Aggregator
உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! -புடின்

உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! - புடின்.
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்க மேற்கு நாடுகள் தொடர்ந்து முயற்சிப்பது உக்ரைன் மோதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபடி, இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக அமைகிறது. 2014ம் ஆண்டு உக்ரைனில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு, மேற்கத்திய நாடுகளில் தூண்டுதலின் பேரில் நடந்தது”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கன், பாகிஸ்தானில் நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்க வாய்ப்பு - தாலிபன் என்ன செய்கிறது?
ஜனாதிபதியின் கவனத்தைப் பெற மயிலிட்டியில் காணி உரிமையாளர்கள் போராட்டம் - பொலிஸார் அராஜகம்!
ஜனாதிபதியின் கவனத்தைப் பெற மயிலிட்டியில் காணி உரிமையாளர்கள் போராட்டம் - பொலிஸார் அராஜகம்!
01 Sep, 2025 | 03:30 PM
![]()
மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காகச் சென்ற ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக, வலி. வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்க முயன்றபோது, முதியவர்கள், பெண்கள் என அனைவரையும் மிக மோசமான முறையில் பொலிஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை இந்த சம்பவத்தின்போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டித் துரத்தியடித்துள்ளனர்.
மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதன்போது, கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இடங்களில் வசிக்கும் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த பல வருடங்களாக கோரி வருகின்றனர்.

இந்நிலையில் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், ஜனாதிபதியின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக, மயிலிட்டி பகுதியில் வீதியோரமாக அமைதியான முறையில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்த முயன்றனர்.
இந்நிலையில் அங்கு வந்த பொலிஸார், வயோதிபர்கள், பெண்கள் என்றும் பாராமல், அவர்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி, அந்த மக்களை தமது பலத்தினை பயன்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்றி, பெண்களை ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தள்ளி, தகாத வார்த்தைகளால் பேசித் துரத்தினர்.
அவ்வேளை, செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் அச்சுறுத்தி அங்கிருந்து துரத்தியடித்தனர்.

மக்களின் காணிகள் மக்களுக்கே என கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி, தான் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு, அபிவிருத்திப் பணிகளை தொடங்கிவைக்க மயிலிட்டி பகுதிக்கு சென்றார்.
அவ்வேளை, “எமது காணிகளை விடுவியுங்கள்” என அவரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நாம் போராட்டத்தை நடாத்த முற்பட்டபோது கடந்த கால அரசாங்கத்தைப் போன்றே, இந்த அரசாங்கத்திலும், பொலிஸார் எம்மிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டுள்ளனர்.
மாற்றம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழ் மக்கள் விடயத்தில் மாற்றத்தை விரும்பவில்லை என்பதற்கு, பொலிஸார் எம்மிடம் நடந்துகொண்ட விடயம் சான்று பகிர்கிறது என காணி உரிமையாளர் ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.



அதிவேகமாக கப்பல் கட்டும் சீனா பெருங்கடல்களை ஆள தயாராகிறதா?
அதிவேகமாக கப்பல் கட்டும் சீனா பெருங்கடல்களை ஆள தயாராகிறதா?
'அமெரிக்காவை விட 200 மடங்கு அதிகம்': அதிவேகமாக கப்பல் கட்டும் சீனா பெருங்கடல்களை ஆள தயாராகிறதா?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சீனாவின் விமானந்தாங்கி போர்க்கப்பல் லியோனிங்
கட்டுரை தகவல்
Laura Bicker
China correspondent
Dalian, China
2 மணி நேரங்களுக்கு முன்னர்
"சோசலிசம் நல்லது..." என்று மைக்கைப் பிடித்து ஓய்வூதியதாரர் ஒருவர் பேசுகிறார். அவரது குரல், அவரது நண்பர்களின் அரட்டை சத்தத்தில் குறைவாக கேட்கிறது.
ஆனால் அவர்களும், அவருடன் சேர்ந்து, "கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரம் மற்றும் செல்வத்திற்கான பாதையில் சீனாவை வழிநடத்துகிறது!" என்று முழங்குகிறார்கள்.
இது பிரபலமான பாடல் அல்ல. ஆனால் அவர்கள் நின்று கொண்டிருக்கும் டாலியனின் சுயோயுவான் பூங்காவிலிருந்து பாடுவதற்கு பொருத்தமானது. டாலியன் சீனாவின் கப்பல் கட்டும் தளங்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.
வடகிழக்கு சீனாவில் மஞ்சள் கடலுக்குள் நீண்டிருக்கும் டாலியனில் உள்ள அந்த பூங்காவிலிருந்து, சீனாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளங்களில் ஒன்றின் அற்புதமான காட்சிகளை காண முடியும். மக்கள் ஒன்றுகூடி மகிழ்வதற்கான இடமாகவும் அது அமைந்துள்ளது.
