Aggregator

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய பொலிஸ் திணைக்களம் செயற்படுகிறது - நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

2 months 1 week ago
16 Oct, 2025 | 03:32 PM (இராஜதுரை ஹஷான்) பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மெதிரிகிரிய பகுதியில் புதன்கிழமை (15) இரவு நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதாள குழுக்களை கைது செய்வதாகவும், போதைப்பொருட்களை கைப்பற்றுவதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பற்றி ஏதும் குறிப்பிடுவதில்லை. அனைத்து குற்றங்களையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்துவதையே இந்த அரசாங்கம் பிரதான கொள்கையாக கொண்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கமும் இவ்வாறே செயற்பட்டது.இறுதியில் நாட்டு மக்கள் நெருக்கடிக்குள்ளானார்கள். இந்த அரசாங்கமும் எம்மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.அந்த குற்றச்சாட்;டுக்களை சட்டத்தின் முன் நிரூபித்து உண்மையை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட வேண்டிய தேவை எமக்கு உள்ளது. பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும். மாகாணசபைத் தேர்தல் பற்றி பேசப்படுகிறது. நாங்கள் எந்தத் தேர்தல்களுக்கும் தயார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாகாணசபைத் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்தினார்.ஆகவே தேர்தலை கண்டு நாங்கள் அச்சமடைய போவதில்லை என்றார். https://www.virakesari.lk/article/227892

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய பொலிஸ் திணைக்களம் செயற்படுகிறது - நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

2 months 1 week ago

16 Oct, 2025 | 03:32 PM

image

(இராஜதுரை ஹஷான்)

பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மெதிரிகிரிய பகுதியில் புதன்கிழமை (15) இரவு நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாதாள குழுக்களை கைது செய்வதாகவும், போதைப்பொருட்களை கைப்பற்றுவதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பற்றி ஏதும் குறிப்பிடுவதில்லை.

அனைத்து குற்றங்களையும் ராஜபக்ஷர்கள் மீது சுமத்துவதையே இந்த அரசாங்கம் பிரதான கொள்கையாக கொண்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கமும் இவ்வாறே செயற்பட்டது.இறுதியில் நாட்டு மக்கள் நெருக்கடிக்குள்ளானார்கள்.

இந்த அரசாங்கமும் எம்மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.அந்த குற்றச்சாட்;டுக்களை சட்டத்தின் முன் நிரூபித்து உண்மையை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட வேண்டிய தேவை எமக்கு உள்ளது.

பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது.ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும்.

மாகாணசபைத் தேர்தல் பற்றி பேசப்படுகிறது. நாங்கள் எந்தத் தேர்தல்களுக்கும் தயார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாகாணசபைத் தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்தினார்.ஆகவே தேர்தலை கண்டு நாங்கள் அச்சமடைய போவதில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/227892

'ஹீரோ மெட்டீரியல்'- ஒரு கதாநாயகன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளதா?

