Aggregator

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

1 month 3 weeks ago
ராஜபக்சர்கள் மட்டுமல்ல, மைத்திரி, ரணில், சந்திரிக்கா எல்லாரும் அனுர அரசின் நடவடிக்கையால் கடும் சினத்துக்குள்ளாகியுள்ளனர். மகிந்தவை தங்காலையில் வைத்து பலிகொடுத்தாவது (பின் புலம்பெயர் தமிழர்களை காரணம் சொல்லி) தம் பக்கம் காற்று வீச வைக்க முயல்வார்கள்.

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

1 month 3 weeks ago
இப்படி தீர்ப்பு வரும் என எதிர்பார்த்தமையால் தானா சீமான் ரகசியமாக சபரீசனை அண்மையில் சந்தித்தார் (இவ்வாறு ரகசியமாக சந்தித்தார் என ஜூனியர் விகடன் கழுகார் பக்கத்தில் எழுதியுள்ளது)

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

1 month 3 weeks ago

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரை கைது செய்ய தற்போது விதிக்கப்பட்டு உள்ள தடை நீக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக கூறி உள்ளது. அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன.

சீமான் விஜயலட்சுமி வழக்கு

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சீமான் செப்டம்பர் 24-க்குள் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. விஜயலட்சுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவரிடம் கொடுத்த வாக்குறுதிகள், அதன்பின் அவரை பற்றி பொதுவெளியில் தவறாக பேசியதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

அவர் மன்னிப்பு கேட்கத் தவறினால், அவரது கைதுக்கான தற்போதைய தடை நீக்கப்பட்டு, அவர் எந்தப் பாதுகாப்பும் இன்றி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று நீதிமன்றம் எச்சரித்தது.

கைது செய்ய தடை இல்லை

அதாவது சீமானை கைது செய்ய உள்ள தடை நீக்கப்படும், அவர் கைது செய்ய அனுமதிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. மேலும், இந்த விவகாரத்தை சுமூகமாகத் தீர்க்க இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. சட்டச் செயல்முறைக்கு விஜயலட்சுமி உரிய உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் நடிகையைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சீமான் நீதிமன்றத்திற்கு உறுதியளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

தவறாக பேச கூடாது

எதிர்காலத்தில் அந்த எதிர்காலத்தில் நடிகையை பற்றி தவறாக பேச கூடாது. இரு தரப்பினரும் தங்கள் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும். சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சீமான் மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் நடிகை வழக்கை வாபஸ் வாங்கலாம் என்றும் இது நீதிக்கும் மரியாதைக்கும் உகந்த சமரசம் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.

சீமான் மீதான கைதுக்கான, விசாரணைக்கான இடைக்கால தடை அடுத்த விசாரணை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு செப்டம்பர் 24-க்கு ஒத்திவைக்கப்பட்டு, அன்று சீமானின் பதிலையும், அடுத்தகட்ட நடவடிக்கையையும் நீதிமன்றம் பரிசீலிக்கும். தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்த நீண்டகால சர்ச்சையில் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.

அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வழக்கு வாபஸ் ஆகும் பட்சத்தில் சீமான் விஜயலட்சுமியிடம் தனிப்பட்ட வகையில் மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-seeman-should-apologize-to-vijayalakshms-orders-sc-735115.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

  1. இனி வழக்கு வாபஸ்/தள்ளுபடி ஆனால் - சீமான், விஜி அண்ணியிடம் மன்னிப்பு கேட்டார் என்பதே அதன் பொருள்.

  2. அப்படி கேட்காவிடில் தா நா அரசு வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும்.

  3. அப்படி மன்னிப்பு கேட்பின் - விஜி அண்ணி இதுவரை சொன்னது உண்மை என்றாகிறது. சீமான் மட்டும் அல்ல, விஜி அண்ணியை கேவலமாக எழுதிய யாழ் கள ஆண் சிங்கங்களும் தார்மீக ரீதியில் மன்னிப்பு கேட்க வேண்டியோரே.

