Aggregator
காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது- இனி சட்டத்தின் ஆட்சி தான்- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தனி தமிழீழ கோரிக்கை : அன்ரன் பாலசிங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கம் தனியான தமிழீழ கோரிக்கையில் இருக்கவில்லை என சிரேஷ்ட ஊடவியலாளர் நந்தன வீரரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பட்டலந்த வதைமுகாம் நூல் தொடர்பில் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
தனியான ஈழம் இல்லை
“1993ஆம் ஆண்டு அன்ரன் பாலசிங்கத்தை சந்தித்த போது நான் கேட்ட கேள்வி, “இப்போது உங்களின் தனியான ஈழம் கிடைக்கும் தானே? ஆதலால் பாணமையில் இருந்து மன்னார் வரை எல்லையை நிறுவினால் எவ்வாறு எல்லையில் பாதுகாப்பு வழங்குவீர்கள் மேலும் அதற்கான ஆள்பலம் போதுமா?

அதன் தூரம் சுமார் 400 கிலோமீட்டராகும். இந்தியாவில் இருந்து கூலிக்கா ஆட்கள் கொண்டுவரப் போகிறீர்கள்” என நான் கேட்டேன்'. அவர் சிரித்துக் கொண்டு, மச்சான் தனியான ஈழம் இல்லை அதற்கு கீழே தான் எமது எதிர்பார்ப்பு என்றார்.
ஆனால் தனி ஆட்சியொன்றை கோரிய அமிர்தலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் வேறு யாராக இருந்தாலும் கற்பனையில் இருந்தனர். மேலும் ஜே.ஆர் மற்றும் பிரேமதாச ஆகியோரும் அவ்வாறே செயற்பட்டனர்.
இந்தியாவை புரிந்து கொள்ளாத ஜே.ஆர் மற்றும் பிரேமதாசா
இந்தியாவுடன் அவர்கள் மென்மையான போக்கை கடைப்பிடித்திருக்க வேண்டும். ஈழம் என்ற இராச்சியம் இலங்கையில் ஏற்பட்டால் இந்தியா பல துண்டுகளாக உடைந்து விடும்.

ஆதலால் டில்லி எந்த காலத்திலும் ஈழம் என்ற இராச்சியத்தை விரும்பாது. இதை ஜே.ஆர் அறிந்திருந்தால் ஈழப்போரை சுமுகமாக முடித்திருக்கலாம். ஆனால், டில்லியுடனான இணைப்பை ஜே.ஆருக்கு சரியான முறையில் பேண முடியவில்லை.
இந்திரா காந்தியின் உருவப் படத்திற்கு 'சலூட்'
எனக்கு தெரிந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள், அதாவது இந்தியாவில் ரோவில் பயிற்சி எடுத்தவர்கள், பயிற்சிக்கு போகும் போது முதலில் இந்திரா காந்தியின் உருவப் படத்திற்கு 'சலூட்'அடிக்க வேண்டுமாம். ஏன் இவ்வாறு என அவர்களுக்கு புரியவில்லை.

எனது கருத்து இந்தியாவை, அதாவது டில்லியை இவர்கள் யாரும் நன்றாக புரிந்து வைத்திருக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
https://ibctamil.com/article/sinhala-journalist-exposed-balasingham-tamil-eelam-1758106045
தனி தமிழீழ கோரிக்கை : அன்ரன் பாலசிங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர்
கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன் - ஜனாதிபதி
ஜெர்மனி ICU வில்.
புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்
பல் முனை உலக அழுத்தம்: இஸ்ரேல் 'தென் ஆப்ரிக்கா' நிலைக்கு தள்ளப்படுமா?
பல் முனை உலக அழுத்தம்: இஸ்ரேல் 'தென் ஆப்ரிக்கா' நிலைக்கு தள்ளப்படுமா?

பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலுக்குள் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்.
கட்டுரை தகவல்
பால் ஆடம்ஸ்
பிபிசி
4 மணி நேரங்களுக்கு முன்னர்
காஸாவில் போர் தொடர்கிறது. மறுபுறம், இஸ்ரேல் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாகத் தெரிகிறது.
