2 months 1 week ago
121 ஓட்டங்கள் பெறவேண்டும். இலங்கை, கடைசிப் பந்துப் பரிமாற்றத்தில், 3 விக்கட்டுகளை இழந்திருக்காவிடில், இலக்கு 121ஜ விட இன்னமும் அதிகமாக இருந்திருக்கும். அவர்களின் விதி அப்பிடி
2 months 1 week ago
அண்ணை, Chrome, Edge இரண்டிலும் தமிழிலும் வழக்கத்திற்கு மாறாக அகலமாகவும் உள்நுழையும் பகுதி காணப்படுகிறது. நான் உள்நுழைய ஈமெயிலை தட்டச்ச அது தமிழ் எழுத்தாக மாறிக்காண்பிக்கிறது. Firefox சரியாக உள்ளது. எனது browser ஏதும் மாற்றம் செய்யவேண்டுமா?
2 months 1 week ago
குட்டிசிறி மோட்டார் படையணி நிழற்படங்கள் 58 இதற்குள் உண்டு: http://aruchuna.com/categories.php?cat_id=34&page=3
2 months 1 week ago
மீள் வரவுக்கு நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள் எம்முடன்.
2 months 1 week ago
உங்கள் கவலை உங்களுக்கு 😃 இலங்கை அணி உண்மையிலேயே பாவம். அவர்கள் ஏலவே தன்னம்பிக்கை இல்லாத அணி. போட்டிகளில் விளையாடினாற்தான் உற்சாகம் வரும். தோற்றாலும் விளையாடித் தோற்கவேணும்.
2 months 1 week ago
அப்ப தமிழ் பிரதிநிதிகள் தான் "எய்தவன்" இனப்படுகொலையாளர்களான அரசு "அம்பு" என்கிறீர்களா😂?
2 months 1 week ago
செவ்வந்தியும் ஊடகங்களும் --- ------------- *குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்புக் கூறுமா? *வெள்ளைத் துணியால் தலையை போர்த்தும் நடைமுறை தவிர்க்கப்பட்டது ஏன்? ---------------------- கொலை செய்த அல்லது கொலைக்கு நேரடியாக உதவி செய்ததாக நம்பப்படும், குற்றவியல் குற்றம் (Criminal Offence) புரிந்த கைதிகளை பொலிஸார் அழைத்து வரும் போது, அவர்களின் தலையை வெள்ளைத் துணியால் மூடிக் கொண்டு வருவது வழமை. ஆனால், இலங்கை குற்றப் புலனாய்வு பொலிஸார் செவ்வந்தி உள்ளிட்ட கைதிகளை, நேபாளத்தில் இருந்து ஆடம்பரமான முறையில் அழைத்து வந்திருக்கின்றனர் போல் தெரிகிறது. செவ்வந்தி விமானத்தில் இருந்து இறங்கி வரும் முறையும், விமான நிலைய ஆசனத்தில் அமர்ந்திருந்து சிரித்துக் கொண்ட முறையும், கொலைக் குற்ற சந்தேகநபர் என்ற உணர்வை மறைத்திருக்கின்றன. அத்துடன் அவர் தன்னுடைய பயணப் பொதியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் போன்று கொண்டு வருகிறார். இராணுவத்தினரும் பொலிஸாரும் செவ்வந்தியை சுற்றி பாதுகாப்பு வழங்கிக் கொண்டு வருகின்றனர். சில பிரதான ஊடகங்களில் இந்த ஆடம்பரமான காட்சி வெளியாகியுள்ளது. அந்த ஊடகங்களின் சமூக வலைத்தளங்களிலும் அக் காட்சி வெளியாகியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் அதனை பார்த்துமுள்ளனர். நீதிமன்றத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தார் என்பது வேறு. ஆனால் --- அவரை கொலை செய்வதற்கு நேரடியாக களம் இறங்கி ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரைக் கைது செய்து கொண்டு வரும்போது, கைதிகளுக்கான நடைமுறை விதிகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? இந்த நடைமுறை செவ்வந்தி கைது விவகாரத்தில் பின்பற்றப்படவில்லையே! இங்கே குற்றவியல் பொலிஸாரும் கொழும்பில் உள்ள சில பிரதான ஊடகங்களின் சில செய்தியாளர்களும் தவறு இழைத்துள்ளனர் என்றே பொருள் கொள்ள முடியும்... சமூக ஊடகங்கள் பொறுப்பின்றிச் செயற்படுகின்றன என்று இலகுவாக குற்றம் சுமத்த முடியும். ஆனால் -- செவ்வந்தியை அழைத்து வந்த காட்சிகளை வீடியோ எடுப்பதற்கும் செய்தி சேகரிப்பதற்கும் பிரதான ஊடகங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. யூடியூபர்ஸ் அங்கு செல்லவில்லை. பிரதான ஊடகங்களில் வெளியான காட்சிகளை செம்மையாக்கம் (Editing) செய்தே சில சமூக ஊடகங்கள் அக் காட்சிகளை பிரசுரித்திருந்தன. சில சமூக ஊடகங்கள் அக் காட்சிகளை AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேலும் ஆடம்பரமாகவும் நகைச்சுவையாகவும் அதனை எல்லோரும் சிரித்து ரசிக்கும் வகையிலும் காட்சிப்படுத்தியிருந்தன. இது சமூகத்தில் பிழையான கற்பிதத்தை கொடுத்துள்ளது --- அதாவது --- கொலை செய்து விட்டுத் தப்பினாலும் கைது செய்யப்படும் போது, அரச மரியாதை போன்ற உணர்வுகள் கிடைக்கும் என்ற ஒரு தவறான புரிதலை அக் காட்சிகள் சமூகத்தில் விதைக்கின்றன. அது மாத்திரமல்ல --- கொலை என்பது மிக இலகுவான காரியம் என்ற பார்வையும், இளைஞர்கள் - பெண்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், செவ்வந்தியின் வயது 26. அத்தோடு ---- கொலை செய்தால் அல்லது கொலைக்கு உதவி செய்து ஓடி ஒழித்துக் கொண்ட பின்னர் கைது செய்யப்பட்டால், அரச மரியாதையின் தரத்துக்கு பிரதான ஊடகங்களும் தங்களை காண்பிக்கும் என்ற தவறான புரிதலும் சமூகத்தில் மேலோங்கியுள்ளன. அதேநேரம், யூடியுபர்ஸ் ஊடக ஒழுக்க விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல, அல்லது அவர்களை ஊடக ஒழுக்க விதிகளுக்கு அமைவாக செயற்படுமாறு கோரவும் முடியாத ஒரு சூழல் இருக்கும் நிலையில் ---- ------ சில பிரதான ஊடகங்கள் செவ்வந்தி விவகாரத்தில் பொறுப்பின்றி செயற்பட்டமை கண்டனத்துக்குரியது. பொலிஸாரிடம் தனியான ஊடகப் பிரிவு உள்ளது. அந்த ஊடகப் பிரிவினரால், செவ்வந்தியும் ஏனைய கைதிகளும் அழைத்து வரப்பட்ட காட்சிகளை பதிவு செய்து, பின்னர் பிரதான ஊடகங்களுக்கு அதனை வழங்கியிருக்கலாம். அல்லது வெள்ளைத் துணியால் முகத்தை மூடிக் கொண்டு வந்திருக்கிலாம். ஆனால் -- பொலிஸார் அவ்வாறு செய்யத் தவறியுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களம் இத் தவறுக்கு பொறுப்புக் கூறுமா? அதேநேரம், மக்களுக்கான அரசாங்கம் என்று மார் தட்டும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதற்கு பொருத்தமான பதில் தருமா? விளக்க குறிப்பு --- பல மாதங்களாக வியூகம் வகுத்து செவ்வந்தியை கைது செய்ததாகக் கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தமக்குள் பெருமைப்படக் கூடும். ஆனால் செவ்வந்தி அழைத்து வரப்பட்ட முறையானது, குற்றப் புலனாய்வு பொலிஸாரின் அப் பெருமைகளை மலினப்படுத்தியுள்ளது எனலாம். செவ்வந்தியின் இயற்கை அழகுக்கு ஏற்ப சமூக ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும் கைதுக்கான நோக்கத்தை தரம் குறைத்துள்ளது என்றே பொருள் கொள்ள முடியும்... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0ZMDz5MhEf8WbyEAjBzoMhept4BnN1SFaRcLnJgsjrjkNU4ehvECDQZ1fvudjHkPel&id=1457391262
2 months 1 week ago
மீண்டும் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி, கோபி. கைக்கூக்கள் நன்றாக இருக்கின்றன................❤️.
2 months 1 week ago
இலங்கை நேரம் 9.10 மணிக்கு 20 ஓவர் போட்டியாக, போட்டி தொடர்ந்து நடைபெறவுள்ளது.
2 months 1 week ago
அட அது மட்டுமா? களம் கறுப்பா? சிகப்பா?வெள்ளையா? இப்படி ஐயாவின் ஆராச்சி வேற லெவல்.
