Aggregator

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

1 month 4 weeks ago
இப்போதும் வந்திருக்க மாட்டீர்கள். ஊசி போட்டுக் கொண்டு இருந்திருப்பீர்கள். இதுவே கடேசி பயணம் என்று பிள்ளைகளும் சொல்லியிருப்பினம்.

'டி.எஸ்.பி கைது' - காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியின் உத்தரவு சர்ச்சையானது ஏன்?

1 month 4 weeks ago

டிஎஸ்பி சங்கர் கணேஷ்

UGC டிஎஸ்பி சங்கர் கணேஷ்

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 10 செப்டெம்பர் 2025, 13:17 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை கைது செய்வதற்கு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, செவ்வாய்க்கிழமைன்று (செப்டெம்பர் 9) சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

மாவட்ட நீதிபதிக்கும் காவலர் ஒருவருக்கும் இடையேயான தனிப்பட்ட தகராறு காரணமாக, டி.எஸ்.பியை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

என்ன பிரச்னை?

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள பூசிவாக்கத்தில் பேக்கரி கடையை சிவக்குமார் என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கடந்த ஜூலை 25 ஆம் தேதி வந்துள்ளார்.

அப்போது பேக்கரியில் வாங்கிச் சென்ற பொருள் தொடர்பாக சிவக்குமாரிடம், முருகன் தரப்பினர் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்தநிலையில், சிவக்குமாரின் மருமகனும் காவலருமான லோகேஸ்வரன் ரவி உள்பட நான்கு பேர், தன் கணவரைத் தாக்கியதாக வாலாஜாபாத் காவல்நிலையத்தில் முருகனின் மனைவி பார்வதி புகார் மனுவை அளித்தார்.

அதேபோல், முருகன் மீது சிவக்குமார் புகார் அளித்தார். இரண்டு மனுவையும் ஏற்றதாக சி.எஸ்.ஆர் (Community Service Register) மட்டும் போலீஸார் வழங்கியுள்ளனர்.

பிறகு இரு தரப்பும் சமாதானமாக செல்வதாக முடிவெடுத்ததால் சி.எஸ்.ஆர் மனு முடித்து வைக்கப்பட்டதாக, செப்டெம்பர் 9 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதுதொடர்பாக செப்டெம்பர் 4 அன்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கினார்.

'முருகன் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவின் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நான்கு பேரையும் ஏன் கைது செய்யவில்லை?' எனக் கேள்வி எழுப்பினார்.

டி.எஸ்.பி கைதானபோது என்ன நடந்தது?

டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது

UGC

கடந்த 8 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் ஆஜரானார்.

அப்போது, காவலர் லோகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்காததைக் குறிப்பிட்ட நீதிபதி, டி.எஸ்.பி சங்கர் கணேஷை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கு உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று டி.எஸ்.பியை கைது செய்வதற்கு காவலர்கள் முன்வராததால், தனது காரிலேயே நீதிமன்ற வளாகத்தில் உள்ள கிளைச் சிறைக்கு அழைத்துச் செல்லுமாறு போலீஸாருக்கு நீதிபதி ப.உ.செம்மல் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, நீதிபதி காரிலேயே கிளைச் சிறைக்கு சங்கர் கணேஷ் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கிருந்த காவல் வாகனத்தில் அவர் ஏறிய சில நொடிகளில் வாகனம் விரைந்து சென்றதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

சுமார் 10 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிளைச் சிறையில் டி.எஸ்.பி சங்கர் கணேஷ் ஆஜரானார். அவரைக் கிளைச் சிறையில் காவலர்கள் அடைத்தனர்.

டி.எஸ்.பி கைது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகம், "முருகன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வழக்கில் தனிப்பட்ட வெறுப்பு உள்ளது. டி.எஸ்.பியை கைது செய்தது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தீர்வைப் பெறுவோம்" எனக் கூறினார்.

'நீதிபதியுடன் தனிப்பட்ட தகராறு'

மாவட்ட நீதிபதி ப.உ.செம்மலுக்கும் அவரது தனிப் பாதுகாப்பு (PSO) அதிகாரியாக பணிபுரிந்த காவலர் லோகேஸ்வரனுக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாகவே அவர் பேக்கரி வழக்கை தாமாக முன்வந்து விசாரித்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, டி.எஸ்.பி சங்கர் கணேஷை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு ப.உ.செம்மல் உத்தரவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கின் விசாரணையில் கூடுதல் அரசு வழக்கறிஞர் (APP) கே.எம்.டி முகிலன் வாதிடும்போது, "தனக்கு எதிரான சில அநாமதேய புகார்களை காவலர் லோகேஸ்வரன் அனுப்பி வருவதாக மாவட்ட நீதிபதி சந்தேகப்பட்டுள்ளார். காவலரின் மாமனாருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை நீதிபதி அறிந்து கொண்டார்" எனக் குறிப்பிட்டார்.

''இந்த வழக்கில் வாலாஜாபாத் காவல்நிலைய ஆய்வாளரை மாவட்ட நீதிமன்றத்துக்கு வரவழைத்த ப.உ.செம்மல், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு வாய்மொழியாக கூறியுள்ளார்''

அதன்பேரில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞர் கே.எம்.டி முகிலன் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

'நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்ட டி.எஸ்.பி'

செப்டெம்பர் 4 அன்று, பாதிக்கப்பட்ட நபரை குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்கள் அச்சுறுத்துவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறி அவர்களை காஞ்சிபுரம் மாவட்டத்தை விட்டு விலகி இருக்குமாறு மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவிட்டார்.

"எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 10ன்கீழ் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் சூழ்நிலைகள் மற்றும் உண்மைகளுக்கு இந்தப் பிரிவு பொருந்தாது" என சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் தெரிவித்தார்.

செப்டெம்பர் 8 அன்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தை மேற்கோள் காட்டிய அரசு கூடுதல் வழக்கறிஞர், "அப்போது, குற்றம் சுமத்தப்பட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை என டி.எஸ்.பியிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி ப.உ.செம்மல், காலை முதல் மாலை வரை நீதிமன்ற வளாகத்தில் அவரை அமரவைத்தார்" எனக் கூறினார்.

