Aggregator

கைது செய்யப்பட்ட கே.பி.யுடன் தனித்து உரையாடிய கோத்தா!

2 months ago
கைது செய்யப்பட்ட கே.பி.யுடன் தனித்து உரையாடிய கோத்தா! பொன்சேகா வெளியிடும் தகவல்கள் மலேசியாப் பொலிஸாரே கே.பி.யைக் கைது செய்தனர். இலங்கைக்கு கொண்டுவரப்படும் வரை அவர் கே.பி என்பது எமக்குத் தெரியாது என்று முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்ச கே.பி.யை வீட்டுக்கு வரவழைத்தே உரையாடினார். அவர் வசம் இருந்த புலிகளின் பணம், கப்பல்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு ராஜபக்சக்களும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர்மேலும் தெரிவிக்கையில், கே.பி.யை மலேசியப் பொலிஸாரே கைது செய்தனர். அது பற்றி நாம் அறிந்திருக்கவில்லை. இலங்கையால் தேடப்படும் நபரொருவர் எம்மிடம் உள்ளார். குழுவொன்றை அனுப்பினால் ஒப்படைக்கலாம் என மலேசியாவில் இருந்து எமக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இதற்கமைய நால்வரடங்கிய சி.ஐ.டி குழு அங்கு சென்றது. அந்தக் குழுவுடன் மலேசியா வில்இருந்தும் குழுவொன்றும் வந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னரே, கைதுசெய்யப்பட்ட வர் கே.பி என்ற தகவலை அவர்கள் வெளியிட்டனர். கோத்தாபய ராஜபக்ச என்ன செய்தார்? 24 மணி நேரத்துக்குள் கே.பி.யை வீட்டுக்கு அழைத்தார். தனியாகப் பேச்சு நடத்தினார். அப்போது கே.பி. வசம்தான் புலிகளின் நிதி, கப்பல்கள் இருந்தன. ஒரு மாதத்துக்குப் பின்னர் கேபி விடுவிக்கப்பட் டார். அப்போது நான் இராணு வத்தில் இருக்கவில்லை. கே.பி வசம் இருந்த பணத்துக்கு என்ன நடந்தது? அவை அரசுடமையாக்கப்படவில்லை. கேபியுடன் இவர்கள் தான் (ராஜபக்சக்கள்) கலந்துரையாடினார்கள். என்ன நடந்தது என்பது அவர்களுக்குதான் தெரியும். எனவே, இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் என்றார். https://newuthayan.com/article/கைது_செய்யப்பட்ட_கே.பி.யுடன்_தனித்து_உரையாடிய_கோத்தா!

கைது செய்யப்பட்ட கே.பி.யுடன் தனித்து உரையாடிய கோத்தா!

2 months ago

கைது செய்யப்பட்ட கே.பி.யுடன் தனித்து உரையாடிய கோத்தா!

1696690696.jpeg

பொன்சேகா வெளியிடும் தகவல்கள்
 
மலேசியாப் பொலிஸாரே கே.பி.யைக் கைது செய்தனர். இலங்கைக்கு கொண்டுவரப்படும் வரை அவர் கே.பி என்பது எமக்குத் தெரியாது என்று முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச கே.பி.யை வீட்டுக்கு வரவழைத்தே உரையாடினார். அவர் வசம் இருந்த புலிகளின் பணம், கப்பல்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு ராஜபக்சக்களும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர்மேலும் தெரிவிக்கையில், கே.பி.யை மலேசியப் பொலிஸாரே கைது செய்தனர். அது பற்றி நாம் அறிந்திருக்கவில்லை. இலங்கையால் தேடப்படும் நபரொருவர் எம்மிடம் உள்ளார். குழுவொன்றை அனுப்பினால் ஒப்படைக்கலாம் என மலேசியாவில் இருந்து எமக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இதற்கமைய நால்வரடங்கிய சி.ஐ.டி குழு அங்கு சென்றது. அந்தக் குழுவுடன் மலேசியா வில்இருந்தும் குழுவொன்றும் வந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னரே, கைதுசெய்யப்பட்ட வர் கே.பி என்ற தகவலை அவர்கள் வெளியிட்டனர். கோத்தாபய ராஜபக்ச என்ன செய்தார்? 24 மணி நேரத்துக்குள் கே.பி.யை வீட்டுக்கு அழைத்தார். தனியாகப் பேச்சு நடத்தினார். அப்போது கே.பி. வசம்தான் புலிகளின் நிதி, கப்பல்கள் இருந்தன. ஒரு மாதத்துக்குப் பின்னர் கேபி விடுவிக்கப்பட் டார். அப்போது நான் இராணு வத்தில் இருக்கவில்லை. கே.பி வசம் இருந்த பணத்துக்கு என்ன நடந்தது? அவை அரசுடமையாக்கப்படவில்லை. கேபியுடன் இவர்கள் தான் (ராஜபக்சக்கள்) கலந்துரையாடினார்கள். என்ன நடந்தது என்பது அவர்களுக்குதான் தெரியும். எனவே, இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் என்றார்.

https://newuthayan.com/article/கைது_செய்யப்பட்ட_கே.பி.யுடன்_தனித்து_உரையாடிய_கோத்தா!

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா  அறிக்கை வெளியிட்டது!

