Aggregator
அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி
அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி.
அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா ( Lula da Silva) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா, தங்களது இறையாண்மை நிலையை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பிரேசிலில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது”
‘பிரேசில் ஒரு இறையாண்மை நாடு. நாங்கள் வெளியில் இருந்து வரும் எந்தவொரு கட்டுப்பாடு அல்லது அழுத்தத்தையும் ஏற்கமாட்டோம்.
பிரேசில் டிஜிட்டல் வலைதளங்களில் வரும் வெறுப்பு பேச்சு, இனவெறி, சிறுவர்கள் துஷ்பிரயோகம், மோசடிகள், மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களை ஏற்காது.
பிரேசிலில் பேச்சுரிமை என்பது எந்தவொரு வன்முறையையும் ஊக்குவிக்காது. பிரேசிலில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும், இங்கே இயங்குவதற்கு பிரேசில் சட்டத்தை பின்பற்ற வேண்டும்.
பிரேசில் உடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை கூற்றுகள் தவறானவை. கடந்த 15 ஆண்டுகளில், பிரேசில் உடனான அமெரிக்காவின் வணிக உபரி 410 பில்லியன் டொலர்கள் என்று அமெரிக்காவின் தரவுகள் காட்டுகின்றன.
அமெரிக்கா எங்கள் மீது புதிய வரிகளை விதித்தால், பிரேசில் அதற்கான பதிலடியை பிரேசிலின் பொருளாதார பரஸ்பர சட்டம் மூலம் கொடுக்கும்.
பிரேசில் இறையாண்மை,பரஸ்பர மரியாதை, மற்றும் உலகளாவிய உறவுகளில் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை மதிக்கிறது’ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
செம்மணி : அதிர்ச்சி தரும் அத்தாட்சிகள்!
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
செம்மணி : அதிர்ச்சி தரும் அத்தாட்சிகள்!
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு?
சர்வதேச நீதிமன்றத்தினால் தேடப்படும் பெஞ்சமின் நெட்டன்யாகு விமானப்பயணத்திற்காக தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் இத்தாலி கிரேக்கம் அனுமதித்தது ஏன்? ஐநா அதிகாரி கேள்வி
சர்வதேச நீதிமன்றத்தினால் தேடப்படும் பெஞ்சமின் நெட்டன்யாகு விமானப்பயணத்திற்காக தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் இத்தாலி கிரேக்கம் அனுமதித்தது ஏன்? ஐநா அதிகாரி கேள்வி
09 JUL, 2025 | 02:48 PM
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும், அதனை பலவீனப்படுத்தும்,அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ் கிரேக்க இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை அங்கீகரிக்கும் ரோம் பிரகடனத்தில் அமெரிக்கா கைச்சாத்திடாதது குறிப்பிடத்தக்கது.
