Aggregator

யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது

2 months 1 week ago
உறவுக்காற சிறுமி தான், உயிரோடு இருக்கிறாவா இல்லையா என பெற்றோர் உறவினர் தவித்த தவிப்பிருக்கே? போனை நிறுத்திவிட்டார். இன்னொரு சம்பவம் 11ஆம் ஆண்டில் மாணவன் 9ஆம் ஆண்டில் கற்கும் மாணவியை தவறான நடவடிக்கைக்கு உட்படுத்திவிட்டு அதனை பெருமையாக ஆசிரியரிடம் கூறியிருக்கிறார். அந்த மாணவியும் பாடசாலை வராதிருந்துள்ளார். இப்போது அதிபர் தலையிட்டு மாணவியை மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர்

2 months 1 week ago
எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர் லத்தூர்: மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்வதற்கு தேவையான எருதுகள் அல்லது டிராக்டரை வாங்க அவருக்கு வசதி இல்லை. அவற்றுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வாடகை கேட்பதால், தானே எருதாக மாறி அம்பதாஸ் பவாரும் அவரது மனைவி முக்தாபாயும் பல ஆண்டுகளாக நிலத்தை ஒரு மரக்கலப்பை மூலம் உழுது விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய கடனை கூட அடைக்க முடியாமல் மிகவும் வறுமையில் வாடி வருகின்றனர். இந்த வீடியோ கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் பரிதாபப்பட்டு கருத்துகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மகாராஷ்டிர கூட்டுறவுத் துறை அமைச்சர் பாபாசாகேப் பாட்டில் கடந்த சனிக்கிழமை அம்பதாஸ் பவார் வீட்டுக்கு நேரடியாக சென்றார். மேலும், கூட்டுறவு சொசைட்டியில் பவார் பெயரில் இருந்த விவசாய கடன் ரூ.42,500-ஐ அமைச்சர் பாட்டில் முழுமையாக செலுத்தினார். அத்துடன், கடன் பாக்கி இல்லை என்ற சான்றிதழை உடனடியாக பவாருக்கு வழங்கும்படியும் உத்தரவிட்டார். முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை லத்தூர் மாவட்ட ‘கிரந்திகாரி ஷேத்கரி சங்காதன்’ என்ற அமைப்பு நிலத்தை உழுவதற்கு 2 மாடுகளை வாங்கி மேள தாளத்துடன் பவார் வீட்டுக்கு ஓட்டிச் சென்றனர். அங்கு மாடுகளை அவருக்கு பரிசாக வழங்கினர். இதற்கிடையில், தெலங்கானாவை சேர்ந்த அறக்கட்டளை ஒன்று, பவாரை சந்தித்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கியது. சமூக வலைதளங்களில் வெளிவந்த ஒரு வீடியோ வயது முதிர்ந்த ஒரு ஏழை விவசாயியின் வறுமையை போக்கியுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர். எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர் | Minister pays off agricultural debt of old man - hindutamil.in

அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !

2 months 1 week ago
இடதுசாரிகளின் பித்தலாட்டமும், சுரண்டல்களும் வலதுசாரிகள் மீதான ஈர்ப்புக்கு வழி வகுத்துவிட்டது. உங்கள் அளவிற்கு எனக்கு புரியப்போவது இல்லை. கார்டியன் எப்படி உருட்டுகின்றது என்பதை அறிய ஆர்வம் இல்லை. உங்களுக்கு கிளுகிளுப்பு ஏற்படுத்தக்கூடிய நியூ யோர்க் டைம்ஸ் பத்திகள் வாசிப்பது உண்டு. ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகின்றதா?

லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்

2 months 1 week ago
நான் என்னநினைக்கிறன் எண்டால் சிம்பாவேக்கு எதிராக சாதனை செய்தால் குறைவாகநினைப்பார்கள் என்று தான் முல்டர் சாதனைக்கு முயற்சி செய்யவில்லை. இதுவே அவுஸ்ரேலியா போன்ற அணியுடன் கட்டாயம் முயன்றிருப்பார்

உணவு செய்முறையை ரசிப்போம் !

2 months 1 week ago
கோடைகாலம் ஆரம்பித்து விட்ட்து. இம் மாதம் எல்லோரும் குடும்பமாகவும் சங்கங்கள் மூலமும் ஒன்று கூடல் நடத்துவார்கள் அதில் முக்கியம் இடம்பெறும் கூல்.அதன் சுவை தரம் சேர்மான பொருட்களில் இருக்கிறது . விசேடமாக ஓடியல் மா ஊற வைத்து "கசப்பு "வடித்துவிட்டு (ரெண்டுமூன்று தடவை ) நண்டு றால் மீன் (சதைப் பற் றான ) பொருத்தமான மரக்கறிவகை இட்டு காரத்துக்கு மிளகாய் உள்ளியுடன் அரைத்து விட்டுபுட்டு உப்பு அளவாக சேர்த்து உடன் சூட்டுடன் குழுவாக உண்ண (குடிக்க )வேண்டும்

அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை - சாணக்கியன் இராசமாணிக்கம்

2 months 1 week ago
10 Jul, 2025 | 10:27 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் செய்த குற்றங்களை பிறிதொரு அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள நிலையில், உண்மையான நீதி வேண்டுமாயின் செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியமானது. அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதி மறுக்கப்பட்டது என்பது நல்லிணக்கத்திற்கு பாதகமான ஒரு விடயமாக அமையும். பொறுப்புக்கூறல் என்பது நல்லிணக்கம் உருவாக முக்கிய விடயமாக உள்ளது. குறிப்பாக 1998 / 99 காலப்பகுதியில் சோமரட்ன ராஜபக்ஷ எனும் நபர் வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மணி பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 15 மனித எச்சங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இவ் எச்சங்கள் ஸ்கொட்லாந்தில் கிளாஸ்கோவில் உள்ளதாக அறிகின்றோம். ஏன் இவற்றை இலங்கை அரசாங்கம் ஆய்வு செய்யவில்லை? டி.என்.ஏ பரிசோதனை இலங்கை அரசாங்கத்திற்கு மேற்கொள்ள வசதிகள் இல்லாத நிலையில் ஏன் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாட தயங்குகின்றது? அன்று இந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. இப்போதும் அங்கு அகழ்வுகள் நடக்கின்றன. அரசாங்கம் செய்ய குற்றங்களை அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என ஜனாதிபதி கூறியுள்ளார். இதானாலேயே நாங்கள் சர்வதேச விசாரணை ஒன்றினை எதிர்பார்க்கின்றோம். அரசாங்கம் ஊழல் ஒழிப்பிற்கு விசேட அலுவலகம் ஒன்றை உருவாக்க யோசிப்பது போல் ஏன் மனித உரிமை மீறல்களை விசாரிக்க அலுவலகம் அமைக்கவில்லை? ஆரையம்பதியில் கொல்லப்பட்ட விஜிதா, மட்டக்களப்பில் கொல்லப்பட்ட ரிபாயா, பிறேமினி,மனித புதைகுழி உள்ள கொக்குத்தொடுவாய்,மாத்தளை, செம்மணி, மற்றும் இன்னும் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை ஆகியவற்றின் மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை? இதனால் இந்த விடயத்தில் சர்வதேச விசாரணைகள் அவசியமானது என்றார். அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை - சாணக்கியன் இராசமாணிக்கம் | Virakesari.lk

அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை - சாணக்கியன் இராசமாணிக்கம்

2 months 1 week ago

10 Jul, 2025 | 10:27 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

அரசாங்கம் செய்த குற்றங்களை பிறிதொரு  அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள நிலையில், உண்மையான நீதி வேண்டுமாயின் செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியமானது. அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்  கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில்   புதன்கிழமை (09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதி மறுக்கப்பட்டது என்பது நல்லிணக்கத்திற்கு பாதகமான ஒரு விடயமாக அமையும்.

பொறுப்புக்கூறல் என்பது நல்லிணக்கம் உருவாக முக்கிய விடயமாக உள்ளது. குறிப்பாக 1998 / 99 காலப்பகுதியில் சோமரட்ன ராஜபக்ஷ எனும் நபர் வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மணி பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 15 மனித எச்சங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இவ் எச்சங்கள் ஸ்கொட்லாந்தில் கிளாஸ்கோவில் உள்ளதாக அறிகின்றோம். ஏன் இவற்றை இலங்கை அரசாங்கம் ஆய்வு செய்யவில்லை? டி.என்.ஏ பரிசோதனை இலங்கை அரசாங்கத்திற்கு மேற்கொள்ள வசதிகள் இல்லாத நிலையில் ஏன் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாட தயங்குகின்றது? அன்று இந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. இப்போதும் அங்கு அகழ்வுகள் நடக்கின்றன.

அரசாங்கம் செய்ய குற்றங்களை அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என ஜனாதிபதி கூறியுள்ளார். இதானாலேயே நாங்கள் சர்வதேச விசாரணை ஒன்றினை எதிர்பார்க்கின்றோம்.

அரசாங்கம் ஊழல் ஒழிப்பிற்கு விசேட அலுவலகம் ஒன்றை உருவாக்க யோசிப்பது போல் ஏன் மனித உரிமை மீறல்களை விசாரிக்க அலுவலகம் அமைக்கவில்லை? ஆரையம்பதியில் கொல்லப்பட்ட விஜிதா, மட்டக்களப்பில் கொல்லப்பட்ட ரிபாயா, பிறேமினி,மனித புதைகுழி உள்ள கொக்குத்தொடுவாய்,மாத்தளை, செம்மணி,  மற்றும்  இன்னும் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை ஆகியவற்றின் மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை? இதனால் இந்த விடயத்தில் சர்வதேச விசாரணைகள் அவசியமானது என்றார்.

அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை - சாணக்கியன் இராசமாணிக்கம் | Virakesari.lk

அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை திருத்தியமைத்து மீண்டும் அறிக்கையை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப்

2 months 1 week ago
10 Jul, 2025 | 12:24 PM இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய அறிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெளியிட்டுள்ளார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை (09) வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிக்கையை மீண்டும் வெளியிட்டு முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயர் "அருண குமார திசாநாயக்க" என்று தவறாக எழுதப்பட்டிருப்பதாகவும் தற்போது அது சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் உறுதி செய்துள்ளார். மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்த விரும்புவதாகவும், இலங்கை அமெரிக்காவின் அசாதாரண பொருளாதாரம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார தடைகளை நீக்கினால் வரி மற்றும் கட்டணங்களை சரிசெய்ய முடியும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியானது எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நினைவுபடுத்தினார். புதிய அறிக்கை ; பழைய அறிக்கை ; அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை திருத்தியமைத்து மீண்டும் அறிக்கையை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப் | Virakesari.lk

அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை திருத்தியமைத்து மீண்டும் அறிக்கையை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப்

2 months 1 week ago

10 Jul, 2025 | 12:24 PM

image

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய அறிக்கையை  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெளியிட்டுள்ளார். 

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக  அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கை ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை (09) வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிக்கையை மீண்டும் வெளியிட்டு முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் இலங்கை ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்கவின் பெயர் "அருண குமார திசாநாயக்க" என்று தவறாக எழுதப்பட்டிருப்பதாகவும் தற்போது அது சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் உறுதி செய்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்த விரும்புவதாகவும், இலங்கை அமெரிக்காவின் அசாதாரண பொருளாதாரம் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார தடைகளை நீக்கினால் வரி மற்றும் கட்டணங்களை சரிசெய்ய முடியும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியானது எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நினைவுபடுத்தினார்.

புதிய அறிக்கை ;

s.jpg

 

பழைய அறிக்கை ; 

WhatsApp_Image_2025-07-09_at_22.59.28.jp


அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை திருத்தியமைத்து மீண்டும் அறிக்கையை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப் | Virakesari.lk

உணவு செய்முறையை ரசிப்போம் !

2 months 1 week ago
சென்ற பிக் பாஸ் காலங்களில் "சம்மந்தி" என்று இதற்கு பெரிய மவுசு ...எல்லோர் வாயிலும் பேச்சிலும்" சம்மந்தியா "அது என்ன சதா தேங்காய் துவையல் தான் ...

செம்மணி மனித புதைகுழி: இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்.

2 months 1 week ago
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு - இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் 10 Jul, 2025 | 04:25 PM செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு - இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் | Virakesari.lk

யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது

2 months 1 week ago
அவசரம் அவசரம் எதிலும் அவசரம்.அறியாத வயது ...சந்தில சிந்து பாடிய வரை யும் உள்ளே தள்ளனும். தண்டனை கடுமையாகும் வரை குற்றங்கள் குறையாது .

வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருகிறது; சிறீதரன் எம்.பி

2 months 1 week ago
10 Jul, 2025 | 07:58 PM (இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையால், வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதுடன்,விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிப்படைந்து வருவதாக தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவஞானம் முன்வைத்த கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை விரிவான பதிலளிப்பதாக உணவு பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற அமர்வின் போது 27/2 இல் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் வருமாறு கேள்வியெழுப்பினார். விவசாய மாவட்டமான யாழ்ப்பாணத்தில் நெற்செய்கைக்கு மேலாக உப உணவுப் பயிர்களான சின்ன வெங்காயம், வேதாளக்காய் வெங்காயம், உருளைக்கிழங்கு,திராட்சை,கரட், கரணைக்கிழங்கு,பீற்றூட், வாழை, மரவள்ளி, மிளகாய் போன்ற பயிர்கள் வலிகாமம் வடக்கு,வலிகாமம் கிழக்கு, வலிகாமம் மேற்கு, வடமராட்சி தெற்கு மேற்கு, வடமராட்சி கிழக்கு, தீவகம்,தென்மராட்சி போன்ற பெரும் பிரதேசங்களின் பேரூர்களில் செய்கை மேற்கொள்ளப்படுகிறது வருகின்றன. குறிப்பாக, இவ்வூர்களில் வாழும் விவசாயிகள் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்து, அறுவடை செய்யும் போது இறக்குமதி வரி விதிப்பு செய்யப்படுவது வழமை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக இவ்வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. காலநிலைப் பாதிப்புகளையும் கடந்து உப உணவுப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் யாழ்ப்பாண விவசாயிகளின் நடைமுறை இடர்பாடுகள் எவை என்பதையும், யாழ்ப்பாணச் சின்ன வெங்காயத்துக்கான கேள்வி தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதையும், கடந்த இரண்டு வருடங்களாக உற்பத்திக்கான மானிய அடிப்படையிலான விதை உருளைக்கிழங்கு கிடைக்கப்பெறவில்லை என்பதையும்,சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்படும் காலத்தில், விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் அரசால் இறக்குமதிகளுக்கு எதிரான வரி விதிக்கப்படுமா? என்பதையும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் அமைச்சர் சபைக்கு அறிவிக்க வேண்டும். அதேவேளை, இவ்வருடம் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் முதலை முழுமையாக இழந்துள்ளதுடன், உற்பத்திப் பொருளின் தரமும் குறைந்துள்ளது. இத்தகைய பாதிப்பை எதிர்கொண்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீளமைக்கும் வகையில் நஷ்டஈடு வழங்கும் திட்டம் அரசிடம் உள்ளதா என்றும் காலாகாலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்குச் செய்கை பாதிப்படையும் வகையில், மானிய அடிப்படையிலான விதைக் கிழங்கு கிடைக்கப் பெறாமைக்கும், தரமான புதிய இனங்கள் அறிமுகம் செய்யப்படாமைக்கும் காரணம் என்ன என்பதை அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா, பார உலோகம் நிறைந்துள்ளதாக கூறப்படுவதன் அடிப்படையில் கிருமிநாசினிப் பயன்பாடு குறைவடைந்துள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு பார உலோகம் உண்டா - இல்லையா என்பதை மக்களுக்கு எவ்வாறு தெளிவுபடுத்துவது என்பதற்கு அமைச்சரின் பதில் என்ன ?வடக்கு மாகாணத்தில் மட்டும் இந்த உற்பத்திப் பொருட்களுக்கு பத்திற்கு ஒன்று கழிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்தக் கழிவுமுறை தம்புள்ள,மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயங்களுக்கு ஏன் பின்பற்றப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் முன்வைத்த கேள்விகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை தரவுகளுடன் பதிலளிப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார். வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருகிறது; சிறீதரன் எம்.பி | Virakesari.lk

வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருகிறது; சிறீதரன் எம்.பி

2 months 1 week ago

10 Jul, 2025 | 07:58 PM

image

(இராஜதுரை ஹஷான்)

யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையால், வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதுடன்,விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிப்படைந்து வருவதாக  தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவஞானம் முன்வைத்த கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை விரிவான பதிலளிப்பதாக உணவு பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற அமர்வின் போது 27/2 இல்  வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம்  வருமாறு கேள்வியெழுப்பினார்.

விவசாய மாவட்டமான யாழ்ப்பாணத்தில் நெற்செய்கைக்கு மேலாக உப உணவுப் பயிர்களான சின்ன வெங்காயம், வேதாளக்காய் வெங்காயம், உருளைக்கிழங்கு,திராட்சை,கரட், கரணைக்கிழங்கு,பீற்றூட், வாழை, மரவள்ளி, மிளகாய் போன்ற பயிர்கள் வலிகாமம் வடக்கு,வலிகாமம் கிழக்கு, வலிகாமம் மேற்கு, வடமராட்சி தெற்கு மேற்கு, வடமராட்சி கிழக்கு, தீவகம்,தென்மராட்சி போன்ற பெரும் பிரதேசங்களின் பேரூர்களில் செய்கை  மேற்கொள்ளப்படுகிறது வருகின்றன.

குறிப்பாக, இவ்வூர்களில் வாழும் விவசாயிகள் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்து, அறுவடை செய்யும் போது இறக்குமதி வரி விதிப்பு செய்யப்படுவது வழமை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக இவ்வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. காலநிலைப் பாதிப்புகளையும் கடந்து உப உணவுப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் யாழ்ப்பாண விவசாயிகளின் நடைமுறை இடர்பாடுகள் எவை என்பதையும், யாழ்ப்பாணச் சின்ன வெங்காயத்துக்கான கேள்வி தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதையும், கடந்த இரண்டு வருடங்களாக உற்பத்திக்கான மானிய அடிப்படையிலான விதை உருளைக்கிழங்கு கிடைக்கப்பெறவில்லை என்பதையும்,சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்படும் காலத்தில், விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் அரசால் இறக்குமதிகளுக்கு எதிரான வரி விதிக்கப்படுமா? என்பதையும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் அமைச்சர் சபைக்கு அறிவிக்க வேண்டும்.   

அதேவேளை, இவ்வருடம் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் முதலை முழுமையாக இழந்துள்ளதுடன், உற்பத்திப் பொருளின் தரமும் குறைந்துள்ளது.

இத்தகைய பாதிப்பை எதிர்கொண்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீளமைக்கும் வகையில் நஷ்டஈடு வழங்கும் திட்டம் அரசிடம் உள்ளதா என்றும் காலாகாலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்குச் செய்கை பாதிப்படையும் வகையில், மானிய அடிப்படையிலான விதைக் கிழங்கு கிடைக்கப் பெறாமைக்கும், தரமான புதிய இனங்கள் அறிமுகம் செய்யப்படாமைக்கும் காரணம் என்ன என்பதை அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா, பார உலோகம் நிறைந்துள்ளதாக கூறப்படுவதன் அடிப்படையில் கிருமிநாசினிப் பயன்பாடு குறைவடைந்துள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு பார உலோகம் உண்டா - இல்லையா என்பதை மக்களுக்கு எவ்வாறு தெளிவுபடுத்துவது என்பதற்கு அமைச்சரின் பதில் என்ன ?வடக்கு மாகாணத்தில் மட்டும் இந்த உற்பத்திப் பொருட்களுக்கு பத்திற்கு ஒன்று கழிவு செய்யப்படுகிறது.

ஆனால் இந்தக் கழிவுமுறை தம்புள்ள,மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயங்களுக்கு ஏன் பின்பற்றப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் முன்வைத்த கேள்விகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை தரவுகளுடன் பதிலளிப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருகிறது;  சிறீதரன் எம்.பி | Virakesari.lk

யாழ் பேருந்து நிலையத்தின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார் முதல்வர் மதிவதனி

2 months 1 week ago
யாழ் பேருந்து நிலையத்தின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார் முதல்வர் மதிவதனி 10 Jul, 2025 | 05:25 PM யாழ்ப்பாணம் மாநகரத்தின் மத்தியில் பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் விசேட திடீர் கள விஜயம் ஒன்றினை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா கடந்த 8ம் திகதி மேற்கொண்டிருந்தார். மேற்படி விஜயத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கடைகள், வீதியோர பழங்கள் விற்பனை ஊடாக போக்குவரத்து செய்ய முடியாமல் பொது மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஆராய்ந்து நடைபாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விற்பனைப் பொருட்களை அப்புறப்படுத்துமாறு கடை நடாத்துனர்களுக்கு முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது. முதல்வரின் அறிவுறுத்தலை மீறி தொடர்ந்தும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடைபாதையில் விற்பனைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமாக இருந்தால் மாநகர வருமான வரி பரிசோதகர்களினால் முன்னறிவித்தல் இன்றி பொருட்கள் மாநகர வாகனங்களை கொண்டு வந்து அகற்றப்படும் என்றும் வியாபாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. முதல்வரின் மேற்படி விஜயத்தில் மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பொதுச் சுகாதார பொறியியற் பிரிவு அதிகாரிகள், மாநகர பிரதான வருமானவரி பரிசோதகர் உள்ளிட்ட பலர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். யாழ் பேருந்து நிலையத்தின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார் முதல்வர் மதிவதனி | Virakesari.lk

