Aggregator

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months ago
கேப்டன்சியில் சறுக்கிய கில்: கடினமான களத்தில் கடைசி நாளில் இந்தியா 135 ரன் எடுக்க முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் கில் கட்டுரை தகவல் தினேஷ் குமார். எஸ் கிரிக்கெட் விமர்சகர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா - இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிட்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 13-ஆம் தேதி அப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. நான்காம் நாள் ஆட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே! சம பலத்தில் உள்ள இரு அணிகள் மல்லுக்கட்டும் டெஸ்ட் போட்டி கொடுக்கும் பரபரப்பை அடித்துக்கொள்ள எதுவுமில்லை. அதற்கு இந்த டெஸ்ட் ஒரு உதாரணம். இரு அணிகளும் சம பலத்தில் 4 நாள்களாக மோதிக்கொள்ளும் ஆட்டம் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த டெஸ்ட் நிச்சயம் டிரா ஆகாது என்று நான்காம் நாள் தொடங்கியவுடன் தெரிந்துவிட்டது. நிதானம் தேவை இந்த தொடர் முழுக்க கடும் உழைப்பை கொடுத்தும் விக்கெட்டுகளை அள்ள முடியாமல் தவித்த சிராஜ் கொத்தாக மூன்று தலைகளை வீழ்த்தினார். ஆடுகளத்தில் முன்னுக்கு பின் முரணான பவுன்ஸ் (Un–even bounce) இருந்ததால் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் எந்த வேகத்தில் (Tempo) ஆடுவது என தெரியாமல் குழம்பிப் போயினர். பும்ராவின் நல்ல லெங்க்த் பந்துகளும் தாறுமாறாக எகிறி ஜாக் கிராலியின் கைகளை பதம் பார்த்தன. நேற்று நேரத்தை கடத்துவதற்காக அடிபட்டது போல நடித்தவர், இன்று உண்மையிலேயே வலியில் தவிப்பதை பார்க்க இந்திய வீரர்களுக்கு வேடிக்கையாக இருந்திருக்கும். பர்சன்டேஜ் கிரிக்கெட் விளையாடினால் தப்ப முடியாது என உணர்ந்துகொண்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், கன்னாபின்னாவென்று என்னென்னமோ முயற்சிகள் எடுத்து பரிதாபமாக நடையைக்கட்டினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜாக் கிராலி சிராஜ் பிரமாதமான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி, இங்கிலாந்து தொடக்க வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார். பும்ராவின் நிழலில் இருப்பதாலேயே சிராஜுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை. பஸ்பால் பாணியில் ஒரு ஷாட் அடித்தவுடன் சிராஜ் ஷார்ட் ஆஃப் த லெங்த்தில் வீசிய அடுத்த பந்தை சரியாக கணிக்காமல் விளையாடி டக்கெட் பெவிலியன் திரும்பினார். அப்போது இருவருக்குமிடையே உரசல் ஏற்பட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. டக்கெட்தான் சிராஜை நோக்கி முட்டும் விதமாக நடந்தார் என்பது பிறகு ரிப்ளேவில் தெரிந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் கடினமான வேலையை செய்வதால், சில சமயங்களில் உணர்ச்சிவசப்படுவது இயல்புதான். ஆனால், அடிக்கடி கோபத்தை வெளிப்படுத்தி ஆற்றலையும் கவனத்தையும் இழந்துவிடக் கூடாது. பும்ராவிடம் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முதலில் நிதானத்தை கற்றுக்கொள்ள வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் சிராஜ் பொறுப்பற்ற ப்ரூக்கின் ஆட்டம் ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகள் சரியும் போது ரூட் மட்டும்தான் பொறுப்பை உணர்ந்து விளையாடினார். இத்தனை சொதப்பல்களுக்கும் பிறகும் கிராலிக்கு இங்கிலாந்து அணி நிர்வாகம் தொடர் வாய்ப்புகள் கொடுப்பது ஆச்சரியமாக உள்ளது. முதல் இன்னிங்ஸ் போலவே, இந்த முறையும் இந்திய பந்துவீச்சு படையின் இளம் கன்றான நிதிஷ் குமார் ரெட்டி பந்தில் பொறுப்பற்ற ஷாட் விளையாடி ஆட்டமிழந்தார் கிராலி. நேற்றைய நாளின் முக்கியமான விக்கெட் என ஆலி போப்பின் விக்கெட்டை சொல்லலாம். ரூட், புரூக் போல அபாயகரமான பேட்ஸ்மேன் இல்லை என்றாலும் கடினமான சூழல்களில் நின்று விளையாடும் திறன்கொண்டவர் போப். ஏற்கெனவே ஒரு ரெவியூவை கோட்டைவிட்டதால் முதலில் தயக்கம் காட்டிய கில் சிராஜின் ஆக்ரோஷத்துக்கு மதிப்பளித்து டிஆர்எஸ் எடுத்தார். 3 விக்கெட்டுகள் காலியான நிலையில் களம்புகுந்த உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் புரூக், நெருப்பை நெருப்பால் அணைக்கும் விதமாக பாஸ்பால் (Bazball) பாணியை கையில் எடுத்தார். உடனடியாக கைமேல் பலன் கிடைத்தாலும், பொறுப்பும் சாமர்த்தியமும் இல்லாததால் ஆகாஷ் தீப் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பொறுப்பும் சாமர்த்தியமும் இல்லாததால் ஆகாஷ் தீப் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார் ஹாரி ப்ரூக் ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாடுவதற்கும் கண்ணை மூடிக்கொண்டு சுத்துவதற்கும் வித்தியாசம் உண்டு என்பதை நம்பர் ஒன் பேட்ஸ்மேன் தெரிந்துகொள்ள வேண்டும். இங்குதான் ரிஷப் பந்த் தனித்து நிற்கிறார். அவரும் ரிஸ்க்கான பேட்டிங்கை தான் கையில் எடுக்கிறார். ஆனால், அதிலும் நுட்பமாக சில தற்காப்பு திட்டங்களை புகுத்தி, ஆபத்தில்லாமல் ரன் சேர்க்கும் வித்தையை