2 months 1 week ago
பட மூலாதாரம், PradeepRanganathan/Facebook கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 'யார் ஹீரோ?'- திரையரங்கமோ அல்லது ஓடிடி-யோ, ஒரு திரைப்படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் இந்தக் கேள்விக்கான பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கதை- திரைக்கதை போன்ற பிற அம்சங்கள் சிறப்பாக இருந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஏராளம் என்றாலும் கூட, 'ஹீரோ' தான் ஒரு திரைப்படத்தின் அடையாளம் என்ற பொது பிம்பத்தை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு எடுத்துக்காட்டியது. கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு நடித்திருக்கும் 'ட்யூட்' (Dude) திரைப்படம் தீபாவளியை ஒட்டி (அக்டோபர் 17) வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான விளம்பர நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, பத்திரிகையாளர் ஒருவர் பிரதீப்பிடம், "நீங்கள் 'ஹீரோ மெட்டீரியல் இல்லை'. ஆனால், இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். அரிதாக, இத்தனை ரசிகர்களும் இருக்கிறார்கள். இது அதிர்ஷ்டமா இல்லை கடின உழைப்பா?" எனக் கேட்டார். அப்போது உடனிருந்த நடிகர் சரத்குமார் அப்பத்திரிகையாளரைப் பார்த்து, "நான் இந்தத் துறையில் 170 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். யார் 'ஹீரோ மெட்டீரியல்' என்பதை நீங்கள் சொல்ல முடியாது. 'ஹீரோவாக' இருப்பதற்கு எந்த விதிமுறையும் இல்லை" என்றார். இது குறித்து பின்னர் ஒரு நேர்காணலில் பதிலளித்த பிரதீப் ரங்கநாதன், "ஒல்லியாக, கருப்பாக இருக்கிறேன் போன்ற உருவக்கேலிகளை சிறு வயதிலிருந்தே கேட்டுள்ளேன். அவை பழகிவிட்டன. 'லவ் டுடே' திரைப்பட நிகழ்வுகளிலும் இதை எதிர்கொண்டேன். மக்கள் என்னை அவர்களில் ஒருவராகப் பார்ப்பதால் ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள் என நினைக்கிறேன்" எனக் கூறியிருந்தார். இதற்கு முன் இதேபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்ட தமிழ் நடிகர்கள் யார் யார்? உண்மையில் ஒரு திரைப்படத்திற்கு 'ஹீரோ மெட்டீரியல்' அல்லது 'கதாநாயக பிம்பம்' தேவையா, பிற இந்திய திரைப்படத் துறைகளில் இதை எப்படிப் பார்க்கிறார்கள்? தியாகராஜ பாகவதர் மற்றும் பியூ சின்னப்பா பட மூலாதாரம், @NFAIOfficial படக்குறிப்பு, எம்.கே. தியாகராஜ பாகவதர் "தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என விவரிக்கப்படும் தியாகராஜ பாகவதராக இருக்கட்டும் அல்லது பிரபல நடிகர் பியூ சின்னப்பாவாக இருக்கட்டும், இருவருமே அவர்களது பாடும் திறனால் பிரபலமானவர்கள். அப்போது இந்த 'ஹீரோ மெட்டீரியல்' என்ற விஷயமே இல்லை" என்கிறார் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாய்வாளர் தியடோர் பாஸ்கர். பாம்பின் கண்- தமிழ் சினிமா ஓர் அறிமுகம், திரையில் விரியும் சமூகம், சித்திரம் பேசுதடி போன்ற தமிழ் சினிமா குறித்த நூல்களை இவர் எழுதியுள்ளார். "இந்தி சினிமா மற்றும் ஹாலிவுட் திரைப்படத்துறையில் தொடக்கம் முதலே ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பிம்பம் இருந்தது. காலப்போக்கில் அது தமிழ் சினிமாவிலும் பரவியது, குறிப்பாக எம்ஜிஆர் காலத்தில். ஹீரோ என்பவர் அழகாக, கட்டுமஸ்தாக இருக்க வேண்டும், படத்தின் இறுதிவரை மரணிக்கவே கூடாது, பெண்கள் பின்னால் போகக்கூடாது, பெண்கள் தான் அவர் பின்னால் வர வேண்டும் என எழுதப்படாத விதிகள். இன்றுவரை எம்ஜிஆரை நினைவுகூறுபவர்கள் அவரது 'அழகைப்' பற்றி தான் பெரும்பாலும் பேசுகிறார்கள்" என்கிறார் தியடோர் பாஸ்கர். இதே கருத்தை முன்வைக்கும் எழுத்தாளர் ஜா. தீபா, "எம்ஜிஆருக்குப் பிறகு 'ஒரு ஹீரோ' என்றாலே அழகாக, குறிப்பாக 'வெள்ளை தோலுடன்' இருக்க வேண்டுமென்ற பிம்பம் தமிழ் சினிமாவில் உருவானது. சிவாஜி சில திரைப்படங்களில் அதை உடைத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பின் ரஜினியின் வருகை ஒரு மாற்றத்திற்கு வழிவகுத்தது." என்கிறார். சிவாஜியின் 'ஹீரோ மெட்டீரியல்' அல்லாத வித்தியாசமான முயற்சிகளுக்கு சிறந்த உதாரணம், 1954இல் வெளியான 'அந்த நாள்' எனும் திரைப்படம். அதில் படம் தொடங்கி சில நிமிடங்களில் சிவாஜியின் கதாபாத்திரம் (ராஜன்) இறந்துவிடும். யார் அந்தக் கொலையைச் செய்தார்கள் என்பதே திரைப்படத்தின் கதை. பட மூலாதாரம், Dwarakish படக்குறிப்பு, 1984இல் ரஜினி நாயகனாக நடித்து இந்தியில் வெளியான 'கங்வா' திரைப்படம். இருப்பினும் சிவாஜியைப் போல அல்லாமல், ரஜினி தொடக்கத்தில் சில திரைப்படங்களில் இரண்டாம் கதாநாயகன், வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த பின்பே 'ஹீரோவாக' வெற்றி பெற்றதைக் குறிப்பிடும் ஜா. தீபா, "உருவத்தைத் தாண்டி தனக்கான திறமையை சில 'கதாபாத்திரங்களில்' நிரூபித்த பின் தான் ரஜினியால் அந்தக் கேலிகளை கடந்துவர முடிந்தது." என்கிறார். ஆனால், தமிழில் ஒரு கதாநாயகனாக பிரபலமான பின்பும் கூட, 1980களில் இந்தியில் அறிமுகமானபோது, உருவக்கேலிகளை எதிர்கொண்டதாக ரஜினிகாந்த் ஒரு நிகழ்வில் கூறியிருப்பார். "கங்வா (1984இல் வெளியான இந்தித் திரைப்படம், தமிழில் வெளியான மலையூர் மம்பட்டியான் (1983) படத்தின் மறுஆக்கம்) திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் என்னை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். 'கருப்பு ஹீரோ' என காதுபடவே பேசுவார்கள். 'அந்தா கானுன்', 'கங்வா' திரைப்படங்கள் வெற்றி பெற்ற பிறகே, என்னை பாலிவுட்டில் 'ஹீரோவாக' மதிக்கத் தொடங்கினார்கள்" என்று ரஜினி பேசியிருப்பார். ரஜினி பாலிவுட்டில் எதிர்கொண்ட ஒன்றை தான், பிரதீப் தெலுங்கு சினிமாவில் எதிர்கொள்கிறார் எனக் கூறும் எழுத்தாளர் தியடோர் பாஸ்கர், "'அழகாக இல்லை' என்ற காரணத்திற்காக சினிமா ரசிகர்கள் எந்த நடிகரையும் ஒதுக்கியதில்லை. 'ஹீரோ மெட்டீரியல்' என்ற ஒன்று உருவாக சினிமாதுறையினரே காரணம். குறிப்பாக 'க்ளோஸ்-அப் ஷாட்களில்' (Close-up shot) ஹீரோ 'சிவப்பாக, அழகாக' இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள் என்ற பிம்பத்தைக் கொண்டுவந்தார்கள்." என்கிறார். ஹைதராபாத்தில் 'டியூட்' பட நிகழ்வில் நடந்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆந்திராவைச் சேர்ந்த மூத்தப் பத்திரிக்கையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஜி.ஆர். மகரிஷி, "அந்த நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்வி நிச்சயம் கண்டத்திற்குரியது. தெலுங்கு மக்கள் மட்டுமல்ல எந்த மொழி மக்களும், உருவத்தை வைத்து ஒரு நடிகரை ஒதுக்க மாட்டார்கள். திரைப்படம் நன்றாக இருந்தால் மக்கள் ரசிப்பார்கள்" என்று கூறினார். பாலிவுட்டில் என்ன நிலை? பட மூலாதாரம், Colour Yellow Productions படக்குறிப்பு, ராஞ்சனா (2013) என்ற பாலிவுட் படத்தில், 'குந்தன் சங்கர்' என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருப்பார் தனுஷ். நடிகர் தனுஷ் தான் எதிர்கொண்ட உருவக்கேலிகள் குறித்து பல நேர்காணல்களில் பகிர்ந்துள்ளார். "நடிக்க வந்த புதிதில், முகத்திற்கு நேராகவே 'இவனெல்லாம் ஹீரோவா?' எனப் பேசுவார்கள். ஒருமுறை ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பில் இருந்தபோது, சுற்றியிருந்தவர்கள் பேசியதைக் கேட்டுவிட்டு, என் காருக்குள் சென்று சிறிது நேரம் அழுதேன். இன்றும் கூட உருவக்கேலிகள் என்னை துரத்துகின்றன" என்று ஒருமுறை தனுஷ் பேசியிருந்தார். 2021இல் 'லிட்டில் திங்ஸ்' என்ற இந்தி மொழி இணையத் தொடரில், 'நீ என்றாவது உன் முகத்தைப் பார்த்திருக்கிறாயா? தனுஷ் போல இருக்கிறாய்' என ஒரு கதாபாத்திரம் தனது நண்பனைப் பார்த்து கேலி செய்யும். இந்தக் காட்சிக்கு பலரும் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்திருந்தனர். "பாலிவுட்டில் ஒரு ஹீரோ 'வெள்ளை தோலுடன்', கட்டுமஸ்தாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், மக்கள் அப்படி எதிர்பார்க்கிறார்கள் என சொல்லிவிட முடியாது. திரைத்துறையினர் தான் அவ்வாறு காட்சிப்படுத்துகிறார்கள்" என்கிறார் டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சத்யம் சிங். "தனுஷ் பாலிவுட்டில் பிரபலமான நடிகர், ஆனால் அவர் நடித்த பெரும்பாலான பாலிவுட் திரைப்படங்களில் அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என காட்டியுள்ளார்கள். அதேபோல, ரஜினிக்கும் லுங்கிக்கும் என்ன சம்மந்தம், ஆனால் 'லுங்கி டான்ஸ்' என்று ரஜினிக்கு சமர்ப்பணம் என்ற பெயரில் ஒரு பாடல் ஷாருக்கான் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் உள்ளது. மேலும், அதில் தமிழ் பெண்ணாக நடித்த தீபிகாவின் உறவினர்களாக வரும் கதாபாத்திர சித்தரிப்புகளைப் பார்த்தால், நான் சொல்வது புரியும். எனவே இது நிறம், உருவம் சார்ந்தது மட்டுமல்ல. இந்த விஷயத்தில் பாலிவுட் செல்ல வேண்டிய தூரம் அதிகம்." என்கிறார் சத்யம் சிங். மலையாள சினிமாவில் என்ன நிலை? பட மூலாதாரம், Thriveni Productions படக்குறிப்பு, 'வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்' (1999) மலையாள திரைப்படத்தில் கலாபவன் மணி. மலையாளத்தில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் ஃபஹத் பாசில், சௌபின் ஷாஹிர் போன்ற நடிகர்கள் 'ஹீரோ மெட்டீரியல்' என்று கூறப்படும் பிம்பத்தை உடைத்தவர்களே. "பரத் கோபி, திலகன், முரளி, கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர், கலாபவன் மணி, சூரஜ் வெஞ்சரமூடு என மலையாளத்தில் பல முன்னணி நடிகர்கள் 'ஹீரோ மெட்டீரியல்' என்ற கட்டுப்பாட்டிற்குள் அடங்காதவர்கள். முக்கியமாக கலாபவன் மணி பிற மொழிகளில் வில்லனாக பிரபலமடைந்தாலும், மலையாளத்தில் அவர் 'ஹீரோவாக' பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார்" என்கிறார் கேரளாவின் அடூரைச் சேர்ந்த துணை இயக்குநர் மற்றும் துணை நடிகர் தாரிக் கலாம். தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட காசி (2001), மலையாளத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற 'வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்' (1999) என்ற திரைப்படத்தின் ரீமேக். மலையாளத்தில் கதாநாயகனாக நடித்தவர், கலாபவன் மணி. "நிச்சயமாக இந்த 'ஹீரோ மெட்டீரியல்' என்ற பிம்பம் மொத்தமாக உடைய வேண்டும். ஒரு நாயகன் என்பவன் 'அசகாய சூரன்' என்று திரைப்படங்களில் காட்டுவதால் தான், அதை நம்பி, அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் ரசிகர்களும், ரசிகர் மன்றங்களும் உருவாகின்றன. நடிகர்களை அந்தந்த கதாபாத்திரங்களாக மட்டுமே பார்க்கத் தொடங்கினால், அனைத்தும் மாறும்" என்று கூறுகிறார் தியடோர் பாஸ்கர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gkm07yrzlo