ஆனால் வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள வெள்ளை மாளிகை ஆய்வாளர்களுக்கு, சீனா கப்பல் கட்டும் இந்த தொட்டில் வளர்ந்து வரும் அச்சுறுத்தலின் ஒரு பகுதியாகும்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் சீனா கப்பல் கட்டும் தொழிலில் முதலீட்டை அதிகரித்துள்ளது. அது பலனளித்துள்ளது. இந்த ஆண்டு உலகின் ஆர்டர்களில் 60% க்கும் அதிகமானவை சீன கப்பல் கட்டும் தளங்களுக்குச் சென்றுள்ளன. எளிமையாகச் சொல்வதானால், சீனா வேறு எந்த நாட்டையும் விட அதிகமான கப்பல்களைக் கட்டுகிறது, ஏனென்றால் வேறு எவரையும் விட வேகமாக சீனாவால் அதைச் செய்ய முடியும்.
சீனா "அசாதாரணமான அளவில் கப்பல்களை கட்டுகிறது " என்று லண்டனை தளமாகக் கொண்ட மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் கடல்சார் நிபுணர் நிக் சைல்ட்ஸ் கூறுகிறார். "சீனாவின் கப்பல் கட்டும் திறன் அமெரிக்காவை விட 200 மடங்கு அதிகம்."
கப்பல் கட்டுவதில் முன்னிலையில் இருக்கிறது என்றால், அதன் பலன் சீனாவின் கடற்படைக்கும் பொருந்தும். சீன கம்யூனிஸ்ட் கட்சி இப்போது உலகின் மிகப்பெரிய, 234 போர்க்கப்பல்களை இயக்குகிறது. அமெரிக்க கடற்படையில் 219 போர்க்கப்பல்களே உள்ளன.
சீனாவின் இந்த மாபெரும் எழுச்சிக்கு கடல் ஒரு முக்கிய காரணியாகும். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா உலகின் 10 பரபரப்பான துறைமுகங்களில் ஏழு துறைமுகங்களைக் கொண்டுள்ளது, அவை உலகளாவிய வர்த்தக விநியோகத்துக்கு முக்கியமான கடல் போக்குவரத்து பாதைகளில் அமைந்துள்ளன. சீனாவின் கடலோர நகரங்கள் வர்த்தகத்தால் செழித்து வளர்கின்றன.
சீனாவின் ஆசைகள் வளர்ந்துள்ள நிலையில், அதன் கப்பல் படையும் வளர்ந்துள்ளது - தென் சீனக் கடலிலும் அதற்கு அப்பாலும் உரத்த குரலில் உரிமை கோருவதற்கான அதன் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.
அதிபர் ஜின்பிங்கின் சீனா நிச்சயமாக அலைகளை (அதாவது கடலை) ஆள விரும்புகிறது. அது நடக்குமா என்பதுதான் கேள்வி.

படக்குறிப்பு, 19-ம் நூற்றாண்டில் ரஷ்யர்களால் துறைமுகமாக கட்டப்பட்ட டாலியன் தற்போது சீனாவின் பெரிய கப்பல் கட்டும் தளங்களில் ஒன்று.
அடுத்த வாரம் ஒரு மாபெரும் ராணுவ அணிவகுப்பு அந்த இலக்குக்கு எவ்வளவு நெருக்கமாக சீனா உள்ளது என்பதை வெளிப்படுத்தக்கூடும். விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோரை ஜின்பிங் இந்த நிகழ்வுக்கு அழைத்துள்ளார். இது அவர்களை புறக்கணித்த மேற்கத்திய நாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் செய்தியாகும்.
இந்த அணிவகுப்பில், கப்பலை தாக்கும் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் மற்றும் நீருக்கடியில் இயங்கும் டிரோன்கள் உள்ளிட்ட ராணுவ வலிமையின் காட்சிப்படுத்தலை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உன்னிப்பாக கவனிக்கும்.
"அமெரிக்க கடற்படை, இன்னும் குறிப்பிடத்தக்க சாதகமான அம்சங்களைக் கொண்டிருந்தாலும், சீனாவுடனான அதன் திறன்களில் இடைவெளி காணப்படுகிறது. இதற்கான விடையை தேட அமெரிக்கா போராடுகிறது," என்று சைல்ட்ஸ் கூறுகிறார், "ஏனென்றால் கடந்த தசாப்தங்களில் அதன் கப்பல் கட்டும் திறன் கணிசமாகக் குறைந்துவிட்டது."
இதை சரிசெய்ய விரும்புவதாகக் கூறிய அதிபர் டிரம்ப், அமெரிக்க கப்பல் கட்டுமானத்திற்கு புத்துயிர் அளிக்கவும், அமெரிக்காவின் கடல்சார் சாதகங்களை மீண்டும் பெறவும் நிர்வாக உத்தரவு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
அது, "மிக சவாலான காரியமாக இருக்கும்" என்று சைல்ட்ஸ் மேலும் கூறுகிறார்.
