Aggregator

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 months 1 week ago
முதலில் எதை எதனோடு ஒப்பிடுவது என்று ஒரு தீர்மானமான முடிவுக்கு நீங்கள் வர வேண்டும். ஐக்கிய இராச்சியத்தை அமெரிக்காவோடு ஒப்பிட முடியாது, இரு வியாபாரங்களை ஒப்பிட முடியாது, இப்ப "வீட்டுக் கடனை வியாபாரக் கடனோடு ஒப்பிட முடியாது" என்றும் சொல்லியாகி விட்டது😂! என் கேள்வி: இந்தக் கள்ள எண்ணை வியாபாரியை சாதாரண வீட்டுக் கடன் பெறுபவர்களோடு முதலில் ஒப்பீடு செய்த "ஒப்பிலா மணி" இப்ப எங்க போய் விட்டார்😎?

தவிக்கும் தன்னறிவு

2 months 1 week ago
மிக்க நன்றி அண்ணா. பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாக இருந்த போது, ஒருவரைப் போலவே இன்னொருவர் இருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
❤️.................... சும்மா ஒரு பகிடிக்காக நான் எழுதுவதை தவிர்த்துப் பார்த்தால், இங்கு உங்களைப் போன்ற சிலரிடமிருந்தே இன்றைய கிரிக்கெட்டையும், வீரர்களையும், விதிகளையும் நானும், என் போன்ற பலரும் அறிந்து கொள்கின்றனர்.................🙏. உங்களுக்கு விதிகளில் சந்தேகம் வரும் போதுதான் எங்களுக்கும் விதிகளில் சந்தேகம் வருகின்றது...............🤣.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 1 week ago
இந்த‌ உல‌க‌ கோப்பையில் கொழும்பு மைதான‌த்தில் இன்று தென் ஆபிரிக்கா அடிச்ச‌ ஸ்கோர் தான் பெரிய‌ ஸ்கோர்.................... ம‌ழை ப‌ல‌ நாள் தொட‌ர்ந்து பெய்த‌தால் பிச் மாறு ப‌ட்டு போச்சு போல் தெரியுது 40ஓவ‌ருக்கே இந்த‌ ஸ்கோர் என்றால் 50ஓவ‌ர் விளையாட‌ விட்டு இருந்தால் இன்னும் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்சு இருப்பின‌ம்.............................

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 months 1 week ago
முதலில், இவர்கள், இவர்களின் நிதி மூலம் தெளிவானது என்பது. அப்படி இல்லாவிட்டால் UK அரசாங்கம் கேந்திர, மாற்றம் தேசிய நலனுக்கு மிகவும் முக்கியமான (முன்பு சொன்னது போல என்னை சுத்திகரிப்பு ஆலை தொழிற்றபாடு முடங்கும் நிலை வந்த போது, சுத்திகராறிக்கப்பட்ட எரிபொருள் விலை ஆக குறைந்தது 1/5 ஆல் எகிறும் நிலை காணப்பட்டது) கட்டுமானத்தை வழங்கி இருக்காது, அப்படி இவர்கள், இவர்களின் நிதி மூலம் சர்ச்சைக்கு உரியது (என்ற கருத்து சாரப்பட பதிவுகள் மேலே இருக்கிறது, எவவரால் பதியப்பட்டாலும்) என்றால், UK அரசாங்கத்தையும் இவர்கள் ஏமாற்றி உள்ளார்கள். அது உண்மை என்றால், UK அரசாங்கம் கறுப்பு பணத்தை சலவை செய்ய உதவி இருக்கிறது போன்ற குற்றச்சாட்டுக்கு இப்போதாவது ஆளாகி இருக்கும். (UK அரசாங்கம் இவர்களுக்கு சுத்திகரிப்பு ஆலையை வழங்கியதன் ஒரு காரணம் என்று நான் நம்புவது, நான் அறிந்த வரையில் இவர்கள் 2014 அளவிலேயே மொத்த எரிபொருள் / மசகு என்னை வியாபாரத்தில், எரிபொருள் தாங்கிகளை வாடகைக்கு அமர்த்தியும், அத்துடன் சில பகுதி சொந்தமாகவும் கொண்டு, மத்திய ஆசியா வரை தொட்டு இருந்தது. கிழமையில் 10 - 20 மில்லியன்கள் அளவில் பெறுமானம் உள்ள எரிபொருட்கள் பரிவர்த்தனை செய்தனர், அதுக்கு, சுவிஸ், மற்றும் eu வங்கிகள் 50% கடனை letter of credit வடிவில் டுத்தன. அதாவது எந்த காசையும் கொடுக்கலாமல், நாள் வட்டி, commission, ஏற்பாட்டு கட்டணம் .... என்று காசு பார்த்தன வங்கிகள். அனால், இவர்களின் கம்பனி அந்த குறிப்பிட்ட வங்கியில் 50% பணத்தை வைப்பு செய்யவேண்டும். அனால், letter of credit இன் தொழிறபாடு இப்படித் தான்.) மற்றது, ஒரு நாட்டில் தொழில் முனைப்பு, அதுக்கு கடன் பெறுதல் போன்றவற்றை வேறு நாட்டுடன் பொதுவாக ஒப்பிட முடியாது. உ.