Aggregator
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!
கிளிநொச்சியில் ஆடை தொழிற்சாலையில் ஒன்றரை வருடமாக நடந்த திருட்டு அம்பலம் - இருவர் கைது!
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
கிளிநொச்சியில் ஆடை தொழிற்சாலையில் ஒன்றரை வருடமாக நடந்த திருட்டு அம்பலம் - இருவர் கைது!
கிளிநொச்சியில் ஆடை தொழிற்சாலையில் ஒன்றரை வருடமாக நடந்த திருட்டு அம்பலம் - இருவர் கைது!
Published By: Digital Desk 1
13 Jan, 2026 | 01:59 PM
![]()
கிளிநொச்சியிலுள்ள தனியார் தொழிற்சாலையொன்றில் சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஆடைகளை ஒன்றரை வருடமாக மோசடியாக திருடி வந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் 18.03.2024 முதல் 29.05.2025 வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்கள் 27 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மாவனெல்ல மற்றும் கெடஹெத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (13) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத்திணைக்களம் மேற்கொண்டு வருகி
கிளிநொச்சியில் ஆடை தொழிற்சாலையில் ஒன்றரை வருடமாக நடந்த திருட்டு அம்பலம் - இருவர் கைது! | Virakesari.lk
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!
13 Jan, 2026 | 04:21 PM
![]()
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங் (Julie Chung), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
இந்த சந்திப்பு மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, ஜூலி சாங்கின் சிறப்பான பணிகளுக்கு நன்றி தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, அவரது எதிர்கால பணிகளுக்காக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்! | Virakesari.lk
தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில் முதலிடுவதற்கு ஊக்குவியுங்கள் - தமிழக அரசிடம் கனேடிய எம்.பி. ஜுவனிதா நாதன் வலியுறுத்தல்
தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில் முதலிடுவதற்கு ஊக்குவியுங்கள் - தமிழக அரசிடம் கனேடிய எம்.பி. ஜுவனிதா நாதன் வலியுறுத்தல்
13 Jan, 2026 | 05:43 PM
![]()
இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என நம்புகிறேன். அதற்கமைய தமிழக வணிகர்கள் இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தமிழ்நாட்டு அரசு ஊக்கமளிக்கவேண்டும் என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் வலியுறுத்தியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் தமிழக அரசினால் திங்கட்கிழமை (12) சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அயலகத்தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக்கொண்ட கனேடிய பாராளுமன்ற உறுப்பினரான ஜுவனிதா நாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழரின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடும் உலக அயலகத் தமிழர் தினம் 2026 க்கு என்னை அழைத்தமைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழராக கனேடிய மண்ணின் மக்கள் சார்பில் இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியையும் பெருமிதமும் அடைகிறேன்.
தமிழர்கள் உலகம் முழுவதும் பெரும் ஆளுமையாக வளர்ந்து வருகிறார்கள். அயலக தேசங்களில் தமிழ் மரபு, பண்பாடு மற்றும் மொழியைப் பாதுகாத்தும், வளர்த்தும் வருவதில் புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு. அதுமாத்திரமன்றி வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளிலும் தமிழர்கள் உலகம் முழுவதும் பெருமளவுக்கு முன்னேறி வருகின்றனர். இவ்வாறு பல வழிகளிலும், பல்வேறு துறைகளிலும் புலம்பெயர் தேசங்களில் தமிழர் மரபையும், திறனையும், ஆளுமையையும் கட்டிக்காத்து வளர்ந்துவரும் தமிழர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் வகையில் இந்த நிகழ்வை ஒருங்கிணைந்து நடாத்தி வருவதற்காக தமிழ்நாடு அரசுக்கு எனது பாராட்டுக்களைக் கூறிக்கொள்கிறேன்.
கனடா மற்றும் இந்திய 75 ஆண்டுகளுக்கும் மேலாக வலுவான தூதரக உறவுகளைப் பேணிவருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் கனடா - இந்தியா உறவு வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு என்பவற்றின் ஊடாக மேலும் வலுவடைந்து வருகிறது. இவ்விடயத்தில் கனேடிய அரசாங்கம் தொடர்ந்தும் இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் செயற்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பொருளாதார உறவுகளில் தமிழ்நாடும் கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ்ச்சமூகமும் முக்கிய பங்களிப்பை வழங்கமுடியும் என நான் நம்புகிறேன். கனடாவில் இலங்கையிலிருந்து குடியேறிய கணிசமான எண்ணிக்கையிலான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஈழத்தமிழர்களாக இருந்தபோதும் தமிழர்களாக இவர்கள் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுடன் பிரிக்கமுடியாத உறவை மொழி சார்ந்தும், பண்பாடு சார்ந்தும் பகிர்ந்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் சுமார் 10 கோடி தமிழர்கள் வாழும் நிலையில், கனடா மிகப்பெரிய புலம்பெயர் தமிழ்ச்சமூகமாகக் காணப்படுகிறது. இந்நிலையில் கனேடிய தமிழர்களும் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து உலகத் தமிழ்ச்சமூகத்தின் பண்பாடு, மொழி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை வடிவமைப்பதில் அர்த்தமுள்ள பங்கை வகிக்க முடியும் என நான் நம்புகிறேன். அதேவேளை இதனூடாக நாம் வாழும் நாடுகளின் தேசிய அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கும் இதன்மூலம் பங்களிப்புச் செய்யமுடியும்.