இஸ்ரேல், நிறவெறி கொள்கை காரணமாக உலகளவில் புறக்கணிக்கப்பட்ட 'தென்னாப்ரிக்கா' காலத்திற்கு மீண்டும் செல்கிறதா? அந்நேரத்தில் அரசியல் அழுத்தமும், பொருளாதாரம், விளையாட்டு, கலாசார தளங்களில் தென்னாப்ரிக்காவுக்கு விதிக்கப்பட்ட புறக்கணிப்பும், அந்தக் கொள்கையை கைவிட நிர்பந்தித்தன.
அல்லது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி அரசாங்கத்தால் தனது நாட்டின் சர்வதேச நிலையை நிரந்தரமாக சேதப்படுத்தாமல், இந்த ராஜீய சிக்கலை சமாளித்து, காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் தனது இலக்குகளைத் தொடர முடியுமா?
முன்னாள் பிரதமர்களான எகுட் பராக் மற்றும் எகுட் ஓல்மெர்ட் ஆகியோர், நெதன்யாகு இஸ்ரேலை உலகளவில் புறக்கணிக்கப்பட்ட நாடாக மாற்றி வருவதாக ஏற்கெனவே குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்த கைது வாரண்ட் காரணமாக, கைது பயமின்றி நெதன்யாகு பயணம் செய்யக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.
ஐக்கிய நாடுகள் சபையில், பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா உள்ளிட்ட பல நாடுகள் அடுத்த வாரம் பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கத் திட்டமிட்டுள்ளன.
இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை கத்தாரில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் கோபமடைந்த வளைகுடா நாடுகள், தோஹாவில் கூடி ஆலோசித்தன.
மேலும், கடந்த கோடைகாலத்தில், காஸாவில் இருந்து பஞ்சம் குறித்த படங்கள் உலகுக்கு வெளிப்பட்டதும், இஸ்ரேல் காஸா நகரத்தில் தாக்குதல் நடத்தத் தயாரானதும், ஐரோப்பிய அரசுகள் பலவும் வெறும் அறிக்கைகள் வெளியிடுவதைக் கடந்து, வெளிப்படையான அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன.
இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பெல்ஜியம்

பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, சர்வதேச கண்டனங்களைப் பொருட்படுத்தாமல், இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தனது தாக்குதல்களைத் தொடர்கிறது.
இந்த மாத தொடக்கத்தில், மேற்குக் கரையில் உள்ள சட்டவிரோத யூதக் குடியிருப்புகளிலிருந்து இறக்குமதி செய்வதற்குத் தடை, இஸ்ரேலிய நிறுவனங்களுடனான ஒப்பந்த கொள்கைகளை மறுஆய்வு செய்தல், மேலும் அந்த குடியிருப்புகளில் வசிக்கும் பெல்ஜிய குடிமக்களுக்கான தூதரக சேவைகளை நிறுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பெல்ஜியம் அறிவித்தது.
மேலும், கடும்போக்கு இஸ்ரேலிய அமைச்சர்களான இடாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட யூதர்களும் பெல்ஜியமுக்குள் நுழைவதற்கு வருவதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்கெனவே எடுத்திருந்தன.
ஆனால், மேற்குக் கரையில் குடியேறும் யூதர்களுக்கும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் பைடன் நிர்வாகம் விதித்த தடைகளை, அதிபராக மீண்டும் பதவியேற்ற முதல் நாளிலேயே டொனால்ட் டிரம்ப் நீக்கியிருந்தார்.
பெல்ஜியத்தின் அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு, ஸ்பெயின் தனது நடவடிக்கைகளை அறிவித்து, நடைமுறையில் இருந்த ஆயுதத் தடையை சட்டமாக்கியது.
இந்த நடவடிக்கைகளில், காஸாவில் இனப்படுகொலை அல்லது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஸ்பெயினுக்குள் நுழைவதற்குத் தடையும் அடங்கும்.
