Aggregator

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - எதிர்க்கட்சி கைச்சாத்து !

2 months ago
ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - எதிர்க்கட்சி கைச்சாத்து ! By SRI January 7, 2026 கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இன்று (07) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து அவர்கள் இப்பிரேரணையில் கையெழுத்திட்டனர். தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களில் சிறுவர்களின் மனநிலைக்குப் பொருத்தமற்ற விடயங்கள் காணப்படுவதாகவும், பாட விடயங்களில் பல பிழைகள் இருப்பதாகவும், இது குறித்து முறையாக நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காகவும் கல்வி அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இந் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முதலாவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையெழுத்திட்டார். https://www.battinews.com/2026/01/blog-post_953.html

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - எதிர்க்கட்சி கைச்சாத்து !

2 months ago

ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - எதிர்க்கட்சி கைச்சாத்து !

By SRI

January 7, 2026

MediaFile%20(60).jpeg

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இன்று (07) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து அவர்கள் இப்பிரேரணையில் கையெழுத்திட்டனர்.

தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களில் சிறுவர்களின் மனநிலைக்குப் பொருத்தமற்ற விடயங்கள் காணப்படுவதாகவும், பாட விடயங்களில் பல பிழைகள் இருப்பதாகவும், இது குறித்து முறையாக நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காகவும் கல்வி அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முதலாவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையெழுத்திட்டார்.

https://www.battinews.com/2026/01/blog-post_953.html

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை

2 months ago
இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) இரவு நாட்டை வந்தடைந்த அவர், இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்புப் பிரதி அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பல சிரேஷ்ட இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்புகளின் போது பயிற்சி ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது. மேலும் தனது விஜயத்தின் போது, இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதோடு, புத்தல இராணுவ யுத்தக் கல்லூரியின் அதிகாரிகள் மற்றும் பயிலுநர்களையும் சந்திக்கவுள்ளார். அத்துடன், கொழும்பில் அமைந்துள்ள இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmk3n265403mxo29nqx4v2a5d

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை

2 months ago

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) இரவு நாட்டை வந்தடைந்த அவர், இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்புப் பிரதி அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பல சிரேஷ்ட இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார். 

இச்சந்திப்புகளின் போது பயிற்சி ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது. 

மேலும் தனது விஜயத்தின் போது, இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதோடு, புத்தல இராணுவ யுத்தக் கல்லூரியின் அதிகாரிகள் மற்றும் பயிலுநர்களையும் சந்திக்கவுள்ளார். 

அத்துடன், கொழும்பில் அமைந்துள்ள இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmk3n265403mxo29nqx4v2a5d

எம்.பி. அர்ச்சுனாவுக்கு நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவு!

2 months ago
எம்.பி. அர்ச்சுனாவுக்கு நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவு! யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தொடர்பில் பொது வெளியில் அவதூறு வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளரின் அனுமதியின்றி அவரது அலுவலகத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனக்கு அவதூறு ஏற்படும் வகையில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டமை மற்றும் தனது கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலும் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வைத்திய சாலைப் பணிப்பாளரால் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது வழக்காளி சார்பில் சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல் குருபரனும் எதிராளி சார்பில் சட்டத்தரணி கௌசல்யாவும் ஆயிராகினர். இருதரப்பினரும் ஏற்றுக்கொண்ட இணக்கப்பட்டின் அடிப்படையில் வழக்கு முடிவுறும் வரை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரை பொது வெளியில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா செயற்படுவதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. https://www.samakalam.com/எம்-பி-அர்ச்சுனாவுக்கு-ந/

எம்.பி. அர்ச்சுனாவுக்கு நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவு!

2 months ago

எம்.பி. அர்ச்சுனாவுக்கு நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தொடர்பில் பொது வெளியில் அவதூறு வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளரின் அனுமதியின்றி அவரது அலுவலகத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனக்கு அவதூறு ஏற்படும் வகையில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டமை மற்றும் தனது கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலும் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வைத்திய சாலைப் பணிப்பாளரால் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது வழக்காளி சார்பில் சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல் குருபரனும் எதிராளி சார்பில் சட்டத்தரணி கௌசல்யாவும் ஆயிராகினர்.

இருதரப்பினரும் ஏற்றுக்கொண்ட இணக்கப்பட்டின் அடிப்படையில் வழக்கு முடிவுறும் வரை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரை பொது வெளியில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா செயற்படுவதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

https://www.samakalam.com/எம்-பி-அர்ச்சுனாவுக்கு-ந/

நான்கு ஆண்டு சேவைக்கு பின்னர் இலங்கையை விட்டு வெளியற தயாராகும் அமெரிக்க தூதர் ஜூலி சுங்!

2 months ago
நான்கு ஆண்டு சேவைக்கு பின்னர் இலங்கையை விட்டு வெளியற தயாராகும் அமெரிக்க தூதர் ஜூலி சுங்! அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரியாக சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றியதை முடித்துக்கொண்டு, எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி தூதர் ஜூலி சுங் (Julie Chung ) இலங்கையை விட்டு வெளியேறுவார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. தூதர் ஜூலி சுங் 2022 பெப்ரவரியில் கொழும்பில் தனது பதவிக் காலத்தைத் தொடங்கினார். 2023 இல் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு, 2024 இல் அமெரிக்க அமைதிப் படை தன்னார்வலர்களின் மீள் வருகை மற்றும் ஃபுல்பிரைட் திட்டத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவு உள்ளிட்ட பல மைல்கற்களால் இலங்கையில் ஜூலி சுங்கின் பதவிக்காலம் குறிக்கப்பட்டதாக அமெரிக்க தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2022 ஒக்டோபரில் அதன் புதிய LEED தங்கம் சான்றளிக்கப்பட்ட வசதிக்கு தூதரகம் நகர்வதையும் அவர் மேற்பார்வையிட்டார். இது இலங்கையில் நிலையான, பாதுகாப்பான மற்றும் நீடித்த இருப்புக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது மற்றும் இந்தோ-பசிபிக் எதிர்காலத்திற்கான நவீன கூட்டாண்மையை உருவாக்குவதில் அமெரிக்காவின் கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தூதர் சுங்கின் தலைமையின் கீழ், அமெரிக்க தூதரகம் இலங்கையின் பொருளாதார மீட்சியை ஆதரிப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை முன்னெடுத்ததாக தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான அமெரிக்காவின் ஆதரவு மற்றும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பல அமெரிக்க விவசாயத் துறை தொகுப்புகள் மற்றும் மிக அண்மையில் 2025 டிசம்பரில் தித்வா சூறாவளிக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க உதவி, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்தில் மனிதாபிமான ஆதரவை வழங்கியது ஆகியவை இதில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458648

நான்கு ஆண்டு சேவைக்கு பின்னர் இலங்கையை விட்டு வெளியற தயாராகும் அமெரிக்க தூதர் ஜூலி சுங்!

2 months ago

Julie-Chung.jpg?resize=750%2C375&ssl=1

நான்கு ஆண்டு சேவைக்கு பின்னர் இலங்கையை விட்டு வெளியற தயாராகும் அமெரிக்க தூதர் ஜூலி சுங்!

அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரியாக சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றியதை முடித்துக்கொண்டு, எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி தூதர் ஜூலி சுங் (Julie Chung ) இலங்கையை விட்டு வெளியேறுவார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதர் ஜூலி சுங் 2022 பெப்ரவரியில் கொழும்பில் தனது பதவிக் காலத்தைத் தொடங்கினார்.

2023 இல் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு, 2024 இல் அமெரிக்க அமைதிப் படை தன்னார்வலர்களின் மீள் வருகை மற்றும் ஃபுல்பிரைட் திட்டத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவு உள்ளிட்ட பல மைல்கற்களால் இலங்கையில் ஜூலி சுங்கின் பதவிக்காலம் குறிக்கப்பட்டதாக அமெரிக்க தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

2022 ஒக்டோபரில் அதன் புதிய LEED தங்கம் சான்றளிக்கப்பட்ட வசதிக்கு தூதரகம் நகர்வதையும் அவர் மேற்பார்வையிட்டார்.

இது இலங்கையில் நிலையான, பாதுகாப்பான மற்றும் நீடித்த இருப்புக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது மற்றும் இந்தோ-பசிபிக் எதிர்காலத்திற்கான நவீன கூட்டாண்மையை உருவாக்குவதில் அமெரிக்காவின் கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தூதர் சுங்கின் தலைமையின் கீழ், அமெரிக்க தூதரகம் இலங்கையின் பொருளாதார மீட்சியை ஆதரிப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை முன்னெடுத்ததாக தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான அமெரிக்காவின் ஆதரவு மற்றும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பல அமெரிக்க விவசாயத் துறை தொகுப்புகள் மற்றும் மிக அண்மையில் 2025 டிசம்பரில் தித்வா சூறாவளிக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க உதவி, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்தில் மனிதாபிமான ஆதரவை வழங்கியது ஆகியவை இதில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1458648

வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!

2 months ago
வடிகட்டிய ஆசாரவாதிகளுக்கு ஒரு போதும் சோசலிசத்தில் நாட்டம் இல்லை. இது புட்டின் என்ற மனிதர் மீதான தனிமனித வழிபாட்டில் பெறுதி. பிகு புட்டின் சோசலிஸ்டோ, கம்யூனிஸ்டோ கூட இல்லை. நீங்கள் சொன்ன போது தான் அவர் அப்படி சோசலிஸ ரஸ்ஸியாவின் என் று சொன்னதை கவனித்தேன் 🤣 அவர் கிண்டலுக்காக ஏகாதிபத்திய ஜார் மன்னர்களின் வாழ்க்கை வாழ்கின்ற பூட்டினால் ஆளப்படும் ரஷ்யா நாடு என்பதால் அப்படி சொல்லியிருப்பார் பூட்டின் சோசலிஸ்ட் என்றால் தோழர்கள் ரம்பும் எலன் மஸ்க்கும் சோசலிஸ்ட்டுகளே

தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு

2 months ago
தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு. சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். https://athavannews.com/2026/1458645

தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு

2 months ago

pm.jpg?resize=745%2C375&ssl=1

தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு.

சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

https://athavannews.com/2026/1458645

ஐரோப்பா முழுவதுமான பனிப்பொழிவில் ஆறு பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து!

2 months ago
ஐரோப்பா முழுவதுமான பனிப்பொழிவில் ஆறு பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து! கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமான வானிலை காரணமாக ஐரோப்பா முழுவதும் பரவலான பயணத் தடை ஏற்பட்டுள்ளது. கண்டத்தில் வானிலை தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்சின் இரண்டு தனித்தனி பகுதிகளில் பனிமூட்டமான வானிலையால் இடம்பெற்ற வாகன விபத்தில் 05 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் போஸ்னியாவின் தலைநகர் சரஜெவோவில் 16 அங்குலம் (40 செ.மீ) பனிப்பொழிவு ஏற்பட்டதில் ஒரு பெண் உயிரிழந்தார். இதேவ‍ேளை, கடுமையான பனி மூட்டமன வானிலையால் ஐரோப்பா முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பயணிகள் பாரிஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர். புதன்கிழமை (07) வரை இடையூறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2026/1458633

ஐரோப்பா முழுவதுமான பனிப்பொழிவில் ஆறு பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து!

2 months ago

SNOW.jpg?resize=750%2C375&ssl=1

ஐரோப்பா முழுவதுமான பனிப்பொழிவில் ஆறு பேர் உயிரிழப்பு;  நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து! 

கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமான வானிலை காரணமாக ஐரோப்பா முழுவதும் பரவலான பயணத் தடை ஏற்பட்டுள்ளது.

கண்டத்தில் வானிலை தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்சின் இரண்டு தனித்தனி பகுதிகளில் பனிமூட்டமான வானிலையால் இடம்பெற்ற வாகன விபத்தில் 05 பேர் உயிரிழந்தனர். 

அதே நேரத்தில் போஸ்னியாவின் தலைநகர் சரஜெவோவில் 16 அங்குலம் (40 செ.மீ) பனிப்பொழிவு ஏற்பட்டதில் ஒரு பெண் உயிரிழந்தார்.

இதேவ‍ேளை, கடுமையான பனி மூட்டமன வானிலையால் ஐரோப்பா முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான பயணிகள் பாரிஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

புதன்கிழமை (07) வரை இடையூறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2026/1458633

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரேனுக்கு படைகளை அனுப்ப இங்கிலாந்து, பிரான்ஸ் முடிவு!

2 months ago
அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரேனுக்கு படைகளை அனுப்ப இங்கிலாந்து, பிரான்ஸ் முடிவு! ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரேனில் படைகளை நிலைநிறுத்துவதற்கான பிரகடனத்தில் பிரான்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) அறிவித்துள்ளார். பாரிஸில் உக்ரேனின் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், எதிர்கால படையெடுப்பைத் தடுக்க இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் “உக்ரேன் முழுவதும் இராணுவ மையங்களை நிறுவும்” என்றும் அவர் கூறினார். அதேநேரத்தில், பின்னர் உக்ரேனில் ஆயிரக்கணக்கான படையினர் நிறுத்தப்படலாம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார். உக்ரேனுக்கான வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை நேச நாடுகள் பெரும்பாலும் ஒப்புக்கொண்டன. மேலும் ஒரு போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதில் அமெரிக்கா முன்னணியில் இருக்கும் என்று முன்மொழிந்தன. ஆனால் பிரதேசத்தின் முக்கிய பிரச்சினை இன்னும் விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் தலைநகரில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகள் குறித்து மொஸ்கோ இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்ன் 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார். மேலும் மாஸ்கோ தற்போது உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% கட்டுப்பாட்டில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1458630

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரேனுக்கு படைகளை அனுப்ப இங்கிலாந்து, பிரான்ஸ் முடிவு!

2 months ago

Venezuela-1.jpg?resize=750%2C375&ssl=1

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரேனுக்கு படைகளை அனுப்ப இங்கிலாந்து, பிரான்ஸ் முடிவு!

ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரேனில் படைகளை நிலைநிறுத்துவதற்கான பிரகடனத்தில் பிரான்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) அறிவித்துள்ளார்.

பாரிஸில் உக்ரேனின் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், எதிர்கால படையெடுப்பைத் தடுக்க இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் “உக்ரேன் முழுவதும் இராணுவ மையங்களை நிறுவும்” என்றும் அவர் கூறினார்.

அதேநேரத்தில், பின்னர் உக்ரேனில் ஆயிரக்கணக்கான படையினர் நிறுத்தப்படலாம் என்று பிரான்ஸ்  ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்  கூறினார்.

உக்ரேனுக்கான வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை நேச நாடுகள் பெரும்பாலும் ஒப்புக்கொண்டன.

மேலும் ஒரு போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதில் அமெரிக்கா முன்னணியில் இருக்கும் என்று முன்மொழிந்தன. 

ஆனால் பிரதேசத்தின் முக்கிய பிரச்சினை இன்னும் விவாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரான்ஸ் தலைநகரில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகள் குறித்து மொஸ்கோ இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்ன் 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார்.

மேலும் மாஸ்கோ தற்போது உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% கட்டுப்பாட்டில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1458630

அமெரிக்காவுக்கு 2 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெயை ஏற்றுமதி செய்யவுள்ள வெனிசுலா!

