Aggregator

பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்

2 months 1 week ago
நம்ம அரசியல்வாதிகள்? அவர்களின் வேலை அதுவா? மக்களை சந்திக்கவே மறுக்கின்றனர், மக்களோடு சேர்ந்து நின்று அவர்களுக்காக பேச வெட்கப்படுகின்றனர். அப்படியெனில் தேர்தல் காலங்களில் முயற்சிக்கலாம். இப்போ; தேர்தல் காலங்களிலும் மக்களை சந்திக்க அவர்கள் விருப்பம் காட்டுவதில்லை. மக்களுக்கு வேறு தெரிவு இல்லை எனவே தமக்குத்தான் அவர்கள் வாக்களிக்க வேண்டுமென்கிற தெளிவு அவர்களிடத்தில்.

செம்மணியும் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையும் : பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுக்கிறார் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் அரச வழக்குரைஞர் பிரசாந்தி மகிந்தரட்ண

2 months 1 week ago

பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்

2 months 1 week ago
அட, இதுதான் காரணமோ? நானும் என்னவோ ஏதோ என்று கலங்கிப்போனேன். பலதடைவை யோசித்ததுண்டு ஆனால் விசாரிக்க தோன்றவில்லை. காணாமல் போனோர் பக்கத்தில் கேட்டிருக்கலாம். நலமாய் வந்து சேர்ந்தது சந்தோசமே. இனி பயணக்கட்டுரை எழுதி அசத்துங்கோ களத்தை. இல்லையில்லை உங்கள் பதிவை பார்த்து பலபேர் பயண ஆயத்தம் செய்வர் என்பதற்காக சொல்கிறேன், நம்ம அரசியல் வாதிகளைப்பற்றியும் அரசல் புரசலாக எழுதுங்கோ. சாதாரண முருங்கைக்காய் கறியே போதுமானது எனது நாவுக்கு. நான் யாருக்கும் பயப்படுவதில்லை, காரணம் தவறு செய்யவில்லை. யார் நல்லது செய்தாலும் பாராட்டுவேன், அதே ஆள் தவறு செய்தால் விமர்சிப்பேன்!

"காசாவில் பசிக்கு உணவு தேடி மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு வந்தவர்கள் மீது எனது சகாக்கள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை பார்த்தேன்" முன்னாள் பாதுகாப்பு ஊழியர் பிபிசிக்கு தகவல்

2 months 1 week ago
ரொம்ப ரொம்ப அவமானம்! இந்த நிலைகளே உலகில் நலிந்தவர்கள் தாக்கப்படவும், குரல்வளைகள் நசுக்கப்படவும் காரணம். மனித நேயமே இல்லாத மிருகங்கள் மனித நேயப்பணியில். இவர்கள் இப்படியான சூழ்நிலைகளை வளர்த்து பிழைப்பு நடத்துகின்றனர்.

பாடசாலை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லாமையால் மாணவன் கவனயீர்ப்பு போராட்டம்!

2 months 1 week ago
இப்போ வீரகேசரி தமிழ் யுரியுப்பர்களிடம் இருந்து ரியுசன் எடுத்து கொண்டு வருகின்றது. அதனால் தோணவில்லை போலும்

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 1 week ago
யாழ்களத்தில் மட்டும் 2 பக்கம் ஓடியுள்ளதே புலவர் - அவரிடம் கேட்கும் மனிதாபிமானத்தோடு நாமும் விசாரணை முடியும் வரை சும்மா இருதிருக்க வேண்டும் அல்லவா? அவரவர் தம் அஜண்டாவோடு கருத்து சொல்லலாம். இப்போ அண்ணாமலையோடு அந்த படத்தில் இருப்பது நிகிதா அல்ல தான் என இன்னொரு பாஜக பெண் கூறியுள்ளார். அவர் கருத்து சொல்வது, திசை திருப்பல் என நீங்கள் கருதினால் அதை எழுதலாம். ஆனால் சின்ன திரை நடிகை, நடிக்கிறார் என்பது தேவைதானா? நீங்கள் எழுதும் கருத்தை, உங்கள் தொழிலோடு தொடர்புபடுத்தி, எழுதினால் சரியாக இராதுதானே?