யாழ் பேருந்து நிலையத்தின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார் முதல்வர் மதிவதனி

2 months 1 week ago

யாழ் பேருந்து நிலையத்தின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார் முதல்வர் மதிவதனி

10 Jul, 2025 | 05:25 PM

image

யாழ்ப்பாணம் மாநகரத்தின் மத்தியில் பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் விசேட திடீர் கள விஜயம் ஒன்றினை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா கடந்த 8ம் திகதி மேற்கொண்டிருந்தார்.

மேற்படி விஜயத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கடைகள், வீதியோர பழங்கள் விற்பனை ஊடாக போக்குவரத்து செய்ய முடியாமல் பொது மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஆராய்ந்து நடைபாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விற்பனைப் பொருட்களை அப்புறப்படுத்துமாறு கடை நடாத்துனர்களுக்கு முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.

முதல்வரின் அறிவுறுத்தலை மீறி தொடர்ந்தும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடைபாதையில் விற்பனைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமாக இருந்தால் மாநகர வருமான வரி பரிசோதகர்களினால் முன்னறிவித்தல் இன்றி பொருட்கள் மாநகர வாகனங்களை கொண்டு வந்து அகற்றப்படும் என்றும் வியாபாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

முதல்வரின் மேற்படி விஜயத்தில்  மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பொதுச் சுகாதார பொறியியற் பிரிவு அதிகாரிகள், மாநகர பிரதான வருமானவரி பரிசோதகர் உள்ளிட்ட பலர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

01__1___4_.jpg


யாழ் பேருந்து நிலையத்தின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார் முதல்வர் மதிவதனி | Virakesari.lk

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தங்கம்?

2 months 1 week ago
புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழியைத் தோண்டும் பணிகள் முன்னெடுப்பு! 10 Jul, 2025 | 05:29 PM தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை (10) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் போரின் முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் பயன்படுத்தினர் என்று கருதப்படும் நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு ஏக்கர் வரையிலான குறித்த காணி, விடுதலைப்புலிகளின் முகாமாகக் காணப்பட்டது. இந்தக் காலட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பாரியளவில் நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்று அமைக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு போருக்கு பின்னர், குறித்த காணியில், கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். போரின் குண்டுத் தாக்குதல்களால், பதுங்குகுழியின் வாயில்கள் மூடப்பட்ட நிலையில், அதனை மக்கள் பொருட்படுத்தவில்லை. இந்த நிலக்கீழ் பதுங்கு குழி சுமார் 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலக்கீழ் பதுங்குகுழியில், விடுதலைப்புலிகளின் தங்கமோ அல்லது ஆயுதங்ளோ புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சிலர் வீட்டின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். அதன் பின்னர் புதுக்குடியிருப்புப் பொலிஸார் அந்தப் பகுதியைப் பார்வையிட்டு, நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு நேற்று புதன்கிழமை (09) குறித்த நிலக்கீழ் பதுங்குகுழியைத் கிராம சேவையாளர், விஷேட அதிரடி படையினர், குண்டு செயலிழக்கும் பிரிவினர், பொலிஸார், உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் நிலக்கீழ் பதுங்குகுழியில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் அதனையும் வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. நேற்றையதினம் (09) மாலை சம்பவ இடத்துக்குச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் குறித்த பகுதிகளை பார்வையிட்டதுடன், தொடர்ந்தும் இன்று காலை அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு பணித்திருந்தார். அதனை தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் அகழ்வு பணி ஆரம்பமாகியது. புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழியைத் தோண்டும் பணிகள் முன்னெடுப்பு! | Virakesari.lk

யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது

2 months 1 week ago
15 வயது சிறுமியை… அந்த இளைஞன் விடுதிக்கு கொண்டு வரும் போதே, விடுதி உரிமையாளர் காவல் துறைக்கு இரகசிய தகவல் கொடுத்திருக்க வேண்டும். மாறாக… அந்த விடுதி உரிமையாளரும் சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டமைக்காகவும், சிறுமியை பற்றிய தகவல்களை பொலிசாருக்கு வழங்காமல் இருந்தமைக்காகவும் பாரதூரமான குற்றமாக கருதி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,