2 months ago
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா அறிக்கை வெளியிட்டது! adminSeptember 9, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய இராச்சியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மனித உரிமைகளுக்கான பிரித்தானிய உயர் ஆணையர் எலினோர் சாண்டர்ஸ் முன்வைத்துள்ளார். இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் பயணம் செய்தமைக்கும், ஆணையர் வெளியிட்ட அறிக்கைக்கும் எலினோர் சாண்டர்ஸ் தனது அறிக்கையின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சர்வதேச தரத்தின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரித்தானியா வலியுறுத்துகிறது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தவறுவதன் மூலம் அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்த சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்தும் இந்த அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது. மோதல் தொடர்பான பாலியல் வன்முறையில் இனப் பாகுபாடு ஒழிப்புக்கான ஐ.நா அலுவலகத்தின் (ORAC) பணியை பிரித்தானியா ஊக்குவிப்பதுடன், இந்தப் பிரச்சினையை முன்னுரிமையாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்தப் பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கத்துடன் திறம்பட ஈடுபடுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரித்தானியா தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் முக்கிய குழுவும் நேற்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஐ.நா.வுக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி குமார் அய்யர் தொடர்புடைய அறிக்கையை வெளியிட்டார், மேலும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்தின் வருகைக்கும் நன்றி தெரிவித்தார். மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியவற்றிற்கான அதன் உறுதிப்பாட்டை அர்த்தமுள்ள நடவடிக்கையாக மாற்ற இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு நேற்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கியது. அமர்வில் பேசிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், நாட்டில் மனித உரிமை மீறல்களை விசாரிக்க முன்மொழியப்பட்ட எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது பொறிமுறையையும் இலங்கை நிராகரிப்பதாகக் கூறினார்.https://globaltamilnews.net/2025/220202/

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா  அறிக்கை வெளியிட்டது!

2 months ago

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா  அறிக்கை வெளியிட்டது!

adminSeptember 9, 2025

UK-Human.jpg?fit=650%2C433&ssl=1

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய இராச்சியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மனித உரிமைகளுக்கான பிரித்தானிய உயர் ஆணையர் எலினோர் சாண்டர்ஸ் முன்வைத்துள்ளார்.

இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் பயணம் செய்தமைக்கும், ஆணையர் வெளியிட்ட அறிக்கைக்கும் எலினோர் சாண்டர்ஸ் தனது அறிக்கையின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சர்வதேச தரத்தின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரித்தானியா வலியுறுத்துகிறது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தவறுவதன் மூலம் அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்த சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்தும் இந்த அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

மோதல் தொடர்பான பாலியல் வன்முறையில் இனப் பாகுபாடு ஒழிப்புக்கான ஐ.நா அலுவலகத்தின் (ORAC) பணியை பிரித்தானியா ஊக்குவிப்பதுடன், இந்தப் பிரச்சினையை முன்னுரிமையாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

இந்தப் பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கத்துடன் திறம்பட ஈடுபடுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரித்தானியா தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் முக்கிய குழுவும் நேற்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.

ஐ.நா.வுக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி குமார் அய்யர் தொடர்புடைய அறிக்கையை வெளியிட்டார், மேலும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்தின் வருகைக்கும் நன்றி தெரிவித்தார்.

மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியவற்றிற்கான அதன் உறுதிப்பாட்டை அர்த்தமுள்ள நடவடிக்கையாக மாற்ற இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு நேற்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கியது.

அமர்வில் பேசிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், நாட்டில் மனித உரிமை மீறல்களை விசாரிக்க முன்மொழியப்பட்ட எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது பொறிமுறையையும் இலங்கை நிராகரிப்பதாகக் கூறினார்.https://globaltamilnews.net/2025/220202/

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

2 months ago
அப்படி எல்லாம் இல்லை, நான் வேலை செய்யும் நிறுவனம் இதே தொழில்நுட்பத்தில் ( செயற்கை நுண்ணறிவு) புற்றுநோயிற்கான மருந்து தயாரிப்பில் உள்ள ஒரு முண்ணனி நிறுவனம் என கூறினால் அதனை பார்ப்பவர்கள் ஏதோ எனக்கு அந்த நிறுவனத்தில் வேலை செய்வதால் அது பற்றிய துறைசார் அறிவு இருக்கும் என சிந்திக்க்க தலைப்படுவர், ஆனால் உண்மையில் எனக்கு எதுவுமே தெரியாது, அப்படி சிந்திக்க்க கூடாது என்பதற்காகவே அந்த விடயத்தினை இந்த சம்பாசணையில் கொண்டுவரவில்லை. யார் கூறும் கூற்றையும் ஆராய்ந்து அறிவதுதான் சிறப்பு, கற்கால மனிதன் இயற்கை பாதுகாப்பு பொறிமுறைக்காக வேகமாக சிந்திக்கும் முறைமையுடன் கூட்ட மனப்பான்மையினையும் கொண்டிருந்தான் அது இப்போதும் தொடர்கிறது. இது ஒரு நல்ல விவாத திரியாக போகும் என எதிர்பார்த்தேன், ஆனால் ஒரு விதண்டாவாத திரியாக போவதால் இத்துடன் எனது சம்பாசணையினை நிறுத்துகிறேன்.

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

2 months ago
இந்த இரஸ்சிய ஆய்வு முடிவு முன்னோட்டமானது எனவே நான் குறிப்பிட்டதாக நினைவுள்ளது, அதன் வெற்றி நிச்சயமற்ற ஒன்றுதான் மனித ஆராய்ச்சி முடிவிலேயே தங்கியுள்ளது, பல நிறுவனங்கள் இந்த துறையில் முயற்சிக்கின்றது இதன் பரிசோதனை கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி, பராமரிப்பு வினியோகம் என்பவை மிக செலவான விடயம் ஆனால் அதனை இலவசமாக கொடுப்பதற்கு அரசுகள்தான் முன்வரவேண்டும், ஆனால் பெரும்பாலும் இந்த உற்பத்திகளை சில நேரங்களிலே அரசு செய்ய முயற்சித்தாலும் பின்னர் கைவிட்டுவிடுகிறது, காரணம் காசு, ஆனால் இரஸ்சியா இதில் முன்னோடி, பொதுவாக எந்த நல்ல விடயம் யார் செய்தாலு அதனை பாராட்டுவது ஒரு கெட்டபழக்கமாகிவிட்டது.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