  4. ஒரு வழியாக, பிஜேபி ஆதரவுடன், சுப்ரீம் கோர்ட் மாமா வேலை பார்க்க, விஜி அண்ணியை மிரட்டி, தாஜா பண்ணி சீமான் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தப்பி விடக்கூடும். ஆனால்

    மக்கள் மன்றில் இனி அவர் எப்போதும் “பாலியல் சைக்கோ சீமான்”தான்.

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

1 month 3 weeks ago
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரை கைது செய்ய தற்போது விதிக்கப்பட்டு உள்ள தடை நீக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக கூறி உள்ளது. அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன. சீமான் விஜயலட்சுமி வழக்கு இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சீமான் செப்டம்பர் 24-க்குள் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. விஜயலட்சுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவரிடம் கொடுத்த வாக்குறுதிகள், அதன்பின் அவரை பற்றி பொதுவெளியில் தவறாக பேசியதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்கத் தவறினால், அவரது கைதுக்கான தற்போதைய தடை நீக்கப்பட்டு, அவர் எந்தப் பாதுகாப்பும் இன்றி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று நீதிமன்றம் எச்சரித்தது. கைது செய்ய தடை இல்லை அதாவது சீமானை கைது செய்ய உள்ள தடை நீக்கப்படும், அவர் கைது செய்ய அனுமதிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. மேலும், இந்த விவகாரத்தை சுமூகமாகத் தீர்க்க இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. சட்டச் செயல்முறைக்கு விஜயலட்சுமி உரிய உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் நடிகையைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சீமான் நீதிமன்றத்திற்கு உறுதியளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பரிந்துரைத்தனர். தவறாக பேச கூடாது எதிர்காலத்தில் அந்த எதிர்காலத்தில் நடிகையை பற்றி தவறாக பேச கூடாது. இரு தரப்பினரும் தங்கள் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும். சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சீமான் மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் நடிகை வழக்கை வாபஸ் வாங்கலாம் என்றும் இது நீதிக்கும் மரியாதைக்கும் உகந்த சமரசம் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. சீமான் மீதான கைதுக்கான, விசாரணைக்கான இடைக்கால தடை அடுத்த விசாரணை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு செப்டம்பர் 24-க்கு ஒத்திவைக்கப்பட்டு, அன்று சீமானின் பதிலையும், அடுத்தகட்ட நடவடிக்கையையும் நீதிமன்றம் பரிசீலிக்கும். தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்த நீண்டகால சர்ச்சையில் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது. அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வழக்கு வாபஸ் ஆகும் பட்சத்தில் சீமான் விஜயலட்சுமியிடம் தனிப்பட்ட வகையில் மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-seeman-should-apologize-to-vijayalakshms-orders-sc-735115.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி இனி வழக்கு வாபஸ்/தள்ளுபடி ஆனால் - சீமான், விஜி அண்ணியிடம் மன்னிப்பு கேட்டார் என்பதே அதன் பொருள். அப்படி கேட்காவிடில் தா நா அரசு வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்பின் - விஜி அண்ணி இதுவரை சொன்னது உண்மை என்றாகிறது. சீமான் மட்டும் அல்ல, விஜி அண்ணியை கேவலமாக எழுதிய யாழ் கள ஆண் சிங்கங்களும் தார்மீக ரீதியில் மன்னிப்பு கேட்க வேண்டியோரே. ஒரு வழியாக, பிஜேபி ஆதரவுடன், சுப்ரீம் கோர்ட் மாமா வேலை பார்க்க, விஜி அண்ணியை மிரட்டி, தாஜா பண்ணி சீமான் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தப்பி விடக்கூடும். ஆனால் மக்கள் மன்றில் இனி அவர் எப்போதும் “பாலியல் சைக்கோ சீமான்”தான்.

