் பதிவுகளின் தகவல்களைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்கு விபரங்களைச் சேர்த்து பதிவுகளை உருவாக்கி, பணம் சேகரித்தது தெரியவந்துள்ளது. அந்தப் பதிவுகளைப் பார்க்கும் மக்கள், குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்திய நிலையில், மோசடிக்காரர்கள் அந்தப் பணத்தை தினசரி எடுத்து, போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmgu7gom40121o29nvy4k24ym

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி

2 months 1 week ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் பேஸ்புக் கணக்குகளில் வெளியிடப்படும் பதிவுகளைப் பயன்படுத்தி இந்த மோசடியை மேற்கொண்டு, அதன் மூலம் பெறப்படும் பணத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் உட்கொள்வது தெரியவந்துள்ளது.

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி, இந்தக் குழு போலி பேஸ்புக் கணக்குகளை நிர்வகித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது.

இந்தக் கணக்குகளில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி தேவை எனக் கூறி பதிவுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதனை பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்கள் நிதி உதவிகளை வழங்கியுள்ளனர்.

ஆனால், அந்தக் குழந்தைகளின் உறவினர்கள், பேஸ்புக்கில் பரவிய அந்தப் பதிவுகளைப் பார்த்து, விசாரணை செய்து, தங்கள் குழந்தைக்கு உதவி தேவையில்லை என அறிவித்துள்ளனர்.

நிதி உதவி வழங்கிய ஒருவர் இது தொடர்பாக முறைப்பாடு அளித்ததை அடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் ஊடாக பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப தரவுகளைப் பெற்று, சமீபத்தில் விசாரணைகளை ஆரம்பித்தது.

அதன் விளைவாக, மோசடியாக நிதி சேகரிக்கும் சிலருக்கு சொந்தமான ஆறு பேஸ்புக் கணக்குகள் கண்டறியப்பட்டன.

அதில், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு, நீண்ட காலமாக பணம் ஈட்டிய மோசடி ஒன்று செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இதற்கு முன்னர், போலி கணக்குகளுக்கு பணம் செலுத்திய பல நன்கொடையாளர்களிடமிருந்து பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த மோசடியை மேற்கொண்ட மூவர் ஓபநாயக்க மற்றும் ரக்வானை பகுதிகளில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணைகளில், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக பிராரத்தனை செய்யுமாறு பல்வேறு நபர்கள் வெளியிடும் பதிவுகளின் தகவல்களைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்கு விபரங்களைச் சேர்த்து பதிவுகளை உருவாக்கி, பணம் சேகரித்தது தெரியவந்துள்ளது.

அந்தப் பதிவுகளைப் பார்க்கும் மக்கள், குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்திய நிலையில், மோசடிக்காரர்கள் அந்தப் பணத்தை தினசரி எடுத்து, போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmgu7gom40121o29nvy4k24ym

இதயத் துடிப்பை சீராக்கும் பொட்டாசியம் - தினசரி வாழைப்பழம் சாப்பிட்டால் போதுமா?

2 months 1 week ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது கட்டுரை தகவல் ஆனந்த் மணி திரிபாதி பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பொட்டாசியம் என்ற உடனேயே, பெரும்பாலான மக்களுக்கு வாழைப்பழம் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு வாழைப்பழத்தால் மட்டும் உங்கள் உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை வழங்க முடியாது. பொட்டாசியம் என்றால் என்ன? உடல் இயல்பாக செயல்படுவதற்கு தேவையான முக்கியமான கனிமம் பொட்டாசியம். இது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.சிறுநீரகங்கள் அதிக சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது, செல்கள் சரியாக செயல்பட உதவுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. "பொட்டாசியம் என்பது நுண்ணூட்டச்சத்து மிக்க கனிமம். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் இது, உடலில் இருந்து கழிவுகளை அகற்றவும் உதவுகிறது"என்று எஸ்ஏபி டயட் கிளினிக்கின் நிறுவனர் மற்றும் மூத்த ஆலோசகர் உணவியல் நிபுணர் டாக்டர் அதிதி சர்மா கூறுகிறார். பொட்டாசியம் உடலில் ஒரு எலக்ட்ரோலைட்டாக செயல்படுகிறது. தசை செயல்பாட்டிற்கு உதவுகிறது. இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்துகிறது. நரம்புகள் சமிக்ஞைகளை சரியாக அனுப்ப உதவுகிறது. "பொட்டாசியம் நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துகிறது. இது நமது உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் ஒரு எலக்ட்ரோலைட். இது இதயம், மூளை மற்றும் உடலின் ஒவ்வொரு தசையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது" என்று எய்ம்ஸின் முன்னாள் உணவியல் நிபுணரும், ஒன் டயட் டுடேவின் நிறுவனருமான மருத்துவர் அனு அகர்வால் கூறுகிறார். தசை செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிக முக்கியமானது என்று அவர் விளக்குகிறார். இது தசைகள் சுருங்கவும் ஓய்வெடுக்கவும் உதவுகிறது. மேலும் , நமது உடலின் pH ஐ சமப்படுத்தவும் உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை அகற்றவும் உதவுகிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பொட்டாசியம் நமது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. பொட்டாசியத்தின் தேவை தினமும் சராசரியாக 3,500 மில்லிகிராம் பொட்டாசியத்தை உட்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தையும் குறைக்கிறது. உணவில் இருந்து பொட்டாசியம் கிடைக்குமா? ஆம், உணவில் போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகள் இருந்தால் பொட்டாசியம் எளிதில் கிடைக்கும். ஆனால் பிரச்னை என்னவென்றால், பெரும்பாலான மக்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் கூட பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியாக சாப்பிடுவதில்லை. அவர்களின் கலோரிகளில் பாதிக்கும் மேற்பட்டவை பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து வருகின்றன. பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 10 சதவீத ஆண்களும் 24 சதவீத பெண்களும் தினசரி பொட்டாசியம் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை என அறியப்படுகிறது. பொட்டாசியம் குறைபாட்டின் விளைவுகள் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பொட்டாசியம் குறைபாடு ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும். பொதுவாக, பொட்டாசியம் குறைபாடு உணவுமுறையால் மட்டும் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு, சில மருந்துகளின் பின்விளைவு அல்லது அதிகப்படியான மது அருந்துவதன் காரணமாக ஏற்படுகிறது. பொட்டாசியம் குறைபாடு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும். "பொட்டாசியம் குறைபாடு தசை பிடிப்பு மற்றும் பதற்றத்தை அதிகரிக்கிறது. உடல் சோர்வாகவே இருக்கும். இது மலச்சிக்கலையும் ஏற்படுத்துகிறது. மிக முக்கியமாக, பொட்டாசியம் குறைபாடு ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும். அதேபோல் இது ரத்த அழுத்தத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று மருத்துவர் அனு அகர்வால் கூறுகிறார். பொட்டாசியத்தின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன ? பொதுவாக, சிறுநீரகங்கள் சிறுநீரின் வழியாக அதிகப்படியான பொட்டாசியத்தை அகற்றும், ஆனால் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த செயல்முறை சரியாக நடக்காது. அது போன்ற சூழ்நிலையில், உடலில் பொட்டாசியம் சேரத் தொடங்குகிறது, இதன் காரணமாக இதயத் துடிப்பு சீரற்றதாகி, இதயம் செயலிழப்பதற்கான அபாயம் அதிகரிக்கிறது. இதனால் தான், சிறுநீரக நோயாளிகள் பெரும்பாலும் பொட்டாசியம் குறைந்த உணவை உண்ணுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பொட்டாசியம் குறைபாடு, இதயம், நரம்புகள் மற்றும் தசைகளைப் பாதிக்கிறது, ஆனால் பொட்டாசியத்தின் அளவு அதிகரிப்பதும் ஆபத்தானது என்று விளக்குகிறார் மருத்துவர் அதிதி சர்மா. பொட்டாசியத்தின் அளவு அதிகரித்தால் இதயம் செயலிழக்கலாம். எனவே, அதை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு வாழைப்பழம் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் சுமார் 10% வழங்குகிறது, அதே நேரத்தில் ஒரு வேகவைத்த உருளைக்கிழங்கு 30% வரை வழங்குகிறது. வாழைப்பழங்கள் பொட்டாசியத்தை வழங்குகின்றன, ஆனால் அவற்றை மிகச் சிறந்த அல்லது அதிக அளவில் பொட்டாசியம் தரும் உணவு என வகைப்படுத்த முடியாது. ஒரு வாழைப்பழம், ஒரு நாளைக்கு தேவையான பொட்டாசியத்தில் சுமார் 10% மட்டுமே வழங்கும். ஆனால் ஒரு வேகவைத்த உருளைக்கிழங்கு 30% வரை வழங்கும் திறன் கொண்டது. அதிகளவு பொட்டாசியம் உள்ள உணவுப் பொருட்கள் உலர்ந்த பழங்கள் பச்சை இலை காய்கறிகள் நட்ஸ் மற்றும் விதைகள் பால் மற்றும் தயிர் பருப்பு வகைகள் மீன் பொட்டாசியம் சமநிலையை பராமரிக்க, முடிந்தவரை அதிக அளவிலான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும் என்கிறார் மருத்துவர் அனு அகர்வால். பொட்டாசியம் தேங்காய் நீர், ஆரஞ்சு, வாழைப்பழம், பீட்ரூட் மற்றும் பச்சை இலை காய்கறிகளில் எளிதாகக் கிடைக்கிறது. இது பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் காணப்படுகிறது. சப்ளிமெண்ட்ஸ் மற்றும் பொட்டாசியம் பெரும்பாலான மக்களுக்கு, 3,700 மி.கி அல்லது அதற்கும் குறைவான பொட்டாசியம் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால் வயதானவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இவற்றை (உப்பு மாற்றுகள் உட்பட) எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால், அவர்களின் சிறுநீரகங்களால் அதிகப்படியான பொட்டாசியத்தை எளிதில் அகற்ற முடியாது. மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரிடம் ஆலோசிக்காமல் அதிகப்படியான வைட்டமின் டி உட்கொள்வதைத் தவிர்க்குமாறு மருத்துவர் அதிதி சர்மா அறிவுறுத்துகிறார். ஒருவர் தினமும் பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொண்டால், அவர்களுக்கு போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்கிறது. எனவே கூடுதலாக சப்ளிமெண்ட்ஸ் எடுக்கவேண்டிய அவசியமில்லை. பானங்களில் பொட்டாசியம் இருக்க வேண்டுமா ? படக்குறிப்பு, ஒரு கிளாஸ் தக்காளி சாற்றில் சுமார் 460 மி.கி பொட்டாசியம் உள்ளது. வியர்வையின் மூலம் சிறிதளவு பொட்டாசியம் வெளியேறுகிறது. எனவே உடற்பயிற்சிக்குப் பிறகு அதை நிரப்ப வேண்டும். அதற்கு இயற்கையான வழிகளைப் பின்பற்றலாம். தக்காளி ஜூஸ் குடிக்கலாம், ஒரு கிளாஸ் தக்காளி ஜூஸில் சுமார் 460 மி.கி பொட்டாசியம் உள்ளது. தோல் நீக்கப்பட்ட வேகவைத்த உருளைக்கிழங்கும் ஒரு நல்ல வழி. அவை பொட்டாசியத்தை வழங்குவது மட்டுமல்லாமல், அவற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளும் ஆற்றலை மீட்டெடுக்கின்றன. பொட்டாசியத்தை அதிகரிக்க எளிதான வழிகள் தினமும் ஐந்து முறை பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள் (எ.கா., காலை உணவில் ஒரு பழம், மதிய உணவுடன் ஒரு பழம் மற்றும் ஒரு காய்கறி, இரவு உணவில் இரண்டு காய்கறிகள்). தினமும் மூன்று பால் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் (பாலுடன் காபி, சாலட்டில் சீஸ் அல்லது தயிர்) வாரம் ஒரு முறை பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் சாப்பிடுங்கள். சிற்றுண்டிகளுக்கு உலர்ந்த பழங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளைத் தேர்ந்தெடுக்கவும். மதிய உணவு அல்லது இரவு உணவோடு சாலட் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பச்சை காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். அதில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cge5jjx5q3ro