2 months 1 week ago
2 months 1 week ago
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்.. https://www.facebook.com/share/v/14PdFXjdaUp/
2 months 1 week ago
நன்றாக விளையாடினம், சொதப்பினம், அடிக்கத் தெரியாது, கூட ஓட்டத்தை குடுக்கினம், அவர் சரியில்லை, இவர் சரிவர மாட்டார்...... இதுதானே இங்கே சொல்லப்படும் விடயங்கள். நீங்கள் என்ன என்டா, களத்தடுப்பு, அது இது என்டு கேட்கிறியல். 😁
2 months 1 week ago
மழை பெய்வதினால் எனக்குதான் நன்மை. கைத்தொலைபேசியில் இலகுவாக எல்லா போட்டியாளர்களுக்கும் 2 புள்ளிகளை கூட்டி வழங்கலாம். யார் என்ன விடை எழுதினார்கள் என்று பார்க்க தேவையில்லை. 😀
2 months 1 week ago
1987 ல் கையில் கிடைத்ததை தூக்கி குப்பையில் போட்டு திமிர் எடுத்துவிட்டு இப்போது வல்லரசுகள் 13 ஜ அமுல்படுத்த வற்புறுத்த வேண்டுமாம். கேடகவே சிரிப்பாய் உள்ளது. 😂 காற்றுள்ள போதே தூற்றிக்கொள். இப்போது காற்று போன பின்னர் புலம்புவதில் அர்ததம் இல்லை.
2 months 1 week ago
காட்டு யானை ரோலக்ஸ் பிடிக்கப்பட்டது https://www.youtube.com/shorts/-VRiCxiCoNw ராமில் அடிபடாது காப்பாற்றிய காவலர் யால தேசியப்பூங்காவில் சிறுத்தையிடம் இருந்து மானைக் காத்த முதலை!!
2 months 1 week ago
இப்படியோ தொடர்ந்து மழை பெய்தால் நாளையான் நாள் விளையாட்டு நடப்பது சந்தேகம் தான்.............................
2 months 1 week ago
"Bison is the film that scared my mother and wife" - Mari Selvaraj Interview | Dhruv Vikram Directed by Mari Selvaraj, the film stars Dhruv Vikram, Anupama Parameswaran, Ameer, Rajisha Vijayan and Lal. The film is based on the life of Kabaddi player Manathi Ganesan. What did Mari Selvaraj have to say about it? This is a Collective Newsroom release for BBC #MariSelvaraj #Bison #Kabaddi
2 months 1 week ago
குற்றவாளிகளும் தமக்குள் இனபேதமின்றி புரிந்துணர்வுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். இனவாதத்தை மக்களுக்குள் விதைத்த இருபக்க அரசியல்வாதிகளும் தமக்குள் இனபேதம் இன்றி இணைந்து பணியாற்றுகிறார்கள்.
2 months 1 week ago
17 Oct, 2025 | 04:13 PM யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு, அவற்றை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அகற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக பேணி, மழைக்காலம் முடிவடைந்த பின்னர் மீள பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக மந்திரிமனையின் பாகமொன்று இடிந்து விழுந்தது. முன்னதாக, சேதமடைந்து காணப்பட்ட அப்பகுதி மேலும் இடிந்து விழாமல், அதனைக் காப்பாற்றுவதற்காக இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டது. இந்நிலையில், அந்த இரும்புக் கம்பிகளை திருடர்கள் திருடிச் சென்றமையால், பாதுகாப்பின்றி இருந்த மந்திரிமனையின் குறித்த பாகம் கடந்த மாதம் இதே நாளில் மழைக்கு காரணமாக இடிந்து விழுந்தது. அதன் பின்னர், ஏனைய பாகங்கள் இடிந்து விழாமல் பாதுகாக்க, மீண்டும் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது யாழ்ப்பாணத்தில் மழைக் காலம் தொடங்கியுள்ளமையால், மந்திரிமனையின் மேல் கூரைகளின் பாரத்தால், சுவர்கள் இடிந்து விழும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக, கூரைகளை அகற்றும் நடவடிக்கைகளை தொல்லியல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. இந்த மந்திரிமனை அமைந்துள்ள நிலப்பகுதி தனியார் ஒருவருக்கு சொந்தமாக காணப்படுவதால், அதனை புனரமைக்க அவர் கடந்த காலங்ககளில் சம்மதம் தெரிவிக்காதமையாலேயே மந்திரிமனை கடந்த காலங்களில் புனரமைக்கப்படவில்லை என தொல்லியல் திணைக்களம் கூறியிருந்தது. தற்போது மந்திரிமனையின் வாயில் பகுதியில் உள்ள கூரைகளை அகற்ற குறித்த உரிமையாளர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவற்றை தற்காலிகமாக அகற்றி பாதுகாப்பாக வைத்திருந்து, மழைக்காலம் முடிந்த பின்னர், மீள பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியுடன் தொல்லியல் திணைக்களம் கூரைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. https://www.virakesari.lk/article/228012