இந்த வழக்கில் எந்த விசாரணையையும் நடத்தாமல், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4(1)ன்படி (கடமையை புறக்கணித்ததற்கான தண்டனை) கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பித்ததாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை மேற்பார்வையிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், டி.எஸ்.பி சங்கர் கணேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை ரத்து செய்தார்.

மாவட்ட நீதிபதி மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும் முழுமையான விசாரணையை நடத்தி வரும் 23 ஆம் தேதிக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு (விஜிலென்ஸ்) உத்தரவிட்டார்.

வழக்கு தொடர்பாக, காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகத்திடம் பிபிசி தமிழ் பேசியது. "தற்போது அலுவல்ரீதியான கூட்டத்தில் இருப்பதால் பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

'வாய்ப்பளிக்காமல் நடவடிக்கை' - முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன்

மாவட்ட நீதிபதியின் உத்தரவு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமனிடம் பிபிசி தமிழ் பேசியது.

" எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் 10 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கு பதில் அளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இந்த வழக்கில் அப்படிப்பட்ட நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை" எனக் கூறினார்.

"எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4ன்படி, புகார் வந்தால் அதன்பேரில் உடனே நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல. கடமையைச் செய்வதில் இருந்து விலகியிருந்தால் துறைரீதியான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்" என்கிறார், ஹரி பரந்தாமன்.

ஹரிபரந்தாமன்

Hariparandaman எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4ன்படி, புகார் வந்தால் அதன்பேரில் உடனே நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல என்கிறார், ஹரிபரந்தாமன்

'நீதிபதியின் உத்தரவு, உச்சகட்டமானது'

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் வெளியேற உத்தரவு (Externment order) பிறப்பித்ததை சுட்டிக் காட்டிய அரி பரந்தாமன், "சாதி ஆணவப் படுகொலைகளின்போது, குற்றம் சுமத்தப்படும் நபர்களை வெளியேற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அப்போதுகூட, இப்படிப்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதில்லை" என்கிறார்.

"காவல்துறை தரப்பில், 'தொடர்புடைய நபர் ஊரில் இருந்தால் கலவரம் நடக்கும்' என அறிக்கை கொடுக்கும்போது தான் வெளியேற்ற உத்தரவை பிறப்பிக்க முடியும். பேக்கரி தகராறு என்பது தனிப்பட்ட விவகாரம். அதற்கு இப்படியொரு உத்தரவு என்பது உச்சகட்டமானது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"இதன் விளைவுகளை மாவட்ட நீதிபதி எதிர்கொள்ள வேண்டியது வரலாம்" எனக் கூறும் அரி பரந்தாமன், "மாவட்ட நீதிபதி மீது உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிப்பார். அதில் முழு விவரங்களும் தெரியவரும்" எனவும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c98dy3q2vyjo

'டி.எஸ்.பி கைது' - காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியின் உத்தரவு சர்ச்சையானது ஏன்?

