Aggregator

வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை: வட கொரியா குறித்து ஐ.நா. அறிக்கை

1 month 3 weeks ago
வெளிநாட்டு சினிமா பார்த்தால் சுட்டுக் கொலை; வட கொரியாவில் நடப்பது என்ன? பட மூலாதாரம், KCNA via EPA படக்குறிப்பு, கிம் ஜாங் உன் ஆட்சியில் வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டதாகவும், மக்கள் மேலும் பயத்துடனும் வாழ்கின்றனர் என்று அறிக்கை கூறுகிறது. கட்டுரை தகவல் ஜீன் மேக்கன்சி சியோல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வெளிநாட்டுப் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்தவர்கள் மற்றும் பகிர்ந்தவர்களுக்கு, வட கொரிய அரசாங்கம் மரண தண்டனையை அளித்திருப்பதாக ஒரு ஐ.நா. அறிக்கை கூறுகிறது. உலகிலிருந்து பெருமளவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த சர்வாதிகார ஆட்சி, அதன் மக்களின் சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்தி அதிக அளவில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துகிறது என்றும் ஐநா அறிக்கை கண்டுபிடித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக வட கொரிய அரசு "குடிமக்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களின் மீதான" கட்டுப்பாட்டை இறுக்கியுள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டறிந்துள்ளது. "இன்றைய உலகில் வேறு எந்த மக்களும் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்படவில்லை" என்று அது முடிவு செய்தது. மேலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களின் உதவியால் கண்காணிப்பு "அதிகமாகப் பரவியுள்ளது" என்றும் அது கூறியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க், இந்த நிலைமை தொடர்ந்தால், வட கொரியர்கள் "அவர்கள் நீண்ட காலமாக அனுபவித்துவரும் அதிக துன்பம், கொடூரமான அடக்குமுறை மற்றும் பயத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்" என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்ற 300-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, மரண தண்டனை அடிக்கடி பயன்படுத்தப்படுவதாகக் கண்டறிந்துள்ளது. மரண தண்டனை விதிக்க அனுமதிக்கும் குறைந்தது ஆறு புதிய சட்டங்கள் 2015-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கிம் ஜாங் உன் வெளிநாடுகளிலிருந்து மக்கள் தகவல்களைப் பெறுவதற்கான வழிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதால், வெளிநாட்டு ஊடக உள்ளடக்கங்களான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றை பார்ப்பது மற்றும் பகிர்வது போன்ற செயல்களுக்காகவும் இப்போது மரண தண்டனை விதிக்கப்படலாம். 2020-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு உள்ளடக்கத்தைப் பரப்பியதற்காக அதிக மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. ஆராய்ச்சியாளர்களிடம் தப்பி வந்தவர்கள் கூறினர். மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தவும், அவர்கள் சட்டத்தை மீறுவதைத் தடுக்கவும், துப்பாக்கிச் சூடு குழுவால் இந்த மரண தண்டனைகள் பகிரங்கமாகத் நிறைவேற்றப்படுகின்றன என்று அவர்கள் விவரித்தனர். 2023-ம் ஆண்டு தப்பிச் வந்த காங் கியூரி, தென் கொரிய உள்ளடக்கத்துடன் பிடிபட்ட தனது மூன்று நண்பர்கள் கொல்லப்பட்டதாக பிபிசியிடம் கூறினார். 23 வயதான ஒரு நண்பருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது காங் கியூரி நீதிமன்றத்தில் இருந்தார். "அவர் போதைப்பொருள் குற்றவாளிகளுடன் சேர்த்து விசாரிக்கப்பட்டார். இந்தக் குற்றங்கள் இப்போது ஒரே மாதிரியாகக் கருதப்படுகின்றன" என்று அவர் கூறினார். மேலும், 2020 முதல் மக்கள் அதிக அச்சமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். 2011-ல் தற்போதைய தலைவர் கிம் ஜாங் உன் பதவிக்கு வந்தபோது, அவர்கள் இனி "வயிற்றைக் கட்டிக்கொள்ள" (அதாவது, போதிய உணவு இல்லாமல்) வேண்டியதில்லை என்று உறுதியளித்திருந்ததால், தங்கள் வாழ்க்கை மேம்படும் என்று நம்பியதாக நேர்காணல் செய்யப்பட்ட தப்பி வந்தவர்கள் கூறினர். பொருளாதாரத்தை வளர்ப்பதாகவும், அதே நேரத்தில் அணு ஆயுதங்களை மேலும் மேம்படுத்துவதன் மூலம் நாட்டைக் காப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், கிம் 2019-ல் மேற்கு நாடுகளுடனும் அமெரிக்காவுடனும் ராஜதந்திர பேச்சுக்களைத் தவிர்த்து, தனது ஆயுதத் திட்டத்தில் கவனம் செலுத்தியதால், மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் மனித உரிமைகள் "சீர்குலைந்துவிட்டன" என்று அறிக்கை கண்டறிந்தது. நேர்காணல் செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் தங்களுக்குப் போதிய உணவு இல்லை என்றும், ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்பது ஒரு "ஆடம்பரமான" விஷயம் என்றும் கூறினர். கோவிட் பெருந்தொற்று காலத்தில், கடுமையான உணவுப் பற்றாக்குறை இருந்ததாகவும், நாடு முழுவதும் மக்கள் பட்டினியால் இறந்ததாகவும் தப்பி வந்தவர்கள் கூறினர். அதே நேரத்தில், குடும்பங்கள் வர்த்தகம் செய்யும் முறைசாரா சந்தைகளை அரசு முடக்கியது. இதனால், அவர்கள் வாழ்வாதாரத்தைத் தேடுவது கடினமாகியது. மேலும், சீனாவுடனான எல்லையில் கட்டுப்பாடுகளை இறுக்கியதன் மூலமும், எல்லையைக் கடக்க முயற்சி செய்பவர்களைச் சுட்டுத் தள்ள படையினருக்கு உத்தரவிட்டதன் மூலமும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக மாறியது. 