Aggregator

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

1 month 4 weeks ago
நெதன்யாகுவை ஒன்றுக்கு பல தரம் செங்கம்பளம் விரிச்சு வரவேற்றார் உங்கள் தல. அவர் பக்கமும் நூறு வீதம் நியாயம் இருக்கு என நம்புகின்றீர்கள் தானே..?

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது

1 month 4 weeks ago
Trump வந்தால் மத்திய கிழக்கில் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமெரிக்கா நடந்து கொள்ளும் என எதிர்பார்த்து வாக்களித்த பெருவாரியான முஸ்லிம்கள் இப்ப என்ன நினைகினம் என அறிய ஆவலாக உள்ளது.

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

1 month 4 weeks ago
😂 ஒரு காலத்தில் வயல்,தோட்டங்களில் மேய்ந்து கொண்டிருந்த கட்டாக்காலி மாடுகளையும் பிடித்து அஞ்சு பத்து சம்பாதிச்சவர்களும் உண்டு. இதே சிஷ்டத்தை பாவிச்சு தான் ஜேர்மனியில வெறும் பிளாஸ்ரிக் போத்திலை சேகரிச்சு குடுத்தால் நல்ல காசு வரும் எண்ட சட்டத்தை கொண்டு வந்தவங்கள்😜. ஒரு பிளாஸ்ரிக் போத்திலுக்கு 25 சென்ற்.நூறு போத்தில் சேகரிச்சால் எவ்வளவு வருமெண்டு கணக்கு பண்ணி பாருங்கோ.ஜேர்மனியிலை இப்ப எங்கையாலும் ரோட்டிலை தெரிவிலை பிளாஸ்ரிக் போத்தில்களை கண்டனீங்களே? குப்பை தொட்டியிலை கூட ஒரு போத்திலை காணேலாது. இதே மாதிரி உலகம் முழுக்க சட்டம் ஒழுங்கு முறைகளை கொண்டு வந்தால் குப்பைகளும் இருக்காது.கட்டாக்காலி நாய்களும் இருக்காது. கட்டாக்காலி மாடுகளும் இருக்காது. என்ன நான் சொல்லுறது சரிதானே?😎 🤣

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

1 month 4 weeks ago
நீங்கள் சொல்வது உண்மைதான் அதில் மாற்றுக்கருத்து என்னிடம் இல்லை. சாதி மறுப்பு,சாதி ஒழிப்பு என்பது தனியே வெள்ளாளர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. பிராமணர் தொடக்கம் ஏனைய சாதிகள் எனப்படுபவர்களிடமிருந்தும் தொடங்கப்பட வேண்டும். ஜேர்மனியில் சென்ற வாரம் ஒரு பெரிய நகரத்தில் சாதி கலப்பு திருமணம் ஒன்று இனிதே சந்தோசமாக நடைபெற்று முடிந்தது.எனக்கும் அதில் எனக்கும் சந்தோசம்🙏.அங்கே எனக்கு மனதை வருடிய சம்பவம் என்னவெனில்.....நாங்கள் வெள்ளாளருக்குள் சம்பந்தம் முடித்து விட்டோம் என ஒரு சிலர் பெருமைப்பட்டனர். இப்போது நீங்கள் சொல்லுங்கள் சாதி எங்கிருந்து ஒழிக்கப்பட வேண்டும்?

குறளிசைக்காவியம்

1 month 4 weeks ago
தொடர்ச்சியாக குறளிசை காணொளிகள் இணைக்கப்படுகின்றன. சித்திரா அம்மா, சுசீலா அம்மா. நித்யசிறி, சுதா ரகுநாதன் என நாம் அறிந்த ஏராளம் பிரபலங்கள் குரல் கொடுத்துள்ளார்கள். அந்த வரிசையில் இளையராஜாவின் புதல்வி பவதாரிணி அவர்களின் குரலிலும் ஒரு குறள் இன்று பார்த்தேன். பவதாரிணி அவர்கள் மறைந்துவிட்டாலும் அதற்கு முன்னரே அவர் குரலில் குறள் ஒன்று பதிவு செய்யப்பட்டது சிறப்பு.