1 month 4 weeks ago
UGC டிஎஸ்பி சங்கர் கணேஷ் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 10 செப்டெம்பர் 2025, 13:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை கைது செய்வதற்கு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, செவ்வாய்க்கிழமைன்று (செப்டெம்பர் 9) சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மாவட்ட நீதிபதிக்கும் காவலர் ஒருவருக்கும் இடையேயான தனிப்பட்ட தகராறு காரணமாக, டி.எஸ்.பியை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். என்ன பிரச்னை? காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள பூசிவாக்கத்தில் பேக்கரி கடையை சிவக்குமார் என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கடந்த ஜூலை 25 ஆம் தேதி வந்துள்ளார். அப்போது பேக்கரியில் வாங்கிச் சென்ற பொருள் தொடர்பாக சிவக்குமாரிடம், முருகன் தரப்பினர் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்தநிலையில், சிவக்குமாரின் மருமகனும் காவலருமான லோகேஸ்வரன் ரவி உள்பட நான்கு பேர், தன் கணவரைத் தாக்கியதாக வாலாஜாபாத் காவல்நிலையத்தில் முருகனின் மனைவி பார்வதி புகார் மனுவை அளித்தார். அதேபோல், முருகன் மீது சிவக்குமார் புகார் அளித்தார். இரண்டு மனுவையும் ஏற்றதாக சி.எஸ்.ஆர் (Community Service Register) மட்டும் போலீஸார் வழங்கியுள்ளனர். பிறகு இரு தரப்பும் சமாதானமாக செல்வதாக முடிவெடுத்ததால் சி.எஸ்.ஆர் மனு முடித்து வைக்கப்பட்டதாக, செப்டெம்பர் 9 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக செப்டெம்பர் 4 அன்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கினார். 'முருகன் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவின் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நான்கு பேரையும் ஏன் கைது செய்யவில்லை?' எனக் கேள்வி எழுப்பினார். டி.எஸ்.பி கைதானபோது என்ன நடந்தது? UGC கடந்த 8 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் ஆஜரானார். அப்போது, காவலர் லோகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்காததைக் குறிப்பிட்ட நீதிபதி, டி.எஸ்.பி சங்கர் கணேஷை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கு உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று டி.எஸ்.பியை கைது செய்வதற்கு காவலர்கள் முன்வராததால், தனது காரிலேயே நீதிமன்ற வளாகத்தில் உள்ள கிளைச் சிறைக்கு அழைத்துச் செல்லுமாறு போலீஸாருக்கு நீதிபதி ப.உ.செம்மல் அறிவுறுத்தினார். இதையடுத்து, நீதிபதி காரிலேயே கிளைச் சிறைக்கு சங்கர் கணேஷ் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கிருந்த காவல் வாகனத்தில் அவர் ஏறிய சில நொடிகளில் வாகனம் விரைந்து சென்றதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது. சுமார் 10 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிளைச் சிறையில் டி.எஸ்.பி சங்கர் கணேஷ் ஆஜரானார். அவரைக் கிளைச் சிறையில் காவலர்கள் அடைத்தனர். டி.எஸ்.பி கைது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகம், "முருகன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வழக்கில் தனிப்பட்ட வெறுப்பு உள்ளது. டி.எஸ்.பியை கைது செய்தது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தீர்வைப் பெறுவோம்" எனக் கூறினார். 'நீதிபதியுடன் தனிப்பட்ட தகராறு' மாவட்ட நீதிபதி ப.உ.செம்மலுக்கும் அவரது தனிப் பாதுகாப்பு (PSO) அதிகாரியாக பணிபுரிந்த காவலர் லோகேஸ்வரனுக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாகவே அவர் பேக்கரி வழக்கை தாமாக முன்வந்து விசாரித்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, டி.எஸ்.பி சங்கர் கணேஷை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு ப.உ.செம்மல் உத்தரவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் விசாரணையில் கூடுதல் அரசு வழக்கறிஞர் (APP) கே.எம்.டி முகிலன் வாதிடும்போது, "தனக்கு எதிரான சில அநாமதேய புகார்களை காவலர் லோகேஸ்வரன் அனுப்பி வருவதாக மாவட்ட நீதிபதி சந்தேகப்பட்டுள்ளார். காவலரின் மாமனாருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை நீதிபதி அறிந்து கொண்டார்" எனக் குறிப்பிட்டார். ''இந்த வழக்கில் வாலாஜாபாத் காவல்நிலைய ஆய்வாளரை மாவட்ட நீதிமன்றத்துக்கு வரவழைத்த ப.உ.செம்மல், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு வாய்மொழியாக கூறியுள்ளார்'' அதன்பேரில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞர் கே.எம்.டி முகிலன் தெரிவித்தார். 'நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்ட டி.எஸ்.பி' செப்டெம்பர் 4 அன்று, பாதிக்கப்பட்ட நபரை குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்கள் அச்சுறுத்துவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறி அவர்களை காஞ்சிபுரம் மாவட்டத்தை விட்டு விலகி இருக்குமாறு மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவிட்டார். "எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 10ன்கீழ் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் சூழ்நிலைகள் மற்றும் உண்மைகளுக்கு இந்தப் பிரிவு பொருந்தாது" என சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் தெரிவித்தார். செப்டெம்பர் 8 அன்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தை மேற்கோள் காட்டிய அரசு கூடுதல் வழக்கறிஞர், "அப்போது, குற்றம் சுமத்தப்பட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை என டி.எஸ்.பியிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி ப.உ.செம்மல், காலை முதல் மாலை வரை நீதிமன்ற வளாகத்தில் அவரை அமரவைத்தார்" எனக் கூறினார். இந்த வழக்கில் எந்த விசாரணையையும் நடத்தாமல், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4(1)ன்படி (கடமையை புறக்கணித்ததற்கான தண்டனை) கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பித்ததாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை மேற்பார்வையிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், டி.எஸ்.பி சங்கர் கணேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை ரத்து செய்தார். மாவட்ட நீதிபதி மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும் முழுமையான விசாரணையை நடத்தி வரும் 23 ஆம் தேதிக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு (விஜிலென்ஸ்) உத்தரவிட்டார். வழக்கு தொடர்பாக, காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகத்திடம் பிபிசி தமிழ் பேசியது. "தற்போது அலுவல்ரீதியான கூட்டத்தில் இருப்பதால் பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் அவர் பதில் அளித்தார். 'வாய்ப்பளிக்காமல் நடவடிக்கை' - முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் மாவட்ட நீதிபதியின் உத்தரவு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமனிடம் பிபிசி தமிழ் பேசியது. " எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் 10 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கு பதில் அளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இந்த வழக்கில் அப்படிப்பட்ட நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை" எனக் கூறினார். "எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4ன்படி, புகார் வந்தால் அதன்பேரில் உடனே நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல. கடமையைச் செய்வதில் இருந்து விலகியிருந்தால் துறைரீதியான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்" என்கிறார், ஹரி பரந்தாமன். Hariparandaman எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4ன்படி, புகார் வந்தால் அதன்பேரில் உடனே நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல என்கிறார், ஹரிபரந்தாமன் 'நீதிபதியின் உத்தரவு, உச்சகட்டமானது' காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் வெளியேற உத்தரவு (Externment order) பிறப்பித்ததை சுட்டிக் காட்டிய அரி பரந்தாமன், "சாதி ஆணவப் படுகொலைகளின்போது, குற்றம் சுமத்தப்படும் நபர்களை வெளியேற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அப்போதுகூட, இப்படிப்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதில்லை" என்கிறார். "காவல்துறை தரப்பில், 'தொடர்புடைய நபர் ஊரில் இருந்தால் கலவரம் நடக்கும்' என அறிக்கை கொடுக்கும்போது தான் வெளியேற்ற உத்தரவை பிறப்பிக்க முடியும். பேக்கரி தகராறு என்பது தனிப்பட்ட விவகாரம். அதற்கு இப்படியொரு உத்தரவு என்பது உச்சகட்டமானது" எனவும் அவர் குறிப்பிட்டார். "இதன் விளைவுகளை மாவட்ட நீதிபதி எதிர்கொள்ள வேண்டியது வரலாம்" எனக் கூறும் அரி பரந்தாமன், "மாவட்ட நீதிபதி மீது உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிப்பார். அதில் முழு விவரங்களும் தெரியவரும்" எனவும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98dy3q2vyjo

பிரித்தானியா, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் இணைந்து ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள புதிய பிரேரணை

1 month 4 weeks ago
Published By: Priyatharshan 10 Sep, 2025 | 08:34 AM பிரித்தானிய, கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைவு (A/HRC/60/L.1) ஒன்றை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைபை சமர்ப்பித்துள்ளன. சமர்ப்பிக்கப்ட்டுள்ள தீர்மான வரைபில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 2024 செப்டம்பர், நவம்பர், 2025 மே மாதங்களில் நடைபெற்ற ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களைத் இந்த தீர்மானம் வரவேற்றுள்ளது. அத்துடன், ஊழல் மற்றும் பொருளாதார முறைகேடுகளுக்குப் பொறுப்புக்கூற அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அது அங்கீகரித்துள்ளது. அனைத்துத் தரப்பினராலும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உட்பட, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு முழுமையான பொறுப்புக்கூறல் அவசியம் என்று தீர்மானம் வலியுறுத்துகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைத் தீர்மானம் கவனத்தில் கொள்கிறது. எனினும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இச்சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதை அது கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. எனவே, இச்சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தி, அதனை நீக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்துகிறது. இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பான பல வழக்கு விசாரணைகள் தீர்க்கப்படாமல் இருப்பது குறித்து தீர்மானத்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளை சர்வதேச தரங்களுக்கு இணங்க அகழ்வதற்குத் தேவையான நிதி, மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப வளங்களைப் பெறுவதற்கு சர்வதேச உதவியை நாட வேண்டும் என்றும் இலங்கை அரசை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்த்துப் போராடுவதன் மூலம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தீர்மானம் வலியுறுத்துகிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான முக்கிய வழக்குகளில் மீண்டும் விசாரணைகளைத் தொடங்குவதையும், சுதந்திரமான சட்டவாளர் அலுவலகத்தை நிறுவுவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைத் தீர்மானம் வரவேற்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் செயல்பாடுகளை மேலும் நீட்டிக்கவும், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்து வாய்மொழி மற்றும் எழுத்துபூர்வ அறிக்கைகளை எதிர்கால அமர்வுகளில் சமர்ப்பிக்கவும் இந்தத் தீர்மானம் கோருகிறது. https://www.virakesari.lk/article/224686

பிரித்தானியா, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் இணைந்து ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள புதிய பிரேரணை

1 month 4 weeks ago

Published By: Priyatharshan

10 Sep, 2025 | 08:34 AM

image

பிரித்தானிய, கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைவு (A/HRC/60/L.1) ஒன்றை சமர்ப்பித்துள்ளன. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து  இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைபை சமர்ப்பித்துள்ளன.

சமர்ப்பிக்கப்ட்டுள்ள தீர்மான வரைபில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

2024 செப்டம்பர், நவம்பர், 2025 மே மாதங்களில் நடைபெற்ற ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களைத் இந்த தீர்மானம் வரவேற்றுள்ளது.

அத்துடன், ஊழல் மற்றும் பொருளாதார முறைகேடுகளுக்குப் பொறுப்புக்கூற அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அது அங்கீகரித்துள்ளது.

அனைத்துத் தரப்பினராலும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உட்பட, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு முழுமையான பொறுப்புக்கூறல் அவசியம் என்று தீர்மானம் வலியுறுத்துகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைத் தீர்மானம் கவனத்தில் கொள்கிறது. எனினும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இச்சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதை அது கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. 

எனவே, இச்சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தி, அதனை நீக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்துகிறது.

இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பான பல வழக்கு விசாரணைகள் தீர்க்கப்படாமல் இருப்பது குறித்து தீர்மானத்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளை சர்வதேச தரங்களுக்கு இணங்க அகழ்வதற்குத் தேவையான நிதி, மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப வளங்களைப் பெறுவதற்கு சர்வதேச உதவியை நாட வேண்டும் என்றும் இலங்கை அரசை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்த்துப் போராடுவதன் மூலம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தீர்மானம் வலியுறுத்துகிறது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான முக்கிய வழக்குகளில் மீண்டும் விசாரணைகளைத் தொடங்குவதையும், சுதந்திரமான சட்டவாளர் அலுவலகத்தை நிறுவுவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைத் தீர்மானம் வரவேற்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் செயல்பாடுகளை மேலும் நீட்டிக்கவும், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்து வாய்மொழி மற்றும் எழுத்துபூர்வ அறிக்கைகளை எதிர்கால அமர்வுகளில் சமர்ப்பிக்கவும் இந்தத் தீர்மானம் கோருகிறது. 