'கசப்பான நினைவுகளை' முடிவுக்கு கொண்டு வரும் கடற்படை
2019 மற்றும் 2023 க்கு இடையில், சீனாவின் நான்கு பெரிய கப்பல் கட்டும் தளங்களான டாலியன், குவாங்சோ, ஜியாங்னன் மற்றும் ஹுடாங்-ஜோங்குவா ஆகியவை 39 போர்க்கப்பல்களை (மொத்தம் 550,000 டன்) தயாரித்ததாக , மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் (சிஎஸ்ஐஎஸ்) ஆய்வு தெரிவிக்கிறது.
550,000 டன் என்பது அந்த 39 போர்க்கப்பல்களும் கடலில் மிதக்கையில் இடப்பெயர்ச்சி செய்யும் நீரின் அளவு, இது ஒரு கப்பல் அல்லது கடற்படையின் வலிமையை அளவிடுவதற்கான வழக்கமான முறையாகும். அதன்படி பார்த்தால், ஒப்பீட்டளவில் பிரிட்டனின் ராயல் கடற்படையின் வலிமை (சுமார் 399,000 டன் ) குறைவு.
கப்பல்களின் எண்ணிக்கை அடிப்படையில், சீனா உலகின் மிகப்பெரிய கடற்படையை கொண்டிருந்தாலும், அமெரிக்க கடற்படையின் வலிமை அதிகமாகும். மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பல்களுடன் மிகவும் சக்தி வாய்ந்ததாக அமெரிக்க கடற்படை திகழ்கிறது.
ஆனால் சீனா அமெரிக்காவை வேகமாக எட்டிப் பிடிக்கிறது.
"சீனர்கள் மெதுவாக செயல்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை" என்று சி.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த அலெக்சாண்டர் பால்மர் கூறுகிறார்.
"ஹல் எண்ணிக்கை [கப்பல்களின் எண்ணிக்கை] நிச்சயமாக ஒரு கடற்படையின் செயல்திறனின் ஒரே அளவீடு அல்ல, ஆனால் போர்க்கப்பல்களை உற்பத்தி செய்யும் சீனாவின் திறன் மிகவும் அபாரமாக உள்ளது, இது ஒரு மூலோபாய வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடும்."

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, "தேச நலனை பாதுகாக்க ஒரு வலுவான கடற்படையின்" முக்கியத்துவத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்துகிறார்.
சீனாவின் கடற்படை வளர்ச்சியில் சில குறைபாடுகள் தென்படுகின்றன. சீனாவிடம் அதிக கப்பல்கள் இருக்கலாம், ஆனால் அதனிடம் இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள் மட்டுமே உள்ளன. சீன கடற்படையில் அமெரிக்காவை விட மிகக் குறைவான நீர்மூழ்கிக் கப்பல்களே உள்ளன.
அவை பனிப்போர் காலத்திலிருந்தே அமெரிக்கா தொழில்நுட்ப சாதகத்தைக் கொண்டிருப்பதைப் போல அதிநவீனமானவை அல்ல என்று சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.
சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் பெரும்பாலும் ஆழம் குறைந்த தென் சீனக் கடலுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஏற்கெனவே அமெரிக்காவும் சீனாவும் எலியும் பூனையுமாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு, சீனா தனது சொந்த கடற்கரையில் இருந்து வெகுதூரம் பயணிக்கும் திறன் குறைவாகவே உள்ளது.
ஆனால் இது வேகமாக மாறுவதற்கான அறிகுறிகள் உள்ளன.
தென் சீனக் கடலில் உள்ள ஒரு சீன தீவு மாகாணமான ஹைனானின் பிபிசி வெரிஃபை பெற்ற செயற்கைக்கோள் படங்கள், பெய்ஜிங் அதன் கடற்படை தளங்களை விரிவுபடுத்த கணிசமான நிதியை கொட்டி வருவதை சுட்டிக்காட்டுகின்றன.
யூலினில் உள்ள தளத்தில் ஐந்து புதிய கப்பல்கள் தென்படுகின்றன, அவை கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. சீனா தனது மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களான ஜின்-கிளாஸ் (அல்லது வகை 094) அனைத்தையும் இந்த துறைமுகத்தில் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒவ்வொன்றும் 12 அணு ஆயுத ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியும்.
சீன சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒத்திகைகளின் புகைப்படங்கள் மற்றும் காட்சிகள், குறைந்தது இரண்டு புதிய வகை ஆளில்லா நீருக்கடியில் இயக்கப்படும் டிரோன்கள் (நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து செலுத்தப்படும் குண்டுகளை போன்ற தோற்றம் கொண்டவை), அடுத்த வார அணிவகுப்பில் காட்சிக்கு வைக்கப்படும் புதிய அமைப்புகளில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவிக்கின்றன.
