2 months ago
இந்த செய்தியை சிறியர் எங்கோ இணைத்து வாசித்தேன். ஆனால், சிறியரின் வீரகேசரி இணைப்பில் செய்தி விபரம் காணப்படவில்லை. யாரோ இந்த சூரன் இது என்ன பயணமோ என நினைத்தேன். சூரத்தனமான வேலைதான் பார்த்து உள்ளார். சைக்கிளில் பாக்கு நீரிணையை எப்படி கடந்தார் என அறிய ஆவல்.
2 months ago
தலை! நீ கலக்கு தலை! 😎
2 months ago
நண்டுக்குணம் படைத்த இனம், நாசமாகிப் போகும் வரலாற்றில்... அறிந்திரு தமிழா.
2 months ago
அறிந்திராத கடற்கரும்புலிகள்: 2006 இல் கடற்கரும்புலிகளானோரில்: தலைநகர் திருமலை கடற்பரப்பில்: மேஜர் நிலாவேந்தி மன்னார் கடலில் 11.02.2006: லெப். கேணல் புரட்சிநிலவன் மற்றும் இரு நாட்டுப்பற்றாளர்கள் மட்டு மாங்கேணி கடற்கரையில் வைத்து தேசவிரோதிகளால் 24.08.2006: கப்டன் இயல்வளவன், கப்டன் இசையரசன் பொத்துவில் கடற்பரப்பில் 17.09.2006: லெப்.கேணல் அந்தணன் (தமிழ்மாறன்), லெப்.கேணல் கலைச்செல்வன் (சபீன்), லெப்.கேணல் விதுசன் (வெள்ளை), மேஜர் தமிழ்த்தென்றல், கப்டன் சமர்மறவன் இவர்களுடன் கடற்புலிகள் சிலரும் அதே விசைப்படகில் காவியமாகினர். புல்மோட்டை கடற்பரப்பில் 24.09.2006: மேஜர் மைந்தனா, கப்டன் கதிர்மதி தமிழீழ கடற்பரப்பில் 15.10.2006: லெப். கேணல் வளவன், 2ம் லெப். அன்புக்கொடி பருத்தித்துறை - வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 09.11.2006: லெப். கேணல் தாரணி, கப்டன் சாந்தினி, மேஜர் லவனிதா, லெப். அகவாணன் காலி தட்சின துறைமுகம் 18/10/2006 :லெப். கேணல் அரவிந்தா, மேஜர் தமிழ்வேந்தன், மேஜர் அறிவுக்குமரன், மேஜர் கடலவன், மேஜர் முகிலன், மேஜர் வன்னிமன்னன், கப்டன் இசையின்பன், கப்டன் கண்ணாளன் தலைநகரின் ஆழ்கடலில் 10.11.2006 : லெப். கேணல் தில்லைச்செல்வி/தனு, லெப். இன்மகன் சிலாபம் கடற்பரப்பு 27.11.2006: கப்டன் தாய்மொழியான் மற்றும் லெப். கேணல் வள்ளுவன், மேஜர் தர்மேந்திரா, மேஜர் நிமலன், மேஜர் வனிதா, கப்டன் அறிவழகன், லெப். ஆதவன், கப்டன் குழலினி, மேஜர் கானத்தி, மேஜர் இளையரசன்,கப்டன் சோழமைந்தன், மேஜர் மோகனா, மேஜர் பரணி ஆகியோர் 2006 இல் வீரகாவியமாகினர். 2007 இல் கடற்கரும்புலிகளானோரில் லெப். கேணல் கார்குழலி - பருத்தித்துறை கடற்பரப்பில் - மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர் (இவரின் பெயரில் ஒரு மிராஜ் (IBM) ஓடினது), கப்டன் முறையமுதன், லெப். மணிக்கொடி, லெப். எழுகடல் - கொழும்புத் துறைமுகத்தில் மேஜர் அருமைச்சேரன், மேஜர் பாசமலர் - புல்மோட்டை கடற்பரப்பில் மேஜர் குணாளன் - பன்னாட்டுக் கடற்பரப்பில் கப்டன் றெஜி - கற்பிட்டிக் கடற்பரப்பில் லெப். கேணல் தமிழவன் - புல்மோட்டை கடற்பரப்பில் லெப். கேணல் வித்தியா - நிலாவெளி கடற்பரப்பில் மேஜர் கலைமாறன் (புகழரசன் கடற்கரும்புலிகள் அணி பொறுப்பாளர்) - பன்னாட்டுக் கடற்பரப்பில் கப்டன் காந்தரூபன் - பன்னாட்டுக் கடற்பரப்பில் லெப். இன்னமுதன் - முல்லை கடற்பரப்பில் பயிற்சியின் போது 2008இல் கடற்கரும்புலியானோரில்: திருமலை துறைமுகத்தில் "பழிவாங்கல்-2" நடவடிக்கையின் போது 10.05.2008: நீரடி நீச்சல் கரும்புலிகளான லெப் கேணல் செம்பியவளவன், மேஜர் அற்புதன் 2009 இல் கடற்கரும்புலிகளானோரில் லெப். கேணல் நிதி, கப்டன் வினோதன் - சுண்டிக்குளம் கடற்கரப்பில் - 19/01/2009 லெப். கேணல் மதியழகன் (மற்றும் எத்தனை என்று தெரியாது) - சுண்டிக்குளம் கடற்பரப்பு - 20/02/2009 சத்தியமாய் இவற்றை நன்னிச் சோழன் பல்வேறு இடங்களிலிருந்து "கேட்டு அறிந்து படித்து" சேகரித்தார் என்பதை தலைவரின் மெய்க்காவலராய் இருந்த புளிகளுக்கு அறியத்தருகிறேன். - கோப்ரல் காகிதப்புலி
2 months ago
அறிந்திராத கடற்கரும்புலிகள்:
2006 இல் கடற்கரும்புலிகளானோரில்:
தலைநகர் திருமலை கடற்பரப்பில்: மேஜர் நிலாவேந்தி
மன்னார் கடலில் 11.02.2006: லெப். கேணல் புரட்சிநிலவன் மற்றும் இரு நாட்டுப்பற்றாளர்கள்
மட்டு மாங்கேணி கடற்கரையில் வைத்து தேசவிரோதிகளால் 24.08.2006: கப்டன் இயல்வளவன், கப்டன் இசையரசன்
பொத்துவில் கடற்பரப்பில் 17.09.2006: லெப்.கேணல் அந்தணன் (தமிழ்மாறன்), லெப்.கேணல் கலைச்செல்வன் (சபீன்), லெப்.கேணல் விதுசன் (வெள்ளை), மேஜர் தமிழ்த்தென்றல், கப்டன் சமர்மறவன் இவர்களுடன் கடற்புலிகள் சிலரும் அதே விசைப்படகில் காவியமாகினர்.
புல்மோட்டை கடற்பரப்பில் 24.09.2006: மேஜர் மைந்தனா, கப்டன் கதிர்மதி
தமிழீழ கடற்பரப்பில் 15.10.2006: லெப். கேணல் வளவன், 2ம் லெப். அன்புக்கொடி
பருத்தித்துறை - வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 09.11.2006: லெப். கேணல் தாரணி, கப்டன் சாந்தினி, மேஜர் லவனிதா, லெப். அகவாணன்
காலி தட்சின துறைமுகம் 18/10/2006 :லெப். கேணல் அரவிந்தா, மேஜர் தமிழ்வேந்தன், மேஜர் அறிவுக்குமரன், மேஜர் கடலவன், மேஜர் முகிலன், மேஜர் வன்னிமன்னன், கப்டன் இசையின்பன், கப்டன் கண்ணாளன்
தலைநகரின் ஆழ்கடலில் 10.11.2006 : லெப். கேணல் தில்லைச்செல்வி/தனு, லெப். இன்மகன்
சிலாபம் கடற்பரப்பு 27.11.2006: கப்டன் தாய்மொழியான்
மற்றும் லெப். கேணல் வள்ளுவன், மேஜர் தர்மேந்திரா, மேஜர் நிமலன், மேஜர் வனிதா, கப்டன் அறிவழகன், லெப். ஆதவன், கப்டன் குழலினி, மேஜர் கானத்தி, மேஜர் இளையரசன்,கப்டன் சோழமைந்தன், மேஜர் மோகனா, மேஜர் பரணி
ஆகியோர் 2006 இல் வீரகாவியமாகினர்.
2007 இல் கடற்கரும்புலிகளானோரில்
லெப். கேணல் கார்குழலி - பருத்தித்துறை கடற்பரப்பில் -
மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர் (இவரின் பெயரில் ஒரு மிராஜ் (IBM) ஓடினது), கப்டன் முறையமுதன், லெப். மணிக்கொடி, லெப். எழுகடல் - கொழும்புத் துறைமுகத்தில்
மேஜர் அருமைச்சேரன், மேஜர் பாசமலர் - புல்மோட்டை கடற்பரப்பில்
மேஜர் குணாளன் - பன்னாட்டுக் கடற்பரப்பில்
கப்டன் றெஜி - கற்பிட்டிக் கடற்பரப்பில்
லெப். கேணல் தமிழவன் - புல்மோட்டை கடற்பரப்பில்
லெப். கேணல் வித்தியா - நிலாவெளி கடற்பரப்பில்
மேஜர் கலைமாறன் (புகழரசன் கடற்கரும்புலிகள் அணி பொறுப்பாளர்) - பன்னாட்டுக் கடற்பரப்பில்
கப்டன் காந்தரூபன் - பன்னாட்டுக் கடற்பரப்பில்
லெப். இன்னமுதன் - முல்லை கடற்பரப்பில் பயிற்சியின் போது
2008இல் கடற்கரும்புலியானோரில்:
2009 இல் கடற்கரும்புலிகளானோரில்
லெப். கேணல் நிதி, கப்டன் வினோதன் - சுண்டிக்குளம் கடற்கரப்பில் - 19/01/2009
லெப். கேணல் மதியழகன் (மற்றும் எத்தனை என்று தெரியாது) - சுண்டிக்குளம் கடற்பரப்பு - 20/02/2009
2 months ago
அறிந்திராத கடற்கரும்புலிகள்: 2006 இல் கடற்கரும்புலிகளானோரில்: தலைநகர் திருமலை கடற்பரப்பில்: மேஜர் நிலாவேந்தி மன்னார் கடலில் 11.02.2006: லெப். கேணல் புரட்சிநிலவன் மற்றும் இரு நாட்டுப்பற்றாளர்கள் மட்டு மாங்கேணி கடற்கரையில் வைத்து தேசவிரோதிகளால் 24.08.2006: கப்டன் இயல்வளவன், கப்டன் இசையரசன் பொத்துவில் கடற்பரப்பில் 17.09.2006: லெப்.கேணல் அந்தணன் (தமிழ்மாறன்), லெப்.கேணல் கலைச்செல்வன் (சபீன்), லெப்.கேணல் விதுசன் (வெள்ளை), மேஜர் தமிழ்த்தென்றல், கப்டன் சமர்மறவன் இவர்களுடன் கடற்புலிகள் சிலரும் அதே விசைப்படகில் காவியமாகினர். புல்மோட்டை கடற்பரப்பில் 24.09.2006: மேஜர் மைந்தனா, கப்டன் கதிர்மதி தமிழீழ கடற்பரப்பில் 15.10.2006: லெப். கேணல் வளவன், 2ம் லெப். அன்புக்கொடி பருத்தித்துறை - வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 09.11.2006: லெப். கேணல் தாரணி, கப்டன் சாந்தினி, மேஜர் லவனிதா, லெப். அகவாணன் காலி தட்சின துறைமுகம் 18/10/2006 :லெப். கேணல் அரவிந்தா, மேஜர் தமிழ்வேந்தன், மேஜர் அறிவுக்குமரன், மேஜர் கடலவன், மேஜர் முகிலன், மேஜர் வன்னிமன்னன், கப்டன் இசையின்பன், கப்டன் கண்ணாளன் தலைநகரின் ஆழ்கடலில் 10.11.2006 : லெப். கேணல் தில்லைச்செல்வி/தனு, லெப். இன்மகன் சிலாபம் கடற்பரப்பு 27.11.2006: கப்டன் தாய்மொழியான் மற்றும் லெப். கேணல் வள்ளுவன், மேஜர் தர்மேந்திரா, மேஜர் நிமலன், மேஜர் வனிதா, கப்டன் அறிவழகன், லெப். ஆதவன், கப்டன் குழலினி, மேஜர் கானத்தி, மேஜர் இளையரசன்,கப்டன் சோழமைந்தன், மேஜர் மோகனா, மேஜர் பரணி ஆகியோர் 2006 இல் வீரகாவியமாகினர். 2007 இல் கடற்கரும்புலிகளானோரில் லெப். கேணல் கார்குழலி - பருத்தித்துறை கடற்பரப்பில் - மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர் (இவரின் பெயரில் ஒரு மிராஜ் (IBM) ஓடினது), கப்டன் முறையமுதன், லெப். மணிக்கொடி, லெப். எழுகடல் - கொழும்புத் துறைமுகத்தில் மேஜர் அருமைச்சேரன், மேஜர் பாசமலர் - புல்மோட்டை கடற்பரப்பில் மேஜர் குணாளன் - பன்னாட்டுக் கடற்பரப்பில் கப்டன் றெஜி - கற்பிட்டிக் கடற்பரப்பில் லெப். கேணல் தமிழவன் - புல்மோட்டை கடற்பரப்பில் லெப். கேணல் வித்தியா - நிலாவெளி கடற்பரப்பில் மேஜர் கலைமாறன் (புகழரசன் கடற்கரும்புலிகள் அணி பொறுப்பாளர்) - பன்னாட்டுக் கடற்பரப்பில் கப்டன் காந்தரூபன் - பன்னாட்டுக் கடற்பரப்பில் லெப். இன்னமுதன் - முல்லை கடற்பரப்பில் பயிற்சியின் போது 2009 இல் கடற்கரும்புலிகளானோரில் லெப். கேணல் நிதி, கப்டன் வினோதன் - சுண்டிக்குளம் கடற்கரப்பில் - 19/01/2009 லெப். கேணல் மதியழகன் (மற்றும் எத்தனை என்று தெரியாது) - சுண்டிக்குளம் கடற்பரப்பு - 20/02/2009 சத்தியமாய் இவற்றை நன்னிச் சோழன் பல்வேறு இடங்களிலிருந்து "கேட்டு அறிந்து படித்து" சேகரித்தார் என்பதை தலைவரின் மெய்க்காவலராய் இருந்த புளிகளுக்கு அறியத்தருகிறேன். - கோப்ரல் காகிதப்புலி
2 months ago
அதை அறிய முடியாதுங்க...காத்தான்குடி ஒரு இரும்பு மதில் வலையம் ...யாரு எளிதில் நுழையமுடியாது
2 months ago
2 months ago
எதிர்காலத்தில் இந்தியாவில் பெண்கள் உலக கிரிக்கெட் போட்டியினை நடத்துவார்களா? இந்தியாவும் அவுஸ்ரேலியாவும் அரையிறுதியில் மோதுவதால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்குமா?
2 months ago
ஹிஸ்புல்லா 2 கோடிக்கு தங்கம் வாங்க முயற்சித்தார் என்றால் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு? அவர் அரசியல்திவிர என்ன வேலை அல்லது தொழில் செய்கிறார். அவரது மாதவருமானம் எவ்வளவு?
2 months ago
ஆமாம். மிதாலியின் வாழ்க்கை பற்றிய படம். படம்: சாபாஷ் மிது. தாப்சி பன்னு நடிச்சிருப்பா.
2 months ago
இது போன்ற திரிகளில் என் தம்பி மினக்கெட மாட்டாரே இன்று என்ன செய்கிறார் என்று பார்க்கவந்தால் கதை தண்ணியில போகுது....🤣
2 months ago
மகளிர் கிரிக்கெட் இன்றுவரை ஒரு விளையாட்டுக்கு கூடப் பார்க்கவில்லை பையன்😂 அப்ப எந்த அணியைப் போடுவதாம் ? 😅 A யிலிருந்து சொல்லிப்பார்த்தேன் திரும்பத் திரும்ப அதே வந்தது அதனால் ஆபிரிக்காவைத் தெரிவு செய்தென். நம்புங்கள் என்று சொன்னால் நம்பவா போறீங்க😂 இறுதிப் போட்டி அரையிறுதி போட்டியிலேயே வந்துடுத்தே....😊 ஆனாலும் நான் இந்தியாவை இறுதி போட்டிக்குத் தெரிவு செய்யவில்லை இலங்கையைத் தெரிவு செய்தென் அவுசுடன்..
2 months ago
ஒரு திரைப்படம் ஒன்று அந்த இந்திய வீரரை பற்றியதாக வந்திருந்தது என கருதுகிறேன் (அல்லது வேறு யாராவதாகவும் இருக்கலாம்).
2 months ago
இதுவா விடயம், ஆனால் இந்தியா முண்ணனியில் இல்லையா? அதனை தானோ என்னவோ பையன் பின்னால பாருங்கோ! பின்னால பாருங்கோ! என கூறுகிறார், அவர் இந்தியா வெல்லும் என்பதில் உறுதியாக இருக்கிறார், அந்தளவு உறுதியாக இந்தியணிகூட இருக்காது🤣.
2 months ago
இந்த நிறுவனம் ஒரு பப்ளிக் லிஸ்ட் நிறுவனம் அல்ல, சில பப்ளிக் லிஸ்ட் நிறுவனங்களின் தலைமை அதிகாரி தனக்கான போனஸாக மேலதிகமாக பங்குகளை வெளியிட்டு (மேலும் பங்குகளின் விலையினை சரிவடைய செய்த), அதற்கான அனுமதியினை திட்ட குழுவிடம் பெற்று நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுப்பார்கள், அந்த சிறிய நிறுவனங்கள் பெரும்பாலும் சுரங்க நடவடிக்கையினை ஆரம்பிக்காத நிலையிலேயே இதனை செய்வார்கள், அது போன்ற நிகழ்வு நடைபெறும் போது முதலீட்டாளர்களிடையேயான வெறுப்பு இணைய்த்தின் மூலமாக அறிந்துள்ளேன். பி டி வை எனும் நிறுவனம் பொய்யான செய்தி ஒன்றினை வெளியிட்டு அதன் தலைம அதிகாரி தனது பங்குகளை விற்று தப்பிய சம்பவத்தில் நான் அகப்பட்டு கொண்டேன், வாங்கிய 4 சத பங்கு பின்னர் 0.04 சதத்திற்கு விற்றேன்.
2 months ago
இந்த சூழ்நிலையில் 77% தாமாகவே Voluntary Liquidation செய்கிறார்கள் என இணைய தரவு கூறுகிறது, மிகுதி 23 % மட்டுமே Receiver Liquidation, அதில் இந்த தம்பதியினரும் அடக்கம். இவர்களுக்கு இந்த நடைமுறை தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு குறைவாக இருக்கிறது, எதற்காக இறுதி வரை காத்திருந்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்கள்? ஆனால் Voluntary liquidation செய்தாலும் இவர்களது நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கும். அதற்கான தண்டனையும் வழங்கப்பட்டிருக்கும், இவர்களது தவறு உறுதிப்படுத்தப்பட்டால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது, பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என.
2 months ago
அட பாவி சுக்ராச்சாரியாரே.. நீவீர் தான் இதற்கெல்லாம் காரணமோ.. அசுரர்களை தண்டிக்க வெளிக்கிட்டு அப்பாவி குடி காதலர்களை ஏன் தண்டிக்க சாபம் இட்டீர்?
2 months ago
முஸ்லீம் தாதிகளுக்கு சீருடையில் விலக்கு அளிக்கப் பட்டமைக்கு சில பிக்குகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். அரசு அறிவித்த சீருடையில் வேலை செய்ய விரும்பாவிடில்… வேறு வேலையை தேடச் சொல்லி உள்ளார்கள்.
2 months ago
கரூர் நெரிசலில் இறந்தவர்கள் குடும்பத்திடம் விஜய் பேசியது என்ன? பட மூலாதாரம், TVK கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து அக்கட்சியின் தலைவர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். "குடும்பத்தில் ஒருவனாக இருந்து உதவி செய்வேன்" என, விஜய் உறுதியளித்ததாக நிகழ்வில் பங்கேற்றவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். ஆனால், இந்நிகழ்வில் நான்கு குடும்பங்கள் பங்கேற்கவில்லை. நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு 30 நாட்களுக்குப் பிறகு விஜய் சந்தித்ததை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எப்படிப் பார்க்கின்றன? அவர்களிடம் விஜய் பேசியது என்ன? கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டெம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் கூறுவதற்கு தவெக தலைவர் விஜய் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் செல்லாதது விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதேநேரம், கரூர் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை விஜய் வெளியிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை இரண்டு வாரங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஒத்திவைப்பதாக, அக்டோபர் 1 அன்று அக்கட்சியின் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ கால் அழைப்பின் மூலம் விஜய் பேசினார். படக்குறிப்பு, கரூரில் கடந்த செப்டெம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர் (கோப்புப் படம்) 2 குடும்பங்களுக்கு வரவு