Aggregator

கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையில் முட்டை வீச்சு!

2 months ago

canada-2.jpg?resize=545%2C302&ssl=1

கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையில் முட்டை வீச்சு!

கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையின் போது, மர்ம நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டொரோன்டோ நகரில் இந்தியர்களின் ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது பக்தி பாடல்களை பாடியபடியும், கடவுளின் பெயரைச் சொல்லி கோஷமிட்டபடியும் இந்தியர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது சிலர் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. அந்த வீடியோவில் வீதியின் ஓரத்தில் இருந்த கட்டடங்களில் இருந்து முட்டைகளை, யாத்திரை சென்ற இந்தியர்கள் மீது வீசுவது தெரிய வந்தது. இது இனவெறி தாக்குதல் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கூறும்போது, ‘முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தும் போது அதிர்ந்து போய் விட்டோம். எங்களின் ரத யாத்திரையை நிறுத்த வேண்டும் என்று நோக்கத்தில் இந்த செயலை செய்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் தோல்வியடைந்து விட்டது. வெறுப்பு ஒருபோதும் வெல்ல முடியாது,’ எனத் தெரிவித்தனர்.

https://athavannews.com/2025/1439101

தேனீக்களை உளவாளிகளாக பயன்படுத்த சீனா திட்டம்!

2 months ago
தேனீக்களை உளவாளிகளாக பயன்படுத்த சீனா திட்டம்! தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவற்றை தமது தேவைக்கு ஏற்ப பயணிக்க வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. தேனீக்கள் இயற்கை பேரிடர், தீவிரவாத தடுப்புக்கு உதவும் என்று கூறப்பட்டாலும், தேனீக்களை உளவாளிகளாகவும் பயன்படுத்த முடியும். உயிரினங்களைக் கருவிகள் வாயிலாகக் கட்டுப்படுத்தும், ‘சைபோர்க்’ (Cyborg technology) என்ற தொழில்நுட்பம் தொடர்பாகப் பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்த வகையில், தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, தம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் முயற்சியில், சீனாவைச் சேர்ந்த பீஜிங் தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, 74 மில்லி கிராம் எடையுள்ள சிறிய கருவி ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். அவற்றில் உள்ள சிறிய ஊசிகள், தேனீயின் மூளையைக் கட்டுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, எந்த இடத்திலிருந்தும், குறித்த தேனீக்களின் இயக்கத்தைக் கண்காணிக்க முடியும். இதுவரை நடந்துள்ள ஆய்வுகளில், விஞ்ஞானிகளின் உத்தரவுகளில், 90 சதவீதத்தைத் தேனீக்கள் நிறைவேற்றி உள்ளன. இதற்கமைய பேரிடர் காலங்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களின் போது, மனிதர்கள் உடனடியாக செல்ல முடியாத இடங்களுக்கு, இது போன்ற தேனீக்களை அனுப்பி, அங்குள்ள நிலவரத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என, விஞ்ஞானிகள் கூறுகின்றனர். https://athavannews.com/2025/1439086

தேனீக்களை உளவாளிகளாக பயன்படுத்த சீனா திட்டம்!

2 months ago

images-1.jpg?resize=259%2C194&ssl=1

தேனீக்களை உளவாளிகளாக பயன்படுத்த சீனா திட்டம்!

தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவற்றை தமது தேவைக்கு ஏற்ப பயணிக்க வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

தேனீக்கள் இயற்கை பேரிடர், தீவிரவாத தடுப்புக்கு உதவும் என்று கூறப்பட்டாலும், தேனீக்களை உளவாளிகளாகவும் பயன்படுத்த முடியும்.

உயிரினங்களைக் கருவிகள் வாயிலாகக் கட்டுப்படுத்தும், ‘சைபோர்க்’ (Cyborg technology) என்ற தொழில்நுட்பம் தொடர்பாகப் பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

இந்த வகையில், தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, தம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் முயற்சியில், சீனாவைச் சேர்ந்த பீஜிங் தொழில்நுட்ப மையத்தின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக, 74 மில்லி கிராம் எடையுள்ள சிறிய கருவி ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.

அவற்றில் உள்ள சிறிய ஊசிகள், தேனீயின் மூளையைக் கட்டுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எந்த இடத்திலிருந்தும், குறித்த தேனீக்களின் இயக்கத்தைக் கண்காணிக்க முடியும்.

இதுவரை நடந்துள்ள ஆய்வுகளில், விஞ்ஞானிகளின் உத்தரவுகளில், 90 சதவீதத்தைத் தேனீக்கள் நிறைவேற்றி உள்ளன.

இதற்கமைய பேரிடர் காலங்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களின் போது, மனிதர்கள் உடனடியாக செல்ல முடியாத இடங்களுக்கு, இது போன்ற தேனீக்களை அனுப்பி, அங்குள்ள நிலவரத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என, விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

https://athavannews.com/2025/1439086

ஐஎன்எஸ் அர்னாலா: இந்திய கடற்படையின் புதிய போர்க் கப்பல் எதிரிகளை முறியடிக்க எவ்வாறு உதவும்?