மேலும், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஸ்பெயின் துறைமுகங்கள் மற்றும் வான்வெளியில் நுழையாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார், ஸ்பெயின் யூத எதிர்ப்புக் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், ஆயுத வர்த்தகத் தடை, இஸ்ரேலை விட ஸ்பெயினுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு கவலையளிக்கும் மாற்றங்கள்

பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, இஸ்ரேலிய எம்.பி.க்கள் இடாமர் பென்-க்விர் (எல்) மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச்
ஆனால், இஸ்ரேலுக்கு மேலும் கவலைக்குரிய அறிகுறிகள் வெளிப்படுகின்றன.
ஆகஸ்ட் மாதத்தில், நோர்வேயின் மிகப்பெரிய 2 டிரில்லியன் டாலர் நிதிகொண்ட Norwegian Sovereign Wealth Fund என்ற நிதியம், இஸ்ரேல் நிறுவனங்களில் உள்ள தனது முதலீட்டை விற்க போவதாக அறிவித்தது.
இந்த மாத நடுப்பகுதிக்குள் 23 நிறுவனங்களில் செய்யப்பட்டிருந்த முதலீடுகள் விற்கப்பட்டன. மேலும், நிதியமைச்சர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், இன்னும் பல நிறுவனங்களில் இருந்து முதலீடுகள் நீக்கப்படலாம் என்று கூறினார்.
இதற்கிடையில், இஸ்ரேலின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான ஐரோப்பிய ஒன்றியம், வலதுசாரி அமைச்சர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கவும், இஸ்ரேலுடனான கூட்டுறவு ஒப்பந்தத்தின் சில வர்த்தக அம்சங்களை ஓரளவு நிறுத்தி வைக்கவும் திட்டமிட்டுள்ளது.
செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற தனது "ஸ்டேட் ஆஃப் தி யூனியன்" உரையில், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லீன், காஸாவில் நடந்த நிகழ்வுகள் "உலகின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன" என்று குறிப்பிட்டார்.
அடுத்த நாளே, 314 ஐரோப்பிய முன்னாள் தூதர்கள் மற்றும் அதிகாரிகள், உர்சுலா வான் டெர் லீனுக்கும், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் கயா கிளாஸுக்கும் கடிதம் எழுதி, கூட்டுறவு ஒப்பந்தத்தை முற்றிலும் நிறுத்துவது உட்பட கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
1960களிலிருந்து 1990ல் நிறவெறி முடிவுக்கு வரும் வரை தென்னாப்ரிக்காவுக்கு விதிக்கப்பட்ட தடைகளில், கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளைப் புறக்கணிப்பது முக்கிய அம்சமாக இருந்தது.
இப்போது, அதே மாதிரியான அறிகுறிகள் இஸ்ரேல் தொடர்பாகவும் வெளிப்படுகின்றன.
இந்தச் சூழலில், யூரோவிஷன் பாடல் போட்டி பெரிதாகத் தெரியாமல் இருந்தாலும், இஸ்ரேலுக்கு அதனுடன் ஆழமான பிணைப்பு உள்ளது. 1973 முதல் நான்கு முறை அந்தப் போட்டியில் வென்றுள்ளது. இஸ்ரேலைப் பொறுத்தவரை, இதில் பங்கேற்பது யூத தேசம் சர்வதேச குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான அடையாளமாக கருதப்படுகிறது.
ஆனால், அயர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா, 2026 போட்டியில் இஸ்ரேல் பங்கேற்க அனுமதிக்கப்பட்டால் தாங்கள் விலகிவிடுவதாகக் கூறியுள்ளன அல்லது சுட்டிக்காட்டியுள்ளன.
இது தொடர்பான இறுதி முடிவு டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புறக்கணிப்புகளைச் சந்திக்கும் இஸ்ரேல்

பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, 1970களில் இருந்து இஸ்ரேல் யூரோவிஷனில் வழக்கமாகப் பங்கேற்று வருகிறது, ஆனால் சில நாடுகள் அடுத்த ஆண்டு போட்டியைப் புறக்கணிப்பதாக அச்சுறுத்தியுள்ளன.
