2 months ago
Conclusion The Sea Tigers were more than just a rebel movement's naval wing; they were an example of how resourcefulness, self-control, and willpower can transform the battlefield—even at sea. From their improvised origins as the Sea Pigeons to a fleet that could compete with state navies, they personified the LTTE's determination to overcome insurmountable obstacles. Sea Tigers' strategies—whether they involved underwater sabotage, bomb-laden craft attacks, or lightning-fast attacks—had a profound impact on contemporary naval warfare. Even though Mullivaikkal's collapse in 2009 marked the end of the Sea Tigers, their legacy still captivates historians and analysts, serving as a reminder that nation-states are not the only ones capable of innovating in warfare. Note: This article did not include the count on the Sea Tigers' ocean-going fleet 💬 Author’s Note Thank you for reading to the end. I would appreciate hearing your thoughts and comments on this work in English. ✍️ Research and Analysis: Nane Chozhan 📷 Image Credits: All images belong to their respective owners. No copyright is claimed. *****
2 months ago
வங்கக்கடலில் உருவாகும் புயல் எங்கு நோக்கி நகரும்? வானிலை மையம் கணிப்பு பட மூலாதாரம், IMD website படக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருப்பதை காட்டும் வரைபடம். (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து) 25 அக்டோபர் 2025, 02:02 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்.26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் (அக்.27) காலை மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக உருவெடுக்கும். அதன்பிறகு அடுத்த 48 மணி நேரங்களில் வடமேற்காக ஆந்திர பிரதேச கடற்கரையை நோக்கி நகரலாம். எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர், சென்னை ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? பட மூலாதாரம், IMD website படக்குறிப்பு, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி & கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் அக்டோபர் 25 தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் லேசான மழை இருக்கலாம். அக்டோபர் 26 திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை இருக்கலாம். அக்டோபர் 27 திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை முதல் மிகவும் கனமான மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. வேலூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் கன மழை பெய்யலாம். மற்ற மாவட்டங்களில் லேசான மழை இருக்கலாம். அக்டோபர் 28 திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை இருக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மீனவர்களுக்கு எச்சரிக்கை தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலான பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஆகவே அக்டோபர் 25 முதல் 28 வரை அப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை எவ்வளவு மழை பெய்திருக்கிறது? அக்டோபர் 1 முதல் 22 வரையிலான காலகட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 296.8 மில்லிமீட்டர் மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அடுத்ததாக ராணிப்பேட்டை 292.8 மில்லிமீட்டர் மழை பெற்றிருக்கிறது. சென்னையில் 238.3 மில்லிமீட்டர் மழை இந்தக் காலகட்டத்தில் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நீலகிரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்சமாக கரூர் மாவட்டத்தில் 120.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் தமிழ்நாட்டை விடவும் அதிகம் மழை பதிவாகியிருக்கிறது. புதுச்சேரியில் 353.9 மில்லிமீட்டர் மழையும், காரைக்காலில் 312.1 மில்லிமீட்டர் மழையும் பெய்திருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crl2j3g171go
2 months ago
💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰❤🥰 Best Friends For Ever💐💐💐 #அலமாரி 25-10-25 உண்டோ குரங்கேற்றுக்கேற்றுக் கொள்ளாத கொம்பு...? அந்த குரங்கு மரத்திற்கு மரம் தாவித் திரிந்தது நான் உன்னை ஏற்கமாட்டேன் என ஒரு மரம் அதனை விரட்டியது. நீ என்னைப் புகழ்ந்து பாடினால் ஒழிய நான் உன்னை ஏற்க மாட்டேன் என்று தீர்க்கமாக கூறியது அந்த மரம். மரம் என்பது இங்கே சோழ நாட்டு மன்னன் . குரங்கென்பது கம்பன் கடவுளைப் பற்றிப் பாடிய இவ் வாயால் நரனைப் பாட மாட்டேன். என்றான் சோழ மன்னனிடம் கம்பன். " மன்னவனும் நீயோ....? வள நாடும் நின்னதுவோ...? உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன். என்னை விரைந் தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ....? உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு ...? என்று பாடி அவை அகன்றான் கம்பன். அதன் பிறகுதான் பாண்டிய நாட்டிற்கு பிரவேசம் ஆனான் கம்பன். அது கம்பன் வரலாறு. அது தலைமை ஆசிரியர் அறை. அந்த ஆசியை அதிகமாகப் பேசுகிறார். அவரிடம் சொல்லி வையுங்கள். எனகிறது நிர்வாகம். நிர்வாகம் கூறியதை த. ஆ அந்த ஆசிரியையிடம் சென்னார்.. அதற்கு அந்த ஆசிரியை , " பெரிதே உலகம் பேனுனர் பலரே...." எனக் கூறி அறையை விட்டு அகன்றார் அந்த ஆசிரியை.. சில நாட்களிலேயே அவருக்கு அரசு பள்ளியில் பணி கிடைத்து,. கம்பனையம் , அந்த ஆசிரியை யும் ஒர நேர் கோட்டில் வைத்துப் பார்த்து வியந்தேன். Voir la traduction
2 months ago
கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது. இதன்போது அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmh66cbsr017cqplp06gyyxes
2 months ago

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ளது.