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

1 month 4 weeks ago
கருத்தடை பண்ணிய நாயை இலகுவில் கண்டு பிடிக்க, காதில் ஓட்டை போடுகிறார்கள் என்பதால்... ஒரு முறை கருத்தடை பண்ணிய நாயை மீண்டும் கொண்டு போக முடியாது. சுவியர்... மேலே நான் பகிடிக்கு எழுதினேன். சீரியசாக எடுக்காதீர்கள். 😂

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது

1 month 4 weeks ago
இந்த வருடம் மே மாதத்தில் டிரம்பிற்கு 1.2 டிரில்லியன் டாலர்களை அள்ளி வழங்கியது கத்தார். அதுமட்டுமா 400 மில்லியன் டாலர் பெருமதியான அதி சொகுசு போயிங் 747-8 விமானத்தை அந்த பைத்தியத்திற்கு பரிசாக வழங்கியது. அதற்கு பரிசாக இன்று, தோஹா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் ட்ரம்பின் அனுமதியோடு அவனது மேற்பாரவையில் சிறப்பாக இடம் பெற்றது. உண்மை உரைகல்

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

1 month 4 weeks ago
அடுத்த முறை கொலிடேக்கு, ஊருக்கு வரும் போது... முதல் வேலையாக உங்கள் வீட்டு பெட்டை நாயை பிடித்து, கருத்தடை ஆபரேஷன் பண்ணி விட்டுத்தான் அடுத்த அலுவல் பார்க்கிறது. இப்ப சந்தோசமா ஏராளன். 😂

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

1 month 4 weeks ago
நாயை.... கடிக்காமல் பிடிக்க, ஒரு ரெக்னிக் இருக்குது. 😂 அந்த ரெக்னிக்கை பாவித்து பிடித்தால்... வாலை ஆட்டிக் கொண்டு சாதுவாக நிற்கும். 🤣

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

1 month 4 weeks ago
ஸ்க்றீன் ஷொட் எடுத்து வைக்கப் போகிறோம் என்பதை @தனிக்காட்டு ராஜா கேள்விப்பட்டால் அடுத்த ஆறு மாதத்துக்கு இந்தப் பக்கம் எட்டியும் பார்க்க மாட்டார். 😂

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

1 month 4 weeks ago
ஆசிய கிண்ண கிரிக்கெட்: ஹொங்கொங்கிற்கு எதிரான போட்டியில் ஆப்கான் அபார வெற்றி Published By: Digital Desk 3 10 Sep, 2025 | 04:49 PM ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி அபுதாபியில் செவ்வாய்க்கிழமை (9) இரவு ஆரம்பமாகியது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, ஹொங்கொங்கை சந்தித்தது. இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆப்கானிஸ்தான் சார்பில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ரமனுல்லா குர்பாஸ் 8 ஓட்டங்களுடனும் இப்ராகிம் ஜட்ரன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து முகமது நபி 33 ஓட்டங்களுடனும் குல்படின் நைப் 5 ஓட்டங்களுடனும் ஆடுகளத்தைவிட்டு வெளியேறினர். 13 ஓவர்களில் 95 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளான ஆப்கானிஸ்தானை செடிகுல்லா அடலும், அஸ்மத்துல்லா ஒமர்ஜாயும் தூக்கி நிறுத்தினர். குறிப்பாக இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஒமர்ஜாய், வேகப்பந்து வீச்சாளர் ஆயுஷ் சுக்லாவின் ஓவரில் ‘ஹெட்ரிக்’ சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து தனது முதலாவது அரைசதத்தை 20 பந்துகளில் எட்டினார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைச்சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். இதற்கு முன்பு முகமது நபி, குல்படின் நைப் தலா 21 பந்துகளில் அரைச்சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. ஒமர்ஜாய் 53 ஓட்டங்களின் (21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில், 20 ஓவர்கள் நிறைவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களை குவித்தது. 3 முறை ஆட்டமிழப்பிலிருந்து தப்பிய செடிகுல்லா அடல் 73 ஓட்டங்களுடன் (52 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். பின்னர் 189 ஓட்டங்களை இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 94 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாபர் ஹயாத் (39 ஓட்டங்கள்), அணித் தலைவர் யாசிம் முர்தசா (18 ஓட்டங்கள்) ஏனையவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பரூக்கி, குல்படின் நைப் ஆகியுார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். https://www.virakesari.lk/article/224749