இனி பாலஸ்தீன நாடு கிடையாது : அந்த நிலம் எங்களுடையது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

1 month 3 weeks ago
இனிமேல் பாலஸ்தீனம் என்ற எதுவும் கிடையாது! இனி பாலஸ்தீன நாடு என்று எதுவும் கிடையாது எனவும், அந்த நிலம் தங்களுக்கே சொந்தமானது எனவும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தில் நேற்று கையெழுத்திட்டதன் பின்னர் ஊடகங்களை சந்தித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்””எங்கள் வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பாலஸ்தீன நாடு என்றவொன்று இல்லை. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது கலாச்சாரம், நிலம் பாதுகாக்கப்படும். மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும். இங்கு பல சிறந்த விஷயங்கள் நடக்கும்” என்று கூறினார். இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும். மேற்குக் கரையின் மாலே அடுமிம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமுடன் இணைக்கும் இந்தத் திட்டம், கிழக்கு ஜெருசலேமிலிருந்து உள்ள பாலஸ்தீனியர்களிடமிருந்து மேற்குக் கரையை முற்றிலுமாகத் துண்டிக்கும். சர்வதேச அழுத்தத்தால் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த E-1 திட்ட பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கியது. பாலஸ்தீனியர்களுக்காக பிரத்தியேகமாக வடக்கு மற்றும் தெற்கு மேற்குக் கரைகளை இணைக்கும் சாலையை அமைக்கும் திட்டத்தை இஸ்ரேல் இதன் மூலம் தொடங்கியது. இது பாலஸ்தீனியர்கள் பிரதான நெடுஞ்சாலையில் நுழைவதைத் தடுக்கும். தற்போதைய நிலவரப்படி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள 300 சட்டவிரோத குடியிருப்புகளில் சுமார் 700,000 இஸ்ரேலிய குடியேறிகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446977

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

1 month 3 weeks ago
உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து விடைபெற்ற மஹிந்தவின் பதிவு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய பின்னர், அந்த சம்பவம் குறித்து தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்தப் பதிவில், ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமைக்கு மதிப்பளித்து, தான் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது பேஸ்புக் கணக்கில் இட்டுள்ள பதிவு பின்வருமாறு, "ஜனாதிபதிகளுக்கான உரித்துரிமை நீக்க சட்டமூலம் கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்த புதிய சட்ட நிலைமையை மதித்து, எனக்கு சட்டப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து நான் நேற்றைய தினம் (11) வெளியேறினேன். விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற ஊடகங்களில் சிலர் இதற்கு முன்னர் வௌியிட்ட பல்வேறு கருத்துக்களை நான் அவதானித்தேன். மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது மிகக் குறுகிய காலத்தில் நாளுக்கு நாள் மக்களின் அதிருப்தி சம்பாதித்து வரும் குழு தங்கள் திறமையின்மையை மறைக்க ஊடகங்களில் வெளியிட்ட அந்த கருத்துகளுக்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. இருப்பினும், பின்னர், அவர்களால் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டதன் மூலம், 24 மணி நேரத்திற்குள் விஜேராம இல்லத்திற்கு விடைகொடுத்தேன். ஏனென்றால் நாம் சட்டத்தை மதிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ என்ற நான், சட்டத்தின் முன்பும், என் மக்கள் முன்பும் மட்டும் தான் தலை வணங்குவேன். தனிப்பட்ட பழிவாங்கலை நோக்கமாகக் கொண்ட ஒழுக்கமற்ற, தொழில்முறையற்ற அரசியல் பயங்கரவாதத்தை நாம் அனைவரும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததால், அது தொடர்பாக எழுந்த நிகழ்வுகளின் இலக்காக நான் மாறிவிட்டேன். ஆனால் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கு நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன். இந்த தாய்நாட்டில் சுதந்திரமாக சுவாசிக்கும் உரிமைக்காக நான் போராடினேன். சுவாசம் நம் அனைவருக்கும் பொதுவானது. இனம் அல்லது மத வேறுபாடு இல்லை. எமது சுவாசத்திற்காக தங்களின் மூச்சை இழந்தவர்கள் இராணுவ வீரர்களே. அவர்கள் வென்ற ஒரு பெருமைமிக்க தேசத்தின் சுதந்திரத்தை அடையாளப்படுத்தவும், அதற்கு நன்றி தெரிவிக்கவும், நாங்கள் அனைவரும் புனித நகரமான அனுராதபுரத்தில் சந்த ஹிரு சேயவை உருவாக்கினோம். சந்திரனும் சூரியனும் இருக்கும் வரை, எங்கள் தாய்நாடு ஒரே நாடாக, ஒரே கொடியின் கீழ் இருக்கும் என்பதை இது குறிக்கிறது. எனது மூத்த மகன் நாமல் கூறியது போல நான் எல்லாம் தொடங்கிய எனது சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டேன். நாங்களே கட்டிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து வந்தேன். இப்போது கிராமத்தில் புளிப்பு மீன் குழம்பை அனுபவிக்க முடியும். அதை கொழும்புக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், இது அனைத்தும் இந்த பூமியிலிருந்து தொடங்கியது. மஹிந்த ராஜபக்ஷ என்ற இளைஞன் 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிருவாவிலிருந்து போட்டியிட்டார். எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா. ஒரு இளம் எம்.பி.யாக நான் பின்பற்ற வேண்டிய பாதையை அவர் எனக்குக் காட்டினார். அவர் எங்களுக்கு ஒரு தலைவராகவும் தாயாகவும் இருந்தார் என்று சொல்வது உண்மைதான். அரசியலில் சரியான வழிகாட்டுதலை வழங்குவது மிகவும் முக்கியம். ருஹுணு எம்.பி.யாக இருந்த எனது மறைந்த அன்புக்குரிய தந்தை, நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களை சோசலிசத்தை நோக்கி வழிநடத்திய பண்டாரநாயக்காவின் பின்னால் எப்போதும் இருந்தார். ருஹுணு பெலியத்தவில் மக்களின் அபிலாஷைகளை என் தந்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். இளைய எம்.பி.யாக 1970 இல் மக்கள் அரசாங்கத்தின் முதல் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை உரையை நான் நிகழ்த்தினேன். ருஹுணு பெலியத்தவில் மக்களின் அபிலாஷைகளைப் பற்றிப் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. இருண்ட காலங்களில் இருந்த அரசியல் அடக்குமுறை மற்றும் பழிவாங்கல்களைத் தாண்டி, காணாமல் போனவர்களின் சார்பாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்றவர் இந்த மஹிந்த ராஜபக்ஷதான். காணாமல் போதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்னிலையாகி சட்ட உதவி வழங்கப்பட்ட இடத்தின் முகவரியான "சட்டத்தரணி மஹிந்த ராஜபக்ஷ, தலைவர் - மனித உரிமைகள் மற்றும் சட்ட உதவி மையம், கார்ல்டன், தங்காலை". என்பதை எனது நண்பர்களுக்கு நான் மீண்டும் நினைப்படுத்த விரும்புகிறேன். பாதயாத்திரைகள், பொதுமக்கள் கூக்குரல், மனித சங்கிலி போன்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மக்களின் நலனுக்காக ஜனநாயக வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு எடுத்துக்காட்டுகள். யாரும் தங்கள் அரசியல் அழுத்தங்கள் மற்றும் பதட்டங்களை சமாளிக்க ஜனநாயகத்திலிருந்து விலக முடியாது. தவறான தகவல்களை பிரச்சாரம் செய்து பிரதான எதிர்க்கட்சி சித்தாந்தவாதிகளை அடக்குவதற்கான முயற்சி வருந்தத்தக்கது. மக்கள் நம் மீது வைத்திருந்த நம்பிக்கைகள் அதிகமாக இருந்தன. அந்த நம்பிக்கைகளின் தீவிரத்தினால்தான் கடந்த காலங்களில் சில சம்பவங்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ தனது இதயத்திற்கு ஏற்பவும் நாட்டிற்காகவும் முடிவுகளை எடுத்தார். மக்களின் அன்பையும் பாசத்தையும் விட எனக்கு மதிப்புமிக்கது எதுவுமில்லை. கடந்த காலத்திலும் இன்றும் நான் பெற்ற அதே மக்களின் அன்பைப் பெறுவது எனது பாக்கியம். அந்த வரப்பிரசாதத்தை யாராலும் என்னிடமிருந்து பறிக்க முடியாது. எங்கள் மரியாதைக்குரிய மதத்தலைவர்களிடம் இருந்து நான் எப்போதும் பெற்ற ஆசீர்வாதங்கள் பொருள் சலுகைகளுக்கு அப்பாற்பட்டவை. என் அன்பு மனைவி ஷிராந்தி அரசியலில் ஈடுபடுவதற்குத் தேவையான மன சுதந்திரத்தை எனக்கு வழங்குவதன் மூலம் எப்போதும் எனக்கு பலத்தை அளித்து வருகிறார். அன்றும் இன்றும் என் பக்கத்தில் இருந்த, இருக்கும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி தலைமையிலான எனது பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து நான் பெறும் பாதுகாப்பு, வேலைக்கு அப்பாற்பட்ட மிகவும் அன்பான பிணைப்பாகும். நான் தங்காலையில் இருந்தாலும் விஜேராமவில் இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ தான். நான் உயிருடன் இருக்கும் வரை, நாம் அனைவரும் வாழும் சிங்கக் கொடியின் நிழலில் இருக்கும் இந்த ஒன்றுபட்ட தாய்நாட்டை யாராவது காட்டிக் கொடுத்தால், எவ்வளவு துன்புறுத்தல்கள் வந்தாலும் நான் எழுந்து நிற்பேன் என்று அறிவிக்கிறேன். அந்த நாள் வந்தால், ஆதரிப்பதற்கு மகா சங்கத்தினருடன் இந்த நாட்டின் அன்பான மக்கள் இருப்பார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். கிருவாப்பத்துவைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் கர்ச்சிப்பினை நன்கு அறிந்தவர்." என பதிவிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmfgq82sk00cwqplpmebt7dbn

மன்னாரில் பறவைகள் கடத்தல்; இருவர் கைது

1 month 3 weeks ago
Published By: Digital Desk 3 12 Sep, 2025 | 11:35 AM மன்னார் - சிறுத்தோப்பு கடற்கரைக்கு அருகில் இந்த வாரம் 91 பறவைகளை கடத்த முயன்ற இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பேசாலை மற்றும் மன்னாரைச் சேர்ந்த 17 மற்றும் 52 வயதுடையவர்கள் ஆவர். கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 72 புறாக்கள் மற்றும் 19 வேட்டை கோழிகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கடத்தல் முயற்சியில் பயன்படுத்தப்பட்ட படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். பறவைகள் மற்றும் படகுடன் சந்தேகநபர்கள் பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/224884

மன்னாரில் பறவைகள் கடத்தல்; இருவர் கைது

1 month 3 weeks ago

Published By: Digital Desk 3

12 Sep, 2025 | 11:35 AM

image

மன்னார் - சிறுத்தோப்பு கடற்கரைக்கு அருகில் இந்த வாரம் 91 பறவைகளை கடத்த முயன்ற இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் பேசாலை மற்றும் மன்னாரைச் சேர்ந்த 17 மற்றும் 52 வயதுடையவர்கள் ஆவர்.

கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 72 புறாக்கள் மற்றும் 19 வேட்டை கோழிகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடத்தல் முயற்சியில் பயன்படுத்தப்பட்ட படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பறவைகள் மற்றும்  படகுடன்  சந்தேகநபர்கள் பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/224884

ஹெந்தலவிலுள்ள ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலைக்கு ஜப்பான் தூதுவர் விஜயம்