2018-ம் ஆண்டு 17 வயதில் தப்பி ஓடிய ஒரு இளம் பெண், "கிம் ஜாங் உன்-னின் ஆரம்ப நாட்களில், எங்களுக்கு சில நம்பிக்கைகள் இருந்தன, ஆனால் அந்த நம்பிக்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை" என்று கூறினார். "அரசாங்கம் படிப்படியாக மக்கள் சுயமாக வாழ்வாதாரத்தை தேடுவதைத் தடுத்தது. மேலும், வாழ்வது என்பதே ஒரு தினசரி துன்பமாக மாறியது" என்று அவர் ஐ.நா ஆய்வாளர்களிடம் சாட்சியம் அளித்தார். "கடந்த 10 ஆண்டுகளில், அரசாங்கம் மக்களின் மீது கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது. பொருளாதார, சமூக அல்லது அரசியல் முடிவுகளை அவர்களால் சொந்தமாக எடுக்க முடியவில்லை" என்று ஐ.நா. அறிக்கை கூறியது. கண்காணிப்புத் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட மேம்பாடுகள் இதற்கு உதவியுள்ளன என்றும் அறிக்கை கூறியது. "மக்களின் கண்களையும், காதுகளையும் தடுப்பதே" இந்தக் கட்டுப்பாடுகளின் நோக்கம் என்று தப்பி ஓடிய ஒருவர் ஆராய்ச்சியாளர்களிடம் கூறினார். "இது அதிருப்தி அல்லது புகாரின் சிறிய அறிகுறியையும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒருவகையான கட்டுப்பாடு " என்று பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள் கூறினர். பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பியாங்யாங்கில் கிம்மின் தந்தை மற்றும் தாத்தாவின் ஓவியத்தின் முன் மக்கள் தலை வணங்கி மரியாதை செலுத்துகின்றனர். (புகைப்படம் செப்டம்பர் 9 அன்று எடுக்கப்பட்டது) அரசாங்கம் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததைவிட இப்போது அதிக அளவில் கட்டாய உழைப்பைப் பயன்படுத்துவதாகவும் அறிக்கை கண்டறிந்தது. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கட்டுமானம் அல்லது சுரங்கத் திட்டங்கள் போன்ற கடினமான வேலைகளைச் செய்ய "ஷாக் பிரிகேட்ஸ்" என்ற குழுக்களில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த வேலை, தங்கள் சமூக நிலையை மேம்படுத்தும் என்று தொழிலாளர்கள் நம்புகிறார்கள். ஆனால், வேலை மிகவும் ஆபத்தானது. மரணங்கள் சாதாரணமாக நிகழக்கூடியவை. எனினும், தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் மரணத்தை கிம் ஜாங் உன்-னுக்கு செய்த ஒரு தியாகமாகக் கூறி மகிமைப்படுத்துகிறது. சமீபத்திய ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான அனாதைகள் மற்றும் வீதியோர சிறுவர்களைக் கூட அது வேலைக்கு சேர்த்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. 2014-ல் வெளிவந்த ஒரு முக்கியமான ஐ.நா. விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் தொடர்ச்சியாக இந்த 2025-ம் ஆண்டு அறிக்கை வெளியாகியுள்ளது. 2014 அறிக்கையில், வட கொரிய அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்வதாக முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. நாட்டின் மோசமான அரசியல் சிறை முகாம்களில் மிகக் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகக் கண்டறியப்பட்டது. அங்கு மக்கள் வாழ்நாள் முழுவதும் அடைக்கப்பட்டு "காணாமல் போவார்கள்". இந்த 2025-ம் ஆண்டு அறிக்கை, குறைந்தது நான்கு முகாம்கள் இன்னும் செயல்படுகின்றன என்றும், சாதாரண சிறைகளில் உள்ள கைதிகள் இன்னும் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றனர் என்றும் கண்டறிந்துள்ளது. மோசமான சிகிச்சை, அதிக வேலை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் கைதிகள் இறப்பதை நேரில் கண்டதாக பல தப்பி ஓடியவர்கள் கூறினர். இருப்பினும், "காவலர்களின் வன்முறையில் ஒரு சிறிய குறைவு" உட்பட வசதிகளில் "சில குறைந்த அளவு மேம்பாடுகளை" ஐ.நா. கண்டது. பட மூலாதாரம், KCNA via Reuters படக்குறிப்பு, ரஷ்யாவின் புதின், சீனாவின் ஷி மற்றும் வட கொரியாவின் கிம் இந்த மாதத் தொடக்கத்தில் பெய்ஜிங்கில் சந்தித்தனர். நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று ஐ.நா. அழைப்பு விடுக்கிறது. எனினும், இது நடப்பதற்கு, ஐ.நா. பாதுகாப்பு சபையால் இது பரிந்துரைக்கப்பட வேண்டும். 2019 முதல், ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களான சீனா மற்றும் ரஷ்யா, வட கொரியா மீது புதிய தடைகளை விதிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மீண்டும் மீண்டும் தடுத்துள்ளன. கடந்த வாரம், கிம் ஜாங் உன், சீனத் தலைவர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் பெய்ஜிங்கில் நடந்த ஒரு ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றார். இது, வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டம் மற்றும் அதன் குடிமக்களை நடத்தும் விதத்தை இந்த நாடுகள் அமைதியாக ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது. சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, வட கொரிய அரசாங்கம் தனது அரசியல் சிறை முகாம்களை ஒழிக்க வேண்டும், மரண தண்டனையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் மற்றும் அதன் குடிமக்களுக்கு மனித உரிமைகள் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது. "குறிப்பாக வட கொரிய இளைஞர்களிடையே மாற்றத்திற்கான தெளிவான மற்றும் வலுவான விருப்பம் இருப்பதாக எங்கள் அறிக்கை காட்டுகிறது" என்று ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் டர்க் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd07257xkx8o

