2 months 1 week ago
பதுளையில் வசித்து வரும் ஜீவநேசன் காஞ்சனா தம்பதிகளின் மகன் 2 வயதும் 11 மாதங்களுமேயான மிர்திக் தேவ். இவர் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் அமைவிடத்தை 10 நிமிடங்களில் அடையாளம் காட்டி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார். இதற்கான நிகழ்வு நேற்று (16) ஹாலிஎல ஹெவன்ஸ் ஹொட்டலில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவானி ராஜா முன்னிலையில் நடைபெற்றது. குழந்தையின் உலக சாதனை நிகழ்வை கூர்மையாக கண்காணித்த நடுவர், குழந்தையின் முயற்சியை உலக சாதனையாக உறுதி செய்தார். சோழன் உலக சாதனை படைத்த மிர்திக் தேவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், அடையாள அட்டை, நினைவுக் கேடயம் மற்றும் பைல் போன்றவை வழங்கிப் பாராட்டப்பட்டது. ஊவா மாகாண பிரதி கல்வி பணிப்பாளர் திரு.நடராஜ் வெங்கடேஸ்வரன், ஊவா மாகாண ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்குகொண்டார். சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்துடன் இணைந்து பீபல்ஸ் ஹெல்பிங் பீபல்ஸ் பவுண்டேஷன் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். https://adaderanatamil.lk/news/cmgub9xog011gqplp35xryhh5
2 months 1 week ago
இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இச்செயல்முறை, பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும் விமான நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீராகச் செய்வதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், இந்த காலம் 3 மணி நேரத்திற்கு முன்னதாக காணப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmguh67ze0129o29nsvhmes6m
2 months 1 week ago

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இச்செயல்முறை, பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும் விமான நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீராகச் செய்வதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், இந்த காலம் 3 மணி நேரத்திற்கு முன்னதாக காணப்பட்டது.
https://adaderanatamil.lk/news/cmguh67ze0129o29nsvhmes6m
2 months 1 week ago
கொலைக்கு பின் தப்பிச் சென்ற வழிகளை வெளிப்படுத்திய இஷாரா செவ்வந்தி.!! கணேமுல்ல சஞ்சீவவின் கொலையைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற விதம் குறித்து நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, பாதுகாப்புப் பிரிவிடம் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். கொலை சம்பவத்திற்குப் பிறகு, இரண்டு மாதங்களுக்கும் மேலாக மத்துகம மற்றும் தங்காலை பகுதிகளில் தலைமறைவாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் இலங்கை பொலிஸ் குழுவினர், அந்நாட்டு பொலிஸாருடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அதன்படி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் அடங்கிய குழுவினர், சந்தேக நபர்களை ஸ்ரீலங்கன் விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வந்தனர். நேற்று (15) மாலை 6.52 மணியளவில் சந்தேக நபர்களுடன் விமானம் நாட்டை வந்தடைந்தது. இவ்வாறு அழைத்துவரப்பட்ட குற்றவாளிகள் பலத்த பாதுகாப்புடன் பல்வேறு பொலிஸ் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன்படி, இஷாரா செவ்வந்தி, டுப்ளிகேட் இஷாரா எனப்படும் தக்ஷி, ஜே.கே. பாய் மற்றும் ஜப்னா சுரேஷ் ஆகியோர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர். கம்பஹா பபா, களனி வலய குற்றத் தடுப்புப் பிரிவிடமும், நுகேகொடை பபி, மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை தொடர்பான பல முக்கிய தகவல்கள் 'அத தெரண'வுக்கு கிடைத்துள்ளன. உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல மற்றும் கிஹான் சில்வா என்ற பொலிஸ் அதிகாரி ஆகியோர் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி இந்த நடவடிக்கைக்காக நேபாளம் சென்றுள்ளனர். அங்கு, நேபாள துணைத் தூதுவர் சமீரா முனசிங்க மற்றும் அவரது கணவர் ஆகியோர் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி, அந்நாட்டு பொலிஸாரையும் தொடர்புபடுத்தி உதவியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து செயற்பட்ட இலங்கை விசாரணை அதிகாரிகள், மற்றொரு தரப்பின் மூலம் ஜே.