2 months ago
பட மூலாதாரம்,INDIAN NAVY கட்டுரை தகவல் ஜுஹல் ப்ரோஹித் பிபிசி செய்தியாளர், விசாகப்பட்டினத்தில் இருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். அர்னாலா கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த கப்பல் நீருக்கடியில் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கும் திறன் கொண்டது. இந்திய கடற்படைக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது இக்கப்பல். இந்த கப்பல் குறித்து செய்தி சேகரிக்க பிபிசி இந்திக்கு அனுமதி கிடைத்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக கப்பலின் சில பகுதிகளுக்குள் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்திய கடற்பாதுகாப்பு அமைப்பில் இந்த கப்பல் எத்தகைய பங்காற்றப் போகிறது என்பதை அறிந்து கொள்ள பிபிசி முயன்றது. இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் 95% கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அரபிக் கடல், வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் வழியாகவே இந்த வர்த்தகம் நடைபெறுகிறது. சர்வதேச போட்டி இந்த பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் இந்த கடல் மார்க்கத்தை எவ்வளவு தூரம் நம்பியுள்ளது என்பதையும் இது காட்டுகிறது. பாதுகாப்பு அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் இந்தியாவின் கடல் எல்லையானது 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 200க்கும் மேற்பட்ட துறைமுகங்களும், பல கடற்கரை நகரங்களும் இந்த எல்லைகளில் அமைந்துள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கடற்படைகள் இந்திய பெருங்கடலில் தங்களது பலத்தை அதிகரித்து வருகின்ற சூழலில், கடற்பாதுகாப்பு உத்தியானது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்தியா தன்னுடைய நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையையும் கடற்படையின் திறனையும் அதிகரிக்கிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் இந்தியா ஐ.என்.எஸ். அர்னாலாவை அறிமுகம் செய்துள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இக்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் 95% கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன அர்னாலாவின் சிறப்பம்சங்கள் என்ன? நீர்மூழ்கிகளின் தாக்குதலை எதிர்க்கும் (anti-submarine) போர்க்கப்பலான ஐ.என்.எஸ். அர்னாலா பல வகைகளில் மிகவும் சிறப்பான போர்க்கப்பலாகும். இதன் திறன் என்னவென்றால், குறைவான ஆழத்தில், அதாவது கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிகளைக் கூட கண்டுபிடிக்க முடியும் என்பதாகும். ஐ.என்.எஸ். அர்னாலா போன்ற கப்பல்கள் ஏன் கடற்படைக்கு தேவை என்பதை வருங்காலத்தில் நம்மால் புரிந்து கொள்ள இயலும். இது போன்று மேலும் 15 புதிய போர்க்கப்பல்களை இணைக்க இந்திய கடற்படை தீர்மானித்துள்ளது. பாதுகாப்புத்துறை அளித்த தகவலின் படி, இந்த 16 போர் கப்பல்களை உருவாக்குவதற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இந்த கப்பல்கள் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினியர்ஸ் லிமிடெட் கப்பல் கட்டும் தளத்திலும், கொச்சியில் அமைந்திருக்கும் கொச்சின் கப்பல் கட்டும் தளத்திலும் உருவாக்கப்படும். பிபிசி இந்தி குழு ஐ.என்.எஸ். அர்னாலா கப்பலுக்கு சென்ற அந்த நாள் கடற்படை அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் எப்போதும் போல் ஒரு வழக்கமான நாள். கப்பலுக்கு தேவையான பல பொருட்களை அவர்கள் உள்ளே எடுத்து வந்தனர். நாங்கள் உள்ளே சென்ற போது வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எந்த ஒரு போர்க்கப்பலும் உணரிகள், ஆயுதங்கள், என்ஜின்கள் மற்றும் தொலைத்தொடர்புக்கு தேவையான உபகரணங்களை உள்ளடக்கியிருக்கும். எனவே உள்ளே நடமாடுவதற்கு போதுமான இடம் இருக்காது. ஐ.என்.எஸ். அர்னாலாவிலும் அதே நிலை இருந்தது. 6 அடுக்குகளைக் கொண்ட அர்னாலாவில் மேலும் கீழும் செல்ல அங்குள்ள பணியாளர்கள் படிகளை பயன்படுத்துகின்றனர். படக்குறிப்பு, அர்னாலாவில் செய்தி சேகரிக்க பிபிசி இந்தி ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது ஐ.என்.எஸ் அர்னாலாவின் கமாண்டிங் அலுவலர் கூறுவது என்ன? எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டுபிடிக்க இந்த போர்க்கப்பலில் பல சோனார் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இது ஒரு சிறப்பு தொழில்நுட்பம். இதனை பயன்படுத்தி ஒலி அலைகளின் உதவியோடு நீருக்குள் இருக்கும் கப்பல்களைக் கண்டறிய இயலும். எதிரிகளின் கப்பல்கள் எங்கே இருக்கிறது என்று அறிந்தால் மட்டுமே தாக்குதல் நடத்த இயலும் என்பதால் இது மிகவும் முக்கியமானது. இந்த போர்க்கப்பலின் திறன் குறித்து புரிந்து கொள்வதற்காக நாம் ஐ.என்.எஸ். அர்னாலாவின் தளபதி அங்கித் க்ரோவரிடம் பேசினோம். "நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்க தேவையான பல ஆயுதங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளன. இது நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்க உதவும்," என்று கூறினார். "இந்த கப்பலில் டர்பிடோ ட்யூப்கள் உள்ளன. டர்பிடோ என்பது நீருக்குள்ளே தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் ஆயுதமாகும். எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்க இந்த ட்யூப்கள் வழியாக டர்பிடோக்களை ஏவ இயலும். அதேநேரத்தில் டர்பிடோக்களின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான 'ஆன்டி-டர்பிடோ டெகாய் சிஸ்டமும்' இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது. படக்குறிப்பு, ஐ.என்.எஸ். அர்னாலாவின் தளபதி அங்கித் க்ரோவர் அர்னாலாவில் வேறென்ன உள்ளது? இந்த போர்க்கப்பல் 77 மீட்டர் நீளம் கொண்டது. அதாவது 26 அடுக்கு மாடி கட்டடத்தின் உயரத்திற்கு இணையானது. கடற்படை அளித்த தகவலின் படி, இதில் 30 எம்.எம். சர்ஃபேஸ் துப்பாக்கி உள்ளது. இது தரை மற்றும் வான்வழி தாக்குதல்களுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் திறன் கொண்டது. கண்ணி வெடிகளை புதைக்கும் திறன் கொண்டது இந்த கப்பல். இது எதிரிகளின் போர்கப்பல்களை அழிக்க உதவும். ஐ.என்.எஸ். அர்னாலாவின் மற்றொரு சிறப்பம்சம் இதன் என்ஜினாகும். கடற்படை அளித்த தகவலின் படி, டீசல் இயந்திரம் மற்றும் வாட்டர்ஜெட் தொழில்நுட்பத்தில் இயங்கும் மிகப்பெரிய போர்க்கப்பல் இதுவாகும். என்ஜின் அறையை பார்வையிட்ட நாங்கள் அங்கே முலாயம் சிங்கை பார்த்தோம். அவர் ஐ.என்.எஸ். அர்னாலாவின் என்ஜின் அறையில் பணியாற்றும் அதிகாரி. "இந்த என்ஜின் மூன்று 'அட்வான்டேஜ்களைக்' கொண்டுள்ளது. ஒன்று, இதுபோன்ற என்ஜின் போர்க்கப்பலுக்கு அதிக வேகத்தைத் தரும். இரண்டாவதாக என்ஜின் கப்பலின் திசையை வேகமாக மாற்றும் திறன் கொண்டது. மூன்றாவது, இது மிகவும் குறைவாகவே இரைச்சலை ஏற்படுத்தும்," என்று முலாயம் சிங் கூறுகிறார். படக்குறிப்பு, ஐ.என்.எஸ். அர்னாலாவின் என்ஜின் அறையில் பணியாற்றும் முலாயம் சிங் "மிகவும் அமைதியாக இயங்கும் என்ஜினைக் கொண்டிருப்பதால், நம்முடைய கப்பலுக்கு அருகிலேயே எதிரிகளின் போர்க்கப்பல் இருந்தாலும் அதனால் அர்னாலாவை கண்டுபிடிக்க இயலாது," என்றும் அவர் கூறுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களைக் கொண்டுள்ளது அர்னாலா.இங்கே பணியாற்றும் நபர்களுக்கு வழங்கப்படும் தங்குமிடம், உணவு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட வசதிகள் குறித்து பிபிசி கேட்டறிந்தது. மூத்த கடற்படை அதிகாரியான கமோடோர் ரஜ்னீஷ் ஷர்மா ஆந்திர பிரதேசத்தின் கடற்படை பகுதி பொறுப்பாளராக உள்ளார். விசாகப்பட்டினத்தில் பிபிசி குழுவிடம் பேசிய அவர், "வருங்காலத்தில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் 15 போர்க்கப்பல்களையும் கணக்கில் கொண்டால், 16 கப்பல்களில் 8 மேற்கு கடற்கரைப் பகுதிகளிலும், 8 கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும் பணியமர்த்தப்படும்," என்று தெரிவித்தார். "கடலுக்கடியில் கண்காணிப்பு மற்றும் எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டுபிடிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்த கப்பல் கொண்டுள்ளது." என்றும் அவர் கூறினார். படக்குறிப்பு, அர்னாலா கப்பலின் தோற்றம் பெயர்க் காரணம் என்ன? இந்த போர்க்கப்பல் விசாகப்பட்டினத்தில் துவங்கி வைக்கப்பட்டாலும் மும்பையின் வசாய் பகுதியோடு தொடர்பு கொண்டுள்ளது இதன் பெயர். இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் கடற்கரை பகுதியான வசாய்க்கு அருகே கோட்டை ஒன்று உள்ளது. அதன் பெயர் அர்னாலா. கடற்படையினர் அளித்த தகவலின் படி, இந்த கோட்டை மராத்தா சாம்ராஜ்ஜியத்தால் எதிரிகளின் தாக்குதல்களை தடுக்க 1737-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. உண்மையில் அர்னாலா என்ற பெயரில் இந்திய கடற்படை ஏற்கனவே போர்க்கப்பல் ஒன்றை வைத்திருந்தது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அது சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. பட மூலாதாரம்,INDIAN NAVY படக்குறிப்பு, உண்மையில் அர்னாலா என்ற பெயரில் இந்திய கடற்படை ஏற்கனவே போர்க்கப்பல் ஒன்றை வைத்திருந்தது சீனா, பாகிஸ்தான் கடற்படை எத்தகைய வலிமை கொண்டது? கடந்த ஆண்டு அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அளவைப் பொருத்தவரை சீன கடற்படை தான் உலகிலேயே மிகப்பெரிய கடற்படை என்று குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, சீனா 370-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது. அதே அறிக்கையில் பாகிஸ்தானின் கடற்படை வலுப்பெற சீனாவின் பங்கு முக்கியமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் 8 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க 2015-ஆம் ஆண்டு சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமானது என்று கூறப்பட்டது. 2024-ஆம் ஆண்டு இந்திய கடற்படையின் தலைமை அட்மிரல் தினேஷ் திரிபாதி பாகிஸ்தான் கடற்படையின் திறன்களை பார்த்து ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார். இதுபோன்ற சூழலில் ஐ.என்.எஸ். அர்னாலா போன்ற போர்க்கப்பல்கள் இந்தியாவுக்கு ஒரு முக்கிய பங்காற்றும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க பாதுகாப்புத்துறை அறிக்கையின் படி சீனா 370-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது நிபுணர்கள் கூறுவது என்ன? ஓய்வு பெற்ற கேப்டன் சரப்ஜீத் எஸ். பார்மரிடம் பேசியது பிபிசி இந்தி. இந்திய கடற்படையில் ஹெலிகாப்டர் விமானியாக பணியாற்றிய அவர் நீர்மூழ்கிக் கப்பல்கள் (தாக்குதல்) எதிர்ப்பு உத்திகளில் நிபுணராவார். "1971-ஆம் ஆண்டு போரின் போது பாகிஸ்தானின் காஸி நீர்மூழ்கிக் கப்பல் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வெளியே நடமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த கால மற்றும் வருங்கால மோதல்களின் போது இந்திய துறைமுகங்களும், கப்பல்களும் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களின் தாக்குதல் இலக்குகளாக இருக்கக் கூடும் என்பதை இது காட்டுகிறது,"என்று கூறினார் அவர். நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான போர் என்பது மிகவும் சிக்கலான போர்களில் ஒன்று என்று அவர் கருதுகிறார். "எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்கள் உங்களின் கடற்கரைக்கு அருகே இருக்கிறது என்றால், கடற்படை முன்னேறுவதற்கு முன்பு அந்த அச்சுறுத்தலைச் சமாளிக்க வேண்டியிருக்கும். இது கடற்படையின் செயல்பாடுகளைப் பாதிக்கும். இதுபோன்ற சூழலில் முன்னேறிச் சென்று எதிரிகளை தாக்குவது கடினமானதாகும். துறைமுகங்களின் இயல்பான செயல்பாடுகளும், சரக்குக் கப்பல்களின் போக்குவரத்தும் கூட இதனால் பாதிக்கப்படக் கூடும்," என்று அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,INDIAN NAVY படக்குறிப்பு, நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான போர் என்பது மிகவும் சிக்கலான போர்களில் ஒன்று "ஆனால் அர்னாலா போன்ற நீர்மூழ்கி தாக்குதலை தடுக்கும் பிரத்யேகமான போர்க்கப்பல் இருந்தால், எதிரிகளின் கப்பல்களை தேடிக் கண்டுபிடித்து அழிக்க இயலும்," என்று சரப்ஜீத் கூறுகிறார். "இதன் மூலமாக, கடற்படை, குறிப்பாக பெரிய கப்பல்கள், அதன் இலக்கை நோக்கி நகர இயலும். இத்தகைய போர்க்கப்பல்களின் இருப்பானது துறைமுகங்கள் வழக்கமாக இயங்குவதை உறுதி செய்யும். இந்திய கடற்படை இந்த வகையில் 16 கப்பல்களை உருவாக்க (அர்னாலாவையும் சேர்த்து) உத்தரவிட்டுள்ளது. ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உருவாக்க உத்தரவிட்டிருப்பது இதுவே முதல்முறை. கடற்படை தொடர்ச்சியாக இத்தகைய கப்பல்களை உருவாக்க வேண்டும். இந்த கப்பல்களின் இருப்பு அனைத்து நேரத்திலும் இருப்பதையும் கடற்படை உறுதி செய்ய வேண்டும்." என்று அவர் கூறினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd6gpq29d4zo

நேற்று இல்லாத மாற்றம்!

