Aggregator

டக்ளஸூக்கு உயிராபத்து ; பாதுகாப்பு வழங்க அழுத்தம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்

2 months 1 week ago
ஒட்டுக்குழு தலைவன் டக்ளஸ் தேவானந்தா வெளியில் நின்றால், பொதுமக்களின் உயிருக்குத்தான் ஆபத்து. ஆன படியால்... அவனை மறியலில் வைத்திருப்பதே, நாட்டிற்கு நன்மை.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

2 months 1 week ago
அநுரகுமார திசாநாயக்க மீதுள்ளள கரைபுரண்டோடும் காதலால் வெளிபடுகின்ற உளறல்களின் பாதிப்பையே இங்கே காண கூடியதாக உள்ளது. கிறிஸ்தவ நம்பிக்கையாவது தமிழ்தேசியமாவது காதலுக்கு முன்னால் கரைந்து உருகிவிட்டது 🤣

இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்

2 months 1 week ago
முன்னாள் விடுதலைப் போராட்ட வீரனின் வாக்குமூலம்: திலீபனின் உண்ணாவிரதத்தின் முன் முல்லை மாவட்டத்தில் வெலிஓயா சிங்களக் குடியேற்றத்தையும், சிங்கள ஊர்காவற்படையினரின் அட்டகாசத்தை நிறுத்த மக்கள் போராடினார்கள். இப்போராட்டம் மன்னாரில் நடக்கும்போது இந்திய ராணுவத்தால் ஒரு தமிழ் பொதுமகன் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்னர் புளொட் இயக்கத்தினரால் (இந்தியா வளர்த்த கூலிப்படை) கப்டன் தனம் என்ற புலி இயக்கப்போராளி வவுனியாவில் கொல்லப்பட்டார். இதை இந்திய இராணுவம் தடுக்கத் தவறிவிட்டது. இதன் பின் லெப். கேணல் திலீபனின் நியாயமான 5 அம்சக் கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறியமை குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகளையும் கொழும்புக்கு அனுப்ப முற்பட்டமை இவற்றால்தான் இப் போர் ஏற்பட்டது.

இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்

2 months 1 week ago
மக்களே, இத்திரியில் இந்திய-தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப் படைகள் எமது மண்ணில் செய்த நாச வேலைகள் அனைத்தையும் பதியுங்கள். அடுத்த தலைமுறைக்கு வரலாறு சொல்லிச் செல்ல வேண்டும்.

இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்

2 months 1 week ago

மக்களே, இத்திரியில் இந்திய-தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப் படைகள் எமது மண்ணில் செய்த நாச வேலைகள் அனைத்தையும் பதியுங்கள்.

அடுத்த தலைமுறைக்கு வரலாறு சொல்லிச் செல்ல வேண்டும்.

சீனாவின் மலிவான இறக்குமதி - பிரித்தானியாவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு

2 months 1 week ago
சீனா விவசாய பொருட்களை வாங்காததால் விவசாயிகளுக்கு ரம் 10 பில்லியன் உதவித் தொகையாக வழங்க போகிறார்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 months 1 week ago
எங்களின் ஆய்க்கினை தாங்க இயலாமல் தட்டுத்தடுமாறி போட்டியில் கலந்து கொள்ளுவா? கிரிக்கட் பற்றி எதுவுமே தெரியாதலால் அப்பப்ப உதவி தேவைப்படும். நீங்களே கடையை விரிக்கும் போது இலகுவாக இருக்கும்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

2 months 1 week ago
1994 இல் 9. களல வோட்டு. பின் 2010 (யுத்த முடிவில் பல தமிழர் வாக்களிக்காத தேர்தல்) 3 இவை தவிர ஏனையவை 1. 2020 இல் யாழில் 1 வன்னியில் 1. 2025 பூச்சியம். என நினைக்கிறேன்.

ஐபோன் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

2 months 1 week ago

ஆப்பிள் ஐபோன் iPhone பயனர்கள் உடனடியாக தங்கள் சாதனங்களின் மென்பொருளை புதுப்பிக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

மிக தீவிரமான இரண்டு மென்பொருள் பாதுகாப்புக் குறைகள் (software vulnerabilities) கண்டறியப்பட்டுள்ளதுடன், அவை “மிகவும் நுணுக்கமான” சைபர் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.ஐபோன் பயனர்கள்

இந்த வாரம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிவிப்பில், Safari உலாவி மற்றும் iOS இயங்குதளத்தில் இயங்கும் அனைத்து மூன்றாம் தரப்பு உலாவிகளுக்கும் அடிப்படையாக உள்ள WebKit என்ற உலாவி இயந்திரத்தை இந்த குறைகள் பாதிப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஐபோன் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Apple Issues Urgent Notice To All Users