கே. பாயை கைது செய்துள்ளனர். அவரிடம் இஷாரா குறித்து ரொஹான் ஒலுகல வினவியபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார். எனினும், அவரிடமிருந்து இஷாராவின் தொலைபேசி இலக்கத்தை பொலிஸார் பெற்றுள்ளனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், இஷாரா தங்கியிருந்த இடம் கண்டறியப்பட்டு, ஒலுகல மற்றும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி, அவர் வசித்த வீட்டிலிருந்து ஐந்து வீடுகள் தள்ளி தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நேபாள பொலிஸாரைக் கொண்டு அந்த இடத்தை சோதனையிட்டபோது, இந்தியாவின் பெங்களூருவிலிருந்து வந்த தமிழினி என்ற பெண், ஒரு ஈரடுக்கு மாடி வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்கு தங்கியிருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் மாதந்தோறும் 6,000 நேபாள ரூபாய் செலுத்தியதும் கண்டறியப்பட்டது. மேலதிக விசாரணையில், தமிழினி என்ற பெயரில் தங்கியிருந்தது இஷாரா என்பது உறுதி செய்யப்பட்டது. அனைத்து தகவல்களையும் உறுதிப்படுத்திய பின்னர், நேபாள பொலிஸாருடன் அந்த இடத்திற்குச் சென்ற ஒலுகல மற்றும் மற்றுமொரு அதிகாரி, கீழ் தளத்தில் தங்கியிருந்து, அவர்களை மேல் தளத்திற்கு அனுப்பி இஷாராவை கைது செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, நேபாள பொலிஸார் அவரைக் கைது செய்தபோது அவர் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. பின்னர், ஒலுகல அவர் இருந்த இடத்திற்குச் சென்று, "எப்படி இருக்கிறீர்கள் செவ்வந்தி?" என்று வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், "நன்றாக இருக்கிறேன் சேர்" என்று கூறியுள்ளார். "தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று ஒலுகல கூறியபோது, "சேர், எனக்கு இந்த நாடே வெறுத்துப்போயிருந்தது" என்று அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு சுமார் ஒரு மாதம் மத்துகமவில் உள்ள ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்ததாக இஷாரா கூறியுள்ளார். பின்னர், பத்மேயின் அறிவுறுத்தலின் பேரில் மித்தெனிய பகுதிக்குச் சென்று அங்கும் சுமார் ஒரு மாதம் தங்கியிருந்துள்ளார். அப்போது 'பெக்கோ சமன்' என்பவர் அவருக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார். பின்னர், யாழ்ப்பாணம் சென்று மூன்று நாட்கள் தங்கியிருந்து, ஜே.கே. பாயுடன் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இதற்கு சுமார் ஐந்து மணி நேரம் ஆனது என்றும், ஒரு பெரிய படகில் சிறிது தூரம் சென்று, பின்னர் ஒரு சிறிய படகு மூலம் இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும் இஷாரா குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தபோது, ஜே.கே. பாய் அவருக்கு 'தமிழினி' என்ற பெயரில் ஒரு இந்திய அடையாள அட்டையை தயாரித்துக் கொடுத்துள்ளார். அதன் பின்னரே நேபாளம் சென்றதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், தன்னுடன் ஜே.கே. பாய் தவிர மேலும் நான்கு பேர் இருந்ததாக இஷாரா தெரிவித்துள்ளார். அதன்படி, கம்பஹா பபா, நுகேகொடை பபி, ஜப்னா சுரேஷ் மற்றும் இஷாராவின் தோற்றத்தில் இருந்த தக்ஷி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கெஹெல்பத்தர பத்மே கைது செய்யப்படுவதற்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஜப்னா சுரேஷும் தக்ஷியும் விமானம் மூலம் நேபாளம் வந்துள்ளனர். அவர்கள் ஆறு பேரும் ஒரே வீட்டில் தங்கியிருந்த நிலையில், பத்மே கைது செய்யப்பட்ட பின்னர், ஆறு பேரும் ஆறு வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தக்ஷியின் விபரங்களைப் பயன்படுத்தி செவ்வந்தியை ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்ப பத்மே ஏற்பாடு செய்திருந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மன்னார், பேசாலை பகுதியிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டதாகவும், அதற்கான ஏற்பாடுகளை 'பெக்கோ சமன்' என்பவர் மூலம் பத்மே செய்ததாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார். அவர் 2019 ஆம் ஆண்டு கொஹுவல, ஜம்புகஸ்முல்ல பிரதேசத்தில் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, அன்றே டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார். பின்னர், கடந்த ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். Eastern News7
2 months 1 week ago