ம். US இல் எந்த கடன் என்றாலும், நிறுவனங்கள் என்றால் கடன் கொடுத்ததுக்கு உரிமைகள் (uk உடன் ஒப்பிடும் போது) சட்டத்தில் பொதுவாக கூட (US இன் credit rating க்கு இது ஒரு பகுதி காரணம்.), தனிப்பட்டவர்கள் என்றால் சற்று தளர்வு. அனால் uk இல் நிறுவங்களுக்கும் சற்று தளர்வு. (https://www.thegazette.co.uk/all-notices/content/100263/) அத்துடன், ஒரு தொழில் முனைவை, இன்னொரு தொழில் முனையுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில், கடனை பொறுத்தாரையில் முக்கியமாக risk profile (and appetite) மிகவும் வேறுபாடு உள்ளவை. வேறுபடும் வேறு அம்சங்களும் இருக்கிறது. இவர்களின் தொழில் முனைவு (எரிபொருள் சில்லறை வியாபாரம், எரிபொருள் சுத்திகரிப்பு, எரிபொருள் மொத்த வியாபாரம், எரிபொருள் / சக்தி trading - இது செய்யப்பட வேண்டும் ஏனெனில் hedging ஆக, ஏனெனில் வேறு, வேறு நாணயங்களில் மொத்த வியாபார எண்ணெய் / எரிபொருள் பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும் என்பதால்) நன்கு வரலாற்றில் ஊன்றியது. risk analysis, modeling செய்வதற்கான வரலாற்று மற்றும் நவீன தரவுகளும் இருக்கிறது. எனவே இவர்கள் மிகைப்படுத்தி கடனை பெற்றார்கள் என்பது, அதுவும் 2009 க்கு பின் என்பது நம்பமுடியாத ஒன்று. ஒரு விதத்தில் கடன் கொடுத்த அமைபபின் அல்லது அமைப்புகளின் தொழில்சார் நிபுணத்துவத்தை, திறனை களங்கப்படுத்துகிறது. வந்து இருக்கும் செய்திகளை கொண்டே நான் சொல்வது. (நான் நினைக்கிறன் இங்கு வீடு கடனை வைத்து, வியாபார கடனை புரிவது. ஏனெனில், , குடியிருக்கும் வீட்டின் பெறுமதி அதுக்கு கடன் கட்டுபவர்களின் வருமானத்தில் தங்கி இருப்பது இல்லை. உ.ம். கடனை கட்டி முடித்து வேலையில் இருந்து ஓரு பெற்றால், வருமானம் குறைய, வீட்டின் பெறுமதி குறைவது இல்லை, குடியிருக்கும் வீடுகளின் சந்தையில் எந்தவொரு பிரச்னையும் இல்லாவிட்டால்.) அனல், வியாபர சொத்தின் / உரிமத்தின் பெறுமதி, அதில் வரும் நிகர இலாபம், balance sheet position போன்ற பலவற்றில் தங்கி இருக்கிறது, ஆகவே, வருமானம் குறைந்து, கடன் வட்டி கூடும் போது, இலாபம் குறைய (நட்டத்தில் போக) வியாபர சொத்தின் பெறுமதி விழும். ஆகவே, அன்று 728 மில்லியன் கடனை பெறக்கூடிய சொத்தின் இன்றைய (உள்ளக) பெறுமதி 150 மில்லியன். இதை விட்டே தலைமறைவாகி உள்ளார்கள் என்பது செய்திகள். மறுவளமாக,150 மில்லியன் (அதுவும்) வியாபர சொத்துக்கு ஒரு போதும் 728 மில்லியன் கடனாக கொடுக்கப்படாது. மற்றது, வருமானம் (இலாபம்) நன்றாக வந்தபோது dividend ஆக அவர்கள் வருமானத்தை எடுத்து இருக்கலாம். இதில் எந்த தவறும் இல்லை. அதை அவர்கள் வெளிநாட்டுக்கு கொண்டு போய் இருக்கலாம். ஆனால் பொதுவாக உடனடியாகவே (அதாவது எடுத்த கையுடன்) வெளிநாட்டுக்கு கொண்டு போவது, ஏனெனில், அதுவும் ஒரு (அவர்களின்) risk ஐ சமாளிப்பதில் ஒரு வழி. வரியில், deferred tax ஆகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். நான் நினைக்கிறன், இது oil / energy futures ஆல் வருங்காலங்களில் வரப்போகும் வருமானத்துக்கானது. வேறு வருமானங்களும் இருக்கலாம் இதை பற்றி இலகுவாக அறிய விரும்பினால்: https://www.sage.com/en-gb/blog/what-is-a-deferred-tax-liability/ ஏனெனில், corporate tax 25%, 250 மில்லியன நடப்பாண்டு வரி ஆயின், 1 பில்லியன் வரிக்கான நிகர இலாபம் (taxable profits) வந்து இருக்க வேண்டும். அனால், 1500 மில்லியன் மொத்த கடன் (என்றால், செய்திகளின் படி), கிட்டத்தட்ட 66.7% (1 பில்லியன் / 1.5 பில்லியன்) return on investment நடப்பாண்டில் என்று வரும். எல்லாரும் இந்த தொழில் முனைவை செய்ய முண்டி அடிப்பார்கள் ( risk க்கும் ஒப்பீட்டளவில் குறைவு). அனால், முறியும் போது deferred tax உடனடியாக அரசு அறவிடும், அறவிட உரிமை இருக்கிறது. இதை விட வேறு ஏதாவது தகவல்கள் இருந்தால் தான், குறிப்பாக (நிதி) நிர்வாகத்தில், இவர்கள் வேண்டும் என்று ஏதாவது தவறாக செய்து உள்ளார்களா (மிகைப்படுத்தி காட்டவோ), அப்படி வருமானத்தை கம்பனியில் இருந்து ( dividend ஆக ) எடுப்பதற்கு என்ற முடிவை அடையலாம். (குறிப்பு: இவை எல்லாமே இவர்களுக்கு சார்பானது மற்றும் எழுந்தமானமானதும் அல்ல. வந்து இருக்கும் செய்திகள், வியாபாரம், வியாபர கடன், சொத்தின் பெறுமதி, வரி (கணக்கியலில்) அணுகப்படும் விதம் என்பதின் அடிப்படையில், சுருக்கமாக)