2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணை வெளியீடு

1 month 3 weeks ago
பரீட்சைகளுக்கான கால அட்டவணை வௌியீடு 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. அதன்படி, 2025 (2026) கல்வி பொது தராதர (சாதாரண தரப்) பரீட்சை 2026-02-17 முதல் 2026-02-26 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர (உயர்தரப்) பரீட்சை 2026-08-10 முதல் 2026-09-05 வரை நடைபெற உள்ளது. அதேநேரம் 2026 ஆம் ஆண்டுக்கான, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026-08-09 திகதியன்று இடம்பெறவுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026-12-08 முதல் 2026-12-17 வரை நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmfjeof0r00e1qplpt6ooy0xs

வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு

1 month 3 weeks ago

14 Sep, 2025 | 05:03 PM

image

மழைகாலத்தில் சீரான வெள்ளநீரோட்டத்தினை ஏற்படுத்துவதனை நோக்காக் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட வடிகால்கால்கள் ஒழுங்கு முறையில் தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை நல்லூர் பிரதேச சபை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றது என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் தவிசாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக் குட்பட்ட வடிகால்களினை தூர்வாருவதற்கு இடையூறாக வடிகால்களுக்குமேல் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களையும் வீதிகளில் போக்குவரத்து மற்றும் வெள்ள நீராட்டத்திற்கு இடையூறாக காணப்படுகின்ற நிலக்கற்கள், கட்டுமாணங்கள், பூச்செடிகள் என்பவற்றையும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் பதினான்கு நாட்களுக்குள் அகற்றுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

நல்லூர் பிரதேச சபையின் இவ் பகீரங்க அறிவித்தலுக்கு ஏற்ப மேற்படி இடையூறுகளை ஏற்படுத்தும் விடயங்களை குடியிருப்பாளர்கள் அகற்றப்படாவிடின் எதிர்வரும் 01 ஆம் திகதியிலிருந்து எவ்வித முன்அறிவித்தலுமின்றி நல்லூர் பிரதேச சபை அவற்றினை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கன் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/225070

வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு

1 month 3 weeks ago
14 Sep, 2025 | 05:03 PM மழைகாலத்தில் சீரான வெள்ளநீரோட்டத்தினை ஏற்படுத்துவதனை நோக்காக் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட வடிகால்கால்கள் ஒழுங்கு முறையில் தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை நல்லூர் பிரதேச சபை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றது என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தவிசாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக் குட்பட்ட வடிகால்களினை தூர்வாருவதற்கு இடையூறாக வடிகால்களுக்குமேல் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களையும் வீதிகளில் போக்குவரத்து மற்றும் வெள்ள நீராட்டத்திற்கு இடையூறாக காணப்படுகின்ற நிலக்கற்கள், கட்டுமாணங்கள், பூச்செடிகள் என்பவற்றையும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் பதினான்கு நாட்களுக்குள் அகற்றுமாறு வேண்டப்படுகின்றீர்கள். நல்லூர் பிரதேச சபையின் இவ் பகீரங்க அறிவித்தலுக்கு ஏற்ப மேற்படி இடையூறுகளை ஏற்படுத்தும் விடயங்களை குடியிருப்பாளர்கள் அகற்றப்படாவிடின் எதிர்வரும் 01 ஆம் திகதியிலிருந்து எவ்வித முன்அறிவித்தலுமின்றி நல்லூர் பிரதேச சபை அவற்றினை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கன் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/225070

iPhone 17-ன் புதிய அம்சங்கள் என்ன?

1 month 3 weeks ago
ஸ்டீவ் ஜொப் இல்லாத வெற்றிடம் தெரிகிறது. அவங்கள் ஒரு தராதரத்தை வைத்து மக்களை அந்த மாயைக்குள் வைத்திருக்கிறார்கள், புதுமைகள் வரவர குறைகிறது. அதன் மீதான ஈர்ப்புள்ளவர்கள் தொடர்ந்து வாங்குகிறார்கள்.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

1 month 3 weeks ago
நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (14) போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டுபாயில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. போட்டி இடம்பெறும் டுபாய் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணிகளை கருத்திற்கொண்டு பொலிஸாரினால் பார்வையாளர்களுக்கு புதிய விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பொலிஸாரின் விதிகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு இலட்சம் ரூபாய் முதல் 7 இலட்சம் ரூபாய் வரையில் அபராதமும், சிறைத்தண்டனை அல்லது நாடு கடத்தப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி சுப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmfjrvrwz00eaqplp154r6vrb

திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்

1 month 3 weeks ago
விஜயகாந்த்தின் பேச்சில், அவர் நோய் வாய்ப்பட முன்னரும் கூட, இல்லாத அளவு கொள்கை விளக்கம், தெளிவு விஜையின் திருச்சி பேச்சில் இருந்தது. எம்ஜிஆர் பிரிந்த போது அவரிடம் இரு டசின் எம் எல் ஏக்கள், ஆர் எம் வீரப்பன் போன்ற சினிமாகாரர்தான் இருந்தனர். திக கூட ஆதரிக்கவில்லை. பெரியார், அண்ணா வின் பெயர். எம் ஜி ஆரின் முகம் இவைதான் அன்றைய அதிமுகவின் ஈர்ப்பு சக்திகள். கொள்கை கூடாரம் என்றால் அப்போதும் திக, திமுகதான். எம்ஜிஆர் மன்றங்களை அதிமுகவாக மாற்றியவர் ஆர் எம் வி. அவர்ரைவிட நேரடி அரசியல் அனுபவம் கூடியவர் புசி ஆனந்த். ஆகவே எம்ஜிஆரை விட கூடிய கொள்கை வெற்றிடம் உள்ளவர் விஜை என்பது சரியல்ல. மதுரை மாநாட்டு பேச்சில் இருந்த பிழைகளை விஜை இங்கே சரி செய்துள்ளார். சீமான் போன்ற வாய்-வியாபாரிகள் , திமுக அமைச்சர்கள், என பலரும் விஜைக்கு கூடும் மக்கள் திரளை, காட்டு கூட்டம், நயந்தாராவுக்கு இதை விட கூடும் என அவமரியாதை செய்கிறார்கள். இது நல்லதற்கே. கூட்டம் வோட்டாக மாறாது, மாறாது என இவர்கள் சொல்ல, சொல்ல, அந்த கூட்டம் கடுப்பாகி விஜைக்கு போட்டாலும் ஆச்சரியமில்லை. அதிமுகவை செங்கோட்டையன் மூலம் பாஜக விழுங்கி விட்டது என்பது தெளிவு. நாளை எடப்பாடி டெல்லி ஓடுகிறார்.இனி அமித் ஷாதான் அதிமுகவின் அறிவிக்க படாத பொது செயலாளர். ஆகவே திமுகவுக்கு எதிரான, பாஜக சாராத எதிர்கட்சியை தமிழக மக்கள் தெரிய விரும்பின் - த வெ க மட்டுமே ஒரே தெரிவு. பிரேமலதா, கார்த்தி சிதம்பரம், திருமா, அண்ணாமலை, அண்மையில் சொல்லும் விடயங்கள் தவெக ஊதி தள்ள கூடிய சக்தி இல்லை என்பதையே காட்டுகிறது. இவ்வளவு ஏன் சீமானை எல்லாம் பெயர் கூட சொல்லாமல் ஜோக்கார் போல நடத்திய ஸ்டாலினும், உதய்யும் விஜைக்கு எதிர்வினை ஆற்ற, “புதிய எதிரி” என அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பார்க்கலாம்.

தொடர் கதை 02 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை"

1 month 3 weeks ago
தொடர் கதை 02 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/30751677411147503/? "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 02 https://www.facebook.com/groups/978753388866632/permalink/30815037124811531/ "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 03 https://www.facebook.com/groups/978753388866632/permalink/30860636763584900/ "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 04 https://www.facebook.com/groups/978753388866632/permalink/30969169072731668/

தொடர் கதை 01 / "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்"

1 month 3 weeks ago
தொடர் கதை 01 / "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:01 https://www.facebook.com/groups/978753388866632/posts/9681477875260763/? இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:02 https://www.facebook.com/groups/978753388866632/posts/9691763294232221/? இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:03 https://www.facebook.com/groups/978753388866632/posts/9710364575705426/? இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:04 https://www.facebook.com/groups/978753388866632/posts/9725436214198262/? இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:05 https://www.facebook.com/groups/978753388866632/posts/9736564316418785/?

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

1 month 3 weeks ago
பங்களாதேஷை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி Published By: Vishnu 13 Sep, 2025 | 11:51 PM இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையே 13ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 140 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி, 14.4 ஓவர்களில் 04 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 140 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணியின் பதும் நிஸ்ஸங்க 50 ஓட்டங்கள், குசல் மெண்டிஸ் 03 ஓட்டங்கள், குசல் பெரேரா 09 ஓட்டங்கள், கமில் மிஷாரா ஆட்டமிழக்காமல் 46* ஓட்டங்கள், சரித் அசலங்கா ஆட்டமிழக்காமல் 10 * ஓட்டங்கள் எடுத்தனர். மஹேதி ஹசன் 02 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் தன்சிம் ஹசன் சாகிப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கெப்டன், பங்களாதேஷை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார், பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுகள் இழந்து 139 ஓட்டங்களை எடுத்தது. அதன்படி, களத்தில் இறங்கிய பங்களாதேஷ் அணித்தலைவர் லிட்டன் தாஸ் 28 ஓட்டங்களையும், தௌஹித் ஹிரிடோய் 8 ஓட்டங்களையும், மஹேதி ஹசன் 9 ஓட்டங்களையும், ஜாக்கர் அலி ஆட்டமிழக்காமல் 41* ஓட்டங்களையும் , ஷமிம் ஹொசைன் ஆட்டமிழக்காமல் 42* ஓட்டங்களையும் எடுத்தனர். தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கிய தன்சித் ஹசன் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆகியோர் எந்த ரன்களையும் எடுக்க முடியவில்லை. பந்துவீச்சில், வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர மற்றும் நுவான் துஷாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். https://www.virakesari.lk/article/225020

பல்தரப்பு “ பசுபிக் ஏஞ்சல் 25” பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் அமெரிக்கா மற்றும் இலங்கை

1 month 3 weeks ago
பெரும் பொறுப்புகளுடன் இந்தியப் பெருங்கடலின் இதயத்தில் இலங்கை - பாதுகாப்பு செயலாளர் Published By: Digital Desk 1 14 Sep, 2025 | 09:24 AM (லியோ நிரோஷ தர்ஷன்) பசிபிக் ஏஞ்சல் போன்ற பயிற்சிகள், அவசரகால சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் திறனையும், பங்குபெறும் நாடுகளிடையே நம்பிக்கையையும் வலுப்படுத்துவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த, மனிதனால் உருவாக்கப்பட்ட சவால்களாக இருந்தாலும், சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு தொடர்பானவையாக இருந்தாலும், அவற்றை ஒரு நாடால் மட்டும் எதிர்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகில் பாதுகாப்புச் சவால்கள் மிகவும் சிக்கலானவையாகவும், எல்லை தாண்டியவையாகவும் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், பன்முகப் பயிற்சிகள் இராணுவங்களுக்கு இடையிலான கூட்டுறவின் தேவையை உணர்த்துகின்றன. கூட்டுத் தயார்நிலை என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு அத்தியாவசியத் தேவையாகும். இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் உலகப் பாதுகாப்புக்கும், பொருளாதாரத்திற்கும் மிக முக்கியமான மையமாகத் திகழ்கிறது. கடல் வழிப் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் நாடுகளை இணைத்து வர்த்தகத்தைத் தக்கவைக்கின்றது. இருப்பினும், இவை இயற்கைப் பேரிடர்கள், காலநிலை மாற்ற அபாயங்கள், எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எளிதில் பாதிக்கப்படுகிறன. இத்தகைய சூழலில், இந்தியப் பெருங்கடலின் இதயப் பகுதியில் அமைந்துள்ள இலங்கையின் பொறுப்பு, பிராந்தியத்தின் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் மீள்திறனை உறுதி செய்வதாகும். பசிபிக் ஏஞ்சல் போன்ற பயிற்சிகள், அவசரகால சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் திறனையும், பங்குபெறும் நாடுகளிடையே நம்பிக்கையையும் வலுப்படுத்துகின்றன. பசிபிக் ஏஞ்சல் 2025 பயிற்சியின் வெற்றிக்கு பங்களித்த அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் இராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன். திறன்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அப்பால், இந்த பயிற்சியின் உண்மையான மதிப்பு, வளர்த்த நட்புறவில் உள்ளது. இங்கு ஏற்பட்ட பரஸ்பர புரிதலும், மனிதப் பிணைப்புகளும் எதிர்கால நெருக்கடிகளின் போது பெரிதும் உதவும். அமெரிக்கா மற்றும் அனைத்து பிராந்திய பங்காளர்களுடனும் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்பட இலங்கை உறுதிபூண்டுள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட சவால்களாக இருந்தாலும், சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு தொடர்பானவையாக இருந்தாலும், அவற்றை ஒரு நாடால் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்பதை நாம் உணர்ந்துள்ளோம். இணைந்து செயல்படுவதன் மூலம், பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/225022

திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்

1 month 3 weeks ago
'5 கி.மீ.யை கடக்க 5 மணி நேரம்': திருச்சியில் கூடிய கூட்டமும் விஜயின் பேச்சும் உணர்த்துவது என்ன? பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, திருச்சியில் தனது பிரசாரப் பயணத்தை தொடங்கினார் தவெக தலைவர் விஜய் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி திருச்சியில் சனிக்கிழமையன்று (செப்டெம்பர் 13) மக்கள் சந்திப்புப் பயணத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தொடங்கினார். 'தி.மு.க ஆட்சியை விமர்சித்தாலும் கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு தவெக பலம் பெறவில்லை' எனக் கூறுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். 'செல்வாக்கைக் காட்டும் விதத்தில் விஜய் பயணம் இருந்தாலும் வெற்றியைத் தருமா என்பது கேள்விக்குறி' என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய்க்கு திருச்சியில் கூடி மக்கள் திரள் எதைக் காட்டுகிறது? அதுகுறித்து கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும் என்ன சொல்கிறார்கள்? ஐந்து மணிநேர தாமதம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியில் சனிக்கிழமை (14/09/2025) தொடங்கியது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர் பேசவிருந்த மரக்கடை என்ற இடத்திற்கு விஜய் வந்து சேரவே ஐந்து மணிநேரத்துக்கும் மேல் தாமதமானது. அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் பயணம் என விஜய் அறிக்கை வெளியிட்டார். பட மூலாதாரம், TVK காலை 10.30 மணிக்கு பேசுவார் என்று அறிவிக்கப்பட்ட மரக்கடையில் அவரால் மாலை சுமார் 4 மணியளவில்தான் பேச்சைத் தொடங்க முடிந்தது. " போருக்குப் போவதற்கு முன்பாக போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வக் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடுவார்கள். அதுபோல ஜனநாயகப் போருக்காக இங்கு வந்துள்ளேன்" என்றார் விஜய். மக்களை மோசமாக ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.கவையும் பா.ஜ.கவையும் கேள்வி கேட்பதற்காகவே வந்திருப்பதாகக் கூறிய விஜய், "மக்களை வாட்டி வதைக்கும் பா.ஜ.கவையும் தி.மு.கவையும் விட மாட்டோம்" என்றார். தொடர்ந்து விஜய் பேசுவதை சரிவர கேட்க முடியாமல் ஒலிபெருக்கியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அங்கிருந்த தொண்டர்கள் சரிவர கேட்கவில்லை எனக் கூறியும் தனது பேச்சை விஜய் தொடர்ந்தார். தி.மு.க, பா.ஜ.கவை சாடிய விஜய் பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, மக்களவைத் தொகுதிகள் மறு சீராய்வை தவெக எப்போதும் எதிர்க்கும் என விஜய் குறிப்பிட்டார். இந்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைச் சாடிய விஜய், "இதன்மூலம் தேர்தலில் தவறுகள் தான் நடக்கும். அதற்காகவே மத்திய பா.ஜ.க அரசு இதைக் கொண்டு வருகிறது" எனத் தெரிவித்தார். மக்களவைத் தொகுதிகள் மறு சீராய்விலும் தென்னிந்தியாவுக்கு எதிராக மிகப் பெரிய சதி உள்ளதாகவும் இதை தவெக எப்போதும் எதிர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதி, கீழடி ஆய்வு முடிவுகள், பேரிடர் நிதி ஆகியவற்றில் மத்திய அரசு வஞ்சிப்பதாகக் கூறிய விஜய், "நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் அடையும் துன்பங்களை பா.ஜ.க அரசு கண்டுகொள்ளவில்லை. கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் வேடிக்கை பார்க்கிறது" எனப் பேசினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாக மனசாட்சி இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாக விஜய் விமர்சித்தார். தொடர்ந்து, 'கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், டீசல் விலையில் மூன்று ரூபாய் குறைப்பு, அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை, நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து ஆகியவற்றை செய்தீர்களா?' என தி.மு.க அரசை நோக்கி கேள்வி எழுப்பினார். 'கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றம், ஆண்டுக்கு பத்து லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை, மாதம்தோறும் மின் கட்டணம், பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை செய்வதாகக் கூறினீர்களே.. செய்தீர்களா?' எனவும் விஜய் கேள்வி எழுப்பினார். "தமிழ்நாட்டுக்கு மத்திய பா.ஜ.க அரசு செய்வது துரோகம் என்றால் தமிழ்நாட்டுக்கு ஸ்டாலின் அரசு செய்வது நம்பிக்கை மோசடி" எனவும் தவெக தலைவர் விஜய் விமர்சித்தார். "இரண்டுமே தவறு தான். இரண்டுமே ஏமாற்று வேலை தான். இரண்டு பேருமே ஏமாற்றுவதில் ஒரே வகையறா தான். இவர்கள் இருவரும் மறைமுக உறவுக்காரர்கள் என்று ஏன் சொல்கிறோம் என இப்போது புரிந்திருக்கும்" எனவும் விஜய் சாடினார். விஜய் பேச்சு பற்றி திருமாவளவன் கருத்து விஜயின் பிரசாரம் குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "களப்பணியை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். இதன்மூலம் தேர்தல் அரசியலில் என்ன தாக்கம் ஏற்படப் போகிறது என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது" எனக் கூறினார். "தி.மு.க அணியை வீழ்த்துவோம் என பலமுனைகளில் இருந்து வரும் குரல்களில் விஜயின் குரலும் ஒன்று" எனக் கூறிய திருமாவளவன், "இது தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என நம்புகிறேன்" எனக் கூறினார். தவிர, தி.மு.க கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு விஜய் பலம் பெறவில்லை எனவும் திருமாவளவன் குறிப்பிட்டார். ' பார்வையாளர்கள் மட்டுமே' படக்குறிப்பு, இந்த கூட்டத்தை நீண்டகால அரசியல் வெற்றியைத் தருவதற்கான வாய்ப்புகளாக பார்க்க முடியவில்லை என்கிறார் ஷ்யாம். "தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை விஜய் காட்டிக் கொள்வதாகவே இந்தக் கூட்டத்தைப் பார்க்க வேண்டியுள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " எம்.ஜி.ஆர் நடத்திய கூட்டங்களில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்றாலும் சித்தாந்தங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அங்கு இருந்தது" எனக் கூறுகிறார். "ஆனால், தவெக கூட்டத்தில் கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை. அடுத்த 30 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் அரசியல், தனித்துவம் ஆகியவற்றைக் காக்க வேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறைக்கு இருக்கிறது. அதற்கான பயிற்சியும் நெறிப்படுத்துதலும் தவெகவில் இல்லை" என்கிறார் ஷ்யாம். விஜயின் கூட்டத்துக்கு வருகிறவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆரின் முகத்துக்குக் கவர்ச்சி இருந்தாலும் அவருக்குப் பின்னால் சித்தாந்தத்தை வலிமையாக கொண்டு செல்வதற்கான படை இருந்தது" எனவும் குறிப்பிட்டார். திருச்சியில் கூடிய கூட்டம் குறித்துப் பேசும் ஷ்யாம், " கூட்டத்துக்குச் சென்றோம். செல்ஃபி எடுத்தோம் என்ற மனநிலையில் தொண்டர்கள் இருந்ததையே பார்க்க முடிந்தது. இது நீண்டகால அரசியல் வெற்றியைத் தருவதற்கான வாய்ப்புகளாக பார்க்க முடியவில்லை" என்கிறார். இதே கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "ரசிகர் கூட்டம், வாக்குகளாக மாறும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கூட்டத்தை வழிநடத்திச் செல்வதற்கான கட்டமைப்பும் திட்டமிடலும் தவெகவில் இல்லை" என்கிறார். 'வரவுக் கணக்கில் வருவதற்கு வாய்ப்பில்லை' பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, நிபந்தனைகளே விதிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என குபேந்திரன் கேள்வி எழுப்புகிறார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து 5 கி.மீ தூரம் செல்வதற்கு சுமார் ஐந்து மணிநேரம் விஜய்க்கு தேவைப்பட்டதாகக் கூறும் குபேந்திரன், "இதைப் பெருமையாக அக்கட்சியினர் நினைக்கலாம். மக்கள் மத்தியில் எதிர்ப்பு தான் எழுந்துள்ளது" எனத் தெரிவித்தார். "தொண்டர்களை நெறிப்படுத்தியிருந்தால் தாமதம் ஏற்பட்டிருக்காது" எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், " கூட்டங்களுக்கு எம்.ஜி.ஆர் தாமதமாக வரும் நிகழ்வுடன் இதனை ஒப்பிட்டு சிலர் பேசுகின்றனர். அன்றைய காலகட்டம் வேறு. " என்கிறார். "மின் மாற்றிகள், கட்டடங்கள் மீது ரசிகர்கள் ஏறி நின்றனர். நல்லவேளையாக முன்கூட்டியே மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இப்படிப்பட்ட கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?" எனக் கேள்வி எழுப்பும் குபேந்திரன், "கூட்டத்தைக் கூட்டுவதால் ஏற்படும் அசம்பாவிதங்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும்" எனக் கூறுகிறார். "கூட்டத்துக்கு எத்தனை பேர் வந்தாலும் அது வெற்றிக்கான வாக்குகளாக மாறாது. ஐந்து கோடி வாக்குகள் பதிவாகும் மாநிலத்தில் வெறும் லட்சங்களில் விழும் வாக்குகளால் வெற்றி கிடைக்காது" எனக் கூறும் ஷ்யாம், " இவை வரவுக் கணக்கில் வருவதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார். தவெகவுக்கு என்ன பலன்? "திருச்சி கூட்டத்தின் மூலம் தவெகவை நோக்கி சிலர் கூட்டணிக்கு வருவார்கள்" எனக் கூறும் ஷ்யாம், " அது கட்சிக்கு லாபமாக இருக்கும். ஆனால், தனது வாக்காளர்கள் யார் என்பதை விஜய் முடிவு செய்ய வேண்டும். தன்னைப் பார்க்க வந்தவர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வதா என்பதை அவர் பார்க்க வேண்டும்" எனவும் தெரிவித்தார். தவெகவின் விக்கிரவாண்டி மாநாடு, மதுரை மாநாடு, திருச்சி பிரசாரம் ஆகியவற்றை மேற்கோள் காட்டிப் பேசிய ஷ்யாம், "மூன்று கூட்டங்களிலும் அரசியல்மயப்படுத்தும் வேலைகள் என எதுவும் இல்லை. திரைக் கவர்ச்சிக்கு பின்னால் கற்றுக் கொண்டது என்ன என்பது தான் முக்கியமானது" என்கிறார். "ஆளும்கட்சிகள் மீது விமர்சனம் வைப்பது தான் தவெகவின் வளர்ச்சிக்கு முக்கியமானது. திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் பலன் இல்லை என விஜய் பேசினார். ஆனால், அவை என்னென்ன எனப் பட்டியல் போட்டுப் பேசியிருக்க வேண்டும்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். 'அண்ணா, எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்' படக்குறிப்பு, எங்களால் அரசு சொத்துகளுக்கு எந்தவித சேதாரமும் ஏற்பட்டதில்லை என்கிறார் லயோலா மணி பிபிசி தமிழிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி, "இதுபோன்ற கூட்டம் அண்ணா, எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்க்கு வந்து சேர்கிறது. இது தானாக சேர்ந்த கூட்டமாக உள்ளது" என்கிறார். "போக்குவரத்து நெரிசலை காவல்துறை சரியான முறையில் கையாளவில்லை" எனக் கூறும் லயோலா மணி, "கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் கட்சியின் நிர்வாகிகளும் தன்னார்வலர்களும் ஈடுபட்டனர்" எனக் குறிப்பிட்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அனைவரும் அரசியல்மயப்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறிய அவர், "இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியுள்ளோம். எங்களால் அரசு சொத்துகளுக்கு எந்தவித சேதாரமும் ஏற்பட்டதில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce8421nkdlno