அதிபர் டிரம்ப் மற்றும் புடின் சந்திப்பு 'மிகவும் பயனுள்ளதாக' முடிந்தது Published By: Vishnu 17 Oct, 2025 | 03:28 AM உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து மேலும் விவாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் ஹங்கேரியில் சந்திக்க உள்ளனர். இரு நாடுகளின் தலைவர்களும் வியாழக்கிழமை (16) தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாகவும், இந்த உடன்பாட்டை எட்டியதாகவும் ஜனாதிபதி டிரம்ப் கூறினார். அதன்படி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையிலான உயர்மட்ட ஆலோசகர்கள் குழு அடுத்த வாரம் ரஷ்ய அதிகாரிகளை சந்திக்க உள்ளது, மேலும் இரு அதிபர்களின் சந்திப்பின் திகதி அங்கு முடிவு செய்யப்படும். ஹங்கேரியின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமான புடாபெஸ்டில் டிரம்ப்-புடின் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை (17) வாஷிங்டன், டிசியில் அதிபர் டிரம்புடன் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ள சூழலில் இந்த தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227933
2 months 1 week ago
அததெரண கருத்துப் படம். https://adaderanatamil.lk/cartoons/f5604ae3-2940-494c-950b-db153a1dd5bc
2 months 1 week ago
கொழும்பில் தொடர்ந்து மழை பெய்வதால் இரண்டு விளையாட்டு ஏற்க்கனவே கைவிடப் பட்டது.................இன்றையான் விளையாட்டும் மழையால் தடைப் படக் கூடும் , இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு புள்ளி....................இந்த உலக கோப்பையை டுபாயில் வைத்து இருக்கலாம் , போன வருடம் மகளிர் 20ஓவர் உலக கோப்பை டுபாயில் தான் வைச்சவை அங்கு எல்லா போட்டியும் சிறப்பாக நடந்தது........................................................................
2 months 1 week ago
ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக மோடி கூறினாரா? ; ட்ரம்ப் கருத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு விளக்கம்! Published By: Digital Desk 3 16 Oct, 2025 | 02:02 PM ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிடுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. எனினும், டிரம்பின் கருத்தை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துகள் குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக மோடி உறுதியளித்தாரா என்பது குறித்து அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: "மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. நிலையற்ற எரிசக்தி சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. நிலையான எரிசக்தி விலை மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்தல் ஆகியவை நமது கொள்கையின் இரட்டை இலக்காக இருக்கின்றன. இதில், சந்தை நிபந்தனைகளைப் பொறுத்து நமது ஆற்றல் ஆதாரங்களை விரிவுபடுத்துதல் மற்றும் பொருத்தமான முறையில் பன்முகப்படுத்துதல் ஆகியவை அடங்கும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக எங்கள் எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த நாங்கள் முயற்சித்து வருகிறோம். தற்போதைய அமெரிக்க நிர்வாகம் இந்தியாவுடனான எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன." வெளிவிவகார அமைச்சகத்தின் இந்த அறிக்கையில், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தாரா? இல்லையா? என்பது குறித்து நேரடியாகத் தெரிவிக்கப்படவில்லை. மாறாக, இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் முடிவுகள் அதன் தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதே வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ரஷ்ய மசகு எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் இன்று (புதன்கிழமை) உறுதியளித்தார். இது ரஷ்யாவுக்கு எதிரான உலகளாவிய அழுத்தத்தில் மிகப்பெரிய முன்னேற்றம்" எனத் தெரிவித்திருந்தார். டொனால்ட் ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தனது சமூக ஊடகப் பதிவில், "டிரம்பைக் கண்டு மோடி பயப்படுகிறார்.ரஷ்யாவின் எண்ணெய்யை இந்தியா வாங்காது என்று முடிவு செய்து, அதை டிரம்பை அறிவிக்க அனுமதிக்கிறார்" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/227876
2 months 1 week ago
Published By: Digital Desk 3 17 Oct, 2025 | 04:38 PM பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை (17) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில், இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பகிரப்பட்ட பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/228017
2 months 1 week ago
Published By: Digital Desk 3
17 Oct, 2025 | 04:38 PM

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை (17) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில்,
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம். நெருங்கிய அண்டை நாடுகளாக, நமது இரு நாட்டு மக்களின் செழிப்புக்கும், பகிரப்பட்ட பிராந்தியத்திற்கும் நமது ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என பதிவிட்டுள்ளார்.