இந்த பாதுகாப்பு குறைகளை பயன்படுத்தி, ஒரு பாதிக்கப்பட்ட இணையதளத்தை பயனர் பார்வையிட்டாலே, அவருடைய சாதனத்தில் தீங்கு விளைவிக்கும் நிரல்கள் (malicious code) இயங்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைகள் உண்மையில் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆப்பிள் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அவை பொதுவான பெருமளவு தாக்குதல்கள் அல்ல என்றும், குறிப்பிட்ட சில நபர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் எனத் தோன்றுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்த பாதுகாப்பு குறைகள், குறிப்பிட்ட சில இலக்கு நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக நுணுக்கமான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் எங்களிடம் உள்ளது,” என ஆப்பிள் தனது பாதுகாப்பு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த குறைகளை சரிசெய்யும் வகையில், iPhone, iPad மற்றும் பிற ஆப்பிள் சாதனங்களுக்கு அவசர மென்பொருள் புதுப்பிப்புகளை (emergency software updates) ஆப்பிள் வெளியிட்டுள்ளது. அனைத்து பயனர்களும் உடனடியாக புதிய புதுப்பிப்புகளை நிறுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சுமார் 1.8 பில்லியன் iPhone பயனர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என சில தகவல்கள் வெளியானாலும், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், இது பெருமளவு சாதனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதற்கான சான்று கிடையாது என தெரிவிக்கின்றனர்.எச்சரிக்கை

மாறாக, இந்த பாதுகாப்புக் குறைகளின் தீவிரத்தையும், புதுப்பிக்கப்படாத சாதனங்களுக்கு ஏற்படும் அபாயத்தையும் இந்த எச்சரிக்கை எடுத்துக்காட்டுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.

இந்த தாக்குதல்களுக்கு பின்னால் யார் உள்ளனர் அல்லது யார் இலக்காக்கப்பட்டனர் என்பது குறித்து பாதுகாப்பு காரணங்களால் எந்த விவரங்களையும் ஆப்பிள் வெளியிடவில்லை.

ஐபோன் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Apple Issues Urgent Notice To All Users

முன்னதாக அறியப்படாத மென்பொருள் குறைகள் (Zero-Day Vulnerabilities) உலகளவில் அதிகரித்து வரும் சூழலில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இவ்வகை குறைகள், திருத்தங்கள் வெளியிடப்படும் முன்பே ஹேக்கர்களால் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சாதனங்களை எப்போதும் அண்மைய மென்பொருள் பாதுகாப்பு புதுப்பிப்புகளுடன் வைத்திருப்பது மிகவும் அவசியம் எனவும் ஆப்பிள் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.  

https://tamilwin.com/

ஐபோன் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

2 months 1 week ago
ஆப்பிள் ஐபோன் iPhone பயனர்கள் உடனடியாக தங்கள் சாதனங்களின் மென்பொருளை புதுப்பிக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மிக தீவிரமான இரண்டு மென்பொருள் பாதுகாப்புக் குறைகள் (software vulnerabilities) கண்டறியப்பட்டுள்ளதுடன், அவை “மிகவும் நுணுக்கமான” சைபர் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.ஐபோன் பயனர்கள் இந்த வாரம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிவிப்பில், Safari உலாவி மற்றும் iOS இயங்குதளத்தில் இயங்கும் அனைத்து மூன்றாம் தரப்பு உலாவிகளுக்கும் அடிப்படையாக உள்ள WebKit என்ற உலாவி இயந்திரத்தை இந்த குறைகள் பாதிப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு குறைகளை பயன்படுத்தி, ஒரு பாதிக்கப்பட்ட இணையதளத்தை பயனர் பார்வையிட்டாலே, அவருடைய சாதனத்தில் தீங்கு விளைவிக்கும் நிரல்கள் (malicious code) இயங்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த குறைகள் உண்மையில் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆப்பிள் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அவை பொதுவான பெருமளவு தாக்குதல்கள் அல்ல என்றும், குறிப்பிட்ட சில நபர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் எனத் தோன்றுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. “இந்த பாதுகாப்பு குறைகள், குறிப்பிட்ட சில இலக்கு நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக நுணுக்கமான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் எங்களிடம் உள்ளது,” என ஆப்பிள் தனது பாதுகாப்பு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த குறைகளை சரிசெய்யும் வகையில், iPhone, iPad மற்றும் பிற ஆப்பிள் சாதனங்களுக்கு அவசர மென்பொருள் புதுப்பிப்புகளை (emergency software updates) ஆப்பிள் வெளியிட்டுள்ளது. அனைத்து பயனர்களும் உடனடியாக புதிய புதுப்பிப்புகளை நிறுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சுமார் 1.8 பில்லியன் iPhone பயனர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என சில தகவல்கள் வெளியானாலும், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள், இது பெருமளவு சாதனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதற்கான சான்று கிடையாது என தெரிவிக்கின்றனர்.எச்சரிக்கை மாறாக, இந்த பாதுகாப்புக் குறைகளின் தீவிரத்தையும், புதுப்பிக்கப்படாத சாதனங்களுக்கு ஏற்படும் அபாயத்தையும் இந்த எச்சரிக்கை எடுத்துக்காட்டுகிறது என அவர்கள் கூறுகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு பின்னால் யார் உள்ளனர் அல்லது யார் இலக்காக்கப்பட்டனர் என்பது குறித்து பாதுகாப்பு காரணங்களால் எந்த விவரங்களையும் ஆப்பிள் வெளியிடவில்லை. முன்னதாக அறியப்படாத மென்பொருள் குறைகள் (Zero-Day Vulnerabilities) உலகளவில் அதிகரித்து வரும் சூழலில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இவ்வகை குறைகள், திருத்தங்கள் வெளியிடப்படும் முன்பே ஹேக்கர்களால் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சாதனங்களை எப்போதும் அண்மைய மென்பொருள் பாதுகாப்பு புதுப்பிப்புகளுடன் வைத்திருப்பது மிகவும் அவசியம் எனவும் ஆப்பிள் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. https://tamilwin.com/