'ஹீரோ மெட்டீரியல்'- ஒரு கதாநாயகன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளதா?

2 months 1 week ago

ஹீரோ மெட்டீரியல், கதாநாயகன், சினிமா, கோலிவுட்

பட மூலாதாரம், PradeepRanganathan/Facebook

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

'யார் ஹீரோ?'- திரையரங்கமோ அல்லது ஓடிடி-யோ, ஒரு திரைப்படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் இந்தக் கேள்விக்கான பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கதை- திரைக்கதை போன்ற பிற அம்சங்கள் சிறப்பாக இருந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஏராளம் என்றாலும் கூட, 'ஹீரோ' தான் ஒரு திரைப்படத்தின் அடையாளம் என்ற பொது பிம்பத்தை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு எடுத்துக்காட்டியது.

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு நடித்திருக்கும் 'ட்யூட்' (Dude) திரைப்படம் தீபாவளியை ஒட்டி (அக்டோபர் 17) வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான விளம்பர நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, பத்திரிகையாளர் ஒருவர் பிரதீப்பிடம், "நீங்கள் 'ஹீரோ மெட்டீரியல் இல்லை'. ஆனால், இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். அரிதாக, இத்தனை ரசிகர்களும் இருக்கிறார்கள். இது அதிர்ஷ்டமா இல்லை கடின உழைப்பா?" எனக் கேட்டார்.

அப்போது உடனிருந்த நடிகர் சரத்குமார் அப்பத்திரிகையாளரைப் பார்த்து, "நான் இந்தத் துறையில் 170 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். யார் 'ஹீரோ மெட்டீரியல்' என்பதை நீங்கள் சொல்ல முடியாது. 'ஹீரோவாக' இருப்பதற்கு எந்த விதிமுறையும் இல்லை" என்றார்.

இது குறித்து பின்னர் ஒரு நேர்காணலில் பதிலளித்த பிரதீப் ரங்கநாதன், "ஒல்லியாக, கருப்பாக இருக்கிறேன் போன்ற உருவக்கேலிகளை சிறு வயதிலிருந்தே கேட்டுள்ளேன். அவை பழகிவிட்டன. 'லவ் டுடே' திரைப்பட நிகழ்வுகளிலும் இதை எதிர்கொண்டேன். மக்கள் என்னை அவர்களில் ஒருவராகப் பார்ப்பதால் ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள் என நினைக்கிறேன்" எனக் கூறியிருந்தார்.

இதற்கு முன் இதேபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்ட தமிழ் நடிகர்கள் யார் யார்? உண்மையில் ஒரு திரைப்படத்திற்கு 'ஹீரோ மெட்டீரியல்' அல்லது 'கதாநாயக பிம்பம்' தேவையா, பிற இந்திய திரைப்படத் துறைகளில் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?