2 months ago
கதையாசிரியர்: பாரதிமணியன் ஆபிஸ்க்கு கிளம்ப நேரம் ஆகிவிட்டதே என்று அடிக்கடி செல்போனில் டைம் பார்த்துக்கொண்டே, அவசர அவசரமாக காலை டிபனைச் சாப்பிட்டான் அமுதன். சாப்பிட்டதும் பக்கத்தில் டைனிங் டேபிள் மேல் இருந்த டம்ளர் தண்ணீரை எடுத்து ‘மடக் மடக்’ கென்று குடித்துவிட்டு, எழுந்து வாஷ்பேசினில் கையை கழுவினான். அவனுடைய ஆபீஸ் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு ஆபீஸ்க்கு கிளம்ப… மனைவி சங்கீதா அவனிடம் லஞ்ச் பாக்ஸைக் கொண்டு வந்து கொடுத்தாள். அந்த நேரம் பார்த்து, அவனுக்கு வந்த செல்போன் அழைப்பை, அவன் காதில் இருந்த ப்ளூடூத் இணைப்பில் தொடர்பு ஏற்படுத்திப் பேச ஆரம்பித்தான். சங்கீதா கொடுத்த டிபனை வாங்கி பேக்கில் வைத்துக்கொண்டு, அவளைப் பார்த்து ‘சரி, கிளம்புகிறேன்’ என்பதுபோல தலையை மட்டும் ஆட்டிவிட்டு, வாசலில் இருந்த காரைப் பார்த்து நடந்தான். சங்கீதா அவன் கூடவே வாசல் வரை போய், அமுதன் காரில் ஏறி கிளம்பும் வரை பார்த்துவிட்டு, திரும்பி வீட்டுக்குள் வந்ததும்… கோபமாக ஹாலில் இருந்த சோபாவில் பொத்தென்று உட்கார்ந்தாள். அவளுக்கு கணவன் அமுதன் மீது கோபம் கோபமாக வந்தது. சமீபகாலமாக அவன் முன்பு போல அவளை கண்டுகொள்வதே இல்லை என்பதுதான் அவளுடைய கோபத்திற்குக் காரணம். அவளுக்குத் திருமணம் ஆன புதிதில், புளித்துப் போன மாவில் தோசை ஊற்றிக் கொடுத்தால் கூட.. ‘அடடா என்ன சுவை!’ன்னு பாராட்டியவன், இப்போதெல்லாம்… அவள் ‘யூடியூப்’ வீடியோ பார்த்து, விதவிதமான டிஷ்சை செய்து கொடுத்தாலும் … ‘இது இன்னும் கொஞ்சம் வெந்து இருக்கலாம்!’ ‘உப்பு கொஞ்சம் குறைவா இருக்கிற மாதிரி இருக்கே!’ ‘காரமே இல்லை!’ என்று ஏதாவது ஒரு குறையைச் சொல்லுகிறான் அல்லது எதுவுமே பேசாமல், மொபைல் போனைப் பார்த்துக்கொண்டே என்ன சாப்பிடுகிறோம் என்று கூட கவனிக்காமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து போய்விடுகிறான். ஒருவேளை அமுதனுக்கு அவள் சமையல் பிடிக்கவில்லையா? அல்லது அவளையே பிடிக்கவில்லையா?!.. இல்லை முன்பு போல அவனுக்குப் பிடித்த மாதிரி தனக்குச் சமைக்கத் தெரியவில்லையோ?! என்று யோசித்தாள். ‘ஆனால் அவளுடைய குழந்தைகள் எப்போதும் போல அவளுடைய சமையலை ரசித்து, ருசித்துச் சாப்பிடுகிறார்களே’!’ என்றும் நினைத்தாள். அவள் கணவனைப் பற்றிய தீவிர யோசனையோடு… சோபாவுக்கு முன்பு இருந்த டீப்பாயைப் பார்த்தபோது, அங்கே ஒரு ஃபைல் இருப்பதைக் கவனித்தாள். அது ஒரு பட்டன் டைப் பிளாஸ்டிக் ஃபைல், அது சரியாக மூடாததால், அதில் இருந்த பேப்பர்கள் ஃபேன் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன. ‘ம்ம்..இது அமுதனுடைய ஆபீஸ் ஃபைல் தானே! அடடா… காலையில் ஆபீசுக்குக் கிளம்ப ரெடியானவன், ஆபீஸ் பேக்கில் இருந்து இந்த ஃபைலை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் சாப்பிட போகும்போது இதை அப்படியே வைத்துவிட்டுப் போனான். பிறகு ஆபீசுக்குப் புறப்படும்போது, போன் பேசிக்கொண்டே… ஃபைலை மறந்துவிட்டு, ஆபீஸ் பேக்கை மட்டுமே எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் போல!’ என்று நினைத்தபடி, அவள் அதைக் கையில் எடுத்துப் பார்த்தாள். அப்போது அந்த ஃபைல் அவளுடைய கையில் இருந்து நழுவி, கீழே தரையில் விழவே… அதற்குள் இருந்த பேப்பர்கள் சில ஃபைலை விட்டு வெளியில் வந்து விழுந்தன. அவள் உடனே சட்டென்று எழுந்து… அந்த பேப்பர்களை எடுத்து மீண்டும் அந்த ஃபைலில் வைத்தாள். அதில், அமுதனுடைய முத்து முத்தான கையெழுத்தில் தமிழில் எழுதியிருந்த பேப்பர் ஒன்று அவள் கண்ணில் பட்டது. மற்ற பேப்பர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பிரிண்ட் செய்யப்பட்டு இருக்க, இந்த பேப்பர் மட்டும் தமிழில் இருந்ததால், அந்த பேப்பரில் எழுதியிருந்ததைப் படித்தாள். ‘நீ என் மனைவியாக வந்தது…’ என்று ஆரம்பித்த வரியைப் பார்த்தவுடன், அது அவளுடைய ஆவலைத் தூண்ட, அதை முழுவதுமாகப் படிக்க விரும்பினாள். “நீ என் மனைவியாக வந்தது…நான் செய்த புண்ணியம்!. நீ என்னை அக்கறையோடு கவனித்துப்பார்த்துக்கொள்வதால்தான், நான் வீட்டில் கவலை இல்லாமல், சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு இருக்கும் ஆபீஸ் வேலை, டென்ஷனில் உன்னிடம் இதுவரை மனம் விட்டு பேச முடிந்ததில்லை. என் மனதில் உள்ளதை நேரடியாக சொல்வதை விட, இந்தக் கடிதம் மூலமாக என் உள்ளம் திறந்து சொல்கிறேன்! ‘நீயில்லாமல் என் வாழ்க்கையே இல்லை! உன்னை எனக்கு மனைவியாகக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். அதைப்போலவே உன்மீதும் நான் அன்பைப் பொழியவே விரும்புகிறேன்.’ அந்தக் கடிதத்தைப் படிக்கப் படிக்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தக் கையெழுத்து அமுதனுடையது என்பது தெளிவாக அவளுக்குத் தெரிந்தது. ‘ஏன் அமுதன் இதை, ஆபீஸ் ஃபைலில் வைத்திருக்கிறான்?! அவள் அவனிடம் கோபமாக இருப்பதைத் தெரிந்துகொண்டு, அவளைச் சமாதானப்படுத்த, இப்படி எழுதி வைத்திருக்கானோ?! அவள் பார்க்க வேண்டும் என்று வேண்டுமென்றே இந்தப் ஃபைலை வைத்துவிட்டுப் போய்விட்டானோ!’… இப்படி பல விதமாக அவள் யோசித்தாள். அதற்குள் ஆபீசுக்குப் போன அமுதன் திரும்ப வீட்டிற்கு முன்பு வந்து காரை நிறுத்தி, ஹார்ன் அடிக்கும் சத்தம் கேட்டது. உடனே சங்கீதா அந்த லெட்டரை ஃபைலில் வைத்துவிட்டு, அந்த ஃபைலை எடுத்துக்கொண்டு அவசரமாக, வீட்டுக்கு வெளியே வந்தாள். “நான் ஒரு ஆபீஸ் ஃபைலை, ஹாலில் சோபா மேலே வைத்துவிட்டுப் போய்விட்டேன். கொஞ்சம் அதை எடுத்துட்டு வா” என்று சொல்லிவிட்டு, அவள் கையில் அந்த ஃபைலை வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, ஒரு புன்னகையோடு அந்த ஃபைலை வாங்கிக்கொண்டு போனான். அன்று மாலை அமுதன் திரும்ப ஆபீஸில் இருந்து வந்த பிறகு, அவனால் வீட்டில் நடப்பதெல்லாம் நம்ப முடியவில்லை. அவன் ஆபீஸிலிருந்து வந்ததும் வராததுமாய், காரை நிறுத்தும் இடத்துக்கே வந்து வரவேற்கிற சங்கீதாவை அமுதன் ஆச்சரியமாகப் பார்த்தான். முன்பெல்லாம் அவன் ஏதாவது சொல்வதற்கு முன்பு… “உங்களுக்கு ஒன்றும் தெரியாது. சும்மா இருங்கள்! எப்ப பார்த்தாலும் ஆபீஸ் வேலை ஆன்லைன் மீட்டிங் என்று சொல்லிக்கொண்டு, வீட்டையே கவனிக்கிறதில்லை! இங்கு வீட்டில் ஒருத்தி என்ன சமைக்கிறாள்? என்ன சாப்பிட்டாள்… இப்படி எதுவும் கண்டுகொள்வதில்லை… எப்ப பார்த்தாலும் அந்த போனில் யாருகிட்டயாவது பேசிக்கொண்டே இருக்கிறது. இல்லை அதையே நோண்டிக்கொண்டு இருக்கிறது. வீட்டில் பொண்டாட்டி என்று ஒருத்தி இருக்கிறதே உங்கள் ஞாபகத்தில் இருக்கிற மாதிரி தெரியவில்லை.! பெற்ற பிள்ளைகளிடம் பேசக்கூட உங்களுக்கு நேரம் இல்லை.” எப்பவும் குறை சொல்லிக்கொண்டு, அவனை வம்பிழுத்துக்கொண்டே இருக்கிற மனைவி, இப்போது “பாவம்ங்க நீங்கள்… நம்ம குடும்பத்துக்காக இப்படி வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளிடம் கூட பேசக்கூட முடியாத அளவுக்கு வேலை. ஆபீஸில் எந்த பிரச்னையானாலும், உடனே போன் பண்ணி பேசி.. உங்களைத் தொந்தரவு பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் எங்கள் மேல் வைத்திருக்கிற பாசத்தை புரிந்துகொள்ளாமல், நான் வேறு… உங்களிடம் எப்ப பார்த்தாலும் மல்லு கட்டிக்கொண்டு, மூஞ்சை தூக்கிக்கொண்டு இருக்கிறேன்.” சங்கீதா இப்படி பேசுவதைக் கேட்டு… அவனுக்கே நடப்பதெல்லாம் கனவா நனவா என்று தெரியவில்லை. திடீரென்று அவளுடைய நடவடிக்கையில் வந்த இந்த மாற்றத்துக்கு காரணம், ஒருவேளை, ராசிபலனில் சொல்லுவார்களே, அது மாதிரி அவனுடைய ராசியில் இருக்கிற கிரகங்கள் எல்லாம் உச்சம் பெற்றுவிட்டதா?!’ என்று யோசித்தான். மறுநாள் வழக்கம் போல அமுதன் ஆபீஸ் கிளம்பும் போது, சங்கீதா, பளிச்சென்று புன்னகையோடு கூடவே வாசல் வரை வந்து வழியனுப்பினாள். அவனுடைய லஞ்ச் பாக்ஸ், ஆபீஸ் பேக் எல்லாவற்றையும் அவளே எடுத்துக்கொண்டு வந்து, அவனுடைய காரில் வைத்துவிட்டாள். கல்யாணம் ஆன புதிதில் அவனோடு அன்பாக, சினேகமாக இருந்த மனைவி சங்கீதாவை மீண்டும் பார்ப்பது போல் அமுதனுக்குத் தெரிந்தது. ‘நேற்று இல்லாத மாற்றம் என்னது’ என்ற திரைப்பட பாடல் அவன் நினைவுக்கு வந்தது. இப்படி யோசித்துக்கொண்டே, ஆபீசுக்கு வந்த அமுதனை, அவனுடைய சீட்டில் வந்து உட்கார்ந்ததும்… அவனுடைய ஜூனியர் நவீன் எதிரே வந்து நின்றான். “ரொம்ப தாங்க்ஸ் சார். உங்க அனுபவ அறிவை வெச்சு , என்னோட குடும்பத்தில் இருந்த பிரச்சனையை சரி பண்ணி கொடுத்திருக்கிறீங்க . சூப்பர் சார். இந்த உதவியை என்னைக்கும் மறக்கமாட்டேன் சார். உண்மையில் உங்களை போல ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க உங்க வைஃப் கொடுத்து வெச்சிருக்கணும். அவங்க ரொம்ப லக்கி சார்” என்று மகிழ்ச்சியோடு மனம் நெகிழ்ந்து பேசினான். “என்ன பிரச்சனைன்னே தெரியாம, எனக்கும் என் வைஃபுக்கும் இடையில இதுவரை இருந்த சண்டை, நீங்க கொடுத்த யோசனையாலதான் சரியாச்சு. அவளோட இனிமே சந்தோஷமா வாழவே முடியாதுன்னு நினைச்சுட்டு இருந்த நான் இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன்னா அது உங்களாலதான் சார். நீங்க எனக்காக ஒரு லெட்டரை எழுதி காண்பித்து, அதே மாதிரி என்னையும் எழுதி, என் வைஃப் கண்ணுல படற மாதிரி வீட்டுல வைக்க சொன்னீங்க. ஆனா நான் அவ கையிலேயே கொடுத்துட்டேன். அவ அதை படிச்சதும் செம ஹாப்பியா ஆகிட்டா… அதுக்கப்புறம் எனக்கு ஒரே கவனிப்புதான்.” என்று சொல்லிவிட்டு, அவன் மனசுல தோன்றிய சில விஷயங்களையும் அமுதன் கிட்ட சொன்னான். “சார், நம்ம கூட வேலை செய்யறவங்களை, நமக்கு கீழ வேலை பார்க்குறவங்களை தட்டிக்கொடுத்து, பாராட்டிட்டு, அதுக்கு பிறகு அவங்களை வேலையை செய்ய சொல்லும் போது, அவங்களோட நட்பும், முழு ஒத்துழைப்பும் நமக்கு கிடைக்குது. நாம அதே மாதிரியான அணுகுமுறையை, நம்ம வீட்டில காண்பிக்கிறதில்ல. அவங்களுக்காக உழைக்கிறோமுன்னு சொல்லிட்டு, நாம அவங்ககூட பேசக்கூட நேரம் இல்லாது போல நடந்துக்கறோம்.” வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு… நாள் முழுதும் டென்ஷனோடு வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிற லேடிஸ்க்கு, ஒரு ரிலாக்சேஷன் கிடைக்கணுமுன்னா… நாம அவங்களோட பேச, நம்ம நேரத்தை ஒதுக்கணும். மனசு விட்டு பேசணும். அப்போதுதான் அவங்களை நாமும், நம்மை அவங்களும் புரிஞ்சிக்க உதவும். இதை உங்க உதவியால நான் புரிஞ்சிக்கிட்டேன். நவீன் உற்சாகமாகப் பேச… பேச… அவனுடைய பாராட்டையும், நன்றியையும் புன்னகையோடு ஏற்றுக்கொண்ட அமுதனுக்கு, அப்போது மனசுக்குள் பல்ப் எரிந்தது. அவன் நவீனிடம் பேசி, வாழ்த்தி அனுப்பிவிட்டு… அவசரமாக அவன் வைத்திருந்த அந்த பிளாஸ்டிக் பைலை எடுத்துப் பார்த்தான். வீட்டில் ஒரே சண்டையாக இருப்பதாக நவீன் அமுதனிடம் புலம்பியபோது, நவீனுக்காக, நவீன் மனைவியைப் பாராட்டி எழுதுவதுபோல, ஒரு கடிதத்தை எழுதிக் காண்பித்து, அவனையும் அதைப்போல் எழுதச் சொல்லிவிட்டு, பிறகு அந்தக் கடிதத்தை அந்த பைலில் வைத்திருந்தான். ‘சங்கீதாவின் மாற்றத்துக்குக் காரணம் அந்தக் கடிதம்தான் என்று அமுதனுக்குப் புரிந்துவிட்டது. நேற்று அந்த பைலை அவன் வீட்டில் மறந்துவிட்டுப் போன நேரத்தில், சங்கீதாவும் படித்துவிட்டு… அது அவளுக்காக அமுதன் எழுதியது என்று நினைத்திருக்கலாம்’ என்று நினைத்தான். பொதுவாக அடுத்தவர்களுக்கு ஆலோசனை தருவது சுலபமான விஷயம். ஆனால் அவரவர் குடும்ப விஷயத்தில் அதைப் பின்பற்ற நினைப்பதில்லை. எது எப்படி இருந்தாலும், நவீனுடைய குடும்பச் சண்டைக்கு, அமுதன் கொடுத்த யோசனை அவனுக்கே பலன் தந்துவிட்டது. அவன் மனைவி சங்கீதா பாவம், அவளாகவே கற்பனை பண்ணிக்கொண்டு சந்தோஷமாகிவிட்டாள். அதை நினைத்ததும் அமுதனுக்கு மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. அவன்மீது அவள் காட்டும் அன்புக்குத் தகுதியானவனாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். ‘இனிமேல் மனைவி சங்கீதா கூடவும், குழந்தைகளோடும் அதிக நேரம் செலவழித்து, அவர்களை சந்தோஷமாக வைத்திருக்கணும்’ என்று அமுதன் தனக்குள் சொல்லிக்கொண்டான். – ராணி வார இதழில் (29.06.2025) பிரசுரிக்கப்பட்டுள்ளது. https://www.sirukathaigal.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d/

நேற்று இல்லாத மாற்றம்!

2 months ago

கதையாசிரியர்: பாரதிமணியன்

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%

ஆபிஸ்க்கு கிளம்ப நேரம் ஆகிவிட்டதே என்று அடிக்கடி செல்போனில் டைம் பார்த்துக்கொண்டே, அவசர அவசரமாக காலை டிபனைச் சாப்பிட்டான் அமுதன். சாப்பிட்டதும் பக்கத்தில் டைனிங் டேபிள் மேல் இருந்த டம்ளர் தண்ணீரை எடுத்து ‘மடக் மடக்’ கென்று குடித்துவிட்டு, எழுந்து வாஷ்பேசினில் கையை கழுவினான். அவனுடைய ஆபீஸ் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு ஆபீஸ்க்கு கிளம்ப… மனைவி சங்கீதா அவனிடம் லஞ்ச் பாக்ஸைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

அந்த நேரம் பார்த்து, அவனுக்கு வந்த செல்போன் அழைப்பை, அவன் காதில் இருந்த ப்ளூடூத் இணைப்பில் தொடர்பு ஏற்படுத்திப் பேச ஆரம்பித்தான்.

சங்கீதா கொடுத்த டிபனை வாங்கி பேக்கில் வைத்துக்கொண்டு, அவளைப் பார்த்து ‘சரி, கிளம்புகிறேன்’ என்பதுபோல தலையை மட்டும் ஆட்டிவிட்டு, வாசலில் இருந்த காரைப் பார்த்து நடந்தான்.

சங்கீதா அவன் கூடவே வாசல் வரை போய், அமுதன் காரில் ஏறி கிளம்பும் வரை பார்த்துவிட்டு, திரும்பி வீட்டுக்குள் வந்ததும்… கோபமாக ஹாலில் இருந்த சோபாவில் பொத்தென்று உட்கார்ந்தாள்.

அவளுக்கு கணவன் அமுதன் மீது கோபம் கோபமாக வந்தது. சமீபகாலமாக அவன் முன்பு போல அவளை கண்டுகொள்வதே இல்லை என்பதுதான் அவளுடைய கோபத்திற்குக் காரணம். அவளுக்குத் திருமணம் ஆன புதிதில், புளித்துப் போன மாவில் தோசை ஊற்றிக் கொடுத்தால் கூட.. ‘அடடா என்ன சுவை!’ன்னு பாராட்டியவன், இப்போதெல்லாம்… அவள் ‘யூடியூப்’ வீடியோ பார்த்து, விதவிதமான டிஷ்சை செய்து கொடுத்தாலும் … ‘இது இன்னும் கொஞ்சம் வெந்து இருக்கலாம்!’ ‘உப்பு கொஞ்சம் குறைவா இருக்கிற மாதிரி இருக்கே!’ ‘காரமே இல்லை!’ என்று ஏதாவது ஒரு குறையைச் சொல்லுகிறான் அல்லது எதுவுமே பேசாமல், மொபைல் போனைப் பார்த்துக்கொண்டே என்ன சாப்பிடுகிறோம் என்று கூட கவனிக்காமல் சாப்பிட்டுவிட்டு எழுந்து போய்விடுகிறான்.

ஒருவேளை அமுதனுக்கு அவள் சமையல் பிடிக்கவில்லையா? அல்லது அவளையே பிடிக்கவில்லையா?!.. இல்லை முன்பு போல அவனுக்குப் பிடித்த மாதிரி தனக்குச் சமைக்கத் தெரியவில்லையோ?! என்று யோசித்தாள். ‘ஆனால் அவளுடைய குழந்தைகள் எப்போதும் போல அவளுடைய சமையலை ரசித்து, ருசித்துச் சாப்பிடுகிறார்களே’!’ என்றும் நினைத்தாள்.

அவள் கணவனைப் பற்றிய தீவிர யோசனையோடு… சோபாவுக்கு முன்பு இருந்த டீப்பாயைப் பார்த்தபோது, அங்கே ஒரு ஃபைல் இருப்பதைக் கவனித்தாள். அது ஒரு பட்டன் டைப் பிளாஸ்டிக் ஃபைல், அது சரியாக மூடாததால், அதில் இருந்த பேப்பர்கள் ஃபேன் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன.

‘ம்ம்..இது அமுதனுடைய ஆபீஸ் ஃபைல் தானே! அடடா… காலையில் ஆபீசுக்குக் கிளம்ப ரெடியானவன், ஆபீஸ் பேக்கில் இருந்து இந்த ஃபைலை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் சாப்பிட போகும்போது இதை அப்படியே வைத்துவிட்டுப் போனான். பிறகு ஆபீசுக்குப் புறப்படும்போது, போன் பேசிக்கொண்டே… ஃபைலை மறந்துவிட்டு, ஆபீஸ் பேக்கை மட்டுமே எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் போல!’

என்று நினைத்தபடி, அவள் அதைக் கையில் எடுத்துப் பார்த்தாள்.

அப்போது அந்த ஃபைல் அவளுடைய கையில் இருந்து நழுவி, கீழே தரையில் விழவே… அதற்குள் இருந்த பேப்பர்கள் சில ஃபைலை விட்டு வெளியில் வந்து விழுந்தன. அவள் உடனே சட்டென்று எழுந்து… அந்த பேப்பர்களை எடுத்து மீண்டும் அந்த ஃபைலில் வைத்தாள். அதில், அமுதனுடைய முத்து முத்தான கையெழுத்தில் தமிழில் எழுதியிருந்த பேப்பர் ஒன்று அவள் கண்ணில் பட்டது.

மற்ற பேப்பர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பிரிண்ட் செய்யப்பட்டு இருக்க, இந்த பேப்பர் மட்டும் தமிழில் இருந்ததால், அந்த பேப்பரில் எழுதியிருந்ததைப் படித்தாள்.

‘நீ என் மனைவியாக வந்தது…’ என்று ஆரம்பித்த வரியைப் பார்த்தவுடன், அது அவளுடைய ஆவலைத் தூண்ட, அதை முழுவதுமாகப் படிக்க விரும்பினாள்.