ஐ.நாவின் தொழில்நுட்ப உதவியுடன் பொறுப்புக்கூறலைத் தொடர இலங்கை உறுதி

1 month 4 weeks ago
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டு பொறிமுறை மூலம் மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்புக்கூறலைத் தொடர இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்குத் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் தற்போது கலந்து கொண்ட அமைச்சர் விஜித ஹெரத், இன்று (10) உயர் ஸ்தானிகர் டர்க்கை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் கூட்டத் தொடரில் சமர்ப்பித்த அறிக்கை குறித்து ஆழமான விவாதம் நடத்தப்பட்டதாக வௌிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து அமைச்சர், இதன்போது விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும், கடந்த கால மனித உரிமை மீறல்களைக் கையாள ஒரு முறையான சுயாதீன விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுவதற்கான வாய்ப்பை இலங்கை இழக்காது என்றும் உயர் ஸ்தானிகர் நம்பிக்கை வௌியிட்டதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmfe4i17p00cqo29nbn82qvb5

ஐ.நாவின் தொழில்நுட்ப உதவியுடன் பொறுப்புக்கூறலைத் தொடர இலங்கை உறுதி

1 month 4 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டு பொறிமுறை மூலம் மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்புக்கூறலைத் தொடர இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்குத் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் தற்போது கலந்து கொண்ட அமைச்சர் விஜித ஹெரத், இன்று (10) உயர் ஸ்தானிகர் டர்க்கை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் கூட்டத் தொடரில் சமர்ப்பித்த அறிக்கை குறித்து ஆழமான விவாதம் நடத்தப்பட்டதாக வௌிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து அமைச்சர், இதன்போது விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும், கடந்த கால மனித உரிமை மீறல்களைக் கையாள ஒரு முறையான சுயாதீன விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுவதற்கான வாய்ப்பை இலங்கை இழக்காது என்றும் உயர் ஸ்தானிகர் நம்பிக்கை வௌியிட்டதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmfe4i17p00cqo29nbn82qvb5

மன்னார் வைத்தியசாலைக்கு புதிய விபத்து, அவசர சிகிச்சை பிரிவு இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம்

1 month 4 weeks ago
10 Sep, 2025 | 04:31 PM மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு க்கு புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் ஒன்றையும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களையும் வழங்குவதற்கு இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காகவும் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (09) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெற்றது. அதற்கமைய சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில் இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம் என சுகாதார அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தார். குறித்த ஒப்பந்தத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கைச்சாத்திட்டனர். ஒப்பந்தத்தின்படி, இந்திய அரசாங்கத்தால் இந்த திட்டத்திற்காக 600 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் அனைத்துப் பணிகளும் 3 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த திட்டத்திற்கு பங்களிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதி பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) வைத்தியர் எஸ். ஸ்ரீதரன், மேலதிக செயலாளர் (மேம்பாடு) சுனில் கலகம, பணிப்பாளர் (திட்டமிடல்) நிபுணர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/224743

மன்னார் வைத்தியசாலைக்கு புதிய விபத்து, அவசர சிகிச்சை பிரிவு இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம்

1 month 4 weeks ago

10 Sep, 2025 | 04:31 PM

image

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு க்கு புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் ஒன்றையும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களையும் வழங்குவதற்கு இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காகவும் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (09) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெற்றது.

அதற்கமைய சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில் இவ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம்  என சுகாதார அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தார்.