2 months ago
17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம் 17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது. தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஹொங்கொங் அணியை எதிர்கொள்கிறது. செப்டம்பர் 28 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த தொடரில் 8 அணிகள் ஆசிய கிண்ணத்திற்காக போட்டியிடவுள்ளன. இலங்கை அணி எதிர்வரும் சனிக்கிழமை பங்களாதேஸ் அணிக்கு எதிராக தமது முதல் போட்டியை ஆரம்பிக்கவுள்ளது. குழு நிலை போட்டிகளில் எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவுள்ளன. திட்டமிடப்பட்ட 19 போட்டிகளில், இறுதிப் போட்டி உட்பட 11 போட்டிகள் டுபாயில் நடைபெறவுள்ளதுடன் எஞ்சிய எட்டு போட்டிகள் அபுதாபியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பியனான இந்தியா, எட்டு கிண்ணங்களை ஆசிய கிண்ண வரலாற்றில் பெற்றுள்ள அணியாகும். இலங்கை 6 தடவைகளும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் 2 தடவைகளும் கிண்ணம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmfbwx9pl00b9o29nukep9rc9

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளுங்கள் - இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல்

2 months ago
அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளுங்கள் - மாகாணசபைத்தேர்தல்களை உடன் நடத்துமாறு பேரவையில் இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல் Published By: Vishnu 09 Sep, 2025 | 03:39 AM (நா.தனுஜா) நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளல் என்பவற்றுக்கு நடவடிக்கை எடுக்குமாறு பேரவையில் இலங்கையை வலியுறுத்திய இந்தியா, சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனவும ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது. நேற்றைய தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கருத்துரைத்த இந்தியப் பிரதிநிதி, 2009 ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டைக் மீளக்கட்டியெழுப்புவதற்கும், மக்களை மீள்குடியமர்த்துவதற்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கிவந்ததாக சுட்டிக்காட்டினார். அதேபோன்று 2022 ஆம் ஆண்டு இலங்கை மிகத்தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பில் நினைவுகூர்ந்த அவர், 2024 இல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டமையும், 2025 ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமையும் இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு நல்லுறவைக் காண்பிப்பதாகக் குறிப்பிட்டார். அதேவேளை இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையுடன் தமிழ்மக்களின் அபிலாஷைகளான சமத்துவம், நீதி மற்றும் கௌரவத்தை இந்தியா எப்போதும் வலியுறுத்திவருவதாகத் தெரிவித்த அவர், நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துமாறும், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்துவதாகக் கூறினார். அத்தோடு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனவும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/224580

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளுங்கள் - இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல்

2 months ago

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளுங்கள் - மாகாணசபைத்தேர்தல்களை உடன் நடத்துமாறு பேரவையில் இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல்

Published By: Vishnu

09 Sep, 2025 | 03:39 AM

image

(நா.தனுஜா)

நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளல் என்பவற்றுக்கு நடவடிக்கை எடுக்குமாறு பேரவையில் இலங்கையை வலியுறுத்திய இந்தியா, சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனவும

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது. நேற்றைய தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கருத்துரைத்த இந்தியப் பிரதிநிதி, 2009 ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டைக் மீளக்கட்டியெழுப்புவதற்கும், மக்களை மீள்குடியமர்த்துவதற்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கிவந்ததாக சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று 2022 ஆம் ஆண்டு இலங்கை மிகத்தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பில் நினைவுகூர்ந்த அவர், 2024 இல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டமையும், 2025 ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமையும் இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு நல்லுறவைக் காண்பிப்பதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளை இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையுடன் தமிழ்மக்களின் அபிலாஷைகளான சமத்துவம், நீதி மற்றும் கௌரவத்தை இந்தியா எப்போதும் வலியுறுத்திவருவதாகத் தெரிவித்த அவர், நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துமாறும், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்துவதாகக் கூறினார்.

அத்தோடு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/224580

யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.

2 months ago
அப்படி ஒரு கோபமும் இல்லை அண்ணா இணையத்துக்கான தொடர்பு குறைவு வீட்டில் இருந்தது வரிகள் கூட கட்டணத்தையும் கூட்டி விட்டார்கள் அதனால் இணைய தொடர்பு அற்றுப்போக யாழுக்கும் எனக்குமான தொடர்பு குறைந்து போனது. இந்தளவுக்கு என்னை வளர்த்து விட்டது யாழ் அதை எப்படி மறக்க முடியும் . யாழில் இணைக்க முடியாமைக்கு அதுதான் காரணம் நீங்கள் , தமிழ் சிறி அண்ணா, குமாரசாமி அண்ணா, நிழலி, சகாரா அக்கா, நந்தன் அண்ணா, யாயினி விசுகர் , இன்னும் பலர் என எனது முகநூலில் இணைந்துள்ளதால் பார்த்து இணைப்பீர்கள் என்ற நம்பிக்கை . எந்த கோபமும் வெறுப்பும் அல்ல தற்போது நான் வேலை செய்யும் இடத்தில் இருந்துதான் இதை எழுதுகிறேன் அண்ணா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பம்

