Aggregator
இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள்
இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள்
இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள் (பகுதி I)
9 Jan 2026, 7:14 AM

ஆறு மைல்கற்களும் அவற்றால் எழும் சவால்களும்
ருக்மிணி எஸ்
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் உலகை ஆழமாகப் பாதிக்கின்றன. ஆயினும், இந்த முக்கியமான மாற்றங்கள் இந்தியாவுக்குள்ளும் உலக அளவிலும் போதுமான அளவு ஆவணப்படுத்தப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை.
‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data For India) என்னும் தளத்தில் உயர்தரமான இந்திய, உலகளாவிய தரவு மூலங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றங்களை நாங்கள் நெருக்கமாகக் கண்காணிக்கிறோம்: உலகளாவிய தரவுகளுக்கு உலக மக்கள்தொகையின் சாத்தியப்பாடுகள் குறித்த ஐக்கிய நாடுகளின் 2024ஆம் ஆண்டின் அறிக்கை (திருத்தப்பட்டது) (United Nations World Population Prospects, 2024 Revision), இந்தியத் தரவுகளுக்கு 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System), தேசியக் குடும்ப நல ஆய்வின் (National Family Health Survey) மக்கள்தொகை மதிப்பீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். மூன்று பகுதிகள் கொண்ட இந்தத் தொடரின் மூலம், மக்கள்தொகை மாற்றங்கள் குறித்த இன்றியமையாத இந்தியத் தரவுகளைத் தொகுத்து, இந்தியாவில் நடைபெறும் இதர சமூக-பொருளாதார மாற்றங்களின் பின்னணியில் வைத்து, உலகளாவிய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கிறோம். இதன் மூலம், புதிய ஆராய்ச்சிக்கான பகுதிகளையும், கொள்கை, விவாதங்களுக்கான திசைகளையும் அடையாளம் காண்கிறோம்.
பகுதி Iஇல், தற்போதுள்ள நிலைமையையும், கவனிக்கப்படாமல்போனதாக நாங்கள் கருதும் முக்கியமான அண்மைக்காலத் தரவுகளையும் விவரிக்கத் தேவையான தரவுகளை வழங்குகிறோம். பகுதி IIஇல், குறைந்துவரும் பிறப்பு விகிதங்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்வதுடன், இந்தியா ஒருபுறம் தனித்துவமானதாகவும் மற்றொரு புறம் உலகளாவிய போக்கின் அங்கமாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டும் ஆராய்ச்சிகளைப் பகிர்ந்துகொள்கிறோம். பகுதி IIIஇல், இந்திய மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை வேறுபாடுகள், அவை தற்போதைய சமூக-பொருளாதார, அரசியல் பதற்றங்களுக்கு வழிவகுக்கும் விதங்கள் ஆகியவை பற்றிய தரவுகளை ஆராய்கிறோம்.
மக்கள் தொகை விஷயத்தில் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முக்கியமான ஆறு திருப்புமுனைகளைக் கண்டுள்ளது. இவை உலகளாவிய மக்கள்தொகையியல், மேம்பாடு, வளர்ச்சி ஆகியவற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தருணங்கள்.
1. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறுதல்
2020களின் தொடக்கத்தில், இந்தியா சீனாவை விஞ்சி 1.4 பில்லியன் மக்களுடன் உலகிலேயே மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக ஆனது.
இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதில் ஐயம் இல்லை. மேலும் பல தசாப்தங்களுக்கு அது அவ்வாறே தொடரும். 2060களின் தொடக்கத்தில் உச்சத்தை அடையும்போது இந்தியாவின் மக்கள்தொகை 1.7 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எதிர்கால மக்கள்தொகை தொடர்பான கணிப்புகள் அதிகபட்சமாக 2100வரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தக் கட்டத்தைத் தாண்டியும் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மக்கள்தொகையின் அளவு மற்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது. ஆனால் நைஜீரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட இதர பெரிய நாடுகளும் வளர்ந்துவருகின்றன. உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு 2030க்குள் உச்சத்தை அடைந்து, அதன் பிறகு குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தியாவின் மக்கள்தொகை தொடர்ந்து வளர்ந்தாலும், இந்த வளர்ச்சியின் வேகம் ஏற்கெனவே கணிசமாகக் குறைந்துவிட்டது. நம்பகமான, ஒப்பிடக்கூடிய தரவு கிடைத்த ஆரம்ப ஆண்டுகளில், அதாவது இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகும் 1950களின் தொடக்கத்திலும் இந்தியாவின் மக்கள்தொகை ஆண்டுக்கு 2 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துவந்தது. அதே காலகட்டத்தில் உலகின் மொத்த மக்கள்தொகை ஆண்டுக்கு சுமார் 1.75 சதவீதம் வளர்ந்துவந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய மூன்று தசாப்தங்களில், இந்தியாவின் மக்கள்தொகை இருமடங்காக அதிகரித்தது.
1980களிலிருந்து இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறையத் தொடங்கியது. 2020க்குள், இந்தியாவின் வருடாந்தர மக்கள்தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1 சதவீதத்திற்குக் கீழே குறைந்தது. அடுத்த சில ஆண்டுகளில் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்திற்குக் கீழே இது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மேலும் குறையும்போது இந்த இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புத்தாயிரத்தின் தொடக்கத்தில் இந்தியா தனது மக்கள்தொகையில் ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் மக்களைச் சேர்த்துவந்தது. பிறகு இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 2024ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா ஆண்டுக்கு 13 மில்லியனுக்கும் குறைவான மக்களையே சேர்த்தது. இந்தப் போக்கு தொடரும் நிலையில், இந்தியா மக்கள்தொகையைக் கூட்டுவதை 2060க்குள் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அதன் மொத்த மக்கள்தொகை குறையத் தொடங்கும்.

மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்படும் குறைவு நாடு முழுவதும் நிகழ்கிறது. இருப்பினும், இப்படிக் குறைவதில் இரண்டு வேறுபட்ட வேகங்கள் உள்ளன.
வரலாற்று ரீதியாக, இந்தியாவின் தெற்கு, மேற்கு மாநிலங்கள் வளமானவையாக இருந்துவருகின்றன. பெண்களின் கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளன. இதன் விளைவாகத் தெற்கு, மேற்கு மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சிக்கும், ஏழ்மையான, குறைந்த வளர்ச்சியடைந்த கிழக்கு, வடக்கு மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சிக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது.
இந்திய மாநிலங்கள் முழுவதும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்கள் 1970கள்வரை ஒரே மாதிரியாகவே இருந்தன. 1980களிலிருந்து இந்தியாவின் தெற்கு மாநிலங்களின் மக்கள்தொகை மத்திய, வடக்கு, கிழக்கு மாநிலங்களைவிட மிக மெதுவாக வளர்ந்துவருகிறது. உதாரணமாக, இந்தியாவின் தெற்கில் அமைந்துள்ள மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமான கேரளத்தில் வருடாந்தர மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1970களில் இரண்டு சதவீதத்திற்குக் கீழே குறைந்தது.
இந்தியாவின் மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றான, கிழக்கில் உள்ள கங்கைச் சமவெளியில் அமைந்துள்ள பிகாரில், வருடாந்தர மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2010களின் பிற்பகுதியில்தான் இரண்டு சதவீதத்திற்குக் கீழே குறையத் தொடங்கியது. கேரளத்தில் மக்கள்தொகை இரண்டு சதவீதத்திற்குக் கீழே குறைந்த நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிகாரில் அவ்வாறு நிகழ்ந்திருக்கிறது.