ஹாலிவுட்டில் பரவிய ஒரு கடிதம், இஸ்ரேலிய தயாரிப்பு நிறுவனங்கள், விழாக்கள், ஒளிபரப்பாளர்களை புறக்கணிக்க அழைத்துள்ளது.
ஒரே ஒரு வாரத்தில் 4,000க்கும் மேற்பட்டோர் அதில் கையொப்பமிட்டுள்ளனர். இதில் எம்மா ஸ்டோன், ஜேவியர் பார்டெம் போன்ற பிரபலங்களும் அடங்குவர்.
இஸ்ரேல் திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஸ்விகா கோட்லீப், இந்த மனுவை "முழுமையாக தவறானது" எனக் குறிப்பிட்டார். "பல்வேறு விஷயங்களுக்கு குரல் கொடுக்கும் எங்களை குறிவைப்பதன் மூலம், இவர்கள் தங்களின் சொந்தக் குரல்களையே பாதித்துள்ளனர்," என்றும் அவர் கூறினார்.
விளையாட்டு உலகிலும் எதிர்ப்புகள் பரவின. இஸ்ரேலின் பிரீமியர் டெக் அணிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் காரணமாக வுல்டா டி எஸ்பானா சைக்கிள் பந்தயம் பலமுறை தடைபட்டது. இதனால் போட்டி சனிக்கிழமை முன்கூட்டியே முடிவடைந்து, விழா ரத்து செய்யப்பட்டது.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்தப் போராட்டங்களை "பெருமை" எனக் குறிப்பிட்டார். ஆனால் எதிர்க்கட்சிகள், அரசின் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டின.
ஸ்பெயினில், ஏழு இஸ்ரேலிய சதுரங்க வீரர்கள் தங்கள் நாட்டுக் கொடியின் கீழ் விளையாட அனுமதி மறுக்கப்பட்டதால் போட்டியில் இருந்து விலகினர்.
இந்த நிலையை ஊடகங்கள் "டிப்ளமடிக் சுனாமி" (இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் எடுக்கும் அதிகமான ராஜீய ரீதியிலான முடிவுகள்) என்று அழைத்துள்ளன. இஸ்ரேல் அரசும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நெதன்யாகு, ஸ்பெயின் "வெளிப்படையாக இனப்படுகொலை அச்சுறுத்தல் விடுக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.
பெல்ஜியம் தடை அறிவித்ததையடுத்து, " ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலை எதிர்த்து இஸ்ரேல் போராடும் வேளையில், சில யூத விரோதவாதிகள் இன்னும் தங்கள் வெறித்தனத்தை கைவிட முடியாதது துயரம்" என இஸ்ரேல் அமைச்சர் கிடியோன் சார் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, முக்கிய வருடாந்திர போட்டிகளில் ஒன்றான வுல்டா டி எஸ்பானா சைக்கிள் பந்தயம், பாலத்தீன ஆதரவு போராட்டங்களால் பலமுறை தடைபட்டது.
ஆனால், வெளிநாடுகளில் இஸ்ரேலை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் தூதர்களிடையே ஆழ்ந்த கவலை நிலவுகிறது.
2017 முதல் 2021 வரை ஜெர்மனிக்கான இஸ்ரேலிய தூதராக இருந்த ஜெர்மி இஸ்ஸகாரோஃப், "இஸ்ரேலின் சர்வதேச நிலைமை இவ்வளவு பலவீனமாக இருந்து எனக்கு நினைவில்லை" என்று கூறினார்.
பல தடைகள் மற்றும் நடவடிக்கைகள் "வருந்தத்தக்கவை" என அவர் தெரிவித்தார், ஏனெனில் அவை அடிப்படையில் அனைத்து இஸ்ரேலியர்களையும் குறிவைப்பதாகப் பார்க்கப்படுகின்றன.
"அரசின் கொள்கைகளை மட்டும் குறிவைப்பதற்கு பதிலாக, இது பல இஸ்ரேலியர்களை ஒதுக்குகிறது " என்றும் அவர் கூறினார்.
பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் நடவடிக்கைகள் கூட "ஸ்மோட்ரிச், பென் க்விர் போன்றோருக்கு அதிகாரம் கொடுத்து, மேற்குக் கரையை இணைப்பதற்கான அவர்களின் வாதங்களை வலுப்படுத்தும்" என்பதால், எதிர்மறையாகப் போகக்கூடும் என அவர் எச்சரித்தார்.
இருப்பினும், இஸ்ஸகாரோஃப், இஸ்ரேலின் ராஜீய தனிமைப்படுத்தலை மாற்ற முடியாத ஒன்று என்று நம்பவில்லை.
"நாம் இன்னும் தென்னாப்ரிக்கா காலகட்டத்தில் இல்லை. ஆனால் ஒருவேளை அதன் பிரதிபலிப்பு காலத்தில் இருக்கலாம்," என்றார்.
மற்ற முன்னாள் தூதர்கள், இஸ்ரேல் உலகில் புறக்கணிக்கப்பட்ட நாடாக மாறுவதைத் தடுக்க ஆழமான மாற்றங்கள் அவசியம் என நம்புகின்றனர்.
முன்னாள் தூதர் இலன் பருச், நிறவெறி பிரச்னை முடிந்த பின் தென்னாப்ரிக்காவுக்கான இஸ்ரேலிய தூதராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.
2011ல் தூதரக சேவையிலிருந்து விலகிய பிறகு, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை இனியும் காக்க முடியாது எனக் கூறி, இரு நாடுகள் தீர்வுக்கு வலுவான ஆதரவாளராக மாறினார்.
சமீபத்திய தடைகள் அவசியம் என்று நம்பும் அவர், "தென்னாப்ரிக்காவை மண்டியிட வைத்த ஒரே வழி இதுதான்," என்றார்.
இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவை வழங்கும் அமெரிக்கா

பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்கிறது, வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ இந்த வாரம் இஸ்ரேலுக்கு பயணம் செய்கிறார்.
"இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க, ஐரோப்பிய நாடுகள் தங்களிடம் உள்ள எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும். அத்தகைய முறைகள் வரவேற்கப்படவேண்டும்," என்று பருச் கூறினார்.
"தேவைப்பட்டால், விசா விதிகளில் மாற்றங்கள் மற்றும் கலாசார புறக்கணிப்பும் இதில் அடங்க வேண்டும். அந்த வலியைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.
சில அனுபவமிக்க விமர்சகர்கள், இஸ்ரேல் பெரிய அளவிலான ராஜீய நெருக்கடியை எதிர்கொள்கிறது என்ற கருத்து தொடர்பான சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.
"ஸ்பெயின் போன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ள நாடுகள் இன்னும் விதிவிலக்குகளாகவே உள்ளன" என்று இஸ்ரேலிய அமைதிப் முன்னாள் பேச்சுவார்த்தையாளர் டேனியல் லெவி கூறினார்.
இஸ்ரேலுக்கு இன்னும் வலுவான அமெரிக்க ஆதரவு கிடைக்கிறது. அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, அதிகாரப்பூர்வ பயணத்திற்காக புறப்படும் முன், "இஸ்ரேலுடன் அமெரிக்காவின் உறவு வலுவாகவே தொடர்கிறது" என்று குறிப்பிட்டார்.
இருப்பினும், சர்வதேச அளவில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுவது, தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என லெவி நம்புகிறார்.
டிரம்ப் நிர்வாகத்தின் ஆதரவு தொடர்ந்தாலும், காஸாவில் நிகழ்வுகளின் போக்கை மாற்றும் நிலைமை இன்னும் உருவாகவில்லை என்றார்.
"நெதன்யாகுவுக்கு முன்னேற இடம் குறைந்து வருகிறது. ஆனால், இன்னும் நாம் இறுதிக்கட்டத்தை அடையவில்லை," என்று லெவி குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
ஒரு பயணமும் சில கதைகளும்
ஜெர்மனி ICU வில்.