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 08
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 08
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 08
[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]
பகுதி: 08 / 'தீபவம்சம், மகாவம்சம் இரண்டிலும் சிங்கபாகு கதையின் வேறுபாடு'
சிங்கபாகு தனது தந்தையான சிங்கத்தை கொன்றதாக தீபவம்சம் கூறவில்லை. அதேவேளை, சிங்கபாகு தன் சகோதரியை தகாத முறையில் திருமணம் செய்து கொண்டார் என்றும் வெளிப்படையாகக் கூறவில்லை. மேலும் விஜயனுக்கு எழுநூறு கூட்டாளிகள் இருந்ததாகவும் கூறவில்லை. தீபவம்சத்தின்படி, 9-10 மற்றும் 9-16, எழுநூறு பேரில் விஜயன், அவனது வேலையாட்கள், அவனது உறவுகள் மற்றும் கூலிக்கு அமர்த்திய வேலையாட்களும் அடங்குவர் என்கிறது. ஆனால், சிங்கபாகு தனது சிங்க தந்தையைக் கொன்றதாகவும், எந்த வருத்தமும் இல்லாமல் தனது சிங்கத் தந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை வெகுமதிக்காக மன்னரிடம் வழங்கினார் என்றும் மகாவம்சம் வெளிப்படையாகக் கூறுகிறது. விஜயனுக்கு, விஜயனைப் போலவே தீய குணங்கள் கொண்ட, அவனைப் பின்பற்றும் எழுநூறு பேர் இருந்தனர் என்றும், தீபவம்சத்தில் கூறப்பட்டுள்ளபடி அவர்கள் அனைவரும் வேலையாட்களோ, கூலிக்கு அமர்த்திய வேலையாட்களோ அல்ல என்றும் அது கூறுகிறது. விஜயன் பிறந்த அதே நாளில் இந்த எழுநூறு ஆண்களும் பிறந்ததாக இராசாவலிய வெளிப்படையாகக் கூறுகிறது. காலப்போக்கில் ஒரு கதை எப்படி திரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் இங்கு பார்க்கலாம். தீபவம்சத்தின்படி, விஜயனும் அவனது ஆட்களும் சென்ற கப்பல், வழி தவறி, முதலில் சுபாரா [Suppara] அடைந்தது, அங்கே, கப்பலில் இருந்த அனைவரையும் சுபாரா மக்கள் விருந்தோம்பல் செய்தனர் என அறிகிறோம்.
எவ்வாறாயினும், விஜயன் மற்றும் அவரது தோழர்கள் காட்டுமிராண்டித் தனமாக அங்கும் செயல்பட்டனர். எனவே விருந்தோம்பல் வரவேற்பு விரைவில் விரோதமாக மாறியது. அவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடி, மீண்டும் பாருகாச்சாவில் [Bharukaccha] இறங்கினர். அவர்கள் மீண்டும் தவறாக நடந்து கொண்டதால் அந்த இடத்தை விட்டு வெளியேற்றப் பட்டனர். சுபாரா மற்றும் பருகச்சா ஆகியவை இந்தியாவின் மேற்கு கடற்கரையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள பண்டைய வர்த்தக துறைமுகங்கள் ஆகும். மேலும் அசோகரின் ஆணைகள் இந்த இடங்களுக்கு அருகில் காணப்படுகின்றன. என்றாலும் மகாவம்சம் பருகச்சாவில் இரண்டாவது தரையிறக்கத்தைத் முற்றாகத் தவிர்க்கிறது. மகாவம்சத்தின் 6 ஆம் அத்தியாயம் விஜயனின் பிறப்பு மற்றும் அவரது வருகையைப் பற்றி பேசுகிறது. மகாவம்சத்தின் இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கமான கதை தீபவம்சத்தில் இல்லை. மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாமா, ஒவ்வொரு அத்தியாய முடிவிலும், 'இது புத்த மதத்தின் பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிக்காக' என்று கூறி முடிக்கிறார். மகாவம்சத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை விட, விஜயனின் பிறப்பு மற்றும் திருமணம் பற்றிய விபரங்கள், இன்னும் விரிவாக இராசாவலிய கொண்டுள்ளது. விஜயனும் அவனது கூட்டாளிகளும் வேறு எந்த இடத்திலும் இறங்காமல் நேராக இராசாவலியின்படி இலங்கைக்கு நகர்ந்து, மற்ற இரண்டு நூல்களுக்கு மாறாக, தம்மன்னா-தோட்டாவில் [Tammanna-tota] இறங்கினர். தம்மன்னா-தோட்டா இருந்த இடத்தில் எதுவுமே இல்லை! இலங்கையைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகள் செப்பு நிறமுடைய மண் அல்ல, ஆனால் சில இடங்களில் சுத்தம் செய்யப்பட்ட மணல் மண்ணாகும். மற்ற இடங்களில் சுத்தமில்லாத மணல் மண்ணாகும். அவர்கள் இறங்கிய இடம் செப்பு நிற மண் என்றும் அந்த இடம் தம்பபாணி [Tambapaṇṇi (copper-palmed)] என்றும் அழைக்கப்பட்டது என்று தீபவம்சம் 9 - 30 கூறுகிறது. அதாவது, தரையின் சிவப்பு நிற தூசி அவர்களின் கைகள் முழுவதையும் மூடியது; அதனால் அந்த இடம் தம்பபண்ணி (செப்பு நிற பூமி / copper coloured earth ) என்று அழைக்கப்பட்டது. அவர்கள் தம்பபாணி என்ற பகுதியில் இறங்கியதாக மகாவம்சம் 6 - 47 கூறுகிறது. அதாவது விஜயன் என்னும் பெயர் பெற்ற வீரனான இளவரசன் இலங்கையில் தம்மபாணி என்றழைக்கப்படும் பகுதியில் கரையேறினன். தகாகதர் [Tathagata] நிர்வாணமடைவதற்காக இரட்டை சால விருட்சங்களிடையே [two twinlike sala-trees] அமர்ந்த அதே நாளில் இது நடந்தது என்கிறது