அதேபோன்று ஈழத்தமிழ் அகதிகளுக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் வழங்கிவரும் உதவிகள் மிகமுக்கியமானவையாகும். ஈழத்தமிழராக கனேடிய மண்ணுக்குப் புலம்பெயர்ந்து, இன்று கனடாவின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள நான், தமிழ்நாடு அரசு ஈழத்தமிழ் அகதிகளுக்குச் செய்த ற்றும் செய்கின்ற சகல உதவிகளுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் தமிழ்நாடு பொருளாதார செயற்பாடுகளில் முன்மாதிரியாகவும், சிறப்பாகவும் வளர்ந்து வருகிறது. அதனை சாத்தியமாக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு எனது பாராட்டை வெளிப்படுத்துகிறேன். அதேவேளை மறுபுறம் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என நம்புகிறேன். அதற்கமைய தமிழக வணிகர்கள் இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தமிழ்நாட்டு அரசு ஊக்கமளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் தமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பமுடியும் என்பதுடன் அதனூடாக தமிழ்நாடும் நன்மையடைய முடியும். இதற்கான நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு கனேடிய தமிழர்கள் உட்பட புலம்பெயர் தமிழ்ச்சமூகங்கள் அனைத்தும் இணைந்து செயற்பட முன்வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றார்.
தமிழக வணிகர்களை வட, கிழக்கு மாகாணங்களில் முதலிடுவதற்கு ஊக்குவியுங்கள் - தமிழக அரசிடம் கனேடிய எம்.பி. ஜுவனிதா நாதன் வலியுறுத்தல் | Virakesari.lk
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு
தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு
தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 வரை ஒத்திவைப்பு
Jan 13, 2026 - 02:20 PM
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், 1 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு எவ்வித மாற்றமுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய 6 ஆம் தர ஆங்கிலக் கற்றல் தொகுதி (Module) தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு முன்னெடுத்த விசாரணை அறிக்கைகளின் முடிவுகளின் அடிப்படையில், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக தேசிய கல்வி நிறுவனத்தின் நிருவாக சபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இங்கு குறிப்பிட்டார்.
அதற்கமைய,
01.மனிதவள மேம்பாடு
02.உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள்
0.3மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு நடவடிக்கைகள்
04.பாடத்திட்ட மேம்பாடு
05.பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு ஆகிய 5 முக்கிய தூண்களின் அடிப்படையில் குறித்த கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவின் PSLV விண்வெளி திட்டம் தோல்வி
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
இரானுக்கான ராணுவ திட்டங்கள் பற்றி டிரம்புக்கு விளக்கம் – என்ன நடக்கிறது?
இரானுக்கான ராணுவ திட்டங்கள் பற்றி டிரம்புக்கு விளக்கம் – என்ன நடக்கிறது?
இரானுக்கான ராணுவ திட்டங்கள் பற்றி டிரம்புக்கு விளக்கம் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,Getty Images
கட்டுரை தகவல்
டேனியல் கேய்,
பிபிசி
கிளேர் கீனன்,
பிபிசி
42 நிமிடங்களுக்கு முன்னர்
இரானில் பயன்படுத்துவதற்கான பரந்த அளவிலான உளவு மற்றும் ராணுவ முறைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் துறையின் அதிகாரிகள் இருவர் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தனர்.
நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்கள், அமெரிக்காவின் சாத்தியமான தலையீட்டிற்கான ஒரு வழியாகத் தொடர்கின்றன.
அதே நேரத்தில், சைபர் நடவடிக்கைகள் மற்றும் உளவியல் ரீதியான பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முன்வைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இரானில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களில், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
இதற்கிடையில், இரானுடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடுகளின் பொருட்கள் மீது 25% வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் திங்களன்று அறிவித்தார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த இரான் தயாராக இருப்பதாகவும், அதே சமயம் "போருக்கும் தயாராக" இருப்பதாகவும் இரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம்,Getty Images
'மிகவும் வலிமையான வழிகள்'
இரான் குறித்து விவாதிக்க டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு குழு செவ்வாய்க்கிழமையன்று வெள்ளை மாளிகையில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கொள்வாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.
மேலும் இரானில் அதிகமான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் தலையீடு செய்ய "மிகவும் வலிமையான வழிகள்'' குறித்து தனது ராணுவம் பரிசீலித்து வருவதாக டிரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார்.
இரான் தலைவர்கள் "பேச்சுவார்த்தை" நடத்த தன்னை அழைத்ததாகக் குறிப்பிட்ட டிரம்ப், ஆனால் "ஒரு சந்திப்பு நடைபெறும் முன்பே அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்" என்றும் கூறினார்.