தியாகராஜ பாகவதர் மற்றும் பியூ சின்னப்பா

ஹீரோ மெட்டீரியல், கதாநாயகன், சினிமா, கோலிவுட்

பட மூலாதாரம், @NFAIOfficial

படக்குறிப்பு, எம்.கே. தியாகராஜ பாகவதர்

"தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என விவரிக்கப்படும் தியாகராஜ பாகவதராக இருக்கட்டும் அல்லது பிரபல நடிகர் பியூ சின்னப்பாவாக இருக்கட்டும், இருவருமே அவர்களது பாடும் திறனால் பிரபலமானவர்கள். அப்போது இந்த 'ஹீரோ மெட்டீரியல்' என்ற விஷயமே இல்லை" என்கிறார் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாய்வாளர் தியடோர் பாஸ்கர்.

பாம்பின் கண்- தமிழ் சினிமா ஓர் அறிமுகம், திரையில் விரியும் சமூகம், சித்திரம் பேசுதடி போன்ற தமிழ் சினிமா குறித்த நூல்களை இவர் எழுதியுள்ளார்.

"இந்தி சினிமா மற்றும் ஹாலிவுட் திரைப்படத்துறையில் தொடக்கம் முதலே ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பிம்பம் இருந்தது. காலப்போக்கில் அது தமிழ் சினிமாவிலும் பரவியது, குறிப்பாக எம்ஜிஆர் காலத்தில். ஹீரோ என்பவர் அழகாக, கட்டுமஸ்தாக இருக்க வேண்டும், படத்தின் இறுதிவரை மரணிக்கவே கூடாது, பெண்கள் பின்னால் போகக்கூடாது, பெண்கள் தான் அவர் பின்னால் வர வேண்டும் என எழுதப்படாத விதிகள். இன்றுவரை எம்ஜிஆரை நினைவுகூறுபவர்கள் அவரது 'அழகைப்' பற்றி தான் பெரும்பாலும் பேசுகிறார்கள்" என்கிறார் தியடோர் பாஸ்கர்.

இதே கருத்தை முன்வைக்கும் எழுத்தாளர் ஜா. தீபா, "எம்ஜிஆருக்குப் பிறகு 'ஒரு ஹீரோ' என்றாலே அழகாக, குறிப்பாக 'வெள்ளை தோலுடன்' இருக்க வேண்டுமென்ற பிம்பம் தமிழ் சினிமாவில் உருவானது. சிவாஜி சில திரைப்படங்களில் அதை உடைத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பின் ரஜினியின் வருகை ஒரு மாற்றத்திற்கு வழிவகுத்தது." என்கிறார்.

சிவாஜியின் 'ஹீரோ மெட்டீரியல்' அல்லாத வித்தியாசமான முயற்சிகளுக்கு சிறந்த உதாரணம், 1954இல் வெளியான 'அந்த நாள்' எனும் திரைப்படம். அதில் படம் தொடங்கி சில நிமிடங்களில் சிவாஜியின் கதாபாத்திரம் (ராஜன்) இறந்துவிடும். யார் அந்தக் கொலையைச் செய்தார்கள் என்பதே திரைப்படத்தின் கதை.

ஹீரோ மெட்டீரியல், கதாநாயகன், சினிமா, கோலிவுட்

பட மூலாதாரம், Dwarakish

படக்குறிப்பு, 1984இல் ரஜினி நாயகனாக நடித்து இந்தியில் வெளியான 'கங்வா' திரைப்படம்.

இருப்பினும் சிவாஜியைப் போல அல்லாமல், ரஜினி தொடக்கத்தில் சில திரைப்படங்களில் இரண்டாம் கதாநாயகன், வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த பின்பே 'ஹீரோவாக' வெற்றி பெற்றதைக் குறிப்பிடும் ஜா. தீபா, "உருவத்தைத் தாண்டி தனக்கான திறமையை சில 'கதாபாத்திரங்களில்' நிரூபித்த பின் தான் ரஜினியால் அந்தக் கேலிகளை கடந்துவர முடிந்தது." என்கிறார்.

ஆனால், தமிழில் ஒரு கதாநாயகனாக பிரபலமான பின்பும் கூட, 1980களில் இந்தியில் அறிமுகமானபோது, உருவக்கேலிகளை எதிர்கொண்டதாக ரஜினிகாந்த் ஒரு நிகழ்வில் கூறியிருப்பார்.

"கங்வா (1984இல் வெளியான இந்தித் திரைப்படம், தமிழில் வெளியான மலையூர் மம்பட்டியான் (1983) படத்தின் மறுஆக்கம்) திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் என்னை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். 'கருப்பு ஹீரோ' என காதுபடவே பேசுவார்கள். 'அந்தா கானுன்', 'கங்வா' திரைப்படங்கள் வெற்றி பெற்ற பிறகே, என்னை பாலிவுட்டில் 'ஹீரோவாக' மதிக்கத் தொடங்கினார்கள்" என்று ரஜினி பேசியிருப்பார்.

ரஜினி பாலிவுட்டில் எதிர்கொண்ட ஒன்றை தான், பிரதீப் தெலுங்கு சினிமாவில் எதிர்கொள்கிறார் எனக் கூறும் எழுத்தாளர் தியடோர் பாஸ்கர், "'அழகாக இல்லை' என்ற காரணத்திற்காக சினிமா ரசிகர்கள் எந்த நடிகரையும் ஒதுக்கியதில்லை. 'ஹீரோ மெட்டீரியல்' என்ற ஒன்று உருவாக சினிமாதுறையினரே காரணம். குறிப்பாக 'க்ளோஸ்-அப் ஷாட்களில்' (Close-up shot) ஹீரோ 'சிவப்பாக, அழகாக' இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள் என்ற பிம்பத்தைக் கொண்டுவந்தார்கள்." என்கிறார்.

ஹைதராபாத்தில் 'டியூட்' பட நிகழ்வில் நடந்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆந்திராவைச் சேர்ந்த மூத்தப் பத்திரிக்கையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஜி.ஆர். மகரிஷி, "அந்த நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்வி நிச்சயம் கண்டத்திற்குரியது. தெலுங்கு மக்கள் மட்டுமல்ல எந்த மொழி மக்களும், உருவத்தை வைத்து ஒரு நடிகரை ஒதுக்க மாட்டார்கள். திரைப்படம் நன்றாக இருந்தால் மக்கள் ரசிப்பார்கள்" என்று கூறினார்.

பாலிவுட்டில் என்ன நிலை?

ஹீரோ மெட்டீரியல், கதாநாயகன், சினிமா, கோலிவுட்

பட மூலாதாரம், Colour Yellow Productions

படக்குறிப்பு, ராஞ்சனா (2013) என்ற பாலிவுட் படத்தில், 'குந்தன் சங்கர்' என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருப்பார் தனுஷ்.