“நீ என் மனைவியாக வந்தது…நான் செய்த புண்ணியம்!. நீ என்னை அக்கறையோடு கவனித்துப்பார்த்துக்கொள்வதால்தான், நான் வீட்டில்

கவலை இல்லாமல், சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு இருக்கும் ஆபீஸ் வேலை, டென்ஷனில் உன்னிடம் இதுவரை மனம் விட்டு பேச முடிந்ததில்லை. என் மனதில் உள்ளதை நேரடியாக சொல்வதை விட, இந்தக் கடிதம் மூலமாக என் உள்ளம் திறந்து சொல்கிறேன்! ‘நீயில்லாமல் என் வாழ்க்கையே இல்லை! உன்னை எனக்கு மனைவியாகக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். அதைப்போலவே உன்மீதும் நான் அன்பைப் பொழியவே விரும்புகிறேன்.’

அந்தக் கடிதத்தைப் படிக்கப் படிக்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அந்தக் கையெழுத்து அமுதனுடையது என்பது தெளிவாக அவளுக்குத் தெரிந்தது. ‘ஏன் அமுதன் இதை, ஆபீஸ் ஃபைலில் வைத்திருக்கிறான்?! அவள் அவனிடம் கோபமாக இருப்பதைத் தெரிந்துகொண்டு, அவளைச் சமாதானப்படுத்த, இப்படி எழுதி வைத்திருக்கானோ?! அவள் பார்க்க வேண்டும் என்று வேண்டுமென்றே இந்தப் ஃபைலை வைத்துவிட்டுப் போய்விட்டானோ!’… இப்படி பல விதமாக அவள் யோசித்தாள்.

அதற்குள் ஆபீசுக்குப் போன அமுதன் திரும்ப வீட்டிற்கு முன்பு வந்து காரை நிறுத்தி, ஹார்ன் அடிக்கும் சத்தம் கேட்டது. உடனே சங்கீதா அந்த லெட்டரை ஃபைலில் வைத்துவிட்டு, அந்த ஃபைலை எடுத்துக்கொண்டு அவசரமாக, வீட்டுக்கு வெளியே வந்தாள்.

“நான் ஒரு ஆபீஸ் ஃபைலை, ஹாலில் சோபா மேலே வைத்துவிட்டுப் போய்விட்டேன். கொஞ்சம் அதை எடுத்துட்டு வா” என்று சொல்லிவிட்டு, அவள் கையில் அந்த ஃபைலை வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, ஒரு புன்னகையோடு அந்த ஃபைலை வாங்கிக்கொண்டு போனான்.

அன்று மாலை அமுதன் திரும்ப ஆபீஸில் இருந்து வந்த பிறகு, அவனால் வீட்டில் நடப்பதெல்லாம் நம்ப முடியவில்லை. அவன் ஆபீஸிலிருந்து வந்ததும் வராததுமாய், காரை நிறுத்தும் இடத்துக்கே வந்து வரவேற்கிற சங்கீதாவை அமுதன் ஆச்சரியமாகப் பார்த்தான்.

முன்பெல்லாம் அவன் ஏதாவது சொல்வதற்கு முன்பு… “உங்களுக்கு ஒன்றும் தெரியாது. சும்மா இருங்கள்! எப்ப பார்த்தாலும் ஆபீஸ் வேலை ஆன்லைன் மீட்டிங் என்று சொல்லிக்கொண்டு, வீட்டையே கவனிக்கிறதில்லை!

இங்கு வீட்டில் ஒருத்தி என்ன சமைக்கிறாள்? என்ன சாப்பிட்டாள்… இப்படி எதுவும் கண்டுகொள்வதில்லை… எப்ப பார்த்தாலும் அந்த போனில் யாருகிட்டயாவது பேசிக்கொண்டே இருக்கிறது. இல்லை அதையே நோண்டிக்கொண்டு இருக்கிறது. வீட்டில் பொண்டாட்டி என்று ஒருத்தி இருக்கிறதே உங்கள் ஞாபகத்தில் இருக்கிற மாதிரி தெரியவில்லை.! பெற்ற பிள்ளைகளிடம் பேசக்கூட உங்களுக்கு நேரம் இல்லை.”

எப்பவும் குறை சொல்லிக்கொண்டு, அவனை வம்பிழுத்துக்கொண்டே இருக்கிற மனைவி, இப்போது “பாவம்ங்க நீங்கள்… நம்ம குடும்பத்துக்காக இப்படி வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளிடம் கூட பேசக்கூட முடியாத அளவுக்கு வேலை. ஆபீஸில் எந்த பிரச்னையானாலும், உடனே போன் பண்ணி பேசி.. உங்களைத் தொந்தரவு பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள்.

நீங்கள் எங்கள் மேல் வைத்திருக்கிற பாசத்தை புரிந்துகொள்ளாமல், நான் வேறு… உங்களிடம் எப்ப பார்த்தாலும் மல்லு கட்டிக்கொண்டு, மூஞ்சை தூக்கிக்கொண்டு இருக்கிறேன்.”

சங்கீதா இப்படி பேசுவதைக் கேட்டு… அவனுக்கே நடப்பதெல்லாம் கனவா நனவா என்று தெரியவில்லை.

திடீரென்று அவளுடைய நடவடிக்கையில் வந்த இந்த மாற்றத்துக்கு காரணம், ஒருவேளை, ராசிபலனில் சொல்லுவார்களே, அது மாதிரி அவனுடைய ராசியில் இருக்கிற கிரகங்கள் எல்லாம் உச்சம் பெற்றுவிட்டதா?!’ என்று யோசித்தான்.

மறுநாள் வழக்கம் போல அமுதன் ஆபீஸ் கிளம்பும் போது, சங்கீதா, பளிச்சென்று புன்னகையோடு கூடவே வாசல் வரை வந்து வழியனுப்பினாள்.

அவனுடைய லஞ்ச் பாக்ஸ், ஆபீஸ் பேக் எல்லாவற்றையும் அவளே எடுத்துக்கொண்டு வந்து, அவனுடைய காரில் வைத்துவிட்டாள். கல்யாணம் ஆன புதிதில் அவனோடு அன்பாக, சினேகமாக இருந்த மனைவி சங்கீதாவை மீண்டும் பார்ப்பது போல் அமுதனுக்குத் தெரிந்தது. ‘நேற்று இல்லாத மாற்றம் என்னது’ என்ற திரைப்பட பாடல் அவன் நினைவுக்கு வந்தது.

இப்படி யோசித்துக்கொண்டே, ஆபீசுக்கு வந்த அமுதனை, அவனுடைய சீட்டில் வந்து உட்கார்ந்ததும்… அவனுடைய ஜூனியர் நவீன் எதிரே வந்து நின்றான். “ரொம்ப தாங்க்ஸ் சார். உங்க அனுபவ அறிவை வெச்சு , என்னோட குடும்பத்தில் இருந்த பிரச்சனையை சரி பண்ணி கொடுத்திருக்கிறீங்க . சூப்பர் சார். இந்த உதவியை என்னைக்கும் மறக்கமாட்டேன் சார். உண்மையில் உங்களை போல ஒரு ஹஸ்பண்ட் கிடைக்க உங்க வைஃப் கொடுத்து வெச்சிருக்கணும்.

அவங்க ரொம்ப லக்கி சார்” என்று மகிழ்ச்சியோடு மனம் நெகிழ்ந்து பேசினான். “என்ன பிரச்சனைன்னே தெரியாம, எனக்கும் என் வைஃபுக்கும் இடையில இதுவரை இருந்த சண்டை, நீங்க கொடுத்த யோசனையாலதான் சரியாச்சு.

அவளோட இனிமே சந்தோஷமா வாழவே முடியாதுன்னு நினைச்சுட்டு இருந்த நான் இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன்னா அது உங்களாலதான் சார். நீங்க எனக்காக ஒரு லெட்டரை எழுதி காண்பித்து, அதே மாதிரி என்னையும் எழுதி, என் வைஃப் கண்ணுல படற மாதிரி வீட்டுல வைக்க சொன்னீங்க. ஆனா நான் அவ கையிலேயே கொடுத்துட்டேன்.

அவ அதை படிச்சதும் செம ஹாப்பியா ஆகிட்டா… அதுக்கப்புறம் எனக்கு ஒரே கவனிப்புதான்.” என்று சொல்லிவிட்டு, அவன் மனசுல தோன்றிய சில விஷயங்களையும் அமுதன் கிட்ட சொன்னான்.

சார், நம்ம கூட வேலை செய்யறவங்களை, நமக்கு கீழ வேலை பார்க்குறவங்களை தட்டிக்கொடுத்து, பாராட்டிட்டு, அதுக்கு பிறகு அவங்களை வேலையை செய்ய சொல்லும் போது, அவங்களோட நட்பும், முழு ஒத்துழைப்பும் நமக்கு கிடைக்குது. நாம அதே மாதிரியான அணுகுமுறையை, நம்ம வீட்டில காண்பிக்கிறதில்ல. அவங்களுக்காக உழைக்கிறோமுன்னு சொல்லிட்டு, நாம அவங்ககூட பேசக்கூட நேரம் இல்லாது போல நடந்துக்கறோம்.”

வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு… நாள் முழுதும் டென்ஷனோடு வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிற லேடிஸ்க்கு, ஒரு ரிலாக்சேஷன் கிடைக்கணுமுன்னா… நாம அவங்களோட பேச, நம்ம நேரத்தை ஒதுக்கணும். மனசு விட்டு பேசணும். அப்போதுதான் அவங்களை நாமும், நம்மை அவங்களும் புரிஞ்சிக்க உதவும். இதை உங்க உதவியால நான் புரிஞ்சிக்கிட்டேன். நவீன் உற்சாகமாகப் பேச… பேச… அவனுடைய பாராட்டையும், நன்றியையும் புன்னகையோடு ஏற்றுக்கொண்ட அமுதனுக்கு, அப்போது மனசுக்குள் பல்ப் எரிந்தது.

அவன் நவீனிடம் பேசி, வாழ்த்தி அனுப்பிவிட்டு… அவசரமாக அவன் வைத்திருந்த அந்த பிளாஸ்டிக் பைலை எடுத்துப் பார்த்தான். வீட்டில் ஒரே சண்டையாக இருப்பதாக நவீன் அமுதனிடம் புலம்பியபோது, நவீனுக்காக, நவீன் மனைவியைப் பாராட்டி எழுதுவதுபோல, ஒரு கடிதத்தை எழுதிக் காண்பித்து, அவனையும் அதைப்போல் எழுதச் சொல்லிவிட்டு, பிறகு அந்தக் கடிதத்தை அந்த பைலில் வைத்திருந்தான்.

‘சங்கீதாவின் மாற்றத்துக்குக் காரணம் அந்தக் கடிதம்தான் என்று அமுதனுக்குப் புரிந்துவிட்டது. நேற்று அந்த பைலை அவன் வீட்டில் மறந்துவிட்டுப் போன நேரத்தில், சங்கீதாவும் படித்துவிட்டு… அது அவளுக்காக அமுதன் எழுதியது என்று நினைத்திருக்கலாம்’ என்று நினைத்தான்.