2 months ago
மனிதப்புதைகுழி அகழ்வு சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் - பேரவையில் உறுப்புநாடுகள் வலியுறுத்தல் Published By: Vishnu 09 Sep, 2025 | 01:31 AM (நா.தனுஜா) இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் எனவும், தனிநபர்களை இலக்குவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் எனவும் பிரிட்டன், நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பேரவையின் உறுப்புநாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது. நேற்றைய தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதன்படி தேசிய நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்கான உள்ளகக் கட்டமைப்புக்களின் இயலுமையையும் கட்டியெழுப்புவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்த ஜப்பான், வட-கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் பாராட்டை வெளிப்படுத்தியது. அதேபோன்று நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அறிவித்தது. அதேவேளை நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டைப் பாராட்டிய பிரிட்டன், மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தியது. அத்தோடு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களை இலக்குவைத்து ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவது குறித்தும், பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், இன்னமும் அச்சட்டம் நீக்கப்படாமை குறித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. அதேபோன்று தாம் இலங்கையின் நீண்டகால நட்புறவு நாடாகத் திகழ்வதாகத் தெரிவித்த அவுஸ்திரேலியா, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும், நிலைமாறுகால நீதியை உறுதிசெய்வதற்கும் இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டது. அத்தோடு நபர்களைத் தன்னிச்சையாகக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் எனவும், நிகழ்நிலைக்காப்புச்சட்டம் திருத்தியமைக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியது. மேலும் நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து மற்றும் மொன்டெனேக்ரோ ஆகிய நாடுகள் இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியது அவசியம் எனவும், சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படவேண்டும் எனவும் வலியுறுத்தின. https://www.virakesari.lk/article/224579

விசா விதிகளை மாற்றும் டிரம்ப்: அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்

2 months ago
பட மூலாதாரம், Getty Images 8 செப்டெம்பர் 2025 அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் மற்றும் அங்கு செல்லத் திட்டமிடும் இந்திய மாணவர்கள், எதிர்காலத்தில் அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம். அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, எஃப் 1 (F1) மாணவர் விசாக்களுக்கு விதிகளை மாற்ற முன்மொழிந்திருப்பது தான் இதற்குக் காரணம். முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்னென்ன? அவை இந்திய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும்? என்பதைத் தெரிந்துகொள்வோம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மாதிரி படம் புதிய மாற்றங்கள் என்னென்ன ? பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசாவைத் தவறான முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் புதிய விதிகளை முன்மொழிந்துள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. பொதுவாக, அமெரிக்காவில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு எஃப் 1 (F1) விசா வழங்கப்படுகிறது. பரிமாற்றத் திட்டங்கள் மூலம் செல்லும் மாணவர்களுக்கு ஜே1 (J1) விசா வழங்கப்படுகிறது. இதுவரை, இந்த மாணவர் விசாக்கள் 'படிப்பு தொடரும் வரை அனுமதி' (duration of status) என்ற முறையில் இருந்தன. அதாவது, ஒரு மாணவர் அமெரிக்காவில் படிப்பைத் தொடரும் வரை, அவர்களின் நிலை 'மாணவர்' என்றே இருக்கும். அவர்கள் அனைத்து விசா விதிகளையும் பின்பற்றும் வரை அமெரிக்காவில் தங்கலாம். இப்போது, அந்த முறையை நீக்க ஒரு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. மாணவர் விசாவின் காலம் 4 ஆண்டுகளாக குறைக்கப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மாதிரி படம் குறிப்பிட்ட அந்த கால அளவுக்குப் பிறகு, ஒரு மாணவர் அமெரிக்காவில் தொடர்ந்து தங்க விரும்பினால், 'படிப்பு தொடரும் வரை அனுமதி' எனும் நிலையை நீட்டிக்க விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில், அமெரிக்காவை விட்டு வெளியேறி, மீண்டும் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். இதனால், இளங்கலைப் பட்டம் முடித்து, முதுகலை அல்லது முனைவர் பட்டத்தைத் தொடர விரும்பும் மாணவர்கள், புதிய விசா செயல்முறையைத் தொடங்க வேண்டியிருக்கும். மற்றொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்குப் பிறகு உடனடியாக வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற முடியாது. அதாவது, எஃப் 1 விசா பெற்ற மாணவர்கள், முதல் ஆண்டு முடிந்த பிறகே வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற முடியும். பட்டதாரி மாணவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தவுடன், தங்கள் பாடத்திட்டத்தையோ அல்லது பல்கலைக்கழகத்தையோ உடனடியாக மாற்ற முடியாது. அவர்களுக்கு விசா வழங்கப்பட்ட போது, I-20 படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்குச் செல்லவேண்டும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரே மட்டத்தில் பல பட்டங்களைப் பெறுவது இனி எளிதல்ல. அதாவது, அமெரிக்காவை விட்டு வெளியேறி புதிய விசாவிற்கு விண்ணப்பிக்காமல், ஒரு பாடத்தில் முதுகலைப் பட்டம் முடித்து, பின்னர் வேறு பாடத்தில் முதுகலைப் பட்டத்தை தொடருவது இனி சாத்தியமில்லை. மேலும், விருப்ப செயல்முறை பயிற்சி (OPT) முடிந்த பிறகு மாணவர்கள் தங்கக்கூடிய காலமும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விருப்ப செயல்முறை பயிற்சி (OPT) முடிந்த பிறகு, மாணவர்கள் 60 நாட்கள் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்டனர். இப்போது, அந்த காலத்தை 30 நாட்களாகக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. மொழிப் படிப்புகளுக்கான அனுமதி 24 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மாதிரி படம் இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? ஓபன் டோர்ஸ் தரவுகளின்படி, தற்போது அமெரிக்காவில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் உள்ளனர். இவர்களில் 3,30,000 க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்த விதிகள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வரை, மாணவர்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது. ஆனால், அந்த விதிகள் அமலுக்கு வந்தவுடன், மாணவர்களின் விசா காலம் குறைக்கப்படலாம். பல்கலைக் கழகங்களை மாற்ற முடியாது என்ற விதி, இந்த ஆகஸ்ட் மாதம் சேர்க்கை பெறும் (இலையுதிர்கால சேர்க்கை) மாணவர்களுக்கு பொருந்தும். அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் முடித்த பிறகு வேலைவாய்ப்பு அல்லது ஹெச்-1பி (H-1B) விசா கிடைக்காத மாணவர்கள் பலரும் 'இரண்டாவது முதுகலைப் படிப்பு' படிப்பதன் மூலம் அமெரிக்காவில் தொடர்ந்து வசிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். புதிய மாற்றங்கள் அமலாகும் பட்சத்தில், அவ்வாறு செய்ய முடியாது. 5–6 ஆண்டுகள் ஆகும் பிஎச்டி (முனைவர் பட்ட படிப்பு) போன்ற படிப்புகளுக்கு, எப் -1 (F-1) விசா பெற்ற மாணவர்கள் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசா செயல்முறையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதில், விசா கட்டணம் செலுத்துதல், பயோமெட்ரிக்ஸ் முறையில் பதிவு செய்தல் மற்றும் நிதி ஆதாரத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பித்தல் ஆகியவை அடங்கும். இந்த மாற்றங்கள் முதலில் 2020-ல் டிரம்ப் அதிபராக இருந்தபோது முன்மொழியப்பட்டன. பைடன் நிர்வாகம் 2021-ல் அதனைத் திரும்பப் பெற்றது. ஆனால் இப்போது, டிரம்ப் நிர்வாகம் அதை மீண்டும் கொண்டு வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly12513yqeo