யாழ்.போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய இடத்தில் திறந்து வைப்பு!

1 month 3 weeks ago

14 Sep, 2025 | 12:24 PM

image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

போதனா வைத்தியசாலையில் கடந்த ஐந்து வருடங்களாக இலக்கம் 5  மற்றும் இலக்கம் 12 பிரிவுகளில் இயங்கி வந்த குழந்தை மருத்துவ விடுதி தற்போது இல.39 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

வைத்தியசாலையில் விடுதிகள் மற்றும் சில விசேட சிகிச்சை பிரிவுகளுக்கான இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது.

மேலும் சில கட்டட  தொகுதிகள் அமைக்கப்பட்டு  விடுதிகள் திறக்கப்பட வேண்டும். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

2__11_.jpg

2__10_.jpg

2__9_.jpg

2__8_.jpg

2__8_.jpg

2__7_.jpg

2__5_.jpg

2__3_.jpg

https://www.virakesari.lk/article/225045

மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி!

1 month 3 weeks ago

New-Project-189.jpg?resize=750%2C375&ssl

மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி!

மித்தேனியவில் உள்ள ஒரு நிலத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் குறித்து தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தனது அறிக்கையை பொலிஸாரிடம் சமர்ப்பித்த பின்னர் இது தெரியவந்தது.

அதன்படி, மித்தேனியாவிலிருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக NDDCB இன் அறிக்கை வெளிப்படுத்தியது.

செப்டம்பர் 5 ஆம் திகதி, மித்தேனியாவின் தலாவாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு தொகுதி இரசாயனப் பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இலங்கையில் ‘ஐஸ்’ உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட இந்த இரசாயனங்கள், மேற்கு வடக்கு குற்றப்பிரிவு நடத்திய நடவடிக்கையின் போது புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட மொத்த இரசாயனங்களின் அளவு சுமார் 50,000 கிலோ கிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் விசாரணையில், பியால் மனம்பேரி மற்றும் அவரது சகோதரர் இருவரும் இரசாயனங்களை மறைப்பதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அண்மையில் பல கும்பல் உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்ட பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரியவந்தது.

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ‘பேக்கோ சமன்’ என்று அழைக்கப்படும் சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘கெஹல்பத்தர பத்மே’ ‘ஐஸ்’ உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

சந்தேக நபரான ‘கெஹெல்பத்தர பத்மே’ சிஐடி காவலில் இருக்கும் போது நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் வெளிப்பட்டது.

மேலும் விசாரணையின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, சந்தேக நபர் இந்த நடவடிக்கையில் ரூ. 4 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும், அதை மேற்கொள்வதற்காக நுவரெலியாவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் உற்பத்திக்குத் தேவையான சுமார் 2,000 கிலோகிராம் இரசாயனப் பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர் வெளிப்படுத்தியிருந்தார்.

https://athavannews.com/2025/1447100

210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு!

1 month 3 weeks ago

New-Project-192.jpg?resize=750%2C375&ssl

210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (14) காலை 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக நபர், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சேவைகள் அமைப்பின் தலைவராகவும் உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் எடை 5.94 கிலோ கிராம் ஆகும்.

விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட நபர் இந்த தங்க பிஸ்கட் கையிருப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கலாம் என்றும், சந்தேக நபர் நீண்ட காலமாக இந்தக் கடத்தலை மேற்கொண்டு வந்திருக்கலாம் என்றும் சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபரை காவலில் எடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1447114

குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!

1 month 3 weeks ago

New-Project-188.jpg?resize=750%2C375&ssl

குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!

மத்திய லண்டன் சனிக்கிழமையன்று (14) அண்மைய பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் ஒன்றைக் கண்டது.

குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் டோமி ரொபின்சனின் பதாகையின் கீழ் 100,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

ஆர்ப்பாட்டங்களின் போது பல அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“Unite the Kingdom” அணிவகுப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் சுமார் 110,000 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், போராட்டத்தின் வான்வழி காட்சிகள் மத்திய லண்டன் வீதிகளின் சில கிலோ மீட்டர்கள் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிவதைக் காட்டியது.

இது அதிகாரிகளால் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் 26 அதிகாரிகள் காயமடைந்ததாகவும், அதில் நான்கு பேர் படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மேலதிக படைகள் வரவழைக்கப்பட்டன.

அதிகாரிகள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருந்தனர் மற்றும் சட்ட ஒழுங்கை மீட்டெடுக்க உதவும் வகையில் பொருத்தப்பட்ட பிரிவுகளின் ஆதரவுடன் செயல்பட்டனர்.

ஆரம்ப கட்ட தகவலின்படி மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த அணிவகுப்பு இங்கிலாந்தில் மிகவும் பரபரப்பான கோடையின் உச்சக்கட்டத்தை அடையாளப்படுத்தியது.

புலம்பெயர்ந்தோர் வசிக்கும் ஹோட்டல்களுக்கு வெளியே போராட்டங்களால் குறிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானியாவின் யூனியன் கொடியையும், இங்கிலாந்தின் சிவப்பு மற்றும் வெள்ளை செயிண்ட் ஜார்ஜ் சிலுவையையும் ஏந்திச் சென்றனர்.

போராட்டக்காரர்கள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை விமர்சிக்கும் கோஷங்களை எழுப்பினர் மற்றும் “அவர்களை வீட்டிற்கு அனுப்புங்கள்” என்று கூறும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

பிரித்தானியாவில் குடியேற்றம் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.

னெனில் நாடு சாதனை எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கைகளை எதிர்கொள்கிறது.

இந்த ஆண்டு இதுவரை 28,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கால்வாயைக் கடந்து சிறிய படகுகள் மூலமாக அங்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1447097