இதயத் துடிப்பை சீராக்கும் பொட்டாசியம் - தினசரி வாழைப்பழம் சாப்பிட்டால் போதுமா?

2 months 1 week ago

பொட்டாசியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது

கட்டுரை தகவல்

  • ஆனந்த் மணி திரிபாதி

  • பிபிசி செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பொட்டாசியம் என்ற உடனேயே, பெரும்பாலான மக்களுக்கு வாழைப்பழம் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், ஒரு வாழைப்பழத்தால் மட்டும் உங்கள் உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை வழங்க முடியாது.

பொட்டாசியம் என்றால் என்ன?

உடல் இயல்பாக செயல்படுவதற்கு தேவையான முக்கியமான கனிமம் பொட்டாசியம். இது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.சிறுநீரகங்கள் அதிக சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது, செல்கள் சரியாக செயல்பட உதவுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

"பொட்டாசியம் என்பது நுண்ணூட்டச்சத்து மிக்க கனிமம். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் இது, உடலில் இருந்து கழிவுகளை அகற்றவும் உதவுகிறது"என்று எஸ்ஏபி டயட் கிளினிக்கின் நிறுவனர் மற்றும் மூத்த ஆலோசகர் உணவியல் நிபுணர் டாக்டர் அதிதி சர்மா கூறுகிறார்.

  • பொட்டாசியம் உடலில் ஒரு எலக்ட்ரோலைட்டாக செயல்படுகிறது.

  • தசை செயல்பாட்டிற்கு உதவுகிறது.

  • இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்துகிறது.

  • நரம்புகள் சமிக்ஞைகளை சரியாக அனுப்ப உதவுகிறது.

"பொட்டாசியம் நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துகிறது. இது நமது உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் ஒரு எலக்ட்ரோலைட். இது இதயம், மூளை மற்றும் உடலின் ஒவ்வொரு தசையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது" என்று எய்ம்ஸின் முன்னாள் உணவியல் நிபுணரும், ஒன் டயட் டுடேவின் நிறுவனருமான மருத்துவர் அனு அகர்வால் கூறுகிறார்.

தசை செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிக முக்கியமானது என்று அவர் விளக்குகிறார். இது தசைகள் சுருங்கவும் ஓய்வெடுக்கவும் உதவுகிறது. மேலும் , நமது உடலின் pH ஐ சமப்படுத்தவும் உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை அகற்றவும் உதவுகிறது.

