Aggregator

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

2 months ago
அவர்கள் அங்குமிங்கும் பார்வையாளராகவும் பங்குதாரராகவும் இருந்து தம்மை வளப்படுத்த நினைக்கிறார்கள். ஹிஸ்புல்லா அறிக்கையை, அண்மையில் ஹக்கீமின் கருத்தை பார்த்தால் புரியும். இந்துக்கோவிலை அழித்து மீன் சந்தை, தமிழர் நிலத்தில் தமது ஆதிக்கம், அதற்கு விசேட அதிகாரம். எங்கிருந்து கிடைத்தது, ஏன் கிடைத்தது? தமிழர் தாக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, போராடி தமது விடுதலையை தேடுகிறார்கள், இவர்கள் சும்மாவிருந்து சுகம் தேட நினைப்பது எந்த விதத்தில் நிஞாயம்? அவர்கள் அடித்துக்கொள்கிறார்கள், அணைக்கிறார்கள் இதில் நமக்கென்ன? கோத்தாவின் ஊர்காவற்படையில் இருந்து தமிழரை அழித்தது யார்? ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை நடத்தி கோத்தாவை அரியணை ஏற்றியது யார்? அவர்கள் நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று. முஸ்லிம்களுக்கும் சிங்கள அரசுக்குமிடையில் 98% உடன்பாடுள்ளது, முஸ்லிம்களுக்கும் தமிழ் பேரினவாதிகளுக்குமிடையில் 98% முரண்பாடுள்ளது என்கிறார் முபாரக் அப்துல் மஜித். முஸ்லீம் ஆண்கள் சிங்களப்பெண்களை மணந்து தங்களோடு இணைந்து வாழ்வதாக சிங்கள அரசியால்வாதியொருவர் கூறுகிறார், பிறகேன் அவர்களுக்கு ஒரு தனியலகு? அவர்கள் கிழக்கில் தங்கள் வியாபர தலங்களை, மத வழிபாட்டு தலங்களை சுதந்திரமாக அமைக்கிறார்கள், தமிழர் நிலங்களை பறிக்கிறார்கள், தமிழர் அப்படி செய்ய முடியுமா? அவர்களுக்கு என்ன பிரச்சனை? தமிழரை எதிர்த்து, அழித்து, தம் இருப்பை தக்க வைத்துக்கொள்கிறார்கள். தமிழர் பிரிந்து போனால், அடுத்த குறி தாம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர்கள் எங்களோடு சேர்ந்து வாழவும் மாட்டார்கள், பிரிந்து போகவும் விடமாட்டார்கள்.

வல்வெட்டித்துறை பொலிசாரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய பெருமளவு போதை மாத்திரைகள்.

2 months ago
வல்வெட்டித்துறை பொலிசாரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய பெருமளவு போதை மாத்திரைகள். நேற்று முன்தினம் (2025.10.30) வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களான திசாநாயக்க, கிறிஷாந்த ,லக்மால்,தர்ஷன் ஆகியவர்களினால் நடாத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையினால் கொற்றாவத்தை பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் காலை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை (30) அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபடுவது தொடர்பாக விஷேட செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் பாராட்டபட வேண்டியது. Vadali Media News & media website

வல்வெட்டித்துறை பொலிசாரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய பெருமளவு போதை மாத்திரைகள்.

2 months ago

வல்வெட்டித்துறை பொலிசாரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய பெருமளவு போதை மாத்திரைகள்.

நேற்று முன்தினம் (2025.10.30) வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களான திசாநாயக்க, கிறிஷாந்த ,லக்மால்,தர்ஷன் ஆகியவர்களினால் நடாத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையினால் கொற்றாவத்தை பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் காலை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமை (30) அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபடுவது தொடர்பாக விஷேட செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் பாராட்டபட வேண்டியது.