நடிகர் தனுஷ் தான் எதிர்கொண்ட உருவக்கேலிகள் குறித்து பல நேர்காணல்களில் பகிர்ந்துள்ளார்.

"நடிக்க வந்த புதிதில், முகத்திற்கு நேராகவே 'இவனெல்லாம் ஹீரோவா?' எனப் பேசுவார்கள். ஒருமுறை ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பில் இருந்தபோது, சுற்றியிருந்தவர்கள் பேசியதைக் கேட்டுவிட்டு, என் காருக்குள் சென்று சிறிது நேரம் அழுதேன். இன்றும் கூட உருவக்கேலிகள் என்னை துரத்துகின்றன" என்று ஒருமுறை தனுஷ் பேசியிருந்தார்.

2021இல் 'லிட்டில் திங்ஸ்' என்ற இந்தி மொழி இணையத் தொடரில், 'நீ என்றாவது உன் முகத்தைப் பார்த்திருக்கிறாயா? தனுஷ் போல இருக்கிறாய்' என ஒரு கதாபாத்திரம் தனது நண்பனைப் பார்த்து கேலி செய்யும். இந்தக் காட்சிக்கு பலரும் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

"பாலிவுட்டில் ஒரு ஹீரோ 'வெள்ளை தோலுடன்', கட்டுமஸ்தாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், மக்கள் அப்படி எதிர்பார்க்கிறார்கள் என சொல்லிவிட முடியாது. திரைத்துறையினர் தான் அவ்வாறு காட்சிப்படுத்துகிறார்கள்" என்கிறார் டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சத்யம் சிங்.

"தனுஷ் பாலிவுட்டில் பிரபலமான நடிகர், ஆனால் அவர் நடித்த பெரும்பாலான பாலிவுட் திரைப்படங்களில் அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என காட்டியுள்ளார்கள். அதேபோல, ரஜினிக்கும் லுங்கிக்கும் என்ன சம்மந்தம், ஆனால் 'லுங்கி டான்ஸ்' என்று ரஜினிக்கு சமர்ப்பணம் என்ற பெயரில் ஒரு பாடல் ஷாருக்கான் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் உள்ளது. மேலும், அதில் தமிழ் பெண்ணாக நடித்த தீபிகாவின் உறவினர்களாக வரும் கதாபாத்திர சித்தரிப்புகளைப் பார்த்தால், நான் சொல்வது புரியும். எனவே இது நிறம், உருவம் சார்ந்தது மட்டுமல்ல. இந்த விஷயத்தில் பாலிவுட் செல்ல வேண்டிய தூரம் அதிகம்." என்கிறார் சத்யம் சிங்.

மலையாள சினிமாவில் என்ன நிலை?

ஹீரோ மெட்டீரியல், கதாநாயகன், சினிமா, கோலிவுட்

பட மூலாதாரம், Thriveni Productions

படக்குறிப்பு, 'வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்' (1999) மலையாள திரைப்படத்தில் கலாபவன் மணி.

மலையாளத்தில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் ஃபஹத் பாசில், சௌபின் ஷாஹிர் போன்ற நடிகர்கள் 'ஹீரோ மெட்டீரியல்' என்று கூறப்படும் பிம்பத்தை உடைத்தவர்களே.

"பரத் கோபி, திலகன், முரளி, கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர், கலாபவன் மணி, சூரஜ் வெஞ்சரமூடு என மலையாளத்தில் பல முன்னணி நடிகர்கள் 'ஹீரோ மெட்டீரியல்' என்ற கட்டுப்பாட்டிற்குள் அடங்காதவர்கள். முக்கியமாக கலாபவன் மணி பிற மொழிகளில் வில்லனாக பிரபலமடைந்தாலும், மலையாளத்தில் அவர் 'ஹீரோவாக' பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார்" என்கிறார் கேரளாவின் அடூரைச் சேர்ந்த துணை இயக்குநர் மற்றும் துணை நடிகர் தாரிக் கலாம்.

தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட காசி (2001), மலையாளத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற 'வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்' (1999) என்ற திரைப்படத்தின் ரீமேக். மலையாளத்தில் கதாநாயகனாக நடித்தவர், கலாபவன் மணி.

"நிச்சயமாக இந்த 'ஹீரோ மெட்டீரியல்' என்ற பிம்பம் மொத்தமாக உடைய வேண்டும். ஒரு நாயகன் என்பவன் 'அசகாய சூரன்' என்று திரைப்படங்களில் காட்டுவதால் தான், அதை நம்பி, அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் ரசிகர்களும், ரசிகர் மன்றங்களும் உருவாகின்றன. நடிகர்களை அந்தந்த கதாபாத்திரங்களாக மட்டுமே பார்க்கத் தொடங்கினால், அனைத்தும் மாறும்" என்று கூறுகிறார் தியடோர் பாஸ்கர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gkm07yrzlo

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
இந்த கறுப்பு ஆடுகளத்தில் (மழை வரும் என குறிப்பிட்டுள்ளார்கள் பிட்ச் எவ்வகையானது எனக்கூறவில்லை ஆனால் இலங்கை அணி கறுப்பு ஆடுகளத்தில் விளையாட விரும்பலாம் எனும் அடிப்படையில்) எவ்வாறு இலங்கை அணி களத்தடுப்பினை தெரிவு செய்யலாம் என கருதுகிறேன். பந்து வீச்சு லைன் 4 அல்லது 5 விக்கெட் லெந்த் நல்ல அளவினை விட கொஞ்சம் புல்லர் லெந்த். பவர் பிளேயில் எல்லைக்கோட்டில் எக்ராகவர் மற்றும் பொயின்ரில் களத்தடுப்பு உள்ளக வட்டத்தில் சிலிப், சோர்ட் தேர்ட், சோர்ட் பைன் லெக் (விக்கெட் கீப்பருக்கு இரு பக்கமான) சோர்ட் மிட் விக்கெட், மிட் ஒன், மிட் ஓப் பவர் பிளே பின்னர் எல்லை கோட்டு களத்தடுப்பில் மிட்விக்கெட், ஸ்குயார் லெக், எக்ரா கவர், பொயின்ர் (அனைத்தும் டீப்) உள்ளக வட்டத்தில் பெரிய மாற்றம் இருக்காது. இலங்கை அணி சிலிப் பயன்படுத்தாது என கருதுகிறேன் 10 ஓவருக்கு மேல், இறுதி 10 ஓவருக்கு லோங் ஓப் இல் மேலதிக களத்தடுப்பு போடக்கூடும் என கருதுகிறேன். கள உறவுகளே ஆட்ட சுவாரசியத்திற்காக குறித்த விடயத்தினை பதிவிட்டுள்ளேன் இவ்வாறுதான் நிகழும் என கூறமுடியாது, உங்கள் களத்தடுப்புகளையும் சுவாரசியத்திற்காக பதியுங்கள்.