இதன் மூலம் சீனா நீருக்கடியில் ஆழமான கண்காணிப்பை மேற்கொள்ளவும், மற்ற நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது கடலுக்கடியில் கேபிள்களைக் கூட அதன் சொந்த கடற்படைப் படைகளுக்கு ஆபத்து இல்லாமல் கண்டுபிடிக்கக் கூடும்.
இந்த தொழில்நுட்பத்தின் பெரும்பகுதி இன்னும் "நிரூபிக்கப்படவில்லை மற்றும் அதன் திறன்களின் காலவரிசை இன்னும் தெளிவாக இல்லை" என்று சி.எஸ்.ஐ.எஸ்ஸின் சீனா பவர் திட்டத்தைச் சேர்ந்த மத்தேயு ஃபுனயோல் எச்சரிக்கிறார். "தொழில்நுட்பம் முதிர்ச்சியடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதுதான் பெரிய கேள்வி."
சீனாவின் கப்பல் கட்டுமானம் முன் வைக்கும் அச்சுறுத்தலை அமெரிக்கா புறக்கணிக்க முடியாது என்று அவர் மேலும் கூறுகிறார்.
நாட்டின் பரந்த கடற்படை கட்டமைப்பு, கடந்த காலத்தின் வலிகளில் இருந்து இன்னும் மீளாத ஒரு கட்சியால் உந்தப்படுகிறது - அதன் விசுவாசம், அதிகாரம் மற்றும் தேசப்பற்று பற்றிய செய்தியை வலுப்படுத்த அவர்களை வழிநடத்த விரும்புகிறது.
ஜப்பான் மீதான வெற்றியையும், ஜப்பான் ஆக்கிரமிப்பின் முடிவையும் நினைவுகூரும் வகையில் ஒரு ராணுவ அணிவகுப்பை நடத்துவது அதற்கு சான்றாகும்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சீனாவின் விமானம் தாங்கி கப்பல் லியோனிங் 2024 பிப்ரவரி-ல் கடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சீனாவின் எழுச்சி என்று உலகம் எதை பார்க்கிறதோ, அதனை சீனாவின் மறுமலர்ச்சியாக அதிபர் ஜி ஜின்பிங் பார்க்கிறார்.
"தேச நலனை பாதுகாக்க ஒரு வலுவான கடற்படையின்" முக்கியத்துவத்தை அவர் பெருமையாக பேசுகிறார். 1840 மற்றும் 1949 க்கு இடையில் நடைபெற்ற 470 படையெடுப்புகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஒரு காலத்தில் சக்தி வாய்ந்த கிங் பேரரசு உடைய தொடங்கியபோது, சீனா கொந்தளிப்பு, புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரில் மூழ்கி, "சொல்லமுடியாத துன்பத்தை" எதிர்கொண்டது.
தனது நாடு மீண்டும் ஒருபோதும் "அவமானப்படுத்தப்படாது" அல்லது "வெளிநாட்டு தாக்குதல்களின் கசப்பான நினைவுகளை" புதுப்பிக்காது என்று அவர் சபதம் செய்துள்ளார்.
சீனாவுக்கு மறுக்க முடியாத சாதகம் உள்ளது – அது அங்குள்ள கப்பல் கட்டும் தளங்களின் இரட்டை பயன்பாடு . அந்த தளங்களில் பல வணிக பயன்பாட்டுக் கப்பல்களை தயாரிக்கும் வேளையில், கடற்படைக்கான போர்க்கப்பல்களையும் உற்பத்தி செய்ய உதவும்.
ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கப்பல் கட்டும் தளங்கள் சில இடங்களில் கைகோர்த்து செயல்படுகின்றன, இது "ராணுவ-சிவிலியன்(பொதுமக்கள்) இணைவு" என்று அரசு ஊடகங்கள் விவரிக்கின்றன. இந்த கருத்தை அதிபர் ஜின்பிங் வலிமையாக முன்வைக்கிறார்.
பெய்ஜிங் ஒரு "முதன்மை கப்பல் கட்டும் தளம்" என்று அழைக்கும் டாலியன் இதில் பெரும் பங்கு வகிக்கிறது.

படக்குறிப்பு, டாலியனில் உள்ள கப்பல் கட்டும் தளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் உள்ளூர் மக்களிடையே பிரபலமானவை ஆகும்.
மைக் பிடித்து பாடல்களை பாடிக்கொண்டு, சுற்றுலா வந்திருக்கும் ஓய்வூதியதாரர்களின் முழு பார்வையில் படும்படி பெரிய வணிக கப்பல்கள் உள்ளன, சில மூன்று கால்பந்து மைதானங்கள் வரை நீளமானவை.