1 month 3 weeks ago
Published By: Priyatharshan 12 Sep, 2025 | 10:46 AM வத்தளை, ஹெந்தலையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலைக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) விஜயம் செய்தார். 1708 ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை நிர்வாகத்தால் தூதுவர் இசொமதா அன்புடன் வரவேற்கப்பட்டு வைத்தியசாலை வரலாறு குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. முதலில் காலனித்துவ கால புகலிடமாக நிறுவப்பட்ட இந்த வைத்தியசாலை, இப்போது குறைந்து வரும் உள்நோயாளிகளுக்கான பராமரிப்பு வசதியாக செயல்படுகிறது. 1995 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்த தொழுநோயை வெற்றிகரமாக ஒழித்த போதிலும், சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் நோயாளிக்கான ஆதரவில் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு சுகாதார அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. தொழுநோய் தொடர்பான மனித உரிமைகள் பிரச்சினைகளில் ஜப்பான் தூதர் இசொமதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் சர்வதேச அமைப்புகளுக்கான ஜப்பானின் நிரந்தர மிஷனில் பணியாற்றிய காலத்தில், தொழுநோய் ஒழிப்புக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் நல்லெண்ண தூதரும், அப்போதைய நிப்பொன் அறக்கட்டளையின் தலைவருமான திரு. யோஹெய் சசகாவாவுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். 2008 ஆம் ஆண்டு மனித உரிமைகள் கவுன்சிலில் , தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான தீர்மானத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்வதற்கு இருவரும் இணைந்து பணியாற்றினர், இது இந்த நூற்றாண்டுகள் பழமையான பிரச்சினை தொடர்பான முதல் தீர்மானமாகும். வைத்தியசாலை, சுகாதார அமைச்சகம் மற்றும் குறிப்பாக பல தசாப்தங்களாக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வைத்தியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு தூதுவர் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இலங்கையுடனான ஜப்பானின் தொடர்ச்சியான நட்பு மற்றும் ஒற்றுமையையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். https://www.virakesari.lk/article/224878

ஹெந்தலவிலுள்ள ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலைக்கு ஜப்பான் தூதுவர் விஜயம்

1 month 3 weeks ago

Published By: Priyatharshan

12 Sep, 2025 | 10:46 AM

image

வத்தளை, ஹெந்தலையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலைக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) விஜயம் செய்தார். 

1708 ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் ஆசியாவின் பழமையான தொழுநோய் வைத்தியசாலையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை நிர்வாகத்தால் தூதுவர் இசொமதா அன்புடன் வரவேற்கப்பட்டு வைத்தியசாலை வரலாறு குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. முதலில் காலனித்துவ கால புகலிடமாக நிறுவப்பட்ட இந்த வைத்தியசாலை, இப்போது குறைந்து வரும் உள்நோயாளிகளுக்கான பராமரிப்பு வசதியாக செயல்படுகிறது. 

1995 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்த தொழுநோயை வெற்றிகரமாக ஒழித்த போதிலும், சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் நோயாளிக்கான ஆதரவில் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு சுகாதார அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.

தொழுநோய் தொடர்பான மனித உரிமைகள் பிரச்சினைகளில் ஜப்பான் தூதர் இசொமதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் சர்வதேச அமைப்புகளுக்கான ஜப்பானின் நிரந்தர மிஷனில் பணியாற்றிய காலத்தில், தொழுநோய் ஒழிப்புக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் நல்லெண்ண தூதரும், அப்போதைய நிப்பொன் அறக்கட்டளையின் தலைவருமான திரு. யோஹெய் சசகாவாவுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். 

2008 ஆம் ஆண்டு மனித உரிமைகள் கவுன்சிலில் , தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான

தீர்மானத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்வதற்கு இருவரும் இணைந்து பணியாற்றினர், இது இந்த நூற்றாண்டுகள் பழமையான பிரச்சினை தொடர்பான முதல் தீர்மானமாகும்.

வைத்தியசாலை, சுகாதார அமைச்சகம் மற்றும் குறிப்பாக பல தசாப்தங்களாக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வைத்தியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு தூதுவர் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். 

தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இலங்கையுடனான ஜப்பானின் தொடர்ச்சியான நட்பு மற்றும் ஒற்றுமையையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

WhatsApp_Image_2025-09-11_at_14.32.56.jp

WhatsApp_Image_2025-09-11_at_14..jpg

Image__1___1_.jpg

https://www.virakesari.lk/article/224878

கிராமப்புற பாலங்கள் திட்டத்திற்கு €730,000 மானியம்

1 month 3 weeks ago
இலங்கையில் நடந்து வரும் கிராமப்புற பாலங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமான திட்டத்தை ஆதரிப்பதற்காக நெதர்லாந்து €730,000 கூடுதல் மானியத்தை அங்கீகரித்துள்ளது. இந்த நிதி திட்டத்தின் கூடுதல் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். இலங்கை முழுவதும் 162 கிராமப்புற பாலங்களை நிர்மாணிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது இயக்கம், நகர்ப்புற-கிராமப்புற இணைப்பு மற்றும் கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. செப்டம்பர் 2025 நிலவரப்படி, இந்த திட்டம் 96% இயற்பியல் முன்னேற்றத்தை அடைந்துள்ளதோடு 151 பாலங்களின் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. திட்டத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், திட்டமிடப்பட்ட அனைத்து பாலங்களின் கட்டுமானமும் பிப்ரவரி 2026 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தின் தொடக்கத்தில், இலங்கை அரசாங்கம் நெதர்லாந்தின் Coöperatieve Rabobank U.A. உடன் 41.8 மில்லியன் யூரோ கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது திட்ட செலவில் 75% ஐ ஈடுகட்டுகிறது. நெதர்லாந்து வெளிநாட்டு முதலீட்டு வங்கியான “முதலீட்டு சர்வதேச வங்கி” மீதமுள்ள 25% அல்லது யூரோ 13.9 மில்லியனை மானியம் மூலம் வழங்கியது. இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை உணர்ந்த நெதர்லாந்து, 2024 ஆம் ஆண்டில் அதன் மானிய பங்களிப்பை மொத்த திட்ட செலவில் தோராயமாக 35% ஆக அதிகரித்தது, இது தோராயமாக யூரோ 5.3 மில்லியன் அதிகரிப்பு. இந்த சரிசெய்தல் நிலுவையில் உள்ள கடன் நிலுவையில் ஒரு பகுதியை ரத்து செய்ய உதவியது மற்றும் நாட்டின் கடன் சுமையை மேலும் குறைத்தது. சமீபத்திய €730,000 மானியத்துடன், திட்டத்திற்கான மொத்த மானியம் €18,912,335.72 ஆகும், இது மொத்த திட்ட செலவில் சுமார் 37% ஆகும். இந்த ஆதரவைப் பாராட்டி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நெதர்லாந்தின் பதில் தூதர் இவான் ருட்ஜென்ஸ், அவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது நெதர்லாந்து அரசாங்கத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இலங்கையின் வளர்ச்சி முன்னுரிமைகளை ஆதரிப்பதில் நெதர்லாந்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பதில் தூதர் மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் சந்திப்பன்போது எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சலுகை நிதியுதவியை தொடர்ந்து வழங்க விருப்பம் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmfghzlvl00cpqplpt5sbk6dy

கிராமப்புற பாலங்கள் திட்டத்திற்கு €730,000 மானியம்

1 month 3 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கையில் நடந்து வரும் கிராமப்புற பாலங்கள் வடிவமைப்பு மற்றும் கட்டுமான திட்டத்தை ஆதரிப்பதற்காக நெதர்லாந்து €730,000 கூடுதல் மானியத்தை அங்கீகரித்துள்ளது.

இந்த நிதி திட்டத்தின் கூடுதல் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.

இலங்கை முழுவதும் 162 கிராமப்புற பாலங்களை நிர்மாணிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது இயக்கம், நகர்ப்புற-கிராமப்புற இணைப்பு மற்றும் கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.