தெரிந்துவைத்துள்ளார். ஆனால் புரூக் உள்ளிட்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன்களிடம் அந்த தெளிவில்லை. வர்ணனையில் சங்கக்காரா விமர்சித்தது போல, இது Bazball ஆட்டமல்ல அல்ல; பொறுப்பற்ற ஆட்டம்! இந்தியாவின் பக்கம் ஆட்டத்தைத் திருப்பிய சுந்தர் இந்த டெஸ்டில் சிறப்பான கேப்டன்சியை வெளிப்படுத்தி வந்த கில், நேற்று ஓரிடத்தில் சொதப்பினார். ரூட் களத்துக்கு வந்தவுடன், அவர் எதிர்கொள்ள விரும்பாத பும்ராவை உடனடியாக கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கிறேன் பேர்வழி என்று ரூட்டை செட்டிலாக வைத்துவிட்டார். இதுபோன்றதொரு கடினமான ஆடுகளத்தில் ரூட் எடுத்த 40 ரன்கள் முக்கியமானது. சிராஜ் பந்தில் அம்பயர் பால் ரீஃபெலின் LBW முடிவுகள் சில இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த தொடர் முழுக்கவே DRS முடிவுகள் விவாதப் பொருளாக மாறிவருகின்றன. ஆட்டம் இங்கிலாந்து பக்கம் நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில், ரூட், ஜேமி ஸ்மித் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் கையை ஓங்கச் செய்தார் சுந்தர். ரூட் தேவையில்லாமல் ஸ்வீப் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால் சுந்தரின் அட்டகாசமான சுழலுக்கு ஸ்மித் இரையானார். வாஷிங்டன் சுந்தர் விரல்களுக்கு அதிக வலுகொடுத்து சுழற்றுவதால் பந்து காற்றில் அலைபாய்ந்தது (Drift). அப்போது லைனை சரியாக கணிக்க முடியாமல் ஸ்டம்புகளை ஸ்மித் பறிகொடுத்தார். கடைசிக்கட்ட விக்கெட்டுகளை பும்ராவும் சுந்தரும் வாரிச் சுருட்ட இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை கேப்டன் கில்லுடன் பகிர்ந்து கொள்கிறார். ஏமாற்றம் அளித்த கில் ஆடுகளம் தாறுமாறாக இருப்பதால், இந்திய தொடக்க வீரர்கள் பொறுப்பாக நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்துக்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்லர் என்பது போல இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்று விளையாடி நடையைக்கட்டினர். வழக்கமாக ஷாட் பிட்ச் பந்துகளை லாவகமாக எதிர்கொண்டு விளையாடும் ஜெய்ஸ்வால், ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் இலக்கற்று சுற்றி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். ராகுல்– கருண் இணை, நம்பிக்கை அளிக்கும் விதமாக சிறிது நேரம் விளையாடியது. ஆனால் நன்றாக தற்காப்பு ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த கருண், கார்ஸ் வீசிய பந்து உள்ளே வருகிறதா வெளியே போகிறதா என்ற குழப்பத்தில் பேட்டை தூக்கி எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் இடம் கிடைத்தும் கருண் தொடர்ந்து வாய்ப்புகளை வீணடித்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டுக்கான மனஉறுதி அவருக்கு இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்த தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்து உச்சக்கட்ட ஃபார்மில் உள்ள கில், எந்தவொரு போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் ஆட்டமிழந்த விதம் அதிர்ச்சியை அளிக்கிறது. கோலியை களத்தில் போலச் செய்வது வேறு கோலி போல வெற்றிகரமாக இலக்கை விரட்டுவது வேறு என்பதை கில் உணர்ந்திருப்பார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கில் எந்தவொரு போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் ஆட்டமிழந்தார். கடைசி நாளில் இந்தியா 135 ரன் எடுக்க முடியுமா? தொடக்கத்தில் இந்திய அணி பவுண்டரிகளாக ரன் குவித்த போதும், ஸ்டோக்ஸ் மனம் தளராமல் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்து விக்கெட்டுகள் எடுக்க பார்த்தார். ஒருகட்டத்தில் பிறரை நம்பி பிரயோஜனம் இல்லை என அவரே பந்தை கையிலெடுத்தார். நான்காம் நாளின் கடைசி ஓவரில் நைட் வாட்ச்மேன் ஆகாஷ் தீப்பை அவர் ஆட்டமிழக்க செய்த விதம் இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையை அதிகரித்திருக்கும். கார்ஸ் நேற்றைய நாளில் உறுதியுடன் பந்துவீசிய விதம் அபாரமாக இருந்தது. ஆட்டம் கையை விட்டு போய்விட கூடாது என்று நல்ல லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி கில்லின் கால்காப்பை தாக்கி விக்கெட் எடுத்தார். ஆபத்பாந்தவன் ராகுலின் சலனமில்லாத பேட்டிங் மட்டும்தான் இந்திய அணிக்கு ஒரே ஆறுதல். வெற்றி இன்னும் 135 ரன்கள் தேவை என்கிற நிலையில், ராகுலையே இந்தியா மலை போல நம்பியிருக்கிறது. கடைசி நாளில் ராகுல், பந்த் இருவரும் மூன்றாம் நாளில் கொடுத்தது போல, ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தால் ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பும். ஆனால், அவ்வளவு எளிதாக ஸ்டோக்ஸ் அதற்கு அனுமதிக்க மாட்டார் என்பதை இந்திய அணியினர் உணர்ந்து பொறுப்புடன் விளையாட வேண்டும். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்தின் கை சற்றே ஓங்கியிருந்தாலும், குறைவான இலக்கு என்பதால் இந்தியாவுக்கும் வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை. இப்படியாக லார்ட்ஸ் டெஸ்ட் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crenpdg32leo

காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி

2 months ago
தொழில் நுட்ப கோளாறான விமானம் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியது? நெதன்யாகு பாவம், அவர் யாரையும் கொலை செய்ய நினைக்கவில்லை. நேற்று சத்துணவுக்கு வரிசையில் நின்ற குழந்தைகளை இலக்கு, இன்று தண்ணீருக்கு நின்ற குழந்தைகள் இலக்கு. ஆனால் அது தொழில் நுட்ப கோளாறா, நெதன்யாகுவின் மூளைக்கோளாறா? போர் முடியுமுன்னோ பின்னோ நெதன்யாகு அரசியலில் இருந்து துரத்தப்படுவார்.

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் - சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்

2 months ago
Published By: VISHNU 14 JUL, 2025 | 01:54 AM மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். போதனா வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் தொடர்பில் முழுமையான ஆய்வொன்றை நடத்தி எதிர்வரும் காலங்களில் அவை நெறிப்படுத்தப்பட்ட வேண்டும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார். வட மாகாணத்தில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலையான யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கடந்த சனிக்கிழமை (12) சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ சிறப்பு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு முறையான திட்டத்தின் கீழ் தரமான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் யாழ்.போதனா வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் அமைச்சர் கண்காணித்தார். இதன்போது மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு, அறுவை சிகிச்சை அறைகள், உள்நோயாளி சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, வைத்தியசாலையின் ஏனைய சிகிச்சை துறைகள் மற்றும் வைத்தியசாலையின் மேம்பாட்டுத் திட்டங்கள் அவற்றின் தற்போதைய நிலை, எதிர்கால செயல்பாடுகள் ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்ததுடன், உள்நோயாளிகளின் நலன் தொடர்பிலும் கேட்டரிந்துக் கொண்டார். மேலும் வைத்திய ஊழியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் குறிப்பிடுகையில், மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். போதனா வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் தொடர்பில் முழுமையான ஆய்வொன்றை நடத்தி எதிர்வரும் காலங்களில் அவை நெறிப்படுத்தப்பட்ட வேண்டும். வைத்தியசாலைக்கு வருகைத் தரும் நோயாளர்களுக்கு அவசியமான அனைத்து சிகிச்சை சேவைகளையும் முறையாக வழங்கி அவர்களை ஆரோக்கியமான நபர்களாக மாற்றுவது சுகாதாரத் துறையில் பணிபுரியும் அனைவரினதும் பொறுப்பாகும். இந்த நாட்டில் நோய்தாக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நபரையும் குணப்படுத்துவது சுகாதாரத் துறையில் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்கள் முதல் சுகாதார அமைச்சர் வரையான நாம் அனைவரினதும் பொறுப்பாகும். ஆகையால் கடமையை உணர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம். யாழ்.போதனா வைத்தியசாலையின் மனித மற்றும் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்துக்கமைய எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/219916

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் - சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்

2 months ago

Published By: VISHNU

14 JUL, 2025 | 01:54 AM

image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  யாழ். போதனா வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் தொடர்பில் முழுமையான ஆய்வொன்றை நடத்தி எதிர்வரும் காலங்களில் அவை நெறிப்படுத்தப்பட்ட வேண்டும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

WhatsApp_Image_2025-07-13_at_2.50.04_PM.