https://www.virakesari.lk/article/224686

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 4 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 25 B பகுதி: 25 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'எல்லாளனுக்கு முந்திய மன்னர்கள், எல்லாளன் உட்பட, கற்பனைப் கதாபாத்திரங்களா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] ரொபெர்ட் நொக்ஸ் கண்டி அரசனால் சிறை பிடிக்கப் பட்டான். எனினும் பல ஆண்டுகளின் பின், சிறையில் இருந்து தப்பி, காடுகளையும் மலைகளையும் கடந்து அனுராத புரத்தை வந்தடைந்தான். அவன் சிறையில் இருந்த போது, சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆகவே அநுராத புரம் வந்த ரொபெர்ட் நொக்ஸ், அங்குள்ள மக்கள் சிங்கள மக்கள் என எண்ணி, சிங்கள மொழியில் பேச முற்பட்டான். ஆனால் அவர்களுக்கு அந்த மொழி விளங்க வில்லை. அதன் பின்பு தான் அவனுக்கு தெரிய வந்தது இவர்கள் தமிழர்கள் என்று எழுதி உள்ளார். ["To Anarodgburro therefore we came, called also Neur Waug.* Which is not so much a particular single Town, as a Territory. It is a vast great Plain, the like I never saw in all that Island: in the midst where∣of is a Lake, which may be a mile over, not natural, but made by art, as other Ponds in the Country, to serve them to water their Corn Grounds. This Plain is encompassed round with Woods, and small Towns among them on every side, inhabited by Malabars, a distinct People from the Chingulayes. But these Towns we could not see till we came in among them. Being come out thro the Woods into this Plain, we stood looking and staring round about us, but knew not where nor which way to go. At length we heard a Cock crow, which was a sure sign to us that there was a Town hard by; into which we were resolved to enter. For standing thus amazed, was the ready way to be taken up for suspitious persons, especially because White men ne∣ver come down so low. Being entred into this Town, we sate our selves under a Tree,* and proclaimed our Wares, for we feared to rush into their Yards, as we used to do in other places, lest we should scare them. The People stood amazed as soon as they saw us, being originally Malabars, tho Subjects of Cande. Nor could they understand the Chingulay Lan∣guage in which we spake to them. And we stood looking one upon another until there came one that could speak the Chingulay Tongue: "[ "The History of Ceylon from the Earliest Period TO THE YEAR MDCCCXV " / AUTHOR'S ESCAPE. PART IV /page 322-323]. அது மட்டும் அல்ல, போர்த்துகீசியர்கள் இலங்கையில் 1505 ஆம் ஆண்டு தரையிறங்கிய காலத்திலும் கூட தமிழ் இலங்கையில் ஒரு பிரதான மொழியாக இருந்தது என்பதற்கு பல சான்றுகள் வரலாற்று ரீதியாக இருக்கின்றன. உதாரணமாக, கோட்டை அரசன் ஏழாம் புவனேகபாகு [the king of Kotte, Bhuvanehabahu VII / 1468 – 29 December 1550] போர்த்துகீசியர்களுடன் தமிழில் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டார். மேலும் கோட்டை அரசாட்சியில் நீதிமன்ற மொழியாக அன்று தமிழும் இருந்துள்ளது.[Aiyangar, S. Krishnaswami; de Silva, Simon; M. Senaveratna, John (1921). "The Overlordship of Ceylon in the Thirteenth, Fourteenth and Fifteenth Centuries"] . Kotte என்ற சொல்லே தமிழ் சொல் கோட்டை யில் இருந்து பெறப்பட்டதாகும்.[Somaratne, G.P.V. (1984). The Sri Lanka Archives, Volume 2. Department of National Archives. p. 1.] அதே போல, அறிஞர் H L செனிவிரட்ன [H L Seneviratne] பல கண்டி தலைவர்கள் [Kandyan chieftains] 1815 ஆண்டு மாநாட்டு [1815 Convention / treaty with the British] உடன்படிக்கைகள் தமிழில் கையெழுத்திட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஊகங்கள் மற்றும் அனுமானங்களைத் தவிர்த்து, தொல்பொருள் சான்றுகள் அல்லது கல்வெட்டியல் சான்றுகள் மூலம் [archeological / epigraphic facts / evidence] சிங்கள மொழி கி பி 9ஆம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததாக எந்த தகவலும் நான் அறிந்த வரையில் இல்லை. சிங்கள மொழியில் ஏறக்குறைய 4000+ தமிழ் சொற்கள் இருப்பதை ஆதார பூர்வமாக எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் [Rev. S. Gnanapiragasam] சுட்டிக் கட்டி, சிங்கள மொழியில் இருந்து எல்லா தமிழ் சொற்களையும் கழற்றிவிட்டால், அங்கு சிங்கள மொழி என்று ஒன்றுமே இருக்காது என்கிறார். [If the Sinhala vocabulary is stripped of all the Tamil words there will be no Sinhala language.] சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி (An Etymological and comparative Lexion of the Tamil Language), இவரால் 1938-இல் வெளிப்படுத்தப் பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.1815 இல் கண்டி இராச்சியம் காட்டிக்கொடுப்பினால் வீழ்த்தப்பட்டது. அதன் பின் “கண்டி ஒப்பந்தம்” கண்டி அரச மாளிகையில் 02.03.1815 அன்று பி.ப. 4.00க்கு செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கண்டி திசாவைகள் மற்றும் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். அட்டவனை 10 அவர்களின் கையொப்பத்தை காட்டுகிறது. இதில் ரத்வத்தையின் கையெழுத்து தமிழில் பூரணமாக வைக்கப்பட்டுள்ளது. மற்றும் பலரின் கையெழுத்து தமிழும் மற்றும் இன்னும் அப்பொழுது பரிணாமம் அடைந்து வரும் சிங்களமும் கலந்து இருக்கின்றன. [Table 10, depicts the signatures of the Dissawes and Adigars who were a party to the March’ 1815 Kandyan convention. The mixture of Tamil and yet evolving Sinhala alphabets used by many may depict a period in our history (especially in the Kandyan Kingdom) when a combination of Sinhala and Tamil alphbets were used]. மேலும், டச்சு காலத்தில், கிபி 1656 முதல் கிபி 1796 வரை, இலங்கையில் அடிமட்ட சமூக உறவுகளில், சிங்களம் தமிழ் என்ற வேறுபாடுகள் காணப்படவில்லை என்றும், ஆனால் பல்வேறு சாதி பிரிவுகளே காணப்பட்டதாகவும் அருட்தந்தை வீ. பெர்னியோலா அடிகள் கூறுகிறார் [Vito Perniola, in observing the social relations at the grassroots level in the Dutch period of SriLanka, did not see "any racial distinction between Sinhala and Tamils," but "rather the division into various castes"]. கண்டியைத் தலை நகராகக்கொண்டு 1707 ஆம் ஆண்டுக்கும் 1815 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆண்டு வந்த நாயக்கர் அரச மரபு [வம்சம்] எமக்கு எடுத்து கட்டுவது, அரசன் சிங்களவனாக இருக்கவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் அப்பொழுதும் இலங்கையில் இருக்கவில்லை என்றும், ஆனால் புத்த மதத்திற்கு ஆதரவளிக்க மட்டுமே அங்கு வலியுறுத்தப்பட்டது என்பதாகும். [The longevity of the Nayakkar dynasty (1739-1815) in the kingdom of Kandy indicates that there was no requirement for the king to be Sinhalese,while his patronage to Buddhism was insisted upon]. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 25 C தொடரும் / Will follow https://www.facebook.com/groups/978753388866632/posts/31249173764731196/?

அஷ்ரபின் மரணம் தூசு தட்டப்படுமா?

1 month 4 weeks ago
என்று எழுதுகின்ற ஒருவரின் கட்டுரை வேறு எதனை சொல்லும் ? கடும் புலி எதிர்ப்பை தன் அரசியலாக வரித்துக் கொண்ட பெளசர் (எலக்கியவாதி, மு.கா உறுப்பினர், அதற்கும் முன்னால் ஈபிடிபி உறுப்பினர்) சொன்னவற்றை உள்ளடக்கி ஈற்றில் அஷ்ரபின் மரணத்துக்கும் புலிகள் தான் காரணம் என குற்றஞ்சாட்டுகின்றார் இந்த மொஹமட் பாதுஷா.

யாழ் மருதனார் மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயம்!

1 month 4 weeks ago
காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=24805456195728930 👈 👉யாழில் பாரிய ஒரு விசித்திர விபத்து! CCTV_காணொளி‼️‼️‼️ மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவர்த்தி ஒன்றும் மோதி விபத்து! யாழ்ப்பாணம் - மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவர்த்தி ஒன்றும் மோதி விபத்து சம்பாதித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்....வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த துவிச்சக்கர வண்டி மீது மோதியது. பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து பக்கம் மாறி வலது பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. விபத்தில் சிக்கியவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். விபத்து சம்பவம் குறித்தான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நம்ம யாழ்ப்பாணம்

யாழ் மருதனார் மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயம்!