செப்டம்பர் 2025 நிலவரப்படி, இந்த திட்டம் 96% இயற்பியல் முன்னேற்றத்தை அடைந்துள்ளதோடு 151 பாலங்களின் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. திட்டத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், திட்டமிடப்பட்ட அனைத்து பாலங்களின் கட்டுமானமும் பிப்ரவரி 2026 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டத்தின் தொடக்கத்தில், இலங்கை அரசாங்கம் நெதர்லாந்தின் Coöperatieve Rabobank U.A. உடன் 41.8 மில்லியன் யூரோ கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இது திட்ட செலவில் 75% ஐ ஈடுகட்டுகிறது. நெதர்லாந்து வெளிநாட்டு முதலீட்டு வங்கியான “முதலீட்டு சர்வதேச வங்கி” மீதமுள்ள 25% அல்லது யூரோ 13.9 மில்லியனை மானியம் மூலம் வழங்கியது.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை உணர்ந்த நெதர்லாந்து, 2024 ஆம் ஆண்டில் அதன் மானிய பங்களிப்பை மொத்த திட்ட செலவில் தோராயமாக 35% ஆக அதிகரித்தது, இது தோராயமாக யூரோ 5.3 மில்லியன் அதிகரிப்பு. இந்த சரிசெய்தல் நிலுவையில் உள்ள கடன் நிலுவையில் ஒரு பகுதியை ரத்து செய்ய உதவியது மற்றும் நாட்டின் கடன் சுமையை மேலும் குறைத்தது.

சமீபத்திய €730,000 மானியத்துடன், திட்டத்திற்கான மொத்த மானியம் €18,912,335.72 ஆகும், இது மொத்த திட்ட செலவில் சுமார் 37% ஆகும்.

இந்த ஆதரவைப் பாராட்டி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நெதர்லாந்தின் பதில் தூதர் இவான் ருட்ஜென்ஸ், அவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது நெதர்லாந்து அரசாங்கத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையின் வளர்ச்சி முன்னுரிமைகளை ஆதரிப்பதில் நெதர்லாந்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பதில் தூதர் மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் சந்திப்பன்போது எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சலுகை நிதியுதவியை தொடர்ந்து வழங்க விருப்பம் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmfghzlvl00cpqplpt5sbk6dy

இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் – சந்திரிகா குமாரதுங்க

1 month 3 weeks ago
அது மட்டுமில்லை அதிவிலைகூடிய மதுபானவகை லண்டனில் வாங்கியதிற்கு காசு எங்காலை வந்தது என்றும் கேளுங்கோ..

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!

1 month 3 weeks ago
சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார். மகாவலிக்கு சொந்தமான காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தனது அரசியல் அலுவலகத்தை போராட்டகாரர்கள் தீ வைத்து அழித்ததற்காக சட்டவிரோதமாக 8,850,000 ரூபாய் பணத்தை இழப்பீடாக பெற்றமை ஊடாக "ஊழல்" என்ற குற்றத்தைச் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டார். https://adaderanatamil.lk/news/cmfgh7p9i00coqplpp6l3wrut

2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா!

1 month 3 weeks ago
காப்பெற்று ரோட் என்று கழிவு ரயர் எல்லாவற்றையும் கொண்டுவந்து இலங்கையில் கொட்டியாயிற்று...இந்த துணிகளும் எதை உருக்கிச் செய்ததோ தெரியாது...இவையும் உக்காத பிளாஸ்டிக் வகையோ தெரியாது... அய்யா நான் ...விஞ்ஞானி அல்ல...அங்கினைக்கை இங்கினக்கை வாசிச்ச செய்தியில் இர்ந்து புடுங்கினதுதான் ..இது.. அதைவிட இன்னுமொன்று வீடு மாறும் மகிந்தவையும் போய் சந்தித்தவர்...இந்த தூதுவர்..ஜே.வி.பி சீனா போய் சந்திக்குது ...இங்கை தூதுவர் பால் காய்ச்சப் போறவரை வீடு தேடிப்போய் சந்திக்கிறார்..

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராக செயல்பட்டதாக பொலிஸார் தகவல்

1 month 3 weeks ago
12 Sep, 2025 | 10:08 AM “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி “கெஹெல்பத்தர பத்மே” நடத்திய போதைப்பொருள் உற்பத்தி நடவடிக்கையின் தலைவராக மாத்திரம் அல்லாமல் ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராகவும் செயல்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் ஏற்கனவே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் பாதாள உலக குழுக்களுக்கு சொந்தமானவை என்றும் பொலிஸாரால் நம்பப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டுப்பிடித்து கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளும் பொலிஸாரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், “கெஹெல்பத்தர பத்மே” வுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்த கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் அண்மையில் குற்ற புலனாய்வு அதிகாிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224874