Aggregator

அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி

2 months 1 week ago
அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி. அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா ( Lula da Silva) தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா, தங்களது இறையாண்மை நிலையை வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பிரேசிலில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது” ‘பிரேசில் ஒரு இறையாண்மை நாடு. நாங்கள் வெளியில் இருந்து வரும் எந்தவொரு கட்டுப்பாடு அல்லது அழுத்தத்தையும் ஏற்கமாட்டோம். பிரேசில் டிஜிட்டல் வலைதளங்களில் வரும் வெறுப்பு பேச்சு, இனவெறி, சிறுவர்கள் துஷ்பிரயோகம், மோசடிகள், மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களை ஏற்காது. பிரேசிலில் பேச்சுரிமை என்பது எந்தவொரு வன்முறையையும் ஊக்குவிக்காது. பிரேசிலில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும், இங்கே இயங்குவதற்கு பிரேசில் சட்டத்தை பின்பற்ற வேண்டும். பிரேசில் உடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை கூற்றுகள் தவறானவை. கடந்த 15 ஆண்டுகளில், பிரேசில் உடனான அமெரிக்காவின் வணிக உபரி 410 பில்லியன் டொலர்கள் என்று அமெரிக்காவின் தரவுகள் காட்டுகின்றன. அமெரிக்கா எங்கள் மீது புதிய வரிகளை விதித்தால், பிரேசில் அதற்கான பதிலடியை பிரேசிலின் பொருளாதார பரஸ்பர சட்டம் மூலம் கொடுக்கும். பிரேசில் இறையாண்மை,பரஸ்பர மரியாதை, மற்றும் உலகளாவிய உறவுகளில் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை மதிக்கிறது’ இவ்வாறு பதிவிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438672

அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி

2 months 1 week ago

Trump-Lula-New.jpg?resize=750%2C375&ssl=

அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி.

அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா ( Lula da Silva) தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா, தங்களது இறையாண்மை நிலையை வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பிரேசிலில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி  லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது”

‘பிரேசில் ஒரு இறையாண்மை நாடு. நாங்கள் வெளியில் இருந்து வரும் எந்தவொரு கட்டுப்பாடு அல்லது அழுத்தத்தையும் ஏற்கமாட்டோம்.

பிரேசில் டிஜிட்டல் வலைதளங்களில் வரும் வெறுப்பு பேச்சு, இனவெறி, சிறுவர்கள் துஷ்பிரயோகம், மோசடிகள், மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களை ஏற்காது.

பிரேசிலில் பேச்சுரிமை என்பது எந்தவொரு வன்முறையையும் ஊக்குவிக்காது. பிரேசிலில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும், இங்கே இயங்குவதற்கு பிரேசில் சட்டத்தை பின்பற்ற வேண்டும்.

பிரேசில் உடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை கூற்றுகள் தவறானவை. கடந்த 15 ஆண்டுகளில், பிரேசில் உடனான அமெரிக்காவின் வணிக உபரி 410 பில்லியன் டொலர்கள் என்று அமெரிக்காவின் தரவுகள் காட்டுகின்றன.

அமெரிக்கா எங்கள் மீது புதிய வரிகளை விதித்தால், பிரேசில் அதற்கான பதிலடியை பிரேசிலின் பொருளாதார பரஸ்பர சட்டம் மூலம் கொடுக்கும்.

பிரேசில் இறையாண்மை,பரஸ்பர மரியாதை, மற்றும் உலகளாவிய உறவுகளில் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை மதிக்கிறது’ இவ்வாறு  பதிவிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1438672

செம்மணி : அதிர்ச்சி தரும் அத்தாட்சிகள்!

2 months 1 week ago
இந்தக் கட்டுரையின் தரவுகளில் பல தவறுகள் இருக்கின்றன. முதலாவது கிருசாந்தி குமாரசாமி கைதுசெய்யப்பட்ட இடம், கால, வயது என்பன முற்றிலும் தவறானவை. இரண்டாவது 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் குருக்கள்மடத்தில் புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் என்று இங்கு குறிப்பிடப்படும் சம்பவம் என்பது ஒருபோதும் நடக்கவில்லை. ஆனால், ஜூலை 1990 இற்குப் பின்னர் முஸ்லீம்கள் மீது பல தாக்குதல்களை புலிகள் நடத்தியிருக்கின்றனர் என்பது உண்மையே. இலங்கை அரசுக்குச் சார்பாக எழுதும் முஸ்லீம் எழுத்தாளர் (எஸ் எம் எம் பஸீர்) ஒருவரால் பதியப்பட்ட முஸ்லீம்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் எனும் பட்டிய‌லில் இங்கு குறிப்பிடப்படும் சம்பவம் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது. Catalogue of LTTE atrocities on the Muslims in the East in 1990. • On 23 July 1990 5 Muslims who were staying in the Jariya Mosque in Sammanthurai were killed by the LTTE and three others injured. • On 29 of June 1990 the LTTE killed 6 Muslims including the chief Trustee of the Hijar Mosque, Oddamavadi . • On 2 July 1990 14 farmers were shot and hacked to death at Akkaraipatttu. • On the 3rd July 1990, (on the eve of Eid- Ul- Fithr) UL Dawood , the member of Citizen Committee of the Batticaloa District, and the Cluster Principal of Alighar Central school , Eravur, Al Haj M.L.A Gafoor .J.P and Quazi and his father in law U.L.Ali Mohamed were kidnapped and killed by the armed LTTE cadres. • On 7 July 1990, !7 Muslims were killed at Puthur , a border Muslim village in Polonnaruwa • On the 14th July 1990 , 69 Muslims who were on their way back from Hai pilgrimage were kidnapped and killed by the LTTE at Onthachimadam in the Battiucaloa District.. • On 19th July 1990 , Muslim passengers were abducted and killed at Ampilanthurai in the Batticaloa District. • On the 3 August 1990, 140 Worshippers at Kattankudy Meeraniya and Hussainiya mosques were murdered and sixty six were injured. • On 11th August 1990 (Early morning of 12th August 1990) 127 Muslims were massacred at Eravur. • On 12 August 1990 four farmers who were working in the paddy fields in Sammanthurai were killed by the LTTE. • 1n August 1990 eight Muslims were shot to death at Akkraipattu. Town.

செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு

2 months 1 week ago
சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான படங்களில் சத்தியராஜ் அவர்கள் நடிக்கவில்லை என்று எழுதியிருக்கிறீர்கள். அவர் நடித்த ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம் பற்றி முன்பு யாழில் வந்த கருத்துக்களை பார்வையிட IMDb▶️ Uchithanai Muharnthaal - Uchithanai Muharnthaal (2011)...Watch Trailer | 1:41

செம்மணி : அதிர்ச்சி தரும் அத்தாட்சிகள்!

2 months 1 week ago
அட இதை சொல்ல்வதற்குத்தான் இந்த பிடப்பு...ஜபினா முசுலிம் செய்தியை காவி ...இங்கு போட்டால் ..உள்ள வாந்தி எல்லாம் வெளியில் வரும் ...அதிலை மிகப்பெரும் சந்தோசமடையலாம் ...எப்பிடியும் அரசுக்கு குடைபிடித்து .. நாலு அமைச்சர் பதவி எடுக்கவேணும் என்ற நப்பாசைதான்

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

2 months 1 week ago
குறைந்தது தனக்குப்பின் கட்சியை கொண்டுசெல்ல ஒருவரை தயார் படுத்தாமல் யமனோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு கடைசிவரை தலைவர் பதவியில் குந்திக்கொண்டிருந்தவர். கட்சியின் கொள்கை ஒழுக்கத்தை கைவிட்டவர். இப்போ; பதவிக்காக அடிபாடு நடக்கிறது. இதில சம்பந்தரை யார்? ஏன் நினைவு கூரவேண்டும் ?சுமந்திரன் எனும் கொள்ளிக்காம்பை செருகியவரே இந்த ராஜ தந்திரிதான் கட்சியை சிதிலமாக்க.

நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்

2 months 1 week ago
விடயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதனை பற்றியதல்ல சொந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் வழங்கலில் ஆதிக்கம் இல்லாமல் வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் ஆளுமை செலுத்துகின்றன. அமெரிக்க பண்புகளுக்காக அமெரிக்க கடன்முறிகளை மற்ற நாடுகள் வாங்குகின்றன என்பது போன்ற ஒரு கருத்தினை நீங்கள் கூறியிருந்தீர்கள், அதற்கு அமெரிக்க பணமுறி தங்கத்தினை விட திரவத்தன்மை அதிகம் அத்துடன் தங்கத்தினை விட மேலதிகமாக வட்டி எனும் வகையிலான வருமானம் வருவதால் ம்ற்றும் இருப்பு, நாணய வலுக்குறைப்பு போன்ற காரணங்களுக்காக வாங்குவதாக கூறியிருந்தேன். அத்துடன் 2032 இல் அமெரிக்கா தனது உலகின் முதனிலையினை இழந்து விடும் என்பதற்காக 2022 இல் இருந்த கடன் அடிப்படையில் அதற்கு செலுத்தப்படும் வட்டி மற்றும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தினடிப்படையில் ஒரு மாதிரி கணிப்பீட்டினையும் பதிந்திருந்தேன் அதற்கு கூறிய காரணம் அப்போது கடன் மொத்த தேசிய வருமானத்தினை விட அதிகமாக இருந்தததன் அடிப்படையில் 2032 இல் கடன் தொகை 250% உயர்வடைந்துவிடும் எனவும் இங்கிலாந்து 2 உலக போரின் முடிவின் பின்னர் கடன் மொத்த தேசிய வருமானத்தில் 250% இருந்த போது அது தனது காலனித்துவத்தினை கைவிட்டதனை குறிப்பிட்டிருந்தேன். அப்போது 120% இருந்ததாக கருதுகிறேன் இரண்டு ஆண்டுகளின் பின்னர் 124% உள்ளது, அமெரிக்கா சரியான பாதையிலேயே செல்கிறது, ஆனால் அமெரிக்கா உலகின் முதனிலையினை அதற்கு முன்னராகவே வேறு காரணங்களால் இழக்கலாம் அல்லது 2032 இலும் தொடர்ந்து முதனிலையினை செலுத்தலாம். கணிப்பில் ஆண்டிற்கு 5% கடனதிகரிப்பு ஏற்படலாம் என கணித்ததாக நினைவுள்ளது, தற்போது ஆண்டிற்கு 2% கடனதிகரிப்பு ஏற்படுகிறது (கடந்த 2 ஆண்டில்), 2032 இனை விட சில ஆண்டுகள் அதிகரிக்கலாம் ஆனால் அது நிகழும் என்பதாகவே நான் உணருகிறேன்.

லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்

2 months 1 week ago
லாராவின் சாதனயை நான் குறைத்து மதிக்கவில்லை. ஆனால் விளையாட்டு “போட்டி” என்பதன் அடிப்படையே விட்டு கொடாமல் விளையாடுவதுதான். ஆகவே சாதனையை நான் வேண்டும் என்றே தகர்காமல் விட்டேன் என சொல்லுவது அதிகபிரசங்கிதனமானதும், லாராவை அவமதிப்பதுமாகும். பேட்டிங் அவரேஜ் பார்க்கும் போது அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஓட்டத்துக்கு முழு மதிப்பு, சிம்பாம்பேவுக்கு எதிரான ஓட்டத்துக்கு அரை மதிப்பு என இல்லைத்தானே? அப்படி என்றால் முல்டர் ஏன் சிம்பாப்வேக்கு எதிராக களம் இறங்கினார்? அதே போல் அடுத்த 20 சொச்ச ஓட்டத்துக்குள் இவர் அவுட்டும் ஆகி இருக்கலாம் - ஆகவே நான் விட்டு கொடுத்தேன் என்பது எந்த வகையில் பார்த்தாலும் சுத்த அதிகபிரசங்கிதனமே. மார்க் டைலர் 1998 இல் பாகிஸ்தானில் வைத்து 334 இல் டிக்லேர் பண்ணியது இப்படி அல்ல. அவர் இரெண்டாம் நாள் ஆட்டம் முடியும் போது பிரேட்மனை சமன் செய்து இருந்தார். அப்போ அவர் மனதில் டிக்ளேர் செய்யும் எண்ணமில்லை. கடைசி பந்தில் ஒரு ஓட்டம் எடுத்திருந்தால் கூட பிரேட்மனை முந்தி இருப்பார். ஆனால் அன்றிரவு 2 மணி வரை தூங்கவில்லை எனவும், ஆட்டத்தை வெல்ல, இன்னும் ஒரு அரை மணி நேரம் துடுப்பாட தான் விரும்பியதாயும், ஆனால் அப்படிதான் செய்தால் ( அரை மணியில் அப்போதைய உலக சாதனையான 375 ஐ எட்ட வாய்ப்பில்லை), பிரேட்மனை வெல்ல என தான் இப்படி விளையாடியதாக சொல்லப்படும், எனவே அணி வெல்ல வேண்டும் என்பதால், மறுநாள் காலையில் டிக்ளேர் செய்ததாயும் டெய்லர் கூறியுள்ளார். அத்தோடு பிரேட்மனை சமன் செய்தது தனக்கு பெருமையே எனவும் கூறினார். ஆகவே இரெண்டும் ஒன்றல்ல.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு?

