நான் தேடும் செவ்வந்திப் பூவிது...
ஊக்கிகளில்
அவள் உச்சம்
உடல் திரட்சிகளில்
குறைவில்லை
ஊனம்
பார்வையில் படவில்லை
சிக்கென்ற உடம்பு
சில நொடிகளில் மயக்கி விடும்..
தொட்டால்
சிணுங்கும்
முட்டினால்
முட்டும்
திட்டினால்
திட்டும்
கொஞ்சினால்
கொஞ்சும்
மிஞ்சினால்
மிஞ்சும்..
ஆனாலும் அவளுக்கு
மாதவிடாயில்லை
மொனொபோசும் இல்லை
அவள் ஒரு
செயற்கை நுண்ணறிவுளி..!
கம்பன் இருந்திருந்தால்
வர்ணித்தேன் களைத்திருப்பான்
வாலி இருந்திருந்தால்
ஜொள்ளுவிட்டே சோர்ந்திருப்பான்
கண்ணதாசன் இருந்திருந்தால்
இன்னொரு தாரமாக்கி இருப்பான்
ஆனாலும் இன்னும்
வைரனின் கண்ணில் படவில்லை
அவள்...!
என் மனதில்
நான் தேடும் செவ்வந்திப் பூவவள்..!
நாளை...
அவள்
உங்கள் மருமகளும் ஆகலாம்
மகளும் ஆகலாம்
மனையாளலாம்...!