https://www.virakesari.lk/article/228017
2 months 1 week ago
மகிந்த ஜனாதிபதியாகி, செய்த உருப்படியான வேலை என்றால்... தனது மொக்கு மகனை, வக்கீல் சோதனை பாஸ் பண்ண வைத்து விட்டார். 😂
2 months 1 week ago
🤣 இதென்ன சட்ட கல்லூரி எல்ஸாமா, பீரிசை போனில் வைத்து கொண்டு எழுத🤣
2 months 1 week ago
மழை மீண்டும் இன்று பொய்ய தொடங்கி விட்டது...................
2 months 1 week ago
இந்த விடயத்தில் அனுரா ஜேவிபி அரசை நானும் போற்றுகிறேன். வரும்….ஆனா வராது.
2 months 1 week ago
கைக்கூ வடிவில்... நீண்ட இடை வெளிக்குப் பின் "அன்பு இதயங்களை" சந்திப்பதில் மகிழ்வடைகின்றேன்.நன்றி ஐஸ் மழை கொட்டுகிறது நனைந்தவர்கள் எரிந்து சாகிறார்கள். “போதை” ************************************************* ஜாலியாக பஸ்களில் ஏறும் பிரயாணிகள் ஆவியாக்கி இறக்கப்படுகிறார்கள். “விபத்து” *************************************************** பட்ட மரமும் துளிர் விடுகின்றது பார்ப்பதற்கு யாருமில்லை. “முதியவர்கள்” ***************************************************** எரிவோம் என்று தெரிந்தும்நெருப்பை தலையில் கொட்டுகிறார்கள். “வடி” **************************************************** நச்சு மருந்து கடைகளாக மாறிவிட்டன “மரக்கறிச் சந்தை” ***************************************************** தற்போது காமத்துக்கே முதலிடம் கொடுக்கிறது. “காதல்” ********************************************************** பருவமழை பெய்யாவிட்டாலும் விதைக்கிறார்கள் “காமம்” ***************************************************** மீன் பிடிக்க வலைபோடுகிறார்கள்- அதில் தாங்களே மாட்டிக்கொள்ளுகிறார்கள். “இந்தியமீனவர்கள்” **************************************************** ஒழிந்திருந்தாலும் உன் வாழ்வை உயர்த்தும்,தாழ்த்தும் அளவுகோல். “நாக்கு” ***************************************************** பழய அரசுகளால் செயற்கையுரத்தை தடைசெய்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டது. “மனித எலும்புக்கூடுகள்” தொடரும்… அன்புடன்-பசுவூர்க்கோபி.
2 months 1 week ago
கைக்கூ வடிவில்...
நீண்ட இடை வெளிக்குப் பின் "அன்பு இதயங்களை" சந்திப்பதில் மகிழ்வடைகின்றேன்.நன்றி
ஐஸ் மழை கொட்டுகிறது
நனைந்தவர்கள் எரிந்து சாகிறார்கள்.
“போதை”
*************************************************
ஜாலியாக பஸ்களில் ஏறும் பிரயாணிகள்
ஆவியாக்கி இறக்கப்படுகிறார்கள்.
“விபத்து”
***************************************************
பட்ட மரமும் துளிர் விடுகின்றது
பார்ப்பதற்கு யாருமில்லை.
“முதியவர்கள்”
*****************************************************
எரிவோம் என்று தெரிந்தும்நெருப்பை
தலையில் கொட்டுகிறார்கள்.
“வடி”
****************************************************
நச்சு மருந்து கடைகளாக மாறிவிட்டன
“மரக்கறிச் சந்தை”
*****************************************************
தற்போது காமத்துக்கே முதலிடம் கொடுக்கிறது.
“காதல்”
**********************************************************
பருவமழை பெய்யாவிட்டாலும் விதைக்கிறார்கள்
“காமம்”
*****************************************************
மீன் பிடிக்க வலைபோடுகிறார்கள்- அதில்
தாங்களே மாட்டிக்கொள்ளுகிறார்கள்.