“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

2 months 1 week ago
விஜயினை பற்றி எனக்கு தெரிந்த சில தமிழகத்தினை சேர்ந்தவர்களுடன் உரையாடினேன். பல இளைஞர்கள், பெண்கள் அவருக்கு வாக்களிக்க விரும்புவதாக சொல்லுகிறார்கள். திமுகவுக்கு மாற்று விஜய் என்று சொல்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

2 months 1 week ago
2010 பாராளுமன்ற தேர்தலில் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. அதற்கு முந்தைய தேர்தலில் ஒன்று கிடைத்தது. மற்றைய தேர்தல்கள் பற்றிய விபரங்களை இன்னும் பார்க்கவில்லை.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

2 months 1 week ago
டக்கிலஸுக்கு மரணதண்டனை அளிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா? சிலரின் முதலமைச்சர் கனவில் இப்படி மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்களே. இப்போ யார் யார் சிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லையே? கடல், விமான நிலையம் எல்லாம் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும். சாண் ஏற நினைக்கும்போது முழம் சறுக்குகிறதே. அனுராவை இப்போதைக்கு ஒழிக்க முடியாது, அப்படி நினைத்தால், நினைப்பவர்கள் அரசியல் கேள்விக்குறியாகும்போல் உள்ளதே!

டக்ளஸூக்கு உயிராபத்து ; பாதுகாப்பு வழங்க அழுத்தம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்

2 months 1 week ago
ம்.... இந்நாள்வரை அளவுக்கதிகமான கைதிகளை அடைத்து வைத்திருக்கும்போது குரல் எழுப்பாத சுரேன் ராகவன், இந்த ஜனநாயக வீரனுக்கு குரல் எழுப்புகிறார். இவர் வடக்கில் ஆளுநராக இருந்தபோது இந்த டக்கிளஸ் செய்த கொலை, கொள்ளை, சுரண்டல், அதிகாரதுஷ்ப்பிரயோகம் பற்றி அறியாமலா இருந்திருப்பார்? ஒருவேளை இவரும் தனது தேவைகளுக்காக இவரை பயன்படுத்தியிருப்பாரோ? சற்றுப்பொறுங்கள் ஆளுநர் அவர்களே! உங்கள் கூட்டாட்சியில் அங்கம் வகிக்கும்போது அவர் நிகழ்த்திய வண்டவாளங்கள் வெளியில் வரட்டும், அவர் அப்படி ஒரு தியாகியல்ல, அவரும் ஏனைய கைதிகள் போலவே சமமாக அடைக்கப்படவேண்டியவர்.