Vadali Media

News & media website


யாழ் . மாநகர சபையின் சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது

2 months ago
யாழ் மா நகரசபைக்குள் ஒரு கறுப்பாடு இல்லாமல் சபையின் பதிவேடுகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்க முடியாது. அது போக சிவஞானம் அவர்கள் உண்மையில் நடந்தது என்ன என்பதை விளக்கி இந்த விடயத்தில் தான் அறிந்தவற்றை தெட்ட தெளிவாக பொதுவெளியில் சொல்லவேண்டும். ஆதனத்தின் விலாசம், அந்த இடத்தில் இப்போது இருக்கும் வியாபார இஸ்தாபனத்தின் பெயர், கட்டிடத்தை கொள்வனவுசெய்த காலத்தில் நகரசபையில் யார் யார் பொறுப்பில் இருந்தார்கள் என்ற விபரம் துல்லியமாக குறிப்பிட வேண்டும். அதை விடுத்து கிழக்கு மேற்கு என்று குறிப்பிடுவது வேலைக்கு ஆகாது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months ago
இல்லவேயில்லை. ஒருவித அசௌகரியமும் இல்லை. எனது கருத்து, அவவை தனியொருவராக சுட்ட முடியாது என்பதே. அவர்கள் அணியாகவே அப்படித்தான் லிளையாடினார்கள். இந்தியா இவ்வாறு பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கவில்லையோ என்னமோ. இனிவரும் அவர்களின் பேட்டிகளைப் படித்தால்த்தான் புரியும். அவுஸ்ரேலியரின் அணுகுமுறை தெரியும்தானே. அவர்கள் சுதாகரிப்பதுக்குள்ளேயே இந்தியா நன்றாகக் காலூன்றி விட்டது. அந்த ஒரு பிடி குடுத்ததைத் தவிர, ஜெமைமாவும் உறுதியாகவே விளையாடினா. ஒரு கட்டத்தில் ஒன்று ஒன்றாக ஓடத்தொடங்கினா. பின்னர்தான் அவ சொன்னா. அந்த நேரத்தில் தனக்கு தடுமாற்றம் வந்தது என்றும் சுலோகங்கள் சொல்லத் தொடங்கியது என்றும். இப்போது யோசிச்சுப் பார்த்தால், அது ஒரு நல்ல அணுகுமுறை. கோலியின் அணுகுமுறை.

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

2 months ago
இதுதான் அய்யா அவர்கள் குணம் ...எமது இனப்பிரச்சினை விசயத்திலும் இதைத்தான் செய்கின்றார்கள் ... தை விளங்கிக் கொண்டும் நாம் முட்டுக் கொடிக்கப் போனால் மூக்குடைவது நமது இனம்தான் ...நீதி என்றால் அவர்களுக்குவேப்பங்காய்....சுயநலம் என்பது இரத்தத்தில் ஊறிய்தொன்று....உதாரணம் அவையின் இடப்பெயர்வில் ஆண்டுகள் பல் முடிந்துவிட்டாலும் ...இப்பவும் பல புதுப்புது விடையங்களை கொண்டுவந்து ...எம்மை கீழ்நிலைக்கு கொண்ட்வருவதே நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்....எம்மில் பிழையிருக்கலா ம்....அதனை நாம் இங்கு பதிவிடுவதால் ...அவர்களுக்கே நாம் தீனி போடுகிறோம்...என்னை பொறுத்தவரை யாழில் இப்படியான செய்திகளை இணைத்து ...அதிகப்படியான நன்மைகள்தான் அடைகின்றார்கள் என்பது என் கருத்து...

பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...