வைக்கப்படாத நிதி தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட 20 லட்ச ரூபாய் நிவாரண நிதி தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக 39 குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாக நாளேடுகளில் செய்தி வெளியானது. இரண்டு குடும்பங்களுக்கு நிவாரண நிதி செல்லவில்லை என கூறப்படுவது குறித்து தவெக திருச்சி மண்டல வழக்கறிஞர் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் அரசுவிடம் பிபிசி தமிழ் கேட்டது. "வங்கிக் கணக்குகளைக் கொடுப்பதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் குழப்பம் நீடித்ததால் வரவு வைக்கப்படவில்லை. தீபாவளியை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. வங்கிக் கணக்கு விவரங்கள் கிடைத்த பிறகு வரவு வைக்கப்படும்" எனக் கூறினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கையை மத்திய புலனாய்வுத்துறை தாக்கல் செய்துள்ள நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்துக்கு அழைத்து தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, கோப்புப் படம் விஜய் பேசியது என்ன? மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. , உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கரூரில் இருந்து ஆம்னி பேருந்துகள் மூலம் தவெக நிர்வாகிகள் அழைத்து வந்தனர். திங்கள்கிழமையன்று காலை சுமார் 8.30 மணியளவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் படங்களுக்கு தனித்தனியாக மலர் அஞ்சலி செலுத்திய விஜய், பின்னர் தங்களுக்கு ஆறுதல் கூறியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். ஆனால், சந்திப்பின்போது பேசப்பட்ட விவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை தமிழக வெற்றிக் கழகம் வெளியிடவில்லை. "எங்களுக்கு இருந்த ஒரே மகனும் உயிரிழந்துவிட்ட வேதனையோடுதான் சென்றோம்" எனக் கூறுகிறார் முருகேசன். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இவரது மகன் தாமரைக்கண்ணன் உயிரிழந்துவிட்டார். எம்.ஏ ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு தரைவிரிப்பு ஒட்டும் வேலையைச் செய்து வந்ததாக முருகேசன் குறிப்பிட்டார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கரூருக்கு விஜய் வருவதைக் கேள்விப்பட்டு சென்றுள்ளான். இந்த விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. கூட்டத்தில் மயக்கம் போட்டு அவன் கீழே விழுந்துவிட்டதாக கூறினார்கள். அதிகாலை 2 மணியளவில் ஆஸ்பத்திரிக்கு போனபோது இறந்துவிட்டதாக சொன்னார்கள்" என்கிறார். "தாமரைக்கண்ணனுக்கு திருமணம் நடந்து ஓராண்டு கூட முடியவில்லை" எனக் கூறும் முருகேசன், "வாழ்க்கையைத் தொடங்கும்போதே என் மகன் இறந்துவிட்டான். மருமகளுக்கு மருத்துவர்கள் இந்த மாதம் பிரசவத்துக்குத் தேதி குறித்துள்ளனர். அதுதான் வேதனையை அதிகரிக்கிறது" எனவும் தெரிவித்தார். விஜய் ஆறுதல் கூறியது குறித்து விவரித்த முருகேசன், "மகன் இறந்துபோனதை நினைத்து அழுது கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் பேசிய விஜய், 'வருத்தப்பட வேண்டாம். உங்களுக்கு என்ன தேவையோ அதை மகனாக செய்து தருகிறேன்' எனக் கூறினார்" என்கிறார். "விஜய் பேசும்போது கட்சி நிர்வாகிகள் யாரும் உடன் இல்லை" எனக் கூறிய முருகேசன், " ஒவ்வொருவருடனும் தனித்தனியாக வந்து அவர் பேசினார். கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவிகளைச் செய்து தருவதாகக் கூறினார். மருமகளுக்கு பிரசவ தேதி நெருங்குவதால் அதற்கான உதவிகளைச் செய்து தருகிறேன் என உறுதியளித்தார்" எனவும் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கரூர் நிகழ்வில் உயிரிழந்த 41 பேரில் 11 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். கரூர் சம்பவம் குறித்த கேள்விக்கு விஜய் அளித்த பதில் கரூர் மாவட்டம் வடக்கு காந்தி கிராமம், அன்பு நகரை சேர்ந்த கிஷோர் என்பவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி கிஷோர் உயிரிழந்துவிட்டார். இவரின் தந்தை கணேஷ், கரூரில் உள்ள கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கணேஷிடம் பிபிசி தமிழ் பேசியது. "எனக்கு ஒரே ஒரு மகன்தான். மனைவியும் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். விஜய் வருவதால் கூட்டத்துக்குப் போய்விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றான். ஆனால், அவன் இறந்துபோய்விட்டதாக இரவு 2.30 மணிக்குத்தான் தெரியும்" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "மாமல்லபுரம் சென்றிருந்தோம். என்னிடம் விஜய் பேசும்போது, 'குடும்பத்தில் ஒருவனாக என்னை நினைத்துக் கொள்ளுங்கள். மகன் இல்லை எனக் கவலைப்பட வேண்டாம்' எனக் கூறினார். சுமார் ஐந்து நிமிடங்கள் என்னுடன் பேசினார்" என்கிறார். குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக விஜய் உறுதியளித்ததாகக் கூறிய கணேஷ், " ஐந்து லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு போடப்பட்டுள்ளதாக விஜய் கூறினார். அதில் தேவைப்படும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம் என்றார். தேவையான உதவிகளைச் செய்து தருவதாக உறுதியளித்தார்" எனக் குறிப்பிட்டார். "கரூர் சம்பவம் குறித்து ஏதேனும் தெரிவித்தாரா?" எனக் கேட்டபோது, " அதைப் பற்றி கேட்டபோது, 'என்ன நடந்தது என்றே தெரியவில்லை' எனக் கூறி தலைகுனிந்து கொண்டார். கரூர் சம்பவம் குறித்து வேறு எதையும் அவர் பேசவில்லை" எனக் கூறினார். மாமல்லபுரம் செல்லாத 4 குடும்பங்கள் மாமல்லபுரத்தில் நடந்த ஆறுதல் கூறும் நிகழ்வுக்கு உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினர் செல்லவில்லை. அதில் வடிவேல் என்பவரின் குடும்பமும் ஒன்று. தேநீர் கடை ஒன்றை வடிவேல் நடத்தி வந்துள்ளார். 53 வயதான இவருக்கு மனைவியும் மகளும் உள்ளனர். இவரின் மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மாமல்லபுரத்தில் நடந்த ஆறுதல் கூறும் நிகழ்வுக்கு வடிவேலின் குடும்பத்தினர் வராதது குறித்து அவரது உறவினர் சரவணனிடம் பிபிசி தமிழ் பேசியது. "கூட்டத்துக்குச் சென்ற வடிவேல் இறந்துவிட்டார். அவர் இறந்து முப்பது நாள்கள் ஆகிவிட்டது. அதற்கான சடங்குகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால், 'எங்களால் வர முடியாது' எனக் கூறிவிட்டோம்" என்கிறார். "விஜயை இன்னொரு நாள் வந்து பார்ப்பதாக கூறிவிட்டோம்" எனக் கூறுகிறார் சரவணன். 20 லட்சத்தை திருப்பி அனுப்பிய குடும்பம் மாமல்லபுரத்தில் ஆறுதல் கூறும் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தவெக தரப்பில் இருந்து வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 20 லட்ச ரூபாயை திருப்பி அனுப்பிவிட்டதாக சங்கவி என்பவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டி கொங்கு நகரைச் சேர்ந்த இவரின் கணவர் ரமேஷ், கடந்த செப்டெம்பர் 27 அன்று தவெக பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார். "நேரில் வந்து விஜய் ஆறுதல் சொல்வார் என்று தான் எதிர்பார்த்தோம். பணத்தை எதிர்பார்க்கவில்லை. பணத்தை வைத்து இறந்த உயிரை யாராலும் திருப்பித் தர முடியாது" என, செய்தியாளர்களிடம் ரமேஷின் மனைவி சங்கவி கூறியுள்ளார். "நாங்களாக தேடிச் சென்று விஜயைப் பார்ப்பதற்கு விருப்பம் இல்லை" எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட தங்களைத் தவிர்த்துவிட்டு தங்களின் வேறு சில உறவினர்களை சென்னைக்கு அழைத்துச் சென்று ஆறுதல் கூறும் நிகழ்வில் இடம்பெற வைத்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் தரப்படவில்லை. கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் கூறியது சமூக ஊடகங்களில் விவாதப்பொருளாக மாறியது. இது புதிய அணுகுமுறையாக உள்ளதாகக் கூறியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், "இந்த விவகாரத்தில் அக்கட்சியினரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கருத்து கூற வேண்டும். நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை" எனக் கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp85zn1p58po