சீனாவின் மலிவான இறக்குமதி - பிரித்தானியாவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு

2 months 1 week ago
சீனாவின் மலிவான இறக்குமதியால் பிரித்தானியாவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால் சீனாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், அந்த நாடு தனது பொருட்களை மாற்று சந்தைகளுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது. இதில் பிரித்தானியா முக்கிய இடமாக மாறி வருகிறது. சீனாவின் மலிவு விலை கார்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் ஒலி உபகரணங்கள் பிரித்தானியாவிற்கு அதிக அளவில் வருவதால் அங்குள்ள பணவீக்கம் குறைய வாய்ப்பு உள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் வர்த்தக உபரி முதல் முறையாக 1 டிரில்லியன் டொலரை கடந்துள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி 29 சதவீதம் குறைந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 15 சதவீதம் மற்றும் பிரித்தானியாவிற்கு 9 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரித்தானியாவில் தற்போது பணவீக்கம் 3.2 சதவீதமாக உள்ளது. 2026 நடுப்பகுதிக்குள் 2 சதவீதம் இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த பட்ஜெட்டில் எரிசக்தி மற்றும் எரிபொருள் வரிகளில் தளர்வு வழங்கப்பட்டதால் பணவீக்கம் மேலும் 0.5 சதவீதம் குறையலாம். இங்கிலாந்து வங்கி (Bank of England) வட்டி விகிதத்தை 3.75 சதவீதமாகக் குறைத்துள்ளது. 2026-இல் மேலும் குறையும் வாய்ப்பு உள்ளது. சீனாவிலிருந்து பிரித்தானியாவிற்கு 70 பில்லியன் பவுண்டு மதிப்பிலான பொருட்கள் வந்துள்ளன. இதில் கார்கள், தொலைத்தொடர்பு மற்றும் ஒலி சாதனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மலிவான இறக்குமதி காரணமாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் ஐரோப்பிய நாடுகளில் எழுந்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், “ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகலாம்” என எச்சரித்துள்ளார். பிரித்தானிய அரசு உள்நாட்டு எஃகு உற்பத்தியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளது. சீனாவின் மலிவு இறக்குமதி பிரித்தானியாவில் விலைகளை குறைத்து பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவலாம். ஆனால் இது உள்ளூர் தொழில்துறைக்கு சவாலாக மாறும் அபாயமும் உள்ளது. https://tamilwin.com/uk

சீனாவின் மலிவான இறக்குமதி - பிரித்தானியாவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு

2 months 1 week ago

சீனாவின் மலிவான இறக்குமதியால் பிரித்தானியாவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால் சீனாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், அந்த நாடு தனது பொருட்களை மாற்று சந்தைகளுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது.

இதில் பிரித்தானியா முக்கிய இடமாக மாறி வருகிறது.

சீனாவின் மலிவு விலை கார்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் ஒலி உபகரணங்கள் பிரித்தானியாவிற்கு அதிக அளவில் வருவதால் அங்குள்ள பணவீக்கம் குறைய வாய்ப்பு உள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

UK inflation news, Chinese imports UK, Trump tariffs impact, UK economy 2026 forecast, Bank of England rate cut, UK trade with China, UK headline inflation drop, Catherine Mann inflation statement, Rachel Reeves budget inflation, UK import prices moderation

சீனாவின் வர்த்தக உபரி முதல் முறையாக 1 டிரில்லியன் டொலரை கடந்துள்ளது.

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி 29 சதவீதம் குறைந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 15 சதவீதம் மற்றும் பிரித்தானியாவிற்கு 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

பிரித்தானியாவில் தற்போது பணவீக்கம் 3.2 சதவீதமாக உள்ளது. 2026 நடுப்பகுதிக்குள் 2 சதவீதம் இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த பட்ஜெட்டில் எரிசக்தி மற்றும் எரிபொருள் வரிகளில் தளர்வு வழங்கப்பட்டதால் பணவீக்கம் மேலும் 0.5 சதவீதம் குறையலாம்.

இங்கிலாந்து வங்கி (Bank of England) வட்டி விகிதத்தை 3.75 சதவீதமாகக் குறைத்துள்ளது. 2026-இல் மேலும் குறையும் வாய்ப்பு உள்ளது.

சீனாவிலிருந்து பிரித்தானியாவிற்கு 70 பில்லியன் பவுண்டு மதிப்பிலான பொருட்கள் வந்துள்ளன. இதில் கார்கள், தொலைத்தொடர்பு மற்றும் ஒலி சாதனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மலிவான இறக்குமதி காரணமாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் ஐரோப்பிய நாடுகளில் எழுந்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், “ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகலாம்” என எச்சரித்துள்ளார்.

பிரித்தானிய அரசு உள்நாட்டு எஃகு உற்பத்தியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளது.

சீனாவின் மலிவு இறக்குமதி பிரித்தானியாவில் விலைகளை குறைத்து பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவலாம். ஆனால் இது உள்ளூர் தொழில்துறைக்கு சவாலாக மாறும் அபாயமும் உள்ளது.

https://tamilwin.com/uk