தண்டிக்கப்படாத இலங்கையின் கடந்தகால மீறல்கள் காஸாவில் நிகழும் இன்றைய மீறல்களுக்கான முன்னோடி - மனித உரிமைகள் கண்காணிப்பகம்
இளவரசர் துட்டகைமுனு குளித்த தண்ணீர் பீலி
பிரதமர் மோடியின் 75ஆவது ஜனன தினம்; கீரிமலையில் விசேட பூசை வழிபாடுகள்!
பிரதமர் மோடியின் 75ஆவது ஜனன தினம்; கீரிமலையில் விசேட பூசை வழிபாடுகள்!
பிரதமர் மோடியின் 75ஆவது ஜனன தினம்; கீரிமலையில் விசேட பூசை வழிபாடுகள்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று (17) காலை யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நகுலேஸ்வர பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றதோடு சகஷ்டலிங்க விசேட அபிசேக பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன.
யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆதின பிரதம குரு நகுலேஸ்வர குருக்கள் சிறிரங்கநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற பூசை வழிபாடுகளில் ஆலயத்தொண்டர்கள் பக்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டு இலங்கை விஐயத்தின் போது யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் சந்நிதானத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் 75ஆவது ஜனன தினம்; கீரிமலையில் விசேட பூசை வழிபாடுகள்!
தண்டிக்கப்படாத இலங்கையின் கடந்தகால மீறல்கள் காஸாவில் நிகழும் இன்றைய மீறல்களுக்கான முன்னோடி - மனித உரிமைகள் கண்காணிப்பகம்
தண்டிக்கப்படாத இலங்கையின் கடந்தகால மீறல்கள் காஸாவில் நிகழும் இன்றைய மீறல்களுக்கான முன்னோடி - மனித உரிமைகள் கண்காணிப்பகம்
17 Sep, 2025 | 06:17 PM
![]()
(நா.தனுஜா)
இலங்கையில் 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து, இன்னமும் தண்டிக்கப்படாமல் உள்ள இச்சம்பவங்கள், இன்றளவிலே காஸாவில் நிகழ்த்தப்படும் மீறல்களுக்கும், அங்கு பிரயோகிக்கப்படும் உத்திகளுக்குமான முன்னோடியாக உள்ளன.
இத்தகைய பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் இன்றியமையாததாகும். அது இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி, உலகெங்கிலும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மிக அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிராந்திய பிரதிப்பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவரால் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
உலகளாவிய ரீதியில் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பல அட்டூழியங்கள் குறித்த ஞாபகங்கள், சில வருடங்களில் வேறு புதிய மீறல் சம்பவங்களால் மாற்றி எழுதப்படும். ஆனால் மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அதனால் ஏற்பட்ட துயரம் என்பது முடிவற்றதாகும். தீர்வளிக்கப்படாத குற்றங்கள் அதனையொத்த எதிர்கால மீறல்களுக்கான முன்மாதிரியாகத் திகழ்கின்றன.
இலங்கை அரசாங்கத்தினால் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. அதன்விளைவாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையினால் கண்டறியப்பட்டதன் பிரகாரம் அப்போரில் ஈடுபட்ட இருதரப்பினராலும் சட்டங்களுக்குப் புறம்பான விதத்தில் மனிதகுலத்துக்கு எதிராக மிகமோசமான குற்றங்கள் இழைக்கப்பட்டன. இருப்பினும் அவை இன்றளவிலே இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் சிலரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களுக்கான எந்தவொரு எதிர்விளைவும் இல்லாததன் காரணமாக இது சாத்தியமாகியிருக்கின்றது.