ஆனால் யாரும் புகைப்படம் எடுக்க முடியாத ஒரு மூலையில், ராணுவக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு, ஒரு கிரேன் ஒரு ஹெலிகாப்டரை கப்பலின் பெரிய தளத்தில் இறக்குகிறது,
"இது வணிக மற்றும் ராணுவ நடவடிக்கைகளை ஒன்றிணைக்கும் அரசியல் நோக்கம் கொண்டதாகும் " என்று ஃபுனயோல் கூறுகிறார். "இரண்டையும் உருவாக்க தேவையான தொழில்நுட்பத்தை ஒரு மையப்படுத்தப்பட்ட இடத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் உள்ளன - டாலியன் அவற்றில் ஒன்று."
அதனால்தான் சக்திவாய்ந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல்கள் இல்லாமல் கூட, வணிகக் கப்பல்களை விரைவாக உருவாக்குவதில் சீனா பெறும் நிபுணத்துவம் ஒரு நெருக்கடியின் போது முக்கியமானதாக இருக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

படக்குறிப்பு, டாலியனில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவக் கப்பலில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்குகிறது.
"எந்தவொரு நீடித்த மோதலிலும், புதிய கப்பல்களை விரைவாக உருவாக்கும் கப்பல் கட்டும் தளங்கள் உங்களிடம் இருந்தால், இது ஒரு பெரிய மூலோபாய நன்மை" என்று ஃபுனயோல் கூறுகிறார்.
"வணிகக் கப்பல்கள் எந்தவொரு மோதல் நடைபெறும் பகுதிக்கும் உணவு போன்றவற்றை கொண்டு செல்ல முடியும். இது இல்லாமல், அமெரிக்கா ஒரு நீண்டகால போர் முயற்சியைத் தொடர முடியாத நிலையில் உள்ளது."
இது ஒரு நேரடியான கேள்விக்கு இட்டுச் செல்கிறது என்கிறார், "யார் அதிக கப்பல்களை விரைவாகவும் எளிதாகவும் தண்ணீரில் இறக்க முடியும்?"
இதற்கான பதில், இப்போதைக்கு சீனாதான்.
"உன் வலிமையை மறைத்துக் கொண்டு, சரியான நேரத்திற்காக காத்திரு"
பேராசிரியர் ஹூ போ, "அதைப்பற்றி உலகம் கவலைப்பட தேவையில்லை. நாங்கள் மற்ற நாடுகளின் பிரச்னையில், குறிப்பாக ராணுவ ரீதியில் தலையிடுவதற்கான எந்த ஆர்வமும் கொள்ளவில்லை" என்கிறார்.
பெய்ஜிங் பல்கலைக் கழகத்தின் கடல்வெளி மூலோபாய ஆய்வுகள் மையத்தின் இயக்குநரான அவர் கூறும் செய்தி, பெரிய கப்பல்களை கட்டமைப்பதற்கான திறன்களை சீனா வளர்த்துக் கொண்டிருப்பது உலகைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அல்ல என்பதுதான்.
ஆனால், சீனாவுக்கு விருப்பமான ஒரு தீவு உண்டு. சீனா அதை வேறொரு நாடாகப் பார்க்கவில்லை. அதுதான் தைவான். பெய்ஜிங் நீண்ட காலமாக ஜனநாயக தைவானுடன் "மீண்டும் ஒன்றிணைவோம்" என உறுதியோடு உள்ளது. அதற்காக பலத்தை பயன்படுத்தும் வாய்ப்பையும் நிராகரிக்கவில்லை. சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள், சீனா தைவானை 2027க்குள் ஆக்கிரமிக்கும் என்று கூறி வருகின்றனர். ஆனால் பெய்ஜிங் இதற்கு எந்த காலக்கெடுவும் இல்லை என்று மறுக்கிறது.
"தைவானை மீண்டும் கைப்பற்றும் திறன் சீனாவிடம் ஏற்கனவே உள்ளது," என்று பேராசிரியர் ஹு போ கூறுகிறார், "ஆனால் சீனா அதைச் செய்யவில்லை, ஏனென்றால் எங்களிடம் பொறுமை உள்ளது. சீனா அமைதியான ஒன்றிணைப்புக்கான வாய்ப்பை ஒருபோதும் கைவிடவில்லை. அதற்காக காத்திருப்பது சாத்தியமே"
தைவான் மீதான எந்தவொரு தாக்குதலும் பெரிய போருக்கு தூண்டுதலாக அமையலாம் என்பது பெரிய கவலை ஆகும். அதில் அமெரிக்காவும் இணையக்கூடும். வாஷிங்டன் தனது சட்டப்படி தைவானின் தற்காப்புக்கு ஆயுதங்களை வழங்க வேண்டும். இப்படிப்பட்ட ஆதரவை சீனா ஏற்காது, ஏனென்றால் அவர்கள் தைவானை, தன்னிடமிருந்து பிரிந்து சென்ற மாகாணமாக, சீனாவோடு இறுதியில் இணையும் வாய்ப்புள்ள ஒரு பகுதியாகவே கருதுகின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத், சீனா தைவானுக்கு "உடனடி" அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்தார். ஆசிய நாடுகள் பாதுகாப்பு செலவுகளை அதிகரித்து போரைத் தடுக்கும் விதமாக அமெரிக்காவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பேராசிரியர் ஹு போ உறுதியாகச் சொன்ன போதிலும், சீனாவின் போர்க்கப்பல்கள் பெருங்கடல்களில் வெகுதொலைவில் பயணிக்கத் தொடங்கியுள்ளன என்ற உண்மையை புறக்கணிப்பது கடினம்.