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 months 1 week ago
பாரிய குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கூட இனவெறி இன பேதம் இல்லாமல் தமக்குள் ஒன்றாக செயற்பட்டுருக்கிறார்கள் எனும் போது நாட்டின் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் தமது முன்னேத்திற்காக இனவெறி இல்லாமல் அனைவரும் இணைந்து செயற்பட்டு அரசியல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
ம‌ழையால் த‌ப்பின‌ அணிக‌ள் எது என்று பார்த்தால் முத‌லாவ‌து இங்லாந் , இர‌ண்டாவ‌து நியுசிலாந் கொழும்பு மைதான‌த்தில் 250ர‌ன்ஸ் அடிச்சால் வெற்றி நூற்றுக்கு நூறு உறுதி வாத்தி அண்ணா , இர‌ண்டு நாளுக்கு முத‌ல் இல‌ங்கை ம‌க‌ளிர் 258ர‌ன்ஸ் அடிச்சு முடிக்க‌ உட‌ன‌ ம‌ழை பெய்த‌தால் விளையாட்டு கைவிட‌ப் ப‌ட்ட‌து😁..........................

தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு!

2 months 1 week ago
இவ்வளவு பாரிய போதை பொருள்கள் திடிர் திடிர் என்று கைபற்ற அதை உபயோகித்த நபர்களுக்கு மாற்றீடு தேவையே அதை எப்படி நிவர்த்தி செய்ய போகிறார்கள் ? குறைந்த பட்ச சாதாரண வியாதிகளுக்கு உரிய மருந்தே தட்டுபாடான நாட்டில் போதை புனர்வாழ்வு மையங்கள் எப்படி நிறுவ போகிறார்கள் ?அப்படியான புனர் வாழ்வு மையங்கள் இல்லாமல் போகும் பட்சம் மிக மிக கொடூரமாக சட்டம் ஒழுங்கு பாதிக்க படும் என்பதை மிக இலகுவாக மறந்து விடுகிறார்கள் . இறுதி யுத்தத்தில் எப்படியாவது தமிழரை அழித்து தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை தமிழர் அழியணும் எனும் இன கோதாவில் ராஜபக்சா குடும்பத்தால் அறிமுகபடுத்தபட்ட விளைவுகளுக்கு சிங்களம் பொதி சுமக்கிறது .

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
இன்றைய போட்டி இலங்கையில் நடைபெறும் என கருதுகிறேன் (தெரியவில்லை), இலங்கை அணி தனது சுழல் பந்து வீச்சிலே நம்பிக்கை வைத்து களமிறங்கும். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாட்டு திட்டங்களுடன் வருவார்கள். சிகப்பு நிற ஆடுகளத்தினை பெரிதும் இலங்கை தெரிவு செய்யாது என கருதுகிறேன், ஆனாலும் சிகப்பு நிற ஆடுகளமும் சரியான திட்டமிடலுடன் விளையாடினால் எதிரணிக்கு நெருக்கடியினை குடுக்கமுடியும். இலங்கை அணி கறுப்புநிற ஆடுகளத்தினையே எடுத்து வரும் என கருதுகிறேன், இதில் சுவாரசியமாக இருக்கும் விடயம் இலங்கை அணி எவ்வாறு களத்தடுப்பினை தேர்வு செய்கிறதென, ஏனெனில் கறுப்பு ஆடுகளத்தில் சுவீப் அடிகள் சரியாக வராது ஆனால் களத்தடுப்பில் மட்டையாளர்களை அதனை தூண்டுமாறு களத்தடுப்பினை தெரிவு செய்வார்கள், இரண்டாவது பந்தின் லைன் மற்றும் லெந்த். இலங்கை அணி மிகவும் பாதுகாப்பான களத்தடுப்பினை பாவிக்கிறார்கள் இது போட்டியினை பார்ப்பவர்களுக்கும் ஆர்வத்தினை குறைத்து விடும். நேற்றைய போட்டியில் அவுஸ் அணி சுழல் பந்து வீச்சிற்கு பந்தினை விக்கெட் லைனில் வீசி மிடோன் மிடோப் உள்ளே வைத்து சுவீப்பினை இல்லாமல் ஆக்கும் முறையில் களத்தடுப்பினை பிரயோகித்து துடுப்பாட்டக்காரை தூக்கி அடிக்க தூண்டும் ஆக்கிரோசமான களத்தடுப்பினை சிகப்பு ஆடுகளத்தில் பயன்படுத்தினார்கள். போட்டியினை வெல்லும் எண்ணத்துடன் விளையாட வேண்டும், பங்களாதேச அணி கூட அதனை சரியாக கையாண்டார்கள், அதனை பார்க்கும் போது இலங்கை அணி பங்களாதேச அணியுடன் போட்டி மிக கடுமையாக இலங்கைக்கு இருக்கலாம்.

தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு!

2 months 1 week ago
தெற்கு கடலில் போதைப் பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு! இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்சமயம் குறித்த படகு காலி துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது படகில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1450562

வரி வருவாயில் சுங்கத்துறை புதிய சாதனை!

2 months 1 week ago
வரி வருவாயில் சுங்கத்துறை புதிய சாதனை! இலங்கை சுங்கத்துறை, 2025 ஒக்டோபர் 15 அன்று 2,470 மில்லியன் ரூபாவை வசூலித்து. இது இதுவரை இல்லாத அளவிலான ஒரு நாள் வரி வருவாயை பதிவு செய்த சந்தர்ப்பம் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது. சுங்க பணிப்பாளர் ஜெனரலின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இதுவரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் 1,867 பில்லியன் ரூபாவாகும். இதனால், சுங்கத்துறை அதன் வருடாந்திர இலக்கான ரூ. 2,115 பில்லியனைத் தாண்டும் பாதையில் செலுத்துகிறது. இதற்கு வாகன இறக்குமதி வரிகள் முக்கிய வருமான ஆதாரமாக இருப்பதாகவும், அவை சுங்க வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1450559

வரி வருவாயில் சுங்கத்துறை புதிய சாதனை!

2 months 1 week ago

New-Project-205.jpg?resize=750%2C375&ssl

வரி வருவாயில் சுங்கத்துறை புதிய சாதனை!

இலங்கை சுங்கத்துறை, 2025 ஒக்டோபர் 15 அன்று 2,470 மில்லியன் ரூபாவை வசூலித்து.