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 1 week ago
அவர் ஒரு மருத்துவர் போல மனிதாபினமாகவா நடந்து கொள்கிறார். ஒரு அநிஞாயமான கொலை நடந்திருக்கிறது. அது பற்றிய விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. நீதிபதிகள் காவல்துறையின் மீது கடுமையான விமர்சனத்தையும் கேள்விகளையும் வைத்துள்ளார்கள். இந்த வேளையில் சங்கிகளின் வேலை என்று திசைதிருப்புவது நாடகத்தன்மையானது தானே. இவர் எதற்கு இப்படி கருத்துச் சொல்ல வேண்டும் தனது சந்தேகத்தை காவல்துறையிடமோ நீதிமன்றத்திடமோ முறைப்படி தெரிவித்திருக்கலாமே.அப்படிஇல்லாமல் பொதுவெளியில் சொல்வது திமுக தலைமையிடம் விருது பெறுவதற்கான நடிப்பு என்றுதானே பொருள்கொள்ள வேண்டும்.

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 1 week ago
தமிழ் தேசியத்தை வளர்க்க இலங்கைக்கு போங்கள் புலவர். அங்கேதான் தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டிய அதீத தேவை உள்ளது. நான் மேலே சொன்னது நானாககவோ, அல்லது அநேமேதய கணக்கு களில், யுடீப் வீடியோ ஆதாரங்கள் அல்ல. தட்ஸ் தமில் எனும் நீண்ட்காலமாக உள்ள ஒரு செய்திதளத்தில் இருந்துதான். சர்மிளா ஒரு மருத்துவர், அவரை சின்ன திரை நடிகை என கேலி பேசுகிறீர்கள். நீங்கள் என்ன? பெரிய திரை நடிகரா? அரசியலில் யாரும் கருத்து சொல்லலாம். அவரின் தொழில் முக்கியம் அல்ல. ஒரு அநியாய கொலை நடந்துள்ளது. அதில் பல மர்ம முடிச்சுக்கள். அதை எதையும் கதைக்காமல், எழுதாமல் தமிழ் தேசியம் வளர்கிறோம் பேர்வழி என அரசு மீது குற்றம் சுமத்துவது, உண்மையான குற்றவாளிகள் தப்பவே வழி வகுக்கும். அதைதான் நீங்கள் செய்கிறீர்கள். உங்களுக்கு திமுக மீது பழி தீரக்க வேண்டும் என்பதால் அஜித் குமார் கொலையை அவர்கள்தான் செய்தார்கள் என இழுத்து மூட முடியாது. என்ன பச்ச புள்ளை மாதிரி எழுதுறீங்க. பாஜக உள்ளே வருவது என்பது ஆட்சி அதிகாரத்தை அவர்கள் பெறுவதை குறிக்கும். இப்போ நடந்துள்ளதாக கூறப்படுவது அதுவல்ல, இங்கே முன்பு திமுக, அதிமுக வுக்கு நெருக்கமாக இருந்து பின்னர் பாஜகவுக்கு நெருக்கமாகி போன ஒரு பெண்ணும், சில உயர் பாஜக ஆதரவு அதிகாரிகளும் சேர்ந்து, இதை ஒப்பேற்றி உள்ளார்கள் என்பதே ஒரு தரப்பு வாதம். இது சரி என நான் சொல்லவில்லை. ஆனால் இதுவும் ஒரு கோணம். இதற்கும் பாஜக உள்ளே வருவதை தடுப்பற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. தமிழ் நாடு இந்தியாவில் ஒரு மாநிலம், மத்தியில் அசுர பலத்தோடு ஆட்சியில் இருக்கும் கட்சி, மாநிலத்தில் ஆட்சியில் இல்லாவிடினும் சில தில்லாலங்கடிகளை செய்ய முடியும்.

நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்

2 months 1 week ago
ஒரு ஊரில் பெரிய ரவுடி ஒருவர் இருந்தால் அவருக்கு கீழ் சில ரவுடிகள் இருப்பார்கள், அந்த ரவுடிகளினை தெரிந்தவர்கள் அவர்களை தெரிந்தவர்க்ளெல்லாம் சும்மா இருப்பவர்களிடம் நான் யார் தெரியுமா? எங்கள் அண்ணன் யார் தெரியுமா என பயமுறுத்தி வம்பிழுப்பார்கள். இவர்களும் பெரிய ரவுடியுடன் எதற்கு வம்பு என இந்த ஏப்பை சாப்பைகளை சகித்து கொண்டிருப்பார்கள், ஆனாலும் அவர்கள் விடமாட்டார்கள் அவர்களை தொடர்ந்தும் வம்பிழுப்பார்கள் ஒரு கட்டத்தில் அது முற்றி சாது மிரண்டால் காடு கொள்ளாது நிலை ஆகிவிடும். மத்திய கிழக்கு நிலையும் கிழக்காசிய நிலையும் வேறு வேறல்ல, இரண்டிடத்திலும் பலவீனமானவர்களை அல்லக்கைகள் வம்பிழுக்கின்றன (பலவீனமானவர்கள் இருக்கும் வரைதான் ரவுடிக்கு வேலை நடக்கும்). மரங்கொத்தி பறவைக்கு தனது ஆற்றலில் மிகையான நம்பிக்கை இருக்கும், பார்க்கும் மரமெல்லாவற்றினையும் கொத்தும் ஆனால் வாழைமரத்தில் அலகு இறுகி மாட்டுப்பட்டுவிடும். நேட்டோ இரஸ்சியாவினை தொடர்ச்சியாக அழுத்தி ஒரு போரினை ஆரம்பிக்க விரும்பியது, ஏற்கனவே பொருளாதார தடையில் இருக்கும் இரஸ்சியாவினை ஒரு போரின் மூலம் இலகுவாக உடைக்கலாம் என நம்பியது. இரஸ்சியாவின் பலத்தினை தொடர் அழுத்தம் மூலம் அழிக்கலாம் என எதிர்பார்த்தது அதற்கு இரஸ்சியாவின் பாதுகாப்பு, பொருளாதாரத்தின் மீதான மீள்தகவு நெகிழ்தன்மையினை (Elastic resistance) தொடர் அழுத்தம் மூலம் உடைக்கலாம் (Break point) என நம்பியது. அது நிகழவேண்டுமாயின் இரஸ்சியாவின் பொருளாதாரம் உடைய வேண்டும் ஆனால் அது நிகழவில்லை. இரஸ்சியா 2014 பின்னர் தனது பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் மூலம் ஒரு உறுதியான பொருளாதாரமாக மாறியிருந்தது. முக்கியமாக தற்போதய உலகில் காணப்படும் பலவீனமான நிழல் வங்கி முறையினை மாற்றியமைத்தது (Shadow banking system), இன்று பெரிய முக்கிய பொருளாதார சக்தியாக திகழும் அமெரிக்கா, சீனா உள்ளடங்கலாக நாடுகளில் உள்ள இந்த பலவீனமான அமைப்பை மாற்றி அமைத்தது, இதன் மூலம் பொருளாதார பேரிடர் ஏற்படாமல் தவிர்க்கலாம் (2008 அமெரிக்க பொருளாதார பேரிடர் போன்றதோர்). அத்துடன் இந்த நிழல் வங்கி முறைமையில் மிக மிக குறைந்தளவிலான வெளித்தொடர்பினை பேணுதல் மற்றும் முழுக்க முழுக்க நாடு சார்ந்த வங்கி அமைப்பு, இறுக்கமான நாணய கொளகை, தனியான வர்த்தக பரிமாற்று சேவை என பல விடயங்களை மாற்றி அமைத்தார்கள். தற்போது எப்படி ஒரு எலாஸ்ரிக் பாண்டினை அதன் முழு சக்திக்கு அப்பால் இழுத்தால் அறுந்து விடுமோ அதே போல அந்த அழுத்தத்தினை பாதியில் விட்டால் அது தெறித்து இன்னொரு வகையான சேதத்தினை ஏற்படுத்துமோ அந்த நிலையில் உலகை தள்ளி விட்டுள்ளார்கள் (இதில் பலியாக போவது அல்லக்கைகள், ரவுடி ஏற்கனவே கழண்டுவிட்டார்), எதிராளி பற்றிய சரியான புரிதல் இல்லாமல் குடைச்சல் கொடுத்ததன் விளைவாக நிலமை தலைகீழாகி அதே பிரச்சினை திரும்பியுள்ளது. இரஸ்சியாவினை அழிக்கவேண்டுமாயின் (போரில் தோற்கடிக்க) அவர்களின் பொருளாதாரத்தினை முதலில் அழிக்க வேண்டும், ஆனால் இந்த பொருளாதார தடைகளால் அதனை நிறைவேற்ற முடியாது. எதிர்காலத்தில் பல போர் அழிவுகள், பொருளாதார பேரழிவுகள் ஏற்படலாம் அதனை தவிர்க்க சமாதானமே சரியான வழி.