“இந்தியமீனவர்கள்”
****************************************************
ஒழிந்திருந்தாலும் உன் வாழ்வை
உயர்த்தும்,தாழ்த்தும் அளவுகோல்.
“நாக்கு”
*****************************************************
பழய அரசுகளால் செயற்கையுரத்தை தடைசெய்து
இயற்கை உரம் தயாரிக்கப்பட்டது.
“மனித எலும்புக்கூடுகள்”
தொடரும்…
அன்புடன்-பசுவூர்க்கோபி.
2 months 1 week ago
தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியது; ஒரு பவுண் 410,000 ரூபா! நாளுக்கு நாள் புதிய சாதனைகளை முறியடித்துச் செல்லும் தங்கத்தின் விலையானது வெள்ளிக்கிழமை (17) மற்றொரு முக்கியமான வரம்பைத் தாண்டியது. அமெரிக்கா-சீனா வர்த்தக உறவுகள் குறித்த கவலைகள் அதிகரித்து வருவதும் தங்கத்தின் விலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அத்துடன், முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கம் வாங்கும் ஆர்வம் அதிகரிப்பதற்கு, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு அதிக வட்டி விகிதக் குறைப்பை மேற்கொள்ளக்கூடும் என்ற வதந்திகளும் காரணம் என்றும் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை தங்கக் கட்டியின் விலை 1.2 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,379.93 ஆக உயர்ந்து, 30 டிரில்லியன் டொலர் சந்தை மூலதனத்தை எட்டியது. இது 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதன் அதிகபட்ச வாராந்திர இலாபத்தைப் பதிவு செய்யும் சந்தர்ப்பமாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கத்தின் விலை 165.61 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஸ்பெக்டேட்டர் இன்டெக்ஸின் தரவுகள் தெரிவிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2022 ஆம் ஆண்டில், தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $1,649 ஐத் தாண்டியது. இன்று தங்கத்தின் விலைகள் இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட $4,380 ஐத் தொட்டுள்ளன. இது குறித்த மூன்று ஆண்டுகள் காலக்கட்டத்தின் இரு மடங்கிற்கும் அதிகமான அதிகரிப்பாகும். இந்த ஆண்டு தங்கத்தின் விலை 65 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக பதட்டங்கள், அதிகரித்து வரும் நிதி மற்றும் கடன் அளவுகள் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் மத்தியில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, வெள்ளியின் விலையும் இந்த வாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அதன்படி, அதன் விலை வெள்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் $54.3775 ஆக புதிய உச்சத்தை எட்டியது. இலங்கை விலை விபரம்! கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 410,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 379,200 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1450577
2 months 1 week ago
இதை அமெரிக்கா / மேற்கு பின்கதவால் செய்தன, ண்மையில் அது ராஜதந்திரத்தின் ஒரு பகுதி. இஹை போல நடந்தது (அல்லது செய்ததுக்கு) மிக நல்ல உதாரணம் சுயஸ் கால்வாய் யுத்தத்தில், பிரித்தானியாத்வம். பிரான்சும் படைபலத்தை பாவிப்பதை பற்றி முடிவ கூட்டாக எடுத்தாலும், பிரித்தானியா, பிரான்ஸை நம்பாமல் இஸ்ரேலை இழுத்து, இஸ்ரயேலிடம் பிரான்சும் தாக்கும் என்று சொல்லி, பிரான்ஸ் பின்னாக்க டிதோங்கி, பின் இஸ்ரேல் பிரான்சிடம் கேட்டே பிரான்ஸ்ம் சேர்நத் எகிப்தை தாக்கியது. இதுவும் பின்கதவாலேயே நடந்தது - அனால் டிரம்ப் இப்பொது வெளிப்படையாக பொய்யாக சொல்வது. ஈரான், அணுத்துறையை கைவிட்டு, இறங்கிவந்து இரத்து கேட்பது, ஏறி சண்டைக்கு முன்னும், இப்போதும் சொல்லி இருப்பது , வேறுஓர் ஓர் உதாரணம்.
2 months 1 week ago
மழை வராம விட்டால் இலங்கை அணிய தென் ஆபிரிக்கா வென்று விடும் இலங்கை தொடக்க மகளிர் காயம் இரான்டு விக்கேட் 10ஓவரோட போய் விட்டது.............................
2 months 1 week ago
எதுக்கு? இராணுவத்தளம் அமைக்க இடம் பாக்கினமோ?