பிப்ரவரியில் அவை ஆஸ்திரேலியாவின் கடற்கரையை மூன்று வாரங்களுக்கும் மேலாக சுற்றிவந்தன. அங்கு அவை முன்னெப்போதும் மேற்கொண்டிராத பயிற்சிகளை நடத்தின. மிக சமீபத்தில் சீன விமானந்தாங்கி கப்பல்கள் ஜப்பானுக்கு அருகில் கடற்படை பயிற்சிகளை நடத்தின. இந்த பயிற்சிகள் சர்வதேச கடல் எல்லையில் நடந்த போதிலும், இந்த நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாததாக இருந்தது.

படக்குறிப்பு, சீனாவின் கப்பல் கட்டும் செயல்பாடுகள் குறித்து உலகம் கவலை கொள்ள தேவையில்லை என்று பேராசிரியர் ஹு தெரிவிக்கிறார்.
பசிபிக் பிராந்தியத்தில் தனது சக்தியைக் காட்ட பெய்ஜிங் தைரியமாக முயற்சிக்கும் போது, தைவான் முதல் ஆஸ்திரேலியா வரையிலான சீனாவின் அண்டை நாடுகள் அதன் புகழ்பெற்ற மந்திரம் செயல்படுத்தப்படுவதாக கவலைப்படுகின்றன: "உன் வலிமையை மறைத்து வைத்து, சரியான நேரத்திற்காக காத்திரு."
ஆனால் பேராசிரியர் ஹு, இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அச்சங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று நம்புகிறார், ஏனென்றால் அது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர்கள் எல்லோருமே அறிவார்கள் என்றார்.
"கடந்த மூன்று ஆண்டுகளில், இரு தரப்பிடமிருந்தும் சண்டையிட விரும்பவில்லை என்ற சமிஞ்ஞை மிகவும் தெளிவாக உள்ளது," என்று அவர் கூறுகிறார். "நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம், ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் எதிராக சண்டையிட விரும்பவில்லை."
'நாங்கள் எங்கள் கடல் லட்சியங்களை பாதுகாக்கிறோம்'
சுறுசுறுப்பான நகரப் பகுதியிலிருந்து ஒருமணி நேர தூரத்தில், டாலியனில் மீண்டும் சுற்றுலா பேருந்துகள் லுஷுன்கௌ எனும் கடற்படை கோட்டை நகரத்திற்கு வருகின்றன, இங்கு விமானம் தாங்கி கப்பல் வடிவில் ஒரு ராணுவ செயல்பாடுகளை காட்சிப்படுத்தும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கிகளைக் கொண்ட வழிகாட்டிகள் தங்கள் குழுக்களை பூங்காவிற்கு அழைத்துச் செல்கின்றனர். பிறை வடிவ துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ராணுவ கப்பல்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று அவர்கள் கூறுகிறார்கள், மேலும் "தாய்நாட்டைப் பாதுகாக்க உதவியாக" உளவு பார்க்க வழிவகுக்கும் எந்த நடவடிக்கை குறித்தும் புகாரளிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை சுட்டிக்காட்டுகின்றனர்.
பாலங்களிலும், சுவர்களிலும் ராணுவ அறிவிப்புகளில் "ஒன்றாக இணைந்து, நாம் நமது கடல் லட்சியத்தை பாதுகாக்கிறோம்" என்று எழுதப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, டாலியனில் உள்ள ராணுவப் பூங்கா சுற்றுலா பயணிகளிடையே பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது.
சீனா தனது கப்பல் கட்டும் திறமையில், குறிப்பாக இங்கு டாலியனில் தனது பெருமிதத்தை வெளிக்காட்டுகிறது.
கப்பல் கட்டும் தளத்தை நோக்கி அமைந்த ராணுவ பூங்காவில், உள்ளூர் பாணியில் பூ வடிவ சட்டை அணிந்த 50 வயதான ஒரு இணைய பிரபலம் , தனது சமூக ஊடக பக்கத்தில் இருந்து துறைமுகத்தில் கட்டப்படும் சமீபத்திய கப்பல்களின் தினசரி விவரங்களை அளிக்கிறார்.
"நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - உண்மையில், இந்த நகரம் நமக்கு என்ன தருகிறது என்று பாருங்கள்," என்று அவர் தனது சமூக ஊடக பக்கங்களில் அறிவிக்கிறார். அண்டை மாகாணத்திலிருந்து விடுமுறைக்கு வந்த ஒரு தாயும் அவரது ஏழு வயது மகளும் கப்பல்களைப் பார்த்து வியக்கின்றனர். "நான் வியந்து பார்த்தேன். இந்த கப்பல் மிகப் பெரியது. இது எப்படி கடலில் செல்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது?" என்றார்.
அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் - சீனாவின் போர்க் கப்பல்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும், பெய்ஜிங் தனது கடற்கரையில் இருந்து எவ்வளவு தூரம் செல்லத் தயாராக இருக்கிறது என்பதுதான்.
"எந்த கட்டத்தில் அவர்கள் திடீரென முன்னேறி தங்கள் செல்வாக்கை காட்டுவார்கள், உதாரணமாக இந்தியப் பெருங்கடலிலும் அதற்கு அப்பாலும் செல்வார்களா, இது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாக இருக்கும்," என்று நிக் சைல்ட்ஸ் கூறுகிறார்.
"அவர்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது, ஆனால் அவர்கள் நிச்சயமாக எல்லைகளைக் கடந்து முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
இராணுவ பயன்பாட்டிற்காக வடக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படும் - ஜனாதிபதி
இராணுவ பயன்பாட்டிற்காக வடக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படும் - ஜனாதிபதி
01 Sep, 2025 | 03:11 PM
![]()
போரின்போது இராணுவத்தின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட, வடக்கில் விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் மக்களுக்காக விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை (1) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.
இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில்,
மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு.
வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த அரசாங்கங்கள் போரை எதிர்பார்த்து பணியாற்றிய போதிலும், இந்த நாட்டில் மீண்டும் எந்த விதமான யுத்தமும் ஏற்படாத வகையில் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் பாடுபடுகிறது.
கடந்த போரின்போது இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட, வடக்கில் விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் மக்களுக்காக விடுவிக்கப்படும்.
நாட்டைச் சுற்றியுள்ள கடல், தீவுகள் மற்றும் காணிகளை மக்களுக்காகப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதில் எந்த விதமான அழுத்தத்திற்கும் இடமளிக்கப்படாது எனத் தெரிவித்தார்.
மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஜனாதிபதி அடையாள ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இதன் கீழ், வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகம் மாத்திரமன்றி, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய வசதிகள், குளிர்பதன சேமிப்பு வசதிகள், வலை தயாரிப்பு நிலைய வசதிகள், ஏலவிற்பனை மண்டப வசதிகள் மற்றும் தொடர்பாடல் பரிமாற்ற மைய வசதிகள் என்பனவும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு அரசாங்கம் 298 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் வட மாகாண அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதானிகள் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.




அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்!
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய சட்டம்!
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
'பிராமணர்கள் இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள்' - டிரம்பின் ஆலோசகர் கூறியது என்ன?
'பிராமணர்கள் இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள்' - டிரம்பின் ஆலோசகர் கூறியது என்ன?

பட மூலாதாரம், EPA/Shutterstock
3 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவது குறித்து அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ மீண்டும் ஒரு பேசியுள்ளார்.
'பிராமணர்கள்' இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள் என்றும், இதை 'நிறுத்த வேண்டும்' என்றும் அந்த பேச்சில் நவரோ குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தில் வர்த்தகம் மற்றும் உற்பத்தி விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகரான நவரோ கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், "பிரதமர் மோதி ஒரு சிறந்த தலைவர். இந்தியத் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் எவ்வாறு ஒத்துழைக்கிறார்கள் என்பது புரியவில்லை? அதேசமயம் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம்" என்று கூறினார்.
"எனவே நான் சொல்வதெல்லாம், இந்திய மக்களே, தயவுசெய்து இங்கே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பிராமணர்கள் இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுகிறார்கள். இதை நாம் நிறுத்த வேண்டும்" என்று நவரோ கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகம் மற்றும் வரிக் கொள்கைகள் தொடர்பாக அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்ட பின்னர், கடந்த சில நாட்களாக நவரோ தொடர்ந்து இந்தியாவை குறிவைத்து வருகிறார்.
இந்தியா மீது டிரம்ப் 25 சதவீத பரஸ்பர வரியை விதித்தார். பின்னர், ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் யுக்ரேன் போரில் புதினுக்கு உதவி புரிவதாகக் கூறி கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது.
இந்தியா அந்த வரிகளை 'நியாயமற்றது மற்றும் நடைமுறைக்கு மாறானது' என்று கூறி, 'மலிவான எண்ணெய் எங்கே கிடைக்கிறதோ அங்கே தொடர்ந்து வாங்குவோம்' என்று திட்டவட்டமாக கூறியது.