2 months ago
என்னைய்யா புதுசாய் கிடக்கிது. நாங்கள் படிக்கும் காலத்தில் இப்படி எல்லாம் இல்லையே. மிஞ்சி மிஞ்சி போனால் சாமி படம் பார்க்க திரை அரங்கிற்கு கூட்டி செல்வார்கள். அல்லது அருகில் உள்ள கோயில்கள் ஏதாவதற்கு விசேட நாட்களில் செல்வோம். சபரிமலை கீரிமலைக்கு பக்கத்திலா உள்ளது? கொஞ்சம் பெரிசாய்த்தான் செய்யிறாங்கள். எல்லாரையும் ஐயப்பன் தான் காப்பாற்ற வேண்டும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months ago
உங்களுக்கு போட்டி பற்றிய தெளிவு உள்ளது என தெரியும், அந்த போட்டியில் அவரது களத்தடுப்பு ஒரு தற்காப்பு களத்தடுப்பாக இருந்தது, பொதுவாக அப்படி களத்தடுப்பினை அவர் போடுவதில்லை, அதனை பார்த்த போது அவுஸ்ரேலிய அணிக்கு கூட நொக்கவுட் போட்டி அழுத்தத்தினை கொடுக்கிறது என புரிந்து கொள்ள முடிந்தது, போட்டியினை முழுமையாக பார்க்கவில்லை, நிங்கள் போட்டியினை முழுமையாக பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன் உங்கள் கருத்து சரியாக இருக்கும் என கருதுகிறேன். அத்துடன் இதனை ஒரு குறையாக கூறவில்லை போகிற போக்கில் கூறிய விடயம். நான் விளையாடின காலகட்டத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு களத்தடுப்பில் மிக சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது, அது எனது பார்வையினை பெரிதாக மாற்றியிருந்தது, இவ்வாறான ஆர்வங்கள் பற்றிய ஒரு கருத்தாடல்தான் எனது பதிவு, நான் எனது கருத்தினை நியாயப்படுத்துவதற்காக எழுதவில்லை, அனைத்து விடயங்களும் விமர்சனத்துக்குள்ளாக வேண்டும் , நிங்கள் கூறுவதும் தவறில்லை, அத்துடன் இது ஒரு விளையாட்டு திரி ஆனால் சில கருத்தாடல்கள் சிலநேரங்களில் தேவையில்லா அசெளகரியங்களை உருவாக்கிவிடும், அவ்வாறான ஒரு சூழ்நிலைக்குள் உங்களையும் கள உறவுகளையும் தள்ளிவிட்டுள்ளேன் என புரிகிறது.

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

2 months ago
எனது வேலையில் ஒரு இந்திய இஸ்லாமியர் வேலை செய்கிறார், அவர் தொழுகைக்கு செல்லும் போது கழிப்பறைக்கு செல்வதாக சொல்லிவிட்டு செல்வார், அதனை உணர்ந்ததால் அவரிடம் எப்போதும் வேண்டுமானாலும் சென்றுவாருங்கள் என கூறியிருந்தேன். வேலையில் அனைவருக்கும் கடைசி ஓய்வு எடுக்க விருப்பம், அவருக்கும் அந்த விருப்பம் இருந்தது அதனால் எப்போதும் கடைசியாக போக விரும்புவார் பொதுவாக என்னுடனேயே வேலை செய்ய விரும்புவார், அதற்கு காரணம் பல நாள்களில் அவர் உபவாசம் இருப்பததால் பெரிதாக வேலை செய்யமாட்டார், அந்த வேலைகளையும் சேர்த்து நானே செய்வதுண்டு. இரண்டு வாரத்திற்கு முன்னர் முதலாவது ஓய்விற்கு சென்றுவிட்டேன், மறு நாள் கடைசி ஓய்விற்கு சென்றுவிட்டேன் (அணித்தலைவர் முடிவு) அதனால் அவர் என்னுடன் கதைக்கவில்லை. நான் அதனை திட்டமிட்டு செய்யவும் இல்லை ஆனால் அவருக்கு அது தெரிந்திருந்தும் எனது தவறாக எனக்கு சித்தரித்துக்காட்ட முயல்வதற்காக அவ்வாறு செய்தார் என கருதுகிறேன், இரண்டு மூன்று தடவை வேலை விடயமாக கதைத்த போது கூட பதில் கூறவில்லை, அதன் பின்னர் அவரை அப்படியே விட்டு விட்டேன் பின்னர் தானாக வந்து பேசுகிறார். அதனாலேயே அவ்வாறு பதிலளித்தேன்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months ago
குற்றச்சாட்டு என்பதைவிட, புரிதல் இல்லாததுதான் அயர்ச்சி அளிக்கிறது. வேறொன்றும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, தேசிய அணியில் விளையாடும் ஒவ்வொருவரும் பெரு வீரர்களே. என்னை விட பல பல மடங்கு உயர்ந்தவர்கள். அந்த மரியாதை எப்போதும் உண்டு. அணித்தலைமை பற்றி நீங்கள் சொன்னது ஒரு நல்ல பார்வை. புரிகிறது.

