Aggregator

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்

1 month 4 weeks ago
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம் 09 January 2026 ஈரானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், நாட்டில் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளை முற்றிலுமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (09) காலை நிலவரப்படி, தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் இரவு நேர போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன, அவற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணியளவில் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து ஈரானில் இணைய சேவைகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக உலகளாவிய இணைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நெட்ப்ளொக்ஸ் (NetBlocks) உறுதிப்படுத்தியுள்ளது. நாடுகடத்தப்பட்ட ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி(Reza Pahlavi) விடுத்த போராட்ட அழைப்பைத் தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டுபாய், சிட்னி போன்ற வெளிநாட்டு நகரங்களில் உள்ள ஈரானியர்கள் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், வாட்ஸ்அப்(WhatsApp) , ஃபேஸ்டைம்(FaceTime) போன்ற சேவைகளும் முடங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://hirunews.lk/tm/439792/intensifying-protests-in-iran-internet-services-suspended

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்

1 month 4 weeks ago

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்

09 January 2026

ஈரானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், நாட்டில் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளை முற்றிலுமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இன்று (09) காலை நிலவரப்படி, தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் இரவு நேர போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன, அவற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணியளவில் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து ஈரானில் இணைய சேவைகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக உலகளாவிய இணைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நெட்ப்ளொக்ஸ் (NetBlocks) உறுதிப்படுத்தியுள்ளது. 

நாடுகடத்தப்பட்ட ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி(Reza Pahlavi) விடுத்த போராட்ட அழைப்பைத் தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

டுபாய், சிட்னி போன்ற வெளிநாட்டு நகரங்களில் உள்ள ஈரானியர்கள் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், வாட்ஸ்அப்(WhatsApp) , ஃபேஸ்டைம்(FaceTime) போன்ற சேவைகளும் முடங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://hirunews.lk/tm/439792/intensifying-protests-in-iran-internet-services-suspended

டித்வா - நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

1 month 4 weeks ago
டித்வா - நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு சற்றுமுன்னர் (09) ஆரம்பமாகியுள்ளது. அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு இன்று நடைபெறுகிறது. அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனை சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரிதிகம, தொடம்கஸ்லந்த ஆகிய பிரதேசங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வு நடைபெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmk6dos5z03pko29nn2gexzt5

டித்வா - நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

1 month 4 weeks ago

டித்வா - நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு சற்றுமுன்னர் (09) ஆரம்பமாகியுள்ளது. 

அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு இன்று நடைபெறுகிறது. 

அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனை சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரிதிகம, தொடம்கஸ்லந்த ஆகிய பிரதேசங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வு நடைபெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmk6dos5z03pko29nn2gexzt5

முல்லைத்தீவு சிறுமி மரணம் - நிபுணர் குழுவின் அதிரடி அறிக்கை வெளியானது

1 month 4 weeks ago
முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பதில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றின் இன்றைய (9) அமர்வில் கலந்து கொண்டு, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் வழங்கிய சுகாதார அமைச்சர், கடந்த மாதம் ஒவ்வாமை காரணமாக சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 21 ஆம் திகதி மரணித்தமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். அதேநேரம் சிறுமியின் மரணம் தொடர்பில் தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்தார். தற்போது வைத்தியசாலை மற்றும் மாகாண மட்டத்தில் தனித்தனியாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். அந்த அறிக்கைகளின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. வைத்தியசாலையின் பணிக்குழாமினரின் அசமந்த போக்கினாலேயா இந்த மரணம் இடம்பெற்றுள்ளது? என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். எனவே அந்த விசாரணைகளுக்கு பாதிப்பாக அமையாத விடயங்களை எதிர்வரும் நாட்களில் வௌிப்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmk6i602n03pqo29nyrs6tzmb

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

1 month 4 weeks ago
அரசியல் வேண்டாம், பேச்சுவார்ததைகள் வேண்டாம், நாம் அடித்து தான் பிடிப்போம் என்று முடிவெடுத்தால் எதிரியும் அதை அடித்து தடுக்கவே முயற்சி செய்வான் . இது உலக நியதி. மனித மனப்பாங்கு எக்காலத்திலும் அப்படியானது தான். தொடர்சசியான அரசியல் Negotiation ல் இரு பகுதியும் தோல்வியடைவதில்லை. சேர்ந்தே இருவரும் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன. அடித்து பிடிப்பதில் ஒருவர் மட்டுமே வைற்றி பெறுவார். தோல்வி கண்டுவிட்டு , அவன் துரோகி, இவன் துரோகி என்று காலாகாலத்துக்கு கத்தி ஒப்பாரி கொண்டு திரிவதிலோ அவனை மண்ணள்ளி திட்டுவதாலோ எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. அது அரசியலும் அல்ல. அப்படியான தவறான அரசியலை ஊக்குவிப்பவர்களே சமுதாயத்தின் முதல் எதிரிகள்.

சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு!

1 month 4 weeks ago
வென்னப்புவ சட்டவிரோத மதுபான விவகாரம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை! புத்தளம், வென்னப்புவ பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஆறு பேர் உயிரிழந்து, எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துயர சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் 2026 ஜனவரி 6 அன்று வென்னப்புவ பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் சட்டவிரோதமாக காய்ச்சிய மதுபானத்தை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக, சட்டவிரோத மதுபான வர்த்தகத்தில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஜனவரி 7 ஆம் திகதி மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, இரு சந்தேக நபர்களையும் ஜனவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், விசாரணையின் ஒரு முன்னேற்றமாக, சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான கிழக்கு பண்டிருப்புவ, கலவத்தையைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஜனவரி 7 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஜனவரி 8 ஆம் திகதி அவர் மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேலும் விசாரணைக்காக இரண்டு நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டது. மேலும் சந்தேக நபர்களை அடையாளம் காணவும், இறப்புகளுக்கு வழிவகுத்த சட்டவிரோத மதுபானத்தின் சரியான கலவையைக் கண்டறியவும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1459034

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!

1 month 4 weeks ago
டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை! கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (09) கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே முன்னாள் அமைச்சரவை பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார். திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷுக்கு துப்பாக்கி வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டுக்காக கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர், கம்பஹா நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 2026 ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். டிசம்பர் 30 அன்று, டக்ளஸ் தேவானந்தாவின் உடல்நிலையை மதிப்பிட்ட பின்னர் மருத்துவர்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1459098

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!

1 month 4 weeks ago

Douglas-Devananda.jpg?resize=750%2C375&s

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று (09) கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே முன்னாள் அமைச்சரவை பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷுக்கு துப்பாக்கி வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டுக்காக கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார். 

பின்னர் அவர், கம்பஹா நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 2026 ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

டிசம்பர் 30 அன்று, டக்ளஸ் தேவானந்தாவின் உடல்நிலையை மதிப்பிட்ட பின்னர் மருத்துவர்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1459098

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

1 month 4 weeks ago
இங்கு முதலில் கருத்து பதிய பயமாக இருந்தது, எனது கருத்திற்கு பெரும் எதிர்ப்பு ஏற்படும் எனவும் தெரியும் ஆனால் மனதில் தோன்றுவதனை கூறும் போதுதான் மற்றவர்கள் எமது தவறுகளை சுட்டி காட்டமுடியும் (அது ஆக்கபூர்வமான முறையில் இருந்தால் மட்டுமே) அதனால் எமது தவறுகளை திருத்த முடியும் என்பதால் அது தொடர்பாக தொடர்ந்து எனது கருத்தினை பதிகிறேன். இந்தியாவினை எதிர்பபதால் எமக்கு எந்த இலாபமும் ஏற்படாது(not to resist) அதனாலேயே எமது நலனனுக்கு ஏற்ப நிலமையினை மாற்றுதல் (repositioning). இந்தியாவினை எதிர்ப்பதால் ஏற்படும் வெற்றிடம் இலங்கைக்கு சாதகமான சீனாவினை அந்த வெற்றிடத்தினை நிரப்ப சாதகமாகி விடும், தமிழர்களின் அதிக அதிகாரம் கொண்ட வட கிழக்கு இந்திய மற்றும் அமெரிக்க நலனுக்கு முக்கியமானது எனும் தோற்றம் ஏற்பட வேண்டும். இந்தியாவினை எதிர்ப்பதால் எந்த வகையான அரசியல் அனுகூலம் ஏற்படும் என விவாவிப்பது நல்ல விடயமாகும், எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை, நீங்கள் கூறினால் ஒரு நல்ல ஆரோக்கியமான விவதாமாக இருக்கும்.

அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம்: ரஷ்யா – அமெரிக்கா கடும் போட்டி

1 month 4 weeks ago
இது போன்ற நிகழ்வுகள் இனியும் தொடரலாம், பிரித்தானியாவில் அமெரிக்க இராணுவ விமானங்களின் வருகை அதிகரித்துள்ளதாகவும் அது ஒரு பயிற்சி நடவடிக்கைக்கு இல்லை என கூறுகிறார்கள். இரஸ்சிய அல்லது ஈரான் இலக்காக இருக்கும் என கூறுகிறார்கள், பிரித்தானியாவில் இருக்கும் உங்களுக்கு இது பற்றி ஏதாவது தெரியுமா?

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!

1 month 4 weeks ago
தேடியதில் கொலம்பியாவில் வேலை பார்த்துள்ளார். ஆனால் அங்கே அமேரிக்க எதிர் அரசே உள்ளது. Key Overseas Assignments Deputy Chief of Mission, U.S. Embassy Phnom Penh, Cambodia (senior embassy leadership role). Consular Officer, U.S. Consulate Guangzhou, China (first overseas assignment). Additional Overseas Service In various diplomatic functions across multiple countries — either as political/economic officer or in other capacities: Tokyo, Japan Hanoi, Vietnam Bangkok/Thailand Bogotá, Colombia Baghdad, Iraq These postings include positions such as Deputy Political Counselor and Economic/Political roles அப்படியாகத்தெரியவில்லை. ஒரு வேளை தாய்லாந்தாக இருக்குமோ?

அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம்: ரஷ்யா – அமெரிக்கா கடும் போட்டி

1 month 4 weeks ago
ஓம்…. கூர்ந்து கவனித்தீர்களாயின், டிரம்பின் இரெண்டாம் வரவுக்கு பின் அமெரிக்கா இது போல சின்ன வெற்றிகளை (தந்திரோபாய) ரஸ்யாவுக்கு எதிராக பெற்றாலும் நீண்டகால நோக்கில் (மூலோபாய) ரஸ்யாவிடம் தோற்கிறது. இது by design என நான் நினைக்கிறேன். சின்ன வெற்றிகளால் ஏற்படும் noise நீண்டகால தோல்விகளை அமெரிக்க வாக்காளர், குறிப்பாக MAGA மொக்கர் காணாமல் தடுக்கும்.

அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம்: ரஷ்யா – அமெரிக்கா கடும் போட்டி

1 month 4 weeks ago
உண்மை, ஐநாவின் பலவீனமும் இதற்குக்காரணம். வாய்ப்புள்ளது அத்துடன் இது ஒரு தன்னை நிரூபிக்க முயலும் முயற்சியாகவும் இருக்கலாம்.

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

1 month 4 weeks ago
பிராந்திய உறுதித்தன்மை, கிளர்ச்சிகளற்ற, எல்லைதாண்டிய பிரச்சினைகளற்ற (மனிதாபிமான பிரச்சினையான தஞ்சம் கோருபவர்கள் மற்றும் பயங்கரவாதம்), சீன ஆதரவற்ற இந்தியவிற்கு நேசமான தரப்பாக தமிழர்கள் இருப்பதனையே அமெரிக்காவும் விரும்புகின்றது, தெற்காசிய அமெரிக்க பாதுகாப்பு கொள்கையும் அதுவே, இங்கு இந்தியாவினை தாண்டி வேறுதரப்பு தலையிட முடியாது. மிக விரைவாக அதிக அதிகாரம் கொண்ட (நீதி, காணி, காவல்) ஒரு அலகினை பெற சர்வதேச சக்திகளின் உதவி எங்களிற்கு தேவையாக இருக்கிறது, அது யாராக இருந்தால் எங்களுக்கென்ன? எமது தீர்வு, பல சமூக பிரச்சினைகளுக்கு தீர்வாகலாம்.