இலங்கையில் இதுவரை ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதாக வாக்குறுதியளித்துவிட்டு, அதிலிருந்து விலகிச் செயற்பட்டுவந்திருப்பதன் மூலம், எதனைச் செய்தாலும் பின்விளைவுகளின்றி மீண்டுவிடலாம் என்பதைக் காண்பித்துவந்திருக்கின்றன. ஆகையினாலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்துவதுடன் இலங்கையினால் நிகழ்த்தப்பட்ட சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்குரிய ஆணையை இம்மாதம் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் 60 ஆவது கூட்டத்தொடரில் மீளப்புதுப்பிக்கவேண்டும்.
இலங்கையில் சுமார் 26 வருடகாலமாக நீடித்த உள்நாட்டுப்போரின்போது பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பன உள்ளடங்கலாக இருதரப்பினராலும் மிகமோசமான மீறல் குற்றங்கள் இழைக்கப்பட்டன. இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற சில மாதங்களில் எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களும், தமிழ் பொதுமக்களும் இலங்கை இராணுவத்தினால் மிகக்குறுகிய பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்டனர்.
விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்திய அதேவேளை, இலங்கை இராணுவம் மனிதாபிமான உதவிகள் உட்செல்வதைத் தடுத்ததுடன் குறித்த சில பகுதிகள்மீது வான் மற்றும் ஆட்டிலறி தாக்குதல்களை நடாத்துவதற்கு முன்னர் அவற்றை 'யுத்த சூனிய வலயங்களாக' அறிவித்தன. மருத்துவ சேவை வழங்கல்கள் தொடர்ந்து இலக்குவைக்கப்பட்டன. இலங்கையில் 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து, இன்னமும் தண்டிக்கப்படாமல் உள்ள இச்சம்பவங்கள், இன்றளவிலே காஸாவில் நிகழ்த்தப்படும் மீறல்களுக்கும், அங்கு பிரயோகிக்கப்படும் உத்திகளுக்குமான முன்னோடியாக உள்ளன.
ஜே.வி.பி எழுச்சி மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான யுத்தம் என்பவற்றுடன் தொடர்புபட்ட விதத்தில் நாடளாவிய ரீதியில் இதுவரை சுமார் 20 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் வேறு பணிகளின்போது தற்செயலாகவே கண்டறியப்பட்டன. அண்மையில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியில் 1990 களில் இராணுவக்காவலின்கீழ் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படும் 200 க்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும் போதிய தொழில்நுட்ப வசதிகள் இன்மை மற்றும் அரசியல் தன்முனைப்பு இன்மை போன்ற காரணங்களால் இதுவரையில் இலங்கையில் எந்தவொரு மனிதப்புதைகுழி தொடர்பிலும் விசாரணைகள் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் இன்றியமையாததாகும். அது இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி, உலகெங்கிலும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை சவாலுக்கு உட்படுத்துவதற்கு அவசியமாகும் என வலியுறுத்தியுள்ளார்.
தண்டிக்கப்படாத இலங்கையின் கடந்தகால மீறல்கள் காஸாவில் நிகழும் இன்றைய மீறல்களுக்கான முன்னோடி - மனித உரிமைகள் கண்காணிப்பகம் | Virakesari.lk
கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன் - ஜனாதிபதி
கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன் - ஜனாதிபதி
17 Sep, 2025 | 06:19 PM
![]()
(இராஜதுரை ஹஷான்)
கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன். இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கடுமையாக தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.இலஞ்ச ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அரச நிர்வாகத்தில் ஒருசிலர் பழைய பழக்கத்திலேயே இன்றும் உள்ளார்கள்.பழைய பழக்கத்தை திருத்திக் கொள்ள வேண்டும் இல்லையேல் அவர்கள் பதவி நீக்கப்படுவார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கடவத்த –மீரிகம மத்திய அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி பணிகளை புதன்கிழமை (17)ஆரம்பித்து வைத்ததன் பின்னர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியாற்றியதாவது,
இரண்டாண்டுகளுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சிடைந்தது. பொருளாதார பாதிப்பினால் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும் நாடு ஒரு தசாப்த காலத்தை இழக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுவார்கள்.பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
பொருளாதார வீழ்ச்சியினால் பல அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டன.கடவத்த –மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் அபிவிருத்தி பணிகள் அவ்வாறே இடைநிறுத்தப்பட்டது.இதனால் பல நெருக்கடிகள் சமூக கட்டமைப்பிலும், பொருளாதார கட்டமைப்பிலும் ஏற்பட்டன.
கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டிருந்த போது சீன முதலீட்டுடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, பொருளாதார பாதிப்பினால் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு சீன ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன்.எமது வலியுறுத்தலுக்கு மதிப்பளித்து அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியுதவியளிக்க சீன ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.ஆகவே இலங்கை மக்கள் சார்பில் சீன ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். டொலர் அலகில் அல்லாமல் யுவான் அலகில் கடன் வழங்கவும், 2.5 -3.5 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தும் போது பொருளாதார நெருக்கடி எவ்வாறு தோற்றம் பெற்றது என்பது குறித்தும் ஆராய வேண்டும்.2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியின் பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்ட சமூகமட்ட பாதிப்புக்கள் இயற்கையாகவே தோற்றம் பெற்றதல்ல,
பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய பல காரணிகள் உள்ளன.பொருளாதார நெருக்கடியின் உரிமையாளர்களாகவே ஒட்டுமொத்த மக்களும் உள்ளார்கள்.இலங்கையில் மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்பதை மக்களுக்கு உறுதியாக குறிப்பிட்டுக்கொள்கிறேன்.
பொருளாதார மீட்சிக்குரிய சகல திட்டங்களையும் சிறந்த முறையில் செயற்படுத்த வேண்டும்.நாட்டில் சட்டவாட்சியை உறுதியாக செயற்படுத்தினால் பொருளாதார மீட்சிக்குரிய திட்டங்களை சிறந்த முறையில் செயற்படுத்தலாம்.நாட்டில் கடந்த காலங்களில் பெரிய மீன்கள் தப்பித்துக் கொள்வதும் நெத்தலி மீன்கள் அகப்பட்டுக்கொள்ளும் சட்டமே இருந்தது.இந்நிலைமை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவுக்கு உயிர்கொடுத்துள்ளோம்.ஆகவே எவரும் எதிர்பார்க்காத இடங்களில் சட்டம் சென்றுள்ளது.சட்டத்துக்கு மேற்பட்டவர்களாக இருந்தவர்கள் பலர் இன்று சட்டத்துக்குள் உட்பட்டுள்ளார்கள்.
ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களின் செயற்பாடு ஆயுதமேந்திய குழுக்களாகவும்,கறுப்பு இராச்சியமாகவும் காணப்படுகிறது.அதிகாரமிக்க இராணுவத்தினரால் பாதாள குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.அவர்களின் போதைப்பொருட்களை பொலிஸார் விநியோகித்துள்ளார்கள்.பாதாள குழுக்களுக்கு அரசியல்வாதிகளும்,அரச அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.இதன் விளைவே இன்று பாரிய நெருக்கடியாக தோற்றம் பெற்றுள்ளது.
கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன். இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கடுமையாக தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.
நாட்டில் புற்றுநோய் போன்று காணப்படும் இலஞ்சம் மற்றும் ஊழல் நாட்டின் அபிவிருத்திக்கு பாரியதொரு தடையாக உள்ளது.கடந்த கால ஊழல் மோசடிகள் முறையாக விசாரிக்கப்படுகிறது. உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகத்தை ஸ்தாபித்துள்ளேன்.இருப்பினும் ஒருசிலர் இன்றும் பழைய பழக்கத்தில் உள்ளார்கள்.
ஒன்று பழைய பழக்கத்தை திருத்திக் கொள்ள வேண்டும்.இல்லையேல் சேவையில் இருந்து விலக வேண்டும்.இல்லாவிடின் நாங்கள் அவர்களை பதவி விலக்குவோம்.இலஞ்சம் மற்றும் ஊழல் மோடியற்ற கலாசாரத்தை உருவாக்க அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.சட்டத்துக்கு அமைய செயற்படுங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார்.
கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன் - ஜனாதிபதி | Virakesari.lk