சுபாரா (சோபரா) மற்றும் பாருகாச்சா (Suppara (Sopara) and Bharukaccha (Bharukacha)) ஆகிய இரண்டு இடங்களும் அசோகரின் பேரரசின் பரப்பளவைக் காட்டும் வரைபடத்தில் கீழே காட்டப்பட்டுள்ளது.
Part 08 / 'How Sihabahu story in both Dipavamsa & Mahavamsa varies?'
The Dipavamsa does not say that Sihabahu killed his lion father. It also does not explicitly say that Sihabahu incestuously married his sister. It also does not say that Vijaya had seven hundred companions. As per the Dipavamsa, 9-10 and 9-16, the seven hundred included Vijaya, his manservants, his relations and hired workmen. The Mahavamsa explicitly says that Sihabahu killed his lion father, and without any remorse presented the severed head of his lion-father to the king for a reward. It also says that Vijaya had seven hundred followers of same character as of Vijaya, and not servants or workmen as stated in the Dipavamsa. The Rajavaliya explicitly says that seven hundred boys were born on the day Vijaya was born. One can see how a story is twisted and turned on and on with the passage of time. The ship on which Vijaya and his men were forced to drift lost her way and bearings reached Suppara first as per Dipavamsa and all in the ship were hospitably welcome by the people of Suppara. Vijay and his companions, however, acted barbarously and the hospitable reception soon turned into hostile reaction. They fled the place, and landed again at Bharukaccha. They misbehaved again and had to leave the place. Suppara and Bharukaccha are ancient trading ports on the western coast of India, in Maharashtra and Gujarat, and Asoka’s edicts are found nearby these places. The Mahavamsa omitted the second landing at Bharukaccha. The chapter 6 of the Mahavamsa deals with the Vijaya’s birth and his arrival. The descriptive narrative given in this chapter of the Mahavamsa is not in the Dipavamsa. Mahanama, author of the Mahavamsa, fabricated a story for the serene joy and emotion of the pious. The Rajavaliya also consist of narrative of Vijaya’s birth and marriage more elaborate than given in the Mahavamsa. Vijaya and his companions drifted straight to Lanka as per the Rajavaliya without landing at any other places, contrary to the other two chronicles, and landed at Tammantota. There is no clue where Tammantota was! Seacoasts around Lanka are not copper coloured soils, but are sandy soils washed clean at some places and not clean at the rest of the places. The Dipavamsa claims that the place they landed was copper coloured soils and the place was called Tambapanni, 9 - 30. The Mahavamsa says that they landed at a region called Tambapanni 6 - 47. See the map below showing the extent of Asoka’s empire in which Suppara (Sopara) and Bharukaccha (Bharukacha) are shown.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 09 தொடரும் / Will Follow