2 months ago
அமெரிக்காவுக்கு 2 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெயை ஏற்றுமதி செய்யவுள்ள வெனிசுலா! கராகஸ் மற்றும் வொஷிங்டன் இடையே 2 பில்லியன் டொலர் மதிப்புள்ள வெனிசுலா மசகு எண்ணெய் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (06) தெரிவித்தார். இது சீனாவிலிருந்து விநியோகங்களைத் திசைதிருப்பும் அதே வேளையில் வெனிசுலாவுக்கு எண்ணெய் உற்பத்தியில் ஆழமான குறைப்புகளைத் தவிர்க்க உதவும் ஒரு முக்கிய பேச்சுவார்த்தையாகும். அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்குத் சந்தையை திறந்துவிடவும் இல்லையெனில் இராணுவத் தலையீட்டை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என்றும் ட்ரம்பின் கோரிக்கைக்கு வெனிசுலா அரசாங்கம் பதிலளிக்க ஆரம்பித்துள்ளது என்பதற்கான வலுவான அறிகுறியாக இந்த ஒப்பந்தம் உள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு “முழுமையான அணுகலை” வழங்க இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் விரும்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து ட்ரம்ப் விதித்த ஏற்றுமதி தடை காரணமாக வெனிசுலாவில் மில்லியன் கணக்கான பீப்பாய்கள் எண்ணெய் கப்பல்களிலும் சேமிப்பு தொட்டிகளிலும் நிரப்பப்பட்டுள்ளன. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் அமெரிக்க அழுத்தத்தின் ஒரு பகுதியாக இந்த முற்றுகை இருந்தது. இது கடந்த வார இறுதியில் அமெரிக்கப் படைகள் அவரைக் கைப்பற்றுவதில் உச்சக்கட்டத்தை அடைந்தது. வெனிசுலாவின் உயர் அதிகாரிகள் மதுரோவின் கைதினை ஒரு கடத்தல் என்று கூறியுள்ளனர் – மேலும் அமெரிக்கா நாட்டின் பரந்த எண்ணெய் இருப்புக்களை திருட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் புதிய உடன்பாடு மூலமாக வெனிசுலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் வரை அனுமதிக்கப்பட்ட மசகு எண்ணெயை அமெரிக்காவிற்கு ஒப்படைக்கும் என்று ட்ரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில் செவ்வாயன்று தெரிவித்தார். இது குறித்து மேலும் குறிப்பிட்ட ட்ரம்ப், இந்த எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும், மேலும் அந்த பணம் அமெரிக்க ஜனாதிபதியாக என்னால் கட்டுப்படுத்தப்படும், இதனால் அது வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவது உறுதிபடுத்தப்படும் – என்று கூறினார். மேலும் எண்ணெய் கப்பல்களில் இருந்து எடுக்கப்பட்டு நேரடியாக அமெரிக்க துறைமுகங்களுக்கு அனுப்பப்படும் என்றும் ட்ரம்ப் கூறினார். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் பொறுப்பேற்றுள்ளார். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வெனிசுலா எண்ணெயின் அளவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க மசகு எண்ணெய் விலை 1.5% க்கும் அதிகமாக சரிந்தது. இதேவ‍ேளை, 2020 இல் வெனிசுலாவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்ததிலிருந்து கடந்த பத்தாண்டுகளில் வெனிசுலாவின் எண்ணெயை வாங்குபவர்களில் சீனா முன்னணியில் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1458627

அமெரிக்காவுக்கு 2 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெயை ஏற்றுமதி செய்யவுள்ள வெனிசுலா!

2 months ago

Trump.jpg?resize=750%2C375&ssl=1

அமெரிக்காவுக்கு 2 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெயை ஏற்றுமதி செய்யவுள்ள வெனிசுலா!

கராகஸ் மற்றும் வொஷிங்டன் இடையே 2 பில்லியன் டொலர் மதிப்புள்ள வெனிசுலா மசகு எண்ணெய் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (06) தெரிவித்தார்.

இது சீனாவிலிருந்து விநியோகங்களைத் திசைதிருப்பும் அதே வேளையில் வெனிசுலாவுக்கு எண்ணெய் உற்பத்தியில் ஆழமான குறைப்புகளைத் தவிர்க்க உதவும் ஒரு முக்கிய பேச்சுவார்த்தையாகும்.

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்குத் சந்தையை திறந்துவிடவும் இல்லையெனில் இராணுவத் தலையீட்டை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என்றும் ட்ரம்பின் கோரிக்கைக்கு வெனிசுலா அரசாங்கம் பதிலளிக்க ஆரம்பித்துள்ளது என்பதற்கான வலுவான அறிகுறியாக இந்த ஒப்பந்தம் உள்ளது. 

வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு “முழுமையான அணுகலை” வழங்க இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் விரும்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து ட்ரம்ப் விதித்த ஏற்றுமதி தடை காரணமாக வெனிசுலாவில் மில்லியன் கணக்கான பீப்பாய்கள் எண்ணெய் கப்பல்களிலும் சேமிப்பு தொட்டிகளிலும் நிரப்பப்பட்டுள்ளன. 

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் அமெரிக்க அழுத்தத்தின் ஒரு பகுதியாக இந்த முற்றுகை இருந்தது.

இது கடந்த வார இறுதியில் அமெரிக்கப் படைகள் அவரைக் கைப்பற்றுவதில் உச்சக்கட்டத்தை அடைந்தது. 

வெனிசுலாவின் உயர் அதிகாரிகள் மதுரோவின் கைதினை ஒரு கடத்தல் என்று கூறியுள்ளனர் – மேலும் அமெரிக்கா நாட்டின் பரந்த எண்ணெய் இருப்புக்களை திருட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் புதிய உடன்பாடு மூலமாக வெனிசுலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் வரை அனுமதிக்கப்பட்ட மசகு எண்ணெயை அமெரிக்காவிற்கு ஒப்படைக்கும் என்று ட்ரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில் செவ்வாயன்று தெரிவித்தார்.

இது குறித்து மேலும் குறிப்பிட்ட ட்ரம்ப், 

இந்த எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும், மேலும் அந்த பணம் அமெரிக்க ஜனாதிபதியாக என்னால் கட்டுப்படுத்தப்படும், இதனால் அது வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவது உறுதிபடுத்தப்படும் – என்று கூறினார்.

மேலும் எண்ணெய் கப்பல்களில் இருந்து எடுக்கப்பட்டு நேரடியாக அமெரிக்க துறைமுகங்களுக்கு அனுப்பப்படும் என்றும் ட்ரம்ப் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் பொறுப்பேற்றுள்ளார்.

Getty Images President Donald Trump confirms a US military operation in Venezuela during a press conference on 3 January

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வெனிசுலா எண்ணெயின் அளவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க மசகு எண்ணெய் விலை 1.5% க்கும் அதிகமாக சரிந்தது.

இதேவ‍ேளை, 2020 இல் வெனிசுலாவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்ததிலிருந்து கடந்த பத்தாண்டுகளில் வெனிசுலாவின் எண்ணெயை வாங்குபவர்களில் சீனா முன்னணியில் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1458627

மன்னார் தீவின் நுழைவாயிலில் ராமர், ஹனுமான் படங்களுடன் வைக்கப்பட்ட பேனர், ஏன் சர்ச்சை ஆனது?

2 months ago
மன்னாரில் அடிக்கடி இந்து கிறிஸ்தவ உரசல்கள் நடைபெறுகின்றன, முன்பும் வளைவு வைத்ததில் முரண்பாடு ஏற்பட்டதாக ஒரு ஞாபகம். போராட்ட காலத்தில் எந்தவித பாகுபாடின்றி இணைந்திருந்த இனம் இன்று இந்தியாவில் உள்ளதுபோல், கடத்திக்கொலை, அடித்து கொலை, வெட்டிக்கொலை போதை வியாபாரிகளிடை மோதல்,கஞ்சா பொதிகளுடன் கைது, இந்து கிறிஸ்தவ மோதல் என்று ஆரம்பித்திருக்கிறது. ஒன்றாக இருந்த ஒரு இனத்திற்குள் இந்த சிந்தனையை விதைத்ததில் மதமாற்ற அல்லுலோயா கோஷ்டிக்கு பெரும்பங்குண்டு. ஒரு இனத்திற்குள்ளேயே மோதிக்கொண்டு கிடக்க, மன்னாரின் பெரும்பகுதி இஸ்லாமியர்களிடம் பறிபோய் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு சில வருடங்களில் மன்னார் முழுமையாக பறிபோகும். நல்லாயிருந்து நாசமா போங்க.