2 months 1 week ago
he Hunt - The Rajiv Gandhi Assassination Case Review: ராஜீவ் காந்தி கொலையும் தேடுதல் வேட்டையும்! ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்தி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்கூணூரின் 'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' வெப் சீரிஸ். புலனாய்வு பத்திரிகையாளர் அனிருத்யா மித்ரா எழுதிய 'Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார் இயக்குநர். The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக சென்னைக்கு அருகிலுள்ள ஶ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்தார் ராஜீவ் காந்தி. அப்போது அவர்மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, கொலைக்குக் காரணமான விடுதலைப் புலிகளைச் சேர்ந்த நபர்களைக் கண்டுபிடிக்க சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, சம்பவம் நிகழ்ந்து 90 நாட்களுக்குள் குற்றவாளிகளைக் கண்டறிந்தது. 90 நாட்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு எப்படியான யுக்திகளைக் கையாண்டு அவர்களைப் பிடித்தது என்பதை 7 எபிசோடுகளாக விரித்து இந்த சீரிஸில் கதை சொல்லியிருக்கிறார்கள். சிறப்புப் புலனாய்வுக் குழுவைத் தலைமையேற்று வழிநடத்தும் கார்த்திகேயன் கதாபாத்திரத்திற்குக் கண கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கிறார் பாலிவுட் நடிகர் அமித் சியால். லாகவமாக யுக்திகளைக் கையாண்டு குற்றவாளிகளிடம் உண்மையைப் பெறுபவராகவும், பணியில் மேலிடத்தில் செய்யப்படும் சூழ்ச்சிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெகுண்டெழுபவராகவும் அமித் வர்மா கதாபாத்திரத்தில் பக்குவமாக நடித்து, நடிகர் சாஹில் வைத் கவனம் ஈர்க்கிறார். இவர்களைத் தாண்டி, ரகோத்மன் கதாபாத்திரத்தில் பகவதி பெருமாள், கேப்டன் ரவீந்திரன் கதாபாத்திரத்தில் வித்யூத் கார்கி ஆகியோரின் நடிப்பும் சிறப்பு! The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review சிவராசன் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஷபீக் முஸ்தபா அசுரத்தனமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவர் வெளிப்படுத்தும் சீரியஸ் டோன் நடிப்பு, ஆழமான தாக்கத்தை உருவாக்கும் லெவலுக்கு அவருடைய கதாபாத்திரத்தை உயர்த்தியிருக்கிறது. நளினியாக அஞ்சனா பாலாஜி, சுபாவாக கெளரி பத்மகுமார், தனுவாக ஷ்ருதி ஜெயன் ஆகியோரும் நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய வெப் சீரிஸுக்கு, நடிகர்களைத் தேர்வு செய்யும் பணிகளைத் திறம்பட மேற்கொண்டிருக்கிறார் இயக்குநர் நாகேஷ் குக்கூனூர்! ஆர்பாட்டமில்லாத ஷாட்கள், பீரியட் உணர்வைக் கொடுக்கும் லைட்டிங் என நேர்த்தியான பணிகளைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சங்கரம் கிரி. இந்த பீரியட் கதைக்குத் தேவைப்படும் அரசியல் மேடை, பதாகைகள், பேனர்கள், வீடுகள் உட்பட அந்தக் கால அரசு அலுவலகங்கள் என ஒளிப்பதிவாளரின் ப்ரேம்களுக்கு சுவை சேர்க்கும் கலை இயக்குநர், 90களின் வாகனங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள் தொடங்கி சில விஷயங்களில் கோட்டைவிட்டிருக்கிறார். The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review எபிசோடுகளுக்கு இடையிடையே ஃப்ளாஷ்பேக் காட்சிகளை அடுக்கி, தெளிவாகக் கதை சொல்கிறார் படத்தொகுப்பாளர் ஃபரூக் ஹந்தேகர். நமக்குத் தெரிந்த கதையாக இருந்தாலும், அதனை முடிந்தவரைத் தொய்வின்றி கொண்டு செல்ல உதவியிருக்கிறார். பீரியட் காலகட்டத்திற்கேற்ப உடைகளை வடிவமைத்த ஆடை வடிவமைப்பாளர்களும் கவனிக்க வைக்கிறார்கள். Also Read ராஜீவ் காந்தியின் குண்டு வெடிப்புச் சம்பவத்திலிருந்து நிதானமாக சீரிஸ் நகரத் தொடங்குகிறது. அதிலிருந்து விசாரணைக்கு விரியத் தொடங்கும் எபிசோடுகள், திரைக்கதையாசிரியர்கள் ரோகித் ஜி. பானவில்கர், ராஜேஷ் குக்குனூர், ஶ்ரீராம் ராஜன் ஆகியோரின் நுட்பமான எழுத்துப் பணியால் பரபரப்பைக் கூட்டி, தொடர்ந்து 'நெக்ஸ்ட் எபிசோடு' பட்டனை நோக்கி நம்மை நகர வைக்கின்றன. இதுபோன்ற உண்மைச் சம்பவக் கதைகளை மையப்படுத்திய சீரிஸ்களில் சம்பிரதாயமாகப் பயன்படுத்தப்படும் காட்சிகளை விளக்கும் எழுத்துகளைத் தவிர்த்தது குட் ஃபார்முலா! இந்திய வரலாற்றின் மிகச் சிக்கலான விஷயங்களில் ஒன்றான ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்திய இந்த வெப் சீரிஸை, பெரும்பாலும் ஒரு புலனாய்வு த்ரில்லர் கதையாகவே கொண்டு சென்றிருக்கிறது படக்குழு. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் தொடங்கி, முழுமையாக அதிகாரிகளின் கைகள் கட்டப்படும் அரசியலையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதேபோல, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது காவல் அதிகாரிகள் செலுத்திய வன்முறை, உண்மைகளை வரவழைக்க அதிகாரிகள் கையாண்ட குரூர வழிமுறைகள் என நாம் படித்துத் தெரிந்த விஷயங்களைத் திரையில் கொண்டு வந்த இயக்குநருக்கு க்ளாப்ஸ்! ஆனாலும், அதிலும் ஒருவித போலீஸ்/அதிகார அனுதாப பார்வை எஞ்சிநிற்பது ஏமாற்றம்! The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் பார்வையை இன்னும் கூட விரிவாகச் சொல்லியிருக்கலாம். அதுபோல, அதிகாரிகள், சிவராசனைப் பிடிக்கச் செல்கையில் ஏற்படும் தடைகள், தாமதங்களுக்கெல்லாம் 'மேல் அதிகாரிகளின் உத்தரவு' என மேம்போக்காக வசனத்தை வைத்து எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். யார் அந்த மேலிடம், சிவராசன் உயிருடன் பிடிபடுவது குறித்து அவர்கள் அஞ்சுவது ஏன் போன்ற கேள்விகளுக்கெல்லாம் தெளிவான பதில்கள் இல்லை. "உண்மை அவர்களுடனே இறந்துவிட்டது" என்ற ஆதங்கம் நிறைந்த வசனம் மட்டுமே இத்தொடர் நடுநிலையாக இருக்க விரும்புகிறது என்பதை எடுத்துரைக்கிறது.!