பொட்டாசியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பொட்டாசியம் நமது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

பொட்டாசியத்தின் தேவை

தினமும் சராசரியாக 3,500 மில்லிகிராம் பொட்டாசியத்தை உட்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தையும் குறைக்கிறது.

உணவில் இருந்து பொட்டாசியம் கிடைக்குமா?

ஆம், உணவில் போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகள் இருந்தால் பொட்டாசியம் எளிதில் கிடைக்கும்.

ஆனால் பிரச்னை என்னவென்றால், பெரும்பாலான மக்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் கூட பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியாக சாப்பிடுவதில்லை.

அவர்களின் கலோரிகளில் பாதிக்கும் மேற்பட்டவை பதப்படுத்தப்பட்ட உணவுகளிலிருந்து வருகின்றன.

பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 10 சதவீத ஆண்களும் 24 சதவீத பெண்களும் தினசரி பொட்டாசியம் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை என அறியப்படுகிறது.

பொட்டாசியம் குறைபாட்டின் விளைவுகள் என்ன?

சில நேரங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு, சில மருந்துகளின் பின்விளைவு அல்லது அதிகப்படியான மது அருந்துவதன் காரணமாக பொட்டாசியம் குறைபாடு ஏற்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பொட்டாசியம் குறைபாடு ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும்.

பொதுவாக, பொட்டாசியம் குறைபாடு உணவுமுறையால் மட்டும் ஏற்படுவதில்லை.

சில நேரங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு, சில மருந்துகளின் பின்விளைவு அல்லது அதிகப்படியான மது அருந்துவதன் காரணமாக ஏற்படுகிறது.

பொட்டாசியம் குறைபாடு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும்.

"பொட்டாசியம் குறைபாடு தசை பிடிப்பு மற்றும் பதற்றத்தை அதிகரிக்கிறது. உடல் சோர்வாகவே இருக்கும். இது மலச்சிக்கலையும் ஏற்படுத்துகிறது. மிக முக்கியமாக, பொட்டாசியம் குறைபாடு ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும். அதேபோல் இது ரத்த அழுத்தத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று மருத்துவர் அனு அகர்வால் கூறுகிறார்.

பொட்டாசியத்தின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன ?

பொதுவாக, சிறுநீரகங்கள் சிறுநீரின் வழியாக அதிகப்படியான பொட்டாசியத்தை அகற்றும், ஆனால் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த செயல்முறை சரியாக நடக்காது.

அது போன்ற சூழ்நிலையில், உடலில் பொட்டாசியம் சேரத் தொடங்குகிறது, இதன் காரணமாக இதயத் துடிப்பு சீரற்றதாகி, இதயம் செயலிழப்பதற்கான அபாயம் அதிகரிக்கிறது.

இதனால் தான், சிறுநீரக நோயாளிகள் பெரும்பாலும் பொட்டாசியம் குறைந்த உணவை உண்ணுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொட்டாசியம் குறைபாடு, இதயம், நரம்புகள் மற்றும் தசைகளைப் பாதிக்கிறது, ஆனால் பொட்டாசியத்தின் அளவு அதிகரிப்பதும் ஆபத்தானது என்று விளக்குகிறார் மருத்துவர் அதிதி சர்மா.

பொட்டாசியத்தின் அளவு அதிகரித்தால் இதயம் செயலிழக்கலாம். எனவே, அதை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள்

ஒரு வாழைப்பழம் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் சுமார் 10% வழங்குகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு வாழைப்பழம் உங்கள் தினசரி பொட்டாசியம் தேவையில் சுமார் 10% வழங்குகிறது, அதே நேரத்தில் ஒரு வேகவைத்த உருளைக்கிழங்கு 30% வரை வழங்குகிறது.

வாழைப்பழங்கள் பொட்டாசியத்தை வழங்குகின்றன, ஆனால் அவற்றை மிகச் சிறந்த அல்லது அதிக அளவில் பொட்டாசியம் தரும் உணவு என வகைப்படுத்த முடியாது.

ஒரு வாழைப்பழம், ஒரு நாளைக்கு தேவையான பொட்டாசியத்தில் சுமார் 10% மட்டுமே வழங்கும். ஆனால் ஒரு வேகவைத்த உருளைக்கிழங்கு 30% வரை வழங்கும் திறன் கொண்டது.

அதிகளவு பொட்டாசியம் உள்ள உணவுப் பொருட்கள்

  • உலர்ந்த பழங்கள்

  • பச்சை இலை காய்கறிகள்

  • நட்ஸ் மற்றும் விதைகள்

  • பால் மற்றும் தயிர்

  • பருப்பு வகைகள்

  • மீன்

பொட்டாசியம் சமநிலையை பராமரிக்க, முடிந்தவரை அதிக அளவிலான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும் என்கிறார் மருத்துவர் அனு அகர்வால்.

பொட்டாசியம் தேங்காய் நீர், ஆரஞ்சு, வாழைப்பழம், பீட்ரூட் மற்றும் பச்சை இலை காய்கறிகளில் எளிதாகக் கிடைக்கிறது. இது பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் காணப்படுகிறது.