விசா விதிகளை மாற்றும் டிரம்ப்: அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்

2 months ago

அமெரிக்கா, இந்தியர், மாணவர் விசா

பட மூலாதாரம், Getty Images

8 செப்டெம்பர் 2025

அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் மற்றும் அங்கு செல்லத் திட்டமிடும் இந்திய மாணவர்கள், எதிர்காலத்தில் அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம்.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, எஃப் 1 (F1) மாணவர் விசாக்களுக்கு விதிகளை மாற்ற முன்மொழிந்திருப்பது தான் இதற்குக் காரணம்.

முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்னென்ன? அவை இந்திய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும்? என்பதைத் தெரிந்துகொள்வோம்.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, எப்ஃ 1 (F1) மாணவர் விசாக்களுக்கு விதிகளை மாற்ற முன்மொழிந்திருப்பது தான் இதற்குக் காரணம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதிரி படம்

புதிய மாற்றங்கள் என்னென்ன ?

பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசாவைத் தவறான முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் புதிய விதிகளை முன்மொழிந்துள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

பொதுவாக, அமெரிக்காவில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு எஃப் 1 (F1) விசா வழங்கப்படுகிறது. பரிமாற்றத் திட்டங்கள் மூலம் செல்லும் மாணவர்களுக்கு ஜே1 (J1) விசா வழங்கப்படுகிறது.

இதுவரை, இந்த மாணவர் விசாக்கள் 'படிப்பு தொடரும் வரை அனுமதி' (duration of status) என்ற முறையில் இருந்தன. அதாவது, ஒரு மாணவர் அமெரிக்காவில் படிப்பைத் தொடரும் வரை, அவர்களின் நிலை 'மாணவர்' என்றே இருக்கும். அவர்கள் அனைத்து விசா விதிகளையும் பின்பற்றும் வரை அமெரிக்காவில் தங்கலாம்.

இப்போது, அந்த முறையை நீக்க ஒரு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. மாணவர் விசாவின் காலம் 4 ஆண்டுகளாக குறைக்கப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுவரை, இந்த மாணவர் விசாக்கள் 'படிப்பு தொடரும் வரை அனுமதி' (duration of status) என்ற முறையில் இருந்தன. அதாவது, ஒரு மாணவர் அமெரிக்காவில் படிப்பைத் தொடரும் வரை, அவர்களின் நிலை 'மாணவர்' என்றே இருக்கும். அவர்கள் அனைத்து விசா விதிகளையும் பின்பற்றும் வரை அமெரிக்காவில் தங்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதிரி படம்

குறிப்பிட்ட அந்த கால அளவுக்குப் பிறகு, ஒரு மாணவர் அமெரிக்காவில் தொடர்ந்து தங்க விரும்பினால், 'படிப்பு தொடரும் வரை அனுமதி' எனும் நிலையை நீட்டிக்க விண்ணப்பிக்க வேண்டும்.

இல்லையெனில், அமெரிக்காவை விட்டு வெளியேறி, மீண்டும் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

இதனால், இளங்கலைப் பட்டம் முடித்து, முதுகலை அல்லது முனைவர் பட்டத்தைத் தொடர விரும்பும் மாணவர்கள், புதிய விசா செயல்முறையைத் தொடங்க வேண்டியிருக்கும்.

மற்றொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்குப் பிறகு உடனடியாக வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற முடியாது.

அதாவது, எஃப் 1 விசா பெற்ற மாணவர்கள், முதல் ஆண்டு முடிந்த பிறகே வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற முடியும்.

பட்டதாரி மாணவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தவுடன், தங்கள் பாடத்திட்டத்தையோ அல்லது பல்கலைக்கழகத்தையோ உடனடியாக மாற்ற முடியாது.

அவர்களுக்கு விசா வழங்கப்பட்ட போது, I-20 படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்குச் செல்லவேண்டும்.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஒரே மட்டத்தில் பல பட்டங்களைப் பெறுவது இனி எளிதல்ல. அதாவது, அமெரிக்காவை விட்டு வெளியேறி புதிய விசாவிற்கு விண்ணப்பிக்காமல், ஒரு பாடத்தில் முதுகலைப் பட்டம் முடித்து, பின்னர் வேறு பாடத்தில் முதுகலைப் பட்டத்தை தொடருவது இனி சாத்தியமில்லை.