மக்கள்தொகை வளர்ச்சி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் மாநிலங்கள் எதிர்காலத்தில் இந்தியாவின் மக்கள்தொகையில் அதிக பங்கைக் கொண்டிருக்கும் என்பதே இதன் பொருள். 2011முதல் 2036வரையிலான இந்தியாவின் மொத்த மக்கள்தொகை அதிகரிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே நிகழ்ந்திருக்கும். இதே காலகட்டத்தில் இந்திய மக்கள்தொகையில் அனைத்துத் தென்னிந்திய மாநிலங்களின் பங்கு குறைந்திருக்கும். (இந்தத் தொடரின் பகுதி III இந்தப் பிளவை இன்னும் விரிவாக விவாதிக்கிறது.)
2. கருவுறும் எண்ணிக்கை மக்கள்தொகையைப் ‘பதிலீடு செய்யும் விகிதத்திற்குக்’ கீழே குறைதல்
பிறப்பு விகிதங்களில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சிதான் மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்படும் இந்த வேகக் குறைவுக்குக் காரணம்.
மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate – TFR) என்பது ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றெடுக்க வாய்ப்புள்ள குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையைக் குறிக்கிறது. நாடுகள் வளரும்போதும் பெண்களுக்குச் சிறந்த சுகாதாரமும் கல்வியும் கிடைக்கும்போது கருவுறுதல் விகிதங்கள் குறையத் தொடங்குகின்றன. இது உலகம் முழுவதும் காணப்படும் போக்கு.
ஒரு நாட்டின் TFR 2.1 ஆகக் குறையும்போது, அதாவது பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்றால், அந்த நாடு “மக்கள் தொகையைப் பதிலீடு செய்யும் அளவுக்குக் கருவுறுதல்” (replacement fertility) என்னும் நிலையை அடைந்துவிட்டது என்று மக்கள்தொகையியலாளர்கள் கூறுகின்றனர். இரண்டு பெரியவர்கள் தங்கள் வாழ்நாளில் 2.1 குழந்தைகளைப் பெற்றெடுக்கும்போது, குழந்தைப் பருவம் அல்லது இளமைப் பருவத்தில் இறப்பதற்கான சில வாய்ப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், அந்தத் தம்பதியினர் இரண்டு பெரியவர்களை உருவாக்குவார்கள். இதனால் மக்கள்தொகையின் அளவு மாறாமல் இருக்கும் என்பதே பதிலீடு செய்யும் அளவுக்குக் கருவுறுதல் என்பதன் பொருள். இது ஒரு நாட்டின் மக்கள்தொகைப் பயணத்தில் முக்கியமான மைல்கல். பதிலீடுசெய்யும் நிலைக்குக் கீழே கருவுறுதல் குறைந்தால், மக்கள்தொகையின் மொத்த எண்ணிக்கை குறையத் தொடங்கும்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆரம்ப தசாப்தங்களில் அதிகமாக இருந்த இந்தியாவின் TFR பிறகு வேகமாகக் குறைந்து, சமீபத்திய அதிகாரப்பூர்வ இந்தியத் தரவுகளின்படி, இப்போது பதிலீட்டு விகிதத்திற்குக் கீழே 1.9 ஆகக் குறைந்துள்ளது. நகர்ப்புற இந்தியாவைவிடக் கிராமப்புற இந்தியாவில் கருவுறுதல் விகிதம் அதிகமாக உள்ளது; கிராமப்புற இந்தியாவிலும், கருவுறுதல் இப்போது பதிலீட்டு விகிதத்தை நெருங்கிவிட்டது.
கருவுறுதல் எல்லா இடங்களிலும் குறைந்தாலும், இந்தியாவிற்குள் மாநிலங்களுக்கிடையே இதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. தெற்கு, மேற்கு மாநிலங்களில் TFR பதிலீட்டு விகிதத்திற்குக் கீழே உள்ளது. இந்த மாநிலங்களில், கருவுறுதல் நிலைகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளதைப் போலவே குறைவாக உள்ளன. உதாரணமாக, மும்பையைத் தலைநகராகக் கொண்ட மேற்கு மாநிலமான மகாராஷ்டிரத்தின் கருவுறுதல் விகிதம் நார்வேயைவிடக் குறைவாக உள்ளது. (இந்தத் தொடரின் பகுதி II கருவுறுதல் விவாதத்தை இன்னும் விரிவாக ஆராய்கிறது.)

வரலாற்று ரீதியாக அதிகக் கருவுறுதலைக் கொண்டிருந்த வடக்கு, கிழக்கு மாநிலங்களிலும் கருவுறுதல் குறைந்துள்ளது. கருவுறுதலில் இந்தியாவின் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் மாநிலமான பிகாரிலும்கூட TFR இப்போது ஒரு பெண்ணுக்கு 3.0 குழந்தைகளுக்கும் குறைவாகவே உள்ளது.
எனினும், வடக்கு, தெற்கு மாநிலங்களின் கருவுறுதல் விகிதங்களில் உள்ள இந்தத் தொடர்ச்சியான இடைவெளி இந்திய அரசியலில் முக்கியமானதொரு வேறுபாடாகும். கிராமப்புற பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் TFR இப்போதும் ஒரு பெண்ணுக்கு 2.5 குழந்தைகளுக்கும் அதிகமாக உள்ளது. அதேசமயம் கூடுதலாக வளர்ச்சியடைந்த மாநிலங்களின் கிராமப்புறங்களில்கூட TFR இப்போது பதிலீட்டு விகிதத்திற்குக் கீழே உள்ளது.
3. குழந்தைகளின் எண்ணிக்கை குறைதல்
பிறப்பு விகிதங்கள் இவ்வளவு தீவிரமாகக் குறைந்ததன் விளைவாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2000களின் முற்பகுதியிலிருந்து குறையத் தொடங்கியது. புத்தாயிரத்தின் தொடக்கத்தில் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 29 மில்லியன் குழந்தைகள் என்னும் உச்சநிலையை அடைந்து, அதன் பிறகு குறையத் தொடங்கியது. இந்தியாவின் குழந்தைகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்த அளவிலும் ஒப்பீட்டளவிலும் கணிசமாகக் குறைந்துள்ளது என்பதே இதன் பொருள்.
1960களின் முற்பகுதியில், இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள். 2025க்குள் இந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது. இன்னும் இருபது ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள குழந்தைகளைவிட 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இந்திய மாநிலங்களின் சமூக-பொருளாதார, மக்கள்தொகை நிலவரங்களில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், குழந்தைகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் குறைந்துவருகிறது.
இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் கருவுறுதல் விகிதங்கள் தாமதமாகக் குறைந்ததன் காரணமாக, ஒட்டுமொத்த எண்ணிக்கையிலும், மொத்த மக்கள்தொகையில் அவற்றின் பங்கிலும், குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. இந்தியாவில் உள்ள 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூவரில் ஒருவர் பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே வாழ்கிறார்கள். எனினும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலுமே குழந்தைகளின் எண்ணிக்கை சீராகக் குறைந்துவருகிறது.

4. மக்கள் தொகையின் சாளரத்தை மூடுதல்
பொருளாதார நிபுணரும் மக்கள்தொகையியலாளருமான டேவிட் இ. ப்ளூமும் அவரது இணை ஆசிரியர்களும் 2003ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், “மக்கள்தொகையின் பலன்” (demographic dividend) என்ற சொல்லாடலை உருவாக்கினார்கள். ஆய்வுத் துறையில் பெரும் செல்வாக்கு செலுத்திய கட்டுரை இது. சரியான கொள்கைகள் அமலில் இருக்கும் பட்சத்தில், ஒரு நாட்டின் மக்கள்தொகையில் உழைக்கும் வயதினரின் பங்கு அதிகம் இருப்பதால் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியின் ஊக்கத்தை இந்தச் சொல்லாடல் குறிக்கிறது.