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

2 months ago
3. நான் பேசிப்பார்த்தவரை பல முஸ்லிம்களின் மனநிலை - சிங்களவரும் தமிழரும் ஒன்றே என்பதே. இது அவர்கள் மத அடிப்படையில், அனுபவ அடிப்படையில் அடைந்த முடிவு. இதில் நாம் முரண்படலாம். ஆனால் முடிவை திணிக்க கூடாது. திணிக்க முடியாது என்பதே கள யதார்த்தம்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months ago
ஜெமைமாவும் லிச்பீல்டும் களத்தடுப்பினை நெருக்கடிக்குள்ளாக்கினார்கள், ஜெமைமாவின் இனிங்ஸ் எந்த நேரத்திலும் அவுட்டாகி விடுவாரோ எனும் பயத்தினை ஏற்படுத்தியது, ஆனால் லிச்பீல்ட் மிக இயல்பாக சிறப்பாக விளையாடினார், அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months ago
உண்மைதான். அவ மிக வேகமாக சதமடித்தா. 75 சொச்ச பந்துகளில்.ன என்று நினைக்கிறேன். அதனாற்தான் ஒரு நேரத்தில், அவுஸ்ரேலியா 350க்குக் கூடுதலாக அடிக்கக் கூடிய நிலையில் இருந்தது. கிரிக்கின்போ தளத்தில் அவவைப் பற்றியும் எழுதியிருந்தார்கள்.

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

2 months ago
கொஞ்சம் ஒரு முஸ்லீமாக இருந்து யோசித்து பாருங்கள். இது பச்சோந்திதனம் அல்ல. தம் இனத்தின் நல்வாழ்வுக்கு எது தேவை என்ற சுய நலன் மட்டுமே. சிங்களவன் எம்மைத்தான் அடித்தான். அவர்கள் ஏன் அதற்கு சிங்களவனோடு முண்ட வேண்டும்? கோட்டா காலத்தில் அவர்கள் தாக்கப்பட்ட போது நாம் பார்வையாளராத்தான் இருந்தோம் இல்லையா? சிங்களவர்-முஸ்லிம்களின் 1900 களில் ஏற்பட்ட பிணக்கை, முஸ்லிம் விரோதமாக, சிங்களவர் ஆதரவாக தீர்க்க உதவினார் என்றுதானே இராமனாதனை மனிதர்கள் வண்டி இழுத்து போனார்கள்? முஸ்லிம்கள் நாடெங்கிலும் பரந்து வாழ்கிறார்கள். எம்மைபோல் நாட்டில் எங்கு வாழ்ந்தாலும் வடக்கு அல்லது கிழக்கில் “அடி” உடையோர் அல்ல அவர்கள். அவர்களில் பலருக்கு பேருவளையும், காலியும், வெலிகமவும், இன்ன இடங்களும்மே சொந்த இடங்கள். எனவே அவர்கள் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை. இதை எப்படி பிழை என்றோ, பச்சோந்திதனம் என்றோ கூற முடியும். அவர்கள் தமது இனநலன் கருதியே செயல்படுகிறனர். அவர்களை பொறுத்தவரை: தற்போது இருப்பது அல்லது 1948 இன் பின் இருப்பது போல இருக்க சம்மதம். அதாவது சிங்கள மேலாண்மையின் கீழ் இருக்க சம்மதம். ஆனால் தமிழர் மேலாண்மையின் கீழ் இருக்க சம்மதம் இல்லை. தமிழருக்கு ஒரு அலகு கொடுக்கின், எமக்கும் அதுபோல் வேண்டும். இதில் என்ன தவறு உள்ளது. அவர்கள் மிகதெளிவாக தமது இனநலன் சார்ந்து கூட்டு முடிவெடுக்கிறார்கள். நாம் அவர்கள் எமது இனநலனுக்கு முடிவை மாற்றி எடுக்க வேண்டும் என நினைப்பதுதான் தவறானது. பிகு 1. நாட்டை பிரித்து அதில் ஒரு துண்டை எமக்கு தாருங்கள் என எந்த முஸ்லீமும், எப்போதும் கோரவில்லை. மாறாக நாட்டை பிரிக்காமல் தமிழருக்கு இனப்பரம்பல் அடிப்படையில் ஒரு அலகை கொடுக்கின், எமக்கும் அப்படியே தாருங்கள் என்பதே அவர்கள் கோரிக்கை. அதேபோல் சிங்களவர் அவர்களை அடித்த போதும், முஸ்லிம்கள் நாமும் தமிழர் என எம்மிடம் உதவி கோரவில்லை. உங்களை போல நாமும் ஒரு சிறுபான்மை இனம் என்றே சொன்னார்கள்.

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

2 months ago
ஆட்கடத்தற்காரர் ஆசை காட்டி அவர்களை ஆபத்தில் சிக்க வைக்கின்றனர். ஆட்கடத்தற்காரர் கைது செய்யப்பட்டு இந்த மரணங்களுக்கு பொறுப்பு கூற வைக்கப்படவேண்டும்.

"என் பிறந்த நாளில் மனதில் உதித்தது" / "A memory touched my heart on my birthday" [01/11/2025]

2 months ago
"என் பிறந்த நாளில் மனதில் உதித்தது" / "A memory touched my heart on my birthday" [01/11/2025] இன்று இன்னுமொரு அகவை நாள் மெழுகுவர்த்தி தவிர்த்து தெளிவைத் தேடுகிறேன் மனதில் ஒளியை ஏற்றி உண்மை தேடுகிறேன் கடந்த பாதையை மீண்டும் பார்க்கிறேன்! சில நேரங்களில் நான் சிரித்துக்கொண்டே சில நேரங்களில் நான் அமைதியாக அதிகம் பேசும் நண்பனைப் போல வாழ்வு எனக்கு துணையாய் வந்தது! அழகான வாழ்வு முடிவுக்கு பயணிக்குது அன்பான இதயங்களை எண்ணிப் பார்க்குது அதிகாரம் செலுத்திய நாட்களும் உண்டு அறிவுகொண்டு உணர்ந்த இரவும் உண்டு! ஆரம்பித்த எதுவும் முடிவு காணும் ஆத்திரம் குறைத்தால் வாழ்வு சிறக்கும் ஆசை கொண்டு ஈடுபட வேண்டும் ஆணவம் துறந்து செயல்பட வேண்டும்! இன்பம் துன்பம் சம பங்கே இரண்டும் நாமே உருவாக்கிய பாதைகளே இதயம் திறந்து வரவேற்கப் பழகு இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதைத் தவிர்! ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே ஈகை ஆன்மாக்களுக்கு இடையிலான பாலமே ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன் ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை! உயர்ந்த நோக்கம் மனதில் எழுக உண்மை கெடாமல் ஒப்பந்தம் செய்க உயிர் பிரிந்தால் திரும்ப பிறக்காது உங்கள் துணையாக நேர்மை இருக்கட்டும்! ஊக்கம் இல்லையேல் தோல்வி நிச்சயம் ஊடல் இல்லையேல் கூடல் சுவைக்காது ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் ஊமை வாழ்வு பிணத்துக்கு சமமே! எய்யாமை எவருக்கும் கேடு தரும் எதிரொலித்து உன் பலவீனத்தை காட்டிவிடும் எழுச்சி கொண்ட வாழ்வை அமை எரிவனம் போவது எவருக்கும் திண்ணம்! ஏழை பணக்காரன் தற்கால நிலைதான் ஏற்ற இறக்கம் வாழ்வின் இசைதான் ஏமாற்றம் நிறைந்தது இந்த உலகம்தான் ஏணியின் கடைசிப் படி சுடுகாடுதான்! ஐதீகம் என்றாலும் திருப்பிக் கேள் ஐயம் தவிர்த்து துணிந்து நில் ஐம்புலனை அடக்கினால் மதி கெடும் ஐயனே நெறிப்படுத்தி அறிவை வளர்த்திடு! ஒடுங்கி வாழ்வது வாழ்க்கை அல்ல ஒண்டிக்கட்டை ஆனாலும் நிமிர்ந்து நில் ஒரு விளக்காய் என்றும் இருந்து ஒளிர்ந்திடு அணையாத வழிகாட்டும் சுடராக! ஓதுபவன் சொல்வதை அறிந்து கேளு ஓந்தி போல நிறம் மாறாதே ஓசையுடன் அன்று அழுது பிறந்தாய் ஓரமாய் இன்று ஒதுங்கிப் போறாய்! உண்மை தேடி உலகம் சுற்றினேன் வேஷம் போட்ட மனிதர் கண்டேன் காசுக்கு மாறும் காதல் கண்டேன் பேராசையால் உடையும் ஒற்றுமை கண்டேன்! ஒற்றுமை கொண்ட தமிழர் தேடினேன் மரண வீட்டிலும் வேற்றுமை கண்டேன் சாதி மதம் கடந்து இனம் ஒன்றாகட்டும் அதுவே நம் விடுதலையின் விதையாகட்டும்! ஆலம் விழுதின் அற்புதம் பார் தாங்கி நிற்கும் உறுதியைப் பார் இடர் பல எமக்கு வந்தாலும் இணை பிரியா ஒற்றுமை காண்! நானாய் வாழ முடிவு எடுத்தேன் சாதி சமயம் இரண்டும் தவிர்த்தேன் சகோதரர்கள் & சகோதரி கனவில் வந்தினம் பெற்ற அனுபவத்தை எனக்குத் தந்தினம்! ராமனை வெறுத்து சீதை பூமியுள் குதித்தாள் யுத்தத்தை வெறுத்து சித்தார்த்தன் புத்தனான் அன்பை போதித்து சமயம் பல பிறந்தாலும் சமயம் வளர்க்க அரசு கொலை செய்யுது! ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை இருந்ததும் இல்லை நிலமும் இல்லை மண்ணில் புதைந்த மைந்தர்களின் குரல் என் இதயத்தில் இன்னும் முழங்குகிறது! கார்த்திகை தீபம் அன்றும் ஏற்றினோம் நடுகல் நட்டு வாழ்த்தி வணங்கினோம் நீதிவேண்டி கண்ணகி சிலம்பை உடைத்தாள் காதுகேளாத உலகில் நியாயத்திற்காக அழுகிறோம்! விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும் தட்டிக் கேட்டும் பெற வேண்டும் நன்னெறி என்றும் நிலைக்க வேண்டும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வே! ஒன்றாய் கூடு உண்மையை உரை நியாயம் நிறுத்து விசாரணை எடு கவலை மறக்க தீர்வைத் தா கேள்வி கேட்டு நடுகல் முழங்குது! என் பிறந்தநாளைக் கொண்டாடும்போது என்னை நினைத்தேன் சிரிப்பு வருகுது அவளை நினைத்தேன் அழுகை வருகுது மரணத்தை நினைத்தேன் மகிழ்ச்சி வருகுது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] On this birthday of mine, I look not for candles, but for clarity. Life has walked beside me, sometimes smiling, sometimes silent— like a friend who knows too much to speak. The beautiful life I began now walks toward its close, counting not wealth, but the hearts it has touched. There were days when I ruled with pride, and nights when wisdom ruled me back. Everything that begins must end, but endings are not always defeat— if anger softens, the soul shines clearer, if ego falls, the human rises. I have seen joy and sorrow in equal share, but both were chosen roads of my own making. Open your heart, tell yourself— welcome what comes, and let go of what never was. Faith—yes, it is only a hope that breathes, and charity—only the bridge between souls. I write these words as the sky burns with evening light, until my own fire joins that distant blaze. Let noble dreams rise in the mind, let truth guard every pact you sign. Life will not return once it departs— so let honesty be your final companion. Without courage, failure is certain, without love, union is hollow. He who quarrels with his own people kills his roots before his death. Rich and poor, all stand on temporary ground— ups and downs, a rhythm we must dance. Deceit and loss are teachers too, and even the ladder to the grave has rungs of habit. Do not live folded or afraid; raise your head, even if alone. Be the lamp that burns and teaches light— the “guiding flame” that never dies. I learned from reading, from wandering, from wounds. I sought truth across oceans, and found masks upon men, love traded for coins, and unity broken by greed. I searched for a united Tamil people I found diversity even in the house of death Let the race be one, transcending caste and religion Let that be the seed of our freedom Tamil, rise beyond faith and frontier, be one heart, one hand, one song. Like the banyan root that never breaks, stand firm, even when storms rise. I chose to live as myself no caste, no creed, no hate My brothers and sister visit me in dreams offering me the experiences they had Sita leapt from a world of lies, Buddha turned from war to truth, Religion was born to teach love, but men used it to sharpen swords. I have no mother now, no wife beside, no land to claim The voice of the children buried in the soil Still rings in my heart We lit lamps in Kartikai nights, we planted stones for heroes lost. Kannagi broke her anklet for justice, and still we cry for fairness in a deaf world. We must learn to yield yet live, to ask yet earn, to build a just path that stays. When united, life itself becomes victory. Let us speak the truth together, demand reason, seek remedy, for even the stones of the grave ask questions, and echo with our unfinished songs. Today, as I celebrate my birthday, I smile when I think of myself, I weep when I think of her, I burn with the world’s injustices, and yet— I find joy when I think of death, for it too is but another homecoming. Kandiah Thillaivinayagalingam Athiady, Jaffna. "என் பிறந்த நாளில் மனதில் உதித்தது" / "A memory touched my heart on my birthday" [01/11/2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/32134260759555821/?

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

2 months ago
சிங்களவரால் தமிழ் மக்கள் கொலை செய்யப்படும்போது பார்வையாளர், கொள்ளையடிக்கப்படும்போது பங்குதாரர், போர் நடக்கும்போது நாடு இரண்டுபடக்கூடாது, தமிழர் அடிமைகளாக நடத்தபடவேண்டும் தாம் பாதிக்கப்படக்கூடாது ஆகவே தோள் கொடுப்பது. தமிழர் தீர்வு கேட்கும்போது நமக்கும் ஒரு அலகு வேண்டும். அப்போது நாடு இரண்டுபடாது? சிங்களம் அவர்களை அடிக்கும் போது குரல் கொடுக்க, தோள் கொடுக்க தமிழன் வேண்டும். ஏனெனில் தாமும் தமிழராம். சுத்த பச்சோந்தித்தனம்!

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் - டொனால்ட் ட்ரம்ப்

2 months ago
நியோலிபரலிசம் ஒரு தங்கு தடையற்ற வர்த்தக கொள்கையினை கொண்டது அதன் மூலம் பெரிய நிறுவனங்களின் பிடி நாட்டில் இருந்து கொண்டிருந்த நிலை அமெரிக்காவில் மாற்றம் பெற்றுக்கொண்டுள்ளது, நிவிடாவின் சிப்புக்களை சில நாடுகளுக்கு விற்பதற்கு இந்த அதிபர்கள் தடைசெய்கின்ற நிலை உருவாகியுள்ளது, இது ஆட்சியாளர்களின் மீதான முதலாளிகளின் பிடி தளர்விற்கான அறிகுறியாக இருக்கும் அதே வேளை மறுபுறம் நியோலிபரலிசத்தினால் உருவான நியோகாலனித்துவம் உலக நாடுகளில் பெரிதான் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கி விட்டுள்ளது. இன்னுமொரு தவணை ட்ரம்ப் அதிபரானால் அது மேலும் வர்த்தக நிறுவனங்களை நெருக்கடிக்குள்ளாகும், முதலாளிகள் இதனை தொடர்ந்தும் அனுமதிப்பார்களா என தெரியவில்லை.