பொதுவாக அடுத்தவர்களுக்கு ஆலோசனை தருவது சுலபமான விஷயம். ஆனால் அவரவர் குடும்ப விஷயத்தில் அதைப் பின்பற்ற நினைப்பதில்லை. எது எப்படி இருந்தாலும், நவீனுடைய குடும்பச் சண்டைக்கு, அமுதன் கொடுத்த யோசனை அவனுக்கே பலன் தந்துவிட்டது.

அவன் மனைவி சங்கீதா பாவம், அவளாகவே கற்பனை பண்ணிக்கொண்டு சந்தோஷமாகிவிட்டாள். அதை நினைத்ததும் அமுதனுக்கு மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. அவன்மீது அவள் காட்டும் அன்புக்குத் தகுதியானவனாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். ‘இனிமேல் மனைவி சங்கீதா கூடவும், குழந்தைகளோடும் அதிக நேரம் செலவழித்து, அவர்களை சந்தோஷமாக வைத்திருக்கணும்’ என்று அமுதன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

– ராணி வார இதழில் (29.06.2025) பிரசுரிக்கப்பட்டுள்ளது.

https://www.sirukathaigal.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d/

வடக்கில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள்!

2 months ago
பரா நந்தகுமார் இந்த நிலையை மாற்ற விரும்பின் எமதருமை குழந்தைகளே விஞ்ஞான கல்வியை A/L இல் தேர்ந்தெடுங்கள் O/L பரீட்சையில் விஞ்ஞான கணித பாடங்களில் திறமை சித்தியடைந்த அனைவரும் விஞ்ஞான பாடங்களை கற்க தகைமை உடையவர்கள். பௌதீகவியல் கடினமாக உணரின் மனைப்பொருள் விஞ்ஞானம் அல்லது விவசாயத்தை மூன்றாவது பாடமாக தேர்ந்தெடுக்க முடியும் 3S பெற்றாலே விண்ணப்பிக்க முடியும். மேலதிக தகைமையாக ஆங்கிலம் கருத்திற் கொள்ளப்படும் ஆங்கிலம் இல்லாதோர் நீங்கள் C தர சித்தியை A/L கற்கும்போதே மீளத் தோற்றி உறுதிப்படுத்த வேண்டும். தாதியக் கல்லூரியில் பயிலும்போதே ரூபா 60 000 கொடுப்பனவாக பெற முடியும். https://www.facebook.com/jeyachandramoorthy.rajeevan/posts/10037002803016076/

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனை தடை!

2 months ago
பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்! 14 JUL, 2025 | 02:19 PM பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக் கோரி வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்நாட்டில் தற்பொழுது புகைப்பொருள் பாவனை குறைவடைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. ஆனால், போதைப்பொருள் பாவனை அதிகரித்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கு நாம் பாடசாலை மட்டத்திலும் கிராமங்களிலும் செயற்பட்டு வருகின்றோம். ஆனால், போதைப்பொருள் பாவனை குறைவடைவதை காணக்கூடியதாக தெரியவில்லை. இதனால் கூடுதலாக பாதிப்படைவது இளம் சந்ததியினர் ஆவர். குறிப்பாக, மாணவர் சமுதாயம். இவ்வாறிருக்க, ஒரு படி மேலாக தற்பொழுது மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையும் காணக்கூடியதாக உள்ளது. இந்த பாவனையை பாடசாலை மாணவர்கள் மட்டில் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தாங்கள் சிறிலங்காவை துப்புரவு செய்ய முன்வந்ததை மனதார பாராட்டுகின்றோம். இதனைப் போல் ஸ்மார்ட்போன் பாவனையை மாணவர்களிடையே துப்புரவு செய்ய வேண்டும். அதற்கான சில ஆலோசனைகளை முன்வைக்கின்றோம். அவையாவன : 1. பொது இடங்களில் புகைப்பொருள் பாவித்தால் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்களோ, அதேபோல் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பொது இடங்களில் ஸ்மார்ட்போன் பாவித்தால் தண்டிக்கப்பட வேண்டும். 2. குறிப்பிட்ட மாணவர்கள் வீட்டில் ஸ்மார்ட்போன் பாவிப்பதைக் கண்டால் மாணவர்களின் பெற்றோர்களை தண்டிக்க வேண்டும். 3. பிரத்தியேக வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் போன் மூலம் வகுப்பு எடுத்தால் அந்த ஆசிரியரை தண்டிக்க வேண்டும். ஸ்மார்ட்போன் பாவனையை மாணவர்களிடையே தடை செய்ய வேண்டும். இதற்குக் காரணம், பெற்றோருக்குத் தெரிந்த விடயங்கள் எல்லாம் இந்த போன் மூலம் மாணவர்கள் அறிகின்றார்கள். ஆகவே, போன் பாவனையை தடை செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/219964

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனை தடை!

2 months ago

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்!

14 JUL, 2025 | 02:19 PM

image

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்ய  வேண்டும் எனக் கோரி வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்நாட்டில் தற்பொழுது புகைப்பொருள் பாவனை குறைவடைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. ஆனால், போதைப்பொருள் பாவனை அதிகரித்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கு நாம் பாடசாலை மட்டத்திலும் கிராமங்களிலும் செயற்பட்டு வருகின்றோம். ஆனால், போதைப்பொருள் பாவனை குறைவடைவதை காணக்கூடியதாக தெரியவில்லை. இதனால் கூடுதலாக பாதிப்படைவது இளம் சந்ததியினர் ஆவர். குறிப்பாக, மாணவர் சமுதாயம்.

இவ்வாறிருக்க, ஒரு படி மேலாக தற்பொழுது மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையும் காணக்கூடியதாக உள்ளது. இந்த பாவனையை பாடசாலை மாணவர்கள் மட்டில் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 

தாங்கள் சிறிலங்காவை துப்புரவு செய்ய முன்வந்ததை மனதார பாராட்டுகின்றோம். இதனைப் போல் ஸ்மார்ட்போன் பாவனையை மாணவர்களிடையே துப்புரவு செய்ய வேண்டும். அதற்கான சில ஆலோசனைகளை முன்வைக்கின்றோம்.

அவையாவன :

1. பொது இடங்களில் புகைப்பொருள் பாவித்தால் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்களோ,  அதேபோல் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பொது இடங்களில் ஸ்மார்ட்போன் பாவித்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

2. குறிப்பிட்ட மாணவர்கள் வீட்டில் ஸ்மார்ட்போன் பாவிப்பதைக் கண்டால் மாணவர்களின் பெற்றோர்களை தண்டிக்க வேண்டும்.

3. பிரத்தியேக வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் போன் மூலம் வகுப்பு எடுத்தால் அந்த ஆசிரியரை தண்டிக்க வேண்டும்.

ஸ்மார்ட்போன் பாவனையை மாணவர்களிடையே தடை செய்ய வேண்டும். இதற்குக் காரணம், பெற்றோருக்குத் தெரிந்த விடயங்கள் எல்லாம் இந்த போன் மூலம் மாணவர்கள் அறிகின்றார்கள். ஆகவே, போன் பாவனையை தடை செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20250714_115832.jpg

20250714_115850.jpg

https://www.virakesari.lk/article/219964

மலை குகையில் 2 குழந்தைகளுடன் ரகசியமாக வசித்த பெண்

2 months ago
கர்நாடகா: மலை குகையில் 2 குழந்தைகளுடன் ரகசியமாக வசித்த ரஷ்ய பெண் - அங்கு என்ன செய்தார்? படக்குறிப்பு, குகையில் நினா குடினா என்ற ரஷ்யப் பெண்ணும் அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர். கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசிக்காக 38 நிமிடங்களுக்கு முன்னர் கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ரோந்துப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள், ஒரு மலைக்குக் கீழே சுமார் 700–800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குகையின் நுழைவாயிலில் துணிகள் தொங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தனர். அவர்கள் ஆபத்தான காட்டுப் பாதை வழியாக குகையை நோக்கிச் சென்றபோது, தங்க நிற முடியுடன் கூடிய ஒரு சிறுமி குகையிலிருந்து வெளியே ஓடி வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். "குகையைச் சுற்றி பாம்புகள் திரிவதைக் காண முடிந்தது. கடந்த ஆண்டு ராமதீர்த மலைகளைச் சுற்றி நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் இந்தப் பகுதி ஆபத்தானதாக உள்ளது. அதனால்தான் ரோந்துக் குழு சுற்றுப்புறங்களைச் சோதனை செய்து வருகிறது" என்று உத்தர கன்னட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். நாராயணா பிபிசியிடம் தெரிவித்தார். 'கடவுளுக்கு சேவை செய்வதாகக்' கூறும் ரஷ்யப் பெண் குகைக்குள் நினா குடினா (40) என்ற ரஷ்யப் பெண்ணும், அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர். "அங்கு வாழ்வது ஆபத்தானது என்று அப்பெண்ணுக்கு உணர்த்த நேரம் ஆனது" என்கிறார் எஸ்பி நாராயணா. ஒரு வாரத்திற்கு முன்பு, அந்த ரஷ்யப் பெண் சில காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்கி வந்துள்ளார். அவர்கள் விறகுகளைப் பயன்படுத்தி சமைத்துள்ளனர். காவல்துறையினர் அங்கு பிரபலமான நூடுல்ஸ் மற்றும் சாலட் பிராண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். "எங்கள் குழுவினர் பாண்டுரங்க விட்டல் சிலையை அவர் வணங்குவதைக் கண்டறிந்தனர். 'கிருஷ்ணர் தன்னை தியானம் செய்ய அனுப்பினார். நான் தவம் செய்து வருகிறேன்' என்று கூறினார்'' என்கிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். நீனா, காவல்துறையிடம் தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், காவல்துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் அவரது பாஸ்போர்ட்டை கண்டுபிடித்தனர். அப்பெண் அவ்வப்போது இந்தியாவுக்கு வந்துள்ளார். ஆனால் அவரது விசா 2017-ல் காலாவதியாகியுள்ளது. எப்போதில் இருந்து அப்பெண் அங்கு வசித்து வருகிறார்? படக்குறிப்பு, கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். நீனா, 2016 அக்டோபர் 18 முதல் 2017 ஏப்ரல் 17 வரை வணிக விசாவில் இந்தியாவில் இருந்தார். விசா காலாவதியான பிறகு, கோவாவில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (FRRO) அவருக்கு ஏப்ரல் 19, 2018 அன்று வெளியேறும் அனுமதியை வழங்கியது. அதன்பின், நீனா நேபாளத்திற்குச் சென்று, 2018 செப்டம்பர் 8 அன்று மீண்டும் இந்தியா திரும்பி உள்ளார். இந்நிலையில், காவல்துறையினர் அவரை ஒரு பெண் நடத்தும் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரது இரு குழந்தைகளும் குழந்தைகள் இல்லத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர், நீனாவும் அவரது குழந்தைகளும் பெங்களூருவில் உள்ள வெளிநாட்டினருக்கான காவல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74zdez707ko

ஹமாஸ் மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்டாலும் - தோற்கடிக்கப்படவில்லை - சிஎன்என்

2 months ago
மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்டாலும் - தோற்கடிக்கப்படவில்லை - ஹமாஸ் உயிரிழப்பை ஏற்படுத்தும் வலுவுடன் கெரில்லா போர் தந்திரோபாயங்களை பயன்படுத்த ஆரம்பிக்கின்றது - சிஎன்என் Published By: RAJEEBAN 14 JUL, 2025 | 02:56 PM காசாவில் நடந்த இந்த திடீர் தாக்குதல் அந்த தாக்குதல் இடம்பெற்ற பகுதியை போலவே அதிர்ச்சியளிப்பதாகயிருந்தது. . திங்கட்கிழமை இரவு இஸ்ரேலிய இராணுவவீரர்கள் குழு ஒன்று எல்லை வேலியில் இருந்து ஒரு மைல் தொலைவில் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் பயன்படுத்தும் பாதையைக் கடந்து சென்றபோது ஒரு குண்டு வெடித்தது. தொலைதூரத்தில் இயக்கப்பட்ட இது தீவிர ஆர்த்தடாக்ஸ் வீரர்களைக் கொண்ட ஒரு பிரிவான நெட்சா யெஹுதா பட்டாலியனின் துருப்புக்களை துடைத்தெறிந்தது. இரண்டாவது குண்டு வெடித்தபோது மேலும் பல இஸ்ரேலியப் படைகள் அவர்களுக்கு உதவ விரைந்தனர். அதுவும் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மூன்றாவது குண்டு வெடித்தபோது அருகில் மறைந்திருந்த ஹமாஸ் படையணி சிறிய ரக துப்பாக்கிச் சூடு மழை பொழிந்தது. சில நிமிடங்களுக்குள் ஐந்து இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர் சிலர் படுகாயமடைந்தனர். இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட்டிலிருந்து எளிதாகத் தெரியும் காசாவின் வடகிழக்கு மூலையில் உள்ள பெய்ட் ஹனூன் நகரில் இந்தத் தாக்குதல் நடந்தது. 24 மணிநேரத்திற்கு முன்னர் குண்டுகளை புதைத்தது என்பதும் இஸ்ரேலிய படையினருக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ள அவர்கள் தயாராகயிருந்ததும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அவர்கள் இஸ்ரேலிய எல்லைக்கு மிக அருகில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடத்தில் செயல்படுவதாக இஸ்ரேலிய படையினர் கருதுகின்றனர். இந்த போர்க்காலம் முழுவதும் இஸ்ரேலிய படையினர் பலமுறை காசாவிற்கு மீண்டும் மீண்டும் செல்லவேண்டியிருந்தது - ஏனென்றால் இஸ்ரேல் தான் ஹமாசினை அகற்றியதாக தெரிவித்த பகுதிகளில் ஹமாஸ் மீண்டும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டதே இதற்கான காரணம். ஹமாசின் சமீபத்தைய தொடர் தாக்குதல்கள் அந்த அமைப்பை அழிக்கும் இஸ்ரேலின் இலக்கு மிகவும் கடினமானதாக இலகுவில் சாத்தியப்படாததாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. புதன்கிழமை ஹமாஸ் போராளிகள் கான் யூனிஸில் இஸ்ரேலிய இராணுவ பொறியியல் வாகனத்தை குறிவைத்து ரொக்கட் மூலம் ஏவப்படும் குண்டுகளை வீசி ஓட்டுநர் தப்பி ஓட முயன்றபோது வாகனத்தை தாக்கினர். இது ஹமாஸ் வெளியிட்ட தாக்குதலின் வீடியோவில் காணப்படுகிறது. இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி அவர்கள் இஸ்ரேலிய இராணுவீரரை கடத்த முயன்றனர். இந்தச் செயல்பாட்டில் அவர் கொல்லப்பட்டார். அந்த முயற்சி அப்பகுதியில் செயல்படும் இஸ்ரேலியப் படைகளால் முறியடிக்கப்பட்டது. காசாவின் கொடூரமான கடுமையான போர் ஈரானில் இஸ்ரேலின் விரைவான மற்றும் துல்லியமான நடவடிக்கையுடன் கடுமையாக வேறுபடுகிறது. 12 நாள் இஸ்ரேல்-ஈரான் மோதல் முடிவடைந்ததிலிருந்து காசாவில் குறைந்தது 19 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவிக்கின்றன இதில் பெய்ட் ஹனூன் தாக்குதலும் அடங்கும். இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்த நாளில் தெற்கு காசாவில் ஒரு ஹமாஸ் போராளி வெடிக்கும் பொருளை இஸ்ரேலின் இராணுவ வாகனத்தின் மீது வீசி எறிந்தார். இருந்த ஏழு வீரர்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் காசாவில் ஐ.டி.எஃப்-க்கு பல மாதங்களில் நடந்த மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாகும். போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் 20000 ஹமாஸ் போராளிகளைக் கொன்றதாக ஜனவரி மாதம் முன்னாள் ஐ.டி.எஃப் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறினார். இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பின் உயர்மட்டத் தலைவர்களில் பெரும்பாலோரையும் படுகொலை செய்துள்ளது. ஆனால் ஹமாஸ் புதிய போராளிகளையும் சேர்த்துக் கொண்டதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மூத்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி கூறினார் அவர்களின் அணிகளை மீண்டும் நிரப்பினார். மார்ச் மாதத்தில் இஸ்ரேலின் பொது ஒளிபரப்பான கான் நியூஸ்இ ஹமாஸ் "நூற்றுக்கணக்கான" புதிய போராளிகளை சேர்த்துக் கொண்டதாக அறிவித்தது. ஐ.டி.எஃப்-இன் செயல்பாட்டு இயக்குநரகத்தின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் இஸ்ரேல் ஜிவ் கூறுகையில் காசாவின் நிலத்தடி சுரங்கப்பாதை வலையமைப்பில் எஞ்சியிருப்பதைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தக்கூடிய தளர்வாக ஒழுங்கமைக்கப்பட்ட போராளிக் குழுக்களின் குழு மட்டுமே எஞ்சியுள்ளது. ஐ.டி.எஃப் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய ஹமாஸுக்கு நேரம் கிடைத்துள்ளது. மேலும் அவர்கள் அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார்கள் என்று ஜிவ் சி.என்.என்-க்கு தெரிவித்தார். “அவர்களின் போர் நமது பலவீனங்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிரதேசத்தைப் பாதுகாப்பதில்லை - அவர்கள் இலக்குகளைத் தேடுகிறார்கள்” என்று அவர் கூறினார். இஸ்ரேலிய படையினரின் எண்ணிக்கை மீது ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தம் படையினரின் பலவீனங்களை ஹமாஸ் பயன்படுத்த அனுமதித்துள்ளது என என்று ஜிவ் கூறினார். "ஹமாஸ் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது - அது சிறிய குழுக்களாக செயல்படும் ஒரு கெரில்லா அமைப்பாக மாறியுள்ளது. அது ஏராளமான வெடிபொருட்களைக் கொண்டுள்ளது அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேல் அங்கு வீசிய வெடிமருந்துகளிலிருந்து வந்தவை என்று ஷிவ் கூறினார். https://www.virakesari.lk/article/219974

ஹமாஸ் மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்டாலும் - தோற்கடிக்கப்படவில்லை - சிஎன்என்

2 months ago

மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்டாலும் - தோற்கடிக்கப்படவில்லை - ஹமாஸ் உயிரிழப்பை ஏற்படுத்தும் வலுவுடன் கெரில்லா போர் தந்திரோபாயங்களை பயன்படுத்த ஆரம்பிக்கின்றது - சிஎன்என்

Published By: RAJEEBAN

14 JUL, 2025 | 02:56 PM

image

காசாவில் நடந்த இந்த திடீர் தாக்குதல் அந்த தாக்குதல் இடம்பெற்ற பகுதியை போலவே அதிர்ச்சியளிப்பதாகயிருந்தது.

.hamas_2222222.jpg

திங்கட்கிழமை இரவு இஸ்ரேலிய இராணுவவீரர்கள்  குழு ஒன்று எல்லை வேலியில் இருந்து ஒரு மைல் தொலைவில் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் பயன்படுத்தும் பாதையைக் கடந்து சென்றபோது ஒரு குண்டு வெடித்தது.

தொலைதூரத்தில் இயக்கப்பட்ட இது தீவிர ஆர்த்தடாக்ஸ் வீரர்களைக் கொண்ட ஒரு பிரிவான நெட்சா யெஹுதா பட்டாலியனின் துருப்புக்களை துடைத்தெறிந்தது. 

இரண்டாவது குண்டு வெடித்தபோது மேலும் பல இஸ்ரேலியப் படைகள் அவர்களுக்கு உதவ விரைந்தனர். அதுவும் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மூன்றாவது குண்டு வெடித்தபோது அருகில் மறைந்திருந்த ஹமாஸ் படையணி சிறிய ரக துப்பாக்கிச் சூடு மழை பொழிந்தது.

சில நிமிடங்களுக்குள் ஐந்து இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர் சிலர் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட்டிலிருந்து எளிதாகத் தெரியும் காசாவின் வடகிழக்கு மூலையில் உள்ள பெய்ட் ஹனூன் நகரில் இந்தத் தாக்குதல் நடந்தது.

24 மணிநேரத்திற்கு முன்னர் குண்டுகளை புதைத்தது என்பதும் இஸ்ரேலிய படையினருக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ள அவர்கள் தயாராகயிருந்ததும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அவர்கள் இஸ்ரேலிய எல்லைக்கு மிக அருகில்  ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடத்தில் செயல்படுவதாக இஸ்ரேலிய படையினர் கருதுகின்றனர்.

hamas_atta_2025.jpg

இந்த போர்க்காலம் முழுவதும் இஸ்ரேலிய படையினர் பலமுறை காசாவிற்கு மீண்டும் மீண்டும் செல்லவேண்டியிருந்தது - ஏனென்றால் இஸ்ரேல் தான் ஹமாசினை அகற்றியதாக தெரிவித்த பகுதிகளில் ஹமாஸ் மீண்டும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டதே இதற்கான காரணம்.

ஹமாசின் சமீபத்தைய தொடர் தாக்குதல்கள் அந்த அமைப்பை அழிக்கும் இஸ்ரேலின் இலக்கு மிகவும் கடினமானதாக இலகுவில் சாத்தியப்படாததாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

hamas_3.jpg

புதன்கிழமை ஹமாஸ் போராளிகள் கான் யூனிஸில் இஸ்ரேலிய இராணுவ பொறியியல் வாகனத்தை குறிவைத்து ரொக்கட் மூலம் ஏவப்படும் குண்டுகளை வீசி ஓட்டுநர் தப்பி ஓட முயன்றபோது வாகனத்தை தாக்கினர்.

இது ஹமாஸ் வெளியிட்ட தாக்குதலின் வீடியோவில் காணப்படுகிறது. இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி அவர்கள் இஸ்ரேலிய இராணுவீரரை கடத்த முயன்றனர். இந்தச் செயல்பாட்டில் அவர் கொல்லப்பட்டார். அந்த முயற்சி அப்பகுதியில் செயல்படும் இஸ்ரேலியப் படைகளால் முறியடிக்கப்பட்டது. 