மேலும், விருப்ப செயல்முறை பயிற்சி (OPT) முடிந்த பிறகு மாணவர்கள் தங்கக்கூடிய காலமும் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விருப்ப செயல்முறை பயிற்சி (OPT) முடிந்த பிறகு, மாணவர்கள் 60 நாட்கள் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்டனர். இப்போது, அந்த காலத்தை 30 நாட்களாகக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

மொழிப் படிப்புகளுக்கான அனுமதி 24 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

மொழிப் படிப்புகளுக்கான அனுமதி 24 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதிரி படம்

இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

ஓபன் டோர்ஸ் தரவுகளின்படி, தற்போது அமெரிக்காவில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் உள்ளனர். இவர்களில் 3,30,000 க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள்.

டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்த விதிகள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வரை, மாணவர்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது.

ஆனால், அந்த விதிகள் அமலுக்கு வந்தவுடன், மாணவர்களின் விசா காலம் குறைக்கப்படலாம். பல்கலைக் கழகங்களை மாற்ற முடியாது என்ற விதி, இந்த ஆகஸ்ட் மாதம் சேர்க்கை பெறும் (இலையுதிர்கால சேர்க்கை) மாணவர்களுக்கு பொருந்தும்.

அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் முடித்த பிறகு வேலைவாய்ப்பு அல்லது ஹெச்-1பி (H-1B) விசா கிடைக்காத மாணவர்கள் பலரும் 'இரண்டாவது முதுகலைப் படிப்பு' படிப்பதன் மூலம் அமெரிக்காவில் தொடர்ந்து வசிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். புதிய மாற்றங்கள் அமலாகும் பட்சத்தில், அவ்வாறு செய்ய முடியாது.

5–6 ஆண்டுகள் ஆகும் பிஎச்டி (முனைவர் பட்ட படிப்பு) போன்ற படிப்புகளுக்கு, எப் -1 (F-1) விசா பெற்ற மாணவர்கள் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசா செயல்முறையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதில், விசா கட்டணம் செலுத்துதல், பயோமெட்ரிக்ஸ் முறையில் பதிவு செய்தல் மற்றும் நிதி ஆதாரத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பித்தல் ஆகியவை அடங்கும்.

இந்த மாற்றங்கள் முதலில் 2020-ல் டிரம்ப் அதிபராக இருந்தபோது முன்மொழியப்பட்டன.

பைடன் நிர்வாகம் 2021-ல் அதனைத் திரும்பப் பெற்றது.

ஆனால் இப்போது, டிரம்ப் நிர்வாகம் அதை மீண்டும் கொண்டு வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly12513yqeo

ஐ.நா. வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுங்கள் - பன்னாடுகளிடம் அரசாங்கம் கோரிக்கை

2 months ago
ஐ.நா மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பின்றி செயற்படவேண்டும் - இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான், லாவோஸ், எரித்ரியா Published By: Vishnu 09 Sep, 2025 | 01:29 AM (நா.தனுஜா) ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது பக்கச்சார்பின்றி நியாயத்துவத்தின் அடிப்படையில் செயற்படவேண்டும் என பேரவையில் வலியுறுத்திய பாகிஸ்தான், லாவோஸ், எரித்ரியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கையின் உள்ளக செயன்முறைகளைத் தாம் ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (8) ஜெனீவாவில் ஆரம்பமானது. தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிட்ட லாவோஸ், பாகிஸ்தான், எரித்ரியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு ஆதரவாகக் கருத்துரைத்தனர். குறிப்பாக கடந்த கூட்டத்தொடரில் 57ஃ1 தீர்மானத்தை இலங்கை நிராகரித்திருந்த போதிலும், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பில் அவர்கள் பாராட்டு வெளியிட்டனர். அதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது பக்கச்சார்பின்றி நியாயத்துவத்தின் அடிப்படையில் செயற்படவேண்டும் என வலியுறுத்திய அந்நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கையின் உள்ளக செயன்முறைகளைத் தாம் ஆதரிப்பதாகவும் அறிவித்தனர். அதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதலின்றி முன்னெடுக்கப்படுவதாகவும், தற்போது ஐ.நா சபை நிதிப்பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், இந்நிதியை வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தமுடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். https://www.virakesari.lk/article/224578

சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டும் சந்திப்பதா? -பெறப்பட்ட தகவல்களை ஆராய்ந்து இன்று தீர்மானம் - காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்

2 months ago
Published By: Vishnu 09 Sep, 2025 | 03:50 AM (நா.தனுஜா) பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரண தண்டனை அனுபவித்து வரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டும் சந்திப்பதற்கான தேவைப்பாடுகள் உள்ளனவா என்பது குறித்து ஆராயப்படும் என காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக பெயரிடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ அவரது மனைவி ஊடாக அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார். அதனையடுத்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பிரதிநிதிகள் அவரை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்து அவரிடம் விடயங்களை கேட்டறிந்திருந்தனர்.இருப்பினும் அச்சந்திப்பில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த மற்றும் நிறைவேற்று அதிகாரி ஜெகநாதன் தற்பரன் ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை. இந்நிலையில் அச்சந்திப்பில் பங்கேற்ற காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளால் சோமரத்ன ராஜபக்ஷவிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் போதுமானவையா என்பது குறித்து இன்றைய தினம் நடைபெறவிருக்கும் அலுவலகத்தின் நிர்வாகசபை கூட்டத்தில் ஆராயப்படுமெனவும் அதன்பின்னர் அவரை மீண்டும் சந்திப்பதா இல்லையா என்பது பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் மகேஷ் கட்டுலந்த கேசரியிடம் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/224584

சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டும் சந்திப்பதா? -பெறப்பட்ட தகவல்களை ஆராய்ந்து இன்று தீர்மானம் - காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்

2 months ago

Published By: Vishnu

09 Sep, 2025 | 03:50 AM

image

(நா.தனுஜா)

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரண தண்டனை அனுபவித்து வரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டும் சந்திப்பதற்கான தேவைப்பாடுகள் உள்ளனவா என்பது குறித்து ஆராயப்படும் என காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக பெயரிடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ அவரது மனைவி ஊடாக அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை  அனுப்பி வைத்திருந்தார்.

