Aggregator

IMF ஆலோசனையுடன் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்!

2 months 1 week ago
IMF ஆலோசனையுடன் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்! 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு தழுவிய சொத்து வரி முறையை அறிமுகப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அண்மைய பணியாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பரந்த வருவாய் திரட்டல் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த முயற்சி, வரி சமத்துவத்தை அதிகரிக்கும் மற்றும் பொதுத்துறை நிதியுதவியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்து வரிவிதிப்புக்கு ஆதரவளிக்க தேவையான தரவு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான விரிவான வரைபடத்தை IMF அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முயற்சியின் மையமானது சொத்து மதிப்பீடுகளின் விரிவான மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்குவதாகும். இது சொத்து மதிப்புகளை மதிப்பிடுவதற்கும் வரி பொறுப்புகளைக் கணக்கிடுவதற்கும் முதுகெலும்பாக செயல்படும். 2027 ஆம் ஆண்டில் சொத்து வரி மூலம் அரசாங்கம் 56 பில்லியன் ரூபாவை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், 2028 ஆம் ஆண்டில் சொத்து வரி மூலம் எதிர்பார்க்கப்படும் வருவாய் 122 பில்லியன் ரூபாவாக இருக்கும். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) மூலம் ஆதரிக்கப்படும் பொருளாதார சீர்திருத்த திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாகக் கூறியுள்ளார். அந்தக் கடிதம், அரசாங்கம் தொடர்ந்தும் திட்ட நோக்கங்களுக்கு உறுதியுடன் இருப்பதாகக் எடுத்துரைக்கிறது. https://athavannews.com/2025/1438377

IMF ஆலோசனையுடன் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்!

2 months 1 week ago

New-Project-89.jpg?resize=750%2C375&ssl=

IMF ஆலோசனையுடன் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்!

2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு தழுவிய சொத்து வரி முறையை அறிமுகப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அண்மைய பணியாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பரந்த வருவாய் திரட்டல் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த முயற்சி, வரி சமத்துவத்தை அதிகரிக்கும் மற்றும் பொதுத்துறை நிதியுதவியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்து வரிவிதிப்புக்கு ஆதரவளிக்க தேவையான தரவு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான விரிவான வரைபடத்தை IMF அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த முயற்சியின் மையமானது சொத்து மதிப்பீடுகளின் விரிவான மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்குவதாகும்.

இது சொத்து மதிப்புகளை மதிப்பிடுவதற்கும் வரி பொறுப்புகளைக் கணக்கிடுவதற்கும் முதுகெலும்பாக செயல்படும்.

2027 ஆம் ஆண்டில் சொத்து வரி மூலம் அரசாங்கம் 56 பில்லியன் ரூபாவை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், 2028 ஆம் ஆண்டில் சொத்து வரி மூலம் எதிர்பார்க்கப்படும் வருவாய் 122 பில்லியன் ரூபாவாக இருக்கும்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) மூலம் ஆதரிக்கப்படும் பொருளாதார சீர்திருத்த திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

அந்தக் கடிதம், அரசாங்கம் தொடர்ந்தும் திட்ட நோக்கங்களுக்கு உறுதியுடன் இருப்பதாகக் எடுத்துரைக்கிறது.

https://athavannews.com/2025/1438377

இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

2 months 1 week ago
இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு! இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களின் கணினி மற்றும் உபகரண அமைப்புக்கான மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வது தொடர்பான ஊடக அறிக்கைகள் தொடர்பில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் வணிகங்களுக்கு இக் கொள்முதல்களின் கீழ் தேவையற்ற நன்மைகள் வழங்கப்படும் என்ற ஊடகச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது. இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மீதமுள்ள அனைத்து கொள்முதல்களும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இதுவரை செய்யப்பட்டுள்ளபடி அதிக வெளிப்படைத்தன்மை, சரியான தரநிலைகள் மற்றும் செலவு-செயல்திறனுடன் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438357

இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

2 months 1 week ago

e_nic_sri_lanka.jpg?resize=750%2C375&ssl

இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களின் கணினி மற்றும் உபகரண அமைப்புக்கான மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வது தொடர்பான ஊடக அறிக்கைகள் தொடர்பில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் வணிகங்களுக்கு இக் கொள்முதல்களின் கீழ் தேவையற்ற நன்மைகள் வழங்கப்படும் என்ற ஊடகச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மீதமுள்ள அனைத்து கொள்முதல்களும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இதுவரை செய்யப்பட்டுள்ளபடி அதிக வெளிப்படைத்தன்மை, சரியான தரநிலைகள் மற்றும் செலவு-செயல்திறனுடன் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1438357

பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயற்படும் நாடுகளிற்கு எதிராக மேலும் பத்துவீத வரி - டிரம்ப்

2 months 1 week ago
14 நாடுகளுக்கு ட்ரம்பின் புதிய இறக்குமதி வரிகள்! அமெரிக்க இறக்குமதிகள் மீது அதிக வரிகளை விதிப்பதை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாமதப்படுத்தியுள்ளார். அதேநேரத்தில் ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் வரிகளை விவரிக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளார். இந்த வாரம் மிகவும் அதிகமான இறக்குமதி வரிகளில் சிலவற்றின் மீது வெள்ளை மாளிகை விதித்த 90 நாள் இடைநிறுத்தம் காலாவதியாகவிருந்த நிலையில், ட்ரம்பின் உலகளாவிய வர்த்தகம் குறித்த அண்மைய முன்னேற்றம் வந்துள்ளது. திங்களன்று, ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து நாட்டிற்குள் நுழையும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்ற தனது அச்சுறுத்தலை ஜனாதிபதி புதுப்பித்தார். மேலும், ஆகஸ்ட் 1 முதல் வரிகள் குறித்து எச்சரிக்கும் உலகத் தலைவர்களுக்கு எழுதிய கடிதங்களின் பட்யடிலையும் பகிர்ந்து கொண்டார். ட்ரம்ப் கோடிட்டுக் காட்டிய பெரும்பாலான கட்டண விகிதங்கள், ஏப்ரல் மாதத்தில் அவர் தனது “விடுதலை நாள்” அறிவிப்பை வெளியிட்டபோது கோடிட்டுக் காட்டியதைப் போலவே இருந்தன. வரிகளை அறிமுகப்படுத்துவது அமெரிக்க வணிகங்களை வெளிநாட்டுப் போட்டியிலிருந்து பாதுகாக்கும் என்றும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைகளை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். ஆனால், இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவில் விலைகளை உயர்த்தும் மற்றும் வர்த்தகத்தைக் குறைக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ட்ரம்பின் வரி அறிவிப்புடன் அமெரிக்காவின் மூன்று முக்கிய பங்கு குறியீடுகள் திங்களன்று சரிந்தன. குறிப்பாக டொயோட்டாவின் அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட பங்குகள் 4% சரிந்தன. அமெரிக்க வர்த்தக தரவுகளின்படி, ஜப்பான் கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு $148 பில்லியனுக்கும் அதிகமான பொருட்களை அனுப்பியது. இது அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய இறக்குமதி விநியோகஸ்தராக மாறியது. தென் கொரியா மற்றும் ஜப்பானுடன், மியான்மர் மற்றும் லாவோஸிலிருந்து வரும் பொருட்களுக்கு 40%, தாய்லாந்து மற்றும் கம்போடியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 36%, செர்பியா மற்றும் பங்களாதேஷிலிருந்து வரும் பொருட்களுக்கு 35%, இந்தோனேசியாவிற்கு 32%, தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு 30% மற்றும் மலேசியா மற்றும் துனிசியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கும் திட்டங்களை ட்ரம்ப் திங்களன்று வகுத்தார். https://athavannews.com/2025/1438383

“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”

2 months 1 week ago

“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”

செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே

கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே

செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே

காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே!

பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே

பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே

புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே

அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே!

விலங்குக்கும் சில பண்பாடு உண்டே

விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே

விளக்கம் இல்லாத மதபோதனை எனோ

களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை!

வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே

இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே

பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே

சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”

2 months 1 week ago
“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!” செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே! பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே! விலங்குக்கும் சில பண்பாடு உண்டே விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே விளக்கம் இல்லாத மதபோதனை எனோ களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை! வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”

2 months 1 week ago

“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”

செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே

கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே

செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே

காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே!

பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே

பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே

புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே

அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே!

விலங்குக்கும் சில பண்பாடு உண்டே

விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே

விளக்கம் இல்லாத மதபோதனை எனோ

களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை!

வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே

இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே

பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே

சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பாடசாலை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லாமையால் மாணவன் கவனயீர்ப்பு போராட்டம்!

2 months 1 week ago
நாம் எல்லோரும் ஒரு காலத்தில் பாடசாலை கல்லூரி என சென்று வந்திருப்போம்.அப்போது நாம் கண்ட/ அனுபவித்த தறுதலை கூட்டங்கள் எத்தனை? எத்தனை? அதிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பண/ அரசியல்/ஏதோ ஒரு வகையில் பிரபல்யம் என்றால் அவ்வளவுதான்? ஆசிரியர்களும் சக மாணவர்களும் அடக்கி வாசிப்பார்கள். நடவடிக்கை எடுத்த ஆசிரியர்களுக்கு நன்றிகள். உங்கள் நேர்மையான நடவடிக்கைகளைதொடருங்கள்.

குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!

2 months 1 week ago
அந்த திட்டத்தில் என்ன தவறு இருக்கின்றது? புட்டினும் டொனால்ட் ரம்பும் இல்லாத காலத்தில் இந்த மேற்கத்திய உலகம் எதை சாதித்து காட்டியது? அன்றைய கொழுப்புவாத முதலாளிகள் உலகில் எல்லா இடங்களிலும் கலவரங்களை தூவிவிட்டதை தவிர வேறு என்ன நல்ல செயல்களை செய்தார்கள்? பகட்டுக்கு வறிய நாடுகளுக்கான/மூன்றாம் உலக நாடுகளுக்கான உதவி எனும் பெயரில் வறுத்த விசுக்கோத்தையும் கூப்பன் மாவையும் கொடுத்து இன்னொரு பக்கம் மனித சுதந்திரம் எனும் போர்வையில் இன கொலைகளையும் உள்ளூர் போராட்டங்களையும் அழிவுகளையும் ஊக்குவித்து குளிர் காய்ந்தவர்கள் அல்லவா? அகதி அந்தஸ்து தந்தவர்கள் என்பதற்காக வாய் மூடிக்கொண்டு இவர்கள் செய்வதற்கெல்லாம் நன்றிக் கடனாக ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால் தூக்கிலிட்டு சாவதே மேல்.

மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள்

2 months 1 week ago
லெப்.கேணல் நிஸ்மியா சிற்றம்பலம் றஞ்சிதமலர் கொக்குக்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவு லெப்.கேணல் நிர்மலன் சிவானந்தன் நிர்மலராஜ் திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 1 week ago
இனியென்ன..... அஜித்குமார் செய்திகளும் சூடான விவாதங்களும் அடங்கி விட்டது. வழமை போல கரண்ட் வயர் கடித்து தற்கொலை செய்த சம்பவமும்.மாடியால் விழுந்து தற்கொலை செய்த மாணவியின் சம்பவமும் போல..... இந்திய அரசியலும் அதிலும் பிரத்தியேகமாக தமிழ்நாட்டு அரசியல் நடைமுறைகளும் அதன் கிளை அரசியல் அடாவடிகளின் நடவடிக்கைகள் தெரியாமல் கண்டபடி விவாதிக்கும் பாலகர் நீவீர். ஒருவர் செய்த குற்றத்திற்காக அப்பாவிகளை தேடி பிடித்து குற்றவாளிகளாக்கும் நாடு அது.

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

2 months 1 week ago
சம்பந்தன் மறைவுடன் அவர் வரலாறுகளும் மறைந்து / அழிந்து விட்டது. ( ஏதாவது நல்லது செய்தால் தானே பெயர் நிலைத்து நிற்க) இது இன்றைய தமிழ் தலைவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். ஆண்டவரே! சம்பந்தனின் அதிசய கண்டு பிடிப்பான சுமந்திரன் தெளிவு பெற்று உணர்வாராக.....