1 month 4 weeks ago
யாழ் மருதனார் மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயம்! யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று துவிச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் வெங்கடேஸ்வரர் ஆலயம் இரண்டிற்கும் இடை நடுவில் இன்று காலை 8 மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. முச்சக்கர வண்டியொன்று வீதியில் வைத்து திரும்ப முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று குறித்த துவிச்சக்கர வண்டி மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் நான்கு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsயாழ் மருதனார் மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 5...யாழ்ப்பாணம் சுண்ணாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று துவிச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். யாழ்https://www.facebook.com/Athavannews/videos/1138292688361845

ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!

1 month 4 weeks ago
ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு! நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் தான் ஜெனீவா சென்று முறையிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “ஆளும் கட்சியில் யாரையும் வடக்கு மக்களுக்கு தெரியாது. அமைச்சர் சந்திரசேகர் மற்றும் இளங்குமரன் ஆகியோரையும் எங்களுக்கு தெரியாது. இருந்தாலும் வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தமைக்கு காரணம் இருக்கின்றது. ஒரு காலத்தில் எங்களை போலவே நீங்களும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்தவர்கள். இதனாலேயே நம்மை போன்றவர்கள் என எண்ணி வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர். அத்துடன், இன்று வரை எங்களுக்காக மரணித்த ஒருவரை கடவுள் என நாடாளுமன்றத்தில் கூறிய ஒரே தமிழ் அரசியல்வாதி நான் மட்டுமே. வடக்கு கிழக்கில் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் இன்றுவரை எடுக்கப்படவில்லை. யாரும் அதற்காக கைது செய்யப்படவில்லை. ஆனால், நீங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்தீர்கள். வன்முறைகளை நாம் விரும்புவதில்லை. உங்களுடைய கட்சியை சேர்ந்த நால்வர், அரகலய காலத்தில் நாடாளுமன்றத்தை எரிக்குமாறு கூறினார்கள். ஆனால், நீங்கள் இன்று நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்ட வாகனங்களிலேயே பயணிக்கின்றனர். நாங்கள் கடவுச்சீட்டு அலுவலகம் கேட்கவில்லை, கிரிக்கட் மைதானம் கேட்கவில்லை. மாறாக தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வையே கேட்டோம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பில் நான் ஜெனீவா சென்று முறையிடுவேன். அதன் பின்னர் நாட்டிற்கு வந்தவுடன் என்னை கைது செய்வதாயின் கைது செய்யுங்கள். ஆனால், நான் என்றாவது ஒரு நாள் சிங்கள மக்கள் வாழும் ஒரு தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிடுவேன். அப்போது உங்கள் கட்சியில் எத்தனை குழந்தைகள் மீதம் இருக்கிறது என்பதை பார்ப்போம்”இவ்வாறு இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446688

ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!

1 month 4 weeks ago

archuna-090325-seithy.jpg?resize=380%2C2

ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!

நாட்டில் இடம்பெற்ற  குற்றங்கள் தொடர்பில் தான் ஜெனீவா சென்று முறையிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று  உரையாற்றிய போதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “ஆளும் கட்சியில் யாரையும் வடக்கு மக்களுக்கு தெரியாது. அமைச்சர் சந்திரசேகர் மற்றும் இளங்குமரன் ஆகியோரையும் எங்களுக்கு தெரியாது. இருந்தாலும் வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தமைக்கு காரணம் இருக்கின்றது.

ஒரு காலத்தில் எங்களை போலவே நீங்களும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்தவர்கள். இதனாலேயே நம்மை போன்றவர்கள் என எண்ணி வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர்.

அத்துடன், இன்று வரை எங்களுக்காக மரணித்த ஒருவரை கடவுள் என நாடாளுமன்றத்தில் கூறிய ஒரே தமிழ் அரசியல்வாதி நான் மட்டுமே.

வடக்கு கிழக்கில் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் இன்றுவரை எடுக்கப்படவில்லை. யாரும் அதற்காக கைது செய்யப்படவில்லை. ஆனால், நீங்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்தீர்கள்.

வன்முறைகளை நாம் விரும்புவதில்லை. உங்களுடைய கட்சியை சேர்ந்த நால்வர், அரகலய காலத்தில் நாடாளுமன்றத்தை எரிக்குமாறு கூறினார்கள். ஆனால், நீங்கள் இன்று நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்ட வாகனங்களிலேயே பயணிக்கின்றனர்.

நாங்கள் கடவுச்சீட்டு அலுவலகம் கேட்கவில்லை, கிரிக்கட் மைதானம் கேட்கவில்லை. மாறாக தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வையே கேட்டோம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பில் நான் ஜெனீவா சென்று முறையிடுவேன். அதன் பின்னர் நாட்டிற்கு வந்தவுடன் என்னை கைது செய்வதாயின் கைது செய்யுங்கள்.

ஆனால், நான் என்றாவது ஒரு நாள் சிங்கள மக்கள் வாழும் ஒரு தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிடுவேன். அப்போது உங்கள் கட்சியில் எத்தனை குழந்தைகள் மீதம் இருக்கிறது என்பதை பார்ப்போம்”இவ்வாறு இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1446688

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

1 month 4 weeks ago
ஒரு பெட்டை நாயை பிடித்துக் கொடுத்தால்... 600 ரூபாய் என்பது, நல்ல காசு. நான் ஊரில் நின்று இருந்தால்.... ஒரு கிழமைக்கு 50 பெட்டை நாயை பிடித்துக் கொடுத்து 30,000 ரூபாய் உழைத்து இருப்பேன். 😂

இலங்கை மின்சார கட்டண உயர்வு பரிந்துரை

1 month 4 weeks ago
10 Sep, 2025 | 09:54 AM இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்தபடி, இலங்கை மின்சார சபை (CEB) 2025 இறுதி காலாண்டுக்காக மின்சார கட்டணத்தில் 6.8% உயர்வு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமாக ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம் என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது. வாய்மொழி கருத்துக்களைப் பெற, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய ஒன்பது பொது ஆலோசனைகளை நடத்தும். வாய்மொழி சமர்ப்பிப்புகளுக்கான இந்தப் பொது ஆலோசனை அமர்வுகள் செப்டம்பர் 18, 2025 அன்று ஆரம்பமாகவுள்ளது. 2025 ஆம் ஆண்டின் மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை தொடர்பான எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஒக்டோபர் 7, 2025 க்கு முன் பின்வரும் முறைகள் மூலம் சமர்ப்பிக்கலாம் என்று இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது: மின்னஞ்சல்: info@pucsl.gov.lk வாட்சப் இலக்கம் : 076 427 1030 பேஸ்புக் : www.facebook.com/pucsl அஞ்சல்: மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் – 2025 குறித்த பொது ஆலோசனை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 6வது மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம், கொழும்பு 3. https://www.virakesari.lk/article/224692

இலங்கை மின்சார கட்டண உயர்வு பரிந்துரை

1 month 4 weeks ago

10 Sep, 2025 | 09:54 AM

image

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்தபடி,  இலங்கை மின்சார சபை (CEB) 2025 இறுதி காலாண்டுக்காக மின்சார கட்டணத்தில் 6.8% உயர்வு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமாக ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம் என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது.

வாய்மொழி கருத்துக்களைப் பெற, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய ஒன்பது பொது ஆலோசனைகளை நடத்தும்.

வாய்மொழி சமர்ப்பிப்புகளுக்கான இந்தப் பொது ஆலோசனை அமர்வுகள் செப்டம்பர் 18, 2025 அன்று ஆரம்பமாகவுள்ளது.

2025 ஆம் ஆண்டின் மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை தொடர்பான எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஒக்டோபர் 7, 2025 க்கு முன் பின்வரும் முறைகள் மூலம் சமர்ப்பிக்கலாம் என்று இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது:

மின்னஞ்சல்: info@pucsl.gov.lk

வாட்சப் இலக்கம் : 076 427 1030

பேஸ்புக் : www.facebook.com/pucsl

அஞ்சல்:

மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் – 2025 குறித்த பொது ஆலோசனை

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

6வது மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம்,

கொழும்பு 3.

https://www.virakesari.lk/article/224692

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

1 month 4 weeks ago
இதே பிரச்சனை எனக்கும் இருக்கிறது.கவலைப் படாதீர்கள்.தேவைப்படும் போது பொதுவான ஒரு இடத்தில் எழுதி விட்டு அங்கு ஒட்டி விடலாம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பம்

1 month 4 weeks ago
ஐ.நா.வில் எமக்கு அழுத்தமில்லை : மனித உரிமைகள் குறித்த எமது நடவடிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது - அமைச்சரவை பேச்சாளர் 09 Sep, 2025 | 09:43 PM (எம்.மனோசித்ரா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரின் போது கடந்த அரசாங்கங்களுக்கு காணப்பட்ட அழுத்தம் எமது அரசாங்கத்துக்கு இல்லை. மனித உரிமைகள் குறித்த எமது நடவடிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த வகையில் தேசிய பொறிமுறைக்குள் பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்போம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாணசபைத் தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும். எனினும் அதற்கான காலம் தொடர்பில் தற்போது குறிப்பிட முடியாது. இது குறித்த சட்ட திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்கு முன்னர் செப்டெம்பரில் ஜெனீவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமானால் அரசாங்கங்கள் எவ்வாறு அழுத்தத்தில் இருந்தன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எமது அரசாங்கத்துக்கு அவ்வாறு எந்த அழுத்தமும் இல்லை. கடந்த ஜூனில் நாட்டுக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை எமக்கு சார்பானதாகவே காணப்படுகிறது. இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், ஜனநாயகம் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. குறுகிய காலத்துக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். எமது நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை, நம்பிக்கை பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தேசிய பொறிமுறைக்குள் மனித உரிமை மீறல்க்ள குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நம்புகின்றோம். இது தொடர்பில் சர்வதேசத்தின் மதிப்பீடுகளையும் அங்கீகரிக்கின்றோம். எனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளில் அநாவசிய தலையீடுகளை செலுத்தி அவற்றை வீணடிக்க விரும்பவில்லை. அதேவேளை சிறிய அடிப்படைவாத, தீவிரவாத குழுக்கள் தலைதூக்குவதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது. பயங்கரவாத தடை சட்டத்தையும் இரத்து செய்து, புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். நிகழ்நிலை காப்பு சட்ட திருத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/224664

இலங்கை, வங்கதேசம் வரிசையில் நேபாளமா? - இந்தியாவின் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது?