காசாவின் கொடூரமான கடுமையான போர் ஈரானில் இஸ்ரேலின் விரைவான மற்றும் துல்லியமான நடவடிக்கையுடன் கடுமையாக வேறுபடுகிறது. 12 நாள் இஸ்ரேல்-ஈரான் மோதல் முடிவடைந்ததிலிருந்து காசாவில் குறைந்தது 19 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவிக்கின்றன இதில் பெய்ட் ஹனூன் தாக்குதலும் அடங்கும்.

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்த நாளில் தெற்கு காசாவில் ஒரு ஹமாஸ் போராளி வெடிக்கும் பொருளை இஸ்ரேலின் இராணுவ வாகனத்தின் மீது வீசி எறிந்தார். இருந்த ஏழு வீரர்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் காசாவில் ஐ.டி.எஃப்-க்கு பல மாதங்களில் நடந்த மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாகும்.

hamaz_att_122.jpg

போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் 20000 ஹமாஸ் போராளிகளைக் கொன்றதாக ஜனவரி மாதம் முன்னாள் ஐ.டி.எஃப் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறினார். 

இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பின் உயர்மட்டத் தலைவர்களில் பெரும்பாலோரையும் படுகொலை செய்துள்ளது. ஆனால் ஹமாஸ் புதிய போராளிகளையும் சேர்த்துக் கொண்டதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு மூத்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி கூறினார் அவர்களின் அணிகளை மீண்டும் நிரப்பினார். மார்ச் மாதத்தில் இஸ்ரேலின் பொது ஒளிபரப்பான கான் நியூஸ்இ ஹமாஸ் "நூற்றுக்கணக்கான" புதிய போராளிகளை சேர்த்துக் கொண்டதாக அறிவித்தது.

ஐ.டி.எஃப்-இன் செயல்பாட்டு இயக்குநரகத்தின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் இஸ்ரேல் ஜிவ் கூறுகையில் காசாவின் நிலத்தடி சுரங்கப்பாதை வலையமைப்பில் எஞ்சியிருப்பதைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தக்கூடிய  தளர்வாக ஒழுங்கமைக்கப்பட்ட போராளிக் குழுக்களின் குழு மட்டுமே எஞ்சியுள்ளது.

ஐ.டி.எஃப் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய ஹமாஸுக்கு நேரம் கிடைத்துள்ளது. மேலும் அவர்கள் அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார்கள் என்று ஜிவ் சி.என்.என்-க்கு தெரிவித்தார்.

hamaz_111111111111.jpg

“அவர்களின் போர் நமது பலவீனங்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிரதேசத்தைப் பாதுகாப்பதில்லை - அவர்கள் இலக்குகளைத் தேடுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

இஸ்ரேலிய படையினரின் எண்ணிக்கை மீது ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தம் படையினரின் பலவீனங்களை ஹமாஸ் பயன்படுத்த அனுமதித்துள்ளது என என்று ஜிவ் கூறினார்.

"ஹமாஸ் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது - அது சிறிய குழுக்களாக செயல்படும் ஒரு கெரில்லா அமைப்பாக மாறியுள்ளது. அது ஏராளமான வெடிபொருட்களைக் கொண்டுள்ளது அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேல் அங்கு வீசிய வெடிமருந்துகளிலிருந்து வந்தவை என்று ஷிவ் கூறினார்.

https://www.virakesari.lk/article/219974

நடிகை சரோஜா தேவி காலமானார்!

2 months ago
சரோஜா தேவி காலமானார்: ஒரே காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிக்கு நாயகியாக அசத்திய 'கன்னடத்து பைங்கிளி' பட மூலாதாரம்,UGC 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த மூத்த நடிகை சரோஜாதேவி காலமானார். பெங்களூரில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் வயது 87. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சரோஜாதேவி, தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த 'மகாகவி காளிதாஸா' என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு அறிமுகமானார் சரோஜாதேவி. அடுத்த ஆண்டில் 'இல்லறமே நல்லறம்' என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி. விரைவிலேயே கதாநாயகி வேடமேற்று பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய 3 பேருடனும் ஒரே காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். தமிழ் திரைப்படங்களில் இவரது முகபாவம் மூலம், வெளிக்காட்டும் நடிப்பு திறமைக்காக ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி. தமிழில் நடிகர் சூர்யா, வடிவேலுவுடன் இணைந்து ஆதவன் என்ற படத்தில் இறுதியாக நடித்திருந்தார். திரைப்படத்துறையினராலும், ரசிகர்களாலும், 'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரசுவதி' போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை இவர் வென்றுள்ளார். தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவின் மாநில அரசு விருதுகளையும் வென்றவர் சரோஜா தேவி. சரோஜா தேவியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். முன்னணி நடிகையாக வலம் வந்த சரோஜா தேவி சரோஜா தேவி முன்னாள் முதல்வரும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும் வலம் வந்த எம்.ஜி.ஆருடன் சேர்ந்து 26 படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசனுடன் சேர்ந்து 22 படங்களிலும் ஜெமினி கணேசனுடன் இணைந்து 17 படங்களிலும் நடித்துள்ளார் சரோஜா தேவி. 1938-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி அன்று அவர் கர்நாடகாவில் பிறந்தவர் அவர். அவருடைய இயற்பெயர் ராதாதேவி கவுடா. அவர் மகாகவி காளிதாஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955-ஆம் ஆண்டு திரையுலகில் கால் பதித்தார். அவர் நடித்த முதல் படமே தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, சரோஜா தேவி திரையுலகினர் இரங்கல் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இரங்கல் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். "சரோஜா தேவி அம்மா, அனைத்து காலத்திலும் மிகச்சிறந்த நடிகையாவார். தென்னிந்தியாவில் வேறெந்த நடிகைக்கும் கிடைக்காத பேருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர். அன்புக்குரியவர் அவர். அவருடன் நல்ல நட்பில் இருந்தேன். அவரை பார்க்காமல் என்னுடைய பெங்களூரு பயணம் நிறைவுறாது. சென்னைக்கு அவர் வரும்போதெல்லாம் என்னிடம் பேசுவார். அவரின் இழப்பை நிச்சயமாக உணருவேன். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்," என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை சிம்ரன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், "ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெருமையான ஒரு நிகழ்வு ஒன்று மிகவும் விலைமதிப்பற்றதாக உணர வைக்கிறது. என்னுடைய மரியாதையையும் பிரார்த்தனைகளையும் உரித்தாக்குகிறேன். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்," என்று குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,@SIMRANBAGGAOFFC/X - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c628d38vz04o

இலங்கை வந்தார் நடிகை சன்னி லியோன்

2 months ago
இந்திய நடிகை சன்னி லியோன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளார். சன்னி லியோனை தவிர பொலிவுட் திரையுலகில் வலம் வரும் ஏனைய சில நடிகர்களும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. (a) https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9/175-361006 பாலிவுட் நடிகை மற்றும் பிரபல தனிப்பட்ட பிரம்மாண்ட நிகழ்வுகளில் பங்கேற்கும் மாடலான சன்னி லியோன், தற்போது இலங்கைக்கு வருகைதந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அவர் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். சன்னியின் வருகையால் ரசிகர்கள் பெரும் பரவசத்தில் இருந்ததுடன், அவரை நேரில் காண பலர் ஹோட்டல் அருகே திரண்டிருந்தனர். எனினும் அவரது வருகை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://jvpnews.com/article/bollywood-actress-sunny-leone-arrives-in-sri-lanka-1752432057

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months ago
முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் கிழக்கு மாகாணத்தில் நடந்தன என்பது உண்மைதானே. அவற்றினை அப்போது புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணாவே செய்வித்திருந்தாலும், அவர் அப்போது புலிகளுடந்தான் இருந்தார். நிச்சயமாகத் தலைமைக்குத் தெரிந்தே இவை நடந்திருந்தன. ஒருமுறை என்றால் பரவாயில்லை, பலமுறை முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டனவே? ஆகவே அதனைச் செய்தது கிழக்கு மாகாணத்திலிருந்த புலிகள் என்றாலும், அதனைச் செய்தது புலிகள்தான். ஆகவே செம்மணியை நாம் விசாரிக்கக் கோரும்போது முஸ்லீம்கள் தாமாகவோ அல்லது சிங்கள அரசுகளால் ஊக்குவிக்கப்பட்டோ தமது கொலைகளுக்கான விசாரணைகளைக் கோருவது தவிர்க்க முடியாதது. இதனை எதிர்கொள்வதற்கு எமக்கிருக்கும் ஒரே வழி அவ்விசாரணைகளை நாமும் ஏற்றுக்கொள்வதுதான். செம்மணியையும் விசாரியுங்கள், குருக்கள் மடத்தையும் விசாரியுங்கள். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நீதியின் தண்டனையினைப் பெற்றுக்கொடுங்கள் என்பதே நாம் முன்வைக்க வேண்டிய கோரிக்கை. ஏனென்றால், முஸ்லீம்கள் குருக்கள்மடக் கொலைகளை விசாரிக்கக் கோருகிறார்கள் என்பதற்காக செம்மணிக்கான விசாரணைகளை நாம் கைவிடமுடியாது அல்லவா?

சிஸ்ட்டர் அன்ரா

2 months ago
நீங்கள் குறிப்பிடும் இரு கன்னியாஸ்த்திரிகளில் கரவெட்டியைச் சேர்ந்தவர்தான் எனது அன்ரா. அவரது இயற்பெயர் செல்வராணி. கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பெயர் கிறிஸ்ற்றபெல். யாழ்ப்பாணத்தில் 10 வருடங்களும், மட்டக்களப்பில் 15 வருடங்களும் பத்தாம் ஆண்டுவரை கணித ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்னர் யாழ்ப்பாணக் கன்னியர் மடத்தின் மாகாணத் தலைவியாக 3 வருடங்கள் பணியாற்றியவர். அதன்பின்னர் வன்னியில்த்தான் அவரது காலம் கழிந்தது. கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் என்று இரு சமூகநலன் அமைப்புக்களை ஆரம்பித்து வைத்தார் என்று அறிந்துகொண்டேன். பெரும்பாலும் உளநலம் தொடர்பாகவே அவரது பணிகள் அமைந்திருந்தன. இதனால் இயக்கத்தின் மருத்துவப் பிரிவினரோடு அவருக்குத் தொடர்புகள் இருந்தன என்றும் கேள்விப்பட்டேன்.

LTTE பாதுகாத்த இரகசிய பதுங்குக்குழி கண்டுபிடிப்பு.

2 months ago
இது தொல்பொருள் அமைச்சுக்கு தெரியுமோ? உடனடியாக வந்துதடை ஏற்படுத்தி தேடத்தொடங்கி விடுவார்களே? பௌத்த சாசன அமைச்சர் என்று சொல்லிக்கொண்டு தமிழரின் காணிகளை பிடித்த அமைச்சரின் பெயரை மறந்து விட்டேன், அவரும் மறைந்து விட்டாரா? கள்ளரின் தொலைபேசிகளும் செயலிழந்து விட்டனவாம்.