சீனா பற்றிய கேள்விக்கு நவரோ பதில்

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock
சீனாவும் ரஷ்ய எண்ணெயை வாங்கும் போது, இந்தியா மீது மட்டும் கூடுதல் வரிகளை விதிப்பதால் புதினை 'கட்டுப்படுத்த' முடியுமா என்று நவரோவிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, நவரோ, "சரி, இந்தியா மீது தற்போது 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சீனா மீதும் 50 சதவீதத்திற்கும் சற்று அதிகமான வரியை உள்ளது. நமக்கு தீங்கு நேராமல் வரிகளை எவ்வளவு அதிகரிக்க விரும்புகிறோம் என்பதுதான் கேள்வி?" என்றார்.
பிப்ரவரி 2022 இல் புதின் யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு முன்பு, இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கவில்லை என்று நவரோ கூறினார்.
"பிறகு என்ன நடந்தது? சரி, ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து பெரிய எண்ணெய் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்தன. புதின் மோதிக்கு கச்சா எண்ணெய் விலையில் தள்ளுபடி அளிக்கிறார். அவர்கள் அதை சுத்திகரித்து ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிற்கு அதிக விலைக்கு விற்று நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள்," என்று நவரோ கூறினார்.
"அப்படியானால் இதில் என்ன தவறு? உண்மையில், இது 'ரஷ்ய போர் இயந்திரத்தை' வலுப்படுத்துகிறது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஆதரிக்கும் அதே வேளையில், இந்தியா தனது எரிசக்தி கொள்முதல் தேசிய நலன் சார்ந்தது என்று கூறி வருகிறது."
"யுக்ரேன் போருக்குப் பிறகு, மேற்கத்திய நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய் மீது தடைகளை விதித்தன. அப்போதிருந்து, ரஷ்யா இந்தியாவின் சிறந்த எரிசக்தி சப்ளையராக உருவெடுத்துள்ளது."

பட மூலாதாரம், Reuters
"இது யுக்ரேன் மக்களை காயப்படுத்துகிறது. வரி செலுத்துவோராக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், யுக்ரேன் தன்னைத் தற்காத்துக் கொள்ள அதிக பணம் அனுப்ப வேண்டும். இந்தியா வரிகளின் 'மகாராஜா' என்பதாலேயே கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது," என்று நவரோ குற்றம் சாட்டினார்.
"அவர்கள் (இந்தியா) உலகிலேயே மிக அதிக வரிகளை விதிக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு நிறைய பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள். நாங்கள் அந்த பொருட்களை தயாரித்து விற்க முடியவில்லை. அதனால் யார் பாதிக்கப்படுவார்கள்? அமெரிக்க தொழிலாளர்கள், அமெரிக்க வரி செலுத்துவோர் மற்றும் ரஷ்ய டிரோன் தாக்குதல்களில் இறக்கும் யுக்ரேன் மக்கள்." என்று அவர் கூறினார்.
மோதியின் போர் என்று ஏற்கனவே விமர்சனம்
பீட்டர் நவரோ முன்பு யுக்ரேன் போர் தொடர்பாக இந்தியாவையும் பிரதமர் மோதியையும் விமர்சித்துள்ளார்.
முன்னதாக உக்ரைன் மோதலை "மோதியின் போர்" என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் புதன்கிழமை, அமெரிக்காவின் புதிய வரி விகிதங்கள் அமலுக்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பீட்டர் நவரோ இந்தியா மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார்.
ப்ளூம்பெர்க் டிவியில் ஒரு உரையாடலில், ரஷ்யா-யுக்ரேன் போர் உண்மையில் "மோதியின் போர்" என்று நவரோ கூறினார்.
"இந்தியாவின் செயல்களால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் இழப்பை சந்திக்கிறார்கள். நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் இழப்பை சந்திக்கின்றனர். இந்தியா விதிக்கும் அதிக வரிகள் நமது வேலைகள், தொழிற்சாலைகள், வருமானம் மற்றும் சிறந்த ஊதியத்திற்கான வாய்ப்புகளைக் குறைக்கின்றன. பின்னர் 'மோதியின் போருக்கு' நாம் பணம் செலுத்த வேண்டியிருப்பதால் வரி செலுத்துவோரும் இழப்பை எதிர்கொள்கிறார்கள்" என்று நவரோ கூறினார்.
'புதினின் போர்' என்று அவர் சொல்கிறாரா என்று ப்ளூம்பெர்க் அவரிடம் கேட்டபோது, "நான் 'மோதியின் போர்' என்று சொன்னேன், ஏனென்றால் அமைதிக்கான பாதை ஒரு வகையில் பார்த்தால் புதுடெல்லி வழியாகவே செல்கிறது" என்று நவரோ கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "இந்தியர்கள் இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமானவர்கள் என்பது என்னைத் தொந்தரவு செய்கிறது. 'நாங்கள் அதிக வரி விதிக்கவில்லை, இது எங்கள் இறையாண்மை. நாம் எங்கிருந்து வேண்டுமானாலும், யாரிடமிருந்து வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கலாம்.' என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்தியா, நீங்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம், அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு