2 months 1 week ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
2 months 1 week ago
சத்தான பனங்கிழங்கு அல்வா
2 months 1 week ago
மருமகன் பாவங்கள் - பரிதாபங்கள்..
2 months 1 week ago
தமிழ் மக்களின் இன விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி, சம்பந்தனின் இறுதிக்காலத்தில் தேர்தலுக்கான கட்சியாகச் சுருங்கிவிட்டது வேதனை. தற்போது எவருடன் சேர்ந்தாவது ஆட்சியமைத்தால் சரியென்கிற நிலைக்கு இக்கட்சியினர் இறங்கியிருப்பது சம்பந்தரின் காலத்தின்பின்னர் இக்கட்சி மேலும் மேலும் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகிறது என்பதையே காட்டுகிறது.
2 months 1 week ago
சம்பந்தர் அவர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகிய தமிழரசுக் கட்சியின் மிக முக்கிய தலைவர்களின் காலத்திலேயே அவர்களுடன் சேர்ந்து பயணித்தவர். இந்தியாவுடனான அக்கட்சியின் செல்வாக்கிற்கு ஒருகாலத்தில் தாமும் காரணமாக இருந்தவர். திருகோணமலையில் இடம்பெற்ற தமிழினச் சுத்திகரிப்பின்போது மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். ஆனால், அவரது வீரியமும், தமிழர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஓர்மமும் 2009 இற்குப் பின்னர் இல்லாது போயிற்று. வெற்று வாக்குறுதிகள், பசப்பலான நம்பிக்கைகள் என்பவற்றை அவ்வப்போது மக்களுக்குக் கொடுப்பது, தென்னிலங்கைக் கட்சிகளுடன் சமரசமான போக்கு, தென்னிலங்கைக் கட்சிகளுக்கான விட்டுக் கொடுப்புக்கள், போர்க்குற்றவாளிக்கான ஆதரவு, தமிழ் மக்களை முன்னிறுத்தி அரசியல் செய்யாது இந்திய இலங்கை அரசுகளிடம் இரைஞ்சியபடி அரசியல் செய்தமை என்று அவர் தனது இறுதிக் காலங்களில் செய்தவை அவரைத் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி விட்டது. எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. அதற்காக அவர் தமிழினத்திற்குத் துரோகம் இழைத்தவர் என்றும் நினைக்கவில்லை.
2 months 1 week ago
2023 இல் ருமேனியா 5 பில்லியன் பெறுமதியான காய்கறிகளை ஐரோபிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது,நெடுஞ்சாலைகளின் நோக்க்கம் அடிப்படையில் வர்த்தகநலனடிபடையானது, மற்றும் நிறுவனங்களின் முதலீடு இவை போன்றகாரணிகளில் ஆர்வம் காட்டும் நிலை பன்னாட்டு நிறுவனங்களின் தேவைகள் கணக்கிலெடுக்கப்படும் அதே நேரம் சிறிய விவசாயிகள் அவர்கள் தொழிலில் இருந்து விரட்டி அடிக்கப்படுகிறார்கள். ருமேனியாவின் தாராளமய பொருளாதார கொள்கை காலத்தினை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன், இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இனைந்த பின்னரான காலகட்டத்தில் உள்நாட்டு மக்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் எனவே குறிப்பிட்டுள்ளேன், அடிப்படையில் நாட்டின் வளஙகல் பிறநாட்டு பெரும் நிறுவனங்களின் கைகளில் உள்ளது என்பதை குறிப்பிட்டு தற்போதய உலகில் எதற்காக போர் நிகழ்கிறது என்பதனை சூசகமாக குறிப்பிடவே அந்த உதாரணம். இரண்டாம் உலக யுத்ததின் பின்னரான இந்த சிக்கல் நிலைக்கு மேற்குதான் காரணம் (மேற்கின் ஆட்சியினை தமது தேவைக்கு ப்யன்படுத்தும் பெரும் நிதிநிறுவனங்கள்) இடம், காரணிகள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் அடிப்படை பிரச்சினை அதிகாரங்களில் உள்ளவர்களின் தவறான முடிவு.
2 months 1 week ago
யாழில் கரையோரக் காவலில் புலிவீரர் 1987/10<
2 months 1 week ago
மிகவும் நடுநிலையாக எழுதும் நீங்களே இப்படி எழுதலாமா? இஸ்ரேல் பலஸ்த்தீனர்கள் மீது நடத்துவது அப்பட்டமான இனவழிப்பு என்பதை இங்கே மறுத்தவர்கள் யார்? பலஸ்தீனர்களுடனான இஸ்ரேலின் போரில் அதனை ஆதரித்தவர்கள் யார்? ஆனால், ஈரானுடனான இஸ்ரேலின் போரில் இஸ்ரேலினை நான் உட்பட இன்னும் சிலர் இங்கே ஆதரித்தது உண்மைதான். ஏனென்றால், மத அடிப்படைவாதிகளின் கைகளில் நாசகார ஆயுதங்கள் போய்விடக்கூடாதென்பதற்காக. மதத்திற்காக எந்தளவு தூரத்திற்கும் ஈவு இரக்கமின்றி இவர்கள் செயற்படுவார்கள் என்பதற்கான சான்றுகளை உலக வரலாற்றில் இருந்து நாம் பார்த்தே வருகிறோம், அதனால்த்தான் அந்த நிலைப்பாட்டினை எடுக்கவேண்டி இருந்தது. ஆனால் நீங்கள் இவை இரண்டையும் ஒன்றாக முடிச்சுப்போட்டு விட்டிருக்கிறீர்களே? அது ஏன்? உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றே நினைத்து இருந்தேன், ஆனால் உங்களின் அண்மைய கருத்துக்கள் மேற்கிற்கு எதிராக இருக்கின்றன. அப்படியானால் நீங்கள் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பை ஆதரிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? ஏனென்றால், ஈரானுடனான போரில் இஸ்ரேலை சிலர் ஆதரித்தமைக்காக அவர்களை பலஸ்த்தீனப் படுகொலையினை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் கருதும்போது, நீங்கள் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பைச் சரியென்று நினைப்பதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.
2 months 1 week ago
அவர்கள் CAA சட்டத்தை கொண்டு வரவில்லை. அப்போ வெளிநாட்டில் இருந்து வந்த அனைவருக்கும் ஒரே விதி. இப்போ அப்படி அல்லவே?
2 months 1 week ago
திருஞானசம்பந்தர் கி பி 6ம் நூற்றாண்டு.
2 months 1 week ago
25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது. நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்து கொண்டார்கள். அதில் ஒரு தம்பதியினரில்... மனைவி ''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்ற படி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார். கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள் அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும், விட்டு கொடுத்தலும் நிறைந்திருந்தது. அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100 எல்லோருக்குமே தெரிந்து விட்டது அவர்கள் தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று. எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்த பின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும் மிகக் குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள். பூஜ்ஜியம் வாங்கியது வேறு யாரும் இல்லை வரும் போதே சண்டை போட்டுக் கொண்டு வந்தார்களே அவர்கள் தான். இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள் ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றார்கள். எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள் திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு 35 வருடங்கள் என்று சொல்ல எல்லோரும் சிரித்து விட்டார்கள். 35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள் அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்கள். ஆனால் போட்டியின் நடுவர் இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள் தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்! காரணம்... எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது எந்த ஒரு மன ஒற்றுமையும், புரிதலும் இல்லா விட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இது தான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார். இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக் கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். எந்நிலையும் தன் கணவனை/மனைவியை விட்டும் பிரியாத இதுவும் ஒரு வகையான அன்பு தான். படித்ததில் பகிர்ந்தது
2 months 1 week ago
யார் இந்த சம்பந்தன்?கிமு 3 ஆம் நூற்றாண்டில்வாழ்ந்த திருஞானசம்பந்தன் தமிழுக்கு ஆற்றியதொண்டுக்காக அந்த சம்பந்தரை யாரும் மறக்கவில்லை.ஆனால் இவரைக்கட்சிக்கார்களே மறந்து விட்டார்கள். இதுதான் துரோகத்தின் பரிசு
2 months 1 week ago
2 months 1 week ago
ஏன் இதற்கு முதல் காங்கிரசும் முண்டு கொடுத்த திமுக வும் தானே ஆட்சியில் இருந்தார்கள்.