1 month 4 weeks ago
நேபாளத்தில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டதற்கு எதிராக இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்கள். கட்டுரை தகவல் சந்தன் குமார் ஜஜ்வாரே பிபிசி செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. கடந்த வாரம் நேபாள அரசு 26 சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்தது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பிரபலமான சமூக ஊடக மற்றும் மெசேஜிங் தளங்களும் இதில் அடங்கும். சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். நேபாளத்தில் திங்கள்கிழமை நடந்த போராட்டத்தின் காட்சிகள், கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தை நினைவூட்டின. இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டில் இலங்கையிலும் மக்கள் அரசுக்கு எதிராக பெரிய போராட்டங்களை நடத்தினர். BBC/Madhuri Mahato பீர்கஞ்சில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவின் அண்டை நாடுகளில் உள்ள இளைஞர்கள் போராட்டங்கள் மூலம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர். தெற்காசியப் புவிசார் அரசியல் நிபுணரும், தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியருமான தனஞ்சய் திரிபாதி, "இந்த தெற்காசியப் பகுதி இளைஞர்கள் நிறைந்த பகுதி, ஆனால் அரசுகளால் இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. இந்த மூன்று நாடுகளின் போராட்டங்களிலும் இதுதான் பொதுவான ஒற்றுமை" என்கிறார். தனஞ்சய் திரிபாதியின் கூற்றுப்படி, நேபாளத்தில் 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம், ஆனால் இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளன. "நேபாளத்தில் மற்றொரு நெருக்கடி என்னவென்றால், முடியாட்சி முடிந்த பிறகு எந்த ஒரு அரசாங்கமும் ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவியில் இல்லை. இதன் காரணமாக நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை நிலவுகிறது, மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுகின்றன. இப்போது, அரசு இளைஞர்களிடையே பிரபலமான செயலிகளையும் தடை செய்துவிட்டது," என்று அவர் கூறுகிறார். நேபாளத்தில் இருந்து பெருமளவிலான மக்கள் இந்தியா உட்படப் பல நாடுகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாதது ஒருபுறம் இருக்க, சமீபத்திய தடைகளுக்குப் பிறகு அவர்களால் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளக்கூட முடியவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இளைஞர்களின் பங்கு நேபாளத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது போலீசார் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. அதேசமயம், இலங்கையின் போராட்டத்தில் பொருளாதாரப் பிரச்னைகள் ஆதிக்கம் செலுத்தின. டெல்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமைப்பின் ஆய்வு மற்றும் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் பந்த் கூறுகையில், "இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகளின் போராட்டங்களுக்கான காரணங்கள் வேறுபட்டிருந்தாலும், மக்கள் எதிர்பார்ப்புகளுக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இந்த போராட்டங்களுக்குப் பொதுவான காரணம்." அவரது கூற்றுப்படி, "இந்த மூன்று போராட்டங்களிலும் 'இளைஞர்கள்' தான் மிகப் பெரிய காரணி. ஆட்சி மாற்றத்தின் மிகப் பெரிய தாக்கம் இளைஞர்கள் மீதே விழுகிறது. இந்த இளைஞர் பிரிவினர்தான் அரசின் மீது கோபமாக உள்ளனர்." அரசு இளைஞர்களின் கோபத்தைத் தணிக்க முயற்சி செய்யாவிட்டால், இந்த போராட்டம் இன்னும் பெரிதாக வளரக்கூடும் என்று ஹர்ஷ் பந்த் நம்புகிறார். இருப்பினும், நேபாளப் போராட்டத்தில் தலைவரோ அல்லது அமைப்போ இல்லை என்றும் அவர் கூறுகிறார். தனஞ்சய் திரிபாதியும் இந்த கருத்தை ஒப்புக்கொள்வதாகத் தெரிகிறது. "அரசு புரிதலுடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் நடந்து கொண்டால், இந்தப் போராட்டத்தை அமைதிப்படுத்த முடியும். இதில் இறந்தவர்களின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட வேண்டும். அரசு இளைஞர்களிடம் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ள வேண்டும், அது தற்போது காணப்படவில்லை," என்று அவர் கூறுகிறார். இதற்கு முன்னதாக, வங்கதேசத்தில் அரசு போராட்டக்காரர்களை கடுமையாகக் கையாள முயற்சித்தது, ஆனால் அது இளைஞர்களின் கோபத்தை இன்னும் அதிகரித்தது. வங்கதேச மாணவர் போராட்டம் Getty Images வங்கதேசத்தில் பிரதமரின் இல்லத்தில் இருந்த போராட்டக்காரர்கள் (கோப்புப் படம்) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டம், வன்முறை மற்றும் நூற்றுக்கணக்கானோர் இறப்பு ஆகியவற்றிற்கு மத்தியில், வங்கதேசத்தின் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியையும் நாட்டையும் விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய இந்த மாணவர் போராட்டம், நாடு தழுவிய போராட்டமாக மாறியது. இறுதியில் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்வதற்கு காரணமாக இருந்தது. இதன் மூலம் அவரது 15 ஆண்டுகால தொடர் ஆட்சி மற்றும் ஐந்தாவது பதவிக்காலம் திடீரென முடிவுக்கு வந்தது. கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய மாணவர் போராட்டத்திற்குப் பிறகு, ஜூலை 21ஆம் தேதி வங்கதேச உச்ச நீதிமன்றம் அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டை கிட்டத்தட்ட ரத்து செய்தது. ஆனால், இந்தத் தீர்ப்பு வந்தபிறகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோபம் தீரவில்லை. ஷேக் ஹசீனாவின் ராஜினாமா கோரிக்கை மேலும் வலுப்பெற்றது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொடங்கிய போராட்டம், நாட்டின் மூலை முடுக்குகளை அடைந்தது. எதிர்க்கட்சிகளும் வீதியில் இறங்கின. மாணவர் அமைப்புகள் ஆகஸ்ட் 4 முதல் முழு ஒத்துழையாமைப் போராட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்திருந்தன. அரசு இந்தப் போராட்டங்களை கடுமையாக ஒடுக்க முயன்றது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, ராணுவம் வீதியில் இறங்கியது, ஆனால் மக்கள் பின்வாங்கவில்லை. ஆகஸ்ட் 4ஆம் தேதி நடந்த வன்முறையில் குறைந்தது 94 பேர் கொல்லப்பட்டனர். மாணவர் போராட்டம் தொடங்கியதில் இருந்து உயிரிழப்புகள் எண்ணிக்கை 300ஐத் தாண்டியது. ஆகஸ்ட் 5ஆம் தேதி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். 2022ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த போராட்டம் EPA/CHAMILA KARUNARATHNE 2022ஆம் ஆண்டில் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசும் இலங்கை போலீஸ் (கோப்புப் படம்). 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் பணவீக்கம் வேகமாக அதிகரித்தது. அந்நிய செலாவணி கையிருப்பு காலியானது. நாட்டில் எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட இந்த மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில், மக்கள் ஒரு நாளைக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டை எதிர்கொண்டனர். இந்த நிலைக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்சேவையும் அவரது குடும்பத்தினரையும் பலர் குற்றம் சாட்டினர். அவரது மோசமான கொள்கைகள்தான் அந்நிய செலாவணி கையிருப்பு காலியானதற்குக் காரணம் என்று நம்பப்பட்டது. ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஊழல் மற்றும் பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்தனர். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சுற்றுலா வருவாய் குறைந்தது மற்றும் யுக்ரேன் போரால் எண்ணெய் விலைகள் உயர்ந்ததால் இந்த நெருக்கடி ஏற்பட்டதாக அவர்கள் வாதிட்டனர். அப்போது, போராட்டங்கள் இரவும் பகலும் தொடர்ந்து நடந்தன. மாலையில் கூட்டம் அதிகரித்தது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முதல் பாதிரியார்கள் மற்றும் புத்த பிக்குகள் வரை அனைவரும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர். நாடு முழுவதும் "கோட்டா கோ ஹோம்" (கோட்டா வீட்டுக்கு போ) என்ற கோஷம் எதிரொலித்தது. இந்தப் போராட்டங்கள் சிங்களர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய மூன்று முக்கிய சமூகங்களை ஒன்றிணைத்தன. சில வாரங்களுக்குப் பிறகு, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தபோது, இந்தப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. சில நாட்களுக்குப் பிறகு, கோட்டாபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இந்த நிகழ்வு "அரகலய" அல்லது மக்கள் போராட்டத்தின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnvr3rl84n1o