குறித்த ஒப்பந்தத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கைச்சாத்திட்டனர். ஒப்பந்தத்தின்படி, இந்திய அரசாங்கத்தால்  இந்த திட்டத்திற்காக 600 மில்லியன்  ரூபா செலவாகும் எனவும் அனைத்துப் பணிகளும் 3 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த திட்டத்திற்கு பங்களிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரதி பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) வைத்தியர் எஸ். ஸ்ரீதரன், மேலதிக செயலாளர் (மேம்பாடு) சுனில் கலகம, பணிப்பாளர் (திட்டமிடல்) நிபுணர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் உள்ளிட்ட பல  பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

4__1_.jpeg

3__1_.jpeg

1__1_.jpeg

2__1_.jpeg

https://www.virakesari.lk/article/224743

ஆஸ்திரேலியாவில் 'அரை முழம் மல்லிகைப் பூவுக்கு 1980 டாலர்'; அபராதம்

1 month 4 weeks ago
விமானத்திலேயே பூச்சூடியபடி தான் பயணித்திருக்கிறார் போல! புறப்பட்ட இடத்தில் கூட விமான நிறுவன ஊழியர்கள் இது பற்றி எச்சரித்திருக்கலாம்.

தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை

1 month 4 weeks ago
தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை Getty Images கட்டுரை தகவல் ரஃபேல் அபுச்சைபே பிபிசி நியூஸ் முண்டோ 13 நிமிடங்களுக்கு முன்னர் இரைப்பை குடல் மருத்துவர் ஜூலியானா சுவாரெஸ் சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்ததைத் தொடர்ந்து, ஓர் முக்கியமான பிரச்னையை கவனித்தார். அது, மக்கள் தங்களின் செரிமான அமைப்பின் செயல்பாடு குறித்து பேசுவதை அசௌகரியமாக உணர்கின்றனர். "அதை அவமானமாக நினைக்கின்றனர்; தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறித்து பேச தயங்குகின்றனர்," என அவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். "இரைப்பை அழற்சி (gastritis), ஹெபடைடிஸ், கணைய அழற்சி (pancreatitis), ரிஃப்ளக்ஸ் (reflux) என பல பிரச்னைகள் குறித்தும் நான் பேசத் தொடங்கினேன். கேஸ்ட்ரோயென்ட்ராலஜிஸ்ட் (gastroenterologist) என்பதைக் கூட பலரால் சரியாக உச்சரிக்க முடியவில்லை." "அப்போதுதான் நான் மலம் குறித்து பேச ஆரம்பித்தேன். மக்கள் அதுகுறித்து எளிதாக பிணைத்துக் கொள்ளும் விதமான தரவுகளை வழங்கினேன். மக்கள் என்னை 'டாக்டர் பூப்' (Dr. Poop) என அழைத்தனர்," என கொலம்பியாவை சேர்ந்த அந்த நிபுணர் விவரித்தார். Dr. Juliana Suárez தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் செரிமான அமைப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மருத்துவர் சுவாரெஸ் அப்போதிலிருந்து, ஜூலியானா சுவாரெஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை (@ladoctorapopo) செரிமான அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பது குறித்தும் மலம் தொடர்பான முக்கியமான உரையாடல்களை நிகழ்த்தவும் பயன்படுத்திவருகிறார். "தி ஆர்ட் ஆஃப் பூப்பிங்: ஹெல்த்தி டைஜெஷன், எ ஹப்பி லைஃப்" ("The Art of Pooping: Healthy Digestion, a Happy Life) எனும் மின்னணு புத்தகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். "நாம் குழந்தைகளாக இருந்தபோது மலம் குறித்த ஒவ்வாமை நமக்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இப்பொது வயதுவந்தவர்களாக நாம் அதுகுறித்து இயல்பாக பேசுவதற்கான வெளி இருக்கிறது." தங்களின் செரிமான ஆரோக்கியம் தொடர்பாக மக்கள் செய்யும் முக்கிய தவறுகள் குறித்தும், எளிதாக மலம் கழிப்பதற்கான சில டிப்ஸ்கள் குறித்தும் அவர் பிபிசி முண்டோவிடம் பேசினார். 