இது இதுவரை இல்லாத அளவிலான ஒரு நாள் வரி வருவாயை பதிவு செய்த சந்தர்ப்பம் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது. 

சுங்க பணிப்பாளர் ஜெனரலின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இதுவரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் 1,867 பில்லியன் ரூபாவாகும்.

இதனால், சுங்கத்துறை அதன் வருடாந்திர இலக்கான ரூ. 2,115 பில்லியனைத் தாண்டும் பாதையில் செலுத்துகிறது.

இதற்கு வாகன இறக்குமதி வரிகள் முக்கிய வருமான ஆதாரமாக இருப்பதாகவும், அவை சுங்க வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2025/1450559

தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

2 months 1 week ago
தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை! இணையத்தளங்கள் அல்லது கைத் தொலைபெசிகள் ஊடாக கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அல்லது நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தை பெற்றுக்கொள்ளும் முறையை காண்பித்து கடன் வழங்க முன்வரும் நிறுவனங்கள் தொடர்பாக பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய நிறுவனங்கள் ஊடாக கையடக்கத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு கடன்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் போது பெறப்படும் வட்டி வீதம் மற்றும் கடனை மீண்டும் செலுத்த வேண்டிய காலங்கள் தொடர்பாக எவ்வித முழுமையான தகவல்களும் முன்னறிவித்தலுமின்றி கடன் வழங்குவதால் கடன் பெறுபவர்கள் பல சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாகுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சில நிறுவனங்கள் கடனை மீளப்பெறும் கட்டத்தில் அதிர்ச்சிகரமாக அதிகளவிலான வட்டிகள் வசூலிக்கப்படுவதாகவும், தொடர்ந்தும் தொலைபேசி அழைப்புகள் மூலம் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவர்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறான தகவல்களை பரப்பும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றனர். இதனை தொடர்ந்து, இவ்வாறான முறையில் இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக இலங்கை பொலிஸ், இலங்கை மத்திய வங்கியின் வங்கியற்ற நிதி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தல் மற்றும் மேற்பார்வை திணைக்களத்தை தொடர்பு கொண்டு விசாரணைகள் மேற்கொண்ட போது , இவ்வாறான பல நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குபடுத்தல் முறைமை கடைபிடிக்காமல் செயற்படுவதாகவும், கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக ஒழுங்குபடுத்தல் முறைமையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மேலும் அறிவித்துள்ளனர். அதனால், இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக உடனடியாக கடன் பெறும் போது அது தொடர்பாக அவதானத்துடனும், விளக்கங்கள் அதன் நிபந்தனைகளை முறையாக அறிந்து அதன் பின்னர் சேவையை பெற்றுக்கொள்ளுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். https://athavannews.com/2025/1450553

தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

2 months 1 week ago

New-Project-203.jpg?resize=750%2C375&ssl

தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

இணையத்தளங்கள் அல்லது கைத் தொலைபெசிகள் ஊடாக கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அல்லது நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தை பெற்றுக்கொள்ளும் முறையை காண்பித்து கடன் வழங்க முன்வரும் நிறுவனங்கள் தொடர்பாக பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தகைய நிறுவனங்கள் ஊடாக கையடக்கத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு கடன்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் போது பெறப்படும் வட்டி வீதம் மற்றும் கடனை மீண்டும் செலுத்த வேண்டிய காலங்கள் தொடர்பாக எவ்வித முழுமையான தகவல்களும் முன்னறிவித்தலுமின்றி கடன் வழங்குவதால் கடன் பெறுபவர்கள் பல சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாகுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சில நிறுவனங்கள் கடனை மீளப்பெறும் கட்டத்தில் அதிர்ச்சிகரமாக அதிகளவிலான வட்டிகள் வசூலிக்கப்படுவதாகவும், தொடர்ந்தும் தொலைபேசி அழைப்புகள் மூலம் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவர்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறான தகவல்களை பரப்பும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றனர்.

இதனை தொடர்ந்து, இவ்வாறான முறையில் இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக இலங்கை பொலிஸ், இலங்கை மத்திய வங்கியின் வங்கியற்ற நிதி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தல் மற்றும் மேற்பார்வை திணைக்களத்தை தொடர்பு கொண்டு விசாரணைகள் மேற்கொண்ட போது , இவ்வாறான பல நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குபடுத்தல் முறைமை கடைபிடிக்காமல் செயற்படுவதாகவும், கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக ஒழுங்குபடுத்தல் முறைமையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மேலும் அறிவித்துள்ளனர்.

அதனால், இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக உடனடியாக கடன் பெறும் போது அது தொடர்பாக அவதானத்துடனும், விளக்கங்கள் அதன் நிபந்தனைகளை முறையாக அறிந்து அதன் பின்னர் சேவையை பெற்றுக்கொள்ளுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

https://athavannews.com/2025/1450553

உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஹங்கேரியில் ட்ரம்ப், புட்டின் சந்திப்பு!

2 months 1 week ago
உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஹங்கேரியில் ட்ரம்ப், புட்டின் சந்திப்பு! உக்ரேனில் நடந்து வரும் மோதல் குறித்து கவனம் செலுத்துவதற்காக, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை (16) சுமார் இரண்டரை மணி நேரம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொலைபேசி உரையாடலில் இரு தலைவர்களும் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த உரையாடலானது மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக ட்ரம்ப் விவரித்தார். அதேநேரம், கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் இந்த அழைப்பை ‘மிகவும் தகவல் தரும், மிகவும் வெளிப்படையானது’ என்று கூறினார். உக்ரேன் போரைச் சுற்றியுள்ள அதிகரித்த இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு மத்தியில் வரவிருக்கும் உச்சிமாநாடு கடந்த ஆகஸ்ட் நடுப்பகுதிக்குப் பின்னர் தலைவர்களின் முதல் நேரடி ஈடுபாட்டைக் குறிக்கிறது. எனினும், சந்திப்பின் திகதியை ட்ரம்ப் குறிப்பிடவில்லை. எனினும், அதற்காக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார். உலகின் சக்திவாய்ந்த இரு தலைவர்களுக்கும் இடையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த சந்திப்பின் பின்னணியானது உக்ரேனில் நடந்து வரும் போர் ஆகும். இது 2022 பெப்ரவரி ரஷ்யா ஒரு பெரிய அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்தது. இந்த மோதல் பாரிய உயிர் இழப்புக்கும் பொதுமக்களின் இடம்பெயர்வுக்கும் வழிவகுத்தது. அதே நேரத்தில் உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பாதித்தது. திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, ட்ரம்ப் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஓவல் அலுவலகத்தில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு பல முக்கியமான விடயங்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2,500 கிலோ மீட்டர் (சுமார் 1,600 மைல்கள்) பயண வரம்பைக் கொண்ட டோமாஹாக் ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கும். ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வழிமுறையாக இந்த நீண்ட தூர திறன்களைப் பற்றி ஜெலென்ஸ்கி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1450565

உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஹங்கேரியில் ட்ரம்ப், புட்டின் சந்திப்பு!