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

1 month 4 weeks ago
இந்தியாவில் ஒரு ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டு அமெரிக்கா செயற்படுகிறது என ஆளும் பா ஜ கா குற்றம் சாட்டுகிறது, அதற்காக கொங்கிரஸ் கட்சிக்கு நிதியுதவி வழங்கி அரசிற்கெதிராக செயற்படுவதாக குற்றம் சாட்டுகிறது. எமக்கான தீர்வினை அமெரிக்க தரப்பு வழங்கும் என எதிர்பார்ப்புடன் இயங்குகின்ற நிலையில் கொங்கிரஸிற்கெதிரான நிலைப்பாடு சாதகமான சூழலை ஏற்படுத்தாது. அமெரிக்கா இந்தியாவினை பிரதான பாதுகாப்பு பங்குதாரராகவே பார்க்கின்றது, இந்திய ஆளும் அரசு கூட பொருளாதார நலனை அடிப்படையிலும் சில பாதுப்பு அடிப்படையிலும் இரஸ்சியாவுடனான உறவினை பேணினாலும் இந்தியாவினை அமெரிக்கா என்றும் பலவீனமாக்காது அதற்கு காரணம் சீனாவிற்கான ஓரளவான பாதுகாப்பு பலச்சமனிலையினை இந்தியா பேணுகின்றது, எதிர்காலத்தில் சீனாவிற்கெதிரான நடவடிக்கைக்கு ஒரே நம்பிக்கையான தளமாக இந்தியாவினை பார்க்கின்றது. ஐநா மனித உரிமை அமைப்பின் முன்னால் நீதி கேட்பதால் எதுவும் நடக்காது( கடந்த காலத்தில் நடக்கவில்லை, நிகழ்காலத்திலும் நடக்கவில்லை, எதிர் காலத்திலும் நடக்குமா?). இன்றைய உலகு நியாய அடிப்படையில் செயற்படுவதில்லை, நாமும் அதற்கேற்ப எம்மை மாற்ற வேண்டும். இக்காலகட்டத்தில் தனி நாடு சாத்தியமில்லை அதிக அதிகாரம் கொண்ட ஒரு சுமூகமான தீர்வு சாத்தியம் அதற்கு எமக்கு இந்திய ஆதரவு தேவை. நேரடியாக இந்திய அபிமானி என்று சொல்வதோ அல்லது இரஸ்ஸிய அபிமானி, வேறு மதங்களின் அபிமானி என சொல்வதன் மூலம் எனது கருத்திற்கு எதிராக சில சார்பு மனநிலையானவர்களை (bias) எனது கருதிற்கெதிராக அணிதிரட்டுவதால் என்ன நன்மை ஏற்பட்டுவிட போகிறது. சோனியா மேல் வெறுப்பு எனக்கும் உண்டு, ஆனால் நோய்வாய்ப்பட்ட ஒரு மூதாட்டியினை துன்பப்பட்டு சாகவேண்டும் என கூறும் கருத்து உவப்பானதாக இல்லை, நாங்கள் எல்லோரும் நல்ல வளர்ப்பில் இருந்து வந்துள்ளோம்; எந்த நிலையிலும் மாறக்கூடாதல்லவா? நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்பது எனக்கு தெரியும், கோபங்களால் நட்டம்தான் ஏற்படும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒழுக்கமற்ற வகையில் பேசினார் ; அவரின் பக்கம் அமரமுடியாது - சபாநாயகரிடம் முறையிட்ட அர்ச்சுனா

1 month 4 weeks ago
அங்கு மட்டுமல்ல அவர் செல்லுமிடமெங்கும் அதே கூத்துத்தான்! மக்களுக்குரிய பிரச்சனைகளை கதைக்கும்போது இடையூறு விளைவித்து தன்னை பெரியவராக காட்ட கத்தி கூச்சலிடுபவர். அடிக்கடி தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டுப்படுபவர், சட்டத்தை மீறுபவர். இவர் தனது பாராளுமன்ற பிரவேசத்தின்பின் எத்தனை தடவை நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்? மக்களின் பிரச்சனைகளுக்காகவா? அதேதான்! பாராளுமன்ற பிரவேசத்தின்போதே இவர் வேறொருவருக்குரிய ஆசனத்தில் இருந்துகொண்டு போட்ட அலப்பறை தெரியுமே. பாராளுமன்ற கோமாளி.

முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 4 weeks ago
ஒரு சின்ன விளக்கம் வேலையிடத்து நிர்வாக கெடுபிடிகள் உட்பட்ட சில காரணங்களால் என்னால் யூகேயில் இருந்து நிதி ஒருங்கிணைப்பை செய்ய முடியாது. அனைவரும் மன்னிக்க வேண்டும். நான் இதை ஆரம்பத்திலேயே சொல்லியுள்ளேன் என நம்புகிறேன். இப்போதைக்கு அனைவரும் எராளன் திறந்துள்ள கணக்குக்கு அனுப்புவது. அவர் மொத்த தொகையை அறிவிப்பது. அதன்படி வேலையை ஆரம்பிப்பது என செய்வோம். திட்ட மீளாய்வு நேரத்தில் இதை எப்படி வினைதிறனாக செய்யலாம் என சிந்திப்போம்.

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்

1 month 4 weeks ago
இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என தமிழில் 3 வகையாக காலங்களை வகுக்கின்றனர், தற்போது இதனை விளக்குகின்ற எனது நிலை கஸ்ட காலம் என கருதுகிறேன்🤣.