1. அதிக உணவுகளை சேருங்கள் Dr. Juliana Suárez மருத்துவர் ஜூலியானா சுவாரெஸின் புத்தகம் தொலைக்காட்சி, இதழ்கள், சமூக ஊடகங்கள் என பலவற்றிலும் பல "அதிசய டயட்கள்" குறித்து குறிப்பிடப்படுவதை நாம் கடந்துவருகிறோம். அவை, சில உணவுகளை நம் உணவுமுறையிலிருந்து நீக்குவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என உறுதி கூறுகின்றன. ஆனால், ஜூலியானா சுவாரெஸ் இதற்கு எதிரான அறிவுரையை வழங்குகிறார்: "உணவு மட்டுமே பிரச்னை அல்ல, ஆனால் ஒவ்வொருவரின் உடலில் உள்ள நுண்ணுயிர்களும் முக்கியம் என நான் மக்களிடம் கூறுகிறேன்." நமது செரிமான அமைப்பில் பல பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் சூழல்தான் நுண்ணுயிர்களாகும், அவை நாம் உண்ணும் உணவை உடைக்க உதவுகின்றன. பலவித சூழலில் தான் நுண்ணுயிர்கள் செழித்து வாழும். சமூக ஊடகங்களில் "நேர்த்தியான உணவுமுறையை" கண்டறிவதில் பலருக்கும் தற்போது இருக்கும் பெரு விருப்பம், பலரையும் பலவித உணவுகளை தங்கள் உணவுமுறையிலிருந்து நீக்க வழிவகுக்கிறது என விளக்கும் அவர், இதனால் நுண்ணுயிர்கள் பலவீனமடைவதாக கூறுகிறார். "பருப்பு அல்லது க்ளூட்டன் (கோதுமை, சோளம் போன்ற உணவுகளில் உள்ள ஒட்டும் தன்மையுள்ள பொருள்) ஆகியவை இதற்கு காரணமல்ல. அவை தீயவை என்ற எண்ணம் உருவாகியுள்ளது. பூண்டும் காரணமல்ல, ஆனால் உணவுமுறையில் போதுமான நார்ச்சத்து உணவுகள் இல்லாதது, மன அழுத்தம், போதியளவு உடற்பயிற்சி செய்யாதது போன்றவற்றால் இந்த குடல் நுண்ணுயிர்கள் பாதிக்கப்படுகின்றன…" Getty Images இயற்கையான உணவுகளை சேர்த்துக்கொள்ளும்போது செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படும் என, மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார் "நீங்கள் மறுபடியும் தேவையானவற்றை உண்ண ஆரம்பிக்க வேண்டும் என்றே நான் அந்த புத்தகத்தில் கூறியுள்ளேன். ஆனால், உங்கள் நுண்ணுயிரிகளை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரிசெய்ய முடியும்." அனைத்து விதமான உணவுகளையும் உணவுமுறையில் சேர்ப்பதற்கு முன்பாக, சிறிது சிறிதாக இயற்கை உணவுகளை சேர்த்து பரிசோதிக்க வேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார்: "பால் சம்பந்தப்பட்ட உணவுகள், அதிக பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, நட்ஸ், விதைகள் உள்ளிட்டவற்றை சேர்க்க வேண்டும்." 2. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள், நேர்த்தியான உணவுமுறை மீது அதீத கவனம் வேண்டாம் Getty Images நல்ல தூக்கமும் செரிமானத்துக்கு உதவும் என்கிறார் மருத்துவர் சுவாரெஸ் உண்ணும் உணவை உடைப்பதுடன் இந்த நுண்ணுயிர்கள், நம் உடலில் நடக்கும் பலவித செயல்முறைகளை கட்டுப்படுத்துவதாக கூறுகிறார் ஜூலியானா சுவாரெஸ். அதாவது நம் மனநிலை முதல் நோயெதிர்ப்பு அமைப்பு வரை அவை கட்டுப்படுத்துகின்றன. எனவே, இந்த நுண்ணுயிர்கள் நம் நலனுக்கு அடிப்படையான அம்சமாக திகழ்வதாக அவர் தெரிவிக்கிறார். "வளர்சிதை மாற்ற ஆரோக்கியம், இதய நலன், ஹார்மோன் நலன், தோல் ஆரோக்கியம் ஆகியவற்றை இவை கட்டுப்படுத்துகின்றன. நுண்ணுயிர்கள் செழித்திருக்க நார்ச்சத்து உணவுகளை பிரதானமாக உண்ண வேண்டும், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அல்ல," எனக் கூறுகிறார் அவர். மேலும், நுண்ணுயிர்கள் வாழும் சூழல், நம் வாழ்வின் பல காரணிகளுக்கு உணர்திறன் மிக்கவையாக உள்ளன. அதாவது மன அழுத்தம், நீண்ட காலமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவது மற்றும் உடலுழைப்பு இல்லாத வாழ்வியல் முறை போன்றவை அவற்றை பாதிக்கின்றன. "பலவித நுண்ணுயிர்களை கொண்டவர்கள்தான் வலுவான செரிமான அமைப்பை கொண்டிருக்கின்றனர், அவர்கள் பலவிதமான உணவுகளை உண்கின்றனர், நல்ல தூக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்." எதை உண்ண வேண்டும், எதை உண்ண வேண்டாம் என்பதில் அதிகமாக கவனம் செலுத்துவது, அதுதொடர்பான பதற்றத்தை ஏற்படுத்தி, உணவை ரசித்து உண்ண முடியாதபடி செய்துவிடும் என ஜூலியானா சுவாரெஸ் நம்புகிறார். "இது நேர்த்தியான உணவுமுறையை பற்றியது அல்ல, சிறப்பானவற்றை தேர்ந்தெடுப்பதை பற்றியது, மேலும், எப்போதும் விதிவிலக்குகளுக்கு இடமிருக்க வேண்டும்." தன்னிடம் வரும் நோயாளிகள் பலருக்கும் அவர்களின் குடல் நுண்ணுயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் எனக்கூறும் அவர், "அவர்கள் கேரட்டுடன் கோழி இறைச்சியை சாப்பிடுவார்கள், ஏனெனில் மற்றவையெல்லாம் ஆபத்தானவை என நினைப்பார்கள்." என்கிறார். "உணவின் காரணமாக அறிகுறிகள் ஏற்படும்போது, செரிமானம் கடினமாகிறது, அப்போதுதான் மக்கள் சமூக வலைதளங்கள், ஊடகங்களை நாடுகின்றனர், உணவை குறைகூறுகின்றனர். அது பதற்றத்தை ஏற்படுத்தி, அதிக உணவுகளை தங்கள் உணவுமுறையிலிருந்து நீக்குவதற்கு வழிவகுக்கிறது." அதை அவர்கள் உணரும்போது, ஆரோக்கியமான நுண்ணுயிர்களுக்கு தேவையான பல உணவுகளை ஏற்கெனவே உணவுமுறையிலிருந்து நீக்கியிருப்பார்கள். 3. உடனடியாக தொடங்குகள், எப்போதும் நிறுத்தாதீர்கள் Getty Images பொம்மை வடிவில் குழந்தைகளுக்கு காய்கறிகளை பழக்க வேண்டும் என, மருத்துவர் சுவாரெஸ் அறிவுறுத்துகிறார் "இந்த பிரச்னைகளுள் பல குழந்தை பருவத்திலிருந்தே தொடங்குகின்றன," என மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார். "குழந்தைகளின் வளர்ச்சியில் சில குறிப்பிட்ட தருணங்கள் உள்ளன, அதாவது மலம் கழிக்க பயிற்றுவிப்பது, இது கடும் அதிர்ச்சியை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்துபவையாக இருக்கும். அல்லது, குழந்தைகளின் உணவில் பழங்கள், காய்கறிகளை சேர்ப்பது, இதுவும் மிகவும் எளிதானது அல்ல." மருத்துவர் சுவாரெஸ் கூற்றுப்படி, குழந்தை பருவத்திலிருந்தே அவர்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு பழக்க பெற்றோர்கள் பெரும்பாலும் தவறிவிடுகின்றனர். அவற்றை பொம்மை