2 months 1 week ago

New-Project-207.jpg?resize=750%2C375&ssl

உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஹங்கேரியில் ட்ரம்ப், புட்டின் சந்திப்பு!

உக்ரேனில் நடந்து வரும் மோதல் குறித்து கவனம் செலுத்துவதற்காக, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை (16) சுமார் இரண்டரை மணி நேரம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொலைபேசி உரையாடலில் இரு தலைவர்களும் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த உரையாடலானது மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக ட்ரம்ப் விவரித்தார்.

அதேநேரம், கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் இந்த அழைப்பை ‘மிகவும் தகவல் தரும், மிகவும் வெளிப்படையானது’ என்று கூறினார்.

உக்ரேன் போரைச் சுற்றியுள்ள அதிகரித்த இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு மத்தியில் வரவிருக்கும் உச்சிமாநாடு கடந்த ஆகஸ்ட் நடுப்பகுதிக்குப் பின்னர் தலைவர்களின் முதல் நேரடி ஈடுபாட்டைக் குறிக்கிறது.

எனினும், சந்திப்பின் திகதியை ட்ரம்ப் குறிப்பிடவில்லை.

எனினும், அதற்காக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

உலகின் சக்திவாய்ந்த இரு தலைவர்களுக்கும் இடையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த சந்திப்பின் பின்னணியானது உக்ரேனில் நடந்து வரும் போர் ஆகும்.

இது 2022 பெப்ரவரி ரஷ்யா ஒரு பெரிய அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்தது.

இந்த மோதல் பாரிய உயிர் இழப்புக்கும் பொதுமக்களின் இடம்பெயர்வுக்கும் வழிவகுத்தது.

அதே நேரத்தில் உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பாதித்தது.

திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, ட்ரம்ப் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஓவல் அலுவலகத்தில் சந்திக்க உள்ளார். 

இந்த சந்திப்பு பல முக்கியமான விடயங்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 2,500 கிலோ மீட்டர் (சுமார் 1,600 மைல்கள்) பயண வரம்பைக் கொண்ட டோமாஹாக் ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கும். 

ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வழிமுறையாக இந்த நீண்ட தூர திறன்களைப் பற்றி ஜெலென்ஸ்கி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1450565

'ஏர் பேக் மீது மோதி சிறுவன் பலி': காப்பாற்ற வேண்டிய ஏர் பேக் உயிரையே பறிக்குமா?

2 months 1 week ago
பின்னிருக்கையில் 145 சென்ரிமீற்றர் உயரத்திற்கு கீழிருக்கும் குழந்தைகள் குழந்தைகள் ஆசனம் மற்றும் பூஸ்ரர் ஆசனம் பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் முன்னிருக்கையின் கீழிருகும் ஆழி இணைப்பு சீற்றை முன் பின்னாக நகர்த்தும் போது காரின் கணனியினுடனான தொடர்பினை இழந்துவிடும் பொதுவாக அதற்கான விளக்கு எரிய வேண்டும் சில சமயம் அவை காட்டுவதில்லை. ஆனால் OBD 2 அதற்கான B174800 பிழை குறிகாட்டும், முற்று முழுதான வாகன அறிகுறியிலும் தங்கியிருக்கமுடியாது என கருதுகிறேன், இந்த கருவி ஆக குறைந்த விலையில் அமேசன் $40 வாங்கலாம் (மலிவான). இணைப்பினை கழற்றி மீண்டும் இணைத்தால் போதும், அதற்கு முன்னர் காரின் மின்சேமிப்புக்கலத்தின் எதிர் முனையினை அகற்றவேண்டும் (இந்த செயல் அனைத்து காரின் இயங்கு நிலையினையும் ஆரம்ப நிலைக்கு மாற்றிவிடும் அதனால் காரின் காற்று விகிதம் மாறுபடும் சில காலத்திற்கு பின் சரியாகிவிடும் அல்லது அந்த கருவியிலேயே (OBD 2 ) அதனை சரி செய்யும் பொறிமுறை உண்டு) கார் நீண்ட பயணத்திற்கு முன்னரான சரிபார்ப்பு போன்றவற்றிற்கும் உதவும். நான் மெக்கானிக் இல்லை எனவே எனது கருத்து தவறாக இருக்கலாம், இது ஒரு ஆலோசனையும் இல்லை எனது அனுபவம். இணைப்பு சரி செய்தபின் அந்த கருவியிலேயே ஒருவர் உடகார்ந்து , வெறுமையாக சீற்றினை விட்டு காரின் கணனி சரியாக எடையினை உணர்கிறதா எனவும் பார்க்கமுடியும் (சரியாக இணைப்பு வேலை செய்கிறதா என)

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
கீலி ஒரு குறும்புக்காரர் என கேள்விப்பட்டுள்ளேன், அவர் பல தடவை இலங்கை அணி முன்னால் தலைவர் ரணதுங்கவுடன் முரண்பட்டுள்ளாராம், ஒரு முறை பந்து வீச்சாளரிடம் ரண்துங்கவின் கால்களுக்கு ஒரு மார்ஸ் (இனிப்பு) போடு இவன் எடுத்துவிடுவான் எனவும், இன்னொரு முறை காயம் காரணமாக? ரணதுங்க ஓட முடியாது என கூறி ஜெய சூரியாவினை ஓட்டத்திற்கு அழைத்த போது அவரை கேவலப்படுத்தியதால் ஏதோ குளறுபடிகள் ஏற்பட்டதாக நினைவுள்ளது (இந்த விடயங்கள் பற்றி சரியாக தெரியவில்லை). தென்னாபிரிக்க அணி விளையாடுவதனை பார்க்கவில்லை, ஆனால் இலங்கை அணி விளையாடுவதனை பார்க்கும் போது இலங்கை அணி நிச்சயமாக தோற்கும் அணியாக தெரிகிறது, அதனை விட எந்த அணியினை தெரிவு செய்தேன் என்பது கூட தெரியவில்லை, இன்றைய போட்டியினை நிச்சயமாக பார்க்கபோவதில்லை எனும் முடிவுடன் உள்ளேன்.