இந்தச் சொல்லாடல் இந்தியாவின் இளைஞர் மக்கள்தொகை தொடர்பில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிப் பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள். இது ஐரோப்பிய, வட அமெரிக்க, கிழக்காசிய நாடுகளைவிட இந்தியாவை மிகவும் இளைய நாடாக ஆக்குகிறது.எடுத்துக்காட்டாக, சராசரி அமெரிக்கர் அல்லது சீனரைவிடச் சராசரி இந்தியர் பத்தாண்டுகளுக்கும் மேல் இளையவராக இருக்கிறார்.
இருப்பினும், மக்கள்தொகையின் இந்தச் சாளரம் இந்தியாவில் இப்போது மூடப்பட்டுவருகிறது. மக்கள்தொகை மற்றும் தொழிலாளர்கள் தொடர்பான புள்ளிவிவரங்களின்படி “உழைக்கும் வயதுடையவர்கள்” என்று வரையறுக்கப்படும் 15-64 வயதுக்குட்பட்ட இந்தியர்களின் பங்கு, ஐ.நா.வின் மக்கள்தொகைக் கணிப்புகளின்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் உச்சத்தை அடையவிருக்கிறது.

இது மிக ஆழமான தாக்கங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, கடந்த காலத்தை ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது: தனது உழைக்கும் வயதுடைய மக்கள்தொகைக் குழுமத்திலிருந்து திட்டமிடப்பட்ட “பலனை” இந்தியாவால் பெற்றெடுக்க முடிந்ததா?
அடுத்து, எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.
சார்ந்திருப்போரின் விகிதம் என்பது மக்கள்தொகையியலாளர்களும் பொருளாதார நிபுணர்களும் கூர்ந்து கவனித்துவரும் முக்கியக் காரணி. உழைக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கும் (குழந்தைகள் அல்லது முதியவர்கள்) உழைக்கும் வயதுடைய மக்கள்தொகைக்கும் இடையேயான விகிதம்தான் சார்ந்திருப்போரின் விகிதம். இந்த விகிதம் அதிகமாக உள்ள மாநிலங்கள் அல்லது நாடுகளில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகையின் மீது அதிக நிதிச்சுமை இருக்கும். சார்ந்திருப்போருக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டியிருப்பதால் அரசின் நிதிச்சுமையும் கூடுதலாக இருக்கும்.
இந்தியாவின் பெரிய எண்ணிக்கையிலான உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை, சுருங்கிவரும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டும் இணைந்ததன் விளைவாக, நாட்டின் சார்ந்திருப்போரின் விகிதம் குறைந்துள்ளது. 2026க்குள், இந்தியாவின் சார்ந்திருப்போரின் விகிதம் 543ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, உழைக்கும் வயதுடைய ஒவ்வொரு 1,000 பேருக்கும் 543 குழந்தைகளும் முதியவர்களும் இருப்பார்கள்.
இந்திய மக்களின் வயது தொடர்ந்து அதிகமாகும்போது, சார்ந்திருப்போரின் விகிதம் மீண்டும் உயரத் தொடங்கும். இந்த முறை வளர்ந்துவரும் முதியோர் மக்கள்தொகையால் இது நிகழும். ஆனால் இது சீரற்ற முறையில் பரவும். வடக்கு, கிழக்கு மாநிலங்களில் இப்போதுதான் பிறப்பு விகிதங்கள் குறைவதால், அவற்றின் சார்ந்திருப்போரின் விகிதங்கள் குறையும். ஏனெனில் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகை வளர்ந்து, சார்ந்திருப்போரை ஆதரிப்பதற்கான கூடுதல் திறன் உருவாகியிருக்கும். தெற்கு, மேற்கு மாநிலங்களில், அவற்றின் மக்களுக்கு வயதாகி, அவற்றின் பணியாளர்கள் சுருங்கும்போது, சார்ந்திருப்போரின் விகிதங்களும் அதற்கேற்ப உயரும்.
5. தொற்றுநோயியல் மாற்றம்
உலகம் முழுவதும், காலப்போக்கில், வளர்ச்சியும் மேம்பாடும் மக்கள் எதனால் நோய்வாய்ப்படுகிறார்கள் மற்றும் இறக்கிறார்கள் என்பதை மாற்றியமைக்கின்றன.
உலக சுகாதார நிறுவனம் (WHO) இறப்புக்கான காரணங்களை மூன்று பரந்த வகைகளாகப் பிரிக்கிறது:
(i) தொற்று நோய்கள், பேறுகாலப் பிரச்சினைகள், பிறப்புக்குப் பிந்தைய சிக்கல்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு – மலேரியா போன்ற கிருமிகளால் பரவும் நோய்கள், கர்ப்பம், பிரசவம், பிறந்த்தும் ஏற்படும் சிக்கல்களால் ஏற்படும் இறப்புகள் ஆகியவை அடங்கும்.
(ii) தொற்றா நோய்கள் – இருதய நோய்கள், புற்றுநோய்கள் ஆகியவையும், நேரடித் தொடர்பு, காற்று அல்லது நோய்க்கிருமிகள் மூலம் பரவாத பிற நோய்கள் ஆகியவை இதில் அடங்கும்.
(iii) காயங்கள் – இதில் கொலைகள், தற்கொலைகள் மற்றும் சாலை விபத்துகள் ஆகியவை அடங்கும்.
ஒரு குழுவினர் புவியியல் ரீதியாகவோ சமூக ரீதியாகவோ குறைந்த வருமானம், மோசமான ஊட்டச்சத்து, சுத்தமான சுற்றுச்சூழல் இன்மை, சுகாதாரம் பேணுவதற்கான வாய்ப்பு குறைவாக இருத்தல் ஆகிய சூழ்நிலைகளில் இருக்கும்போது, தொற்று நோய்களும் பிரசவத்தை ஒட்டி நடக்கும் அசம்பாவிதங்களுமே பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணமாக அமைகின்றன. இந்தக் குழுக்கள் பணக்காரர்களாகி வயதாகும்போது, இந்த காரணங்களால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க முடியும்; அவை குறைந்துவிடுகின்றன. இதன் விளைவாக, இதய நோய், புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்களால் ஏற்படும் இறப்புகளின் பங்கு ஒப்பீட்டளவில் உயரத் தொடங்குகிறது.
இந்தியா இந்த மாற்றத்தின் நடுவில் உள்ளது. இது பொது சுகாதாரத்தில் தொற்றுநோயியல் மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சூழலில், பிரதான இறப்புக்கான காரணங்கள் தொற்று நோய்கள், பிரசவம் தொடர்பான நிலைமைகள் ஆகியவற்றிலிருந்து தொற்றாத நோய்களுக்கு மாறுகின்றன. பேறுகால வசதிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், மலேரியா போன்ற தொற்று நோய்களிலிருந்து ஏற்படும் இறப்புகள் பெருமளவு குறைதல் ஆகியவற்றில் இது பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் வளமான மாநிலங்கள் இந்தத் தொற்றுநோயியல் மாற்றத்தில் மேலும் முன்னேறியுள்ளன; அங்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே பெரும்பாலான இறப்புகளுக்குத் தொற்றாத நோய்கள் காரணமாகிவிட்டன. ஏழ்மையான மாநிலங்களிலோ மிக அண்மைக் காலத்தில்தான் தொற்றுநோயியல் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகளுக்கு இன்றும் தொற்று நோய்களே காரணமாக இருக்கின்றன. இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் 20 சதவீதத்திற்கும் குறைவான இறப்புகளுக்கு மட்டுமே தொற்று நோய்கள் காரணமாக உள்ளன. தொற்றாத நோய்கள் இப்போது இந்தியாவின் குறைந்த, அதிக வளர்ச்சியடைந்த மாநிலங்கள் இரண்டிலுமே மொத்த இறப்புகளில் பாதிக்கும் மேலாகக் காரணமாகின்றன. ஆனால் தொற்றாத நோய்களால் ஏற்படும் இறப்பின் அளவு பணக்கார மாநிலங்களில் கணிசமாக அதிகமாக உள்ளது.