வடிவில் வழங்குவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும். "உதாரணமாக, அவகடோவை வைத்து பொம்மைக்கு மாஸ்க் செய்ய வேண்டும், அதை குழந்தைகள் உண்ணப் போவதில்லை, ஆனால் அதன்மூலம் குழந்தைக்கு அவகடோ குறித்து தெரியப்படுத்தி, விளையாடுவதன் மூலம், வளர்ந்தபிறகு தன்னுடைய உணவில் எளிதாக சேர்த்துக்கொள்ளலாம்." புதிய வாசனை, சுவை, பலவித தன்மை (texture) கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வது மிகுந்த பலனளிக்கும்: வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் இதை செய்யலாம் எனக்கூறும் சுவாரெஸ், இது தனக்கே நிகழ்ந்திருப்பதாக கூறுகிறார். "எனக்கு கத்தரிக்காய் (eggplant) பிடிக்காது, ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன்புதான் அதனை சாப்பிட கற்றுக்கொண்டேன். எனக்கு அவகடோ எப்போதுமே பிடிக்காது. ஆனால், அதன் சுவைக்கு நீங்கள் பழகாவிட்டால், அது உங்கள் உணவிலிருந்து வெளியேறிவிடும்." அவரின் கூற்றுப்படி, இத்தகைய புதிய உணவுகள் மூலம் குடல் நுண்ணுயிர்களை பழக்குவதன் வாயிலாக நம்முடைய சுவையையும் நாம் பயிற்றுவிக்கிறோம். "சுவை என்பது நுண்ணுயிர்களை பொறுத்து பெரிதும் கட்டுப்படுத்தப்படுவதால், அதற்கேற்ப மாறுபடுகிறது." 4. உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள் Getty Images ஏராளமான தகவல்களை நம் விரல் நுணியில் வைத்திருந்தாலும், மக்கள் தங்களின் உடல்கள் குறித்து எவ்வளவு குறைவாக அறிந்துவைத்துள்ளனர் என்பதையும் பல விஷயங்களை கேட்பது குறித்து சங்கடமாக உணருவதையும் குறித்து தான் ஆச்சர்யப்படுவதாக மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார். "சரியாக மலம் கழிக்காதவர்கள் தான் உடலை சுத்திகரிப்பது (cleanse) குறித்து கேட்கின்றனர். மனிதர்களாக நம் உடலில் பலவித வேலைகளை செய்யும் உறுப்புகள் உள்ளன; சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் உள்ளன, மேலும் கழிவுகளை கையாளும் பெருங்குடல் உள்ளது." "அதுகுறித்து நாம் தெரிந்துவைத்திருந்தால், உடலை சுத்திகரிக்க வேண்டும் என நினைக்க மாட்டோம், மாறாக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகளை அதிகமாக உட்கொள்வோம், உடற்பயிற்சி செய்வோம், நன்றாக உறங்குவோம், சரியான வழியில் மலம் கழிப்போம்." உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள், தனக்கு என்ன தேவை என்று உங்கள் உடல் தான் முதலில் சொல்லும். "ஜிம் அல்லது வேலைக்கு செல்வதற்காக காலையில் சீக்கிரமாக எழும் பலர் காலை உணவை தவிர்ப்பதை பார்க்கிறோம், அதனால், காலையில் மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் பணியிடங்களில் தான் தோன்றும். ஆனால், "யாராவது முகம் சுளிப்பார்கள்" என நினைத்து அதனை அடக்கிவைப்பார்கள்." "செரிமான அமைப்பு என்பது வாய் மற்றும் ஆசனவாயை இணைக்கும் மிக பிரத்யேகமான குழாய் என்பதை நாம் அறிந்துகொள்ளவில்லை. அதன் வழியாகத்தான் சத்துக்கள் உறிஞ்சப்படுகின்றன, கழிவுகள் உற்பத்தியாகின்றன. தினந்தோறும் கழிவுகளை வெளியேற்றாவிட்டால், மலம் கழிக்க போதிய நேரம் ஒதுக்கவில்லை என்றால், நீங்கள் பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c147nnmnxxpo