பட மூலாதாரம்,Getty Images
திட்டம் என்ன?
இரானிய நாணயத்தின் வீழ்ச்சி மற்றும் பொருளாதார நிர்வாக சீர்கேடு ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள விரக்தி, தற்போது இரானின் அதிஉயர் தலைவர் காமனெயியின் ஆட்சிக்கு எதிரான ஒரு நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.
திங்களன்று, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், இரானிய அதிகாரி ஒருவர் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப்பைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்தார். அதிபர் டிரம்ப் தேவை என்று கருதினால், "ராணுவ நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்க மாட்டார்" என்று அவர் எச்சரித்தார்.
சிபிஎஸ் நிறுவனத்துடன் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு நபர்கள் பேசுகையில், இரானில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை என்பது பெரும்பாலும் விமானப் படைத் தாக்குதல்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், அதே சமயம் இரானின் கட்டளை அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான வழிகளையும் இத்தாக்குதல் குறித்து திட்டமிடுபவர்கள் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தனர்.
இரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படியோ அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் உதவி இல்லாமல் வெளியேறும் திட்டத்தை வைத்திருக்கும்படியோ அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இரானில் நடைபெற்ற அரசு ஆதரவுப் பேரணிகளைப் பாராட்டிய காமனெயி, அமெரிக்கா "ஏமாற்று வேலை" செய்வதாகவும், "துரோகமிழைக்கும் கூலிப்படையினரை" நம்பியிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், "இரானிய தேசம் ஒரு வலிமையான தேசம், அது விழிப்புணர்வுடன் உள்ளது, தனது எதிரிகளை அறியும், மேலும் ஒவ்வொரு களத்திலும் அது இருக்கும்" என்றார்.
அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கான அழைப்புகளைத் தொடர்ந்து, பல நகரங்களில் பெருந்திரளான மக்கள் திரண்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
நாட்டிற்குள் இருப்பவர்களை இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தும், அதே சமயம் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்தும் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை பிபிசி பாரசீக சேவை கண்டது.

பட மூலாதாரம்,Getty Images
25% வரி
திங்கள்கிழமை அன்று, டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், இரானுடன் "வணிகம் செய்யும்" நாடுகளின் பொருட்கள் மீது 25% வரி விதிக்கப்படும் என்று பதிவிட்டார். இது குறித்து கூடுதல் விளக்கம் அளிக்காத அவர், "இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது" என்று கூறினார்.
ஏற்கனவே அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளின் கீழ் இருக்கும் இரான், தற்போது நாணய வீழ்ச்சியையும் கடுமையான பணவீக்கத்தையும் எதிர்கொள்கிறது.
இதனால் உணவுப் பொருட்களின் விலை 70% வரை உயர்ந்துள்ளது. இரானின் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கு உணவுப் பொருட்கள் ஆகும். டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரிக் கட்டுப்பாடுகள், உணவுத் தட்டுப்பாட்டையும் செலவுகளையும் மேலும் மோசமாக்கக்கூடும்.
புதிய வரிகள் குறித்து வெள்ளை மாளிகை கூடுதல் தகவல்களைப் பகிரவில்லை. சீனா இரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இராக், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.
அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க இரான் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த புதிய நகர்வு இரான் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதற்கிடையில், அமெரிக்காவில் வாழும் இரானின் கடைசி மன்னரின் மகனான ரெஸா பஹ்லவி, போராட்டக்காரர்களின் உயிரிழப்புகளைக் குறைக்க அதிபர் டிரம்ப் "விரைவாக" தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சிபிஎஸ் நியூஸிற்கு அளித்த பேட்டியில், தற்போதைய இரானிய அரசு "மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறி உலகை ஏமாற்ற முயல்கிறது" என்று பஹ்லவி கூறினார்.
அதிபர் டிரம்ப்பை "தான் சொல்வதைச் செய்பவர், செய்வதைச் சொல்பவர்" என்றும், "தற்போதைய சூழலின் விபரீதத்தை நன்கு அறிந்தவர்" என்றும் அவர் விவரித்தார்.
மேலும், "அதிபர் மிக விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்றும் பஹ்லவி கூறினார்.
நார்வேயைத் தளமாகக் கொண்ட 'இரான் மனித உரிமைகள்' (IHRNGO) அமைப்பின் தகவல்படி, இரானில் 18 வயதிற்குட்பட்ட 9 பேர் உட்பட குறைந்தது 648 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கலாம் என்று இரானுக்குள் உள்ள வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளன.
பிபிசி மற்றும் பிற சர்வதேச செய்தி நிறுவனங்களால் இரானுக்குள் இருந்து செய்தி சேகரிக்க முடியாத நிலை உள்ளது. அங்கு இணைய சேவை முடக்கப்பட்டிருப்பதால், தகவல்களைப் பெறுவதும் அவற்றை உறுதிப்படுத்துவதும் கடினமாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு