Aggregator
IMF ஆலோசனையுடன் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்!
IMF ஆலோசனையுடன் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்!
2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு தழுவிய சொத்து வரி முறையை அறிமுகப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அண்மைய பணியாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பரந்த வருவாய் திரட்டல் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த முயற்சி, வரி சமத்துவத்தை அதிகரிக்கும் மற்றும் பொதுத்துறை நிதியுதவியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து வரிவிதிப்புக்கு ஆதரவளிக்க தேவையான தரவு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான விரிவான வரைபடத்தை IMF அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த முயற்சியின் மையமானது சொத்து மதிப்பீடுகளின் விரிவான மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்குவதாகும்.
இது சொத்து மதிப்புகளை மதிப்பிடுவதற்கும் வரி பொறுப்புகளைக் கணக்கிடுவதற்கும் முதுகெலும்பாக செயல்படும்.
2027 ஆம் ஆண்டில் சொத்து வரி மூலம் அரசாங்கம் 56 பில்லியன் ரூபாவை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், 2028 ஆம் ஆண்டில் சொத்து வரி மூலம் எதிர்பார்க்கப்படும் வருவாய் 122 பில்லியன் ரூபாவாக இருக்கும்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) மூலம் ஆதரிக்கப்படும் பொருளாதார சீர்திருத்த திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
அந்தக் கடிதம், அரசாங்கம் தொடர்ந்தும் திட்ட நோக்கங்களுக்கு உறுதியுடன் இருப்பதாகக் எடுத்துரைக்கிறது.
இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களின் கணினி மற்றும் உபகரண அமைப்புக்கான மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வது தொடர்பான ஊடக அறிக்கைகள் தொடர்பில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் வணிகங்களுக்கு இக் கொள்முதல்களின் கீழ் தேவையற்ற நன்மைகள் வழங்கப்படும் என்ற ஊடகச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மீதமுள்ள அனைத்து கொள்முதல்களும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இதுவரை செய்யப்பட்டுள்ளபடி அதிக வெளிப்படைத்தன்மை, சரியான தரநிலைகள் மற்றும் செலவு-செயல்திறனுடன் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயற்படும் நாடுகளிற்கு எதிராக மேலும் பத்துவீத வரி - டிரம்ப்
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”
“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”
செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே
கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே
செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே
காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே!
பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே
பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே
புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே
அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே!
விலங்குக்கும் சில பண்பாடு உண்டே
விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே
விளக்கம் இல்லாத மதபோதனை எனோ
களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை!
வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே
இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே
பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே
சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”
“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”
“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”
செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே
கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே
செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே
காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே!
பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே
பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே
புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே
அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே!
விலங்குக்கும் சில பண்பாடு உண்டே
விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே
விளக்கம் இல்லாத மதபோதனை எனோ
களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை!
வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே
இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே
பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே
சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]