6. உயரும் இறப்பு விகிதம்
1950கள் முதல் 2000களின் முற்பகுதிவரை இந்தியா தனது இறப்பு விகிதத்தில் (மக்கள் தொகைக்கு விகிதாசாரமாக ஆண்டுதோறும் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை) சீரான வீழ்ச்சியைக் கண்டது. இந்தியாவில் ஆயுட்காலம் காலப்போக்கில் சீராக வளர்ந்துள்ளது. 1970இல் ஆயுட்காலம் 50 வயதுக்குக் குறைவாக இருந்தது. இன்று 70க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒப்பிடக்கூடிய தரவு கிடைத்த 1970களில், இந்திய ஆண்களின் ஆயுட்காலம் பெண்களைவிட அதிகமாக இருந்தது. 1980களின் முற்பகுதியில் இந்த நிலை தலைகீழாக மாறியது. 2010களின் பிற்பகுதியில் பிறந்த ஒரு பெண் குழந்தை, அதே ஆண்டில் பிறந்த ஒரு ஆண் குழந்தையைவிடக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அதிக காலம் வாழும் என்று எதிர்பார்க்கலாம்.
குழந்தைகளின் உயிருக்கான ஆபத்துகள் பெரிதும் முறையில் குறைக்கப்பட்டதே இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவதற்கு முக்கியக் காரணம். 2025இல் இந்தியாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இறந்தன. ஆனால் கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் கைக்குழந்தைகளும் குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்தில் இருக்கும் குழந்தைகளும் இறக்கும் அபாயம் பெருமளவு குறைந்துள்ளது. 1950களில், இந்தியாவில் இறந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள்; ஒவ்வொரு ஆண்டும் இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள். இப்போது ஆரம்பகாலக் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் இறப்புகள் இந்தியாவில் ஏற்படும் பத்து இறப்புகளில் ஒன்றுக்கும் குறைவாகவே உள்ளன.
குழந்தை இறப்பு விகிதத்தில் ஏற்பட்ட இந்தப் பெரிய முன்னேற்றங்களின் விளைவாக, இந்தியாவில் இறப்பின் அபாயம் ஒப்பீட்டளவில் முதியோர் குழுக்களுக்கு மாறிவருகிறது. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் குழந்தை இறப்பு அபாயம் முதிய வயதில் இறக்கும் அபாயத்தைவிட அதிகமாக உள்ளது. பணக்கார மாநிலங்களில், இறப்புக்கான அபாயம் குழந்தைகளைக் காட்டிலும் முதியோரிடத்தில் அதிகமாகியிருக்கிறது.
உதாரணமாக, கேரளத்தில், குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate – IMR) இப்போது ஐந்தாகக் குறைந்துள்ளது. (அதாவது, ஓராண்டில் உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு 1,000 குழந்தைகளில் ஐந்து குழந்தைகள் இறந்துபோகின்றன.) இது வடக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது. கேரளம்தான் இப்போது இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கான இறப்பு அபாயத்தைக் காட்டிலும் ஒரு குழந்தைக்கான இறப்பு அபாயம் குறைவாக இருக்கும் முதல் மாநிலமாகும். பெரும்பாலான வளரும் நாடுகளில் குழந்தைப் பருவத்தினருக்கு இருக்கும் தீவிர அபாயத்தைக் கேரளம் நீக்கிவிட்டது.
ஆனால் நாடு முழுவதும் வயதானவர்கள் எண்ணிக்கை உயரும் நிலையில், ஒட்டுமொத்த மக்கள்தொகையின் இறப்பு விகிதங்கள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. 1950களிலிருந்து சீராகக் குறைந்துவந்த இந்தியாவின் மொத்த இறப்பு விகிதம் (Crude Death Rate – CDR) – மக்கள்தொகையோடு ஒப்பிடுகையில் ஆண்டுதோறும் மதிப்பிடப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை – கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக 2020, 2021ஆம் ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்தது. 2023க்குள் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு CDR திரும்பியது. ஆனால் 2024இலிலிருந்து, இந்தியாவின் CDR உயரும் என்றும், எதிர்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. விகிதாச்சார அளவில் அல்லாமல் முழுமையான எண்ணிக்கையிலும், இந்தியாவில் ஆண்டுதோறும் இறப்புகளின் எண்ணிக்கை 2010களிலிருந்து அதிகரித்துவருகிறது.

முடிவும் தரவு எச்சரிக்கைகளும்
இந்த ஆறு போக்குகளையும் ஒன்றாகப் பார்க்கும்போது நாடு ஒரு சிக்கலான தருணத்தில் இருப்பது தெரிகிறது. இந்திய மக்கள்தொகை முழுமையான எண்ணிக்கையில் இன்னும் வளர்ந்துகொண்டிருந்தாலும், உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு விரைவில் குறையத் தொடங்கும். உலகம் உணர்ந்துகொண்டிருப்பதைவிட வேகமாகக் கருவுறுதல் குறைந்துவருகிறது. இந்தியாவிற்குள்ளும் இந்த மாற்றத்தின் அளவை ஒரு சிலரே புரிந்துகொண்டிருக்கிறார்கள். குழந்தை மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துவருகிறது. மக்கள்தொகையால் கிடைக்கும் பலனுக்கான சாளரம் (உழைக்கும் வயதிலுள்ள மக்கள்தொகையால் கிடைக்கும் பலன்) மூடிக்கொண்டிருக்கிறது. இந்தியர்கள் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனால் மக்களுக்கு வயதாகும்போது இறப்பு விகிதங்கள் உயரும். இந்தப் போக்குகள் அனைத்தும் இந்தியாவின் பணக்கார, ஏழை மாநிலங்களின் மாறுபட்ட யதார்த்தங்களால் மேலும் நுணுக்கமான விளைவுகளைக் கொண்டிருக்கின்றன.
ஆயினும், இந்தியக் கல்வித்துறை, ஊடகங்கள் அல்லது அரசியல் ஆகிய களங்களில் நடக்கும் பொது விவாதம் மாறியுள்ள இந்த யதார்த்தங்களுடன் இணைந்து பயணிக்கவில்லை. பிறப்பு விகிதங்கள் குறைவது முக்கியமான விவாதமாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், “மக்கள்தொகை வெடிப்பு” தொடர்பான விவாதமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. தெற்கு மாநிலங்கள் பலவற்றைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது: மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமைகளிலிருந்து மிகவும் மாறுபட்ட பொது சுகாதார முன்னுரிமைகள், வயதான மக்கள்தொகை அதிகரிப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசு, சந்தை சார்ந்த தீர்வுகளின் தேவை, உழைக்கும் வயதுள்ள மக்கள்தொகை குறைவதைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் இடம்பெயர்வு குறித்து முன்பே நடந்திருக்க வேண்டிய விவாதம் ஆகியவை முக்கியமானவை. இவை தவிர, பெரும்பாலான மாநிலங்களுக்கு இடையேயான மக்கள்தொகை விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தும் தேர்தல் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதம் தனி.