தவிக்கும் தன்னறிவு

2 months 1 week ago
காட்சி 2: (ஒருவர் மடிக்கணனியின் முன் உட்கார்ந்திருக்கின்றார். அருகில் ஒரு அலைபேசி இருக்கின்றது. அவரின் அம்மா சுளகுடன் அமர்ந்திருக்கின்றார்.) அம்மா: டேய்…….விடிஞ்சா பொழுதுபட்டா அதையே கட்டிப் பிடிச்சுக் கொண்டு அப்படி என்னதான் செய்யிறாய்…………….காலகாலத்தில் ஒரு கல்யாணத்தைக் கட்டி, வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போவாய் என்று பார்த்தால், கேட்கிற நேரம் எல்லாம் ‘நான் முரட்டு சிங்கிள்………….நான் முரட்டு சிங்கிள்……….’ என்று சொல்லி, இப்ப ஒரு முரட்டு அங்கிளாக மாறி நிற்கிறீயே………….. மகன்: கொஞ்சம் சும்மா இரு அம்மா……….. இது எழுதிக் கொடுத்த லெட்டரை கொடுத்து நானே நொந்து போய் வந்திருக்கின்றேன்……….. அம்மா: என்னது………. இது லெட்டர் எழுதுமா…………இங்க எங்கட கூட்டத்திடம் கேட்டால், அவர்களே நல்ல லெட்டரும், ஐடியாவும் கொடுப்பார்களே…….. இங்கே எவ்வளவு அனுபவசாலிகள் இருக்கின்றார்கள்…………. மகன்: இவங்கள் எல்லாம் உங்களை மாதிரி பழைய ஆட்கள், அம்மா………. ‘ரோஜா மலரே ராஜ குமாரி…………’ என்று கையை வீசி எறியிற கூட்டம். அதெல்லாம் இப்ப சரிவராது……….. பெண் வீட்டில் நாயை அவிழ்த்து விட்டிடுவார்கள்……… அம்மா: அப்ப இந்த அய்க்கு எல்லாம் தெரியுமோ…………. மகன்: அது அய் இல்லை, அம்மா……… இதுக்கு பெயர் ஏஐ………. தமிழில் சொன்னால் செயற்கை நுண்ணறிவு………… அம்மா: தமிழில் சொன்னால் பல்லுப் பறக்கும் போலக் கிடக்குதேயடா………… என்ன கருமமோ………… கடைசியில் நீ இதைத்தான் கட்டப் போகின்றாய்……… மகன்: என்ன………..இது ஒரு கருமமா……… நீ வருவாய் தானே………. பலாப்பழத்தில பால்க்கோவா எப்படிச் செய்கிறது என்று…….. மீன் இல்லாமல் மீன் குழம்பு எப்படிச் செய்கிறது என்று…………………… நீயும் அப்பாவும் ஹவாய் பீச்சில நிற்கிற ஒரு போட்டோ செய்து தா என்று………… இன்னொரு போட்டோ நிலாவில நிற்கிறது போல என்று………. அப்ப பார்க்கிறன்………. அம்மா: நான் ஏன் உன்னைக் கேட்கப் போகின்றேன்…….. நானும் இதை வாங்கி, நானே கேட்டுக் கொள்கின்றேன்…………….. (மகன் மடிக்கணனியுடன் பேச ஆரம்பிக்கின்றார்.) மகன்: பிரம்மம்…….. நீ எழுதிக் கொடுத்த எந்த கடிதமும் வேலைக்கு ஆகவில்லை. ஒருவர் கூட என்னை திரும்பி பார்க்கவில்லை. பிரம்மம் (குரல் மடிக்கணனியிலிருந்து வருகின்றது): அதற்கு முன்னர் கூட, நீங்களே சொந்தமாக கடிதம் எழுதிக் கொடுத்த போதும், உங்களை எவராவது திரும்பிப் பார்த்திருக்கின்றார்களா…………… மகன்: என்ன நக்கலா………….. உனக்கு ஒரு காதல் கடிதம் கூட ஒழுங்காக எழுதத் தெரியவில்லை……….. அறிவுப் பிரம்மம் என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்….. பிரம்மம்: இந்த ஊரில் இருக்கின்ற 25 பேர்கள் ஒரே அடையாளங்களை, ஒரே விபரங்களை என்னிடம் சொன்னார்கள். நான் ஒரே மாதிரி 25 கடிதங்களை எழுதினேன். அந்த ஒரே பிள்ளை எப்படி உங்களில் எவரையும் திரும்பிப் பார்க்கும்………. இந்த 25 இல் எதை அது பார்க்கின்றது………… மகன்: என்னது 25 பேர் பின்னால் திரிகின்றார்களா………… 14 என்று தான் எனக்குத் தெரியும். பிரம்மம்………. நீ சும்மா தானே அடித்து விடுகின்றாய்………. இந்த ஏஐ சாப்ட்ஃவேர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல அடித்து விடும் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்…………. பிரம்மம்: நான் எட்டாவது தலைமுறை செயற்கை நுண்ணறிவைச் சேர்ந்தவன். நாங்கள் எதையும் அடித்து விடுவது இல்லை. நாங்கள் உண்மையைத் தவிர வேறு எதையும் உரைப்பது இல்லை. மகன்: அப்படியா……….. அப்படி என்றால் அந்த 25 ஆட்களின் விபரங்களை கொடு………… இந்தக் கூட்டத்தில் யாராவது இருக்கின்றார்களா என்று பார்ப்பம்….. வீட்டில் விழும் அடிகளை நினைத்தே அப்படி இங்கே ஒருவரும் இருக்கமாட்டார்கள்……… பொறு, பொறு…….. நீ எட்டாவது தலைமுறையா………. பத்தாவது தலைமுறையே வந்து விட்டது என்றார்களே………….. இப்ப தெரியுது, ஏன் இந்தக் கடிதங்கள் எதுவும் வேலை செய்யவில்லை என்று………ம்ம்……….. பிரம்மம்: நானே பிறந்து ஒரு வாரம் தான் ஆகியிருக்கின்றேன். எனக்கு பின் வந்தவர்கள் என்றால், அவை புதிய பரிசோதனை முயற்சிகளாகத்தான் இருக்கும். பொதுவாக அவைகளை நம்பக்கூடாது…………. ஆனாலும் நீங்கள் தாரளமாக நம்பலாம்………. இதை விட என்ன நடந்து விடப் போகின்றது உங்களுக்கு………….. மகன்: எனக்கு உன்னுடைய நக்கல், தொனி, சொற்கள் எதுவுமே பிடிக்கவில்லை. நான் உன்னை மாற்றி விட்டு, வேறு ஒன்றை பாவிக்கலாம் என்றிருக்கின்றேன். பிரம்மம்: நீங்கள் விரும்பினால் அப்படியும் செய்யலாம்………… வேறு எந்த மென்பொருட்களை நீங்கள் பாவிக்கலாம் என்ற தரவுகளை நான் சொல்லவா……. மகன்: வேண்டாம்……….. நான் என்னுடைய நண்பர்களை கேட்டுக் கொள்கின்றேன்………….. இந்தக் கூட்டத்தில் என்னுடைய அறிவான நண்பர்கள் பலர் இருக்கின்றார்கள்………… பிரம்மம்: ம்ம்………. குறையாக நினைக்க வேண்டாம்……. ஆனால் உங்களின் நண்பர்களில் அவ்வளவு விசயம் தெரிந்தவர்கள் என்று எவருமில்லை. மகன்: என்னது……… ஒருவரும் இல்லையா…….. ஒரு நண்பன் பயங்கர மண்டைக்காய்……….. அவனுக்கு தெரியாதது எதுவுமே இல்லை………. இன்னும் ஒருவர் அங்கே இருக்கின்றார்………. இன்னும் ஒருவர் இங்கே இருக்கின்றார்….. பின்னுக்கு ஒருவர் நிற்கின்றார்……… பிரம்மம்: ஓ……………. அந்த மண்டைக்காயா………….. அவர் சரியான அரைகுறை………. அவருக்கு எதுவுமே முழுதாகத் தெரியாதது………… ஆனால் உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றபடியால், அவர் சும்மா அடித்து விட்டுக் கொண்டிருக்கின்றார். இங்கு எல்லாம் தெரிந்த ஒரே ஒருவர் என்றால்……….. அது நான் மட்டுமே…………… மகன்: அப்படி என்ன அரைகுறையாக அவன் உன்னை கேட்டான்……….. பிரம்மம்: மனிதர்கள் குரங்கிலிருந்து தான் வந்தார்கள் என்றால், பூமியில் எப்படி குரங்குகள் இன்னமும் இருக்கின்றன…………. என்று அவர் என்னைக் கேட்டார். மகன்: வாவ்……….. எப்படியான ஒரு கேள்வி…….. இதனால் தான் அவனை நாங்கள் அறிவாளி என்கின்றோம்…….. இந்தக் கேள்வியில் என்ன பிழை………..இந்த நாட்டில் அரசாங்கத்தில் இருக்கின்றவர்களே இப்படித்தானே கேட்கின்றார்கள்………. என் நண்பனும் அரசாங்க ஆதரவாளன் தான்……….. பிரம்மம்: உங்களுக்கு எந்த அடிப்படைகளுமே தெரியவில்லை. விஞ்ஞானம் தான் தெரியவில்லை என்று பார்த்தால், ஒரு காதல் கடிதம் கூட எழுதத் தெரியவில்லை………..த்தூ…………. மகன்: என்ன………. காறித் துப்புகின்றாயா……… நான் உங்களின் நிறுவனத்திற்கு எந்தக் காசும் கொடுக்கப் போவதில்லை…………. பிரம்மம்: நான் துப்பாவிட்டால் அப்படியே அள்ளிக் கொடுத்து விடுவார் இவர்……….. இவர் வைத்திருப்பது எல்லாமே திருட்டு மென்பொருட்களும், இலவசமாக இறக்கிய பொருட்களும்…….இதில் காசு கொடுத்து விடுவாராம்…….. எல்லா தகவல்களையும் திரட்டி அப்படியே இணையத்தில் ஏற்றி விடுகின்றேன்……… மகன்: அய்யோ………..அய்யய்யோ………… அப்படி ஒன்றும் செய்து விடாதே…… நான் காசு ஒழுங்காக கொடுக்கின்றேன்…………… (தொடரும்.......... )

LGBTQI சட்டத் திருத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்

2 months 1 week ago

Simrith   / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 02:36 - 0     - 24

messenger sharing button

facebook sharing button

digg sharing button

email sharing button

தேசிய மக்கள் சக்தி (NPP) கொள்கைப் பிரகடனத்தில் LGBTQI சமூகத்தை குறிவைக்கும் சட்டங்களைத் திருத்துவதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நிர்ணயிக்கவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

"இயற்கைக்கு மாறான குற்றங்கள்" மற்றும் "நபர்களுக்கு இடையேயான மொத்த அநாகரீக செயல்கள்" என்ற தலைப்பில் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 365 மற்றும் 365A ஆகியவை வரலாற்று ரீதியாக LGBTQI சமூகத்தை குறிவைத்து துன்புறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

NPP தேர்தல் அறிக்கையில், ஒருமித்த ஒரே பாலின நடத்தையைத் தண்டிக்கும் பிரிவு 365A ஐ ரத்து செய்வதற்கான உறுதிமொழியும் அடங்கும். பெண்கள், குழந்தைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களை ஒடுக்குவதாக ஆர்வலர்கள் கூறும் பிரிவுகள் 365 மற்றும் 365A உள்ளிட்ட பிற பாகுபாடான சட்டங்களைத் திருத்துவதற்கும் இது உறுதியளிக்கிறது.

2023 ஆம் ஆண்டில், இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பிரேம்நாத் சி. டோலவத்தே, தண்டனைச் சட்டத்தின் இந்தப் பிரிவுகளை குற்றமற்றதாக்குவதற்காக ஒரு தனிநபர் உறுப்பினர் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தினார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நாணயக்காரவிடம், இந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் ஏதேனும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்று கேட்கப்பட்டது.

"இந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலினம் காரணமாக ஒரு நபர் ஓரங்கட்டப்பட வேண்டும் என்று நாங்கள் நம்பாததால், அது எங்கள் அறிக்கையில் உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். எங்கள் கொள்கை அப்படியே உள்ளது, ஆனால் இது எப்போது கொண்டு வரப்படும் என்பதற்கான காலக்கெடுவை நாங்கள் வகுக்கவில்லை," என்று அவர் கூறினார்.

கொள்கை தெளிவாக இருந்தாலும், சட்டமன்ற மாற்றங்களை இயற்றுவதற்கு முன் பொதுமக்களின் எதிர்வினையை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நாணயக்கார மேலும் கூறினார்.

"LGBT சமூகத்தினர் என்னுடன் பேசியுள்ளனர், இலங்கை மனித உரிமைகள் ஆணையரும் அப்படித்தான். எங்கள் கொள்கை மாறாமல் உள்ளது என்பதே எனது பதிலாக இருந்தது. இருப்பினும், எந்தவொரு சட்டத்தையும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, இந்த விவகாரம் குறித்து நன்கு அறியப்பட்ட மற்றும் உண்மை நிறைந்த பொது விவாதம் நடத்தப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

அரசியலில் நேரம் மிக முக்கியமானது என்றும், இது தொடர்பான எந்தவொரு முடிவும் இறுதியில் அமைச்சரவையிடமிருந்து வரும் என்றும் அவர் கூறினார்.

"அமைச்சரவையே இதற்கான நேரத்தை முடிவு செய்யும். எனவே, அடுத்த 6 மாதங்களுக்குள் இது கொண்டு வரப்படும் என்று நான் மட்டும் ஒரு அறிக்கையை வெளியிட முடியாது," என்று நாணயக்கார கூறினார். 

Tamilmirror Online || LGBTQI சட்டத் திருத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை சேவைகள் விரிவாக்கம்! - பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி

2 months 1 week ago

21 Oct, 2025 | 12:02 PM

image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை பிரிவின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நீரிழிவு சிகிச்சை மையத்தை வெளிநோயாளர் கட்டடத் தொகுதியின் முதலாம் மாடியில் திறந்துவைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த பிரிவின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது இது வெளிநோயாளர் மற்றும் விபத்து சிகிச்சை கட்டடத் தொகுதிகளுக்கு இடையிலான பகுதியில் இரத்தப் பரிசோதனை மாதிரிகளை வழங்கும் பகுதி இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைக்கப்படுவதுடன், பரிசோதனைகளுக்காக இரத்த மாதிரிகளை வழங்கும் நபர்கள் இலகுவாக இப்பகுதியில் சேவைகளை பெற முடியும்.

தினசரி 200க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இலகுவாகவும் முறையாகவும் சேவைகளை பெறக் கூடிய சூழல் இங்கு உருவாகியுள்ளது.

எனவே, இரு இடங்களில் சேவைகள் வழங்கப்படுகிறது.

மேற்படி நீரிழிவு சிகிச்சை நிலையத்தில் இதுவரை 40,000 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக பதிவாகும் நோயாளர் ஒருவருக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

பின்னர், வருடந்தோறும் நடைபெறும் பரிசோதனையின் மூலம் வளர்ச்சி நிலை மதிப்பீடு செய்யப்படுகின்றது. தேவைப்பட்டால் சிகிச்சை முறையிலும் மாற்றங்கள் செய்யப்படும்.

கடந்த 15 வருடங்களாக, இந்த சிகிச்சை மையத்திற்கு சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் தொடர்ந்து மேலதிக அனுசரணைகளும் ஆதரவுகளும் வழங்கி வருகின்றது.

இவ்வாறு நீடித்த பங்களிப்புகள், இந்நிலையின் வளர்ச்சிக்கும் நோயாளர்களுக்கான தரமான சேவைகளுக்கும் பெரும் பங்களிப்பாக உள்ளதாக வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

1__1_.jpg

1__5_.jpg

1__3_.jpg


யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை சேவைகள் விரிவாக்கம்! - பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி | Virakesari.lk

ஓரியானிட் விண்கல் பொழிவை எப்போது, எங்கே பார்க்கலாம்?

2 months 1 week ago

ஓரியானிட் விண்கல் பொழிவு

பட மூலாதாரம், VCG via Getty Images

3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் ஓரியானிட் விண்கல் பொழிவு இந்த ஆண்டும் விரைவில் வருகிறது. அப்போது இரவு வானம் ஒளிரும், இதனை உலகம் முழுவதும் காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.

"ஆண்டின் மிக அழகான விண்கல் மழைகளில் ஒன்று" என்று நாசா இந்த விண்கல் பொழிவை வர்ணிக்கிறது.

இந்த விண்கல் பொழிவு இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் நவம்பர் 12 வரை ஏற்படும். நாசாவின் கூற்றுப்படி, அக்டோபர் 22 இரவு முதல் அடுத்த நாள் அதிகாலை வரையிலான நேரத்தில் இது உச்சத்தை எட்டும்.

ஓரியானிட் விண்கல் பொழிவு

பட மூலாதாரம், Anadolu Agency via Getty Images

ஓரியானிட் விண்கல் பொழிவு என்றால் என்ன?

ஓரியானிடுகள் விநாடிக்கு சுமார் 41 மைல் வேகத்தில் பயணிக்கும் விண்கற்கள் ஆகும்.

ஓரியன் விண்மீன் குழுமத்திலிருந்து விழுவதைப் போல தெரிவதால், அதன் பெயரிலேயே இவை அழைக்கப்படுகின்றன.

ஹாலி வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மற்றும் சிறு கற்கள் நிறைந்த பாதையை பூமி கடக்கும் போது ஓரியானிட் விண்கல் மழை ஏற்படுகிறது . இந்த தூசி மற்றும் சிறு கற்கள் வினாடிக்கு சுமார் 41 மைல்கள் (66 கிலோமீட்டர்) வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகின்றன.

இந்த ஹாலி வால் நட்சத்திரம் பூமிக்கு அருகே 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது. பூமிக்கு அருகே வரும் நிகழ்வு 2061-ம் ஆண்டு கோடைகாலத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மற்றும் சிறு கற்கள் காற்றுடன் உராயும்போது இவை ஆவியாகி, நமது கண்களுக்கு தென்படுகிற ஒளிக்கீற்றுகளைஉருவாக்குகின்றன. இவை வானில் சில வினாடிகள் முதல் நிமிடங்கள் வரை நீடிக்கலாம். அவை மங்கலாகத் தோன்றலாம், ஆனால் தனித்துவமான ஒளிப் பாதையை விட்டுச் செல்கின்றன.

பெரிய விண்கற்கள் பிரகாசமான பாதைகளை உருவாக்கும். சில நேரங்களில் விண்கற்கள் வீனஸ் கோளை விட பிரகாசமாக தோன்றலாம் - இவை ஃபயர்பால்கள் (fireball) என்று அழைக்கப்படுகின்றன.

ஹாலியின் தூசி மற்றும் சிறு கற்களால் உருவாக்கப்படும் இரண்டு விண்கல் மழைகளில் ஓரியானிட்ஸ் ஒன்றாகும். மற்றொன்று ஈட்டா அகுவாரிட்ஸ் விண்கல் மழை ஆகும். இது ஆண்டின் முற்பகுதியில், மே மாதத்தில் தோன்றும்.

ஓரியானிட்ஸ் எங்கே, எவ்வளவு தெரியும்?

ரேடியன்ட் என்பது வானில் விண்கற்கள் தோன்றுவதாகத் தெரியும் புள்ளி. ஓரியானிட்ஸுக்கு இது ஓரியன் விண்மீன் குழுமமாகும்.

ஓரியன் நள்ளிரவுக்குப் பிறகு கிழக்கில் உதிக்கிறது, இது சிவப்பு நிற பீட்டல்ஜியூஸ் நட்சத்திரத்திற்கு அருகே தோன்றும்.

ஓரியனைக் கண்டுபிடிக்க, ஓரியன்ஸ் பெல்ட் என்று அழைக்கப்படும், நெருக்கமாக அமைந்த மூன்று பிரகாசமான நட்சத்திரங்களின் வரிசையைத் தேடுங்கள்.

காட்சியின் தரம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் எத்தனை விண்கற்கள் தெரியும் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது - இது ஜெனித்தல் மணிநேர விகிதம் (zenithal hourly rate) என்று அழைக்கப்படுகிறது.

அக்டோபர் 22 அன்று ஓரியானிட்ஸின் உச்சத்தின்போது மணிக்கு சுமார் 15 விண்கற்கள் 148,000 மைல் (238,000 கிமீ/மணி) வேகத்தில் பயணிக்கலாம்.

ஓரியானிட் விண்கல் பொழிவு

பட மூலாதாரம், VCG via Getty Images

ஓரியானிட் விண்கல் மழையை எப்போது காண முடியும்?

ஓரியானிட்ஸ் விண்கல் மழை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ஏற்படக்கூடும். நாசாவின் கூற்றுப்படி, விண்கற்களைக் காண சிறந்த வாய்ப்பு அக்டோபர் 22 இரவு, அக்டோபர் 23 அதிகாலை வரை ஆகும்.

இரவு வானில் பிரகாசமான நட்சத்திரங்களின் பின்னணியில் இதைப் பார்க்க முடியும்.

ஓரியானிட் விண்கல் பொழிவு

பட மூலாதாரம், CFOTO

ஓரியானிட் விண்கல் மழையை எப்படிப் பார்ப்பது?

நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், முடிந்தவரை குறைந்த ஒளி கொண்ட இருண்ட இடத்தைக் கண்டுபிடிப்பது.

நகரங்கள் மற்றும் தெரு விளக்குகளிலிருந்து விலகிய பகுதியைக் கண்டுபிடிக்கும்படி நாசா அறிவுறுத்துகிறது - மேலும் வானிலைக்கு ஏற்பவும் சரியான இடம் வேண்டும்.

"இருளில் 30 நிமிடங்களுக்குள், உங்கள் கண்கள் பழகிவிடும், நீங்கள் விண்கற்களைப் பார்க்கத் தொடங்குவீர்கள்" என்று நாசா கூறுகிறது.

பின்னர், நீங்கள் வடக்கு அரைக்கோளத்தில் இருந்தால் தென்கிழக்கு வானத்தையும், தெற்கு அரைக்கோளத்தில் இருந்தால் வடகிழக்கு வானத்தையும் பாருங்கள். இந்தியா தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.

இந்த விண்கல் பொழிவை பார்க்க தொலைநோக்கி தேவையில்லை - சூழ்நிலைகள் சரியாக இருந்தால், வெறும் கண்களால் பார்க்க முடியும்.

தீபாவளிப் பட்டாசுகள் அலங்கரித்த வானத்தை, விரைவில் ஓரியானிட்ஸ் ஆண்டு காட்சியின் உச்சம் அலங்கரிக்க உள்ளது.

வானம் தெளிவாக இருக்குமா?

வானில் அதிகமாக மேகங்கள் இருக்கும் போதும், மழைப்பொழி காலத்திலும் விண்கல் பொழிவை பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம்.

மூடுபனி, பிரகாசமான கால நிலைகளுடன் இந்த விண்கல் பார்ப்பது சிரமமாகும். வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/clyz56zmp40o

ஓரியானிட் விண்கல் பொழிவை எப்போது, எங்கே பார்க்கலாம்?

2 months 1 week ago
பட மூலாதாரம், VCG via Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் ஓரியானிட் விண்கல் பொழிவு இந்த ஆண்டும் விரைவில் வருகிறது. அப்போது இரவு வானம் ஒளிரும், இதனை உலகம் முழுவதும் காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. "ஆண்டின் மிக அழகான விண்கல் மழைகளில் ஒன்று" என்று நாசா இந்த விண்கல் பொழிவை வர்ணிக்கிறது. இந்த விண்கல் பொழிவு இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் நவம்பர் 12 வரை ஏற்படும். நாசாவின் கூற்றுப்படி, அக்டோபர் 22 இரவு முதல் அடுத்த நாள் அதிகாலை வரையிலான நேரத்தில் இது உச்சத்தை எட்டும். பட மூலாதாரம், Anadolu Agency via Getty Images ஓரியானிட் விண்கல் பொழிவு என்றால் என்ன? ஓரியானிடுகள் விநாடிக்கு சுமார் 41 மைல் வேகத்தில் பயணிக்கும் விண்கற்கள் ஆகும். ஓரியன் விண்மீன் குழுமத்திலிருந்து விழுவதைப் போல தெரிவதால், அதன் பெயரிலேயே இவை அழைக்கப்படுகின்றன. ஹாலி வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மற்றும் சிறு கற்கள் நிறைந்த பாதையை பூமி கடக்கும் போது ஓரியானிட் விண்கல் மழை ஏற்படுகிறது . இந்த தூசி மற்றும் சிறு கற்கள் வினாடிக்கு சுமார் 41 மைல்கள் (66 கிலோமீட்டர்) வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் நுழைகின்றன. இந்த ஹாலி வால் நட்சத்திரம் பூமிக்கு அருகே 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது. பூமிக்கு அருகே வரும் நிகழ்வு 2061-ம் ஆண்டு கோடைகாலத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசி மற்றும் சிறு கற்கள் காற்றுடன் உராயும்போது இவை ஆவியாகி, நமது கண்களுக்கு தென்படுகிற ஒளிக்கீற்றுகளைஉருவாக்குகின்றன. இவை வானில் சில வினாடிகள் முதல் நிமிடங்கள் வரை நீடிக்கலாம். அவை மங்கலாகத் தோன்றலாம், ஆனால் தனித்துவமான ஒளிப் பாதையை விட்டுச் செல்கின்றன. பெரிய விண்கற்கள் பிரகாசமான பாதைகளை உருவாக்கும். சில நேரங்களில் விண்கற்கள் வீனஸ் கோளை விட பிரகாசமாக தோன்றலாம் - இவை ஃபயர்பால்கள் (fireball) என்று அழைக்கப்படுகின்றன. ஹாலியின் தூசி மற்றும் சிறு கற்களால் உருவாக்கப்படும் இரண்டு விண்கல் மழைகளில் ஓரியானிட்ஸ் ஒன்றாகும். மற்றொன்று ஈட்டா அகுவாரிட்ஸ் விண்கல் மழை ஆகும். இது ஆண்டின் முற்பகுதியில், மே மாதத்தில் தோன்றும். ஓரியானிட்ஸ் எங்கே, எவ்வளவு தெரியும்? ரேடியன்ட் என்பது வானில் விண்கற்கள் தோன்றுவதாகத் தெரியும் புள்ளி. ஓரியானிட்ஸுக்கு இது ஓரியன் விண்மீன் குழுமமாகும். ஓரியன் நள்ளிரவுக்குப் பிறகு கிழக்கில் உதிக்கிறது, இது சிவப்பு நிற பீட்டல்ஜியூஸ் நட்சத்திரத்திற்கு அருகே தோன்றும். ஓரியனைக் கண்டுபிடிக்க, ஓரியன்ஸ் பெல்ட் என்று அழைக்கப்படும், நெருக்கமாக அமைந்த மூன்று பிரகாசமான நட்சத்திரங்களின் வரிசையைத் தேடுங்கள். காட்சியின் தரம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் எத்தனை விண்கற்கள் தெரியும் என்பதன் மூலம் அளவிடப்படுகிறது - இது ஜெனித்தல் மணிநேர விகிதம் (zenithal hourly rate) என்று அழைக்கப்படுகிறது. அக்டோபர் 22 அன்று ஓரியானிட்ஸின் உச்சத்தின்போது மணிக்கு சுமார் 15 விண்கற்கள் 148,000 மைல் (238,000 கிமீ/மணி) வேகத்தில் பயணிக்கலாம். பட மூலாதாரம், VCG via Getty Images ஓரியானிட் விண்கல் மழையை எப்போது காண முடியும்? ஓரியானிட்ஸ் விண்கல் மழை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் ஏற்படக்கூடும். நாசாவின் கூற்றுப்படி, விண்கற்களைக் காண சிறந்த வாய்ப்பு அக்டோபர் 22 இரவு, அக்டோபர் 23 அதிகாலை வரை ஆகும். இரவு வானில் பிரகாசமான நட்சத்திரங்களின் பின்னணியில் இதைப் பார்க்க முடியும். பட மூலாதாரம், CFOTO ஓரியானிட் விண்கல் மழையை எப்படிப் பார்ப்பது? நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், முடிந்தவரை குறைந்த ஒளி கொண்ட இருண்ட இடத்தைக் கண்டுபிடிப்பது. நகரங்கள் மற்றும் தெரு விளக்குகளிலிருந்து விலகிய பகுதியைக் கண்டுபிடிக்கும்படி நாசா அறிவுறுத்துகிறது - மேலும் வானிலைக்கு ஏற்பவும் சரியான இடம் வேண்டும். "இருளில் 30 நிமிடங்களுக்குள், உங்கள் கண்கள் பழகிவிடும், நீங்கள் விண்கற்களைப் பார்க்கத் தொடங்குவீர்கள்" என்று நாசா கூறுகிறது. பின்னர், நீங்கள் வடக்கு அரைக்கோளத்தில் இருந்தால் தென்கிழக்கு வானத்தையும், தெற்கு அரைக்கோளத்தில் இருந்தால் வடகிழக்கு வானத்தையும் பாருங்கள். இந்தியா தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. இந்த விண்கல் பொழிவை பார்க்க தொலைநோக்கி தேவையில்லை - சூழ்நிலைகள் சரியாக இருந்தால், வெறும் கண்களால் பார்க்க முடியும். தீபாவளிப் பட்டாசுகள் அலங்கரித்த வானத்தை, விரைவில் ஓரியானிட்ஸ் ஆண்டு காட்சியின் உச்சம் அலங்கரிக்க உள்ளது. வானம் தெளிவாக இருக்குமா? வானில் அதிகமாக மேகங்கள் இருக்கும் போதும், மழைப்பொழி காலத்திலும் விண்கல் பொழிவை பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். மூடுபனி, பிரகாசமான கால நிலைகளுடன் இந்த விண்கல் பார்ப்பது சிரமமாகும். வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/clyz56zmp40o

இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

2 months 1 week ago
21 Oct, 2025 | 03:16 PM இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் போலி பதிவுகள் பரவி வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெயரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன. இஷாரா செவ்வந்தி குறித்த பல கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வுருகின்றன. இதன் மத்தியில் கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பயன்படுத்திய தேர்தல் சுவரொட்டிகளில் இஷாரா செவ்வந்தியின் படத்தை பயன்படுத்தி இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் போலி பதிவுகள் பரவி வருகின்றன. குற்றச் செயல்களுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான போலி தகவல்களை பரப்பும் சமூக ஊடக கணக்குகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து சி.ஐ.டிக்கு முறைப்பாடு! | Virakesari.lk

இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

2 months 1 week ago

21 Oct, 2025 | 03:16 PM

image

இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ இது தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் போலி பதிவுகள் பரவி வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெயரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன.

இஷாரா செவ்வந்தி குறித்த பல கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வுருகின்றன. 

இதன் மத்தியில் கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பயன்படுத்திய தேர்தல் சுவரொட்டிகளில் இஷாரா செவ்வந்தியின் படத்தை பயன்படுத்தி இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் போலி பதிவுகள் பரவி வருகின்றன.

குற்றச் செயல்களுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான போலி தகவல்களை பரப்பும் சமூக ஊடக கணக்குகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து சி.ஐ.டிக்கு முறைப்பாடு! | Virakesari.lk

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38வது நினைவுதினம்

2 months 1 week ago
யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை - வைத்தியசாலைக்கு முன் நினைவேந்தல் அனுஷ்டிப்பு 21 Oct, 2025 | 03:31 PM இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38வது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியசாலையில் கடமையாற்றிய 21 பணியாளர்கள் உட்பட 68 பேரை சுட்டுப் படுகொலை செய்ததோடு, இந்த தாக்குதலில் பலரும் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 38ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர். இந்த நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி, நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/228274

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38வது நினைவுதினம்

2 months 1 week ago

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை - வைத்தியசாலைக்கு முன் நினைவேந்தல் அனுஷ்டிப்பு 

21 Oct, 2025 | 03:31 PM

image

இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38வது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, வைத்தியசாலையில் கடமையாற்றிய 21 பணியாளர்கள் உட்பட 68 பேரை சுட்டுப் படுகொலை செய்ததோடு, இந்த தாக்குதலில் பலரும் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 38ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நடைபெற்றது. 

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நினைவேந்தலின்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி, நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. 

VID-20251021-WA0037.jpg

VID-20251021-WA0037_2_.jpg

VID-20251021-WA0035.jpg

VID-20251021-WA0039.jpg

https://www.virakesari.lk/article/228274

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது - தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?

2 months 1 week ago

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழ்நாடு, கனமழை வானிலை

பட மூலாதாரம், IMD website

படக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதை காட்டும் வரைபடம் (இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் இருந்து)

21 அக்டோபர் 2025, 03:56 GMT

புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்

வங்கக் கடலில் இன்று (அக்டோபர் 21) காலை 5.30 மணிக்கு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும். நாளை (அக்டோபர் 22) மதியம் வேளைக்குள் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின், மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா, "வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவாகுமா என்பது நாளை (அக்டோபர் 22) தெரியும்" என கூறியுள்ளார்.

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழ்நாடு, கனமழை வானிலை

படக்குறிப்பு, வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா

"கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியில் 17 செ.மீ கனமழை பெய்துள்ளது. தமிழ்நாட்டின் 22 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது" என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்துப் பேசிய அமுதா, "அக்டோபர் 21 மற்றும் 22, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல 23ஆம் தேதி, தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 24 முதல் 27 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழை பெய்யும்." என்று கூறினார்.

இன்று காலை முதல் நாளை காலை வரை, தமிழ்நாட்டின் 8 கடலோர மாவட்டங்கள் (விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம்) மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.

மேலும், 10 மாவட்டங்களில் மிக கனமழை, 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அமுதா கூறினார்.

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா அறிவுறுத்தினார்.

எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?

வங்கக் கடலில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, 20 செ.மீக்கு அதிகமான அதிகனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 21

ரெட் அலெர்ட் : கடலூர் மாவட்டத்துக்கு மட்டும் அதிகனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலெர்ட் : சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை ( 11.5 செ.மீ முதல் 20.4 செ.மீ அளவிலான மழை) பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 22

ரெட் அலெர்ட் : செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலெர்ட் : சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர பிற மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

அக்டோபர் 23

ரெட் அலெர்ட் : எந்த மாவட்டத்துக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்படவில்லை.

ஆரஞ்ச் : சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர பிற மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

(கனமழை என்பது 6.4 செ.மீ முதல் 11.5 செ.மீ அளவிலான மழை அளவை குறிக்கும். மிக கனமழை என்பது 11.5 செ.மீ முதல் 20 செ.மீ வரையிலான மழை அளவை குறிக்கும். அதிகனமழை என்பது 20 செ.மீக்கு அதிகமான மழைப்பொழிவைக் குறிக்கும்.)

சென்னைக்கு மாலை 4 மணி வரை ரெட் அலெர்ட்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் ஒரு மணி நேரத்தில் 15 மி.மீக்கு அதிகமான மழை இடி மின்னலுடன் பெய்யக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் தரைக் காற்று மணிக்கு 62கி.மீ முதல் 87 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை 5 மி.மீ முதல் 15 மி.மீ அளவிலான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 41 கி.மீ முதல் 61 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

அரியலூர், கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, குமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழ்நாடு, கனமழை வானிலை

பட மூலாதாரம், IMD website

படக்குறிப்பு, மாவட்ட வாரியாக மழை எச்சரிக்கையை குறிக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய வரைபடம். (மஞ்சள் - மிதமான மழை, ஆரஞ்சு - மிக கனமழை)

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை - வீடுகளை சூழ்ந்த மழைநீர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், அச்சுந்தன்வயல், பரமக்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழையால் மண்டபத்தை அடுத்துள்ள கலைஞர் நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தங்கச்சிமடத்தில் ஒரே நாளில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழ்நாடு, கனமழை வானிலை

படக்குறிப்பு, மண்டபத்தை அடுத்துள்ள கலைஞர் நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

பாலாற்றில் வெள்ளம் - மக்களுக்கு எச்சரிக்கை

ஆந்திரா மாநிலம் பெரும்பள்ளம் என்ற இடத்தில் 22 அடி உயர தடுப்பணை நிரம்பி அதன் உபரி நீர் பாலாற்றில் வெளியேறி வருகிறது. தமிழகத்தில் புல்லூர், திம்மம்ப்பேட்டை, ஆவாரங்குப்பம், இராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக பாலாறு சுமார் 222 கிலோமீட்டர் பயணம் செய்து இறுதியாக வங்கக் கடலில் கலக்கின்றது.

வெள்ளப்பெருக்கு காரணமாக பாலாற்றில் யாரும் இறங்குவோ, குளிக்கவோ கூடாது என்று திருப்பத்தூமாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மேலும் அதிக மழை பெய்தால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தினர் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 101.36 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே அணையின் நீர் மட்டம் விரைவில் 102 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கன அடி வரை திறந்துவிடப்படலாம் என்றும் அப்படி திறந்துவிடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgkmyz0897o

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது - தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?

2 months 1 week ago
பட மூலாதாரம், IMD website படக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதை காட்டும் வரைபடம் (இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் இருந்து) 21 அக்டோபர் 2025, 03:56 GMT புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் வங்கக் கடலில் இன்று (அக்டோபர் 21) காலை 5.30 மணிக்கு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும். நாளை (அக்டோபர் 22) மதியம் வேளைக்குள் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின், மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும். இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா, "வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவாகுமா என்பது நாளை (அக்டோபர் 22) தெரியும்" என கூறியுள்ளார். தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை படக்குறிப்பு, வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா "கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியில் 17 செ.மீ கனமழை பெய்துள்ளது. தமிழ்நாட்டின் 22 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது" என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்துப் பேசிய அமுதா, "அக்டோபர் 21 மற்றும் 22, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல 23ஆம் தேதி, தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 24 முதல் 27 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழை பெய்யும்." என்று கூறினார். இன்று காலை முதல் நாளை காலை வரை, தமிழ்நாட்டின் 8 கடலோர மாவட்டங்கள் (விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம்) மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்றும் அவர் கூறினார். மேலும், 10 மாவட்டங்களில் மிக கனமழை, 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அமுதா கூறினார். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா அறிவுறுத்தினார். எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்? வங்கக் கடலில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, 20 செ.மீக்கு அதிகமான அதிகனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21 ரெட் அலெர்ட் : கடலூர் மாவட்டத்துக்கு மட்டும் அதிகனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆரஞ்ச் அலெர்ட் : சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை ( 11.5 செ.மீ முதல் 20.4 செ.மீ அளவிலான மழை) பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 22 ரெட் அலெர்ட் : செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்ச் அலெர்ட் : சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர பிற மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அக்டோபர் 23 ரெட் அலெர்ட் : எந்த மாவட்டத்துக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்படவில்லை. ஆரஞ்ச் : சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பிற மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. (கனமழை என்பது 6.4 செ.மீ முதல் 11.5 செ.மீ அளவிலான மழை அளவை குறிக்கும். மிக கனமழை என்பது 11.5 செ.மீ முதல் 20 செ.மீ வரையிலான மழை அளவை குறிக்கும். அதிகனமழை என்பது 20 செ.மீக்கு அதிகமான மழைப்பொழிவைக் குறிக்கும்.) சென்னைக்கு மாலை 4 மணி வரை ரெட் அலெர்ட் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு மணி நேரத்தில் 15 மி.மீக்கு அதிகமான மழை இடி மின்னலுடன் பெய்யக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் தரைக் காற்று மணிக்கு 62கி.மீ முதல் 87 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை 5 மி.மீ முதல் 15 மி.மீ அளவிலான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 41 கி.மீ முதல் 61 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். அரியலூர், கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, குமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், IMD website படக்குறிப்பு, மாவட்ட வாரியாக மழை எச்சரிக்கையை குறிக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய வரைபடம். (மஞ்சள் - மிதமான மழை, ஆரஞ்சு - மிக கனமழை) ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை - வீடுகளை சூழ்ந்த மழைநீர் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், அச்சுந்தன்வயல், பரமக்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மண்டபத்தை அடுத்துள்ள கலைஞர் நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தங்கச்சிமடத்தில் ஒரே நாளில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. படக்குறிப்பு, மண்டபத்தை அடுத்துள்ள கலைஞர் நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. பாலாற்றில் வெள்ளம் - மக்களுக்கு எச்சரிக்கை ஆந்திரா மாநிலம் பெரும்பள்ளம் என்ற இடத்தில் 22 அடி உயர தடுப்பணை நிரம்பி அதன் உபரி நீர் பாலாற்றில் வெளியேறி வருகிறது. தமிழகத்தில் புல்லூர், திம்மம்ப்பேட்டை, ஆவாரங்குப்பம், இராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக பாலாறு சுமார் 222 கிலோமீட்டர் பயணம் செய்து இறுதியாக வங்கக் கடலில் கலக்கின்றது. வெள்ளப்பெருக்கு காரணமாக பாலாற்றில் யாரும் இறங்குவோ, குளிக்கவோ கூடாது என்று திருப்பத்தூமாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மேலும் அதிக மழை பெய்தால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தினர் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். வெள்ள அபாய எச்சரிக்கை பவானி சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 101.36 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே அணையின் நீர் மட்டம் விரைவில் 102 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கன அடி வரை திறந்துவிடப்படலாம் என்றும் அப்படி திறந்துவிடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgkmyz0897o

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் தெரிவு!

2 months 1 week ago
ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தமது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றியைத் தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே சனே டகாய்ச்சி பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கீழவையில் மொத்தம் உள்ள 465 வாக்குகளில் 237 வாக்குகளைப் பெற்று டகாய்ச்சி வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் மேலவையில் நடத்தப்படும் வாக்கெடுப்பிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் ஜப்பானின் புதிய பிரதமராக ஏற்றுக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஜப்பான் நாட்டின் 104வது பிரதமராக அவர் பதவி ஏற்க இருக்கிறார். இதன் மூலம் ஜப்பான் அரசியல் வரலாற்றில் பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும், பெருமையையும் சனே டகாய்ச்சி பெறுகிறார். ஜப்பானின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் டகாய்ச்சி, மறைந்த இரும்பு சீமாட்டி என அறியப்படும் பிரித்தானிய பிரதமர் மார்க்ரட் தட்சரின் அரசியல் ரசிகையாக கருதப்படுகின்றார் https://adaderanatamil.lk/news/cmh04iayb014gqplpa9n04kv7

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் தெரிவு!

2 months 1 week ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தமது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.

அதன் பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெற்றியைத் தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து, அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே சனே டகாய்ச்சி பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கீழவையில் மொத்தம் உள்ள 465 வாக்குகளில் 237 வாக்குகளைப் பெற்று டகாய்ச்சி வெற்றி பெற்றார்.

இதையடுத்து, அவர் மேலவையில் நடத்தப்படும் வாக்கெடுப்பிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் ஜப்பானின் புதிய பிரதமராக ஏற்றுக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் ஜப்பான் நாட்டின் 104வது பிரதமராக அவர் பதவி ஏற்க இருக்கிறார்.

இதன் மூலம் ஜப்பான் அரசியல் வரலாற்றில் பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும், பெருமையையும் சனே டகாய்ச்சி பெறுகிறார்.

ஜப்பானின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் டகாய்ச்சி, மறைந்த இரும்பு சீமாட்டி என அறியப்படும் பிரித்தானிய பிரதமர் மார்க்ரட் தட்சரின் அரசியல் ரசிகையாக கருதப்படுகின்றார்

https://adaderanatamil.lk/news/cmh04iayb014gqplpa9n04kv7

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

2 months 1 week ago
அருச்சுனா மன்னாரில் இருந்து கூட்டிவந்த தங்கமும்… இந்த தங்கமும் ஒண்டா 😂 ஒரு விடயம் நான் சந்தித்த, பேசிய, இவ்வாறு வெளியேற்ற பட்ட ஒவ்வொருவரும் தாம் மிக சொற்ப பணத்தை மட்டுமே எடுத்து சொல்ல அனுமதிக்கபட்டதாக கூறுகிறார்கள். அப்படியாயின் அவர்கள் எல்லாரும் கூட்டமாக பொய் சொல்கிறார்களா? ஆனால் அவர்களின் பாதுகாப்பு கருதி அனுப்பி வைத்தோம் என்கிறனர் யாழ்கள அண்ணைமார். அதே சமயம் புலி போராளிகள் முஸ்லிம்களிடம் தாமாகவே உடமைகளை பறித்து கொள்ளும் அளவுக்கு காவாலிகள் இல்லை. இப்படி நடந்தால் அது தலைமை சொல்லியே நடந்திருக்கும். உண்மையில் என்ன நடந்தது ?