வட மாகாணத்தில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலையான யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கடந்த சனிக்கிழமை (12) சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ சிறப்பு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

WhatsApp_Image_2025-07-13_at_2.50.16_PM.

வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு முறையான திட்டத்தின் கீழ் தரமான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் யாழ்.போதனா வைத்தியசாலையின்  சிகிச்சை சேவைகள் அமைச்சர் கண்காணித்தார்.

WhatsApp_Image_2025-07-13_at_2.50.04_PM_

இதன்போது மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு, அறுவை சிகிச்சை அறைகள், உள்நோயாளி சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு,  வைத்தியசாலையின் ஏனைய சிகிச்சை துறைகள் மற்றும் வைத்தியசாலையின் மேம்பாட்டுத் திட்டங்கள் அவற்றின் தற்போதைய நிலை, எதிர்கால செயல்பாடுகள் ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்ததுடன், உள்நோயாளிகளின் நலன்  தொடர்பிலும் கேட்டரிந்துக் கொண்டார். 

WhatsApp_Image_2025-07-13_at_2.50.05_PM.

மேலும் வைத்திய ஊழியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்  கலந்துரையாடிய அமைச்சர் குறிப்பிடுகையில்,

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். போதனா வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் தொடர்பில் முழுமையான ஆய்வொன்றை நடத்தி எதிர்வரும் காலங்களில் அவை நெறிப்படுத்தப்பட்ட வேண்டும்.  வைத்தியசாலைக்கு வருகைத் தரும் நோயாளர்களுக்கு அவசியமான அனைத்து சிகிச்சை சேவைகளையும் முறையாக வழங்கி அவர்களை ஆரோக்கியமான நபர்களாக மாற்றுவது சுகாதாரத் துறையில் பணிபுரியும் அனைவரினதும் பொறுப்பாகும்.

இந்த நாட்டில் நோய்தாக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நபரையும் குணப்படுத்துவது சுகாதாரத்  துறையில் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்கள் முதல்  சுகாதார அமைச்சர் வரையான நாம் அனைவரினதும் பொறுப்பாகும். ஆகையால் கடமையை உணர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம்.  யாழ்.போதனா வைத்தியசாலையின் மனித மற்றும் பௌதீக வளங்களை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்துக்கமைய எதிர்வரும் நாட்களில் உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

https://www.virakesari.lk/article/219916

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது முறையற்றது - விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

2 months ago
13 JUL, 2025 | 05:12 PM (இராஜதுரை ஹஷான்) ஆட்பதிவுத் திணைக்களம் 5 பில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த முறைமையை புறக்கணித்து விட்டு முழு திட்டத்தையும் இந்தியாவுக்கு வழங்குவது முற்றிலும் முறையற்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் இந்த ஜனாதிபதி இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது. இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவு கட்டமைப்பை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாட்டை நாட்டு மக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக 2021 ஆம் ஆண்டு இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது, இருப்பினும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடங்கள் செயற்படுத்தப்படவில்லை. இதன்பின்னர் 2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையை உருவாக்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தேசிய ஆட்பதிவு திணைக்களத்துக்கு 3 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் பிரிவுகளின் நிர்வாக கட்டமைப்பு முறைமையை மாற்றியமைப்பற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்குரிய நவீன தொழில்நுட்ப சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. ஆட்பதிவு திணைக்களம் டிஜிட்டல் ஆளடையாள அட்டைக்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டு, அப்பணிகள் 99 சதவீதமளவில் நிறைவு செய்துள்ளன. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் டிஜிட்டல் ஆளடையாள அட்டையை செயற்பாட்டு ரீதியில் செயற்படுத்த ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்திருந்தது. இந்திய கொள்கையுடன் செயற்பட்ட இந்த அரசாங்கம் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டும், இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேசிய ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளது. டிஜிட்டல் முறைமையிலான தேசிய அடையாள அட்டை விநியோகத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மாதம் பிரசுரிக்கவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ள நிலையில் தான் இந்த திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இலங்கையில் தனிப்பட்ட தரவு சேகரித்தல் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்துக்கான விலைமனுகோரல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விலைமனுகோரல் இலங்கையில் பிரசுரிக்கப்படவில்லை. இந்தியாவில் தான் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைமனுகோரல் பத்திரத்தில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறித்த தனிப்பட்ட தரவுகள் மூன்றாம் தரப்புக்கு கசிந்தால் இந்திய நிறுவனம் 10 சதவீதமளவில் தான் பொறுப்புக்கூறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் தற்போது தரவு திருட்டு பிரதான மோசடியாக காணப்படுகிறது. ஆட்பதிவுத் திணைக்களம் சுமார் 5 பில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த முறைமையை புறக்கணித்து விட்டு முழு திட்டத்தையும் இந்தியாவுக்கு வழங்குவது முற்றிலும் முறையற்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் இந்த ஜனாதிபதி இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது. இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவு கட்டமைப்பை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாட்டை நாட்டு மக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/219889

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது முறையற்றது - விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

2 months ago

13 JUL, 2025 | 05:12 PM

image

(இராஜதுரை ஹஷான்)

ஆட்பதிவுத் திணைக்களம் 5 பில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த முறைமையை  புறக்கணித்து விட்டு முழு திட்டத்தையும் இந்தியாவுக்கு வழங்குவது முற்றிலும் முறையற்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் இந்த ஜனாதிபதி இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது. இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவு கட்டமைப்பை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாட்டை நாட்டு மக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில்  ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்காக 2021 ஆம் ஆண்டு இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது, இருப்பினும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடங்கள் செயற்படுத்தப்படவில்லை.