இந்தத் தொடர் மூலம் நாங்கள் முதலில் தரவுகளைப் பொது வெளிக்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம். இந்தியாவிற்கான மக்கள்தொகைத் தரவுகள் சில கடுமையான குறைபாடுகளைக் கொண்டுள்ளன. இந்தியா 2011க்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தாததால், 2011க்குப் பிந்தைய தரவுகள் இந்தியாவின் பதிவாளர் ஜெனரலால் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்பட்ட கணிப்புகளிலிருந்து வருகின்றன. இந்த மதிப்பீடுகள் அடிப்படை ஆண்டிலிருந்து விலகிச் செல்லச் செல்ல, அவற்றின் நம்பகத்தன்மை குறைந்துபோவதை எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது.
நேரடியான தரவுகள் இல்லாததால் இறப்பு பற்றிய தரவுகளும் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு இறப்பும் பதிவுசெய்யப்பட்டு, அதன் காரணத்தை ஒரு சுகாதார நிபுணர் உறுதிப்படுத்துவதே இறப்பைக் கணக்கிடுவதற்கு மிகவும் நேரடியான வழி. இந்தியாவைப் போன்ற குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் எல்லா இடங்களிலும் சீரான முறையில் இதைச் செய்வது சாத்தியமில்லை. அனைத்து இறப்புகளும் சிவில் அதிகாரிகளிடம் பதிவு செய்யப்படுவதில்லை. ஏழ்மையான மாநிலங்களில் இறப்புப் பதிவு விகிதங்கள் இன்னும் குறைவாகவே உள்ளன.
இந்த இடைவெளிகளை நிரப்ப, இந்தியாவில் மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System – SRS) உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான பிரதிநிதித்துவம் கொண்ட பெரிய அளவிலான மாதிரிக் கணக்கெடுப்பை நடத்துகிறது. இதில் கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்குச் சென்று, முந்தைய ஆண்டில் அந்த வீட்டில் நடந்த இறப்புகள் குறித்து விசாரித்து, தேசிய இறப்பு குறித்த மதிப்பீடுகளை உருவாக்குகிறார்கள். எங்கள் பெரும்பாலான ஆய்வுகள் இந்தத் தரவை நம்பியே உள்ளன. இருப்பினும், இதிலிருந்து கிடைக்கும் இறப்புத் தரவுகளில் அமைப்புரீதியான சிக்கல்களும் உள்ளன.
தரவு மூலங்களையும் மூலத் தரவுகளையும் தீவிரமாக அலசி, அதை எங்கள் பகுப்பாய்வில் இணைத்துக்கொண்டு இந்தியாவின் மக்கள்தொகைச் சிக்கல்கள் பற்றிய உரையாடலைக் கணிசமாக முன்னோக்கிக் கொண்டுசெல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
கட்டுரையாளர்:
ருக்மிணி எஸ். ‘தரவு இந்தியா’ (Data for India) நிறுவனத்தின் நிறுவனர். CASIஇன் தொலைதூர ஆய்வாளர். மக்கள்தொகையியல், சுகாதாரம், வீட்டுக் குடும்பப் பொருளாதாரம் ஆகியவை இவர் முக்கியமாகக் கவனம் செலுத்தும் பகுதிகள். இதற்கு முன்பு இந்தியச் செய்தி ஊடகங்களில் தரவுசார் இதழியல் பிரிவுக்குத் தலைமை தாங்கியுள்ளார் Whole Numbers Half Truths: What Data Can and Cannot Tell Us About Modern India (Westland, 2021) என்ற புத்தகத்தின் ஆசிரியர்.
தமிழில்: டி.ஐ. அரவிந்தன்
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
தகுமோ… இது முறையோ! - கிரீன்லாந்து விவகாரம்
தகுமோ… இது முறையோ! - கிரீன்லாந்து விவகாரம்
தகுமோ… இது முறையோ!
கிரீன்லாந்து விவகாரம்
image: axious. co
1721 இல் டென்மார்க் இனால் காலனியாக்கப்பட்டு, பின் இணைக்கப்பட்டதுதான் கிரீன்லாந்து தீவு. வரலாற்றுப் போக்கில் டென்மார்க் இத் தீவுக்கு ஒரு சுய ஆட்சிப் பிரதேசம் (Autonomous Territory) என்ற அந்தஸ்தைக் கொடுத்து வைத்திருக்கிறது. அவை இரண்டும் டென்மார்க் இராசதானி (Kingdom of Denmark)என்ற வடிவத்துள் இணைக்கப்பட்டுள்ளன. கிரீன்லாந்தின் வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு, நீதித்துறை என்பன டென்மார்க் இன் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. பெருமளவு நிதி உதவியை டென்மார்க் வழங்குகிறது. அதிக இயற்கை கனிம வளங்களைக் கொண்டது இத் தீவு. அத்தோடு மேற்குப் பிராந்தியத்திற்கு மூலோபாய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும்.
இதன் காரணமாக ட்றம்ப் கிரீன்லாந்த்து மீது கண் வைத்திருப்பதும் அதை அவர் கையகப்படுத்த உறுதியுடன் இருப்பதும் அழுத்தமாகத் தெரிகிறது. அவரது நிகழ்ச்சி நிரலில் அடுத்தது அதுதானா என்பதும், அத் தீவு போர் மூலம் கைப்பற்றப்படுமா என்பதும் சந்தேகத்துக்கு உரியன. அடுத்தது கிரீன்லாந்துதான் என எழுப்பிவிடப் பட்டிருக்கிற செய்தி ஒரு கவனத் திசைதிருப்பலாகவும் இருக்கலாம். எதிர்பாராமல் ஈரான் மீதோ கொலம்பியா மீதோ தாக்குதல் நடந்தாலும் ஆச்சரியமில்லை. ஈரானில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பின் சாதகமான நிலையை ஈரானிய மக்களின் அரசுக்கெதிரான போராட்டம் சிஐஏ க்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
கொலம்பியா அரச தலைவர் Gustavo Petro அவர்கள் முன்னாள் M-19 விடுதலை இயக்கப் போராளியாவார். இடதுசாரிய சிந்தனை முறை கொண்டவர். அதனால் ட்றம் க்கு அவர் ஒரு sick man ஆக தெரிகிறார். இதுகுறித்து ட்றம்ப் க்கு மிக காட்டமான முறையில் அவர் பதிலளித்திருக்கிறார். தான் சமாதான ஒப்பந்தத்துக்குப் பிறகு ஆயுதம் ஏந்துவதில்லை என முடிவெடுத்து இருந்ததாகவும், அமெரிக்கா போருக்கு வந்தால் அதன் பிறகு தான் மீண்டும் ஆயுதம் ஏந்தத் தயங்க மாட்டேன் எனவும் சொல்லியிருக்கிறார். வெனிசுவேலா தலைவரையும் துணைவியாரையும் கடத்தியது குறித்து ஒரு காட்டமான அரசியல் விமர்சனத்தையும் முன் வைத்திருக்கிறார். “விரும்பினால் வந்து கைது செய்” என ட்றம்ப் க்கு சவால் வேறு விடுத்திருக்கிறார். இது ஓர் இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறை இல்லாதிருக்கலாம். வாய்ச் சவடால் ஆகவும் இருக்கலாம். ஆனால் அமெரிக்காவுடனான போரில் வெற்றி பெறுவதான சவடால் அல்ல அது. தன்னை கைதுசெய்ய முடியாது என்பதான சவடாலுமல்ல. ஒரு போராளியாக இருந்த ஆன்மாவின் குரல் அது, அடங்க மறுக்கும் உணர்வு அது என புரிந்துகொள்ள இடமுண்டு. அதனால் கிரீன்லாந்தையும் விட, ட்றம்ப் கொலம்பியா அல்லது ஈரான் மீது முதலில் கவனத்தைக் குவித்திருக்க சாத்தியம் அதிகம் உள்ளது.
ட்றம்பின் இந்த ஒரு வருட ஆட்சியில் அவரது அணுகுமுறை இப்படி தடாலடியாகவேதான் நிகழ்த்தப்படுகிறது. கிரீன்லாந்து மீது ட்றம்புக்கு இருக்கிற கவனத்தை இது குறைத்து மதிப்பிடுவதாகாது. ஆனால் பலரும் எதிர்பார்ப்பதுபோல் கிரீன்லாந்தை ட்றம்ப் விரைந்து கைப்பற்றுவாரா என்பதுதான் கேள்வி. ஆட்சிக்கு வந்து இந்த ஒரு வருடத்தில் அவர் ஆறு நாடுகள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார். அதை போர் என்ற நிலைக்குள் நகர்த்தாமல் அச்சமூட்டுகிற வேலையோடும், மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களோடும் மட்டும் நிறுத்திக் கொண்டிருக்கிறார். ஈரான், ஈராக், சிரியா, நைஜீரியா, யேமன், இப்போ வெனிசுவேலா என குண்டுவீசி திரும்பியிருக்கிறார். வெனிசுவேலா மீது எல்லை மீறி நடந்திருக்கிறார். ஒரு நாட்டின் அதிபரை இன்னொரு வல்லாதிக்க நாட்டின் தலைவர் நாடு புகுந்து கடத்திக் கொண்டு வரலாம் என்ற செயலும், அதில் அரசியல் நியாயம் காண்பதும், ஆதரிப்பதும் மிக ஆபத்தானது. இதை மற்றைய வல்லாதிக்க நாடுகளும் கடைப்பிடித்தால் இந்த உலகம் என்னவாகும். இனி, வெனிசுவேலா மீது அவர் எடுக்கப்போகும் அடுத்த நடவடிக்கை எப்படி அமையப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். வெனிசுவேலா மண்ணில் அவர் இராணுவ ஆக்கிரமிப்பை அல்லது நிலைகொள்ளலை மேற்கொள்வதன் மூலம் அவர் சேற்றுள் கால்வைக்கப் போகிறாரா இல்லையா என்பது தெரிய வரும்.
“ஆக்ரிக் பகுதியிலுள்ள கிரீன்லாந்துக்கு குறுக்குமறுக்கான ரசியாவும் சீனாவும் ஓடித்திரிகிறது. அது மேற்கு பிராந்தியத்துக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கிறது. அமெரிக்காவிற்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் இருக்கிறது. அவர்களை டென்மார்க் இனால் கையாள முடியாது. நேட்டோவின் அங்கமாக இருக்கிற எம்மால்தான் கையாள முடியும்” என்று நியாயம் கற்பிக்கிறார். “We need Greenland” என ஒரே போடாய்ப் போட்டிருக்கிறார்.
ஐரோப்பாவோ ஒரு நேட்டோ நாட்டை இன்னொரு நேட்டோ நாடு தாக்குவது “தகுமோ… இது முறையோ” என்ற றேஞ்ச் இல் வார்த்தைகளை அளந்து பேசுகிறார்கள். “அமெரிக்காவுக்கும் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கும் உறவு இருக்கிறது. அதன் அடிப்படையில் கிரீன்லாந்தில் அமெரிக்க படைத்தளமும் இருக்கிறது. கிரீன்லாந்தின் இறைமையை அமெரிக்கா மீறுவது சர்வதே சட்டவிதிகளுக்கு முரணானது” என்கிறார், Mette Frederiksen அவர்கள். அவரின் உயர்ந்தபட்ச மென்மையான எச்சரிக்கை “அது நடந்தால் அதுவே நேட்டோவின் முடிவாக இருக்கும்” என்பதுதான். அதற்கு அப்பால் போகவில்லை. அவர் வெனிசுவேலா மீதான ட்றம்ப் இன் செயலையும் கண்டிக்கவோ, ஆதாரம் காட்டிப் பேசவோ இல்லை. நேட்டோவின் 5வது சரத்துப்படி நேட்டோவிலுள்ள ஒரு நாட்டை தாக்கினால் அது நேட்டோவின் எல்லா நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குலாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகும். நேட்டேவுக்குள் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இடையில் இராணுவ தாக்குதல் அல்லது ஆக்கிரமிப்பு நடந்தால், எப்படி அது கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்து இந்த தலைவர்கள் எவரும் பேசிக் கேட்டதில்லை.
பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, ஸ்பெயின், போலந்து, இத்தாலி மற்றும் டென்மார்க் தலைவர்கள் ஒன்றுகூடி விட்டிருக்கும் அறிக்கையில் அமெரிக்காவின் இந்த முயற்சியை நேரடியாகக் கறாராகக் கண்டிக்காமல் வார்த்தைகளை கவனமாக வெளியிட்டிருக்கின்றனர். “கிரீன்லாந்து மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டும், மற்றவர்கள் அல்ல” என்கிறது அந்த அறிக்கை. அத்தோடு சர்வதேச சட்டவிதிகளை சுட்டிக்காட்டி, ஒரு நாட்டின் இறைமை பற்றி பேசுவதோடு அந்த அறிக்கை தீர்ந்து போகிறது. இதே சர்வதேச சட்டத்தை மதிக்காமல், ஐநாவின் பாதுகாப்புச் சபை அனுமதி பெறாமல், யூகோஸ்லாவியா, லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் என அமெரிக்கா தலைமையில்; நேட்டோ ஜக்கற் அணிந்து போருக்குப் போனபோது இந்த அறம் எங்கே ஒளிந்திருந்தது. இப்போதுகூட பெரும்பாலான ஐரோப்பிய தலைவர்களுக்கு வெனிசுவேலா மீதான இதே சர்வதேச சட்டவிதிகள், இறைமை என்ற அளவுகோல்கள் “செல்லாது செல்லாது” என்றே இருக்கிறது.
டென்மார்க் உட்பட்ட ஐரோப்பிய தலைவர்கள் கிரீன்லாந்துப் பிரச்சினையை இராஜதந்திர ரீதியில் அணுகி தீர்க்க ட்றம்பை சந்தித்து பேச இடமுண்டு. அதற்குமுன் அரச செயலர் மார்க்கோ ரூபியோ இவர்களைத் தேடி வரவிருக்கிறார். ட்றம்ப் கொம்பனி மூன்று தேர்வுகளை முன்வைத்திருக்கிறது. முதலாவது தேர்வு கிரீன்லாந்தை வாங்குவது. ஆனால் கிரீன்லாந்து மக்கள்” எமது நிலம் விற்பனைக்கு இல்லை” என திடமாகக் கூறுகிறார்கள். டென்மார்க்கும் அதை பலமுறை கூறிவருகிறது.
இரண்டாவது தேர்வு, ஒரு சட்டபூர்வமான ஒப்பந்தத்தை (COFA-compact of free association) செய்வது ஆகும். பசிபிக் பிராந்தியத்திலுள்ள Micronesia, Palau, Marshall Islands ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா இம்மாதிரியான ஒப்பந்தத்தை செய்து ஆளுகைக்குள் வைத்திருக்கிறது. ஆனால் அவை முழு இறைமையுள்ள நாடுகள் என அமெரிக்கா சொல்கிறது. பொருளாதார உதவியையும் பாதுகாப்பையும் அமெரிக்கா இந் நாடுகளுக்கு வழங்குகிறது. இதேபோன்றதொரு தீர்வுக்குள் கிரீன்லாந்தை இட்டுச் செல்ல ட்றம்ப் முயற்சிக்கலாம்.