அதனையடுத்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பிரதிநிதிகள் அவரை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்து அவரிடம் விடயங்களை கேட்டறிந்திருந்தனர்.இருப்பினும் அச்சந்திப்பில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த மற்றும் நிறைவேற்று அதிகாரி ஜெகநாதன் தற்பரன் ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை.

இந்நிலையில் அச்சந்திப்பில் பங்கேற்ற காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளால் சோமரத்ன ராஜபக்ஷவிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் போதுமானவையா என்பது குறித்து இன்றைய தினம் நடைபெறவிருக்கும் அலுவலகத்தின் நிர்வாகசபை கூட்டத்தில் ஆராயப்படுமெனவும் அதன்பின்னர் அவரை மீண்டும் சந்திப்பதா இல்லையா என்பது பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் மகேஷ் கட்டுலந்த கேசரியிடம் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/224584

போட்டியிடும் கடல் நீரில் கோபால்ட்டைப் பெறுவதற்கான இந்தியப் போட்டியைத் தூண்டிவிடும் என்று சீனா அஞ்சுகிறது.

2 months ago
செய்தி தொடர்பான திரிகள் சில கீழே. ஆழ்கடல் சுரங்கம்: கனிமங்களை கைப்பற்றி வல்லரசு நாடுகளை முந்த முயலும் இந்தியா இலங்கையின் கடற்படுக்கையில் உள்ள மிகவும் பெறுமதியான கனிய வளம் - கண் வைத்தது அதானி நிறுவனம் மத்ஸயா 6000: பெருங்கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்லப் போகும் இந்திய விஞ்ஞானிகள் பேட்டரிகளுக்காக உலகமெங்கும் சீனா நடத்தும் கனிம வேட்டை; அதிகரிக்கும் பதற்றம் - பிபிசி கள ஆய்வு

கடந்தகால மீறல் வழக்குகளைக் கையாள பிரத்யேக நீதிப்பொறிமுறையை நிறுவுங்கள் - ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வலியுறுத்தல்

2 months ago
Published By: Vishnu 09 Sep, 2025 | 03:48 AM (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் மற்றும் வன்முறைகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கினாலும் உருவான காயங்களை ஆற்றுவதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்கும் தற்போது தகுந்த வாய்ப்பு கிட்டியிருப்பதாக பேரவையில் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீன விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய பிரத்யேக நீதிப்பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஸ்தாபிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (8) ஜெனீவாவில் ஆரம்பமானது. கூட்டத்தொடரின் தொடக்கநாள் அமர்வில் ஜெனீவா நேரப்படி காலை 12.15 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 3.45) உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது எழுத்துமூல அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து உரையாற்றினார். அதன்படி கடந்தகால மீறல்கள் மற்றும் வன்முறைகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கினாலும் உருவான காயங்களை ஆற்றுவதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்கும் இலங்கைக்கு தற்போது வரலாற்று முக்கியத்தும் மிக்க வகையில் வாய்ப்பு கிட்டியிருப்பதாக சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்கான சந்தர்ப்பம் அமைந்திருப்பதாகத் தெரிவித்தார். அத்தோடு அண்மையில் தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது முன்னெப்போதுமில்லாத வகையில் சீரான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அரசாங்கம் வாக்குறுதியளித்ததாகவும், அவ்வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் அளித்து அவை உரியவாறு நிறைவேற்றப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அதேபோன்று எதிர்வருங்காலங்களில் நாட்டில் நிலையான நல்லிணக்கத்தையும் அமைதியையும் கட்டியெழுப்புவதற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி நிலைநாட்டப்படவேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட வோல்கர் டேர்க், இலங்கைக்கான விஜயத்தின்போது கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் துயரத்தையும், அத்துமீறல்களையும் அனுபவித்துவருவதாகவும், செம்மணி மனிதப்புதைகுழியைப் பார்வையிடச்சென்றபோது அங்கிருந்தவர்கள் தாம் முகங்கொடுத்துவரும் துன்பத்தைத் தன்னிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி தெற்கைச்சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருக்காக நீண்டகாலமாகக் காத்திருப்பதாகத் தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்ட அவர், எனவே தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நீதி வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார். அடுத்ததாக கடந்த காலங்களில் அரசு, பாதுகாப்புப்படையினர் மற்றும் ஆயுதக்குழுவான தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தரப்பினரால் மீறல்கள், வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனக் கூறிய உயர்ஸ்தானிகர், நினைவுகூரல்களில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்பட்டிருப்பது சாதகமான விடயம் எனக் குறிப்பிட்டதுடன் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அவசியமான சட்ட மறுசீரமைப்புக்க்ள மேற்கொள்ளப்படவேண்டும் என்றார். குறிப்பாக சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை ஸ்தாபிக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும், அச்செயன்முறையில் சிவில் சமூகம் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உள்வாங்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீனமான விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய பிரத்யேக நீதிப்பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஸ்தாபிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும் 'பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகம் உடன் இடைநிறுத்தப்படவேண்டும். நிகழ்நிலைக்காப்புச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான உத்தேச சட்ட வரைவு மற்றும் தனிநபர் தரவுப்பாதுகாப்பு தொடர்பான உத்தேச சட்ட வரைவு என்பன உள்ளடங்கலாக மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடிய சட்டங்கள் உரிய நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டும். வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் காணி சுவீகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இயங்கிவரும் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மீதான ஒடுக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. அவை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டும். அதுமாத்திரமன்றி பாதுகாப்புத்துறை மறுசீரமைக்கப்படவேண்டும். வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கம் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதுடன் தனியாருக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவேண்டும். மலையகத் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்' என்றும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்தார். அத்தோடு இலங்கை தொடர்பில் தமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையின் கடந்தகால மீறல்கள் தொடர்பில் 105,000 ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் திரட்டப்பட்டிருப்பதாகவும், சர்வதேச நியாயாதிக்கத்தின் ஊடாக இவற்றைப் பயன்படுத்தி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு உறுப்புநாடுகள் முன்வரவேண்டும் எனவும் அழைப்புவிடுத்த உயர்ஸ்தானிகர், மனிதப்புதைகுழிகளின் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். https://www.virakesari.lk/article/224583