சர்வதேச நீதிமன்றத்தினால் தேடப்படும் பெஞ்சமின் நெட்டன்யாகு விமானப்பயணத்திற்காக தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் இத்தாலி கிரேக்கம் அனுமதித்தது ஏன்? ஐநா அதிகாரி கேள்வி

2 months 1 week ago
09 JUL, 2025 | 02:48 PM சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்துள்ளார். சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும், அதனை பலவீனப்படுத்தும்,அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ் கிரேக்க இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை அங்கீகரிக்கும் ரோம் பிரகடனத்தில் அமெரிக்கா கைச்சாத்திடாதது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219580

சர்வதேச நீதிமன்றத்தினால் தேடப்படும் பெஞ்சமின் நெட்டன்யாகு விமானப்பயணத்திற்காக தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் இத்தாலி கிரேக்கம் அனுமதித்தது ஏன்? ஐநா அதிகாரி கேள்வி

2 months 1 week ago

09 JUL, 2025 | 02:48 PM

image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும், அதனை பலவீனப்படுத்தும்,அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ் கிரேக்க இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை அங்கீகரிக்கும் ரோம் பிரகடனத்தில் அமெரிக்கா கைச்சாத்திடாதது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/219580

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months 1 week ago
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் : 54 எலும்புக்கூடுகள் மீட்பு! 09 JUL, 2025 | 09:01 PM யாழ்ப்பாணம் (ஜூலை 09) : செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் 14 ஆவது நாளான இன்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. அந்த வகையில், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் (ஜூலை9) 14 வது நாளை எட்டியது. ஏற்கனவே முதலாம் கட்ட அகழ்வு 9 நாட்களில் நிறைவடைந்தது. முதலாம் கட்டம் இரண்டாம் கட்டம் என அகழ்வாய்வு பணிகள் மொத்தமாக 23 நாட்கள் மனித புதைகுழி அகழ்வு நடைபெற்று வருகின்றது. இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ள நிலையில், அவற்றில் 54 மனித எலும்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. குறித்த அகழ்வின் போது, இன்று (ஜூலை 09) ஒரு சிறுமியின், ஆடைகள், இறப்பர் செருப்பு மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வு நாளை தற்காலிகமாக நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது. https://www.virakesari.lk/article/219625

நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!

2 months 1 week ago
கமாண்டோ சலிந்த மற்றும் கெஹெல்பத்தர பத்மே கைது? கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இரண்டு குற்றவாளிகளும் இன்று (9) மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கைதுகள் தொடர்பான தகவல்களை இலங்கை பொலிசார் ஏற்கனவே சர்வதேச பொலிஸாரிடம் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுள்ளனர். கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகக்குழுத் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதாக மன்தினு பத்மசிறி என்ற கெஹேல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இரண்டு குற்றவாளிகளும் நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டனர். கெஹேல்பத்தர பத்மே டுபாயில் இருந்தும், கமாண்டோ சலிந்த மலேசியாவில் இருந்தும் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, குறித்த இரண்டு குற்றவாளிகளுக்கும் சர்வதேச பொலிஸார் ஊடாக பொலிஸார் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டிருந்தனர். https://adaderanatamil.lk/news/cmcw1aqft00yhqp4k5rtnruf6