இந்த இரு தேர்வுகளும் சரிவராத பட்சத்தில் அமெரிக்கா போரை அடுத்த தேர்வாக நாடலாம். அது போராக இருக்குமா என்பதுதான் கேள்வி. இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து 1946 இல் அமெரிக்கா கிரீன்லாந்தின் பாதுகாப்பை பொறுப்பெடுத்தது. இப்போதும் படைத்தளத்தை கிரீன்லாந்தில் அமெரிக்கா வைத்திருக்கிறது. 836000 சதுர மைல்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய இத் தீவின் சனத்தொகை வெறும் 57000 மட்டுமே. அதற்கென தனித்த இராணுவம் கிடையாது. டென்மார்க் இராணுவம்தான் அங்கும் உள்ளது.
ஐரோப்பாவின் பாதுகாப்பை ஐரோப்பா தனித்து நின்று முழுமையாக உத்தரவாதப்படுத்தவில்லை. நேட்டோ என்ற அமைப்பின் கீழ் உத்தரவாதப்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை. அதையும் மிகத் திருத்தமாகச் சொன்னால் நேட்டோவிலுள்ள ஐரோப்பிய நாடுகளின் தேசிய ரீதியிலான பாதுகாப்பை மேவி, தமது வளத்தை நேட்டோவுக்குள் தாரைவார்க்கிறது என்பதே பொருத்தமானது. இந் நாடுகள் நேட்டோவின் பாதுகாப்பு நிதியை தமது தேசிய வருமானத்தின் (GDP) ஐந்து வீதமளவில் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆயுத உற்பத்தியைக்கூட தன்னிறைவாக உருவாக்காமால் அமெரிக்காவிடம் பெருமளவு ஆயுதத்தை வாங்க வேண்டிய நிலையில் தொழில்நுட்ப ரீதியிலும், உற்பத்தித் திறனிலும், அணுவாயுத வளர்ச்சியிலும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன.
இந்த பலவீனங்கள் நேட்டோவின் சாரதியாக அமெரிக்கா குந்தியிருப்பதற்கான ஒரு பகுதிக் காரணங்கள் ஆகும். 2024 இல் நேட்டோவுக்கான 1.4 திரில்லியன் டொலர் பாதுகாப்புச் செலவில் அமெரிக்காவின் பங்கு மட்டும் சுமார் 66 சதவீதமாக இருக்கிறது. உயர் தொழில்நுட்பங்கள் கொண்ட வேவு பார்க்கும் கருவிகள், விமானங்கள், உளவுப்படை தகவல் பரிமாறல்கள், ஆயுதங்கள் எல்லாவற்றுக்கும் தமது உற்பத்திகளை விடவும் பெருமளவில் அமெரிக்காவில் தங்கியிருக்கிறார்கள். ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கை கூட ஐரோப்பாவை மையமாக வைத்து சுயாதீனமாக வரையப்பட்டிருக்கவில்லை என்பது குறித்து அரசியல் அறிஞர்கள் நீண்ட காலமாக விமர்சித்து வருகிறார்கள். அமெரிக்காவின் ஒரு இழுவை வண்டியாக ஐரோப்பா நேட்டோவுக்குள் செயற்படுகிறது. பாதுகாப்பில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியிலும் அமெரிக்காவிடம் பெருமளவு தங்கியிருக்கிறது.
எனவே ஐரோப்பா அமெரிக்காவிடமிருந்து திடீரென நாணயக் கயிற்றைக் கழற்றி எறிந்துவிட்டு சுதந்திரமாக ஓடமுடியாது. அதை செய்வதாக இருந்தாலும் அதற்கொரு கால அவகாசம் தேவை. அதைத்தான் மக்ரோன் (இப்போ ஜேர்மன் சான்சலர் மேர்ற்ஸ் உம்) வலியுறுத்தி வருகிறார். ஐரோப்பாவுக்கான இராணுவமும் சுயமான பாதுகாப்பு கட்டமைப்பும் தேவை என்கின்றனர். ஐரோப்பாவில் நின்று இதை உறுதியாகச் சொல்லும் மக்ரோன் ட்றம்ப் முன்னால் -வளைந்து நெளியும் உடல் மொழியைத் தாண்டி- நிமிர்ந்து நின்று சொல்ல முடியாதவராக இருக்கிறார். ஆக அமெரிக்காவுக்கு ஐரோப்பா தேவைப்படுவதை விட, ஐரோப்பாவுக்கு அமெரிக்கா வேண்டும். அமெரிக்கா -நேட்டோவுக்கு வெளியில்- சுயாதீனமாக 80 நாடுகளில் 750 க்கு மேற்பட்ட படைத்தளங்களை கொண்ட வலிமையான நாடு. எனவே அமெரிக்காவுக்கும் (மிகுதி நேட்டோ நாடுகளான) ஐரோப்பாவுக்கும் போர் வரும் என ஒரு ஜனரஞ்சகக் கனவை காணலாம். அதைத் தாண்டி எதுவும் நடைபெற சாத்தியமில்லை.
image:npr. org
கிரீன்லாந்தின் மீதான ஆசை ட்றம்ப் இலிருந்து தொடங்கியதல்ல. அது 19ம் நூற்றாண்டில் தொடங்கியது. 1867 இல் அமெரிக்கா ரசியாவிடமிருந்து அலாஸ்காவை பணம் கொடுத்து வாங்கியபோதே, டென்மார்க் இடமிருந்து கிரீன்லாந்தை வாங்கும் திட்டத்தை அமெரிக்க அரச செயலர் William H. Seward என்பவர் முன்வைத்திருந்தார். சரிவரவில்லை. பிறகு, 1910 இல் டென்மார்க்கின் அமெரிக்க தூதர் Maurice Francis Egan இன்னொரு திட்டத்தை முன்வைத்தார். அமெரிக்கா கைப்பற்றி வைத்திருந்த பிலிப்பைன்ஸ் இன் Mindanao தீவை கொடுத்து டென்மார்க் இன் காலனியான கரீபியன் தீவுகளையும் (Danish Vergin Islands) கிரீன்லாந்தையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளலாம் என்பது அவரது ஆலோசனையாக முன்வைக்கப்பட்டது. அதுவும் சரிவரவில்லை. இருந்தபோதும் Danish Vergin Islands இனை அமெரிக்கா 1917 இல் டென்மார்க்கிடமிருந்து -25 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கத்தைக் கொடுத்து- வாங்கிக் கொண்டது. 1946 இல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி Harry Truman கிரீன்லாந்துக்கு 100 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கக் கட்டிகளை பேரமாக வைத்து விலைபேசினார். டென்மார்க் ஏற்கவில்லை.
இவ்வாறு காலனியாதிக்க பேரங்களினூடு வளர்ந்த மனக்கட்டமைப்போடு நவீன காலனியவாதி ட்றம்ப் வெளிக்கிளம்பியிருக்கிறார். மேற்குலகம் முன்வைக்கும் எல்லா ஜனநாயகக் கட்டமைப்புகளும் நடைமுறைகளும் “காலனிய மனக்கட்டமைப்பு” என்ற உளவியல் நோயைத் தாண்டி இருப்பதில்லை. அது தமது நாடுகளின் இறைமையைப் பேணும் வலுவான ஐனநாயகக் கட்டமைப்பைக் கொண்டதாகவும், அதேநேரம் மற்றைய (தாம் தவிர்ந்த) நாடுகளின் இறைமையை, குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீனமெரிக்க நாடுகளின் இறைமையை மறுப்பதாகவும், வளச் சுரண்டலை இயல்பாக்கம் செய்ததாகவும் இரட்டைத்தன்மை வாய்ந்த அளவுகோலைக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணம் இந்த சாகா வரம் பெற்ற காலனிய மனக் கட்டமைப்புத்தான் (colonial mindset).