இதன்போது அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளது.
https://adaderanatamil.lk/news/cmh66cbsr017cqplp06gyyxes
2 months ago
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் சங்காவை முந்தினார் விராட் கோலி 25 Oct, 2025 | 06:42 PM ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககராவை முந்தினார் இந்திய அணியின் விராட் கோலி. அவுஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் துடுப்படுத்தாடிய அவுஸ்திரேலியா 236 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 237 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. சுப்மன் கில் 24 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். முதல் இரண்டு போட்டிகளில் டக்அவுட் ஆன விராட் கோலி, முதல் பந்திலேயே ஓட்டத்தைப்பெற்று கையை காட்டினார். ரோகித் சர்மா 63 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இது அவருடைய 60ஆவது அரைசதம் ஆகும். மறுமுனையில் விராட் கோலி, 56 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 100 ஓட்டங்களைக் கடந்தது. இதன் மூலம் ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்து இணைப்பாட்டத்தை ஏற்படுத்தியது. விராட் கோலி 54 ஓட்டங்களை எட்டியபோது, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களைப்பெற்றவரகள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்திருந்த குமார் சங்கக்கராவை பின்னுக்கு தள்ளினார். சங்கக்கரா 14,234 ஓட்டங்களை எடுத்து 2ஆவது இடத்தில் இருந்தார். சச்சின் டெண்டுல்கர் 18426 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். https://www.virakesari.lk/article/228668
2 months ago
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் சங்காவை முந்தினார் விராட் கோலி
25 Oct, 2025 | 06:42 PM

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககராவை முந்தினார் இந்திய அணியின் விராட் கோலி.
அவுஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது.
முதலில் துடுப்படுத்தாடிய அவுஸ்திரேலியா 236 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 237 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
சுப்மன் கில் 24 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். முதல் இரண்டு போட்டிகளில் டக்அவுட் ஆன விராட் கோலி, முதல் பந்திலேயே ஓட்டத்தைப்பெற்று கையை காட்டினார்.
ரோகித் சர்மா 63 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இது அவருடைய 60ஆவது அரைசதம் ஆகும். மறுமுனையில் விராட் கோலி, 56 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.
இந்த ஜோடி 100 ஓட்டங்களைக் கடந்தது. இதன் மூலம் ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்து இணைப்பாட்டத்தை ஏற்படுத்தியது.
விராட் கோலி 54 ஓட்டங்களை எட்டியபோது, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களைப்பெற்றவரகள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்திருந்த குமார் சங்கக்கராவை பின்னுக்கு தள்ளினார்.
சங்கக்கரா 14,234 ஓட்டங்களை எடுத்து 2ஆவது இடத்தில் இருந்தார். சச்சின் டெண்டுல்கர் 18426 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
https://www.virakesari.lk/article/228668
2 months ago
வினா 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடத்தை அவுஸ்திரேலியா அணி பிடிக்கும் என 9 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 59 புள்ளிகள் 2) ஏராளன் - 54 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 54 புள்ளிகள் 4) ரசோதரன் - 54 புள்ளிகள் 5) புலவர் - 52 புள்ளிகள் 6) நியூபலன்ஸ் - 52 புள்ளிகள் 7) சுவி - 50 புள்ளிகள் 8) கிருபன் - 50 புள்ளிகள் 9) வீரப்பையன் - 49 புள்ளிகள் 10) கறுப்பி - 48 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 46 புள்ளிகள் 12) வாதவூரான் - 46 புள்ளிகள் 13) வசி - 44 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 44 புள்ளிகள் 15) வாத்தியார் - 42 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 27, 30, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 63).
2 months ago
27 ஆம் கேள்விக்கு கறுப்பி அவர்கள் அவுஸ்திரேலியாவைத்தான் தெரிவு செய்து இருக்கிறார் வினா 27) அவுஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா அணியை 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் சரியாக தெரிவு செய்து இருந்தார்கள். 1) அகஸ்தியன் - 57 புள்ளிகள் 2) ஏராளன் - 52 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 52 புள்ளிகள் 4) ரசோதரன் - 52 புள்ளிகள் 5) சுவி - 50 புள்ளிகள் 6) கிருபன் - 50 புள்ளிகள் 7) புலவர் - 50 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 50 புள்ளிகள் 9) வீரப்பையன் - 49 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 46 புள்ளிகள் 11) வாதவூரான் - 46 புள்ளிகள் 12) கறுப்பி - 46 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 44 புள்ளிகள் 14) வசி - 42 புள்ளிகள் 15) வாத்தியார் - 40 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 27, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 61).