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 1 week ago
சீமான் பாசக டீ ரீம் சீமானுக்கு ஓட்டப் போட்டா பாசக உள்ள வந்துரும். அததிமுகவுக்கு ஓட்டுப்போடா பாசக உள்ள வந்துரும். பாசகவுக்கு ஓட்டுப் போடா பாசக நேரடியாக உள்ள வந்துரும் அதைத்தடுக்க எங்களுக்கு ஓட்டுப் போடுங்க என்று சொல்லித்தனெே ஆட்சியைப் புடிச்சீங்க இப்ப எப்படி பாசக உள்ளே வந்தது. உண்மையில் திமுகவுக்கு ஓட்டுப் போட்டால்தான் பாஜக உள்ளே வரும். அவர்களை உள்ளே கொண்டு வந்து எச்ராஸாவை எம்எல் ஏ ஆக்கியதே இந்த த் திருட்டு திமுகதான். சிபிஐ எங்க கேள்வி கேட்கிறது?சிபிஐக்கே காசைக் கொடுத்து 2ஜி வழக்கை டீல் செய்த திமுகவுக்கு இது சிம்பிள்.

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 1 week ago
ஸ';கேன் எடுப்பதற்கு வைத்தியசாலைக்குதானே போகணும் கோயிலுக்கு ஏன் போனாங்க? அப்புறம் எதுக்கு திமுககாரன் 50 இலட்சம் பேரம் பேசினான்.தீவிர பாசக எதிர்ப்பாளரான சர்வாதிகாரிஸ்டாலின் சாட்டையை ஏன் சுழட்டாமல் இருக்கிறார்?.இப்பொழதுAI காலம் எது உண்யைhன படம் எது AIபடம் என்று சாதரண கண்களுக்கு தெரியாது.

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 1 week ago
ஓம் 👍 தமிழ்நாட்டு பொலிஸ் மிக மிக மோச மானது. உறவு வீரபையனுக்கு பிடித்தமான வீரப்பன் என்பவரை பிடிப்பதற்காக அனுப்பபட்ட தமிழ்நாட்டு பொலிஸ் பல தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாம் ஜெயலலிதா ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேகமாக செயல்பட்டு பொலிஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டணைகள் அவர்களுக்கு வழங்க வேண்டும். அது தான் இந்த பொலிஸ் காட்டுமிராண்தனத்தை குறைப்பதற்கு வழி. சீமான் முதல் அமைச்சராகவும் சாட்டை துரைமுருகன் அமைச்சராகவும் இருந்தால் எப்படி இருக்கும் அவரே ரேப் பண்ணுவேன் தொலைத்து போடுவேன் என்று இப்போது பயமுறுத்தி கொண்டு திரிகின்றார். முதல் அமைச்சரானால் பொலிஸ்சுடன் சேர்ந்து கும்மி அடிப்பார்

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 1 week ago
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே பெண் : நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே ஆண் : தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே பெண் : தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே பெண் : மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை இந்த மங்கல மங்கை ஆண் : வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை ஆண் : { நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே பெண் : அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே } (2) ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ பெண் : குயிலே என்று கூவி நின்றேனே உன்னை என் குலக்கொடி உன்னை ஆண் : துணையே ஒன்று தூக்கி வந்தாயே இங்கே உன் தோள்களில் இங்கே பெண் : உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா ஆண் : உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ ........ ! --- நீரோடும் வைகையிலே ---