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 08

2 months 1 week ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 08 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 08 / 'தீபவம்சம், மகாவம்சம் இரண்டிலும் சிங்கபாகு கதையின் வேறுபாடு' சிங்கபாகு தனது தந்தையான சிங்கத்தை கொன்றதாக தீபவம்சம் கூறவில்லை. அதேவேளை, சிங்கபாகு தன் சகோதரியை தகாத முறையில் திருமணம் செய்து கொண்டார் என்றும் வெளிப்படையாகக் கூறவில்லை. மேலும் விஜயனுக்கு எழுநூறு கூட்டாளிகள் இருந்ததாகவும் கூறவில்லை. தீபவம்சத்தின்படி, 9-10 மற்றும் 9-16, எழுநூறு பேரில் விஜயன், அவனது வேலையாட்கள், அவனது உறவுகள் மற்றும் கூலிக்கு அமர்த்திய வேலையாட்களும் அடங்குவர் என்கிறது. ஆனால், சிங்கபாகு தனது சிங்க தந்தையைக் கொன்றதாகவும், எந்த வருத்தமும் இல்லாமல் தனது சிங்கத் தந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை வெகுமதிக்காக மன்னரிடம் வழங்கினார் என்றும் மகாவம்சம் வெளிப்படையாகக் கூறுகிறது. விஜயனுக்கு, விஜயனைப் போலவே தீய குணங்கள் கொண்ட, அவனைப் பின்பற்றும் எழுநூறு பேர் இருந்தனர் என்றும், தீபவம்சத்தில் கூறப்பட்டுள்ளபடி அவர்கள் அனைவரும் வேலையாட்களோ, கூலிக்கு அமர்த்திய வேலையாட்களோ அல்ல என்றும் அது கூறுகிறது. விஜயன் பிறந்த அதே நாளில் இந்த எழுநூறு ஆண்களும் பிறந்ததாக இராசாவலிய வெளிப்படையாகக் கூறுகிறது. காலப்போக்கில் ஒரு கதை எப்படி திரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் இங்கு பார்க்கலாம். தீபவம்சத்தின்படி, விஜயனும் அவனது ஆட்களும் சென்ற கப்பல், வழி தவறி, முதலில் சுபாரா [Suppara] அடைந்தது, அங்கே, கப்பலில் இருந்த அனைவரையும் சுபாரா மக்கள் விருந்தோம்பல் செய்தனர் என அறிகிறோம். எவ்வாறாயினும், விஜயன் மற்றும் அவரது தோழர்கள் காட்டுமிராண்டித் தனமாக அங்கும் செயல்பட்டனர். எனவே விருந்தோம்பல் வரவேற்பு விரைவில் விரோதமாக மாறியது. அவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடி, மீண்டும் பாருகாச்சாவில் [Bharukaccha] இறங்கினர். அவர்கள் மீண்டும் தவறாக நடந்து கொண்டதால் அந்த இடத்தை விட்டு வெளியேற்றப் பட்டனர். சுபாரா மற்றும் பருகச்சா ஆகியவை இந்தியாவின் மேற்கு கடற்கரையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள பண்டைய வர்த்தக துறைமுகங்கள் ஆகும். மேலும் அசோகரின் ஆணைகள் இந்த இடங்களுக்கு அருகில் காணப்படுகின்றன. என்றாலும் மகாவம்சம் பருகச்சாவில் இரண்டாவது தரையிறக்கத்தைத் முற்றாகத் தவிர்க்கிறது. மகாவம்சத்தின் 6 ஆம் அத்தியாயம் விஜயனின் பிறப்பு மற்றும் அவரது வருகையைப் பற்றி பேசுகிறது. மகாவம்சத்தின் இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கமான கதை தீபவம்சத்தில் இல்லை. மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாமா, ஒவ்வொரு அத்தியாய முடிவிலும், 'இது புத்த மதத்தின் பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிக்காக' என்று கூறி முடிக்கிறார். மகாவம்சத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை விட, விஜயனின் பிறப்பு மற்றும் திருமணம் பற்றிய விபரங்கள், இன்னும் விரிவாக இராசாவலிய கொண்டுள்ளது. விஜயனும் அவனது கூட்டாளிகளும் வேறு எந்த இடத்திலும் இறங்காமல் நேராக இராசாவலியின்படி இலங்கைக்கு நகர்ந்து, மற்ற இரண்டு நூல்களுக்கு மாறாக, தம்மன்னா-தோட்டாவில் [Tammanna-tota] இறங்கினர். தம்மன்னா-தோட்டா இருந்த இடத்தில் எதுவுமே இல்லை! இலங்கையைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகள் செப்பு நிறமுடைய மண் அல்ல, ஆனால் சில இடங்களில் சுத்தம் செய்யப்பட்ட மணல் மண்ணாகும். மற்ற இடங்களில் சுத்தமில்லாத மணல் மண்ணாகும். அவர்கள் இறங்கிய இடம் செப்பு நிற மண் என்றும் அந்த இடம் தம்பபாணி [Tambapaṇṇi (copper-palmed)] என்றும் அழைக்கப்பட்டது என்று தீபவம்சம் 9 - 30 கூறுகிறது. அதாவது, தரையின் சிவப்பு நிற தூசி அவர்களின் கைகள் முழுவதையும் மூடியது; அதனால் அந்த இடம் தம்பபண்ணி (செப்பு நிற பூமி / copper coloured earth ) என்று அழைக்கப்பட்டது. அவர்கள் தம்பபாணி என்ற பகுதியில் இறங்கியதாக மகாவம்சம் 6 - 47 கூறுகிறது. அதாவது விஜயன் என்னும் பெயர் பெற்ற வீரனான இளவரசன் இலங்கையில் தம்மபாணி என்றழைக்கப்படும் பகுதியில் கரையேறினன். தகாகதர் [Tathagata] நிர்வாணமடைவதற்காக இரட்டை சால விருட்சங்களிடையே [two twinlike sala-trees] அமர்ந்த அதே நாளில் இது நடந்தது என்கிறது சுபாரா (சோபரா) மற்றும் பாருகாச்சா (Suppara (Sopara) and Bharukaccha (Bharukacha)) ஆகிய இரண்டு இடங்களும் அசோகரின் பேரரசின் பரப்பளவைக் காட்டும் வரைபடத்தில் கீழே காட்டப்பட்டுள்ளது. Part 08 / 'How Sihabahu story in both Dipavamsa & Mahavamsa varies?' The Dipavamsa does not say that Sihabahu killed his lion father. It also does not explicitly say that Sihabahu incestuously married his sister. It also does not say that Vijaya had seven hundred companions. As per the Dipavamsa, 9-10 and 9-16, the seven hundred included Vijaya, his manservants, his relations and hired workmen. The Mahavamsa explicitly says that Sihabahu killed his lion father, and without any remorse presented the severed head of his lion-father to the king for a reward. It also says that Vijaya had seven hundred followers of same character as of Vijaya, and not servants or workmen as stated in the Dipavamsa. The Rajavaliya explicitly says that seven hundred boys were born on the day Vijaya was born. One can see how a story is twisted and turned on and on with the passage of time. The ship on which Vijaya and his men were forced to drift lost her way and bearings reached Suppara first as per Dipavamsa and all in the ship were hospitably welcome by the people of Suppara. Vijay and his companions, however, acted barbarously and the hospitable reception soon turned into hostile reaction. They fled the place, and landed again at Bharukaccha. They misbehaved again and had to leave the place. Suppara and Bharukaccha are ancient trading ports on the western coast of India, in Maharashtra and Gujarat, and Asoka’s edicts are found nearby these places. The Mahavamsa omitted the second landing at Bharukaccha. The chapter 6 of the Mahavamsa deals with the Vijaya’s birth and his arrival. The descriptive narrative given in this chapter of the Mahavamsa is not in the Dipavamsa. Mahanama, author of the Mahavamsa, fabricated a story for the serene joy and emotion of the pious. The Rajavaliya also consist of narrative of Vijaya’s birth and marriage more elaborate than given in the Mahavamsa. Vijaya and his companions drifted straight to Lanka as per the Rajavaliya without landing at any other places, contrary to the other two chronicles, and landed at Tammantota. There is no clue where Tammantota was! Seacoasts around Lanka are not copper coloured soils, but are sandy soils washed clean at some places and not clean at the rest of the places. The Dipavamsa claims that the place they landed was copper coloured soils and the place was called Tambapanni, 9 - 30. The Mahavamsa says that they landed at a region called Tambapanni 6 - 47. See the map below showing the extent of Asoka’s empire in which Suppara (Sopara) and Bharukaccha (Bharukacha) are shown. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 09 தொடரும் / Will Follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 08