இதன்பின்னர் 2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையை உருவாக்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் தேசிய ஆட்பதிவு திணைக்களத்துக்கு 3 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் பிரிவுகளின் நிர்வாக கட்டமைப்பு முறைமையை மாற்றியமைப்பற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்குரிய நவீன தொழில்நுட்ப சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. 

ஆட்பதிவு திணைக்களம் டிஜிட்டல் ஆளடையாள அட்டைக்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டு, அப்பணிகள் 99 சதவீதமளவில் நிறைவு செய்துள்ளன. 

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் டிஜிட்டல் ஆளடையாள அட்டையை செயற்பாட்டு ரீதியில் செயற்படுத்த ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்திருந்தது.

இந்திய கொள்கையுடன் செயற்பட்ட இந்த அரசாங்கம் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டும், இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேசிய ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளது. 

டிஜிட்டல் முறைமையிலான தேசிய அடையாள அட்டை விநியோகத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மாதம் பிரசுரிக்கவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ள நிலையில் தான் இந்த திட்டத்தை இந்தியாவுக்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இலங்கையில் தனிப்பட்ட தரவு சேகரித்தல் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்துக்கான விலைமனுகோரல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விலைமனுகோரல் இலங்கையில் பிரசுரிக்கப்படவில்லை. 

இந்தியாவில் தான் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைமனுகோரல் பத்திரத்தில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறித்த தனிப்பட்ட தரவுகள் மூன்றாம் தரப்புக்கு கசிந்தால் இந்திய நிறுவனம் 10 சதவீதமளவில் தான் பொறுப்புக்கூறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் தற்போது தரவு திருட்டு பிரதான மோசடியாக காணப்படுகிறது. ஆட்பதிவுத் திணைக்களம் சுமார் 5 பில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த முறைமையை  புறக்கணித்து விட்டு முழு திட்டத்தையும் இந்தியாவுக்கு வழங்குவது முற்றிலும் முறையற்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை காட்டிலும் இந்த ஜனாதிபதி இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளது. இலங்கை மக்களின் தனிப்பட்ட தரவு கட்டமைப்பை இந்தியாவுக்கு தாரைவார்க்கும் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாட்டை நாட்டு மக்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/219889

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months ago
அவர்களும் கையில் எடுக்கட்டும். நமகென்ன பயம்? நாம் என்ன இல்லாததையா கிளறுகிறோம்? அன்று தொடங்கி இன்றுவரை இடையறாமல் இதற்காக குரல் கொடுத்தோம் போராடினோம். அவர்களும் தங்களால் இயன்றதை செய்யட்டும். அவர்கள்; மக்கள் புலிகள் இல்லையாம், தமிழ் மக்களின் சனத்தொகையில் இருபத்தைந்து வீதமே புலிகளாம், புலிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லையாம். மக்கள் செல்வாக்கு இல்லாமலா முப்பது ஆண்டுகள் புலிகள் நிர்வாகம் நடத்தினர்? வெள்ளைவத்தை வரை முள்ளிவாய்க்கால் நினைவு கூருகிறார்கள்? மக்கள் புலிகள் இல்லை என்றால் இருபத்தைந்து சதவீத புலிகளையா சிங்களம் கொன்றது? அப்போ ஏன் தமிழ் மக்களை வயது வேறுபாடின்றி வகைதொகையின்றி கொன்றது? எதற்கு வெள்ளைவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவு கூருகிறார்கள்? என கேள்வி எழுப்புது ஒன்று. நாங்கள் எங்கை வேண்டுமானாலும் செய்வோம் அதற்கு இவருக்கு ஏன் வயிறு எரியுது? இவ்வளவு நாளும் கிண்டாத செம்மணியை இப்போ ஏன் கிண்டவேண்டுமென்று வேறு கேள்வி? எப்போ வேண்டுமானாலும் கிளறலாம். அங்கே தமிழரின் உடல்கள் கொன்று புதைக்கப்படுள்ளது. மக்கள் வேறு புலிகள் வேறு என்பவர் பொதுமக்களின் உடலையே தாம் புதைத்ததாக அடையாளம் காட்டியுள்ளனர். இப்போ என்னவென்றால்; தென்பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் இடம்பெற்றுள்ளது, சிங்கள சட்டத்தரணி இசைப்பிரியா, பாலச்சந்திரனுக்கு நீதி வேண்டி முறையிட்டிருக்கிறார், இப்படியே போனால் சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்தால் தமக்கு அரசியல் செய்ய ஏதுமில்லை, அதோடு அடித்தே கொன்று போட்டாலும் போடுவார்கள் என்றொரு பகுதி பதைபதைக்குது, அவர்களுக்கு கால் கழுவி, ஏவல் வேலை செய்து பிழைக்கும் கூட்டம் பிழைப்பு போகுதே என கூக்குரலிடுகுது. அனுரா உண்மையில் சமாதானத்தை, நாட்டின் முன்னேற்றத்தை விரும்பினால் இதய சுத்தியோடு நீதி விசாரணை நடத்தி ராஜபக்ச குடும்பத்தை சர்வதேச நீதிமன்றத்தில் கையளிக்க வேண்டும். அப்போ இந்த ஏவல் கூட்டம் ஓடி ஒதுங்கும். அனுரா ஆட்சியேற்றவுடன் சவால் விட்டவர்கள் இப்போ, ஒருவர் ஒருவராக ஓடி மறைக்கின்றனர், நோயாளிகளாகின்றனர். அவ்வளவு சுமையை தாங்கி நாட்டை ஏமாற்றிக்கொண்டு வாழ்ந்திருக்கின்றனர். இது உங்களுக்கான பதிலல்ல, பலபேர் காண முடிவதால் எழுதுகிறேன்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து பிள்ளையான் முன்பே அறிந்து இருந்ததாகவும், விரைவில் இலங்கை புலனாய்வு துறையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2 months ago
குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை; அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது - உதய கம்மன்பில 13 JUL, 2025 | 05:12 PM (இராஜதுரை ஹஷான்) இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரசதரப்பு எதிர்பார்க்கிறது. குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலை புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. நன்றிக்கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன் எனவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை பிள்ளையான் சிறையில் இருந்தவாறே முன்கூட்டியதாகவே அறிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு வருமாறு குறிப்பிட்டார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால 2025.04.10 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் 'தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய பல விடயங்களை விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளதாக' தெரிவித்தார். இதனை நம்பி ஜனாதிபதியும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துதாக குறிப்பிட்டார். பிள்ளையானை நான் சிறையில் சென்று சந்தித்தேன். குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையானிடம் விசாரணை அதிகாரிகள் ஏதும் கேட்கவுமில்லை, அவரும் ஏதும் குறிப்பிடவுமில்லை. ஆகவே அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைத்தார் என்பதை ஊடகங்களுக்கு குறிப்பிட்டேன். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்காக பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடுவது பொய், அவ்வாறு குறிப்பிடுபவர்களுக்கு பைத்தியம்.கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தரை கடத்தி, காணாமலாக்கிய சம்பவத்துக்காகவே பிள்ளையாள் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அமைச்சர் சுனில் அந்துனெத்தி குறிப்பிட்டிருந்தார். ஆகவே சுனில் அந்துனெத்தி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும், ஜனாதிபதிக்கும் பதிலளித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த அண்மையில் பாராளுமன்றத்தில் பிள்ளையான் பற்றி குறிப்பிட்டது முற்றிலும் பொய்யானது. பிள்ளையான் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அத்துடன் பிள்ளையான் தமிழ் மொழியில் வழங்கிய வாக்குமூலத்தின் பிரதியை பொலிஸார் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளனர். தமிழ் மொழிமூல வாக்குமூலம் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்க்கப்பட்டு எனக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த வாக்குமூலத்தில் எவ்விடத்திலும் குண்டுத்தாக்குதல்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. உபவேந்தர் காணாமலாக்கப்பட்ட சம்பவம் பற்றியே கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலை புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. நன்றிக்கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன். இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது. குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என்றார். https://www.virakesari.lk/article/219891

நடிகை சரோஜா தேவி காலமானார்!

2 months ago
கன்னடத்து பைங்கிளி நடிகை சரோஜா தேவி காலமானார்... சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 87. தமிழ் சினிமாவின் 69, 70 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகை சரோஜா தேவி. இன்றும் அவரது நடிப்பு பேசப்பட்டுதான் வருகின்றது. அந்த காலத்திலேயே எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற உச்சகட்ட நடிகர்களுடன் நடித்தவர் இவர். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்த சரோஜா தேவி, மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் என்றாலும் 1959 ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான கல்யாண பரிசு படத்தில் நடித்ததன் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். எம்ஜிஆர் உடன் அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் சரோஜாதேவி. எம்ஜிஆர் உடன் கிட்டத்தட்ட 26 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். அதைப்போல சிவாஜி கணேசன் உடன் 22 படங்களில் நடித்திருக்கிறார். பார்த்திபன்கனவு, அன்பேவா, ஆசைமுகம், ஆலையமணி , கல்யாணபரிசு, எங்கள் வீட்டுப்பிள்ளை என அடுத்தடுத்து சரோஜா தேவி நடித்த படங்கள் அனைத்தும் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தியில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் சரோஜா தேவி. அதிகளவு சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவர் சரோஜா தேவி. சரோஜா தேவிக்கு 1967ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியலாளர் ஸ்ரீ ஹர்ஷாவுடன் திருமணம் நடந்தது. ஆனால் ஸ்ரீஹர்ஷா 1986ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன் பிறகும் பல படங்களில் நடித்து அசத்தி வந்தார் சரோஜா தேவி. ஆதவன் படத்தில் அவரது கதாபாத்திரம் பலரையும் வெகுவாக கவர்ந்தது. எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கனகச்சிதமாக பொருந்த கூடியவர் சரோஜா தேவி. மேலும் தனது திறமை மிக்க நடிப்பால் கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பவர். இந்த நிலையில் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://kalkionline.com/entertainment/cinema/actress-saroja-devi-passed-away-fans-shocked

சிஸ்ட்டர் அன்ரா

2 months ago
ஒரு கன்னியாஸ்திரி கரவெட்டியை சேர்ந்தவர். அவரும் அந்நேரம் மக்களோடு மக்களாக மக்களுக்காக சேவை செய்தவர். இன்னொருவர் சிவந்தமேனி அழகான முகத்தோற்றமுடையவர் பெயரை மறந்துவிட்டேன் இவர்கள் இருவரும் எனக்கு அநேகமாக தெரிந்தவர்கள் இதிலொருவர் அல்லது அவர்கள் ஒருவருமே இல்லாமல் வேறொருவராக இருக்கலாம் உங்கள் அன்ரா. அவர் யாராக இருந்தாலும், இறைவனில் ஆறுதலடைவாராக!

பிள்ளையான் ஊடாக சாட்சியத்தை பெறவே அரசு முயற்சி - உதய கம்மன்பில கருத்து!

2 months ago
பிள்ளையான் ஊடாக சாட்சியத்தை பெறவே அரசு முயற்சி - உதய கம்மன்பில கருத்து! அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரச தரப்பு எதிர்பார்க்கிறது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலை புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. பிள்ளையானை நான் சிறையில் சென்று சந்தித்தேன். நன்றிக்கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன் எனவும் குறிப்பிட்டார். https://newuthayan.com/article/பிள்ளையான்_ஊடாக_சாட்சியத்தை_பெறவே_அரசு__முயற்சி_-_உதய_கம்மன்பில_கருத்து!

பிள்ளையான் ஊடாக சாட்சியத்தை பெறவே அரசு முயற்சி - உதய கம்மன்பில கருத்து!

2 months ago

பிள்ளையான் ஊடாக சாட்சியத்தை பெறவே அரசு முயற்சி - உதய கம்மன்பில கருத்து!

1935916825.jpg

அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரச தரப்பு எதிர்பார்க்கிறது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.

தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. 

தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலை புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. 

பிள்ளையானை நான் சிறையில் சென்று சந்தித்தேன்.  நன்றிக்கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.

https://newuthayan.com/article/பிள்ளையான்_ஊடாக_சாட்சியத்தை_பெறவே_அரசு__முயற்சி_-_உதய_கம்மன்பில_கருத்து!

வெடிப்புச் சம்பவங்களில் இறந்தோரே கொக்குத்தொடுவாய் புதைகுழியில்

2 months ago
வெடிப்புச் சம்பவங்களில் இறந்தோரே கொக்குத்தொடுவாய் புதைகுழியில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி அடையாளம் காணப்பட்டது. குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது கொக்குத்தொடுவாய்-முல்லைத்தீவு பிரதான வீதியோரத்தில் இந்த மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டது. அதன்தொடர்ச்சியாக அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கே.வாசு தேவா மற்றும் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் 52 மனித என்புத்தொகுதிகள் அங்கிருந்து மீட்கப்பட்டன. அத்துடன் ஆடைகள், துப்பாக்கி ரவைகள் உட்பட வேறு தடயப்பொருள்களும் மீட்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புத் தொகுதிகளின் பகுப்பாய்வு அறிக்கையில் இறந்தவர்கள் ஏன் இறந்தார்கள்? என்ன காரணத்தால் இறந்தார்கள் அவர்களின் வயது போன்ற விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட என்புத் தொகுதிகளில் 31 பெண்களுடையவை என்றும், 21 ஆண்களுடையவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இறந்தவர்களின் வயது எல்லை 12 முதல் 53 வயது வரை உள்ளது. அதேநேரம் பெரும்பாலானவர்கள் 13 முதல் 30 வயதுடையவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 32 பேரின் உயிரிழப்புக்கு வெடிப்புச் சம்பவம் அல்லது வெடிப்புக்காயம் காரணமாகவுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக் காயத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்புச் சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான உயிரிழப்புகள் வெடிப்புக் காயங்களால் ஏற்பட்டுள்ளன என்பது பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/வெடிப்புச்_சம்பவங்களில்_இறந்தோரே_கொக்குத்தொடுவாய்_புதைகுழியில்

வெடிப்புச் சம்பவங்களில் இறந்தோரே கொக்குத்தொடுவாய் புதைகுழியில்

2 months ago

வெடிப்புச் சம்பவங்களில் இறந்தோரே கொக்குத்தொடுவாய் புதைகுழியில்

1080731357.jpeg

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி அடையாளம் காணப்பட்டது. குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது கொக்குத்தொடுவாய்-முல்லைத்தீவு பிரதான வீதியோரத்தில் இந்த மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கே.வாசு தேவா மற்றும் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் 52 மனித என்புத்தொகுதிகள் அங்கிருந்து மீட்கப்பட்டன. அத்துடன் ஆடைகள், துப்பாக்கி ரவைகள் உட்பட வேறு தடயப்பொருள்களும் மீட்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புத் தொகுதிகளின் பகுப்பாய்வு அறிக்கையில் இறந்தவர்கள் ஏன் இறந்தார்கள்? என்ன காரணத்தால் இறந்தார்கள் அவர்களின் வயது போன்ற விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட என்புத் தொகுதிகளில் 31 பெண்களுடையவை என்றும், 21 ஆண்களுடையவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இறந்தவர்களின் வயது எல்லை 12 முதல் 53 வயது வரை உள்ளது. அதேநேரம் பெரும்பாலானவர்கள் 13 முதல் 30 வயதுடையவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 32 பேரின் உயிரிழப்புக்கு வெடிப்புச் சம்பவம் அல்லது வெடிப்புக்காயம் காரணமாகவுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக் காயத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்புச் சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான உயிரிழப்புகள் வெடிப்புக் காயங்களால் ஏற்பட்டுள்ளன என்பது பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

https://newuthayan.com/article/வெடிப்புச்_சம்பவங்களில்_இறந்தோரே_கொக்குத்தொடுவாய்_புதைகுழியில்

மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த களபயணம்!

2 months ago
மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த களபயணம்! adminJuly 14, 2025 மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறை படுத்துவது தொடர்பாக ஆராய அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த கள விஜயம் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கிராமத்தில் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த கள விஜயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்றது குறித்த கள விஜயதில் வனவள மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் மற்றும் வீடு அமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் , மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ,நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் அரச உயர் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் கிராம் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் தொடர்ந்து அரச திணைக்கள அதிகாரிகளால் திட்டம் தொடர்பான விளக்கம் அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த திட்டம் நடை முறைப் படுத்தப்படும் பிரதேசத்தினை அமைச்சர் குழுவினர் சென்று பார்வையிட்டனர் https://globaltamilnews.net/2025/217843/

மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த களபயணம்!

2 months ago

மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த களபயணம்!

adminJuly 14, 2025

Mannar-Pali.jpeg?fit=1170%2C660&ssl=1

மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறை படுத்துவது தொடர்பாக ஆராய அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த கள விஜயம்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கிராமத்தில் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த கள விஜயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்றது

குறித்த கள விஜயதில் வனவள மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் மற்றும் வீடு அமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் , மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ,நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் அரச உயர் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் கிராம் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

தொடர்ந்து அரச திணைக்கள அதிகாரிகளால் திட்டம் தொடர்பான விளக்கம் அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த திட்டம் நடை முறைப் படுத்தப்படும் பிரதேசத்தினை அமைச்சர் குழுவினர் சென்று பார்வையிட்டனர்

https://globaltamilnews.net/2025/217843/

பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம் நாளைமுதல் ஆரம்பம்!

2 months ago
பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம் நாளைமுதல் ஆரம்பம்! தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரத்தை நாளை (14) முதல் ஜூலை 18 வரை நடத்த இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. “பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த பிரமிட் திட்டங்கள் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, நாளை முதல் ஒரு வார காலத்திற்கு இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் நிதி நுகர்வோரின் நல்வாழ்வை மேம்படுத்தும் மத்திய வங்கியின் செயற்பாடுகளுக்கு அமைய, தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் மற்றும் அவை தனிநபர்களுக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க அபாயங்கள் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தேசிய நிகழ்ச்சியின் இலக்காகும். https://athavannews.com/2025/1438963

பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம் நாளைமுதல் ஆரம்பம்!

2 months ago

Ponzi-scheme.webp?resize=750%2C375&ssl=1

பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம் நாளைமுதல் ஆரம்பம்!

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரத்தை நாளை (14) முதல் ஜூலை 18 வரை நடத்த இலங்கை மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

“பெருங்கவலையின் உச்சகட்டம் சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது இந்த பிரமிட் திட்டங்கள் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, நாளை முதல் ஒரு வார காலத்திற்கு இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் நிதி நுகர்வோரின் நல்வாழ்வை மேம்படுத்தும் மத்திய வங்கியின் செயற்பாடுகளுக்கு அமைய, தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் மற்றும் அவை தனிநபர்களுக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க அபாயங்கள் குறித்து பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தேசிய நிகழ்ச்சியின் இலக்காகும்.

https://athavannews.com/2025/1438963