சப்ளிமெண்ட்ஸ் மற்றும் பொட்டாசியம்

பெரும்பாலான மக்களுக்கு, 3,700 மி.கி அல்லது அதற்கும் குறைவான பொட்டாசியம் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

ஆனால் வயதானவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இவற்றை (உப்பு மாற்றுகள் உட்பட) எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஏனென்றால், அவர்களின் சிறுநீரகங்களால் அதிகப்படியான பொட்டாசியத்தை எளிதில் அகற்ற முடியாது.

மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரிடம் ஆலோசிக்காமல் அதிகப்படியான வைட்டமின் டி உட்கொள்வதைத் தவிர்க்குமாறு மருத்துவர் அதிதி சர்மா அறிவுறுத்துகிறார்.

ஒருவர் தினமும் பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொண்டால், அவர்களுக்கு போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்கிறது.

எனவே கூடுதலாக சப்ளிமெண்ட்ஸ் எடுக்கவேண்டிய அவசியமில்லை.

பானங்களில் பொட்டாசியம் இருக்க வேண்டுமா ?

தக்காளி ஜூஸ் குடிக்கலாம், ஒரு கிளாஸ் தக்காளி ஜூஸில்  சுமார் 460 மி.கி பொட்டாசியம் உள்ளது.

படக்குறிப்பு, ஒரு கிளாஸ் தக்காளி சாற்றில் சுமார் 460 மி.கி பொட்டாசியம் உள்ளது.

வியர்வையின் மூலம் சிறிதளவு பொட்டாசியம் வெளியேறுகிறது. எனவே உடற்பயிற்சிக்குப் பிறகு அதை நிரப்ப வேண்டும். அதற்கு இயற்கையான வழிகளைப் பின்பற்றலாம்.

தக்காளி ஜூஸ் குடிக்கலாம், ஒரு கிளாஸ் தக்காளி ஜூஸில் சுமார் 460 மி.கி பொட்டாசியம் உள்ளது.

தோல் நீக்கப்பட்ட வேகவைத்த உருளைக்கிழங்கும் ஒரு நல்ல வழி. அவை பொட்டாசியத்தை வழங்குவது மட்டுமல்லாமல், அவற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளும் ஆற்றலை மீட்டெடுக்கின்றன.

பொட்டாசியத்தை அதிகரிக்க எளிதான வழிகள்

  • தினமும் ஐந்து முறை பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள் (எ.கா., காலை உணவில் ஒரு பழம், மதிய உணவுடன் ஒரு பழம் மற்றும் ஒரு காய்கறி, இரவு உணவில் இரண்டு காய்கறிகள்).

  • தினமும் மூன்று பால் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் (பாலுடன் காபி, சாலட்டில் சீஸ் அல்லது தயிர்)

  • வாரம் ஒரு முறை பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் சாப்பிடுங்கள்.

  • சிற்றுண்டிகளுக்கு உலர்ந்த பழங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  • மதிய உணவு அல்லது இரவு உணவோடு சாலட் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பச்சை காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். அதில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cge5jjx5q3ro

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
இல‌ங்கை ம‌க‌ளிர் கொழும்பு மைதான‌த்தில் சிற‌ப்பாக‌ விளையாடுவின‌ம் ஏற்க‌ன‌வே இல‌ங்கை அணி தென் ஆபிரிக்காவை சொந்த‌ ம‌ண்ணில் வென்ற‌வை ம‌ழை வ‌ந்து விளையாட்டு த‌டை ப‌ட்டால் இர‌ண்டு அணிக‌ளுக்கும் ஒவ்வொரு புள்ளி கொடுப்பின‌ம்............... இலங்கையில் ந‌ட‌ந்த‌ இர‌ண்டு போட்டி முடிவின்றி ம‌ழையால் கைவிட‌ப் ப‌ட்டது.............................

தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

2 months 1 week ago
ஒன்லைன் கடன் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை இணையதளம் மூலமாகவும், தொலைபேசிகள் மூலமாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, சில சமயங்களில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, பிணையில்லாமல் உடனடியாகக் கடன் வழங்க முடியும் என்று கூறி கடன் வழங்குவதற்காக முன்வந்த பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்கள் இலங்கை பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய நிறுவனங்களிடமிருந்து தொலைபேசிகள் மூலம் கடன் வாங்கும் போது செலுத்த வேண்டிய வட்டி வீதம் மற்றும் கடன் கால அவகாசம் குறித்து உரிய கவனம் செலுத்தாமல் கடன் வாங்குவதால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருப்பது இலங்கை பொலிஸாருக்கு கிடைக்கும் முறைப்பாடுகளில் கண்காணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சமயங்களில் கடனைத் திருப்பிச் செலுத்தும் போது எதிர்பாராதவிதமாக அதிக வட்டி செலுத்த நேரிடுவதுடன், அந்தக் கடன் நிறுவனங்கள் கடனை வசூலிக்க கடன் பெற்றவர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கும் வகையில் அழைப்புகள் விடுப்பது மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக அவமானகரமான பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் இலங்கை பொலிஸாருக்கு நாளாந்தம் முறைப்பாடுகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கமைய, இவ்வாறாக இணையம் மற்றும் தொலைபேசிகள் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து இலங்கை பொலிஸாரால் இலங்கை மத்திய வங்கியின் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மேற்பார்வைப் பிரிவில் வினவியபோது, அத்தகைய நிறுவனங்களில் பெரும்பாலானவை இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டவை அல்ல என்றும், கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எப்போதும் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட நிறுவனங்களிடம் மட்டுமே தங்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cmgu65y69011eqplppdi8r2z8

மலேசியாவில் புதிய வகை கொரோனா, மர்ம காய்ச்சல் : 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு

2 months 1 week ago
Published By: Digital Desk 3 16 Oct, 2025 | 11:46 AM மலேசியாவில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா மற்றும் மர்ம காய்ச்சல் காரணமாக நாடு முழுவதும் சுமார் 6,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மலேசியாவில் அண்மையில் எக்ஸ்.எப்.ஜி. (XFG) என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த வகை கொரோனா, இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டது. இந்த கொரோனா பரவலுடன், இன்புளூயன்சா (Influenza) பாதிப்பும் பலரிடம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மர்ம காய்ச்சலும் அதிகரித்து வருகிறது. பாடசாலைகளில் இந்தக் காய்ச்சல் பரவல், ஒரே வாரத்தில் 14 ஆக இருந்த நிலையில், தற்போது 97 கொத்தணிகளாக (Clusters) அதிகரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 6,000 மாணவர்கள் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 5 முதல் 7 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு இணைய வழியே பாடங்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அதிக அளவில் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், முகக்கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர். மேலும், கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து பெற்ற அனுபவங்களைக் கொண்டு நிலைமை கையாளப்படுவதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கல்வி அமைச்சகம் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் ஏறக்குறைய 4 இலட்சம் மாணவர்கள் பாடசாலைகளில் இறுதி பரீட்சை எழுத உள்ள நிலையில், இந்த திடீர் தொற்று அதிகரிப்பு மாணவர்கள் மத்தியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பும் (WHO) இந்த கொரோனா வைரஸை கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டிய ஒரு வகையாக வகைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227864

மலேசியாவில் புதிய வகை கொரோனா, மர்ம காய்ச்சல் : 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு

2 months 1 week ago

Published By: Digital Desk 3

16 Oct, 2025 | 11:46 AM

image

மலேசியாவில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா மற்றும் மர்ம காய்ச்சல் காரணமாக நாடு முழுவதும் சுமார் 6,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மலேசியாவில் அண்மையில் எக்ஸ்.எப்.ஜி. (XFG) என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த வகை கொரோனா, இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டது. இந்த கொரோனா பரவலுடன், இன்புளூயன்சா (Influenza) பாதிப்பும் பலரிடம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மர்ம காய்ச்சலும் அதிகரித்து வருகிறது.

பாடசாலைகளில் இந்தக் காய்ச்சல் பரவல், ஒரே வாரத்தில் 14 ஆக இருந்த நிலையில், தற்போது 97 கொத்தணிகளாக (Clusters) அதிகரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 6,000 மாணவர்கள் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 5 முதல் 7 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு இணைய வழியே பாடங்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அதிக அளவில் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், முகக்கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர். மேலும், கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து பெற்ற அனுபவங்களைக் கொண்டு நிலைமை கையாளப்படுவதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கல்வி அமைச்சகம் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் ஏறக்குறைய 4 இலட்சம் மாணவர்கள் பாடசாலைகளில் இறுதி பரீட்சை எழுத உள்ள நிலையில், இந்த திடீர் தொற்று அதிகரிப்பு மாணவர்கள் மத்தியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பும் (WHO) இந்த கொரோனா வைரஸை கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டிய ஒரு வகையாக வகைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/227864

தமிழ்த் தேசியப் பேரவை அடியோடு குலைகின்றது; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் கஜேந்திரகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!

2 months 1 week ago
தமிழ்த் தேசியப் பேரவை அடியோடு குலைகின்றது; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் கஜேந்திரகுமார் எம்.பி. கடும் அதிருப்தி! அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய அரசியலமைப்பின் 13ஆம் திருத்தந்தை யைப்படுத்திய மேற்கொள்வதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியுடனான அரசியற் கூட்டில் (தமிழ்த் தேசியப் பேரவை) இருந்து வெளியேறுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் 13ஆவது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பில் அவர்கள் தமக்குள் ஒன்றுகூடிக் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளனர். இதையடுத்தே, தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கும் போது செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு முரணாக அந்தக் கட்சிகள் நடந்துகொண்டதாகக் கருதி, பேரவையில் இருந்து வெளியேறுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார். அதில், பேரவையில் பங்காளித்தரப்பாக உள்ள ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டணியினரின் செயற்பாட்டில் அதிருப்தி தெரிவித்ததுடன், கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததாவது:- ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து 13ஆவது திருத்தம் தொடர்பில் கதைத்துள்ளனர். நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக்கூட்டணியோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஒற்றையாட்சி முறைக்குள் தமிழ்த் தேசிய அரசியலை நடத்துவதற்கு இடமில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அத்துடன், 13ஆவது திருத்தம் தமிழர்களுக்கான தீர்வல்ல, 'ஏக்கிய ராஜ்ஜிய' யோசனைகளுக்கும் இடமில்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளோம். இவற்றுக்கெல்லாம் இணங்கியே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் எம்முடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். ஆனால். எங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு முரணாகவே தற்போது அவர்கள் செயற்பட்டு வருகின்றனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எம்முடன் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு எம்மூடாகப் பதவிகளைப் பெற்றுவிட்டு தற்போது ஒப்பந்தங்களுக்கு முரணாகச் செயற்படுகின்றமையை ஏற்க முடியாது. என்பதுடன், இந்தச் செயற்பாட்டை அவர்கள் தாமாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகிய செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம். நாங்கள் மீண்டும் மீண்டும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினருக்கு வலியுறுத்துவது என்னவென்றால், தமிழ் மக்களுக்கு மோசமான தீங்குகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளைச் செய்யாதீர்கள் என்பதே. இந்தச் செயற்பாடுகள் சுமந்திரன் போன்றோரின் தமிழர் விரோதச் செயற்பாட்டை வலுப்படுத்துவதாகவே அமைந்துவிடும் என்றார். https://newuthayan.com/article/தமிழ்த்_தேசியப்_பேரவை_அடியோடு_குலைகின்றது;_ஜனநாயகத்_தமிழ்த்_தேசியக்_கூட்டணியில்_கஜேந்திரகுமார்_எம்.பி._கடும்_அதிருப்தி!

தமிழ்த் தேசியப் பேரவை அடியோடு குலைகின்றது; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் கஜேந்திரகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!

2 months 1 week ago

தமிழ்த் தேசியப் பேரவை அடியோடு குலைகின்றது; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் கஜேந்திரகுமார் எம்.பி. கடும் அதிருப்தி!

1242407381.JPG

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய அரசியலமைப்பின் 13ஆம் திருத்தந்தை யைப்படுத்திய மேற்கொள்வதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியுடனான அரசியற் கூட்டில் (தமிழ்த் தேசியப் பேரவை) இருந்து வெளியேறுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் 13ஆவது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பில் அவர்கள் தமக்குள் ஒன்றுகூடிக் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளனர். இதையடுத்தே, தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கும் போது செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு முரணாக அந்தக் கட்சிகள் நடந்துகொண்டதாகக் கருதி, பேரவையில் இருந்து வெளியேறுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார். அதில், பேரவையில் பங்காளித்தரப்பாக உள்ள ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டணியினரின் செயற்பாட்டில் அதிருப்தி தெரிவித்ததுடன், கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததாவது:-
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து 13ஆவது திருத்தம் தொடர்பில் கதைத்துள்ளனர். நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக்கூட்டணியோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஒற்றையாட்சி முறைக்குள் தமிழ்த் தேசிய அரசியலை நடத்துவதற்கு இடமில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அத்துடன், 13ஆவது திருத்தம் தமிழர்களுக்கான தீர்வல்ல, 'ஏக்கிய ராஜ்ஜிய' யோசனைகளுக்கும் இடமில்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளோம். இவற்றுக்கெல்லாம் இணங்கியே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் எம்முடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். ஆனால். எங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு முரணாகவே தற்போது அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் எம்முடன் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு எம்மூடாகப் பதவிகளைப் பெற்றுவிட்டு தற்போது ஒப்பந்தங்களுக்கு முரணாகச் செயற்படுகின்றமையை ஏற்க முடியாது. என்பதுடன், இந்தச் செயற்பாட்டை அவர்கள் தாமாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகிய செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

நாங்கள் மீண்டும் மீண்டும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினருக்கு வலியுறுத்துவது என்னவென்றால், தமிழ் மக்களுக்கு மோசமான தீங்குகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளைச் செய்யாதீர்கள் என்பதே. இந்தச் செயற்பாடுகள் சுமந்திரன் போன்றோரின் தமிழர் விரோதச் செயற்பாட்டை வலுப்படுத்துவதாகவே அமைந்துவிடும் என்றார்.

https://newuthayan.com/article/தமிழ்த்_தேசியப்_பேரவை_அடியோடு_குலைகின்றது;_ஜனநாயகத்_தமிழ்த்_தேசியக்_கூட்டணியில்_கஜேந்திரகுமார்_எம்.பி._கடும்_அதிருப்தி!