2 months 1 week ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 08

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 08 / 'தீபவம்சம், மகாவம்சம் இரண்டிலும் சிங்கபாகு கதையின் வேறுபாடு'

சிங்கபாகு தனது தந்தையான சிங்கத்தை கொன்றதாக தீபவம்சம் கூறவில்லை. அதேவேளை, சிங்கபாகு தன் சகோதரியை தகாத முறையில் திருமணம் செய்து கொண்டார் என்றும் வெளிப்படையாகக் கூறவில்லை. மேலும் விஜயனுக்கு எழுநூறு கூட்டாளிகள் இருந்ததாகவும் கூறவில்லை. தீபவம்சத்தின்படி, 9-10 மற்றும் 9-16, எழுநூறு பேரில் விஜயன், அவனது வேலையாட்கள், அவனது உறவுகள் மற்றும் கூலிக்கு அமர்த்திய வேலையாட்களும் அடங்குவர் என்கிறது. ஆனால், சிங்கபாகு தனது சிங்க தந்தையைக் கொன்றதாகவும், எந்த வருத்தமும் இல்லாமல் தனது சிங்கத் தந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை வெகுமதிக்காக மன்னரிடம் வழங்கினார் என்றும் மகாவம்சம் வெளிப்படையாகக் கூறுகிறது. விஜயனுக்கு, விஜயனைப் போலவே தீய குணங்கள் கொண்ட, அவனைப் பின்பற்றும் எழுநூறு பேர் இருந்தனர் என்றும், தீபவம்சத்தில் கூறப்பட்டுள்ளபடி அவர்கள் அனைவரும் வேலையாட்களோ, கூலிக்கு அமர்த்திய வேலையாட்களோ அல்ல என்றும் அது கூறுகிறது. விஜயன் பிறந்த அதே நாளில் இந்த எழுநூறு ஆண்களும் பிறந்ததாக இராசாவலிய வெளிப்படையாகக் கூறுகிறது. காலப்போக்கில் ஒரு கதை எப்படி திரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் இங்கு பார்க்கலாம். தீபவம்சத்தின்படி, விஜயனும் அவனது ஆட்களும் சென்ற கப்பல், வழி தவறி, முதலில் சுபாரா [Suppara] அடைந்தது, அங்கே, கப்பலில் இருந்த அனைவரையும் சுபாரா மக்கள் விருந்தோம்பல் செய்தனர் என அறிகிறோம்.

எவ்வாறாயினும், விஜயன் மற்றும் அவரது தோழர்கள் காட்டுமிராண்டித் தனமாக அங்கும் செயல்பட்டனர். எனவே விருந்தோம்பல் வரவேற்பு விரைவில் விரோதமாக மாறியது. அவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடி, மீண்டும் பாருகாச்சாவில் [Bharukaccha] இறங்கினர். அவர்கள் மீண்டும் தவறாக நடந்து கொண்டதால் அந்த இடத்தை விட்டு வெளியேற்றப் பட்டனர். சுபாரா மற்றும் பருகச்சா ஆகியவை இந்தியாவின் மேற்கு கடற்கரையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள பண்டைய வர்த்தக துறைமுகங்கள் ஆகும். மேலும் அசோகரின் ஆணைகள் இந்த இடங்களுக்கு அருகில் காணப்படுகின்றன. என்றாலும் மகாவம்சம் பருகச்சாவில் இரண்டாவது தரையிறக்கத்தைத் முற்றாகத் தவிர்க்கிறது. மகாவம்சத்தின் 6 ஆம் அத்தியாயம் விஜயனின் பிறப்பு மற்றும் அவரது வருகையைப் பற்றி பேசுகிறது. மகாவம்சத்தின் இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கமான கதை தீபவம்சத்தில் இல்லை. மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாமா, ஒவ்வொரு அத்தியாய முடிவிலும், 'இது புத்த மதத்தின் பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிக்காக' என்று கூறி முடிக்கிறார். மகாவம்சத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை விட, விஜயனின் பிறப்பு மற்றும் திருமணம் பற்றிய விபரங்கள், இன்னும் விரிவாக இராசாவலிய கொண்டுள்ளது. விஜயனும் அவனது கூட்டாளிகளும் வேறு எந்த இடத்திலும் இறங்காமல் நேராக இராசாவலியின்படி இலங்கைக்கு நகர்ந்து, மற்ற இரண்டு நூல்களுக்கு மாறாக, தம்மன்னா-தோட்டாவில் [Tammanna-tota] இறங்கினர். தம்மன்னா-தோட்டா இருந்த இடத்தில் எதுவுமே இல்லை! இலங்கையைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகள் செப்பு நிறமுடைய மண் அல்ல, ஆனால் சில இடங்களில் சுத்தம் செய்யப்பட்ட மணல் மண்ணாகும். மற்ற இடங்களில் சுத்தமில்லாத மணல் மண்ணாகும். அவர்கள் இறங்கிய இடம் செப்பு நிற மண் என்றும் அந்த இடம் தம்பபாணி [Tambapaṇṇi (copper-palmed)] என்றும் அழைக்கப்பட்டது என்று தீபவம்சம் 9 - 30 கூறுகிறது. அதாவது, தரையின் சிவப்பு நிற தூசி அவர்களின் கைகள் முழுவதையும் மூடியது; அதனால் அந்த இடம் தம்பபண்ணி (செப்பு நிற பூமி / copper coloured earth ) என்று அழைக்கப்பட்டது. அவர்கள் தம்பபாணி என்ற பகுதியில் இறங்கியதாக மகாவம்சம் 6 - 47 கூறுகிறது. அதாவது விஜயன் என்னும் பெயர் பெற்ற வீரனான இளவரசன் இலங்கையில் தம்மபாணி என்றழைக்கப்படும் பகுதியில் கரையேறினன். தகாகதர் [Tathagata] நிர்வாணமடைவதற்காக இரட்டை சால விருட்சங்களிடையே [two twinlike sala-trees] அமர்ந்த அதே நாளில் இது நடந்தது என்கிறது

சுபாரா (சோபரா) மற்றும் பாருகாச்சா (Suppara (Sopara) and Bharukaccha (Bharukacha)) ஆகிய இரண்டு இடங்களும் அசோகரின் பேரரசின் பரப்பளவைக் காட்டும் வரைபடத்தில் கீழே காட்டப்பட்டுள்ளது.

Part 08 / 'How Sihabahu story in both Dipavamsa & Mahavamsa varies?'

The Dipavamsa does not say that Sihabahu killed his lion father. It also does not explicitly say that Sihabahu incestuously married his sister. It also does not say that Vijaya had seven hundred companions. As per the Dipavamsa, 9-10 and 9-16, the seven hundred included Vijaya, his manservants, his relations and hired workmen. The Mahavamsa explicitly says that Sihabahu killed his lion father, and without any remorse presented the severed head of his lion-father to the king for a reward. It also says that Vijaya had seven hundred followers of same character as of Vijaya, and not servants or workmen as stated in the Dipavamsa. The Rajavaliya explicitly says that seven hundred boys were born on the day Vijaya was born. One can see how a story is twisted and turned on and on with the passage of time. The ship on which Vijaya and his men were forced to drift lost her way and bearings reached Suppara first as per Dipavamsa and all in the ship were hospitably welcome by the people of Suppara. Vijay and his companions, however, acted barbarously and the hospitable reception soon turned into hostile reaction. They fled the place, and landed again at Bharukaccha. They misbehaved again and had to leave the place. Suppara and Bharukaccha are ancient trading ports on the western coast of India, in Maharashtra and Gujarat, and Asoka’s edicts are found nearby these places. The Mahavamsa omitted the second landing at Bharukaccha. The chapter 6 of the Mahavamsa deals with the Vijaya’s birth and his arrival. The descriptive narrative given in this chapter of the Mahavamsa is not in the Dipavamsa. Mahanama, author of the Mahavamsa, fabricated a story for the serene joy and emotion of the pious. The Rajavaliya also consist of narrative of Vijaya’s birth and marriage more elaborate than given in the Mahavamsa. Vijaya and his companions drifted straight to Lanka as per the Rajavaliya without landing at any other places, contrary to the other two chronicles, and landed at Tammantota. There is no clue where Tammantota was! Seacoasts around Lanka are not copper coloured soils, but are sandy soils washed clean at some places and not clean at the rest of the places. The Dipavamsa claims that the place they landed was copper coloured soils and the place was called Tambapanni, 9 - 30. The Mahavamsa says that they landed at a region called Tambapanni 6 - 47. See the map below showing the extent of Asoka’s empire in which Suppara (Sopara) and Bharukaccha (Bharukacha) are shown.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 09 தொடரும் / Will Follow