2 months 1 week ago
இந்தப் பதில் உங்கள் ஒற்றைப் பரிமாணப் பார்வையாகத் தான் தெரிகிறது. 33 பில்லியன் ரூமேனியா செலவழித்து ஒன்றியத்தில் இணைந்தால் உடனே 100 பில்லியன் வருமானம் அடுத்த 5 ஆண்டுகளில் கிடைத்து விடும் என்று ரூமேனியார்களே நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், தங்கள் வாழ்க்கைத் தரம் ஐரோப்பிய தரத்திற்கு உயரும் என்று நம்பியதால் இணைவை ஆதரித்திருப்பார்கள். முதலில், அந்த 33 பில்லியன்களை ரூமேனிய செலவழிக்கக் காரணம், ரூமேனியாவில் (அருகில் இருக்கும் பல்கேரியாவிலும் கூட) இருக்கும் ஊழல், சட்ட ஆட்சி சீர்குலைவு என்பன தான் காரணமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மன்னர்கள் ஆட்சியில் இருந்த ரூமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய தேசங்கள், சோவியத் ரஷ்யாவினால் பலவந்தமாக இணைக்கப் பட்ட பின்னர் அங்கே செல்வம் கொழிக்கவில்லை. மாறாக தனியார் உடைமைகள் பறிக்கப் பட்டு, மக்களும் ஊக்கம், உழைப்புக் குறைந்து பொருளாதாரம் தேங்கிய நிலை தான் உருவானது. அந்தப் பின்னணியில் தான் ரூமேனியர்களும், பல்கேரியர்களும் ஊழல், இலவசங்களை எதிர்பார்க்கும் மனப் பாங்கு என்பவற்றைப் பெற்றுக் கொண்டார்கள். சீரழித்ததே ரஷ்யாவின் முன்னோடி தேசமான சோவியத் ஒன்றியமாக இருக்கும் போது, மேற்கையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குற்றம் சொல்வதற்கு காரணங்கள் இல்லை!
2 months 1 week ago
மிகவும் அரிதாக, எமக்கு ஆதரவாக எழும் ஒரு குரலை - அதுவும் இந்தியாவில் இருந்து எழும் குரலை, அவரின் முன்னாள் தடுமாற்றங்களை வைத்து நாமே வாயடைக்கிறோம் 🤦♂️. அதுவும் ஆதரவு எங்கே இருந்து வந்தாலும் அதை வரவேற்று, ஒருங்கிணைக்க வேண்டிய செம்மணி போன்ற ஒரு விடயத்தில். இதற்கு ஒரே காரணம் சத்யராஜ் மகள் இப்போ திமுக என்பதும், அவரின் தற்போதைய திமுக ஆதரவு நிலைப்பாடும் மட்டுமே. இங்கே பலருக்கு ஈழத்தமிழரின் உரிமையை வெல்வதை விட, திமுகவை, அது சார்பானவர்களை எதிர்த்து அதன் மூலம் இறந்து போன கருணாநிதியை வன்மம் தீர்ப்பது மட்டுமே பிரதானமானது. முன்பே சொல்லி உள்ளேன் - சிங்களவர் கூர்ப்பில் முன்னேறிய இனம், ஈழ தமிழர் கூர்ப்ப்பில் பிந்தங்கிய இனம். அந்த கருதுகோளுக்கு இது இன்னொரு உதாரணம்.
2 months 1 week ago
சேர்ந்து சிரிப்போம்
2 months 1 week ago
வசி தானும் நல்லவன், நியாயவான் என காட்ட வேண்டாமா🤣. அப்படியாயின் இப்படி இல்லாத வில்லன்களை கற்பனையில் உருவாக்கி கம்பு சுத்தித்தான் ஆகவேண்டும். #அற-காட்டாப்பு
2 months 1 week ago
சீனாவில் ஒரு பிரபலர் பொதுவெளியில் இருந்து குறிப்பிட்ட காலம் மாயமானார் எனில், ஆட்டம் ஓவர் என்பதே பொதுவான வரலாறு. ஜக் மா முதல் முன்னைநாள் பிரதமர் என பலரின் வரலாறு இதுவே. ஆனால் ஷி முன்னோர்களை விட அதிகாரத்தை தன் வசம் குவித்து வைத்துள்ளார். அவ்வளவு இலகுவில் விலக்க முடியாது. பார்ப்போம்.
2 months 1 week ago
இப்படி தடுப்பது மத்திய பாஜக அரசு. அதனோடு கூட்டணியில் இருக்கும் எடப்பாடி, அவரோடு சித்தப்பா முறை கொண்டாடும் சீமானை நோக்கி எழுப்ப பட வேண்டிய கேள்வி இது.