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

2 months 1 week ago
ஹீலி சதத்தின் உதவியுடன் பங்களாதேஷை வீழ்த்தி முதல் அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா Published By: Vishnu 17 Oct, 2025 | 03:12 AM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக விசாகப்பட்டினம் கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. சுழல்பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சுகள், அலிசா ஹீலி குவித்த ஆட்டம் இழக்காத சதம், ஃபோப் லிச்ஃபீல்ட் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 199 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 24.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டியது. அலிசா ஹீலி 77 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டறிகள் உட்பட 113 ஓட்டங்களுடனும் ஃபோப் லிச்ஃபீல்ட் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 84 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் நால்வர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் இருவர் 40 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். மத்திய வரிசை வீராங்கனை சோபனா மோஸ்தரி ஆட்டம் இழக்காமல் 66 ஓட்டங்களையும் ரூபியா அக்தர் 44 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட ஷர்மின் அக்தர் 19 ஓட்டங்களையும் அணித் தலைவி நிகார் சுல்தானா 12 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அலனா கிங் 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகி ஆனார். ஜோர்ஜியா வெயாஹாம் (22 - 2 விக்.), அனாபெல் சதர்லண்ட் (41 - 2 விக்.), ஏஷ்லி கார்ட்னர் (48 - 2 விக்.) ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இலங்கை - தென் ஆபிரிக்க அணிகள் இன்று கொழும்பில் மோதுகின்றன. https://www.virakesari.lk/article/227932

கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு, நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புகள் மீட்பு

2 months 1 week ago
Published By: Vishnu 17 Oct, 2025 | 03:52 AM கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான வழக்கு, 2025 ஒக்டோபர் 13 திங்கட்கிழமை கொழும்பு நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புகள் குறித்து வைத்திய பகுப்பாய்வை ஆரம்பிக்குமாறு விசேட சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகேவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அகழ்வாய்வில் இருந்து மீட்கப்பட்ட குறைந்தது 106 பேரின் மனித எலும்புகள் ஏற்கனவே குற்றக் காட்சி விசாரணை பொலிஸாரின் (SOCO) காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் நீதிமன்றம் மூலம் பகுப்பாய்வுக்காக ஒப்படைக்கப்பட உள்ளன. கொழும்பு துறைமுகத்தில் அகழ்வாய்வுப் பணிகள் விசேட தடயவியல் சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகே மற்றும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ ஆகியோரால் நடத்தப்பட்டன. ஒக்டோபர் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில், எதிர்கால வைத்திய பகுப்பாய்வு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வோஷான் ஹேரத் கோரிக்கை விடுத்தார். நீதிபதி 2025 நவம்பர் 28 ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரிக்க திகதி நிர்ணயித்துள்ளார். கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்காக பூமியைத் அகழ்ந்தபோது ஜூலை 13, 2024 அன்று அந்த பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர், கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில், செப்டெம்பர் 5, 2024 அன்று அந்த இடத்தில் அகழ்வாய்வு பணிகள் ஆரம்பமாகின. தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட கொழும்பு துறைமுக மனித புதைகுழியிலிருந்து குறைந்தது 106 பேரின் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இது நாட்டில் இதுவரை அகழ்வாய்வு செய்யப்பட்ட நான்காவது பெரிய மனித புதைகுழியாக பதிவாகியுள்ளது. https://www.virakesari.lk/article/227935

கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு, நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புகள் மீட்பு

2 months 1 week ago

Published By: Vishnu

17 Oct, 2025 | 03:52 AM

image

கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான வழக்கு, 2025 ஒக்டோபர் 13 திங்கட்கிழமை கொழும்பு நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புகள் குறித்து வைத்திய பகுப்பாய்வை ஆரம்பிக்குமாறு விசேட சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகேவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அகழ்வாய்வில் இருந்து மீட்கப்பட்ட குறைந்தது 106 பேரின் மனித எலும்புகள் ஏற்கனவே குற்றக் காட்சி விசாரணை பொலிஸாரின் (SOCO) காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் நீதிமன்றம் மூலம் பகுப்பாய்வுக்காக ஒப்படைக்கப்பட உள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் அகழ்வாய்வுப் பணிகள் விசேட தடயவியல் சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகே மற்றும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ ஆகியோரால் நடத்தப்பட்டன.

ஒக்டோபர் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில், எதிர்கால வைத்திய பகுப்பாய்வு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வோஷான் ஹேரத் கோரிக்கை விடுத்தார்.

நீதிபதி 2025 நவம்பர் 28 ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரிக்க திகதி நிர்ணயித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்காக பூமியைத் அகழ்ந்தபோது ஜூலை 13, 2024 அன்று அந்த பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர், கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில், செப்டெம்பர் 5, 2024 அன்று அந்த இடத்தில் அகழ்வாய்வு பணிகள் ஆரம்பமாகின.

தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட கொழும்பு துறைமுக மனித புதைகுழியிலிருந்து குறைந்தது 106 பேரின் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இது நாட்டில் இதுவரை அகழ்வாய்வு செய்யப்பட்ட நான்காவது பெரிய மனித புதைகுழியாக பதிவாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/227935