அதனால் மேற்குலக ஜனநாயகம் என்பது ஒரு பண்பாக வளர்ச்சியடையவில்லை. நிர்வாகக் கட்டமைப்பாக குறுக்கப்பட்டுவிட்டது. மற்றைய பண்பாடுகளை, தனித்துவங்களை, அதனூடான நாகரிக வளர்ச்சியை, அரச கட்டமைப்பின் வரலாற்று ரீதியான வளர்ச்சியை, அதன் வடிவங்களை, சுயாதீனங்களை, முழு இறைமையை ஏற்கவில்லை. தமது நியமங்களுக்கு (norms) வெளியேயான மனிதர்களை அது சக மனிதராக முழுமையாக ஏற்கவில்லை. தம் அளவுக்கு நாகரிகம் அடையாதவர்கள் என்றே கணிக்கிறது. ஐரோப்பிய மையவாத சிந்தனைக்குள்ளும் (euro-centric mentality), அதன் அளவுகோலுக்குள் மட்டும் நின்று, மற்றைய நாடுகளுக்கு வகுப்பு எடுப்பதாகவும், கருத்தியலை உருவாக்குவதாகவும், கதையாடல்களை கட்டமைப்பதாகவும், அதையே எமக்கு ஊட்டுவதாகவும், உலகப் பொதுமையாக இயல்பாக்கம் செய்வதாகவும் தன் பணி செய்கிறது. அதுவே “காலனிய மனக்கட்டமைப்பு” ஆகும்.
வெனிசுவேலா மீது அமெரிக்கா அத்துமீறியதற்கும், அந்த வளங்களை கொள்ளையடிக்க முனைவதற்கும், அந்த நாட்டை நிர்வகிக்குமளவுக்கு செல்வதற்கும், மிரட்டுவதற்கும் இதே காலனிய மனக்கட்டமைப்புத்தான் அவர்களது மூளைக்குள் ஓடித் திரிகிறது. இந்த இறைமை மீறலையும் அடாத்தையும் கண்டித்து பேச தயக்கம் காட்டுகிற ஐரோப்பிய மனநிலை இப்போதும் இதே கட்டமைப்புச் சேற்றுக்குள்தான் உழல்கிறது. உதாரணமாக ரசியாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக எழுந்த குரல்கள் அமெரிக்காவின் வெனிசுவேலா மீதான அத்துமீறலின் பக்கம் போகவே இல்லை. கமாஸின் ஒக்ரோபர் தாக்குதலில் இறந்த 1200 இஸ்ரேலிய மக்களை பேசுமளவுக்கு காஸா இனப்படுகொலை பற்றி அது பேசுவதில்லை. ‘ஆசியாவின் ஐரோப்பியர்கள்’ என்ற புனைவுவாத அரவணைப்போடு, இஸ்ரேலிய சியோனிஸ்டுகளை கண்டிப்பதுமில்லை. மாறாக ஆதரவு கொடுக்கிறது. கிரீன்லாந்து விடயத்தில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இருக்கும் இந்த சமாந்தரமான மனக்கட்டமைப்பானது தமக்குள் போரைவிட சமரசத்தையே முன்வைக்கும் சாத்தியம்தான் அதிகம். அந்த பேரத்தில் டென்மார்க் காலனியவாதிகள் அபகரித்த கிரீன்லாந்து தீவினது மக்கள் பகடைக் காய்களாக மாறினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை!
https://sudumanal.com/2026/01/08/தகுமோ-இது-முறையோ/#more-7568
காரைநகரில் மகேஸ்வரன் வீதி பெயர்பலகை திறந்து வைப்பு.
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
காரைநகரில் மகேஸ்வரன் வீதி பெயர்பலகை திறந்து வைப்பு.
காரைநகரில் மகேஸ்வரன் வீதி பெயர்பலகை திறந்து வைப்பு.
சனி, 10 ஜனவரி 2026 06:30 AM

காரை நகரில் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் பிறந்த தினமான இன்றைய தினம் சனிக்கிழமை மகேஸ்வரன் பெயர் பலகை பொறிக்கப்பட்ட வீதி திறந்து வைக்கப்பட்டது.
காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் க.பாலச்சந்திரனால் 2018ம் ஆண்டு காரைநகர் சின்னாலடி வீதியை முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் நினைவாக மகேஸ்வரன் வீதியாக மாற்றக்கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் 2022 டிசம்பர் மாதம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு தற்போதைய காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினர் த. செந்தூரனின் வேண்டுகோளுக்கிணங்க அமரர் மகேஸ்வரனின் பிறந்த தினமான 10ஆம் திகதி ஆகிய இன்று காலை 10.30 மணிக்கு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணன் கோவிந்தராஜ், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்,பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் வீதிக்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!
வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!
10 Jan, 2026 | 02:05 PM
![]()
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக தற்போது அவருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பிரதமர் என்கிற ரீதியிலும் அவரது கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையிலும் கல்வி அமைச்சர் என்கிற ரீதியிலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் எமது அமைப்புக்கும் எனக்கும் மிக முக்கியமான தீர்க்கமான கொள்கை முரண்கள் இருக்கின்றபோதிலும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்.. டக்ளஸ் தேவானந்தா
விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 08 பேர் வைத்தியசாலையில்
விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 08 பேர் வைத்தியசாலையில்
விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 08 பேர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை மாணவர்கள், தமது விரிவுரையாளர் ஒருவரை மாற்றக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நீடிக்கின்றது.
நேற்றைய (09) நிலவரப்படி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் நால்வர் மயக்கமடைந்தும், 04 பேர் வாந்தி எடுத்த நிலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிறுவகத்தில் நடன நாடகத்துறையில் நான்காம் ஆண்டில் (2019/2020 கல்வியாண்டு) பயிலும் மாணவர்கள், தமக்குக் கற்பிக்கும் விரிவுரையாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
குறித்த விரிவுரையாளர் முறையாக வகுப்புகளை நடத்துவதில்லை என்றும், மாணவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், சில மாணவர்களின் உடலமைப்பைக் கேலி செய்து அவமானப்படுத்துவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், முறையான காரணமின்றி விரிவுரை நேரங்களில் மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேற்றுவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக கடந்த 2025 மார்ச் 4ஆம் திகதி, நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கெனடியிடம் மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக முறையிட்டனர். இதற்கான தீர்வை இரு வாரங்களில் பெற்றுத் தருவதாகப் பணிப்பாளர் உறுதியளித்த போதிலும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, 2025 ஓகஸ்ட் 12ஆம் திகதி மீண்டும் கடிதம் மூலமாகவும் நேடியாகவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மாணவர் ஒன்றியத்தின் ஊடாக முயற்சி செய்தும் நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், குறித்த பாடத்திற்கான பரீட்சகராக அந்த விரிவுரையாளரை நியமிக்க வேண்டாம் என வலியுறுத்தி கடந்த புதன்கிழமை (07) முதல் 67 மாணவர்கள் பணிப்பாளரின் அலுவலகத்திற்கு முன்னால் அமர்ந்து போராட்டத்தை ஆரம்பித்தனர்.
தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு பகலாக கடும் மழை மற்றும் குளிர்காற்றுக்கு மத்தியில் இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், ஏனைய மாணவர்கள் தமது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என உறுதியாக உள்ளனர்.
திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது
திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது
திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் வெளியானது
2026 ஜனவரி 09 , பி.ப. 09:00
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ், பெயரிடப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. R
















https://www.tamilmirror.lk/செய்திகள்/திருத்தப்பட்ட-பயங்கரவாத-பெயர்-பட்டியல்-வெளியானது/175-370814