கடந்தகால மீறல் வழக்குகளைக் கையாள பிரத்யேக நீதிப்பொறிமுறையை நிறுவுங்கள் - ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வலியுறுத்தல்

2 months ago

Published By: Vishnu

09 Sep, 2025 | 03:48 AM

image

(நா.தனுஜா)

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் மற்றும் வன்முறைகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கினாலும் உருவான காயங்களை ஆற்றுவதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்கும் தற்போது தகுந்த வாய்ப்பு கிட்டியிருப்பதாக பேரவையில் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீன விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய பிரத்யேக நீதிப்பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஸ்தாபிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (8) ஜெனீவாவில் ஆரம்பமானது. கூட்டத்தொடரின் தொடக்கநாள் அமர்வில் ஜெனீவா நேரப்படி காலை 12.15 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 3.45) உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது எழுத்துமூல அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து உரையாற்றினார்.

அதன்படி கடந்தகால மீறல்கள் மற்றும் வன்முறைகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கினாலும் உருவான காயங்களை ஆற்றுவதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்கும் இலங்கைக்கு தற்போது வரலாற்று முக்கியத்தும் மிக்க வகையில் வாய்ப்பு கிட்டியிருப்பதாக சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்கான சந்தர்ப்பம் அமைந்திருப்பதாகத் தெரிவித்தார். அத்தோடு அண்மையில் தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது முன்னெப்போதுமில்லாத வகையில் சீரான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அரசாங்கம் வாக்குறுதியளித்ததாகவும், அவ்வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் அளித்து அவை உரியவாறு நிறைவேற்றப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோன்று எதிர்வருங்காலங்களில் நாட்டில் நிலையான நல்லிணக்கத்தையும் அமைதியையும் கட்டியெழுப்புவதற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி நிலைநாட்டப்படவேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட வோல்கர் டேர்க், இலங்கைக்கான விஜயத்தின்போது கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் துயரத்தையும், அத்துமீறல்களையும் அனுபவித்துவருவதாகவும், செம்மணி மனிதப்புதைகுழியைப் பார்வையிடச்சென்றபோது அங்கிருந்தவர்கள் தாம் முகங்கொடுத்துவரும் துன்பத்தைத் தன்னிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி தெற்கைச்சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருக்காக நீண்டகாலமாகக் காத்திருப்பதாகத் தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்ட அவர், எனவே தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நீதி வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

அடுத்ததாக கடந்த காலங்களில் அரசு, பாதுகாப்புப்படையினர் மற்றும் ஆயுதக்குழுவான தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தரப்பினரால் மீறல்கள், வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனக் கூறிய உயர்ஸ்தானிகர், நினைவுகூரல்களில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்பட்டிருப்பது சாதகமான விடயம் எனக் குறிப்பிட்டதுடன் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அவசியமான சட்ட மறுசீரமைப்புக்க்ள மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.

குறிப்பாக சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை ஸ்தாபிக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும், அச்செயன்முறையில் சிவில் சமூகம் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உள்வாங்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீனமான விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய பிரத்யேக நீதிப்பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஸ்தாபிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் 'பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகம் உடன் இடைநிறுத்தப்படவேண்டும். நிகழ்நிலைக்காப்புச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான உத்தேச சட்ட வரைவு மற்றும் தனிநபர் தரவுப்பாதுகாப்பு தொடர்பான உத்தேச சட்ட வரைவு என்பன உள்ளடங்கலாக மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடிய சட்டங்கள் உரிய நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டும். வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் காணி சுவீகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இயங்கிவரும் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மீதான ஒடுக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. அவை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டும். அதுமாத்திரமன்றி பாதுகாப்புத்துறை மறுசீரமைக்கப்படவேண்டும். வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கம் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதுடன் தனியாருக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவேண்டும். மலையகத் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்' என்றும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்தார்.

அத்தோடு இலங்கை தொடர்பில் தமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையின் கடந்தகால மீறல்கள் தொடர்பில் 105,000 ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் திரட்டப்பட்டிருப்பதாகவும், சர்வதேச நியாயாதிக்கத்தின் ஊடாக இவற்றைப் பயன்படுத்தி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு உறுப்புநாடுகள் முன்வரவேண்டும் எனவும் அழைப்புவிடுத்த உயர்ஸ்தானிகர், மனிதப்புதைகுழிகளின் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

https://www.virakesari.lk/article/224583